25/10/2017

உயிருடன் இருந்த குழந்தையை இறந்து விட்டது என கூறிய அரசு டாக்டர்; அடக்கம் செய்யும் முன் அழுததால் தப்பித்தது...



பாஜக தலைவர்களை மங்களூர் மக்கள் முட்டையால் அடித்து விரட்டிய காட்சி...


திமுக வின் 2G. ஊழல் வழக்கு...


தீர்ப்பு முழுமையாக எழுதி முடிக்கப்படாததால், 2 ஜி வழக்கின் தீர்ப்பு தேதி நவம்பர் 7-ல் அறிவிக்கப்படும்...

அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் -நீதிபதி சைனி அறிவிப்பு...

நெல்லை தீக்குளிப்பு சம்பவத்தில் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது செய்யப்பட்டுள்ளார்...


சிலம்பாட்டம்...


தமிழரின் பழமை வாய்ந்த விளையாட்டுகளில் பல்லோராலும் பரவலாக அறியப் பட்டிருக்கின்ற விளையாட்டு சிலம்ப விளையாட்டாகும்.

இவ்விளையாட்டானது ஆண்களுக்கு உரிய விளையாட்டாகும்.

இவ்விளையாட்டு பரத நாட்டியத்தோடு ஒத்துபோகிறது என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

பழங்காலத்தில் மலைவாழ் மக்கள் விலங்குகளை வேட்டையாடவும், கொடுவிலங்குகளின் தாக்குதலை எதிர்கொள்ளவும் கம்புகளைக் கருவியாகப் பயன் படுத்தியிருக்கின்றனர்.

இதுவே, பின்னர் சிலம்பக் கலையாக வளர்ச்சிப் பெற்று வந்திருக்கின்றது.

சிலம்பம் தற்காப்புக் கலையாக இருப்பினும், பெரும்பாலும் தமிழர் திருவிழாக்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் மக்கள் கண்டுகளிக்கும் வீர விளையாட்டாக அரங்கேறுகின்றது. சிலம்பம் ஆட கட்டாயம் கம்பு வேண்டும்.

இதற்கு மூங்கிற் கழி பயன்படுகின்றது.

மூவேந்தர்கள் முதற்சங்க காலந்தொட்டே சிலம்பக் கலையை போற்றி பேணி வளர்த்து வந்துள்ளனர் என்பது வரலாற்று உண்மையாகும்.

திருவிளையாடற் புராணத்திலும் வைத்திய நூலான பதார்த்த குணசிந்தாமணியிலும் சிலம்பாட்டம் இருந்ததற்கான குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.
சிலம்பப் பயிற்சி ஒருவரின் நோயைத் தீர்த்து ஒருவரின் உடலையும் வலுப்படுத்திக் கொள்ள வழிவகுக்கின்றது.

சிலம்பாட்டம் என்பது வெறுமனே கம்பை மட்டும் வைத்து விளையாடும் விளையாட்டல்ல. மாறாக ஈட்டி, சுருள்வால், கட்டாரி, சங்கிலி, மான்கொம்பு போன்றவற்றை வைத்து விளையாடும் விளையாட்டாகும்.

முற்காலத்தில் போர்ச்சிலம்பம் இருந்திருக்கின்றது. அதனைப் போருக்கு மட்டுமே பயன்படுத்தியிருக்கின்றனர்.

திருவிழாக் காலங்களிலும் முக்கிய நிகழ்வுகளிலும் கம்பைப் பலவிதமாகச் சுழற்றும் விளையாட்டு தீச்சிலம்பம் என்று சொல்லப்படுகின்றது.

தமிழரின் விளையாட்டே இன்று கராத்தே, குங்பூ, தேக்கோவா என உறுமாறி பிற நாடுகளில் வளர்ச்சிப் பெற்றுள்ளது.

இவ்விளையாட்டுப் போட்டியின் போது, விளையாட்டாளர் எதிரியின் கம்பு தன் உடலில் படாதவாறு தடுக்கவும், தன் கம்பால் எதிரியின் உடலின் பல்வேறு இலக்குகளைத் தொடவும், எதிரியின் கம்பைத் தட்டிவிட்டு வெறுங்கையராக்கவும் முற்படுவர்.

ஏனெனில், எதிரியின் கம்பு பறி போய்விட்டால் அது வெற்றியாகக் கொள்ளப்பட்டு ஆட்டம் நிறைவுறும்.

தமிழரின் வீர விளையாட்டான சிலம்பக் கலையை தமிழர்கள் போற்றிப் புரந்துக்கொள்ளாதக் காரணத்தினால், இக்கலை இன்று அருகி வரும் கலைகளில் ஒன்றாக விளங்குகின்றது.

உலகத்தமிழர்கள் தனித் தன்மையுடன் கூடிய தமிழர் விளையாட்டுகளை முன்னெடுத்துச் செல்ல ஆவணச் செய்ய வேண்டும்.

தமிழால் முடிந்தால் தமிழரால் முடியும்...

கந்துவட்டி கொடுமைக்கு முடிவு கட்டவும், காவல்துறை கட்டப்பஞ்சாயத்தை தடுத்து நிறுத்தவும் தடுத்து நிறுத்த வலியுறுத்தி கோவையில் மாதர் சங்கத்தினர் ஆவேச ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்...


ஆழ்நிலை தியானம்...


ஆழ்நிலை தியானம் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று விட்டது. அத்துடன் இதன் பண்பும், பயனும் பல அறிவியல் ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாகவே இப்பயிற்சி முறை மொழி, சமயம், மார்க்கம் போன்ற குறுகிய எல்லைகளையெல்லாம் கடந்து பரந்து விரிந்து நிற்கிறது.

மன இறுக்கமும், மனத் தொய்வும், மகிழ்ச்சியின்மையும் மாற்றுகின்ற ஒரு அரிய மருத்துவ முறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பரபரப்பு, மனக்கலக்கம், மனத்தவிப்பு, மனத்தொய்வு, தூக்கமின்மை, மன இறுக்கம், ஒற்றைத் தலைவலி, உயர் இரத்த அழுத்தம், மாதவிடாய்க்கு முன் தோன்றும் வேதனை, மலக்குடல் குறைபாடு போன்ற பல குறைபாடுகளை நீக்க வல்லது என்று இந்த தியான முறையெனக் கருதப்படுகிறது.

அதிலும் குறிப்பாக மூப்படைவதையே இத்தியான முறை தடை செய்யக் கூடும் என ஒரு ஆய்வு முடிவு உறுதிப்படுத்துகிறது.

அலைந்து திரிகின்ற மனதை ஒரு நிலைப்படுத்தி அதன் மூலம் ஒரு ஆழ்ந்த மன அமைதியையும், மன நிலையையும் பெறுவது தான் எல்லா விதமான தியான முறைகளின் நோக்கமாகும்.

ஆழ்நிலை தியானத்தின் நன்மைகள் பற்றிப் பேசுகின்ற போது..

ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மனத்தின் செயல்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்த கற்றுக் கொள்வது என்பது உடல் நலம் பேண உதவுகின்ற ஒரு நல்ல முறையாகும்.

நாள் தோறும் நமது நரம்பு மண்டலத்தில் ஏற்படுகின்ற தேய்மானங்களை நீக்கி நரம்புகளை நெறிப்படுத்தி உள்ளத்திற்குப் புத்துணர்ச்சியும், புது உணர்வும் தருவதுடன் நமது தடுப்பாற்றல் சக்தியை உயர்த்தவும் மனநிலை தொடர்புடைய நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது” என்று தமது ‘மெடிடேசன் பார் எவிரி படி’ (பெண்குயின்) என்னும் நூலில் குறிப்பிடுகிறார் புகழ் மிக்க உளவியலாரான லூயி புரோடோ.

இலக்கின்றி அலைகின்ற மனதை அடக்கி, அதன் பொருளற்ற புலம்பல்களை நிறுத்தி உள்ளத்தில் சாந்தியும், அமைதியும் நிலவச் செய்வதே தியான முறையாகும்.

ஆனால் இதைச் செய்கின்ற வழி ஒவ்வொரு தியான முறைக்கும் வேறுபடுகிறது.

ஆழ்நிலை தியானத்தைப் பொருத்தவரை அமைதியான முறையில் அமர்ந்து ஒரு மந்திரத்தைத் திரும்பத் திரும்ப சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை இடைவிடாமல் மனதிற்குள் ஜெபம் செய்வதாகும்.

மனப்பாடம் செய்கின்ற காலத்தில் மனம் சில நிமிட நேரம் மனத்தில் ஒன்றலாம். சில நேரம் விலகியும் போகலாம். அது பற்றிக் கவலை கொள்ளாமல் திரும்பத் திரும்ப மனதை ஒரு முகப்படுத்த வேண்டும்.

நாட்கள் செல்லச் செல்ல, பழக்கம் மனதில் படியப், படிய தொடர்பில்லாத சிந்தனைகள் வருவதும் மனம் அலைபாய்வதும் மட்டுப்படும்.

மேற்பரப்பில் உயர்ந்தும், தாழ்ந்தும் அலை அலைபாய்கின்ற கடலின் அடியில் சென்று பார்த்தால் நீரின் கீழே ஒரு ஆழ்ந்த அமைதி தென்படுவது தெரியும்.

அந்த நிலையை ஆழ்நிலை தியானத்தின் மூலம் மனதிற்குள் உணர முடியும்.

‘பீல் கிரேட் வித் டி.எம்’ என்னும் தமது நூலில் டி.எம் என்னும் இவ்வரிய பயிற்சி, மன முறுக்கினை அவிழ்த்து, உடற் தசைகளைத் தளர்வித்து இதுவரை உணராத ஒரு புத்துணர்ச்சியைத் தருகிறது, என்று கூறுகிறார்கள்.

ஜிம் ஆண்டர்சனும், பில் ஸ்டீவன்சனும், அமைதியான நிலையில் எழுகின்ற சிந்தனைகள் வலுமிக்கதாகவும், ஆழ் மனதிலிருந்து எழுவதாகவும் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

உரத்த குரலில் ஜெபிப்பதும், மனப்பாடம் செய்வதும் புத்த மதத்தினரின் ஸென் எனப்படும் தியான முறையில் பின்பற்றப்படுகிறது.

இதில் ஒரே சீராக மூச்சு விடுவதும் மார்பு உயர்ந்து தாழ்வதுமே உணரப்படுகிறது.

விபாஸ்ஸனா என்னும் மற்றுமொரு வகைப் புத்த மதத்தினரின் தியான முறையில் உடலிலிருந்து விடுபட்ட நிலையில், வெளியிலிருந்து கொண்டு, உடலையும், மனதையும் உற்று நோக்குதல் பயிலப்படுகிறது.

தய் சூ ச்சுஹான் என்னும் போர்க் களப் பயிற்சி முறையும் அய்க்கிடோ என்னும் ஜப்பானியப் பயிற்சியும் அசைவு அல்லது இயக்கத்தின் மூலம் செய்யப்படுகின்ற தியான முறைகள் என்று கருதப்படுகின்றன.

இந்த தியான முறையில், பயிற்சி பெறுபவர்க்கு ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை சொல்ல வேண்டும் இந்த மந்திரத்தை தினம் காலையிலும் மாலையிலும் 1/2 மணி நேரம், மனதுக்குள்ளேயே ஜபிக்க வேண்டும்.

இதற்காக பத்மாசனத்தில் தான் உட்கார்ந்து ஜபிக்க வேண்டும் என்பதில்லை. நாற்காலியில் உட்கார்ந்து கூட ஜபிக்கலாம்.

ஜபிக்கும் போது மனது அலைபாய்ந்து எண்ணங்கள் சிதறினாலும், விடாமல் மந்திரத்தை சொல்லிக் கொண்டே (மனதுக்குள்) இருக்க வேண்டும்.

