17/04/2017

மாவீரன் தீரன் சின்னமலை பிறந்த தினம் இன்று...


இன்றைய ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் வட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தவர்.  இவர் இயர் பெயர் தீர்த்தகிரி சர்க்கரை.

தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார். கொங்கு நாடு அப்பொழுது மைசூரார் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகட்கு விநியோகித்தார்.

அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் வழங்கலாயிற்று என்ற கருத்து பரவலாக உள்ளது.

வெள்ளையர்கள் ஆதிக்கம் அதிகரித்த போது அதை தடுக்க நினைத்த தீரன் சின்னமலை எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல் வெள்ளையர்களை எதிர்க்க மைசூரை ஆண்ட திப்பு சுல்தானுடன் கைகோர்த்து திப்புவின் பல வெற்றிகளில் பங்கு கொண்டார்.

சின்னமலையின் கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது.

நெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மைசூர்ப் போரில் 1799-இல் திப்பு சுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை கொங்கு நாடு வந்து அரச்சலூர் அருகே ஓடாநிலைக் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார். ஏற்கனவே ஏப்ரல் 18, 1792-இல் தான் வாங்கிய சிவன்மலை - பட்டாலிக் காட்டில் வீரர்கட்குப் பயிற்சி அளித்தார்.

1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார்.

சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை வந்தது. அந்நேரம் சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார்.

ஆங்கிலேயர்கள் பலரையும் தோல்விக்குள்ளாக்கி, அவர்களை தலைகுனியச் செய்த தீரன் சின்னமலையை சூழ்ச்சியால் வீழ்த்த எண்ணிய ஆங்கிலேயர்கள், அவரது சமையல்காரன் நல்லப்பனுக்கு ஆசை வார்த்தைகள் காட்டி, அந்த மாவீரனையும் மற்றும் அவரது சகோதரர்களைக் கைது செய்தனர்.

கைது செய்து அவர்களை, சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்ற ஆங்கிலேயர்கள், ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர். தம்பிகளுடன், தீரன் சின்னமலையும் வீரமரணமடைந்தார்...

தற்போது 3வது முறையாக தம்பிதுரை பழனிச்சாமி அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர்...



நாளை மதியம் 12 முதல் 3 வரை வெளியில் யாரும் வர வேண்டாம், அனல் காற்று வீசும், வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...


வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களுக்கு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாநில பேரிடர் மேலாண்மை இயக்குநர் லதா அறிவுறுத்தியுள்ளார்...

10 கோடி கொடுத்து நீதிபதி பதவிக்கு வந்தால் பல கோடி சம்பாதிக்கலாம்.. கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ். கர்ணன்


சந்திர வழிபாடு...


சந்திர வழிபாடு என்ற உடனே ஏதோ இஸ்லாமிய வழிபாடு என நினைப்போர் பலர்.

ஆனால் சந்திரவழிபாடு என்பது சந்திரனின் நுட்பங்களை உணர்ந்து அதன்படி வாழ்க்கையை வகுத்து கொள்ளுவது மேலும் நமக்கு தேவையானதை சந்திரனை வைத்து அடைவது...

அப்படி சந்திரனில் என்ன இருக்கிறது? எப்படி செயல்படுகிறது?

செயற்கைகோள் உருவாக்கப்பட்டது இயற்கை துணை கோளான சந்திரனைப் பார்த்து தான்...இரண்டும் ஒரே வேலையை செய்கிறது. [தொழில் நுட்பவாதிகளுக்கு செயற்கை கோள் பழங்குடிகளுக்கு சந்திரன்].

சூட்சுமம் அறிந்தவனே உலகை ஆளுகிறான்.

இந்த சூட்சுமத்தை கண்டு பிடித்தது  சித்தர்கள் எனும் Documentory makers இல்லை.

பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கையின் அசைவுகளை கவனித்து  அதை பயன்படுத்திய பழங்குடிகள்.

இந்த நுட்பம் நமது பலிகொடுக்கும் குலதெய்வ வழிபாட்டில்  உள்ளதால் தான் பலநூறு ஆண்டுகளாக ஊன் உண்ணாமை, சைவம் வைணவம் சமணம்  பெளத்தம் ஆசீவகம் போன்ற பல கருத்தியல்கள் நம்மிடம் வழிந்து திணிக்கப்பட்டது.

தற்போது தமிழ் வரலாற்றை மீட்கிறேன் என களம் இறங்கியுள்ளவர்கள் வாயிலாக நம்மிடம் மீண்டும் திணிக்கப்படுகிறது.

இதில் ஆச்சரியம் என்னவெனில் தென் தமிழகமக்கள் தங்கள் பழங்குடி வழிபாடான குலதெய்வ வழிபாட்டை  விட்டு ஒரு  அடி கூட நகராமல் இருப்பதே.

அவர்கள் இப்போதும் கோபுர கோவில் வழிபாட்டை  ஏற்று கொள்ளவில்லை...

இரும்பில் வெல்டிங் செய்தது அல்ல, ஒட்டு இல்லாமல், ஒரே கல்லாலான சங்கிலி...


ஆயிரம் வருடங்களுக்கு முன் எப்படி செய்திருப்பார்கள் ?

கற்பனை செய்யவே கடினமாக உள்ளது..

செய்யும் போது ஒன்று உடைந்திருந்தாலும் அவ்வளவும் வீண்.

இது போன்று ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு வடிவங்களில், ஆயிரம் கால் மண்டபத்தை அழகு படுத்திக் கொண்டிருக்கின்றன இந்த சங்கிலிகள்...

இடம் : காஞ்சிபுரம் கோவில்...

இலுமினாட்டி ரோத்ஸ்சைல்ட் குடும்பத்தின் சொந்த வங்கிகள்...


ரோத்ஸ்சைல்ட் இவன் தான் வங்கி,  தாள் பணம், பங்குச்சந்தை ஆகியவற்றை நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடங்கியவன். இவனது குடும்பம் இப்போது சொந்தமாக வைத்துள்ள வங்கிகள் கீழே தரப்பட்டுள்ளன..

List of Banks owned by the Rothschild family
Posted by Maurintius..

Give me control over a nations currency, and I care not who makes its laws” – Baron M.A. Rothschild..

ROTHSCHILD OWNED BANKS..

Afghanistan: Bank of Afghanistan
Albania: Bank of Albania
Algeria: Bank of Algeria
Argentina: Central Bank of Argentina
Armenia: Central Bank of Armenia
Aruba: Central Bank of Aruba
Australia: Reserve Bank of Australia
Austria: Austrian National Bank
Azerbaijan: Central Bank of Azerbaijan Republic
Bahamas: Central Bank of The Bahamas
Bahrain: Central Bank of Bahrain
Bangladesh: Bangladesh Bank
Barbados: Central Bank of Barbados
Belarus: National Bank of the Republic of Belarus
Belgium: National Bank of Belgium
Belize: Central Bank of Belize
Benin: Central Bank of West African States (BCEAO)
Bermuda: Bermuda Monetary Authority
Bhutan: Royal Monetary Authority of Bhutan
Bolivia: Central Bank of Bolivia
Bosnia: Central Bank of Bosnia and Herzegovina
Botswana: Bank of Botswana
Brazil: Central Bank of Brazil
Bulgaria: Bulgarian National Bank
Burkina Faso: Central Bank of West African States (BCEAO)
Burundi: Bank of the Republic of Burundi
Cambodia: National Bank of Cambodia
Came Roon: Bank of Central African States
Canada: Bank of Canada – Banque du Canada
Cayman Islands: Cayman Islands Monetary Authority
Central African Republic: Bank of Central African States
Chad: Bank of Central African States
Chile: Central Bank of Chile
China: The People’s Bank of China
Colombia: Bank of the Republic
Comoros: Central Bank of Comoros
Congo: Bank of Central African States
Costa Rica: Central Bank of Costa Rica
Côte d’Ivoire: Central Bank of West African States (BCEAO)
Croatia: Croatian National Bank
Cuba: Central Bank of Cuba
Cyprus: Central Bank of Cyprus
Czech Republic: Czech National Bank
Denmark: National Bank of Denmark
Dominican Republic: Central Bank of the Dominican Republic
East Caribbean area: Eastern Caribbean Central Bank
Ecuador: Central Bank of Ecuador
Egypt: Central Bank of Egypt
El Salvador: Central Reserve Bank of El Salvador
Equatorial Guinea: Bank of Central African States
Estonia: Bank of Estonia
Ethiopia: National Bank of Ethiopia
European Union: European Central Bank
Fiji: Reserve Bank of Fiji
Finland: Bank of Finland
France: Bank of France


