18/12/2017

இந்தியா மற்றும் தமிழக அரசு இனைந்து பிரசவம் என்ற பேரில் கொலை செய்துக் கொண்டிருக்கிறது...


சவுதி அரேபிய நாட்டில் கடுமையான மருத்துவமனை சட்டம் இருக்கிறது. அதனால் அங்கு அனைவருக்கு சுகப்பிரசவம் நடக்கிறது...

இந்தியாவில் மட்டும் ஏன் அநேக நபர்களுக்கு 'சிசேரியன்' ?

கார்பரேட்டுகளின் முழு அடிமையாய் நம் அரசாங்கம்.. எச்சரிக்கை தோழர்களே...

தமிழர் வரலாறு பகுதி - 5...


(தமிழர் வரலாறு அமையும் வகை) - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்..

9. தமிழர் வரலாறு அமையும் வகை..

காட்சிப் பொருள், கருத்துப்பொருள் ஆகிய ஒவ்வொன்றற்கும் தனித்தனி வரலாறுண்டு. ஆயின், ஒரு நாட்டின் (National) அல்லது மக்கள் வகுப்பு வரலாறே பொதுவாக வரலாறெனப்படுவது.

அதுவும், மக்கள் வரலாறு, மொழி வரலாறு, அரசியல் வரலாறு, சட்ட அமைப்பியல் வரலாறு முதலியனவாகப் பலதிறப்படும். அவற்றுள், அரசியல் வரலாறே கல்வித் துறையில் வரலாறெனச் சிறப்பாக வழங்குவது.

வரலாற்று மூலங்கள் (Sources of History)
பொதுவாக ஒரு நாட்டு வரலாற்று மூலங்கள் பின்வருமாறு எழுவகைப்படும்:

1. தொல்பொருள்கள் (Antiquities) பழங்காலக் கருவி, ஏனம் (கலம்), கட்டடம், காசு, நடுகல், கல்லறை, மாந்தனெலும்பு முதலியன.

2. இலக்கியம் வெட்டெழுத்து (Epigraph), திருமுகம் (Royal letter or order), திருமந்திர வோலைச்சுவடி, நாட்குறிப்பு (Diary), வழிப்போக்கர் வண்ணனை, வரலாற்றுக் குறிப்புகள், வரலாற்றுப் பனுவல்கள் அல்லது பொத்தகங்கள் முதலியன.

வெட்டெழுத்தும் பட்டைப் பொறிப்பு, (சுடுமுன்) களிமட் குழிப்பு, கல்வெட்டு, செப்புப் பட்டையம் முதலியனவாகப் பல திறப்படும்.

3. செவிமரபுச் செய்திகள் (Traditions).

4. பழக்கவழக்கங்கள்.

5. மொழிநூற் சான்றுகள்.

6. நிலநூற் சான்றுகள் (Geological evidence).

7. கடல்நூற் சான்றுகள் (Oceanographic evidence) நிலம், தட்பவெப்பநிலை, பழக்கவழக்கம், தொழில், உணவு முதலியவற்றால் மக்கள் உடலமைப்பும் நிறமும் வேறுபடுவதனாலும், ஒரேயினத்தில் மட்டுமன்றி ஒரே குடும்பத்திலும் நீள்மண்டை (Dolichocephalic), குறுமண்டை (Brachycephalic), இடைமண்டை (Mesaticephalic) என்னும் மூவகை மண்டையர் பிறப்பதனாலும், இங்ஙனமே ஏனை யுறுப்புகளும் நிறமும் இயற்கையாலும் செயற்கையாலும் வேறுபடுவதனாலும், மாந்தன் மெய்யளவியலும் (Anthropometry), குலவரைவியலும் (Ethnography) ஒரு மக்களின வரலாற்றிற்குப் பிற சான்றுகள்போல் அத்துணைத் தேற்றமாகப் பயன்படுவனவல்ல.

தமிழன் பிறந்தகமும் பழம்பாண்டிநாடுமாகிய தென்பெரு நிலப்பரப்பு மூழ்கிப்போனமையால், தொல்பொருளியற் சான்று(Archaeological evidence) இன்று அறவே இல்லாத தாயிற்று.

நீலமலை, ஆனைமலை, சேரவரையன்மலை முதலிய மலைகளிலுள்ள இற்றைப் பழங்குடி மாந்தரெல்லாம், கொள்ளைக்கும் போருக்குந் தப்பிக் கீழிருந்து மேற்சென்றவரே.

அவர் மொழிகளெல்லாம், செந்தமிழ்ச் சிதைவான கொடுந்தமிழுங் கொச்சைத் தமிழுமே யன்றிக் குமரிநாட்டுத் தமிழ் வளர்ச்சி காட்டும் முந்துநிலைகளல்ல. கற்றார் தொடர்பும் நாகரிக மக்களுறவு மின்மையால், மலைநிலத்திற் கேற்றவாறு அவர்களின் வாழ்க்கைநிலை தாழ்ந்துள்ளது. தமிழரின் கற்கால நிலையெல்லாம் குமரிநாட்டிலேயே கழிந்துவிட்டது.

எந்தக் காலத்திலும், நாகரிக மக்கள் வாழும் நாட்டில் அநாகரிக மாந்தரும் வதியலாம்.

நாகரிகம் மிக்க இவ் விருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும், தமிழ்நாட்டு வேட்டுவப் பெண்டிர் தழையுடையும் மலையாள நாட்டுத் தந்தப் புலைமகளிர் கோரையுடையும் அணிந் திருந்தனர். இதனால் தமிழப் பெண்டிர் அனைவரும் அங்ஙனமே அணிந்திருந்தனர் என்று கூறிவிட முடியாது. ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே, பஞ்சு மயிர் பட்டு நூலால் நூற்றுக்கணக்கான ஆடை வகைகள் தமிழகத்தில் நெய்யப்பட்டன. ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பு, சிறந்த ஆடைவகைகளெல்லாம் தமிழகத்தினின்றே மேலை நாடுகட்கு ஏற்றுமதியாயின.

துடவரையும் கோத்தரையும் முந்தியல் (Primitive) தமிழராகக் கொண்டு, நீலமலையைத் தமிழன் பிறந்தகம் போலப் பேரா. எக்கேல் (Haeckel) கூறுவதும், திரு. புரூசு பூட்டு (Bruce foote) தொகுத்த பழம் பொருள்களைக் கற்காலத் தமிழர் கருவிகளுங் கலங்களுமென்று கருதுவதும், இங்ஙனமே ஆதிச்சநல்லூர் முதலிய பிறவிடத்துப் பொருள்களை மதிப்பிடுவதும், தமிழின் தொன்மையறியார் தவறாகும்.

