14/04/2018

தமிழின துரோகி அதிமுக ஒபிஎஸ் சை விரட்டி அடிக்கும் மக்கள்...



ஓபிஎஸ்ஸை விரட்டி அடிக்கும் கிராம மக்கள், உசிலம்பட்டி...

கண்ணா இது ட்ரெய்லர் தான் கோபாவேசத்தில் மக்கள்....

ஐபிஎல் போராட்டத்தில் காவல்துறையால் தாக்கப்பட்ட களஞ்சியம் அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த சென்னை கமிஷ்னர் ஏகே விஸ்வநாதன்...


தாக்கப்பட்ட களஞ்சியம் மற்றும் அவரது உதவியாளரை சந்தித்தார்...

ஆசிஃபா வின் தந்தை பேச்சு...


ஆசிபாவின் வழக்கை விசாரிக்க கூடாது என பாஜக பயங்கரவாதிகளின் ஆர்ப்பாட்டம்...


பார்கவுன்சிலை சேர்ந்தவர்கள்
நீதிமன்றத்தில் வழக்கு பதியக் கூடாது என டயர்களை எரித்தும் வன்முறையில் ஈடுப்பட்ட காட்சி

கொடுஞ்செயலுக்கான கடும் குற்றங்கள்
வராதவரை, சில கயவர்கள் இப்படித் தான் நடிப்பார்கள்.

நடிகனை மிஞ்சிய நாட்டை ஆள்பவன்...

அதிகார வர்க்கமே.. உங்களில் ஒருத்தருக்கு கூடவா மக்களின் உணர்வுகள் புரியவில்லை..?


யானைகளை கொடுமைப்படுத்தும் கோவில் நிர்வாகங்கள்...




காமம் என்பது உயிர்கள் வாழ்வதற்கான அடிப்படைத் தேவை என்பது கூட புரியாமல் கோயில்களில் பெண் யானைகளுக்கு ஆண் யானைகளை கண்ணிலேயே காட்டாமல் இறுதி வரை 'புனிதமான' வைத்திருக்கிறார்கள்...

இது போல தமிழக கோயில்களில் இன்று சிறைப்பட்டிருக்கும் பெண் யானைகள் 40க்கும் மேல்.

தன் உணர்வுகளை 30 40 வருடங்களாக வெளிப்படுத்த இயலாமல் மனநிலை பாதிக்கப்பட்டு கோபமுறும்போது பெண் யானைகளை அடித்து துவைத்து காயப்படுத்தி கொடுமை செய்து 'புனித'த்தை பாதுகாக்கிறார்கள்.

கண்ணிமைப்பது போல மூச்சு விடுவது போல மாத சுழற்சி பெண்மையில் ஒரு பாகம் என்று கூட பார்க்காமல் பெண்களை மாதாமாதம் தூரமாக தள்ளி வைத்து கோயில்களை புனிதமாக பாதுகாக்கும் முட்டாள்தனம் வாயில்லா யானைகளை வேறு எப்படி வைத்திருக்கும்?

நாம் மட்டும் குடும்பமாக கோயிலுக்குச் செல்கிறோம் இந்த யானை வருடக்கணக்காக தனியாகவே இருக்கிறதே என்று ஒரு நாளும் கேள்வி கேட்காத நம்மை என்ன சொல்வது?

ஒரு குழந்தையை வன்புணர்வு செய்யும் போதே எழுந்து வராத கடவுள் ஒரு யானை புணர்ந்தால் ஓடி வந்து உங்கள் கண்களை குத்தவா போகிறது?

எத்தனை அழகழகான குட்டிகள் ஈன்றிருக்கும் தமிழக கோயில்களில் வாழும் 40 பெண் யானைகளும்?

நாளைக்கு யானை இனமும் அழிந்து விட்டது என்று ஒப்பாரி வைத்து என்ன பிரயோஜனம்?

இதோ துன்புருத்தப்பட்ட ஒரு பெண் யானையின் புண் ஆறாமல் முற்றி இருக்கும் புகைப்படம்...

காவிரி போராட்டத்தில் பெண்களிடம் சில்மிஷம் செய்த வடபழனி இன்ஸ்பெக்டர் சந்துரு...


இங்கு அனைவருக்கும் ஒரு வாழ்க்கை உண்டு...


அதனால் குழந்தைகளை சமூகம் சொல்றதை கேட்டுட்டு, முடிவே இல்லாத சமூகத்தின் சிறையில் அடைக்காதீர்கள்..

குழந்தைகள் உங்களால் வந்தவர்கள் அவ்வளவே, உங்களுக்காக வந்தவர்கள் அல்ல..

குழந்தைகளிடம் இருந்து முத்தத்தை பெறுங்கள், நீங்களும் கொடுங்கள்.. தினந்தோறும் அது உங்களின் இறுதிகாலம் வரை, குழந்தைகள் பெரியவர்கள் ஆனாலும் கூட..

அது உங்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையே உள்ள புரிந்துணர்வே அதிகரிக்கும்..

நான் கூறுவது ஏதோ மேலைநாட்டு பழக்கவழக்கம் போல் இருக்கிறதா..??

சத்தியமா இல்லை, இது நம்முடையது.. அதை அவர்கள் திருடி விட்டார்கள்...

ஆசிஃபா வன்கொடுமை.. கேரளா Vs தமிழ்நாடு...


ஆசிஃபா கொலை செய்த பாஜக வின் மொத்த கொடூரர்களின் புகைப்படங்கள் மற்றும் பதவிகள்...


கடைசி இருவர் கொடூரர்களுக்கு ஆதரவாக ஊர்வலம் சென்ற இரண்டு பிஜேபி எம்எல்ஏ க்கள்...

கவண் மீம் தொடர்... தொலைக்காட்சிகளின் முன்னோட்டம்... ZEE TAMIL....









மின்மினி பூச்சிகள் இரவில் எவ்வாறு ஒளிர்கின்றன?


மின்மினிப் பூச்சி பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்போம், நிறைய பேர் பார்த்திருப்போம். அது எப்படி இந்த பூச்சி மட்டும் இத்தனை பிரகாசமாக, இத்தனை அழகாக ஒளிர்கிறது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்தாலும் பலருக்கு அது உளிரும் அழகை நேரில் பார்க்கும் போது மனது மயங்கி அந்த கேள்வியை மறந்து மறைந்து போகும்.

மின்மினிப் பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்கிறோம். தமிழில் கூறவேண்டும் என்றால் பறக்கும் நெருப்பு. சாதாரணமாக விளக்கு எரிந்து வெளிச்சம் கிடைக்கும்போது ஒருவித வெப்பம் உண்டாகும். ஆனால் இந்த மின்மினி பூச்சிகள் எரிந்து வெளிச்சம் கிடைக்கும்போது எவ்வித வெப்பமும் ஏற்படுவது கிடையாது.

Coleopteran என்ற குடும்பத்தைச் சேர்ந்த மின்மினிப் பூச்சிகளில் தற்போது உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது. மின்மினி பூச்சிகளின் முட்டை, புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவைதானாம். ஆச்சரியமாக இல்லை?

இப்பூச்சிகள் எப்படி ஒளிர்கின்றன என்று பார்ப்போம். இதன் ஒளிரும் நிகழ்வு ஒரு சிக்கல் நிறைந்த உயிர் இராசயனவியல் (biochemical) முறையாகும். இம்முறை உயிர் பொருள்கள் வெளியேற்றும் ஒளி (bioluminescence) என்று அழைக் கப்படுகிறது.

பொதுவாக எங்குமே எரிபொருள் எரிந்துதான் வெளிச்சம் கிடைக்கும். இங்கும் மின்மினிப் பூச்சி தரும் ஒளியில் எரிபொருளாகப் பயன்படுவது லூசிஃபெரின் (luciferin என்ற இரசாயன கூட்டுப் பொருள் ஆகும். இது பூச்சியின் ஒளியுமிழ் உறுப்பில் (light emitting organ) நிறைந்துள்ளது.

இந்த லூசிஃபெரின், லூசிஃபெரெஸ் என்ற என்ஸைமில்(enzyme) உள்ள உயிர்வளி (oxygen), உயிரணுக்களில் (cells) நிறைந்துள்ள ATP என்ற இரசாயனவியல் பொருள், மற்றும் மக்னீசியம் ஆகியவற்றுடன் சேரும்போது ஒளி உண்டாகிறது.

இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாவிடினும் ஒளியுண்டாகாது. மின்மினிப் பூச்சி விட்டுவிட்டு ஒளிர்வதற்குக் காரணம், அதன் ஒளியுமிழ் உறுப்புக்குச் செல்லும் நரம்புத் தூண்டல்கள் (nerve impulses) விட்டு விட்டுச் செல்வதே யாகும். இப்படிதான், மின்மினிப் பூச்சிகள் ஒளிர்கின்றன.

பெண் வண்டுகள் மண்ணில் முட்டை வைக்கும். சுமார் 4 வாரங்களில் முட்டையில் இருந்து புழு வந்துவிடும். புழுக்கள் கோடையிலும் வேனில் காலத்திலும் நன்கு சாப்பிட்டுவிட்டு வரும் குளிர்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மண்ணுக்கடியில் பதுங்கிவிடும். பெரும்பாலும், இவை மண்புழு மற்றும் நத்தை ஆகியவற்றையே தின்னும்.

இவை இரையைப் பிடித்துத் தின்னும் முறையே அலாதியானது. இரையைக் கண்டுபிடித்தவுடன் அதை முதலில் மயக்கமடையச் செய்துவிடும். இதற்கென்றே இதன் முகத்தில் ஒரு பிரத்தியேக அரிவாள் போன்ற கொடுக்கு நீட்டிக்கொண்டு இருக்கும். அதைக் கொண்டு இரையின் உடலினுள் மயக்கமடையச் செய்யும் இரசாயன பொருளை செலுத்திவிடும்.

பிறகு இரைக்குள் செரிமான நொதிகளை செலுத்தும். சில மணி நேரத்தில், இரையின் உடலினுள் உள்ள அவயங்கள் கூழ்மமாக மாறிவிடும். உடனே மின் மினி பூச்சிகளின் புழுக்கள் இரையைச் சுற்றி அமர்ந்து உறிஞ்சிவிடும் பிறகு வலம்வர போய்விடும். அப்போது அதன் உடலில் அதாவது அடிவயிற்றின் முடிவில் விளக்கு எரிந்துகொண்டு இருக்கும். ஒரு சில பறவைகள் கூட ஒளிக்காக இந்த புழுக்களைப் பிடித்து வந்து, தங்கள் கூட்டில் வைத்திருக்கும்.

மின் மினிப் பூச்சிகள் தங்களது துணையை தேடிக்கொள்ள இரவுகளில் சில குறிப்பான இடங்களில் கூடி வித்தியாசமான மின்னல்களுடன் தங்களின் விருப்பத்தையும் இருப்பிடத்தையும் தெரிவித்து தங்களுக்குரிய துணையை தேடிக் கொள்கின்றன...

வளைகுடா நாடுகளை ஆயுதத்தை வைத்து, இந்தியாவை பொருளாதாரத்தை வைத்து அடிமையாக்க முயற்சிக்கிறார்கள்...


தமிழகத்திற்கு காவிரி வராதது ஏன்.?


சித்தர் ஆவது எப்படி? சித்தர் என்பவர் யார்? - 1...


இந்த உலகில் சித்தர்கள் இருக்கின்றார்களா ? என்ற கேள்வி பல வருடங்களாக சாதாரண மனிதர்களால் கேட்கப்பட்டு வருகின்றது....

சித்தர்களை பார்க்கத் துடிக்கின்ற மனிதர்கள் பலர் இன்னும் இருக்கின்றார்கள்....

சிலர் தாம் பார்த்ததாக சொன்னார்களே தவிர யாரும் யாருக்கும் காட்டியதாக தெரியவில்லை...

மனிதகுலம் தம் தம் காலங்களில் தோன்றிய சில மாமனிதர்களை சித்தர்களாக, இல்லை இல்லை சித்தர்கள் போல சித்தரித்தார்களே தவிர அதில் உண்மை துளியும் இல்லை..

இறைவன் என்ற ஒரு உயர்நிலை இருக்க சித்தர்களை இறைவனை விட உயர்வாக போற்றும் போற்றிய மர்மம் என்ன ?

இறைவனால் சாதிக்காததை அப்படி என்ன சித்தர்கள் சாதித்தார்கள் ?..

சித்தர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள் என்றும் நம்பும் உலகம் ஒருவரையேனும் இன்று பார்க்க முடியவில்லையே அது ஏன் ?

