02/08/2017

ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி நேர்மையாக செயல்பட்டால் மக்களின் ஆதரவும் நிச்சயம் கிடைக்கு என்ற எனது நம்பிக்கை வீண் போகவில்லை - ட்வீட் செய்த ரூபா...


மீண்டும் எழுச்சி பெறுமா தமிழினம் , தன் இனத்தை அழிவில் இருந்து மீட்க ?


பல்லாயிரம் வருடங்களாக நாகரிகத்திலும் , பண்பாட்டிலும், விஞ்ஞானத்திலும்  தலை சிறந்து விளங்கிய ... பல்வேறு நாடுகளை ஆட்சி செய்த.... தமிழ் இனம்....

நேற்று தோன்றிய சிங்களத்திடம்.... தோற்று அடி வாங்கி கொண்டு  அடிமையாக்... உலகம் முன்னிலையில் நாம் இருப்பது ஏன்.....

10 மைல் தொலைவில்  நாம் இருந்தும்.... நம்மால் சிங்களவனின் அட்டுழியங்களை அடக்க முடியாமல் இருப்பது ஏன்......

தமிழ் மண்ணில் தமிழன் இங்கு ஆட்சி செய்ய முடியாதது ஏன்.....

சொந்த மண்ணில் எதிர் கட்சியாக கூட வரமுடியாத மோசமான நிலை ஏன்..

இலங்கையில் வலுகட்டாயமாக அடிமையாக வைக்க முயல்கிறார்கள் ராணுவத்தின் மூலம்....

இங்கு தமிழ்நாட்டில் நாமே வலிந்து வலுகட்டாயமாக அடிமையாக இருப்பது ஏன்..

இனியும் நீங்கள் தமிழ் இனமாக ஒன்று பட்டு உணர்வு கொண்டு எழுச்சி பெற வில்லை என்றால்......

விரைவில் தமிழ் இனத்தின் இறுதி வரலாறு இலங்கையிலும்... பிறகு தமிழகத்திலும் எழுதப்படும்......

அது வரை நீங்கள் பொறுமையாக தான் உண்டு தன் வேலை உண்டு நமக்கேன் என்று  இருக்க போகிறீர்களா....

போராட்டமே வாழ்கையாகவும், வாழ்கையே போராட்டமாகவும் வாழும் ஈழ தமிழர்களுக்கு..... நீங்கள்  தர விரும்பும் பரிசு என்ன மரணமா, இல்லை விடுதலையா.?

உங்களிடம் பணம் இல்லையா உதவ.. பரவா இல்லை..

உங்களின் உயிரை கொடுக்க விருப்பம் இல்லையா, பரவாயில்லை ...

ஆனால் அனைவரும் உணர்வை.. தமிழன் என்று உணர்வை ... கொடுக்கலாமே...

உங்கள் உணர்வை.... நீங்கள் அழுத்தமாக பதிவு செய்தால்.... உலகம்  திரும்பி பார்க்கும்... அவர்களுக்கு விடுதலை கிடைக்கும்....

உயிர் இருந்தால்.... மூளை செத்து போக வில்லை என்றால்..... உணர்வு கண்டிப்பாக இருக்கும்..... அதை வெளிபடுத்துவதில் உங்களுக்கு தயக்கம் ஏன்....

அதனால் உங்களுக்கு மரண தண்டனையா.....?

உங்கள்  பணம் விரயம் ஆகிறதா....?

உங்கள் தொழில் நஷ்டம் அடைகிறதா..?

இல்லை தமிழன் என்ற உணர்வு மட்டும் இல்லையா....

உணர்வை மட்டும் கொடுங்கள் தமிழினத்தின் உரிமையை பெற.

உங்களால் முடியும் உதவிகளையே கேட்கிறோம்....

அவற்றை தாராளமாக் கொடுங்கள்........

வருங்காலங்களில்  தேர்தலில் தமிழ் இன உணர்வு ஈழ ஆதரவு கூட்டனிக்கு வாக்களியுங்கள்.....

தமிழ் இன உணர்வு ஆதரவு போராட்டங்களில் பங்குகொள்ள பாருங்கள்....

உங்கள் நெருங்கிய நண்பர்கள் , உறவினர்களிடம்..  இன உணர்வை மேலோங்க செய்ய.... விழிப்புணர்வு உண்டாக்குங்கள்...... அவர்களிடமும்  அவர்களின் நெருங்கிய நண்பர்களிடம், உறவினர்களிடம்... கொண்டுச் சொல்லுங்கள்...

இது மக்கள் போராட்டமாக மாற வேண்டும்....

உங்களுக்கு நேரம் இருக்கும் போது,  போராட்டம் நடை பெற்றால் அவசியம் பங்கு பெறுங்கள்...

மற்றவர்களுடன்  உரையாடும் போது... தமிழ் இனத்தின் விடுதலை பற்றி கொஞ்சம் உரையாடுங்கள்.....

உங்களிடம் பழகும் பிற மாநில, வெளிநாடு மக்களிடம் ஈழம் பற்றிய நிலையை எடுத்து கூறுங்கள்... ஆதரவு கேளுங்கள்....

தமிழ் இனத்திற்கு தமிழனே உதவ முன்வரவில்லை என்றால் பிறகு மற்றவர்கள் எப்படி முன்வருவார்கள்..

நீங்களும் உங்கள் சிந்தனைக்கு ஏற்ப, போராட்டம் செய்யலாம்... போராட்ட வடிவத்தை மாற்றலாம். இனத்தின் எழுச்சிக்கு...

வித்தியாசமான முறையிலும் உங்களுக்கு தோன்றும் வழியில் போராட்டம் செய்யலாம்....

மக்களிடம்  உலகத்திடம்.. தமிழகம் + ஈழத்தின் தேவையை உணர்த்த வேண்டும், சென்றடைய வேண்டும்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் அடுத்த ஆப்பு...


வியட்நாம் பாண்டியன்...


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்.

அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன்.
அவனுடைய பெயர் ஸ்ரீமாறன்.
தமிழில் இதை திருமாறன் என்று
சொல்லலாம்.

வியட்னாமில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழைய சமஸ்கிருத கல்வெட்டு இவனை ஸ்ரீமாறன் என்று குறிப்பிடுகிறது .
இந்தக் கல்வெட்டில் ஆட்சி , ஆண்டு முதலிய விவரங்கள் கிடைக்கவில்லை .

கல்வெட்டின் பெரும்பகுதி அழிந்துவிட்டது.
ஆனால் எழுத்து அமைப்பின் அடிப்படையில் இது கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர்.

வியட்னாமில் வோ- சான் என்னும் இடத்தில் ஒரு பாறையின் இரண்டு பக்கங்களில் (VO–CHANH ROCK INSCRIPTION ) இது செதுக்கப்பட்டுள்ளது .

ஸ்ரீமாறன் என்ற அரசனின் குடும்பம் செய்த நன்கொடையை (தானத்தை ) கல்வெட்டு குறிப்பிடுகிறது .

பாறையின் ஒரு பக்கத்தில் 15 வரிகளும் மறு பக்கத்தில் ஏழு வரிகளும் உள்ளன .
ஆனால் ஒன்பது வரிகள் தவிர மற்றவை தேய்ந்து அழிந்துவிட்டன.

சமஸ்கிருத பாட்டுப் பகுதி வசந்த திலகா அணியிலும் ஏனைய வரிகள் உரைநடையிலும் உள்ளன.கிடைத்த வரிகளிலும் கூட சில சொற்கள் அழிந்துவிட்டன.

கல்வெட்டின் சில வரிகள்...

. . . . . .. . ப்ரஜானாம் கருண . .. . .. ப்ரதாம் விஜய
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

ஸ்ரீ மாற ராஜகுல . . . . . . வ . . . . . . . . . . .

ஸ்ரீ மாற லோ. . . . . ன. . . .. . . . குலதந்தனேன

க்ராபதிம் ஸ்வகன. . .. .. ச . . . . . . . .. .. ..

இந்தக் கல்வெட்டில், தனக்குச் சொந்தமான வெள்ளி, தங்கம், தானியக் குவியல் மற்றுமுள்ள அசையும் , அசையா சொத்து (ஸ்தாவர , ஜங்கம்) வகைகள் அனைத்தையும் தமக்கு நெருங்கிய மக்களுக்கு பொதுவுடமையாக்குவதாக மன்னன் அறிவிக்கிறான்.

எதிர்கால மன்னர்கள் இதை மதித்து நடக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கிறான் .
இது வீரனுக்கு தெரியட்டும். .. . . . . .. . . என்று பாதியில் முடிகிறது கல்வெட்டு.