மலைவாழ் குலத்தாரெல்லாம் முந்தியல் மாந்தரல்லர். புதைந்து கிடக்கும் கற்கருவிகளெல்லாம் கற்காலத்தன வல்ல. கடைக் கழகக் காலத்தில் ஓரி, பாரி முதலிய சிற்றரசரும் அவர் படையினரு மாகிய நாகரிக மக்களே பறம்பு, கொல்லி முதலிய மலைகளை அரணாகக் கொண்டு, அவற்றின்மேல் வாழ்ந்திருந்தமையை நோக்குக. தென் மாவாரியில் மூழ்கிக் கிடக்கும் குமரி மாநிலம் மீண்டும் எழுந்தாலொழிய, கற்காலத் தமிழரின் கருவிகளைக் காணமுடியாது. இன்று கிடைக்கும் கற்கருவிகளெல்லாம் பிற்காலத்துக் காடுவாழ் குலங்கள் செதுக்கிப் பயன்படுத்தினவையே.

இனி, பல்துறைப்பட்டனவும் அயற்சொல்லுங் கருத்தும் அறவே யில்லவுமான முதலிரு கழக ஆயிரக்கணக்கான தமிழ் நூல்களும், இயற்கையாலும் செயற்கையாலும் அழியுண்டு போனமையாலும்; அவற்றிற்குப் பிற்பட்ட கிறித்துவிற்கு முன்னைத் தமிழ்நூல்களும் ஒன்றிரண்டு தவிர ஏனைய வெல்லாம், சிதலரித்தும் அடுப்பி லெரிந்தும் குப்பையிற் கலந்தும் பதினெட்டாம் பெருக்கில் வாரியெறியப்பட்டும் பல்வேறு வகையில் இறந்துபட்டமையாலும்; முதுபண்டை வரலாற்றிற்கு அக்காலத்து இலக்கியச் சான்றும் இல்லாது போயிற்று.
ஆரியர் வருகைக்கு முற்பட்ட தனித்தமிழ் இலக்கியம் அனைத்தும் அழியுண்டு போயினும், தொல்காப்பியம், இறையனாரகப்பொருளுரை முதலிய நூல்களிலுள்ள வரலாற்றுக் குறிப்புகள் குமரிநாட்டுத் தமிழர் வாழ்க்கையையும் அந் நாட்டியல்பையும் பற்றியனவாதலால், அவை தமிழரின் முது பண்டை வரலாற்றிற் குதவுவனவே.

தொல்காப்பியம் கி.மு. 7ஆம் நூற்றாண்டு நூலேயாயினும் அதிற் சொல்லப்பட்டுள்ள செய்திகள் கி.மு. 50ஆம் நூற்றாண்டிற்கு முந்தினவையாகும்.

"முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்"

என்று தொல்காப்பியரின் உடன்மாணவரான பனம்பாரனார் கூறி யிருப்பதோடு, நூல்முழுவதும் "என்ப" "என்மனார் புலவர்" எனச் சார்பிற் சார்பு நூன்முறையில், முன்னூலாசிரியரைத் தொல்காப்பியர் தொகுத்துக் குறித்திருத்தல் காண்க.

உலகில் முதன்முதல் எழுதப்பட்ட மொழி சுமேரியம் என்றும், அது கி.மு. 3100-ல் எழுத்துமொழியாய் வழங்கியதற்குச் சான்றுள்ள தென்றும் பிரித்தானியக் கலைக்களஞ்சியத்திற் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தினின்று சென்ற ஒரு கூட்டத்தாரே சுமேரியரின் முன்னோர் என்னும் உண்மையை, பேரா.

இராமச்சந்திர தீட்சிதர் எழுதியுள்ள 'தமிழரின் தோற்றமும் பரவலும்' (Origin and Spread of the Tamils) என்னும் நூலிற் கண்டு தெளிக.

தமிழிலக்கணம், தமிழிலக்கியப் பாகுபாடு, தமிழ் மரபு, குமரிநாட்டுத் தமிழர் வகுப்புகள், அவர் தொழில்கள், அவர் மணமுறை, அவர் பழக்கவழக்கம், அக்காலத்து அரசியல், அக்காலப் போர்முறை முதலியன தொல்காப்பியத்திற் சொல்லப்பட்டுள்ளன.

இறையனா ரகப்பொருளில், முக்கழக வரலாறும், தென்மதுரை கதவபுரம் (கவாடபுரம்) என்னும் பழம் பாண்டிநாட்டுத் தலைநகர்ப் பெயர்களும், கழகப் பாண்டியர் புலவர் தொகையும்; சிலப் பதிகாரத்தில், பஃறுளியாறும் குமரிமலையும் முதற் கடல்கோளும் பாண்டிய ஆள்குடி முன்மையும்; அடியார்க்குநல்லாருரையில்,
முழுகிப்போன பழம்பாண்டி நாட்டு நிலப்பரப்பும், அதன் தென்வட வெல்லைகளும், அவற்றிடைப் பட்ட பல்வேறு நாடுகளும்; புறநானூற்றில் பஃறுளியாறும் அவ் வாற்றையுடைய பாண்டியன் பெயரும்; கலித்தொகையில், இரண்டாங் கடல்கோளும் அதற்குத் தப்பிய பாண்டியன் செய்கையும் குறிக்கப்பட்டுள்ளன.

முதலிரு கழகமும் வரலாற்றிற்கு முற்பட்ட நெடுஞ் சேய்மைக் காலத்தன வாதலின், அக்காலத்துப் புலவர் பெயர்களும் நூற்பெயர் களும் தவறாகக் கூறப்பட்டுள்ளன. குமரிநாட்டின் தொன்மையையும் அந் நாட்டை யாண்ட பாண்டியர் தொகையையும் தமிழின் முன்மையையும் நோக்கின், முக்கழக வரலாற்றிற் குறிக்கப்பட்டுள்ள கால அளவுகள் நம்பத்தகாதனவும் நிகழ்ந்திருக்கக் கூடாதனவும் அல்ல. கடைக்கழகத்திற்குக் குறிக்கப்பட்டுள்ள கால அளவில், இடைக் கழகத்திற்கும் அதற்கும் இடைப்பட்ட காலமும் சேர்க்கப் பட்டிருத்தல் வேண்டும்.

பஃறுளியா றென்பது திருவாங்கூர் நாட்டிலுள்ள பறளியா றென்றும், அதன் கயவாயில் கடலரிப்பாற் கரைநிலங் கரைந்து போனதையே, இளங்கோவடிகளும் பிறரும் ஒரு தென்பெரு நிலத்தைக் கடல்கொண்டதாகக் கூறிவிட்டன ரென்றும், தமிழ்ப்பகைவரான சில ஆரியர் ஒரு புரளியை உண்டுபண்ணி யுள்ளனர். தென்பாலிமுகம், தென்மதுரை, பன்மலைத் தொடரான குமரிமலை, ஏழேழ்நாடுகள், பிறநாடுகள், குமரியாறு, எழுநூற்றுக் காதவழி முதலிய செய்திகளுள் ஒன்றுகூட அவர் கூற்றால் விளக்கப்படாதிருத்தல் காண்க.
இடைக்கழகத்தில் எண்ணாயிரத் தெச்சம் தமிழ்நூல்கள் இருந்தன என்பது போன்றவை செவிமரபுச் செய்திகள்.
பழக்கவழக்கங்கள் என்பன, இலக்கியத்திற் சொல்லப்பட்டுள்ளனவும் இன்று நடைமுறையிற் காண்பனவுமான பல்துறை மரபுவினைகள்.

