07/05/2017

எரிக்கின் தவறும் மரணமும்...


எரிக் தனது வாழ்வின் உச்சத்தில் இருந்தார் .அதிகாரமிகுந்த நண்பர்களின் நட்ப்புணர்வுடன் செல்வாக்கு மிகுந்தவராக , 1933 இல் ஹிட்லர் நாஜிக்களின் தலைவரான போது நாஜி நண்பர்களோடு தனது வலிமை உயர்வதை அறிந்திருந்தார்.

இந்த நம்பிக்கை எரிக்கினை தவறு செய்ய தூண்டியது, வினாச காலம் விபரீத புத்தி என்பதற்கு ஏற்ப எரிக் தவறான முன்னவரிப்புகள் கொடுத்தார்.

தனது மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் எரிக் தன்னால் ஒரு கட்டிடம் அதுவும் சிறப்பு மிகுந்த கட்டிடம் தீப்பற்றி கொள்வதாகவும், கொழுந்து விட்டு எரியும் தீ ஜுவாளைகளையும் எங்கும் புகை மண்டலமாகவும், அதே சமயம் அதன் சாம்பலில் இருந்து அந்த கட்டிடம், புதிய ஒளியுடனும் நம்பிக்கையுடனும் பீனிக்ஸ் பறவை போல எழுவதை காணுவதாகவும் எரிக் கூறுகிறார்.

இந்த கணிப்பு சரியாக 1933 மாதம் 27 தேதி நடேந்தேருகிறது, ஜெர்மானிய பாராளுமன்ற கட்டிடமாகிய ரிச்ஸ்டாக் நெருப்புக்கு இரையாகிறது. நாஜிக்கள் இதற்க்கு காரணமாக கம்யுனிஸ்ட் மேல் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் வெகுண்டெழுந்த மக்கள் ஹிட்லருக்கு வானளாவிய அதிகாரத்தை தரும் சட்டத்தை நிறைவேற்ற அனுமதி அளிக்க ஒப்பு கொள்கின்றனர். ஆனால் உண்மையில் அந்த கட்டிடத்திற்கு தீ வைத்தது நாஜி படையினரே.

எரிக்கிர்க்கு இந்த உண்மை தெரியும், இவர்கள் என்பதற்கு மேலாகவும் பல உண்மைகளை எரிக் அறிந்து இருந்தார். இருப்பினும் அவற்றை வெளியிடவில்லை. தனது செயல்களுக்கு பலன் விரைவில் வரும் என்பதை எரிக் அறியவில்லை.

மார்ச் 24 தேதி ஒரு உணவகத்தில் இருந்து வெளிப்படும் எரிக், இரண்டு அடையாளம் தெரியாத மனிதர்களால் அழைத்து செல்ல படுகிறார். பிறகு அவரின் சடலம் மட்டுமே எறிந்த நிலையில் கண்டெடுக்க படுகின்றது.

எரிக் மரணம் குறித்து பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமானது, எரிக்கிர்க்கு பெரும்பாலானான ரகசியங்கள் அறிந்து இருந்தார்.

மேலும் எரிக்கின் கொலைக்கு பின் ஜெர்மனியில் இது போன்ற வானவியல் கோள்கள் முன்னரிவித்தளுக்கு தடை செய்யப்பட்டது.

அசாத்திய திறன்களை கொண்ட எரிக் கூட நடப்பின் காரணமாக தனது உயிரை இழந்ததும் அவரின் உயர்வும் தாழ்வும் வரலாற்றில் ஒரு பாடமாகவே இருக்கும்...

நம்ப முடியாத உண்மைகள்...


டென்ஷனைக் குறைக்க நடை தியானம்...


இன்றைய வாழ்க்கையில் டென்ஷன் என்பது மிகவும் சாதாரணமான ஒன்றாகி விட்டது. யாருக்குத் தான் டென்ஷன் இல்லை என்கிறார்கள். அதிகாலையில் ஆரம்பித்து அன்று இரவு படுக்கையில் சாயும் வரை டென்ஷன் தான். தூக்கத்தில் கூட ஆழமும் அமைதியும் இல்லை.

மறுபடி காலை ஆரம்பிக்கிற நாளில் முந்தைய நாளின் டென்ஷனும் சேர்ந்து கொள்கிறது. இப்படி சேர்ந்து கொண்டே போகும் டென்ஷன் கோபமாய், கத்தலாய், வியாதியாய், வெறுப்பாய், பல ரூபங்கள் எடுத்து நமக்கு உள்ள சிக்கல்களை மேலும் அதிகப்படுத்தி விடுகிறது.

ஒருசிலர் எங்கேயாவது ஓடிப் போய் விடலாமா என்று தோன்றுகிறது என்று புலம்புவது உண்டு. ஓடிப் போனாலும் அங்கும் நமக்கு முன்னால் டென்ஷன் நின்று கொண்டு காத்திருக்கும். அப்படியானால் என்ன தான் வழி என்றால் அதற்கு மாமருந்து தியானம் தான்.

தியானத்தில் பல நூற்றுக் கணக்கான முறைகள் இருக்கின்றன. எல்லாமே உயர்ந்தவை தான் என்றாலும் பெரும்பாலான தியானங்கள் ஓரிடத்தில் அமைதியாக அமர்வதில் இருந்து ஆரம்பிக்கின்றன. அப்படிப்பட்ட தியானங்கள் பலருக்கு கைகூடுவதில்லை. சிலரால் சில நிமிடங்கள் சேர்ந்தாற் போல அமர்ந்திருக்க முடிவதில்லை. முடிந்தவர்களிலும் சிலர் அப்படியே உறங்கி விடுவதும் உண்டு.

அவர்களுக்கெல்லாம் இந்த நடை தியானம் மிகவும் பயன்படும். இதை முதலில் உருவாக்கியவர் திச் நாட் ஹான் என்கிற வியட்நாமிய புத்தத் துறவி. பின்னர் அந்த நடை தியானம் சில கூட்டல் கழித்தல்களுடன் பலரால் பல அவதாரங்கள் எடுத்தது. அதில் சிலவற்றின் அம்சங்களைக் கலந்து நடை தியானம் ஒன்றைப் பயன்படுத்திப் பயன் பெற்றவன் நான். எனவே இதைத் தொடர்ந்து 21 நாட்கள் செய்ய முடிந்தால் கண்டிப்பாக நீங்கள் பெரும் மாற்றத்தை உங்களிடத்தில் காண்பீர்கள் என்பதை நான் உறுதியாகக் கூற முடியும்.

இது மிகவும் எளிமையானது. நடை தியானம் செய்யும் முறை இதோ...

1) முதலில் அதிக நெரிசலோ, கூட்டமோ இல்லாத அமைதியான பாதை ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். எவ்வளவுக்கெவ்வளவு வாகன, மக்கள் போக்குவரத்து குறைவாக இருக்கிறதோ அந்தப் பாதை சிறந்தது.

2) காலை அல்லது மாலை அல்லது இரவு நேரங்கள் உத்தமம். ஆனால் தேர்ந்தெடுத்த பின் தொடர்ந்து அதே வேளையில் நடை தியானத்தை தினமும் செய்வது நல்லது.

3) நடக்கையில் கூட ஒருவர் இருப்பதைத் தியானம் கை கூடும் வரை தவிர்ப்பது நல்லது. செல் போன் இருந்தால் அதை ஆ·ப் செய்து விடுங்கள்.

