08/11/2017

பாஜக மோடியால் மக்கள் நடுத்தெருவில் நடு இரவில் நின்ற துக்க நாள் - 8.11.2016...


4000 ரூபாயை மாற்றுவதற்கு தேசத்தையே வரிசையில் நிற்க சொன்னார்கள். நின்றோம்..

ஒரு நாளுக்கு ஒரு முறை தான் 4000 ரூபாய். மீண்டும் வரக்கூடாது என்பதற்காக கையில் மை வைத்தார்கள். வைத்துக் கொண்டோம்..

100 பேர்க்கு மேல் வரிசையில் நின்றே செத்தார்கள். மௌனமாகயிருந்தாேம்..

இத்தனை துன்பங்களையும் எதற்காக பொருத்தம் என்று நினைத்தார் மோடி.

என் தேசம் பொருளாதார வளர்ச்சி வல்லரசாகும் என்ற ஆசையில் தானே
வெய்யலில் காய்ந்தோம்.

வரிசையில் நின்று செத்தோம்.

வயிறு பசியை அடக்கினோம்.

உண்டியில் சேர்த்து வைத்த பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்து இறந்தோம்.

ஆனால் இன்று என் தேசத்தை வளரும் நாடு என்ற பட்டியலில் இருந்து வீழ்ச்சி அடைய வைத்தது மட்டுமில்லாமல். உள்நாட்டு உற்பத்தியில் இரண்டரை லட்சம் கோடி சரிவு.

ஒவ்வொரு மாநிலம் பல ஆயிரம் கோடி வரி இழப்பு வெட்க்கம் கெட்ட மோடி அரசே இதற்காக தானா இத்தனை சுமைகளை சுமந்தோம்.

7000 கோடி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய நீதி கேட்டு வந்த உனக்கு சோறு போட்ட விவசாய மக்களை அம்மனமாக்கி அழகு பார்த்த பாரத பிரதமரே..

உங்க பாஜக கட்சி தலைவர்கள் வீட்டில் மட்டும் பல கோடி கணக்கான 2000 நோட்டுகள் வந்தது எப்படி விளக்குவீரா?

4000 ரூபாய் மாற்ற என் தேசத்தின் மீது நான் வைத்த பாசத்தையும் நேசத்தையும் காரணம் காட்டி வெயிலில் காய வைத்த மோடி அரசே.

ரூபாய் 33 கோடியை சேகர் ரெட்டி சுலபமாக மாற்றி விட்டார்.

எந்த வங்கியில் மாற்றப்பட்டது என்பது மத்திய அரசுக்கும் தெரியாதாம், ரிசர்வ் வங்கிக்கும் தெரியாதாம், சிபிஐயால் கூட கண்டு பிடிக்கவே முடியாது என்று சொன்ன பிறகும்..

டிஜிட்டல் இந்தியா. புதிய இந்தியா என பல ஆயிரம் கோடி மக்கள் பணத்தை தங்கள் ஆட்சியின் விளம்பரத்திற்கும். ஊர் சுத்தவும் ஊதாரி தனம் செய்து என் தேசத்தை படுபாதகுழியில் தள்ளிவிட்டு மீசையில் மண் ஒட்ட வில்லை என்று வெட்கம் கெட்டு தலைகுனியாமல்..

நம் தேசத்தின் மாபெரும் தோல்வியை வெட்கமேயில்லாமல் வெற்றி என்று கொண்டாட வேண்டும் என சொல்லும் மோடி அவர்களே.

இது எங்களுக்கு வெற்று தினம்
Demonetisation
November8
மக்கள் ஏமாற்றப்பட்ட தினம்.....

பாஜக மோடியால் கொலை செய்யப்பட்ட ரூ 1000.. ரூ 500 க்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி...


புட்டிகளில் விற்கப்படும் தண்ணீரில் தாதுப் பொருட்களின் அளவு சரிவரப் பராமரிக்கபடாததால் எலும்பு, சிறுநீரகப் பாதிப்புகள் அதிகரிக்கும்...


இவற்றில் 70%க்கு மேல் உணவுப் பாதுகாப்புத் துறை நிர்ணயம் செய்துள்ள அளவுகோலைப் பின்பற்றி தயாரிக்கப் படுவதில்லை.

சுத்திகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் நீரில், மணம்,சுவை,நிறம்,கலங்கும் தன்மை, கார,அமிலத் தன்மை (PH) , நீரில் கலந்துள்ள தனிமம் (TDS=Total dissolved solutes) ஆகியவற்றுக்கு மட்டுமே புட்டிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன.

வயிற்றுப்போக்கு, டைபாய்டு நோய்க் கிருமிகளை கட்டுப்படுத்துவதற்கு நுண்ணுயிரி பகுப்பாய்வுக்கூடம் இந்நிறுவனங்களில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்திய தர நிர்ணய ஆணையத்திடம் சான்றிதழ் பெறும் சமயத்தில், இக்கூடம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறும் பல குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், அதன்பின்னர் ஆய்வுக்கூடத்தை முறையாகப் பயன்படுத்துவதில்லை.

குடிநீர் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் தன்சுத்தம், சுற்றுப்புறத்தூய்மை, மறு பயன்பாட்டுக்குக் கொண்டௌவர்ப்படும் கேன்களைச் சுத்தம் செய்தல் போன்றவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.

ஒரு நிறுவனத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை 48 மணி நேரம், ஆலை வளாகத்தில் வைத்து கண்காணித்து, நுண்ணுயிரி பகுப்பாய்வு செய்து, அதன் தரத்தை உறுதி செய்தபின்னரே விற்பனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற விதிமுறையை முன்னணி நிறுவனங்களே கூட பின்பற்றுவதில்லை.

தொழில்போட்டி காரணமாக, பல முகவர்கள், கேன்களைச் சுத்தம் செய்யாமலும், சம்பந்தப்பட்ட தயாரிப்பு ஆலைகளுக்கு செல்வதைத் தவிர்த்து, அருகில் அமைந்துள்ள மாற்று நிறுவனங்களில் தண்ணீரைப் பிடித்து விற்பனை செய்வதால், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரின் சுத்தம் கேள்விக்குறியாகவே உள்ளது.

நாளொன்றுக்கு குறிப்பிட்ட அளவு தண்ணீரை மட்டுமே நிலத்தடியிலிருந்து எடுக்க வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே அனுமதி பெறப்பட்டாலும்கூட, இந்நிறுவனங்கள் இந்த அளவுகோலை மீறுவது குறித்து அரசு அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவதில்லை.

காந்தி கிராம் பல்கைக்கழக மனையியல்துறை உதவிப் பேராசிரியை விஜயாஞலி கூறியது...

உள்ளாட்சி அமைப்புகள் வினியோகிக்கும் குடிநீரைக் காய்ச்சி குடிப்பதே உடல்நலத்துக்கு சிறந்தது.

தண்ணீர் மூலம் ஏற்படும் பாதிப்புகள் உடனடியாகத் தெரியாததால், பொதுமக்கள் இதுகுறித்துக் கவலைப்படுவதில்லை.

ஆனால், எதிர்காலத்தில், அதிக ஆபத்து ஏற்படப்போவது குறித்து விழிப்புணர்வு அவசியம்...

தினமணி (07.11.2016) பக்கம்7ல் வெளிவந்துள்ள கட்டுரையிலிருந்து..

கன்னட ஈ.வெ. ராமசாமி நாயக்கரும் இந்தி எதிர்ப்பும்...


காந்தி இந்தியா முழுவதும் பொது  மொழியாக இந்தியை பயன்படுத்த வேண்டி.. நாடு முழுவதும் இந்தியை பயற்றுவிக்க இந்தி பிரச்சார சபாவினை தொடங்க வேண்டும் என்று காங்கிரசு கட்சியினருக்கு ஆணையிட..

