26/04/2017

எங்கங்க இந்த அதிமுக காரனுங்க கேட்டானுங்க...


கண்ட நாயெல்லாம் கருத்து சொல்லும்டா ஒழுங்கா இருங்கடான்னா... கேட்டாதான....

அடேய் தமிழ்நாட்டு பிஜேபி தலைவருங்களா நீங்க எல்லாம் இப்பதான்டா அதிகார போதையை அனுபவிக்கிறீங்க...


அதிமுக காரன் ரத்தத்திலேயே அது இருக்கு...   இன்னைக்கி பணிஞ்சி போறான்னு நினைக்காத... அவன் திரும்ப ஆப்ப சொருகும் போது உன்னோட உயிர் போய்கிட்டு இருக்கும்....  

குறிப்பு : இந்த பிஜேபி காரனுங்க என்னையே அதிமுகவுக்கு ஆதரவா மீமி போட வெச்சிட்டானுங்களே ராமா...


டிடிவி தினகரனை 5 நாளில் காவலில் வைக்க டெல்லி கோர்ட் அனுமதி...


புலன்கடந்த ஆற்றல் என்றால் என்ன?


நாம் புலன்களுக்கு எட்டாத காரியத்தை செய்யும் போது அதை நாம் சித்து என்றும் புலன்கடந்த ஆற்றல் என்றும் கூறுவோம்.

உதாரணமாக தண்ணீரில் நடப்பது, காற்றில் எழும்புவது, கண்ணை கட்டிக்கொண்டு படிப்பது, எங்கோ நடப்பதை இங்கிருந்தே பார்ப்பது, மனதை படிப்பது இப்படி பல உள்ளது.

இவை எல்லாமே மனித மூளையின் உச்சபட்ச செயல்பாடே ஒழிய வேறில்லை. நம் மூளையின் பயன்பாடு குறிப்பிட்ட எல்லையை தாண்டிவிட்டால் அவை புலன்களுக்கு கட்டுபடாது.

அதை எப்படி வளர்த்துக் கொள்வது?

எண்ண ஓட்டங்கள் குறைய குறைய மூளையின் செயல்திறன் அதிகரித்து கொண்டே போகும்.

Extra Sensory Perceptionஐ எல்லோராலும் வளர்த்து கொள்ள முடியும் ஆழ்ந்த தியானத்தால்.

ஆழ்மன பதிவை எப்படி மாற்றுவது?

நம் வாழ்வை பெரும்பாலும் வெறும் ஐந்து நிமிடங்களே தீர்மானிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம் நாம் படுத்தபின் உறங்குவதற்கு முன்பு இருக்கும் அந்த ஐந்து நிமிடங்கள்தான் அவை.

அப்போது நாம் எதைப்பற்றி சிந்திந்து கொண்டே உறங்குறோமோ அது நம் ஆழ்மனதால் விடிய விடிய பரிசீலிக்கப்பட்டு விரைவில் நம்மை வந்தைடைந்தே தீரும்.

தயவு செய்து இனி படுத்தபிறகு அந்த நேரத்தில்  பிரச்சனைகளை பற்றி யோசித்து விடாதீர்கள். பிறகு அந்த பிரச்சனையே வாழ்கையாகிவிடும்.

உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அதை அடைந்துவிட்டதாக சிந்தித்து கொண்டே உறங்குங்கள். அது பிடித்த உறவு, பொருளாதார சூழல், ஆரோக்கியம் இப்படி எதுவாகவும் இருக்கலாம்.

அந்த நேரத்தில் மூச்சை கவனித்துக் கொண்டே உறங்குபவன் மறுநாள் எழும்வரை ஆழ்ந்த தியான நிலையிலேயே இருந்திருப்பான்.

ஆழ்மன சக்தியை எது எதுக்கு பயன்படுத்த முடியும்?

நாம் கற்பனை கூட செய்ய முடியாத அனைத்தும் சாத்தியமாகும் வாய்ப்பு இந்த பிரபஞ்சத்தில் உள்ளது.

சாத்தியமாக வாய்ப்பு இல்லாத எதையும் நீங்கள் யோசிக்கவே முடியாது. அதனால் நல்லவை அனைத்திற்கும் ஆழ்மன சக்தியை பயன்படுத்தலாம்.

வாழ்வில் வெற்றி பெற்ற பலரும் அதிகாலை எழும் பழக்கம் உள்ளவர்களே.

ஆம் நாம், பூமி,  இயற்கை என அனைத்தும் அந்த நேரத்தில் உச்சகட்ட ஆற்றலோடு செயல்படும். பிரம்மம் பூமியில் கலக்கும் அதாவது முகூர்த்தம் ஆகும் நேரமே பிரம்ம முகூர்த்தம், வாழ்க வளமுடன்...

நம்ப முடியாத உண்மைகள்...


நம்ப முடியாத உண்மைகள்...


எல்லாம் நடிப்பா கோபால்...


மனித மூளை எப்போதும் விசித்திரமானது...


அதன் முழுமையான செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. பல விசித்திரங்களுக்கு இன்னும் விடை கிடைத்த பாடில்லை.

நாம் தூங்கும் போது மூளையும் நம்முடனே சேர்ந்து தூங்குவதாகத்தான் பலரும் நினைக்கிறோம். ஆனால், மூளை தூங்குவதில்லை. மாறாக, இரவில் அதிகமான சுறுசுறுப்புடன் அது இயங்குகிறது.

கனவு வந்தாலும் வராவிட்டாலும் மூளை தொடர்ந்து உற்சாகமாக இயங்குகிறது. மூளை எப்போதும் தூங்கவே தூங்காது என்பதுதான் உண்மை.

அப்படி அது தூங்கினால் நாம் நிரந்தரமாக தூங்கி இருப்போம். நமது மூளைக்கு வருங்காலத்தை அறியும்
திறன் இருக்கிறது.

பின்னாளில் நடைபெறும் நிகழ்வுகளை முன்கூட்டியே அறிவிக்கும் திறன் நம் மூளைக்கு உண்டாம். அவற்றை
கனவுகளாக நமக்கு உணரவைக்கவும் அவை தவறுவதில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இந்த கனவு வழியாக எதிர்காலத்தை அறியும் திறன் மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படும். அதனால்தான் சிலர்
காணும் கனவுகள் மட்டும் அப்படியே
பலிக்கின்றன. சிலரின் கனவுக்கும்
நடப்பதற்கும் சம்பந்தமே இருப்பதில்லை. இது எப்படி நடக்கிறது என்பது விஞ்ஞானிகளுக்கே முழுமையாக புரியவில்லை.

மனித மூளையால் வருங்காலத்தை கணிக்க முடியும் என்று விஞ்ஞானம், மெய்ஞானம் என இரண்டுமே ஒப்புக் கொண்டுள்ளன.

அது இப்போது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நடுப்பகுதி மூளையில் உள்ள டோபமைன் என்ற அமைப்பு நடக்காத சம்பவங்களைப் பற்றி உங்களுக்கு அறிகுறிகளை தந்து கொண்டே இருக்கும்.

இதுதான் நாம் சில செயல்களை
செய்யும் போது தடுத்து, ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதையும் மீறி அந்தக் காரியத்தை நாம் செய்யும் போது தோல்வி அடைகிறோம் என்றும், மூளை தரும் அந்த அச்சம்தான் எதிர்காலத்தைப் பற்றிய கணிப்பு
என்றும் கூறுகிறார்கள்.

இதைதான் தன்னம்பிக்கை இல்லாமல் ஒரு செயலில் ஈடுபட வேண்டாம் என்றும் சொல்கிறார்கள்.

பெண்கள் மூளையை குறைவாகவே
பயன்படுத்துகிறார்கள். ஆணோடு
ஒப்பிடும்போது பெண்கள் தங்கள் மூளையை 10 சதவீதம் குறைவாகவே பயன்படுத்துகிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதனால்தான் முக்கிய முடிவுகள் எடுக்கும் நிலை வரும்போது பெண்கள் சற்று குழம்புகிறார்கள்.

உடலில் எந்த இடத்திலும், சிறு காயம் பட்டால் கூட உடனே வலி தெரியும். ஆனால் மூளை தனக்கு வலி ஏற்பட்டால் மட்டும் அதை தெரிவிப்பதில்லை. ஏனென்றால் மூளையிடம் வலி உணர்விகள் கிடையாது. அவற்றுக்கான இடமும் மூளையில் இல்லை.