இதில் முக்கியமான சொற்கள்  “ஸ்ரீமாற ராஜகுல ” என்பதாகும் .இந்த திருமாறனைக் குறித்து மிகவும் குறைவான தகவலே கிடைத்துள்ளது .

ஆனால் வியட்னாம் , லாவோஸ் , கம்போடியா ஆகிய நாடுகளில் 1300 ஆண்டுகளுக்கு நிலவிய இந்து சாம்ராஜ்யத்தின் முதல் மன்னன் இவன் என்பதை சீனர்களின் வரலாறும் உறுதி செய்கிகிறது .

திருமாறனை சீன வரலாற்று ஆசிரியர்கள் கியு லியன்(KIU LIEN ) என்றும் இவன் ஹான் வம்சம் (HAN DYNASTY ) சீனாவை ஆண்டபொழுது அவர்களின் கட்டுபாட்டில் இருந்த ‘ சம்பா ’ தேசத்தில் புரட்சி செய்து ஆட்சியைக் கைபற்றியதாகவும் எழுதிவைத்துள்ளனர் .

சம்பா (CHAMPA ) என்பது தற்போதைய வியட்னாமின் ஒரு பகுதியாகும் .
மன்னனின் குடும்பப் பெயர் கியு(KIU ) என்றும் மன்னனின் பெயர் லியன் (LIEN ) என்றும் எழுதிவைத்துள்ளனர் .
இவன் காங்ட்சாவோவின் (KONG TSAO ) புதல்வன் என்றும் தெரிகிறது .

தென்கிழக்கு ஆசியா முழுதும் முதல்முதலாக தொல்பொருள் ஆராயச்சி நடத்திய பிரெஞ்சுக்காரர்கள் ஸ்ரீமாறனும், கியு லியானும் ஒருவர்தான் என்று உறுதிசெய்துள்ளனர் .

கி .பி. 137 ல் சீனர்களை எதிர்த்துக் கலகம் துவங்கியது . ஆனால் கிபி 192 ல்தான் ஸ்ரீ மாறன் ஆட்சி ஏற்பட்டது .

ஸ்ரீ மாறனுக்குப் பின்னர் ஆண்ட மன்னர்களில் பெயர்கள் எல்லாம் சீனமொழி வாயிலாக ‘உருமாறி ’ கிடைப்பதால் அவர்களின் உண்மையான பெயர்கள் தெரியவில்லை .

எல்லா மன்னர்களின் பெயர்களும் பான்(FAN ) என்று முடிவதால் இதை ‘ வர்மன்” என்று முடிவு செய்துள்ளனர் .

ஏனெனில் இடையிடையேயும் ஆறாம் நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் மன்னர்களின் பெயர்களுக்குப் பின்னால் ‘ வர்மன்’ என்ற பெயர் தெளிவாக உள்ளது .

இதில் வியப்பு என்னவென்றால் தமிழ்நாட்டில் கிடைத்த செப்புப் பட்டயங்களிலும் பாண்டியன் வம்சாவளியில் "ஸ்ரீமாறன்", "வர்மன்" என்ற இரண்டு பெயர்களும் கிடைக்கின்றன .

இந்தோனேசியாவுக்குச் சொந்தமான போர்னியோ தீவின் அடர்ந்த காட்டிற்குள் "மூலவர்மன்" என்ற மன்னனின் சமஸ்கிருதக் கல்வெட்டு கிடைத்துள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில் 800 க்கும் அதிகமான சம்ஸ்கிருதக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

வியட்னாமியக் கல்வெட்டு ‘பாண்டிய ’ என்ற பெயரைக் குறிப்பிடவில்லை.
ஆயினும் ஸ்ரீமாறன் (ஸ்ரீ = திரு ) என்பவன் பாண்டியனே என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன :-

(1 ) இடைச்சங்கத்தின் கடைசி மன்னன் பெயர் திருமாறன் .
அவன் அரசாண்ட காலத்தில் கடல் பொங்கி தென் மதுரையை அழித்ததால் அவன் தற்போதைய மதுரையில் கடைச்சங்கத்தை அமைத்ததாக உரையாசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர் .
இந்த மன்னனோ இவனது குலத்தினரோ வியட்னாமில் ஒரு அரசை நிறுவியிருக்கலாம் .

(2 ) வேள்விக்குடி செப்பேடும் திருமாறன் என்ற மன்னனைக் குறிப்பிடுகிறது .
அதே செப்பேட்டில் மாறவர்மன் (அவனி சூளாமணி ),
ஸ்ரீமாறவர்மன்(அரிகேசரி )
ஸ்ரீ மாறன்(ராஜசிம்மன்) என்ற பெயர்களையும் காணலாம் .
பாண்டிய வம்ச மன்னர்கள் மாறன், சடையன் என்ற பெயர்களை மாறி மாறிப் பயன்படுத்துவர்.

(3 ) தொல்காப்பியத்தை அரங்கேற்றிய இடைச்சங்க காலமன்னன் "நிலந்தரு திருவில் பாண்டியன்" என்று பனம்பாரனாரின் பாயிரம் கூறுகிறது .
பல நாடுகளை வென்று தந்ததால்  “நிலந்தரு” “ திரு பாண்டியன்” (ஸ்ரீமாறன்) என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம் .

(4 ) சங்க இலக்கியப் பாடல்களிலும் அடிக்குறிப்பிலும் குறைந்தது பத்துமுறை ‘ மாறன்’ என்ற மன்னர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.
இவர்களில் குறிப்பிடத்தக்கவர் இடைச்சங்ககால மன்னன் "முடித்திருமாறன்" .
நற்றிணை 105 , 228 ஆகிய 2 பாடல்களை இயற்றியவன் .

(5 ) தென்கிழக்கு ஆசியா முழுவதும் அகத்திய முனிவரின் சிலைகள் கிடைக்கின்றன .
அகத்தியர் “ கடலைக் குடித்த ”  கதைகளும் பிரபலமாகியிருக்கின்றன .
முதல்முதலில் கடலைக் கடந்து ஆட்சி நிறுவியதை “ கடலைக் குடித்தார் ” என்று பெருமையாக உயர்வு நவிற்சியாக குறிப்பிடுகின்றனர் .
வேள்விக்குடி செப்பேடு இந்தக் கதைகளைக் குறிப்பிட்டுவிட்டு அகத்தியரை பாண்டியரின் “ குல குரு ” என்றும் கூறுகிறது .

(6 ) இந்திய இலக்கியகர்த்தாக்களின் முக்கிய இடத்தை வகிக்கும் மாபெரும் வடமொழிக் கவிஞன் காளிதாசன் ,
பாண்டியர்களையும் அகத்தியரையும் தொடர்புப்படுத்தி கவி புனைந்துள்ளான் (ரகு வம்சம் 6–61 )

(7 ) புறநானூற்றுப் பாடல் (புறம் 182 ) பாடிய ஒரு பாண்டிய மன்னன் பெயர் “ கடலுள் மாய்ந்த” இளம்பெருவழுதி .
இவன் வெளிநாடு செல்லும்போதோ , வெளிநாடுகளை வென்று திரும்பும் போதோ கடலில் மூழ்கி இறந்திருக்கலாம்.

(8 ) டாலமி , பெரிப்ளூஸ் என்ற யாத்ரீகர்கள் கி .பி . முதல் இரண்டு நூற்றாண்டுகளில் நடந்த தென் இந்திய கடல் வாணிபத்தைக் குறிப்பிடுகின்றனர் .

(9 ) தென் இந்தியாவை கி .மு இரண்டாம் நூற்றாண்டு முதல் 400 ஆண்டுகளுக்கு ஆண்ட சாத்வா இன மன்னர்கள் தமிழ் மொழியில் வெளியிட்ட நாணயங்களில் ‘கப்பல்’ படம் உள்ளது .

(10 ) தமிழ் நாடு முழுவதும் கிடைக்கும் ரோமானிய நாணயங்களும் தமிழர்களின் கடல் வாணிபத்தை உறுதி செய்கின்றன .

(11 ) ‘ மிலிந்த பன்ன ’ என்ற கி . மு. இரண்டாம் நூற்றாண்டு பெளத்த மத நூல் வங்கம், சோழமண்டலம் , குஜராத் , சீனம், எகிப்து இடையே நிலவிய வணிகத்தைக் குறிப்பிடுகிறது .

(12 ) மலேசியாவில் தமிழ் கல்வெட்டு இருக்கிறது.
தாய்லாந்தில் தமிழ்நாட்டு நாணயங்கள் கிடைத்துள்ளன.
மேற்கூரிய சான்றுகள் அனைத்தும் தமிழர்களின் கடல் பயண வன்மையைக் காட்டுகின்றன .

