07/09/2018

கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுவிப்பதற்காக, ஐயா வீரப்பனுக்கு கொடுக்கப்பட்ட ரூ 40 கோடியை ஆட்டையப் போட்டவன் யாரு?


ஜூலை 30, 2000 அன்று இரவு கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டார்..

ஜூலை 31 அன்று கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா, தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியை ராஜ்குமாரின் மனைவி பார்வத்தம்மாளுடன் சென்னையில் சந்தித்து அவசர பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆகஸ்ட் 3, 16, 27 மற்றும் செப்டம்பர் 20 ஆகிய நான்கு நாட்களில் நக்கீரன் கோபால், ஐயா வீரப்பனை சந்திக்க தூதுவராக சென்றார்.

ஆகஸ்ட் 25 ம் தேதி, பிணைப்பணம் கொடுப்பதற்கான நிதியாக கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு அரசு தலா ரூ 5 கோடி கொடுத்து, ரூ 10 கோடி நிதியை உருவாக்கினார்கள்..

அக்டோபர் 10ம் தேதி, ஐயா நெடுமாறனும், நக்கீரன் கோபாலும் தூதுவராக சென்றார்கள்..

நவம்பர் 11ம் தேதி, ஐயா நெடுமாறன் மட்டும் தூதுவராக சென்றார்..

நவம்பர் 13ம் தேதி, நடிகர் ராஜ்குமாரை அடுத்த நாள் விடுதலை செய்வதாக அண்ணன் கொளத்தூர் மணிக்கு, ஐயா வீரப்பன் செய்தி அனுப்பினார்..

நவம்பர் 15ம் தேதி, நடிகர் ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்டார்..

சிறப்பு அதிரடிப்படையின் அராஜகங்கள் குறித்த கருத்தரங்கம் நவம்பர் 26 அன்று "கொளத்தூர்" ல் நடத்தப்படும் என்று ஐயா வீரப்பனுக்கு உறுதி அளிக்கப்பட்டது..

நடிகர் ராஜ்குமாரை விடுவிப்பதற்காக ரூ 20 கோடி, கர்நாடக அரசுத் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டதாக கர்நாடக மாநில காவல்துறை தலைமை இயக்குனர் சி. தினகர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக முதல்வர் எஸ். எம். கிருஷ்ணா-வின் மருமகன் வி.ஜி. சித்தார்த்தா மூலமாக இரண்டுமுறை தலா ரூ 5 கோடி என்று, மொத்தம் ரூ 10 கோடி, ஐயா வீரப்பன் சொன்ன நபரிடம் கொடுக்கப்பட்டது.

கர்நாடக மாநில காவல்துறை துணை இயக்குனர் டி. ஜெயபிரகாஷ் ரூ 5 கோடியை, ஐயா வீரப்பன் சொன்ன நபரிடம் கொடுத்தார்..

நடிகர் ராஜ்குமார் மனைவி பார்வத்தம்மாள், ரூ 1 கோடியை, தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியிடமும்,
ரூ 2 கோடியை, ஐயா வீரப்பன் சொன்ன பானு என்ற நபரிடமும் கொடுத்தார்.

திரைப்படத் துறையை சேர்ந்தவர்கள் ரூ 2 கோடியை, தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியிடம் கொடுத்தார்கள்.

கர்நாடக காவல்துறை,  மயக்க மருந்து மருத்துவ சோதனையில் (Narcotics Test)  ஐயா வீரப்பனின் உதவியாளர் கனகராஜ் என்பவரை உட்படுத்தியதில், மொத்தம் ரூ 40 கோடி கொடுக்கப்பட்டதாக கண்டு பிடிக்கப்பட்டது..

தமிழ்நாடு அரசின் சிறப்பு வழக்கறிஞர் சங்கரநாராயணன், நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க ரூ 40 கோடி கொடுக்கப்பட்டதாக, ஜூலை 18, 2002 அன்று ஈரோடு சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தார்..

கர்நாடக நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க கொடுக்கப்பட்ட பணத்தை ஐயா வீரப்பனின் மனைவி வாங்கவில்லை என்று, அக்டோபர் 29, 2012 அன்று ஈரோடு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மணியா இந்தப் பணத்தை  ஆட்டையப் போட்டவன் யாரு?

தமிழ்நாட்டில் ஐட்ரோகார்பன் திட்டத்தை அனுமதியோம்...


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் கண்டனம்...