மூளையின் அளவுகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அறிவுத்திறனில் இது முக்கிய பங்களிக்கிறது. மூளையின் அளவு பெரிதாக இருப்பவர்கள் ஒரு பிரச்சினைக்கு மிக நல்ல தீர்வு காண்பார்கள் என்றும், வெளிப்புற நிகழ்வுகளை புரிந்து கொள்வார்கள் என்றும் அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

மூளைதான் மனித உடலிலே அதிக அளவு சக்தியை எடுத்துக்கொள்ளும் அங்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதனின் மூளையின் சக்தி நாமக்கு எல்லாம் சுவாமி விவேகானந்தர் பற்றி
தெரியும். எனக்கு தெரிந்த சிலவற்றை இங்கு பதிவு செய்து கொள்ள விரும்புகிறான்.

இவர் ஒரு புத்தகத்தை ஒரு முறை
படித்துவிட்டால், அந்த புத்தகத்தில் உள்ள
பக்கங்கள் போட்டோ காபியாக மூளையில் பதிந்து விடும். என்பதை நாம் அறிந்த ஒன்றுதான். இதை ஆங்கலத்தில் (Photographic
memory) என்பர்கள்.

மாணவர்கள் தேர்வு எழுதும் போது சில
நேரங்களில் அந்த பக்கம் கண்முன் வரும். அந்த பக்கத்தை படிக்கும் போது அவர்களின் ஆழ்மனம் திறந்து இருந்திருக்கும். அதனால் தான் அந்த பக்கம் நமக்கு எழுதும் போது பார்க்க முடிகிறது.

ஒருவேளை நமக்கு ஆழ்மனதை திறக்க
தெரிந்தால் நாமும் விவேகானந்தர் போல முழுபுத்தகத்தையும் (அனைத்து
புத்தகத்தையும்) ஒருமுறை படித்தல்
போதும். அல்பா முதல் கட்டத்தின் முலமாக இதை நம்மால் சாதிக்க முடியும்...

சென்னை எக்மோர் சிபிசிஐடி அலுவலகத்தில் நிறுத்தப்பட்ட போலிஸ் வாகனம் திருட்டு, போலிஸ் , போலிசில் புகார்...



பாஜக மோடியும் தமிழ்நாடும்...


ஏன் டா டே.... கொஞ்ச பேச்சாடா பேசுன...


கூடன்குளம் ஆய்வாளர் கைது....

நெல்லை மாவட்டம் கூடங்குளம் காவல்நிலைய  இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசார்  கைது செய்தனர்.

அவர் லஞ்சமாகப் பெற்ற 15 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலையில் சேருவதற்கு 34 பேருக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்க தலா 500 ரூபாய் வீதம் ஒப்பந்ததாரர் ராஜா என்பவரிடம் லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்புத் துணை கண்காணிப்பாளர் மதியழகன் மற்றும் போலீஸாரிடம் பிடிபட்டார்...

திமுக ஸ்டாலின் இன்னுமா தொங்காமல் இருக்க...


பாஜக எடுபுடி ஓபிஎஸ்.. சேகர் ரெட்டியுடன் நேரடி தொடர்பில் இருந்தார்...


கைது வேணாம்.. குறைந்தபட்சம் விசாரணை எப்போது..?

முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன்ராவ் வருமானவரி சோதனை நடத்தப்பட்டதற்கு இதுவரை chargesheet பைல் செய்யவில்லை என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்...


பாஜகவே தமிழகத்தின் அனைத்து இன்னல்களுக்கும் காரணம்...


சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த ஜெயலலிதாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது-பொன்னையன்...


தினகரனுக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது, சசிகலா பேனரை அகற்றியது எங்களின் சுயமுடிவு -அமைச்சர் சி.வி.சண்முகம்...


திருப்பூர் முதலிபாளையத்தில் டாஸ்மாக் கடையை சூறையாடி பொதுமக்கள் ஆவேசம்...


திமுக வும் ஊழலும்...


2ஜி அலைக்கற்றை ஒதுக்கியதில், கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி கைமாறியது தொடர்பான வழக்கில் ஜூலை 15ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

திமுக கட்சிக்கு சொந்தமான கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி கைமாறியது தொடர்பான வழக்கில் இறுதி வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து ஜூலை 15ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி தெரிவித்துள்ளார்.

மகனே கௌரவம் என்னோட நிலமைய பாருடா...


பெரியாரும் திருட்டு திராவிடமும்...


சுயமரியாதை.. தன்மானம்.. பகுத்தறிவு என்பதன் பெயரால் தமிழகத்தில் இதுகால் வரை சாதித்தது என்ன..?

சாதி ஒழிக்கப்பட்டதா..?

சாதிச் சான்றிதழ்கள் வழங்குதலை அரசு தடுத்ததா..?

சட்டத்தின் முன் சகலரும் சமன் என்பதை அரசு நடைமுறைப்படுத்தியதா..?

மக்களின் பொருளாதார ஏற்றத் தாழ்வுநிலையைப் போக்கி எல்லோருக்கும் எல்லா அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்ததா..?

எல்லோருக்கும் கல்வி அறிவூட்டல் செய்ததா..?

அறிவியல் கல்வியை வழங்கியதா..?

மொழி சீர்திருந்தகளை செய்து தமிழை அடுத்த நூற்றாண்டு அறிவியல் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க தயார் செய்ததா..?

இல்ல ஆங்கிலத்தைப் படித்தால் போதும் என்றிருக்கிறதா..?

ஜப்பானியர்களும் சீனர்களும் ரஷ்சியர்கள் சொந்த மொழியில் தானே அறிவியலை கற்கின்றனர். ஏன் தமிழை அந்த நிலைக்கு முன்னகர்த்த முயற்சிக்கவில்லை..?

ஆங்கிலம் தான் அறிவியல் என்ற மாயை ஏன் வளர்க்கப்பட வேண்டும்.
ஆங்கிலத்தை தொடர்பாடலுக்கு படிப்பது என்பது வேறு.. ஆங்கில நூல்கள் சொல்லும் அறிவியல் என்பதைப் பெறுவது வேறு..

தாய் மொழியை இகழ்வதும்.. அதன் இருப்பைக் கேலி செய்வதும் மிக மோசமான இனவிரோதச் செயற்பாடு...

பன்னீர் செல்வம் அணியில் உள்ள யார் வீட்டிலும் ஏன் ரைடு நடத்தப்படவில்லை, கைது , விசாரனை எதுவும் இல்லை?


பன்னீர் செல்வம் தானே நிதி அமைச்சராக இருந்தார், பணம் கொடுக்கும் இலக்காவே அவர் தானே வைத்திருந்தார் இதிலிருந்தே தெரிந்து கொள்ள வேண்டாமா இதை யார் செய்கின்றார் என - நாஞ்சில் சம்பத் கேள்வி...

திமுக கருணாநிதி கல்யாணத்தை திருமணம் என்றும் ஆசீர்வாதத்தை வாழ்த்துரை என்றும் மாற்றியது திராவிட இயக்கம் தான் – என்று பெருமிதம் கொள்கிறாரே..?


ஏனோ தெரியவில்லை. பெருமிதப் பட்டியலை கலைஞர் சுருக்கமாக முடித்துக் கொண்டு விட்டார்..

அவர்கள் செய்த மாற்றம் இன்னும் எவ்வளவோ இருக்கிறதே?

நேர்மையை – மடத்தனம் என்றும்,
ஊழலை – சம்பாத்தியம் என்றும்,
உண்ணாவிரதத்தை – தமாஷ் என்றும்,
போலீஸ்காரர்களை – கழகக்காரர்கள் என்றும்,
அமைச்சர்களை – கொள்ளைக்காரர்கள் என்றும்,
தமிழை – வியாபாரம் என்றும் மாற்றி,

இன்னும் பல மாற்றங்களையும் செய்து, கடைசியாக கழகத்தை – குடும்பம் என்றும் மாற்றியவர்களாயிற்றே இந்த தெலுங்கு கட்டுமரம் கருணாநிதி...

சித்தராவது எப்படி - 37...


அமைதி அல்லது ஓய்வின் உன்னத நிலை...

ஓய்வின் உன்னதத்தை தெரியாதவர்கள், ஆன்மீகத்தில் ஓரளவுக்கு மேல் துளியும் முன்னேற முடியாது.. அந்த ஓரளவுக்கு முன்னேறியவர்கள் தான் இந்த உலகம் கண்ட சில உத்தமர்கள்..