Gabon: Bank of Central African States
The Gambia: Central Bank of The Gambia
Georgia: National Bank of Georgia
Germany: Deutsche Bundesbank
Ghana: Bank of Ghana
Greece: Bank of Greece
Guatemala: Bank of Guatemala
Guinea Bissau: Central Bank of West African States (BCEAO)
Guyana: Bank of Guyana
Haiti: Central Bank of Haiti
Honduras: Central Bank of Honduras
Hong Kong: Hong Kong Monetary Authority
Hungary: Magyar Nemzeti Bank
Iceland: Central Bank of Iceland
India: Reserve Bank of India
Indonesia: Bank Indonesia
Iran: The Central Bank of the Islamic Republic of Iran
Iraq: Central Bank of Iraq
Ireland: Central Bank and Financial Services Authority of Ireland
Israel: Bank of Israel
Italy: Bank of Italy
Jamaica: Bank of Jamaica
Japan: Bank of Japan
Jordan: Central Bank of Jordan
Kazakhstan: National Bank of Kazakhstan
Kenya: Central Bank of Kenya
Korea: Bank of Korea
Kuwait: Central Bank of Kuwait
Kyrgyzstan: National Bank of the Kyrgyz Republic
Latvia: Bank of Latvia
Lebanon: Central Bank of Lebanon
Lesotho: Central Bank of Lesotho
Libya: Central Bank of Libya
Most Recently Added
Uruguay: Central Bank of Uruguay
Lithuania: Bank of Lithuania
Luxembourg: Central Bank of Luxembourg
Macao: Monetary Authority of Macao
Macedonia: National Bank of the Republic of Macedonia
Madagascar: Central Bank of Madagascar
Malawi: Reserve Bank of Malawi
Malaysia: Central Bank of Malaysia
Mali: Central Bank of West African States (BCEAO)
Malta: Central Bank of Malta
Mauritius: Bank of Mauritius
Mexico: Bank of Mexico
Moldova: National Bank of Moldova
Mongolia: Bank of Mongolia
Montenegro: Central Bank of Montenegro
Morocco: Bank of Morocco
Mozambique: Bank of Mozambique
Namibia: Bank of Namibia
Nepal: Central Bank of Nepal
Netherlands: Netherlands Bank
Netherlands Antilles: Bank of the Netherlands Antilles
New Zealand: Reserve Bank of New Zealand
Nicaragua: Central Bank of Nicaragua
Niger: Central Bank of West African States (BCEAO)
Nigeria: Central Bank of Nigeria
Norway: Central Bank of Norway
Oman: Central Bank of Oman
Pakistan: State Bank of Pakistan
Papua New Guinea: Bank of Papua New Guinea
Paraguay: Central Bank of Paraguay
Peru: Central Reserve Bank of Peru
Philip Pines: Bangko Sentral ng Pilipinas
Poland: National Bank of Poland
Portugal: Bank of Portugal
Qatar: Qatar Central Bank
Romania: National Bank of Romania
Russia: Central Bank of Russia
Rwanda: National Bank of Rwanda


San Marino: Central Bank of the Republic of San Marino
Samoa: Central Bank of Samoa
Saudi Arabia: Saudi Arabian Monetary Agency
Senegal: Central Bank of West African States (BCEAO)
Serbia: National Bank of Serbia
Seychelles: Central Bank of Seychelles
Sierra Leone: Bank of Sierra Leone
Singapore: Monetary Authority of Singapore
Slovakia: National Bank of Slovakia
Slovenia: Bank of Slovenia
Solomon Islands: Central Bank of Solomon Islands
South Africa: South African Reserve Bank
Spain: Bank of Spain
Sri Lanka: Central Bank of Sri Lanka
Sudan: Bank of Sudan
Surinam: Central Bank of Suriname
Swaziland: The Central Bank of Swaziland
Sweden: Sveriges Riksbank
Switzerland: Swiss National Bank
Tajikistan: National Bank of Tajikistan
Tanzania: Bank of Tanzania
Thailand: Bank of Thailand
Togo: Central Bank of West African States (BCEAO)
Tonga: National Reserve Bank of Tonga
Trinidad and Tobago: Central Bank of Trinidad and Tobago
Tunisia: Central Bank of Tunisia
Turkey: Central Bank of the Republic of Turkey
Uganda: Bank of Uganda
Ukraine: National Bank of Ukraine
United Arab Emirates: Central Bank of United Arab Emirates
United Kingdom: Bank of England Mother Central Bank
United States: Federal Reserve, Federal Reserve Bank of New York
Vanuatu: Reserve Bank of Vanuatu
Venezuela: Central Bank of Venezuela
Vietnam: The State Bank of Vietnam
Yemen: Central Bank of Yemen
Zambia: Bank of Zambia
Zimbabwe: Reserve Bank of Zimbabwe

Banks owned or controlled by the Rothschilds: http://bit.ly/fW17i1

Bank For International Settlements (BIS): The Rothschilds Control And How To Dictate The World – Bla

www.blacklistednews.com

நாளைய தினமலர் தலைப்பு செய்தி... தினகரன் தலைமறைவு..?


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 21...


ஆழ்மனதின் சக்திகளை விண்வெளியில் ஆராய்ந்த மனிதர் வேறு யாருமல்ல நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதர்களில் ஒருவரான எட்கார் டீன் மிட்சல் தான். 22-06-1972 அன்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.

அப்போலோ 14 விண்வெளிக்கலத்தில் நிலவிற்குப் போய் வருகையில் நான் உலகின் முதல் விண்வெளி ஆழ்மன ஆராய்ச்சியைச் செய்தேன். நட்சத்திரம், சிலுவை, வட்டம், நெளிவு வரி, சதுரம் ஆகிய ஐந்து சின்னங்களை 25 வரிசைகளில் தொடர்பில்லாமல் மாறி மாறி வைத்தேன். அதை அமெரிக்காவில் உள்ள நான்கு மனிதர்கள் யூகிக்க முயன்றார்கள். அந்த ஆராய்ச்சி வெற்றிகரமாக அமைந்தது. குருட்டாம் போக்கில் யூகித்து சொல்வதானால் 3000 தடவை செய்யும் யூகங்கங்களில் ஒரு முறை மட்டுமே சாத்தியமாகும் வெற்றியாக அது இருந்தது.

இளமையில் இருந்தே விஞ்ஞானத்திலும், மெய்ஞானம் மற்றும் ஆழ்மன சக்திகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தவர் எட்கார் மிட்செல். பலரது ஆழ்மன ஆராய்ச்சிகளை ஆர்வத்துடன் கவனித்து வந்த அவருக்கு சந்திரனுக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்த போது அவரைப் போலவே ஆர்வம் கொண்ட நண்பர்கள் சிலர் இது போன்ற ஆராய்ச்சியை விண்வெளியில் ஏன் செய்து பார்க்கக் கூடாது என்று கேட்டனர். இது போன்ற சந்தர்ப்பம் கிடைப்பது அரிது என்ற அவர்களைப் போலவே எண்ணிய எட்கார் மிட்செல் ஒத்துக் கொண்டார்.

சந்திரனுக்குக் கிளம்புவதற்கு மூன்று வாரங்களுக்கு முன் நான்கு பேர் கொண்ட குழு அமைந்தது. அந்தக் குழுவில் இருவர் பௌதிக விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களான டாக்டர் பாய்ல் மற்றும் டாக்டர் மேக்சி. மற்ற இருவர் ஆழ்மன சக்திகள் கொண்டவர்கள். அவர்களில் ஒருவர் சிகாகோவில் தன் சக்திகளால் அக்காலத்தில் பிரபலமான ஓலோஃப் ஜான்சன்.

சந்திரனுக்குச் செல்லத் தேவையான ஆயத்தங்களில் முழுமையாக ஈடுபட்டிருந்த எட்கார் மிட்செலுக்கு நேரமின்மை காரணமாக அந்த ஆராய்ச்சிகள் எப்படி இருக்க வேண்டும் என்று அந்த நால்வருமே கலந்து தீர்மானித்தனர். எட்கார் மிட்சல் ஓரிரு முறை அவர்களிடம் சென்று அந்த ஆராய்ச்சி முறையில் மாதிரி பயிற்சிகளில் ஈடுபட்டார்.

அப்போலோ 14ல் இருவர் உறங்குகின்ற நேரத்தில் ஒருவர் விண்கலத்தைக் கண்காணிப்பது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. எட்கார் மிட்செல் தான் உறங்குவதற்கு முன் சில நிமிடங்கள் ஆழமன ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டார். ஒவ்வொரு வரிசையிலும் உள்ள சின்னங்களை மனதில் நினைத்து அதை பூமியில் உள்ள நண்பர்களுக்கு அனுப்ப ஒவ்வொரு சின்னத்திற்கும் 15 வினாடிகள் எடுத்துக் கொண்டார்.


இந்தத் தனிப்பட்ட ஆராய்ச்சியை வெளியுலகிற்குத் தெரியப்படுத்தும் எண்ணம் ஆரம்பத்தில் எட்கார் மிட்சலுக்கு இருக்கவில்லை. ஆனால் விண்கலம் பூமிக்கு வந்து விண்வெளியில் இருந்து அனுப்பிய தகவல்களும், பூமியில் பெற்ற தகவல்களும் சரிபார்க்கப்படும் முன்பே அவர்களது குழுவின் ஓலோஃப் ஜான்சன் பத்திரிகைகளுக்கு இந்த ஆராய்ச்சி பற்றி சொல்லி விட்டார். பின் வேறு வழியில்லாமல் எட்கார் மிட்சலும் அது பற்றி தெரிவிக்க வேண்டியதாயிற்று. பின் அந்த இரு தகவல்களையும் சரிபார்க்கையில் எட்கார் மிட்சல் நியூயார்க் டைம்ஸிற்குத் தெரிவித்தபடி அது வெற்றிகரமான அளவுக்குப் பொருந்தியே இருந்தது.