ஆழ்நிலை தியானத்தை பயின்றவர்கள் மனதை ஒரு முகப்படுத்துவது இந்த முறையால் சுலபமாகிறது என்கின்றனர்...

மணல் கடத்தலை பற்றி செய்தி வெளியிட்ட நிருபரின் கடையை அடித்து நொறுக்கிய ரவுடிகள்...


கடலூர் புதுப்பாளையம் ரெட்டை பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வரும் தலைமை செய்தி பத்திரிகையின் நிருபர் செல்வமணி அவர்கள் மணல் திருட்டை பற்றியும் அதிகாரிகளின் லஞ்சத்தை பற்றியும் செய்தி வெளியிட்டுள்ளார்.


இதற்கு ஆத்திரமடைந்த மணல் கொள்ளையர்கள்  செல்வமணி அவர்களின் தாயார் நடத்தி வரும் கடைக்குள் மாட்டுவண்டியை விட்டு கடையை சேதாரப்படுத்தி உள்ளனர். இதை தட்டி கேட்ட நிருபரிடம் இப்ப என்ன உன் அம்மா செத்தா போயிட்டா அடி தான பட்டிருக்கு விடு செலவுக்கு வேனும்னா பணம் வாங்கிக்கோ என கூறி சண்டையிட்டுள்ளனர்.


மேலும் காவல் நிலையத்தில் நம் செய்தியாளர் மீது புகாரும் அளித்துள்ளார்கள் மணல் கடத்தல் கும்பல்.

காவல் துறையும் விசாரித்து விட்டு நம் செய்தியாளரை சமாதானமாக போக சொல்லியும் இனிமேல் தேவையில்லாமல் செய்திகள் வெளியிட வேண்டாம் எனவும் எச்சரித்து அனுப்பியுள்ளனர்...

பாஜக புதிய இந்தியா வின் ஜிஎஸ்டி யும்.. உலக நாடுகளின் ஜிஎஸ்டி யும்...


பிரம்மத்தை நோக்கி - 1...


இந்த பிரபஞ்சம் இருவேறு பண்புகளை கொண்டது. ஒன்று அலைப்பண்பு மற்றொன்று துகள் பண்பு.

ஒளியின் வேகத்திற்கு உட்பட்டவை அனைத்தும் துகள் பண்புகளையும், உட்படாதவை அலைப் பண்புகளையும் கொண்டுள்ளது.

எதையும் சாராத ஒரு தனிமுதற் பொருள் உண்டென்றால் அது ஒளி(கடவுள்) மட்டுமே. இது சார்பியல் விதிகளுக்கு அப்பாற்பட்டது.

பிரபஞ்சம் காலத்திற்குள் இல்லை. காலம்தான் பிரபஞ்சத்திற்குள் உள்ளது. உண்மையில் காலம் என்ற ஒன்றே இல்லை.

உங்களால் ஒளி வேகத்தில் பயணிக்க முடிந்தால் அங்கே காலம் இருக்காது உறைந்து போகும்.

ஒருசெல் உயிரியாக இருந்தபோது இயற்கை அதற்கு அளித்த பாடம் தகுதி உள்ளது தப்பி பிழைக்கும், தகுதியற்றது அழிந்துவிடும்.

எனவே ஒருசெல் உயிரி உணர்ந்தது இந்த மழை வெப்பம் குளிர் புயல் போன்ற கடினமான சூழலில் தனித்து உயிர்வாழ முடியாது என்பதே.

எனவே படிப்படியாக பரிணாமம் அடைந்து தொகுப்பாக பிணைந்து கூட்டு உயிரிகளாக சேர்ந்து வாழ ஆரம்பித்தது. ஒவ்வொரு உயிரிக்கும் தனித்தனி தேவைகள் இருந்தது.

அவற்றை பெற்றுக்கொள்ள அவைகளில் இருந்து எண்ணங்கள் தோன்றியது. அந்த எண்ணங்களின் தொகுப்பான மனம் அவற்றை பாதுகாப்பதோடு அவைகளின் தேவைகளையும் பூர்த்தி செய்யவல்லது.

பல கோடி உயிரிகள் சேர்ந்து தொகுப்பாக வாழ்ந்து தத்தம் தேவைகளை மனதின் மூலம் பெற்றுக் கொண்டு வருகிறது.

கடைசியாக பெரிய அளவில் பரிணாமம் அடைந்து அவை சுமார் 75 லட்சம் கோடி உயிரிகளின் தொகுப்புகளாக கூடி வாழ்கிறது.

அவைகளை பாதுகாக்கவும் அவற்றின் தேவைகளை பூர்த்தி செய்யவும் மனம் 24/7 மணி நேரமும் அயராது உழைக்கிறது.

ஆனால் அனைத்து உயிரிகளின் நோக்கமும் அவற்றின் பயணமும் சமநிலையை பெறுவதே, அதாவது பிரம்மத்தை அடைவதே.

இந்த 75 லட்சம் கோடி உயிரிகளின் தொகுப்பு வேறெதும் இல்லை, அதுதான் மனிதன். பிரம்மத்தை நோக்கிய பயணம் தொடரும்.....

மலபார் என்பது தமிழே...


கி.பி.1779 இல் மலபார் பாஷை என்று அழைக்கப்பட்ட தமிழ்.

கி.பி.1650 - 1800 ஆண்டுகளில் இலங்கைக்கும் தமிழகத்திற்கும் வந்த அமெரிக்க ஐரோப்பிய பாதிரியார்கள் பைபிளை தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டுவருவதற்கு பெரும் முயற்சிகளை எடுத்துக் கொண்டனர்.

ஆசிய மொழிகளிலேயே தமிழ் மொழியில் தான் முதல் முதலாக பைபிள் மொழி பெயர்க்கப்பட்டது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்.

அத்தகைய முயற்சிகளில் ஒன்றாக தமிழ்ச் சொற்களை சேகரிக்கும் வேலையை செய்தனர்.

தமிழ்மொழியை மலபார்மொழி என்றழைத்தனர்.

அந்தக் காலகட்டத்தில் தமிழ் மொழியில் முதன் முதலாக வெளியிடப்பட்ட அகராதியில் ஒன்றை உங்கள் பார்வைக்கு பதிவிடுகின்றேன்.

குறிப்பு : மேல்நாட்டினர் தான் தமிழ் மொழிக்கு அச்சுகலையும் தமிழ் அச்சு எழுத்துக்களையும் உருவாக்கித் தந்தனர். அவ்வாறு முதல்முதலாக உருவாகி கொண்டிருந்த அச்சு எழுத்துக்கள் மரக்கட்டைகளில் செய்தவையாக இருந்தன. அத்தகைய மரக்கட்டை அச்சு எழுத்துக்களில் தான் இந்த நூல் அச்சிடப்பட்டுள்ளது.

மேலும் சில விபரங்கள்...

1577 ல் கிறித்துவ மிஷினரி அம்பலக்காடு (பாலக்காடு மாவட்டம்) அச்சகத்தில் அச்சடித்த முதல் மலையாள நூல் அம்மொழியை மலவார் அல்லது தமிழ் என்கிறது (கால்டுவெல் குறிப்பு).

1679 செப்டம்பரில் கண்டியில் இருந்து தப்பி அனுராதபுரம் வந்த நாக்ஸ் (Knox) என்ற ஆங்கிலேயர் அந்த அனுபவம் பற்றி எழுதிய Captivity and escape of Captain Knox என்ற புத்தகத்தில் மல்வத்து ஓயா ஆற்றைக் கடந்து (தமிழில் அருவி ஆறு) அனுராதபுரத்தை நோக்கி சென்ற போது அங்கே மலபார்கள் (தமிழர்கள்) குடியிருந்ததாகவும்.. தான் பேசிய சிங்களம் அம்மக்களுக்குப் புரியவில்லை என்றும் பதிவு செய்துள்ளார்.

ஆக, மலபார் (அல்லது மலவார்) என்று தமிழே அழைக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.

படம்: தமிழும் இங்கிலிசுமாயிருக்கற அகராதி..

A Malabar and english dictionary
english missinaries madras
first edition 1779.. printed vapery...

பித்த வெடிப்பு போவதற்கான டிப்ஸ்...


நன்னாரிவேர் 10 கிராம் எடுத்துக்கோங்க, அதோட ஒரு டம்ளர் தண்ணி சேர்த்து கொதிக்க வச்சு, அரை டம்ளரா குறுகினதும் வடிகட்டி வச்சிக்கோங்க. அதுல பனங்கல்கண்டு சேர்த்து குடிச்சிட்டு வந்தால் பித்தவெடிப்பு மறைஞ்சிரும். ஒரு தடவை பயன்படுத்திய நன்னாரிவேரை 3, 4 தடவை கூட பயன்படுத்தலாம்.

பித்தவெடிப்பு உள்ள இடத்தில் மருதாணி இலையை அரைத்து பத்து போட்டாலும் குணம் கிடைக்கும். வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை பொடி செஞ்சு, ஒரு சிட்டிகை தேன் சேர்த்து, ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தாலும் பித்தவெடிப்பு சரியாகும்.

தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.

தேங்காய் எண்ணெய் (200 மிலி), விளக்கெண்ணெய் (200 மிலி), கடையில் கிடைக்கும் வெண் குங்கிலியம் (35 கிராம்), சாம்பிராணிப்பொடி (10 கிராம்). தேன்மெழுகு (60 கிராம்). எண்ணெயை சூடு செய்து அதில் குங்கிலியம், சாம்பிராணி ஆகியப் பொடிகளை கலந்து, நன்கு கரைந்தவுடன் தேன்மெழுகு சேர்த்து நன்கு கலக்கி ஆறவைக்க களிம்பாகி இருக்கும். இதை பாதிக்கப்பட்ட இடத்தில் இரவு படுக்கும் முன் தடவி வர பித்தவெடிப்பு உடன் தீரும்.

கிளிஞ்சில் சுண்ணாம்புப் பொடி, விளக்கெண்ணெய் இவை இரண்டும் தேவையான அளவு கல்லுரலில் இட்டு நன்கு அரைத்து பசையாக்கி பாதிக்கபட்ட இடத்தில் தடவிவர உடன் தீரும். விளக்கெண்ணெய் அதிகமாக சேர்க்காமல் பசையாகும் அளவு மட்டும் குறைவாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். காலை, மாலை இரு வேளை தடவிவர உடன் தீரும்.

மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொர சொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப் படுவதோடு, பாதம் மென்மையாகவும் இருக்கும்.

பித்தவெடிப்பு இருப்பவர்கள், தண்ணீரை கை பொறுக்கும் அளவுக்கு சுட வைத்து, அதில் சிறிது நேரம் காலை வைத்து எடுத்தால், பாதங்கள் மிருது வாகும். கூடவே, வெடிப்பின் மூலமாக தேவையான நீர் உறிஞ்சப்பட்டு விடும். பாதத்தில் உள்ள அழுக்குகளும் வெளியேறிவிடும். இதை தினமும் செய்யலாம்.

பித்தவெடிப்பிலிருந்து ரத்தம் வந்தால், உடனடியாக தோல் மருத்துவரிடம் போய் சிகிச்சை பெறுவது அவசியம்.

வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால், பித்த வெடிப்பு நீங்கும்.

தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்துவதாலும், சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, விலை மற்றும் டிசைனை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், தரமானது தானா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.

ஆலமரப்பால், அரசமரப்பால் இரண்டும் சமஅளவு கலந்து பூசவும் வெங்காயத்தை வதக்கி பின்பு அதை அரைத்து பாதங்களில் தடவி வர பித்தவெடிப்பு குணமாகும்.