4) நடக்க ஆரம்பிக்கும் முன் சிறிது அமைதியாக நில்லுங்கள். முதலில் உங்கள் உடலுடன் தொடர்பு கொள்ளுங்கள். இயந்திரத்தனமாக வாழ ஆரம்பித்து விட்ட நாம் பெரும்பாலான நேரங்களில் நம் உடலின் சின்னச் சின்ன உணர்வுகளைக் உணர்வதில்லை. மூச்சை மூக்கு வழியாக ஆழமாக உள்ளிழுத்து மெள்ள வெளிவிடுங்கள். மூச்சுக் காற்று உங்கள் உடலில் பயணம் செய்வதை உணருங்கள். காலடியில் செருப்பின் ஸ்பரிசம், வெளியே வீசும் காற்று/வெயில்/சீதோஷ்ணம் உங்கள் உடலைத் தொடும் விதம் போன்றவற்றை கண்களை மூடிக் கொண்டு அனுபவியுங்கள்.

5) மூன்று முறை முன்பு சொன்னது போல் மூச்சு விட்டு விட்டு நடக்க ஆரம்பியுங்கள். நிதானமாக நடக்க ஆரம்பித்து பின் இயல்பாக சீராக ஒரே வேகத்தில் நடந்து செல்லுங்கள். மூச்சையும் இயல்பாக விட்டால் போதும். ஆனால் உங்கள் கவனம் எல்லாம் நீங்கள் விடும் மூச்சில் இருக்கட்டும். நடக்க நடக்க உங்கள் மூச்சு தானாக ஆழப்படும்.

6) நடக்கையில் உங்கள் மூச்சில் மட்டுமே உங்கள் கவனம் இருக்கட்டும். மனம் ஆயிரத்தெட்டு விஷயங்களை அவசரமாக உங்களுக்குச் சொல்ல ஆசைப்படும். அதற்கு இடம் கொடுக்காதீர்கள். மனம் மூச்சில் இருந்து வேறு விஷயங்களுக்கு சஞ்சரிக்கும் போது அமைதியாக அதை மறுபடி மூச்சுக்கே கொண்டு வாருங்கள். திரும்பத் திரும்ப அது அலையும். சலிக்காமல் அதை உங்கள் மூச்சுக்கே கொண்டு வாருங்கள். சிறிது சிறிதாக மனம் தாவும் வேகம் குறைந்து போகும். மனம் அமைதியடைய ஆரம்பிக்கும்.

7) நீங்கள் சீராக மூச்சு விட்டபடி தாளலயத்தோடு அடியெடுத்து வைத்து நடக்க ஆரம்பித்தவுடன் பிரபஞ்சத்தின் எல்லையற்ற சக்திகளை மூச்சுக் காற்றோடு அமைதியாக உங்களுக்குள் இழுத்துக் கொள்வதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கும் நோய்க்கிருமிகளையும், டென்ஷனையும், பலவீனங்களையும் வெளிமூச்சு வழியாக வெளியே விடுவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

8) சுமார் பதினைந்து நிமிடங்களாவது இப்படிக் கற்பனையோடு மூச்சு விட்டு நடந்தீர்களானால் சிறிது சிறிதாக உங்களுக்குள் அமைதியும் சக்தியும் பெருகுவதை நீங்கள் உணர்வீர்கள்.

9) நீங்கள் உங்கள் நடை தியானத்தின் முடிவுக்கு வரும் போது மறுபடி உங்கள் நடையின் வேகத்தைக் குறைத்துக் கொண்டே வந்து நிறுத்துங்கள்.

அவ்வளவு தான். இதைத் தினந்தோறும் செய்ய அரை மணி நேரத்திற்கு மேல் நமக்குத் தேவையில்லை. ஆனால் தொடர்ந்து செய்தால் மன அமைதி, உடல் நலம் இரண்டிலும் நல்ல முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.

நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாமே...

நம்ப முடியாத உண்மைகள்...


தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது...


தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.

இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண் .

இதன் விளக்கம் : இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்] சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு
ஓங்குயிர் தெற்கு
மத்திமம் மேற்கு
மரணம் வடக்கு

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.

தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.

மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.

வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.

மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் (பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும்.

குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.

இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும்.

இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும்.

மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.

இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும்.

இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.

இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.

சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை நாமும் பின்பற்றி பயன் பெருவோம்...

பாஜக எச்ச. ராஜா சர்மா வும் மாட்டு அரசியலும்...


பொது அறிவு  அரசியல் வரலாறு போன்ற ஏதும் அறியாதவர் பாஜக வின் ஹெச் ராஜா ஆனால் தனக்கு எல்லாம் தெரிந்தது போல் நடிப்பவர் அவரின் எதிர்மறை கருத்து ஊடகங்களின் டி ஆர் பி யை உயர்த்தும் என்பதால் ஊடகங்களும் அவரை அழைத்து அவரின் உளரல்களை ஒளிபரப்புகிறது...

ஊடகங்கள் தங்களை மாற்றிக் கொள்ளுமா என்பது கேள்விக்குறியே ஆனால் ஹெச் ராஜா போன்ற ஏதும் அறியாதவர்களை ஊக்கப்படுத்தும் செயலை ஊடகங்கள் பரிசீலனை செய்வது நல்லது ..

அசைவம் சாப்பிடுபவர்கள் இந்துக்களே அல்ல என குறிப்பிட்டிருக்கும் ஹெச் ராஜாவுக்கு விவேகானந்தரின் கருத்தை சமர்பிக்கலாம்...

ராணுவ வீரர்கள் உயிரிழப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்காததால் பிரதமர் மோடிக்கு வளையல் அனுப்பும் போராட்டம் வரும் 8ம் தேதி நடத்தப்படும் - அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா...


மண் வாசனை கண்டு பிடித்ததும் தமிழனே...


1960ல் ஆஸ்த்திரேலியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் மண்வாசனைக்கான (Earthy Smell) காரணத்தை 1000 ஆண்டுகளுக்கு முன்னரே பாடிய சேக்கிழார் (Botany science)...

நன்கு மழை பெய்வதற்கு முன் நம்மால் மண்வாசனையை நன்றாக உணர முடியும். அந்த வாசனை மண்ணில் வந்துக்கொண்டிருக்கிறது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் அது தவறு.

மரங்களில் பூக்கும் பூக்கள் வெளியிடும் நறுமன எண்ணையின் கலவைதான் அந்த வாசனை. இதை என்ன அழகாக சேக்கிழார் உவமையுடன் கூறுகிரார்.

நனைமருவும் சினை பொதுளி
நறுவிரைசூழ் செறிதளிரில்
நினகரமண் டலம் வருடும்
செழுந்தருவின் குலம்பெருகிக்
கனம் மருவி அசைந்தலையக்
களிவண்டு புடைசூழப்
புனல் மழையோ மது மழையோ
பொழிவு ஒழியா பூஞ்சோலை.

பெரிய புராணம்; திருநாளைப் போவார் நாயணார் புராணம்: 1048.

பொருள்: மலரும் அரும்புகளின் நறுமனம் சூரிய மண்டலத்தை வருட, செழுமையான மரங்கள் வானுயர்ந்து மேகங்களை தழுவ, தேன் உண்ணும் வண்டுகள் யாவும் ரீங்காரமிட பெய்யும் மழை தேன் மழையோ, மது மழையோ என்று சுவைத்திட பூஞ்சோலைகள் எங்கும் பூத்துக் குலுங்குகிறது.

அறிவியல்: சில மரங்கள் அதிகம் இருக்கும் இடத்தில்தான் மழை வளம் அதிகம் இருக்கும். அது எத்தகைய மரங்கள்? எனில் அதிக நறுமனத்தை தரும் பூக்களுடைய மரங்கள் இருக்கும் இடம். அதாவது புங்கை, சந்தனம், ஆலம், போன்றவை. இவ்வகையான மரங்கள் ஒரு வகையான நருமன எண்ணெயை (petrichor) வெளிவிடும். அந்த எண்ணெய் மழை பெய்யும் முன் வரும் நீர்த்தன்மையுள்ள காற்றில் கலந்து மண் வாசனையாக வெளிப்படுகிறது. இந்த வாசனையானது காற்றில் பயனிப்பதால் நெடு தூரத்திற்க்கு பயணிக்க வல்லது.