தமிழின் தோற்றம், வளர்ச்சி, அமைப்பு, (சொல்) வளம், தொன்மை, முன்மை, தாய்மை, தலைமை முதலிய நிலைமைகளை யுணர்த்தும் சொற்களும் சொல்லமைப்பும் சொற்றொடரமைப்பும் மொழியியற் சான்றுகளாம்.

பல்வேறு ஊழிகளில், நீர்வினையாலும் நெருப்புவினையாலும் தோற்றமும் மாற்றமுமடைந்த நிலப்படைகளும் பாறைகளும் மலைகளும் நிலநூற் சான்றுகளாம்.

நாடும் நகரும் ஆறும் மலையும் கடற்குள் மூழ்கியிருப்பதும், கடலின் பரப்பும் எல்லையும் ஆழமும் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு வகையில் மாறியிருப்பதும் கடல்நூற் சான்றுகளாம்.

கடைக்கழகத்திற்குப் பிற்பட்ட தமிழக வரலாறு, ஆள்குடி (Dynasty) வாரியாகவும், ஆள்நில (Territory) வாரியாகவும் நூற்றாண்டு வாரியாகவும், அரச வாரியாகவும் வெவ்வேறு வரலாற்றாசிரியரால் இயன்றவரை காலக்குறிப்புடன் விளத்தமாக வரையப்பட்டுள்ளது. ஆதலால், கடைக்கழகத்திற்கு முற்பட்டது மக்கள் வரலாறாகவே யிருக்க, பிற்பட்டதே மக்கள் வரலாற்றோடு அரசியல் வரலாறாகவும் அமைதல் கூடும்.

கி. பி. 900-க்கு முற்பட்ட தென்னாட்டுத் தமிழரையங்களின் துல்லியமான காலக்குறிப்போடு கூடிய தூய கிளத்தியல் (Narrative) அரசியல் வரலாற்றை இன்றெழுத வியலாது. இதற்கு மறுதலையாக, துல்லியமான காலக்குறிப்பை நீக்கியமைவோமாயின், திரவிடரின் குமுகாய வரலாற்றைத் தொகுத்து வரைதற்கு வேண்டிய கருவிச் சான்றுகள் பேரளவில் உள்ளன என நம்பு கின்றேன். அத்தகைய வரலாறு, திரவிட இனங்களின் மொழிகளிலும் இலக்கியங்களிலும் பழக்கவழக்கங்களிலும் போதிய அளவு தேர்ச்சிபெற்ற புலவரால் வரையப்பெறின், அது அனைத்திந்திய வரலாற்றாசிரியனுக்கு இன்றியமையாத துணையாயிருப்பதுடன், இந்திய நாகரிக வளர்ச்சி மாணவன் தன் துறைப்பொருளை உண்மையான அமைப்பிற் காணவுஞ் செய்யும் என்று வின்சென்று சிமிது வரைந்திருத்தல் காண்க்.10 அவர் காலத்திற்குப்பின் பல கருவி நூல்கள் வெளிவந்துள்ளமையால்.
இன்று தமிழக அரசியல் வரலாற்றை 7ஆம் நூற்றாண்டினின்று தொடங்குதல் கூடும்.

தமிழ்மொழி, குமரிநாட்டு மாந்தர் தம் கருத்தை யறிவித்தற்கு முதன்முதலாக வாய்திறந் தொலித்த காலந்தொட்டு இன்றுவரை இடையறாது தொடர்ந்து வழங்கிவருவதனாலும்; இயற்கையாலும் செயற்கையாலும் சிதைவுண்டு மிக வளங்குன்றியுள்ள இந் நிலையிலும், தமிழரின் கொள்கை கோட்பாடுகளையும் நாகரிகப் பண்பாடுகளையும் மதிநுட்பத்தையும் பேரளவு தெரிவிப்பதனாலும்; எழுவகை வரலாற்று மூலங்களுள்ளும் தலைசிறந்தது மொழியியலே யாம். அதனால், பெரும்பால் அதனையும், சிறுபால் இலக்கியத்தில் ஆங்காங்குள்ள வரலாற்றுக் குறிப்புகளையும், துணைக்கொண்டே இந் நூல் எழுதப்படுகின்றது.

தொடக்கந்தொட்டு இன்றுகாறும் தமிழ்மக்கள் வரலாற்றையே இந் நூல் கூறுவதால், கிளத்தியல் முறையல்லாது வண்ணனை (Descriptive) முறையிலேயே இருக்குமென்றும், நாகரிகக் காலத்திற்கு முந்திய கற்காலச் செய்திகள் சில உத்திக்கும் இயற்கைக்கும் ஒத்த உய்த்துணர்வாகவே யிருத்தல் கூடுமென்றும் அறிதல் வேண்டும்.

ஆரியர் வருகைக்கு முற்பட்ட தனித்தமிழ்க்காலச் செய்திகளைக் கூறும் தனிநிலைக் காண்டம், ஆரியர் வந்தபின் ஆரியச் சொல்லுங் கருத்தும் தமிழிலும் தமிழிலக்கியத்திலும் தமிழர் வாழ்க்கையிலும் கலந்ததைக் கூறும் கலவுநிலைக் காண்டம், ஆங்கிலர் வந்தபின் தமிழ்மொழியும் தமிழிலக்கியமும் தமிழர் உள்ளமும் ஆரியக் கலப்பு நீங்கித் தெளிந்ததைக் கூறும் தெளிநிலைக் காண்டம் என முப்பெரும் பகுதிகளைக் கொண்டது இந் நூல்...

புன்னை மரம்...


1. மூலிகையின் பெயர் - புன்னை.

2. தாவரப்பெயர் - CALOPHYLLUM INOPHYLLUM.

3. தாவரக்குடும்பம் - CLUSIACEAE.

4. பயன் தரும் பாகங்கள் - இலை, பூ, விதை, பட்டை மற்றும் எண்ணெய் ஆகியன.

5. வளரியல்பு - புன்னை ஒரு மரவகையைச் சேர்ந்தது.

மணற்பாங்கான இடம், வளமான ஈரமான இடங்களில்  நன்கு வளரும்.

கழிமண் நிலத்திலும், உப்புத் தண்ணீரிலும் வளரும்.

இது சற்று நீண்ட எதிர் அடுக்கில் அமைந்த பெரிய பச்சையான பளபளப்பான இலைகளையும்  உருண்டையான உள் ஓடு உள்ள  சதைக் கனிகளையும் உடைய பசுமையான மரம்.

இது சுமார் 5 அடிக்குமேல் 12 அடிவரை உயரம் வளரும்.

இதன் பூக்கள் அழகாக இருக்கும். பூவின் அகலம் 25 எம். எம். ஆகும். ஒரு கொத்தில் 4 - 15 பூக்கள் இருக்கும்.

இதன் காய்கள் முதலில் மஞ்சளாகவும் பின் முற்றிய பின் மரக்கலராகவும் மாரும்.

