31/10/2021

எலுமிச்சையின் அற்புத மருத்துவக் குணங்கள்...

 


சாதாரணமாக அனைத்து இடங்களிலும் வளரக்கூடிய தாவர இனமான எலுமிச்சை பல அற்புதமான மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது பலருக்கும் தெரியாத விடயம்.

தேள் கொட்டினால் அந்த இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க விஷம் இறங்கும்.

தலைவலிக்கு கடுங்காபியில் எலுமிச்சையின் சாற்றை கலந்து கொடுத்தால் உடனே குணமாகும்.

நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால் தகுந்த நிவாரணம் பெறலாம்.

மயக்கம், வாந்தி, வாய் குமட்டல், நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது வலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.

எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்து தலை முழுகி வர பித்தம், வெறி, உடல் உஷ்ணம் தணியும். அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால் எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை (கரிய போளம் என்பது கற்றாழையின் உலர்ந்த பால். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சேர்த்து காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர ரத்தக்கட்டு கரையும்.

நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை பழத்தில் துளையிட்டு விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும். எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் தீரும். இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த அழுத்தம் குறையும்.

சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் மருதாணியை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதத்தில் தடவி வந்தால் எரிச்சல் குணமாகும். சிறிதளவு எலுமிச்சை இலைகளை அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும்.

எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி பிடிக்க நீர்பினிசம் தீரும்.

சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து பின் அந்த சாற்றுடன் வெயிலில் காய வைக்கவும். நன்றாக காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம் பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து மீண்டும் வெயிலில் காய வைக்கவும். நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு தேன் அல்லது தண்ணீரில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டுவர அஜீரணம், பித்தம் தணியும் ரத்த அழுத்தம் சீராகும்...

மீ Vs பக்கத்து வீடு...

வீட்டில் இருக்கும் போது நண்பனிடமிருந்து கால்...

நண்பன் : மச்சான் உனக்கு என்னடா சரக்கு வேணும்?

மீ : என்னடா சொல்ற 18-48 வயசு உள்ளவங்க கட்டாயம் ஊசி போடணுமா...?

நண்பன் : புரிஞ்சிடிச்சு 1848 சரக்கே வாங்கிடுறேன்..

பக்கத்து வீடு : ஏ இங்க பாருடி  தீபாவளிக்கு  ட்ரெஸ்  எடுக்க எவ்வளவு கெத்தா  போறாருனு...

கெத்தவா  நானே சரக்கு கிடைக்குமானு தெரியுமா கடுப்புல  போறேன் கெத்தமா  போங்கடி  குந்தானிகள... 🚶🚶

🤣🤣🤣

மாலை வணக்கம் மக்களே...

 


அப்படி என்ன புரட்சி செஞ்சாங்கனு சொல்லுடா வேசி ஊடகமே...

 


பிராடு பாஜக மோடி கலாட்டா...

 


ஒ.. இதற்கு பெயர் தான் காதலா...



கொஞ்சம்
தள்ளி வைத்தால் கூட
நிறைய நெருங்கி வருகிறது
உன் மீதான காதல்..

நீ என்னை காதலித்தை விட
நீ என்னை காயப்படுத்தியது 
தான் அதிகம் என்று தெரிந்தும்...

சித்தராவது எப்படி - 40...


தெய்வீகம் ஊட்டப் பட்ட சுவாசம்...

நிஜத்தை நகல் ஆக்குவதும், நகலை நிஜமாக்குவதும், உண்மையை பொய் ஆக்குவதும் பொய்யை உண்மை ஆக்குவதும் ஆகிய செயல்களை மட்டுமே செய்கின்ற அமைப்புகள் இருக்கின்றன..

இந்த அமைப்பின் ஏமாந்த உறுப்பினர்கள் உலகில் நூற்றுக்கு தொன்னூற்று ஐந்து பேர் எனலாம்...