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால், பித்த வெடிப்பு குணமாகும்.

வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.

இரவு நேரத்தில் தூங்க போவதற்கு முன், காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் தேய்த்து தூங்கப் போகலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.⁠⁠⁠⁠..

அமானுஷ்யம்...


மெக்சிகோ நகரிலிருந்து 2 மணி நேரம் ஒரு கால்வாய் வழியாக பயணித்தால், 'சோச்சி மில்கோ' என்ற மனித நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியை அடையலாம்.

பல வருடங்களுக்கு முன் அந்த கால்வாய் வழியாகச் சென்ற ஜூலியன் சாண்டனா பரேரா, ஒரு இளம் பெண்ணின் பிணத்தையும் அவள் விட்டுச் சென்ற பொம்மையையும் கண்டறிந்தார்.

அவளது காலடிச் சத்தத்தையும், ‘அப்பா நீங்க ஏன், என்ன காப்பாத்தல?’ என்கிற அலறல் சத்தத்தையும் கேட்டு மிரண்டு போன அவர், அவள் விட்டுச் சென்ற பொம்மையை ஒரு மரத்தில் கட்டித் தொங்க விட்டார்.

தொடர்ந்து, பேயாய் அலையும் அந்த இளம்பெண்ணின் ஆன்மாவை சாந்தப்படுத்துவதற்காக கடந்த 50 வருடங்களாக அந்த தீவை பொம்மைகளால் அலங்கரிக்க ஆரம்பித்தார்.

இவ்வளவும் செய்த அவரே, சில வருடங்களுக்கு முன் அந்த தீவில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

தற்போது, இவரது குடும்பத்தினர் இவர் விட்டுச் சென்ற வேலையை செய்து வருகின்றனர்.

அங்கு வைக்கப்படும் பொம்மைகள் அனைத்திலும் அந்த பெண்ணின் ஆவி புகுந்து ஓலமிடுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த விஷயம் ஊடகங்கள் மூலமாக கசிந்து தற்போது ஏராளமான புகைப்படக் கலைஞர்களும் சாகச விரும்பிகளும் அந்த தீவிற்கு வந்து பொம்மைகளை மரத்தில் தொங்க விட்டுச் செல்கின்றனர்.

பரேரா இறந்து 14 வருடங்கள் ஆன போதும், இன்னும் அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்பதாக சில பார்வையாளர்களும், அது அவளது அலறல் சத்தம் இல்லை பரேராவின் அலறல் சத்தம் என்று சிலரும் கூறி வருகின்றனர்.

ஒரு சிலரோ, அவர் எந்த பொணத்தையும் பாக்கல, ரொம்ப நாளா இந்த தீவுப்பக்கம் தனியாவே இருந்ததால ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி அவர இப்படியெல்லாம் செய்ய வச்சிருக்குதுன்னு கூலா சொல்றாங்க.

எது எப்படியோ, இப்ப வரைக்கும் இருட்டிய பிறகு அந்த தீவுக்குப் போக பலர் பயந்து நடுங்குவது தான் இந்த தீவோட ஹைலைட்...

பாஜக தமிழிசையை டுமிழிசை என்று எவனோ மாற்றிவிட்டானுங்க...


2008ல் ராமேஸ்வரத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தமிழின துரோகி கருணாநிதி போட்ட பொய் வழக்கில் இருந்து அண்ணன் சீமான் மற்றும் அண்ணன் அமீர் அவர்களை நீதிமன்றம் விடுவித்தது.. மகிழ்ச்சி...


நம்ப முடியாத உண்மைகள்...


இரட்டை இலை சின்னம்: விசாரணையை அக்.30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்...


       
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அக்கட்சி இரண்டாக உடைந்து, சசிகலா தலைமையில் ஓர் அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியாகவும் செயல்பட்டு வந்தது. சசிகலா சிறை சென்றதால் அவரது அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சர் ஆனார். இந்த நேரத்தில், ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், இரட்டை இலை சின்னத்தை பெற இரு அணிகளும் தேர்தல் கமிஷனில் முறையிட்டன.

இதனால் வேறு வழியில்லாமல், அ.தி.மு.க. வையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் கமிஷன் முடக்கியது. இதன் காரணமாக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெவ்வேறு சின்னங்களிலேயே இரு அணிகளும் போட்டியிட்டன. ஆனால், வாக் காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அங்கு இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

அதன்பின்னர், இரு அணிகளும் கட்சி மற்றும் சின்னத்தை பெறுவதில் முனைப்பு காட்ட தொடங்கின. லட்சக் கணக்கான பிரமாண பத்திரங்களை இரு அணியினரும் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்தனர். ஆனால், ஆவணங்களை தேர்தல் கமிஷன் ஆய்வு செய்யும் முன், ஓ.பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்றாக இணைந்தன. டி.டி.வி. தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

இதற்கிடையே, இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பதை நவம்பர் 10-ந் தேதிக்குள் தேர்தல் கமிஷன் முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள், அ.தி. மு.க.வின் இரு அணிகளிடமும் கட்சி மற்றும் சின்னம் குறித்து கடந்த 6-ந் தேதி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில், இரு அணிகளும் இணைந்துவிட்டதால், எங்களுக்கே கட்சியையும், சின்னத்தையும் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அதன்பிறகு கடந்த 16-ந் தேதி 2-வது கட்ட விசாரணை நடைபெற்றது. அன்று பிற் பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெற்ற விசாரணையின் போது இரு அணிகளின் சார்பிலும் ஆஜரான நிர்வாகிகள் மற்றும் வக்கீல்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். அதன்பின்னர், இறுதி விசாரணையை 23-ந் தேதிக்கு (அதாவது இன்று) ஒத்திவைப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு விசாரணை துவங்கி நடைபெற்றது. இரு தரப்பும் நேரில் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். 

இதைத்தொடர்ந்து  அடுத்த கட்ட விசாரணையை வரும் 30 ஆம் தேதிக்கு தேர்தல் கமிஷன் ஒத்திவைத்தது. இதற்கிடையே, ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, டிடிவி தரப்பினர் வழக்கை தாமதப்படுத்த முயற்சித்து வருகின்றனர் எனவும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை கருத்தில் கொண்டு விரைவாக தீர்ப்பளிக்க  கேட்டுக் கொண்டுள்ளோம். 30 ஆம் தேதி நடைபெறும் விசாரணையே இறுதி விசாரணையாக இருக்கும்” என்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்...

அல்சருக்கான சித்தர் மருத்துவம்...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 41...


ஹாரா தியானம்...

ஹாரா என்பது மையம் என்ற பொருளைத் தரும் ஜப்பானியச் சொல். இது தொப்புளுக்குக் கீழ் இரண்டு விரல் அகலம் கழித்து இருக்கும் பகுதியைக் குறிக்கும். இது மணிப்புரா சக்ரா சக்தி மையத்தைக் குறிக்கும். இது உடலின் வலிமைக்கு முக்கிய மையமாக கருதப்படுகிறது. ஒருவன் இந்த சக்தி மையத்தில் கவனத்தைக் குவித்து தியான நிலையில் இருக்கும் போது எல்லையற்ற சக்தியுடையவனாக இருக்கிறான் என்கிறார்கள். அய்கிடோ (Aikodo) என்ற ஒரு வகை ஜப்பானிய மல்யுத்ததில் இந்த ஹாரா பகுதி மிக முக்கியத்துவம் வகிக்கிறது.

அய்கிடோவை உலகத்திற்கு அளித்த Morihei Ueshiba ஹாராவில் தன்னை ஐக்கியமாக்கி இருக்கும் கலையில் இணையற்ற நிபுணராக விளங்கினார். அப்படி ஒரு முறை அவர் இருக்கையில் சக்தி வாய்ந்த ஐந்தாறு மனிதர்கள் என்ன முயன்றும் அவரைத் தூக்கவோ, அவரை நகர்த்தவோ பிரம்மப் பிரயத்தனம் செய்தும் முடியாமல் தோற்றுப் போனார்கள். இன்னொரு நிகழ்ச்சியில் ஒரு சேர ஆறு பயிற்சி வீரர்கள் அவரைத் தாக்க வந்த போது எந்த வித அலட்டலும் இல்லாமல் அந்த ஆறு பேரையும் ஒவ்வொருவராக அவர் தூக்கி எறிந்ததாகச் சொல்லப்படுகிறது. இது கேட்பதற்கு தமிழ் சினிமா கதாநாயகன் போடும் சண்டைக் காட்சி போல தோன்றினாலும் பல பேர் முன்னிலையில் நடத்திக்காட்டப்பட்ட சம்பவங்கள்.

பண்டைய மருத்துவ சிகிச்சை முறைகளிலும் ஹாரா பகுதி மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்தது. உடலின் எல்லா நோய்களையும் கண்டறிய வயிற்றுப் பகுதியே அதிகம் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது. உடலுறுப்புகளின் ஒருங்கிணைப்பு முறையாக இல்லாவிட்டாலும் அதை ஹாரா பகுதி மூலம் அக்காலத்தில் கண்டறிந்தார்கள். அதை சரி செய்யவும் ஹாரா பகுதியை பலப்படுத்தவும் மூச்சுப் பயிற்சியும், தியானமும் பயன்படுத்தப்பட்டன. இனி ஹாரா தியானம் செய்யும் முறையைக் காண்போம்.

1) தரையில் சம்மணமிட்டோ, அல்லது நாற்காலியிலோ சௌகரியமாகவோ நிமிர்ந்து அமர்ந்து கொள்ளுங்கள்.

2) படத்தில் காட்டியுள்ளது போல் உங்கள் வலது கைவிரல்கள் மீது இடது கைவிரல்களை வைத்து இரு பெருவிரல்களும் லேசாகத் தொட்டுக் கொண்டிருக்கும் படியாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது உங்கள் கைகள் ஒரு நீள்வட்டத்தை உருவாக்கி இருக்கும். மிகவும் பவித்திரமான ஒரு பொருளை அந்தக் கைகளில் வைத்திருப்பது போல் கவனத்துடன் இந்த முத்திரையை வைத்திருங்கள். இந்த முத்திரை மனதை அமைதியாக வைத்திருக்க மிகவும் உதவுவதாகக் கருதப்படுகிறது. உங்கள் கைகள் உங்கள் அடிவயிற்றை லேசாக ஒட்டியபடி இருக்கட்டும்.

3) உங்கள் கவனம் உங்கள் மூச்சில் இருக்கட்டும். மூச்சு சீராகும் வரை முழுக்கவனமும் மூச்சிலேயே வைத்திருங்கள்.

4) அமைதியை உள்மூச்சில் பெறுவதாகவும், டென்ஷன், கவலை போன்றவற்றை வெளிமூச்சில் வெளியே அனுப்பி விடுவதாகவும் எண்ணிக் கொள்ளுங்கள். சில மூச்சுகளில் மூச்சு சீராகி மனமும் அமைதி அடைந்தவுடன் உங்கள் கவனத்தை ஹாரா மீது திருப்புங்கள்.

5) ஹாரா பகுதியில் ஒரு பொன்னிற பந்து இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்தப் பந்தை சக்திகளின் இருப்பிடமாக எண்ணிக் கொள்ளுங்கள். உங்கள் உள்மூச்சில் அந்தப் பொன்னிறப்பந்து விரிவடைவதாகவும், வெளிமூச்சில் பழைய நிலைக்கு சக்தி பெற்று திரும்புவதாகவும் நினைத்துக் கொள்ளுங்கள்.

6) இப்படி நீங்கள் செய்யச் செய்ய உங்கள் வயிற்றுப் பகுதியில் உள்ள இறுக்கம் எல்லாம் குறைந்து ஒரு விதமாக லேசாவதை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள்.

