26/08/2017

பாஜக மோடியும் உளவியல் தாக்குதலும்...


நம்ப முடியாத இலுமினாட்டி உண்மைகள்...


இந்தியாவில் இலுமினாட்டி கள்.. என்ன செய்தார்கள்.. என்ன செய்கிறார்கள்.. என்ன செய்ய போகிறார்கள்.. என்பதை விளக்கும் படம் தான் விவேகம்...


பாஜக மோடிஜியின் மாஸ்டர் ஸ்ட்ரோக் ராஜதந்திரம் தினந்தோறும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை எந்ந ஊடகங்களும் மக்களும் பேசமால் திசைதிருப்ப செய்தது...


நீட் தேர்வுக்குப் பின் உள்ள சர்வதேச அரசியல், தெளிவாக விளக்கும் டெல்லி பேராசிரியர்...


இது ஏறத்தாழ ஆறு தசாப்தங்களுக்கு முன் நடந்த சம்பவம்.  ஒல்லியான தேகம்கொண்ட அந்த இளைஞர் பிரபலமான ஒரு கல்லூரியில் சேர்வதற்கான நேர்காணலுக்குச் செல்கிறார். நேர்காணல் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அவருக்கு அந்தக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதற்குக் கூறப்பட்ட காரணம், “நீங்கள் இந்திவழியில் கற்றவர்” என்பதுதான். அந்த இளைஞர் பதற்றப்படாமல் சொல்கிறார், “ஓ, அப்படியா... சரி நீங்கள் எனக்கு வாய்ப்பு மறுக்கும் காரணத்தை ஒரு துண்டுச் சீட்டில் எழுதித் தாருங்கள். அந்தச் சீட்டை எடுத்துக்கொண்டு நான் ராஷ்டிரபதி பவனுக்குச் செல்கிறேன். நான் இந்தியில் படித்ததால் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்று கூறுகிறேன். பன்மைத்துவமான ஒரு தேசத்தில், ஒருவனுக்குத் தன் தாய்மொழியில் படிக்க உரிமையில்லையா...? என்று ஜனாதிபதியிடம் கேட்கிறேன்.” என்கிறார். தேர்வுக் குழு வாயடைத்துப் போகிறது. அவரது கேள்வியில் உள்ள நியாயம் புரிந்து இப்போது அந்த மாணவனைக் கல்லூரியில் சேர்த்துக்கொள்கிறது. அந்த மாணவர் இந்தியாவின் முக்கியமான கல்வி செயற்பாட்டாளரான பேராசிரியர் அனில் சடகோபால்.

தற்போது அனில் சடகோபால் இந்தியா முழுவதும் பயணித்து நீட் தேர்வுக்கு எதிராகத் தீவிரமாக பிரசாரம் செய்துவருகிறார். சென்னைக்கு இன்று (22-05-17) நீட் தேர்வு சம்பந்தமாக பொதுப்பள்ளிக்கான மாநில மேடை ஒருங்கிணைத்த ஒரு கூட்டத்துக்கு வந்தவரிடம் பேசினோம்.

''ஒரு கல்வியாளராக இருந்துகொண்டு ஏன் நீட் தேர்வை எதிர்க்கிறீர்கள்... நம் கல்வித் துறை மேம்பட வேண்டும் என்று உங்களுக்கு விருப்பம் இல்லையா...?''

''நான் கல்வியாளர், பேராசிரியர் என்பதனால்தான் நீட் தேர்வை எதிர்க்கிறேன். நீட் தேர்வினால் கல்வித் தரம் மேம்படும் என்பது மக்களை ஏமாற்றும் வேலை. சொல்லப்போனால், நீட் தேர்வு இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது.''

''எப்படிச் சொல்கிறீர்கள்...?''

''அரசியலமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பத்தியும் சமூகநீதியையும், சமத்துவத்தையும் பரிந்துரைக்கிறது. ஆனால், இந்த நீட் தேர்வு, அதற்கு நேரெதிராக இருக்கிறது. இந்தியா என்பது ஒற்றைத் தேசம் கிடையாது. அது, பல்வேறு தேசிய இனங்கள் வாழும் மாநிலங்களின் தொகுப்பு. பல்வேறு தேசிய இனங்களின் மாணவர்களின் திறனை ஆராய ஒற்றைத் தேர்வு என்பது சுத்த அயோக்கியத்தனம். எப்படி எதுவும் இதுவரை சேராமல் இருக்கும் வட கிழக்கு மாணவனும், எல்லா செளகர்யங்களையும் பெற்ற டெல்லி மாணவனும் போட்டி போடுவான். இருவருக்கும் ஒரே தேர்வு என்பது மக்களை மடையர்கள் ஆக்கும் வேலை இல்லையா? அது மட்டுமல்ல, புதிய கல்விக் கொள்கையை மக்கள் மன்றத்தில் வைக்காமல், அதில் உள்ள ஷரத்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றும் வேலையைத்தான் இந்திய அரசாங்கங்கள் செய்துவருகின்றன. அதில் ஒரு பகுதிதான் இந்த நீட் தேர்வு.''

''சரி... அப்படியானால் இன்னும் அதே பழைய கல்விக் கொள்கையைத்தான் தொங்கிக்கொண்டு இருக்க வேண்டுமா... காலத்துக்கு ஏற்றாற்போல் புதிய கல்விக் கொள்கை வேண்டாமா...?''

''கண்டிப்பாக மாற வேண்டும். நிறுவனங்களின் நலனுக்கானதாக இல்லாமல், நம் மாணவர்களின் நலனுக்கானதாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது நம் கல்விக் கொள்கையைப் பெரும் நிறுவனங்கள் வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன. அதன் பிரதிநிதிகளாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக அமைப்பு ஆகியவை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன. மாணவர்களின் நலன் முதன்மை பெறாமல், முதலாளிகளின் நலன்தான் இந்தக் கல்விக் கொள்கையில் முதன்மையானதாக இருக்கிறது. உலக மூலதனம் இந்தியக் கல்வித் துறையின் மீது ஒரு யுத்தத்தைத் தொடுத்திருக்கிறது. அந்த மூலதனம் தேசத்துக்கு, மக்களுக்கு, இயற்கை வளங்களுக்கு என யாருக்கும் விசுவாசமாக இருக்காது. அது லாபத்துக்கு மட்டும்தான் விசுவாசமாக இருக்கும், அந்த மூலதனத்தின் பிள்ளைதான் ‘நீட்' தேர்வு.''

''புரியவில்லை. நீட் தேர்வுக்கும் உலக வர்த்தக அமைப்புக்கும், உலக மூலதனத்துக்கும் என்ன சம்பந்தம்...?''

''உலக வர்த்தக அமைப்புக்குச் சில வாக்குறுதிகளை இந்திய அரசு அளித்துள்ளது. அதில், ஒன்று இந்தியச் சுகாதாரத் துறையை முழுவதும் தனியார்மயமாக்குவது. அதில் தங்குத்தடை இல்லாமல், அந்நிய நிதியை அனுமதிப்பது. இது நிறைவேற வேண்டுமானால், இந்தியப் பொது சுகாதாரத் துறையைச் சிதைக்க வேண்டும். அதைச் சிதைக்கத்தான் இந்த நீட் தேர்வு.''

''இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா...?''

இப்போதுள்ள மருத்துவக் கல்வி முறையில் மாணவர்கள் சில காலம் கிராமத்தில் பணியாற்ற வேண்டும். அதற்கான ஒதுக்கீடு இருக்கிறது. ஆனால், நீட் தேர்வில் அதற்கான வாய்ப்பே இல்லை. இதனால், கிராம மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அழியும். அந்த இடத்தில் தனியார் மருத்துவமனைகள் வரும். நீங்கள் நீட் தேர்வைத் தட்டையாகப் புரிந்துகொள்ளாமல் இந்தப் பின்னணியில்தான் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நீட் தேர்வைச் சர்வதேச அரசியல் அல்லாமல் சமூகநீதி கண்ணோட்டத்தில் பார்த்தீர்கள் என்றால், வாய்ப்பு மறுக்கப்பட்ட பின்தங்கிய சமூக மக்களை, மருத்துவத் துறையில் உள்ளே வரவிடாமல் பார்த்துக்கொள்ளும் அரசியல் தெரியும்.''

''தகுதியானவர்கள்தானே மருத்துவத் துறையில் வரவேண்டும்?''

அனில் சடகோபால்''தகுதி எதைவைத்து நிர்ணயிக்கப்படுகிறது? தாழ்த்தப்பட்ட, பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த ஒரு மாணவன் கடினப்பட்டு படித்து, நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பு வாய்ப்புக்காகக் காத்திருக்கும்போது, அவன் மீது நீட் தேர்வைத் திணிக்கிறீர்கள். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அவனால், நீட் தேர்வுக்கானச் சிறப்பு வகுப்பில் பணம் கொடுத்து சேர முடியுமா...? ஆனால், பணம் கொடுத்து சிறப்பு வகுப்புகள் சேர முடிந்த ஒரு மாணவனையும், பணம் கொடுத்து சேர முடியாத ஒரு பழங்குடி மாணவனையும் 'ஒன்றாக ரேசில் ஓடுங்கள்' என்கிறீர்கள். கொஞ்சம் மூளையிலிருந்து யோசிக்காமல், மனதிலிருந்து யோசியுங்கள். உங்கள் மாநிலத்திலேய அனைத்து மாவட்டங்களுக்கும், அனைத்து வசதிகளும் கிடைத்துவிட்டதா? நான் இங்கு பேசிக் கொண்டிருக்கும்போது... 'விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்கள் எல்லாம் பின்தங்கி இருக்கின்றன' என்றனர். அப்படியானால், அந்த மாவட்டங்களில் உள்ள பிள்ளைகள் எப்படிச் சென்னை மாவட்டப் பிள்ளைகளுடன் போட்டிபோட முடியும்...? ஒரு மாநிலத்திலேயே இவ்வளவு சிக்கல் இருக்கும்போது, பல்வேறு தேசிய இனங்கள், மதங்கள், சாதிகள், பாகுபாடுகள் உள்ள ஒரு தேசத்துக்கு ஒற்றைத் தேர்வு சரி வருமா....?''  

''சரி, இதற்கு என்னதான் தீர்வு...?''

 "கூட்டாட்சி தத்துவத்தை மதிப்பதுதான் தீர்வு. தமிழகம்தான் எங்களுக்கு நீட் தேர்வு வேண்டாமென்று சட்டம் இயற்றிவிட்டது . கூட்டாட்சி தத்துவத்தின்படி, அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

கல்வியை வணிகமாகப் பார்க்காமல் இலவசமாக்க வேண்டும். அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். முதலாளித்துவ தேசமான ஜெர்மனியும் சரி... கம்யூனிச தேசமான கியூபாவும் சரி... கல்வியை வணிகமாகப் பார்க்கவில்லை. ஆனால், இவ்வளவு பாகுபாடு உள்ள ஒரு தேசம் கல்வியை வணிகமாகப் பார்க்கிறது; அதிலிருந்து வருபவர்களை ஒற்றைத் தேர்வில் எடைபோடுவோம் என்கிறது.''

''ஆனால், தமிழகம் மட்டும்தானே நீட் தேர்வைத் தீவிரமாக எதிர்க்கிறது?''

