04/02/2019

இராகம்...


இராகத்தைத் தமிழிசையில் நிரம் என்று அழைப்பர்..

இந்துஸ்தானி இசையில் இராக வகைகள் பத்து "தாட்" (அடிப்படை ராக உருவம்) - களின் அடிப்படையில் வகுக்கப்பட்டிருக்கின்றன.

தென் இந்தியாவில் ராகங்கள் 72 மேளாகர்த்தா ராகங்களின் அடிப்படையில் ஜனக - ஜன்ய ராகங்களாக வகுக்கப்படுகின்றன. 36 மேலகர்த்தா இராகங்கள் ப்ரதி மத்தியத்திலும்... 36 இராகங்கள் சுத்த மத்தியத்திலும் அமைந்திருக்கின்றன.....

‌இராகம் என்பது இந்திய பாரம்பரிய இசையில் பயன்படுத்தப்படும் இசை வடிவங்கள். இவை வைதீக இசையின் அடிப்படையில் அமைந்துள்ளன என்று பலர் கூறுகின்றனர்.

இந்திய பாரம்பரிய இசை இராகங்களின் அடிப்படையில் அமைக்கபட்டிருக்கின்றது. இராகம் கேட்பதற்கு இனிமையைத் தரும் வகையில் ஒரு தனித்தன்மையைக் கொண்ட சில குறிப்பிட்ட சுரங்களின் சேர்க்கையைக் குறிக்கும்.

இராகம், ஒரு பாட்டை எவ்வாறு உருவாக்கலாம் என்று காட்டும் விதிகளை விளக்குகின்றன எனலாம். அது இசை மேலே செல்லும் போதும் (ஆரோகனத்தில்) கீழே செல்லும்போதும் (அவரோகனத்தில்) எந்த ஸ்வரங்களை வரிசையில் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடுகிறது.

ஒவ்வொரு இராகத்திலும் ஐந்து, ஆறு அல்லது ஏழு ஸ்வரங்கள் இருக்கும்.

வெகு சில இராகங்களில் மட்டும் நான்கு அல்லது மூன்று ஸ்வரங்களோ, அல்லது ஏழுக்கு மேல் ஸ்வரங்கள் (அன்னிய ஸ்வரங்களை கூட்டி) வரலாம். ஐந்து ஸ்வரங்கள் கொண்ட ராகங்கள் ஔடவ ராகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆறு ஸ்வரங்கள் கொண்ட இராகங்களுக்கு ஷாடவ ராகம் என்ற பெயர் உண்டு.

எல்லா ஏழு ஸ்வரங்களையும் கொண்டுள்ள ராகங்கள் சம்பூர்ண ராகங்கள் என்றழைக்கப்படுகின்றன.

ஒரு ராகத்தின் ஆரோகனத்திலோ அவரோகனத்திலோ ஸ்வரங்கள் சரியான வரிசையில் இல்லையென்றால் இது வக்ர ராகம் என்று அழைக்கப்படும்.

கர்நாடக இசையில், ஏழு ஸ்வரங்களையும் சரியான வரிசையில் கொண்டுள்ள 72 ராகங்கள் இருக்கின்றன. இவற்றிற்கு மேளகர்த்தா இராகங்கள் என்ற பெயர் உண்டு...

உலகை அசத்தும் தமிழக சிறுவன்.! பாராட்டுக்கள் தம்பி...


நோயறிதலும், சோதிடமும்...


எந்த வகை மருத்துவமாக இருந்தாலும் அதன் அடிப்படை நோயறிதல் (diagnosis) ஆகும்.

நோயின் தன்மை, அதன் தீவிரம் போன்றவைகளை அறிந்தால் மட்டுமே முறையான சிகிச்சை என்பது சாத்தியமாகும்.

ஒவ்வொரு வகை மருத்துவமும் தனக்கே உரித்தான சில பிரத்யேக நோயறியும் முறைகளை கடைபிடிக்கிறது.

இவற்றில் எது சிறந்தது, எது சரியானது என்பதெல்லாம் விவாதங்களுக்கு உரியது. இந்தப் பதிவு அதைப் பற்றியதுமில்லை.

சித்த மருத்துவத்தில் மனித உடலானது வாத, பித்த, சிலேத்தும என மூன்று வகையாக கூறப்படுகிறது.

வாத, பித்த, சிலேத்தும சமநிலையில் மாற்றங்கள் ஏற்படும் போது அவை தொடர்பான நோய்கள் தலையெடுக்கிறது.

சித்த மருத்துவத்தில் வாத நோய்கள் என என்பதும், பித்த நோய்களென நாற்பதும், சிலேத்தும நோய்கள் என தொண்ணூறும் கூறப்பட்டிருக்கின்றன.

சித்த மருத்துவத்தில் நோயறிய சோதிடத்தையும் பயன்படுத்தி இருக்கின்றனர் என்பது பலரும் அறிந்திருக்காத செய்தி.

அந்த வகையில் புலிப்பாணி சித்தர் அருளிய புலிப்பாணி வைத்திய காவியம் என்னும் நூலில் காணக்கிடைக்கும் ஒரு நோயறியும் முறை பற்றியதே இந்தப் பதிவு.

பாரப்பா இன்னமொரு விவரங்கேளு
பகர்தனுங் குருசனியும் வாதநாடி
சீரப்பா துர்க்கிரகம் சூரிசேயும்
சிறப்பான பாம்புகளும் பித்தநாடி
நேரப்பா பால்மதியும் சுங்கன்தானும்
நேர்மையுள்ள சிலேட்டுமத்தின் கிரகமென்று
வீரப்பா போகருட கடாட்சத்தாலே
விவரமெலாம் புலிப்பாணி விளம்பக்கேளு.

- புலிப்பாணி.

ஒருவருடைய ஜாதகத்தை ஆராயும் போதே ஜாதகனுக்கு வரப்போகிற அல்லது வந்திருக்கின்ற நோயைப் பற்றி தெளிவாக அறியலாம் என்கிறார் புலிப்பாணிச் சித்தர்.

புதன், குரு மற்றும் சனி 6-ஆம் வீட்டு அதிபதி ஆனால் வாத நோய் பீடிக்கும் என்றும், சூரியன், செவ்வாய், 6-ஆம் வீட்டு அதிபதி ஆனால் பித்த நோய் பீடிக்கும் என்றும், 6-ஆம் வீட்டில் இராகு, கேது நின்றாலும் பித்த நாடி நோய்ப் பாதிக்குமாம்.

சந்திரன், சுக்கிரன் 6-ஆம் வீட்டு அதிபதியானால் சிலேத்தும நோய் உண்டாகுமாம்.

மேலும், 6-ஆம் வீட்டின் அதிபதி கேந்திர திரிகோணங்களில் நின்று குரு பார்வை இன்றி இருப்பின் நோய் தாக்கம் (6-ஆம் வீட்டில் அதிபதியின் நாடியைப் பொறுத்து) அந்த நாடியை பொறுத்து அதிகரித்துக் காணப்படும் என்கிறார்.

வாதநாடி: குரு, புதன், சனி
பித்த நாடி: சூரியன், செவ்வாய், இராகு, கேது
சிலேத்தும நாடி: சந்திரன், சுக்கிரன்

இரத்த அழுத்தம், இருதய நோய், நரம்பு வலி, நரம்பு பிடிப்பு, காக்காய் வலிப்பு, பக்கவாதம், வாயு போன்றவை வாத நோய்கள்.