7) இந்தப் பயிற்சியால் ஹாரா அல்லது மணிப்புரா சக்ரா கழிவுகள் நீங்கி சுத்தமடைவதாகவும், பெரும் பலம் பெறுவதாகவும் உணருங்கள்.

8) ஆரம்பத்தில் உருவகப்படுத்தி செய்த இந்த தியானம் பயிற்சியின் காலப்போக்கில் உண்மையாகவே ஹாராவின் சக்தியை பலப்படுத்தி அசைக்க முடியாத மன அமைதியையும், மன உறுதியையும் ஏற்ப்படுத்த ஆரம்பிக்கும்.

இந்த தியானம் மன அமைதியை மட்டுமல்லாமல் உடல் வலிமைக்கும் மிகவும் உதவுகிறது. நாம் முன்பு கண்டபடி Aikodo வில் மட்டுமல்லாமல் உடலின் பொதுவான பலத்திற்கும், இந்த ஹாரா தியானம் பெருமளவு உதவுகிறது. ஹாராவில் மனதைக் குவித்து

ஐக்கியமாகி இருக்கும் சமயங்களில் எந்த வித தாக்குதலிலும் தளர்ந்து விடாமலும், நிலை குலைந்து விடாமல் இருத்தல் மிக சுலபமாகிறது.

மன அமைதி, உடல் வலிமை இரண்டையும் தரவல்ல ஹாரா தியானத்தை நீங்களும் செய்து பார்த்து பலனடையலாமே..

மேலும் பயணிப்போம்....

சேலத்தில் தவணை முறையில் மோட்டார் சைக்கிள் தருவதாக மோசடி...


சேலம் மாவட்டத்தில் நூதன முறையில் ரூ.5 கோடி ரூபாய் வரை மோசடி செய்த நபரின் அலுவலகத்தை பொதுமக்கள் அடித்து உடைத்தனர்.

சேலம்,புதிய பஸ் நிலையம் அருகில் அமேஸ் என்ற பெயரில் மார்க்கெட்டிங் நிறுவனத்தை சேலம், அம்மாப் பேட்டையை சேர்ந்த கோபிநாத் என்பவர் கடந்த 5 மாதங்களாக நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் 2 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை முன்பணமாக வாங்கிக் கொண்டு 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புதிய மோட்டார் சைக்கிள்களை தவணை முறையில் கொடுப்பதாக கோபிநாத் அறிவித்திருந்தார். ஆனால் கூறியபடி மோட்டார் சைக்கிள் தராததால், கோபம் அடைந்த பொதுமக்கள் கோபிநாத் நிறுவனத்துக்குள் புகுந்து அங்கிருந்த கணிணி, குளிர் சாதன பெட்டி உள்ளிட்ட பொருட்கள் சூறையாடினர்.

மேலும் மேஜை நாற்காலி, ஏ.சி உள்ளிட்ட பொருட்களை தூக்கி சென்றனர். இதை அறிந்த சேலம், பள்ளப்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்கள் தூக்கி சென்ற பொருட்களை பறிமுதல் செய்தனர்...

எருக்கம் பூ, செடி மருத்துவ குணங்கள்...


எருக்குச் செடி பல இடங்களில் வளருவதைப் பார்க்கிறேம். இதன் மருத்துவ குணங்கள்..

எருக்கின் இலை, பூ, வேர், பால் அனைத்தும் சிறப்பான மருத்துவ குணங்கள் நிறைந்தவை.

எருக்கம் இலையை வதக்கிக் கட்ட, கட்டிகள் பழுத்து உடையும்.

செங்கல்லைப் பழுக்கக் காய்ச்சி அதன் மீது எருக்கின் பழுத்த இலையை 4-5 வரிசை அடுக்கிக் குதிகாலால் அழுத்தி மிதித்து வர குதிகால் வாயு நீங்கும்…..

இலைகளைக் காய வைத்து எரித்து, அதிலிருந்து வரும் புகையை மூக்கினுள், இழுக்க, ஆஸ்துமா இருமல் போன்ற உபாதைகள் குறைந்துவிடும்….

இலையை வாட்டி வதக்கிப் பிழிந்தெடுத்த சாறு, மூக்கினுள் 4- 6 சொட்டுகள் விட, உள்ளே அடைபட்டிருக்கும் கெட்டியான சளி கரைந்துவிடும். இதைக் காலையிலும், மாலையிலும் அளவுமிகாமல் கவனத்துடன் விட, தும்மலை ஏற்படுத்தி, மூக்கடைப்பை நீக்கிவிடும்.

பழுத்த இலைகளின் சாற்றை, நல்லெண்ணெய்யுடன் கலந்து, வெதுவெதுப்பாக காதினுள் விட்டுவர காதுவலி, செவிடு போன்ற காது சம்பந்தப்பட்டப் பிரச்னைகள் விரைவில் குணமாக வாய்ப்பிருக்கிறது.

இலைகளை மூட்டை கட்டி, சூடாக்கி, வெதுவெதுப்பாக நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் ஒத்தடம் கொடுத்தால் அங்கு ஏற்படும் வலி குறைந்துவிடும்.

காய்ந்த இலைகளைப் பொடித்து, புண்கள் மீது தூவ, அவை விரைவில் ஆறிவிடும்.

இலைச்சாறு மஞ்சள் தூளுடன் கலந்து கடுகெண்ணெய்யில் வேக வைத்து, தோலில் ஏற்படும் படை, சொறி, சிரங்குகளில் பூசி வர, விரைவில் குணமாகும்.

இலைகளையும், பூக்களையும் ஒன்றாக வேக வைத்த தண்ணீரை GUINEA WORMA எனும் புழுக்களை ஒழிக்க, அது பாதித்துள்ள கை, கால் பகுதிகளை முக்கி வைக்கலாம்..

எருக்கம் பூக்களைப் பொடித்து கருங்காலிக் கட்டை போட்டு வெந்தெடுத்த தண்ணீரில் சிட்டிகை கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட, குஷ்டம் எனும் கொடிய நோயின் தாக்கம் குறைந்துவிடும்.

பூ நல்ல ஒரு ஜீரணகாரி. இருமல், சளி அடைப்பினால் ஏற்படும் மூச்சிரைப்பு நோய், பிறப்பு உறுப்புகளைத் தாக்கும் சிபிலிஸ், கொனோரியோ போன்ற உபாதைகளைக் குணப்படுத்தும். காலரா உபாதையில் இதன் பயன்பாடு நல்ல பலனைத் தருகிறது.

எருக்கம் வேர்த் தோலை விழுதாக வெந்நீருடன் அரைத்துச் சாப்பிட, உடல் உட்புறக் கொழுப்புகளை அகற்றி, வியர்வையைப் பெருக்கும். அதிக அளவில் சாப்பிட்டால் வாந்தியை ஏற்படுத்தும். வேர்த்தோலை அரிசி வடித்த கஞ்சியுடன் அரைத்து யானைக்கால் நோயில் பற்றிடலாம்..

தேள் கடித்த இடத்தில் எருக்கின் பாலைத் தடவி வர உடனே குறையும். பாம்புக் கடியிலும் இதைப் போலவே பயன்படுத்தலாம்.

மஞ்சள் தூளுடன் எருக்கம்பாலைக் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள், நிறமாற்றம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் பூசி வருவது நல்லது...

உடலில் உள்ள கொழுப்பு கரைய...


தேவையான பொருட்கள்...

சின்ன வெங்காயம் (நாட்டு வெங்காயம்) அரை கிலோ.

பசுமாட்டு நெய் கால்கிலோ.

பனவெல்லம் (அ) பனங்கல்கண்டு  தேவையான  அளவு.

செய்முறை..

வெங்காயத்தினை தோலுரித்து கொள்ளவும்  பிறகு வானலில் போட்டு நெய் ஊற்றி பொன்னிறமாக வதக்கவும்.

வதக்கிய வெங்காயம் சூடு ஆரியப்பின் மிக்சியில் போட்டு அரத்துக் கொள்ளவும்.

அரைத்த வெங்காயத்தினை  மறுபடியும் வாணலில் போட்டு நெய் ஊற்றி கிளறவும்.

குறிப்பு - சர்க்கரை நோய் உள்ளவர்கள் நாட்டுமருந்து கடையில் கிடைக்கும்  கரி உப்பு அல்லது கருப்பு உப்பு   சேர்த்து கொள்ளவும்..

சர்க்கரை நோய் இல்லாதவர்கள் பனங்கல்கண்டு  அல்லது பனவெல்லம் சேர்த்து லேகிய பதம் வரும் வரை  கிளறி  கண்ணாடி குடுவையில்  வைத்துக் கொண்டு காலை ஒரு ஸ்பூன்  இரவு ஒரு ஸ்பூன்  48 நாட்கள்  சாப்பிட்டு வர...

உடலில் உள்ள கொழுப்புகள் கரையும், பருத்த உடல்  இளைக்கும்...

சித்தர் ஆவது எப்படி - 22...


உள்ளிருந்து ஓங்கும் உன்னதத்தின் இரகசியம்...

பெற்ற தாயை மகன் மறந்தாலும், பிள்ளையை தாய் மறந்தாலும், உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும், உயிரை தேகம் மறந்தாலும், கற்ற நெஞ்சகம் கற்றவற்றை மறந்தாலும், கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும் நல்ல தவத்தோர் உள்ளிருந்து ஓங்கும் நமசிவயத்தை நான் ஒரு பொழுதும் மறக்க மாட்டேன் என பொருள் பட வள்ளலார் பாடி இருக்கின்றார்..

இதில் உள்ளிருந்து ஓங்கும் என்ற வரி தான் மிக மிக முக்கியம்..

நமசிவய என்ற பஞ்ச பூத சக்தி, தேகத்தின் உள்ளே அமர்ந்து ஓங்க தொடங்கும் பொழுது மட்டுமே, தேகத்தில் உயிர் நிற்கும்..

கண நேரம் ஆயினும் அந்த ஓங்குதல் நடைபெற வில்லையென்றால், சுற்று புற காற்று மண்டல அழுத்தத்தால் ஒடுங்குதல் என்ற செயல் நடைபெற்று, தேகம் நசுக்கப் பட்டு வேதனை படுகிறது..

பிறந்த குழந்தை மூச்சு விட தெரியவில்லை என்றால் உடனே இறந்து போகும்..

இந்த மூச்சானது தேகத்தின் உள்ளே புகுந்து, வெளி உலக சூழ் நிலைகளின் ஒடுக்குதல் என்ற செயலுக்கு எதிராக ஓங்குதல் என்ற செயலை உருவாக்கி தேகத்தை சமநிலை படுத்துகிறது..

இந்த காரணத்தினால் தான் நாம் நான்கு விநாடிகளுக்கு ஒரு முறை சுவாசித்து, உள் நுழைந்த காற்று மண்டலத்தினால் உள்ளே ஓங்குதல் என்ற செயல் பாடு நடை பெற்று நம் தேகம் சமசீர் அடைந்து உயிர் வாழ்கிறோம்..

ஆக மொத்தத்தில் உள் இருந்து ஓங்குதல் மூலம் மட்டுமே தேகத்தில் உயிர் வாழ்கிறது..

ஓங்குதல் என்ற செயல் பாடு நடக்கும் போது மட்டுமே தேக திசுக்கள் விரிவடையும் தன்மையால் இன பெருக்கம் அடைந்து அதன் மூலம் தேகம் வலுவடைகிறது..

இந்த சூழ்நிலையில் சுற்று புற சூழ்நிலைகளால் உருவாகும் ஒடுங்குதல் என்ற செயல் பாடு, சுவாச ஒழுங்கின்மை காரணமாக அதிகரித்து, தேகம் சிறுக சிறுக வலுவிழந்து, முடிவில் மரணம் கவ்வுகிறது...