ஆதலால் மழை வளத்தை பெறுகும் இவ்வகையான மரங்களை வீதிகள் தோறும் வளர்ப்போம். மழை வளத்தை பெறுவோம்....

அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்...


லேசான சிவப்பு நிறத்தில், சற்று பளபளப்பாக இருக்கும் கைவிரல் நகங்களில் ஒரு சிறு வளர்பிறை வடிவம் இருந்தால் உடலில் நல்ல ரத்த ஓட்டத்தைக் குறிக்கும்.

நகங்களில் சொத்தை விழுந்து கறுத்து காணப்பட்டால் உடலுக்கு போதிய ஊட்டச் சத்துகள் கிடைக்கவில்லை என்று பொருள்.

நகங்கள் மிகவும் சிவந்து காணப்பட்டால், உடலின் ரத்த அளவு அதிகம் என்பதைக் காட்டுகிறது.

விரல் நகங்கள் சற்றே நீல நிறமாக இருந்தால் இதயம் பலவீனமாக இருப்பதாக அர்த்தம்.

விரல் நகங்கள் சற்று மஞ்சள் நிறத்தில் இருந்தால் ரத்தத்தில் நிகோடின் விஷம் கலந்திருக்கிறது என்று பொருள்.

கைவிரல் நகங்கள் உப்பினாற்போல் இருந்தால் ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்புண்டு.

கைவிரல் நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், உடல் நலம் குன்றியிருப்பதற்கு அடையாளம்.

கைவிரல் நகங்களில் வரிகள் அதிகமாக இருந்தால், வாயுத் தொல்லை இருப்பதற்கான அடையாளம்...

இந்தித் திணிப்பை கடுமையாக எதிர்ப்போம் - திமுக ஸ்டாலின்...


இந்தில கவிதையே எழுதுன கனிமொழியை எதிர்ப்பீங்களா?

இந்தி பேசத் தெரியும்கிற ஒரே காரணத்துக்காக மத்திய அமைச்சரா ஆன தயாநிதி மாறனை எதிர்ப்பீங்களா?

பெரிய சல்மான்கான் மாதிரி இந்தியில பாட்டுப் பாடி ஓட்டுக் கேட்ட உங்க அப்பாவை எதிர்ப்பீங்களா??

இந்திக்கு அடிமையான குடும்பம் வீரவசனம் பேசலாமா?

ஏற்கனவே முதலீடு பண்ண 2 லட்சம் கோடி எங்க தெரியல...


கன்னட பலிஜா ஈ.வே. ராமசாமி நாயக்கர் எதிர்த்தது தமிழர்களாகிய பார்ப்பனரை மட்டும் தான்... பிராமணரை அல்ல...


தமிழரை தவிர்த்து மற்ற அனைவரும் பிராமணர் என அறிந்துக் கொள்க...

உங்களுக்கு உறுதியாக இறுதியாக ஒன்றைக் கூறுகிறேன்.

மறந்தும் உங்கள் வாயில் பிராமணன் என்று வரக் கூடாது. பார்ப்பான் என்று கூறுங்கள். கண்டிப்பாக பிராமணன் என்று கூறக் கூடாது - ஈ.வே.ரா (விடுதலை 30.06.1957)...

திராவிடம் அல்லது தென்னிந்தியம் - கால்டுவெல்...


திராவிடம் என்ற சொல்லை உருவாக்கிய கால்டுவெல் கூட அது எதைக் குறிக்கிறது என்பதில் உறுதியாக இல்லை.

அவர் எழுதிய நூலில் தலைப்பின் பாதியை பலரும் மறைக்கிறார்கள்.

அவர் எழுதிய நூல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் இல்லை,
திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பத்தின் ஒப்பிலக்கணம் என்பதே.

திராவிட என்ற சொல்லை அவர் எடுத்ததாகக் கூறும் அனைத்தும் வடமொழி தரவுகள்...

பாஜக மோடியின் தீவிரவாதமும்.. மாமா வேலை செய்யும் ஊடகமும்...


ஹிந்தியாவில் இந்துத்துவா தீவிரவாதம் பெருகியுள்ளதையும்.. மோடியின் தூண்டுதலின் பெயரில் தான் இந்துத்துவா தீவிரவாதம் நடைபெறுவதையும் சுட்டிகாட்டி ஐ.நா சபையில் அறிக்கை தாக்கல்...

ஒரு மாமா ஊடகம் கூட இதை வெளியிடவில்லை...

சாம்பிராணி எப்படி உருவாகிறது தெரியுமா?


பண்டைய காலம் முதல் மத வழிபாட்டிற்கும் மருத்துவ பயன்பாட்டிற்கும் சாம்பிராணி பயன்பட்டு வருகிறது. சாம்பிராணி எதில் இருந்து பெறப்படுகிறது என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா ?

மாவீரன் மகா அலெக்ஸான்டர் சிறு வயதில் தன்னுடைய ஆசிரியர் அரிஸ்ட்டாட்டில் இடம் கல்வி பயின்று கொண்டு இருக்கும் போது தன்னுடைய ஆசிரியருக்கு சாம்பிராணி தேவைப்பட்டதை உணர்ந்தார் பின்பு மாவீரனாக உலகை வெல்ல ஆரம்பித்த நேரத்தில் மேற்கத்திய நாடுகளின் படையெடுப்பின் போது மூட்டை மூட்டையாக சாம்பிராணியை தன்னுடைய ஆசிரியர் அரிஸ்ட்டாட்டிலுக்கு அனுப்பி வைத்தார்.

சாம்பிராணி ஆனது பாஸ்வெல்லியா செர்ராட்ட (Boswellia serrata) எனப்படும் தாவர குடும்பத்தை சேர்ந்த ஃபிரங்கின் சென்ஸ் (Frankincense) எனப்படும் மரத்திலிருந்து வடியும் பால் ஆகும்.

இது மிக மெதுவாக கடினமாகி ஒளிபுகும் தன்மையும் எளிதில் எரியும் தன்மையுடைய சாம்பிராணி ஆக மாறுகிறது.

இவையை எரித்தால் மிகுந்த மணத்தை பரப்பும் ஃபிரங்கின் சென்ஸ் (Frankincense) மரங்கள் மேற்கத்திய நாடுகள் மற்றும் இந்தியாவில் குஜராத், அஸ்ஸாம், ராஜஸ்தான், பீகார், ஒரிஸா, மற்றும் தமிழ்நாட்டில் அதிமாக காணப்படுகிறது.

தமிழ்நாட்டில் குறிப்பாக கல்வராயன், சேர்வராயன் மலைச்சரிவுகளில் 500 மீ – 700 மீ உயரத்தில் காணப்படுகிறது.

மரமானது உறுதியானது ஆனால் எளிதில் அறுக்கவும் , இழைக்கவும் முடியும் இவ்வகை மரங்கள் தீக்குச்சிகள் தயாரிக்க பெரிதும் பயன்படுகின்றன .

நவம்பர் மாதம் முதல் ஜூலை வரையிலான காலங்களில் பால் அதிகமாக வடியும் ஒரு மரத்திலிருந்து ஆண்டு ஒன்றிற்க்கு 1 கி.கி வரையில் சாம்பிராணி பெற முடியும்.

சாம்பிராணி மருத்துவ பயன்கள்..

ஃபிரங்கின் சென்ஸ் (Frankincense) மரத்திலிருந்து கோந்தும் பெறப்படுகிறது இவையும் சாம்பிராணி போலத்தான் கோந்தை நீருடன் சேர்த்து பெண்டோஸ் சர்கரைகள் தயாரிக்கப்படுகிறது.