இன்று மனித வர்க்கம் ஏறக்குறைய முழுமைக்கும் நிலைகுழைந்து போய் சீரழிந்து போய் மன அளவில் மிகப் பெரிய பாதிப்புக்கு உண்டானது என்றால், அதற்கு இந்த அமைப்புகளே காரணம்..

நாளைய மிக பெரிய உலக சீரழிவுக்கு இன்றே இந்த அமைப்புகளால் வித்திடப் படுகிறது..

நிலைமை இப்படியே நீடித்தால் உலகம் நாளைய பெரும் சீரழிவிலிருந்து தப்பிக்கவே முடியாது என்பது உறுதியாக தெரிகிறது...

இந்த நகலை நிஜமாக்கும் தந்திரத்தில் ஒரு மனிதன் தன்னையே தெய்வம் என பறை சாற்றி கொள்ளும் அளவிற்கு மிக கீழ் தரமாக போய் விட்டது.. இது ஒன்றே நிஜம் தொலைந்து போனதிற்கு சாட்சியாக உள்ளது...

சரி தொலைந்து போன அந்த நிஜம் தான் என்ன ? இந்த மனித தேகத்தில் எது ஒன்று நின்று விட்டால் சில வினாடிகள் கூட தாங்க முடியாமல் இந்த தேகம் வலு இழந்து சரிந்து விடுமோ, அந்த சத்தியத்தை மனிதன் நினைப்பது இல்லை..

வினாடிக்கு வினாடி, நொடிக்கு நொடி, நிமிடத்திற்கு நிமிடம் இந்த தேகத்தை காத்து கொண்டு இருக்கும் ஒன்று, நமது நாளைய பொழுதையும் வரும் எதிர் காலத்தையும் துளியும் காப்பாற்றாது என தவறாக நினைத்து தன்னை காப்பாற்றிக் கொள்ள அந்த நிகழ் கால நிஜத்தை விட்டு நகலை தேடி அலையும் மனிதனின் பண்பை என்னவென்று சொல்லுவது ?

அந்த நிகழ் கால நிஜம் இதுதான் என்று சொல்லும் அந்த தருணமே, ப்பூ இவ்வளவு தானா என்று முக சுளிப்போர் எத்தனை பேர்?

அத்தனை பேர்களும் அந்த நிகழ் கால நிஜம் சில வினாடிகள் கிடைக்க வில்லை யென்றால், அவர்கள் படும் தேகத் துயரம் நன்றாக அறிந்து இருந்தும், துளியும் உணராது இருப்பது எதனால் ?

காரணம் முதலில் சொன்னது போல் அந்த அமைப்புகள் மனிதனை குழந்தை முதலே நன்றாக மூளை சலவை செய்து நிஜத்தை நகல் என்றும், நகலை நிஜம் என்றும் ஆழ் மனதில் பதிய வைத்தது தான் காரணம்..

வாழையடி வாழையென அந்த பதிவுகள் இன்று சந்ததிகள் வழியாகவும் பலமாக நீடித்துக் கொண்டும் இருக்கிறது... இனி மேல் மனிதனுக்கு நிஜத்தை உணரும் சந்தர்ப்பங்களே இல்லாதது போல் தெரிகிறது...

அந்த நிகழ் நேர நிஜம் நமது சுவாசம் என்பதை மறக்கக் கூடாது.. ஒவ்வொரு சுவாசத்தை நாம் உணரும் போது அதில் உண்மையான தெய்வ நிலை இருப்பதை உணரலாம்..

எது நம்மை இந்த வினாடியில் வாழ வைக்கின்றதோ நிலை நிறுத்தி வைக்கின்றதோ அதில் ஒன்றில் மட்டுமே நிகழ் கால தெய்வம் உள்ளதை உணர வில்லையென்றால் நாம் எல்லாம் இழந்தவர்கள் ஆகிறோம்.. அதனால் முடிவில் எல்லாம் இழந்து மரணத்தை தழுவுவதே நிஜம் ஆகிறது..

தோன்றா நிலையிலே அனைத்து உயிர்களையும் காக்கின்ற நிஜம் அதாவது உண்மை இருக்கின்றது.. அதுவே அனைத்து உயிர்களையும் காப்பதால், அது தோன்றா நிலையில் இருந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம்...