ஒரு மரத்தின் காய் 100 கிலோ கிடைக்கும். அதில் 18 கிலோ எண்ணெய் கிடைக்கும். 

புன்னை மரத்திற்கு ஆங்கிலத்தில் ‘Ballnut’ என்று சொல்வார்கள்.

இதன் பூர்வீகம் கிழக்கு ஆப்பிரிக்கா, பின் இந்தியாவின் தென் கடற்கரையோரங்கமளிலும், மலேசியாவிற்கும், மாலத்தீவிற்கும்,  ஆஸ்த்திரேலியாவுக்கும், அவாய் தீவுகள், புயூஜி தீவு, பிலிப்பன்ஸ், அமரிக்கா, உகந்தா போன்ற நாடுகளுக்குப் பரவிற்று.

இந்தியாவில் தமிழ் நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது.

பழங்கால இலக்கியங்களில் புன்னை மரம் பற்றிக் காணப்படுகிறது.

புன்னை மரம் அழகிற்காகவும் வளர்க்கப்படுகிறது.
 
சோதிடத்தில் ஆயில்ய நட்சத்திரத்தின் மரம் புன்னை.

இது நோயைகுணமாக்கும் மரமாக விளங்கியுள்ளது.

புன்னை கோயில்கள், சர்ச்சுகளிலும் வளர்க்கப்படுகிறது.

கேரளம் தமிழ்நாட்டில் கோயில்களில் காணப்படுகிறது.

புன்னை மரம் வலுவானது. இந்த மரத்தில் படகுகள் செய்வார்கள். வீடுகள் கட்டவும் பயன்படுத்துவார்கள். 

இதன் எண்ணெயில் ஆதிகாலத்தில் விளக்குக்குப் பயன் படுத்தினார்கள். 

தற்போது இதை பயோடீசல் தயார் செய்து டீசலுக்ககுப் பதிலாகப்பயன் படுத்துகிறார்கள்..

காட்டாமணக்கு, புங்கன், சொர்க்கமரம், வேம்பு மற்றும் இலுப்பை மரங்களில் கிடைக்கும் விதை போன்று இதன் விதையும் பயன் படுகிறது.

புன்னை விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.

6. மருத்துவப் பயன்கள் - புன்னை தாது அழுகல் போக்கியாகவும், உடல் இசைவு நீக்கியாகவும், நாடி நடையை உயர்த்தி உடல் வெப்பு தரும் மருந்தாகவும் பயன்படும்.

இது சளி, ஒற்றைத் தலைவலி, தலைசுற்றல் கண் எரிச்சல், வாத நோய், தோல் வியாதி, வயிற்றுப் புண், வெட்டை, மேகப்புண், சொறி சிரங்கு குஷ்டம்  ஆகியவைகளைக் குணப்படுத்தும்.

பூவை அரைத்துச் சிரங்கிற்குப் போடலாம்.

இலையை ஊரவைத்த நீரில் குளித்து வர மேகரணம், சொறி, சிரங்கு யாவும் மறையும்.

பூவை நிழலில் உலர்த்தித் தூள் செய்து ஒரு சிட்டிகை காலை, மாலை கொடுத்து வர டைபாய்டு தீரும்.

புன்னை எண்ணெய் பூசி வர மகாவாத ரோகம் முன் இசைவு, பின் இசைவு, கிருமி ரணம் சொறி சிரங்கு, குட்டரோகப் புண்கள் தீரும்.

புன்னை எண்ணெய் 10, 15 துளி சர்கரையில் கொடுத்து உப்பில்லா பத்தியம் இருக்க கொனேரியா என்ற வெள்ளை மேகரணம் தீரும்.

புன்னை மரம் கோயில்களில் உள்ளதை ஆயில்யம் நட்சரத்தில் பிறந்தவர்கள் அந்த மரத்தைச் சுற்றி வந்து கட்டிப் பிடித்துத் தழுவும் போது அந்த மரத்தின் கதிர் வீச்சுக்கள் உடலில் படும் போது நோய்கள் குணமடைகிறது.

முக்கியமாக பெண்களுக்கான இதய நோய்கள், மார்பக நோய்கள் குணமடைவதாகச் சொல்கிறார்கள்.

புன்னை விதையை அரைத்துக் கொதிக்க வைத்துப் பற்றுப் போட முடக்கு வாதம், கீல்வாயு, வாதவலிகள் தீரும்.

பட்டைக் குடிநீரால் புண்களைக் கழுவலாம்.

புன்னையின் இலைகள் பூக்கள் மற்றும் பட்டையை அரைத்துப் பவுடராக்கி தினம் ஒரு வேளை கொடுக்க மூட்டுவலி, சொறி, சிரங்கு குஷ்டம் மேகம் ஆகியவை குணமாகும்...

புற்று நோயின் மர்மம்...


அடிமைகளுக்கு எல்லாம் கொடுக்கப்படுமே தவிர கிடைக்காது..


எங்கள் தமிழ் தேசிய அரசியலை ஏளனமாக பார்க்கும் நீதான் உண்மையான மிகச்சிறந்த அடிமை..

உன்னுடைய தாயை நீ தவறாக பார்க்கிறாய் அதை பெருமையாக பொது தளத்தில் பேசுகிறாய், நீ வாழ்வது வாழ்க்கையா...?

நினைவுகள்...


மனிதன் என்பவன் நினைவுகளாக பலஆயிரம் ஆண்டுகள் வாழலாம் என்பதை சொல்லும் படம்.

இப்படத்தில் ஒரு மனிதனின் மூளையில் உள்ள  நினைவை Silicon electronic gel ல் உள்ள Nano transmitter வழியாக Fiber optical cable மூலமாக Copy செய்து Digital லாக மற்றொரு device  ல் store செய்து அதனை இதே Processing மூலமாக மற்றொரு  மனிதனின் மூளைக்கு மாற்றுவதன் மூலம் ஒருவன் நினைவுகளாக பல ஆயிரம் வருடங்களுக்கு வாழலாம் என சொல்கிறார்கள்..

உண்மையில் இந்த ஆராய்ச்சி இப்போது நடந்து கொண்டுள்ளது. இதற்கு 425 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2045 ல் முடிவுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது அறிவித்தவர் Bill maris CEO of Google Ventures...

சத்தான தமிழர் பானத்தை தடை செய்து விஷத்தை விற்பனை செய்கின்றனர்.. கார்பரேட் மறைமுக கைகூலிகள்...


ஆத்திசூடி...


ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்!/
Let's Spread Aathisudi to the World..

1. அறம் செய விரும்பு /
1. Learn to love virtue.

2. ஆறுவது சினம் /
2. Control anger.

3. இயல்வது கரவேல் /
3. Don't forget Charity.

4. ஈவது விலக்கேல் /
4. Don't prevent philanthropy.

5. உடையது விளம்பேல் /
5. Don't betray confidence.

6. ஊக்கமது கைவிடேல் /
6. Don't forsake motivation.

7. எண் எழுத்து இகழேல் /
7. Don't despise learning.

8. ஏற்பது இகழ்ச்சி /
8. Don't freeload.