இது இருமல், காமாலை, நாள்பட்ட புண்கள், சொறி, சிரங்கு , படர்தாமரை போன்றவற்றிற்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

சாம்பிராணியை ஆவியாக்கி போஸ்வெல்யா எண்ணை , டர்பெண்டைன் எண்ணை போல எண்ணை எடுக்கிறார்கள் இதிலிருந்து வார்னிஷ் தயாரிக்கப்படுகிறது.

சாம்பிராணி எண்ணை ஆனது சோப்பு தயாரித்தலிலும் பயன்படுகிறது...

பாஜக மோடிக்கு ஆதரவாக தமிழினத்தை அழிக்க துணை போகும் அதிமுக...


எதிர்காலத்தில் தமிழகத்தில் மருத்துவர்களின் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் அது ஆளும் அதிமுக அரசு மக்களுக்கு செய்யும் துரோகமே ஆகும் ...

நீட் தேர்வால் இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட போவது தமிழகம் மட்டுமே..


ஆண்டுக்கு 1000 மருத்துவர்களை நாம் இழப்போம்..

படம் : மரு. மாஸ்கிரேனஸ்

பாஜக தமிழிசை கலாட்டா...


ஆகாயத்தில் ஒரு ஒளி - 66...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தில் இன்று நாம் காணும் பகுதி  66-ம் பகுதியாகும்.

இந்த 66-ம் தீர்க்க தரிசனப் பகுதியானது சத்திய யுகத்தின் நிகழ்வுகள் இப்பூமியில் துவங்குவதற்கு முன் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளைப் பற்றி மக்களுக்கு எடுத்து கூறியது. அந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றாக நிகழும் காலம் தற்போது துவக்கத்தில் உள்ளது என்றும் ஒரு ஜுன் மாதமே அதன் வீரியம் அதிகமாக இருக்கும் என்று ஒரு குறிப்பை இங்கு தருகின்றது.

தீர்க்க தரிசனத்தில் 9-ம் தீர்க்க தரிசனம் நடைபெறும் காலத்தில் உலகத்தின் தென்பகுதி பெரும் மாற்றத்தை சந்திக்கும் என்றும், அதே சமயத்தில் உலகத்தின் வட பகுதி சிறிது, சிறிதாக அழியத் துவங்கும் என்று 66-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கு எடுத்துக் கூறுகிறது.

ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தில் 18-ம் தீர்க்கதரிசனப் பகுதி நடக்கும் காலத்தில் மத்திய தரைக்கடல் பகுதியில் பல வினோத சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கும் என்றும், உலக மக்கள் தீர்க்க தரிசனத்தின் மீது அதிக நம்பிக்கை கொள்வார்கள் என்று 66-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.


தீர்க்க தரிசனத்தில் 21-ம் தீர்க்க தரிசனக் குறிப்புகள் துவங்கி நடந்து கொண்டுயிருக்கும் சமயத்தில் இந்திய தேசத்தில் பல முக்கிய நிகழ்வுகளும், ஆன்மீக இறை அதிசயங்களும் மிக, மிக அதிகமாக நடக்கும் என்றும், இந்திய தரைவழிமார்கத்தில் ஒரு புதிய புரட்சி ஏற்பட்டு பல நாடுகளுக்கு தரைவழி போக்குவரத்து ஏற்படக் கூடும் என்று 66-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.


நமது வருங்கால தீர்க்க தரிசனத்தில் குறிப்பிட்ட குறிப்புகளின்படி உலக நிகழ்வுகள் நடந்து கொண்டுயிருக்கும் என்றும், அதே சமயத்தில் உக்ரைன் நாட்டில் ஒரு மகா பாதகச் செயல் அரங்கேறிக் கொண்டியிருக்கும் என்றும், இதனால் அந்நாடு இறையின் கோபத்திற்கு ஆளாகி தீக்கிரையாக்கும் ஒரு சம்பவம் நடைபெறும் என்றும், இது 33-வது தீர்க்க தரிசனப் பகுதி நடைபெறும் சமயத்தில் நிகழும் என்று 66-ம் தீர்க்க தரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

உலக அரசியல் மாற்றங்கள் நமது தீர்க்க தரிசனக் குறிப்புகள் நடைபெறும் சமயத்தில் ஏற்படும் என்றும், இரஷ்யா, அமெரிக்கா, தென் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்றும், இப்புரட்சியானது ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தில் 40-வது தீர்க்க தரிசனப் பகுதி நடைபெறும் சமயத்தில் நடக்கும் என்று 66-ம் தீர்க்க தரிசனப் பகுதி ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

உலகத்திற்கு இது போதாத காலமாக இக்காலம் இருக்கும் என்றும், ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தில் 50-வது தீர்க்க தரிசனப் பகுதி நடைபெறும் சமயத்தில் இந்த போதாத காலம் துவக்கம் பெறும் என்றும், இது 48 நாட்களுக்கு உலகம் ஸதம்பித்து நிற்கும் அளவிற்கு பல சம்பவங்களின் தொகுப்பாக இருக்கும் என்று 66-ம் தீர்க்க தரிசனம் ஒரு எச்சரிக்கை குறிப்பை மக்களுக்கு எடுத்துக் கூறுகிறது.


உலகம் தெய்வத்தின் கட்டுபாட்டுக்குள் உள்ளது என்றும், இனி இறைவனை நம்பினால் மட்டுமே மக்கள் சமுதாயம் இப்பூமியில் நீடித்து வாழ முடியும் என்று மக்கள் மனதில் ஒரு புதிய சிந்தனை துளிர்விடும் காலமாக 55-ம் தீர்க்க தரிசனக்குறிப்புகள் நடக்கும் காலம் அமையும் என்று 66-ம் தீர்க்கதரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அதே சமயத்தில் 60-வது தீர்க்க தரிசனக் குறிப்புகள் நடக்கும் கால கட்டத்தில் ஒரு வரலாறு காணாத மாற்றம் இப்பூமி எங்கும் நடந்து முடிந்திருக்கும் என்று 66-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை எடுத்துக் கூறுகின்றது.


61-லிருந்து 63-வரை ஆகாயத்தில் ஒரு ஒளி தீர்க்க தரிசனக் குறிப்புகள் நடக்கும் சமயத்தில் பிரபஞ்சமே வியக்கும் அதிசயமாக இந்த பூமி எங்கும் ஒருவரின் அரசாட்சி ஏற்படும் என்றும், அவரே இவ்வுலகை ஆளும் அரசனாக போற்றப்படுவார் என்றும், சத்திய யுகத்தின் சுவடுகள் இப்பிரபஞ்சம் முழுவதும் பரவ துவங்கிவிடும் என்றும், 64, 65, 66 மூன்று தீர்க்க தரிசனங்கள் அதனை செம்மைபடுத்தும் நிகழ்வுகளாக அமையும் என்று 66-ம் தீர்க்க தரிசனம் தனது முடிவை இதன் வாயிலாக தெரிவிக்கின்றது.

இனி நிஜங்கள் மட்டுமே நிழல்களாக மக்களை தொடரும் என்றும், அவைகள் இறைவனை சார்ந்தே நிகழக்கூடும் என்றும், இனி இறைவனின் மெய் காப்பாளர்கள் இந்த உலகம் முழுவதும் தோன்றி வலம் வருவார்கள் என்றும், அவர்களே சத்திய யுகத்தின் பிரஜாதிபதிகள் என்று அழைக்கப்படுவார்கள் என்றும், இவர்களே உலகத்தின் காவலாளிகள் ஆவார்கள் என்று 66-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

யுகத்தின் யுகாதிபதி இந்த உலகத்தை ஆளும் காலம் தற்போது துவங்கி விட்டது என்றும், அதன் காலம் இக்காலமே என்று அறிந்து கொள்வதற்கு தீர்க்க தரிசனத்தின் நிகழ்வுகள் தற்போது துவங்கிட உள்ளதாக 66-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை மெய்பட கூறுகிறது...