ஆனால் எதையெல்லாம் சாதிக்க முடியும் என்று கனவு கண்டார்களோ, அவற்றை துளியும் அடையாமல் சென்று விட்டனர்..

ஒரு குறிப்பிட்ட அளவே தன்னை அறியாமல் எதோ ஒரு பிரபஞ்ச உந்துதலால் அடைந்தார்களே தவிர, தாங்கள் உயர்ந்த நிலையை விழிப்பு நிலையால் உணர முடியாமல், அதில் உள்ள நுணுக்கங்களை அறிய முடியாத காரணத்தால், அவற்றை வெளிப்படுத்த தவறியதால், தனக்கு பின்னால் தன்னை போல் தன் சீடர்களில் ஒருவரையேனும் உருவாக்க முடிய வில்லை..

காரணம் தான் அடைந்த உயர்ந்த நிலை, தனக்கே தெரியவில்லை.. அவர்கள் தன் உயர்வுக்கான நுணுக்கங்களை, முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை..

தானே அனிச்சையாக குருவாகி முடிவில் அழிந்தார்களே தவிர தனக்குள் இருக்கும் அக குருவை பயன் படுத்தி அக்குருவின் மூலம், மேல் நுணுக்கத்தை அறிய தவறி விட்டார்கள்..

ஓய்வு என்பது இறைவனின் வரபிரசாதம்.. இறைவனின் வடிவே ஓய்வு தான்.. மரணம் ஒரு ஓய்வு தான்.. சிவனே மரண தேவதை...

ஆனால் அதையும் தாண்டிய ஒரு ஓய்வு நிறை நிலை மனிதனுக்கு தேவை.. அதனை பின்பு பார்ப்போம்..

ஆனால் இதற்கு முரணாகத் தான் கடவுளை நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.. இதுவே கடவுளுக்கு எதிரான செயல்..

அத்தனை மதங்களும் இந்த ஒரு விசயத்தில் தோற்று போய் விட்டன.. சிவனை யோக நிலையில் மிகுந்த ஆழ்ந்த நிலையில் காண்பவர்கள், அவர்கள் இயக்க நிலையில் உலகத்தையே புரட்டி போடுவார் என்று எதிர் பார்ப்பது முரண் ஆனது..

எவர் ஒருவர் அவருடைய ஆழ்ந்த அமைதியை, உள் வாங்கி இசைந்து வாழ்வதின் மூலம். பிரபஞ்ச ஆற்றலை பெறுகின்றார்களோ, அவர்கள் மட்டுமே சிவன் அருளை பெற்றவர்களாவார்கள்..

சிவனோ அல்லது உலகம் கற்பித்துக் கொண்ட வேறு இறைவனோ, உலகத்தில் இயங்கி எந்த ஒரு காரியத்தை செய்ய இயலாது.. இது ஒரு முற்றிலும் முரணான சொல்லாக இருக்கலாம்.. எல்லோரும் கொதிப்பு அடையலாம்..

ஆனால் இறைவன் நடத்துகின்ற உண்மை திரு விளையாடலோ வேறு விதமாக உள்ளது.. எல்லாம் செயல் பாடுகளும் இறைவனின் பேரமைதியை உள்வாங்கிய ஒன்றால் பிரபஞ்ச ஆற்றலை இசைந்து வாழ்ந்து அந்த ஆற்றலை பெறக்கூடிய விதத்தில் மட்டுமே எதுவும் நடைபெறுகிறது..

இறைவனை ஓய்வின் அடையாளமாகவே எந்த மதங்களும் மறை முகமாக வைத்துக் கொண்டு இருக்கிறது.. புத்தருடைய தியான உருவம் சிவலிங்கம் ஏசுவின் சிலுவையில் செயலற்ற நிலை, இஸ்லாமியர்களின் சமாதி அமைப்பின் வழி பாட்டு நிலை போன்ற பல உதாரணங்களை காட்டலாம்..

முடிவில் இறைவன் நிலையே ஓய்வு அல்லது அமைதி ஆகும்.. அது பிரபஞ்ச ஆற்றலை அளவற்ற நிலையில் இசைந்து வாழ்ந்து உள் வாங்கும் நிலையில் உள்ளது..

அமைதியை மையப்படுத்தி பேராற்றலை உள் வாங்கும் திறமை ஒன்றால் மட்டுமே உலகில் உத்தமர்கள் தோன்ற முடியும்..

இறைவனை அமைதியின் வடிவாய் மட்டுமே காண வேண்டும் என்பதே சரியான முறை..

ஆனால் இதற்கு புறம்பாகவே எல்லாம் நடக்கிறது.. அன்பே சிவம் என்பது காரியப்பட்ட ஒன்று..

ஆனால் அமைதியே சிவம் என்பது காரணப்பட்ட ஒன்று.. காரணப்பட்டு ஒன்று பலப் படாமல் காரியப் பட்ட ஒன்று நிகழாது..

அமைதியே சிவம் என்பதிலிருந்து தான் அன்பே சிவம் தோன்றி உலகம் காரியப் படுகிறது..

இந்த அமைதி அல்லது ஓய்வு இரண்டு நிலையில் உள்ளது.. ஒன்று, ஏற்பட்ட ஓய்வு.. மற்றொன்று ஏற்படுத்திய ஓய்வு..

ஏற்பட்ட ஒய்வு ஒன்றையே, கண்டுதான் இதுவரை மகான்கள் தோன்றி இருக்கின்றார்கள்.. அதனால் தான் ஒரு வரைக்கு மேல் செல்ல முடியவில்லை..

ஆனால் ஏற்படுத்திய ஓய்வுக்கு எல்லையே இல்லை.. அதனால் பெறும் ஆற்றலுக்கும் எல்லையே இல்லை..

ஏற்படுத்திய ஓய்வு அல்லது அமைதியின் மூலம் அளவற்ற ஆற்றலை பெற்றால் மட்டுமே ஒரு நிறைநிலை மனிதன் உருவாக முடியும்..

அவன் ஒருவனே இன்றைய ஆணவ உலகத்தை திருத்த முடியும்..

வேறு இதுவரை உலகம் கண்ட, காணும் உலக குருமார்களின் போதனைகள், துளியும் உதவாது என்பது கண்கூடாக காணும் காட்சி...

நிறை நிலை மனிதன் அடைவதற்கான ஒரு பெரும் அமைதி புரட்சியை தொடங்கி செயல் படுத்த ஆவன செய்வதின் மூலம் அன்புடையவர்களாக ஆவோம்...அதனால் சிவமாவோம்..

அமைதியே சிவம் என முதலில் உணர்ந்து அன்பே சிவம் என நிலைக்கு உயர்வோம்...

தமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்...


தமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்.. மலையாளிகள் கொண்டாடும் அரிசி...

சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேசங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுசு(ஸ்)ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள்.

வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். இந்த மூன்று நாடிகளின் தோசங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.

சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்சு, இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது. 'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை’ என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.

சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, 'காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. அதனால்தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர்.

நம் நாட்டில் கர்நாடகா, பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம். இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் - 'மட்ட அரிசி’. ஆனால், அவர்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

சபரிமலை செல்லும்போது அங்குள்ள உணவகங்களில் சிவப்பு அரிசி சாதம் பரிமாறப்படும். என்னோடு வரும் நண்பர்கள் முகம் சுளித்து, வேண்டாம், வேண்டாம்... வெள்ளைச் சோறு போடு... என்று சொல்வதையும், பக்கத்து மேசையில் அமர்ந்திருக்கும் கேரளவாசிகள் பச்சரிசி சாதம் பரிமாறப்பட்டால் முகம் சுளித்து, மட்ட அரிசி போடு...' என்று சொல்வதையும் ஆண்டுதோறும் கண்டு வருகிறேன்.

இமாச்சல பிரதேசத்தில் குலு பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது. ஆங்கிலேய ஆட்சியில் அங்கிருந்த ஒரு கவர்னர் இந்த அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு, லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன.
நீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்!

பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு - வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch).
இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன. நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்.

சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேசமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும்.

மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து - சி(ஜி)ங்க் (Zinc), மாங்கனீசு(ஸ்), மெக்னீசி(ஷி)யம், செலினியம், பொசுபரசு போன்ற கனிமங்கள் - மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன
தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்சி(ஸி)டென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித் திருக்கின்றன.

இதையெல்லாம்விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் - கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் 'லோவாசு(ஸ்)டேடின்' (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம்.

செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாசு(ஸ்)டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள்.

சிவப்பு பூஞ்சண அரிசி (Red yeast rice) என்று இதற்குப் பெயர். இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், சுவாசகாசம் மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து...

பார்ப்பனர் - பிராமணர் வேறுபாடு...


பெரும்பாலான சோழியப் பார்ப்பனர் (முன்குடுமி) தமிழரே...

இவர்களே சங்ககாலப் பார்ப்பனர் (அதாவது ஆதித்தமிழர்)..

சோழியப் பார்ப்பனர் முக்கிய 5 பிரிவுகள் கீழ்வருமாறு..

1) தீட்சிதர் [சிதம்பரம் கோயிலைச் சுற்றி].

2) நம்பியார் [ஆவுடையார் கோவிலைச் சுற்றி].

3) பட்டர் [மதுரை மீனாட்சி கோவிலைச் சுற்றி].

4) ஆனைக்கா அந்தணர் (அய்யா நம்பி, திருண பட்டன், பட்டர்).

5) வீழி அந்தணர் [திருவீழிமிழலை கோயிலைச் சுற்றி].

இவர்கள் போக...

தென்கலை வைணவர் (நம்பி).
நயினார் [திருவாரூர்].

திருசுதந்திரர் [திருச்செந்தூர்].

சிவாச்சாரியார் [தமிழகம், ஈழம்].

குருக்கள் (ஐயர்) [மதுரை].

சோழியர் (ஐயர், ஐயங்கார்).

முக்கானி (ஐயர்) [திருச்செந்தூர்].

ஆகியோரும் தமிழினப் பார்ப்பனரே..

பிற வடமா பிராமணர் (பின்குடுமி) பெரும்பாலும் தமிழரல்லாதார்...

பிரகச்சரணம் (ஐயர்).
வாத்திமா (ஐயர்).
அஷ்டசகஸ்ரம் (ஐயர்).
கேசியர்.
வடகலை வைணவர்.
மத்தியானப் பறையர்.
பட்டஸ்ய.
வடமா (ஐயர்).
வடமா தீட்சிதர்.
நம்பூதிரி.

இவர்களில் வடகலை ஐயங்கார், பிரகச்சரணம், வாத்திமா, வடமா, அஸ்ட சகஸ்ரம் ஆகியவற்றில் சில தமிழ்ப் பிரிவுகள் உள்ளன..

அதாவது பிராமணரிலும் பார்ப்பனரிலும் பல உட்பிரிவுகள் இருந்தாலும் அவை ஒன்றோடொன்று கலப்பதில்லை.

(அதாவது உட்பிரிவுகளே உண்மையான சாதி.. உட்பிரிவில் கோத்திரம் என்பது திருமணம் செய்ய மட்டும். சிறுபான்மையான சாதி என்பதால் நெருக்கமான உறவுகள் திருமணம் செய்வதைத் தடுக்க இந்த முறை)

ஆனால் பல உட்பிரிவுகள் அவர்களின் கொள்கைகளைப் பொறுத்து ஒரு முக்கியப் பிரிவுக்குள் வருகின்றன.

மேற்கண்டவை அத்தகைய முக்கியப் பிரிவுகளே..

அதேபோல ஒரே பட்டத்தை வெவ்வேறு பிரிவினர் பயன்படுத்துகின்றனர்.

சுருக்கமாகக் கூறினால்.. நம்பியார், பட்டர், குருக்கள் போன்ற பட்டங்கள் தமிழரைக் குறிக்கும்.

ஐயர், ஐயங்கார், தீட்சிதர், ஆச்சாரி, சாஸ்திரி போன்ற பட்டங்கள் பார்ப்பனரும் பிராமணரும் பயன்படுத்துகின்றனர். இவர்களில் யார் வடமா அல்லது வடகலை பிரிவோ அவர்கள் தமிழரல்லாதார்.

ஐயங்காரிலும் சாஸ்திரியிலும் பெரும்பாலும் பிராமணர்.

தீட்சிதரிலும் ஐயரிலும் பெரும்பாலும் பார்ப்பனர்.

தமிழக பூசாரி சாதிகளில் 65% பிராமணர். 35% மட்டுமே பார்ப்பனர்.

(இது ஆரம்பகட்ட ஆய்வு தான்.
பார்ப்பனர்களிலும் பிராமணர்களிலும் பல உட்பிரிவுகள் உள்ளன. ஒரே உட்பிரிவினர் ஒரு இடத்தில் பார்ப்பனராகவும் வேறு இடத்தில் பிராமணராகவும் உள்ளனர்.

ஆக உட்பிரிவு தெரிந்தாலும் வாழ்விடத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதுபற்றி மேலும் தெரிந்தோர் கருத்துகளில் இடலாம்)...

பெரியாரும் திருட்டு திராவிடமும்...



20 நூற்றாண்டு நாத்திகர்களில் ஈ.வெ.ராமசாமி மட்டுமே ஒரு மொழியை மட்டுமே காட்டுமிராண்டி மொழி, பகுத்தறிவுக்கு ஓவ்வாத மொழி தமிழ் என்று குற்றம் சாட்டிய ஒரே மாபெரும் நாத்திகர்..


ஆனால் அவர் தாய் மொழி தெலுங்கா அல்லது கன்னடமா என்று அவருக்கே தெரியாது..


வேறு எந்த உலக நாத்திகரும் மொழி தான் நாத்திகத்திற்கு தடையாக இருக்கிறது என்று குற்றம் சாட்டியது இல்லை..


இவர் குற்றம் சாட்டக் காரணம் தமிழர்களை தனது இனத்தவரே காலகாலத்திற்கும் அடக்கி ஆள வேண்டும் என்ற குறுகிய தன் இனநல வெறியே காரணம்...

திமுக வின் 2ஜி வழக்கின் தீர்ப்பு அடுத்த சில தினங்களில் வெளியாகும் என தகவல்...


2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் தொலை தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, தனது இறுதி வாதத்தை நிறைவு செய்தார்.

கடந்த எட்டு ஆண்டுகளாக நடந்து வரும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கு, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 2007-ல், மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா  'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் 2008-ம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கியதில், பெருமளவு முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திவிட்டதாக மத்திய கணக்காயம் தெரிவித்தது. 2009-ம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்ததை தொடர்ந்து, ஆ.ராசா மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். இவ்வழக்கில், இருதரப்பு சாட்சியமும் முடிந்த நிலையில், இறுதி வாதம் சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

நீதிபதி ஓ.பி. சைனி முன்பு, இன்று தனது இறுதி வாதத்தை பதிவு செய்த ஆ.ராசா, தான் எடுத்த முடிவுகள் அனைத்தும் சட்டப்படி சரியானவையே என வாதிட்டார். இவ்வழக்கில், தற்போது இறுதி வாதம் நிறைவடைந்த நிலையில், வழக்கின் வழக்கின் தீர்ப்பு வெளியாகும் தேதி எப்போது என்பது குறித்து நாளையோ அல்லது மற்றொரு நாளோ தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது...

இதுக்கு வாங்கி குடிக்கலாம்...


ஆகாயத்தில் ஒரு ஒளி - 37...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற தொடரின் வாயிலாக இன்று நாம் அறிந்து கொள்ளக் கூடிய இறைவெளிப்பாட்டின் தீர்க்க தரிசனம் 37-ம் பகுதியாகும். இந்த 37-ம் தீர்க்க தரிசனம் இறை வெளிப்பாட்டின் போது இந்த பூமியில் நிகழக்கூடிய சம்பவங்களைப்பற்றிய குறிப்புகளை நமக்கு வெளிப்படுத்துகின்றன.