சீரணம் தொடர்பான பிரச்சினைகள், வயிற்றுவலி, வயிற்றுப்புண், மஞ்சட் காமாலை, இரத்தச் சோகை, இரத்த வாந்தி, கல்லீரல் மற்றும் பித்தப்பை பிரச்சினைகள் பித்த நோய்கள்.

மூச்சுவிடுதல், மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, தடுமன், இருமல், சயம், ஆஸ்துமா போன்றவை சிலோத்தும நோய்கள்...

தமிழகத்தில் தமிழர்களை வந்தேறி என்கிறார்கள்/தமிழகத்திற்கு பஞ்சம் பிழைக்க வந்த தெலுங்கு மதிமுக தனமணி..


https://youtu.be/1DuIpqbojZ0

Subscribe the channel for more news...

அரசுப் பள்ளி ஆசிரியனின் பெருமையைப் பாருங்கள்...


எங்களது ஆசிரியரை இடம் மாற்ற வேண்டாம் என முதன்மைக் கல்வி அலுவலரின் கால்களில் விழுந்து கதறும் செங்கம் மேனிலைப் பள்ளி மாணவிகள்.

இந்நிகழ்வு எந்த தனியார் பள்ளியிலாவது நிகழுமா. இது தான் அரசுப் பள்ளி ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே உள்ள பாசப் பிணைப்பு. அருமையான பள்ளி...

ஆசிரியரை அவமதிக்கும் பல பேருக்கு தெரியட்டும்...

சிபிஐயின் புதிய இயக்குர் ரிஷிகுமார் சுக்லா...


டெல்லி: சிபிஐயின் புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா நியமிக்கப்பட்டு உள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான குழு அவரை நியமித்துள்ளது.

சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மாவும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியதையடுத்து, இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது.

சிபிஐ இணை இயக்குநர் நாகேஸ்வர ராவை தற்காலிக சிபிஐ இயக்குநராகவும் மத்திய அரசு நியமித்தது.அதை எதிர்த்து, சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் உத்தரவு செல்லாது, அலோக் வர்மா மீண்டும் இயக்குநர் பதவியைத் தொடரலாம் என்றும கடந்த 10-ம் தேதி உத்தரவிட்டது.

மேலும், அலோக் வர்மா குறித்த இறுதி முடிவைப் பிரதமர் தலைமையிலான உயர்நிலைக் குழு முடிவு செய்யும் என்று தெரிவித்திருந்தது. அதையடுத்து அலோக் வர்மாவை பதவி நீக்கம் செய்து பிரதமர் மோடி தலைமையிலான உயர் நிலைக்குழு அதிரடியாக அறிவித்து சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் தொடருவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் பொதுநல மனு தாக்கல் செய்தார்., சிபிஐ இயக்குநர் பதவி என்பது முக்கியமானது என்பதால் நீண்ட நாட்களுக்கு இடைக்கால இயக்குநரை நியமிப்பது சரியாகாது. எனவே, உடனடியாக முழுநேர இயக்குநரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, பிரதமர் மோடியின் தலைமையில் சிபிஐ அமைப்புக்கு புதிய இயக்குநரை தேர்வு செய்ய இருமுறை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஆனால் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.இந் நிலையில், பிரதமர் மோடியின் தலைமையில் டெல்லியில் மீண்டும் உயர் மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் இறுதியான முடிவு எடுக்கப்பட்டு, சிபிஐயின் புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா நியமிக்கப்பட்டு உள்ளார்.அலோக் வர்மாவை நீக்கியதை தொடர்ந்து ரிஷிகுமார் சுக்லா, சிபிஐயின் புதிய இயக்குநராக அறிவிக்கப் பட்டுள்ளார்.

அவர் 2 ஆண்டுகள் இந்த பணியில் இருப்பார். ரிஷிகுமார் சுக்லா, மத்திய பிரதேசத்தில் டிஜிபியாக அவர் பணியாற்றியவர், 1983ம் ஆண்டு ஐபிஎஸ் பதவிக்கு தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது...

மாயமாக மறைந்த ஒரு கிராமம் – விடையின்றி தொடரும் மர்மம்...


அஞ்ஜிகுனி, கனடாவில் ஒதுக்குப்புறமாக மலையைச்சார்ந்து அமைந்திருந்த கிராமம்.

சுமார் 2000 மக்கள் சாதாரணமாக வாழ்ந்து வந்தார்கள்.

ஏரியில் மீன் பிடித்து விற்பதை முக்கிய தொழிலாக கொண்டிருந்தார்கள் அவர்கள்.

1930 ஆம் ஆண்டு கார்த்திகை ( நவம்பர்) மாதம் ஒரு நாள்…

பொறி வைத்து விலங்குகளை பிடிக்கும் தொழிலை மேற்கொண்ட ஜோலபல் என்பவர் அந்த ஊருக்கு சென்றார்.

அது முதல் தடவையல்ல… பல தடவைகள் அவர் அந்த ஊருக்கு சென்றுள்ளார்.

ஆனால் அன்று சற்று வித்தியாசமாக இருந்தது ஊர். ஊருக்குள் கால் வைத்தது முதல் யாரையும் அவர் காணவில்லை. ஊரின் மையப்பகுதிக்கு சென்றும் அவர் கண்களில் யாரும் அகப்படவில்லை. வீட்டுக்கதவுகள் திறந்து கிடந்தன. வீட்டிற்குள் சென்று பார்த்தால் சமைத்த உணவுகள் அப்படியே கிடந்தன. பாதி தைத்த உடைகளில் ஊசி கூட வெளியில் எடுக்கப்படாமல் இருந்தது.
இறுதியாக இரு வாரங்களுக்கு முதல் கூட அங்கே வந்திருந்தார் ஜோ.

கிராமத்தவர்கள் அனைவருமே கலகலப்பானவர்கள். சுமூகமான சமூகம்.
ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்த ஜோ, பகுதி காவலர்களுக்கு அறிவித்தார்.

அவர்கள் தேடியும் அந்த கிராமத்திற்கு என்ன நடந்தது? அங்கிருந்தவர்கள் எங்கே? போன்ற கேள்விகள் தேங்கித்தான் நின்றன.

சுற்று முற்றும் தேடி விசாரித்ததில்…

ஊரின் மறு முனையில் வண்டில்களை இழுத்து செல்லும் நாய்கள் இறந்து கிடந்தன. ( 7 நாய்கள் என்று சில தகவல்களும் சிலது 3 எனவும் மாறுபட்டு இணையத்தில் உள்ளது.) அந்த நாய்கள் எவ்வாறு இறந்தன என்பதை அப்போது பெரிதாக யாரும் சோதனையிடவில்லை.

அருகில் உள்ள ஊரைச்சேர்ந்த பலர் அந்த ஊரின் மலைப்பகுதியில் வெளிச்சத்தத்தை பார்த்ததாக கூறினார்கள்.

கூறப்படும் காரணங்கள்.

வேறு இடம் பெயர்ந்திருப்பார்கள் - சகல வசதிகளும் இருக்கும் அந்த மக்கள் பொருட்களை அப்படி அப்படியே விட்டு விட்டு கிளம்பிப்போக வாய்ப்பில்லை. அப்படி போய் இருந்தாலும் எங்கே?

