22/07/2020

மயிலாடுதுறை மாவட்டம் மே மாத்தூர் கிராமத்தில் கெயில் நிறுவன குழாய் 15 அடி உயரத்திற்கு வெளியேறும் வாயுக்கசிவு...


இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை எனலாம்...



இந்த கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்பது முழுக்க முழுக்க உண்மை.

கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும்.

வைட்டமின் "ஏ" சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது.
இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது.

தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.

இவை இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்கின்றது.

மேலும், குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.

கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.

பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப் புற்றுநோயில் இருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

இந்தக் காய்களில் உள்ள வைட்டமின் ஏ-யில் இருந்து பெறப்படும் ரெட்டினாய்க் அமிலம், புற்றுநோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து விடும்.

சருமத்துக்கு பொலிவைத் தந்து தோலில் ஏற்படும் சுருக்கத்தை கேரட் நீக்குகிறது.

மஞ்சள் காமாலை குணமாக தினமும் கேரட் சாறு அருந்துவதுநலம்.

பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் உதிரப்போக்கை கட்டுப்படுத்துகிறது.

உருளைக் கிழங்கை விட ஆறு மடங்க சக்தி அதிகம் இருப்பதால் எளிதில் ஜீரணமாகின்றது, எலும்புகள் வலுப்படுகிறது...

யோவ், முதல்ல அவன் கிட்ட பள்ளி வாடகையை கட்ட சொல்லு 😅


பாஜக மோடி 150 நாடுகளுக்கு உதவி இருக்காராம் 😂


மனுதர்மம் பார்ப்பனர் படைத்ததா?



பிராமணிய கொடுநெரிகளைச் சட்டவடிவமாக்கிய மனு நூல், அது பார்ப்பனரால் ஆக்கப்பட்ட நூல் அல்ல.

அது கி.பி.நான்காம் நூன்றாண்டில் கருனாடகத்து (திராவிடன்) கடம்பப் பேரரசனான மயூரவர்மனின் அவையில் அரங்கேற்றப் பெற்ற சட்டநூல்.

மானவக் குலம் என்பது 'ஆரிபுத்திரனின் வழிவந்த' கடம்ப்பரையும், சாளுக்கியரையுமே குறித்தது.

மானவத் தருமநூல் எனப்பட்ட மனுநூல் இதனால் கருனாடகத்து கன்னட அரசர் ஆக்கிய நூலேயாகும்.

அதையொத்த
ஆவத்தம்பா சூத்திரம், போதாயன சூத்திரம், நாரதர் சூத்திரம் முதலான பிராமனியாயச் சட்ட நூல்களும் கூடத் தென்னகத்தின் 'திராவிட' அரசுகளால் ஆக்கப்பெற்ற சட்ட நூல்களே ஆகும்...

ஆரியனும் திராவிடனும் ஒன்னு.. இதை அறியாத தமிழன் வாழ்க்கையே மண்ணு...

வந்தேறி திருட்டு திராவிடன்ஸ்...


அடக்குதல்...



நீங்கள் உங்கள் பேராசையை சரியாகப் புரிந்து கொண்டால் மட்டுமே நீங்கள் அதிலிருந்து விடுதலை அடைய முடியும்.

அதைத் துறக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. சரியாகப் புரிந்து கொள்ளாத போதுதான் துறவு எண்ணம் வருகிறது..

சில பேர் பணத்துக்கு எதிராக இருக்கிறார்கள்.சிலர் பணத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருவன் அதைக் கண்டு அஞ்சுகிறான்.
ஒருவன் பேராசை கொள்கிறான்.

இருவருமே பணத்தினால் ஆக்கிரமிக்கப் படுகிறார்கள்.

மிகுந்த ஈடுபாட்டினை முதலில் தவிர்க்கவும்..

அதைப்போல துறவு எண்ணத்திலும் ஜாக்கிரதையாக இருந்து தவிர்க்க வேண்டும். இரண்டுமே எலிப்பொறி போலத் தான். மிக்க ஈடுபாடும் அடக்குதலும்  இயந்திரத்தனமானது.