அதாவது இந்திய தேசத்தில் அதுவும் தமிழ்நாட்டில் மட்டுமே இறைவன் தனது முழு வெளிப்பாட்டையும் நிகழ்த்துவார் என்றும், அவரின் வெளிப்பாடு முழுமையாக நிகழ்வதற்கு முன்பே அனைத்து ஞானிகளும், சித்தர்களும், மகான்களும் தமிழகத்தில் குறிப்பாக இறைவன் அவதரிக்கும் அந்த புண்ணிய பூமியில் தாங்களாகவே முன்வந்து  கோவில் கொண்டு காத்திருப்பார்கள் என்றும், அவர்கள் அனைவரும் இறைவனுக்கு தொண்டு செய்யவும், மக்களை இறைவனை அறியும்படி செய்யவும் தமது முயற்சிகளை அம்மண்ணில் செய்திட காத்திருப்பார்கள் என்று 37-ம் தீர்க்க தரிசனம் இறைவனின் அவதாரக் குறிப்பை தெளிவுபட கூறுகிறது.

இந்த இந்திய தேசத்தில், அதுவும் நமது தமிழ்நாட்டில் அவதாரம் மேற்கொள்ளும் அந்த இறைவனின் திருப்பெயர் ஆதிசக்தி என்றும், அவர் ஆணாகவும், பெண்ணாகவும் கலந்த ஆதியும், அந்தமும் இல்லாத ஜோதி வடிவானவர் என்றும், இந்த உலகத்தின் தாய் என்றும், இந்த பூமி தோன்றிய நாள் முதல் இப்பூமியில் அவதரித்த அனைத்து அவதாரங்களுக்கும் மூலம் இவரே என்று தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


அன்னை ஆதிசக்தியானவர் அகில உலகத்தின் தாய் என்றும், இவரே ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலுக்கும் உரிய அவதாரங்களின் தாய் என்றும், இவரே ஆதிமூலம், ஆதிபராசக்தி, மகாமேரு என்றும் ஞானிகளாலும், மகான்களாலும், தீர்க்க தரிசிகளாலும் அழைக்கப்பட்டவர் என்றும், இவரின் அவதாரக்காலம் என்பது தற்போதைய காலம் என்றும், இக்காலத்தின் தோற்றத்திற்கே சத்தியயுகம் என்றும், சத்திய யுகத்தின் முதல் பிரஜாதிபதி இவரே என்றும் 37-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

இந்திய தேசம் மட்டுமின்றி அனைத்து தேச மக்களும் இனி இவரையே முதற்கடவுளாக போற்றி வணங்கும் படியான தெய்வீக சுப நிகழ்வுகள் பல உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் நிகழும் என்றும், இவரின் வருகையைப் பற்றி இப்பூமியில் இதற்குமுன் அவதரித்த அனைத்து கடவுளின் நிலைகளும் இப்புவியில் தமது மக்களுக்கு அறிவிக்கும் உன்னதமான ஒரு அற்புதம் நடக்கும் என்று 37-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது.

ஆதி - முன்தோற்றம், சக்தி -  அதனை படைக்கும் மாபெரும் ஆற்றல். இதுவே இதன் பொருள். இவ்வுலகின் அனைத்து தோற்ற மூலங்களுக்கும் சக்தியாக இருந்து, அதன் இயக்கங்கள் வழியே இவ்வுலகத்தில் உள்ள அனைத்து படைப்புகளையும் உருவாக்கியவர். இவரையே இவ்வுலகில் மக்கள் பல்வேறு பெயர்களில் மாற்றி, மாற்றி வணங்கி வருகின்றனர். இப்பூமியின் புனிதமும், சத்தியமும், அதன் நிலைப்பாட்டையும், அதன் இயக்கத்தினையும், அதன் மறுசீரமைப்பையும் இவரே கவனித்து வருபவர். இவரே இவ்வுலகத்தின் விடிவெள்ளி. மனித தோற்றத்திற்கு முன்முதல் ஆதாரம் இவரே ஆவார். அதனால்தான் யோகங்கள் இவரை ஆதாரச்சக்தி என்று அழைக்கின்றன என 37-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


இந்திய தேசமே மகாபொக்கிஷம் நிறைந்த பூமியாக மாறும் உன்னதமான சூழல் இந்த 37-ம் தீர்க்க தரிசனம் நிகழும் காலத்தில் நிகழ உள்ளதாக (ஏற்பட) 37-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

அன்னை வருவாள், தனது ஆதரவு கரத்தாள் மக்களை அரவணைத்து காத்திடுவாள்... அவளின் வருகையை உலக மக்கள் இந்திய தேசத்திலிருந்து காணும் ஒரு அற்புதமான நிகழ்வு விரைவில் நடக்க உள்ளதாக 37-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.


இந்திய தேசம் அன்னை ஆதிசக்தியை பாரத மாதா என்று பெயரிட்டு அழைக்கும் அச்சமயத்தில், இந்திய தேசத்தில் தமிழகத்தில் உலகமே வியந்து நோக்கும் அளவிற்கு அன்னை ஆதிசக்திக்கு ஒரு மாபெரும் ஆலயத்தை உலகமக்கள் ஒன்றிணைந்து உருவாக்குவார்கள் என்றும், இச்சமயத்தில் பிரபஞ்சம் வியக்கும் அதிசயமாக இந்த ஆலயத்தை பார்க்கவும், அன்னை ஆதிசக்தியை வணங்கவும் பிற கிரகத்தில் உள்ள வேற்றுகிரகவாசிகள் இங்கு வருவார்கள் என்ற வியப்பூட்டும் செய்தியை 37-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது.

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

இலுமினாட்டி யும் ஐ படமும்...


ஒன்றரை லட்சம் ஈழ தமிழர்களை பறி கொடுத்த பின்பும் , அவர்களுக்கான நியாயத்தை பெற போராடாமல் அடுத்து என்ன படம் வரும் என்று எதிர் பார்த்து கிடக்கும் தகுதி அற்ற மனிதர்களே , உங்களை மகிழ்வித்த சனவரி 9,2015 அன்று வெளியான ஐ என்ற படம் தமிழின விரோதிகளால் திரையிடப் பட்டது..

அப்படி இந்த படத்தில் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா ..? இந்த படத்தில் உலக அரசியலே அடங்கி உள்ளது...

உண்மையான உலக அரசியலை பற்றி தெரியாதவர்களுக்கு இது ஒரு அதிர்ச்சியை தரும் விடயமாகவே இருக்க போகிறது.

நாம் சொல்ல போகிற விடயம் உங்களை உண்மையில் பயமுறுத்தும் , அடுத்து உங்களை நெறிபடுத்தும்.. ஆனால் உங்கள் அடிமை வாழ்வின்மீது உள்ள பற்றை நிச்சயம் உடைத்து விடும். ஆகவே சற்று தைரியம் உடையவர்கள் மட்டும் படிங்கள்.

நாம் அன்றாடம் காணொளி பெட்டியில் பார்ப்பது உலக நடப்பல்ல ..அது உலகம் இவ்வாரு இருக்கிறது என்று உங்களை ஆளும் அரசர்கள் உங்களிடம் சொல்லும் கதைகளே, உங்களை ஆளும் அரசர்களா..?

அவர்கள் யார் என்று தானே யோசிகிறீர்கள்...  அவர்கள் தான் இலுமினாட்டி என்ற ரகசிய குழுமம்.

கிட்டத்தட்ட உலகில் உள்ள எல்லா சொத்துக்களின் உறிமையாளர்கள் இவர்கள். நான் சொல்வதை நீங்கள் நம்பவேண்டும் என்ற அவசியம் இல்லை, நீங்களே தேடுங்கள்.

நீங்கள் அன்றாடம் பார்க்கும் ஊடகங்களில் தொடங்கி உடுத்தும் ஆடைகள் வரை இந்த இலுமினாட்டி களின் பொருட்களை மட்டுமே நீங்கள் பயன் படுத்துகிரீர்கள்.

எடுதுகாட்டுக்காக சில நிறுவனங்களை இங்கே குறிப்பிட்டுள்ள வலைத்தளத்தில் பாருங்கள்.

(http://12160.info/profiles/blogs/illuminati-sun-symbolism-world-s-100-best-brand-logos)

சரி, யார் இந்த இல்லுமினடிகள் ..?

இவர்கள் யூதர்களின் சில குரிப்பிட்ட குடும்பங்களை சார்ந்தவர்கள் . மொத்தம் 13 குடும்பங்கள் அதில் முக்கியமானவை.