ஆம். அதற்கு நீங்கள் பெருமைகொள்ள வேண்டும். இது, அயோத்திதாச பண்டிதர், பெரியார் உங்களுக்கு ஏற்படுத்திய ஞானம். மற்ற மாநிலங்களைவிட உங்களுக்குத்தான் எது சமூக நீதி என்று தெளிவாகத் தெரிந்திருக்கிறது. அதனால்தான், அதற்கு ஏதேனும் சிறு உராய்வு ஏற்படும்போது நீங்கள் கிளர்ந்தெழுகிறீர்கள்... போராடுகிறீர்கள். உண்மையில், தமிழ் மக்கள் நடத்தும் போராட்டங்கள் இந்தியாவின் பிற இனமக்களுக்கானதும்தான். மற்ற மாநிலங்கள் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் இருக்கும்போது நீங்கள் வெற்றிகரமாக ஒரு போராட்டத்தை நடத்தி ஜல்லிக்கட்டை நடத்திவிட்டீர்கள். இப்போது நீங்கள் நடத்தவேண்டியது நீட் தேர்வுக்கு எதிரான ஜல்லிக்கட்டு...

கல்வித்துறை செயலர் உதயச்சந்திரனின் அதிகாரத்தை குறைத்து அவமதிப்பதா ? - பாமக. மரு.ராமதாஸ் அறிக்கை...


பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரனின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் அவருக்கு மேல் பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டிருக்கிறார். கல்வித் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொண்டதற்கான பரிசாகவே இதை பார்க்க வேண்டியிருக்கிறது.

பள்ளிக்கல்வித்துறை செயலாளராக உதயச்சந்திரன் நியமிக்கப்பட்ட நாளில் இருந்தே அத்துறையில் ஏராளமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு வந்தார். பொதுத்தேர்வுகளில் தர வரிசை ரத்து, புதிய பாடத்திட்டத்தை தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைத்து தரப்பினரிடமும்  பெறும் வரவேற்பை பெற்றன. அதையெல்லாம் விட ஊழலின் உறைவிடமாக திகழ்ந்த பள்ளிக் கல்வித் துறையில் உதயச்சந்திரன் மேற்கொண்ட நடவடிக்கைகளால் ஊழல் செய்ய முடியாத நிலை உருவானதை அடுத்து, அவரை இடமாற்றம் செய்யும் முயற்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும், பினாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் ஈடுபட்டனர். இம்மாதத் தொடக்கத்திலேயே அவரை இடமாற்றம் செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்படவிருந்த நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நான் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அந்த முடிவை அரசு தற்காலிகமாக கைவிட்டிருந்தது.

உதயச்சந்திரனின் இடமாற்றம் குறித்த சர்ச்சை இப்போது ஓரளவு அடங்கியுள்ள நிலையில், அவரை அதிகாரமற்ற செயலாளராக மாற்றியுள்ளனர். பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவ் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார். புதியப் பாடத்திட்டத்தை வகுக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவரை இடமாற்றம் செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டதன் காரணமாக அவரை முழுமையாக இடமாற்றம் செய்யாமல், பாடத்திட்டப் பிரிவை மட்டும் கவனித்துக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது உதயச்சந்திரனை இடமாற்றம் செய்வதை விட மிக மோசமான தண்டனையும், அவமதிப்பும் ஆகும். இது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் அனைத்து வகுப்புகளுக்குமான பாடத்திட்டத்தை மாற்றியமைப்பது மிகப்பெரிய பணி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், பாடத்திட்டத்தை மாற்றியமைப்பதற்கான உத்தரவைப் பிறப்பிப்பதைத் தவிர அதில் பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு எந்தப் பணியும் இல்லை. பாடத்திட்ட பணியையாவது உதயச்சந்திரன் முழுமையாக மேற்கொள்ள அதிகாரம் உள்ளதா? என்றால் அதுவும் கிடையாது. அவர் முழுக்க முழுக்க பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவின் கட்டுப்பாட்டில் தான் செயல்பட வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருக்கிறது. சுருக்கமாக சொன்னால், உதயச்சந்திரனை வேறு துறைக்கு அனுப்பி அங்கு அவர் சீர்திருத்தங்களைச் செய்து விடக்கூடாது என்பதற்காகவே அவரை கல்வித்துறையில் அதிகாரமற்ற செயலாளராக அரசு சிறை வைத்திருக்கிறது.

பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரதீப் யாதவ் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் அதிகாரி அல்ல. அவர் மீது பல்வேறு குற்றச்சாற்றுகள் உள்ளன. பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் விருப்பப்படி  செயல்படுவதற்காகவே  இப்படி ஒரு அதிகாரியை தமிழக அரசு நியமித்திருக்கிறது. இத்தகைய நியமனத்தால்  பள்ளிக் கல்வித்துறையின் செயலாளராக சபீதா இருந்த போது ஏற்பட்ட சீரழிவை விட இன்னும் மோசமான சீரழிவுகளை அத்துறை சந்திக்கும்.

பள்ளிக்கல்வித்துறையில் நடைபெறும் ஊழல்கள் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி அடுக்கடுக்கான குற்றச்சாற்றுகளை முன்வைத்த போது அதுகுறித்து விவாதிக்கத் தயாரா? என்று அத்துறை அமைச்சர் செங்கோட்டையன் சவால் விடுத்தார். அதை ஏற்ற பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், பள்ளிக்கல்வித்துரை ஊழல்கள் மட்டுமின்றி, அத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும் விவாதிக்கத் தயார் என்று அறிவித்தார். அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக்கொண்டவாறு விவாதத்திற்கு ஏற்பாடு செய்து காத்திருந்த போதிலும், அதில் பங்கேற்பதற்கு வராமல் ஓடி ஒளிந்த அவர், இப்போது உதயச்சந்திரனின் அதிகாரத்தை குறைப்பதில் மட்டும் தனது வீரத்தைக் காட்டியிருக்கிறார். தங்களின் நோக்கம் சீர்திருத்தம் அல்ல... ஊழல் தான் என்பதை பினாமி அரசு நிரூபித்திருக்கிறது. பினாமி அடிமைக் கொள்ளையரிடமிருந்து இதைத் தான் எதிர்பார்க்க முடியும்.

தமிழகத்தின் இன்றைய அடிப்படைத் தேவை கல்வித்துறை சீர்திருத்தங்கள் தான். எனவே, பள்ளிக் கல்வித்துறையின் செயலாளராக முழு அதிகாரத்துடன் உதயச்சந்திரன் செயல்பட அரசு அனுமதிக்க  வேண்டும்.

இக்கோரிக்கைக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளும், மக்களும் குரல் கொடுக்க வேண்டும்...

பேரறிவாளன் பரோலில் விடுதலை...


27ஆண்டுகளுக்கு பிறகு பேரறிவாளன் ஒருமாத பரோலில் விடுதலையாவது மகிழ்ச்சியளிக்கிறது. அற்புதம்மாளின் போராட்டத்திற்கான பலன் நெகிழ்ச்சியளிக்கிறது - பாமக அன்புமணி ராமதாஸ்...

திமுக வின் 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில் வரும் செப்டம்பர் 20ல் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் - டில்லி சிபிஐ சிறப்பு கோர்ட் நீதிபதி ஷைனி அறிவிப்பு...


அதிமுக கலாட்டா...


நீட் தேர்வு விவகாரத்தில் கடைசி நேரத்தில் மத்திய அரசு தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது ஏற்கதக்கது அல்ல - சென்னை உயர் நிதிமன்றம்...


கர்நாடகாவில் செயற்கை மழை...


பருவ மழை பொய்த்து போனதால் நாடு முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது.

இந்நிலையில், வறட்சியை சமாளிக்க செயற்கை மழையைப் பொழிய வைக்கும் திட்டத்தை கர்நாடகா அரசு செயல்படுத்தியுள்ளது

கடந்த ஆண்டு வறட்சியை சமாளிக்க ‘வருணா' என்னும் பெயரில் செயற்கை மழையைப் பொழிய வைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்தது. அதற்காக ரூ.35 கோடி ஒதுக்கியது. அமெரிக்காவில் இருந்து அதிநவீன வசதிகள் கொண்ட விமானம் பெங்களூரு ஜக்கூர் விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டது. முதற்கட்டமாக பெங்களூரு, யாதகிரி, கதக் ஆகிய 3 இடங்களில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட்,22) ரேடார் கருவிகள் பொருத்தப்பட்டு, ரேடார் கருவிகள் மூலம் எந்தெந்த பகுதிகளில் மேகத்தில் ரசாயன பொடிகளை தூவி, செயற்கை மழையைப் பொழிய வைக்கலாம் என கண்காணிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, கர்நாடக வேளாண்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தனர். பெங்களூருக்கு வரவழைக்கப்பட்ட அதிநவீன விமானம் பெங்களூரு புறநகர் ஆனேக்கல், ராமநகர் பகுதிகளில் வானில் பறந்தபடி செயற்கை மழை பெய்வதற்காக ரசாயன பொடிகளை தூவியது. ஆனால், மழை பொழிய வில்லை.

வழக்கமாக மதியம் 1 மணியில் இருந்து மாலை 4 மணி வரை தான் செயற்கை மழை பொழிய வைப்பதற்கான சரியான நேரம். அப்போது ரசாயன பொடியை தூவினால், 15-20% வரை மழை பொழியும். ஆனால் பெங்களூரு புறநகர்ப் பகுதிகளில் மேகக் கூட்டங்கள் கலைந்து விட்டன. எனவே, சரியான நேரம் பார்த்து மீண்டும் ஒரு நாள் செயற்கை மழை பொழிய வைக்கப்படும் எனக் கர்நாடக வேளாண்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா தெரிவித்துள்ளார்.

கடந்த 2003ஆம் ஆண்டு கர்நாடகாவில் செயற்கை மழை பொழிய வைக்கப்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது...

அரசு கொறடாவின் பரிந்துரையை அடுத்து 19 எம்எல்ஏக்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ள சபாநாயகர் தனபால்...


7 நாட்களுக்குள் பதில் அளிக்க உத்தரவு..

தொகுதி மக்களின் பிரச்சனையை பார்க்கவில்லை 7 நாளைக்குள் பதில் அளியுங்கன்னு என்னைக்காவது யாராவது எம்எல்ஏவிற்கு நோட்டிஸ் அனுப்பியிருக்காங்களா ?

ஆட்சிக்கு ஆபத்துன்னதும் அலறி அடித்துக் கொண்டு சொன்ன ஒரு சில மணி நேரங்களில் நோட்டிஸ் அனுப்பகின்றீர்களே ?

என சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளது...

தமிழ்நாட்டில் சிலர் ராஜ ராஜ சோழனை மட்டும் தாக்குவதேன்?


தமிழ்நாட்டில் வாழும் தமிழரல்லாத திராவிடர்களின் வாரிசுகள்  ராஜ ராஜ சோழனை வசை பாடுமளவுக்கு கன்னட/தெலுங்கர்களாகிய விஜயநகர ஆட்சியாளர்களை வசைபாடுவதில்லை என்பதை  நான் பல இணையத்தளங்களிலும் வலைப்பதிவுகளிலும், கட்டுரைகளிலும் பார்த்திருக்கிறேன்.

ஏனென்றால் தமிழ்நாட்டில் வாழும் திராவிட எச்சங்களுக்கு  அவர்களின் முன்னோர்கள் மீது இன்றும் அவ்வளவு பாசம் உண்டு.

உண்மையில் ராஜ ராஜ சோழனின் ஆட்சிக்குப் பின்னர், கன்னடர்/வடுகர்/மராத்தியர்களின் ஆட்சியின் கீழ் தான் தமிழ்நாட்டில் சாதிப்பாகுபாடு வளர்க்கப்பட்டது.

வந்தேறிகளுக்கு தமிழர்களின் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு, தமிழர்கள் நிலமற்றவர்களாக்கப்பட்டனர்.

தமிழர்களின் கோயில்களிலிருந்து தமிழ் வெளியேறியது.