நாசா (NASA) வின் பல விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் தனித்தனியாக இந்த ஆழ்மன ஆராய்ச்சி பற்றி ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டார்கள் என்றாலும் வெளிப்படையாக அதைப் பற்றிப் பேசத் தயங்கினார்கள் என்று எட்கார் மிட்செல் நாசாவில் இருந்து ஓய்வு பெற்ற பின் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

எது எப்படியோ அந்த விண்வெளிப்பயணம் எட்கார் மிட்சலுக்கு ஒரு மகத்தான அனுபவமாக இருந்தது. விண்வெளியில் அந்த இயற்கையின் பிரம்மாண்டத்தை கண்கூடாகத் தரிசிக்கையில் மனிதனின் வேற்றுமைகளும், குறுகிய எண்ணங்களும் அர்த்தமில்லாமல் இருப்பதை அவரால் உணர முடிந்தது.

அது போல ஆழ்மன ஆராய்ச்சிகளின் வெற்றிக்குப் பூமியில் பல மைல் தூரங்கள் ஒரு தடையல்ல என்பதைப் பல ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தி இருந்தாலும், பூமியைத் தாண்டியும் கூட அந்த அகண்ட இடைவெளி ஒரு பொருட்டல்ல என்பதை அவரால் அந்தப் பயண ஆராய்ச்சி மூலம் உணர முடிந்தது.

அவர் 1973ல் The Institute of Noetic Sciences (IONS) என்ற அமைப்பை ஏற்படுத்தினர். மனிதனின் ஆழ்மனம் பற்றியும், அதன் உணர்நிலைகள் பற்றியும் ஆராய்ச்சி செய்வதே அந்த அமைப்பின் பிரதான நோக்கமாக இருந்தது. இன்றும் கூட அந்த அமைப்பு கலிபோர்னியாவில் பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆழ்மன சக்தியைத் தன் தனிப்பட்ட வாழ்வில் எட்கார்மிட்செல் உணரும் சந்தர்ப்பமும் ஏற்பட்டது. அவர் சிறுநீரகத்தில் புற்றுநோய் ஏற்பட்டு விட அதை தொலைதூரத்தில் இருந்து வான்கூவரைச் சேர்ந்த ஆடம் ட்ரீம்ஹீலர் என்ற புனைப்பெயரில் அறியப்படும் ஒரு ஆழ்மனசக்தி பெற்ற இளைஞன் குணமாக்கினான். வான்கூவரில் இருந்தே அந்த இளைஞன் டிசம்பர் 2003ல் இருந்து ஜூன் 2004 வரை அந்த நோயைக் குணப்படுத்த தன் ஆழ்மனசக்தியைப் பிரயோகித்தான் என்று எட்கார் மிட்செல் தெரிவித்தார்.

ஆழ்மனசக்திகள் பற்றிக் குறிப்பிடுகையில் அது குறித்து பழங்கால இந்திய, திபெத்திய சம்ஸ்கிருதப் படைப்புகளில் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளன என்று எட்கார் மிட்செல் கூறுகிறார். அந்த நூல்களில் சொல்லப்படுகிற நிர்விகல்பசமாதி என்ற தியானநிலையில் மனிதனின் ஆழ்மன சக்திகள் மிக உயர்ந்த அளவுக்கு விழிப்படைகின்றன என்று ஆராய்ச்சிகளின் மூலம் அறிந்ததாக அவர் கூறுகிறார்.

எதையும் வெளிநாட்டுக்காரர்களும், விஞ்ஞானமும் கூறினால் ஒழிய கற்பனை, கட்டுக்கதை என்று முடிவெடுக்கும் மனநிலை நம் நாட்டில் நிறையவே இருந்து வருகிறது.

நம் முன்னோர் அடைந்திருந்த உயர் அறிவார்ந்த நிலையை ஒத்துக் கொள்ளவோ, திறந்த மனத்துடன் ஆராயவோ நாம் முற்படுவதில்லை. எட்கார் மிட்சல் போன்றவர்களே ஒத்துக் கொண்டு பாராட்டுகிறார்கள் என்பதை அறிந்த பின்னாவது நாம் அந்த மனநிலையை மாற்றிக் கொள்வது தானே அறிவு?

மேலும் பயணிப்போம்.....

பாடநுால் வாரியம் எல்லாம் பத்தாது.. நான் பன்னீர் அணிக்கு பாய்கிறேன்.. ஓ.பி.எஸ்., அணிக்கு தாவுகிறார்...


முன்னாள் அமைச்சர் வளர்மதி, தமிழக அரசின் பாட நுால் வாரிய தலைவராக உள்ளார்.

சசிகலாவின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். அதற்காக, அவருக்கு தமிழக அரசின் பாடநுால் வாரியத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

சசிகலா சிறைக்கு சென்ற பின், தினகரன் ஆதரவாளராக வலம் வந்தார்.

ஆர்.கே.நகர் தொகுதியில், தினகரனுக்கு ஆதரவாக, தேர்தல் பிரசாரம் செய்தார்.

மாநில பேச்சாளர்கள், செய்தி தொடர்பாளர்களின் தேர்தல் பிரசார பயண விவகாரத்தில், வளர்மதி மீது புகார்கள் எழுந்தன.

இதுகுறித்து, அவரிடம், தினகரன் விசாரணை நடத்தினார். இதனால், அதிருப்தி அடைந்த வளர்மதி, தேர்தல் ரத்துக்கு மறுநாள், கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்தார்.

ஏற்கனவே, வளர்மதி மீது ஏற்பட்ட மோதலால், செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி, பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார்.

இந்நிலையில், தற்போது சசிகலா அணியை விட்டு ஒதுங்கி உள்ள வளர்மதியும், பன்னீர்செல்வம் அணியில், ஐக்கியமாக உள்ளார்...

ஜெயலலிதா மரணம் குறித்து சகாயம் தலைமையில் குழு அமைத்து விசாரிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு...


வழக்கை விசாரணைக்கு ஏற்ற கொண்ட உயர் நீதிமன்றம்...

ஊட்டியில் அணை கட்ட 1955ல் திட்டம் போட்டு.. 1972ல் கைவிடப்பட்டது.. தடுத்து நிறுத்தியது கேரளா...


தமிழகத்தின் ஊட்டியில் மோயர் ஆற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இங்கு அணை கட்டுவதன் மூலம் தண்ணீர் செல்வதை தடுத்து நாம் அவர்களிடம் கையேந்தி நிற்பதை தவிர்க்க முடியும்.

மேலும் பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

இந்த நிலையில் கடந்த 1955ம் ஆண்டு ஊட்டியில் அணை கட்ட திட்டமிடப்பட்டது.

பாண்டியாறு பொன்னம்புழா நீர்தேக்க திட்டமான இதற்கு கூடலூரில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அடிக்கல் நாட்டப்பட்டது.

அதன்பிறகு இது குறித்து கேரளா பல்வேறு பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வந்ததால் 1972ம் ஆண்டு கைவிடப்பட்டது.

இந்த திட்டம் மட்டும் நிறைவேற்றப் பட்டிருந்தால் ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் உள்ள பல லட்சம் வேளாண் நிலங்கள் பலன் அடைந்து இருக்கும்.

கூடலூர் உள்ளிட்ட பகுதிகள் சிறந்த சுற்றுலா தலமாகி இருக்கும். 40 மெகாவாட் நீர்மின் உற்பத்தி செய்வதோடு அந்த நீரை பெரிய குழாய்களில் மோயர் ஆற்றோடு இணைத்து பவானி ஆற்றோடு கலக்க செய்திருந்தால் அந்த பகுதியில் வேளாண் தொழிலையும் பெருக்கி இருக்க முடியும்.

இதுவரை ஆட்சியில் இருந்த திராவிட கட்சிகள் இதனை செயல் படுத்தவில்லை. அதற்கான நடவடிக்கையும் எடுக்கவில்லை...

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க இது வரை எந்த நிறுவனமும் உரிய அனுமதி பெறவில்லை - தென் மண்டல பசுவை தீர்ப்பாயம் விளக்கம்...


பரிசோதனை நடத்த மட்டுமே அனுமதி பெற்றுள்ளனர், மத்திய அரசிடம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஜெம் லெபாரட்ரி நிறுவனம் இதுவரை அனுமதி பெறவில்லை என தென் மண்டல பசுவை தீர்ப்பாயம் விளக்கம் அளித்துள்ளது.


இது தொடர்பாக ஒருவர் தொடர்ந்த வழக்கில் தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது...

ஆகாயத்தில் ஒரு ஒளி - 21...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற தொடரின் அற்புதங்களை மக்கள் உணரும் காலம் நெருங்கிவிட்டன. வெறும் அழிவுகளை மட்டுமே தீர்க்க தரிசனங்கள் கூறவில்லை அதற்கு மாறாக இப்பூமியில் இறைவனின் அற்புதங்களும் நடக்க உள்ளதாக இறை தீர்க்க தரிசனங்கள் இன்று தெரிவிக்கின்றன.