இன்று என்ன உண்மையோ அப்படி தானே முன்னும் இருந்து இருக்க வேண்டும்.. அப்படியென்றால் சித்தர்களை இதுவரை எவரும் சரித்திரத்திலோ அல்லது எந்த தலைமுறையிலோ காண வில்லை என்ற பொருளாகி விடுமா ?

இது போன்ற கேள்விகள் எழுகின்ற போது பலரது புருவங்கள் உயர்த்தப் படலாம் என்பதில் சந்தேகம் இல்லை..

மன கசப்பும் அவர்களுடைய நம்பிக்கை உடையும் அபாயம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை..

சற்று பொறுமை இழக்காமல், சித்தர் ஆவது எப்படி என்ற தொடர் பதிவினை முழுமையாக படிக்குமாறு வேண்டுக் கொள்கின்றேன்...

முழுவதுமாக படித்தால் மட்டுமே உள்ளதை உள்ளவாறு அறிந்து கொண்டு சித்தர் பாதையில் நேர் வழியில் பயணப்பட முடியும்...

சித்தர் ஆவது எப்படி என்ற தலைப்பில் வரும் பல பகுதிகளில் பல உண்மைகள் ஒவ்வொரு பகுதியும் மற்ற பகுதியோடு தொடர்பு கொண்டமையால், படித்த பதிவின் நினைவு கொண்டால் மட்டுமே தொடர்ந்து வரும் பகுதியை சரியாக புரிந்து கொள்ள முடியும்..

ஆகவே ஒவ்வொரு பதிவினையும் உற்று கவனித்து படிக்குமாறும், படித்ததை நினைவில் கொள்ளுமாறும் வேண்டுகிறேன்....

நம் பஞ்சபூதங்களிலேயே அதிகம் மாற்ற அடையக் கூடியதும், அதனால் நம் வாழ்வியலை பல மாற்றங்களை ஆக்கக் கூடியதும் ஆனது நீர் தன்மை உடைய சித்தம் என்ற பூதம்..

இந்த சித்தம் என்ற பூதத்தை முறை படுத்தி மண், ஆகாயத்தை போல் ஸ்திர தன்மை பெற்றால் மட்டுமே நித்திய நிலையாகிய மரணமில்லா பெரு வாழ்வு அடைய முடியும்..

மாறும் போக்கு உடைய சித்தம் என்ற பூதம் உறுதி தன்மை அடைய வாழும் முறையை மேற் கொண்டவர்கள் தான் சித்தர்கள்.. அதாவது சித்தத்தை கையாளுகிறவர்கள் தான் சித்தர்கள்...

மாற்றம் காணும் சித்தம் உறுதி காணும் போது, முன் ஜென்மங்களில் சேர்த்து வைத்த ஆற்றல்கள் உள் வாங்கும் திறமை அதிகரிக்கப் படுவதால் அளவற்ற ஆற்றலை அடையும் பேறு கிடைக்கிறது... அதனால் மனிதன் மாமனிதன் ஆகிறான்..

இந்த சித்தர்கள் விசயத்தில் மனிதர்கள் செய்யும் பெரிய தவறு என்ன ?

சித்தர்கள் அடைந்ததாக கருதப் படும் பெரும் செயல்களால் ஈர்க்கப் பட்டு, சித்தர்கள் பால் மிகுந்த ஈர்ப்பு உடையவர்களாக இருக்கிறார்கள்..

இன்றைய திரைபடங்களில் மிக பெரிய செயல்களை செய்வது போல் நடித்துக் கொண்டு இருப்பவர்களையே தெய்வமாக கருதி அவர்களின் பெரிய பேனர் படங்களுக்கு குடம் குடமாக பால் அபிசேகம் செய்யும் காலம் இது...

இது முறையற்று செயல் படும் சித்தத்தால் உருவானது..

மாயா நிலையை அள்ளி தரும் இந்த முறையற்ற சித்தத்தை சீர் செய்பவனே சித்தன்..

மாயா நிலை என்ற மயக்க நிலைவிட்டு தெளிவு நிலை என்னும் ஞான நிலை பெற வேண்டும் என்றால் முறையற்ற சித்தத்தை சீர் செய்ய வேண்டிய அவசியம் உள்ளதே அன்றி அப்படி சித்தத்தை சீர் செய்து பெரும் ஆற்றலை பெற்ற சித்தர்களின் பெருமை பேசி பேசி சித்தத்தை சீர் செய்யும் செயலை விட்டு விலகி செல்லும் தந்திரத்தை இந்த உலகம் செய்து கொண்டு இருப்பதை பின் பற்றக்கூடாது..

உலகின் செயல் பாட்டை விட்டு விலகி உண்மை நிலைக்கு திரும்ப வேண்டும்..

உலகத்தார் ஏன் அப்படி விலகி செல்ல விரும்புகிறார்கள் என்றால் அவர்களிடம் ஆற்றல் இல்லாத தன்மையால் உருவான சோம்பல் என்ற பலவீனமே..

எல்லாவற்றிக்கும் ஆற்றல் பெறுவதே முதல் ஆதாரமாக உள்ளது.. அதுவே எல்லாவற்றிக்கும் மூலமாக இருப்பதால் ஆற்றல் பெறுவதே மூலாதாரம் அதாவது மூல ஆதாரம்..

இதனை தேகத்தில் ஒரு இடத்தை காட்டி குறிக்கோளை விட்டு அப்பால் நகர்ந்து செல்வோரும் உண்டு...

எப்படியோ உண்மையான ஆற்றலை பெறும் வழியை விட்டு தப்பி செல்வதே மனித இயல்பாக உள்ளது..

இப்படி தப்பிக்காமல் பொறுப்பை ஏற்று உண்மையை நோக்கி பயணப் படுவதுதான் சித்தர் வழி..

சித்தத்தை சீர் செய்யும் சித்தர் வழியையும் சித்தராகும் நுணுக்கங்களையும் பார்ப்போமாக...

ஆற்றல் பெருகுவதற்கு சித்தத்தின் பங்கு மற்ற பூதங்களை காட்டிலும் மிக மிக அதிகம்..

எண்ண ஆதிக்கங்களை தந்து நம் மனதில் உள்ள பிரபஞ்ச ஆற்றலின் கனலை வெளிச்சமாக விரையமாக்கி, நம்மை செயலற்ற சவநிலைக்கு அழைத்துச் செல்லும் சித்தத்தை சீர் செய்யாமல் சித்தராக முடியாது..

அதற்கான உளவுகளை பகுதி பகுதியாக பார்ப்போமாக...

அடிமை சமூகத்தின் உச்சமே...


நான் அந்த இலக்கை அடையாமல் விட மாட்டேன் என்பது,

ஆனால் அந்த இலக்கு எது என்பது கூட தெரியாது இந்த சமூகத்திற்கு..

இலக்குதான் உன் வாழ்க்கையின் வெற்றி என உங்களை ஒட வைக்கிறது, நீங்கள் ஒடிக்கொண்டே இருக்கிறீர்கள் கேள்வி கேட்காமல்,

அதுதான் வேண்டும் இந்த வல்லாதிக்க சக்திகளுக்கு.. நீங்கள் இந்த சமூகத்தின் அரசியலை மறக்க வேண்டும்..

அப்போதுதான் நீங்கள் அடிமையாக காலம் காலமாக இருப்பீர்கள்..

தனிமனித வெற்றியை அடைந்தீர்கள் என்றால், நீங்கள திரும்பி பார்க்கும் போது இந்த சமூகம் அப்படியே தான் இருக்கும்...

உலக நாகரிகங்களில் தமிழனின் தடம்...


வருடம் கி.மு. 3000 அதாவது இன்றிலிருந்து மிகச் சரியாக 5000 வருடங்களுக்கு முன்பு, அரேபிய (Arab) நாட்டை தெற்கு வடக்காக கடந்து Persian Gulf-யை அடைந்து பிறகு Euphrates நதிக்கரையில் அமைந்திருக்கும் அந்த புகழ்பெற்ற நகரத்தை நோக்கி ஒரு வணிக கூட்டம் போய்கொண்டிருக்கிறது. அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டே போகிறார்கள். என்ன ஆச்சரியம் அவர்கள் பேசுவது தமிழ் மொழி, ஆம் அவர்கள் தமிழில் தான் பேசிக்கொள்கிறார்கள். அவர்களை நாம் இன்னும் கொஞ்சம் அருகில் சென்று பார்க்கலாம் வாருங்கள். அடக் கடவுளே அவர்கள் தமிழ் வணிகர்கள். தமிழக வணிகர்களுக்கு இங்கு என்ன வேலை? இந்து மா கடலையும், அரேபியாவின் பாலைவனங்களையும் கடந்து இவர்கள் எங்கே போய்கொண்டிருக்கிறார்கள்?

ஊர் (Ur), அந்த தமிழ் வணிகர்கள் போய்கொண்டிருப்பது இந்த நகரத்தை நோக்கித்தான். அவர்களில் சிலர் ஊர்க் (Urk) என்கிற நகரத்தை நோக்கி பிறகு செல்வார்கள். இந்த ஊர் மற்றும் ஊர்க் நகரங்கள் எங்கே இருக்கின்றன என்று நீங்கள் புருவம் உயர்த்தினால் இதை படியுங்கள். இந்த இரண்டு நகரங்களும் Mesopotamia நாகரீகம் செழித்து வளர்ந்த Sumeria-யாவில் இருக்கின்றன. Euphrates மற்றும் Tigris நதிகள் ஓடும் இன்றைய Iran, Iraq பகுதிகளைத்தான் 5000 வருடங்களுக்கு முன்பு சுமேரியா (Sumeria) என்று அழைத்தார்கள். மனித நாகரீகத்தின் தொட்டில் என்று சுமேரிய நாகரீகத்தை வரலாற்று அறிஞர்கள் அழைக்கிறார்கள்.

ஊர் மற்றும் ஊர்க் நகரங்கள் இரண்டும் சுமேரிய நாகரீகத்தின் முதல் பெருநகரங்கள். இன்றைய Metropolitan City-களுக்கு ஒப்பானவை. அக்கேடிய அரசு, ஊர் நகரத்திலிருந்தே தொடங்கியது. இங்கிருந்து அரசாண்ட அனைத்து சுமேரிய அரசர்களும் தங்களின் பெயர்களுக்கு முன்னால் இந்த ஊர் என்கிற வார்த்தையை சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். பிரமிடுகள் (Pyramid) போன்ற அமைப்புடைய மிக பிரம்மாண்டமான சிகுராத்கள் (Ziggurat) இந்த நகரங்களில் இருந்தது. சிகுராத் என்பது சுமேரியர்களின் வழிபடும் இடம். ‘ஊர்’ மற்றும் ‘ஊர்க்’ என்கிற இந்த வார்த்தைகள் தமிழ் மொழியில் இருந்து பெறப்பட்டதாக நடுநிலை வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.

இப்படி அறிஞர்கள் கருதுவதற்கு காரணம் இந்த இரண்டு நகரங்களிலும் இருந்த தமிழர்களின் செல்வாக்கு. இன்றையிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பு ‘ஊர்’ மற்றும் ‘ஊர்க்’ நகரங்கள் தமிழ் வணிகர்களின் குடியேற்ற நகரங்களாக இருந்திருக்கின்றன. பொதுவாக தமிழர்கள் தாங்கள் வாழும் பகுதியை ‘ஊர்’ என்று அழைப்பது வழக்கம். எந்தவித சிறப்பு பெயரும் இல்லாம் ‘ஊர்’ என்கிற ஒற்றை சொல்லே ஒரு நகர்புறத்தை குறிக்கும். ‘நான் ஊருக்கு போனேன்’, ‘அந்த ஊரு ரொம்ப தூரம்’ போன்ற சொல் வழக்குளில் ஒரு இடத்தின் பெயர் குறிக்கப்படவில்லை என்றாலும் ஊர் என்கிற ஒற்றை சொல்லே நாம் பேசும் நகரத்தை குறிப்பிட்டுவிடுகின்றது. தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த காரணத்தாலும் அவர்கள் வாழும் பகுதி ஊர் என்று அழைக்கப்படுகின்ற காரணத்தாலும் சுமேரியாவின் Euphrates நதிக்கரையிலிருந்த இந்த நகரங்கள் ‘ஊர்’ என்றும் ‘ஊர்க்’ என்றும் காரணப் பெயராக அழைக்கப்பட்டிருக்கிறது. ஊர்க் என்பது ஊர் என்ற சொல்லின் மருவிய வடிவம்.