ராஜ ராஜ சோழனின் காலத்தில் மதிப்பும், மரியாதை மிக்கவர்களாக இருந்த தேவ அடியார்கள் தேவடியாளாக மாற்றப்பட்டதும், தமிழரல்லாத விஜயநகர, நாயக்க ஆட்சியாளர்களின் காலத்தில் தான் என்ற உண்மையை அவர்கள் பேசுவதில்லை.

பார்ப்பனர்களின் மீதுள்ள காழ்ப்புணர்வால், தமிழ் நாட்டிலுள்ளவர்கள் சிலர் ராஜ ராஜ சோழன் மீது அநியாயமாக குற்றங்களைச் சுமத்துகின்றனர்.

அதாவது தமிழர்கள் யாரைப் போற்றுகிறார்களோ, தமிழர்கள் யாரை எண்ணிப் பெருமைப் படுகிறார்களோ, எந்த ராஜ ராஜனின் கொடி ஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்து, தமது விடுதலைக்கு, ஆயுதமேந்திப் போராடுமளவுக்கு வீரத்தையும், வலுவையும் அளித்ததோ அந்த ராஜ ராஜ சோழனை இழிவு படுத்தி தமிழர்களின் வரலாற்றுப் பெருமையை இல்லாமல் செய்வது தான் அவர்களின் நோக்கம்.

ராஜ ராஜ சோழன் காலத்தில் தமிழ் கோலோச்சியிருந்த தமிழ்நாட்டுக் கோயில்கள் எல்லாம், பார்ப்பனர்களின் வசமானது கன்னட/தெலுங்கர்களின் விஜய நகர ஆட்சியில் தான்.

உதாரணமாக, ராஜ ராஜ சோழனின் கல்வெட்டுக்களில் கோயில்களுக்கும், சடங்குகளுக்கும், கோயில்களில்  அன்றாடம் பாவனையில் உள்ள பொருட்களுக்கும் தூய தமிழ்ச் சொற்களே உள்ளன.

விஜயநகர (தெலுங்கு, கன்னட)ஆட்சியாளர்கள் தான், தெலுங்கு ரெட்டிகளையும், நாயுடுகளையும், நாயக்கர்களையும் தமிழ்நாட்டுக் கிராமங்களில் கிராமத் தலைவர்களாக, அதிகாரிகளாக நியமித்து, தமிழர்களின்  விளைநிலங்களைப் பறித்து அவர்களிடம் கொடுத்தார்கள், அவர்களின் காலத்தில் நிலங்களை இழந்த வேளாளர்கள் தான், தமிழ்நாட்டை விட்டு, யாழ்ப்பாணத்தில் குடியேறியவர்கள் எனவும் சிலர் கூறுவர்.

விஜயநகர ஆட்சியாளர்களால் தான் இன்றும் தமிழ்நாட்டுக் கிராமங்களில் ரெட்டிகளும், நாயுடுக்களும், நாயக்கர்களும், ஏனைய தெலுங்கர்களும், தமிழர்களுடன் ஒப்பிடும் போது, அவர்களை விடக் கூடியளவு நிலச் சொந்தக்காரர்களாக உள்ளனர்.

ஆயிரம் வருடம் பின்னோக்கிப் போய் ராஜ ராஜ சோழனைத் தாக்கும், தமிழ்நாட்டில் வாழும் தமிழரல்லாத திராவிட எச்சங்கள் தமது முன்னோர்களாகிய விஜயநகர் ஆட்சியாளர்களை குற்றம் கூறாமல், ராஜ ராஜ சோழனை மட்டும் வசைபாடுவதன் சூக்குமத்தை தமிழர்கள் அறியார் என்று அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள் போல் தெரிகிறது.

உண்மையில் இன்று தமிழ்நாட்டிலுள்ள சாதிப்பிரச்சனைக்கும், உண்மையான தமிழர்களின் நிலமற்ற இழிநிலைக்கும் கன்னட/தெலுங்கு வடுக/ மராத்திய ஆட்சியாளர்களைத் தான் வசைபாட வேண்டும்.

ஆனால் ராஜ ராஜ சோழனைத் தாக்குகிறவர்கள்  கன்னட/தெலுங்குவடுக/ மராத்திய ஆட்சியாளர்களைத் அப்படிச் செய்வதில்லை, ஏனென்றால் அவர்களில் பெரும்பான்மையினரின் முன்னோர்கள் கன்னட/தெலுங்கு வடுகர்/மலையாளிகளாக இருப்பதாலோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

ராஜ ராஜ சோழன் காலத்தில் சாதிப்பாகுபாடும், பார்ப்பன ஆளுமையும் இருந்திருந்தால்,அவனுக்குப் பின்னால் ஆண்ட கன்னட/தெலுங்கு/மராத்தியர்கள் ஏன் அதை மாற்றவில்லை.

பிற்காலத்தில் ஆண்ட தம்மவர்களை விட்டு, ஆயிரம் வருடங்கள் பின்னோக்கிப் போய் ராஜ ராஜ சோழனை மட்டும் தாக்குவதும், இழிவுபடுத்துவதன் நோக்கம் என்ன என்பதைத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் ராஜ ராஜ சோழன் ஆட்சியில் சாதிப்பிரச்சனை இருந்தது பற்றிப் பேசுகிறவர்கள், அதற்குப் பின்பு ஆண்ட திராவிடர்கள் (கன்னட/வடுகர்கள்) சாதிப்பிரச்சனையை ஏன் நீக்கவில்லை என்ற காரணத்தைக் காட்டி அவர்களை ஏன் வசைபாடுவதில்லை என்ற கேள்விக்கு இதுவரை யாரும் பதில் கூறியதில்லை.

சீனக் கம்யூனிஸ்டுகள் கூடத் தான் சீனப்பெருஞ்சுவரை தமது முன்னோர்களின் சாதனையென எண்ணிப் பெருமைப்படுகிறார்கள். அதைப் பெருமையுடன் பாதுகாக்கிறார்கள். அதைப்பற்றிப் பீற்றிக் கொள்கிறார்கள் சீனப்பெருஞ்சுவர் கட்டப்பட்த்தில் கொல்லப்பட்ட ஏழைகளின் எண்ணிக்கையை விடவா தஞ்சைப்பெரிய கோயில் கட்டப்பட்ட போது கொல்லப்பட்டிருப்பார்கள். ஆனால் தஞ்சை பெரியகோயில் என்பது இலட்சணக்கான தொழிலாளர்களை கொன்று குவித்ததன் சின்னமாக இருக்கிறது. என்று உளறும் போலி வர்க்கப் போராளிகளை நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது.

இன்று சிலைவணக்கத்தை எதிர்க்கும் எகிப்திய அரபு முஸ்லீம்கள் கூட, தமது முன்னோர்கள் கட்டிய பிரமிட்டுகளையும், கோயில்களையும் நினைத்துப் பெருமிதப்படுகிறார்கள், அவற்றைக் கோடிக்கணக்கான பணச்செலவில் பாதுகாக்கிறார்கள். பிரமிட்டுகள் கட்டப்பட்டபோது கொல்லப்பட்ட ஏழைகளையும், அடிமைகளையும், தொழிலாளர்களையும் விடவா, தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்ட போது இறந்திருப்பார்கள்?

ஐரோப்பாவிலுள்ள பிரமாண்டமான தேவாலயங்களைப் பற்றிப் பெருமிதப்படும் ஐரோப்பியர்கள் தமது முன்னோர்களை அவர்கள் எவ்வளவு கொடிய ஆட்சியாளர்களாக இருந்தாலும் வசைபாடுவதில்லை. ஆனால் ராஜ ராஜ சோழனையும், தமிழர்களின் கட்டிட, தொழிநுட்ப, அறிவியலை உலகுக்குப் பறை சாற்றும் கோயில்களையும், வரலாற்றுச் சின்னங்களையும் சிலர் தூற்றுகிறார்கள், அவர்களைத் தமிழர்கள் அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டும்.

பிரச்சனை என்னவென்றால், உலகிலேயே மிகச்சிறந்த நிர்வாகிகளில் ஒருவனாகிய ராஜ ராஜ சோழன் தனது ஆட்சியில் நடந்த எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் எழுதி வைத்துப் போனான். அவனுக்குப் பின்னால் ஆண்ட கன்னடர்களும், தெலுங்கு வடுகர்களும், மராத்தியர்களும் தமிழ்நாட்டைச் சுரண்டி, தமிழர்களைத் தமிழ்நாட்டிலேயே தமது அடையாளத்தை இழந்தவர்களாக்குவதில் குறியாக இருந்தார்களே தவிர, ராஜ ராஜ சோழனைப் போல் ஒன்றையும் எழுதி வைத்து விட்டுப் போகவில்லை.

இன்று கூட பல நாடுகளில் மதகுருமார்கள் வரி செலுத்துவதில்லை அத்துடன் விவசாயிகளுக்கு சிறப்பான மானியங்கள் உண்டு. அக்காலத்தில் சமூகத்திலிருந்த சாதிக் கட்டமைப்பின் படி, சமூகத்தில் அவர்களின் சேவையின் தேவையைக் கருதி அவர்களுக்கு சலுகை அளிக்கப்பட்டிருக்கலாம், உதாரணமாக, கனடாவின் பூர்வீக குடிகளுக்கு வரிவிலக்கு சலுகைகள் உண்டு ஆனால் ஏனைய கனேடியர்கள் தமது வருமானத்தின் கணிசமான பகுதியை அரசாங்கத்துக்கு வரியாகச் செலுத்துகின்றனர்.

·அத்துடன் பணக்காரர்கள், சமூகத்தின் மேல் மட்டத்தில் உள்ளவர்கள் குறைந்தளவில் வரி செலுத்துவதாக மேலைநாடுகளில் கூட முறைப்பாடுகள் உண்டு. அதனால், ஆயிரம் வருடங்கள் பின்னோக்கிப் போய், ராஜ ராஜ சோழனை இழிவு படுத்துகிறவர்களின் உண்மையான நோக்கம் என்ன, அவர்களின் பின்னணி என்ன என்பதைத் தமிழர்கள் ஆராய வேண்டும்.

·இலங்கையில் இக்காலத்திலும் மத குருமார்களுக்குஅவர்களை மதத்தைக் கற்க, வேத பாடசாலைகளுக்கும், பெளத்த பிரிவேனாக்களுக்கும், கிறித்தவ தேவலாயங்களுக்கும் வரி விலக்குண்டு. பல நாடுகளில் இது இன்றும் வழக்கத்திலுண்டு. அது அந்த நடைமுறை அக்காலத்தில், ராஜ சோழன் காலத்தில் மட்டுமல்ல, கன்னட/தெலுங்கு/நாயக்கர் ஆட்சியிலுமிருந்தது. ஆனால் ராஜ ராஜ சோழனை வசைபாடுகிறவர்கள், அவர்களை ஏன் வசைபாடுவதில்லை.

·அரசர்கள் சம்பளம் எதுவும் கொடுக்காமல் வேலைவாங்கிய அக்காலத்தில் ஆடுமாடுகளை பாராமரிக்குமாறு  நம்பிக் கொடுத்து, கோயிலுக்குக் கொடுக்கும் கடமையைச் செய்து விட்டு, மீதியை நீயே வைத்துக் கொள், என்று கூறிய ராஜ ராஜ சோழனின் பெருந்தன்மையை சிலரால் புரிந்து கொள்ள முடியவில்லை. இலங்கை அரசர்கள் சம்பளம், எதுவுமே கொடுக்காமல் “ராஜகாரியம்” என்ற முறையில் வேலை வாங்கினார்கள், அந்த வழக்கத்தை, இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு  ஆங்கிலேயர்கள் தான் தடை செய்தார்கள்.