9. ஐயம் இட்டு உண் /
9. Feed the hungry and then feast.

10. ஒப்புரவு ஒழுகு /
10. Emulate the great.

11. ஓதுவது ஒழியேல் /
11. Discern the good and learn.

12. ஒளவியம் பேசேல் /
12. Speak no envy.

13. அகம் சுருக்கேல் /
13. Don't shortchange.

14. கண்டொன்று சொல்லேல்/
14. Don't flip-flop.

15. ஙப் போல் வளை /
15. Bend to befriend.

16. சனி நீராடு /
16. Shower regularly.

17. ஞயம்பட உரை /
17. Sweeten your speech.

18. இடம்பட வீடு எடேல் /
18. Judiciously space your home.

19. இணக்கம் அறிந்து இணங்கு /
19. Befriend the best.

20. தந்தை தாய்ப் பேண் /
20. Protect your parents.

21. நன்றி மறவேல் /
21. Don't forget gratitude.

22. பருவத்தே பயிர் செய் /
22. Husbandry has its season.

23. மண் பறித்து உண்ணேல் /
23. Don't land-grab.

24. இயல்பு அலாதன செய்யேல் /
24. Desist demeaning deeds.

25. அரவம் ஆட்டேல் /
25. Don't play with snakes.

26. இலவம் பஞ்சில் துயில் /
26. Cotton bed better for comfort.

27. வஞ்சகம் பேசேல் /
27. Don't sugar-coat words.

28. அழகு அலாதன செய்யேல் /
28. Detest the disorderly.

29. இளமையில் கல் /
29. Learn when young.

30. அரனை மறவேல் /
30. Cherish charity.

31. அனந்தல் ஆடேல் /
31. Over sleeping is obnoxious.

32. கடிவது மற /
32. Constant anger is corrosive.

33. காப்பது விரதம் /
33. Saving lives superior to fasting.

34. கிழமைப்பட வாழ் /
34. Make wealth beneficial.

35. கீழ்மை அகற்று /
35. Distance from the wicked.

36. குணமது கைவிடேல் /
36. Keep all that are useful.

37. கூடிப் பிரியேல் /
37. Don't forsake friends.

38. கெடுப்பது ஒழி /
38. Abandon animosity.

39. கேள்வி முயல் /
39. Learn from the learned.

40. கைவினை கரவேல் /
40. Don't hide knowledge.

41. கொள்ளை விரும்பேல் /
41. Don't swindle.

42. கோதாட்டு ஒழி /
42. Ban all illegal games.

43. கெளவை அகற்று /
43. Don't vilify.

44. சக்கர நெறி நில் /
44. Honor your Lands Constitution.

45. சான்றோர் இனத்து இரு /
45. Associate with the noble.

46. சித்திரம் பேசேல் /
46. Stop being paradoxical.

47. சீர்மை மறவேல் /
47. Remember to be righteous.

48. சுளிக்கச் சொல்லேல் /
48. Don't hurt others feelings.

49. சூது விரும்பேல் /
49. Don't gamble.

50. செய்வன திருந்தச் செய் /
50. Action with perfection.

51. சேரிடம் அறிந்து சேர் /
51. Seek out good friends.

52. சையெனத் திரியேல் /
52. Avoid being insulted.

53. சொற் சோர்வு படேல் /
53. Don't show fatigue in conversation.

54. சோம்பித் திரியேல் /
54. Don't be a lazybones.

55. தக்கோன் எனத் திரி /
55. Be trustworthy.

56. தானமது விரும்பு /
56. Be kind to the unfortunate.

57. திருமாலுக்கு அடிமை செய் /
57. Serve the protector.

58. தீவினை அகற்று /
58. Don't sin.

59. துன்பத்திற்கு இடம் கொடேல் /
59. Don't attract suffering.

60. தூக்கி வினை செய் /
60. Deliberate every action.

61. தெய்வம் இகழேல் /
61. Don't defame the divine.

62. தேசத்தோடு ஒட்டி வாழ் /
62. Live in unison with your countrymen.

63. தையல் சொல் கேளேல் /
63. Don't listen to the designing.

64. தொன்மை மறவேல் /
64. Don't forget your past glory.

65. தோற்பன தொடரேல் /
65. Don't compete if sure of defeat.

66. நன்மை கடைப்பிடி /
66. Adhere to the beneficial.

67. நாடு ஒப்பன செய் /
67. Do nationally agreeables.

68. நிலையில் பிரியேல் /
68. Don't depart from good standing.

69. நீர் விளையாடேல் /
69. Don't jump into a watery grave.

70. நுண்மை நுகரேல் /
70. Don't over snack.

71. நூல் பல கல் /
71. Read variety of materials.

72. நெற்பயிர் விளைவு செய் /
72. Grow your own staple.

73. நேர்பட ஒழுகு /
73. Exhibit good manners always.

74. நைவினை நணுகேல் /
74. Don't involve in destruction.

75. நொய்ய உரையேல் /
75. Don't dabble in sleaze.

76. நோய்க்கு இடம் கொடேல் /
76. Avoid unhealthy lifestyle.

77. பழிப்பன பகரேல் /
77. Speak no vulgarity.

78. பாம்பொடு பழகேல் /
78. Keep away from the vicious.

79. பிழைபடச் சொல்லேல் /
79. Watch out for self incrimination.

80. பீடு பெற நில் /
80. Follow path of honor.

81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் /
81. Protectyour benefactor.

82. பூமி திருத்தி உண் /
82. Cultivate the land and feed.

83. பெரியாரைத் துணைக் கொள் /
83. Seek help from the old and wise.

84. பேதைமை அகற்று /
84. Eradicate ignorance.

85. பையலோடு இணங்கேல் /
85. Don't comply with idiots.

86. பொருள்தனைப் போற்றி வாழ் /
86. Protect and enhance your wealth.

87. போர்த் தொழில் புரியேல் /
87. Don't encourage war.

88. மனம் தடுமாறேல் /
88. Don't vacillate.

89. மாற்றானுக்கு இடம் கொடேல் /
89. Don't accommodate your enemy.

90. மிகைபடச் சொல்லேல் /
90. Don't over dramatize.

91. மீதூண் விரும்பேல் /
91. Don't be a glutton.

92. முனைமுகத்து நில்லேல் /
92. Don't join an unjust fight.

93. மூர்க்கரோடு இணங்கேல் /
93. Don't agree with the stubborn.

94. மெல்லி நல்லாள் தோள்சேர் /
94. Stick with your exemplary wife.

95. மேன்மக்கள் சொல் கேள் /
95. Listen to men of quality.

96. மை விழியார் மனை அகல் /
96. Dissociate from the jealous.

97. மொழிவது அற மொழி /
97. Speak with clarity.

98. மோகத்தை முனி /
98. Hate any desire for lust.

99. வல்லமை பேசேல் /
99. Don't self praise.

100. வாது முற்கூறேல் /
100. Don't gossip or spread rumor.

101. வித்தை விரும்பு /
101. Long to learn.

