17/04/2017

சந்திர வழிபாடு...


சந்திர வழிபாடு என்ற உடனே ஏதோ இஸ்லாமிய வழிபாடு என நினைப்போர் பலர்.

ஆனால் சந்திரவழிபாடு என்பது சந்திரனின் நுட்பங்களை உணர்ந்து அதன்படி வாழ்க்கையை வகுத்து கொள்ளுவது மேலும் நமக்கு தேவையானதை சந்திரனை வைத்து அடைவது...

அப்படி சந்திரனில் என்ன இருக்கிறது? எப்படி செயல்படுகிறது?

செயற்கைகோள் உருவாக்கப்பட்டது இயற்கை துணை கோளான சந்திரனைப் பார்த்து தான்...இரண்டும் ஒரே வேலையை செய்கிறது. [தொழில் நுட்பவாதிகளுக்கு செயற்கை கோள் பழங்குடிகளுக்கு சந்திரன்].

சூட்சுமம் அறிந்தவனே உலகை ஆளுகிறான்.

இந்த சூட்சுமத்தை கண்டு பிடித்தது  சித்தர்கள் எனும் Documentory makers இல்லை.

பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கையின் அசைவுகளை கவனித்து  அதை பயன்படுத்திய பழங்குடிகள்.

இந்த நுட்பம் நமது பலிகொடுக்கும் குலதெய்வ வழிபாட்டில்  உள்ளதால் தான் பலநூறு ஆண்டுகளாக ஊன் உண்ணாமை, சைவம் வைணவம் சமணம்  பெளத்தம் ஆசீவகம் போன்ற பல கருத்தியல்கள் நம்மிடம் வழிந்து திணிக்கப்பட்டது.

தற்போது தமிழ் வரலாற்றை மீட்கிறேன் என களம் இறங்கியுள்ளவர்கள் வாயிலாக நம்மிடம் மீண்டும் திணிக்கப்படுகிறது.

இதில் ஆச்சரியம் என்னவெனில் தென் தமிழகமக்கள் தங்கள் பழங்குடி வழிபாடான குலதெய்வ வழிபாட்டை  விட்டு ஒரு  அடி கூட நகராமல் இருப்பதே.

அவர்கள் இப்போதும் கோபுர கோவில் வழிபாட்டை  ஏற்று கொள்ளவில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.