·சோழர்கள் கட்டிய கோயில்களில் வேலை செய்ய பிறமண்ணிலிருந்து வந்தவர்கள் பிராமணர்கள், அவர்கள் எதற்காக ஊர்காவலுக்கு வரி செலுத்த வேண்டும். ஊர்காவல் வரியை ஊர்ச் சொந்தக்காரர்கள் தான் செலுத்த வேண்டும்.

·வறுமையினால் மக்கள் அடிமையாவது இன்றும் இந்தியாவில் உண்டு. இந்த 21ம் நூற்றாண்டிலும் எத்தனையோ தமிழர்கள் கூட இந்தியாவில் கொத்தடிமைகளாக உள்ளனர். பல ஆபிரிக்க முஸ்லீம் நாடுகளில் இன்றும் அடிமைகளை வைத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் அடிமை, குடிமை முறை வழக்கத்தில் இருந்தது. அதற்கு ராஜ ராஜ சோழனை மட்டும் வறுத்தெடுப்பது ஏன்?

.கோயில்களுக்கும் அரச தேவைகளுக்கும், வேறு பல திட்டங்களுக்கும் நிலங்களை மக்களிடமிருந்து எடுத்துக் கொள்ளும் வழக்கம் எல்லா நாடுகளிலும் உண்டு. சோழர்கள் கட்டிய பெருங்கோயில்களில் வேலை செய்வதற்காக அழைத்து வரப்பட்ட பார்ப்பனர்களுக்கு கோயிலுக்கருகில் வீட்டு வசதி செய்து கொடுக்க காணிகள் அரசால் எடுக்கப்பட்டிருக்கலாம். தமிழ்நாட்டில் இருந்து தமிழர்களை இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் குடியேற்றிய போது சிங்களக் கிராமங்களிலிருந்து சிங்களவர்களை வெளியேற்றி, அவர்களின் காணிகளைப் பறித்து. தேயிலைத் தோட்டங்களை உருவாக்கி, அதில் இந்திய வம்சாவழித் தமிழர்களைக் குடியேற்றினர் ஆங்கிலேயர்கள். .

·மதகுருமார்களுக்கும், மடங்களுக்கும், கோயில்களுக்கும் நிலங்கள் வழங்குவது மானியம் வழங்குவதும், வரிவிலக்கு அளிப்பதும் இன்றும் வழக்கத்தில் உண்டு. பார்ப்பனர்களை பெரும்பான்மையாகக் கொண்ட பிரமதேயங்களில் ஒன்றையாவது காட்ட முடியுமா?

·இன்றும் தேர்தலில் போட்டியிட காசு, பணம், குறைந்தபட்ச கல்வித் தகுதி மட்டுமல்ல, தமிழ்நாட்டில் சாதியையும் முக்கியம். அதனால் ஆயிரமாண்டுகளுக்கு முன்னால் அப்படி விதிமுறைகள் இருந்தது மட்டுமல்ல, முடியாட்சியிலேயே, சனநாயகத்தைப் புகுத்திய சோழர்களைப் பாராட்ட வேண்டும். இலங்கையில் கூட 1948 வரை படித்த இலங்கையர்களுக்கு மட்டும் தான் வாக்குரிமை இருந்தது. வெள்ளையர்கள் குடியேறிய பிரிட்டிஸ் காலனிகளில் நிலச் சொந்தக்கார்களுக்கு மட்டும் தான் 1800களின் கடைசிப்பகுதி வாக்குரிமை இருந்தது.

·ஆதித்த கரிகாலனை பிராமணர்கள் கொன்றதன் காரணத்தாலோ என்னவோ இராசராசன் தம் நாட்டில் வேதங்கள் ஒலிப்பதற்குப் பதிலாக திருமுறை ஓதுவதற்கு அதிக முக்கியத்துவம் தந்திருக்கிறான். ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களைக் கண்டு பிடிப்பதில் கால தாமதம் ஏற்பட்டாலும் இராஜ ராஜன் அவர்களை சரியாக அடையாளம் கண்டு அழித்தான் என்றும் இவ்வெற்றியை திருவாலங்காட்டுச் செப்பேடு “பரசுராமனது நாட்டை வென்றது” என்று குறிப்பிடுகிறது.

·பிராமணர்களுக்கு இவன் காலத்தில் நிலக்கொடை வழங்கிய செப்புப்பட்டயம் ஒன்று கூடக் கிடைக்காமலிருப்பதும் இவன் பிராமணர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பைப் பிரதிபலிப்பதாகத் தெரிகிறது..

·மேலேயுள்ள குறிப்புகள் சி, இளங்கோ என்பவர் எழுதிய “இராஜராஜ சோழனின் காந்தளூர்ச் சாலைப் போர்” என்ற புத்தகத்தில் 73ம் பக்கத்தில் உள்ளது.

இதன் படி பார்த்தால் உண்மையில் ராஜ ராஜ சோழன் காலத்துக்குப் பின்னர் நடந்த சம்பவங்கள், தஞ்சாவூர்க் கோயில் கல்வெட்டுக்களிலுள்ளவற்றை எல்லாம் ராஜ ராஜ சோழனின் தலையில் போட்டு அந்த மாமன்னனை வசைபாடுகின்றனர் தமிழ்பேசும், தமிழரல்லாத திராவிட எச்சங்கள் என்பது தெரிகிறது...

இந்தி திணிப்பை முதலில் எதிர்த்தவர் பெரியார் அல்ல பாம்பன் அடிகளார்...


சனவரி 25ஆம் நாள் என்பது இந்தி எதிர்ப்பு ஈகியரின் நினைவு நாளாகும். இந்த ஆண்டில் தான் 1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போரின் 53ஆம் ஆண்டு விழாவும் தொடங்க உள்ளது. 1938ஆம் ஆண்டு தமிழறிஞர்களாகிய மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோர் தொடங்கி வைத்த இந்தி எதிர்ப்பு தீ இன்னும் தமிழர்களிடத்தில் அணையவில்லை. தமிழர்களின் மரபு என்பது அடிப்படையில் ஆரிய- வடமொழி எதிர்ப்பு தன்மை உடையதே இதற்குக் காரணமாகும்.

ஆன்மீகத் தளத்தில் நின்று கொண்டு வடமொழியை இராமலிங்க வள்ளலாரும், அதுபோல் இந்திமொழியை தமிழ்த்துறவி பாம்பன் அடிகளார் என்பவரும் எதிர்த்து வந்துள்ளனர்.

இந்த உண்மைகளை மூடிமறைத்து இந்தி எதிர்ப்பு உணர்வை முதன் முதலில் தோற்று வித்தவர் ஈ.வெ.ரா. என்றும், அவரே சித்திரபுத்திரன் எனும் புனைப்பெயரில் 7.3.1926இல் தனது குடியரசு இதழில், "தமிழுக்குத் துரோகமும் இந்திமொழியின் ரகசியமும்" என்ற தலைப்பில் கட்டுரை தீட்டினார் என்றும் வரலாறு எழுதுவோர் ஆராய்ச்சி செய்யாது நுனிப்புல் மேய்வோராய் எழுதி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பிற்கு எதிராய் ஆன்மிகத் தளத்தில் நின்று 1899ஆம் ஆண்டில் முதற்குரல் கொடுத்தவர் குமரகுருதாச சுவாமிகள் என்றழைக்கப்படும் பாம்பன் அடிகளார் என்பதே உண்மையான வரலாறாகும்.

பாம்பன் அடிகளார் இராமேசுவரம் பாம்பனில் 1853ஆம் ஆண்டு பிறந்தவர். சைவநெறி மீதும், முருகன் மீதும் தீராப்பற்று கொண்டவர்.

வடமொழியிலும், தமிழ்மொழியிலும் சிறந்த தேர்ச்சி பெற்றவர். அவர் 6600 அருந்தமிழ் பாடல்களை இயற்றியுள்ளார். இவரால் வடமொழி கலவாமல் தனித் தமிழ் நடையில் எழுதப்பட்ட "சேந்தன் செந்தமிழ்" எனும் நூல் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். 1929ஆம் ஆண்டு மறைந்த இவருக்கு சென்னை திருவான்மியூரில் சமாதி கோயில் கட்டப்பட்டுள்ளது.

பாம்பன் அடிகளார் இந்தியை எதிர்த்ததன் காரணம் என்னவெனில், இந்தி நுழைந்து விட்டால் தமிழர்களின் சைவ சமயமும், தமிழ்மொழியும் அழிந்து விடும் என்று அஞ்சினார். வேறு பாடையான இந்தியை வளர்க்க முற்படும் வடநாட்டவரின் சுயநலத்திற்கு ஆதரவளிக்கக் கூடாது என்பதையும், தமிழ்மொழியை இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரப்பும் பணியில் தமிழர்கள் ஈடுபட வேண்டும் என்பதையும் 1899ஆம் ஆண்டு வெளியிட்ட தனது 'திருப்பா' எனும் சாத்திர நூலில் குறிப்பிட்டுள்ளார். இதன் வரிகள் இதோ:

பாடை பதினேட்டேயன்று பண்டைப் பரதகண்ட சாத்திரங்கள் பகர்ந்தவாறு கடந்து எத்தனையோ பாடைகளிஞ் ஞான்று காணப்படல் காலந்தோறும் கன்மதன்மங்கள் வேறுபடுமென்பதைக் காட்டுகின்ற தென்பதூஉம், அவ்வேறுபாட்டிற்கியையப் பன்முகத்தாலுந் தமிழ் பல்கு வழியினைத் தேடல் வேண்டுமென்பதூஉம், அப் பல்கலின்மையால் வடநாட்டிலும் மற்றை நாட்டிலுந் தமிழ் வேதப் பெருமையினையும் ஆக்கிய வருளாளர் பெருமையினையுமறியாக் குறையானது வடமொழி பிறமொழியென்பவற்றின் கண்ணவேயே விருப்பத்தையும் பிற மத வேட்கையையும் பெருமயக்கத்தையும் பெருக்கு கின்றதென்பதூஉம் தமிழ்நலன் இற்றென வறியாது
" இந்தி முதலிய வேறு பாடைகளை யிந்நாட்டகத்தும் விருத்தி செய்ய விழையும் வடநாடரது சுயநலத்தினை யாதரித்தல் தமிழர் கடன்மை யன்றென்பதூஉம் "
தலைவனருளற்புதமும், கண்டுகூறு முண்மையுமுட் கொண்டிலகு தமிழ்வேதம் இனிது வியாபிக்கின் இந்நிலவுலகெங்கணுஞ் சைவ சமயமே தலைப்படுமென்பதும், அஞ்ஞான்று ஆன்மலாப வவாவுடையா ரனைவரும் இவ்வுலகினை நேடாதிருக்க நியாய முற்றென்பதூஉம் இங்ஙனங் கொளக் கிடப்பனவாம்.  (திருப்பா நூன்முகம் பக்க.எ. 17.)

பாம்பன் அடிகளார் இந்நூன்முகத்தை புதுப்பாக்கமெனும் குமாரபுரத்தில் புதுப்பேட்டை அமீர் மகால் அருகில் தங்கி 26.7.1920ஆம் ஆண்டில் இரண்டாம் பதிப்பிலும் வரைந்திருக்கிறார்கள்.

1899ஆம் ஆண்டு இந்தி என்பது தமிழ்நாட்டில் திணிக்கப்படாத காலம்.

வடநாட்டினரின் இந்தியை திணிக்க முற்படும் உணர்வை முன் கூட்டியே அறிந்து பாம்பன் அடிகளார் எழுதியது வியப்பிற்குரியது.

எனவே, இந்தி எதிர்ப்பு வரலாற்றை எழுதுவோர் இனியாவது ஈ.வெ.ரா.  முன்னரே இந்தி எதிர்ப்புக்கான விதை ஊன்றிய பாம்பன் அடிகளாரை இந்தி எதிர்ப்பு வரலாற்றின் பக்கங்களில் குறிப்பிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்...