இன்றைய 21-ம் தீர்க்க தரிசனம் இப்புவியின் மீது இறைவன் ஆட்சி செய்ய வரும் சேதியைப் பற்றி முன் அறிவிக்கின்றது. உலகத்தை ஆளும் பரம்பொருளின் வருகையானது ஒரு ஆவணி மாதத்தில் நடக்கும் என்றும்,

அச்சமயத்தில் இவ்வுலகில் பல அதிசயதக்க, வியக்கதக்க அளவில் பல வினோத சம்பவங்கள் நடக்கும் என்றும்,

அனைத்து நிகழ்வுகளிலும் ஒரு ஒற்றுமை காணப்படும் என்று 21-வது தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகிறது.

ஆதியும் அந்தமும் இல்லா அந்த பரம்பொருளின் கருணை வடிவத்தை தாங்கிய அற்புத சிலையொன்று பூமியிலிருந்து வெளிப்படும் என்றும்,

அது மலைகள் சூழ்ந்த ஒரு ஊரில் நிகழும் என்றும் 21-வது தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.


திருவண்ணாமலையின் கீழே அக்னி குழம்பு ஒன்று உருவாகி வருகிறது என்றும்,

ஆனால் அது பூமியை விட்டு வெளியே வராமல் அங்கு அதிசயத்தை உருவாக்கி இறைவனாரின் அற்புதத்தை வெளிபடுத்தும் ஒரு செயலாக அது நிகழும் என்று 21-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.

வள்ளலார் வாழ்ந்த இடத்தில் இறை அதிசயம் ஒன்று விரைந்து நடக்க உள்ளதாகவும், இதுவரை அவருடைய ஆன்ம ஸ்வரூபத்தை காணாத அவருடைய பக்தர்களின் கண்களுக்கு வள்ளலாரின் சொரூபத்தை காண்கின்ற பாக்கியம் கிட்டும் என்றும்,


தமிழகத்தில் உள்ள ஒரு வள்ளலார் மடத்தில் அண்ணபாத்திரத்தில் ஒரு அதிசயத்தை வள்ளலார் நிகழ்த்த உள்ளதாக 21-வது தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.

முக்கண்ணன் என்ற திருநாமத்தை சுமந்த சிவனின் ஆலயம் ஒன்றில் ஒரு மிகப்பெரிய வெடிப்பொலி நிகழ்வு நடக்க உள்ளதாகவும் அங்கு பல அதிசய காட்சிகளை மக்கள் காண உள்ளதாக ஒரு தீர்க்க தரிசனம் குறிப்பை தருகிறது.

மதுரை மாநகரத்தில் சக்தியின் ஸ்தலத்தில் ஒரு அதிசயமிக்க நிகழ்வு நடக்க உள்ளதாகவும் அங்கு நடக்கும் நிகழ்வின்படி தமிழகத்தின் அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றம் நிகழும் என்றும்,


இந்த மாற்றம் விரும்பதக்க ஒரு நிகழ்வு என்றும் 21-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.

மதுரையில் வீதிதோறும் விழா நடக்கும் சமயத்தில் ஒரு பிள்ளையார் சந்நதியில் அதிசயமொன்று தொடர்ந்து நடக்கும் என்றும்,

இதனால் மக்கள் மனங்களில் இறை நம்பிக்கைகள் ஆழமாக வேர் ஊன்றும் என்றும் அப்பொழுது ஒரு குளத்தில் அதிசயமொன்று வெளிப்படும் என்று 21-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

கண்ணபுரத்தாள் கருத்தாக இடம் பெயர்வாள் என்றும் இதன் முன்னறிவிப்பு தமிழகம் முழுவதும் உள்ள அவளின் கோவில்களில் வாக்காக  வெளிப்படுத்துவாள் என்றும்,

அப்பொழுது திருச்சியில் வரலாறு காணாத அளவிற்கு மழைநீர் ஓடும் என்றும்,


அவளின் மூத்த சந்நதி சில நாட்களுக்கு மூடியே இருக்கும் என்றும் அச்சமயத்தில் அங்கு அன்னை சமயபுரத்தாள் அற்புதம் ஒன்றை வெளிப்படுத்துவாள் என்றும்,

இதுவே இறைவன் இவ்வுலகை ஆள போவதற்கான அரிச்சுவடி என்று 21-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு இறை இரகசியத்தை குறிப்பாக தருகின்றது.

தமிழ் முன்னேற்றம் என்ற ஒரு அமைப்பு பல விஷயங்களை மக்கள் அறியும்படி தனது அறிக்கையை வெளிப்படுத்தும் என்றும்,

தொன்மைத்தமிழ், மூத்த தமிழன், வீரம் செறிந்த தமிழன் என்ற வார்த்தைகளில் உள்ள வரலாற்று செய்திகளை அந்த அமைப்பு வெளியிடும் என்றும்,

அச்சமயத்தில் இந்த உலகத்தில் முதல் மனிதனின் தோற்றம் எங்கே உருவானது என்ற கேள்வியை மக்கள் அமைப்பு கேட்கும் என்றும்,


அதற்கு ஆதாரமாக இந்திய தேசத்தின் தென் மாநிலத்தில் ஒரு அரிய சிற்பம் ஒன்றும், கல்வெட்டும் கிடைக்கப்பெறும் என்றும் இதனால் தமிழ் இனமே தலை நிமிர்ந்து நிற்கும் அற்புதமான ஒரு நிலை இவ்வுலகில் ஏற்படும் என்று 21-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.

மக்களின் காவலன் யார்? இந்த உலகத்தின் வழிகாட்டி யார்? பாவங்களை கலைத்து எங்களை மீட்பவர் யார்? என்ற கேள்விகளோடு உலக மக்கள் ஏங்கி நிற்கும் சமயத்தில் உலகமே வியந்து நோக்கும் அளவிற்கு இறைவனின் அற்புதம் ஒன்று இந்த பூமியில் அதற்கு விடையாக நடந்து முடியும் என்றும்,

இதுவே பிரபஞ்சம் வியக்கும் அதிசயமாக மக்கள் நினைப்பார்கள் என்றும், இதனை தொடர்ந்து ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற கூற்று மெய்பட சூழ்நிலைகள் உருவாகும் என்று 21-ம் தீர்க்க தரிசனம் மெய்பட ஒரு இறை இரகசியத்தை குறிப்பாக தருகின்றது.

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

டெல்லியில் நெற்றிப் பொட்டை அழித்து, வளையல்களை உடைத்து கதறி அழுத விவசாயிகள்...


டெல்லியில் தமிழக விவசாயிகள் பெண்கள் போன்று சேலை அணிந்து நெற்றிப் பொட்டை அழித்தும், வளையல்களை உடைத்தும் போராட்டம் நடத்தினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, நதிகள் இணைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

சுட்டெரிக்கும் வெயிலில் நம் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம் நடத்தி வருகின்றனர். நிர்வாணப் போராட்டம் கூட நடத்தியும் பயனில்லை.

இந்நிலையில் நேற்று விவசாயிகள் சேலை அணிந்து நெற்றிப் பொட்டை அழித்தும், வளையல்களை உடைத்தும் போராட்டம் நடத்தினர். அவர்கள் பொட்டை அழித்தபோது சக விவசாயிகள் கதறி அழுதனர்.

போராட்டத்தின்போது தஞ்சாவூரைச் சேர்ந்த வளப்பக்குடி வீரசங்கர் குழுவினரின் நாட்டுப்புற இசை நிகழ்ச்சி நடந்தது. போராட்டத்தில் ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிபட்டை சேர்ந்த பாரதீய கிசான் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதற்கு முன்தினம் விவசாயிகள் சேலை அணிந்து தாலி கட்டி அதை அறுக்கும் போராட்டம் நடத்தினார்கள். நேற்றுடன் 34 நாட்களாக அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா...


எடப்பாடி - ஓபிஎஸ் இணைப்பு கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது தம்பித்துரை மூலமாக...


பன்னீர தாக்கியே பேசவில்லை.... இரண்டு அணி இல்லை ஒரே அணிதான்னு சொல்லுறான்...

அப்போ மாஃபியா கும்பலுக்கு அல்வா தான்....

சித்தர் ஆவது எப்படி - 21...


உள்ளிருந்து ஓங்கும் உன்னதத்தின் இரகசியம்...

பெற்ற தாயை மகன் மறந்தாலும், பிள்ளையை தாய் மறந்தாலும், உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும், உயிரை தேகம் மறந்தாலும், கற்ற நெஞ்சகம் கற்றவற்றை மறந்தாலும், கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும் நல்ல தவத்தோர் உள்ளிருந்து ஓங்கும் நமசிவயத்தை நான் ஒரு பொழுதும் மறக்க மாட்டேன் என பொருள் பட வள்ளலார் பாடி இருக்கின்றார்..

இதில் உள்ளிருந்து ஓங்கும் என்ற வரி தான் மிக மிக முக்கியம்.. நமசிவய என்ற பஞ்ச பூத சக்தி, தேகத்தின் உள்ளே அமர்ந்து ஓங்க தொடங்கும் பொழுது மட்டுமே, தேகத்தில் உயிர் நிற்கும்..