நடுவண் அரசின் ஐட்ரோகார்பன் இயக்குநரகத்தின் கூட்டம் நாளைக்கு (06.09.2018) பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் புதுதில்லியில் நடைபெறப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஏற்கெனவே தமிழ்நாட்டில் பெட்ரோலியம், மீத்தேன் உள்ளிட்ட ஐட்ரோகார்பன் எடுப்பதற்கு ஏலமெடுத்துள்ள நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அதன்படி முதல் கட்டமாக, மரக்காணத்திலிருந்து கடலூர் வரை உள்ள வட்டாரத்தையும், பரங்கிப்பேட்டையிலிருந்து வேளாங்கண்ணி வரையுள்ள இன்னொரு வட்டாரத்தையும் வேதாந்தா நிறுவனத்திற்குக் கொடுக்கிறார்கள். குள்ளஞ்சாவடியிலிருந்து தரங்கம்பாடி வரையுள்ள வட்டாரத்தை ஓ.என்.ஜி.சி.க்குக் கொடுக்கிறார்கள். இங்கு குறிப்பிடப்படும் ஒரு வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான குழாய்களை இறக்கி அவர்கள் ஐட்ரோகார்பன் எடுத்துக் கொள்ளலாம்.

மேலே குறிப்பிட்ட பகுதிகள் அனைத்தும் விவசாய நிலங்கள் நிறைந்துள்ள வேளாண் மண்டலமாகும். இந்த ஐட்ரோகார்பன் திட்டம் செயல்பட்டால், முழுமையாக வேளாண்மை அழிந்துவிடும். கிராமங்கள் காலி செய்யப்படும். நிலத்தடி நீர் மாசுபடும். ஆறுகள் மற்றும் கால்வாய்களின் நீரோட்டங்கள் தடுக்கப்படும் அல்லது திசைமாற்றப்படும். மக்கள் வேறு வழியின்றி வெளியேற வேண்டிய நிலை உருவாகும். ஒட்டுமொத்தத்தில், பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் தாய் மண்ணும் வாழ்வுரிமையும் பறிக்கப்படும்!

நரேந்திர மோடி ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் முற்றிலும் தகர்ந்து வீழ்ந்துவிட்டது. ரூபாய் மதிப்பு படு வீழ்ச்சி அடைந்து, பாதாளம் நோக்கிப் போய்க் கொண்டுள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் விலை அன்றாடம் உயர்ந்து கொண்டுள்ளது. ஏற்கெனவே, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரம் நசிந்து, மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. இவற்றையெல்லாம் ஈடுகட்ட, தமிழர் வாழ்வைச் சூறையாடி, தமிழ்நாட்டுக் கனிமங்களை எடுத்து, அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, வெளிநாட்டு செலாவணி ஈட்ட மோடி அரசு முயல்கிறது.

தூத்துக்குடி வட்டாரத்தில் மக்களின் வாழ்க்கையை நாசமாக்கி – 13 மனித உயிர்களைப் பலி   கொண்ட வேதாந்தா நிறுவனத்திற்கு பரிசளிப்பதுபோல், தமிழ்நாட்டின் காவிரி மண்டலத்தை மோடி அரசு காவு கொடுக்கிறது!

ஏற்கெனவே, வரிகள் மற்றும் கட்டணங்கள் வழியாக இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் அதிகமாக இந்திய அரசுக்கு பணம் கொடுக்கும் மாநிலமாக இருக்கிறது. ஓராண்டுக்கு 2 இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் தமிழ்நாட்டிலிருந்து வரிப்பணமும், இதரக் கட்டணங்களும் தில்லிக்குப் போகிறது. அதற்குரிய முறையில், தில்லியிலிருந்து தமிழ்நாட்டுக்குப் பணம் வருவதில்லை; திட்டங்களும் வருவதில்லை! நாம் அனுப்பும் பணத்திற்கும், அங்கிருந்து வரும் தொகைக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு இருக்கிறது!

தமிழ்நாட்டு மண்ணின் வளத்தை அழித்து – மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் ஐட்ரோகார்பன் திட்டம் பற்றி, தமிழ்நாடு அரசு தனது நிலைபாட்டை அறிவிக்க வேண்டும். இத்திட்டத்தை எதிர்க்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் மட்டும் போராடுவார்கள் என்ற நிலையை மாற்றி, ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் இத்திட்டங்களை எதிர்த்துப் போராட வேண்டும். கணக்குப் பார்த்தால், தமிழ்நாட்டின் எந்தப் பகுதியையும் இந்திய அரசு விட்டுவைக்கவில்லை. தூத்துக்குடியில் போராட்டம், சேலம் பகுதியில் எட்டுவழிச்சாலை பாதிப்பால் போராட்டம் என்று தமிழ்நாடு முழுக்க நடுவண் அரசு கை வைத்து மக்களின் வாழ்வுரிமையையும், மண்ணுரிமையையும் பறித்து வருகிறது. எனவே, ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் போராட வேண்டிய தேவை உள்ளது! நாம் நடத்தும் போராட்டம், மக்கள் திரள் நடத்தும் அறப்போராட்டம் - வன்முறையற்ற  போராட்டம்!