படையெடுப்பு - ஏதோ ஒரு ஊரைச் சேர்ந்தவர்கள் படையெடுத்து சிறைப்பிடித்திருப்பார்கள். ஊரில் படையெடுப்பு நடந்தமைக்கான எந்த அறிகுறிகளும் இருந்ததில்லை. படையெடுப்பு அமைதியாக நடைபெற வாய்ப்பும் இல்லை.

வெம்பயர், காட்டேர்களின் தாக்குதல் - குறிப்பிட்ட காலத்தில் வெம்பயர்கள் தொடர்பான அதீத நம்பிக்களைகள் இருந்தமையால் இந்த கருத்து வெளியிடப்பட்டிருக்கலாம். மனித இறப்புக்களுக்கான சான்றுகளோ இரத்த அடையாளங்களோ கிராமத்தில் கண்டு பிடிக்கப்படவில்லை.

ஏலியன்ஸ் - பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்கள் மலையில் வெளிச்சத்தை பார்த்ததாக கூறியதன் படி, ஏலியன்ஸ் ஒரே தடவையில் அந்த ஊர் மக்களை/ உயிரினங்களை மட்டும் கடத்தி இருக்க கூடும்.

பரிமாணம் - அந்த ஊர் மக்கள் பரிமாண மாற்றத்தில் மறைந்திருக்கலாம். இதுவும் சற்று குழப்பமானது. விரிவாக பின்னர் பார்க்கலாம்.

எமது கருத்துப்படி, மறை உலகம்.. கிட்டத்தட்ட இது பரிமாணத்தை ஒத்துப்போகும்.

இவ்வாறு பல கருத்துக்கள் கூறப்பட்டாலும், இந்த கிராம மக்கள் காணாமல் போய் 83 வருடங்களைத் தாண்டியும் இன்னமும் இதற்கான விடையை கனேடிய போலிஸாரும் ஆய்வாளர்களும் கண்டறிய முடியாதுள்ளனர்...

ஆவிகள் - பேய்கள் பற்றிய உண்மைகள்...


1.பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே விரும்பும். எனவே தான் அறைகளில் நறுமணம் அல்லது வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன.

2.பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோன உடல்களை சுற்றியோ அல்லது சுடுகாட்டிலோ இருக்காது. எப்பவுமே கோவில்கள், ஆலயங்கள் என வழிபாட்டுத் தலங்களை அண்டியே சுற்றிய படி இருக்கும். சிலநேரம் பாழடைந்த கட்டடங்களை அண்டியும் இருக்கும்.

3.பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல. விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும்.

4.பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல விரும்பாதவ்ரகள் தான் கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக சுற்றும்.

5.பேய்கள் உறங்குவதில்லை. தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும் வரை அலைந்தபடியே இருக்கும்.

6.பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள் எதிர்காலம் நன்றாகவே தெரியும். சில நேரங்களில் அவை கனவுகளின் மூலம் வெளிப்படுத்த முயற்சி செய்யும்.

7.பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காணமுடியும். உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக் கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம்.

8. பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உணர்ச்சிகள் (feelings) உண்டு. ஆனால் உணர (sense) முடியாது.

9.பேய்கள் அல்லது ஆவிகள் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அல்லது தன் சாவுக்கு காரணமானவர்களுக்கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக் கொள்ள முயற்சிக்கும்.

10.பேய்கள் அல்லது ஆவிகளால் கொலை செய்ய முடியாது. ஆனால் ஒருவன் தன்னைத்தானே கொலை செய்யும் அளவுக்கு தூண்டி விடும் சக்தி உண்டு.

11. பேய்கள் அல்லது ஆவிகளால் தரையை கால்களால் தொட முடியும். கைகளாலோ அல்லது உடலின் வேறு பகுதிகளாலோ அல்ல. எனவே தான் உங்களால் அவைகளின் காலடி ஓசையை கேட்க முடியும்.

12.பேய்கள் அல்லது ஆவிகளால் ஒரு மனித உடலில் புகுந்து மற்றொருவருடன் தகவல் தொடர்பு கொள்ள முடியும்.

13.பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்கள் மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள் வீட்டில் அருகில் இருக்க முடியும்.

14.பேய்கள் அல்லது ஆவிகள் இறந்து போனவரின் உடலை அடக்கம் செய்யும் வரை அவர்களை பற்றி யார் பேசிக் கொண்டு இருந்தாலும் அருகில் நின்று கேட்கும் குணம் உண்டு.

15. பேய்கள் அல்லது ஆவிகளை சாதாரணமாக் காணக்கூடியவர்களின் இரத்த பிரிவு (Blood Group) ‘O’ (+) அல்லது O’ (–) ஆக இருக்கும். மற்றவகை இரத்த பிரிவு உள்ளவர்களின் கண்களுக்கு தெரிவது அபூர்வம்.

16.குழந்தைகளாக இறந்து போயிருந்தால் பேய்கள் அல்லது ஆவிகள் தேவதைகள் என அழைக்கப்படுவார்கள்.

17.பேய்களால் சும்மா இருக்க முடியாது. எப்பொழுதும் தங்கள் மேல் கவனம் இருக்க வேண்டும் என்பதற்காக மற்றவர்களை தொந்தரவு செய்த படியே இருக்குமாம்.

18.பேய்கள் எப்போதுமே தாங்கள் இறந்து விட்டதாக நினைப்பது இல்லை. எதாவது ஒன்றை செய்து தான் இறக்கவில்லை என்பதை நிரூபிக்க முயற்சிக்கும்.

19.பேய்கள் பல்வேறு விதங்களில் மனிதர்களுடன் தொடர்பு கொள்ளுகின்றன.. கனவுகள், மர்ம குறியீடுகள், தானாக எழுதுவது, சத்தம், புகை, போன்ற பல்வேறு வகையான தந்திரங்களை பயன்படுத்துகின்றன.

20.பேய்களுக்கு வாசனை மோப்பசக்தி அதிகம். சில வாசனைகளை அவைகள் நுகர்ந்த்து அது பிடித்து விட்டால் அங்கே தன்னை இருக்க வைக்க முயற்சிக்கும். சில வகை பெர்ஃபியூம் வாசனைகளும் ரொம்ப பிடிக்கும்.

21. பேய்களுக்கு நேரம் காலம் தெரியாது என்றாலும், நள்ளிரவு நேரங்களில் பகலை விட கூடுதலாக அலையும். எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், சத்தங்கள் இருந்தால் பேய்கள் வராது என்று நினைப்பவர்களும் உண்டு. ஆனால், பேய்களால் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் வேகத்தையும், அதன் இயக்கத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் சக்தி நிச்சயமாக உண்டு.

22.அமைதியான இடம், நிசப்த்தமான இடங்கள், நேரங்களில் திடீரென சத்தத்தை உண்டாக்கி திகிலூட்டுவது பேய்களுக்கு பிடித்த விசயம்.

23.பேய்கள் ஒளிக்கீற்று, அமானுஷ்யக் கோடுகள், மூடுபனி, புகார், கருநிழல், நிழலுக்குள் நிழல், மங்கலான தெரிவது, கரு உருவம், காற்றுத் தூசிகள், காற்று சலங்கை சத்தம், பெண்குரல் சிரிப்பு போன்றவைகள் மூலம் தங்களை வெளிப்படுத்துகின்றன. முழு உருவத்தையும் எப்பொழுதும் வெளிப்படுத்துவது இல்லை. ஆனால் சாத்தியம் உண்டு.