நீங்கள் பேராசை, பாலுணர்வு, கோபம், பொறாமை..

இவைகளுக்குள் உங்கள் மனதைத் திறந்து கொண்டு பயமில்லாமல் ஆழமாகச் சென்றால் நீங்கள் அதிலிருந்து விடுதலை அடைகிறீர்கள்.

உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கிறது.

அறிந்து கொள்ளுதல் உங்களை விடுவிக்கிறது.

மாறாக நீங்கள் அதை அடக்கினாலும், இயந்திரத்தனமாக மிகவும்  ஈடுபட்டாலும் ,முடிவு ஒன்று தான்.

முதலில் நீங்கள் உங்கள் உடலின் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள்.

உங்கள் உடலின் குரலுக்கு மதிப்பு கொடுங்கள்.

பிறகு மனதின் குரலைக் கேட்டு அதனைப் பூர்த்தி செய்யுங்கள்.

எதையும் தவிர்க்காதீர்கள்.

அவற்றின் தேவைகளில் ஆழமாக செல்லுங்கள்.

அன்புடன் கூர்ந்து கவனியுங்கள்.

உங்கள் உடலோடும் மனதோடும் நட்பாக இருங்கள்.

அப்போது தான் ஒரு நாள்  அவற்றைக் கடந்து செல்ல முடியும்...

கச்சத்தீவும் அரசியலும்...


ஆரியம் - திராவிடம் தமிழர்களுக்கு எதிரானது...


தூத்துக்குடியில் நாளை லாரிகள் வேலைநிறுத்தம் -5 ஆயிரம் லாரிகள் பங்கேற்பு...



டீசல் விலை உயர்வு, சுங்க கட்டண வசூல், சாலை வரி உயர்வு, ஆகியவற்றை எதிர்த்து தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (22ஆம் தேதி) லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜெகன் பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ’’கரோனா ஊரடங்கு காலத்திலும் டீசல் விலை 15 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் லாரிகளுக்கு அதிகப்படியான சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. 15 சதவீதத்திற்கும் மேலாக சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவது லாரி தொழிலை நஷ்டம் அடைய செய்துள்ளது.

இது தவிர சாலை வரி உயர்வு, லாரிகளுக்கான மாதத் தவணைகள் உள்ளிட்டவை லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளது. இதுகுறித்து பலமுறை அரசுக்கு மனு அனுப்பி இருந்தோம். ஆனால் இதுவரை அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நாளை 22ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டமாக லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது..

நாளை நடைபெறும் வேலைநிறுத்தத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரம் லாரிகள் பங்கேற்கிறது. இதனால் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்லும் சரக்குகள் தேக்கமடையும், உப்பு உற்பத்தி முதலான பணிகளும் பாதிக்கும். ஆகவே அரசு எங்களின் கோரிக்கைகளை ஏற்று காலாவதியான சுங்கச் சாவடிகளை மூடவேண்டும், லாரிகளுக்கான மாத தவனை காலத்தை மேலும் 6 மாதம் நீடித்து தர வேண்டும். டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்...

பாஜக அடிமை அதிமுக அரசு பதவி ஊழல் சுகத்திற்காக தமிழகத்தை அழித்துக் கொண்டிருக்கிறது...



சித்தர்கள் காட்டிய எட்டு வடிவ நடை பயிற்சி...



எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த வழிமுறை ஒருவர் தினமும் 30முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச் சிறந்ததாகும்.

பயிற்சியும் செய்முறையும்...

மேற்படி படத்தில் இருப்பது போல் 6 அடி அகலம் மற்றும் 8 முதல் 12 அடி நீளம் அளவில் தரையில் எட்டு ஒன்றுவரைந்து கொள்ளவும். அதை வடக்கு தெற்கு முகமாக  வரைந்து கொள்ளவும். படத்தில் உள்ளது போல் அம்பு குறியிட்டு காட்டியது போல் பாதையில் “1″ குறியில் இருந்து ஆரம்பித்து “5″ வரை சென்று மீண்டும் “1″ வர வேண்டும். நடக்கும் பொழுது மிகவும் வேகமாகவோ அல்லது மிகவும் மெதுவாகவோ நடக்கலாகாது. மிகவும் இயல்பாக நடக்க வேண்டும்.