இந்திய அரசு மக்களின் குரலுக்கு செவி சாய்த்து, ஐட்ரோ கார்பன் திட்டங்களை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். தமிழ்நாடு அரசு, மேற்படி திட்டங்களை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று நடுவண் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். இக்கோரிக்கைகள் ஏற்கப்படவில்லையெனில், நாம் போராட்டக் களத்தில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு அனைத்து மக்களும் வர வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்...

அன்று உலகம் தன்னை புதுப்பித்து கொள்ளும் என நினைக்கிறேன்...


அபிராமியை போலவே 7 மாத குழந்தையை கொன்ற பெண்.. காரணம் கேட்டால் அதிர்ந்து போவீர்கள்...


சென்னையை சேர்ந்த அபிராமி என்பவர் கள்ளக்காதலுக்காக தனது 2 குழந்தைகளை கொன்றார். அதேபோல டெல்லியை சேர்ந்த அதீபா என்பவர் தனது 7 மாத கைக்குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று உள்ளார்.

பின்னர் குழந்தை மயக்கமடைந்து விட்டதாக கூறி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். அதோடு குழந்தையின் கழுத்தில் காயங்கள் உள்ளதை பார்த்து சந்தேகமடைந்து கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

இதனை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தனது குழந்தையை கொன்றதை ஒப்பு கொண்டார்.

அவர் அளித்த வாக்குமூலத்தில், இந்த குழந்தை பிறந்தது முதல் குடும்பத்தில் கஷ்டம் உள்ளது. இக்குழந்தை துரதிருஷ்டத்தை கொண்டு வந்து விட்டது.

பணத்திற்கே கஷ்டமாக இருந்த நிலையில் அதிர்ஷ்டமில்லா குழந்தை என கருதி எனது துப்பட்டாவில் கழுத்தை நெரித்து கொலை செய்தேன் என்றார்...

அதிமுக விஜய பாஸ்கர் குட்கா ஊழல்...


மோடி இருக்க பயமேன்... எல்லாம் மேல இருக்குறவன் பாத்துக்குவான்...

வெற்றி என்றால் என்ன?


வெற்றி என்பதற்கு தனியாக எந்த ஒரு விளக்கமும் கூற முடியாது.

எளிமையான முறையில் சொல்வதென்றால்...

நாம் நினைத்தது நமக்கு கிடைத்து விட்டால் நாம் நினைத்த இலக்கை நாம் அடைந்து விட்டால், நாம் இருந்த நிலையை விட ஒரு நிலை மேலே அடைந்து விட்டால் அதனை வெற்றி என்று போற்றுகின்றோம்...

சிலருக்கு பணம் கிடைத்தால் வெற்றி,
சிலருக்கு புகழ் கிடைத்தால் வெற்றி,
சிலருக்கு சேவை செய்தலில் கிடைக்கும் மகிழ்ச்சியில் வெற்றி,
பிடித்த பெண் அல்லது பிடித்த ஆண் துணையாக கிடைத்தால் வெற்றி.

இப்படி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வெற்றியின் இலக்கணம் வெவ்வேறாக இருக்கும்.

இப்படி வெற்றிக்கான இலக்கணம் ஒவ்வொருவருக்கும் மாறுபட காரணமாக இருப்பது நம்முடைய மனம் மட்டுமே.

குறிப்பாக வெற்றி என்பதை ஒரு வரியில் விள்ளக்க வேண்டுமேயனால் மகிழ்ச்சியாக வாழ்வதே வெற்றி ஆகும்.

ஆனால் ஒவ்வொருவருடைய மனமும் ஒரு குறிப்பிட்ட செயலை செய்வதாலோ அல்லது குறிப்பிட்ட அல்லது பிடித்த அந்த இலக்கை அடைந்தாள் மட்டுமே வாழ்க்கையில் முழு மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

ஆகவே நீங்கள் வெற்றியாளர் ஆக வேண்டுமேயானால் உங்களின் மனதிற்கு பிடித்த அந்த செயல் என்னவென்று நீங்கள் அறிந்திருக்க வேண்டும்...

பாசிச பாஜக ஒழிக...


தரங்கம்பாடி...


தரங்கம்பாடி தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு பேரூராட்சி.

இங்கு 1620 ஆம் ஆண்டு டச்சுக்காரர்களால கட்டப்பட்ட கோட்டை. டச்சுக் கட்டடக் கலையின் அடையாளமாக இருக்கும் இந்தக் கோட்டை தமிழக ஆவணக் காப்பகத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வார நாட்களில் வெள்ளிக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு.

இந்திய அச்சுக் கலையின் வரலாற்றில் போர்த்துக்கீசியர்கள், பிரெஞ்சு மற்றும் டேனிஷ்காரர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.