ஆகவே ஓங்குதலுக்கு உதவாத சுவாச பயிற்சிகள் அத்தனையும் தேகத்தை நாசப் படுத்துகிறது..

மிக முக்கியமாக சுவாசத்தின் மூலமாக நடைபெறும் ஒங்குதல் என்ற செயல் பாட்டிற்றிக்கு, சுவாச இல்லாத நிலையில் ஒரு மாற்று பயிற்சியின் மூலம் அந்த ஓங்குதல் நடை பெற வில்லை என்றால், சுவாச மற்ற நிலையில் தேகத்தில் உயிர் நிச்சயமாக தங்காது..

அந்த மாற்று பயிற்சியை பயிலாத வரை ஜீவ சமாதி என்பது சாத்தியமில்லை...

சுவாசத்தின் மூலம் இல்லாமல் அந்த மாற்று பயிற்சியின் மூலம் மட்டுமே அந்த உள் இருந்து ஓங்குதல் மூலம், புதையுண்ட ஜீவ சமாதியில் ஓரு மகான் தன் தேகம் அழியாமல் காத்து, தன் தேக கனலை காத்து, தன் ஒளி தேகத்தால் செயல் பட முடியும்..

அந்த மாற்று பயிற்சியை கற்றுக் கொள்ளாமல், உள் இருந்து ஓங்குதலை இழந்து, ஜீவ சமாதி என்று புகுந்தவர்கள் அத்தனை பேரும் மரணத்தை தழுவியவர்களே...

இதனால் தான் உள் இருந்து சதா காலமும் ஓங்குதலை நடத்தும் நமசிவய என்ற ஜீவ சக்தியை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன் என்று வள்ளலார் சொல்லுகின்றார்..

அந்த உள் இருந்து ஓங்குதலை பெற மாற்றுப் பயிற்சியினை கற்று பயின்ற பின் சுவாசம் என்ற ஒன்று மனிதனுக்கு தேவை இல்லை..

அப்படி வெளி சுவாசம் தேவையில்லாத மனிதனே ஜீவ சமாதிக்கு தகுதி உடையவன் ஆகிறான்..

அவன் வெளி சுவாசத்தால் செயல் படும் ஒழுங்கின்மையிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு.

பரி பூரண ஒழுங்கு என்ற அந்த உள் ஓங்குதலில் தன் தேகத்தை வேண்டிய காலம் காத்து தன் ஒளி தேகத்தில் செயல் ஆற்றுகின்றார்கள் சித்தர் பெரு மக்கள்...

இதை பின்பற்றினால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை...


மோதிர விரல் பற்றிய சுவாரசிய தகவல்...


விரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம், இருதய நோய், வயிற்றுக் கோளாறுகள் போன்ற வியாதிகளை நீக்குகிறது.

சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூடாது. இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும்..

மேலும் நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா?

அதாவது ஆள்காட்டி விரல் உங்களின் சகோதரங்களை குறிக்கிறது..

நடு விரல் உங்களை குறிக்கிறது..

மோதிர விரல் உங்களின் வாழ்க்கை துணையை குறிக்கிறது..

சிறிய விரல் உங்களின் பிள்ளைகளை குறிக்கிறது..

பெருவிரல் உங்களின் பெற்ரோளைர குறிக்கிறது..

உங்களின் இரு உள்ளங்கைகளையும் நேருக்கு நேராக இருக்க செய்யுங்கள், நடு விரலை மடித்து ஒட்ட வையுங்கள், மற்றைய விரல்களை நிமிர்த்தி ஒட்ட வையுங்கள்..

பெருவிரலை பிரித்துப் பாருங்கள், பிரிக்க முடியும், அதாவது உங்களின் பெற்ரோர் உங்களுடன் எப்போதும் இருக்க மாட்டார்கள்..

பெருவிரலை பழையப்படி ஒட்டி வைத்து சுட்டு விரலை பிரித்துப் பாருங்கள், பிரிக்க முடியும், அதாவது உங்களின் சகோதரங்கள் உங்களுடன் எப்போதும் இருக்க மாட்டார்கள்..

இதுபோல் உங்களின் சிறிய விரலை பிரித்துப் பாருங்கள், பிரிக்க முடியும், அதாவது உங்களின் பிள்ளைகள் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்..

ஆனால் உங்களின் மோதிர விரலை பிரித்துப் பாருங்கள், பிரிப்பது மிகவும் சிரமமாக இருக்கும், அதாவது கணவன் மனைவி எப்போதும் ஒன்றாக பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்க்காகவே திருமண சடங்ககுளில் மோதிரம் அணிகிறோம்...

இராஜராஜசோழன் இந்தோனசியாவில் கட்டிய நுழைவாய்...


1000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழன் இராஜராஜசோழன் இந்தோனசியாவில் கட்டிய நுழைவாய் இன்னும் சிங்கம் போல நம் தமிழரின் அடையாளம்.....

இளவட்டக்கல்...


அன்று மாப்பிள்ளையின் தைரியத்தை பரீட்சித்துப் பார்ப்பார்கள் இப்படிப்பட்ட கல்லை ஒரே தூக்கில் தூக்க வேண்டும்..

அந்தக் காலத்தில இளவட்டக்கல் இதை ஒரே தூக்ககத் தூகுபவருக்கே பெண் கொடுப்பார்கள்..

முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் மாப்பிள்ளைக்கல் என்று அழைக்கப்படுகிற இளவட்டக்கல்லைத் தூக்கினால் தான் பெண் வீட்டார், பெண் கொடுக்கும் வழக்கம் இருந்தது..

இளவட்டக்கல் என்பது ஊரின் மையத்தில் அல்லது ஆட்கள் அதிகமாக நிற்கக் கூடிய இடங்களில் வைக்கப்பட்டிருக்கும்.

இளவட்டக்கல் தூக்கக்கூடிய ஒருவர், உடல் வளமும் மனோபலமும் மிக்கவராக இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட ஒருவரால் தான் அந்தக் கல்லையே தூக்க முடியும்.

அத்தகைய ஒருவர், தனது பெண்ணை காலம் முழுக்க வைத்துக் காப்பாற்றும் மனோதிடமும் உடல் வலிமையும் பெற்றிருக்கிறார் என்பதே பெண் வீட்டாரின் எண்ணம்.

அதனால், இளவட்டக்கல்லைப் பலரும் ஏதோ ஒரு சமயத்தில் தங்களுக்குள்ளேயே பந்தயம் கட்டிக் கொண்டு தூக்கிப் பார்ப்பார்கள்.

ஒருவரின் உடல் வலிமையையும் உள்ள வலிமையையும் குறிப்பால் உணர்த்துகிறது இந்த முறை.

ஒரு நாற்பது வருடங்களுக்கு முன் மிக ஒல்லியாக இருப்பவர்களும் பலசாலியாகவே இருந்தார்கள்.

எல்லோருக்கும் கிராமத்தில் விவசாயம் தான் முக்கிய வேலை.

அதனால், உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்.

அதனால் உடல் மெலிந்தோர், உடல் பருத்தோர் என்ற வித்தியாசம் இன்றி பலரும் உடல் வலிமை மிக்கவராகவே இருந்தார்கள்.

காளை மாட்டை அடக்குவது, இளவட்டக் கல்லைத் தூக்குவது போன்ற விளையாட்டுக்களில் வீரத்தை வெளிப்படுத்தும் முறை பெரும்பாலும் கல்யாணத்திற்கு காத்திருக்கும் அல்லது தயாராயிருக்கும் காளையர்களுக்கான ஒரு போட்டி. அதிலும் இளவட்டக்கல் என்பது லேசுப்பட்டதல்ல.

அதைத் தூக்கும் முறையைப் பற்றி கேள்விப்பட்டவர்களுக்கே மூச்சு முட்டிவிடும்.

முதலில் குத்தவைத்து உட்காருவது போல உட்கார்ந்து கொண்டு இளவட்டக்கல்லை இரு கைகளாலும் இறுகப் பிடித்து உடம்போடு சேர்த்து அணைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், முழங்காலில் தூக்கி வைக்கும் போது சிறிது இடைவெளி கிடைக்கும்.

இப்போது மூச்சை நன்றாக இழுத்துக் கொண்டு மெல்ல எழ முயற்சிக்க வேண்டும்.

உடல் சற்று நிமிர்ந்தவுடன் நெஞ்சுப் பகுதிக்கு கல்லை அங்குலம் அங்குலமாக மேலேற்றி, வலது புறத்திலோ அல்லது இடது புறத்திலோ கல்லை உருட்டி ஏற்றிவிடவேண்டும்.

அவ்வளவு தான்..

ஆனால், முதன் முறை அப்படிக் கல்லை மேலேற்றும்போது நெஞ்சுப்பகுதியில் சடசடவென்று எலும்புகளின் சத்தம் கேட்குமாம்.

மார்பிலிருந்து தோள்பட்டைக்கு நகர்த்தும் போதுதான் பலரும் தோல்வியடைந்து விடுவார்களாம்.

சற்று மூச்சடக்கி தூக்கிவிட்டால் அப்படியே சிறிது நேரம் வைத்திருந்து, அருகிலுள்ள கோயிலை வலம் வந்து கீழே போடுவார்களாம்.

சிலர், அருகில் உள்ள ஊருணியைச் சுற்றி தமது வீரத்தை வெளிப் படுத்துவார்களாம்.

ஊரில் உள்ள பெரியவர்கள் சொல்லச் சொல்ல, கேட்பவரின் மனம் கல்லைத் தூக்கி வைத்துக் கொண்டிருப்பவரின் நிலைக்குத் தள்ளப்படும்.

தோல்வியடையும் சிலரும், முதன் முறையாக முயற்சி செய்வோரும் ஆளில்லாத நேரமாகப் பார்த்துத் தூக்கிப் பார்ப்பதுண்டு.

சில பீமர்கள் ஒரே மூச்சில் தூக்கிவிட்டு அடுத்து என்ன என்பது போலவும் பார்ப்பார்கள்...

நெல்லை தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் 4 வாரத்தில் விளக்கமளிக்கவும், டிஜிபி 8 வாரத்தில் விளக்கம் அளிக்கவும் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்...


ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் இந்த கடலையே நம்பி வாழும் தமிழ்நாட்டு மீனவர்கள் வாழ்வை சூறையாட காத்திருக்கின்றது அதானியின் நண்பன் பாஜக மோடியின் கார்பரேட் அரசு...


வேளாண்மை எனப்படும் உணவு உற்பத்தி தொழிலுக்கு பிறகு அதிக அந்நிய செலாவணியை ஈட்டி தருவது மீன்பிடி தொழில். அதுவும் இந்த இந்து மா கடலின் மீன்களுக்கு உலக அளவில் அதிக சந்தை மதிப்பு உள்ளது. பல வளர்ந்த நாடுகளில் மீன்பிடி தொழிலாளர்கள் அரசு ஊழியர்களாக பல காப்பீடுகள் பெற்றவர்களாக மீனவர்கள் வாழ்கிறார்கள். கடல்வளம் என்பது மீன்பிடி தொழிலையும் தாண்டி அகண்டு நீண்டு உள்ளது அதனை சுரண்டுவதற்கு தடையாக இருப்பது பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் கடலை தாயாக பார்க்கும் மீனவ மக்கள் தான்.