1. The Astor Bloodline
2. The Bundy Bloodline
3. The Collins Bloodline
4. The DuPont Bloodline
5. The Freeman Bloodline
6. The Kennedy Bloodline
7. The Li Bloodline
8. The Onassis Bloodline
9. The Reynolds Bloodline
10. The Rockefeller Bloodline
11. The Rothschild Bloodline
12. The Russell Bloodline
13. The Van Duyn Bloodline

இந்த பதிமூன்று குடும்பங்களுக்கு தான் உலகமே சொந்தம் காரணம் உலக வங்கிக்கே இவர்கள் தான் பணம் தருகிறார்கள், அதுவும் கடனாக..

ரொம்ப நாளாக சுவிஸ் வங்கி எப்படி இயங்குகிறது என்று குழம்பி இருப்பீர்களே. விடை இதோ..

அதுவும் இவர்களுக்கு சொந்தமானதே..

சரி, இதலாம் சாத்தியமா ? ஏன் இதெல்லாம் செய்கிறார்கள்? என்று பல கேள்விகள் எழலாம்.. அதற்கு பலவிதமான பதில்கள், இணையத்தில் உள்ளது. ஆனால் இது வரை இவர்கள் செய்ததில் ஒரு சிலவற்றை பார்ப்போமே..

9/11 நியூயார்க் இரட்டை கோபுரத்தை இவர்கள் தான் தகர்த்தார்கள்.

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு இவர்களே காரணம்.

முதல் உலகபோர் , இரண்டாம் உலகபோர் ஆகிய இரண்டும் இவர்கள் தொடங்கி வைத்ததே இவர்கள் தான்.

இவர்கள் மனித இனத்திற்கே எதிரானவர்கள் , மனிதர்களை அடிமைகளாக மாற்றுவதே இவர்களின் நோக்கம்.

அதற்கு இவர்கள் முதலில் ஒழுக்க வியல் வாழ்வை தகர்பார்கள் . பெண்களை போதை பொருளாக மாற்றுவதே இவர்கள் தான். குழந்தைகளை சிறுவயதில் இருந்தே காம சிந்தனைகளுக்கு உட்படுத்துவதற்கு தான் இவர்கள் ஆபாசதை ஊடகங்களில் பரப்புகிறார்கள்.

இப்படி இவர்களை பற்றி சொல்லி கொண்டே போகலாம் , இது அனைத்தும் இணையதில் உள்ளது நீங்களே தேடுங்கள்.. சரி இப்போ ஐ படத்திற்கு வருவோமே.

இலுமினாட்டிகளின் அடையாளமான ஒற்றை கண் அடையாளம் பிரபலமானது, அவர்களின் படங்களில் இது போன்ற அடையாளத்தை வைப்பார்கள். அதன் மூலம் அவர்களின் இருப்பை அவர்கள் உறுதி செய்வார்கள்.

தமிழ் திரைப்படங்களில் சுமார் 1993குப் பின் வந்த முக்கிய படங்களில் இவர்களின் அடையாளங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது கவனிக்கதக்கது.

அனால் சமீப காலமாக வந்த கத்தி, எந்திரன் , ஐ, பிச்சைக்காரன், போகன், சைத்தான் போன்ற படங்களில் மிகவும் வெளிப்படையாகவே அவற்றை செய்ய தொடங்கி உள்ளார்கள்.

ஐ படத்தில் அந்த படத்தின் பெயரே (eye) ஒற்றை கண் அடையாளத்தை குறிக்கும் , மற்றும் படத்தில் லூசோப்பர் (Lucifer) என்ற கிருத்துவர்களுக்கு எதிரான சாத்தான் இந்த படத்தில் வருகிறது .

மற்றும் படத்தின் பெயர் வடிவமைப்பு 33 என்ற வடிவம் நன்றாக தெரிகிறது .

இந்த 33 என்ற எண் மிகவும் முக்கியமானது ( ஹிரோசிமா, நாகசாகி அணு குண்டு வெடிப்புகள் 33 டிகிரி அட்சரேகை, தீர்க்க ரேகையில் தான் போடப் பட்டது ) . இலுமினாட்டிகளின் திட்டங்களை செயல் படுத்துவதற்காக உலகம் முழுவதும் பிரீ மேசன் என்ற அமைப்பு தொடங்க பட்டது. அதில் உச்ச கட்ட படிநிலை இந்த 33 டிகிரி ஆகும். (search in internet for more results about freemasons ).

மற்றும் இந்த படத்தின் விளம்பர சுவரொட்டிகளில் மறைமுகமாக டிஸ்னீப் நிறுவனத்தின் இலட்சனை வைக்கப்பட்டுள்ளது.

மற்றும் இந்த படத்தின் வெளியீட்டு நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருப்பது இன்னும் நமது சந்தேகத்தை வளர்கிறது.

1349 AD JAN 9 கருப்பு சாவு (BLACK DEATH) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது . யூத மந்திரவாதிகளால் இந்த நோய் பரப்பப்பட்டு பல லட்சம் மக்கள் உயிரிழந்தனர்.

அந்த நோய்த் தாக்க பட்ட கோலத்தில் கதாநாயகன் இருப்பதும், ஒரு பாடலில் கதாநாயகியின் மார்பகங்களை தொலைக்காட்சி திரைபோன்று உருவகப் படுத்துவதும் (பெண்களை காம பொருளாக தொலைகாட்சியில் இலுமினாட்டிகள் காட்டும் செயல்) நமக்கு சந்தேகங்களை துண்டுகிறது.

எபோலா என்ற நோய் இந்த இலுமினாடிகலாலே உருவாக்கி பரப்பபடுகிறது அதுவே பழைய கருப்புச்சாவு நோய் என்ற சந்தேகமும் உள்ளது. இதற்கு படக்குழுவினர் என்ன பதில் சொல்கிறார்கள் பார்போம்.?

ஆகவே தமிழர்களே விழிப்புணர்வு அடையுங்கள், நம்மை சுற்றி நடக்கும் அரசியலை கவனிக்க தவறாதீர்கள்...

பாஜக மோடியின் புதிய இந்தியாவில் ராணுவ வீரர்களும் சாகுறாங்க... விவசாயியும் சாகுறாங்க...


அதிமுக அரசுக்கு மீண்டும் ஆப்பு வைத்த பாமக...


மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலையாக மாற்றினாலும் டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது -உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...

தினத்தந்தி என்கிற கேடுகெட்ட ஊடகம்...


தோல் நோய்களை குணப்படுத்தும் அருகம்புல்...


தோல் நோய்களை குணப்படுத்த கூடியதும், கண் எரிச்சல் வயிற்றுப் போக்கை சரிசெய்ய கூடியதும், புண்களை ஆற்றவல்லதுமான அருகம்புல், வயல்வெளி, புல்வெளியில் வளரக்கூடியது..

எளிதில் கிடைக்க கூடிய அருகம்புல்லில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன.

இதன் மீது நடப்பதால் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கிறது. நரம்பு நாளங்களை தூண்டக் கூடியது.
ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.

அருகம்புல்லை பயன்படுத்தி தோல் நோய்களுக்கான மருந்து தயாரிக்கலாம். அருகம்புல்லை சிறு துண்டுகளாக வெட்டி பசையாக அரைத்து எடுக்கவும். இந்த பசையுடன் மஞ்சள் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை பூசுவதால் அரிப்பு, சொரி சிரங்கு, படர்தாமரை, வியர்குரு சரியாகிறது. தோல் நோய்களுக்கு மருந்தாகும் அருகம்புல், அக்கி கொப்புளங்கள், சொரியாசிஸ்சை குணப்படுத்துகிறது.

அருகம்புல்லை கொண்டு கண் நோய்க்கான மருந்து தயாரிக்கலாம்.

அருகம்புல்லை துண்டுகளாக நறுக்கி நீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் வடிகட்டி ஊறல் நீரை மட்டும் எடுக்கவும். இதனுடன் காய்ச்சிய பால் சேர்த்து காலை, மாலை குடித்துவர கண் எரிச்சல், அரிப்பு போன்றவை சரியாகும்.

அருகம்புல்லில் நீர்விடாமல் சாறு எடுக்கவும். இதை 2 சொட்டு விடும்போது மூக்கில் இருந்து வரும் ரத்தம் நிற்கும்.

அருகம்புல் சாறு 100 மில்லி அளவுக்கு குடித்துவர மாதவிலக்கின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுக்குள் வரும்.

பல்வேறு நன்மைகளை கொண்ட அருகம்புல், ரத்தத்தை சுத்தப்படுத்தி தோல்நோய்கள் வராமல் தடுக்கிறது.