அகஸ்டஸ் சீசரின் அவையில் பாண்டிய மன்னனின் தூதர் இருந்ததையும் ரோமானிய ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றன .

ரோம் (இத்தாலி ) வரை சென்ற தமிழனுக்கு, தென்கிழக்கு ஆசியாவிலுள்ள வியட்னாமுக்குச் செல்வது எளிது தானே !

Reference :
(1 ) R. C . MAJUMDAR - CHAMPA : HISTORY & CULTURE OF AN INDIAN COLONIAL KINGDOM IN THE FAR EAST GIAN PUBLISHING HOUSE DELHI –
REPRINT 1985 .

(2 ) SANGAM LITERATURE –
ETTUTHOKAI & PATHUPPATTU

(3 ) பாண்டியர் செபேடுகள் பத்து – PUBLISHED BY THE TAMIL
VARALATRU KAZHAGAM ,
MADRAS 1967.

நன்றி : லண்டன் சத் சங்கம் செய்தி மடல் - ச . சுவாமிநாதன்...

உரோம விருட்சம்...


உரோம விருட்சம் என்று ஒருவகை மரம் உண்டு. இம்மரம் சதுரகிரியில் உள்ள இராமதேவரின் ஆசிரத்தின் கிழக்கு திசையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இது சாம்பல் நிறத்தில் மருதமரம் போல் உயர்ந்து விசாலமாய் வளர்ந்து இருக்கும், இதன் இலை தாமரை இலைபோல் வட்டமாய் ஒருவகை சுளை உள்ளதாய் இருக்கும்.

அடிமரத்தின் தூறிலிருந்து மேல் நுனிவரை பட்டையின் மேல் ரோமம் நிறைந்து மஞ்சள் வர்ணமான பூ பூக்கும். இதைக்கண்டு பிடித்து முறைப்படி காப்புக்கட்டி சாபநிவர்த்தி செய்து அடிமரத்தில் ஒரு துளை போட்டு அதில் ஒரு பலம் (35-கிராம்) பாதரசத்தை விட்டு அதன் குச்சியால் ஆப்பு அடித்து இரண்டு மாதம் சென்று அதை எடுத்தால் ரசம் கட்டி மணியாக இருக்கும்.

அதை எடுத்து அதன் பட்டையை அரைத்து அதற்கு கவசமிடு10 எருவில் புடம்போட்டு பத்திரம் செய்யவும்.

இதை வாயில் போட்டுக்கொண்டு வெட்டினால் உடலில் வெட்டு ஏறாது. குண்டு பாயாது. புலி, யானை போன்ற மிருகங்களாலும் பாம்பு, தேள் போன்றவைகளாலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.

இது ஒரு கற்பம் இதனால் நரை, திரை, முப்பு, பிணி நிங்கி காயசித்தி உண்டாகும். இதை இடையில் கட்டிக்கொண்டு நூறு பெண்களை புண்ர்ந்தாலும் விந்து விழாது.

இதை துடையில் கிழித்து வைத்து தைத்து விட்டால் பத்துயானை பலமுண்டாகும். சரீரம் வஜ்ஜிர சரீரமாகும். ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சாவு கிடையாது. சரீரம் ஜோதி மயமாய் பிரகாசிக்கும்.

இம்முறையால்தான் கருவூரார், காலங்கிநாதர் சித்தி அடைந்ததாக சித்தர் நூல்கள் சொல்லுகின்றன.

மேலும் இதன் பட்டையை இரும்பு படாமல் எடுத்து சூரணித்து அரை தேக்கரண்டி வீதம் தேனில் கலந்து ஒரு மண்டலம் உண்டாலும் காயசித்தி உண்டாகும். தேகத்தில் காந்தி (தேஜஸ்) கூடும் என்று சித்தர்களின் நூல்கள் குறிப்பிடுகின்றன...

மாதம்தோறும் புதிய இந்தியா பிறந்து கொண்டே இருக்கும்.... இப்படிக்கு - மத்திய அரசு....


இந்தா அடுத்து நீட் தேர்வு கட்டாயம் ஆகிடும்...


மிக முக்கிய பதிவு - குலதெய்வ வழிபாடு...


பெரும்பாலான தமிழ்மக்களின் குலதெய்வக் கோவில்கள் என்பவை  போரில் வீரமரணம் அடைந்த மாவீரர்களின் நடுகல் வழிபாட்டின் நீட்சியே.

மாவீர்கள் இறந்த இடத்துக்கு ஆண்டுக்கு ஓருமுறை சென்று படையல் வைத்து வழிபட்டு வந்தனர். மாவீர்கள் வீரமரணம் அடைந்த இடம் அடையாளம் தெரியாமல் போய்விடும் என்பதால் அங்கே நினைவுக்காக நடுகல்லையும் (Tombstone ), அக்கல்லில் அவ்வீரனின் புடைப்புச் சிற்பத்தையும் உருவாக்கினர்.

எழுதப்படிக்கத் தெரிந்த சிலர் அவ்வீரனின் செயலை நடுகல்லில் கல்வெட்டாகவும் செதுக்கி  வைத்தனர்.

படையல் வைப்பதற்கு சிலமணி நேரங்கள்  முன்னதாகவே சென்று  அடர்த்தியான புதர்களை  வெட்டியெறிந்து நடுகல்லைச் சுற்றியுள்ள இடத்தை சுத்தம் செய்வர். இதனை ஒரு தமிழ்ப்படத்தில் நடிகர் விவேக் கிண்டல் செய்வது போல ஒரு காட்சிவரும்.

நடுகல்லின் அருகே சூலமும் வேலும் நடப்பட்டிருக்கும். சேவலை வேலில் குத்தி பலியிடுவது இன்றும் பல ஊர்களில் நடைமுறையில் உள்ளது.

வீரமரணம் அடைந்தவர்கள் கருப்பசாமிகளாக நம்மை காவல் காப்பார்கள் என்பது நம் முன்னோர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாகும். அக்கருப்புக்கு வேண்டிய சேவல்/கிடாயின்  குருதியைக் கொடுத்து வழிபடுவதை காலம் காலமாக கிராமிய மக்கள் கடைப்பிடித்து வந்துள்ளனர்.

கருப்பசாமி வழிபாட்டை சரிவரப் புரிந்து கொள்ளமுடியாத ஆங்கிலேயர்கள் கிராமிய மக்களின் வழிபாடுகளை பேய் வழிபாடு  (Devil shrine)  என்று கொச்சைப்படுத்தினர்.

காவல் கருப்புகள் கொடுத்த வாக்குக்குக் கட்டுப்படும்.

நம் இனத்தின் எதிரிகளான பிராமணர்கள் அஞ்சுவது இந்தக் காவல் கருப்புகளுக்கு மட்டும் தான். எண்ணிகையில் சிறுபான்மையினரான பிராமணர்கள் படையெடுத்து வந்து தமிழர்களை வீழ்த்தியிருக்கவே முடியாது என்பது என் கருத்து.

காலப்போக்கில் இந்தக் கருப்புகளைக் கட்டும் வித்தையை அவர்கள் கற்றுக்கொண்டனர் ( அதர்வன வேதமாக இருக்கலாம் ). அதில் முன்னோடிகளாக இருந்தவர்கள் நம்பூதிரிகள் ஆவர்.

தொடக்கத்தில  தங்கள் நன்மைக்காக கெட்ட ஆன்மாக்களை மட்டும் அண்டவிடாமல் தடுக்கக் கண்டு பிடிக்கப்பட்ட வித்தையை நம் காவல் கருப்புகளின் மேல் சோதனை செய்து பார்த்து, அவற்றைக் கட்டுவதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.

சிதிலம் அடைந்த குலதெய்வக் கோவில்களை புனரமைக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் பிராமணர்களை வைத்து கும்பாபிசேகம் செய்து நமக்கு நாமே மிகப் பெரிய ஆப்பாக சொருகிக் கொண்டோம்.

அவன் எவ்வாறு காவல் கருப்புகளைக் கட்டுகிறான்?

உலோகத் தகடு மற்றும் கலசத்தைப் பயன் படுத்தித்தான் அவன் நம் காவல் கருப்புகளைக் கட்டுகிறான். சிலை பிரதிச்டை என்ற பெயரில் சிலையின் அடியில் ஒரு உலோகத் தகடை மறைத்துவைத்து விடுவான். கருவறையின் மேல் ஒற்றைப்படை எண்ணிக்கையில் கலசங்களை வைத்துக் கட்டுவான்.

கோவில் கும்பாபிசேகத்தின் பொழுது நீங்கள் இரண்டு விசயங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

ஒன்று: கும்பாபிசேகம் எப்போதும் காலை 8-10 மணிக்குள் மட்டும் தான் செய்வார்கள்.