இந்த உண்மையை புத்தி உள்ள எவரும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.. அப்படி அந்த தோன்றா நிலைக்கு அழைத்து செல்லும் அல்லது காட்டும், அந்த சுவாசம் ஒன்றே தெய்வ நிலைக்கான ஒரே ஒரு நிஜம்..

திகைப்பூட்டும் இந்த உண்மையை உணர்ந்து கொள்ளும் அந்த கணமே நாம் தெய்வீக நிலை நோக்கி வேகமாக முன்னேறுகிறோம்..

அந்த சுவாசத்தில் சூரிய கலையில் முழுமையாக தோன்றாநிலை கிடைக்கின்ற போது, கிடைத்தது தொடர்கின்ற போது, தெய்வீக நிலை முழுமையாக நமக்கு கிடைக்கின்றது..

எல்லாம் செயல் கூட்டி வைக்கும் அந்த நிகழ் கால தெய்வீகத்தோடு இருக்காமல் நகலை பிடித்துக் கொள்வது, எந்த விதத்தில் சரியானது என்ற நம் தமிழ் சித்தர்களின் கூக்குரல் மனித வர்க்கத்தின் காதில் ஒலித்து உணரும் போது மட்டுமே மனித குலம் காப்பாற்றப் படும்...

அந்த நிகழ் நேர நிஜத்தை பிடித்து நாம் நிறை நிலை சித்தனாக முயலுவோமாக...

வந்தேறி பாஜக கூட்டாளி வந்தேறி திமுக வின் பித்தலாட்டங்கள்...

 


தமிழக திமுக அரசு RSS கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது என்பது மறுக்க முடியாது...

 


நான் தான் அந்த புத்திசாலி 😁

 


சித்தராவது எப்படி - 39...

 


மனதின் தோல்விகளே அககுருவின் எழுச்சி...

எல்லாம் நான் தான் என ஆணவ இறுமாப்பில் இருக்கும் மனம், தன் சிறு வட்டத்தை விட்டு வெளி வராமல், தன் சிற்றறிவிலேயே காலம் தள்ளி பேரறிவினை பெற முடியாமல், வளர்ச்சி அடையாமல் போய் விடுகிறது...

என்றோ ஒரு நாள் தன் வட்டத்தை விட்டு எட்டி பார்க்கையில், மற்றவர்களீன் ஆன்மா வளர்ச்சியை கண்டு திகைத்து இருந்தாலும், தனக்கு தானே சமாதானங்களை தேடி அலைகின்றது..

மிக பெரிய உண்மை என்னவென்றால், தான் ஏற்படுத்திய குறுகிய வட்டத்திற்கு சமாதானங்களை தேடி அலைவது தான் மனதினுடைய பெரும் பாலான வேலையாக உள்ளது..

இந்த மனதை தோற்கடிக்க எந்த சக்தியாலும் முடியாது போல் இருந்தாலும், அண்ட பேரறிவு திக்கு அற்ற நிலைக்கு நம்மை தள்ளி விட வில்லை...

இந்த ஆணவ மனத்தின் ஆதிக்கத்தை கட்டுப் படுத்தி முறைபடுத்த நமக்குள்ளே வைத்த ஒரு உறவு தான் இந்த சுவாசம்..

இது பிராண வாயுவை உள் வாங்க செய்யும் ஒரு ஏற்பாடு மட்டும் அல்ல.. அதற்கு மேலே பல பல காரணங்களை உள் அடங்கிய ஓர் உன்னத உறவு..

தேகத்தை ஓங்க செய்வதின் மூலம் வினாடிக்கு வினாடி தேகம் சீர் குழைந்து போகாமல் காக்கிறது.. அதற்கு மேலே ஞான மார்க்கத்திற்கென்றே செயல் பட கூடிய நிலையில் உள்ளது.. அதை மனிதன் அறியாது இருப்பது அஞ்ஞானமாக உள்ளது....