24.கூட்டமாக வருபவர்களுக்கு பேய்கள் தன்னை வெளிப்படுத்த விரும்புவதில்லை. அதில் ஒரு ஆளை தேர்ந்தெடுத்து அவரை மட்டுமே பின்தொடர்ந்து செல்லும்.

25.பேய்கள் குழந்தைகள், அல்லது பெண்கள், ஆண்கள் உடலுக்குள் நுழைய முடியும். பேய்களுக்கு நிறை அதிகம் என்பதால் அவைகளுக்கு நிறைய சக்தி தேவை என்பதால் பீடிக்கப்பட்டவர்கள் அதிகமாக சாப்பிடுவார்கள். நிறைய சக்தியை உறிஞசி விடுவதால் பீடிக்கப்பட்டவர்கள் நாளடைவில் மெலிந்து போவார்கள்.

26.பேய்களுக்கு ஞபாக சக்தி அதிகம். வாழும் காலத்தில் நடந்த உணர்வுப் பூர்வமான விடயங்களை , சம்பவங்களை அடிக்கடி நினைத்து பார்க்குமாம். ஆனால், சாவுக்கு காரணமான சம்பவம் தான் அதிகம் நினைவில் நிற்கும். பழிவாங்கும் எண்ணம் ஏற்பட அதுவே காரணமாகும்.

27.குழந்தைகள், மிருகங்களால் பேய்களை அடையாளம் காணமுடியும். மிருகங்களின் மீதும் பேய்கள் இறங்கி அவைகளை தாறுமாறாக செயல்பட வைக்க முடியும்.

28. பேய்களுக்கு உதவி செய்யும் குணம் உண்டு. பல சந்தர்ப்பங்களில், குழந்தைகள் முதல் பெரியவர்களை காப்பாற்றி இருப்பதை நீங்களே கேள்விப்பட்டிருப்பீர்கள். பேய்ப் பிடித்தவருக்கே பல சமயங்களில் உதவி செய்த சம்பவங்களும் உண்டு. அவர் குடும்பத்தினரை கூட ஆபத்துகளில் காப்பாற்றியிருக்கிறது. புதையல்கள், கொலைகளில் துப்புகளை கூட காட்டிக்கொடுத்தும் இருக்கின்றனவாம்.

29. இருப்பிடத்தை விட்டு வெளியே வராத பேய்களும் உண்டு. ஆனால், அந்த வழியாக யார் வந்தாலும் அவர்களை மட்டும் பயமுறுத்தி வேடிக்கை காட்டும் பழக்கம் பேய்களுக்கு உண்டு.

30.பேய்கள் இடம்பெயரும்பொழுது பயங்கர காற்று, காற்றுச்சுழல், நீர்நிலைகள் அதிருதல், சுழிகள் உண்டாகுதல், மரங்களை முறித்தல், கதவுகள் தானாக அடிபடுதல் போன்றவை ஏற்படுகின்றன...

தேரையர் கூறும் வைகைநதியின் சிறப்பு...


தமிழ் மரபின் தொன்மையான அடையாளங்களில் வைகை நதிக்கு சிறப்பிடம் உண்டு.

தமிழ் வளர்த்த பாண்டியர்களின் பொய்யா குலக்கொடியாக இருந்தவள் வைகை நதி என்றால் மிகையில்லை. 

வைகையை கடலில் புகாத நதி  என்பார்கள்.

இதனை புகழேந்தி புலவரின் பழந்தமிழ் பாடல் ஒன்றும் உறுதி செய்கிறது.

நாரியிட பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று
வாரியிடம் புகுதா வைகையே – மாறி
இடத்தும் புறத்தும் இருகரையும் பாய்ந்து
நடத்தும் தமிழ்ப் பாண்டிய நாடு.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மேகமலை எனும் பகுதியில் வைகை நதி உருவாகி வனத்தினூடே இறங்கி வருகிறது.

வரும் வழியில் மேல் மணலாறு, இரவங்கலாறு, மூங்கிலாறு, கலிக்கவையாறு, சுருளியாறு, கூத்தநாச்சி வாய்க்கால், வறட்டாறு என்கிற தேனியாறு உட்பட மேலும் சில சிற்றோடைகள் வைகை நதியில் கலக்கின்றன.

இவை தவிர பழனி மலைக்கு மேற்கே உற்பத்தியாகும் சோற்றுப்பாறை ஆறு, பாம்பாறு ஆகியவை வராக நதியுடன் கலந்து வைகையுடன் இணைகின்றன.

இதுவரை மலைப்பகுதியில் பயணிக்கும் வைகைநதி சமவெளியில் இறங்குமிடத்தே அதனுடன் மஞ்சளாறு, மருதா நதி  போன்ற ஆறுகளும் இணைந்து கொள்கின்றன.

சமவெளியில் மதுரைக்கு அருகே சாத்தையாறு என்கிற ஓடையும், மானாமதுரை அருகே உப்போடையும் வைகை நதியில் கலக்கின்றன.

இத்தனை நதிகளின் சங்கமமான வைகை பொங்கிப் பெருகி பாண்டியநாட்டின் வளத்திற்கும் செழிப்பிற்கும் காரணமாய் அமைந்திருந்தது.

பாண்டிய மன்னர்களின் சிறப்பான நீர்மேலாண்மையின் காரணமாக நதிவெள்ளத்தை வீணாக்கிடாமல் முறையாக எல்லா பகுதிகளுக்கு பிரித்து ஏரிகள், குளங்கள், ஊருணிகள் என நிரம்பச் செய்யப்பட்டன.

இதன் காரணமாகவே வைகை கடல் புகா நதியாயிற்று.

வைகையாற்றின் மொத்த நீளம் 258 கிலோமீட்டர். இதில் பெரும்பகுதி மலையிலும், வனப்பகுதிகளிலும் பயணித்து வருகிறது.

இதனால் வைகை நீரில் மூலிகை குணங்கள் நிறைந்திருந்தன. இதனை தேரையரின் ஒரு பாடலும் உறுதி செய்கிறது.

தேரையர் அருளிய "பதார்த்த குண சிந்தாமணி" எனும் நூலில் உள்ள ஒரு பாடல் வைகை நதியின் சிறப்பினை பின்வருமாறு குறிப்பிடுகிறது.

வைகை நதிப்புனலால் வாதநீர் குஷ்டோடுமெஉச்
செய்கைதவிக் குஞ்சோபை திண்கரப்பான் - மெய்யெரிவு
தாகநடுக்கனிலந் தாதுநஷ்டஞ் சிலவிடமும்
ஏகுமிந்த வையம் விடுத்தே.

வைகை நதியின் நீரானது வாதநீர், குஷ்டம், சோபை, கரப்பான், உடல் எரிவு, தாகம், நடுக்குவாதம், தாது நஷ்டங்கள் நீங்குவதுடன் சில வைகையான விஷ முறிவிற்க்கும் பயன்படும் என்கிறார் தேரையர்.

இத்தனை சிறப்பு வாய்ந்ததாக திகழ்ந்த வைகை நதி இன்று கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் ஒரு நதியாக இருப்பது மிகவும் வருந்தத் தக்கது...

பாஜக வின் சதிகள்...


1881 வரை இல்லை மெரினா கடற்கரை-நம்ப முடிகிறதா...