இரண்டு: கும்பத்தின் மீது ஒரு கழுகு பறந்து சென்றால் மட்டுமே கும்பாபிசேகம் நிறைவு பெற்றது ( கருப்பைக் கட்டியாச்சு ) என்று அறிவிப்பார்கள். ஒரு வேளை கழுகு வரவில்லை என்றால் அடுத்த நாள் மீண்டும் முயற்சி செய்வார்கள்.

ஏன் 8-10 மணி ?

ஒரு சூரிய நாளும் சூரிய ஆண்டும் ஒன்றோடு ஒன்று போருந்திக்கொள்பவை. ஒரு சூரிய நாளின் 8-10 மணி என்பது  ஒரு சூரிய ஆண்டின் “ கும்ப இராசிக்கு  “ இணையானதாகும். அதனால் தான் கோவில் “ கும்பாபிசேகங்களை “ அந்த நேரத்தில் செய்து பிராமணர்கள் வெற்றியடைகின்றனர். காவல் கருப்புகளை கும்பத்தில் கட்டுகின்றனர்.

கழுகு ஏன் ?

ஒவ்வொரு விலங்கு / பறவைக்கும் ஒவ்வொரு திறன் உள்ளது. பொதுவாகவே கழுகுகள் இறந்த சடலத்தின் மீது வட்டமிடுபவை. நடுகல் (Tombstone) என்பது போரில் இறந்த மாவீர்களின் சமாதியின் மீது நடப்பட்டவை. காவல் கருப்புகள் கும்பத்துக்குள் கட்டப்படும் பொழுது அதனை உணர்ந்த கழுகுகள் கும்பத்தின் அருகே பறந்து செல்கின்றன..

ஏன் அசைவம் கூடாது?

உங்கள் காவல் தெய்வங்களைக் கட்டிய பின்னர் 48 நாட்களுக்கு ( 1 மண்டலம் ) உங்களை அசைவ உணவு உண்ணக்கூடாது என்று சொல்வார்கள். ஏன் ?

காவல் கருப்பின் கட்டை உடைக்கக்கூடிய ஆற்றல் சேவல்/கிடாயின் குருதிக்கு மட்டுமே உள்ளது.

ஒரு மண்டலம் நீங்கள் அசைவ உணவைத் தவிர்த்தால் அந்தக் கட்டு பலமாகிவிடும். அது வலுவிழக்க 12 ஆண்டுகள் ஆகும். அதனால் தான் ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் கும்பாபிசேகம் செய்ய வேண்டும் என்று பிராமணர்கள்  வலியுறுத்துவார்கள்.

பல கிராமங்களில் இருந்த கோவில்களுக்கு வலியச் சென்று கும்பாபிசேகம் நடத்தினான் காஞ்சி சங்கராச்சாரி. நாமும் அவனை நம்பி சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டோம்.

காவல் கருப்புகளைக் கட்டும் தமிழக பிராமணர்களுக்கு அந்த வித்தையைக் கற்றுக்கொடுத்ததே கேரள நம்பூதிரிகள் தான். அவர்கள் ரொம்ப ரொம்ப ஆபத்தானவர்கள். சேரநாட்டையே அடையாளம் தெரியாமல் அழித்தொழித்த அவர்களின் செயல்கள் அடுத்தடுத்த பதிவுகளில் தொடரும்....

ரேஷன் பொருட்கள் கேஸ் மானியம் ரத்து செய்யப்பட்டது குறித்து...


நிர்மலா சீதாராமன் : விறகுக்கு GST போடாதவரை சந்தோசப்பட்டுக்கோங்க.

தமிழிசை : மத்திய அரசு எந்தத்திட்டம் கொண்டு வந்தாலும் எதிர்க்கும் மனப்பான்மையை கைவிடுங்கள். உன்னதமான இந்த திட்டத்தை ஏழைகள் பாரமாக பார்க்கத்தேவையில்லை. நம் பாரத நாட்டின் வளர்ச்சிக்காக அம்பானிக்கும் அதானிக்கும் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுப்பதாக எடுத்துக் கொள்ளுங்கள்.

இல கணேசன் : மேல் வகுப்பினர் வாழ்வதற்கு நடுத்தர ஏழை மக்களை பலி கொடுப்பது தவறில்லை என்று மநுதர்மமே கூறுகிறது.

எடுபிடி : இதை எதிர்த்து யாராவது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்.

ஹெச் ராஜா : நான் இல்லேங்குறேன். தேச விரோதிகள் பொய்த் தகவலை பரப்புகிறார்கள். 'தே ஆர் யேண்டி நேஷனல்ஸ்'.

டாகடர் கிருஷ்ணசாமி : எங்களுக்கு கேஸ் மானியம் வேண்டாம் என அமித் ஷா வந்த போதே தெரிவித்துவிட்டேன். மீதம் இருக்கும் ரேஷன் கடைகளை மூட வலியுறுத்தி தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்ய போகிறேன்.

ஸ்டாலின் : இந்த அறிவிப்பால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். மார்ச் மாதத்தில் அமலுக்கு வருவதாக இருக்கும் இந்த திட்டத்தை அடுத்த ஜூன் மாதத்திலிருந்து செயல்படுத்த பினாமி மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும்.

சுபவீ : 2018 ஏப்ரல் 1ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் அறிவித்த 'கேஸ் மானியம் ரத்து' எதிர்ப்பு போராளி தளபதி ஸ்டாலின் வாழ்க வாழ்க வாழ்கவே...

ஆழ்நிலை தியானம்...


ஆழ்நிலை தியானம் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று விட்டது. அத்துடன் இதன் பண்பும், பயனும் பல அறிவியல் ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே இப்பயிற்சி முறை மொழி, சமயம், மார்க்கம் போன்ற குறுகிய எல்லைகளையெல்லாம் கடந்து பரந்து விரிந்து நிற்கிறது. மன இறுக்கமும், மனத் தொய்வும், மகிழ்ச்சியின்மையும் மாற்றுகின்ற ஒரு அரிய மருத்துவ முறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பரபரப்பு, மனக்கலக்கம், மனத்தவிப்பு, மனத்தொய்வு, தூக்கமின்மை, மன இறுக்கம், ஒற்றைத் தலைவலி, உயர் இரத்த அழுத்தம், மாதவிடாய்க்கு முன் தோன்றும் வேதனை, மலக்குடல் குறைபாடு போன்ற பல குறைபாடுகளை நீக்கவல்லது. இந்த தியான முறையெனக் கருதப்படுகிறது. அ

திலும் குறிப்பாக மூப்படைவதையே இத்தியான முறை தடை செய்யக் கூடும் என ஒரு ஆய்வு முடிவு உறுதிப்படுத்துகிறது.
அலைந்து திரிகின்ற மனதை ஒரு நிலைப்படுத்தி அதன் மூலம் ஒரு ஆழ்ந்த மன அமைதியையும், மன நிலையையும் பெறுவது தான் எல்லா விதமான தியான முறைகளின் நோக்கமாகும்.

ஆழ்நிலை தியானத்தின் நன்மைகள் பற்றிப் பேசுகின்ற போது “ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மனத்தின் செயல்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்த கற்றுக் கொள்வது என்பது உடல் நலம் பேண உதவுகின்ற ஒரு நல்ல முறையாகும். நாள் தோறும் நமது நரம்பு மண்டலத்தில் ஏற்படுகின்ற தேய்மானங்களை நீக்கி நரம்புகளை நெறிப்படுத்தி உள்ளத்திற்குப் புத்துணர்ச்சியும், புது உணர்வும் தருவதுடன் நமது தடுப்பாற்றல் சக்தியை உயர்த்தவும் மனநிலை தொடர்புடைய நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது” என்று தமது ‘மெடிடேசன் பார் எவிரி படி’ (பெண்குயின்) என்னும் நூலில் குறிப்பிடுகிறார் புகழ் மிக்க உளவியலாரான லூயி புரோடோ.
இலக்கின்றி அலைகின்ற மனதை அடக்கி, அதன் பொருளற்ற புலம்பல்களை நிறுத்தி உள்ளத்தில் சாந்தியும், அமைதியும் நிலவச் செய்வதே தியான முறையாகும். ஆனால் இதைச் செய்கின்ற வழி ஒவ்வொரு தியான முறைக்கும் வேறுபடுகிறது.