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

ஹோமப்புகை நமக்கு மட்டுமல்ல.. சுற்றுப் புறத்துக்கே நல்லது...


நம் வீடுகளில் திருமணம், புதுமனைப் புகுவிழா, கோயில் கும்பாபிஷேகம், மழை, குழந்தைவரம், ஆரோக்கியம், செல்வவளம் போன்ற தேவைகளுக்காக யாகம் செய்வதைக் காண்கிறோம்.

அந்தக்காலத்தில், மன்னர்கள் இதை பெரும் பொருட்செலவில் செய்துள்ளனர்.
ரிஷிகள் காடுகளில் ஹோமம் நடத்தியுள்ளனர்.

ஒரு தொழிற் சாலை, வர்த்தக நிறுவனம் திறக்கப்படுறதென்றால் கணபதி ஹோமம் நடத்தப்படுகிறது.

இதற்கு ஆன்மிக காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், அறிவியல் காரணமே பிரதானம்.

மத்தியப்பிரதேச மாநிலம் போபால் விஷவாயு பிரச்னையின் போது, ஒரே ஒரு குடும்பம் மட்டும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தப்பித்தது. இதற்கு காரணம், அந்த குடும்பத்தில் அடிக்கடி ஹோமம் நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தது தான். இந்த தகவல் அப்போது பரபரப்பாக வெளி வந்தது.

ஹோமத்தின் போது வெளிப்படும் புகை, காற்றில் பரவியுள்ள நச்சுக்கிருமிகளை முற்றிலும் அழித்து விடும்.

யாகத்தில் இடும் நெய், அரிசி ஆகியவற்றால் ஏற்படும் ரசாயன மாற்றத்தால் உண்டாகும் வாயுக்கள் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, தலைவலி, குடல்புண் போன்ற வியாதிகளைப் போக்கும் சக்தி கொண்டது.

நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்தி ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

அந்தக் காலத்தில் யாகசாலை பூஜை முடிந்தபிறகு, அந்த இடத்தில் அமர்ந்து மூச்சுப்பயிற்சி, தியானம் செய்யும் வழக்கம் இருந்தது. இதன்மூலம் உடல்நலத்தை சிறப்பாகப் பேணினர்.

அந்தப் புகை பிடிச்சா தான் உடலுக்கு கேடு. ஹோமப்புகை நமக்கு மட்டுமல்ல.. சுற்றுப் புறத்துக்கே நல்லது...

இலுமினாட்டி யும் சக்திவாய்ந்த ஆறு துறைகளும்..


இலுமினாட்டிகள் கைப்பற்றியுள்ள முக்கிய ஆறு துறைகளையும் அதன் கீழ் இயங்கும் அமைப்புகளையும் பற்றி பார்ப்போம்..

வங்கி துறை :

International money center banks
central banks
International money funds
International bank of settlement
Multinational corporation & Foundation
Regional Federation
International Labour Union
etc.

இரகசிய குழுக்கள் (SECRET SOCIETIES GROUPS) :

Free masonry
Skull and bones
Grant Oriental lodge
Knight Templars
Royal Order of Berarpal
Ferrari De Zion
Isorius
etc.

அரசியல் குழுக்கள் (POLITICAL GROUPS) :

International Gourmet Leaders
United Nation
Trilateral Commission
CFR - Council of foreign Relationship
Club Of Rome
Aspens Institute
Phokiman Group
etc.

உளவுத்துறை (INTELLIGENCE GROUP) :

CIA
KGB
FBI
British Intelligence
Mafia Organized Crimes
Interpol
community party
Etc.

சமயம் (RELIGION) :

World Council Of Church
National Council Of Churches
World Parliament Of Religions
Vatican
Smom
New Age Groups
Liberal Protestant Unity Church
Unilateral Universal Church
Temple Of Understanding
etc.

கல்வி துறை (EDUCATION) :

UNESCO
World Peace Group
Plannitary Congress
World Federalists Association
World Constitution and Parliament Association
Environmental Groups
Lucy Trust
World Good Will
World Union
SNL Institute
Media Establishment
etc.

மற்றவை (OTHERS) :

ACI
Council Of Nine
Johnson Groups
Mothers Of Darkness
Federal Reserve Bank, USA
Johnson Security
Cosmo Club
CFR
OTO
Processed Church
Temple Of Power
All Security Forces
Central Education Board
Illuminocorp
IMF
Bank Of London
Newark  Stock Exchange
Federal Emergency Management Agency
World Cort
WHO
African Union
United Nation
etc.

இந்தியாவில் இவர்களது நிறுவனங்களின் உற்பத்தி பொருள்கள் பற்றி பார்ப்போம்.  அடுத்த பதிவுகளில்...

திருட்டு திராவிடத்தை வீழ்த்துவோம்...


விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்...

திமுக வை மன்னிக்கவே மாட்டோம்...


தமிழர்கள் நாங்கள் கதறிக் கொண்டிருந்த போது நீங்கள் சொக்கத்தங்கம் சோனியாவிற்கு பாலீஸ் போட்டுக் கொண்டிருந்ததை நாங்கள் இன்னும் மறந்து விடவில்லை கருணா அவர்களே..

உங்கள் சாம்ராஜ்யம் மண்ணோடு மண்ணாக மக்கும்.. நீங்கள் பார்ப்பீர்கள்..

குடிபோதையில் கணவனை துரத்தி துரத்தி 3 முறை துப்பாக்கியால் சுட்ட மனைவி, பஸ்சில் ஏறி தப்பித்த கணவர்...



போலிசாரின் விசாரனையில் கணவன் மனைவி இருவரும் குடித்திருந்ததாக தெரியவந்துள்ளது, தங்களது மகளின் திருமணம் குறித்து வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த மனைவி தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காருக்குள் வைத்து தனது கணவரை சுட்டுள்ளார். அவர் தப்பித்து பஸ்சில் ஏற முயன்றுள்ளார் அவரை துரத்தி சென்று சுட முயன்றுள்ளார் மனைவி. சக பயணிகள் அதை தடுத்துள்ளனர்.

போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்..

பெங்களுரில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

ஆகாயத்தில் ஒரு ஒளி - 65...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தில் இன்று நாம் அறிந்து கொள்ளும் பகுதி 65-ம் தீர்க்க தரிசனப் பகுதியாகும். பல முக்கிய குறிப்புகள் இப்பகுதியில் இடம் பெற உள்ளன.

அதாவது தென்னிந்திய திருச்சபை எனும் பெயர் கொண்ட ஒரு அமைப்பில் வியப்பூட்டும் ஒரு அதிசயம் நடக்க உள்ளதாகவும், அங்கு மக்களின் பிரவேசம் அதிகமாக காணப்படும் என்றும், அங்கு நடக்கும் சபை கூட்டத்தில் இந்த ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற தீர்க்க தரிசனத்தின் மீது விவாதங்கள் நடைபெறும் என்று 65-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.


சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் கிருஸ்துவ அமைப்பு ஒன்று மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடும் என்றும், அதனை உலக கிருஸ்துவ அமைப்பு கண்டிக்கும் என்றும், அந்த நேரத்தில் தேவாலயம் ஒன்றில் இயேசுவின் அற்புதம் ஒன்று நிகழக்கூடும் என்றும், இதுவே ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தில் இடம்பெறும் தீர்க்க தரிசனக் குறிப்புகள் ஒவ்வொன்றாக நடைபெறுவதற்கான நல்ல அறிகுறிகள் என்று 64-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகின்றது.