குறிப்பு : ஈ.வெ.ரா இந்தியை எதிர்க்கவில்லை.. இந்தியை எதிர்த்த தமிழர்களை தான் எதிர்த்தார் என்பதே உண்மையான வரலாறு...

திராவிடர்கள் Vs தமிழ் சாதிகள்...


பரமக்குடி துப்பாக்கி சூடானது, உண்மையில் தமிழர் அல்லாத  ஒரு அரசாங்கத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தமிழ் சாதிக்குமான நீண்டநெடிய போர் ஆகும்.

ஆனால் அதை ஒரு சாதி மோதலாக  திரிக்கும் முயற்சியும் நடந்தது.

பள்ளர்களின் எதிரியாக திராவிட கட்சிகளால் சித்தரிக்கபடுகின்ற எந்த குறுப்பிட்ட சாதியும் இதில் நேரடியாக சம்மந்தப்படவில்லை.
   
இதே போன்ற அடக்குமுறைகள் பிற தமிழ் சாதிகளுக்கும் வரக்கூடிய வாய்புகள் உள்ளன.

எந்த ஒரு சாதியும் “தமிழ் நாடு தமிழருக்கே” என்ற நிலையை எடுக்கும் பட்சத்தில் அவர்கள் மீதும் இது போன்ற துப்பாக்கி சூடும், விசாரணை ஆணையங்களும் கண்டிப்பாக வரும்..

அதற்கான உதாரணம் தான் மரக்காணத்தில் நடந்த வன்னியர்களின் படுகொலைகளும். மருத்துவர் ராமதாஸ் மீது போடப்பட்ட வழக்குகளுமே ஆகும்.

இந்நிகழ்வுகள் அனைத்தும் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் திராவிட எதிர்ப்பு நிலைக்கு பிறகு நடந்தவைகளே..

தமிழர்களை ஒன்றினைய விடாமல்
தமிழர்களுக்குள் சாதி பூசல் உருவாக்கி தமிழர்களுக்குள் பகையை உருவாக்கி அதற்குள் குளிர் காய்வது தான் திராவிடம்...

இதைக் கூட உணராமல் சிலர் பதவிக்காகவும் பணத்திற்காகவும் தன் சுயநலமத்திற்காகவும் திராவிடத்தின் காலடியில் விழுந்து தமிழனை மீண்டும் அடிமைப்படுத்த நினைக்கிறார்கள்..

தமிழா சிந்தித்து விழித்தெழு...

அனுராதபுரத்தில் தமிழர் கடவுள் - ஐயனாரின் பழமையான சிலை...


ஐயனார் அல்லது ஐயப்பன் தமிழர்களின் கடவுள்...

ஆரம்ப கால பிராமண புராணங்கள் எதிலுமே ஐயப்பன் என்ற தெய்வமோ அல்லது வழிபாடோ கிடையாது.

பார்ப்பன வைதீக கடவுள் கூட்டத்தில் (Hindu Puranic pantheon) ஐயப்பன் அல்லது ஐயனார் ஒருபோதும்  இருந்ததில்லை.

இக்காலத்தில், முன்னாள்  சேர நாட்டார்களாகிய மலையாளிகளும் ஐயப்பனுக்குச் சொந்தம் கொண்டாடினாலும் கூட ஐயப்பன் தமிழர்களின், தமிழ் மண்ணின் கடவுளே தவிர ஐயப்பனுக்கும் தமிழரல்லாதோருக்கும், அவர்களின் புராணக் கதைகளுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்பது தான் உண்மை.

ஐயனும், அம்மனும்  ஈழத் தமிழர்களினதும், தமிழ்நாட்டுத் தமிழர்களினதும்  தெய்வங்கள்.

ஐயன் என்ற சொல்லுக்கு தமிழில் மரியாதையைக் குறிக்கும் 'அர்'  என்ற விகுதி இணைக்கப்பட்டு ஐயனார்  ஆகியது.

ஈழத்திலும், தமிழ்நாட்டிலும் ஐயனார் கிராமங்களின் காவல் தெய்வமாக தொன்று தொட்டு விளங்கி வருகிறார்.

இன்றும் தமிழ்நாட்டுக் கிராமங்கள் எல்லாம் குதிரை மேலமர்ந்த ஐயனார் கிராமங்களின் காவல் தேவதையாக திகழ்வதுடன், காட்டுக்கு வேட்டையாடப் போகிறவர்கள், பாதுகாப்புடன் திரும்பி வருவதற்கும், ஆறுகளினூடாக பயணம் செய்யு முன்பும், மகப்பேற்றுக்கு முன்பும் வணங்கப்படும் தெய்வமாக இன்றும் ஈழத்திலும், தமிழ்நாட்டிலும் விளங்கி வருகிறார்.

ஈழத்தில் ஆறுமுகநாவலர் போன்ற ஆகம வாதிகளால் ஈழத்தமிழர்களின் மத்தியில் பாரம்பரியமாக, பரவலாகக் காணப்பட்ட கண்ணகி வழிபாட்டிலும், ஐயப்பன் வழிபாட்டிலும் பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும், மீண்டும் ஐயனார் அல்லது ஐயப்பன் வழிபாடு, குறிப்பாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் மத்தியில் தழைத்தோங்கி வருகிறது.

பழந்தமிழர்களின் ஐயனார் வழிபாடு மீண்டும் தமிழர் மத்தியில் எழுச்சி பெறுவது மகிழ்ச்சிக்குரிய விடயம் என்றாலும், தமிழுக்குப் பதிலாக கூடுதலாக மலையாள வாடையும், அத்துடன் பார்ப்பன வாடையும் கலந்து வீசுவதும் கவலைக்குரிய விடயமே.

ஈழத்தமிழ் ஐயப்பன் பக்தர்கள், ஐயப்பன் வழிபாட்டைத் தமிழாக்க வேண்டுமே தவிர, தமிழரின் வழிபாட்டில் மலையாள மேளம், கண்டவர்களின் காலிலும் விழுந்து எழுவது, காலைத் தொட்டுக் கும்பிடுவது போன்ற  மலையாளக் கலாச்சார பழக்க வழக்கங்களை ஈழத்தமிழர் மத்தியில் புகுத்தக் கூடாது.

இலங்கையின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தலை நகரமாகிய அனுராதபுரத்தில் காணப்படும் ஐயனார், மிகவும் பழமையான  ஐயனார் சிலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இலங்கையின் வரலாற்றிலேயே அதிக ஆண்டுகள் இலங்கையை ஆண்ட அரசன் எல்லாளன் காலத்திலேயே தமிழர்கள் அனுராதபுரத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழரசன் எல்லாளனுக்கும் பெளத்தத்தைத் தழுவிய நாக அரச குமாரன் துட்டகைமுனுவுக்கும் நடைபெற்ற யுத்தத்தில், கைமுனுவின் படைகள் எல்லாளனின் மாளிகையை அடையுமுன்பு, அனுராதபுரத்தைச் சுற்றியுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த முப்பத்திரண்டு தமிழ்ச் சிற்றரசர்களுடன் போரிட வேண்டிய நிலை துட்ட கைமுனுவின் படைகளுக்கு ஏற்பட்டது   என்கிறது  சிங்களவர்களின்  மகாவம்சம்.

இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பே அனுராதபுரத்தில் தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்தனர் என்பதற்கு அது நல்லதொரு ஆதாரமாகும்.

அதே அனுராதபுரத்தில் தமிழர்களால் முனீசுரம் என அழைக்கப்பட்ட குகைக் கோயில், பெளத்தத்தின் வருகையின் பின்னர், புத்த கோயிலாக மாற்றப்பட்டு, பிக்குகளின்   தங்குமிடமாக்கப்பட்டு,  சிங்களத்தில் இன்று  ஈசுருமுனிய  (முனி ஈசுரம்) - Isuru Muniya  என்றழைக்கப்படுகிறது. அந்தக் குகைக் கோயிலிலேயே தமிழர்களின் கடவுளாகிய ஐயப்பன் அல்லது ஐயனாரின் மிகவும் பழமையான வடிவங்களில் ஒன்றின் சிலை இன்றும் காணப்படுகிறது.

இதுவும் இரண்டாயிரமாண்டுகளுக்கு  முன்பே  அனுராதபுரத்தில் தமிழர்களின் ஆளுமைக்கு ஆதாரமாகத் திகழ்கின்றது.

இன்று தமிழர்களை வெறுக்கும் சிங்கள பெளத்தர்களாக மாறி விட்ட முன்னாள் தமிழர்களின் வாரிசுகளால் தமிழை மறந்தாலும் அய்யனாரை மறக்க முடியவில்லை, ஆகவே ஐயனாரை, அய்யநாயக்க என்ற பெயரில், அனுராதபுரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இன்றும் கிராம தேவதையாக வணங்கி வருகின்றனர்.

சாஸ்தா என்பது சாக்கியமுனி புத்தரைக் குறிக்கிறது என்பதும் பெளத்தர்களின் நம்பிக்கை.

ஐயப்ப பக்தர்களின் சுவாமியே சரணம், சரணம் ஐயப்பா போன்ற சரணங்களுக்கும் பெளத்தமதத்தின் அடிப்படையாகிய "புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி", என்பதிலிருந்தே உருவாகியது என்ற கருத்துமுண்டு.

தமிழர்களின் முன்னோர்கள் ஒரு காலத்தில் பெளத்தர்களாக இருந்தனர் ஆகவே புத்தர் ஐயனாராக மாறினாரா அல்லது ஐயனார் அல்லது ஐயப்பன், புத்தராக மாறி மீண்டும், தமிழர்கள் மத்தியில் புத்தமதத்தின் வீழ்ச்சியின் பின்னர் ஐயப்பனாக உருமாறினாரா என்பது விவாதத்துக்குரியது.

கேரளாவிலுள்ள சில ஐயப்பன் கோயில்களின் ஐயனாரின் சிலை புத்தரின் சிலை போலவேயுள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கேரளாவிலும் வாழும் மக்களால், அங்கே பதினாறாம் நூற்றாண்டளவில்  வாழ்ந்த மணிகண்டன் என்ற வீரன் அல்லது முன்னோர்களில் ஒருவரின் வழிபாடாகிய சபரிமலை ஐயப்பன் வழிபாடு   தமிழர்களின் பாரம்பரிய ஐயனார் வழிபாட்டுடன் இணைக்கப்பட்டு தமிழர்களின் ஐயனாரும், மலையாளிகளின் (மணிகண்டன்) ஐயப்பனும் ஒன்றாக்கப்பட்டு விட்டனர் என்ற கருத்துமுண்டு.

ஈழத்தில் ஐயனார் மணமுடித்தவர் ஆனால் சபரிமலை ஐயப்பனுக்கு பெண்கள் என்றாலே ஆகாது.

சபரிமலை ஐயப்பன் வழிபாடு ஈழத்தமிழர் மத்தியில் பரவிய பின்னர் தான், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் சிலர், வட இந்தியர்கள் போல குனிந்து பார்ப்பனர்களின் கால்களைக் கூடத் தொட்டு வணங்கும் அருவருப்பான வழக்கம் ஏற்பட்டுள்ளது என்பதையும் இங்கே  குறிப்பிடாமலிருக்க என்னால் முடியவில்லை.

கண்ணகி மதுரையை எரித்த பின்னர் தமிழ்நாட்டில் வாழ விரும்பாமல், முதுமையில் (கிழவியுருவில்) ஈழத்துக்கு வந்து வாழ்ந்ததாக (இன்றும் தெய்வமாக வாழ்வதாக) ஈழத்தமிழர்கள் நம்புவதால், இன்றும் வருடா வருடம் கண்ணகியின் கோபத்தைத் தணிக்க திருக்குளிர்த்தி விழா நடத்துவது போன்றே, ஐயனார் அல்லது ஐயப்பனும் ஈழத்துக்கு வந்ததாக செவிவழிக் கதையுமுண்டு.