ஆழ்நிலை தியானத்தைப் பொருத்தவரை அமைதியான முறையில் அமர்ந்து ஒரு மந்திரத்தைத் திரும்பத் திரும்ப சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை இடைவிடாமல் மனதிற்குள் ஜெபம் செய்வதாகும். மனப்பாடம் செய்கின்ற காலத்தில் மனம் சில நிமிட நேரம் மனத்தில் ஒன்றலாம். சில நேரம் விலகியும் போகலாம். அது பற்றிக் கவலை கொள்ளாமல் திரும்பத் திரும்ப மனதை ஒரு முகப்படுத்த வேண்டும். நாட்கள் செல்லச் செல்ல, பழக்கம் மனதில் படியப், படிய தொடர்பில்லாத சிந்தனைகள் வருவதும் மனம் அலைபாய்வதும் மட்டுப்படும். மேற்பரப்பில் உயர்ந்தும், தாழ்ந்தும் அலை அலைபாய்கின்ற கடலின் அடியில் சென்று பார்த்தால் நீரின் கீழே ஒரு ஆழ்ந்த அமைதி தென்படுவது தெரியும். அந்த நிலையை ஆழ்நிலை தியானத்தின் மூலம் மனதிற்குள் உணர முடியும்.

‘பீல் கிரேட் வித் டி.எம்’ என்னும் தமது நூலில் டி.எம் என்னும் இவ்வரிய பயிற்சி, மன முறுக்கினை அவிழ்த்து, உடற் தசைகளைத் தளர்வித்து இதுவரை உணராத ஒரு புத்துணர்ச்சியைத் தருகிறது”, என்று கூறுகிறார்கள். ஜிம் ஆண்டர்சனும், பில் ஸ்டீவன்சனும், அமைதியான நிலையில் எழுகின்ற சிந்தனைகள் வலுமிக்கதாகவும், ஆழ் மனதிலிருந்து எழுவதாகவும் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

உரத்த குரலில் ஜெபிப்பதும், மனப்பாடம் செய்வதும் புத்த மதத்தினரின் ஸென் எனப்படும் தியான முறையில் பின்பற்றப்படுகிறது. இதில் ஒரே சீராக மூச்சு விடுவதும் மார்பு உயர்ந்து தாழ்வதுமே உணரப்படுகிறது. விபாஸ்ஸனா என்னும் மற்றுமொரு வகைப் புத்த மதத்தினரின் தியான முறையில் உடலிலிருந்து விடுபட்ட நிலையில், வெளியிலிருந்து கொண்டு, உடலையும், மனதையும் உற்று நோக்குதல் பயிலப்படுகிறது.

தய் சூ ச்சுஹான் என்னும் போர்க் களப் பயிற்சி முறையும் அய்க்கிடோ என்னும் ஜப்பானியப் பயிற்சியும் அசைவு அல்லது இயக்கத்தின் மூலம் செய்யப்படுகின்ற தியான முறைகள் என்று கருதப்படுகின்றன.

இந்த தியான முறையில், பயிற்சி பெறுபவர்க்கு ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை சொல்ல வேண்டும் இந்த மந்திரத்தை தினம் காலையிலும் மாலையிலும் 1/2 மணி நேரம், மனதுக்குள்ளேயே ஜபிக்க வேண்டும். இதற்காக பத்மாசனத்தில் தான் உட்கார்ந்து ஜபிக்க வேண்டும் என்பதில்லை. நாற்காலியில் உட்கார்ந்து கூட ஜபிக்கலாம். ஜபிக்கும் போது மனது அலைபாய்ந்து எண்ணங்கள் சிதறினாலும், விடாமல் மந்திரத்தை சொல்லிக் கொண்டே (மனதுக்குள்) இருக்க வேண்டும்.

ஆழ்நிலை தியானத்தை பயின்றவர்கள் மனதை ஒரு முகப்படுத்துவது இந்த முறையால் சுலபமாகிறது என்கின்றனர்...

அமானுஷ்யம்...


ஆவிகள் தங்களது இருப்பை சில ஒலிகள் மூலம் வாசனைகள் மூலமும் மனிதர்களுக்குக் குறிப்பிட்டுக் காட்டும்.

ஆனால் ஆவிகள் நாய்கள், பூனைகள், ஆடு மாடுகள் போன்ற விலங்குகளுக்குச் சர்வ சாதாரணமாகத் தெரியும்.

நமது நடமாட்டத்தை விலங்குகள் எப்படி அவதானிக்கிறதோ அது போன்றே ஆவிகளின் நடமாட்டத்தையும் துல்லியமாக அறிகிறது.  இதற்கு உதாரணமாக யாருமே இல்லாத வெற்று திசையை நோக்கி நாய்கள் தொடர்ச்சியாகக் குரைப்பதையும் இல்லாத ஆளை துரத்திக் கொண்டு செல்வதையும் கூறலாம்.

ஆவிகள் இருக்கும் பகுதியை மனிதர்கள் வேறு எந்தவகையில் அறியலாம் என்றால் அந்தக் குறிப்பிட்ட பகுதிக்கு நாம் சென்ற உடன் தேவை இல்லாமல் உடல் புல்லரிக்கும்.  மன ஒட்டங்கள் தாறுமாறாக ஓடும்.  நமது கவனம் முழுமையாகச் சிதறும்.  அப்போது மனதைப் பிடித்து இழுத்து ஒரு மையப்புள்ளியில் நிறுத்தினால் இது சாத்யமாகும் நபர்க்கு ஆவிகள் வெண்படலமாகவோ கரும்படலமாகவோ தெரியும்.  மற்றபடி ஆவிகள் பார்க்க இயலாது.

பிரத்தியேகப் பயிற்சி எடுத்தவர்கள் வேண்டுமானால் தாங்கள் விரும்புகின்ற படி ஆவிகளை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் அழைத்துப் பார்க்கலாம், பேசலாம்.  அவைகளுக்குச் சில வேலைகள் தரலாம்.  அதன் மூலம் முடியாத பலவற்றை முடித்தும் காட்டலாம்.  ஆனால் அது மாந்தீரிகனாக இருப்பதற்கு உதவுமே அல்லாது நல்ல மனிதனாக இறைவனிடம் சேர்வதற்கு உதவாது.

 ஆவிகளை அனைவராலும் பார்த்து விட முடியாது என்கின்றபோது அவைகளைச் சிலர் புகைப்படம் எடுத்து இருக்கிறார்களே அது எப்படி நிகழந்தது என்ற வினா எழும்புவது இயற்கை முதன் முதலில் ஆவிகளைப் படம் பிடிக்கும் வாய்ப்பைப் பெற்றவர் வில்லியம் மம்ளர் ஆவார்.  இவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்.

1868 ஆம் வருடத்தில் வேறு ஒரு காட்சியைப் புகைப்படம் எடுத்துக் கழுவி பார்த்தபோது சில வருடங்களுக்கு முன்பு இறந்து போன தனது உறவினர் ஒருவன் நிழல் உருவம் புகைப்படத்தில் படிந்து இருப்பதைப் பார்த்து வியந்து போனார்.  பின்னர் பல புகைப்பட நிபுணர்களிடம் அந்தப் படத்தைக் காட்டி இது எப்படி நிகழ்ந்து இருக்கும் என்று ஆராயச் சொன்னார்.

இந்த புகைப்படம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதே காலகட்டத்தில் வேறு சில ஆவிகளின் புகைப்படமும் ஆராய்ச்சியாளர்கள் எடுத்த புகைப்படமும் எந்த வித சந்தேகத்திற்கும் இடமில்லாத உண்மையான புகைப்படம் என்ற முடிவிற்கு வந்தனர்.  அதன்பின் பல்வேறு நிஜ ஆவி புகைப்படங்கள் உலக ஆவி ஆர்வலர்களுக்கு இடையில் இன்று நடமாடுகிறது.

இந்தப் புகைப்படங்கள் அனைத்துமே திட்டமிட்டு காத்திருந்து எடுத்த புகைப்படங்கள் அல்ல.  யதேச்சையாக கேமரா கண்களுக்குள் சரிவர அகப்படாத ஆவிகள் புகைப்படத்திற்குள் அகப்பட்டுக் கொள்வது ஒரு அதிசயம் ஆகும்.  அதற்கான காரணங்கள் இதுவரை புரிய படவில்லை...

கேஸ் மானியத்தை ரத்து செய்யும் திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் , பாராளுமன்றத்தில் மத்திய அரசு புது விளக்கம், அவர்கள் திட்டத்தை செயல்படுத்தவா மக்கள் உங்களை தேந்தெடுத்தார்கள், எதிர்கட்சிகள் கேள்வி...


கேஸ் விலையை மாதம் மாதம் 2 ரூபாயில் இருந்து 4 ரூபாய் உயர்த்தி கேஸ் மானித்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முற்றிலும் நீக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் நேற்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.