தமிழர்களின் செல்வாக்கால் பெயர் பெற்ற ‘ஊர்’ நகரம் விவிலியத்திலும், மனித நாகரீகத்தின் முதல் நாவல் என்று அழைக்கப்படும் கில்காமேசிலும் (Gilgamesh) குறிக்கப்பட்டிருக்கிறது. 5000 ஆண்டுகளுக்கு முன்பு, சுமேரியாவின் எந்த பகுதிக்கு சென்றும் நான் தமிழன் என்று ஒருவர் சொன்னால் உடனே அடையாளம் கண்டுகொள்ளப்படுவார். அதாவது இன்று ஒரு அமெரிக்கர் உலகின் எந்த இடத்திலும் அடையாளம் கண்டுகொள்ளப்படுவதுபோல். இன்றைக்கு தமிழன் தமிழ்நாட்டிலேயே தன்னை தமிழன் என்று சொல்லிக்கொள்ள முடிவதில்லை. இனவெறியன், பிரிவினைவாதி என்று ஆபாசமாக முத்திரைக்குத்தப்படுகிறான். ஈழத்தில் தன் தாய் மண்ணில் இனப்படுகொலைக்கு ஆளாகிறான்.

தமிழகத்தில் கிடைத்த உபரி உற்பத்தியை தமிழர்கள் சுமேரிய நாகரீகத்துடன் வணிகம் செய்திருக்கிறார்கள். சுமேரிய உபரி உற்பத்தியை தமிழகம் கொண்டுவந்திருக்கிறார்கள். தமிழகத்தில் கிடைக்கும் ஆடம்பர பொருட்களை சுமேரிய அரசர்கள் தாங்கள் இறந்தும் தங்களுடைய கல்லறைகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள். சுமேரியாவிற்கு வணிகத்திற்கு சென்ற தமிழன் சுமேரியாவின் நகர நாகரீக வளர்ச்சிக்கும் உதவி செய்திருக்கிறான். சுமேரியா மற்றும் எகிப்திற்கான கடல் வணிக பாதையை உருவாக்கியது தமிழன் என்றால் அது மிகையாகாது.

சுமேரியாவின் வரலாற்றை எழுதும் எவரும் தமிழர்களின் தொடர்புகளை புரக்கணித்துவிடமுடியாது. ஆனால் ஏனோ நம்முடைய வரலாற்று நூல்கள் தமிழர்களின் இத்தகைய சிறப்புகளை இருட்டடிப்பு செய்கின்றன. இந்திய வரலாற்று அறிஞர்களில் பலர் அகண்ட பாரதத்தை கட்டி எழுப்பும் வரலாற்று புணுகு மூட்டைகளையே ஓட்டுமொத்த இந்திய வரலாறாக அவிழ்த்துவிட துடிக்கிறார்கள். ஆரியவர்தமானமே இந்தியாவின் மானம் என்று கைகூசாமல் எழுதி குவிக்கிறார்கள். எகிப்து, சுமேரிய நாகரீகங்களுடனான தமிழர்களின் தொடர்புகளைப் பற்றியும், சிந்துவெளி நாகரீகம் தமிழர்களுடையது என்பதைப் பற்றியும் எழுத துணிச்சல் அற்ற இந்திய பாட நூல் கழகம், தமிழர்களின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறது.

இன்றையிலிருந்து 6000 வருடங்களுக்கு முன்பு மூன்றே மூன்று நாகரீகங்கள்தான் நாகரீக கலாச்சாரத்தை முன்னெடுத்து இருக்கின்றன. ஒன்று எகிப்தியர்களுடையது, அடுத்தது சுமேரியர்களுடையது மற்றது தமிழர்களுடையது. சிந்துவெளி நாகரீகம் தமிழர்களுடையது என்கிற காரணத்தால் அது தனியாக இங்கே குறிப்பிடபடவில்லை. உலக வரலாற்று அறிஞர்கள் தமிழர்களின் தொடர்புகளை வெளிகொண்டுவந்து புண்ணியம் தேடிக்கொள்கிறார்கள். இல்லையென்றால் தமிழன் வரும் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கும் தூங்கிக்கொண்டே தான் இருப்பான்...

தமிழக அரசின் ஆணிவேரை புடுங்கினால் மட்டுமே அரசு நம் போராட்டங்களுக்கு செவி சாய்க்கும்...


ஒதுக்கப்படும் பாரம்பரிய உணவுகள்...


நோய் என்று மருத்துவரிடம் சென்றால் முதலில் சொல்வது அரிசி சோறு சாப்பிடாதீர்கள் என்பது தான்...

அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?

நிலத்திலே மனிதர்களால் விளைவிக்கின்ற நன்செய், புன்செய் பயிர்களின் நன்மைகளை எளிதில் சொல்லிவிட முடியாது. இதில் அரிசியானது சுவையும் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாகவும் விளங்கி வருகிறது.

இதில் பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டு வகையும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியா, பர்மா, சீனா, யப்பான் உட்பட பல்வேறு நாடுகளில் விளைவிக்கப்படும் அரிசி உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் உண்ணும் உணவாகவும் விளங்கி வருகிறது. ஆனால் இன்று நோய் என்று மருத்துவரிடம் சென்றால் முதலில் சொல்வது அரிசி சோறு சாப்பிடாதீர்கள் என்பது தான்.

பிறந்தது முதல் அரிசி உணவு சாப்பிட்டு பழகியவர்கள் இதைக்கேட்டதும் வாடி வதங்கி, தங்களுக்கு பெரும் நோய் ஏற்பட்டுவிட்டது என்பதுபோல் முடங்கி விடுகிறார்கள். உண்மையில் மற்ற தானியங்களைப் போலவே அரிசியும் பல்வேறு நன்மைகளை தந்து நம்மை காத்து வருகிறது.

உண்மையில் அரிசியை பட்டை தீட்டியும், குக்கரில் வைத்து சாப்பிடுவதால்தான் நமக்கு நோய் உண்டாகிறது என்பது பலருக்கு தெரிவதில்லை. உடலை வளர்த்தால்தான் உயிரை வளர்க்கமுடியும் என்பதில் தெளிவாக இருந்தார்கள் நமது முன்னோர்கள்.

எனவே உடலுக்கு எது தேவையோ அதை மட்டுமே உண்டு நலமாக வாழ்ந்தார்கள்.

இதில் தமிழர்களின் முக்கிய உணவான சோறு சமைப்பது என்பதே தனிக்கலையாக விளங்கியது எனலாம். இதில் தமிழர்கள் தனித்தன்மை பெற்று விளங்கினார்கள்.

சோறு வடிப்பது என்பது பழைய அரிசியைத் தவிடு, நொய் நீக்கி நன்றாக தீட்டி, முழு அரிசியாய் ஆய்ந்து எடுத்து இளவெந்நீரால் கழுவி சற்று ஆற விட்டுவைத்து கொள்ள வேண்டும்.

அரிசிக்கு மூன்று பங்கு நீர்விட்டு அடுப்பிலேற்றி அது நுரைவிட்டு கொதிக்கும் பொழுது அரிசியை அதில் போட்டு முக்காற்பங்கு வெந்தவுடன், கரண்டியால் துழாவி வடித்து கொள்ள வேண்டும்.

கஞ்சி வடிந்தவுடன், அந்த அடுப்பு தணலில் சோற்று பானையை வைத்து விட வேண்டும்.

அதன் பிறகு நீர் முற்றிலும் வற்றி பக்குவமாய் இருக்கும் சமயத்தில் எடுத்து கொள்வதே சோறு. இந்த சோறே உணவுக்கு ஏற்றது. வாதம் பித்தம் கபம் ஆகிய முக்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் ஏற்றது. பத்தியத்திற்கும் உகந்தது. ஒவ்வொரு அரிசிக்கும் ஒவ்வொரு பண்பு உள்ளது என்பதையும் சொல்லி வைத்தார்கள்.

முழு அரிசி சோற்றை மிதமான சூட்டுடன் சாப்பிட்டால் முப்பிணிகளையும் நீக்கி உடலுக்கு வன்மை தந்து நலத்துடன் வாழ வைக்கும். நன்றாக சமையாத சோற்றை உண்பதால் மலம் கட்டும். மறுநாளும் செரிக்காமல் இருக்கும். இதனால் உடலில் இதன் சத்துக்கள் ஊறாது.

குழைந்த சோற்றை உண்டால் இருமல், மந்தம், பீளை, மேகம் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படும். மிகுந்த சூட்டுடன் உள்ள சாப்பாட்டை சாப்பிட்டால் ரத்தம் சூடாகும், நீர்வேட்கை அதிகரிக்கும், பெருத்த வயிறு ஏற்படும். எனவே முழு அரிசிசோற்றை மிதசூட்டில் சாப்பிடுவதே நன்மை தரும்.

இதில் கார் அரிசியை கொண்டு வடிக்கப்படும் சோறு உடலில் உள்ள சிறு நஞ்சுகளை நீக்கி புண்களை ஆற்றும்.

ஈர்க்கச்சம்பா அரிசிசோறு கடவுளுக்கு படைக்கும் உணவிற்கு பயன்படுத்தப்படும் அரிசியாகும். இது பார்த்தவுடன் விருப்பத்தையும் நாவிற்கு சுவையை தரும்.

புழுகுசம்பா அரிசி சற்று அளவில் நீண்டு இருந்தாலும் இந்த அரிசியை சமைத்து உண்பதால் உடலில் வனப்பு ஏற்படும். நல்ல பசி எடுக்கும். தீராத தாகம் நீங்கும்.

கோரைச்சம்பா அரிசியை உண்பதால் வெப்பத்தால் ஏற்படும் வெறி, பெண்களுக்கான வெள்ளைபடுதல், உடலில் உண்டாகும் நமைச்சல் நீங்கி, உடல் குளிர்ச்சி உண்டாகும்.

குறுஞ்சம்பா அரிசிசோறு ஆண்மையை பெருக்கி உடலில் குத்துகின்ற வலியை போக்கும். ஆனால் உடல் சூட்டை உண்டாக்கும்.

மிளகுசம்பா அரிசிசோறு பல நன்மைகளை வாரி வழங்கக் கூடியது. பசியை உண்டாக்கும். பெருவளி என்கின்ற கடுமையான வாத நோய்களை நீக்கும்.

சீரகச்சம்பா அரிசி சோற்றை மன்னர்களும், செல்வந்தர்களும் மட்டுமே உண்ணும் பழக்கம் நமது நாட்டில் இருந்து வந்தது.

இனிப்பு சுவையுள்ள இதை உண்பதால் உடலில் ஏற்படும் அனைத்து வளி நோய்களையும் நீக்கும். சாப்பிட்டு முடிப்பதற்குள்ளாக செரித்து மீண்டும் பசியை ஏற்படுத்தும் அளவிற்கு எளிமையானது.

கல்லுடைச்சம்பா என்ற அரிசி சோறு அதிகமான ஆற்றலை தரக்கூடியது. மிகுந்த பலசாலியை கூட எதிர்க்கும் உடல் திறனையும் மனத்தெம்பும் ஏற்படுத்தும். நல்லசுவை கொண்ட இதை உண்டுவந்தால் பேசும் திறன் அதிகரிக்கும்.

குன்றிமணிச்சம்பா சோறு உண்டு வந்தால் உடல் வலித்து ஆண்மை உண்டாகும். வளி நோய்கள் அனைத்தும் போகும்.

அழகும் சுவையும் நிரம்பிய அன்னமழகி என்ற அரிசியை சமைத்து உண்பதால் உடல் வெப்பமாறுபாட்டால் ஏற்படும் சுரங்களை நீக்கி உடலுக்கு நன்மை தரும்.

மோர்ச்சோறு உண்டால் சிறுநீர் கழிப்பதால் ஏற்படும் எரிச்சல், தண்ணீர் தாகம், வயிற்றுப்போக்கு இவைகளை போக்கும். இரவில் நீரூற்றிய சோற்றை பழையது என்பார்கள். விடியற் காலையில் சோற்றில் உள்ள நீரோடு பழையதை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும். உடலில் ஒளி உண்டாகும். வெறிநோய் முற்றிலும் நீங்கும். நன்றாக பசியெடுக்கும்.

பழைய சோற்றில் மோர் கலந்து சாப்பிட்டால் உடல் எரிச்சல், பித்தம், மனப்பிரமை முதலியவை நீங்கும். இரவில் நன்றாக தூக்கம் வரும். மிகுதியாக உண்டு விட்டால், அப்பொழுதே உறக்கம் கண்களை தழுவும்.

பொதுவாக எந்த உணவாக இருந்தாலும் அளவாக தேவைக்கு ஏற்ப சாப்பிடுவதால் கெடுதல் என்பதே உண்டாகாது. அதுவும் உணவே மருந்து. மருந்தே உணவு என்று வாழ்க்கை முறையை வகுத்து கொண்டு வாழும் தமிழர்களின் உணவே, இன்று உலகம் முழுவதும் உள்ள மக்களால், பெரிதும் விரும்பும் உணவாகவும் மாறி வருகிறது. எனவே அரிசி சோறு உண்டு நலமுடன் வாழ்வோம்...