தினமும் காலையும் மாலையும் 15 – 30 நிமிடங்கள் நடப்பது மிகச்சிறப்பு. நடக்கவேண்டிய நேரம் காலை அல்லது மாலை மணி 5 – 6 (am or pm). வெளியே செல்ல முடியாதவர்கள், வீட்டுக்குள் நடக்கலாம். நல்லமுறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும்.

நடைப்பயிற்சி முடியும்வரை மெளனமாக நடக்க வேண்டும்.

இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும். 15 வது நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக் காற்றையும் உணரலாம். பின்னர் நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடர வேண்டும். இதற்கிடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளி தானாகவே வெளியே காரி உமிழ்வதாலோ அல்லது கரைந்து இறங்குவதை உணரலாம்.

பலன்கள் இந்த பயிற்சியை காலை மாலை 1 மணிநேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம். 70வயது 50 வயதாக குறையும். முதுமை இளமையாகும்.. சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும். குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் தீரும். முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது. இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

கண்பார்வை அதிகரிக்கும், ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது. மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாடியின் புள்ளி(Point) அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது. செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது. உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது.

காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியைசெய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும். அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.

இரண்டுவேளை 30 நிமிடம் செய்தால், பாத வெடிப்பு, வலி, மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன. முதியோரும், நடக்க இயலாதோறும், பிறர் உதவியுடன் சக்கர வண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம். தினமும் ‘எட்டு’ நடைப்பயிற்சி செய்வதால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்.

உடல் பருமன், இரத்த அழுத்தம், இதய நோய், சுவாசகாசம் (Asthma), கண் நோய்கள், மூக்கடைப்பு, தூக்கமின்மை, மூட்டுவலி, முதுகுவலி, மன இறுக்கம், போன்ற கொடிய நோய்கள்கூட மெல்ல மெல்ல பூரணமாக குணமாகி விடுகின்றன. நல்ல முறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடை விடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும். வாழ்க வளமுடனும் நலமுடனும்...

திமுக ஆட்சியில் கரண்டு கம்பத்தின் மீதே குடும்பம் நடத்திய ஞாபகம்...


பாஜக டிஜிட்டல் இந்தியா விற்பனைக்கு...


பாஜக அடிமைகள் அதிமுக அட்ராசிட்டிஸ்...😀


திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?


பட்டு சேலைகள் அணிவதன் விஞ்ஞான ரகசியம்...

தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மை பொருளும் கலந்தே இருந்தன.

பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கையாகவே ஒரு குணம் உண்டு. அதாவது பட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும் தீய கதிர் வீச்சுகளை (நோயாளிகளின் சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள்) போன்றவற்றை தடுத்து உள்ளிருக்கும் உடலிற்கு வலிமை அளிக்கும்.

திருமணவீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர். அதில் யார் எப்படி என்று தெரியாது. எனவே தான் மணப்பெண்ணிற்கும் மணமகனுக்கும் அரோக்கியமான வாழ்வு வேண்டும். தொற்று நோய் பரவக் கூடாது என்பதற்காகவே அணிகின்றனர்.

இதை சில நாடுகளும் தற்பொழுது ஆராய்ச்சி செய்து கொண்டு வருகின்றது.

மேலும் திருமண பெண்ணிற்கு அணிவிக்கும் நகைகளும் உடலியல் காரணங்களுக்காகவே.

தங்கம் நரம்பு மற்றும் இதயம் போன்ற இடங்களின் மீது படும் பொழுது ரத்த ஓட்டம் சீரடையும். எதற்கு தாலி தங்கத்தில் உள்ளது என தெரிகின்றதா?