இது குறித்து எதிர்கட்சிகள் இன்று கேள்வி எழுப்பியதற்கு , ”இது 2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம்” எனவும் , ”கேஸ் மானியத்தை யாருக்கு வழங்கலாம் யாருக்கு வழங்ககக் கூடாது” என மத்திய அரசு கேஸ் மானியத்தை முறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக இன்று பெட்ரோலியத் துறை அமைச்சர் புது விளக்கத்தை அளித்துள்ளார். மேலும் கேசிற்கு மானியம் வழங்குவதால் அரசிற்கு பெரும் செலவு ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் கேஸ் மானியம் உடனடியாக முற்றிலும் ரத்து செய்யப்படுமா பாடாத என அமைச்சர் தெளிவாக விளக்கம் அளிக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த எதிர்கட்சியை சேர்ந்த சீத்தாராம் எச்சோரி (CPI-M), ஏழைகளுக்கு கொடுப்பதற்காக உங்கள் கேஸ் மானியத்தை விட்டுக் கொடுங்கள் என மோடி விளம்பரம் செய்தார் பலர் அதை நம்பி விட்டுக் கொடுத்தார்கள். ஆனால் நீங்கள் மக்களை ஏமாற்றி தற்போது அந்த ஏழை மக்களுக்கு வழங்கிய சிலிண்டரின் விலையயை முற்றிலும் மானியம் இல்லாமல் உயர்த்துகின்றீர்கள் இது ஏமாற்று வேலை இல்லையா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் மத்திய அரசின் இந்த நடவடிக்கை நடுத்தர மற்றும் ஏழை மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது இது காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் , காங்கிரஸ் ஆட்சியில் நடக்கவில்லையா என மத்திய அரசு விளக்கம் அளிக்கின்றது. காங்கிரஸ் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஏன் மக்களாகிய நாங்கள் உங்களை தேர்வு செய்ய வேண்டும் ? அதற்கு பதிலாக அவர்களே ஆட்சி நடத்தி விட்டு போயிருக்கலாமே நீங்கள் ஏன் ? அவர்கள் சரியில்லை என்பதால் தானே மக்களாகிய நாங்கள் உங்களை தேர்வு செய்தோம் உங்கள் இருவருக்கும் என்ன வித்தியாசம் நீங்கள் யாருக்காக வேலை செய்கின்றீர்கள் முதலாளிகளுக்காகவா அல்லது உங்களுக்கு ஓட்டுப்போட்ட மக்களுக்காகவா என சமூக வலைதளத்தில் பொதுமக்கள் கொந்தளிப்புடன் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

கேஸ் விலை உயர்வு என்பது கேசோடு நின்று விடாது அதனால் உணவு பொருட்களின் விலை மற்றும் அது சார்ந்த பொருட்களின் விலையும் உயரும் இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்படைவார்கள் என கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றது...

தமிழின துரோகி விசிக திருமா.. திமுக ஸ்டாலினுக்கு செய்யும் மாமா வேலைகள்...


செய்யாறு புளியங்குள கலவரத்தில் பா.ம.க தலைமைகள் ஒதுங்கிக் கொண்டது மகிழ்ச்சி...

திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில் விடுதலை சிறுத்தைகள் நடத்தியது தான் செய்யாறு கலவரம்.

வரும் தேர்தலில் எந்த கூட்டணியில் இருப்பது என்ற தவிப்பில் இருந்தது விடுதலை சிறுத்தைகள். எல்லா பக்கமும் முயன்று பார்த்தாகி விட்டது. தனி  ஒரு அணி கட்டியும் பார்த்தாகி விட்டது. எதுவும் வேலைக்கு ஆகவில்லை. திமுக தான் இனி என்ற இருந்த நிலையில் ஸ்டாலின்,  விடுதலை சிறுத்தைகளை சந்தேகக் கண்ணோடு தான் பார்த்தார். நாம் ஒரு அணியாக இருந்து போராட்டங்கள் நடத்தலாம், ஆனால் தேர்தல் கூட்டணி வேண்டாம்' என்று ஸ்டாலின் திருமாவளவனிடம் திட்டவட்டமாக சொல்லி விட்டார். திருமாவளவனுக்கு திக்கென்று ஆகி விட்டது '

''இல்லை, நான் உங்களோடு கூட்டணி சேர விரும்புகிறேன் என்று திருமாவளவன் கெஞ்சி பார்த்தார். ஸ்டாலின் முடியவே முடியாது என்று சொல்லி விட்டார். 'ஸ்டாலினும் ஜெயலலிதாவைப் போன்றவர்' , ' திமுகவைத் தாண்டி ஸ்டாலின்  மக்கள் அபிமானத்தைப் பெறவில்லை 'என்றெல்லாம் சமீப காலம் வரையில் திருமாவளவன் தனக்கு எதிராக அளித்த பேட்டிகளை ஸ்டாலின் மறந்திருக்கவில்லை.

இந்த நிலையில் வேறு வழியே இல்லாத திருமாவளவன், 'என் விசுவாசத்தை நிரூபிக்க நான் என்னதான் செய்யவேண்டும் சொல்லுங்கள் ' என்று கேட்க, 'ஒரு கலவரம், சாதிய கலவரம், பாமகவை சிக்க வைக்கும் வகையில், பாமகவின் பெயரை கெடுக்கும் வகையில் ஒரு கலவரம். செய்து காட்டினால் உங்களை நாங்கள் கூட்டணியில் இணைத்துக் கொள்வோம் ' என்று சொல்ல, அதன் பேரில் தங்கள் விசுவாசத்தை நிரூபிக்க நிகழ்த்தப்பட்டது தான் செய்யாறு கலவரம். '

விசுவாசம் வென்றது.  இப்போது 'திமுக ஆட்சியைப் பிடிக்க  திருமாவளவன் பக்கபலமாய் இருக்க வேண்டும்' என்று ஸ்டாலின் உருக , 'திமுகவுக்கு நாங்கள் பக்க பலமாக என்றும் இருப்போம்' என்று திருமாவளவன் மருகினார்.

பாமகவுக்கு எல்லாம் தெரியும். அவர்கள்  அந்தக் கலவரத்தில் இருந்து நைச்சியமாக ஒதுங்கிக் கொண்டார்கள். அதே நேரம் இந்த கலவரம் தொடர்பான விவரங்களை சேர்த்து விட்டார்கள். விரைவில் நீதிமன்றத்தை நாடுவார்கள்...

மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் எரிக்கு நீர் வரத்து, சென்னைக்கு குடிநீர் சப்ளே மீண்டும் துவக்கம்...


தற்சமயம் செம்ரம்பாக்கம் ஏரியில் 88 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. 43 நாட்களுக்கு பிறகு தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மீண்டும் சென்னைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது...

தமிழர் நாட்டில் வந்தேறிகள்...


தமிழர் நாட்டில் இன்றுவரை தமிழர்களுக்கு வேலையில்லாத நிலை இருந்துவருவதன் காரணம் வந்தேறிகள் நிலையாக இங்கே தங்கிவிட்டதுதான்..

தமிழர்கள் வெளி இடங்களுக்கு வேலை தேடி போகும் நிலையும், அல்லது உள்ளூரிலேயே கூலிகளாக இருக்கும் நிலையும் கவலைக்கிடமானது.

தமிழர்கள் இட ஒதுக்கீட்டு மாயையில் வந்தேறிகளை வாழ வைத்தும் ஆள வைத்தும் அழகு பார்ப்பது கேவலமான ஒன்று .

தொல் தமிழர்களை ஆதி திராவிடர்கள் என்றாக்கி , வந்தேறி சக்கிளியரை ஆதி தமிழர் என்றும் , அருந்தமிழர் என்றும் கூறி நமது உரிமைகளை அவர்களுக்கு பங்கிட்டுவிட்டு மிச்சத்தை நமக்கே சலுகையாக வழங்குவதும் , அதுவும் கிடைக்காத நிலையில் அதற்காக தமிழ் தேசிய தலைவர்கள் போராடுவதும் அசிங்கமல்லவா ?

ஆளவேண்டிய தமிழினம் அகதியாக திரிவதும் , சலுகைகளுக்காக ஏங்குவதும் நியாயமா ? சிந்திப்பீர்..