ஏழாம் அறிவை நோக்கிய மனித இனம்...


மனிதன் ஆறறிவு கொண்டவன் என்று தான் இது நாள்வரை கூறி வருகிறோம். ஆனால், மனித மூளையின் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கின்ற பொழுது, இது தவறு எனத் தெரிகிறது.

மனிதன் ஏழாம் அறிவை எட்டி விட்டான் என்பது தான் உண்மை. இளம் வயதிலேயே அபாரத் திறமையுடன் விளங்கும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். குழந்தை மேதைகளின் எண்ணிக்கை தற்காலத்தில் பல்கிப் பெருகி வருகிறது.

இடையறாது நிகழ்ந்து வரும் பரிணாம வளர்ச்சியின் இயக்கப் போக்கில், மனித மூளை, ஏழாம் அறிவை எட்டி விட்டது என்பதனைக் குழந்தை மேதைகள் உறுதி செய்கின்றனர்.

மனித இனத்தின் தன்மை மற்றும் எதன் மூலம் மனிதர்கள் அறிவாளிகளாகத் திகழ்கிறார்கள் என்பதனை ஆய்வு செய்வதே அறிவியலாகும். மனித மூளை ஏழாம் அறிவை எட்டி விட்டது என்கின்றனர்.

மனித மூளை எந்தப் பயனும் இல்லாத, வெறும் சதைப் பிண்டம் என்றே பல நூற்றாண்டுகளாக மருத்துவ உலகில் நம்பப்பட்டு வந்தது. மருத்துவத் துறையில் முன்னேற்றம் அடைந்திருந்த சீனர்களின் அகராதியில் கூட, மூளை என்பதனைக் குறிக்கும் வார்த்தையே கிடையாது.

கிரேக்கர்கள் தாம் மூளையைப் பற்றி முதல் முதலாகச் சிந்தித்தார்கள். ‘பிரேன்’ என்ற கிரேக்கச் சொல்லில் இருந்தே ‘பிரெய்ன்’ என்ற ஆங்கில வார்த்தை உருவாகியது. ‘பிரேன்’ என்றால் கிரேக்க மொழியில் ‘தேவையற்ற சதைப் பிண்டம்’ என்றுதான் அர்த்தம். கிரேக்கர்களும் மூளையைப் பற்றித் தவறாகவே சிந்தித்திருக்கிறார்கள்.

கி.பி. 6ஆம் நூற்றாண்டில் இருந்து 8ஆம் நூற்றாண்டு வரையிலான கால கட்டத்தில் மூளையைப் பற்றிய ஆராய்ச்சிகள் மிகுதியாயின. கேலன் என்ற கிரேக்க அறிஞர் நாம் உள்ளே இழுக்கும் மூச்சு மூளைக்குப் போய் உயிர்ச் சக்தியாக மாறி, இதயத்திற்கு வருகிறது என்றார்.

ஆனால் இது தவறான கருத்து. இருந்தும் ஏதோ ஒரு வகையில் மூளையின் முதன்மையைக் கேலன் உணரத் தொடங்கினார். அன்றைய கால கட்டத்தில் மருத்துவர்களுக்குப் பிணத்தை அறுத்து ஆராய்ச்சி செய்வது முடியாத காரியமாக இருந்தது. மீறிச் செய்தால், அது தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. இதனால், மனித உடற்கூறுகளைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை.

இந்தக் கால கட்டத்தில்தான் எடின்பரோ நகரில் பர்க் மற்றும் ஸாரே என்ற திருடர்கள் இருந்தார்கள். இருவரும் நண்பர்கள். இருவரும் சேர்ந்து சிறுசிறு திருட்டுக்களைச் செய்து வந்தனர். இருவருக்கும் தொழில் இலாபகரமாக இல்லை. தீவிர யோசனைக்குப் பின் இருவரும் பிணங்களைத் திருடி, மனித உடலை அறுத்துப் பார்க்கும் டாக்டர்களுக்கு விற்பனை செய்வதாக முடிவு செய்தனர். புதிதாக அடக்கம் செய்யப்பட்ட பிணங்களைக் கல்லறையில் இருந்து இருவரும் திருடி வந்து, டாக்டரிடம் கொடுத்தார்கள்.

அதுமட்டுமல்லாமல் இறப்பதற்கு முன் என்னென்ன நோய் இருந்தன? எப்படி இறந்தார்? என்பன போன்ற பயனுள்ள விபரங்களையும் டாக்டர்களுக்கு விற்பனை செய்தனர். அவை டாக்டர்களுக்கு மிகவும் பயன்பட்டன. ஆவர்கள் ஒவ்வொரு நோய்க்கும் உடலில் என்ன மாதிரியான பாதிப்பு இருக்கும் எனத்தெரிந்து சொல்லப் பெரிதும் உதவினர்.

ஒரு முறை இடது கையில் முடக்கு வாதம் வந்து இறந்தவரின் உடலை டாக்டரிடம் அந்தத் திருடர்கள் கொடுத்தனர். டாக்டர்கள் அந்தப் பிணத்தின் மண்டை ஓட்டைப் பிளந்து பார்த்த போது, மூளையின் வலது பக்கம் பாதிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.

மூளைக்கும், மனித உடலின் உள் உறுப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று சிந்திக்கத் தொடங்கினர்; மூளை தொடர்பான ஆராய்ச்சி தொடர்ந்தது.

வியப்பான உண்மைகள் உலகுக்குத் தெரிய வந்தன. அந்தத் திருடர்கள் மட்டும் பணத்திற்காகப் பிணங்களைத் திருடி, டாக்டரிடம் கொடுக்காமல் இருந்திருந்தால், மூளையைப் பற்றிப் பல உண்மைகள் உலகிற்குத் தெரிய பலகாலமாயிருக்கும் அல்லவா!

மூளையின் ஒவ்வொரு பகுதியின் செயல்பாடுகளையும் மனித இனம் அறிந்திருந்தாலும், இன்றும் ஆச்சரியம் தரும் வகையில் அதன் செயல்பாட்டினை எதிர்காலச் சந்ததியினர் ஏழாம் அறிவினைக் கொண்டு வெளிச்சத்திற்குக் கொண்டு வருவார்கள் என்று நம்பலாம்.

நேஷனல் ஜியோகிராஃபி சேனலில் அறிவு ஜீவிகளான இளம் இந்தியர்களை விவரிக்கும் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. என்னுடைய அபார மூளை என்ற தொடராக அது வருணிக்கப்பட்டது.

இளம் வயதிலேயே மிகுந்த திறமையுடன் விளங்கும் நிசால் நாராயணன், ஹைதராபாத்தைச் சேர்ந்த சித்தார்த் நாகராஜன், பெங்களுரைச் சேர்ந்த தாதாகத் துளசி, மும்பையைச் சேர்ந்த ராகவ் சச்சார் ஆகிய நான்கு இளைஞர்களைப் பற்றிய சிறப்புத் தன்மைகள் இந்நிகழ்ச்சியில் இடம் பெற்றன. அவர்களில் சித்தார்த் நாகராஜனின் தற்போதைய வயது பத்து. தனது மூன்று வயதிலேயே டிரம் இசை நிகழ்ச்சியைத் தனியாக நடத்திய சிறப்புத் தன்மை பெற்றவர். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை இவர் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பன்னிரெண்டு வயதே ஆகும் நிசால் நாராயணன் கணிதத்தில் மிகுந்த திறமை பெற்றவர். கணிதக் கோட்பாடுகள் பற்றிய அவரது ஆறு புத்தகங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. சிறு வயதிலேயே தன் தந்தையின் நிதிநிலை அறிக்கையில் தவறுகள் இருந்ததைக் கண்டறிந்த மேதை அவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. மிக இளம் வயதில் கின்னஸ் புத்தகத்தில் செயற்கரிய செயல் செய்தவராக இடம் பெற்ற இந்தியர் என்பது அவரது மற்றொரு சிறப்பு.

அடுத்த அறிவு ஜீவி, தாதாகத் அவதார் துளசி, தனது ஒன்பது வயதில் பள்ளிப் படிப்பை முடித்தவர்; பட்டப் படிப்பை மறு ஆண்டிலேயே முடித்தார். பி.எச்.டி., பட்டம் பெற்றவர்களில் மிகவும் இளையவர் என்ற பெருமை பெற்ற துளசிக்குத் தற்பொழுது வயது இருபதுதான்.

ராகவ் சச்சார் தனது நான்கு வயதிலேயே இசைக் கருவிகளைத் திறன்பட வாசித்துப் புகழ் பெறத் தொடங்கினார். ஆண்டுதோறும் ஓர் இசைக் கருவி என்ற அடிப்படையில் இதுவரை இருபத்தி நான்கு இசைக் கருவிகளில் தேர்ச்சி பெற்றார். தன்னுடைய இசை நிகழ்ச்சியில் குறைந்த பட்சம் பத்து இசைக் கருவிகளை வாசிப்பார். இதில் புல்லாங்குழல், ஹார்மோனியம், சாக்சபோன் உள்ளிட்டவைகளும் அடங்கும். அவரது தற்போதைய வயது இருபத்து ஆறு.

பாகிஸ்தானைச் சேர்ந்த 10 வயது சிறுமி ‘ஆல்பா கரிம்நந்தாவர்’ உலகளவில் அமெரிக்காவைச் சேர்ந்த பில்கேட்ஸின் ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனம் நடத்திய கம்யூட்டர் தேர்வில் உலக சாதனை நிகழ்த்தினார். இந்த உலக சாதனையை மதுரையைச் சேர்ந்த 8 வயது சிறுமி ‘லவிணாஸ்ரீ’ முறியடித்து ‘உலகின் இளம் வயதில் மைக்ரோசாப்ட் சான்றிதழ் பெற்றவர’ என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.

பி.இ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., போன்ற தொழில் நுட்பத்தில் முதுகலைப்பட்டம் பெற்று 25 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர் மட்டுமே எழுதக் கூடிய இத்தேர்வில் பில்கேட்ஸ் சிறப்பு அனுமதி வழங்கியதால் இத்தேர்வை இவள் எழுத முடிந்தது. லவிணாஸ்ரீ மூன்று வயதில் இருக்கும் பொழுதே திருக்குறளின் 1330 குறள்களையும் ஒரே மூச்சில் ஒப்பித்தாள். பாகிஸ்தான் சிறுமியும், மதுரை சிறுமியும் ஏழாம் அறிவுக்கு சான்றாயின.

குழந்தைகள்தாம் என்றில்லை; பல முதியவர்களும் திறன்மிகு மூளை வளம் கொண்டவர்களாக உள்ளனர். மும்பையைச் சேர்ந்த எழுபத்து ஐந்து வயது கணக்குப் புலி எம்.எஸ். டோஷி ஐந்திலக்க எண்ணை 39,122 ஐ 97,531 இல் பெருக்கினால், என்ன விடை வரும்? அல்லது 24,681 இல் இருந்து 13,579 ஐ கழித்தால் என்ன விடை வரும்? என்று அவரிடம் கேட்டால், கால்குலேட்டர், கம்ப்யூட்டர் எதுவுமில்லாமல், சில வினாடிகளில் சரியான பதில் சொல்லி வியப்பிலாழ்த்தி விடுவார்.

வக்கீலான அவர், கணிதத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஓன்பது இலக்க எண்ணிலோ அல்லது அதற்கு மேலான எண்களிலோ கணக்குக் கேட்டால், அவர் நிமிடத்தில் பதில்சொல்லி விடுவார். அவரை ‘மனிதக் கால்குலேட்டர்’ என்றே சொல்லலாம். இவ்வளவு விரைவாகக் கணக்குப் போட யாரிடமும் பயிற்சி பெற்றதும் இல்லை.

அவர் இதனைப் பற்றிக் கூறும் பொழுது, நான் விரைவாகக் கணக்குப் போடுவதில் மாய மந்திரம் ஏதுமில்லை. எல்லாவற்றையும் வெளிப்படையாகவே செய்கிறேன். சரியான பயிற்சியும் எனக்குக் கணக்குப் பாடத்தில் உள்ள ஆர்வமும் தான் காரணம்’ என்று கூறினார்.

அண்மையில் நியூயார்க் நகரில் 200 இலக்க எண்ணின் பதின் மூன்றாம் மூலத்தை (Thirteen Root) 72 நொடிகளில் கண்டு பிடித்துக் கூறினார். ஒர் ஆய்வு மாணவர், அவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘லெம்மாயிர்’ என்பவர். இந்த மூலம் 2397 207 667 966 701 ஆகும். இது பதினாறு இலக்க எண் ஆகும்.