மோதிரம் மோதிர விரலில் அணிவதும் விஞ்ஞான மற்றும் உடலியல் காரணங்களுக்காகவே. இதில் வருத்தம் அளிக்கும் விசயம் என்னவென்றால் நம் பாரம்பரிய முறை இன்று நம்மில் பலருக்கு தெரியவில்லை.

கோவில்களுக்கு செல்லும் பொழுது ஏன் அணிகிறார்கள் என்றால் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே. கோவில்களில் சென்றால் தெரியும் எவ்வளவு இடம் இருந்தாலும் கற்பக்ரகத்தின் வாயிலாகவே சில கதிர் வீச்சுகள் கிரகங்களில் இருந்து வந்து கொண்டே இருக்கும். மேலும் கோபுர கலசங்களும் இடி தாங்கியாகவே செயல் பட்டு வருகின்றன.

பிறகு ஏன் இடி தாக்குகின்றது என கேட்கின்றீர்களா?

முறையான பராமரிப்பு அற்ற காரனங்களுக்ககவே அவ்வப்பொழுது அப்படி நடக்கின்றது. முழுமையான ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோவில்கள் இருக்கும் சில குறிப்பிட்ட பகுதிகளில், சுற்று வட்டார பகுதிகளில் இடி தாக்கும் அபாயம் இல்லை.

சும்மாவா சொன்னாரு பாரதியார் கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்று?

இவை எதுவும் தெரியாமல் பகுத்தறிவு பகலவர்கள் நாகரீகம் என்று தனக்கு தானே புலம்பிக் கொண்டு தானும் நாசமாவதுடன் மற்றவர்களையும் கெடுக்கின்றனர்...

டேய் அதிமுக ப்ராடுகார அடிமைகளா பொய்ய தவிர வேர ஏதும் கிடையாதா...


பாஜக தெலுங்கன் vs காங்கிரஸ் தெலுங்கன்...



செருப்படி என்பது யாதெனில் 🤣😂🤣

நாசரேத் நகர வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு...



நாசரேத் பகுதியில் ஜூலை 24 முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை கடைகள் அடைப்பது என  நாசரேத் நகர வியாபாரிகள் சங்கம் முடிவு...

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைத்து தரப்பு மக்களின் வேண்டுகோளை ஏற்று நாசரேத்தில்,  வெள்ளிக்கிழமை ஜூலை 24 முதல் வரும் 31 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை அனைத்து கடைகளும் மூடப்படும்...

யார் எதை பற்றி பேசுறதுனு, விவஸ்தை இல்லாம போச்சு 🤦


மன்மோகன் சிங் ஆட்சில இருக்கும் போது பாத்தது 😂


பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா நியமனம்...



பிரதமர் அலுவலக இணை செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த அமுதா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் 1994ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பயிற்சி முடித்தவர் ஆவார். இவர் தற்போது உத்தரகாண்டில் உள்ள முசோரி ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.

மதுரையை சேர்ந்த இவர், அப்பகுதியில் உள்ள வேளாண் கல்லூரியில் பி.எஸ்ஸி, அக்ரி படித்தார். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று பின், 1994ஆம் ஆண்டு தமிழக அளவில் ஐ.ஏ.எஸ் தேர்வில் முதலிடம் பெற்றார்...

இது தான் கொரோனாவை கட்டுபடுத்த மோடி எடுத்த நடவடிக்கைகள் 😅


தமிழர் படை குழுக்களின் பெயர்...



இன்றைய ராணுவத்தில் உள்ள படை பிரிவுகளை போல ஏன்.. அதை விட நுட்பமாக தாக்குதலின் தேவைகேற்ப தமிழக மன்னர்களால் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பல குழுக்களாக பிரிக்கப்பட்ட படை குழுக்களின் பெயரும் அவற்றின் எண்ணிக்கையும்...