102. வீடு பெற நில் /
102. Work for a peaceful life.

103. உத்தமனாய் இரு /
103. Lead exemplary life.

104. ஊருடன் கூடி வாழ் /
104. Live amicably.

105. வெட்டெனப் பேசேல் /
105. Don't be harsh with words and deeds.

106. வேண்டி வினை செயேல்/
106. Don't premeditate harm.

107. வைகறைத் துயில் எழு /
107. Be an early-riser.

108. ஒன்னாரைத் தேறேல் /
108. Never join your enemy.

109. ஓரம் சொல்லேல் /
109. Be impartial i n judgement.

- ஔவையார்  / Avvaiyaar...

ஜெயலலிதா மருத்துவமனையில் நல்ல நிலைமையில் இருப்பதை நான் கண்ணால் வீடியோவில் பார்த்தேன் தேவைப்படும் போது அந்த வீடியோ ஆதாரம் தரப்படும் - வெற்றிவேல் பேட்டி...


பாஜக மோடி அலை வெற்றி... திருட்டு ஊடகத்தால் மறைக்கப்படும் உண்மை...


தமிழன் தமிழ்நாட்டை ஆளனும் என்று சொல்வதற்கே குதிக்கிற மானங்கெட்ட மூடர்களே இதைப்பாருங்கள்...



தெலுங்கனுங்க ரெண்டு மாநிலத்தை ஆள்வது போதாதாம் தமிழ்நாட்டையும் ஆளனும் னு ஆசைபடுறானுங்க...

உலக தெலுங்கு மாநாட்டில் வைத்த கோரிக்கைகள்...

தமிழகத்தில் தெலுங்கு வழிக் கல்வி பள்ளிகளை அதிகம் திறக்க வேண்டும்.

தமிழ் கட்டாய பாடம் என்பதை ரத்து செய்ய வேண்டும்.

இரண்டு தெலுங்கு அரசுகளும் இதற்கு தமிழக அரசிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

நல்லவேளை தமிழ் நாட்டை தெலுங்கு நாடு என பெயர் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைக்கவில்லை தெலுங்கர்கள்.

கன்னட தெலுங்கு ராமசாமி மண்ணுல என்ன வேண்டுமென்றாலும் நடக்கும்...

தமிழக காவல்துறையே பதில் சொல்...


மதுரை குஞ்சரத்தம்மாள் தெரியுமா?


தாது வருடப் பஞ்சம் என்ற பெயரை நாம் கேள்விப்பட்டிருப்போம்...

1875 தொடங்கி 80 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பஞ்சம் அது.

கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது.

பஞ்சம் தந்த பாடங்கள் ஒரு பக்கம் இன்றும் பேசப்பட்டு வருகிறது.

அதில் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கதை  குஞ்சரம்மாவினுடையது.

குஞ்சரம் தாசி குலத்துப் பெண்மணி.
மதுரையில் கொடிகட்டிப் பறந்த தாசி..

பெரும் செல்வச் செழிப்பு - மதுரை நகரைச் சுற்றி இருந்த செல்வந்தர்கள் எல்லாம் குஞ்சரத்தின் அழகில் மயங்கிக் கிடந்த காலம் அது.

வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள சந்தில் இருந்த இரண்டு பெரும் வீடுகளும் அவளுடையவை தான்.

தாது வருடம் துவங்கிய இரண்டாவது வாரத்தில் அந்த முடிவினை எடுத்தாள்.

கொடும் பஞ்சத்தில் மக்கள் கஞ்சிக்கு வழியின்றி, கணக்கின்றிச் சாவதைப் பார்த்து - வேதனையால் துடித்து தினமும் கஞ்சி காய்ச்சி ஊற்றத் துவங்கினாள்.

பெரும் வட்டையில் காய்ச்சிய கஞ்சியை விசாலமான தனது வீட்டுத் திண்ணையில் வைத்து அவள் ஊற்றும் செய்தி ஊரெங்கும் காட்டுத் தீ போல் பரவியது..

வடக்கு ஆவணி வீதியை நோக்கி மக்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்தனர்.

இவளுக்கு எதற்கு இந்த வேலை? சொத்தையெல்லாம் விட்டுட்டு தெருவுக்கு வரப்போறா என்று பெருந்தனக்காரர்கள் பேசிக் கொண்டனர்.

அவளின் செய்கை அவர்களை கூசச் செய்தது - ஆனால், கஞ்சி ஊத்தும் செய்தி கேட்டு மக்கள் வந்து கொண்டேயிருந்தனர்.

அந்தக் கூட்டத்தை கண்கொண்டு பார்க்க முடியவில்லை.

பரட்டைத் தலையும் எலும்பும் தோலுமாக துணியென்று சொல்ல முடியாத ஒன்று இடுப்பிலே சுற்றியிருக்க குழந்தைகளைத் தூக்கியபடி வரிசை, வரிசையாக வந்து கொண்டிருந்தனர்.

ஒரு வட்டையில் துவங்கியது, மூன்று வட்டையானது, அதற்கு மேல் அதிகப்படுத்த முடியவில்லை.

தினமும் ஒரு வேளைக் கஞ்சி ஊற்றப்பட்டது - அந்தக் கஞ்சியை வாங்க, காலையிலிருந்தே கால்கடுக்க நின்றனர்.

தேவையின் பயங்கரம் நினைத்துக் கூட பார்க்க முடியாதபடி இருந்தது - ஆனாலும், அவள் அடுப்பிலே விறகுகளைத் தள்ளி தன்னம்பிக்கையோடு எரித்துக் கொண்டிருந்தாள்.

தாது வருடத்தின் ஆறாவது வாரத்தில் தான் கலெக்டர் கஞ்சித்தொட்டியைத் திறக்க முன் வந்தார்.

ஒரு வகையில் அதற்கு குஞ்சரத்தின் செயல்தான் காரணம்..

நகரில் மூன்று இடங்களில் அரசு கஞ்சித்தொட்டியைத் திறந்தது.

நகரின் மொத்தப் பசிக்கு குஞ்சரத்தின் அடுப்பே கதி என இருந்த நிலைமை கொஞ்சம் மாறியது.

ஆனாலும், தாது வருடம் முழுவதும் குஞ்சரத்தின் அடுப்பு எரிந்தது.

பதிமூன்று மாத காலம் எரிந்த அடுப்பு, எல்லாவற்றையும் எரித்தது.

அவள் தனது வாழ்க்கை முழுவதும் சேமித்த சொத்துக்களை உலையிலே போட்டாள்.

கல் பதித்த தங்க நகைகள் - வெள்ளி நகைகள் - முத்துக்கள் - காசு மாலை  -மோதிரம் - ஒட்டியாணம், தோடு-ஜிமிக்கி எல்லாம் கஞ்சியாய் மாறி தட்டேந்தி நின்ற நீண்ட வரிசைக்கு பசிப்பிணி தீர்த்தது.

தொடர்ந்து எரிந்த அடுப்பின் புகையடித்து கரி படிந்திருந்த இரண்டு பெரிய வீடுகளும் விற்கப்பட்டு கஞ்சியாய் மாறியது.