இந்திய தேசத்திற்கு புனிதர் ஒருவரின் வருகை தற்போது நடைபெறும் என்றும், அது நடைபெறும் சமயத்தில் வாடிகன் நகரில் ஒரு மகா அதிசய நிகழ்வு நடைபெறும் என்றும், இது கூட தீர்க்க தரிசனத்தின் உண்மைகள் இப்பூமியின் மீது நிகழும் காலமாக மக்கள் எடுத்துக் கொண்டு, ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனம் கூறும் உண்மைகளை கண்டு மன மாற்றத்தை மக்கள் அடைய வேண்டும் என்று 65-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை எடுத்து தருகின்றது. அதே சமயத்தில் இவ்வுலகில் ஷாவ்லின் என்ற பெயர் புனித பெயராக இவ்வுலகில் வலம் வர உள்ளதாக 65-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை மெய்பட கூறுகிறது. மக்கள் மனதில் பல மாற்றங்கள் ஏற்படும் காலமாக ஒரு ஜுன் மாதம் அமைய உள்ளதாக 65-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

மும்பை நினைவில் கொள்ள வேண்டிய இடம் என்றும், அங்கு நடைபெறும் ஒரு சம்பவம் உலகையே திரும்பி பார்க்கச் செய்யும் என்றும், இது நடக்கும் காலம் மிக, மிக அருகில் இருப்பதாக 65-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

பன்னாட்டு வணிகம் இனி இந்தியாவில் சிறப்பாக நடைபெறும் என்றும், அதே சமயத்தில் இந்திய தயாரிப்புகளின் மேல் உலகம் மக்கள் அதிகமாக விரும்புவார்கள் என்றும், இதனால் இந்திய பாரம்பரிய சந்தைப் பொருட்களை அதிகமாக உற்பத்தி செய்து உலக வர்த்தகத்தில் இந்தியா சிறப்பான ஒரு இடத்தை அடையும் என்றும், அது தற்போது நடைபெறும் இந்திய அரசின் முயற்சியே காரணமாக அமையும் என்று 65-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.


தேசத்தந்தை மகாத்மா காந்தி வாழ்ந்த தேசத்தில் ஒரு அரிய அகழ்வராய்ச்சி தற்போது துவங்கும் என்றும், அங்கு பல வரலாற்று சரித்திர சான்றுகள் கிடைக்கப் பெறும் என்றும், அதில் அன்னை ஆதிசக்தியின் வருகையைப் பற்றி குறிப்புகள் காணப்படும் என்று 65-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


ஷாவ்லின் புத்த மடாலயம் ஒன்று தற்போது இயற்கை சீற்றத்தால் தரைமட்டம் ஆகிடப் போகிறது என்றும், அதன் வரலாற்று பாரம்பரிய கலைகளின் உண்மைகளை இவ்வுலகம் இப்பொழுது அரிய முற்படும் என்றும், அதன் அடுத்த பரிணாம வளர்ச்சி இந்திய தேசத்தில் அதுவும் தமிழகத்தில் மட்டுமே உருவாகும் என்றும், அதன்பின்னர் தமிழகத்திலிருந்து உலகம் முழுவதும் ஷாவ்லின் பாரம்பரியம் பரவும் என்று 65-ம் தீர்க்க தரிசனம் ஒரு அரிய குறிப்பை இங்கு எடுத்துக் கூறுகின்றது.


இந்திய முன்னோர்கள் வாழ்ந்த பழமை வாய்ந்த ஒரு குகை இமயமலையில் தற்போது கண்டறியப்படும் என்றும், அங்கு தமிழர்களின் வரலாற்று சிற்பங்கள் கண்டெடுக்கப்படும் என்றும், அதில் காணப்படும் ஒரு சிற்பம் அடுத்த தலைமுறையினரை சுட்டிக் காட்டுவதாக அமையும் என்று 65-ம் தீர்க் கதரிசனம் மெய்பட ஒரு குறிப்பை எடுத்து கூறுகின்றது...

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

தமிழினமே விழித்தெழு...


அமெரிக்காவில் இருக்கும் நண்பர்களோ அல்லது உறவினர்களோ சொல்வதை கேட்டிருப்பீர்கள், அங்கு மருத்துவத்திற்கு ஆகும் செலவு எவ்வளவு என்று...

சாதாரண அறுவை சிகிச்சைகளுக்கே 8 முதல் 10 லட்சங்கள் ஆகும். பிரசவ செலவுகளுக்கு எவ்வளவு ஆகும் என்று கேட்டுப் பாருங்கள். அங்கு முறையான மருத்துவக்காப்பீடு எடுக்கவில்லையெனில் சில சமயங்களில் மருத்துவ செலவுகளுக்காக ஒட்டுமொத்த வாழ்நாள் சேமிப்பையும் இழக்க நேரிடும்.

இவற்றை எல்லாம் விடுங்கள், உங்களிடம் பணமே இருந்தாலும் ஒரு மருத்துவ வல்லுனரிடம் அப்பாயின்டமென்ட் வாங்க மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டும்.

அங்கு காப்பீட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் தான் ஒட்டுமொத்த மருத்துவதுறையும் உள்ளது.


சென்னையில் 300 ரூபாய் கட்டணத்தில் ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணரை அதே நாளில் பார்க்க முடியும். கொஞ்சம் காத்திருப்பதாக இருந்தால் அரசு மருத்துவமனையில் இலவசமாகவே பார்க்க முடியும்.

இனி நீட் என்ற பெயரில் ஏழை, நடுத்தர மாணவர்கள் மருத்துவ துறையில் நுழைவதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்துவார்கள்.

கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் வேலை செய்பவர்களுக்கு மருத்துவ மேல் படிப்பிற்கான இட ஒதுக்கீட்டை நிறுத்துவதின் மூலம் மருத்துவர்கள் அரசு வேலைகளில் சேர்வதையே நிறுத்துவார்கள்.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு மருத்துவ படிப்பிற்கான அனுமதி அளிக்கப்படும்.

மருத்துவக்காப்பீடு இல்லாமல் இங்கும் மருத்துவம் பார்க்கவே முடியாத நிலைமைக்கு தள்ளப்படுவோம்.

ஆம் நாம் அமெரிக்கா போல் வளரப்போகிறோம். இந்தியா வல்லரசாக நீட் தேர்வை ஆதரித்து நாம் மீண்டும் பிச்சைகாரர்களாவோம்...

இலுமினாட்டி குறியீடுகள் 2 : முக்கோண பாகைமாணி...



இலுமினாட்டிகளின் மற்றுமொரு குறியீட்டை பார்க்கவிருக்கிறோம் இன்று.

முதல் குறியீடு ஒற்றை கண் மற்றும் நிறைவடையா முக்கோணம் அடிப்பாகம் கொண்ட பிரமீடு.

அடுத்த அடையாளம் பாகைமாணி மற்றும் ஸ்கொயர்.

இது ப்பிரிமேசன் என்ற அமைப்பின் குறியீடாக விளங்குகிறது. இது ஓர் இலுமினாட்டிகளின் அடிமை அமைப்பு.

இதில் ஸ்காட்டிஸ் ரைட்ஸ் Scottish rights மட்டுமே உண்மையான அமைப்பு மற்றவை அனைத்தும் போலியானவை. மற்ற அமைப்புகளில் உண்மையான சடங்குகள் நிகழ்த்தப்படுவதும் இல்லை. இரகசிய அறிவும் இல்லை.

ஒரு விடயம் தெரியுமா? தமிழ்நாட்டில் கூட ஃபிரிமேசன் அமைப்பு உள்ளது. இவர்கள் பழங்கால அறிவியல் ஆளர்கள். அறிவுஜீவிகள் கெட்டவர்கள்.

நான் இப்போது சொல்வது உண்மையான பழமைவாய்ந்த ஃப்ரி மேசன் அமைப்பு பற்றி.

இவர்களின் அடையாளமும் சபையும் செயல்களும் கைகுலுக்கள்களும் இரகசியமானவை.