பிரபஞ்ச ஆற்றலாலும், அறிவாலும் ஒவ்வொரு உயிரிலும் இந்த சுவாசம் செயல் படுகின்ற விதம் மிகவும் வியப்புக்கு உரியது..

அதை ஞானத்திற்கு என்று பயன்படுத்தியவர்கள் நமது போற்றுதற்கு உரிய சித்தர் பெரு மக்கள்...

வாசி யோகம் என்ற தலைப்பில் முறை படுத்திய யோகப் பயிற்சிகள், அதன் உண்மை தன்மையை அறிந்தவர்களுக்கு பிரமிப்பு ஊட்டக் கூடியது...

பதஞ்சலி போன்ற வட இந்திய யோகிகளின் முறை வேறு.. அது சிறப்பானது தான்..

ஆனால் அதனிலும் மிக சிறப்பான தமிழ் வாசி யோகம் அறியாத ஆரிய மக்கள் தங்கள் செல்வாக்கை பயன் படுத்தி தாங்கள் அறிந்த பதஞ்சலி யோகத்தை முன்னிலை படுத்தி விட்டார்கள்.. அதனால் தமிழ் வாசியோகம் காணாமல் போய் விட்டது..

புத்தர்களின் சீடர்களிலே மிகவும் பலம் வாய்ந்த போதி தர்மாவை சீனாவுக்கு புத்தர் அனுப்பி வைத்தது புத்தரின் ஒரு அரசியல் கபடமே..

தமிழ் வாசி யோகத்தை கற்றுக் கொடுக்க புத்தருக்கு மனம் இல்லை.. அது தான் வழக்கமாக கற்று கொடுத்த பயிற்சிக்கு முற்றிலும் வேறு பாடாக இருந்ததாலும் மிகவும் வலுவாக இருந்ததாலும், போதி இந்தியாவில் இருந்தால் சில பிரச்சனைகள் எழக்கூடும் என்ற நோக்கில் போதி தர்மாவை பிரச்சனைகள் நிறைந்த சீனாவுக்கு அனுப்பி விட்டார்..

இதையும் உணர்ந்த போதி சீனாவில் தன் பணியை வெற்றி கரமாக முடித்து விட்டு, நாடு திரும்பாமலேயே இமயமலையில் அடங்கி விட்டார்...

சுவாச ஒழுங்கு என்பது மனதால் இயலாத காரியம்.. ஒழுங்கற்ற தன்மை உடைய மனம் அந்த சுவாச ஒழுங்கில் இணைய முடியாது..

அதனால் ஞானம் என்ற ஆசை வார்த்தைக் காட்டி மனதை ஈர்த்து, சுவாச ஒழுங்கிலே ஈடு படுத்துகின்ற போது மனம் அதனோடு போராடி போராடி தோற்றுப் போகின்ற ஒவ்வொரு நேரத்திலும் மனம் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு பணிந்து போகிறது.. மனதினுடைய பணிவிலே அக குருவாகிய விழிப்பு நிலை எழத்தொடங்குகிறது...

அதனால் தான் சமயங்களில் அதாவது மதத்தில் பணிவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரப் படுகிறது..

ஒரு இரகசியம் என்னவென்றால், மனம் தனக்கு தானே பணிவை ஒரு நாளும் ஏற்படுத்தி கொள்ள முடியாத நிலையில் உள்ளது..

அதற்கு அதனுடைய குறுகிய ஆணவ வட்டம் மிக பெரிய தடையாக உள்ளது...

மனதை தோற்று போக செய்யக்கூடிய ஒரு காரியத்தை மனதிற்கு ஒப்படைக்கும் போது, மனம் அதை செய்ய முடியாமல் தன் தோல்வியை ஒப்புக் கொள்கிறது.. பணிவு கொள்கிறது.. மென்மை அடைகிறது.. அது மிக மென்மை அடைகின்ற போதுதான் அதனிலும் சற்று வன்மையான ஆனால் மென்மையான விழிப்பு நிலை எழ முடிகிறது.. இது தான் மிக பெரிய இரகசியம்..