ஹென்றி கே ஹென்றீக்ஸ் என்ற போர்த்துக்கீசிய பாதிரியார் அச்சிட்டு, கொல்லத்தில் 1577-ம் ஆண்டு வெளியிடப்பட்ட 'தம்பிரான் வணக்கம்’ என்ற புத்தகமும்... 1715-ல் தரங்கம்பாடியில் பர்த்தலோம்யூ சீகன்பால்கு அச்சிட்டு வெளியிடப்பட்ட பைபிளின் தமிழாக்கமான புதிய ஏற்பாடும் அச்சுக் கலை வரலாற்றில் மிக முக்கியமானவை.

இந்தய மொழிகளில் பைபிள் முதன் முதலில் தமிழில் தான் அச்சிடப்பட்டது...

தமிழனும் திராவிடனும்...


கால்டுவெல் முதல் திமுக கருணாநிதி வரை...


தமிழ்-திராவிடக் குழப்பங்களுக்குக் காரணம்.

1. இந்தியாவிற்கு வந்த மேற்கத்திய மொழியியல் அறிஞர்களில் சிலர், குறிப்பாக கால்டுவெல் போன்றோர் மொழிக் குடும்பங்களை வகைப்படுத்தும் போது ஒருசில வட இந்திய இலக்கியங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு முடிவெடுத்ததால் வந்த குழப்பமே இன்று வரை தொடர்கிறது.

2. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் குமரிளபட்டர் ‘ஆந்திர - திராவிட பாஷா’ என்று குறிப்பிடுகிறார் என்றும்,  தெலுங்கில் அடங்கும் கன்னட மொழி,  தமிழில் அடங்கும் மலையாளம் மேலும் சிறிய பேச்சு மொழிகளையும் உள்ளடக்கி, இவை உள்ளடங்கிய  தென்னிந்திய மொழிகளுக்கு ‘திராவிட
மொழிக்குடும்பம் என்று பெயரிடலாமென கால்டுவெல் குறிப்பிடுகிறார்.

(Robert Caldwell, A Comparative Grammar of Dravidian Languages (1856), 1875, Kavithasaran Pathipagam, Chennai, 2008, p.6)

3. கால்டுவெல் தென்னிந்திய மக்களைக் குறிக்க, மனுஸ்மிருதி, ஐத்திரேய பிராமணம், மகாபாரதம், பாகவத புராணம் ஆகியவற்றில் சொற்களைத் தேடுகிறார். ஆனால் மகாபாரதமோ தமிழர்களைத் தனியொரு பிரிவாகக் காட்டுகிறது.

மகாபாரதத்தில் யுதிஸ்திரன் (தர்மர்) இராஜசூய யாகம் நடத்தும் முன்பு அனைத்து மன்னர்களையும் வெல்ல விரும்பி தம்பி சகாதேவனைப் படையுடன் அனுப்புகிறான். சகாதேவன் தெற்கே ‘திக்விஜயம்’ மேற்கொண்டு.. திராவிடர், சோழர், கேரளர் மற்றும் பாண்டியரை வென்றான் என்று மகாபாரதம் கூறுகிறது.

(Maha bharata, ii, 34, 1988).

இங்கே நாம் கவனிக்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான்:

தமிழரைக் குறிக்க கால்டுவெல் 'திராவிடர்’ என்ற சொல்லைத்  தவறாகத் தேர்வு செய்தார் என்பதே ஆகும்...

திருட்டு திமுக ஸ்டாலினும்.. ஏமாற்று வேலையும்...


இலுமினாட்களும் இந்திய அரசியலும்...


இதை நீங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் அங்குள்ள கட்சிகளுக்கு ஏற்றவாறு மாற்றி கொள்ளலாம்...

ஆட்சிகள் தான் வேறு, வேறு..

ஆனால் காட்சிகள் ஒன்றே....

தமிழின விரோத பாஜக அடிமை ஊழல் அதிமுக அரசு லட்சனம்...


முதல்வரின் சொந்தக்காரர் வீட்டில் சோதனை; பெரும்பாலான அமைச்சர்கள் வீடுகளில் சோதனை; மாநில தலைமைசெயலகத்தில் சோதனை; மாநில டிஜிபி அலுவலகத்தில் சோதனை; தலைமை செயலாளர் முதல் டிஜிபி வரை மாநிலத்தின் பெரிய பெரிய அதிகாரிகள் அலுவலகங்கள் வீடுகளில் எல்லாம் சோதனை மேல் சோதனை.

ஒட்டுமொத்த இந்தியாவிலும் கேடுகெட்ட ஆட்சி நடக்கும் மாநிலம் எது? என்று கேட்டால் எந்த தயக்கமும் இல்லாமல் தமிழ்நாடு என்று தைரியமாக சொல்லும் நிலைமை தான் நிலவுகிறது. கேவலமான ஆளும் கட்சி எது என்று கேட்டால் அதிமுக என்று அந்தகட்சிக்காரர்களே கூட தனிப்பட்ட உரையாடல்களில் ஒத்துக் கொள்கிறார்கள்.