'அய்' என்ற சங்கத் தமிழ் வேர்ச்சொல்லிலிருந்து :
அய்யன், அய்யை > அய்யர்> அய்யனார் > ஐயனார்
சங்கத் தமிழில் அய் என்பது மூத்தவர் (elder) என்பதைக் குறிக்கும், அந்தக் கருத்தில் அய் என்பது  தலைவர், பெரியவர், நாயகன், மூத்த சகோதரன், அரசன் என்ற கருத்தும் படும்.

பரிபாடலில் அய் என்பது திருமாலையும் குறிக்கிறது.

ஆனால் சங்கத் தமிழில் அய்யன் என்பது மூத்த சகோதரனையே குறித்தது, பன்மையில் அய்யர் அல்லது ஐயர் மூத்த சகோதரர்களை (அகநானூறு, நற்றிணை)  குறித்தது ஆனால் கலித்தொகையில் ஐயன் என்பது முருகனைக் குறித்தது.

சிங்களவர்கள் இன்றும் மூத்த சகோதரனை அய்யா என்றழைப்பது குறிப்பிடத் தக்கது.

அய் என்ற சங்கத் தமிழ்ச் சொல்லில் உருவாகிய ஐயர் என்ற சொல் முனிவர்களையும், சந்நியாசிகளையும் குறிக்கப் பயன்பட்டதேயல்லாமல் பிராமணர்களை அல்ல.

சங்கத்தமிழில் அய்யன் என்ற சொல்லின் பெண்பாலாகிய அய்யை அல்லது ஐயை உயர்குலப் பெண்களைக் குறித்தது.


In the common Tamil usage today, the words Aiyan and Aiyanaar stand for a deity who is the guardian of villages in the Tamil tradition.

The deity originally didn't belong to the Brahmanic pantheon.

The concept of the deity as well as the meaning of the terminology went through an interesting metamorphosis over the centuries.

'Ai' is the root-word, found in the Changkam diction, from which words such as Aiyan, Aiyai, Aiyar and Aiyanaar derived.

'Ai' is a vowel in the Tamil alphabet (actually a diphthong: combination of two vowels 'a' as in uncle and 'i' as in ink) and is also a word. The relevant primary meaning for the word Ai in the Changkam diction is 'elder'. In this sense, the word stood for chief, leader, hero, father, elder brother and husband in the early layers of Changkam literature. In a late literature such as Paripaadal it also stood for Thirumaal or Vishnu.

The word Aiyan in the Changkam diction specifically stood for elder brother and Aiyar as a plural word meant elder brothers (Akanaanoo'ru, Natti'nai) as well as hermits or sages (Ku'rignchippaaddu, Pathittuppaththu). However, in  Kaliththokai, which belongs to the late layers of Changkam literature, Aiyan meant god Murukan.

The word Aiyar, which is a derivate from Ai, didn't mean Brahmins in the Changkam diction. It meant sages, hermits and celestial sages, but these shades of meaning too are found only in the late literature. Explaining the word found in Tholkaappiyam   Poru'lathikaaram, its commentator Pearaasiriyar gives the meaning 'sages' and differentiates the word fromAntha'nar (Brahmins).

Aiyai, the feminine form of Aiyan, meant a lady of reputation in the early Changkam diction (Akanaanoo'ru). It stood for a lady of leadership, goddessKaa'li and was a personal name of a daughter in the later literature (Chilappathikaaram). Equating the word Aiyan with the guardian deity of villages, whose temple is normally at the outskirts of a village, is found only in the early Tamil lexicons, dating from 8th century CE.

The lexicons Thivaakaram, Pingkalam and Choodaama'ni, equate Aiyan with elder brother, teacher, father and the guardian deity who was also known asChaaththan, Chaatha-vaakanan or Kaari; equate Aiyar with sages and Brahmins and Aiyai with Kaa'li, presiding woman and daughter. The word Chaaththan for the guardian deity Aiyan is also equated withArukan, the supreme God of the Jainas and with Buddha in the lexicons.

The origins of this guardian deity of Tamil tradition, whose cult has become popular especially at the folk level, are shrouded in mystery. The concept and iconographic representations of this deity are not found anywhere beyond the ancient Tamil country and Sri Lanka. There is no mention about this deity in the early Brahmanical literature.
 The earliest reference to the concept of the deity, under the namePu'rampa'naiyaan, comes fromChilappathikaaram. Pu'rampa'naiyaan(Purampu-a'naiyaan) means one who is at the outskirts. The temple of this deity is mentioned as Pu'rampa'naiyaan Koaddamin Chilappathikaaram. Adiyaarkku Nallaar, the commentator of Chilappathikaaram, equates the deity with Chaatha-vaakanan(one who rides an elephant).
We have already seen that Chaatha-vaakanan is a synonym of Aiyan in the lexicons. Elephant and horse are associated with this deity (lexicons) Iconographic representations of the deity appear from Pallava times, after c. 7th century CE. The context is usually associated with the representations ofKaa'li. Note the Tamil terms Aiyan (chief) / Aiyai (presiding lady) and Kaari (the drak god) / Kaa'li (the dark goddess).
There is a strong possibility that the apsidal shrine close to the Kaa'li shrine at Maamallapuram (of the five monolithic rathas), showing an elephant rider at the back of the sanctum and with a monolithic elephant adjacent to it, was dedicated to Aiyanaar.

It later became a universal practice in the villages of the Tamil country to have shrines side by side, but facing different directions, for both Aiyanaar and Kaa'li at the outskirts. The former is the guardian of the village and the other is the guardian of the forest (Kaadu-kizhaa'l). The shrines mark the place where village and forest overlap.

When Vaithilingkach-cheddiyaar designed the native town of Jaffna (the present shopping area, Koddadi and Va'n'naar-pa'n'nai of the city) during Dutch times, he built two temples for Aiyanaar andKaa'li at the  outskirts, beyond which were paddy fields and the cremation ground (Koampayyan Mayaanam). The locality, which still marks the boundary of the city, is called Aiyanaar Koayiladi.

It is not difficult to deduce that the concept of the deity Aiyanaar, in the Tamil tradition originated with the rise of village life and with the need of the function of protection. The origins may go back to Neolithic and Megalithic times when villages first appeared.

Scholars like Asko Parpola, harping on the similarity of the words Aarya and Aiyan, tried to project the deity as one that had come with the first wave of Aryan migration into the Tamil country (Arguments for an Aryan Origin of the South Indian Megaliths, 1973).

But, as we have seen it earlier, the etymology is clearly from Ai, and there is no early linguistic authority attesting a link between Aarya and Aiyan or even Aiyar.

The fascinating aspect in the study of the concept of this deity is that it remained at the folk level for a very long time, resisted assimilation with any of the pantheon of the major religions, but had the capacity to syncretize the major deities into it. Even though easily changeable, it retained its identity.

By the various terms associated with the deity, one could see that beginning with hero or ancestor hero cult of pre and protohistoric times, it had already absorbed the Jaina God and Budhha by the time it emerged with iconography and the institution of temple.

How to accommodate the deity into Brahmanic pantheon was a challenge to Brahmanism and to the Sanskritized traditions of the Tamil country. It was done in an interesting way as attested by the following myth found in Kantha Puraa'nam. The myth is not found beyond Tamil-Malayalam region.
Aiyanaar was the son of Siva and Vish'nu. He was born not through copulation, but from the sperm of Siva when Siva became desirous of Vish'nu who took a female form at the time of the churning of the ocean to get nector. Aiyanaar remained obscure, but he was the only god who could able to give asylum and protection to Indrani, the queen of the Devas when all were threatened by the Asura king, Soorapadma. Note the structure, functions and persona of the myth.
The Sanskritized Aiyanaar is also known as Harihara Putra (the son of Vishnu and Siva) and is shown with two   consorts  Poora'nai and   Pushkalai in iconography. He holds either an elephant goad (Ankusam) or horsewhip (Che'ndu) in his hand.

The term Aiyan and the original concept of Aiyanaar as seen through the Changkam traditions, found their way into Sri Lanka probably with the Megalithic culture and got absorbed into the Sinhala traditions.

The sculpture of a seated man, shown along with the face of a horse in the background and overlooking the tank found at Isuramuniya, which was the outskirts of the ancient Anuradhapura city, is in all probability one of the earliest iconographic representations of Aiyanaar found in Sri Lanka as well as in South India.

Ayiyanaayaka or Ayyanayaka, as he is known in the Sinhala folk tradition, the deity is the protector from evil and is the guardian of the village tank and its bund. He is a popular folk deity in the dry zone Sri Lanka, which abounds with tanks. He is propitiated before and after cultivation.
Aiyanaar is a popular deity in the mainstream as well as a folk religion of Sri Lankan Tamils. There are a large number of Aiyanaar temples and folk shrines in the North and East of Sri Lanka. Many of the temples originated in the times of the kings of Jaffna or earlier. There are at least written records for the construction of two of them by the kings of Jaffna (Viyaavil Aiyaanaar, Kaarainakar and Kuthiraimalai Aiyanaar in Vilpattu).

Until recent times the ancient community of Drummers participated actively in the rituals of the Aiyanaar temples, beating drums. An early element of Aiyanaar cult, which is retained in the Sri Lankan Tamil tradition, is the syncretism of Aiyanaar with Buddha. At one stage, when Buddhism became unpopular among the Tamils of Sri Lanka, Buddha was syncretised with Aiyanaar. Many of the old Aiyanaar temples of the Tamil areas are located at or nearby probable Buddhist archaeological sites. A convincing example is the worship of a headless torso of Buddha as Aiyanaar at Paalaavikku'lam, Poonakari. The Buddhist remains at Kurunthu Malai near Kumizhamunai, Mullaiththeevu district are still referred to as Kurunthu Malai Aiyan or Kurunthanoor Aiyan temple by the folk of Vanni.

What is interesting to note here is that some of the early shades of meaning of the term Aiyan and the original concept of the deity Aiyanaar went through drastic changes in the Tamil tradition, but they survive in their early form in the Sinhala tradition.

A primary shade of meaning, 'elder brother' for the word Aiyan is completely forgotten in modern Tamil. But, it is common usage in Sinhala that words Ayiyaa, Ayiyaalaa (plural) and Ayiya'ndimean elder brother. Aiyanaar as guardian of villages is not an important concept in the contemporary Tamil culture, especially after the synthesis with the cult of Aiyappan. But, the concept of Ayiyanaayaka as protector and guardian of village tanks and bunds is very much alive in the Sinhala folk culture...

தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்...


சி.பா.ஆதித்தனாரின் அருமையான ஆறு பதில்கள்...


1. கேள்வி: திராவிடர்கள் யார்?

பதில்: திராவிடர்கள் என்போர் தெலுங்கர்கள். தமிழர் அல்ல. ஆந்திரம், கலிங்கம், தெலுங்கானம் ஆகிய மூன்று தெலுங்கு நாடுகளில் வாழ்ந்தவர்களான திரி- வடுகர்களே திராவிடர்கள்.

2.கேள்வி: திராவிடர் என்ற சொல்லைத் தமிழர்களுக்குப் பயன்படுத்துவது பொருந்துமா?

