11/06/2018

பாலைப்பழம்....


பாலைப்பழம் என்பது மிகவும் இனிப்பான ஒருவகைப் பழமாகும். இது இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் காடுகளில் வளரும் பாலை மரத்தில் காய்க்கும் பழமாகும்.

பாலைப்பழம் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும். பாலைப்பழம் காய்க்கும் காலத்தில் பாலைப்பழம் பருவம் என்றும் அழைப்பர்.

பாலைப்பழம் மிகவும் தித்திக்கும் இனிப்பு சுவைக்கொண்டது. அத்துடன் பாலைப்பழங்களை சாப்பிடும் போது அதனுள் இருக்கும் பிசின்போன்ற பால் பசைப்போல் வாயில் ஒட்டிக்கொள்ளும்.

பாலைப்பழம் உருவில் மிகவும் சிறியது. அதனை ஒன்று இரண்டு என்று விற்பனை செய்வதில்லை. ஒரு சுண்டு, இரண்டு சுண்டு என, அளவை களாகவே விற்பனை செய்வர்...

அரசியலை புரிந்துக் கொள்...


ஆந்திரப் பிரதேசம் மாநிலம் விஜயவாடாவில் 14 வயது சிறுவனுக்கு 45 வயது பெண் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் கைது...


விஜயவாடாவில் உள்ள வேம்பே காலணியை சேர்ந்த 14 வயதுடைய ராகுல் என்கிற சிறுவன் கோடை விடுமுறைக்காக தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளான்.

விடுமுறை முடிந்த பிறகு அவனது பெற்றோர் வீட்டிற்கு அழைத்தனர் ஆனால் சிறுவன் ராகுல் வர மறுத்துள்ளான். அவனது பெற்றோர் தீர விசாரித்ததில் அந்த வீட்டிற்கு எதிர் வீட்டில் 45 வயது மதிப்புடைய பெண் அவனுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டியதாக  தெரிவித்தான்.

இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரித்தனர் அதில் அந்த பெண்ணிற்கு கணவன் இல்லை. 2 மகள்களையும் திருமணம் செய்து வைத்தால் தனிமையில் வாடி வந்தாக தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து அந்த பெண்ணின் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

ஜி7 மாநாடும் உலக அரசியலும்...


இன்றைய மனிதர்கள் “Homo sapiens” (வாழும் மனித இனம்) நம் முன்னோர்களான “நியான்டர்தால்” மனிதனுடன் உடலுறவு கொண்டார்களா?


அதாவது, நமக்கு முந்தைய (இன்றைய உலகில் இல்லாத/முற்றிலும் அழிந்து போன) மனிதர்கள்/முன்னோர்களான “நியான்டர்தால்” மனிதனும் ஹோமோ சேப்பியன்ஸ் எனும் நிகழ்கால மனிதனும் உடலுறவு கொண்டு இனப்பெருக்கம் செய்தார்களா?

அல்லது நியான்டர்தால் மனிதனின் குணாதிசியங்கள் நம்முள் இன்னும் இருக்கிறதா?

அப்படிங்கிற கேள்விக்கு இன்னும் பதில் தெரியல..

பாஜக மோடியின் நீட் தேர்வும் ஏமாற்று வேலைகளும்...


தொடர்ந்து நெய் சாப்பிடுவதால் இத்தனை பலன்களா?


பெரும்பாலான மக்கள், நெய் வெறும் கொழுப்பு மட்டும் நிறைந்த, ரத்தக் கொழுப்பை உயர்த்தும் குணம் உடையது என்ற தவறான எண்ணத்துடன் உணவில் நெய்யை அறவே சேர்ப்பது இல்லை.

ஆனால் ஆயுர்வேதத்தில், நெய்யினை உணவில் தினந்தோறும் எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. நெய் ஒரு மிகச் சிறந்த போஷாக்கான மருத்துவ குணம் வாய்ந்த பொருள். வாயு மற்றும் பித்த சம்பந்தமான நோய்களுக்கு நெய் மிக முக்கியமான மருந்து.

நெய் எளிதில் ஜீரணமாகி விடும். சாப்பிட்டவுடன் அவை கொழுப்பாக உடலில் தங்கப்படுவதில்லை. மாறாக எனர்ஜியாக எரிக்கப்படுவதால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்காது.

மாலைக்கண் மற்றும் கிட்டப் பார்வை, தூரப்பார்வை என பார்வை குறைபாடு இருப்பவர்கள் கட்டாயம் நெய்யை சேர்த்துக் கொள்வதால் கண் பார்வை தெளிவடையும்.

பால், தயிர் போன்றவற்றில் ஒவ்வாமை இருப்பவர்கள் தாராளமாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். அவற்றிலுள்ள லாக்டோஸ் இல்லையே தவிர அவற்றின் பண்புகள் ஒத்திருக்கும்.

நெய்யில் நிறைய நேர்மறையான குணங்கள் இருப்பதால் அதனை சாப்பிடுவதால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் என ஆயுர்வேதம் கூறுகின்றது.

மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு. அவை மருந்துக்களின் குணங்களை செல்களின் சுவருக்குள் ஊடுருவச் செய்கிறது.

மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.

சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின்மையே.

இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்...

இந்திய அதிகாரிகளை நம்பாதீர்கள்...


திருப்திக்கே கோவிந்தா வா - மத்திய அரசு மீது குமுறும் சந்திரபாபு நாயுடு...


திருப்பதி ஏழுமலையான் கோயிலை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டி உள்ளார்.

முன்னதாக,ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், திருப்பதி கோயிலை தாரைவார்ப்பதற்காக மத்திய அரசுடன் ஜெகன்மோகன் ரெட்டி கை கோர்த்துள்ளார் என்று குற்றஞ்சாட்டினார். ஆனால் ஏழுமலையான் கோயிலை கைப்பற்ற நினைக்கும் மத்திய அரசின் சதித் திட்டம் ஒரு போதும் நிறைவேறாது என்றும், அதற்கு தாம் எப்போதும் துணை நிற்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ஏழுமலையான் கோயிலை விட்டுத் தர நாங்கள் தயாராக இல்லை. ஆந்திராவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதாக உறுதி அளித்த மோடி, அதனை நிறைவேற்ற தவறி விட்டார் என்றும் . திருப்பதி கோயிலை தொல்லியல் துறை எடுத்துக் கொள்வது குறித்து கருத்து தெரிவிக்குமாறு தேவஸ்தான நிர்வாகத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. ஆனால் எதிர்ப்புக்கள் எழுந்ததை அடுத்து அந்த நோட்டீஸ் திரும்பப் பெறப்பட்டது என்றும்  சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

 பல கோடி ரூபாய் சொத்துகள் உள்ள கோயில்களில் பிரதானமானது திருப்பதி ஏழுமலையான் கோயிலாகும். சமீபகாலமாக மத்திய அரசு சார்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு இந்த கோயிலை தொல்லியல்துறைக்கு கீழ் கொண்டு வர முயற்சி நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது....