இத்தனைக்குப்பின்னும் தொடர்புடையவர்கள் யாரும் பதவி விலகவில்லை; சிறைக்கு செல்லவில்லை. ஆட்சி அமோகமாய் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதுவும் முதல்வர் குஷியாக டென்னிஸ் ஆடுகிறார். உற்சாகத்தோடு உடற்பயிற்சி செய்கிறார். அந்த படங்கள் ஊடக பக்கங்களின் முதல் பக்கத்தில் வருகின்றன. அவர் தான் குலசாமி என தமிழக அரசு பொதுமக்கள் வரிப்பணத்தில் விளம்பர படம் எடுத்து திரையரங்குகளில் ஒளிபரப்புகிறது. எந்த கூச்சமும் இல்லாமல். பொதுமக்களும் எந்த கோபமும் படாமல் அனைத்தையும் கடந்துபோகிறார்கள்.

இந்தபக்கம் சமூக ஊடகங்களோ ஐபிஎல்லுக்கு எதிராக ஒருநாளும் அபிராமிகளுக்கு ஆதரவாக மறுநாளும் சொந்த கட்சிக்குள்ளேயே செல்வாக்கில்லாத தமிழிசைக்கு எதிராக மூன்றாம் நாளுமென பொங்கி அடங்கி மீண்டும் பொங்கி தினம் ஒரு பொங்கல் வைத்து தனக்குத்தானே பூரித்துக் கொண்டிருக்கிறது.

உண்மையில் ஒட்டுமொத்த ‭தமிழ்நாடும் கொள்ளைபோய்க்கொண்டிருக்கிறது. இந்திய ஒன்றிய அரசோ ஏறி மிதித்து துவம்சம் செய்கிறது. மற்ற மாநிலத்தவர் காறி துப்புகிறார்கள். நம் கவனம் செலுத்த வேண்டிய இடத்தையும் இலக்கையும் நாமே இழந்ததால்/தொலைத்ததால்தான் இந்த நட்டாற்றில் வந்து கூட்டாக நிற்கிறோம் என்பதே புரியாமல் நாமும் கொஞ்சம் கொஞ்சமாய் மூழ்கிக் கொண்டிருக்கிறோம்.

தனிநபர் தற்கொலைகளைப்போல சமூக தற்கொலைகள் சட்டென நடந்து விடுவதில்லை...

இந்தியமும் திராவிடமும்.. தமிழின அழிப்பும்...


இன்னும் சில ஆண்டுகளில் கோலிப் பண்டிகை, விநாயகர் சதுர்த்தி பண்டிகை, தமிழர் பண்டிகையாக மாற்றப்படும்...

பொங்கல்,  ஏறுதழுவுதல் தமிழர் வரலாற்றில் இருந்து மறைக்கப்படும். இது தான் இந்திய திராவிட அரசுகளின் திட்டம்..

ஆரிய கட்டமைப்பால் ஆன
இந்திய அரசைப் பொறுத்தவரை இந்தியா முழுமைக்கும் ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே மதம், ஒரே இனம் என்ற நிலையை உருவாக்க திட்டமிட்டு செயல்படுகிறது..

இதனால் இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் மொழி, கலை, பண்பாடு ஆகியவை வேகமாக அழிக்கப்பட்டு வருகிறது.

(வேற்றுமை இல்லை என்றால் இந்தியாவே இல்லை என்பதை இந்திய அரசு உணர மறுக்கிறது.)

அதிலும் குறிப்பாக தமிழ் மொழி, இனம், பண்பாடு, கலைகள் ஆகியவற்றை அழிப்பதை இனப்பகை இந்திய அரசு தனது முழுநேரப் பணியாக கருதி செயல்படுகிறது..

அதற்கு திராவிடமும் துணை நிற்கிறது...

இனப்பகை இந்திய அரசின் இந்த சூழ்ச்சியை உணர்ந்து இனிமேலாவது தமிழ் இனம்,  நம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட நமது பண்பாட்டு கலை, விளையாட்டுக்களை, வழிபாட்டை, விழாக்களை மீட்டெடுக்க வேண்டும்!

உலகில் உள்ள அனைத்து இனங்களும் தங்கள் மொழி, பண்பாடு, கலைகளை பாதுகாக்க, வளர்த்தெடுக்க போராடி வருகிறது..

ஆனால் தமிழினம் மட்டுமே தனது மொழி, இன, பண்பாட்டு அடையாளங்களை இழப்பதற்க்காக போராடி வருகிறது.

ஒரு இனத்தின் அடையாளமே மொழியும், பண்பாடும் தான் அந்த இரண்டும் அழிந்தால்  தானாகவே இனமும் அழியும்...

விழுத்தெழு என் தமிழினமே...

பாஜக - அதிமுக வின் திட்டமிட்ட சதி...


தமிழகத்தை காக்க வழிச் சொல்லும் பாமக...