அதையேற்று ஈரோட்டில் இந்தி பிரச்சார சாபிவினை தொடங்கி நடத்தியவர் தான் கன்னட ஈ.வெ.ராமாசாமி..

அங்கு பயின்றவர்கள் தான் பின்னாளில் தமிழகமெங்கும் இந்தியை பயிற்றுவிக்கும் பண்டிதர்களாக உருவெடுத்தனர்...

நெல்லை கலெக்டர் சந்தீப் நந்தூரி யார் என்று தெரியுமா..?


சந்தீப் நந்தூரி சென்னை மெட்ரோ வாட்டரில் செயல் இயக்குநராக இருந்தார். 

பின்னர் மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்தார். 

மெட்ரோ வாட்டரில் பணியாற்றிய அனுபவத்தால் நீர் மேலாண்மை குறித்து தெரியும் என்பதால் இவரும், மதுரை ஆட்சியர் வீரராகவ ராவும் சேர்ந்து உருவாக்கிய அற்புத திட்டம் தான் தெர்மாகோல். 

கடைசியில் வந்து மிதக்க விட்டதற்காக நாம் செல்லூர் ராஜுவை பிடித்துக் கொண்டோம்.   

தெர்மாகோலை மிதக்க விடும் சந்தீப் நந்தூரி...

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 54...


ஆழ்மனதின் அபார சேவை...

ஆழ்மனதில் ஆழமாகப் பதிபவையே நம்மை உண்மையில் இயக்கும் சக்தியாக இருக்கிறது என்பதைப் பார்த்தோம். இனி ஆழ்மனம் தன் தகவல் களஞ்சியத்தைப் பயன்படுத்தி நமக்கு எப்படியெல்லாம் அபார சேவை புரிகிறது என்பதையும், அதனிடம் அந்த வேலை வாங்குவது எப்படி என்றும் பார்ப்போம்.

மேல்மனம் உறக்கத்தின் போது ஓய்வு எடுத்துக் கொள்கிறது. ஆழ்மனம் உறக்கத்தின் போதும் கூட ஓய்வு எடுத்துக் கொள்வதில்லை. இதை பல ஆராய்ச்சிகள் செய்து உதாரணங்களுடன் டாக்டர் ஏ.ஸ்மித் என்ற இங்கிலாந்து மனவியல் அறிஞர் தன்னுடைய நூலில் (Does Brain Think, When I Sleep?) எழுதியுள்ளார். முன்பே கூறியது போல அது தான் சேகரித்து வைத்து இருக்கும் தகவல்களுடன் புதிதாகப் பெற்ற தகவல்களைச் சேர்த்து தக்க விதத்தில் சரி செய்தும், ஒழுங்குபடுத்தி, புதுப்பித்து வைத்துக் கொள்கிறது. மேல்மனம் எப்போதோ நினைத்து மறந்த சின்னத் தகவல் கூட ஆழ்மனதில் முறையாக சேகரிக்கப்பட்டு இருக்கும்.

இந்த தகவல் களஞ்சியத்தில் இருந்து தேவைப்பட்ட தகவல்களை எல்லாம் தேர்ந்தெடுத்து இணைத்து தொகுத்து புதிய கண்டுபிடிப்புகளையும், புதிய சித்தாந்தங்களையும், புதிய கோட்பாடுகளையும், பேருண்மைகளையும் முடிவாக நமக்கு உணர்த்த வல்லது ஆழ்மனம். எந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்பையும், வாழ்வையே திசை திருப்ப வல்ல பேருண்மையையும் ஆழ்மனதின் உதவி இல்லாமல் யாரும் பெற்று விட முடியாது.

சர் வில்லியம் ஆர். ஹேமில்டன் என்பவர் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கணித மேதை, வானவியல் அறிஞர், மற்றும் இயற்பியல் அறிஞர். அவர் ஒரு முக்கிய கணித ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது என்ன முயன்றும் அவரால் அதற்கு தீர்வு காண முடியவில்லை. 1843 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள் அவர் தன் மனைவியுடன் ஒரு பாலத்தின் அருகே நடந்து கொண்டிருந்த போது திடீரென்று பதில் தானாக அவர் மனதில் உதித்தது. அந்தத் தீர்வை மறந்து விடக்கூடும் என்று பயந்து அந்த பாலத்தின் சுவரில் கல்லால் கீறி அந்த சமன்பாட்டை அவர் பதித்தார்.
அவர் கண்டுபிடித்த க்வார்டெர்னியன்ஸ்  என்ற தீர்வு இன்றும் கணிதத் துறையில் மிக முக்கிய விதியாகக் கருதப்படுகிறது. அந்தப் பாலத்தின் சுவரில் இருந்த கீறல் பிற்காலத்தில் மறைந்து விட்டிருந்தாலும் அயர்லாந்து அரசாங்கம் அதே இடத்தில் அந்த தீர்வை ஒரு குறிப்புடன் கல்வெட்டாக இன்றும் வைத்திருக்கிறது.

டாக்டர் தாம்சன் என்ற மனோதத்துவ மேதை “System of Psychology” என்ற நூலை எழுதத் துவங்கியிருந்த போது அதற்காக நிறைய படித்து குறிப்புகள் எழுதி வைத்திருந்தார். ஆனால் எழுதுகின்ற சமயத்தில் நிறைய விஷயங்கள் கோர்வையாக இல்லாமல் தனித் தனியாக இருந்ததாக அவருக்குத் தோன்றியது. ஒரு விஷயத்தைப் பற்றி எழுதும் போது அது கோர்வையாக வராமல் இப்படி சம்பந்தமில்லாத தனிக் கருத்துகளாக இருந்தால் அது முழுமையாக இருக்காது என்று நினைத்த டாக்டர் தாம்சன் என்ன தான் அதைக் கோர்வைப் படுத்த முயன்றும் முடியாது போகவே அவர் எழுதுவதை சுமார் ஒரு மாதத்திற்கு நிறுத்தியே வைத்திருந்தார். பிறகு ஒரு நாள் எழுதியதை எடுத்துப் படிக்கையில் விடுபட்டதாய் நினைத்த விஷயங்கள் அவர் மனதில் தானாக பளிச்சிட்டன. உடனடியாக அவற்றை எழுதி அந்த நூலை அவர் முடித்தார். இது போன்ற நிகழ்வுகள் பல முறை தனக்கு ஏற்பட்டதாக அவர் கூறுகிறார்.

Synthetic Chemistry ஐ கண்டுபிடித்த விஞ்ஞானி பெர்த்லாட் அவர்களும் தன் கண்டுபிடிப்புகள் அனைத்தும் ஆராய்ச்சி கூடங்களில் முறையாக சிந்திக்கும் போது வந்தவை அல்ல என்றும் திடீரென்று தானாக வானில் இருந்து வந்தவை போல வந்தவை தான் என்று கூறுகிறார்.

மோசார்ட் என்ற இசை மேதை தன் 35 வருட வாழ்க்கையில் பத்து ஓபரா என்னும் இசை நாடகங்கள், 41 ஸிம்ஃபனி என்னும் விரிவான இசை நாடகங்கள், நூற்றுக் கணக்கான சிறிய இசைச் சித்திரங்கள் உருவாக்கிய மேதை. அவர் தன்னுடைய பெரும்பாலான புதிய இசைப் படைப்புகள் ஒவ்வொன்றும் முழுமையாக தானாக மனதில் தோன்றியவை என்றும், மனதில் கேட்டவற்றை அப்படியே திரும்ப உருவாக்கியது தான் அவர் செய்த வேலை என்றும் கூறுகிறார். நம் கணித மேதை ராமானுஜம் தன்னுடைய எல்லா கணக்குகளுக்கும் விடையை நாமகிரிப் பேட்டை அம்மன் கொண்டு வந்து தருவதாகச் சொல்லி இருக்கிறார்.