தாது கழிந்த இரண்டாவது மாதத்தில் அவள் அடுப்பு அணைந்தது.

அவள் ஓட்டு வீட்டிற்குள் படுத்த படுக்கையானான்.

யாரைப் பற்றிப் பேச - யாரிடமும் எதுவும் இல்லாத கொடும் பஞ்சத்தில் கூட குஞ்சத்தைப் பற்றி ஊரெல்லாம் பேசினார்கள்.

அவள் முகம் மலர்ந்திருந்தது - தாய்மையின் பூரிப்போடு அவள் படுத்துக்கிடந்தாள்.

ஒரு நாள் மலர்ந்த முகத்தோடு - விடைபெற்றாள் அந்தத் தெய்வத்தாய் - தங்கள் வீட்டில் நடந்த சாவாகத்தான் நகரவாசிகள் பலரும் பார்த்தார்கள் அவர் இறப்பை.

சின்ன ஓட்டு வீட்டிலிருந்து குஞ்சரத்தாயை வெளியில் தூக்கிய பொழுது வடக்கு ஆவணி வீதி - கொள்ள முடியாத அளவு கூட்டம் நின்றது.

கோவில் திருவிழாக்களைத் தவிர மதுரையில் மனிதர்கள் கூடிய மிகப்பெரிய கூட்டம் இது தான் - என்று கலெக்டர் தனது குறிப்பிலே எழுதி வைத்தார்.

நாடி நரம்புகளில் ஓடுவதெல்லாம் அவளின் ரத்தமென நினைத்து நினைவுகளின் வழியே கட்டிப்புரண்டு கதறியழுதனர்.

அவள், நாதியற்றவர்களின் பெரும் தெய்வமானாள் - எண்ணிலடங்கா மனிதக் கூட்டம் அந்தத் தெய்வத்தை நாள்தோறும் வணங்கிச் செல்ல வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள உள் சந்துக்கு அலையலையாய் வந்து கொண்டிருந்தது.

அவளுக்கு எதைப் படையலிட்டு வணங்குவது எனத் தெரியாமல் தவித்த பொழுது..

சலங்கையைப் படையிலிட்டு வணங்கி தெய்வமாக்கிக் கொண்டனர்.. மாமதுரை மக்கள்...

குமரிக்கண்டத்து இசை...



உலகத்திலேயே மிகவும் பழமையுடைய இசைத் தமிழர் இசையே.

உலகில் அதிற்சிறந்தது தமிழிசையே.

தமிழிசையே இன்று உழையிசையடிப்படையில் தாய்பண்களையும், கிளைப்பண்களையும் வகுத்தும், பழந்தமிழ் குறியீடுகளையும் பண் பெயர்களை வடச்சொல்லாக மாற்றியும் ”கருநாடக சங்கீதம்” எனப் பெயரிட்டு வழங்கி வருகின்றனர்.

கேள்வியைச் சுருதி என்றும், நிலையை ஸ்தாய் என்றும் மொழி பெயர்க்கப்பட்டுப் பயன்படுத்தப் படுகிறது.

குமரிக்கண்டத்துத் தமிழர் நுண்மாண் நுழை புலத்தராயும் , தலைசிறந்த நாகரிகமுடையராயும், எஃகுச் செவியராயும் இருந்தமையால், ஏழு பேரிசையும், ஐந்து சிற்றிசையும் ஆகிய பன்னீரிசையை (சுரத்தை) யும் கண்டு ஆயப்பாலை என்னும் முறையில் எழு பாலைப்பண்களைத் திரிந்ததும் அன்றி, அப்பன்னீரிசையும் வட்டப்பாலை என்னும் முறையில் 24 ஆகவும், திரிகோணப்பாலை என்னும் முறையில் 48 ஆகவும், சதுரப்பாலை என்னும் முறையில் 96 ஆகவும் நுட்பமாகப் பகுத்து எல்லையற்ற இசைப் பேரின்பத்தை நுகர்ந்திருந்தனர் என்று ஆராய்ச்சி அறிஞர்கள் கண்டுணர்த்துயுள்ளனர்.

பேரிசை ஏழு (ஸ்வரங்கள் 7): குரல் (ஸட்ஜம்; ஸ), துத்தம் (ரிஷபம்; ரி), கைக்கிள்ளை (காந்தாரம்; க), உழை (மத்தியமம்; ம) இளி (பஞ்சமம்; ப), விளரி (தைவதம்; த), தாரம் (நிஷாதம்; நி) என்பவையாகும்.

சிற்றிசையை (ரி,க,ம,த,நி) ஆகணம் என்று, குரலும் (ஸ) இளியும் (ப) அல்லாத பேரிசையை அந்தரம் என்றும் வழங்கினர்...

வேண்டியதை பெருங்கள்...


நமக்கு அது கிடைத்தால் நல்லா இருக்கும், இது கிடைத்தால் நல்லா இருக்கும் என நினைப்பதோடு விட்டுவிடுகிறோமே ஒழிய..

அதை ஆத்மார்த்தமாக துளிகூட உடலளவில் உணர்வதில்லை..

உணரும் போது மட்டுமே அதற்கு ஒத்தவற்றை கவர்ந்திழுக்க முடியும்..

ஒரு நாளில் வெறும் அரைமணி நேரமாவது வசதியான நிலையில் உட்கார்ந்தோ அல்லது படுத்தோ..

நமக்கு வேண்டியதை நாம் அடைந்து விட்டதாக உணர்ந்தோமானால்..

அது வெகு விரைவில் நம்மை வந்தடைந்தே தீரும்...

தமிழக காவல்துறை என்றால் சும்மாவா...


தமிழ்நாடு சட்டமன்றம் 1956 க்கு முன்...


அதாவது மொழிவாரிமாகாண பிரிவினைக்கு முன் இருந்த சட்டங்களை தமிழர் நலன்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க வேண்டும்...

மற்ற மூன்று மாநிலங்கள் அதாவது ஆந்திரம் கர்நாடகம்,கேரளம் போன்ற மாநிலங்கள் தங்கள் மாநில நலன்களுக்கான சட்டங்களை இயற்றிக் கொண்டதைப் போல் நாமும் நமக்கான சட்டங்களை இயற்ற வேண்டும்..

ஆனால் அது திராவிடத்தின் போர்வையில் பிறமொழியாளர்கள் ஆளும் வரை இது நடக்காது ..

ஆகையால் இனி தமிழர் நாட்டை தமிழனை மட்டுமே ஆள வைப்போம் என உறுதி எடுப்போம்....

பாஜக ஆளுநர் கலாட்டா...


திமுக எனும் தெலுங்கர் கட்சியும் துரோகங்களும்...


கோபங்களையும் துரோகங்களையும் அந்த அந்த இடத்தில் சுட்டிக்காட்டியே ஆகனும்...

கருணாநிதி என்பவர் ஏதோ ஒரு தெருவில் வசிக்கும் ஆசாமியல்ல.