மேதமை வாய்ந்த ஒரு மூளையின் மிக்க திறமையின் வெளிப்பாடு என்று மட்டுமே செயற்கரிய செயலைக் கருதுவது குறை மதிப்பீடாகும் என்று சென்னையைச் சேர்ந்த நியூட்டன் அறிவியல் மன்றம் இன்ஸ்கோ சுப்பிரமணியன் கூறுகிறார்.

இடையறாது நிகழ்ந்து வரும் பரிணாம வளர்ச்சியின் இயக்கப் போக்கில் மனித மூளையானது ஏழாம் அறிவை எட்டிவிட்டது என்பதன் உறுதிப்பாடு, செயற்கரிய செயலாகும். மனித மூளையால் ஒளியின் வேகத்திற்கு அளவிற்கு (நொடிக்கு 3 லட்சம் கி.மீ.) சிந்திக்க இயலும் என்பதற்குச் சாட்சியாக இருக்கிறது லெம்மாயிர் நிகழ்த்திய சாதனை.

குழந்தை மேதைகளின் எண்ணிக்கை கணக்கற்றவை. பள்ளிக் குழந்தைகளில் மாநில மட்டத்தில் நடைபெறும் தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் 100க்கு 100 பெறும் மாணவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் பலர் உள்ளனர்.

எலக்ட்ரான்கள் ஓர் ஆற்றல் மட்டத்தில் இருந்து பிறிதோர் ஆற்றல் மட்டத்திற்குப் பாய்ந்து செல்வது போன்று மனித மூளை ஆறாம் அறிவில் இருந்து ஒரு குவாண்டம் பாய்ச்சலில் ஏழாம் அறிவை எட்டிவிட்டதன் வெளிப்பாடே இந்நிகழ்வு. இஃது ஒரு குவாண்டம் நிகழ்வு. (Quantum Phenomenon) பல்லாயிரம் ஆண்டு பரிணாம வளர்ச்சியின் விளைவாக இரட்டைச் சுருள் (Double Helix DNA) என்ற மூளை வளத்தைப் பெற்ற மானிடம், பரிணாமத்தின் அடுத்த கட்டத்தில், ஏழாம் அறிவு பெறும். மூளையின் நியூரான்கள் வெளிப்படுத்தும் மின் சமிக்ஞைகளை EEG (Electro Encephalograph) என்ற கருவியின் மூலம் பதிவு செய்கின்றனர் நரம்பியல் நிபுணர்கள்.

மேலும், ஆழமானதும் துல்லியமானதுமான கருவிகள் வடிவமைக்கும் போது, ஆறாம் அறிவையும் ஏழாம் அறிவையும் பிரித்தறிவது கைகூடும்.

பொருட்களுக்குத் திடம், திரவம், வாயு என்று மூன்று நிலைகள் மட்டுமே உண்டு என்ற அறிவியல் கருத்து இன்று மாறி விட்டது. இவற்றிற்கு அப்பால் ஒரு புதிய நிலையை (New State of Matter) 2001இல் மூன்று அமெரிக்க இயற்பியலாளர்கள் நிரூபித்து, நோபல் பரிசு பெற்றனர்.

போஸ் – ஐன்ஸ்டின் குளிர் நிலை (Bose – Einstein Condensate) என்று அப்புதிய நிலைக்குப் பெயர். இதுபோலவே, ஏழாவது அறிவும் ‘குவாண்டம் அறிவு’ (Quantum sense) என்ற பெயருடன் இவ்வுலகை ஆளும் என்கிறார் – இன்ஸ்கோ சுப்பிரமணியன்...

நெத்தியடி மயில்சாமி...


சுவசுதிக் கிணறு....


எட்டாம் நூற்றாண்டில் கம்பன் அரையன் என்ற மன்னனால் கட்டப்பட்ட சுவசுதிக் வடிவ கிணறு திருச்சிராப்பள்ளியில் இருந்து துறையூர் செல்லும் வழியில் திருவெல்லாறை என்ற ஊரில் அமைந்துள்ளது.

இந்த கிணற்றில் இறப்பிலா வாழ்கையை பற்றி பாடல் வரிகள் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கிணற்றை "மற்பிடுகு பெருன்கிணறு" என்றும் கூறுகின்றனர்...

நீதிபதி காப்பாத்த சொல்றாரு.. தேர்தல் ஆணையம் சொல்லுது.. இது ஜனநாயக நாடா.. சர்வாதிகார நாடா.?


இராவண்ணன் தமிழன்...



இரா – இரவு..

வண்ணன் – நிறம் பொருந்தியவன்.

இரவு நிறமான கருநிறம் கொண்டவன் என்று பொருள்.

பெயரிலேயே தமிழன் என்று உணர்ந்தாலும் சில மூடர்களுக்கு இராவணனை தமிழன் என்று உணர முடியவில்லை.

ராவணனைப் பற்றி பேச முற்படுகின்ற போது, முதலில் அவன் இனம் எது வென சொல்லிவிடுதல் நலம்.

ஒரு வலைப்பதிவர் ராவணணை சிங்கள அரசன் எனச் சொல்லியிருந்தார். இன்னொரு வலைப்பதிவர் ராவணனை பிராமணன் எனச் சொல்லியிருந்தார்.

ஆனால் நான் மதிக்கும் ஜெயமோகன் தனது வலைப்பூவில் காளிவிளை ராஜா’ எழுதிய சீரிய ஆய்வுக்கட்டுரை பற்றி குறிப்படும் போது, விளவங்கோடு வட்டம் மருதங்கோடு பரக்குன்று, அகத்தீஸ்வரம் வட்டம் தெக்குறிச்சி போன்ற ஊர்களில் அதற்கான தடயங்கள் உள்ளன.

இங்கெல்லாம் இராவணனை தங்கள் குலமுன்னோராக போற்றும் மரபு சில குடும்பத்தாரிடம் இருந்து வருகிறது…

இராவணானால் எழுதப்பட்ட தமிழ்ச் சுவடிகள் சிலவும் இவர்களிடம் இன்றளவும் உள்ளன என்கிறார்.

ஆதாரத்தின் சுருக்கம்..

1.குமரிமாவட்டத்தில் உள்ள நாடார் அல்லது சான்றோர் சாதியினரே ராவணனின் குலத்தவர்.

2. சான்றோர் சாதியில் முந்நூற்றுவர் என்ற பிரிவு உள்ளது.ராவணனின் படைப்பிரிவை முந்நூற்றுவர் என கம்பன் சொல்கிறார். அது இவர்களே.

3. ராவணன் சீதையை சிறைவைத்த இடம் குமரிமாவட்டத்தில் உள்ள மிஞ்சிறை என்ற ஊரே. இது உண்மையில் ராவணப் படையினரான சான்றோர் சாதியால் முன்சிறை என்று சொல்லப்பட்ட இடம்.

4. சான்றோர்கள் கேரளத்தில் ஈழவர் என்று சொல்லப்படுகிறார்கள். அவர்கள் ஈழத்தில் அதாவது ராவணனின் இலங்கையில் இருந்து வந்தவர்கள் என்பதற்கான ஆதாரம் இது.

5.ராவணன் மனைவி மண்டோதரி சான்றோர் குலத்தவள். அவள் அப்பா மயன். இவர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டத்தைச் சார்ந்தவர்.

6. இந்த மயன் மாபெரும் பொறியியல் மேதை. ஆகாயவிமானம் (வானூர்தி) போன்றவற்றைக் கண்டு பிடித்தவர். மயனச்சிற்பி என்றும் இவருக்கு பெயர் உண்டு. ஐந்திறம் போன்ற அரிய நூல்களை இவர் எழுதினார்.

7. எகிப்து பெரு முதலிய நாடுகளில் உள்ள பெருமேடுகள் [பிரமிடுகள்] இவரால் கட்டப்பட்டவையே.

8. திருவிதாங்கூர் மன்னர்கள் சான்றோர் குலத்தவரே. ஆதாரங்களாக புலவர் குழந்தை எழுதிய ராவண காவியம், அரக்கர் நூல் [ஓலைச்சுவடி] கோயிலூட்டம்மை வழிபாடு -இராவணேசுவரன் பூசை [பதிப்பாசிரியர் சு.செல்வகுமார் 2004]

குமரிமாவட்ட எழுத்தாளர்கள் யார் எவர் -மயன் மற்றும் திரு பாஸ்கரன் வைத்தியர் நேர்காணல் ஆகியவை சுட்டப்பட்டுள்ளன.

ராவண காவியம் - ராவணன் தமிழன் என உறுதி படக் கூறவே ராவண காவியம் இயற்றப்பட்டது.

கம்பனின் சொல் வழக்குகளில் மயங்கியதால் தமிழர்கள் பலருக்கும் இக் காவியம் சென்றடையவில்லை. கடவுள் மறுப்பு கொள்கையில் தீவிரமாக இருக்கும் திராவிடமும்  இதை கவணத்தில் கொள்வதில்லை..

இதன் சாராம்சத்தில்…

இரண்டாம் கடல்கோளுக்குப் பின்னர்த் தோன்றிய இலங்கையிலிருந்து தமிழகத்தை ஆண்டு வந்தான். தமிழர் இனத் தலைவனாகிய விச்சிரவாவு. அவன் மனைவி கேகசி. அவர்களுக்கு இராவணன், கும்பகன்னன், பீடணன் என்ற மூன்று ஆண்மக்களும் காமவல்லி என்னும் ஒரு பெண்மகளும் பிறந்தனர். தன் தந்தை விச்சிரவாவுக்குப் பின்னர் இராவணன் தமிழகத்தை ஆண்டான்.
எனக் குறிப்படப்பட்டுள்ளது.

பத்து தலைக் காதல் – எண்சான் உடம்பிற்கும் தலைதான் பிரதானம் என்பது முன்னோர்களின் மொழி. ஒரு தலையுள்ளவனின் அறிவினை விட பத்துதலை உல்லவனின் அறிவு எப்படியிருக்கும் எண்ணிப் பார்க்க வேண்டும். பல கலைகளிலும் வல்லவனான ராவணனின் பெருமை உணர்த்தவே ராவணனுக்கு பத்து தலை உருவக் கதை சொல்லப்படுகிறது.

தமிழர்களின் ஆதித் திருமணங்கள் எல்லாமே காந்தர்வ திருமணங்கள் தான். ராவணன் தமிழனல்லவா, எனவே அவளை காந்தர்வ மணம் செய்ய விருப்பம் கொண்டிருக்கின்றான்.

காந்தர்வ திருமணம் என்றால் காதல். இந்தக் கால திரைப்படங்களில் கதாநாயகியை துரத்தி துரத்தி காதல் செய்யும் கதாநாயகர்களைப் போல சீதையை தூக்கிக் கொண்டு போய் காதல் செய்திருக்கிறான் ராவணன்.

சீதையை கவர்ந்த காரணம்..

இராமன் ஒரு நாள் தனித்துலாவிய காமவல்லியைக் கண்டு அவள்பால் காமுற்றான். அவள் கையைப் பிடித்திழுத்து வற்புறுத்தினான். அவனுடைய விருப்பத்திற்கு உடன்படாததால் இலக்குவனால் அவள் உறுப்புகள் அறுக்கப்பட்டன. காமவல்லி இறந்தாள்.

தன் தங்கை அழிந்த செய்தியை இராவணன் தூதரால் அறிந்தான். உடனே அவன் விந்தம் சென்று காமவல்லி வளர்த்த மானை விட்டு இராமலக்குவரைப் பிரிக்கச் செய்தான். வீரர்களைக் கொண்டு அவர்களை வளைத்துக் கொள்ளுமாறு செய்து சீதையைக் கவர்ந்து சென்று அவளைப் போற்றினான்.

ராமனை விடவும் ராவணனே உயர்ந்தவன்.. பல விதமான கலைகளிலும், அறிவிலும் ராமனை விடவும் ராவணனே உயர்ந்தவன். சீதை விசயத்தை மட்டும் எடுத்துக் கொண்டால்…

சீதையை தூக்கி வந்தானே ஒழிய அவளை வன் புணர்ச்சி செய்யவில்லை.
ராமனோ ராவணனுடன் இருந்ததிற்காக சீதையை தீக்குளிக்க செய்தான்.

பின்பு ஒரு ஒற்றன் வந்து ஊரே ராமனை ஏசுவதாச் சொல்ல சீதை காட்டில் கொண்டு போய் விட்டுவர இலக்குமணை அனுப்பினான். இதுவே ராவண காவியம் சொல்லும் உண்மை...

யூனியன் ஆஃப் சவுத் இந்தியா...


தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு… புராண, வரலாற்று உண்மைகள்...


தமிழ் ஆண்டு (திருவள்ளுவராண்டு)...

தமிழ் புத்தாண்டு பற்றிய குழப்பங்களுக்கு தீர்வு பெற இதைப் படியுங்கள்.....