கண நேரம் ஆயினும் அந்த ஓங்குதல் நடைபெற வில்லையென்றால், சுற்று புற காற்று மண்டல அழுத்தத்தால் ஒடுங்குதல் என்ற செயல் நடைபெற்று, தேகம் நசுக்கப் பட்டு வேதனை படுகிறது..

பிறந்த குழந்தை மூச்சு விட தெரியவில்லை என்றால் உடனே இறந்து போகும்..

இந்த மூச்சானது தேகத்தின் உள்ளே புகுந்து, வெளி உலக சூழ் நிலைகளின் ஒடுக்குதல் என்ற செயலுக்கு எதிராக ஓங்குதல் என்ற செயலை உருவாக்கி தேகத்தை சமநிலை படுத்துகிறது..

இந்த காரணத்தினால் தான் நாம் நான்கு விநாடிகளுக்கு ஒரு முறை சுவாசித்து, உள் நுழைந்த காற்று மண்டலத்தினால் உள்ளே ஓங்குதல் என்ற செயல் பாடு நடை பெற்று நம் தேகம் சமசீர் அடைந்து உயிர் வாழ்கிறோம்..

ஆக மொத்தத்தில் உள் இருந்து ஓங்குதல் மூலம் மட்டுமே தேகத்தில் உயிர் வாழ்கிறது..

ஓங்குதல் என்ற செயல் பாடு நடக்கும் போது மட்டுமே தேக திசுக்கள் விரிவடையும் தன்மையால் இன பெருக்கம் அடைந்து அதன் மூலம் தேகம் வலுவடைகிறது..

இந்த சூழ்நிலையில் சுற்று புற சூழ்நிலைகளால் உருவாகும் ஒடுங்குதல் என்ற செயல் பாடு, சுவாச ஒழுங்கின்மை காரணமாக அதிகரித்து, தேகம் சிறுக சிறுக வலுவிழந்து, முடிவில் மரணம் கவ்வுகிறது...

ஆகவே ஓங்குதலுக்கு உதவாத சுவாச பயிற்சிகள் அத்தனையும் தேகத்தை நாசப் படுத்துகிறது..

மிக முக்கியமாக சுவாசத்தின் மூலமாக நடைபெறும் ஒங்குதல் என்ற செயல் பாட்டிற்றிக்கு, சுவாச இல்லாத நிலையில் ஒரு மாற்று பயிற்சியின் மூலம் அந்த ஓங்குதல் நடை பெற வில்லை என்றால், சுவாச மற்ற நிலையில் தேகத்தில் உயிர் நிச்சயமாக தங்காது..

அந்த மாற்று பயிற்சியை பயிலாத வரை ஜீவ சமாதி என்பது சாத்தியமில்லை...

சுவாசத்தின் மூலம் இல்லாமல் அந்த மாற்று பயிற்சியின் மூலம் மட்டுமே அந்த உள் இருந்து ஓங்குதல் மூலம், புதையுண்ட ஜீவ சமாதியில் ஓரு மகான் தன் தேகம் அழியாமல் காத்து, தன் தேக கனலை காத்து, தன் ஒளி தேகத்தால் செயல் பட முடியும்..

அந்த மாற்று பயிற்சியை கற்றுக் கொள்ளாமல், உள் இருந்து ஓங்குதலை இழந்து, ஜீவ சமாதி என்று புகுந்தவர்கள் அத்தனை பேரும் மரணத்தை தழுவியவர்களே...

இதனால் தான் உள் இருந்து சதா காலமும் ஓங்குதலை நடத்தும் நமசிவய என்ற ஜீவ சக்தியை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன் என்று வள்ளலார் சொல்லுகின்றார்..

அந்த உள் இருந்து ஓங்குதலை பெற மாற்றுப் பயிற்சியினை கற்று பயின்ற பின் சுவாசம் என்ற ஒன்று மனிதனுக்கு தேவை இல்லை..

அப்படி வெளி சுவாசம் தேவையில்லாத மனிதனே ஜீவ சமாதிக்கு தகுதி உடையவன் ஆகிறான்..

அவன் வெளி சுவாசத்தால் செயல் படும் ஒழுங்கின்மையிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு..

பரி பூரண ஒழுங்கு என்ற அந்த உள் ஓங்குதலில் தன் தேகத்தை வேண்டிய காலம் காத்து தன் ஒளி தேகத்தில் செயல் ஆற்றுகின்றார்கள் சித்தர் பெரு மக்கள்...

அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் நாளை சென்னைக்கு வர கட்சித் தலைமை அழைப்பு...


மாவீரன் தீரன் சின்னமலை பிறந்த தினம் இன்று...


இன்றைய ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் வட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தவர்.  இவர் இயர் பெயர் தீர்த்தகிரி சர்க்கரை.

தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார். கொங்கு நாடு அப்பொழுது மைசூரார் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகட்கு விநியோகித்தார்.

அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் வழங்கலாயிற்று என்ற கருத்து பரவலாக உள்ளது.

வெள்ளையர்கள் ஆதிக்கம் அதிகரித்த போது அதை தடுக்க நினைத்த தீரன் சின்னமலை எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல் வெள்ளையர்களை எதிர்க்க மைசூரை ஆண்ட திப்பு சுல்தானுடன் கைகோர்த்து திப்புவின் பல வெற்றிகளில் பங்கு கொண்டார்.

சின்னமலையின் கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது.

நெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மைசூர்ப் போரில் 1799-இல் திப்பு சுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை கொங்கு நாடு வந்து அரச்சலூர் அருகே ஓடாநிலைக் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார். ஏற்கனவே ஏப்ரல் 18, 1792-இல் தான் வாங்கிய சிவன்மலை - பட்டாலிக் காட்டில் வீரர்கட்குப் பயிற்சி அளித்தார்.

1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார்.

சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை வந்தது. அந்நேரம் சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார்.

ஆங்கிலேயர்கள் பலரையும் தோல்விக்குள்ளாக்கி, அவர்களை தலைகுனியச் செய்த தீரன் சின்னமலையை சூழ்ச்சியால் வீழ்த்த எண்ணிய ஆங்கிலேயர்கள், அவரது சமையல்காரன் நல்லப்பனுக்கு ஆசை வார்த்தைகள் காட்டி, அந்த மாவீரனையும் மற்றும் அவரது சகோதரர்களைக் கைது செய்தனர்.

கைது செய்து அவர்களை, சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்ற ஆங்கிலேயர்கள், ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர். தம்பிகளுடன், தீரன் சின்னமலையும் வீரமரணமடைந்தார்...

பாஜக வின் பாரத கலாச்சாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்ற போது மோடி பக்தர்களின் தேசபக்தி பீரிட்டு பொங்கிய காணொளி....


ஒதுங்கிய நம் கப்பற்கலை ஆங்கிலேயரால் சமாதியிடப்பட்டது...


உலகின் கப்பல் கட்டுமானத்தில் சிறந்து விளங்கியவன் தமிழன். இத்துறை வல்லுனர்கள் கம்மியர்கள் எனப்பட்டனர்.

திருநெல்வேலி தொல்பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டடுள்ள, பூம்புகார் கடற்கடையிலிருந்து 19 மைல் தொலைவில் கண்டெடுக்கப்பட்ட சிதைந்த கப்பலின் அடிபப்டையில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் உருவாக்கிய சோழர் கால கப்பலின் உடற்பகுதியின் மாதிரி.

தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பிரயோகிக்கப்பட்டிருப்பதில் இருந்து, தமிழர் கடலைத் தமது வாழ்க்கையில் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம் என கடலோடி என்னும் நூலின் ஆசிரியர் நரசய்யா செரிவிக்கிறார்.

பல்லவர் காலத்து கப்பல் பொறித்த நாணயம்.

கடலில் பயணம் செய்வது எப்படி. காற்று எந்த நாட்களில் எப்படி வீசும்?

காற்றின் திசைகளை கொண்டு பயணம் செய்வது எப்படி என்று கடல் சார்ந்த அத்தனை அறிவுகளிலும் மேம்பட்டு விளங்கியவன் தமிழன்.

உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே. உலகின் முதல் கப்பலையும் கப்பல் படையும் வைத்திருந்தவன் இராசஇராசசோழனும் அவன் மகன் ராசேந்திர சோழனும் ஆவான்.

கலிங்கபாலு எனும் கடல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட செய்தியில், கடல்வாழ் உயிரினமான ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக வருடாவருடம் தமிழகம் மற்றும் ஒரிசா வரும்.

ஆமைகள் சராசரி ஒருநாளைக்கு 85 கிமீ தூரமே நீந்த முடியும். ஆனால் இவ்வளவு தூரத்தை குறுகியகாலத்தில் எட்டியது எப்படி என்று ஆராய்ந்த போது ஆமைகள் கடல் நீரோட்டங்கள் (Ocean currents) எனப்படும் கடலில் பாடும் நீரோட்டத்தின் உதவியுடன் பல்லாயிரம் கி.மீ.தூரம் நீந்தாமலே பயணிக்கும் உண்மை தெரிந்தது.