உலகமக்கள் அனைவருக்கும் சென்னை என்றவுடன் நினைவிற்கு வருவது மெரினா தான்.சென்ற சனவரிக்கு 2017 முன்னர் எப்படியோ தெரியவில்லை! ஆனால் சனவரியில் நடந்த ஏறுதழுவலுக்கான போராட்டத்தின் பிறகு மெரினா என்றால் அறிந்திறாத உலக வாசிகள் இருக்கமுடியாது என்றே சொல்லலாம்.

ஆம். மெரினா என்பது இயற்கை நமக்கு தந்த சூழல் என்று கூறுவதைவிட நம் இளைய சமுதாயம் நமக்கு தந்த மன நிறைவை முன்னிறுத்திய ஒரு வரலாற்றுச் சின்னமாகவே தோன்றுகிறது.

இந்த மெரினா என்று பெயர் சூட்டப்பட்ட ஆசியாவின் இரண்டாவது நீளமான அழகான கடற்கரை 1880ம் ஆண்டுகளில் இருந்திருக்கவில்லை என்றால் நம்புவீர்களா.

நீங்கள் நம்புவதற்கான சான்றுகள் இதோ படியுங்கள்...

மெரினா கடற்கரை 1881 ம் ஆண்டு வரை இல்லை, அதற்கு முன் இது எல்லா கடற்கரைகளை போலவே இருந்துள்ளது. அதாவது சென்னை முதல் இராமேஸ்வரம் வரை கடற்கரை இருந்தாலும் சுற்றுலா தளமாக மக்கள் வந்து போக ஏதுவான இடமாக ஒரு சில கடற்கரைகளே உள்ளது அல்லவா! அப்படியே மெரினாவும் வெறும் கடலும் கடல் சார்ந்த காடுகளாகவும் மட்டும், 1881 வரை இருந்துள்ளது. ஆனால் சுமார் 150 ஆண்டுகளாக மெரினா கடற்கரை ஒட்டியுள்ள துறைமுகம் இருந்துள்ளது.

இன்று நாம் காணும் மெரினா என்கிற 13.கி.மீ. நீண்ட நெடும் கடற்கரை உருவாக காரணமாக இருந்தவர் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் 1881ல் மதராசு கவர்னராக அதிகாரத்தில் இருந்த சர்.மவுண்ட் ஸ்டூவர்ட் எல்ஃபின்ஸ்டன் கிரான் டஃப். இந்த கடற்கரைக்கு மெரினா என்ற பெயரை சூடியவரும் இவர் தான்.

வெறும் கடலும் காடுமாக இருந்த மெரினா கடற்கரை 13கி.மீ. நீண்டு விரிந்து கொள்ள தேவைப்பட்ட காலம் வெறும் ஒரு ஆண்டு தான். காடுகளை திருத்தி, மணல்திட்டுகளை சமன் செய்து, மணலை சலித்து குழிகளை நிரப்பி ஒரு வருட காலம் கடின உழைப்பால் உருவானது தான் இந்த மெரினா கடற்கரை. இதே மெரினா கடற்கரை சாலையில் உழைப்பாளர்கள் சிலை அமைந்தது ஒரு வரலாற்று பொருத்தம் என்றே எண்ண வைக்கிறது.

சமீபத்தில் வெளிவந்த மெட்ராஸ் என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் வரியில் ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் பில்டிங் வெறும் செங்கல் மணல் மட்டும் இல்லை எங்களோட இரத்தம் கூட சேர்ந்திருக்குடா என்ற பாடப்பட்டு இருக்கும். இனி அந்த வரிகளில் நாம் மெரினா கடற்கரையும் எங்கள் முன்னோர்களின் இரத்தத்தில் தான் உருவானது என்று தான் சொல்ல வேண்டும்...

சாகர்மாலா திட்டத்திற்காக... கார்ப்பரேட்களின் கைகூலி பாஜக மோடியை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க திட்டம்...


என்ன பாவம் செய்தேன் - குருவிகள்...


இந்தியா தான் முதலிடம் சிட்டு குருவிகளை சுட்டு தள்ளுவதில் செல்போன் மூலமாக...

இரண்டாம் உலகபோரின் போது அதிக அளவில் ரேடாரின் மூலம் தகவல் பரிமாற்றம் நடந்தது.. அப்போது ரேடார் ஆன்டனாவின் மீது பல பறவைகள் தாறுமாறான வேகத்தில் மோதி இறந்து வீழ்ந்தன..

ரேடார்கள் இயங்காத போது பறவைகள் ஆன்டனாவில் மோதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

இறந்த பறவைகள் கருகிபோய் இருந்தன அவை மைக்ரோவேவ் அடுப்பினுள் வைத்து கருக்கியதற்கு ஒப்பாக இருந்தன..

இதற்கு காரணம் என்ன?

பறவைகள் புவியில் உள்ள மிக்குறைந்த அளவுள்ள காந்த புலத்தினை பயன்படுத்தி தம் இருப்பிடத்தையும் தாம் பறக்கவேண்டிய திசையையும் அறிந்துக் கொள்கின்றன..

ஆன்டனா மற்றும் செல்போன் கோபுரங்களில் வெளிப்படும் சக்தி வாய்ந்த மின்காந்த கதிர்வீச்சுக்கள் பறவைகளை கடுமையான குழப்பத்தில் ஆழ்த்துகின்றன..

மின்காந்த அலைகள் பறவைகளை மட்டுமல்ல மனிதனை இரண்டுவகையில் பாதிக்கிறது..

1, மின்காந்த அலைகளின் ஆற்றல் மனிதஉடல்தசைகளின் வெப்பத்தை அதிகரிக்கச்செய்கிறது இதனால் உணர்வுமிக்க மூளை போன்ற உறுப்புகளின் வெப்பநிலை மிக்குறைந்த அளவு உயர்ந்தாலும் மூளையின் செயல்பாடுகளில் மாற்றம் அதிகஅளவில் ஏற்படுகிறது..

2, மின்காந்த அலையில் உள்ள மின்காந்தபுலங்கள் நம் உடலின் முக்கிய உறுப்புகளான மூளை மற்றும் இதயத்தில் உள்ள மிகசிறிய அளவு மின் இயக்கத்தை அதிகஅளவு பாதிக்கச்செய்கின்றன..

பாதுகாப்பு காரணங்களுக்காக செல்போன் கோபுரங்களில் வெளிப்படுத்தப்படும் கதிர்வீச்சின் அளவை கட்டுப்படுத்த சர்வதேச தொலைத்தொடர்பு ஆணையம் ஒரு வரைமுறையை வகுத்த்து என்றாலும் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான கோட்பாட்டை கடைபிடிக்கின்றன..

ஆஸ்திரியா 0.001 வாட்ஸ்/சதுரமீட்டர்

ஸ்விட்சர்லாந்து 0.095 வாட்ஸ்/சதுரமீட்டர்

நியுசிலாந்து 0.5 வாட்ஸ்/சதுரமீட்டர்

பெல்ஜியம் 1.2 வாட்ஸ்/சதுரமீட்டர்

ஆஸ்திரேலியா 2 வாட்ஸ்/சதுரமீட்டர்

கனடா 3 வாட்ஸ்/சதுரமீட்டர்

இந்தியா 9.2 வாட்ஸ்/சதுரமீட்டர்

இந்தியா தான் முதலிடம் சிட்டு குருவிகளை சுட்டு தள்ளுவதில் செல்போன் மூலமாக...