இந்தியாவில் எண்ணெய் வளங்களைக் கண்டறிந்து உற்பத்தி செய்வதற்காக ஹைட்ரோ கார்பன் வளங்களைக் கண்டறிதல் மற்றும் உரிமம் வழங்கும் கொள்கையை (Hydrocarbon Exploration and Licencing Policy- HELP) மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. அனைத்து வகையான ஹைட்ரோ கார்பன் வளங்களையும் ஒரே உரிமத்தின் மூலம் கண்டறிந்து எடுப்பது தான் இக்கொள்கையின்   நோக்கம் ஆகும். அதன்படி நாடு முழுவதும் 55 புதிய வட்டங்களில் ஹைட்ரோகார்பன் வளங்களை  எடுக்க கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

ஒட்டுமொத்தமாக பெறப்பட்ட 110 விண்ணப்பங்களில் இருந்து 5 நிறுவனங்களின் 55 விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவதை இறுதி செய்வதற்கான ஹைட்ரோகார்பன் இயக்குனரகத்தின் கூட்டம் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் தில்லியில் நாளை நடைபெறவிருக்கிறது.

புதிதாக ஹைட்ரோகார்பன் எடுக்கப்படவுள்ள 55 மண்டலங்களில் 3 தமிழகத்தில் அமைந்துள்ளன. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் கடலூர் வரை முதல் மண்டலம்,  பரங்கிப்பேட்டை முதல் வேளாங்கண்ணி வரை இரண்டாவது மண்டலம், குள்ளஞ்சாவடி முதல் தரங்கம்பாடி வரை மூன்றாவது மண்டலமும் அமைக்கப்படவுள்ளன.

இவற்றில் முதல் மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான உரிமம் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கும், மற்ற இரு மண்டலங்களுக்கான உரிமங்கள் வேதாந்தா நிறுவனத்திற்கும் வழங்கப்பட உள்ளன. இவற்றில் முதல் மண்டலத்தில் 4 இடங்கள், மற்ற இரு மண்டலங்களில் தலா 10 இடங்கள் என மொத்தம் 24 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக அமைக்கப்படவுள்ள ஹைட்ரோ கார்பன் கிணறுகளில் இருந்து கச்சா எண்ணெய், மீத்தேன், பாறை எரிவாயு உள்ளிட்ட அனைத்து ஹைட்ரோ கார்பன் வளங்களும் எடுக்கப்படலாம். காவிரிப் பாசன மாவட்டங்களில் இதுவரை மீத்தேன், பாறை எரிவாயு திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்றும், இனியும் அத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்படாது என்றும் நாடாளுமன்ற மக்களவையில் எனது வினாக்களுக்கு பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பலமுறை பதிலளித்திருந்தார். ஆனால், அதற்கு முற்றிலும் விரோதமான வகையில் மீத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் வளங்களை காவிரி பாசன மாவட்டங்களில் எடுக்க முயல்வது கண்டிக்கத்தக்கது ஆகும்; இதை ஏற்க முடியாது.

காவிரி பாசன மாவட்டங்கள் வளம் கொழிக்கும் பூமியாகும். அங்கு வேளாண்மை வளம் கொழிப்பதை  உறுதி செய்ய வேண்டிய மத்திய, மாநில அரசுகள், வேளாண்மையை ஒழித்து விட்டு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வள பூமியாக மாற்றத் துடிப்பதை அனுமதிக்க முடியாது.

மீத்தேன் எரிவாயு, பாறை எரிவாயு, கச்சா எண்ணெய் உள்ளிட்ட வளங்களை தோண்டி எடுக்கும் பூமியாக காவிரி பாசன மாவட்டங்கள் மாற்றப்பட்டால் உணவுக்காக மற்ற மாநிலங்களிடமும், வெளிநாடுகளிடமும் கையேந்தி நிற்க வேண்டிய நிலை தமிழகத்திற்கு ஏற்படும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டு விடக்கூடாது.

எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசு, காவிரி பாசன மாவட்டங்களை  பாலைவனமாக்கி விட்டால், ஹைட்ரோகார்பன் திட்டங்களை தடையின்றி செயல்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறது. அதனால், தான் காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இழுத்தடித்தது. காவிரியில் வெள்ளம் ஏற்பட்ட போதிலும் காவிரி கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாமல் பினாமி அரசு பார்த்துக் கொண்டதற்கும் கூட இது தான் காரணமாகும்.

புதிதாக ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ள பல இடங்கள் காவிரி கடைமடை பகுதிகளில் தான் அமைந்துள்ளன என்பது இந்தக் குற்றச்சாற்றை வலுப்படுத்துகிறது.  மத்திய அரசின் திட்டங்களும், அதை தமிழக பினாமி அரசு கண்டும் காணாமலும் இருப்பதும் தமிழகத்தின் உணவுப் பாதுகாப்புக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

எனவே, தமிழகத்தில் புதிய மீத்தேன், பாறை எரிவளியை எடுப்பதற்கான ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். அதற்கான உரிமங்களை வழங்கக்கூடாது. இதற்கெல்லாம் மேலாக காவிரி பாசன மாவட்டங்களின் வளமையை பாதுகாக்க அப்பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அறிவிக்க வேண்டும்'' என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுரித்துள்ளார்...