இது போல் எத்தனையோ காலத்தை வென்று நின்ற எழுத்துக்களையும், இசையையும், அறிவியல் கண்டு பிடிப்புகளையும் சொல்லிக் கொண்டே போகலாம். அவற்றைத் தங்கள் முயற்சியால் வந்ததென அந்த அறிஞர்களால் சொல்ல முடியவில்லை. தானாக வந்ததாகவும், தாங்கள் நம்பும் இறைவன் கொண்டு வந்து தந்ததாகவும் அவர்கள் சொன்ன போதிலும் அவற்றை அவர்கள் மேல்மனதிற்குத் தந்தது அவர்களுடைய ஆழ்மனமாகவே இருக்க வேண்டும் ஆழ்மன சக்தி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

எத்தனையோ முறை ஏதாவது ஒரு பெயர் மறந்து போயோ, ஒரு பொருளை வைத்த இடம் மறந்து போயோ நாம் அனைவருமே மூளையை கசக்கி இருந்திருக்கக் கூடிய தருணங்களை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். பிறகு வேறெதோ நாம் செய்து கொண்டிருக்கையில் தானாக அது நம் நினைவில் பளிச்சிடுவதை நாம் அனுபவித்திருக்கிறோம். இது நம் ஆழ்மன செயல்பாடே.

நாம் பல விதங்களில் சிந்தித்தும் விடை கிடைக்காத அல்லது நினைவுக்கு வராத விஷயங்களில் இருந்து சிந்தனையை மேல்மனம் கை விட்டு வேறு விஷயங்களுக்கு நகர்த்தும் போது அந்த பழைய தேடலை ஆழ்மனம் தன் பொறுப்பில் எடுத்துக் கொள்கிறது. அது தன்னிடம் உள்ள தகவல் களஞ்சியத்தில் இருந்து நமது அறிவுக்கெட்டாத முறையில் பிரம்மாண்டமான விதத்தில் விடையைக் கண்டுபிடித்து வேறு விஷயத்தில் ஆழ்ந்திருக்கும் மேல்மனத்திற்கு அனுப்பி வைக்கிறது. நாம் அதை ‘திடீர்’ என்று வந்ததாக நினைத்து வியக்கிறோம்.

சிறு வயதில் நாம் பூதம் அல்லது தேவதைக் கதைகள் நிறைய படித்திருப்போம். பாவப்பட்ட ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு கொடுமைக்காரர்கள் இரவில் ஏராளமான வேலைகளைத் தந்து மறு நாள் காலையில் அனைத்தையும் முடித்திருக்க வேண்டும் என்று கட்டளையிட்டு விட்டுப் போய் விடுவார்கள். அந்த பாவப்பட்ட ஜீவன் மீது அன்பும், இரக்கமும் கொண்ட பூதமோ, தேவதையோ அந்த வேலைகளைத் தான் எடுத்துக் கொண்டு அனைத்தையும் அசுர வேகத்தில் நேர்த்தியாக செய்து தந்து விடும் என்பதைப் படித்திருப்போம். உண்மையில் நம் ஆழ்மனம் அது போன்ற ஒரு சக்தி படைத்த தேவதையே.

சிக்கலான ஒரு பிரச்னைக்கு ஒரு தீர்வோ, அல்லது சிக்கலான ஒரு கேள்விக்கு விடையோ அறிய நாம் எந்த விதத்தில் யோசித்தும் நமக்கு பதில் கிடைக்கவில்லையானால் மேலே சொன்ன அறிஞர் பெருமக்கள் தாங்கள் அறியாமலேயே ஆழ்மனதைப் பயன்படுத்தி விடை கண்டு பிடித்தது போல நாமும் ஆழ்மனதின் உதவியை நாடலாம். அது எப்படி என்று பார்ப்போம்.

உங்கள் பிரச்னைக்கோ, கேள்விக்கோ சம்பந்தப்பட்ட அத்தனை தகவல்களையும் ஆழ்ந்து யோசித்துக் கொள்ளுங்கள். அதன் தீர்வு அல்லது விடை உங்களுக்கு மிக முக்கியமானதாக இருக்க வேண்டும். அதை மிக முக்கியமானது என்று நீங்கள் மனப்பூர்வமாக நினைக்க வேண்டும். எல்லா விதங்களிலும் சம்பந்தப்பட்ட விஷயங்களை யோசித்து விட்டு ஆழ்மனதிடம் ‘இதைக் கவனி’ என்று கட்டளையிடுங்கள். பின் அதை மறந்து விடுங்கள்.

இதைச் செய்யப் பொருத்தமான நேரம் இரவு தூங்குவதற்கு சிறிது நேரம் முன் என்கிறார்கள். மேல்மனம் உறங்க ஆரம்பித்தவுடன் 24 மணி நேரமும் விழித்திருக்கும் ஆழ்மனம் நீங்கள் தந்த அந்த வேலையை, தான் சேகரித்து வைத்திருக்கும் பல்லாயிரம் தகவல்களையும் பல விதங்களைலும் மிக நேர்த்தியாக அலசி மிகச் சிறந்த ஒரு தீர்வையோ, பதிலையோ மறு நாள் உங்களுக்குத் தந்து விடும். ஆரம்பத்தில் நீங்கள் தந்திருக்கும் வேலையின் சிக்கல் தன்மையின் கடுமைக்கேற்ப ஒரிரு நாட்கள் அதிகமாகக் கூட அது எடுத்துக் கொள்ளக் கூடும். ஆனால் இந்த விதத்தில் மிகச் சிறப்பான பதில் கிடைத்தே தீரும் என்பது பலரின் அனுபவம்.

இதில் மூன்று விஷயங்கள் முக்கியம். முதலாவது அது உண்மையாகவே உங்களுக்கு முக்கியமானதாக இருக்க வேண்டும். நீங்கள் அது சம்பந்தமாக நிறைய தேவையான தகவல்களை அலசி இருக்க வேண்டும். (தகவல்கள் என்ற பெயரில் கவலைகள், பயங்களை ஆழ்மனதிற்கு அனுப்பி விடாமல் இருப்பது முக்கியம்). மூன்றாவது ஆழ்மனதிடம் ஒப்படைத்து விட்ட பின் விரைவில் அதனிடம் இருந்து தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உங்களுக்கு அவநம்பிக்கை இருக்கக் கூடாது.

(ஒன்பதாவது அத்தியாயத்தில் மைக்கேல் க்ரிஸ்டன் என்ற பிரபல ஆங்கில சினிமா டைரக்டர் ஸ்பூன்களைப் பார்வையாலேயே மடக்கும் சம்பவங்கள் பற்றிக் குறிப்பிடுகையில் நன்றாக கவனத்தைக் குவித்து விட்டு பிறகு கவனத்தை வேறிடத்திற்குத் திருப்பின பிறகு தான் இந்த சக்தி வேலை செய்கிறது என்பதை வியப்புடன் சொல்லி இருப்பதைக் குறிப்பிட்டிருந்ததைப் படித்திருப்பீர்கள். அதற்கும் காரணம் இது தான். மேல்மனம் நன்றாக முயன்று விட்டு பின் அதிலிருந்து கவனத்தை திருப்பி விட்ட பின் ஆழ்மனம் அதைத் தன் பணியாக எடுத்துக் கொண்ட பிறகு தான் சக்தி வேலை செய்ய ஆரம்பிக்கிறது)

இரவு உறங்கப் போகும் நேரத்திற்கு முன் ஓரிரு மணி நேரம் ஆழ்மனம் சம்பந்தப்பட்ட மிக முக்கியமான நேரம். இந்த நேரத்தில் அதிகமாக நாம் எண்ணும் எண்ணங்களே பெரும்பாலும் நம் உறக்கத்தில் ஆழ்மனதால் அதிகம் அலசப்படுகின்றன. அதனால் அந்த நேரத்தில் சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள், துக்ககரமான அல்லது வன்முறை சீரியல்கள் ஆகியவற்றைத் தவிர்த்து விடுதல் நல்லது. அந்த நேரத்தில் நல்ல புத்தகங்கள் படித்தல், மனதிற்கு இதமான இசை கேட்டல், நமக்குப் பயன்படும் விஷயங்களில் ஈடுபாடுடைய செயல்கள் செய்வது எல்லாம் மிக நல்லது.