நீலப்புரட்சி என்ற பெயரில் இந்த கடல் தாயை நம்பி வாழும் பல மீனவ குடும்பங்களை கடற்கரையை விட்டு அப்புறப்படுத்திவிட்டு கார்பரேட் நிறுவனங்கள் அன்னிய நாடுகளின் கப்பல்கள் அத்துமீறி மீன்பிடித்துவிட்டு செல்ல இங்கு வந்து நம் கடல் வளத்தை கபளிகரம் செய்ய இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது அதன் ஒரு முன்னோட்டமாக தான் சீன கப்பல்கள் இங்கு வந்து மீன்களை வாரி செல்வதும் நடக்கின்றது.

தமிழரின் வரலாற்று பகுதியான இந்து மா கடலில் சிங்களவர்கள் தமிழர் படகுகளை கைப்பற்றுவதும் மீன் வலைகளை அறுப்பதும் தொடர்ந்து நடந்து வந்தது. இப்போதோ இந்திய கடலோர காவல்படையே அதை தமிழர்களுக்கு செய்கின்றது. முழு தமிழர் விரோத அரசாக இந்திய அரசு மாறி நிற்கின்றது.

நிலத்தை உழுது வேளாண்மை செய்யும் உழவுத் தொழிலையும் மீத்தேன் போன்ற திட்டங்களால் அழித்துவிட்டு பாசனத்தையும் காவிரி ஆற்றை மறித்து தடுத்துவிட்டு நடுவர்மன்றத்தை அமைக்காமல் தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்கிறது மத்திய அரசு.

மேலும் வேளாண்மையை மாநிலப் பட்டியலில் இருந்து மத்தியப் பட்டியலுக்கு மாற்றி கார்பரேட்களுக்கு வேளாண் துறையை தாரைவார்க்கும் அதிபயங்கர செயலை செய்திருக்கிறது, விதை சட்டம் போன்ற கொடுமையான சட்டங்களால் ஏழைகளிடம் இருந்து உழவு தொழிலை அழித்துவிடலாம் என செயல்படுகிறது.

கடல் வேளாண்மை என கருதப்படும் மீன்பிடி தொழிலையும் தமிழரிடம் இருந்து கைப்பற்றப்பார்க்கிறது. மத்திய அரசின் இந்த திட்டங்கள் அனைத்துமே தமிழ்நாடு அரசின் பொருளியல் இறையாண்மை மீது தொடுக்கப்பட்ட போர்.

இதனை கடிந்து கண்டித்து எதிர்த்து தடை செய்ய வேண்டிய தமிழ்நாடு அரசோ தமிழர் உரிமைகளை விற்று ஊழலில் இருந்து பதவியை காப்பாற்ற பார்க்கிறது.

தமிழரின் தற்சார்பு அவயங்களான வேளாண்மையும் மீன்பிடி தொழிலும் பெருமுதலாளிகளுக்கும் அந்நிய நாடுகளுக்கும் கார்பரேட்களுக்கும் செல்வதை ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது.

தமிழருக்கு என தமிழர் அரசு இருந்த காலத்தில், சோழர் ஆட்சி காலத்தில் இந்த தமிழக கடலோர கரைகளில் பல்லாயிரம் போர் கப்பல்கள் புலிக்கொடிகளுடன் நிறுத்தப்பட்டிறுந்தது. பாண்டியர் ஆட்சி காலத்தில் கப்பல்கள் கிழக்கே சாவகம் வரையிலும் மேற்கே ரோம் வரையிலும் நிறுத்தப்பட்டிருந்தது. சேரனின் கப்பல்கள் வில் அம்பு கொடிகளோடு மேற்கு கடற்கரையில் அரண் அமைத்து நின்றது. பிற்காலத்தில் ஓரிரு தசாப்த காலத்திற்கு முன்பு வரை நம் சமகாலத்தில் விடுதலை புலிகளின் கப்பற்படை இந்து மா கடலை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. நாம் எப்போதும் வல்லாதிக்கத்தை எதிர்க்கும் ஆளுமையுள்ள ஆண்மைமிக்க இனத்தின் மக்கள்.

வெல்லப்போவது மக்கள் விரோத அரசுகளின் நீலப்புரட்சியா?
தமிழர் முன்னெடுக்கும் மக்கள் புரட்சியா?

விடை தமிழர்களிடமே...

சமூக ஏற்றத் தாழ்வில்லாத பண்டைய தமிழர் வாழ்வு...


டெங்குக் காய்ச்சல் : தமிழகம் மீது தொடுக்கப்பட்ட உயிரியல் யுத்தமா?


டெங்கு – இந்த பெயர் 2012 வரை தமிழக மக்கள் பரவலாக உச்சரிக்காத ஒரு நோயின் பெயர். 2012க்கு பின் தமிழகத்தின் குக்கிராமத்தில் இருக்கும் பாமரர் வரை உச்சரிக்கும் பெயராக மாறியது எப்படி?

முன்னெப்போதும் இல்லாத அளவில் தமிழகத்தில் கொசுக்களின் பெருக்கம் அதிகமாகி விட்டதா?

தமிழக மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி திடீரென குறைந்து விட்டதா? அல்லது டெங்கு வைரஸ் புது வீறு கொண்டு எழுந்து விட்டதா? (அறிவியல்பூர்வமாக சொல்வதானால் mutation ஏற்பட்டுவிட்டதா? அதற்கான காரணி என்ன?).

இங்குதான் உயிரியல் ஆயுதப் போரினை (Biological warfare) பற்றியும், டெங்குவை உயிரியல் ஆயுதமாக (Bio weapon) பயன்படுத்தும் வாய்ப்புகள் குறித்தும் நம்பகப்பூர்வமான ஆதாரங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அணுகுண்டுகளையும், துப்பாக்கிகளையும் ஆயுதமாக பயன்படுத்தி போரிட்ட காலம் மலையேறி விட்டது. இன்று நாம் உயிரியல் ஆயுத போர்களின் காலகட்டத்தில் இருக்கிறோம். டெங்கு ஓர் உயிரியல் போர் ஆயுதம் என்பது பரபரப்புகாக யாரோ சொன்ன செய்தி அல்ல. Indian Defence Studies and Analysis என்ற இந்திய அரசின் பாதுகாப்பு துறை சார் தன்னாட்சி நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் கடற்படை அதிகாரியான கேப்டன் அஜய் லீலீ எழுதிய கட்டுரையின் சாராம்சம். அஜய் லீலீ, பாதுகாப்பு துறை ஆய்வில் சிறந்த பங்களிப்புக்கான கே.சுப்பிரமணியம் விருதை 2013-ஆம் ஆண்டு வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜய் லீலீ கட்டுரையின் உள்ளடக்கம்..

1981-ஆம் ஆண்டு க்யூபா நாட்டில் டெங்கு சுரம் தீவிரமாக பரவியது. அந்த ஆண்டு ஒரேநேரத்தில் 158 பேர் வரை டெங்குவினால் செத்து மடிந்தனர். அப்போது, அந்நாடு தனது பரம எதிரியான அமெரிக்காவை நோக்கி சுட்டுவிரலை நீட்டியது. அவ்வாறு சந்தேகப்படுவதற்கு காரணமும் இருந்தது. எப்போதும் இல்லாத வகையில் ஒரேநேரத்தில் 3 வெவ்வேறு இடங்களில் டெங்கு மையம் கொண்டிருந்தது. இந்த இடங்களில் உள்ள மக்கள் எவரும் அதுவரை டெங்கு பாதித்தவருடன் தொடர்பில் இல்லை. டெங்கு பாதித்த பகுதிகளுக்குச் சென்று வந்தவர் எவரும் இல்லை. சுயம்புவாக அந்த இடங்களில் எங்கிருந்து டெங்கு உருவாக முடியும் என்ற சந்தேகம் குற்றச்சாட்டிற்கு வலுசேர்த்தது.

மேலும், அமெரிக்காவும் டெங்கு வைரஸை உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தும் யுக்தியை Fort Deitrick, Maryland-இல் உள்ள தனது ஆய்வகத்தில் வைத்து ஆராய்ச்சி செய்துவந்தது. இந்த தகவலும் ஆதாரமாக முன் வைக்கப்பட்டது. அமெரிக்காவின் அந்த ஆராய்ச்சி 1972-ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டிருந்தது.

பனிப்போரின் உச்சகட்ட காலத்தில் அமெரிக்கா நடத்திய உயிரியல் ஆயுத தயாரிப்பு ஆய்வு முயற்சிகள் தொடர்பான 46 இரகசிய கோப்புக்கள் பின்னர் வெளியானது. அதில் இருந்த முக்கியமான ஆய்வு டெங்கு தொடர்பானது. தெற்கு பசிபிக்கில் உள்ள பேக்கர் தீவுகளில் Magic sword என்று பெயரிடப்பட்டு ஓர் ஆய்வு நடந்தது. அந்த ஆய்வில் டெங்கு வைரசை பரப்பும் ‘ஏடிஸ் எஜிப்தி’ வகை கொசுக்கள் பேக்கர் தீவில் பரப்பப்பட்டது.கொசுக்கள் பரவும் தன்மையும், வேறு இடங்களுக்கு அந்த கொசுக்களை எடுத்து பரப்பும் வாய்ப்புகள் குறித்தும் பரிசோதிக்கப்பட்டது.

இந்த ஆய்வுக்குப் பின், இதுபோன்ற ஒரு ஆய்வு 1975-ஆம் ஆண்டு இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனெபட் என்ற இடத்தில் மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டது. பசிபிக் தீவுகளில் நடந்த ஆய்வுக்கும் சோனெபட் ஆய்வுக்கும் பெருத்த வேறுபாடு இருந்தது. பசிபிக் தீவுகளில் மக்கள் தொகை குறைவான பகுதிகளில் நடந்த அதே ஆய்வு இந்தியாவில், தலைநகர் டெல்லிக்கு அருகாமையில் அமைந்த மக்கள்தொகை அடர்ந்த பகுதியில் மேற்கொள்ள முயற்சி நடந்தது. இந்தியாவின் உயர் மருத்துவ ஆய்வு நிறுவனமான ICMR-க்கு இது குறித்து தகவல் தெரிந்திருக்கவில்லை. கொசுக்கள் குறித்த ஆய்வு என்றுக் கூறி உலக சுகாதார நிறுவனம் மூலமாக அமெரிக்கா இந்த முயற்சியை எடுத்தாலும் டெங்கு நோயை பரப்பும் நோக்கம் முதன்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அப்போதைய இந்திய பிரதமர், இந்திரா காந்தியால் அந்த ஆய்வு தடுத்து நிறுத்தப்பட்டது.

2001-ஆம் ஆண்டு Hepatitis C என்னும் மஞ்சள் காமாலை நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வு செய்த பிரிட்டிஷ் உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் இருவர் Hepatitis C மற்றும் டெங்கு வைரஸை இணைத்து மரபணு மாற்றம் செய்து ‘Dengatitis’ உருவாக்கியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

டெங்கு உயிரியல் ஆயுதமாக பயன்படுத்துவதில் உள்ள சாதகமான அம்சங்கள்.

1.டெங்குவை கொசுக்களின் மூலமாக எளிதாக பரப்ப முடியும்.

2.டெங்கு எளிதாக பரவ கூடியது. எனவே ஒரு பரந்துபட்ட புவியியல் பகுதியை எளிதில் தாக்குதலுக்கு உட்படுத்தலாம்.

3.டெங்குவை பரப்பும் கொசுக்கள், பகலில் மக்கள் கொசுக்கடியில் இருந்து பாதுகாப்பதில் கவனக்குறைவாக உள்ள போது கடிக்கும் தன்மை கொண்டது.

4.டெங்கு புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நோய் இல்லை. அது காலம் காலமாக மக்களை தாக்கும் அரிதான நோய். அதை உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தும் போது எந்த சந்தேகத்திற்கும் இடம் இருக்காது. (புதிய நோய் கிருமிகள் தான் உயிரியல் ஆயுத கருவிகளாக பயன்படுத்தப்படும் என்ற தவறான கருதுகோள் உள்ளது).