மராட்டிய ரஜினிக்கு மாமா வேலை பார்க்கும் தந்திடிவி...


வேங்கை மகன நம்பியும் ஒரு கூட்டம் சுத்துதுபாரு அதாண்டா என்னால தாங்க முடியல டா...

நெல்லிக் காயின் மருத்துவ குணங்கள்...


நெல்லிப்பூவை கைப்பிடி அளவு எடுத்து மென்று சாப்பிட்டால், மலச்சிக்கல் இருக்காது. உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும்.

நெல்லிக்காய், நெல்லிப்பழம் இவற்றை தினமும் சுவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவுடன் அழகு பெறும்.

நெல்லிக்காயை உண்டால் தலைச்சுற்றல் மற்றும் வாந்தி நீங்கும்.

நெல்லி மரத்தின் பாகங்களை காயகல்ப முறைப்படி சாப்பிட்டு வந்தால், பெருவயிறு, இரத்தசோகை, மூலம், பெண்களுக்கு உண்டாகும் அதிக ரத்தப்போக்கு ஆகியவை நீங்கும்.

நெல்லி மரத்தின் இலைக் கொழுந்தை நன்கு அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் சீதத்துடன் கூடிய கழிச்சல் தீரும்.

நெல்லிவற்றலை தண்ணீ­ர் சேர்த்து நன்கு அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.

நெல்லி வற்றலை ஒன்றிரண்டால் இடித்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து பாதியாக சுண்டியதும் இறக்கி வடிகட்டி, அதில் சர்க்கரை மற்றும் சிறிதளவு பால் சேர்த்து சாப்பிட்டால் உடல்சூடு, வாந்தி ஆகியவை நீங்கும்.

நெல்லிவற்றலுடன் வில்வஇலை, சீரகம், சுக்கு, பொரி ஆகியவற்றை ஒன்றாக இடித்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் பித்த வாந்தி நிற்கும்.

நெல்லிக்காயை துவையலாக சாப்பிட்டால் வாந்தி மற்றும் சுவையின்மை நீங்கி, சுவை உண்டாகச் செய்யும்.

நெல்லி விதையுடன் சுத்தமான ஓமம், பசலைக்கீரை விதையை சமமாக எடுத்துக் கொண்டு பொடியாக்கி, தேன் கலந்து.... சுண்டைக்காய் அளவு உருட்டி காலை, மாலை தண்ணீ­ரில் உட்கொள்ள, பெருநோய் எனப்படுகின்ற குஷ்டநோய் வகைகள் யாவும் நீங்கும்.

நெல்லிக்காய் தைலத்தை தலைக்கு தடவி வர(அல்லது) தலையில் ஊறியதும் குளித்தால் முடி செழித்து வளரும். முடி உதிராமல் நன்கு வளரும். இளநரை சிறிது சிறிதாக மறையும்...

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்ய முயற்சி...


செல்லத்தம்மன் கோவில் பூசாரிகள் 6 பேர் பணி நீக்கம் - கோவில் இணை ஆணையர் நடவடிக்கை...

பதிவான ஆவணங்கள் உரிய தேதியில் கிடைக்கவில்லையா? புகார் தெரிவிக்க ஏற்பாடு...


பதிவான ஆவணங்கள் உரிய நேரத்தில் திருப்பித் தரப்படாவிட்டால் புகார் தெரிவிக்க பதிவுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

இது குறித்து பதிவுத் துறை தலைவர் ஜெ.குமரகுருபரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி...

சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவணம் பதிவு செய்யப்படும் போது அந்த ஆவணத்துக்குத் தேவையான முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு உரிய ரசீது சார் பதிவாளரால் கையெழுத்திட்டு, ஆவணத்தினை பதிவுக்குத் தாக்கல் செய்தவர் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆவணத்தைத் தாக்கல் செய்தவர் அல்லது ஆவணத்தைத் திரும்பப் பெற அதிகாரம் பெற்றவர் ஆவணத்தைத் திரும்பப் பெற நேரில் சார்பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டும். ஏற்கெனவே அளிக்கப்பட்ட ரசீதை ஆவணத்தைத் திரும்பப் பெறும் போது அளிக்க வேண்டும். அப்போது, ஆவணத்தைத் தாக்கல் செய்தவர் அல்லது திரும்பப் பெற அதிகாரம் பெற்றவரின் விரல் ரேகை பெறப்படும். ஆவணப் பதிவின் போது பெறப்பட்ட விரல் ரேகை, மென்பொருளால் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். இது சரிபார்க்கப்பட்ட பிறகே, ஆவணம் உரிய நபருக்கு திரும்ப அளிக்கப்படும்.