பதில்: பொருந்தாது. 1875ஆம் ஆண்டிற்கு முன் திராவிடர் என்ற சொல் தெலுங்கர்களை மட்டுமே குறித்து வந்தது. அந்த ஆண்டில் கால்டுவெல் என்ற வெள்ளைக்காரர் தான் எழுதிய புத்தகத்தில் அதுவரை ஆந்திரர்களை மட்டுமே குறிப்பிட்டு வந்த 'திராவிடர்' என்ற சொல்லைத் தமிழர்களைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்து அதன்படியும் எழுதினார். அவர் கையாண்டது தவறான கருத்து. ஏனென்றால் முன் காலத்தில் இருந்து மூன்று தெலுங்கு நாடுகளைத் தான் திரிவடுகம் என்றும், திராவிடம் என்றும் வடவர்கள் சொல்லி வந்தார்கள். திரிவடுகர் நாட்டிற்குத் தெற்கே வாழ்ந்து வந்த தமிழர்களுக்கும் இந்தச் சொல் பொருந்தும் என்று கால்டுவெல் எழுதியது தவறான கண்ணோட்டம். அவரைப் பின்பற்றித் தமிழர்கள் என்று குறிப்பிடதற்குத் திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தியதும் தவறாகும். தமிழன் தன்னைத் திராவிடன் அதாவது திரிவடுகன் அல்லது தெலுங்கன் என்று சொல்வது இழிவாகும். திராவிடன் என்பது தமிழ்ச் சொல் அல்ல. வடவர்கள் தெலுங்கர்களுக்கு இட்ட பெயர் அது.

3.கேள்வி: திராவிடம் என்று பழந்தமிழ் இலக்கியத்தில் இருக்கிறதா?

பதில்: எந்தத் தமிழ் இலக்கியத்திலும் திராவிடம் என்ற சொல் கிடையவே கிடையாது. அந்தச் சொல்லை முதன் முதலில் பயன்படுத்திய கால்டுவெல் என்கிற வெள்ளைக்காரர் வட மொழியியிலிருந்து தான் திராவிடம் என்ற சொல்லைக் கண்டு பிடித்ததாகக் கூறியிருக்கிறார்.

4.கேள்வி: பேராசிரியர் சுந்தரம் பிள்ளை திராவிட நற்றிரு நாடு என்று குறிப்பிட்டு இருக்கிறாரே?

பதில்: தெலுங்கர்களைக் குறிக்கும் 'திராவிடம்' என்ற சொல்லைத் தான் நான் கையாண்டேன் என்று கால்டுவெல் என்னும் வெள்ளைக்காரர் எழுதியுள்ளார். அதற்குப் பிறகு சுந்தரம் பிள்ளை எழுதிய மனோன்மணீயம் இன்றைக்கு 70 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதாகும்.

5.கேள்வி: இலக்கியம், சரித்திரம் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள திராவிட நாட்டைத் தாங்கள் மறுப்பது ஏன்?

பதில்: தமிழ்ப் புலவர்கள் எழுதிய எந்த இலக்கியத்திலும் திராவிடன், திராவிட நாடு என்ற சொற்களே இல்லை. மிக அண்மைக் காலத்தில் அந்நியர்களால் எழுதப்பட்ட நூல்களில் தான் திராவிடம் என்ற சொல் காணப்படுகிறது.

6.கேள்வி: தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்த மொழிகள் என்பதால் இந்த நான்கு மொழி பேசுபவர்களும் ஏன் இதன் வழி ஒன்றுபடக் கூடாது?

பதில்: கல்தோன்றி மண் தோன்றக் காலத்தே வாளோடு முன்தோன்றிய இனம் தமிழினம். தமிழ்மொழி தான் உலகில் தோன்றிய முதல் மொழி. எனவே லத்தீன், ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகள் உட்பட எல்லா மொழிகளுமே தமிழிலிருந்து தான் தோன்றியிருக்க வேண்டும். அதனால் உலகம் முழுவதும் ஒரே நாடாக இருக்க வேண்டும் என்று யாராவது கூறுவார்களா? ஒரு மொழி ஒரு நாடு என்பது தான் உலக நியதி.

நன்றி: சிவபாரதி எழுதிய 'தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்' நூலிலிருந்து...

நான் படித்த உளவியலில் இருந்து... ஆணின் மூளைக்கும் பெண்ணின் மூளைக்கும் என்ன வித்தியாசம்?


குழந்தைகள் அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருக்கும். இதற்கு மூளையின் அமைப்பே காரணம். பகுத்துணரும் திறன்.

ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகள் பகுத்தாய்வு செய்து தீர்மானத்திற்குரிய படிகளை தீர்மானிப்பதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாலான இடம் ஒதுக்கப்படுகிறது. அதனால் எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆண்களின் மூளையால் இலகுவாக ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

வாகனம் ஓட்டுதல்:

வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் போது தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, வாகனத்தின் போக்கில் ஏற்பட இருக்கும் மாற்றங்களை விரைவாக கணித்து அதற்கு ஏற்றாற்போல் நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளையால் முடியும். ஆனால் பெண்களின் மூளை தாமதமாகவே இந்த கணிப்புகளை மேற்கொள்ளும்.

இதற்கு காரணம் பண்களின் பல பணிகளை செய்யும் மூளைத் திறன் ஆகும். உதாரணமாக வாகனம் செலுத்தும் போது இசையை கேட்டுக் கொண்டிருந்தாலும் ஆண்களின் கவனம் வாகனம் செலுத்துவதில்தான் இருக்கும்.

ஆனால் பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால்தான் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர் கொள்கிறார்கள்.

பேச்சு:

ஆண்கள், பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும்போது பெண்கள் இலகுவாக பொய் என்பதை அறிந்து கொள்வார்கள். ஆனால் பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணர முடிவதில்லை.

காரணம் பெண்கள் பேசும் போது 70 சதவீத மொழியையும், 20 சதவீத உடல் மொழியையும், 10 சதவீத வாய்மொழியையும் உணர்த்துகின்றனர். ஆண்கள் மூளையால் அவ்வாறு உணர முடியாது.

தீர்வுகள்:

பல பிரச்சனைகள் இருக்க ஒரு ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக பிரிந்து ஒவ்வொன்றிற்க்கும் தனித்தனி தீர்வை படிப்படியாக இனங்காணும் இதனால் பிரச்சனையுள்ள ஆண்கள் தனிமையில் தமது தீர்வுகளை கண்டு கொள்வார்கள்.

ஆனால் பெண்களின் மூளை தனித்தனியே பிரித்தறியாது... யாராவது ஒருவரிடம் தமது மொத்த பிரச்சனைகளையும் சொல்லி விட்டால், பிரச்சனை தீர்ந்தாலும் தீராவிட்டாலும் அவர்கள் நிம்மதியாக தூங்கி விடுவார்கள். ஆண்களின் மூளையின் வேகம் பதிப்பு, வெற்றி செயலாக்கம் என்ற வகையில் அமைந்திருக்கும். பெண்களின் மூளை குடும்பம், உறவுகள், நட்பு ரீதியாக அமைந்திருக்கும்.

மனம்:

வீட்டில் பிரச்சனை என்றால் பெண்களின் மனம் வேலையில் கவனம் செலுத்தாது. வேலையில் பிரச்சனை என்றால் ஆண்கள் மனம் உறவுகளில் கவனம் செலுத்தாது.

பெண்கள் உரையாடும் பொழுது மறைமுக மொழிகளை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால், ஆண்கள் நேரடி மொழியையே பயன்படுத்துவார்கள்.

ஞாபக சக்தி:

ஆண்களால் எதையும் அதிகம், நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. அதனால் தான் வீட்டில் உள்ளவர்களின் பிறந்தநாள், திருமணநாள் இவற்றை அவர்கள் அறிந்திருப்பதில்லை.

ஆனால் பெண்களால் வீட்டில் உள்ளவர்கள் மட்டும் அல்ல வெளியில் உள்ள ஊறவினர்களின் முக்கிய தினங்களை கூட ஞாபகம் வைத்திருக்க முடியும்.

பெண்கள் சிந்திக்காமல் அதிகம் பேசுவார்கள். ஆனால், ஆண்கள் சிந்திக்காமல் அதிகம் செய்வார்கள்.

ஆண், பெண் உறவுகளில் ஏற்படும் பிரச்சனைக்கான உண்மையான அறிவியல் காரணங்களை தெரிந்து நடந்தால் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளை எளிதாக சமாக்கலாம். வாழ்வும் இன்பமயமாகும்...

சிலரால் திட்டம் இடப்பட்டு ஆதி தமிழ் நூல்கள் அனைத்தும் குறைத்து மதிப்பு......


இப்படி தான் திருக்குறள் முதல் திருமந்திரம் அவ்வை பாடல்கள் வரையில் உண்மையான வரலாறு பலரின் அறியாமையாலும் சிலரின் இயலாமையாலும் சிலரால் திட்டம் இடப்பட்டு ஆதி தமிழ் நூல்கள் அனைத்தும் குறைத்து மதிப்பு செய்ய பட்டுள்ளது..

ஆனால் நிச்சயம் உண்மை ஒரு நாள் வெளி வந்து தான் ஆகும் ...

மூல நோயை குணப்படுத்தும் கருணைக்கிழங்கு...


கருணைகிழங்கில் விட்டமின்-C, விட்டமின் B, மாங்கனீஸ், மினரல்ஸ், ரிபோபிளேவின், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துக் காணப்படுகிறது..

இந்த கிழங்கை நாம் மற்ற கிழங்கை போன்று சாதாரணமாக சாப்பிட முடியாது, ஏனென்றால் இது நாக்கில் நமைச்சலை ஏற்படுத்தும்.

எனவே இக்கிழங்கை நன்றாக வேக வைத்து தோல் உரித்து புளி சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.

பயன்கள்...

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி மற்றும் மாதவிடாய் ஏற்படுவதில் பிரச்சனை போன்றவற்றை சீராக்கும்.

கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் கபம், வாதம் ஆகியவற்றை குணப்படுத்துகின்றது. மேலும் கருணைக்கிழங்கு பசியைத் தூண்டி இரைப்பைக்கு பலம் சேர்ப்பதில் பயனுள்ளதாக உள்ளது.

மூல நோயை குணப்படுத்தி, ஆசன வாயிலில் உள்ள முளைகளைச் சிறுது சிறிதாக கரைத்து மூலத்தை அடியோடு குணமாக்குகிறது.

உடல் எடையை குறைக்க விரும்புவோர்கள் இந்த கருணைக்கிழங்கை தினமும் சாப்பாட்டிற்கு பதில் உணவாக உட்கொண்டால் நல்ல பலனைக் காணலாம்.

கருணைக்கிழங்கு பித்தப்பை பிரச்சனை, எலும்புகள் பலவீனம் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்கின்றது.

பெண்களின் கர்ப்பக் காலங்களில் கருத்தரிதலின் போது ஏற்படும் பிரச்சனைக்கு உகந்ததாக கருணைக்கிழங்கு உள்ளது.

குறிப்பு...

மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.

ஏனெனில் இந்த நோயின் தாக்கத்தை ஏற்படுத்து ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வெளிப்பாடு மோசமாக இருக்கும்...

தற்போது தேர்தல் வந்தால் திமுக வெற்றிபெற அதிக வாய்ப்பு - சீமான் பேட்டி...


இலங்கையைக் காட்டி தமிழகத்தை துண்டாடத் திட்டம்… ஆற்றில் கை வைத்து அழிவு பாதையில் தள்ளி, இனி கடல் மார்க்கமாக அரங்கேறப்போகும் நாசகரம்...


இலங்கை, ஆஸ்திரேலியாவில் கடல் மணலில் இருந்து எடுக்கும் தாது மணல் தொழில் நடந்து வரும் போது தமிழகத்தில் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது ஏன் ?என்று தாது மணல் தொழில் அதிபர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தாது மணல் தொழில் மூலம் இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு நல்ல வருவாய் கிடைத்து வருகிறது.

ஆனால், தமிழக அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் தடைபட்டுள்ளது என்றும் தமிழக கடற்கரைப்பகுதியில் சேரும் தாது மணலுக்கு வெளிநாட்டுச் சந்தையில் நல்ல மதிப்பு உள்ளது.