கட்டுரை ஆதாரம்: https://idsa.in/idsastrategiccomments/DengueAGermwithWeaponPotential_ALele_191006

இந்திய பாதுகாப்பு துறை ஆய்வுகள் மட்டும் அல்ல பாகிஸ்தானும் டெங்கு உயிரியல் ஆயுதமாக தன் நாட்டின் மீது ஏவப்படுகிறது என்று பக்கம் பக்கமாக ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு வைக்கிறது.

ஆதாரம்: http://pakistancyberforce.blogspot.in/2011/09/dengue-virus-cias-biological-warfare.html

Ed Regis எழுதிய The Biology of Doom என்ற புத்தகமும் டெங்குவை உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தப்படும் சாத்தியக்கூறுகள், ஆதாரங்கள் பற்றி விரிவாக பேசுகிறது.

டெங்கு வைரஸை உயிரியல் ஆயுதமாக பயன்படுத்துவதால் மனித சக்தியை பாதிக்க முயற்சி எடுக்கப்படுகிறதா அல்லது டெங்குவை பரப்பி அதன் பின்னர் மருந்தை கண்டுபிடித்து சந்தைப்படுத்தும் பொருளாதார நோக்கம் உள்ளதா என்பது குறித்த தரவுகள் நம்மிடம் இல்லை. தமிழகத்தில் இப்போது பரவி வரும் டெங்குவும் உயிரியல் ஆயுத போரின் தொடர் விளைவு தானா என்பதும் ஆராயப்படவில்லை.

ஆனால் உலக பொருளாதாரத்தின் மையமான Wall street பங்கு சந்தையின் போக்கை தீர்மானிக்கும் மூன்று சக்திகள் ( Pharma, Oil, Banking) தங்கள் லாபத்திற்காக போரை தூண்டிவிட அஞ்சாதவை என்ற எச்சரிக்கையுடன் தான் மேலே சொன்ன தகவல்களை நாம் கடந்து செல்ல வேண்டும்.

தற்போது டெங்குவிற்கு வழங்கப்படும் பாரம்பரிய சித்த மருத்துவமான நிலவேம்பு குடிநீரை ஒடுக்க நடக்கும் முயற்சிகள், இதன் பின்னணியில் மருந்து கம்பெனிகளின் லாப அரசியல் இருக்குமோ என்ற சந்தேகங்களை வலுப்படுத்துகிறது.

நிலவேம்பு குடிநீரை குடிப்பதால் விந்து உற்பத்தி பாதிக்கப்படும், தமிழக மக்களை வாரிசுகள் இல்லாமல் செய்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டு அரசின் மீதும் சித்த மருத்துவர்கள் மீதும் சுமத்தப்படுகிறது.

அறிவியல் பூர்வமாக எலியின் மீது நடத்தப்பட்ட ஆய்வுகளை சுட்டிக்காட்டி சில நவீன மருத்துவர்கள் கேள்வியை எழுப்பியதால், இது எதிர்கட்சி தலைவர் முதல் அரசியலில் அடி வைக்க காலம் பார்த்துக் கொண்டிருக்கும் நடிகர் வரை முக்கிய பிரச்சனையாக முன்னிறுத்தப்படுகிறது.

மக்கள் தலைவர்களுக்கு மக்கள் மீதுள்ள அக்கறை பாரட்டிற்குரியது. அவர்கள் அறிவியல் ஞானம் உள்ள மருத்துவர்கள் அல்ல. ஆனால் இந்த குற்றச்சாட்டை முன்வைத்த மருத்துவர்கள் அறிவியல் ஞானம் உடையவர்கள். ஒரு குற்றச்சாட்டை சுமத்தும் முன், அறிவியல் பூர்வமாக சிந்தித்து தெளிய வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது. அவசர கோலத்தில் அவர்கள் அள்ளித் தெளித்த சேறு அவர்களின் பாரம்பரிய மருத்துவ வெறுப்புணர்வை மட்டும் பறைசாற்றுகிறது.

ஆங்கிலத்தில் சொன்னால் அறிவு என்று நம்பும் சில ஊடகங்களும், சித்த மருத்துவர்களிடம் எந்த கருத்தையும் கேட்காமல் நிலவேம்பு குடிநீருக்கு எதிரான தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளது.

உண்மை தான் என்ன?

நிலவேம்பு இலைக்கு விந்தணு உற்பத்தியை தடுக்கும் குணம் உண்டு என்று எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வு முடிவு உண்மை தான்.

ஆனால் அந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கரைப்பானாகிய Propylene glycol அதன் இயல்பிலேயே விந்தணுக்களை அழிக்க கூடிய தன்மை வாய்ந்தது. எனவே இந்த ஆய்வே தவறானது என்று அமெரிக்க வாழ் இந்திய விஞ்ஞானி, Dr. ராமசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

1997-ஆம் ஆண்டு Journal of Ethnopharmacology-இல் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் நிலவேம்பை எலிகளுக்கு 60 நாட்கள் கொடுத்து பார்த்து ஆய்வு செய்ததில் அவைகளின் விந்து பைகளில் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆதாரம்: http://www.sciencedirect.com/science/article/pii/S0378874197000998

மேலும், நிலவேம்பு குடிநீர் என்பது நிலவேம்பு என்ற ஒற்றை மூலிகை உடைய மருந்து அல்ல. இது இந்த பரப்புரையை செய்யும் எத்தனை பேருக்கு தெரியும்? நிலவேம்பு குடிநீர் என்பது நிலவேம்பு, சுக்கு, மிளகு, வெட்டிவேர், விலாமிச்சு வேர், பேய்ப்புடல், பற்படாகம், கோரைக்கிழங்கு, சந்தனம் என்ற 9 மூலிகைகளை சம அளவில் உள்ளடக்கிய கலவை மருந்து. அதில் நிலவேம்பு என்பது 9-இல் ஒரு பங்காக கலக்கப்படும் ஒரு மூலிகை சரக்கு.

இதில் நிலவேம்பு தவிர மற்ற மூலிகைகள் விந்து உற்பத்தியில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம்.

சுக்கு(Zingiber officinale):

https://www.ajol.info/index.php/ajbr/article/view/50750/39442

மேற்குறிப்பிட்ட ஆய்வை கிளிக் செய்து படித்து பார்க்கவும். எலிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இது.

Zingiber officinale aqueous extract treatment causes significant increase in weight of testis and epididymis.There were dose and duration dependent increase in sperm quality and motility.There was also significant increase in serum testosterone level. Malonhydialdehyde levels were significantly reduced.Our results indicated that Zingiber officinale posses pro-fertility properties in male rats.

அதாவது இந்த மூலிகையை எலிகளுக்கு கொடுத்து பார்த்ததில் விந்து உற்பத்தி செல்களை உள்ளடக்கிய testis , epididymis எடையை அதிகரிக்கிறது. ஆண் பாலின ஹார்மோனான டெஸ்டோஸிடரோன் அளவை அதிகப்படுத்துகிறது. மொத்தத்தில் இந்த மூலிகை மலட்டுதன்மையை அகற்றும் குணங்கள் நிறைந்தது.

https://www.ajol.info/index.php/ajbr/article/view/95189

மேற்குறிப்பிட்ட ஆய்வை கிளிக் செய்து படித்து பார்க்கவும்.

Sodium arsenite மற்றும் Zingiber officinale சேர்த்து எலிகளுக்கு கொடுத்து பரிசோதிக்கப்பட்ட போது, ஆர்ஸ்னைட்டால் எலிகளின் விந்துப்பைகளின் ஏற்பட்ட பாதிப்புகளை திருத்தி அமைக்கும் பண்பு இம்மூலிகைக்கு இருந்தது கண்டறியப்பட்டது என்பதே இந்த ஆய்வறிக்கையின் உள்ளடக்கம்.

கோரைக்கிழங்கு ( Cyperus rotundus):

http://www.ijppsjournal.com/Vol4Issue1/3066.pdf

Cisplastin என்ற மருந்தின் மூலம் விந்தகத்தில் பாதிப்பை உண்டாக்கப்பட்ட எலிகளில், கோரைக்கிழங்கின் aqueous extract கொடுத்து பரிசோதிக்கப்பட்டது. கோரைக்கிழங்கு விந்தகத்தில் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்து விந்து உற்பத்தியை அதிகப்படுத்தும் செய்கையை உண்டாக்கியது நிரூபிக்கப்பட்டது.

பேய்ப்புடல் (Tricosanthes cucumerina):

http://www.webmedcentral.com/article_view/3498

one would observe reduction in the testes weights (shrinkage) because, no spermatogenic activity occurred, as the spermatogenic cells have been inhibited from their actions, but with the extract administration, the initial spermatogenic state of the testes were approached.

அதாவது, ஹார்மோன் கொடுத்து எலிகளின் விந்தகங்களில் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டது. இம்மூலிகையை கொடுத்து பரிசோதித்த போது, விந்து உற்பத்தி முன்பிருந்த நல்ல நிலைக்கு திரும்பியது கண்டறியப்பட்டது.

நிலவேம்பு குடிநீரில் உள்ளது 9 மூலிகைகள். இதில் மேலே சொன்ன 3 மூலிகைகள் எலிகளில் ஏற்படும் பாதிப்பை சரி செய்யும் ஆற்றல் உள்ளது.

நிலவேம்பு விந்தகங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஏற்றுக் கொண்டாலும், அதை திருத்தி அமைக்கும் பண்பு நிலவேம்பு குடிநீரில் சேர்க்கப்படும் மற்ற மூலிகைகளுக்கு உள்ளது.

நிலவேம்பு மட்டும் டெங்கு கிருமியை எதிர்க்கும் ஆற்றல் இருந்தாலும், இன்ன பிற மூலிகைகளும் சம அளவில் சேர்க்க வேண்டிய அவசியம் சித்தர்களுக்கு ஏன் வந்தது என்பது இப்போது புரிந்திருக்கும். நுனிப்புல் மேய்ந்து விட்டு வதந்தி பரப்பும் அரைகுறை அறிவாளிகள் சித்தர் அறிவியலின் சத்ரு, மித்ரு சரக்குகளின் அறிவியல் கோட்பாட்டை தேடி படிக்க வேண்டும். ஒரு மூலிகை சரக்கின் கெட்ட குணங்கள், அதற்கு எதிரிடை பண்புடைய மற்ற மூலிகையால் திருத்தி அமைக்கப்படும் கோட்பாடு இது.

இங்கு சித்த மருத்துவத்தை அறிவியல் என்று எப்படி அழைக்கலாம் என்று சிலருக்கு கேள்வி எழும். பாரம்பரிய மருத்துவமே மூட நம்பிக்கை என்ற கற்பிதம் தவறானது. பாரம்பரிய மருத்துவம் மக்களின் அன்றாட வாழ்வியலுடன் புழங்கி வந்தது. அதில் மூட நம்பிக்கை ஒரு சிறிய சரடு மட்டுமே. சித்த மருத்துவம், தத்துவங்களை அடிப்படையானது. அறிவியல் காலத்திற்கு காலம் கருவிகளின் முன்னேற்றத்திற்கு ஏற்ப வளரக் கூடியது. இதில் தத்துவ அடிப்படையிலான அறிவியல் என்பது ஒரு பரிமாணம்.

உயிரினங்கள் அனைத்திற்கும் தனது உடலுக்கு நேரும் நோயை மாற்றி அமைக்கும் மருத்துவ அறிவு உள்ளது. இதில் ஆறு அறிவுடைய மனிதன் தனது அனுபவத்தில் சேமித்த மருத்துவ அறிவு ஒப்பீட்டளவில் அதிகமானது. அதனுடன் தத்துவங்களும் உள்ளீடும்போது அது பாரம்பரிய மருத்துவ அறிவியலாக பரிணமிக்கிறது.