இப்படி பயணம் செய்யும் ஆமைகள் செயற்கைக்கோள் உதவியுடன் பின் தொடர்ந்த போது உலகின் பல நாடுகளின் கடற்கரைகளுக்கு அழைத்து சென்றன. ஆமைகள் சென்ற 53 கடற்கரைகளின் பெயர்களும், மக்களின் பண்பாடும் மொழியும் ஏதாவதொரு வகையில் தமிழின்தாக்கத்தோடு இருக்கிறது என்று தெரிவித்தனர்.

உதாரணம்:

தமிழா————-மியான்மர்.
சபா சந்தகன்—–மலேசியா
ஊழன், சோழவன், வான்கரை, ஒட்டன்கரை, ஊரு——–அவுசுத்திரேலியா
கடாலன்————ஸ்பெயின்
நான்மாடல் குமரி———-பசிபிக் கடல்
சோழா,தமிழி,பாசு(ஸ்)——–மெக்சி(ஸி)கோ
திங்வெளிர்——————–ஐசு(ஸ்)லாந்து
கோமுட்டி———————-ஆப்பிரிக்கா.

இப்படி கடலில் பாயும் நீரோட்டங்களை அன்றை அறிந்து அதன் மூலம் பயணம் செய்துள்ளனர் தமிழர்.

இதே போல் தென்பசிபிக்மா கடலில், அவுசுத்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சியில் மிகப்பெரிய சரக்குக்கப்பல் கண்டு பிடிக்கப்பட்டது. அக்கப்பலை ஆராய்ந்து பார்த்ததில் அது 2500 வருடங்களுக்கம் மேல் பழமையானது என்றும், இது தமிழருடையது என்றும் தெரிவித்தனர்.

நியூசிலாந்தில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட மணி ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அது தமிழ் மணி என்ற பெரிலேயே நியூசிலாந்து அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து நாட்டில் உள்ளவெலிங்டன் அருங்காட்சியகத்தில் தமிழ்மணி.

உலகின் முதல் கப்பலையும் கப்பல் படையும் வைத்திருந்தவன் இராச இராச சோழனும் அவன் மகன் ராசேந்திர சோழனும் ஆவான்.

இன்னும் உலகில் உள்ள கப்பல் மற்றும், கடல் சார்ந்த துறைகளுக்கு தமிழிலிருந்து மருவிய பெயர்களே உள்ளன (நாவாய்—Navy).

கப்பல், கடல் கலங்கள் வகைகள்..

கட்டுமரம்
நாவாய்
தோணி
வத்தை
வள்ளம்
மிதவை
ஓடம்
தெப்பம்
டிங்கி
பட்டுவா
வங்கம்
அம்பி – பயணிகள் சென்று வர பயன்படுத்தப் பட்ட நீருர்தி.
திமில் – பெரும்பாலும் மீன்பிடிக்கப் பயன்பட்டது.

லெப்டினன்ட் வாக்கர் எனும் ஆங்கிலேயர் கி.பி.1811ல் நமது கப்பல்களைக் கண்டு பின்வருமாறு வியந்து கூறினார்..

பிரிதானியர்கள் கட்டிய கப்பலை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மராமத்து செய்தே தீர வேண்டும்…… ஆனால் தமிழர்கள் கட்டிய கப்பலுக்கு 50 ஆண்டானாலும் பழுது பார்க்கும் அவசியம் இல்லை.

ஆங்கிலேயர் வருவதற்கு முன்பிருந்தே சிறிதுசிறிதாக ஒதுங்கிய நம் கப்பற்கலை ஆங்கிலேயர் வந்தபின் அவர்களின் சுரண்டலில் இறுதியாகச் சமாதியில் இடப்பட்டுவிட்டது...

துடப்பம் மற்றும் முறத்தால் கொடும் பாவியை அடித்து நூதன வழிபாடு...


3 மீடியாவோட செய்தியையும் பாருங்க....


இதில் தந்தி டீவி கூவுறத நல்லா பாருங்க..


வக்காளி ரெய்டு அங்க விட்டால் நிறைய சிக்கும் போல...


இந்த லட்சணத்துல இவனுங்க அவார்டு வாங்குனவனுங்கலாம்...த்தூ

பாஜக மோடிக்கு செருப்படி கொடுத்த மோடியின் மனைவி...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 20...


துவக்கத்தில் சில மருத்துவர்களும், சில ஆராய்ச்சியாளர்களும் ஆழ்மன சக்திகளில் காட்டிய ஆர்வத்தையும், ஆராய்ச்சிகளையும் பெரும்பாலான விஞ்ஞானிகள் சந்தேகக் கண்ணுடனேயே பார்த்தார்கள்.

பின் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானிகள் சிலர் காட்டிய அக்கறை அவர்களையும் சிந்திக்க வைததது. உதாரணத்திற்கு 1912ல் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் அலெக்சிஸ் காரல் ஆணித்தரமாகத் தன் கருத்தை இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சொன்னார்.

கண்களின் உதவியில்லாமல் காண முடிவது, காதுகளின் உதவியில்லாமல் கேட்க முடிவது, ஐம்புலன்களின் உதவியில்லாமல் எண்ணங்களை பரிமாறிக் கொள்வது போன்றவை உண்மையானவையே. உண்மையாக சிந்திக்க முடிந்த எந்த மனிதனும் இது குறித்த தகவல்களை முழுவதும் ஆராயாமல் இந்த உண்மைகளை ஒதுக்கி விட முடியாது.

அவர் கூறியபடி அந்த உண்மைகளை ஒதுக்க முடியாமல் மேலும் ஆராய முற்பட்டவர் ஜோசப் பேங்க்ஸ் ரைன் (1895-1980). அவர் அறிவு தாகம் மிக்கவர். கல்லூரிப்படிப்பு முடிந்ததும் கடற்படையில் சேர்ந்து துப்பாக்கி சுடுவதில் சிறந்து விளங்கியவர்.

பின் தாவரவியலில் சிகாகோ பல்கலைகழக்த்தில் 1923ல் பிஎச்டி பட்டம் பெற்றவர். பின் ஹார்வர்டு பல்கலைகழகத்தில் மனோதத்துவத்திலும் பட்டம் பெற்றவர். ஒருமுறை அவரும் அவர் மனைவியும் புகழ்பெற்ற நாவலாசிரியர் ஆர்தர் கானன் டாயில் இறந்தவர்களுடன் கூட தொடர்பு கொள்ள முடியும் என்பதற்கு பல ஆதாரங்கள் விஞ்ஞான பூர்வமாக இருக்கின்றன என்று உதாரணங்களுடன் ஆற்றிய உரையைக் கேட்க நேரிட்டது.

இப்படியெல்லாம் நடக்க முடியும் என்கிற எண்ணமே அறிவு தாகம் உள்ள அவர் ஆர்வத்தைக் கிளறி விடவே ஆழ்மன சக்திகள் குறித்து முழுவதுமாக ஆராய்வது என்று அவர் தீர்மானித்தார்.

அது குறித்து பல நூல்கள் பற்றியும், பரிசோதனைகள் பற்றியும் படித்த அவர் 1930ல் ட்யூக் பல்கலைகழகத்தில் ஆழ்மன சக்திகள் குறித்த விரிவான ஆராய்ச்சிகளைத் தொடங்கினார்.

1931ல் லின்ஸ்மேயர் என்ற பொருளாதார மாணவரை வைத்து அவர் முதலில் தொடங்கிய ஆராய்ச்சி ஜெனர் கார்டுகளை (zener-cards) உபயோகப்படுத்தியதாக இருந்தன. அதில் கிடைத்த முடிவுகள் யூகத்தில் சொல்வதால் வரக்கூடிய விளைவுகளை விட அதிகமானதாக இருந்தன.

ஆரம்ப ஆராய்ச்சிகளில் மிகவும் வெற்றிகரமாகக் கிடைத்த முடிவுகள் போகப் போகக் குறைய ஆரம்பித்தன. காரணங்களை ஆராய்ந்த போது உற்சாகக்குறைவு, கவனச்சிதறல், வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற போட்டியுணர்வு ஆகியவை எல்லாம் காரணங்கள் என்பதை ரைன் கண்டுபிடித்தார்.

(இது இன்றளவும் உண்மையாக உள்ளது. பரபரப்பில்லாத உற்சாகம், முழுக் கவனம், வெற்றியடைந்தே ஆக வேண்டும் என்ற வெறியில்லாமல் அமைதியாக முயல்தல், களைப்பின்மை ஆகியவையே ஆழ்மன சக்திகள் வெற்றிகரமாக வெளிப்பட உதவுகின்றன. பின் ஆழ்மன சக்திகளைப் பெறுவதெப்படி, பயன்படுத்துவதெப்படி என்பதை அலசும் போது இது பற்றி விரிவாகப் பார்க்கலாம்).