என்ன நடக்கப் போகிறது... காத்திருப்போம்...


குழந்தையில்லாதவர்களே ஒரே ஒருமுறை மருத்துவமனையை ஒதுக்கிவிட்டு இதனை சாப்பிட்டு பாருங்கள்...


சப்பாத்திகள்ளிபழம் நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த பழத்தை எவரும் எடுத்துச் சாப்பிடுவது இல்லை. ஏனென்றால் இதில் உள்ள முள் யாரையும் நெருங்க விடாது.

நாம் எப்படி அழகு ரோஜாவை எடுக்கும் போது முள் குத்துமோ, அதுபோல் இதில் நூறு மடங்கு முள் அதிகம் இருக்கும். அதனால் துரட்டிக் கொண்டு இந்த பழத்தை பறிக்கவும்.

இந்த கள்ளி பழத்தை பறித்ததும், அப்படியே சாப்பிடமுடியாது. அந்த பழத்தின் மேல் கண்ணுக்கு தெரியாத பூமுள் ஆயிரக்கணக்கில் இருக்கும். அதனால் துணியில் எடுத்து அந்த பழத்தை தரையில் உள்ள கல்லில் தேய்த்து மேலே உள்ள முள்ளை போக்கவும்.

பின் கவனமாக பழத்தை பிரித்து உள்ளே உள்ள தொண்டைமுள்ளை எடுத்து வெளியே போட்டு விடவும். பின் மெதுவாக உள்ளே உள்ள பழத்தை சாப்பிட அதிக விதையும், நல்ல இனிப்பு சுவையும், நல்ல சிவப்பு நிறமும் கலந்து இருக்கும்.

இதை சாப்பிட இதயம் சீராக துடிக்கும். ஆணுக்கு அனுக்கள் அதிகரிக்கும். பெண்களுக்கு கரு முட்டை நன்றாக வளரும். கருவுற்ற பெண்கள் இந்த பழம் சாப்பிட்டால் குழந்தை நல்ல சிவப்பு நிறத்துடனும், நல்ல கோபம், ரோசத்துடனும் இருக்கும்.

இந்த பழம் சாப்பிட ஆண்மை அதிகரிக்கும். கருப்பை சுத்தம் ஆகும். நீர்கட்டி தானாக அழியும். எல்லோருக்கும் நல்லது செய்யும் பழம் இது...

சேலத்தை நோக்கி அரசும் - அதிகாரிகளும்...


தமிழர்களின் அறிவியல்...


தமிழில் அறிவியல் இல்லை, அறிவியலுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பில்லை, தமிழ் மொழி ஒரு காட்டுமிராண்டி மொழி என்று தமிழையும் தமிழர்களையும் தமிழின எதிரிகள் இழித்தும் பழித்தும் பேசி வந்துள்ளனர்...

அப்படி பேசியவர்களை தலைவர்கள் என்று தமிழர்களே தலையில் தூக்கி சுமக்கவும் செய்த கொடுமை தமிழகத்தில் நடைபெற்றுள்ளது.

தமிழின எதிரிகள் திட்டமிட்டு தமிழர்களுக்கு எந்த பண்பாடும் நாகரீகமும் அறிவும் இல்லை என்ற பொய்ப்பரப்புரை செய்து வெற்றி பெற்றுள்ளனர் என்பதை நாம் அறிதல் வேண்டும்.

சரி, அப்படி எத்தகைய அறிவை பண்டைய தமிழர்கள் பெற்றிருந்தனர் என்பதை நாம் ஆய்வு செய்தல் அவசியமாகும்.

சங்க கால தமிழர்கள் வானத்தையே தன் வீட்டின் மேற் கூரையாகக் கொண்டவர்கள்.

வானத்தில் நாள்தோறும் நிகழ்கின்ற வானியல் நிகழ்வுகளையும், மாற்றங்களையும் கூர்ந்து கவனித்து வானியல் தொடர்பான சிந்தனைகளை இவ்வுலகுக்கு சொன்னவர்கள்.

தமிழகத்தில் வானியல் துறையில் சிறந்து விளங்கிய பலர் வாழ்ந்தனர் என்பதை கணியன் பூங்குன்றனார், கனிமேதாவியார், பக்குடுக்கை நன்கணியார் முதலிய பெயர்கள் சான்று பகர்கின்றன.

சிலேட்டர் என்னும் வானியல் அறிஞர் தமிழருடைய வானநூற்கணித முறையே வழக்கிலுள்ள எல்லாக் கணிதங்களிலும் சிறப்பானது என்னும் கருத்து ஈண்டு நோக்கத்தக்கது.

விசும்பில் ஊழூழ் செல்லக்
கருவளர் வானத்திசையில் தோன்றி
உருவறி வாரா ஒன்றன் ஊழியும்
செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு
தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்
நுண்முறை வெள்ள மூழ்கி ஆர்தருபு - பரிபாடல்-2

இந்த பரிபாடல் பாடலடிகள் முறையாகத் தோன்றும் ஊழிக் காலங்களை வெளிப்படுத்துகிறது.

முறையே வானம் முதல் ஊழிக் காலத்திலும், காற்று இரண்டாம் ஊழியிலும், தீ மூன்றாம் ஊழியிலும், நீர் நான்காம் ஊழியிலும், நிலம் ஐந்தாம் ஊழியிலும் தோன்றிய நிகழ்வு இன்றைய அறிவியலாரும் உடன்படு கருத்தாகும்.

வானம் மூழ்கிய வயங்கொளி நெடுஞ்சுடர்க்
கதிர்காய்ந்து எழுந்தகங் கனலி ஞாயிறு - நற்றிணை:163

இந்த நற்றிணைப் பாடலில், உலக உயிர்கள் ஞாயிறின் கதிர்களால் உயிர் வாழ்கின்றன. இல்லையேல் இவ்வுலகம் பனிமண்டி உலக அழிவு ஏற்படும் என்ற உண்மை புலப்பட்டு நிற்கிறது. மேலும், நற்றிணை பாடலொன்று, ஞாயிறு இருளைப்போக்க அதன் உட்பகுதி நெருப்பினால் எரிந்து கொண்டிருக்கிறது என்றும் அதைச் சுற்றிலும் ஒளிப்படலம் உள்ளது என்றும் கூறுகிறது.

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை.  திருக்குறள் 1031

பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது என்ற கருத்தை வெளிபடுத்தும் இக்குறளில் உலகம் தொடர்ச்சியாக சுழன்று கொண்டிருக்கிறது என்ற அறிவியலை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்படுத்துகிறது.

