17/04/2017

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் அரசிற்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் துவக்குவோம் - விவசாயிகள் ஆதரவு மாணவர்கள் இளைஞர்கள் போராட்டக் குழு எச்சரிக்கை...


இது குறித்து சென்னையில் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். பின்னர் இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

தமிழகத்தின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு  இந்த கோரிக்கைகளை மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான பிரதமர்  மோடி  அரசு உடனடியாக  நிறைவேற்ற வேண்டும், இல்லையென்றால்  ஆளும் இந்திய அரசுக்கு எதிராக இந்திய அரசுக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம் தன்னை தமிழக இளைஞர்களும் - மாணவர்களும் நடத்துவோம் எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ள டெல்லி விவசாயிகளின் போராட்டம் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்காதது ஏன் எனவும் தங்களது அறிக்கையில் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.