முக்கியமாக நம்முடைய இலட்சியங்கள், குறிக்கோள்கள் குறித்து அந்த நேரத்தில் நினைவு படுத்திக் கொள்ளுவதும், அது சம்பந்தமான செயல்களில் அந்த நேரத்தில் ஈடுபடுவதும் நாம் விரைவில் இலக்கை அடைய மிகவும் உதவும்.

இனி ஆழ்மனதின் சக்தியை அதிகரித்து பயன்பெற முக்கியமான அடுத்த பயிற்சியைப் பார்ப்போமா?

மேலும் பயணிப்போம்.....

அனைத்தும் ஆக்கிரமிப்பு...


அதிகாரிகளின் அலச்சியத்தால் நடந்த விபரீதம். காசு வாங்கிக் கொண்டு பட்டா கொடுத்தால் இப்படித் தான் ஆகும்...

இரத்தத்தில் உள்ள அதிகமான சர்க்கரை அளவைக் குறைக்கும் அற்புத மருந்து...


தற்போது உலகில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டியிருக்கும்.

ஒருவரது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாவதற்கு மோசமான உணவுப் பழக்கங்கள், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, குறிப்பிட்ட மருந்துகள் மற்றும் சில உடல்நல பிரச்சனைகள் தான் காரணம். இப்போது இரத்த சர்க்கரை அளவு அதிகம் இருந்தால் தென்படும் அறிகுறிகள் மற்றும் அதற்கான ஓர் இயற்கை மருந்து குறித்து காண்போம்.

அறிகுறிகள்...

இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், வாய் வறட்சி, வயிற்று பிரச்சனைகள், எப்போதும் தாகம், சருமத்தில் வறட்சி மற்றும் அரிப்பு, பாலியல் உறவில் நாட்டமின்மை, கவனச் சிதறல், நரம்பு பிரச்சனைகள், எந்நேரமும் பசியுணர்வுடன் இருப்பது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, இரவில் சிறுநீர் கழிப்பது, நாள்பட்ட சோர்வு, மங்கலான பார்வை, அடிவயிற்றில் கொழுப்புக்களின் தேக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும்.

மருந்து தயாரிக்க தேவையான பொருட்கள்:

தண்ணீர் - 1 லிட்டர்

கிராம்பு - 60 கிராம்

பட்டை - 4 துண்டுகள்

தயாரிக்கும் முறை:

நீரில் கிராம்பையும், பட்டையையும் போட்டு கலந்து, ஃப்ரிட்ஜில் 5 நாட்கள் ஊற வைக்க வேண்டும். 5 நாட்கள் கழித்த பின் மருந்து தயாராகிவிட்டது என்று அர்த்தம்.

எப்போது பருக வேண்டும்?

இந்த பானத்தை தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன் 100 மிலி குடிக்க வேண்டும்.

இப்படி தினமும் குடித்து வர, உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்பட்டிருப்பதுடன், இரத்த சர்க்கரை அளவு குறைந்திருப்பதையும் காணலாம்...

பாஜக மோடியும் இந்தியா விற்பனையும்...


புதிய டாஸ்மாக் கடைகள் திறக்கத் தடை, - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு...


தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகளைத் திறக்கத் தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக வழக்கறிஞர் பாலு பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், தேசிய நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடை திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதைத் தவறாகப் புரிந்துகொண்டு, தமிழக அரசு செயல்படுவதாகவும் மாநில நெடுஞ்சாலைகளாக மாற்றி புதிய டாஸ்மாக் கடைகளைத் தமிழக அரசு திறந்துவருவதாகவும் கூறப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவால் 3000-த்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்ட நிலையில், தமிழக அரசு 1,800 கடைகளைத் திறந்துள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், தமிழகத்தில் 1800 கடைகள் திறக்கப்பட்டிருப்பதாகக் கூறுவது தவறு. இதுவரை 800 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவில் விளக்கம் கேட்டுப் பெற தமிழக அரசுக்கு நவம்பர் 20-ம் தேதி வரை அவகாசம் அளித்த நீதிமன்றம், அதுவரை தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகளைத் திறக்கத் தடை விதித்து உத்தரவிட்டு, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது...

பயணிகளின் உயிர் காத்த மகாத்மா...


ரூ.20 ஆயிரம் கடனுக்கு ரூ.54 ஆயிரம் வட்டி கட்டியும், விடாத கந்து வட்டிகாரர்கள், தம்பதியினர் கண்ணீர்...


திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின்போது திருச்சியை அடுத்த உய்ய கொண்டான் திருமலை சண்முகா நகர் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி- ஹேமலதா தம்பதியினர் தங்களது கைக்குழந்தைகளுடன் வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் மனு வாங்கி கொண்டிருந்த மாவட்ட வருவாய் அதிகாரி பஷீரிடம் கண்ணீர் மல்க ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

நாங்கள் குடும்ப வறுமையின் காரணமாக எங்கள் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் வட்டிக்கு ரூ.20 ஆயிரம் கடன் வாங்கி இருந்தோம். இந்த தொகைக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் 18 மாதங்களுக்கு ரூ.54 ஆயிரம் வாங்கி கொண்டனர். இந்நிலையில் தொடர்ந்து எங்களிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டி வந்தார்கள். நாங்கள் எங்களிடம் வேறு பணம் இல்லை. எங்களால் இனி வட்டி கட்ட முடியாது. அசல் பணத்தை தந்து விடுகிறோம் என கூறி முதல் தவணையாக ரூ.5 ஆயிரம் கொடுத்தோம். ஆனால் அவர்கள் அதனை அசல் தொகையில் சேர்க்காமல் 2 மாத வட்டியாக கழித்துக்கொண்டதாக கூறினார்கள். அவர்களது காலில் விழுந்து கதறியும் கேட்காமல் தொடர்ந்து எங்களை மிரட்டி வருகிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லை என்றால் எங்களை கருணை கொலை செய்து விடுங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த புகார் மீது உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்...

நவபாஷாணம் என்றால் என்னவென்று தெரியுமா?


நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்த்ர்கள் முறைப்படி கட்டுவதாகும்.

பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன. இதில் நீலி என்றொரு வகையும் உண்டு. நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும்.

ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல், இயற்பியல் பண்புண்டு. அதை சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள். ஒன்பது பஷாணங்கள் என்னவென்றால்..

1.சாதிலிங்கம்.
2.மனோசிலை
3.காந்தம்
4.காரம்
5.கந்தகம்
6.பூரம்
7.வெள்ளை பாஷாணம்
8.கௌரி பாஷாணம்
9.தொட்டி பாஷாணம்

இந்த நவ பாஷாணத்தின் தனமையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன. நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே ச்த்தியமான விஷயமாகும். நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள், நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும்.

தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன.பழனி மலைக்கோவில், கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை, குழந்தை வேலப்பர் கோயில். மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது, இதில் இரண்டு போகர் உருவாக்கியவை. தேவிப்பட்டிணத்தில் உள்ளவை யார் உருவாக்கியவை என தெரியவில்லை.

நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவ த்தை உடையது; நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழி படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும்.

பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம்.

இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாண முருகர் சிலையை உருவாக்கினார்.

இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் / சாப்பிட்டால் தீராத நோய் எதுவாக இருந்தாலும் தீர்ந்து விடும்...

வங்கி மோசடி... என்ன கொடுமை சார் இது...


பா.ஜ.க மூன்றாண்டு ஆட்சி...


சென்னை வந்த பிரதமர் மோடி அவர்கள், முதலில் திருமணத்தில் கலந்து கொண்டார், பின்பு தந்தி விழாவில், அதன் பின்பு கலைஞர் கருணாநிதி அவர்களை சந்தித்தார்...


இவ்வாறாக இருந்த பிரதமர் பயணத்தில் செய்தியாளர் சந்திப்பு இல்லாமல் போனது..

ஏன் தொடர்ந்து இவர் செய்தியாளர் சந்திப்பை புறக்கணிக்கிறார்?

பாஜக பிரச்சார மேடைகளிலும் , ரேடியோவிலும் பேசிவிட்டு உடனே சென்று விடுகிறார்.

இதர பொது  நிகழ்ச்சிக்கு வந்தாலும் பத்திரிக்கையாளர் சந்திப்பை புறக்கணிக்கிறார், காரணம் என்ன ??

மேலும்  மதுவுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்ததன் மூலம் தமிழகம் முழுவதும் அறிமுகமான தோழர் Nandhini Anandan மற்றும் அவரது தந்தை இருவரும்,  சென்னைக்கு வந்த பிரதமர் மோடியிடம்  ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதாகச் சொன்ன வாக்குறுதி என்ன ஆனது என்று மோடியை நோக்கி கேள்விகேட்க இருப்பதாக முகநூளில் சொல்லி இருந்தனர்.

இதை அறிந்த அதிகார வர்க்கம்  நேற்று முன்தினம் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக கைது செய்தது பின்பு  பிரதமர் மோடி டெல்லி திரும்பியதைத் தொடர்ந்து நேற்று மாலை அவர்கள் விடுவித்தது.

வாக்குறுதியை குறித்து கேள்விகேட்க சக குடிமகனுக்கு உரிமை இல்லையா ? பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பவர்களைதானே  கைது செய்யவேண்டும்.

தோழர் நந்தினி மற்றும் வேளாண் அலுவலர் தோழர்  ஆனந்தன் போராட்ட அறிவிப்புக்கு வாழ்த்துக்கள்.

உங்கள் இருவரை கண்டு அஞ்சி ஓடி ஒழிந்து கொண்டார் நாட்டின் 56 இஞ்சு சொங்கி.

மது, ஊழலுக்கு எதிராகத் தொடர்ந்து போராடுகின்ற உங்கள் போராட்டம் நிச்சயம் ஒரு நாள்  வெல்லும்.

- சமூக ஆர்வலர்,  யூசுப்_ரியாஸ்...

திமுக வின் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் தீர்ப்பு பற்றி டிசம்பர் 5-ம் தேதி அறிவிக்கப்படும்-டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு...


விவசாயியை கொலை செய்த அதிகாரிகளுக்கு பாதுகாப்பு, இறந்த விவசாயி மீது வழக்கு...


இசக்கிமுத்து குடும்பம் தீயில் வேகுது, கந்துவட்டி குண்டர்களுக்கு இரண்டடுக்கு பாதுகாப்பு..

தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சமூக செயல்பாட்டாளர்களுக்கு சிறை..

யாருக்காக உங்க ஆட்சி?

மோடி-எடப்பாடி அரசின் அடக்குமுறைக்கு எதிரான ஆர்ப்பாட்டம்.

கூடங்குளத்தில் போராடிய மக்களுக்காக வழக்காடிய வழக்கறிஞர் செம்மணியை காவல்துறையினர் சட்டவிரோதமாக கடுமையாக தாக்கி உள்ளனர்.

மணல் கொள்ளைக்கு எதிராகவும், சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்காகவும் தொடர்ந்து போராடி வரும் தோழர் முகிலனை காவல்துறையினர் வழிமறித்து தூக்கிச் சென்றுள்ளனர்.

தோழர் கார்ட்டூனிஸ்ட் பாலாவை வீடு புகுந்து அவரது குடும்பத்தினரை மிரட்டி இழுத்துச் சென்றுள்ளனர்.

கார்ட்டூன் வரைந்தால் சிறை, துண்டறிக்கை கொடுத்தால் சிறை, மெழுகுவர்த்தி ஏந்தினால் சிறை, மக்களுக்காக போராடினால் சிறை...

இன்னும் எத்தனை பேரை சிறை வைக்க முடியும் உன்னால்?

போராடுவது நம் அடிப்படை உரிமை. தமிழரின் உரிமைக்காக போராடுபவர்கள் மீதெல்லாம் இந்த அரசு அடக்குமுறையை ஏவிக் கொண்டிருக்க எத்தனை நாள் நாம் வேடிக்கை பார்ப்போம்.

நவம்பர் 10 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் அடக்குமுறைக்கு எதிராக சேப்பாக்கம் மைதானம் எதிரில் திரள்வோம். நாம் பலம் வாய்ந்தவர்கள் என்பதை அரசுக்கு காட்டுவோம்.

அனைவரும் வாருங்கள்.

- மே பதினேழு இயக்கம்...

பாஜக மோடி நம்மை நடுத்தெருவில் நடு இரவில் நிற்க வைத்த துக்க தினம்...


ஆகாயத்தில் ஒரு ஒளி : அத்தியாயம் - 2... உண்மைகள் உறங்குவதில்லை - பகுதி 5...


இந்த 5-ம் தீர்க்க தரிசனப் பகுதியில் பல குறிப்புகள் இடம் பெற உள்ளன. அதில் முதலாவது குறிப்பு என்னவெனில் “ஆகாயத்தில் ஒரு ஒளி“ என்ற தீர்க்க தரிசனப் பகுதியில் நாம் ஏற்கனவே வெளியிட்ட 4-ம் தீர்க்க தரிசனம் குறிப்புகளில் சில விஷயங்கள் நடக்க உள்ளன. அவைகள் நடைபெறும் காலக் கட்டமாக இக்காலம் இருக்கும் என்றும், இச்சமயத்தில் அரசியல் தலைவர் ஒருவரின் மரணச் செய்தியினை நமது இந்திய தேசம் அறிய உள்ளதாக 5-ம் தீர்க்க தரிசனத்தின் முதல் குறிப்பு நமக்கு சுட்டிக் காட்டுகின்றன.


தற்போது உருவாகும் மகா புயல் ஒன்று தென் தமிழகத்தையே படாது பாடுபடுத்தும் என்றும், மக்கள் பலர் இறக்க நேரிடும் சம்பவம் நிச்சயம் நடக்க உள்ளதாக மற்றொரு தீர்க்க தரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.



சோழவந்தான் என்கிற பகுதியில் பல திடுக்கிடும் சம்பவங்களும் அதிசயங்களும் நடக்க உள்ளதாக 5-ம் தீர்க்க தரிசனப் பகுதியில் இடம் பெறும் மற்றொரு குறிப்பு இதனை தெரிவிக்கின்றது. அதே சமயத்தில் தேவகோட்டை என்ற ஊரில் உள்ள ஒரு மலைக் கோவிலில் மாபெரும் புதையல் ஒன்று கண்டறியப்படும் என்றும், அங்கு சித்தர் ஒருவரின் ஜீவ சமாதி கண்டறியப்படும் என்ற குறிப்பு இந்த 5-ம் தீர்க்க தரிசனப் பகுதியில் இடம் பெறும் மற்றொரு குறிப்பாகும்.