லின்ஸ்மேயரை விட்டு விட்டு ரைன் ஹுபர்ட் பியர்ஸ் என்பவரை வைத்து 1932ல் தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். அந்த கார்டுகளில் சிலவற்றை எடுத்து மறைத்து வைத்துக் கொள்ள அந்தக் கார்டுகளைச் சரியாக யூகித்துச் சொல்லும் அந்தப் பரிசோதனைகளில் வியக்கத் தக்க சதவீத வெற்றிகள் கிடைத்தன.

சில ஆராய்ச்சிகள் கார்டுகள் வைத்திருப்பவருக்கும், யூகிப்பவருக்கும் இடையே நிறைய இடைவெளியில் நடத்தப்பட்டன என்றாலும் அந்த விளைவுகளில் அது அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

எடுத்த கார்டுகளை யூகிப்பது போலவே எடுக்கப் போகும் கார்டுகளையும் யூகிக்கும் ஆராய்ச்சிகளையும் ரைன் மேற்கொண்டார். ஜெனர் கார்டுகளைப் போலவே பகடைக் காய்களும் ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டன. கையால்உருட்டிப் போடுவது, ஒரு கப்பில் வைத்து வீசுவது, எந்திரம் மூலமாக எறியப்படுவது போன்ற பரிசோதனைகளும் நிகழ்த்தப்பட்டன.

எந்த எண் வரக்கூடும் என்ற யூகங்களையும் ஆராய்ச்சி செய்து சரிபார்த்தனர். அப்படிக் கிடைத்த முடிவுகளும் ஆழ்மன சக்திகளை உறுதிப்படுத்தும் அளவுக்கு உயர்ந்த சதவீதமாகவே இருந்தன.

1934ல் ரைன் தன் ஆராய்ச்சிகளைப் புத்தகமாக (Extra Sensory Perception) வெளியிட்டார். அது பல பதிப்புகளைக் கண்டு வெற்றிவாகை சூடியது. ரைன் மேலும் பல நபர்களை வைத்து தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். 1960களில் ஆழ்மன ஆராய்ச்சிகளுக்காக Foundation for Research on the Nature of Man. என்ற அமைப்பை அவர் ஏற்படுத்தினார்.

பின்னர் அது மாற்றம் அடைந்து ரைன் ஆராய்ச்சி மையம் (Rhine Research Center) என்ற பெயரில் இன்றும் ஆராய்ச்சிகளை நடத்தியும், மற்றவர்களின் ஆராய்ச்சிகளுக்கு உதவியும் வருகிறது.

முறைப்படியான ஆழ்மன ஆராய்ச்சிகளுக்கு ஜே.பி.ரைன் எடுத்த முயற்சிகள் இன்னொரு மைல்கல் என்றால் அது மிகையாகாது. 1930 முதல் தன் மரண காலம் வரை கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் அந்த ஆராய்ச்சிகளில் சளைக்காமல் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவரது முயற்சிகள் தற்கால அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாக அமைந்தன.

பின்னால் வந்த பல ஆராய்ச்சியாளர்கள் அவருடைய அடிப்படைகளையே ஒரு அளவுகோலாக வைத்துக் கொள்ளும் அளவு இந்தத் துறைக்கு பெரும்சேவை புரிந்துள்ளார்.

அவர் மனிதர்களிடம் மட்டுமல்லாமல் விலங்குகளிடமும் இது போன்ற அதீத சக்திகள் இருப்பதாகக் கருதினார். சிலர் அதிகமாக அதை வெளிப்படுத்த முடிந்தவர்களாக இருப்பதாகவும், அதுவும் சில குறிப்பிட்ட சமயங்களில் அந்த சக்திகள் அதிகமாக வெளிப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

விளக்க முடியாத மகாசக்திகளைக் காணும் போது உற்சாகமாக அதைப் பற்றிக் கொண்டு ஆராய முற்படுகிற ஆராய்ச்சியாளன் அதில் ஒரு பெரிய பொக்கிஷத்தையே கண்டு பிடிக்கிறான்.

அது எந்த அளவு மர்மமானதாகவும் விளக்க முடியாததாகவும் உள்ளதோ அந்த அளவு உயர்ந்த ஞானத்தை அது விளங்கப்பெறும் போது தருவதாக இருக்கிறது என்று 1947ல் ரைன் கூறியது போல பல ஆராய்ச்சியாளர்கள் ஆழ்மன சக்தியை ஆராய்ந்து மலைத்துப் போனார்கள்.

எத்தனை தான் ஆதாரங்களுடன் சொன்னாலும் ஆழ்மன சக்திகள் ஆர்வத்தைத் தூண்டும் அதே அளவுக்கு உண்மையில் இப்படி இருக்க முடியுமா? என்ற சந்தேகத்தையும் படிப்பவர் மனதிலும் கேள்விப்படுபவர் மனதிலும் ஏற்படுத்துவது இயல்பே.

எனவே ஆராய்ச்சிகள் மேலும் அதிகமாகவும் ஆழமாகவும் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் பூமியில் மட்டுமல்ல விண்வெளியிலும் இந்த ஆராய்ச்சி நடந்திருக்கிறது என்றால் நம்பக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் அது உண்மை. அதன் விவரங்களைக் காண்போமா?

மேலும் பயணிப்போம்....

அடேய் இது யார் பார்த்த வேலை டா...


பெண்கள் மெட்டி அணிவது ஏன்?


பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது.

கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்  சமநிலையில் இருந்து பாதிப்படைவதில்லை.

அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும். ஏனெனில் வெள்ளியில் இருக்கக் கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரனம் செய்யும் ஆற்றல் உள்ளதாம்..

பெண்கள் கர்பம் அடையும் போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும்.

கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற் கண் ட நோய்கள் குறையும்.

இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள்.

காரணம், நடக்கும் போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது.

கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால் தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கி இருக்கின்றார்கள்...

தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சனை போய் கொண்டிருக்கிறது.. ஆனால் இவர்களுக்கு எது முக்கியமாக இருக்கிறது பாருங்கள்...


தினகரன் திகாருக்கு போவான் போல...


இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக தினகரன் மீது டெல்லி போலிசார் வழக்கு பதிவு, தினகரனிடம் விசாரனை நடத்த நாளை சென்னை வருகின்றனர்..


பெங்களுரை சேர்ந்த இடைத் தரகரிடம் 60 கோடி பேரம் பேசப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு, இடைத் தரகர் , சந்திரசேகர் என்பவரிடம் இருந்து 1.30 கோடியை போலிசார் கை பற்றியுள்ளனர்...

வைகோ நாயூடு தனது தண்டனையை நீடிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டதால் அவரின் விருப்படி நீதிமன்ற காவல் வரும் 27-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது...


கைப்புள்ள எதோ பெருசா ப்ளான் பண்ணுது...

இயேசு பேசிய கடைசி வார்த்தை தமிழா..?


கன்னட பலிஜா ஈ.வே. ராமசாமி நாயூடு...


நாம் பின்பற்றத் தகுந்த முறையில், நமக்கு பயன்படுகிற முறையில் எந்த இலக்கியம் இருக்கிறது?

தொல்காப்பியம் என்று சொல்லுவார்கள். மொழிப்பற்று காரணமாக சொல்வார்கள். ஆரியத்திலிருந்து விலகி, ஆரியக்கருத்துக்களை எதிர்த்து சொன்னார் என்ற முறையில் அதில் ஒன்றுமே இல்லை என்று 1958 டிசம்பர் மாதம் வள்ளுவர் மன்றத்திலே கூறுகிறார். இதுதான் இவருடைய இலக்கிய ஆராய்ச்சி..

ஈ.வே. ராமசாமி நாயூடுவுடைய இலக்கிய ஆராய்ச்சியின் முடிவு என்ன தெரியுமா?

உண்மையாகப் பார்ப்போமானால் நமக்கு இலக்கியமே இல்லை. இலக்கியங்கள் என்று பாராட்டத் தகுந்த இலக்கியங்கள் இருக்கின்றன. நாம் பின்பற்றத் தகுந்த முறையில் நமக்குப் பயன்படுகிற முறையில் எந்த இலக்கியம் இருக்கிறது? என்று கேட்கிறார்.

இதுதான் இவருடைய இலக்கிய ஆராய்ச்சியின் முடிவு.

சங்க இலக்கியங்கள் இருக்கின்றனவே. அந்த இலக்கியங்களில் புறநானூறு இருக்கின்றனவே. அதில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரின் பாடல் பின்பற்றத் தகுந்தவையாக இருக்கின்றதே.

இனியவை நாற்பது, இன்னா நாற்பது, நாலடியார் இருக்கின்றதே.

இதையெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயூடு படித்திருக்க மாட்டாரா?

நிச்சயம் படித்திருப்பார். ஆனால் அவருடைய நோக்கமே தமிழரை, தமிழைக் கேவலப்படுத்துவது தானே..

சரி நமக்கு இலக்கியங்களே இல்லை என்று வைத்துக் கொள்வோம்.

ஈ.வே. ராமசாமி நாயூடு ஒரு இலக்கியத்தைக் கொடுத்திருக்கலாமே. அல்லது அவரது கழகத் தோழர்களாவது ஒரு இலக்கியத்தைக் கொடுத்திருக்கலாமே. அப்படி ஒரு இலக்கியம் இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம். ஏன் அவ்வாறு செய்யவில்லை?