அறிஞர்களும் சான்றோர்களும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்திருந்தாலும் ஒரு சாரார் இதை மறுத்து வழக்கமான சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகப் பாவித்து வருகிறார்கள்.

இவர்கள் தமிழ் ஆண்டுகள் என்கிற பெயரில் வழங்கி வரும் வடமொழிப் பெயர்களையும் ஏற்றுக் கொண்டு வருவது வருத்தத்தைத் தருகிறது. தமிழருக்கென ஒரு தொடராண்டு கொண்டுவருவதில் ஒருவருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் தமிழ் முதல்  திங்கள் ’தை’யா அல்லது ’சித்திரை’யா என்பதுதான் குழப்பம். தமிழ்ப் பேசும் அனைத்து தரப்பினருக்கும் வடமொழிப் பெயரை மாற்றுவதிலும் மாற்றுக் கருத்தேதுமிருக்க வாய்ப்பில்லை.

காலத்தின் அருமை - நம் வாழ்வில் திரும்பப் பெற முடியாதவை மூன்று. ஒன்று காலம், மற்றவை மானம், உயிர்.

நாளென ஒன்று போல் காட்டி உயிரீரும்
வாளது உணர்வார்ப் பெறின் –          திருக்குறள்.

என்கிற குறள் மூலமும், காலம் அறிதல் என்கிற அதிகாரத்தின் வழியும் காலத்தின் அருமையை வள்ளுவம் உணர்த்துகிறது.

தமிழகத்தில் வானியலில் திறமையான அறிஞர்களை ‘அறிவர், கணி, கணியன்’ என அழைத்தார்கள். அரசனுடைய அவையில் பெரும் புத்தி படைத்த ‘கணி’கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. ‘அறிவர்’கள் குறித்துத் தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார்.

தமிழர்கள் காலத்தைக் கணித்ததைச் சுருக்கமாகப் பார்ப்போம்..

தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள்.

ஒரு இனம் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அந்த இனம் தனது மொழி, தனது பண்பாடு, தனது நாகரீகம் போன்றவற்றை பேணிக்கொள்ளுதல் அவசியமாகின்றது. இந்த காப்பாற்றும் தன்மையே அந்த இனத்தின் தொடக்கத்தையும் வாழ்வாதாரத்தின் முதன்மையையும் அறிமுகம் செய்து வைக்கும் காரணியாகின்றது

அந்தவகையில் உலகின் முதன்மையாக தோன்றிய இனங்களுள் முதல்நிலை பெறும் தமிழ் மொழி, தமிழர் இனம், தமிழர் நாகரீகம் என்பவற்றின் தாயகம் குமரிக்கண்டம் என்றே தொல்பொருள் வல்லுனர்கள் தமது ஆய்வுகளின் மூலம் நிறுவியுள்ளனர்.

தமிழ் வளர்த்த மூன்று சங்கங்களின் சுவடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் படி கடற்கோளால் காவுகொள்ளப்பட்ட குமரிக்கோட்டின் நடுவரைக்கோடு இலங்கை என்கின்ற தேசத்தை நடுவணாகக் கொண்டு தமிழர்களின் பூர்வீகத் தாயகம் உலகப் பந்தில் ஓரு தேசமாக தன்னை நிலை நிறுத்தியிருந்தது .

குமரிக்கண்டத்தில் வாழ்ந்த தமிழர் இனம் தன் தாய் மொழியாக தமிழையும் தமது நாகரீகத்தையும் தன் இன அடையாளங்களையும் பேணி வந்த அதேவேளை தமது நாகரீகத்தின் அடையாளமாக காலக் கணிப்பீடுகளையும் சரியாக மதிப்பீடு செய்து தமது வாழ்வியல் கூறுகளையும் நிர்ணயம் செய்து கொண்டனர் என அலெக்ஸ்ராண்டர்-கோண்டிரடோஸ், எஸ்.ஜி.வெல்ஸ் போன்ற மெய்யியலாளர்கள் தமிழர்களின் பூர்வீகத்தை உறுதி செய்துள்ளனர்.

சரியாக மதிப்பீடு செய்து தமது வாழ்வியல் கூறுகளையும் நிர்ணயம் செய்து கொண்டனர் என அலெக்ஸ்ராண்டர்- கோண்டிரடோஸ் எஸ்.ஜி வெல்ஸ் போன்ற மெய்யியலாளர்கள் தமிழர்களின் பூர்வீகத்தை உறுதி செய்துள்ளனர்.

இந்த மெய்யியலாளர்களின் கருத்துப்படி ஆதிக்குடியான மூத்த தமிழ் குடி மொழி வழியேகி வாய்வியல் கூறுகளுக்கும் ஆண்டுக்கணிப்பீடுகளை தொடக்ககமாகவும் நிர்ணயம் செய்து கொண்டனர் என கூறும் இவர்கள் தமிழர்கள் என்னும் இந்த சாதியினர் பூமியின் சுழற்சிக்கு ஏற்ப காலக் கணிப்பீடுகளை மதிப்பீடு செய்து அதனூடாக கண்டறிந்த பெறு பேறுகளுக்கு அமைவாக தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பகுத்தார்கள்.

காலத்தைக் கணக்கிடுவதில் இத்துணைக் கவனம் செலுத்திய தமிழர்கள் வாழ்க்கை, வரலாற்று நிகழ்ச்சிகளைப் பொதுவான ஆண்டுக்கணக்கால் குறிப்பிடும் வழக்கத்தைப் பின்பற்றவில்லை என்பது வியப்பாக இருக்கிறது, வருத்தம் தருகிறது.

ஒரு நாளை கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பிரித்து வைத்தார்கள்.

வைகறை,
காலை,
நண்பகல்,
எற்பாடு,
மாலை,
யாமம்’ என்று அவற்றை அழைத்தார்கள்.

அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள்.

அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றது. தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.

பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.

1. இளவேனில் – ( தை-மாசி மாதங்களுக்குரியது).
2. முதுவேனில் – (பங்குனி – சித்திரை மாதங்களுக்குரியது).
3. கார் – (வைகாசி – ஆனி மாதங்களுக்குரியது).
4. கூதிர் – (ஆடி – ஆவணி மாதங்களுக்குரியது.).
5. முன்பனி – (புரட்டாசி – ஐப்பசி மாதங்களுக்குரியது).
6. பின்பனி – (கார்த்திகை – மார்கழி மாதங்களுக்குரியது).

காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு (seasons) பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விசயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் – தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

இடையில் தமிழர் மட்டும் மாறி விட்டோம். இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம்தான். அதனால்தான் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். (500 க்கும் மேற்பட்ட தமிழறிஞர்களின் ஆராய்ச்சி முடிவும் இதுதான்).

இந்த இழிநிலையைப் போக்கத் தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில்  தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிப் பேராசிரியர் கா. நமச்சிவாயம் முன்னிலையில் ஆராய்ந்தார்கள்.

இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு முடிவெடுத்தவர்களில் முக்கியமானவர்கள் தமிழ்த் தென்றல் திரு. வி. கல்யாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப்பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு. வெங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் ஆவார்கள்.

அவர்கள் எடுத்த முடிவுகள்
திருவள்ளுவர் பெயரில் தொடராண்டு பின்பற்றுவது; அதையே தமிழ் ஆண்டு எனக்கொள்வது; திருவள்ளுவர் ஆண்டின் முதல் திங்கள் தை; இறுதித் திங்கள் மார்கழி; புத்தாண்டுத் துவக்கம் தை முதல் நாள். திருவள்ளுவர் காலம் கி.மு.31. ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் தமிழாண்டு வரும் (2011 + 31 = 2042)  என்று அந்நாளில் முடிவு செய்தனர். கிழமைகளில் புதன், சனி தவிர மற்றவை தமிழ்; புதன் = அறிவன்; சனி = காரி.

தமிழ் நாட்டரசு 1971 முதல் திருவள்ளுவராண்டு முறையை ஏற்று தமிழ் நாட்டரசு நாட்குறிப்பிலும்,
1972 முதல் தமிழ் நாட்டு அரசிதழிலும்,
1981 முதல் அரசின் அனைத்து அலுவல்களிலும்  நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதன் அடிப்படையிலேயே தை மாதத்தை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி. தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாய் அறிவித்த கருணாநிதியைப் பிடிக்காத பலர் சித்திரை முதல் நாளை தான் தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடுவேன் எனப் பிடிவாதமாக இருக்கிறார்கள்.

ஜெயலலிதா சித்திரை 1 அன்று புத்தாண்டு வாழ்த்து சொல்வதில் ஆச்சரியமில்லை. அந்த அம்மையாருக்கு இதெல்லாம் தெரிந்தால்தானே.

நமக்கேனும் கொஞ்சம் சிந்திக்கும் திறன் வேண்டும். நமக்குப் பிடிக்காதவர் நம் உண்ணும் சோற்றை, சோறு எனச் சொன்னான் என்பதற்காக நம் சோறு மலம் ஆகி விடாது. நமக்குப் பிடிக்காதவர்கள் சொன்னாலும் உண்மை உண்மையே. குறைந்தபட்சம் கீழே பாரதிதாசன் சொல்வதையாவது கேளுங்கள்…

நித்திரையில் இருக்கும் தமிழா
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு.

-பாவேந்தர் பாரதிதாசன்.

இன்றைய நிலை - இன்னாளில் வழக்கில் உள்ள ‘பிரபவ முதல் அட்சய’ வரை உள்ள 60 ஆண்டுகளில் ஒன்று கூட தமிழ் இல்லை. அவை பற்சக்கர முறையில் இருப்பதால் 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாக இல்லை.  அதற்கு வழங்கும் கதை அறிவு, அறிவியல், தமிழ் மரபு, மாண்பு, பண்பு ஆகியவற்றுக்குப் பொருத்தமாகவும் இல்லை, பல்லாயிரமாண்டுகளாக வாழ்ந்து வரும் தமிழினத்தின் காலத்தை வரையறுக்கவும் முடியவில்லை.

சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு என நாம் கொண்டாடி வந்த ஆண்டுக் கணக்கு முறையைக் கவனத்தில் எடுத்துக் கொண்டால் அது சுழற்சி முறையில் இருக்கும். அறுபது ஆண்டுகள் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருக்கும். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் ‘பிரபவ’ முதல் ‘அட்சய’ என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லை.

இந்த அறுபது ஆண்டு சுழற்சி முறையைக் குறித்து முதலில் கவனிப்போம். இந்த முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறிஸ்துவுக்கு பின் 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது. கனிஷ்கன் என்ற வடநாட்டு அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுவோரும் உண்டு. பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாக பரப்பப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது.

எந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் நிறுத்தப்படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், கலைகள் போன்றவை அந்த நாட்டினரின் பழக்க வழக்கங்களோடு கலந்து விடுவது இயல்பு. அந்த வகையில் இந்த சாலிவாகன முறை பின்னர் மெல்ல மெல்ல தமிழகத்தில் நடை முறைப் பழக்கத்திற்கு வந்து விட்டது. அறுபது ஆண்டு சுழற்சி முறை காரணமாக ஆரியர்களிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் ‘சஷ்டி பூர்த்தி’ என்ற அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழக்கம் இருப்பதைக் கவனியுங்கள்.
மேலும் இந்த அறுபது ஆண்டுகளுக்கான விளக்கம் மிகுந்த ஆபாசம் நிறைந்ததாகும்.

அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.

ஒருமுறை நாரதமுனிவர், கடவுள் கிருஷ்ணனை நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா? என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணன், நான் உடன் இல்லாமல் வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள்’ என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும்  கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உறவு கொள்ள விரும்புகிறேன் என்றார்.

கிருஷ்ணன் நாரதரை யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய் எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். பின் கடவுள் கிருஷ்ணனுடன் அறுபது வருடம் கூடி, அறுபது மகன்களைப் பெற்றார். அவர்கள் ‘பிரபவ தொடங்கி அட்சய முடிய’ என பெயர் பெற்றார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருஷமாகும் வரம் பெற்றார்கள். இப்படிதான் சித்திரை1ல் ஆரம்பிக்கும் புத்தாண்டு வரலாறு செல்கிறது.

இந்த இழிநிலையைப் போக்கத் தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில்  தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிப் பேராசிரியர் கா. நமச்சிவாயம் முன்னிலையில் ஆராய்ந்தார்கள். இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு முடிவெடுத்தவர்களில் முக்கியமானவர்கள் தமிழ்த் தென்றல் திரு. வி. கல்யாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப்பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு. வெங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் ஆவார்கள்.