வள்ளலார் வழங்கிய அருட்பெருஞ்சோதி அகவல் வரிகளில் வரும் வானியல் பற்றியும் பார்ப்போம் ..

113. எண்டர முடியா திலங்கிய பற்பல
அண்டமு நிறைந்தொளி ரருட்பெருஞ் ஜோதி
எண்ணில் அடங்காத அண்டங்களுக்கு நிறைந்த ஒளியை கொடுத்துக் கொண்டிருக்கிறது அருட்பெருஞ்சோதி என்ற பேராற்றல்.

276. புனன்மேற் புவியும் புவிமேற் புடைப்பும்
அனன்மேல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீரின் மேல் புவியும் , புவியின் மேல் மலைகளும் , நிலப்பரப்பும் இவை அனைத்தும் நெருப்பின் மேல் நிலைத்திருக்கும் படி இயற்கை வகுத்துள்ளது என்ற புவியியல் அறிவை வெளிபடுத்தியுள்ளார் வள்ளலார்.

மேலும் அண்டப் பெருவெளியில் இருந்து ஒளி அண்டங்களை பார்வையிட்ட தருணத்தில் இந்த மாபெரும் ஒளி அண்டங்கள் எல்லாம் சிறு அணுக்களாக காட்சி அளித்தது என்றும் கூறியுள்ளார் வள்ளலார். நவீன விஞ்ஞானத்தில் மிகப்பெரிய தொலைநோக்கி கருவியை வைத்து மட்டுமே பார்க்கப்படும் இக்காட்சியை மிக எளிமையாக காட்சிப் படுத்தியுள்ளார் வள்ளலார்.

தமிழர்கள் வானியலை மிகத் துல்லியமாக அறிந்து வைத்திருந்தனர் என்பதற்கு இன்னும் பல ஆதாரங்கள் தமிழ் இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கின்றன் .

தமிழ் இலக்கியங்கள் மூலமாகவே ஆரிய புராணங்களும் பல அரிய செய்திகளை கடன்பெற்று கதைகளாக உலகிற்கு வழங்கின.

தமிழர்கள் கண்டு பிடித்ததை தாங்கள் கண்டுபிடித்ததாக வாய்க் கூசாமல் பொய் கூறினர் ஆரிய மதத்தினர். ஆரிய கட்டுக் கதை புராணங்களில் தமிழர் அறிவியலையும் , மெய்யியலையும் நிறையவே நாம் காணலாம்.

சரி , இப்படியான அறிவுக்கு சொந்தக்கார்களான தமிழர்களுக்கு அந்த அறிவு இப்போது விளங்காமல் போன காரணம் என்ன?

இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் , தமிழர்கள் அந்த அறிவின் தொடர்ச்சியை பெரிதளவு இழந்து விட்டார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.

இருப்பினும் தமிழர்கள் அதை முற்றிலும் இழக்கவில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இன்றும் வானியல் ஆய்வை பல தமிழர்கள் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். வானியலையும் தமிழர் மெய்யியலையும் பிரிக்க முடியாது .

மெய்யியல் விழைவோர் நிச்சயம் வானியல் ஆய்வுகள் மேற்கொண்டு தான் ஆக வேண்டும். அப்படி மெய்யியல் ஆய்வு செய்வோர் தற்போது உள்ள வானியல் ஆய்வுகளைக் காட்டிலும் பல உண்மைகளை தெரிந்து வைத்துள்ளனர். அந்த வானியல் அறிவு மரபு இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்த மரபை அழியாமல் பார்த்துக் கொண்டும் வருகின்றனர் சில தமிழர்கள். நிச்சயம் இவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை, ஆய்வுகளை, மெய்யியல் உண்மைகளை ஒவ்வொரு காலத்திலும் உலகிற்கு வெளிக் கொண்டு வருகிறார்கள், வருவார்கள்.

அத்தகைய ஆய்வுகள் உலகிற்கே வழிகாட்டும் படியும் அமையும் என்பதை தமிழர்கள் நாம் எண்ணிப் பெருமை படவேண்டும்...

வங்கிகளின் உண்மைகள்...


புதைத்த 8 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை...


பிரேசிலில் உள்ள கனரனா பகுதியில் உள்ள காவல்துறையினருக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒரு போன் வந்துள்ளது.

அதில் கனரனா பகுதியில் நிலத்தில் ஏதோ முனகல் சத்தம் கேட்பதாகத் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினர் போனில் கூறப்பட்ட இடத்தில் தோண்டியுள்ளனர்.

இதை வீடியோவாக எடுத்து தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

வீடியோ தொடங்கும்போது இரண்டு காவல்துறை அதிகாரிகள் டார்ச் வெளிச்சத்தில் தங்களின் கைகளில் உள்ள சிறிய ஆயுதங்களைக் கொண்டு மெதுவாகத் தோண்டத் தொடங்குகின்றனர்.

அப்போது அவர்களுக்குக் குழந்தையின் தலை மட்டும் தென்படுகிறது. பின்னர், மிகவும் பொறுமையாகத் தோண்டும்போது பிறந்து சில மணி நேரங்களே ஆன இன்னும் தொப்புள் கொடிகூட காயாத நிலையில் குழந்தை  ஒன்று மீட்கப்படுகிறது.

உடனடியாகக் குழந்தையை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்குப் பின்னர், குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் அந்தக் குழந்தையின் குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து குழந்தையின் பாட்டி கூறும்போது,

‘வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் என் மகளுக்குப் பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்ததால் கவனிக்க ஆள் இல்லாமல் குழந்தை தரையில் விழுந்து தலையில் பலமாக அடிபட்டது.

அதன் பிறகு, குழந்தைக்குப் பேச்சு மூச்சு வரவில்லை. எனவே,  குழந்தை இறந்துவிட்டதாகக் கருதி நாங்கள் புதைத்தோம்’ எனக் கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து பேசிய பிரேசில் காவல் துறையினர், ‘குழந்தையின் தாய் 15 வயது மட்டுமே நிரம்பியவர்.

அதனால் குழந்தை வேண்டாம் எனப் புதைக்கப்பட்டதா..?

 அல்லது அவர்கள் கூறியபடி இறந்த பிறகு, புதைக்கப்பட்டதா..?

என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளனர்...

ஜூன் மாதம் சாகர்மாலா...


300 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க அமைச்சர் வீரமணி மணல் மாபியா சேகர் ரெட்டியுடன் இணைந்து அராஜகம்...


வேலூர் புதிய பஸ் நிலையத்தை ஒட்டியுள்ள தனியாருக்கு சொந்தமான ஆறு ஏக்கர் நிலத்தில் சாய் சிட்டி சென்டர் உள்ளது.