மாயாவரம், மயிலாடுதுறை இவை இரண்டும் ஒன்றாக இருப்பினும் இரண்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இவை இரண்டிற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அந்த வகையில் ஜீவ சமாதி அடைந்த சித்தர் ஒருவரின் சமாதி இம்மண்ணில் கண்டறியப்படும் என்றும், இந்த ஜீவ சமாதி கண்டறியப்படும் சமயத்தில் மாபெரும் புயல் ஒன்று தமிழகத்தை புரட்டிப் போடும் மகா சோகச் சம்பவம் நடக்க உள்ளதாக 5-ம் தீர்க்க தரிசனப் பகுதி இங்கு நமக்கு சுட்டிக் காட்டுகின்றன.


வரலாற்று சிறப்புமிக்க மன்னன் ஒருவரின் கல்லறை கண்டறியப்படும் என்றும், அவன் சோழ வம்சத்தை சேர்ந்த அரசன் என்றும், அந்த அரசனின் கல்லறைக்கு கீழே மிகப்பெரிய நகரமே பூமியில் ஆழத்தில் மறைந்து கிடக்கும் என்றும், இதனை அகழ்வராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உலகத்திற்கு அறிவிக்கும் சம்பவம் வரும் மாதங்களில் நடக்க உள்ளதாக 5-ம் தீர்க்க தரிசனம் கூறுகிறது.



மயானக் கொள்ளை நடக்கும் திருவிழாவிற்கு பெயர் பெற்ற ஒரு ஊரில் இறையின் அம்சம் வெளிப்படும் சம்பவம் ஒன்று நடந்தேறிட உள்ளதாக 5-ம் தீர்க்க தரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அம்மன் வழிபாட்டில் இத்தகைய அதிசயம் ஒன்று நடந்தேறும் என்று 5-ம் தீர்க்க தரிசனம் தனது குறிப்பை இங்கு பதிவு செய்கிறது.


காலம் சென்ற ஒரு நடிகரின் வாரிசு மரணத்தை தழுவும் சம்பவம் ஒன்று தற்போது திடீரென்று நடக்க உள்ளதாகவும், இச்சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் புரட்சி ஒன்று திடீரென்று மக்களிடையே வெடித்து பல இன்னல்களை தமிழக மக்களிடையே ஏற்படுத்தும் சம்பவம் நடக்க உள்ளதாக 5-ம் தீர்க்க தரிசனப் பகுதிகளில் இடம் பெறும் குறிப்புகள் இதனை தெரிவிக்கின்றன.


மன்னார் வளைகுடாவில் ஏற்படும் மகாப்புயல் தற்போது கரையை கடக்காது என்றும் அது 21 நாட்கள் தன் சுழற்சியை இலங்கை, இந்தியா மீது கடுமையாக வெளிப்படுத்தும் என்றும் இதனால் 80 % சேதங்கள் ஏற்படும் சம்பவம் நிச்சயம் நடக்க உள்ளதாக 5-ம் தீர்க்க தரிசனக் குறிப்பு ஒன்று இங்கு நமக்கு ஒரு எச்சரிக்கையை விடுவிக்கின்றது.


தாய்லாந்து கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதி என்றும், அங்கே வசிக்கும் மக்களிடையே ஒரு இனக்கலவரம் வெடிக்கும் ஆபத்தான சூழ்நிலை உருவாகிட உள்ளதாக மற்றொரு தீர்க்க தரிசனப் பகுதி இங்கு நமக்கு சுட்டிக் காட்டுகின்றது.

மகாத்மா காந்தி வாழ்ந்த ஊரில் மிகப்பெரிய கலவரம் ஒன்று நிகழ உள்ளதாகவும் அதற்கு ஒரு கட்சியே பொறுப்பாக இருக்கும் என்று செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.


மத்திய சென்னை, வட சென்னை மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதிகள் என்றும், இங்கு பூமி வெடிப்பு நிகழ்வு ஒன்று திடீரென்று நடக்க உள்ளதாக 5-ம் தீர்க்க தரிசனக் குறிப்புகள் நமக்கு தெரிவிக்கின்றன.


கல்கத்தா நினைவில் கொள்ள வேண்டிய பகுதி என்றும், புயலால் பலத்த சேதங்களை சந்திக்கும் நிகழ்வு உடனே நடந்தேறும் என்றும், அந்த மாநில அரசு பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடும் என்று 5-ம் தீர்க்க தரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.


சமயபுரம் இனி கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய பகுதி என்றும், அப்பகுதியில் ஆன்மீகம் சார்ந்த ஒரு முக்கிய நிகழ்வு நடக்க உள்ளதாகவும், அங்கு மாரியம்மனின் அதிசய நிகழ்வு ஒன்று நடக்க உள்ளதாகவும், அதனை தொடர்ந்து மக்கள் கூட்டம் வேறு ஒரு திசைக்கு மாறி செல்லும் சம்பவம் ஒன்று விரைந்து நடக்க உள்ளதாக 5-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை நமக்கு சுட்டிக் காட்டுகின்றது.


பஞ்சாப் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய பகுதி என்றும், அங்கு மக்களிடையே ஒரு பின்தங்கிய பழக்க வழக்கம் கடைபிடிக்கும் சம்பவம் அதிகமாக நடக்கும் என்றும், இதனால் அரசியல் வட்டாரத்தில் பல மாற்றங்கள் நடக்கும் சம்பவங்கள் அரங்கேறும் என்று 5-ம் தீர்க்க தரிசனம் நமக்கு சுட்டிக் காட்டுகின்றது.

நாடாளும் மன்னன் ஒருவனுக்கு இது போதாத காலம் என்றும், அவனின் மரணம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட  உண்மை என்றும் 5-ம் தீர்க்க தரிசனம் தனது குறிப்பை இங்கு சுட்டிக் காட்டுகின்றது.


வேதாளம் எனும் கதையில் இடம் பெறும் ஒரு மன்னவனின் இரகசிய பாதாள அறை ஒன்று இந்தியாவில் கண்டறியப்படும் என்றும், அதன் பிறகு பல வியத்தகு அதிசய சம்பவங்கள் தமிழகத்தில் நடக்கும் என்றும், இச்சம்பவத்தினால் புராண காலத்து விடயங்களை மக்கள தேடும் சம்பவங்கள் அதிகமாக இந்தியாவில் நடக்க உள்ளதாக 5-ம் தீர்க்க தரிசனம் தனது குறிப்பை நமக்கு தெரிவிக்கின்றது.

காலத்துக்குள் இறைவனின் பயணம் நடக்கும் என்றும், அந்த அதிசயத்தை காணும் பாக்கியம் நமக்கு கிடைக்கும் போது “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற கூற்றை மக்கள் நம்பும் பொற்காலம் வந்துவிட்டது என அறிஞர்கள் கூறும் பல சம்பவங்கள் நடக்க உள்ளதாக 5-ம் தீர்க்கதரிசனம் நமக்கு குறிப்பை தருகின்றது.

தென் தமிழகத்தில் உள்ள ஒரு ஆன்மீக குடிலில் பல திடுக்கிடும் சம்பவங்கள் நடக்கும் என்றும், அதன் நிர்வாகி அதனை சமாளிக்க முடியாமல் மரணத்தை சந்திப்பார் என்ற செய்தியினை 5-ம் தீர்க்க தரிசனம் இங்கு தமது கூற்றை பதிவு செய்கிறது.

வாழும் கலை யின் வாயிலாக மக்கள் பல செய்திகளை அறிந்து கொள்ளும் காலக் கட்டம் இதுவென்றும், இக்காலக் கட்டத்தில் ஆன்மீக அமைப்பு ஒன்று திடீரென்று ஆய்வு செய்யப்படும் நிகழ்வு நடக்க உள்ளதாக 5-ம் தீர்க்க தரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

உண்மைகள் உறங்காது அது தனது நிகழ்வுகளை எப்பொழுதுமே வெளிப்படுத்தும் என்று 5-ம் தீர்க்க தரிசனம் இங்கே தனது கருத்தை பதிவு செய்கிறது.