அராஜக திமுக ஒழிக...


தமிழகத்தில் இரண்டு பொய் தேசிய மாயைகள் கட்டியமைக்கப்பட்டுள்ளன...


ஒன்று நாம் எல்லோரும் இந்தியர், நம்நாடு இந்தியா என்றும், இதற்கு மாறாக மற்றொன்று நாம் எல்லோரும் திராவிடர், நம்நாடு திராவிட நாடு என்பதாகும்.

உண்மையில் நாம் இந்தியரா? அல்லது திராவிடரா? இது புலியை நாய் என்றும் அதற்கு மாறாக பன்றி என்றும் வாதிடுவதற்கும் கீழானதாகும். முதலில் ஒரு தேசிய இனம் என்றால் என்ன?

ஒரு குறிப்பிட்ட நிலப் பரப்பில் ஒரு பொதுவான பண்பாடு, மற்றும் பொருளாதார வாழ்வுடன் ஒரு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு கூடி வாழும் குமுகம் தேசிய இனம் என்று வரையறுக்கப்படுகிறது. ஒரு தேசியம் ஒரு மொழியின் அடிப்படையிலேயே அமைகிறது.

இதில் எந்தப் பண்புகளும் இன்றி போலித் தேசியமும், (இந்தியா) போலித் தேசிய இனக் (திராவிட இனம்) கோட்பாடும் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. இதன் உள் நோக்கம் தான் என்ன?

வாய் புண்ணை குணமாக்கலம் வாங்க / Solve Canker Sores...


https://youtu.be/Vh2VFzCWkSU

Subscribe the channel for more tips...

தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே...


ரயில் நிலையம், வங்கி அலுவலகம், பள்ளி, கல்லூரி, மென் பொருள் நிறுவனம், கடைகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், என எங்கும் கடைநிலை ஊழியர் தொடங்கி இடைநிலை ஊழியர் அலுவல் பணியார்கள் வரை எங்கு பார்த்தாலும் வேற்று மாநிலத்தார்களே பணியில் இருக்கிறார்கள்.

மத்திய அரசு தொழில்களுக்கான தகுதி தேர்வுகளும் வட மாநிலத்தவர்களுக்கு சார்பாகவே இருக்கின்றது மேலும் பணியில் அமர்த்தப்படும் ஊழியர்களும் வேற்று மாநிலத்தவர்களாகவே பெரும்பாலும் இருக்குறார்கள். கல்லூரி மேல் படிப்பு தொடங்கி வேலை வாய்ப்பு வரை மத்திய அரசின் தகுதி தேர்வுகளும் பணி அமர்வும் தமிழர்களை புறக்கனித்தே வருகிறது.

மத்திய அரசின் தொழில் துறைகள் மற்றும் நிறுவனங்களில் தான் இந்த அவலம் என்றால், தமிழ்நாடு அரசும் தன் பங்கிற்கு வரம்பற்ற முறையில் அரசு வேலைகளில் வேற்று நாட்டவர்களை வேற்று மாநிலத்தவர்களை அமர்த்துகின்றது, தகுதித் தேர்விற்கான வினாக்கள் கூட வட-இந்தியர்களுக்கு எளிதான வினாக்களாகவே இருக்கின்றது. பணி நியமன முறை வெளிப்படைத் தன்மையற்று மறைமுகமாகவே இருக்கின்றது. இந்த நிலை தொடர்ந்தால் சொந்த மாநிலத்திலேயே தமிழர்கள் இரண்டாம் நிலை குடிகளாகும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

மராட்டிய மாநிலத்தில் மராத்தியர்களுக்கு வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாலும் வேற்று மாநில மக்களின் வரம்பற்ற ஊடுவலால் தங்கள் கல்வி வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார பாதுகாப்பிற்கு அச்சுருத்தல் ஏற்பட்டதாலும் அந்த இடைவெளியை பாசிச இனவாதக் குழுக்கள் தங்கள் அரசியலுக்காகப் பயன்படுத்திக் கொண்டு கலவரங்களை மூட்டியது.

அதே போல கர்நாடகத்திலும் வேற்று மாநில மக்களின் ஊடுருவல் பெங்களூரில் அதிகரித்ததால் கன்னடர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டது, அதனால் கன்னடர்களுக்கும் வேற்று மாநில மக்களுக்கும் இடையில் அசாதாரண சூழல் நிலவுகிறது. கர்நாடக மாநில அரசு தனிச் சட்டம் இயற்றி தனியார் பணிகளுக்கும் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது கன்னடர்களுக்கு முன்னுரிமை பெற்றுத் தந்தது.

இப்படி இருக்க, தமிழ் நாட்டிலோ படித்த தகுதி உள்ள தமிழ் இளைஞர்களே வேலை இன்றி தவித்து வரும் சூழலில் வேற்று மாநில மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது தமிழர்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்.

தமிழரின் பொருளியல் மற்றும் அரசியல் இறையாண்மைக்கு விடப்படும் சவால்.
தமிழ் நாட்டிலும் அனைத்து வேலை நியமனங்களிலும் தமிழர்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் முன்னிரிமை வழங்க வேண்டும்.

மத்திய அரசுப் பணியானாலும் மாநில அரசுப் பணியானாலும் தனியார் வேலை வாய்ப்புகளானாலும் மாநிலத்திற்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் அதில் தமிழர்களே பணி அமர்த்தப்பட வேண்டும், தமிழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உத்தரவாதம் செய்து பணி நிரந்தரம், வேலை பாதுகாப்பு, முதலியனவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

வேலை வாய்ப்பு மற்று வேலைப் பாதுகாப்பு வழங்க வேண்டியது ஒவ்வொரு தேசிய இனத்தின் மாநில அரசின் கடமை. தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை உத்தரவாதம் வழங்க வேண்டியது தமிழ் நாடு அரசின் கடமை.

ஒன்றியமானது ஒரு தேசிய இனத்திற்கான வெளியை தர மறுத்தால் தன்னாட்சிக்கான அரசியல் புரட்சி அங்கு எழும் தனக்காக வெளியை அந்த இனம் உருவாக்கிக் கொள்ளும்...

பாஜக மோடி சொன்னதும்... செய்ததும்...


பொய்யாமொழிப் புலவரான வள்ளுவனை தந்தது தமிழினம்...


விடுதலைப் பாவலன் பாரதியை தந்தது தமிழினம்..

மரணத்தைத் தழுவினாலும் தழுவுவேன், மாற்றான் மகவைத் தழுவ மாட்டேன் என்று மரணத்தை தழுவிய மாவீரன் குலசேகர பாண்டியனை தந்தது தமிழினம்..

உலகின் மூத்தக் குடியாம் தமிழ்க் குடி குறித்தும், உலகின் முதன் மொழியாம் தமிழ் மொழிக் குறித்தும் உலகிற்கு உணர்த்திய பாவாணரைத் தந்தது தமிழினம்..

உலகின் தலைசிறந்த கரந்தடிப்படையை தலைமை தாங்கி நடத்தும் பிரபாகரனைத் தந்தது தமிழினம்..

சிந்திப்போம் தமிழர்களே...

தமிழால் ஒன்றுபடுவோம்..
தமிழுக்காக, தமிழருக்காக ஒன்றுபடுவோம்..

