22/07/2020

பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா நியமனம்...



பிரதமர் அலுவலக இணை செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த அமுதா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் 1994ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பயிற்சி முடித்தவர் ஆவார். இவர் தற்போது உத்தரகாண்டில் உள்ள முசோரி ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.

மதுரையை சேர்ந்த இவர், அப்பகுதியில் உள்ள வேளாண் கல்லூரியில் பி.எஸ்ஸி, அக்ரி படித்தார். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று பின், 1994ஆம் ஆண்டு தமிழக அளவில் ஐ.ஏ.எஸ் தேர்வில் முதலிடம் பெற்றார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.