தமிழர் நாட்டில் வந்தேறிகள் :

தெலுங்கு கன்னட பிராமணர்கள் , தெலுங்கு கன்னட சக்கிலியர்கள் , தெலுங்கு கன்னட கம்மவார் , பலிஜா , கவரா நாய்டு , கம்பளத்து நாய்டு , வளையல் கார நாய்டு , கம்மா நாய்டு , ரெட்டியார்கள் , ராஜுக்கள் , ஆரிய வைசியர் , கோமுட்டி செட்டி , தெலுங்கு கன்னட தேவாங்கு செட்டி , 24 மனை தெலுங்கு செட்டி, தொட்டிய நாயக்கர் , புதிரை வண்ணார் , ஒட்டர்கள் , சாளியர்கள் , தொம்பர்கள் , கன்னட ஒக்கிலியர், கன்னட லிங்காயத்து ,
பட்டுநூல் ( எ ) சௌராச்டிரர் , பொட்டுகட்டி (எ)சின்னமேளம் (எ) இசைவேளாளர் , ராயர்கள் , நரிகுறவர்கள் , குஜராத்தி மார்வாடிகள் , மலையாளிகள் , போன்றோர் ஆவர்.

மேற்கண்டவர்களை நாம் புறக்கணிக்க வேண்டாம் . மாறாக தமிழர்களுக்கே முன்னுரிமை கொடுப்போம்.

பாவாணர் காட்டிய வழி அதுதான்.

தமிழர் நாட்டை தமிழர்தான் அதுவும் நல்ல தமிழர்தான் ஆளவேண்டும்.

இருக்கும் உடைமைகளையாவது நமது தலைமுறையினருக்காக காப்போம்.

இழந்த உரிமைகளை மீட்போம்...

2020 ஆண்டு முதல் 2030 வரை சூரியன் வேலை செய்யாது: பீதியை கிளப்பும் விஞ்ஞானிகள்...


எதிர்வரும் 2020 ஆண்டு முதல் 2030 வரை சூரியனில் இருந்து வரும் கதிர்களில் அளவுகள் குறையக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1645ம் ஆண்டு முதல் 1715ம் ஆண்டு வரை சூரியனில் இருந்து வரும் கதிர்களின் தாக்கம் குறைந்ததால் பூமியில் கடும் குளிர் நிலவியது.

இதன் காரணமாக லண்டனின் தேம்ஸ் நதிகூட முழுமையாக உறைந்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வரும் 2020 முதல் 2030 வரை மீண்டும் இதேபோல் ஒரு நிலை ஏற்படக்கூடும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

பிரித்தானியாவின் லெண்டுட்னொ பகுதியில் நடைபெற்ற தேசிய வானவியல் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பேராசிரியர் வாலெண்டின ஷர்கோவா சமர்பித்துள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது, சூரியனின் கதிர்வீச்சில் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றம் ஏற்படுகிறது.

இந்நிலையில் வரும் 2020ம் ஆண்டு சூரியனின் கதிர் வீச்சு குறைய தொடங்கும். மீண்டும் உயராமல் சிறிய அளவிலேயே இது இருக்கக்கூடும்.

இதன் காரணமாக 2030ம் ஆண்டு சூரிய செயல்பாடுகளில் பெரிய தேக்கம் ஏற்படடும். இந்த நிலை 2030- 2040 வரை கூட தொடரக்கூடும்.

எனவே பூமியில் சூரியனின் கதிர்வீச்சுகள் இல்லாமால் குளிர் அதிகமாக இருக்கும். மீண்டும் கடும் குளிர்நிலைக்கு பூமி செல்ல வாய்ப்பிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது...

பேரிக்காய்...


சீசன் காலங்களில் மட்டும் கிடைக்கக்கூடியது பேரிக்காய். காய் என்ற அடைமொழியுடன் இருந்தாலும், இது உண்மையில் ஒரு வகை பழம்தான். மலைப்பகுதியில் விளையும் இந்த பேரிக்காயில், ஆப்பிளில் கூட இல்லாத நிறைய சத்துக்கள் உள்ளன.

செயல்திறன் மிக்க சத்துக்கள் பேரிக்காயில் அதிகம். உயர்தர நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதில் ஆன்டிஆக்ஸிடென்ட், உயர்தர பிளேவனாய்டுகள், பீட்டா கரோட்டீன் ஆகியவை உள்ளன. பேரிக்காயில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கழிவு மண்டலத்தை சுத்தம் செய்வதுடன், தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது.

உடலில் புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கிறது. குறைந்த கலோரி கொண்ட பேரிக்காய் உடல் பருமனை குறைக்கிறது. இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பினை அகற்றுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி ஹார்மோன் வளர்ச்சிக்கு தூண்டுகோலாய் உள்ளது.

எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது. இதய பலவீனமாக உள்ளவர்களும், அதிக படபடப்பு உள்ளவர்களும் தினமும் 2 வேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும். கர்ப்பிணிகள் பேரிக்காய் சாப்பிட்டால் கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமையடையும். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்.

கால்சியம், இரும்பு சத்துக்கள் குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் உதவுகிறது. இரவு உணவுக்குப் பின் பேரிக்காய் சாப்பிட்டால் மலச்சிக்கல் குறையும். பல் ஈறுகள் பலமாகவும், பல் வளர்ச்சிக்கும் பேரிக்காய் உதவுகிறது. இரைப்பை, குடல், பிற ஜீரண உறுப்புகளை பலமாக்கும் ஆற்றல் பேரிக்காய்க்கு உள்ளது. பசி உணர்வை தூண்டுகிறது.

கிராணி என்னும் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும் ஆற்றல் பேரிக்காய்க்கு உள்ளது. சிலருக்கு திடீர் படபடப்பு, வியர்வை ஏற்பட்டு கை, கால்கள் உதறும். இவர்கள் பேரிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டால் இந்தப் பலவீனங்கள் நீங்கிவிடும். விட்டமின் பி சத்துக்கள் இதில் அதிகம் உள்ளதால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.

100 கிராம் பேரிக்காயில் உள்ள சத்துக்கள் :

கார்போஹைட்ரேட் - 15.23 கிராம்,
சர்க்கரை - 9.75 கிராம்,
நார்ச்சத்து - 3.1 கிராம்,
கொழுப்பு - 0.14 கிராம்,
புரதம் - 0.36 கிராம்,
விட்டமின் பி1 - 0.012 மி.கிராம்,
பி2 - 0.026 மி.கிராம்,
பி3 - 0.161 மி.கிராம்,
பி5 - 0.048 மி.கிராம்,
பி6 - 0.029 மி.கிராம்,
பி9 - 7 யூனிட்கள்,
சோலின் - 5.1 மி.கிராம்,
விட்டமின் சி - 4.3 மி.கிராம்,
விட்டமின் இ - 0.12 மி.கிராம், விட்டமின் கே - 4.4 யூனிட்,
கால்சியம்  - 9 மி.கிராம்,
இரும்பு - 0.18 மி.கிராம்,
மக்னீசியம் - 7 மி.கிராம்,
மாங்கனீசு - 0.048 மி.கிராம்,
பாஸ்பரஸ் - 12 மி.கிராம்,
பொட்டாசியம் - 116 மி.கிராம்,
சோடியம் - 1 மி.கிராம்,
துத்தநாகம் - 0.1 மி.கிராம்,
கலோரி சத்து - 239 ஜூல்கள்...

காவிரி, பாலாறு, முல்லை பெரியாறு, கூடங்குளம், ஃகெய்ல், மீத்தேன், நியூஃட்ரினோ, கச்சத்தீவு, மீனவர்கள் பிரச்சனை இதெல்லாம் சரியானாலே, தமிழக மக்களின் பிரச்சனை தீர்ந்துவிடும்...


இவையனைத்துக்கும் தீர்வுக்காண்பது யார்?

மாநில அரசுக்கு உரிமை உள்ளதா?
மத்திய அரசுக்கு உரிமை உள்ளதா?

மத்திய அரசுக்குத் தான் உரிமையுள்ளது என்றால் மாநில அரசு என்ன புடுங்கிறதுக்கா இருக்கிறது?

இன பற்று இழிவானதா?


இதே தமிழ்நாட்டில், ஒரு காலத்தில் நாட்டுப்பற்றை விட உயர்வான ஒன்றாகப் போற்றப்பட்டது இனப்பற்று..

ஆனால் இன்று இனப்பற்று என்னும் சொல்லையே யாரும் பயன்படுத்துவதில்லை... இன உணர்வு என்றுதான் குறிப்பிடுகிறார்கள்..

மேடையில் மார் தட்டுபவர்கள் கூட இன உணர்வு என் இரத்தத்திலேயே ஊறியது என்றுதான் முழங்குகிறார்கள்.

அந்த அளவுக்குத் தமிழ் மக்களிடையே செல்வாக்கு இழந்துவிட்டது இனப்பற்று.

இனம், தமிழ், தமிழன் என்று பேசுவதெல்லாம் இன்று அநாகரிகமாகி விட்டது. இப்படிப் பேசுபவர்களையெல்லாம் பிற்போக்குத்தனம் உடையவர்களாக, குறுகிய மனப்பான்மை உடையவர்களாக, இழிவானவர்களாகப் பார்க்கிறது இன்றைய தமிழ்நாட்டுச் சமுதாயம்.