பிரபலங்களும் அதிகாரிகளும் செல்வந்தர்களும் அரசியல்வாதிகளும் அங்கத்தினர்களாக இருப்பார்கள் இவர்கள் மேல்மட்டத்திலிருந்து இலுமினாாட்டிகளால் இயக்கப்படுவர்.

இவர்களின் அடையாளத்தை நீங்கள் பல நேரங்களில் பார்த்திருப்பீர்கள்.

இவர்கள் சாத்தான் லூசிபர் வழிபாட்டு காரர்கள் என நம்பப்படுகிறது. ஆனால் அதுவும் சரியான புரிதல் இல்லை.

நீங்கள் தமிழை அறிந்தாலே சாத்தானையும் லூசிபரையும் புரிந்து கொள்ள முடியும். ஏன்?.

பிறகு சொல்றேன்...

கம்யூனிசம் என்றால் என்ன.?


இங்கே பலரும் கம்யூனிசத்தை ஏதோ உயர்ந்த கொள்கை போல பேசுகிறார்கள்..

கம்யூனிசம் என்பது அடிப்படையில் முதலாளிகள் செய்யும் இயற்கை அழிவுகளைப் பற்றி கவலைப்படாமல்
அவர்களின் லாபத்தில் பங்கு கேட்கும் கொள்கையே ஆகும்.

ஐரோப்பாவில் 1800களுக்குப் பிறகு மனிதர்கள் மூலம் செய்யும் வேலையை இயந்திரங்கள் மூலம் செய்விக்கும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன.

தொழிலாளர்களின் முக்கியத்துவம் குறைந்து அவர்கள் நசுக்கப்பட்டனர்.

உற்பத்தி பல மடங்கு அதிகமாகிறது.   இந்த தொழிற்சாலைகளுக்கு தீனி போடவே கடல்கடந்து நாடுகளைப் பிடித்து வளங்களை சுரண்டி கொண்டு வந்து தொழிற்சாலையில் அதனை பயன்பாட்டுப் பொருளாக மாற்றி மீண்டும் கடல்கடந்து அதே  நாட்டில் கொண்டு போய் விற்று நன்கு கொழுத்தன ஐரோப்பிய நாடுகள்.

அப்போது ஐரோப்பாவின் காற்று நீர் நிலம் என எல்லாமே மாசடைந்து போனது.

இதில் ஏற்பட்ட போட்டியே உலகப் போருக்கு வழிவகுத்தது.

இந்த காலகட்டத்தில் உருவானதே கம்யூனிசம்.

அவர்கள் மாசடைந்த இயற்கைக்காகப் போராடவில்லை.

லாபத்தில் பங்கு கேட்டுத்தான் போராடினர்.

இதற்கு வெளிமுலாம் பூசவே பல்வேறு பிரச்சனைகளை உள்வாங்கி தொடர்புபடுத்தி 'உலகப் போராட்டம் அனைத்தும் வர்க்கப் போராட்டமே' என்று ஒற்றைவரியில் முடித்தனர்.

பேராசான் மார்க்ஸ் கூறிய முதன்மை முழக்கம் 'உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்' என்பது இல்லை,
'உலக நாடுகளின் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்' என்பதே.

அதாவது தொழிலாளர்களுக்குள் சாதி மத பேதமெல்லாம் கிடையாது.

ஆனால் நாடு என்னும் வேறுபாடு உள்ளது என மார்க்ஸ் கூறுகிறார்.

நாடு என்பதற்கு பொதுவான மொழி பொதுவான உணர்ச்சி கொண்ட மக்கள் தனிநாடாக இருக்க வேண்டும் என வரையறை செய்கிறார் மார்க்ஸ்.

இங்கே சுரண்டலை எதிர்த்து போராடும் கம்யூனிஸ்டுகளை நான்,தாங்கள் சுரண்ட வைத்துள்ளதை வேறொருவன் சுரண்டுவதை எதிர்ப்பதாகவே பார்க்கிறேன்.

ஆக கம்யூனிசம் தமிழர்களுக்கான தீர்வு அல்ல என்பது என் கருத்து...

அப்போ சும்மா இருந்துட்டு இப்போ கூவுறானுங்க...


தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான்...


முக்கடலும் முத்தமிழும் மூவேந்தர் பரம்பரையும் கோட்டையிலே வில், புலி, மீன் கொடிகள் நாட்டி செந்தமிழ் தாய் சீரிமை திறம் விளங்க சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியனும் அவன் அமைத்த தமிழ் சங்கத்திலே எழுத்தாணி ஏந்தி தலைமைப்புலவனாய் தமிழாய்ந்த புலவர்களில் ஒருவர் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் ஆவார்.

அதன்கோட்டின் அமைவிடம்..

தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் அவர்கள் வாழ்ந்த வரலாற்று சிறப்புமிக்க இடம்தான் அதங்கோடு. இவ்விடம் குமரி மாவட்டத்தின் மேற்கு திசையில் வள்ளுவன்கோடு என அழைக்கப்பட்டு பின்னர் விளவங்கோடு என மருவிய விளவங்கோடு தாலுக்காவில் முன்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் மெதுகும்மல் ஊராட்சியில் அமைந்துள்ளது.

அதன்கோட்டில் சூரியமுக்கு என்னும் இடமுண்டு. இவ்விடத்தின் அருகில் பக்றுளி ஆறு என்று சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட குழித்துறை தாமிரபரணி ஆறு செல்கிறது. தொன்றுதொட்டே அதங்கோடு ஒரு ஆற்றங்கரை நாகரீகப் பகுதியாக இருந்து வந்துள்ளது. இந்த ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம்.

அதங்கோடு சூரியமுக்கில் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் அவர்களால் நடத்தப்பட்டு வந்த தமிழ் சங்கம் தண்ணீர் பெருக்கால் அழிக்கப்பட்ட காரணத்தினால் அவரும் அவரோடு சார்ந்த தமிழ்ப்புலவர்களும் பாண்டிய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்த கபாடபுரத்தில் நடந்த தமிழ் சங்கத்தில் இணைந்தார்கள். கபாடபுர தமிழ்ச்சங்கத்தை கும்பவம்பக் குறுமுனி என்று அழைக்கப்பட்ட அகத்தியர் தலைமைதாங்கி நடத்தி வந்தார். அவருடன் கீழ்க்கண்ட பன்னிரு பெரும் சீடர்களாயினர்.

தொல்காப்பியர்
அதங்கோட்டாசான்
துராளிங்கன்
செம்புத்செய்
வையாபிகன்
வாய்ப்பியன்
பணம்பாரன்
கலாரம்பன்
அவினயன்
காக்கை பாடினியன்
நட்டதன்
வாமணன்

இவர்களை அகத்தியரின் பன்னிருமாணாக்கர் என அழைக்கிறோம்.'

கபாடபுரத்தில் அகத்தியர் தலைமையில் நடந்து வந்த தமிழ் சங்கத்திற்கு, முதல் தமிழ் இலக்கண நூலாக இருந்தது அகத்தியம் என்னும் இலக்கண நூல் ஆகும்.

அகத்தியம் கால வெள்ளத்தால் அழிந்த காரணத்தால் அதற்கு வழி நூலக ஒரு இலக்கண நூலை இயற்ற தனது தலை மாணாக்கரான தொல்காப்பியரை அழைத்துச் சொன்னார் அகத்தியர்.

இந்நிலையில் தொல்காப்பியர் தொல்காப்பியத்தை இயற்றினார். மதுரை தமிழ்ச்சங்கத்தில் தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியம் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் தலைமையில் அரங்கேற்றப்பட்டது என்பது வரலாறு.

தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியத்தில் எழுத்து, சொல்,vபொருள் ஆகிய மூன்று அதிகாரங்களிலும் எக்குற்றமும் இல்லை என அறுதி இட்டு கூறினார் அதங்கோட்டாசான்.