இங்கு வாகன பார்க்கிங் நிலையமும் செயல்பட்டு வந்தது.

சுமார் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த இடத்தை அபகரிக்க அமைச்சர் வீரமணி, மணல் மாபியா சேகர் ரெட்டியுடன் சேர்ந்து முழு முனைப்புடன் இறங்கியுள்ளார்.

அதன் முதல் கட்டமாக நேற்றைய முன்தினம்(7.6.18) அவருடைய பி. ஏ மற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்சி ஆட்களுடன் ஐந்து JCB இயந்திரங்களையும் அனுப்பி ஏற்கனவே  பல இலட்ச ரூபாய். செலவில் போடப்பட்ட சாலைகள், ஷெட்கள், வணிக வளாக கட்டுமானங்களை முழுமையாக நாசப்படுத்த செய்துள்ளார்.

அதுவும் அச்சமயம் செய்தி சேகரிக்க வந்த பல பத்திரிக்கையாளர்கள், கேமரா மேன்கள் முன்னிலையில் இந்த நாசவேலைகள் நடைபெற்றன.

அந்த இடத்தை தன் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவர, நேற்றும் தொடர்ந்து JCB இயந்திரங்களை பயன்படுத்தி முழுவதுமாக நாசப்படுத்த செய்துள்ளார்.

 ஒரு அமைச்சரே அராஜகமாக சேகர் ரெட்டியுடன் இணைந்து சட்ட விரோத பணியில் பகிரங்கமாக செயல்பட்டிருப்பது வேலூரில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது...

உங்கள் பிரச்சனைகளை ஊடகங்கள் ஒருபோதும் பேசுவதில்லை...


முதலில் இந்த பிரபஞ்ச சக்தி என்றால் என்ன என பார்ப்போம்...


இந்த சக்தி இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து இருக்கின்றது. இது இயற்கையாகவே  எல்லா உயிரினத்திலும் உள்ளது. நாம் நம்முடைய செயற்கையான வாழ்கைமுறையின் மூலம்  நம்முடைய சக்தியை பெருமளவு இழந்துவிட்டோம். மீதம் இருப்பது நம்மையும் அறியாமல்  நாம் செய்யும் சுவாசத்தின் மூலமும் அவ்வப்போது நாம் செய்யும் தியானம் மற்றும்  இறைவழிபாடு மூலமும் தான்.

இந்த பிரபஞ்ச சக்தியை பெற வேண்டும் என்றால் நாம் செய்ய வேண்டுவது தியானம் அல்லது  இறைவழிபாடு போன்றவைதான்.

இதில் தியானம் என்பது நாம் நினைப்பது போல முற்றும் துறந்த நிலை அல்ல. மாறாக  தியானம் என்பது ஒரு சுவாச பயிற்சியே ஆகும். நல்ல அமைதியான காற்றோட்டமான இடத்தில்  அமர்ந்து ரிலாக்ஸாக உங்களுக்கு பிடித்தமான ஒன்றை நினைத்து கொண்டு இருந்தாலே போதும்  உங்கள் உடம்பு தானாக பிரபஞ்ச சக்தியை கிரகிக்க ஆரம்பிக்கும்.

ஆனால் நீங்கள்  சிந்திக்கும் விஷயம் நேர்மறையாகவும் உங்கள் மனதிற்கு அமைதியை தரகூடியதாகவும் இருக்க
வேண்டும். இந்த நிலை உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்க கூடியதாகவும் உங்கள் உடம்பை  நீங்கள் தள்ளி நின்று மனதளவில் ரசிக்க கூடிய நிலையிலும் இருக்க வேண்டும்.

பலர் தியானமும் இறைவழிபாடும் வெவ்வேறு என நினைக்கின்றார்கள். அது மிகவும் தவறு. 

இறைவழிபாடும் ஒரு வகையான தியானமே. இறைவழிபாட்டில் மனதை ஒருமுக படுத்தி இறைவனின்  அருளை நாம் உள்வாங்கி கொள்கின்றோம். தியானத்தின் மூலம் மனதை ஒருமுகபடுத்தி பிரபஞ்ச  சக்தியை உள்வாங்கி கொள்கின்றோம்.

நாத்தீகர்கள் இறைவனை பிரபஞ்ச சக்தி என கூறுகின்றார்கள்.

ஆத்தீகர்கள் இறைவனின் சக்தியை பிரபஞ்ச சக்தி என நம்புகின்றார்கள்.

சரி இதனால் என்ன பலன்...

நிறைய இருக்கின்றது குறிப்பாக உடல் ஆரோக்கியமாக இருக்கும். நன் உடலில் வரகூடிய  வியாதிகளுக்கு குறிப்பாக தோல் சம்பந்தபட்ட வியாதிகளுக்கு பல காரணங்கள் இருந்தாலும்  அதற்கெல்லாம் மூல காரணம் நம் உடலில் இருக்க கூடிய பிரபஞ்ச சக்தியில் அளவு குறைந்து  போனதே ஆகும்.

இந்த சக்தியினால் ந உடலில் ரத்த ஓட்டம் சீராகின்றது.. ரத்தஓட்டம்  சீராகும் போது நம் உடம்பு புத்துணர்ச்சி அடைகின்றது. முறையான இல்லற வாழ்கைக்கும் இது  துணை புரிகின்றது. இதய சம்பந்தமான வியாதிகளை பெருமளவு குறைகின்றது. இரத்த அழுத்தம்  போன்ற நோய்கள் அறவே வராது. இன்னும் சொல்ல போனால் நம் உடம்பிற்கு வரகூடிய பாதி  வியாதிகளுக்கு மனமே காரணம் என நான் சொல்ல வில்லை மருத்துவம் சொல்கின்றது. இந்த  தியானம் மற்றும் இறைவழிபாடு மூலம் நன் உடல் வியாதிகளில் பாதியை போக்கி  கொள்ள முடியும் என்பதே அறிவியல் உண்மை.

தியானத்தின் பலனை இந்த ஒரு பதிவில் எழுதிவிட முடியாது. என்னால் முடிந்ததை நான்  தற்போது பதிவிட்டுள்ளேன்...

பாஜக பினாமி சேலம் கலெக்டர் ரோகினி...


இந்தி மொழியின் தாயகம் இந்தியா அல்ல.. துருக்கி.. ஆய்வில் கண்டுபிடிப்பு...


சமீபத்தில் நடத்தப் பெற்ற மொழி ஆய்வின் படி, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளின் தாயகம் துருக்கி என அறியப்பட்டுள்ளது.

ஆங்கிலம் மற்றும் இந்தி பேசுபவர்கள் ஏறக்குறைய 4000 ஆண்டுகளுக்கு முன்பு கருங்கடல் பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பது தற்போது மொழி ஆராய்ச்சியாளர்கள் நம்பும் கருத்து ஆகும்.