சரி சுவாச ஒழுங்கு ஒன்று தான் மனதை பணிவு கொள்ள செய்யுமா? வேறு ஒரு யோக முறையே இல்லையா? என கேட்கலாம்..

பல காரணங்களில் ஒரு முக்கியமான காரணம் இதுவும் ஒன்று..

அது சதா காலமும் வெளியிலேயே உலாவி பழக்கப் பட்ட மனம் சுவாசத்தில் ஈடு படும் போது, உள் நோக்கி பாயும் சுவாசக் காற்றால் மனமும் உள் நோக்கி பாய வேண்டியதிருப்பதால், பழக்கமில்லாத அந்த இடத்தில் எதுவும் தோன்றாது இருப்பதால், பற்றிக் கொள்ள எதுவும் இல்லாததால், மனம் அங்கே இருப்பு கொள்ள முடியாமல், மொத்தத்தில் சுவாசத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள மிகவும் முயற்சி செய்கிறது..

மனம் வெளியே பாய்ந்து தன் ஒழுங்கின்மையை சுவாசத்திலும் பாதிப்பு அடைய செய்கிறது..

இந்த காரணத்தில் தான் மனம் சுவாசத்தை ஒழுங்கிலே இருக்க செய்ய முடிவதில்லை..

நாம் சுவாச ஒழுங்கிலே இருக்க முடியாததற்கு காரணம் மனதின் வெளியில் உள்ள ஒழுங்கற்ற ஈடுபாடு தான்..

மனதின் குறுக்கீடுகள் மட்டும் இல்லையென்றால் ஒரு சுவாசம் இயல்பாகவே நான்கு வினாடிகள் ஒழுங்கில் இருக்கும்..

இதையே மாற்றி செய்யும் போது அதாவது சுவாச ஒழுங்கில் இருக்கும் போது மனம் ஒழுங்காகிறது...

நம்மில் அக குரு இரண்டு வழிகளில் பலப்படுகிறார்..

ஒன்று சுவாச ஒழுங்கில் நாம் இருக்க முயலும் போது மனம் ஒழுங்கு தன்மை பெற்று மென்மை அடைந்து அக குரு எழ வகை செய்கிறது..

இரண்டாவது மனம் சுவாச ஒழுங்கில் இல்லாத சமயம் தன் தோல்வியை ஏற்றுக்கொண்டு ஆணவத்தை இழந்து மென்மை அடைகின்ற போது அககுரு எழ வகை கிடைக்கிறது...

சரி இப்போது அககுரு பலப்படுவதால் என்ன நேர்ந்து விடப் போகிறது என்ற கேள்வியை மட்டும் கேட்டு விடாதீர்கள்..

நமது மர்ம யோக நெறியில் மிகவும் ஈடு பாடு உள்ளவர்களின் மன நிலை பாதிக்கப் படலாம்...

அககுருவால் அனைத்தும் செயல் கூடும் என்பது தெள்ளத் தெளிவான உண்மை ஆகும்..

சித்தர் பெருமக்கள் அககுருவை அடைந்து பின் அககுருவாய் தன்னை மாற்றி, அன்பின் மூலம் வியப்பு ஊட்டும் செயல்களை செய்யக் கூடியவர்களே...

நாமும் அககுருவின் மூலமும், அககுருவாய் ஆகியும் நிறை நிலை சித்தனாக மாற முயலுவோமாக...

தீபாவளி கலாட்டா...

 


கணவன்; என்னடி ஆச்சு  நம்ம வீட்டுக்கு முன்னாடி இவ்வளவு கூட்டமா இருக்குது...

மனைவி; நான் செஞ்ச  முறுக்கு சாப்பிட்டுட்டு என் மாமியார் என் கூட பேசவே இல்ல ன்னு சொன்னேன்  எனக்கும் செஞ்சு தாங்கன்னு நிக்கிறாங்க...

திருட்டு திமுக வின் பித்தலாட்டங்கள்...

 


கடத்தல் மன்னன் அதானி...

 


திருட்டு திமுக வின் பித்தலாட்டங்கள்...