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல.

அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...

யார் மடையர்கள்?...



ஏரியை வடிவைமைத்த பிறகு அதிலிருந்து தண்ணீர் வெளியேறத் தமிழன் கண்டுபிடித்த தொழில்நுட்பம் தான் மடை...

மடைகளை அமைக்க முதலில் பனைமரங்கள் பயன்படுத்தப்பட்டன. .

வைரம் பாய்ந்த கட்டை என்று சொல்லப்படும் மரங்களையே தேர்வு செய்து அதன் உள்தண்டை நீக்கிவிட்டால் உறுதியான நீண்ட குழாய் தயாராகி விடும். அதனை ஏரியின் அடியாழத்தில் பதித்து, அதன் உள் ஓட்டையில் கோரை, நாணல், களிமண் கலந்து அடைத்து விடுவார்கள். இதுதான் ஆரம்பகால மடை. பிற்காலங்களில் பாறைகள், மரச்சட்டங்களில் மடைகள் அமைக்கப்பட்டது.

வெள்ளக்காலங்களில் மடைகளைத் திறப்பதற்கு என்றே ஆட்கள் இருப்பார்கள். மடையைத் திறப்பது சாதாரண விடயமில்லை. உயிரைப் பணயம் வைத்து நீருக்குள் மூழ்கிச் செய்யும் பெரிய சாகசப்பணியாகும்.

மழையால் ஏரியில் தண்ணீர் நிரம்பி, கரையை உடைத்துக்கொண்டு செல்வதற்குமுன், ஒரே ஒருவர் மட்டும் ஏரிக்கரைக்குச்சென்று கடல்போல் கொந்தளிக்கும் ஏரிக்குள் குதிப்பார். மூச்சடக்கி நீரில் மூழ்கி அடியாழத்தில் இருக்கும் மடையின் அடைப்பை திறந்து விடுவார். மடை திறந்ததும் புயல் வேகத்தில் வெளியேறும் வெள்ளம் மடைத்திறந்தவரையும் இழுத்துச் செல்லும். அந்த வேகத்திலிருந்து தப்பி பிழைப்பது மிகவும் கடினம்.

மடை திறக்க செல்பவர்கள் உயிர்பிழைப்பது அரிது. அவர்கள் தம் மனைவி, பிள்ளைகள் மற்றும் அனைவரிடம் பிரியா விடை பெற்றுச்செல்வார்கள். மடை திறக்கச் சென்று மாண்டவர்கள் அதிகம், மீண்டவர்கள் குறைவு. இவர்கள்தான் "மடையர்கள்" என அழைக்கப்பட்டார்கள்.

வரலாற்றின் பக்கங்களில் இந்த தியாகிகளைப் பற்றிய குறிப்புகள், கல்வெட்டுக்கள், பதிவுகள் எதுவும் இல்லை. வரலாறு எழுதுபவர்கள் இதைக் கருத்தில் கொள்ளலாம் அல்லவா? எம் குழந்தைகளுக்கு இவ்வீரத் தமிழ்த்தியாகிகளின் வாழ்வு ஒரு ஊக்கத்தையும் தியாகத்தையும் ஊட்டும் அல்லவா?

இனி யாரையாவது மடையா என்று திட்டம் முன் யோசிக்க வேண்டியது தான்.....

ஜலதோஷம், மூக்கடைப்பா....? இதோ பக்க விளைவுகளும் மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம்...


உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோஷம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது. அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது.

இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லையா... கவலையே வேண்டாம். மிக மிக உடனடியாக ஜலதோஷத்தை குணப்படுத்தும் மருந்துகள் இதோ, உங்களுக்காக...

முதலில் ஜலதோஷம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் ( மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது,

தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது.

ஜலதோஷம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோஷம் வரப்போகிறது என்பதை கண்டு பிடிக்கலாம்.

இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும். தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோஷம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.

மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்பு...

மண்டையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோஷம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது. தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்று விரிவாகத் தெரியப்படுத்துகிறோம்.

மஞ்சளையும், வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பையும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் மருந்து கிடைக்கும்.

மண்ண்டையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும்..

பூசிய பிறகு நன்றாக உறக்கம் வரும்..  உறங்கி எழுந்த பிறகு பாருங்கள் உங்களுக்கு ஜலதோஷம் சளி பிரச்சனை இருந்த இடம் தெரியாமல் போய் இருக்கும்..

இந்த மருந்தை இரவு படுக்கப் போகும் முன்னும்  பூசிவிட்டு படுக்கலாம், ஒரே நாளில் இரண்டு முறை பயன்படுத்தினாலும் எந்தப்பக்க விளைவுகளும் இல்லை...

ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, 4 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது...


நாஸ்கா கோடுகள் - Nazca Lines...


அறிவியலின் அதீத வளர்ச்சியினால் மனிதன் பல புதிய விஷயங்களை கண்டுபிடிக்கிறான். செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளதா என கண்டறிய முயற்சி செய்கிறான். அப்படிப் பட்ட அறிவியல் வளர்ச்சியால் கூட ஒரு சில மர்மங்களுக்கு விடை காண இயலவில்லை.  அதில் ஒன்று தான் நாஸ்கா கோடுகள்.

பெரு நாட்டின் தெற்கில் அமைந்திருக்கும் நாஸ்கா பாலைவனத்திலிருந்து, லிமா, பல்பா, பம்பாஸ் சமவெளிகளுக்கிடையே 400 கி.மீ., சுமார் தெற்கு கடற்கரை அமைந்துள்ள மிகப்பிரமாண்டமான கோடுகள் அவை. சாதாரணமாக நிலத்தின் மீது நின்று பார்த்தால் இவைகள் நீண்ட ஒற்றையடி பாதைகள் போலவும், வாய்க்கால்கள் போலவும் தெரியும். ஆனால் விமானத்தில் இருந்து பார்த்தால் இந்த கோடுகள் விமானங்கள் தரையிறங்கும் ஓடுதளம் போலவும், குரங்கு, நாய், மனிதன், பறவை போன்ற உருவங்கள் போல காணப்படும்.

1920 ல் இந்த வழியாக விமானத்தில் பறந்து சென்ற சுற்றுலா பயணிகளால் எதேச்சையாக கவனிக்கப்பட்டு கண்டறியப்பட்டவை இவை . அதுவரை இவைகள் சிறிய சாலைகள் போலவும், வாய்க்கால்கள் போலவும் பார்க்கப்பட்டு வந்தன.

இவை கி. மு. 600 முதல் கி. பி. 200 க்குள் வரையப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையானது என வல்லுனர்கள் கூறுகின்றனர். இதில் அதிசயம் என்னவென்றால் அன்றைய தொழில் நுட்பத்தில் இப்படிப்பட்ட சீரான நீண்ட, முறையான கோடுகளும் சித்திரங்களும் எவ்வாறு வரைய முடிந்தது என்பதுதான். அதனால் இந்த கோடுகளை பற்றி நிறைய கருத்துக்கள் நிலவுகின்றன.

இங்குள்ள நிலத்தில் கருப்பு நிற கற்கள் உள்ளன. 1998 ல் வந்த ஒரு வெள்ளத்தில் இந்த பகுதியின் தார் சாலைகள் பாதிக்கப்பட்டதாம். இருந்தும் ஆச்சர்யமாக இந்த கோடுகள் சிதையவில்லை. இதில் விமானம் ஓடுதளம் போன்ற ஒரு பட்டை 2 கி. மீ. நீளம் கொண்டது. இந்த பட்டை மிக சீராக நேரே செல்கிறது. இவ்வளவு தூரத்திற்கு இதை எப்படிதான் நிலத்தில் வரைந்தார்கள் என்று அதிசயிக்க வைக்கிறது.