நாம் பின்பற்றும் முறையில், நமக்குப் பயன்படுகிற முறையில் ஒரு இலக்கியத்தை ஈ.வே. ராமசாமி நாயூடு கொடுத்திருக்கலாமே.

இதிலிருந்தே தமிழ் மொழி பழிப்புதான் ஈ.வே. ராமசாமி நாயூடுவுடைய நோக்கம் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் வளர பகுத்தறிவுவாதிகளின் பங்கு என்ன?

தமிழை வளர்ப்பதற்கு பதில் ஆங்கிலம் வளர்வதற்கு மாநாடு நடத்தியவர்கள் தானே இந்த பகுத்தறிவுவாதிகள்...

பெண்கள் கொலுசு அணிவது ஏன்?


கொலுசு கொஞ்சம் விவாகரமான விஷயம்...

பொதுவாக, உடல் ரீதியாக ஆண்களை விட பெண்களுக்கு உணர்ச்சி அதிகம்.

அந்த உணர்ச்சி ஆண்களை விட மிஞ்சி விடக் கூடாது என்பதற்கு தான் இந்த கொலுசு.

உணர்ச்சிகள் பெரு விரலிருந்து தொடங்கி குதிக்கால் பின் நரம்பு வழியாக உச்சம் தலைக்கு ஏறுகிறது.

வெள்ளிக் கொலுசு குதிக்கால் நரம்பினை உரச, உரச உணர்ச்சிகள் குறைந்து கட்டுப்படுகிறது.

சில விவாகரமான விஷயங்கள் இலை மறை கனியாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி மறைவாக வைத்தனர் நமது முன்னோர்கள்...

ஆகாயத்தில் ஒரு ஒளி - 20...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற தொடரின் ஆரம்பமும் முடிவும் எப்படி இருக்கும் என்ற கற்பனையை வாசகர்கள் நன்கு கவனித்து வருகிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக புரிகிறது.

இதன் செயல்முறை காலம் தற்போது தான் என்பதை நாம் இங்கு அறிய வேண்டிய ஒரு உண்மை ஆகும்.

ஆகையால் ஆரம்பகாலத்தின் பயணம் இதன் உண்மைகளின் நம்பகத்தன்மையை நான் முதலில் உணரும் வகையில் இருந்தது என்பதே உண்மையாகும்.

புரியாத புதிராக பல தீர்க்க தரிசனங்கள் இருப்பதாக நாம் நினைத்தாலும் அவைகள் ஒரு போதும் செயல்படாமல் (நிகழாமல்) இருப்பதில்லை. காலக் கோள்களின் இயக்கம் தற்போது தீர்க்க தரிசனங்களின் நிகழ்விற்கு சாத்தியமானதாக இருப்பதாக கடவுளின் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.

தீர்க்க தரிசனத்தில் இன்று 20-வது தீர்க்க தரிசனத்தை பற்றி இங்கு காண்போம்.


உலகத்தில் மாயன் என்ற இனத்தவர்கள் வாழ்ந்தது என்பது உண்மையாகும். அவர்கள் விட்டுச் சென்ற கலாச்சார ஆதாரங்கள் இன்றும் பூமியில் காணப்படுகின்றன. அவர்களின் வம்சாவழியினர் யார்?

பாரம்பரியத்தில் அவர்கள் எங்கிருந்து இடம் பெயர்ந்து சென்றனர் என்ற கேள்விக்கு ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில் பல பதில்கள் இருப்பினும், இவர்கள் வட இந்தியர்கள் என்ற உண்மையை இன்னும் சில நாட்களில் அரியும்படியான ஒரு சம்பவம் நிகழ உள்ளதாக 20-வது தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.

வட இந்தியாவின் மாநிலத்தில் மலைவாழ் மக்களாக வாழ்ந்த நாகா என்ற வம்சத்தினரின் பழங்குடிகளே இந்த மாயன் வம்சத்தினர் (மக்கள்) ஆவார்கள்.

இந்த மாயன் மக்களுக்கும் 20-வது தீர்க்க தரிசனத்திற்கும் என்ன தொடர்ப்பு உள்ளது என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். உண்மையில் வான்வெளி சாஸ்திரத்தை கணித கணக்கீடாக அறிந்த முக்கால ஞானிகள் இவர்களாவார்கள்.

இந்த மாயன் வம்சாவழியினரின் தொன்று தொட்டு பழகி வரும் ஒரு கலாச்சாரம் இன்றும் உள்ளது. அது முன்னோர்களை வழிபாடு செய்யும் ஆருத்ரா எனும் வழிபாடு முறையாகும்.


அதாவது இவர்கள் சிவலிங்கத்தின் மேல் இருக்கும் நாக வம்சத்தினரை கடவுளாக போற்றி வணங்கும் முறையாகும்.

இந்த உலகமே பஞ்சபூதத்தின் சக்தியால் ஆக்கப்பட்டு அதன் இயக்கத்தால் இயங்கிவரும் கட்டமைப்பை கொண்ட ஒரு அதிசய உலகம் என்று நம்பி வணங்கி வந்தனர். மறு உலகத்திற்கு நமது முன்னோர்கள் நம்மை அழைத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்கள் இவர்கள்.

இந்த மாயன் வம்சத்தினர் காலக்கோளின் இயக்கத்தினை நன்கு அறிந்தவர்கள். அதன் இயக்க சுழற்சி எப்பொழுது பூமிக்கு அருகே வரும் என்பதை கண்டறிந்தவர்கள். அந்த காலக்கோள் எப்பொழுது பூமிக்கு அருகே வருகிறதோ அப்பொழுது இப்பூமியில் பல அழிவுகள் நடக்கும் என்றும்,

இந்த பூமி தன்னை மறுசீரமைப்புக்கு உட்படுத்திக் கொள்ளும் என்றும்,

அச்சமயத்தில் இந்த பூமியில் வாழும் தன் மக்களை காத்திட அந்த நாக வம்சத்தின் கடவுளான அகாரா வருவார் என்றும் தமது ஞான திருஷ்டியின் வாயிலாக கண்டறிந்து வைத்துச் சென்றனர்.


இதே கோட்பாடோடு நமது இந்திய தேசத்தில் வட இந்திய மாநிலத்தில் ஒரு பிரிவினர் இதன்படி நடந்து வருகின்றனர் என்றும்,

அந்த வம்சத்தினர் இந்த உலகம் பல ஆபத்துகளை சந்திக்க உள்ளது என்றும்,

அதனை காக்க தனது வம்சாவழியில் வந்த முன்னோர் ஒருவர், கடவுள் ஒருவர் வருவார் என்ற தீர்க்க தரிசனத்தை இன்னும் ஒரு சில மாதத்தில் அறிவிக்க உள்ளார்கள் என்று 20-வது தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகிறது.

20-வது தீர்க்க தரிசனத்தின் படி வட இந்தியாவில் அதற்கான சூழல்களும், பல இயற்கை சீற்றங்களும் தற்போது உருவாகும் என்றும்,

அப்பொழுது பல அதிசயங்கள் வட இந்தியாவில் நடக்கும் என்றும்,

அச்சமயத்தில் தான் இறைவன் வருகையை பற்றி ஒரு வம்சாவழியினர் அறிக்கை வெளியிடுவார்கள் என்று 20-வது தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகிறது.

வான் தேசத்திலிருந்து ஒரு செய்தி அனைத்து மத மக்களுக்கும் வர உள்ளதாகவும், அதனைப் பற்றிய முதல் செய்தியினை திபெத்திய லாமாக்கள் முன் அறிவிப்பார்கள் என்றும் 20-வது தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.


தமிழ்நாட்டில் புத்த கலாச்சாரம் வேர் ஊன்றிய காஞ்சிபுரத்தில் அரிதான ஒரு கல்வெட்டு கிடைக்கப்பெறும் என்றும்,

அதில் தமிழகத்தில் நடக்கும் அதிசயம் ஒன்றைப் பற்றிய அரிதான குறிப்பு ஒன்று இடம் பெற்றிருக்கும் என்றும் 20-வது தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகிறது.

சென்னை கடற்கரையில் கடல் நீர் புகுந்து ஓடும் சம்பவம் ஒன்று நிகழ உள்ளதாகவும், அதற்கு முன்னோட்டமாக மாமல்லபுரத்தில் ஒரு அதிசய சம்பவம் ஒன்று நடைபெறும் என்றும் 20-வது தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

கடல் தேசத்து நாடுகளில் மாபெரும் நிகழ்வுகள் ஆரம்பிக்க உள்ளதாகவும் அதனால் பல தேசங்கள் பீதியில் ஆழ்ந்து தவிக்கும் என்றும்,

அச்சமயத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு மகா சோகச் சம்பவம் ஒன்று நடைபெற உள்ளதாக 20-வது தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.

சென்னை, கன்னியாகுமரி, கேரள கிழக்கு கடற்கரை, பாம்பே நினைவில் கொள்ளக்கூடிய அளவிற்கு ஒரு சம்பவம் நிகழ உள்ளதாக இறை தீர்க்க தரிசனங்கள் ஒரு குறிப்பை தருகின்றன.

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...