அவர்கள் எடுத்த முடிவுகள்
திருவள்ளுவர் பெயரில் தொடராண்டு பின்பற்றுவது; அதையே தமிழ் ஆண்டு எனக்கொள்வது; திருவள்ளுவர் ஆண்டின் முதல் திங்கள் தை; இறுதித் திங்கள் மார்கழி; புத்தாண்டுத் துவக்கம் தை முதல் நாள். திருவள்ளுவர் காலம் கி.மு.31. ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் தமிழாண்டு வரும் (2011 + 31 = 2042)  என்று அந்நாளில் முடிவு செய்தனர். கிழமைகளில் புதன், சனி தவிர மற்றவை தமிழ்; புதன் = அறிவன்; சனி = காரி.

தமிழ் நாட்டரசு 1971 முதல் திருவள்ளுவராண்டு முறையை ஏற்று தமிழ் நாட்டரசு நாட்குறிப்பிலும்,
1972 முதல் தமிழ் நாட்டு அரசிதழிலும்,
1981 முதல் அரசின் அனைத்து அலுவல்களிலும்  நடைமுறைப்படுத்தி வருகிறது.

மேற்கண்ட விவரங்கள் மறைமலை நகரில் வாழ்ந்து வரும் திரு வ. வேம்பையன் அவர்களின் கட்டுரையிலிருந்து எடுத்தது.

கடந்த 30 ஆண்டுகளாக இவர் திருவள்ளுவராண்டைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த கடும் முயற்சி எடுத்து வருகிறார். 1967 இல் ஆட்சிக்கு வந்தபோதோ அல்லது 1971 இல் பெரும் வெற்றி பெற்றபோதோ முழு வீச்சில் அரசு சட்டத்துடன் நடைமுறைப்படுத்தி இருந்தால் கடந்த 40 ஆண்டுகளில் நாம் வெற்றி பெற்றிருப்போம். ஒன்று தமிழாண்டு திருவள்ளுவராண்டு யாராலும் மாற்ற முடியாத படி (எப்படி இன்று ‘தமிழ்நாடு’ என்ற பெயரை யார் ஆட்சிக்கு வந்தாலும் மாற்ற முடியாதோ) வழக்கத்தில் வந்து நிலைத்து இருக்கும்.

தையே முதற்றிங்கள்; தைம் முதலே ஆண்டு முதல்
பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று;
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம் முதல்நாள், பொங்கல் நன்னாள்
-பாவேந்தர் பாரதிதாசன்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. புத்தாண்டில் உலகம் வாழ் தமிழர்களின் வாழ்வில் தென்றல் வீசட்டும். இன்பம் சேரட்டும். மகிழ்ச்சி பொங்கட்டும்...

அமைதியா ஒரு முறை யோசிச்சு பாருங்கள் புரியும்...


நம் அனைவரையும் ஒட்டு மொத்தமாக மாற்றியதால் தெரியவில்லை..

நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும் பாகற்காய்...


பாகற்காயை ஜீஸ் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு, இரத்த கொதிப்பு காரணமாக உண்டாகும் அரிப்பு மற்றும் இரத்த கோளாறு போன்றவற்றிற்கு பாகற்காய் சிறந்த மருந்தாகும்.

இரண்டு ஸ்பூன் பாகற்காய் சாறுடன் எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல்நிலையில் மாற்றம் ஏற்படும். இரத்த கொதிப்பு இரத்த கோளாறுகள் , போன்றவைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

ஆரம்ப கட்டத்தில் ஏற்பட்டிருக்கும் காலரா மற்றும் வாந்தி பேதியை போக்க இரண்டு டீஸ்பூன் பாகற்காய் இலையின் சாறு, இரண்டு டீஸ்பூன் டீத்தூள், வெங்காயச்சாறு இரண்டு டீஸ்பூன், எலுமிச்ச சாறு இரண்டு டீஸ்பூன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் காலராவினால் ஏற்பட்ட வாந்தி பேதி குணமாகும். காலரா குணமாகும் வரை சாப்பிடவேண்டும்.

பழுத்த பாகற்காய் இரத்தம் மற்றும் சீறுநீரில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது ஏனெனில் பாகற்காய் செடியில் இன்சுலின் கொண்டுள்ளது. குறிப்பிட்ட அளவு பாகற்காயை ஜீஸ் செய்து சாப்பிட்டால் ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பது மட்டுமின்றி குளுக்கோஸ் சகிப்பு தன்மையை அதிகரிக்கிறது.

தொடர்ந்து பாகற்காய் சாறு சாப்பிட்டு வந்தால் ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகும். நல்ல தூக்கத்தை ஏற்படுத்தவும் பாகற்காய் சிறந்ததாகும். பாகற்காயில் அதிக பீட்டா கரோட்டின் மற்றும் பிற பண்புகள் அடங்கியுள்ளன. இது கண்ணில் ஏற்படும் சிக்கல்களை போக்க சிறந்த மருந்தாகும்.பாகற்காய் பழம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பலப்படும்.

பாகற்காற் பழத்தின் சாறு மது போதை மற்றும் நச்சுத் தன்மை நிறைந்த சிகிச்சைகளுக்கு சிறந்ததாகும்.. இது குடிப்பழக்கத்தினால் ஏற்படும் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஒரு டம்ளர் மோரில் மூன்று டீஸ்பூன் பாகற்காய் சாறு சேர்த்து மாதத்திற்கு மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூலம் நோய் குணமாகும். மேலும் பாகற்காய் செடியின் வேர்களை பேஸ்ட் போல அரைத்து மூலம் ஏற்பட்டிருக்கும் இடத்தில் தடவ வேண்டும். இவ்வாறு செய்து வர மூலநோய் குணமாகும்.

கைகளில் ஏற்படும் அரிப்பு, கால்களில் ஏற்படும் பூஞ்சை, தோல் தடிப்பு, சொரியாஸிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்க பாகற்காயை ஜீஸ் செய்து சாப்பிட வேண்டும். பாகற்காய் நச்சுத் தன்மையை அகற்றி இரத்தத்தை சுத்திகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சுவாச கோளாறு மற்றும் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டால் பாகற்காயை பொரியல் செய்தோ அல்லது ஜீஸ் செய்தோ சாப்பிட சுவாச கோளாறுகளில் ஏற்பட்ட பிரச்சனை தீரும்.

பாகு என்றால் இனிப்பு. அல் என்றால் இல்லாத . காயத்தில் என்றால் உடம்பில். காய் என்பது காயத்தின் சுருக்கம் என்பார. உடம்பில் இனிப்பு (சர்க்கரை நோய்) நீக்கும்...

அரசாங்கமே உன் கவனத்திற்கு.....


எங்களுக்கும் ஸ்லீப்பர் செல் இருக்காங்கமா... இனி தெரிக்க விடுவோம்...

உலக வல்லாதிக்கத்திற்கு தேவை உன்னிடம் இருந்து லாபமும், அடிமைத்தனமும் தான்...


இந்த இரண்டும் இனி தமிழ்நாட்டில் அவர்களுக்கு கிடைக்கப் போவதில்லை..

அதனால் தான் அனைத்து போட்டிகளையும் உடனே மாற்றி விட்டார்கள்..

லாபம் இல்லை அல்லவா..

ஆனால் அழிவு திட்டங்களை அதிகரிப்பார்கள்..

நாம் அதை கருவறுப்போம்...

பயணத்தில் நிறைய சிறிய வேலைகள் வரும், அதை செய்துக் கொண்டே முன்னேறி செல்வோம்...

இயற்கை அளித்த இனிய பானம்....


இளநீர் என்பது இயற்கையிலேயே உருவான உடலியல் இயக்கங்களுக்கு இன்றியமையாத பல தாது உப்புகள் அதிகமாக உள்ள ஒரு பானம் (Isotonic Drink). இளநீர் உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.

இளநீர் இயற்கை அளித்த இனிய பானம் மட்டுமன்று பல பிணிகளைத் தீர்க்கும் மாமருந்தாகவும் உள்ளது. இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும் இரத்த நாளங்களில் வெப்பம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது. கடும் நீரிழப்பின் போது (severe dehydration) சரியான மாற்றுக் கிடைக்காத போது இளநீரையே நேரடியாக இரத்த நாளங்களில் ஏற்ற முடியும்.

அப்போது உடலிலிருந்து வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் நீர்க்கடுப்பு ஏற்படலாம். அப்போது இரண்டு குவளை இளநீர் பருகுவது நல்லது. உணவு எளிதில் செரிமானம் ஆவதற்கு இளநீரில் உள்ள தாதுக்கள் பயன்படுவதால் செரிமான உறுப்புக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு வாந்தி வரும் போது இளநீர் கொடுத்தால் வாந்தி கட்டுப்படும்.

நாக்கு வறட்சி நீங்கும். கோடைக்காலம் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் அருந்தக் கூடிய இனிப்பும் குளிர்ச்சியும் கொண்ட இளநீரை அருந்தி வந்தால் உடல் வளமை பெற்று நோயற்று ஆரோக்கியத்துடன் வாழலாம்...

ஆபத்தானது இந்திய நீதிமன்றம்...


மரணத்திற்கு பின்...


மனிதன் மரணத்தை கண்டு பல கோடி ஆண்டுகளாக அஞ்சி வந்ததன் காரணம், இறந்தபின் இருக்கும் நிலையை அறியாததே.

ஆம் மரணத்திற்கு பின் வாழ்க்கை உண்டு என்பதை அறியாமலேயே இருப்பதால்தான் அந்த பயம்.

மரணம் மனிதனின் ஆட்டத்தை முடிப்பதாக கருதப்படும் ஒன்று.

ஆண்டாண்டு தோரும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவதில்லை என்ற கோட்பாடே அவர்களை குழப்பம் அடைய செய்தது.

ஆனால் உண்மை அதுவல்ல, உறங்குவது போலாம் சாக்காடு உறங்கி விழிப்பது போலாம் பிறப்பு.

மரணம் என்பது ஆன்மா எடுத்துக் கொள்ளும் தற்காலிக ஓய்வே.

நாம் ஒவ்வொரு பிறவியிலும் பலவித சிக்கலான அனுபவங்களை பெறுகிறோம்.

மரணத்திற்கு பின் நாம், செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப இனிமையான மற்றும் துக்கமான எண்ணங்களால் அலைக்கழிக்கபடுகிறோம்.

ஆவி நிலையில் நாம் பெற்ற அனுபவங்களை நினைத்து நினைத்து சுகதுக்கங்களை அடைகிறோம்.

ஆம் அதிகம் பாவம் செய்த ஆன்மா கேட்பாரற்று ஆதரவற்று நிர்கதியாக தனிமையில் சொல்ல முடியாத துயரத்தில் சிக்கி தவிக்கிறது.

புண்ணியம் அதிகம் செய்த ஆன்மாவோ சொர்கம் எனும் பரிமாணத்தில் நிறைய ஆன்மாக்களோடு கூடி மகிழ்கிறது.

வாழ்க்கை ஒரே முறை தான். தயவு செய்து வாழ்க்கையை வாழுங்கள்...

பாஜக வை கதற விடும் தீபிகா சிங் ராஜ்வத்...


தமிழகத்தைச் சீரழித்தது திராவிடமே என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை...


கன்னடன் கன்னடனாக இருக்கும் போது, தெலுங்கன் தெலுங்கனாக இருக்கும் போது, மலையாளி மலையாளியாக இருக்கும் போது தமிழன் மட்டும் ஏன் திராவிடனாகத் திரிக்கப்பட வேண்டும் ?

முல்லைப் பெரியாறும், ஒகனேக்கல்லும், காவிரியும், பாலாறும் தமிழகத்திற்குக் கிடைக்காமல் முடக்கப்படும் போது, தமிழ்நாட்டின் வளங்கள் மட்டும் அவர்களுக்கு வேண்டுமா?

இதுதான் இந்திய இறையாண்மையின் இலக்கணமா? அல்லது இந்தியக் கட்டப் பஞ்சாயத்தில் கிடைக்கும் ஞாயமா?

கடந்த 1956 ல் மொழி வழி மாநிலமாக இந்தியா பிரிக்கப்படும் போது மொழி இன அடிப்படையிலான உரிமைகளுக்கு அது அங்கீகாரம் அளித்தது..

ஆனால், மராட்டிய இன உணர்வுகளும், சீக்கிய இன உணர்வுகளும், கன்னடத், தெலுங்கு, மலையாள மற்றும் பிற இன உணர்வுகளும் உரிமைகளும் இந்தியத் துணைக்கண்டத்தில் மதிக்கப்படும் போது தமிழர்களின் உரிமையும் தாகமும் மட்டும் நசுக்கப்படுவது ஏன்?

அந்தந்த மாநிலங்களை அவரவர் ஆளும் போது, தமிழ்நாடு மட்டும் திறந்த வீடாகவும் வேலியில்லாக் காடாகவும் யார் வேண்டுமானாலும் ஆளலாம், ஆட்டம் போடலாம், ஏறி மேயலாம் என்ற நிலை இருப்பது ஏன்?