இதைவிட ஆச்சர்யதக்க வகையில் மலைகளின் மீது பல கைகளை கொண்ட ஒரு உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அறிவியலாளர் ஜானி இஸ்லா கருத்துப்படி இந்த கோடுகள் கி. மு. 500 இல் பரகாஸ்  (Paracas) சமூகத்தினரால் உருவாக்கப்பட்டு கி. மு. 50 இல் நாஸ்க்கா சமூகத்தினரால் மேம்படுத்தப்பட்டது என அறியப்படுகிறது. டொர்பியோ மெஜ்ஜியா என்பவர்தான் இந்த கோடுகளைப் பற்றி 1927 இல் முதலில் ஆராய்ந்தார். அவர் இந்த கோடுகளை இன்கா சமூகத்தினரால் பயன்படுத்தப்பட்ட விமான ஓடுதளம் என்றார்.

அறிவியலாளர் மைக்கல் கேயே கூற்றுப்படி அன்றைய சமூகத்தினரால் இவைகள் தங்கள் மூதாதையருடன் தொடர்புபடுத்தும் பாதைகள் எனவும், தங்கள் விளை நிலத்திற்கு நீர் கொடுக்கும் பாதைகள் எனவும் நம்பப்பட்டதாம். மாரியா ரிச்சே எனும் கணிதவியலாளர் இக் கோடுகள் வானவியல் நாட்காட்டி என்கிறார். இந்த பட்டைகள் முக்கிய​ நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் இடத்தை குறிக்கின்றது என்கிறார். ஒரு சிலர் இந்த கோடுகள் வேற்று கிரக வாசிகளால் உருவாக்கப்பட்டவை என்று கூறுகின்றனர். வேறு சிலர் இவை வேற்று கிரக வாசிகளை தொடர்பு கொள்ள வரையப் பட்டதாக கூறுகின்றனர். இருப்பினும் இவை உருவாக்கப் பட்டதற்கான காரணங்களை கண்டறிய முடியவில்லை...

திராவிடன் யார்.?


1944 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சியின் மாநாட்டில் நீதிக்கட்சியின் பெயரை,  கன்னட ஈ.வெ.ரா திராவிடர் கழகம் என்று மாற்ற முயன்ற போது அதன் பெயரை "தமிழர் கழகம்" என்று மாற்றச்சொல்லி கி.ஆ.பெ விசுவநாதன் உள்ளிட்ட தலைவர்கள் முயன்றனர்.

ஆனால் ஈ.வ.ரா விடாப்படியாக மறுத்து
திராவிடர் கழகம் என்றே பெயர் மாற்றினார்.

அதற்கு அவர் சொன்ன காரணம் தமிழர் கழகம் என்று சொன்னால் இங்கே உள்ள பார்ப்பனரும்..

நாங்களும் இங்கேயே பிறந்து வளர்ந்து தமிழ்தான் பேசி  வாழ்ந்து வருகிறோம்..

அதனால் நாங்களும் தமிழர்கள்தான் என்று வந்துவிடுவார்கள்.

(இதற்கு பெயர் என்ன வெறி)

ஆனால் திராவிடன் என்று சொன்னால் எந்த பார்ப்பனரும் நான் திராவிடன் என்று உள்ளே வரமாட்டார் என்று காரணம் சொன்னார்.


( அதாவது இங்கேயே பிறந்த வளர்ந்த தமிழ் பேசும் பார்ப்பான் உள்ளே வரக்கூடாது..  ஆனால் இங்கே பிறந்து வளர்ந்து பிறமொழி பேசும் தெலுங்கரோ , கன்னடரோ, மலையாளியோ ஆண்டால் பரவாயில்லை.. அவர்களிடம் தமிழன் அடிமையானாலும் பரவாயில்லை )

ஆனால் உண்மையில் திராவிடர் என்ற சொல் பார்ப்பனர் அல்லாதவரை குறிக்கும் சொல் அல்ல.

வட இந்தியாவில் வாழும் பார்ப்பனர்கள் தென்னிந்தியாவில் ஐந்து நிலப்பகுதியில்  வாழும் பார்ப்பனர்களை  குறிக்கவே திராவிடர் என்ற சொல்லை பயன்படுத்தினர்.

தென்னிந்தியாவில் வாழும் சில பார்ப்பனர்களின் குடும்ப பெயரிலேயே திராவிடன் என்று பெயர் வழங்கப்பட்டது.

கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் விடம்  உங்கள் பெயரின் பின்னால் திராவிட் என்று வருகிறதே என்று கேட்டதற்கு நாங்கள். கும்பகோணத்தை சேர்ந்த பிரமாணர் குடும்பம் என்று பதிலளித்தார்.

சனாதான தர்மத்தை மறுபரிபாலனம் செய்த ஆதிசங்கரர் தனது சௌந்தர்ய லகரி என்ற நூலில் திருஞான சம்பந்தரை திராவிட சிசு என்று குறிப்பிடுகிறார்.


ஆதிசங்கரர் கேரளாவில் பிறந்த பிராமணர்.

திராவிடம் என்ற பெயரை பயன்படுத்திய கால்டுவெல்லும் தான் திராவிடம் என்ற சொல்லை சம்ஸருத நூலான ஆரியர்களின் மனுஸ்மிருதியிலிருந்து எடுத்தேன் என்று கூறியுள்ளார்.

ஆரியத்தையையும., மனுதர்மத்தையும் கடுமையாக எதிர்க்கும் அவையெல்லாம் பொய் புரட்டு கட்டுக்கதைகள் என்று சொல்லும் திராவிட அறிவு ஜீவிகள் தங்களது இயக்கத்திற்கு பெயரை அதே மனுஸ்மிருதியிருந்து எடுத்து பயன்படுத்துகிறார்கள்.

ஒரே ஒரு சங்கத்தமிழ் இலக்கியத்தில் கூட திராவிடம் என்ற சொல் பயன்படுத்தியதில்லை.

மனுஸ்மிருதி நம்மையெல்லாம் திராவிடன் என்று இழிவாக சொல்கிறது. அதையே நமது பெருமைக்குரிய அடையாளமாக மாற்றவே நாம் திராவிடம், திராவிடன் என்று பெருமையாக சொல்லிக் கொள்கிறோம் என்கிறார் சுப.வீ..

அதே மனுஸ்மிருதி தான் நம்மையெல்லாம் சூத்திரன் என்கிறது. அதை தூக்கி போடுங்கள் என்று சொல்வதும் இதே திராவிட அறிவு ஜீவிகள் தான்.

இரண்டும்  ஒன்றுக்கொன்று முரண்.

மனுஸ்மிருதியில் அவன் கொடுத்த சூத்திரப்பட்டம் எவ்வுளவு இழிவானதோ..

அதை விட இழிவானது அவன் சொன்ன திராவிடன் என்ற சொல்லை பயன்படுத்தி இன்னும் தமிழர்கள் தங்களை தாங்களே திராவிடன் என்று சொல்லிக் கொள்வது..

ஆக திராவிடர் என்றால் அதில் பார்ப்பானர்கள் வரமாட்டார்கள் என்று சொல்லி..

தமிழர்களுடைய உண்மையான இனப்பெயரை அழித்து நீ திராவிடன் என்று ஒரு பொய்யான மாயையை திணித்து தமிழர்களின் தொன் பெருமையை அழித்த ஒரு வரலாற்று மோசடியை செய்தவர் ஈ.வெ.ராமசாமி...