பணம்பாரரின் கருத்து..

தொல்கபியப் பாயிரத்திற்கு உரை எழுதிய பணம்பாரன் என்னும் தமிழ்ப் புலவர் தனது சிறப்புப் பாயிரத்தில்...

நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அரங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதன்கோட்டாசாற்கு அகில் தபத்தெரிந்து.

இதன் விளக்கம் யாதெனில்..

மாற்றானது நிலத்தை தன் கீழ் வாழ்வார்க்கு கொண்டு கொடுக்கும் மன்னன் மாகீர்த்தியது அவையின் கண் நான்கு மறைகளையும் அதாவது ரிக், யஜூர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களையும் முற்றும் உணர்ந்த அதங்கோடு என்கின்ற ஊரின் ஆசான் அதங்கோட்டாசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது என விரிவாக எழுதிஉள்ளார்.

இளம்பூரணரின் கருத்து...

தொல்காப்பியம் எழுத்ததிகாரத்திற்கு உரைப்பாயிரம் எழுதிய இளம்பூரணம் என்னும் தமிழ்ப்புலவர் நான்கு மறைகளையும் முற்றும் உணர்ந்த அதங்கோடு என்கின்ற ஊரின் ஆசான் அதங்கோட்டாசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது என்று எழுதி உள்ளார்.

அடைமொழி இன்றி தனிமொழியாக அதங்கோடு என்கிற ஊர் திகழ்கிறது.அதனால் தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியத்தை அரங்கேற்றியவர் அதன்கோட்டில் பிறந்து தமிழ் ஆய்ந்த இடம் அதங்கோடு என உறுதி செய்யப்பட்டுள்ளது...

ஆகாயத்தில் ஒரு ஒளி - 64...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனப் பகுதியில் இன்று நாம் அறிந்து கொள்ளும் பகுதி 64-ம் தீர்க்க தரிசனப் பகுதியாகும். இப்பகுதியானது பல முக்கிய குறிப்புகளை கொண்ட தீர்க்க தரிசனங்களாகும்.

இறைவன் கூறும் கூற்றுகள் யாவும் மெய்படும் காலம் தற்போது உருவாகி விட்டது என்றும், இதற்கான அறிகுறிகளாக இவ்வுலகம் முழுவதும் பூமி அதிர்வுகள், எரிமலை குமுறும் சம்பவங்கள், ஆக்ரோஷமான மழைப்பொழிவு, கடல் சீற்றங்கள், சுனாமி பேரலைகள், திடீர் என்று ஏற்படும் பள்ளங்கள், கொடிய நோய்கள், பனிப்புயல் தாக்குதல்கள் போன்ற பல சம்பவங்கள் உலகம் முழுவதும் ஏற்படும் தருணம் இப்போது என்று 64-ம் தீர்க்க தரிசனங்கள் கூறுகின்றன.

காலத்தால் அழியாத காவியம் ஒன்று உருவாகும் இச்சமயத்தில் வான் மண்டலத்தில் பல விசித்திர சம்பவங்கள் தற்போது நிகழக்கூடும் என்றும், இதனால் தொலைதொடர்பு சாதனங்கள் சிறிது நாட்கள் முடங்கும் மோசமான சம்பவங்கள் தற்போது நிகழக்கூடும் என்று 64-ம் தீர்க்க தரிசனத்தில் உள்ள ஒரு முக்கிய குறிப்பு தெரிவிக்கின்றது.


ஜப்பான் நாட்டை ஆழிப்பேரலை தற்போது தாக்கும் அபாயம் உருவாகிட உள்ளதாகவும், இது பல நாடுகளுக்கு பரவும் அபாயம் உள்ளதாக 64-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கு எடுத்து காட்டுகின்றது.

முன்னாள் பாரதப் பிரதமர் ஒருவரின் மரணம் தற்போது இயற்கையான முறையில் நடைபெறும் என்றும், இதுவே தீர்க்க தரிசனங்கள் நடைபெறும் காலக்கட்டத்தின் ஆரம்பம் என  உலக மக்கள் கருத வேண்டும் என்று மற்றொரு குறிப்பை 64-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது.


இமயத்துள் இருக்கும் பல மர்மங்கள் இனி வெளி உலகத்திற்கு தெரிய வரும் என்றும், இமயத்துள் வாழ்ந்த ஒரு யோகியின் நடமாட்டத்தை இனி இந்திய மக்கள் மற்றுமின்றி உலக மக்களே அறியும்படியான பல சம்பவங்கள் இந்த பூமி முழுவதும் நடைபெற போவதாக 64-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

கடல் தேசத்து நாடுகள் தோறும் ஒரு துயரச் சம்பவம் தற்போது நடைபெற உள்ளதாகவும், வியட்நாம், சீனா, பர்மா போன்ற தேச எல்லைகளில் இனி பல பதற்றமான சூழ்நிலைகள் உருவாகிடப் போவதாக 64-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

உண்மை, கடவுள், ஞானி, யோகி, சாது போன்ற வார்த்தைகளில் உள்ள புனிதத்தை இனி இந்திய மக்கள் மட்டுமின்றி உலக மக்களும் உணரும்படியான பல ஆன்மீக விஷயங்கள் தற்போது மக்கள் மத்தியில் நடைபெறும் காலமாக இக்காலம் விளங்கிடப் போவதாக 64-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

தமிழர்  பெயருடைய ஒரு அமைப்பு பல தமிழ் மரபுகளைப் பற்றி ஆய்வுகளை மேற்கொள்ளும் என்றும், அந்த அமைப்பின் வாயிலாக முந்தைய 1000 வருடங்களுக்கு முன் இருந்த தமிழர்களின் தொன்மை வரலாற்றினை படம் பிடித்து காட்டும் என்றும், அச்சமயத்தில் தமிழக ஆராய்ச்சியில் பல உண்மைச் சம்பவங்கள் வெட்ட வெளிச்சத்திற்கு வரும் என்று 64-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

நன்மைகள் பலகோடி உருவாகும் சத்திய யுகத்தின் வரவு இப்பூமியில் தற்போது துவங்கும் காலம் ஆரம்பமாகிவிட்டது என்றும், இதனை ஏற்று வழிநடத்தும் அன்னை ஆதிசக்தியின் பங்கு 100 % வீதம் முழுமையாக இருக்கும் என்று 64-ம் தீர்க்க தரிசனம் கூறுகிறது.


ஜென் என்ற தத்துவக் கோட்பாடுகள் இனி உலகம் முழுவதும் விரைந்து பரவும் என்றும், இந்த ஜென் யோகம் உலக மக்களின் நோய்களை தீர்க்கும் ஒரு அற்புத கலையாக இவ்வுலகில் விளங்கிடும் என்று 64-ம் தீர்க்க தரிசனம் மெய்பட எடுத்துக் கூறுகிறது.


அன்னை ஸ்ரீ சமயபுரத்தாளின் பிரவேசம் தமிழக மக்களிடையே அதிகமாக காணப்படும் என்றும், இது உலக தமிழ் மக்களிடையே மிகுந்த வரவேற்பையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தும் என்று 64-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை மெய்பட கூறுகிறது.

அன்னை ஆதிசக்தியின் பிரவேசம் நிச்சயம் உள்ளது என்றும், அவரின் பிரவேசம் என்பது இந்திய எல்லையில் ஆரம்பித்து தமிழகத்தில் வந்து அமரும் ஒரு நிகழ்வு கூடிய விரைவில் நடக்கும் என்றும், அவரின் அற்புதமான விளையாட்டு ஒன்று தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் தற்போது துவங்கிட உள்ளதாக 64-ம் தீர்க்க தரினம் ஒரு முக்கிய குறிப்பை எடுத்துக் கூறுகின்றது...

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...