பட்டாட்டி :
காலாட்படை வீரர்கள் - 5
தேர் - 1
யானை - 1
குதிரை - 3
மொத்தம் - 10

சேனாமுகன் :
காலாட்படை வீரர்கள் - 15
தேர்கள் - 3
யானைகள் - 3
குதிரைகள் - 9
மொத்தம் - 30

குழுமம் :
காலாட்படை வீரர்கள் - 45
தேர்கள் - 9
யானைகள் - 9
குதிரைகள் - 27
மொத்தம் - 90

கனம் :
காலாட்படை வீரர்கள் - 135
தேர்கள் - 27
யானைகள் - 27
குதிரைகள் - 81
மொத்தம் - 270

வாகினி :
காலாட்படை வீரர்கள் - 405
தேர்கள் - 81
யானைகள் - 81
குதிரைகள் - 243
மொத்தம் - 810

பிரட்டனை :
காலாட்படை வீரர்கள் - 1215
தேர்கள் - 243
யானைகள் - 243
குதிரைகள் - 729
மொத்தம் - 2430

கமு :
காலாட்படை வீரர்கள் - 3645
தேர்கள் - 729
யானைகள் - 729
குதிரைகள் - 2187
மொத்தம் - 7290

அணிகம் :
காலாட்படை வீரர்கள் - 10935
தேர்கள் - 2187
யானைகள் - 2187
குதிரைகள் - 6561
மொத்தம் - 21870

அக்குரோணி :
காலாட்படை வீரர்கள் - 109350
தேர்கள் - 21870
யானைகள் - 21870
குதிரைகள் - 65610
மொத்தம் - 2,18,700

பாஜக சங்கிகள் கலாட்டா...


700 கோடி செலவு செஞ்சி 20 mla வ வாங்குறானுங்க... அந்த காசுல வேற என்னன்ன கொரோனாவ கட்டுப்படுத்த வாங்கலாம்?


EIA - EIAdraft2020 சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் (EPA) கீழ் உள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (EIA) செய்வதற்கான விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்து உள்ளார்கள்...



EIA draft 2020 வெளியிடப்பட்டுள்ளது...

இதில் சில கருத்துக்கள் நேர்மாறாக உள்ளது...

அதாவது...

1.  நிறுவனம் தொடங்கப்பட்ட பிறகு கிளியரன்ஸ் சர்டிபிகேட் வாங்கிக் கொள்ளலாம்..

2. பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் கால அவகாசம் 30 நாட்களில் இருந்து 20 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது..

3. நிறுவனத்தில் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் பொதுமக்கள் அதை சுட்டிக்காட்ட முடியாது அந்த நிறுவனமோ அல்லது அரசாங்க அதிகாரிகள் தான் அதை சுட்டிக்காட்ட முடியும்..

4. மத்திய அரசாங்கமோ அல்லது மாநில அரசாங்கமும் ஒரு நிறுவனத்தை Strategic என்று குறிப்பிட்டிருந்தால் அதன் மீது கருத்து சொல்ல பொதுமக்களுக்கு அதிகாரம் இல்லை..

5.Border area LAC பகுதிகளிலிருந்து100 கிலோ மீட்டர் தொலைவில் கட்டப்படும் நிறுவனங்களுக்கு பொதுமக்கள் கருத்து கேட்க தேவையில்லை..

6. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறிக்கையை 6 மாதத்திற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனை இப்பொழுது 12 மாதத்திற்கு ஒரு முறை என்று மாற்றப்பட்டுள்ளது..

7. ஒரு நிறுவனத்தில் அனுமதி பெற்று கட்டிடம் கட்டுவதற்கான நில அளவு முன்பு இருந்ததை விட 8 மடங்கு அதிகப்படுத்த பட்டுள்ளது...

திராவிட கட்டுப்பாட்டில் இருந்து ஆரிய கட்டுப்பாட்டிற்கு தமிழக ஊடகங்கள் மாறுகிறது...



இரண்டுமே தமிழனுக்கு தேவையில்லாத ஆணி தான்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா விற்பனைக்கு...


ஆரியம் vs திராவிடம் இரண்டும் ஒன்றே...



இவனுங்க ரெண்டு பேருடைய பிழைப்பும் தமிழனை அழிப்பதற்காக தான் தெரிந்து கொள்ளுங்கள்...