குறிப்பாக இளைஞர்கள், அதிலும் பெருநகர இளைஞர்கள் பலர் இன்று இன உணர்வு பற்றி இப்படித்தான் நினைப்பு கொண்டிருக்கிறார்கள்.

இன உணர்வு என்பதும் ஏதோ சாதி உணர்வு போன்ற ஒரு குறுகிய மனப்பான்மையின் வெளிப்பாடு எனவும், இந்திய தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான நிலைப்பாடு எனவும் கருதுகிறார்கள்.

ஆனால் தங்களைத் தவிர வேறு யாராவது இந்தியாவில் இப்படிக் கருதுகிறார்களா என்று தமிழர்கள் ஒரு நிமிடம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஆந்திரர்களோ, வங்காளர்களோ, கன்னடர்களோ, காஷ்மீரிகளோ யாராவது இப்படி நினைக்கிறார்களா?

முன்னாள் இந்தியப் பிரதமர் கூடத் தாடியும் தலைப்பாகையுமாய் இன்றும் தன் இன அடையாளத்தோடுதானே காட்சியளித்தார்..

சீக்கியர் சீக்கியராகவும், மராத்தியர் மராத்தியராகவும், குஜராத்தியர் குஜராத்தியராகவும் இருந்தாலெல்லாம் கெட்டுவிடாத இந்திய ஒருமைப்பாடு தமிழர் தமிழராக இருந்தால் மட்டும் கெட்டுவிடுமா என்று தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இப்படி இந்தியாவில்தான் என்றில்லை. உலகில் எந்த இனத்து மக்களும் தங்கள் இன அடையாளத்தை ஒருபொழுதும்
எதற்காகவும் கைகழுவுவது இல்லை. வெளிநாட்டுத் தமிழர்கள் உட்பட..

இனப்பற்று என்பது குறுகிய மனப்பான்மை என்றால் உலகத்திலேயே தமிழ்நாட்டுத் தமிழர்களைத் தவிர மற்ற எல்லாருமே குறுகிய மனப்பான்மை படைத்தவர்களா?

மற்ற இனத்தவர்களெல்லாம் அவரவர் இன அடையாளங்களோடு வாழும்பொழுது தமிழர்கள் மட்டும் தங்களுடைய இன அடையாளங்களைக் வெறுப்பது அவர்கள் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்வதாக, அவர்களுடைய தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடாக ஆகாதா என்பதை ஒவ்வொரு தமிழரும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

உலகில் ஒவ்வோர் இனத்துக்கும் ஒரு மொழி, பண்பாடு, வரலாறு போன்றவை இருக்கின்றன.

இனம் என்கிற ஓர் அடையாளத்தை நாம் புறக்கணிப்பதால் பெருமைக்குரிய இத்தனை அடையாளங்களையும் இழக்கிறோம்.

கூடவே நம் முன்னோர்களின் கண்டுபிடிப்புகள், அவர்களின் சாதனைகள் எனப் பல அறிவுசார்ச் சொத்துகளையும் இழக்கிறோம்!

சில ஆண்டுகளுக்கு முன்பு வேம்பு, மஞ்சள், பாசுமதி அரிசி முதலான பதினெட்டு விளைபொருட்களுக்கு அமெரிக்கா காப்புரிமை வாங்கியபொழுது அவற்றையெல்லாம் வழக்காடி மீட்க முடிந்ததே இங்குள்ள பல்வேறு இனங்களைச் சேர்ந்த முன்னோர்களால் கண்டு பிடிக்கப்பட்டவைதாம் அவை என்பதை நிரூபிக்க முடிந்ததால் தான்.

அப்படி நிரூபிக்க முடிந்ததே, இன்றும் தம் இனப் பழக்கவழக்கங்களையும் அடையாளங்களையும் துறக்காத மக்கள் இங்கு இருப்பதால்தான்.

எனவே இனம் என்பது வெறும் குழு அடையாளத்தைத் தருவது மட்டும் இல்லை. கலை, அறிவியல் எனப் பல்வேறு துறைகளிலும் நம் முன்னோர்கள் என்னவெல்லாம் கண்டு பிடித்திருக்கிறார்களோ, எவ்வளவெல்லாம் சாதித்திருக்கிறார்களோ அந்த அறிவுசார்ச் சொத்துகளுக்கெல்லாமான வாரிசு உரிமையை நமக்குத் தருவதும் கூட!

அது மட்டும் இல்லை. இனம் என்பது இந்நாளில் ஒரு பன்னாட்டு அடையாளம் (International Identity). எல்லா இனத்து மக்களும் அவரவர் எல்லைகளுக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருந்த வரை மொழி என்பது வெறும் ஊடகமாகவும், இனம் என்பது வெறும் குழு அடையாளமாகவும்தான் இருந்தன.

ஆனால் எல்லா நாட்டு மக்களும், எல்லா இனத்து மக்களும் உலகின் எல்லா நாடுகளிலும் கலந்து வாழத் தொடங்கிவிட்ட இந்த உலகமயமாக்கல் காலத்தில் (Globalisation Era) நாட்டின் பெயரை விட இனத்தின் பெயரும் மொழியின் பெயரும்தான் ஒருவருடைய உண்மையான பன்னாட்டு அடையாளமாக விளங்குகின்றன!

அதுவும் இந்தியாவைப் பொறுத்தவரை இங்குள்ளவர்களுக்கு இன அடையாளம் என்பது எந்தக் காலத்திலும் இன்றியமையாதது.

ஏனென்றால் உலகில் மற்ற நாடுகளுக்கெல்லாம் அந்தந்த நாட்டுக்கென்று மொழி, பண்பாடு, உணவுமுறை, ஆடைமுறை, வரலாறு முதலானவை இருக்கின்றன.

ஆனால் இந்தியாவுக்கு அப்படி இல்லை. இங்குள்ள பதினான்குக்கும் மேற்பட்ட தேசிய இனங்களின் மொழியும், பண்பாடும், வரலாறும் தான் இந்தியாவின் மொழி, பண்பாடு, வரலாறு எல்லாம்.

மற்றபடி இந்தியாவுக்கென்று தனிப்பட்ட அடையாளம் எதுவும் கிடையாது.

எனவே மற்ற நாடுகளில் வாழும் மக்கள் தங்களின் சொந்த இன அடையாளங்களை இழந்தாலும் அவர்கள் வாழும் நாட்டுக்கென்று இருக்கும் பண்பாட்டு, வரலாற்றுப் பின்னணி அவர்களின் அடையாளமாக நிலைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்தியர் ஒருவர் அவ்வாறு தன் தாய்மொழியையோ இன அடையாளத்தையோ மறந்தால் அவர் பன்னாட்டு அளவில், சொந்த அடையாளம் (International Self Identity) எதுவுமே இல்லாத ஒருவராகத்தான் ஆகி விடுவார்.

தனித்தன்மை பேணுதல் (Character Maintenance) என்னும் பெயரில் நடை, உடை, பாவனை, தோற்றம், பேசும் முறை, சிந்திக்கும் முறை போன்ற சிறு சிறு அடையாளங்களைக் கூட விட்டுக் கொடுக்காமல் இருக்கும் இந்தக் காலத்தில் இப்படிப் பன்னாட்டு அடையாளமாகத் திகழும் இனத்தையும் மொழியையும் விட்டுக் கொடுக்கலாமா?

தமிழினமே  சிந்தித்து விழித்தெழு...

உலகத்தில் மொத்தம் 193 நாடுகளுக்கு மேல் உள்ளதாம்....


அதில் தமிழர்தேசம் என்ற நாடு புதிதாக சேர்ந்தால் உலகம் அழிந்துவிடாது...

ஆனால் தமிழர்தேசம் என்ற நாடு புதிதாக சேரவில்லை என்றால்....

வரும்காலத்தில் மூத்த குடியான தமிழ் இனம் அழிந்து விடும்....

எனவே தமிழினமே ஒன்று சேர்ந்து தமிழர்தேசம் அமைய போராடு....

இப்போது நாம் தமிழர்தேசம் பெற முடியவில்லை என்றால் அடுத்த தலைமுறைக்கு பெரும் சுமையை எற்றுகின்றோம்..... என்பதை புரிந்து கொள்ளுங்கள்.....

நாம் கஷ்டப்பட்டாவது வருங்கால தலைமுறை நிம்மதியாக வாழ வழி செய்வோம்.....

நமக்கான தனி நாட்டை நம் உயிர் கொடுத்தாவது போராடி பெற்றுடுவோம்...