கோடை வெயிலுக்கு அருகம்புல் சாறு குடிக்கும்போது உடல் குளிர்ச்சி அடையும்.

வெள்ளைப்போக்கு, வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

அருகம்புல் சாறு 50 மில்லி எடுக்கவும். இதனுடன் புளிப்பில்லாத கெட்டி தயிர் சேர்க்கவும். இதை காலை, மாலை குடித்துவர வயிற்றுபோக்கு, வெள்ளைப்போக்கு சரியாகும்.

அருகம்புல்லை பயன்படுத்தி உடல் சூட்டை தணிக்க கூடிய, குடலில் ஏற்படும் புண்களை ஆற்றக்கூடிய மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்...

அருகம்புல் சாறு, மிளகுப்பொடி, நெய். ஒரு பாத்திரத்தில் அரை ஸ்பூன் நெய் விட்டு சூடுபடுத்தவும்.

இதனுடன் அருகம்புல் சாறு சேர்க்கவும். பின்னர், நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.

இதனுடன் சிறிது மிளகுப்பொடி சேர்க்கவும். லேசாக கொதித்தவுடன் இறக்கி விடவும். தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்க்கவும்.

இது உடல் உஷ்ணத்தை குறைக்கும். வெட்டை நோய்க்கு மருந்தாகிறது. வயிற்று புண்களை ஆற்றும். சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. கைகால் வீக்கத்தை போக்குகிறது.

மருந்துகளை அதிகளவில் எடுத்துக் கொள்வதாலும், வெளியில் அடிக்கடி சாப்பிடுவதாலும் ஏற்படும் புண்களை அருகம்புல் சாறு ஆறும்.

எளிதில் நமக்கு கிடைக்க கூடிய அரும்கபுல் நோயற்ற வாழ்வுக்கு சிறந்தது...

பீட்டா திரும்ப வர்றான் போல...


பெரியாரும் திருட்டு திராவிடமும்...


சுயமரியாதை தன்மானம் என்று எவற்றை வரையறுத்தார் பெரியார். இதனால் தமிழர்களும் தமிழகமும் பெற்ற கல்வி அறிவூட்டல் என்ன..? பொருளாதார நன்மை என்ன..?

தமிழ் தேசிய உணர்வை இது எந்த வகையில் வளர்த்தது..?

ஏன் திராவிடத்தை தமிழகம் முதன்மைப் படுத்துகிறது..?

இதற்குள் தான் தமிழன் என்பவனின் இனத்துவ சுயமரியாதையும் தன்மானமும் அடங்கி இருக்கிறதா..? அப்படி என்றால் எந்த வகையில்..?

இந்த சுயமரியாதையும் தன்மானமும் 21ம் நூற்றாண்டில் தமிழர்களை தயார்படுத்தி 22ம் நூற்றாண்டில் எப்படி செயற்பட வைக்கப் போகிறது உலக அரங்கில்...? இதற்கு தமிழகத்தின் பங்கு என்ன..?

ஈழத்தில் தமிழ் தேசிய உணர்வோடு.. ஈழத் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து நிற்க ஏன் தமிழகம் தயங்க வேண்டும்..?

இதற்கும் சுயமரியாதைக்கும் தன்மானத்துக்கும் ஏதாவது தொடர்பை காண்பித்திருக்கிறதா தமிழகம்..?

தமிழகத்தில் உள்ளவர்கள் தமிழர்கள் தானா..?

ஓரிரண்டு குரல்களைத் தவிர ஏனைய தமிழ்மக்களின் குரல் ஏன் நசுக்கப்பட்டுள்ளது. அது ஏன் தமிழீழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கத் தயங்குகிறது..?

இன்னும் இந்திய தேசியத்துக்கு அடிபணிந்து தானே உள்ளது தமிழகம். அப்படி இருக்க..

இந்த சுயமரியாதையும் தன்மானமும் எதைக் குறித்து எழுந்து நிற்கிறது. தமிழர்களின் திராவிட அடையாளம் குறித்தும் பார்பர்ன பிராமண இந்து சமய எதிர்ப்பு குறித்து மட்டும் தானா..?

ஏன் தமிழகத்தில் மதமாற்றம் செய்யும் இதர மதங்களை நோக்கி மக்களை அன்போடு வழி அனுப்பி வைக்கும் போது எங்கே போகின்றது இந்தச் சுயமரியாதையும் தன்மானமும் பகுத்தறிவும்.?

அது ஏன் இந்து சமயத்தை மட்டும் கண்டவுடன் இவை விழித்துக் கொள்கின்றன. மற்றைய மதங்களை ஏன் மென்போக்கோடு அணுகுகிறது.?

பகுத்தறிவுவாதிகள் எவராவது இறந்த மனிதன் ஏசு உயிர்த்ததற்கு சான்று கேட்டிருக்கின்றனரா..? அல்லா எங்கிருக்கிறார்.. அவருக்கு என்ன உருவம் என்பதற்கு சான்று கேட்டுள்ளனரா..?

அது ஏன் பகுத்தறிவு இந்து சமயத்தை மட்டும் குறி வைத்து நிற்கிறது. மூடநம்பிக்கைகள் சமயம் மட்டும் சார்ந்து தானா எழுந்துள்ளது. வேறு வகைகளில் இல்லையா.?

ஏன் அறிவியல் வளர்ச்சி கண்ட மேற்கு நாடுகளில் மூடநம்பிக்கைகள் இல்லையா..? மத நம்பிக்கைகள் இல்லையா..? அவர்கள் ஏன் அறிவியலை ஊட்டுகிறார்கள்.. பகுத்தறிவு என்பதையும் சுயமரியாதை என்பதையும் தன்மானம் என்பதையும் உச்சரிச்சுக் கொண்டு மத எதிர்ப்பை சமூக எதிர்ப்பைச் செய்யவில்லை..?

அது ஏன் ஊருக்கு சொல்லும் சுயமரியாதை பகுத்தறிவை நீங்களும் உங்கள் குடும்பங்கள் மட்டும் கடைப் பிடிப்பதில்லை.. அனைத்தும் தொண்டனுக்கும் தமிழனுக்கும் மட்டும் தானா?

இப்படி பல தொடரான வினாக்களுக்கு நீங்கள் விடை கூறத் தயாரா..?

4 நாட்கள் விசாரணைக்குப்பிறகு, இடைத்தரகர் சுகேஷ் சந்திரா கைதைத் தொடர்ந்து டிடிவி தினகரனும் கைது... டிடிவி தினகரனோடு அவரது நண்பர் மல்லிகார்ஜீனாவும் கைது...


அதிமுக அமைச்சர் தெர்மாகோல் செல்லூர்ராஜூ கலாட்டா...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 37...


விபாசனா தியான முறை...

1) மற்ற தியானங்களைப் போலவே விபாசனா தியானத்திற்கும் அதிக குறுக்கீடுகள் இல்லாத அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். சத்தங்களே இருக்கக்கூடாது என்பதல்ல நம்மை அதிகமாக அலைக்கழிப்பது போன்ற சத்தங்கள் இருக்கக் கூடாது என்பது முக்கியம்.

2) உங்களுக்கு வசதியானபடி சம்மணமிட்டோ, பத்மாசனத்திலோ, நாற்காலியிலோ அமருங்கள். நீண்ட நேரம் அமர்கையில் உங்களுக்கு சிரமமாக இருக்கும்படியாக மிக இறுக்கமாக அமராதீர்கள். அதே நேரம் கூன் போட்டோ, விறைப்பாகவோ இல்லாமல் முடிந்த அளவு நேராக நிமிர்ந்து இருங்கள். உதாரணத்திற்கு வயலின் தந்தி மாதிரி இருக்கச் சொல்கிறார்கள். ஒரேயடியாக இறுக்கமாகவோ, தளர்ச்சியாகவோ இல்லாமல் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

3) உங்கள் வலது உள்ளங்கை இடது உள்ளங்கையின் மீது இருக்கும்படியாக கைகளை திறந்த நிலையில் மடியில் வைத்துக் கொள்ளவும் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டாம். கண்களை மூடியோ, லேசாகத் திறந்தோ வைத்துக் கொள்ளலாம்.