அவர்கள், கருங்கடல் பகுதியில் உள்ள தங்கள் தாய் நாட்டில் இருந்து ஆசியா மற்றும் ஐரோப்பாவை வெற்றி கொண்டு, குடியேறி வந்தவர்கள் எனவும், அவர்களால் மேற்கூறிய மொழிகள் பரவியது என்றும் அறியப்பட்டு வருகிறது.

கருங்கடலில் இருந்து வந்தவர்கள் தேர் ஒட்டுதல் மற்றும் மேய்த்தல் தொழில் செய்தவர்கள், போர் வீரர்கள் என ஒரு கருத்து நிலவுகிறது.

ஆனால், தற்போது இதற்கு முரணான கோட்பாடு ஒன்று ஆராய்ச்சியில் அறியப்பட்டுள்ளது.

அதாவது, 9000 ஆண்டுகளுக்கு முன்பே 'அனடோலியா' என்ற பகுதியில் (தற்போதைய துருக்கி) இருந்து இடம்பயர்ந்து வந்தவர்களாலேயே இந்திய-ஐரோப்பிய மொழிகள் உருவாயின என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

இந்த மொழிகளைப் பேசுபவர்கள் சாதாரண விவசாயிகள். மேலும், அவர்கள் அமைதியான முறையில் இடம்பெயர்ந்து வந்தவர்களே என்பதும், தற்போதுள்ள துருக்கியை போரினால் யாரும் கைப்பற்றவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆங்கிலம், டச்சு, ஸ்பெயின், கிரேக்கம், ரஷியன் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகள் ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத மாதிரி தோன்றினாலும், இந்த மொழிகளின் ஒலி பிறப்பிடம் மற்றும் சொல்லியல் ஆகியவைகளை ஆராயும்போது, மேற்கூறிய ஆறு மொழிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

இந்த மொழிகளில் உள்ள பல சொற்கள், ஒரே வேர்ச்சொல்லில் இருந்து வந்தவை என்பது, ஆராய்ச்சியாளர்களின் கருத்தான, 'ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளின் தாயகம் துருக்கி' என்பதற்கு வலு சேர்க்கிறது.

உதாரணமாக, ஆங்கிலத்தில் 'மதர்' (Mother) எனும் வார்த்தைக்கும் பிற இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும் உள்ள ஒற்றுமையைப் பார்க்கலாம். இதே சொல், ஜேர்மன் மொழியில் 'மட்டர்' (Mutter) எனவும், 'மட்' (Mat) என ரஷ்ய மொழியிலும், 'மடர்' (Madar) என பெர்சிய ( பெர்சியன் என்பது இரானிய மொழி) மொழியிலும், 'மா' (Ma) என ஹிந்தியிலும், லத்தின் மொழியில் 'மதேரி' (Materi) எனவும் அழைக்கப்படுவது, இந்திய-ஐரோப்பிய மொழிகளுக்குள் உள்ள ஒற்றுமையைக் காட்டுகிறது. மேற்கூறிய வார்த்தைகள் அனைத்தும், இந்திய-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல்லான  'மெஹ்தர்' (Mehter) என்பதிலிருந்து பிறந்தவை.

இந்திய-ஐரோப்பிய மொழிகள் (Indo-European languages) சுமார் 300 கோடி மக்களால் பேசப்படும் 150 மொழிகளை உள்ளடக்கியுள்ளது. இவற்றுள் ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவைச் சேர்ந்த பெரும்பாலான முக்கிய மொழிக்குடும்பங்கள் அடங்கும். இந்தப் பெருமொழிக்குடும்பத்தில் பிரபல மொழிகளான ஆங்கிலம், ஸ்பானிய மொழி,பிரெஞ்சு மொழி, போர்த்துக்கீசம், ஜெர்மன் மொழி, இத்தாலிய மொழி, ரஷ்ய மொழி, பார்சி, ஹிந்தி, உருது என்பனவும் அடங்குவன.

அதிலும், இந்தியாவின் ஆரிய மொழியான ஹிந்திக்கும், ஜேர்மன் மொழிக்கும் இன்னும் நெருங்கிய தொடர்பு உள்ளது. (இதனால் தான், 19 ஆம் நூற்றாண்டில் அறிஞர்கள் இந்தோ-ஐரோப்பிய மொழிகளை, 'இந்தோ-ஜெர்மானிய மொழிகள்' அல்லது 'ஆரியம்' என அழைத்து வந்தனர். பின்னர் மேற்படி தொடர்பு ஐரோப்பாவின் பெரும்பாலான மொழிகளுக்கும் பொருந்துவது அறியப்பட்டதும், இதன் பெயர் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் என விரிவாக்கப்பட்டது).

இதனாலேயே, ஹிந்தி மொழியில், மற்ற இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் தாக்கம் வெகுவாகவே காணப்படுகிறது. உதாரணம்: 'UPPER' எனும் ஆங்கில சொல், 'உப்பர்' (மேலே என பொருள்படும்) என ஹிந்தியில் அதே பொருளில் அழைக்கப்படுவதைக் காண்க.

மேலும், தமிழுடன் ஒப்பிடும்போது, ஹிந்தியில் வேர்ச்சொற்கள் மிகக்குறைவு தான். ஹிந்தி மொழி முழுக்க, முழுக்க இந்தோ-ஐரோப்பிய மொழிகள் மற்றும், இந்தோ-ஆரிய மொழியான சமஸ்க்ரிதத்தில் இருந்து கடன் வாங்கி உருவாகியிருக்கும்.

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும். திராவிட மொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் மேலும் கவனமாகப் பழைய அமைப்புகளைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது. ஆனால், தமிழ் மொழி அறிந்தவர்களுக்கு இப்போதும் இவை எளிதாக புரியும்.

இந்த கண்டுபிடிப்புகள் மொழி வரலாற்றையே மறு பார்வை செய்யத் தூண்ட வைப்பதாக ஆராய்ச்சி செய்த மொழியியல் அறிஞர் அட்கின்சன் தெரிவித்துள்ளார்...

மருத்துவ மாப்பியா உண்மைகள்...


தயிரை விடச் சிறந்தது மோர்...


தயிரை விடச் சிறந்தது மோர். மோர் ஆகக் கடைந்து குடியுங்கள் சளி பிடிக்காது. மோர் சிறந்த பிணிநீக்கி.

எத்தனைதான்  வண்ணவண்ணமான குளிர்பானங்கள் சந்தையில் வந்தாலும், இரசாயனம், செயற்கை சுவை மற்றும் நிறம் (Artificial flavour, Artificial colour) கலக்காத இந்த நீர்மோருக்கு அவையெல்லாம் இணையாகுமா?