மெக்ஸிகோ பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் (ஆதாரம்: Biology letters அறிவியல் ஏடு, December 2012), குறிப்பிட்ட ஒரு வகை பறவைகள் சிகரெட் துண்டுகளை தனது கூண்டில் சேகரித்து வைத்தது குறித்து ஆராயப்பட்டது. சிகரெட் துண்டுகள் சேகரிக்கப்படாத கூண்டில் முட்டைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டது.  முட்டைகளுக்கு ஏற்படும் தொற்று நோயை தடுக்கும் ஆற்றல் அந்த சிகரெட் துண்டுகளுக்கு இருந்தது கண்டறியப்பட்டது. இது மந்திரம் அல்ல, பறவைகளின் சூழலுக்கேற்ற தகவமைப்பு. மனிதனின் தகவமைப்பு முயற்சிகளுடன், தத்துவ அறிவும் சேர்ந்து உருவானது தான் பாரம்பரிய மருத்துவ அறிவியல்.

இந்த பாரம்பரிய அறிவியலை, நவீன ஆய்வுகளுக்கு உட்படுத்தி முன்னேற்ற வேண்டும். ஆனால் அதுவரை அதன் பயன்பாட்டை நிறுத்த சொல்வது ஏற்புடையதா? நிலவேம்பு குடிநீர், Phase 3 clinical trial முடித்து தான் பயன்படுத்த வேண்டும் என்று கூறும்முன், இன்று அலோபதி மருத்துவமாக சந்தையில் உலாவும் பல மருந்துகள் முறைப்படி அனைத்து ஆராய்ச்சிகளும் முடித்து தான் வெளிவந்ததா என்பதை கவனிக்க வேண்டும்!

தமிழகத்தில் டெங்கு தீவிரமாக பரவிய அதே 2012 மே மாதம், இந்திய பாரளுமன்ற நிலைக்குழு CDSCO (Central Dug Standard Control Organisation) என்ற அமைப்பில் ஒரு ஆய்வை மேற்கொண்டது. CDSCO மருத்துவத் துறை ஆராய்ச்சி மற்றும் மருத்துவ சந்தையை கட்டுப்படுத்தும் ஓர் அமைப்பாகும். இந்த ஆய்வில் பல முறைகேடுகள் வெளியானது.

மருத்துவத்துறை ஆராய்ச்சியை கட்டுப்படுத்தும் இந்திய அரசின் விதிமுறைகள் அடங்கிய Drugs and Cosmetics act-ல் ஒரு சிறப்பு பிரிவு உள்ளது. பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல், சார்ஸ் போன்ற நோய்கள் தாக்கும் போது அதற்கான மருந்துகள் கண்டறியப்படாமல் இருந்தால் phase 3 clinical trial  முடிக்கப்படாமல் ஒரு மருந்தை பயன்படுத்த அங்கீகரிக்கலாம் என்று அது குறிப்பிடுகிறது. (Phase 3 clinical trial என்பது மருத்துவ ஆராய்ச்சியின் 4 நிலைகளில் ஒன்று.) பாராளுமன்ற நிலைக்குழு மேற்கொண்ட ஆய்வில் இந்த சிறப்பு பிரிவை காரணம் காட்டி பல முறைகேடுகள் நடைபெற்றது கண்டறியப்பட்டது. இப்பிரிவின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட 33 மருந்துகளில் ஒன்று கூட தகுதியான அவசரநிலை காரணங்களுக்காக தான் ஆராய்ச்சி முடிக்காமல் அனுமதிக்கப்பட்டது என்பதை நிரூபிக்க முடியவில்லை.

Letrozole என்ற மருந்தை Novartis என்ற பிரபல மருந்துக் கம்பெனி பெண்களின் மலட்டுத்தன்மையை நீக்குவதாகக் கூறி அறிமுகப்படுத்தியது. இம்மருந்து PHASE 3 மற்றும் PHASE 2 Clinical trial முறையாக முடிக்காமல் பல மோசடிகளை கையாண்டது பாராளுமன்ற நிலைக்குழு ஆய்வில் தெரியவந்தது.

Sertindole என்ற மருந்தை ஆராய்ச்சிக்கு உட்படுத்தாமல் அங்கீகரிக்கலாம் என்று மூன்று மனநல மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் Phase 3 clinical trial செய்யாமல் சந்தையில் அனுமதிக்கப்பட்டது. சென்னை, அஹமதாபாத் மற்றும் மும்பையிலிருந்து பரிந்துரை அனுப்பியிருந்த இந்த மூன்று மருத்துவர்களின் பரிந்துரையும் ஒரே மொழி நடையில் வரி மாறாமல் இருந்தது மட்டுமல்ல, அவர்கள் அனுப்பிய மூன்று கடிதங்களிலும் DCGI அலுவலக முகவரியும் ஒன்று போல் தவறாக எழுதப்பட்டிருந்தது. மருந்து கம்பெனிகளே மருத்துவரின் பெயரில் பரிந்துரையை அனுப்பியது என்பதை கண்டறிய பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு இதைவிட அதிக ஆதாரங்கள் தேவைப்படவில்லை.

இன்றும் பரவலாக உபயோகிக்கப்பட்டு வரும் மருந்து Nimesulide. இதை குழந்தைகளுக்கான மருந்தாகவும்  பல மருந்து நிறுவனங்கள் தயாரித்து வருகிறது. Nimesulide மற்ற நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்து. மேலும், குழந்தைகளுக்கு இதை உபயோகித்து பார்த்து எந்த Clinical trial-லும் இந்தியாவில் மேற்கொள்ளப்படவில்லை.

இப்படி முறையான ஆராய்ச்சி இல்லாமல் சந்தையில் புழங்கி வரும் மருந்துகளைப் பற்றி ஒரு பெரிய புத்தகமே எழுதலாம். இம்மருந்துகளை எல்லாம் மருத்துவர்கள் இன்றும் பரிந்துரைத்து கொண்டு தான் உள்ளனர். ஆனால் மக்கள் பலநூறு ஆண்டுகள் உபயோகித்து வரும் நிலவேம்பு குடிநீர் பற்றி மட்டும் பீதி கிளப்புவதன் பின்னணியில் உள்ள அரசியலை ஆராய வேண்டும்.

பாரம்பரிய மருத்துவத்திற்கு புனிதத்தன்மையைக் கெடுத்து, நிலவேம்பு குடிநீரை ஆராய்ச்சி செய்வது பாவத்திற்குரிய செயல் என்பது பொருளல்ல. ஏற்கனவே பல்லாயிரம் வருடங்களாக உபயோகித்து பாதுகாப்பானதாக அனுபவப்பூர்வமாக உணரப்பட்ட ஒரு மருந்தை, அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, ஆரம்பக்கட்ட ஆராய்ச்சிகள் முடித்து ஓர் அவசர நிலையில் உபயோகிக்கும் போது எதிர்ப்பது ஏன்?

பார்மா கம்பெனிகளுக்காக வளைத்து ஒடிக்கப்பட்ட சட்டங்களை கண்டுக் கொள்ளாத நவீன மருத்துவ சமூகம், சட்ட திட்டங்களை கடைபிடித்து முறையாக வழங்கப்படும் ஒரு மருந்தை எதிர்ப்பது அநீதி.

நிலவேம்பு குடிநீரை பற்றிய வதந்திகளையும், பொய் பரப்புரைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு மக்கள் நலனுக்காக அறிவியல் ஆராய்ச்சியில் கவனம் செலுத்தி தயாரிப்பு முறைகளிலும்,  வடிவத்திலும் தேவைக்கேற்ப மாற்றங்கள் கொண்டு வருவது சித்த மருத்துவர்களின் கடமை. இங்கு ஆர்டிமைசின் என்ற மருந்தை சீன பாரம்பரிய மருத்துவத்தை ஆய்வு செய்து கண்டுபிடித்த Tu youyou என்ற நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சியாளரை முன்னுதாரணமாக எடுத்து கொள்ளலாம்.

நிலவேம்பு குடிநீரும், ஆர்டிமைசின் போல் பல கட்ட ஆய்வுகளைக் கடந்துவர ஏற்புடைய அரசியல் சூழல் இருப்பது அவசியம். ஆர்டிமைசின் என்பது 30 வருட ஆராய்ச்சியின் இறுதி விளைவு. ஆராய்ச்சி நடந்த 30 வருடங்களும், “மருந்தின் மீது ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது, அதுவரை மக்கள் அந்த மூலிகையை பயன்படுத்த வேண்டாம்” என்று ஆணை பிறப்பிக்கவில்லை.

நிலவேம்பு குடிநீரை நிறுத்தச் சொல்லி இங்குள்ள அரசு ஆணை பிறப்பிக்கவில்லை. ஆனால் அதற்கு எதிராக போரிடுபவர்களின் வாதம் சூழலை மாற்றக் கோருகிறது. இவர்களே அரசின் மருத்துவக் கொள்கையை வகுக்கும் நிர்வாகிகளாக இருப்பதால், சூழலும் விரைவில் இவர்கள் எண்ணப்படியே மாறிவிடும்.

ஆர்டிமைசின் கண்டுபிடிக்க சீனாவின் பொது சுகாதாரத்துறையில் கடைபிடிக்கப்படும் ஒருங்கிணைந்த மருத்து சிகிச்சைக் கொள்கை ஒரு களமாக இருந்தது. நிலவேம்பு குடிநீருக்கும் அப்படி ஒரு களம் தேவை.

நம் நாட்டு சுகாதாரத் துறை, WHO வழிகாட்டுதல்களை வேத வாக்காக கருதி கொள்கைகளையும் சிகிச்சை முறையையும் வகுக்கிறது. WHO வழிகாட்டுதல்கள் பாரம்பரிய சிகிச்சை முறைகளை உள்ளடக்கியது அல்ல. இதை காரணம் காட்டியே பாரம்பரிய மருத்துவம் WHO வழிகாட்டுதலுக்கு குறுக்கே நிற்பதாகவும், அதனாலேயே நம் நாடு பொது சுகாதாரத்தில் முன்னேறவில்லை என்றும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ஆனால் பொது சுகாதாரத்தில் முன்னேறிய பல நாடுகள் (வளரும் நாடுகள் உட்பட) WHO வழிகாட்டுதல்களை தன் நாட்டு சூழலுக்கு ஏற்ப நிராகரித்தோ, ஒப்புகொண்டோ, தகவமைத்தோ பயன்படுத்தி வருகின்றன என்பதை கவனிக்க வேண்டும்.

வேலூர் கிறிஸ்த்துவ மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர், Dr.K.S.Jacob ஒரு கட்டுரையில் மிகச்சரியாக இவ்வாறு குறிப்பிட்டார்- “Indian problems requires Indian solutions. While International advice from WHO should be considered seriously, we need to make our decisions to Indian context.”

அதாவது, “நாம் உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளை மிக கவனமாக கேட்டு கொண்டாலும், நம் இந்திய சூழலுக்கு ஏற்ப முடிவு எடுக்க வேண்டும். இந்தியாவின் பிரச்சனைகளுக்கு இந்திய தீர்வுகள் தான் தேவை.”

இந்திய தீர்வுகள் பாரம்பரிய மருத்துவ முறைகளில் வேர் கொண்டுள்ளது.

பாரம்பரிய மருத்துவத்தை புறம்தள்ளி விட்டு நாம் சுகாதாரத்துறையில் தன்னிறைவு அடைய முடியாது...

தமிழர்களை அழிக்க பரப்பப்பட்டதா டெங்கு.. சிந்தியுங்கள் தமிழர்களே...