வந்தேறிகள் ஆளவும் ஏய்க்கவும அரட்டவும் உருட்டவும் அவர்கள் வைத்திருக்கிற கைத்தடி தான் திராவிடம் என்கிற பொய்ப்பூச்சு..

அடுத்து, பெரியார் என்கிற ஊதிப் பெரிதாக்கி வைத்திருக்கிற பேரு...

தமிழர்கள் ஏய்க்கப்படுவதும், ஏமாற்றப்படுவதும், நசுக்கப்படுவதும், கொல்லப்படுவதும் காலாகாலமாக நடந்து வருகின்ற ஒன்று தான்.

தாக்கினால் திருப்பி அடிப்பார்கள் என்கிற நிலை இருக்கும் போது தான் உலகில் அமைதி நிலவுகிறது. அல்லது ஏறி மேய்கிறார்கள்..

மலேசியாவிலோ, பர்மாவிலோ, ஈழத்திலோ, கர்நாடகத்திலோ தமிழர்கள் தாக்கப்பட்டால் தாய்த் தமிழகம் கொதித்து எழும் என்கிற நிலை இருந்தால் 13 கோடித் தமிழனைத் தொட எந்தக் கொம்பனுக்கும் உலகில் துணிவிருந்திருக்காது.

மாறாக, பர்மாவின் சயாம் நகரில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட போதோ, கர்நாடகத்தில் தமிழர்கள் வெட்டித் துண்டாடப்பட்ட போதோ, மும்பையிலும் மணிப்பூரிலும் தமிழர்கள் விரட்டி அடிக்கப்பட்டபோதோ, பர்மாவிலிருந்து தமிழர் விரட்டப்பட்ட போதோ, ஈழத்தில் 3 லட்சம் தமிழர்கள் கொடுமையாகக் கொன்றொழிக்கப்பட்ட போதோ தாய்த் தமிழகத்தில் எதிர்ப்பில்லை, கொதிப்பில்லை, கொந்தளிப்பில்லை.. காரணம் என்ன?

திராவிடம் என்ற நச்சு போதை போல் ஏறி சித்தம் சிதைந்து கிடக்கிறான் தமிழன்...

ஈயும், எறும்பும், புழுவும், பூச்சியும் நசுக்கப்பட்டால் எதிர்ப்பு தெரிவிக்கிறது. காகம் ஒன்று கொல்லப்பட்டால் வானத்தையே கருப்பாக்கி காகக்கூட்டம் கரைகிறது...

ஒரு தெரு நாயைத் தாக்கினாலும் ஊர் நாய்களே ஒன்று சேர்ந்து மாந்தக் கூட்டத்தை வறுத்தெடுக்கிறது..

இரு சீக்கியர்கள் தாக்கப்பட்டதற்காக பஞ்சாப் பற்றி எரிகிறது. மராத்தியன் பீகாரில் தாக்கப்பட்டால் பதிலடியில் நாடு எரிகிறது.. பீகாரியைத் தொட்டால் வடநாடு கொதிக்கிறது..

இரு இசுரேலியர்களை பாலத்தீனர்கள் சிறைப் பிடித்ததற்காக இரு பாலத்தீனிய நகரங்களை தடைமட்டமாக்கி இசுரேல் பாடம் கற்பித்தது..

உலகமே இப்படி இருக்கும் போது, அது இனப்பற்றாக, இனப்பாதுகாப்பாகப் பார்க்கப்படும் போது தமிழர்நாடு மட்டும் விதிவிலக்காக இருப்பது ஏன்?

மூத்த இனம் இங்கே முடங்கிக் கிடப்பதே தன் அடையாளத்தை இழந்ததால் தான்.. தமிழனைத் திராவிடனாக திரித்து சிதைத்து விட்டார்கள்.

மீண்டும் இழந்த தமிழன் என்கிற அந்த அடையாளத்தை நாம் உணர்ந்து தக்க வைத்தால் மட்டுமே எதிர்காலத் தலைமுறையை நாம் பாதுகாக்க இயலும்.

இதில் சமரசம் செய்து கொண்டு அரசியல் களத்தில் ஆராவாரம் செய்து யார் களம் இறங்கினாலும் அவர் தமிழினத்தின் இரண்டகராகவோ, எதிரியாகவோத் தான் இருப்பர்.

தமிழகத்தைச் சீரழித்தது திராவிடமே என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை..

திராவிடத்தைக் கருவருக்காமல் தமிழ்த் தேசியம் இம் மண்ணில் கருக் கொள்ளாது...

விழித்துக்கொள் தமிழினமே...


குடிநீர் பற்றாக்குறை உள்ளதால் சென்னையில் இருந்து புனேவுக்கு மாற்றப்பட்ட IPL போட்டிகளை நடத்த அங்கும் எதிர்ப்பு...


அந்த மாநிலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியையே வான்கடே மைதானத்தில் விளையாட அனுமதி மறுத்தது...

IPL வரலாற்றில் நடந்துல்லதை நினைவுபடுத்துகிறேன், ஏனென்றால் மைதானத்தை பராமரிப்புக்கு 1 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். அதனால் தான் அவர்கள் எதிர்க்கிறார்கள்...

நான் தமிழ் தேசிய அரசியலுக்கு முதன்மையானவன்..


எந்தவித அரசியல் கருத்தியலையும் தேடலின் புரிதலோடு ஏற்றுக் கொள்ளுங்கள் என்பதே என் கருத்து...

மக்களிடையே கருத்தியல் வெற்றிடம் இருந்தால், மக்கள் யோசிக்க ஆரம்பிப்பார்கள், அதனாலேயே வேறொரு கருத்தியலை திணிக்க அதிகார வர்க்கம் நினைக்கும்..

அந்த திணிப்பு கருத்தியலாக தமிழ் தேசியம் இருந்துவிட கூடாது என்பது தான் என் எண்ணம்...

ஆமை புகுந்த வீடு உருப்படாது சரியா, தவறா?


ஆமை ஒரு வீட்டிற்குள் புகுந்துவிட்டால் அந்த வீடு உருப்படாமல் போய்விடும். என்று இந்த பழமொழிக்குப் பொருள் கொண்டு ஆமை யின் மேல் ஒரு துரதிருஷ்டசாலி என்னும் பழியையும் சேர்த்துப் போடுகின்றனர் நம் மக்கள்.

இக்கருத்து சரியாகுமா?. இல்லை. ஆமை அப்படி என்னதான் தவறு செய்தது? நாம் ஏன் அதன் மேல் வீண்பழி போட வேண்டும்?. நீர்நிலைகளில் வசிக்கும் இயல்புடைய ஆமை நமது வீட்டிற்கு ஏன் வர வேண்டும்?. சரி தவறுதலாக எப்படியோ ஒரு ஆமை நமது வீட்டிற்குள் புகுந்து விட்டால் எப்படி அந்த வீடு உருப்படாமல் போகும்?. மாறாக, ஆமை வீட்டிற்குள் புகுந்தால் உங்கள் வீட்டிற்கு இலக்குமி (திருமகள்) வரப்போகிறாள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் ஆமை திருமாலின் அருள் பெற்ற ஒரு உயிரினம் ஆகும். திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றல்லவா இந்த ஆமை அவதாரம். திருமால் இருக்கும் இடம் தானே திருமகள் வாசம் செய்யும் இடம். எனவே இந்த தவறான கருத்தை இன்றோடு கைவிடுங்கள்.

அப்படி என்றால் இந்தப் பழமொழியின் உண்மையான பொருள் என்ன?. வழக்கம் போல சொல் பிழைகளால் இந்தப் பழமொழியில் பொருள் மாறுபாடு அடைந்துள்ளது. தூய செந்தமிழ்ச் சொற்கள் கொச்சை வழக்கில் எப்படி எல்லாம் மாறுபாடு அடைகின்றன என்பதற்கு இந்தப் பழமொழியும் ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

உங்களுக்குக் காளானைப் பற்றித் தெரியும். புழுத்துப்போன மரம், மாட்டுச்சாணம், வைக்கோல் முதலான பொருட்களில் இருந்து சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தானாகத் தோன்றும் ஒரு வகைப் பூஞ்சை தான் இது. இருட்டும் ஈரப்பதமும் காளான் தோன்றுவதற்கு ஏற்ற சூழ்நிலைகள். எப்போதுமே இருளாகவும் ஈரமாகவும் மக்கிப்போன பழைய மரங்களுடன் இருக்கும் வீட்டில் காளான் இயல்பாகவே தோன்றும். இது போன்ற வீட்டில் குடி இருப்பவர்கள் உடல்நலத்துடன் இருக்க முடியுமா?. முடியவே முடியாது. ஏனென்றால் இந்தச் சூழ்நிலையில் வசிக்கும் மனிதர்களுக்கு காசநோய், மனநோய், சருமநோய் முதலான பல நோய்கள் தொற்றிக் கொள்ளும். கதிரவனின் ஒளியும் வெப்பமும் இல்லாத வீட்டிற்கு வெளியாட்களும் வர விரும்ப மாட்டார்கள். எனவே இது மாதிரி வீட்டில் வசிப்பவர்கள் கவனிப்பார் யாருமின்றி நோய்வாய்ப்பட்டு மரணத்தைத் தேடிக்கொள்வர். ஆக மொத்தத்தில் காளான் பூத்த இந்த வீடு உருப்படாமலேயே போய்விடும். இதைத்தான் இந்த பழமொழியும் கூறுகிறது.

சரியான பழமொழி இது தான்...

ஆம்பி பூத்த வீடு உருப்படாது.

(ஆம்பி = காளான்).

இதில் உள்ள தூய தமிழ்ச்சொற்களான 'ஆம்பி பூத்த' என்பன கொச்சைச் சொற்களாக மாறி பின்னர் உருமாறி இறுதியில் மீண்டும் தூய தமிழ் வடிவம் பெற்று இவ்வாறு நிற்கிறது. இந்த வரலாறு கீழே காட்டப்பட்டு உள்ளது.

தற்போதைய சூழ்நிலையில், ஆமை புகுந்த வீடு உருப்படாது எனும் பழமொழிக்குப் பலப் பொருள்கள் சொல்லப்படுகின்றன. அதாவது, கல்லாமை, அறியாமை, பொறாமை போன்ற ஆமை என்ற ஈற்றில் முற்றுப்பெறும் சொற்கள் நிறைந்திருக்கும் இல்லங்கள் முன்னேறுவது கடினம். அப்பொருள்களும் ஏற்புடையதே.

ஆம்பி பூத்த > ஆமி பூத்த > ஆமெ பூத்த > ஆமெ பூந்த > ஆமை புகுந்த...

மக்களுக்கு புற்றுநோய் வரக் காரணம் யார்.?


நீங்கள் அனைத்திற்கும் வரி கட்டுகிறீர்கள்...

ஆனால் இதுதான் உங்கள் அரசாங்கம் உங்களுக்கு செய்யும் கைமாறு உதவி...

மெரீனாவில் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி...


2017ம் ஆண்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பின்னர் மெரீனாவில் போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மெரீனாவில் போராட்டம் நடத்தவும், கும்பலாக கூடவும் போலீசார் தொடர்ந்து அனுமதி மறுத்து வந்தனர்.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரீனாவில் போராட்டம் நடத்த விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணுவுக்கு அனுமதி அளித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் நிர்வான போராட்டம் போன்று அதீத முறையிலான செயல்களில் ஈடுபடக்கூடாது. மேலும், 90 நாட்களுக்கு போராட்டம் நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டது. பொதுமக்ககள் கூடும் இடத்தில் நீண்ட நாட்கள் போராட்டம் நடத்தாமல் குறைத்துக் கொள்ள வேண்டும்.

இது குறித்த அறிவுரைகளை பெற்று அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி ராஜா தெரிவித்துள்ளார். டில்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் நடந்த விநோத போராட்டங்களை கருத்தில் கொண்டு நீதிபதி இவ்வாறு தெரிவித்தார்...

தேவையில்லாம நாங்க போராடல.. நீங்க மூடுற வேலைய பாருங்க...


ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்றவாறு வல்லாதிக்கத்தின் சுரண்டல் முறைகள் வேறுபடுகின்றன...


ஆப்பிரிக்க நாடுகளில் - காடுகள் மற்றும் மலை வளங்கள் மற்றும் உடல் உழைப்பு

வளைகுடா நாடுகளில்  - மதம் என்ற போர்வையில் எண்ணெய் வளங்கள்

இந்தியாவில் - வளர்ச்சி என்ற பெயரில் பொருளாதார ரீதியாக வளங்கள் மற்றும் மனிதனின் அறிவு வளங்கள்...