வெண்ணெய்ச்சத்து சிலுப்பி நீக்கப்பட்ட இந்த நீர்மோர் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், செரிமானம் சக்தியை அதிகரிக்கவல்லது. பசியின்றி வயிறு ‘திம்மென்று’ இருக்கும்போது இஞ்சி கலந்த இந்த நீர்மோரை ஒரு குவளை  பருக அரைமணி நேரத்தில் நல்ல பசியைத் தூண்டிவிடும்.

கோடைகாலத்தில் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு குளுகுளுவென மோர் கொடுத்து உபசரிப்பது நம் தமிழர்களின் பண்பாட்டில் ஒன்றல்லவா?

மோரில் பொட்டசியம், வைட்டமின் B12, கால்சியம், ரிபோப்ளேவின் மற்றும் பொசுபரசு சத்துக்கள் நிறைந்துள்ளது. நீர்மோர் நான்கு வித்தியாசமான சுவைகள் (புளிப்பு, உப்பு, காரம், துவர்ப்பு) அடங்கியது. மலிவானது.

எங்கள் ஊரில் வெயில் காலத்தின் போதும், கோவில் திருவிழா நேரங்களிலும் அமைக்கப்படும் தண்ணீர் பந்தலில் பொதுவாக நீர்மோரும், பானாக்கமும் வழங்குவார்கள். இந்த இரண்டு பானங்களில் அறுசுவையும் அடங்கிவிடும்.

அறுசுவை உணவு நமது உடலில் சேரும்போது உடல் கொண்ட மொத்த களைப்பும் நீங்கி தனி புத்துணர்ச்சி கிடைத்துவிடும். மோர் தயாரிக்க..

தேவையான பொருட்கள்...

தயிர் – 1/2 குவளை
தண்ணீர் – 1 ½ குவளை
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு (பொடியாக நறுக்கியது.)
மல்லித்தழை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது.)
இஞ்சி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது.)
பச்சைமிளகாய் – அரைமிளகாய் அளவு- 2 குவளை  மோருக்கு. (காரம் உங்கள் தேவைக்கேற்ப கூட்டியோ, குறைத்தோ சேர்த்துக் கொள்ளவும்.)
உப்பு – தேவையான அளவு

செய்முறை...

ஒரு பெரிய பாத்திரத்தில் தயிரை ஊற்றவும். இதனுடன் தண்ணீர் சேர்த்து தயிர் கடையும் மத்து கொண்டு சிலுப்பிவிடவும். கட்டிகள் இல்லாமல் தயிர் நன்றாக கரைந்துவிடும்.

தயிரில் இருக்கும் வெண்ணெய்ச் சத்தும் தனியே பிரிந்துவிடும். இதனுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித்தழை, இஞ்சி, பச்சைமிளகாய் தேவையானஅளவு உப்பு சேர்த்து கலக்கவும். சுவையான இந்த நீர்மோரை குவளையில் ஊற்றி பருக அல்லது சாதத்துடன் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.

குறிப்பு...

வெயில் காலத்தில் மோர் நிறைய தயாரித்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கு தண்ணீருக்கு பதிலாக மோர் கொடுக்கலாம். உடல் சூட்டை தணிக்கும்.

கோடை காலத்தில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தாலும் மோர் புளித்துவிடும். அதற்குத் தயிரிலிருந்து எடுத்த வெண்ணையை அந்த மோர் தீரும்வரை, மோரிலேயே வைத்திருந்தால் மோர் கடைசிவரைக்கும் புளிக்காமல் இருக்கும்...

பால் தினகரன் எனும் மத வியாபாரி...


பிரபஞ்ச படைப்பாளி.. இயற்கை.. கடவுள்...


இது அல்லது இவர் பிரபஞ்சத்தை படைத்த உயிர் அற்றவை (neutral or non living thing so thevai illa)...

மற்ற படைப்புகளான உயிரினங்களுக்கு ஒரு வரத்தையும் (+ive , protons) சாபத்தை பரிசாக தருகிறார் (-ive, electrons) இரு அணுவை போல இதில் ஒன்னு இல்லாவிட்டாலும் இயங்காது..

படைப்பாளியின் பொம்மைகள் நாம்.. அவன் விளையாடுவதற்கு படைக்கபட்வைகளில் உயிரிகளும் உயிரற்றவைஙளூம் ஆற்றல்களும்..

பிரபஞ்ச இயங்குதலுக்கு...

நல்லதுனு ஒன்னு இருந்தா கெட்டதுனு ஒன்று இருக்க வேண்டும்.. இல்லாவிட்டால்  netrual ஆகிடும் அதாவது நகராது/இயங்காது. இது தான் பிரபஞ்ச இயங்குதலில் முக்கிய தத்துவம்..

இவைகளை வைத்து விளையாடி கொண்டிருக்கான் அந்த படைப்பாளி  இது தான் இவனின் முழு நேர வேலை..

இதில் கொடுமை என்வென்றால் உயிரினங்களின் அடுத்தகட்ட பரிமான வளர்ச்சியில் மனிதர்களுக்கு நல்லது கெட்டது என்ற செயலை பிரித்து பார்க்கும் கதாபாத்திரத்தை தந்தான் அதுவே வரமாகவும் சாபமாகவும் இருக்கிறது..

வேண்டும் என்றால் மனித பரிமானம் ஆற்றலின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி 6வது அறிவின் முழு ஆற்றலை கொண்டு (ஞானக்கண்/மூன்றாவது கண் திறந்து) கடவுள் மாதிரி தங்களை காட்டிக்க முடியும் (ஒளியுடன் ஒளியாக இணைவது) ஆனால் படைப்பாளியாக முடியாது..

சதுரங்கத்தில் சிப்பாய்களை எதிரியின் கடைச்சி வரிசைக்கு/row கொண்டு சேர்த்தால் யானை, குதிரை, மந்திரி ஏன் ராணியாக கூட மாற்றிவிடலாம் ஆனால் ராஜாவாக மாற்ற முடியாது அது போலத்தான்..

எதற்காக இதை சொல்கிறேன் என்றால்
அவனுடன் சேர்ந்து  விளையாட்டை புரிந்து இவன் விளையாட்டுடன் சேர்ந்து விளையாட கத்துக்கோங்க புரிஞ்சுக்கோங்க நீங்களாவது ஒரு அளவுக்கு நிம்மதியாக இருக்க முடியும். விளையாட்டை மாற்றி அமைப்பது சாதியமற்றது..

இங்கு நடக்கிற அரசியலை அப்படியே  இதோட ஒப்பிட்டு பார் அரசியல் புரியும்..

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை போலி பட்டா போட்டு, ஆக்கிரமித்து சர்ச் கட்டிய பாதிரியார்...


பாஜக வின் மந்திர மாலை திட்டம்...