தமிழனையே தலைவனாகவும், வழிகாட்டியாகவும் ஏற்று வீறு நடை போடுவோம்..

சாதியை அறுத்து சமயத்தை மறுத்து இனத்தால் ஒன்றுபடுவோம்...

ஒவ்வொரு மனிதனின் சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் அவனது அகவ நலன் ஒளிந்து கிடக்கிறது இது மார்க்சின் கருதுகோள்..

ஒவ்வொரு மனிதனின் சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் அவனது இனநலன் ஒளிந்து கிடக்கிறது இது நடைமுறைப் பாடம்..

இந்தியத்தையும், திராவிடத்தையும் வேரறுப்போம்..

புதிய தமிழ் தேசியத்தை மீளமைப்போம்...

பாஜக பிரமுகர் கல்யாணராமன் கைது...


முக நூலில் மத சம்பந்தமான பதிவுகள் இட்டதாக எழுந்த புகாரில் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்...

எல்லாம் ஒரு விளம்பரத்திற்காக தான்...

உங்களை நம்புங்கள்.. நிச்சயம் உங்களால் சாதிக்க முடியும்...


1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.

2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.

3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.

4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம்.  அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.

5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.

6. விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.

7.முப்பதுகளைக் கடக்கும் முன்,       மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.

8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.

9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.

10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே     இருக்கட்டும்.

11. வாரம் மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.

12. சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.

13. ஒருவர் இல்லாதபோது அவருடைய சிறப்பம்சங்களையே பேசுங்கள்.

14.  அரட்டைப் பேச்சுக்களையும் அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள்.

15. மற்றவர்களின் தவறுகளை மன்னியுங்கள். ஒரு போதும் மறக்காதீர்கள்.

16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.

17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.

18. மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்.

19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்.

20. உங்கள் நேரத்திற்கும், மற்றவர்கள் நேரத்திற்கும் உரிய மரியாதை கொடுங்கள்.

21. உங்களிடம் இல்லாத தகுதிகள் இருப்பதாக நம்பவோ நம்ப வைக்கவோ முயலாதீர்கள்.

22. உங்கள் திறமைகளை நீங்களே விவரித்துக் கொள்ளாதிர்கள். உரிய நேரத்தில் நிரூபியுங்கள்.

23. மேடைக் கூச்சம், கேமரா கூச்சம் இல்லாமல் இருங்கள்.

24. தண்ணீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துவதும் எதிர்காலத்திற்காக சேர்க்கும் சொத்துக்கள்தான்.

25. உங்கள் தனிப்பட்ட           நம்பிக்கைகளையும் பழக்கங் களையும் மற்றவர்கள் மேல் திணிக்காதீர்கள்.

உங்களை நம்புங்கள்.. நிச்சயம் உங்களால் சாதிக்க முடியும்...

Cancer / கேன்சர் குணப்படுத்துமா ஆவாரம் பூ...


https://youtu.be/SrBblUWurfs

Subscribe the channel for more tips...

ரபேல் கான்டிராக்டை மோடி அரசு தயவால் வென்ற அனில் அம்பானியின் மற்றொரு நிறுவனம் 46000 கோடி கடன் செலுத்த முடியாது என்று தன்னை திவால் என்று அறிவித்துள்ளது - பாஜக மோடி வாழ்க...


https://m.timesofindia.com/business/india-business/rcom-files-for-insolvency/articleshow/67802370.cms?utm_source=facebook.com&utm_medium=social&utm_campaign=TOIMobile

ஊடகங்கள் மக்களுக்கு எதிரானவை.. நம்பாதீர்கள்...


பட்ஜெட் உரையின் போது தம்பிதுரையின் இருக்கை காலியாக இருந்தது...


அ.தி.மு.க.,வின் மூத்த அமைச்சர்கள் இருவர், (வேலுமணி & தங்கமணி?) டில்லிக்கு ரகசியமாக வந்தனர்.

கூட்டணி குறித்த இழுபறிக்கு தீர்வு காணும் நோக்கத்துடன், இவர்களுக்கு, பா.ஜ., அழைப்பு விடுத்திருந்தது.

இதுபோன்ற விஷயங்களுக்காக வரும்போது, டில்லி, தமிழ்நாடு இல்லத்தில் தங்குவதை, இவர்கள் தவிர்ப்பது வழக்கம்.

ஒடிசாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் சிறப்பு விமானம் மூலம் இருவரும் டில்லி வந்து, அன்று மாலையே சென்னை திரும்பினர்.

தமிழக விவகாரத்தை கையாளும், டில்லி மேலிடத்துடன் பேசிய இவர்கள், கூட்டணி குறித்து, மீண்டும் உறுதிமொழியை அளித்துள்ளதாக தெரிகிறது.

இந்த சந்திப்பிலேயே, சில முக்கியமான விஷயங்களும் முடிவு செய்யப்பட்டுள்ளன.

பா.ஜ., 12 தொகுதிகள் கேட்டதாகவும், 8  வரை தர சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை கடைசி நேரத்தில், 9  அல்லது 10 ஆக உயர வாய்ப்புள்ளது.

பா.ஜ., மேலிட வட்டாரங்கள் இதை உறுதிப்படுத்திய அதே வேளையில் தான், தம்பிதுரை திடீரென, டில்லியை விட்டு கிளம்பினார்.

பட்ஜெட்டை புறக்கணித்து, புறப்பட்டுச் செல்லும் அளவுக்கு அவருக்கு என்ன முக்கிய அலுவல்?

தம்பிதுரை கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு சென்றதாக தகவல் வரவே, குழப்பம் மேலும் அதிகரித்தது.

பா.ஜ.,வுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தம்பிதுரையின், பட்ஜெட் புறக்கணிப்புக்கும், டில்லியில் அரங்கேறிய ரகசிய பேச்சுக்கும் தொடர்பு உண்டா?

ஜனாதிபதி உரை மற்றும் பட்ஜெட் மீதான உரை ஆகியவற்றில், ஒவ்வொரு கட்சியும், பங்கெடுத்துப் பேசுவது வழக்கம்.

இதில், அ.தி.மு.க., சார்பாக, வழக்கமாக பேசும், எம்.பி.,க்ககளின் பெயர்கள் தரப்படவில்லை.

'பட்ஜெட் மீதான உரையை, வேறு யாரும் பேச வேண்டாம்; நானே பேசுகிறேன்' என, அ.தி.மு.க., - எம்.பி.,க்களிடம், தம்பிதுரை கறாராக கூறிவிட்டார்..

தம்பிதுரை காங்கிரஸில் சேரப் போகிறார் என்ற வதந்தியும் சிறகடித்துப் பறக்கிறது.

அதிமுக பா.ஜ.,கூட்டணிப் பேச்சு அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறும் வேளையில், அதற்கு எதிர்ப்பான நடவடிக்கைகளும், அ.தி.மு.க.,வில் வேகம் பெறுகின்றன.

இதனால் இறுதி முடிவை எடுப்பதில் ஏற்பட்டுள்ள இழுபறியும் உச்ச கட்டத்தை எட்டிஉள்ளது...

மருள் செடி நன்மைகள்...


ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல்...


ஈஸ்டர் தீவு, தென் அமெரிக்கா நாட்டிற்கு அருகே உள்ள குட்டி தீவு. 17ஆம் நாற்றாண்டில் இந்த தீவு ஐரோப்பியர்களால் கண்டு பிடிக்கப்பட்டது.