திமுக தலைவர், தமிழர் தலைவர், திராவிட தலைவர்,தமிழக முதல் அமைச்சர், உலக தமிழர்களின் தலைவர்..  என போற்றப்படும் விளம்பரப்படுத்தும் நபர்.

மேலாக திராவிட இயக்க அரசின் உச்ச அதிகாரம்.

இப்படிப்பட்ட நபர் ஈழத்தில் இறுதிப்போர் நடந்த காலத்தில் தமிழர்களின் படுகொலைகள் நடந்துகொண்டிருக்கும் போது இங்கு ஏமாற்று அரசியல் நாடகமும் மகளுக்காக மத்தியில் மண்டியிட்டதும்னு இழிவான அரசியலை நடத்தியவர்.

மழைவிட்டாலும் தூவானம் விடவில்லை என தமிழர்களின் உயிர்களை துச்சமாக மதித்த ஈனப்பிறவி.

நாங்கள் அறிவோம் கருணாநிதியால் ஒரு மயிரும் பிடுங்க முடியாதுன்னு ஆனால் தான் வகித்த பதவிக்கு தமிழ் தமிழர் என்று அரசியல் நடத்தியதற்கு குறைந்தபட்சம் திமுக எம்பிக்களை ராஜினாமா செய்தாவது எதிர்பை காட்டியிருக்கலாம்.

கருணாநிதி என்பது கருணாநிதியோடு முடிவான ஒன்றல்ல ஸ்டாலிருந்து அவரின் வாரிசுகள் திமுக உயர்பீடத்தில் இருக்கும்வரை தொடரும்.

இறந்தாலும் கவலைப்பட மாட்டோம்...  துரோகத்தினை சொல்லிக் கொண்டேயிருப்போம். அவரை மகானாக்க விடமாட்டோம்...

நாசாவின் பித்தலாட்டங்கள்: பகுதி-3...








அருகம்புல்...


இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்
உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தினமும் அருகம்புல் ஜூஸ் - இயற்கை வைத்தியம்...

அருகம்புல்லில் குளோரோபில், அமினோ அமிலம், கனிமம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைந்துள்ளன. இவை, இரத்த சோகை, இரத்த அழுத்தம், வயிற்று புண், மலச்சிக்கல், நரம்பு தளர்ச்சி, மூட்டு வலி, கர்பப்பை கோளாறு போன்ற பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும் இயற்கை மருந்தாக திகழ்கிறது அருகம்புல் ஜூஸ். பிரச்சனைகள் இருந்தால் தான் தினசரி அருகம்புல் ஜூஸ் குடிக்க வேண்டும் என்றில்லை. உங்களது உடலுக்கு எந்த கோளாறுகளும் அண்டாமல் இருக்க கூட நீங்கள் தொடர்ந்து தினசரி அருகம்புல் ஜூஸை குடிக்கலாம். இனி அருகம்புல் மூலம் நாம் அடையும் ஆரோக்கிய நலன்கள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்...

நச்சுக் கிருமிகள்...

அருகம்புல்லில் இருக்கின்ற குளோரோபில் உடலில் இருக்கும் தீய நச்சுக் கிருமிகளின் வளர்ச்சியை தடுக்கவும், அழிக்கவும் உதவுகிறது. இதனாலேயே நமது உடலில் ஏற்படும் பல்வேறு உடல்நல கோளாறுகளை தடுத்திட இயலும்.

நுரையீரல்...

அருகம்புல்லிற்கு நமது நுரையீரலை சுத்திகரிக்கும் தன்மை இருக்கிறது. இதனால், நமது உடலில் நுரையீரல் கோளாறுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள அருகம்புல் ஜூஸ் பருகுவது நல்லது.

இரத்த சர்க்கரை அளவு...

அருகம்புல் ஜூஸ் பருகுவதனால் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியும். இதனால், நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் அருகம்புல் ஜூஸ் பருகுவது மிகவும் நல்லது.

செயல்திறன் அதிகரிக்க...

அருகம்புல் நமது உடலில் உள்ள ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்த உதவுகிறது, இதனால் நமது மூளை மற்றும் அனைத்து தசைகளும் நன்கு செயல்படுகிறது. ஆகையால் நமது ஒட்டுமொத்த உடலின் செயல்திறனும் அதிகரிக்க அருகம்புல் ஜூஸ் பருகுவது நல்லது.

வயிற்று புண்...

அருகம்புல் ஜூஸ் தினமும் பருகவதனால் வயிற்றில் இருக்கம் கிருமிகளும் அழியும் மற்றும் வயிற்று புண்ணும் குணமாகும்.

கர்பப்பை கோளாறுகள்...

அருகம்புல்லில் இருக்கும் குளோரோஃபில்லின் நற்குணம் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகள் குறைந்து, விரைவில் குணமடைய உதவுகிறது.

மலச்சிக்கல்...

தினந்தோறும் அதிகாலை அருகம்புல் ஜூஸ் பருகி வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

சளி குணமாகும்...

நுரையீரல் சார்ந்த சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்க கூடியது அருகம்புல் ஜூஸ்.

இரத்த அழுத்தம்...

அருகம்புல் ஜூஸ் தினசரி பருகுவதனால் இரத்த சர்க்கரை அளவு மட்டுமல்லாமல், இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்க முடியும்.

உடல் எடை குறைக்க...

உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், உங்களது உடல் எடையைக் குறைக்க தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் அருகம்புல் ஜூஸ் பருகிவந்தால் உடல் எடை குறையும்.

இரத்தம் அதிகரிக்க...

அருகம்புல் ஜூஸ் பருகுவதனால், இரத்த சோகை உள்ளவர்களுக்கு இரத்தம் அதிகரிக்கும். மற்றும் அருகம்புல் ஜூஸ் பருகுவதனால் இரத்தம் சுத்தீகரிக்கப்படும்.

உடல் துர்நாற்றம்...

நம் உடலில் இருக்கும் நச்சுக்கிருமிகளால் தான் உடல் துர்நாற்றம் ஏற்படுகிறது. அருகம்புல் ஜூஸ் பருகுவதால் நமது உடலில் உள்ள தீமை விளைவிக்கும் நச்சுக் கிருமிகள் அழிக்கப் படுகின்றன. இதனால் நமது உடலில் இருந்து வரும் துர்நாற்றம் குறையும்.

தொண்டை கரகரப்பு...

அருகம்புல் ஜூஸை கொண்டு வாய் கொப்பளித்தால், தொண்டை கரகரப்பு சரியாகும்.

அஜீரணம்...

உங்களுக்கு அஜீரண கோளாறு இருந்தால் தினமும் அருகம்புல் ஜூஸை குடியுங்கள். அருகம்புல் ஜூஸ் அஜீர்ண கோளாறுகளை குணமடைய செயும்.

நரம்பு தளர்ச்சி மற்றும் தோல் வியாதி...

அருகம்புல்லில் இருக்கும் அமினோ அமிலம் மற்றும் வைட்டமின் சத்துகள், நரம்பு தளர்ச்சி மற்றும் தோல் சார்ந்த வியாதிகளில் இருந்து குணமடைய பயன்தருகிறது...