தமிழ்நாட்டின் 50 லட்சம் கோடி மதிப்பிலான பன்னாட்டு முதலாளிகளின் ஹைட்ரோகார்பன், பெட்ரோகெமிக்கல், அனல்மின் நிலையம், இரும்பு கொள்ளை சேலம் எட்டு வழி சாலை, சாகர்மாலா கிழக்கு கடலோர சாலை இவையெல்லாம் பூர்வகுடி மக்களான வன்னியர்களை அகதிகளாக விரட்டிவிட்டு செய்யப்படும் திட்டமாகும்.

வன்னியர்களுக்குள் ஊடுருவி அவர்கள் நிலங்களை பறிக்க, போராட விடாமல் நகரத்தை நோக்கி விரட்ட, போராடுபவர்களை காட்டி கொடுக்க,

வன்னியர்களிலேயே தரகனை கண்டறிந்து எலும்பு துண்டுகளை போட்டு, வன்னியர் நலன் கட்சியாக பாசகவை  காண்பித்து வன்னியர்களை ஒழிக்கும் திட்டமே மந்திர மாலை திட்டம்.

அதாவது நாடார்களை ஒழித்து, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாகர்கோயிலில் வாயிலேயே சுடுவதை சரியென சொல்லும் பொன்னார், தமிழிசை நாடார் தரகனை உருவாக்கியது போல வன்னியர் தரகனை உருவாக்கும் திட்டம்...

எனது வாழ்கை அனுபவங்கள்...


ராஸ்வெல் சம்பவமும் மிட்செல் அனுபவமும்...


#மிட்செல் நிலவில் நடந்த நாசா முன்னாள் விஞ்ஞானிகளில் ஒருவர்..

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ பகுதியில் ராஸ்வெல் நகரில் கடந்த 1947ம் ஆண்டு நடந்த பறக்கும் தட்டு சம்பவதை பற்றி பார்த்தோம், அதில் வேற்றுகிரகவாசி ஒன்று இறந்தது போன்ற புகைப்படம் ஒன்றை நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரான எட்கர் மிட்செல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இந்த படம் பொய்யானது அல்லது இது ஒரு வதந்தி என்று பரவலாக
நம்பப்படுகிறது.

எனினும் கடந்த வாரம் நடந்த "பி விட்னஸ்" என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மிட்செல் விடாப்பிடியாக கூறும்போது, கடந்த 70 வருடங்களுக்கு முன்பு ஒன்றிற்கும் மேற்பட்ட வேற்று கிரகவாசிகள் ராஸ்வெல் பகுதியில் தரை இறங்கின என்றும் அவற்றில் சில உயிருடன் பிடிபட்டன என்றும் கூறியுள்ளார்.

வேற்றுகிரகவாசி விண்கல விபத்தை பற்றி அவர் தொடர்ந்து கூறும்போது,
அது குறித்த உண்மை என்னவெனில் ராஸ்வெல் சம்பவம் நடக்கும்போது நான் அங்கு இருந்தேன். நான் பள்ளி படிப்பை முடித்து அப்பொழுது கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தேன். ஒரு நாள், ராஸ்வெல் நகரில் இருந்து வெளிவரும் ராஸ்வெல் டெய்லி ரெக்கார்டு என்ற நாளிதழில், வேற்று கிரகவாசிகளின் விண்கலம் ஒன்று வெடித்து சிதறியுள்ளது என்று செய்தி வெளியானது.

அதற்கு அடுத்த நாள் அந்த செய்தி விமான படையினரால் மறுக்கப்பட்டு இருந்தது. அது வானிலை பலூன் என தெரிவித்து இருந்தது. நான் அதனை நம்பி கொண்டு கல்லூரிக்கு சென்றேன் என அவர் கூறியுள்ளார். இந்த புகைப்படத்தில் உள்ளது வேற்று கிரகவாசி என்றும் அது குழந்தை ஒன்றின் மம்மி இல்லை என்று மாநாட்டில் மிட்செல் கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறும்போது, அதற்கு பின்பு பல வருடங்கள் கழித்து, நிலாவிற்கு சென்று திரும்பி வந்த பின், ராஸ்வெல் நகருக்கு சென்று அங்குள்ள மக்களிடம் நான் சிறுவனாக இருந்த சமயத்தில் இருந்து எனக்கு தெரிந்தவற்றை குறித்து அவர்களிடம் பேசினேன் என கூறியுள்ளார்.

ராஸ்வெல் சம்பவத்துடன் தொடர்புடைய பலரை குறித்து எனக்கு தெரியும்.
அவர்கள் தங்களது கதைகளை என்னிடம் கூறியுள்ளனர். அவர்களில் வேற்றுகிரகவாசிகளுக்கு சவபெட்டி தயாரித்து கொடுக்கும் நபரின் மகன் ஒருவர் மற்றும் விபத்து நடந்த சம்பவத்தில் போக்குவரத்தை சீர் செய்த ஷெரீப் ஒருவரின் மகன் ஆகியோரும் அடங்குவர்.

அவர் மெக்சிகோ நகரில் நடந்த 6 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாநாட்டில் கலந்து கொண்டார். ஆனால், உண்மையில் அவர் வீடியோ வழியே தொடர்பு கொண்டு பேசினார். அதிக வயது முதிர்வால் (வயது 84) தன்னால் நீண்ட பயணம் மேற்கொள்ள முடியவில்லை என அவர் கூறியுள்ளார். அடுத்த மாதம் பறக்கும் தட்டுகள் குறித்த மாநாடு நடைபெற உள்ள நிலையில்
"ஹை கண்ட்ரி" நியூசுக்கு அளித்த பேட்டி ஒன்றில், அதிகாரிகள் வேற்று கிரகவாசிகளின் வருகையை மிக அதிக ரகசியமாக வைத்திருக்கின்றனர் என்பது குறித்து கூறியுள்ளார்.

வேற்று கிரகவாசி குறித்து வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய புகைப்படம் குறித்து கூறிய அவர், அவை நிச்சயமாக மனிதன் இல்லை. அவர்கள் சாம்பல் நிறம் கொண்டு உள்ளனர் என கூறியுள்ளார். அவர் தொடர்ந்து கூறும்போது, அண்டத்தில் என்ன உயிரினங்கள் இருக்கின்றன என்பது குறித்து நமக்கு தெரியாது. ஏனெனில், பெரிய பீச் ஒன்றில் உள்ள மணல் போன்றது நமது கிரகம் என கூறியுள்ளார். கடந்த 1971ம் ஆண்டு அப்பல்லோ 14 திட்டத்தின்படி நிலவில் சென்று நடந்த 6 பேரில் கடைசி நபர் மிட்செல்.