இத்தீவு 37 அடி உயர மிகப் பிரம்மாண்டமான சிலைகளுக்கு பெயர் போனது. அத்தீவு ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. தற்பொழுது அத்தீவிலே ஒரு மரம் கூட கிடையாது, ஒரே வகையான புல் வகை மட்டுமே உள்ளது. மொத்தம் 60ற்கும்மேற்பட்ட 200 டன் எடை கொண்ட பிரம்மாண்ட சிலைகள் இருக்கின்றன.இத்தீவுக் கண்டு பிடிக்கப்பட்ட புதிதில், இந்த சிலைகள் எல்லாம் எவ்வாறு வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன என்பது புரியாத புதிராக இருந்ததது.

இத்தீவில் கி.பி. 200 ஆண்டில் 2000 மக்கள் வசித்ததாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இன்றோ வெறும் இரு நூறுக்கும் குறைவான மக்களே வசிக்கின்றனர். 2000 மக்கள் கி.பி. 200 ஆண்டிலே வசித்தால் இப்பொழுதுஅதற்கும் அதிகமாக மக்கள் வசிக்க வேண்டும் அல்லவா? மக்கள் தொகை குறைவதற்கான காரணம் என்ன? மற்றும் எவ்வாறு இந்த சிலைகளை தொழில்நுட்பமோ கொண்டு சென்றனர்? என்ற கேள்விகள் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தின.

கேள்விக்கு பதில் தேடும் விதமாக, அத்தீவில் தொல்பொருள், தாவரவியல் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். நிறைய மரங்களும், உயிரினங்களும் அத்தீவில் இருந்தன என்பதைக் கண்டறிந்தனர். புவியைத் தோண்டி ஆராய்ந்தபோது, நிறைய விதைகள், பறவைகள் மற்றும் வேறு பல உயிரினங்களின் எச்சங்களும், தொன்மங்களும் கிடைத்தன.

இவையெல்லாவற்றையும் விட உருளை வடிவிலான மரம் ஒன்றின் விதையும் கிடைத்தது. இன்று அம்மரம் இவ்வுலகில் இல்லை. அவற்றின் வழி தோன்றலான, சில மரங்களும், அம்மரத்தின் குடும்ப மரங்களும் உள்ளன. எவ்வாறு உருளை மரம் காணாமல் போனது? பல வகை உயிரின்ஙகள் என்ன ஆயின என்பது விஞ்ஞானிகளுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்தது. பல்வேறு ஆய்வு முடிவுகளை மேற்கொண்ட பின், சில உண்மைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

ஈஸ்டர் தீவு பழங்குடியினர் டால்பின் மீன்களை விரும்பி உண்டனர். கடலின் ஆழப் பகுதியில் தான் டால்பின்கள் கிடைக்கும். ஆழப்பகுதியில் மீன் பிடிப்பதற்காக உருளை மரங்களை வெட்டி, கட்டு மரம் செய்வதற்கு பயன்படுத்தினர்.டால்பின் கறி சுவை காரணமாக, நிறைய கட்டுமரங்கள் செய்தனர். அதிகமான கட்டுமரங்கள் தேவைப்பட்டதால், நிறைய மரங்களை வெட்டினர்.

நாகரீகத்தின் உச்சமாக கலைகள் வளர ஆரம்பித்தன. ஈஸ்டர் தீவு மக்கள் சிற்பக் கலையில் கை தேர்ந்து விளங்கினர். அவர்கள் மிகவும் பிரம்மாண்டமான சிலைகளை செய்தனர். அவர்கள் செய்த சிலைகளின் எடை 200 டன்னிற்கும் மேலாக இருந்தது. சிலைகளை தீவின் எல்லையோரங்களில் நிறுவினர். சிலைகளை நகர்த்தி செல்வதற்கு அவர்கள் உருளை மரங்களை வெட்ட ஆரம்பித்தனர். மனித பேராசை காரணமாக, அளவு தெரியாமல் உருளை மரங்களை வெட்டினர். உருளை மரங்கள் மீண்டும் இனப்பெருக்கம் செய்து பெருக முடியாத அளவிற்கு வெட்டிச் சாய்த்தனர். அத்தீவில், ஒரு கால கட்டத்தில் உருளை மரங்களே இல்லாமல் போனது.

உருளை மரங்கள் அழிந்தபின், அத்தீவில் இருந்த ஆறு பறவை இனங்கள் அழிந்து போயின. அவை அழிந்த பின் தான் தெரிந்தது; அப்பறவை இனங்கள் அனைத்தும் உருளை மரங்களைச் சார்ந்து இருந்தன. பறவை இனங்கள் அழிந்தபின், தீவில் இருந்த தாவரங்கள் எல்லாம் அழிந்துவிட்டன. பறவைகள் உண்டு போட்ட பழத்தில் இருந்த விதைகளினால் தான், பெரும்பாலான செடி, கொடிகள் மற்றும் தாவரங்கள் வளர்ந்தன. தாவரங்கள் இனப் பெருக்கத்திற்கு காரணமான, பறவை இனங்கள் அழிந்ததால் அனைத்து தாவரங்களும் அழிய ஆரம்பித்தன. தாவர இனங்களை நம்பி வாழ்ந்த அனைத்து உயிரினங்களும் அழிய ஆரம்பித்தன.

உருளை மரங்கள் இல்லாததால், பழங்குடியின மக்களால் டால்பின்களை வேட்டையாட முடியவில்லை. தாவரங்களும் மற்ற அனைத்து பயிர் வகைகளும் அழிந்ததால், உணவு உற்பத்தியே இல்லாமல் போனது. உணவு தட்டுப்பாடு நிலவியது. இதையடுத்து ஏற்பட்ட பசி, பட்டினியாலும், உணவிற்கு ஏற்பட்ட சண்டையாலும் மக்கள் நிறைய பேர்கள் இறந்தனர்.

இங்கு ஒரு உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். உருளை மரங்களை பழங்குடியின மக்கள் உணவிற்காக பயன்படுத்தவில்லை. உணவிற்காக பயன்படாத ஒரு மரத்தை வெட்டியதாலே, ஒரு தீவில் மனித இனம் அழிந்தது. நாம் இன்று வாழும் வாழ்க்கையால், எவ்வளவு மரங்களை அழித்து கொண்டிருக்கின்றோம், அதன் மூலம் எவ்வளவு பிரச்சினைகள் வரும் என்பதை உணர்த்துவதற்காக, பகிர்ந்து கொள்ளப்பட்டது...

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவராக கே.எஸ்.அழகிரியை நியமித்து அக்கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது...


தலித் அரசியல் வியாபாரிகளுக்கு சவுக்கடி கொடுத்த லங்காடி விளையாட்டு அணி தலைவர் தேவசித்தன்...


இந்திய லங்காடி விளையாட்டு அணி தலைவர் தேவசித்தன்...

தலித் முத்திரை கொண்டு கொடுக்கப்படும் எந்த விருதும் எனக்கு தேவையில்லை என்று திருமாவளவன் உட்காந்திருக்கும் மேடையிலயே நிராகரித்த இந்த தேவேந்திர குல வெள்ளாளரை பாராட்ட வார்த்தைகள் இல்லை...

நான் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவன்...

https://youtu.be/aXkVtZXd4Ho

Subscribe the channel for more news...