4) உங்கள் கவனத்தை வயிற்றுப் பகுதியில் வையுங்கள். உங்கள் உள் வாங்கும் மூச்சினால் உங்கள் வயிறு விரிவடைவதையும், வெளி விடும் மூச்சினால் வயிறு குறுகுவதையும் கவனியுங்கள். உங்கள் கவனத்தை அதைத் தவிர வேறெதிலும் வைக்க வேண்டாம். ஆரம்ப நாட்களில் அதை விரிவடைகிறது, குறுகுகிறது என்று மனதில் பெயரிட்டு கவனத்தை பலப்படுத்தலாம். ஆனால் அதற்கு மேல் உங்கள் மூச்சை அலசப் போக வேண்டாம். உள் மூச்சு ஆழமாகிறது வெளிமூச்சு முழுமையாக இல்லை போன்ற விமரிசனங்களுக்குப் போகாதீர்கள்.

5) போகப் போக அந்த பெயரிட்டு அழைப்பதையும் நிறுத்தி வயிர்றின் அசைவுகளை மட்டும் உணர ஆரம்பியுங்கள். இது படிக்க சுலபமாக இருக்கலாம். ஆனால் நடைமுறையில் அவ்வளவு சுலபமில்லை. வேண்டுமானால் உங்கள் கைகளை முன்பு சொன்ன நிலையிலேயே வயிற்றை ஒட்டினாற் போல் வைத்துக் கொள்ளலாம். கைகளாலும் அந்த அசைவுகளை உணர்வது தியானத்தை ஆழப்படுத்த உதவும்.

6) மூச்சை நீங்களாகக் கட்டுப்படுத்த முயலாதீர்கள். அது இயல்பாக இருக்கட்டும். மூச்சினால் ஏற்படும் வயிற்றசைவில் மட்டும் வைக்கையில் நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கிறீர்கள். அப்போது அடுத்த அசைவைப் பற்றி சிந்திக்காதீர்கள். உதாரணமாக உள்மூச்சின் அசைவில் கவனம் வைக்கையில் வெளிமூச்சின் அசைவைப் பற்றி முன்பே நினைக்க ஆரம்பிக்காதீர்கள். உங்களைப் பொறுத்த வரை அந்த ஒரு கணம் மட்டுமே கவனமிருக்கட்டும். மனம் ஆரம்பத்தில் முரண்டு பிடிக்கும். கடந்த காலத்திலும், எதிர்காலத்திலும் கவனத்தை பெரும்பாலும் சிதற வைக்கும் மனதிற்கு நிகழ்காலம், அதுவும் சுவாரசியம் இல்லாத இந்த மூச்சு ஏற்படுத்தும் அந்த ஒரே அசைவில் கவனம் வைப்பது இமாலயப் பிரயத்தனமாகவே இருக்கும். ஆனால் அவசரமில்லாமல், அலைபாயாமல் அந்த நிகழ்கால கணத்தின் அந்த அசைவில் மட்டுமே மனம் வையுங்கள்.

7) மனம் எத்தனை முறை அலைபாய்ந்தாலும் சலிக்காமல் அதைத் திரும்ப வயிற்றின் அசைவுக்குக் கொண்டு வாருங்கள். இதெல்லாம் நமக்கு சரிப்படாது என்று ஆரம்பத்தில் தோன்றலாம். அது இயற்கையே. ஆனால் எந்தப் புதிய வித்தையும் ஆரம்பத்திலேயே சுலபமாகக் கை கூடாது என்கிற போது அது கைகூடுகிற வரை பொறுமையுடன் பயிற்சி செய்யத் தான் வேண்டும் என்கிற போது இந்த தியானப் பயிற்சியில் ஆரம்பத்திலேயே வெற்றி கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வீண் அல்லவா?

8) சில நாட்கள் இப்படியே இந்த தியானத்தை சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் செய்யுங்கள். பின் அடுத்த கட்டமாக மனம் எப்போதெல்லாம் மூச்சின் அசைவை விட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்துகிறதோ அதன் செயலுக்கு ஒரு பொதுவான பெயரை வைத்து உணர்ந்து திரும்ப மூச்சின் அசைவுக்கே மனதைக் கொண்டு வாருங்கள். உதாரணத்திற்கு கவனம் வெளியே ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்பதிற்கு சென்றால், சுருக்கமாக “சத்தம்” என்று மட்டும் என்று பெயரிடுங்கள். அடுத்த கணம் மீண்டும் மூச்சின் அசைவுக்கு கவனத்தைக் கொண்டு வாருங்கள். மனம் வேறு எதையோ நினைக்கிறது என்று எடுத்துக் கொண்டால் “நினைப்பு” என்று பெயரிட்டு மறுபடியும் மூச்சின் அசைவுக்குக் கொண்டு வாருங்கள். கால்வலிக்கிறது என்று மனம் சொன்னால் “வலி” என்று பெயரிட்டு உடனடியாக கவனத்தை மீண்டும் திருப்புங்கள்.

9) நீங்கள் கவனச் சிதறல்களுக்கு வைக்கும் பெயர் எப்போதும் பொதுவாகவும் ஒரு சொல் அளவாகவே இருக்கும்படி சுருக்கமாகவும் இருக்கட்டும். வேறெதையும் நினைக்கவே கூடாது என்று தீர்மானமாக உட்கார்ந்தால் கண்டிப்பாக தோற்றுப் போவீர்கள். மனம் கட்டுப்பாடுகள் அதிகமாக அதிகமாக முரண்டும் அதிகமாகவே பிடிக்கும். மாறாக ஒவ்வொரு கவனச்சிதறலையும் நீங்கள் அறிந்திருந்து, அதற்கு ஒரு பெயர் வைத்து அங்கீகரித்து, சலிக்காமல் உங்கள் கவனத்தை உடனடியாக மீண்டும் திருப்புவதே பெரிய வெற்றி.

10) கவனம் சிதறுகிறது என்பதை உடனடியாக உணர்வதும், அது எது விஷயமாக என்று பொதுவாக அறிந்திருப்பதும், அது விஷயமாக மேற்கொண்டு சிந்தனையை நீட்டிக்காமல் எங்கு கவனம் வர வேண்டுமோ அங்கு உடனடியாக மனதைக் கொண்டு வர முடிவதுமே தியானத்தில் முதல் பெரிய வெற்றி. கவனச் சிதறல் எதிலோ ஆரம்பித்து அதிலேயே தொடர்ந்து சில நேரம் இருந்து அதை அறியாமலேயே இருப்பது தான் தியானத்தின் எதிர்மாறான நிலை.

11) உட்கார்ந்த நிலை சில நிமிடங்கள் கழித்து அசௌகரியத்தை ஏற்படுத்தினால் தாராளமாக மாறி உட்கார்ந்து கொள்ளுங்கள். ஆனால் அந்த எண்ணம் தோன்றியவுடனேயே மாற்றம் என்று பெயரிட்டு அந்த எண்ணத்தை அங்கீகரித்து முழுக் கவனத்துடன் மாறி உட்கார்ந்து மறுபடியும் வயிற்றின் அசைவிற்கு கவனத்தைக் கொண்டு வாருங்கள்.

12) இப்படி இந்த உள்நோக்கு தியானம் உங்கள் கவனம் செல்லுமிடங்களைக் கூர்மையாக அறியச் செய்வதுடன் கவனத்தின் மீது உங்கள் ஆளுமையை வளர்த்த உதவுகிறது.

13) நாளடைவில் தியானத்தில் இருக்காத நேரங்களிலும் உங்களுக்குள் ஏற்படும் உணர்வுகளை அறிந்திருக்க இந்த தியானப் பழக்கம் உதவுகிறது. கோபம் வருகிற போது “கோபம்” என்று பெயரிட்டு அறியும் அளவு விழிப்புணர்வு இருந்தால் கூட மனதிற்கு கவனத்தை அதிலிருந்து வேண்டும் இடத்திற்கு திருப்பவும் எளிதில் முடியும் என்பது அனுபவம்.

விபாசனா என்னும் இந்த உள்நோக்கு தியானம் வாழ்க்கை முறையாக பரிணமிக்கும் போது வாழ்க்கை ஆழப்படுகிறது. அதைப் பற்றி ஒரு புத்தகமே எழுதக் கூடிய அளவு மேலும் பல பயிற்சிகள் இருக்கின்றன என்றாலும் நம் தற்போதைய குறிக்கோளுக்குத் தேவையான அளவு அறிந்து விட்டோம் என்பதால் இனி மற்ற தியானங்களுக்குச் செல்வோம்..

மேலும் பயணிப்போம்....