செய்தி தாளில் வந்த தகவல் மிட்செல்லை பறக்கும் தட்டுகள் மீது உள்ள ஆர்வத்தை துளிர் விட செய்துள்ளது. அவரது நண்பரான அமெரிக்க விமான படை அதிகாரி ஒருவர் இதனை உண்மை என கூறியுள்ளார். இது போன்று பலரது கதைகளையும் கேட்டு கொண்டு நிலாவிற்கு சென்று திரும்பி வந்த உடன் அவர் பென்டகனுக்கு சென்றுள்ளார். அங்கு, இருந்தவர்களிடம் இது குறித்து கூறியுள்ளார். அவர்களது கருத்துகளையும் கேட்டுள்ளார்.


அவர் பேசிய அதிகாரி ஒருவர், எனக்கு இதனை குறித்து எதுவும் தெரியாது. அதனை நான் தேடி போகிறேன் என கூறியுள்ளார். அதன்பின் நியூ மெக்சிகோவிற்கு சென்று திரும்பி வந்து, அனைத்து இடத்திலும் அலசி ஆய்வு செய்தேன்.

உங்களது கதைகள் சரியானவை. அனைத்தும் உண்மை என்று கூறியுள்ளார். வேற்று கிரக வாசிகளின் விண்கல விபத்து சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் உயிருடன் கிடந்த வேற்று கிரக வாசிகளை அமெரிக்க அரசாங்கம் கண்டறிந்துள்ளது.

எனினும் ராஸ்வெல் சம்பவத்தை அவர்கள் மூடி மறைத்து விட்டனர். ஏனெனில் அவர்களது பயணம் குறித்து அதிகாரிகளுக்கு தெரியாது. அதனுடன் சோவியத் ரஷ்யா இதனை குறித்து எதுவும் கண்டறிந்து விட கூடாது என்பதற்கே என்று கூறியுள்ளார். தனது பணி காலத்தில் பூமிக்கு பல பறக்கும் தட்டுகள் வந்துள்ளன என்பதை நான் அறிவேன் என்றும் ஒவ்வொன்றையும் நாசா மூடி மறைத்துள்ளது என்றும் மிட்செல் கூறுகிறார்...

உணர்ந்த மொழி.. புரியாத மொழி.. இசை...


ஒலிகளால் எண்ணங்களை பரிமாற்றி கொள்ளலாம் இதை உணர்ந்தவர்கள் இசை கருவிகளை பயன்படுத்தி எண்ணங்களை கடந்தினர் என் உன் மூளையை மயக்கி உன்னை இயக்கவும் செய்யலாம்..

ஒரு சோகமான இசையை  கேட்டால் மூளையும் உடலும் அதை உணர்ந்து சோகமாக இருப்போம்..

அதே போல சந்தோஷமான இசைக்கேட்க்கும் போதும் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெற்று சந்தோஷமாக இருப்போம்..

இந்த மொழி எனக்கு புரியல ஆனால் உணர முடிகிறது ஆனால் மூளைக்கு தெரிகிறது..

அப்படி என்றால் இந்த சங்கீதங்களையும் இசை கோர்வைகளையும் உணர்ந்து கண்டுபிடித்து கற்ப்பித்தவர் vera level..

மரத்திற்கு கீழ அமர்ந்து இசை கருவிகளை இயக்கி மழை பொய்ய வைத்தவர்களை பலரை பற்றி கதைகளால் கேட்டிருப்போம் எங்களோட சமீப கால எண்ண பரிமாற்றங்கள் பற்றிய சமீபகால பதிவுகளோட இதை இணைத்துப்பாருங்க இது சாத்தியமானு புரியும்...

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் தஞ்சையில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்...


சற்று முன் தஞ்சை  தொடர்வண்டி நிலையம் அருகே காவேரி நகர் பகுதியில் இருளான இடத்தில் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் மீதும் மற்றும் உடன் வந்த  சீனு என்பவர் மீதும் தாக்குதல் நடத்தி கை பையையும் பிடுங்கிச்சென்றுள்ளனர் அடையாளம் தெரியாத நபர்கள்.

தற்பொழுது தஞ்சை வினோதன் மருத்துவ மனையில் அவசரசிகிச்சை பிரிவில் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கால் மற்றும் கை விரல்களில் சிராய்ப்பு இரத்தக் காயம் ஏற்பட்டுள்ளதால்  எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வருகிறது.

பேருந்து நிலையத்திருந்து பின் தொடர்ந்து வந்து  திடீரென தாக்கியதாக உடன் வந்த தோழர் சீனு குறிப்பிட்டுள்ளார்.

யார் என்ன என்பது குறித்து தகவல் இல்லை.

இது குறித்து காவல்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது...

எல்லாம் வியாபாரம் இயற்கை மருத்துவ வழிகளுக்கு மாறுங்கள்...


இலுமினாட்டியும் இரட்டை கோபுரம் தகர்ப்பும்..


இரட்டை கோபுரம் தகர்ப்பு ஓர் False flag operation...

அதாவது ஒரு குறிப்பிட்ட குழுக்களின் மீது பழி போடுவதற்காக செய்யப்படுவது.

இரட்டைக் கோபுர தகர்ப்பு முகமதியர் மீது பழி போடுவதற்காக செய்யப்பட்டது.

இரட்டை கோபுரம் தகர்ப்பு.. அதன் மூலம் அரேபிய நாடுகளை கைப்பற்றுவதற்காகவும் இனங்களை ஒழிப்பதற்காகவும் செய்யப்பட்டது.

விமானம் மோதி கட்டிடம் இடியுமா?

மரத்தின் மீது மோதிய விமானம்..

மேலே கொடுக்கப்பட்ட படங்களின் மூலம் விமானங்கள் எதன் மீதாவது மோதினால் விமானங்கள் தான் அழியுமே தவிர கட்டிடங்கள் அழியாது அதுவும் இரும்பு ரீப்பர்களால் கட்டப்பட்ட கட்டிடம் அழியாது. 

அதுவும் இப்படி நொறுங்காது..

விமானம் மோதினால் கட்டிடத்தில் இப்படி புகை வருமா?

இந்த படங்களில் இருந்து இது வெடி பொருள் வெடிக்கும் முன் ஏற்படும் புகை என்பது தெரிகிறது.

இரட்டைக்கோபுரம் உள்ளே இருந்து வெடிபொருட்கள் வெடித்ததால் அழிந்தது என்பது தெளிவாகிறது.

செய்தது யார்?

இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட நாளில் அங்கே பணி புரிந்த ஒரு யூதர் கூட பணிக்கு செல்லவில்லை.

நான் சென்ற பதிவுகளில் இலுமினாட்டிகள்  தங்கள் பணியாளர்களாக யூதர்களை பயன்படுத்துகிறார்கள் என கூறியிருந்தேன்..

இது இலுமினாட்டிகளால் நிகழ்த்தப்பட்டவை...