இதனால், வெளிநாட்டு நிறுவனங்களின் சதியும் தடைக்கு ஒரு காரணமாக உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், தமிழக கடற்கரைப்பகுதியில் தாது மணல் எடுக்கப்படாததால், அந்த மணல் வேறு பகுதிக்கு கடல் வழியாக இடம்பெயர்ந்து சென்றுவிடும்.

இதனால் இலங்கை, ஆஸ்திரேலியாவில் தாது மணல் தொழில் ஜோராக நடந்து வருகின்றன. எனவே, தாது மணல் பிசினஸில் உள்ள தடையை நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன்மூலம் அந்நிய செலாவணி, வரியினங்கள், ராயல்டி உள்ளிட்டவை மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும்.

அதோடு தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்பை இழந்தவர்களுக்கு மீண்டும் வாழ்வாதாரம் கிடைக்கும் என்று காரணம் கூறி உள்ளனர்.

ஏற்கனவே தமிழக ஆற்று மணலையும் இது போன்று தான் ஆசை வார்த்தைகள் கூறி அபகரித்து கொண்டிருகின்றனர்.

இந்த நிலையில் கடல் மணலையும் எடுக்க ஆரம்பித்து விட்டால், கடற்கரையை சுற்றி இருக்கும் நீராதாரங்கள் முழுவதுமாக பாதிப்படையும்.

நிலத்தடி நீருடன் கடல் நீர் கலப்பு ஏற்படும். இது போன்ற இன்னும் பல பாதிப்புகள் இதனால் எதிர்கொள்ள வேண்டி வரும்...

இது தான்டா தர்மயுத்தம்... இந்த பொழப்புக்கு வேற எதாச்சும் தொழில் செய்யலாம்...


ஆழ்மனதின் அற்புத சக்திகள்-11...


ஸ்வாமி ராமாவைப் போலவே ஜேக் ஷ்வார்ஸ் என்ற ஹாலந்துக்காரரும் தன் உடலில் பல விந்தைகள் செய்து காட்டக் கூடியவராக இருந்தார். ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் ஆணிகளின் படுக்கையில் படுப்பது, கூரிய வாள்களின் மேல் நடனமாடுவது, ஆணிகளையும், ஊசிகளையும் உடலில் துளைத்துக் கொண்டு பின் காயங்களை ஆற வைத்துக் காட்டுவது போன்ற செயல்களைக் காட்டி வந்த அவர் இரு முறை இரண்டாம் உலகப் போரில் நாசிகளிடம் சிக்கி சித்திரவதைகளுக்கு ஆளானார். இரண்டாம் முறை சிக்கிய பின் மற்ற இரண்டு கைதிகளுடன் சுவரின் கீழ் சுரங்கத்தைத் தோண்டி ஒரு மாத காலத்திற்குள் தப்பி விட்டார். பின் இங்கிலாந்து ராணுவத்தில் சேர்ந்து பணி புரிந்த அவர் பின்னர் அமெரிக்காவில் குடியேறினார்.

ஜேக் ஷ்வார்ஸ் 1958ல் மனித உடலின் மீது மனதிற்குள்ள சக்தியை வெளிப்படுத்தும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் அலெத்தியா உடல்-உள்ளம் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவினார். ஸ்வாமி ராமாவை ஆராய்ச்சி செய்த மென்னிங்கர் நிறுவனம் அவரையும் ஆராய்ச்சி செய்தது. பெரிய ஊசி ஒன்றை எடுத்து அவர் தனது கையில் குத்திக் கொண்ட பின்னரும் இரத்தம் அவர் உடலிலிருந்து கசியாததைக் கண்ட ஆராய்ச்சியாளர்கள் திகைத்தனர். ஒரு ஆராய்ச்சியாளர் "இரத்தத்தைக் கசிய வையுங்கள் பார்க்கலாம்" என்று சொல்ல அடுத்த கணம் ஷ்வார்ஸ் அந்த ஊசியைக் குத்திய இடத்திலிருந்து இரத்தத்தை கசிய விட்டார். ஆராய்ச்சியாளர்கள் பெருகி வரும் இரத்தத்தை நிறுத்தச் சொன்னார்கள். அவர் அடுத்த கணமே அந்த இரத்தக் கசிவை நிறுத்திக் காட்டினார்.

சாதாரண ஊசிகள் அல்லாமல் துருப்பிடித்த ஊசிகள் மற்றும் ஆணிகளாலும் தன் உடலை ஷ்வார்ஸ் துளைத்துக் காண்பித்தார். ஆனால் அவர் உடலில் எந்த பாதிப்பும் இல்லை. எரியும் சிகரெட்டுகளை உடலில் அழுத்திக் காண்பித்தார். சிவந்த, கருகிய காயங்கள் தெரிந்தனவே ஒழிய அவற்றாலும் அவர் உடலில் எந்தப் பாதிப்பும் இல்லை. ஊசிகள், சிகரெட்டுகளால் ஏற்பட்ட காயங்கள் உடனடியாக ஆறின. எப்படிப்பட்ட வடுக்களானாலும் 24 மணி நேரம் முதல் 48 மணிகளுக்குள் உடலிலிருந்து மறைந்தன. வருடக்கணக்கில் இது போன்ற செயல்களில் ஈடுபட்ட ஷ்வார்ஸின் தோல் எந்த வடுவுமில்லாமல் குழந்தையின் தோலைப் போல் மொழு மொழுவென்று இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இத்தனை அற்புதங்கள் புரிந்த ஷ்வார்ஸ் அதைத் தன்னால் மட்டுமே முடிந்த பெருஞ்சாதனையாகக் கருதவில்லை. மூளை அலைகளில் ஒரு குறிப்பிட்ட அலையை ஏற்படுத்திக் கொண்ட பின்னர் என்ன கட்டளையிட்டாலும் உடல் அதை ஏற்றுக் கொள்ளும் என்றார். சரியான பயிற்சியால் இதை யாராலும் செய்ய முடியும் என்றார். சில மூச்சுப் பயிற்சிகளாலும், தியானத்தாலும் மூளையில் அந்த அலைகளை ஏற்படுத்த முடியும் என்று கூறினார். 2000 ஆம் ஆண்டு இறந்த ஜேக் ஷ்வார்ஸின் அலெத்தியா உடல்-உள்ளம் நிறுவனம் இன்றும் செயல்பட்டு வருகிறது.

இதே போல் சுமார் நூறாண்டுகளுக்கு முன்பு உடலைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த நரசிங்கஸ்வாமி என்ற யோகியைப் பற்றி பால் ப்ரண்டன் என்ற தத்துவ ஞானி தன் "ரகசிய இந்தியாவில் ஒரு தேடல்" என்ற நூலில் குறிப்படுகிறார். சர் சி வி இராமன் உட்படப் பல விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்கள் முன்னிலையில் கல்கத்தாவில் ப்ரசிடென்ஸி கல்லூரி இயற்பியல் அரங்கத்தில் நரசிங்கஸ்வாமி செய்து காட்டிய அற்புதத்தை டாக்டர் பாண்ட்யோபாத்யாயா என்பவர் மூலம் கேள்விப்பட்டதாக அவர் சொன்னார். விஞ்ஞானிகள், மருத்துவர்கள் அடங்கிய குழு நரசிங்கஸ்வாமிக்கு கந்தக அமிலம், கார்பாலிக் அமிலம், பொட்டாசியம் சயனைடு மூன்றும் கலந்த கலவையை ஒரு பாட்டிலில் தர அவர் அதை அவர்கள் முன்னிலையில் குடித்தார். இதில் ஒன்றே கொடிய விஷம். மூன்றும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? பிறகு கண்ணாடியைப் பொடி செய்து தந்தனர். அவர் அதையும் விழுங்கினார். என்ன தான் செய்து காட்டுவேன் என்று நரசிங்கஸ்வாமி சொல்லியிருந்தாலும் இந்த மூன்றைக் குடித்து அவருக்கு ஏற்படப் போகும் உயிராபத்திற்கு உதவ மருத்துவர் குழு தயாராகவே இருந்தது. ஆனால் நரசிங்கஸ்வாமி எந்த வித பாதிப்பும் இல்லாமல் சகஜமாகவே இருந்திருக்கிறார். மருத்துவக் குழுவினரின் உதவி தேவையிருக்கவில்லை.


அவர் முன்னால் இருந்த குழுவினர் எந்த விதத்திலும் ஏமாந்து விடக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தனர். மூன்று மணி நேரமாகியும் பாதிக்கப்படாமல் இருந்த நரசிங்கஸ்வாமி ஏதாவது கண்கட்டு வித்தை செய்து அந்த அமிலக்கலவையைக் குடிக்கவில்லையோ என்ற சந்தேகத்தில் அவர் வயிற்றுக்குள் இருந்தவற்றை பம்ப் செய்து வெளியே எடுத்து மருத்துவ பரிசோதனை செய்து பார்த்தனர். அதில் அத்தனை விஷங்களும் இன்னமும் இருந்தன. மறு நாள் அவர் மல பரிசோதனை கூட செய்து பார்த்திருக்கின்றனர். கண்ணாடித் துகள்கள் அவற்றில் இன்னமும் இருந்திருக்கின்றன.

தன் உடல் மீது இப்படியொரு கட்டுப்பாட்டை ஒருவரால் வைத்துக் கொள்ள முடியும் என்பதை அதுவரை
கண்டிராத அந்தக் குழுவினர் எப்படி இந்தக் கொடிய விஷங்கள் உங்கள் உடலைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்கிறீர்கள்? என்று நரசிங்கஸ்வாமியைக் கேட்ட போது அவர் சொன்னாராம். நான் உடனடியாக யோக நித்திரைக்குப் போய் என் மனதை ஒருமைப்படுத்தி இந்த விஷங்களுக்கு எதிர்ப்பு சக்தியை என் உடலில் உருவாக்கி விடுவேன்..

(இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட பால் ப்ரண்டன் நரசிங்கஸ்வாமியை சந்திக்க முயன்றார். ஆனால் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தன் யோக சக்தியை வெளிப்படுத்திக் காட்டும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள எப்போதும் பயணத்தில் இருந்த அவரை பால் ப்ரண்டனால் சந்திக்க முடியவில்லை.

பால் ப்ரண்டன் 1932ஆம் ஆண்டு நரசிங்கஸ்வாமியின் மரணத்தை பத்திரிக்கைகளில் பார்க்க நேர்ந்தது. ரங்கூனில் நரசிங்கஸ்வாமி இப்படி ஒரு நிகழ்ச்சியில் செய்து காட்டி முடித்த பிறகு பல பத்திரிக்கையாளர்கள், அவரைப் பார்க்க வந்தவர்கள் எல்லோருமாய் அவரை சூழ்ந்து கொள்ள அவரால் உடனடியாக யோக நித்திரைக்குச் செல்ல முடியாததால் விஷ முறிவுக்கான சக்தியை உடலில் ஏற்படுத்திக் கொள்ள அவரால் முடியவில்லை. துரதிர்ஷ்டவசமாக அதனால் அவர் உடனடியாக அங்கேயே அவர் இறந்து போனார்.)

மனித மனம் தன் உடலில் இவ்வளவு கட்டுப்பாட்டை வைத்துக் கொள்ள முடியும் என்றால், இத்தனை சாதனகளை உடலில் புரிய முடியும் என்றால் புற்றீசல் போல் பலப்பல நோய்கள் கிளம்பி வரும் இக்காலத்தில் நாம் பெரும்பாலான நோய்களின் தீர்வாக மனதை ஏன் முறையாகப் பயன்படுத்தக் கூடாது?

சிந்தியுங்கள். மேலும் பயணிப்போம்...