புகார் தெரிவிக்கலாம்: ஆவணம் திரும்ப வழங்கப்படும் நாள், நேரம் ஆகியன ஆவணப் பதிவின்போது வழங்கப்படும் ரசீதில் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த நாளில் சம்பந்தப்பட்ட நபர் சார் பதிவாளர் அலுவலகம் வந்து அசல் ஆவணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அசல் ஆவணத்தை ரசீதில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் திரும்ப வழங்காவிட்டால் 1800 102 5174 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

உரிய நாளில் ஆவணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து திரும்பப் பெறப்படாத நிலையில், அந்த ஆவணத்துக்கு பாதுகாப்புக் கட்டணம், ஆவணம் திரும்ப வழங்கும் போது வசூலிக்கப்படும் என குமரகுருபரன் தெரிவித்துள்ளார்...

தென்கொரியாவும் சேலமும்...


அவர்கள் உங்கள் முன் முட்டாள்கள் போலவே நடித்துக்கொண்டே இருப்பார்கள்...


நீங்களும் அவர்களுக்கு வாக்கு செலுத்த மாட்டோம் என அறிவாளித்தனமாக கூறிக்கொள்வீர்கள்..

நீங்கள் வாக்கு செலுத்தவில்லை என்றால், அவர்களுக்கு ஒன்றும் ஆகிவிட போவதில்லை..

ஏனெனில் அவர்கள் மறைமுகமாக உங்களை ஆள்வதே தான் அதிகம் விரும்புகின்றனர்...

அதிகார வர்க்கத்தின் வலிமைக்கு சிறிய உதாரணம் : சுப்பிரமணி சுவாமி..

அவர் இந்த இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பேசலாம்.. அவரை ஒருபோதும் கைது செய்ய முடியாது.

அது ஏன்..? என்று இதுவரை யாராவது யோசித்து இருக்கிறீர்களா..?

காற்றைச் சுத்தப்படுத்தும் வீட்டுச் செடிகள்....


வீட்டுக்கு ஒரு செடியாவது வளர்ப்போம்...

மரத்தையெல்லாம் அழிச்சாச்சு. இனி, நல்ல காத்துக்கு எங்கே போறது? இனிமே மரம் நட்டாலும் அது வளர்ந்து முழு மரமாகிறதுக்கு 20, 30 வருஷங்கள் ஆகுமே’ என்று சங்கடப்படுபவர்களே... உங்களுக் காகவே இந்த நல்ல செய்தி..

வீட்டிலேயே வளர்க்கக் கூடிய சில குறுஞ்செடிகளில் காற்றில் உள்ள நச்சுக்களைச் சுத்தப்படுத்தும் குணம் நிரம்பி இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி கூறுகிறது. தமிழ்நாட்டுச் சீதோஷ்ண நிலையில் வாழும் தன்மையையும், அதிக நன்மை களையும் கொடுக்கும் இந்தச் செடிகளைப் பற்றிய அறிமுகம் இதோ...

கற்றாழை (AloeVera): மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள கற்றாழை, காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைட் என்னும் வேதிப் பொருளை நீக்கும். சருமத் தீப்புண்களுக்கும் மருந்தாகப் பயன்படும்..

சீமை ஆல் (Rubber plant): வெயில் படாத இடங்களில்கூட வாழும் தன்மை கொண்டவை. அதிகமாக அசுத்தக் காற்றை உள்ளிழுத்து அதிகப்படியான ஆக்சிஜனை வெளியிடும்.

வெள்ளால் (Weeping Fig): காற்றின் நச்சுக்களை நீக்கி சுற்றுப்புறத்தின் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும்.

மூங்கில் பனை (Bamboo Palm) : காற்றில் கலந்துள்ள ஃபார்மால்டிஹைட் நச்சுக்களை நீக்குவதோடு இயற்கையான ஈரப்பதனியாகச் செயல்படும்.

ஸ்னேக் பிளான்ட் (snake-plant): நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் ஃபார்மால்டிஹைடைக் கிரகித்து ஆக்சிஜனை வெளிப்படுத்தும். வறண்ட சூழ்நிலை களில்கூட வாழும் தன்மைகொண்டவை.

கோல்டன் போட்டோஸ் (golden pothos): நாசா விஞ்ஞானிகளின் அறிக்கைப்படி காற்றைச் சுத்தப்படுத்தும் தாவரங்களின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்திருக்கும் இந்தச் செடி, கார்பன் மோனாக்சைடு வாயுவை உறிஞ்சிக்கொண்டு காற்றின் அளவை அதிகரிக்கச் செய்யும்.

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம். முடியாதபட்சத்தில், இப்படிப்பட்ட செடிகளையேனும் வளர்ப்போமே...

குட்கா ஊழல் ஜார்ஜ்...


எட்கார் கேஸ்...


எட்கார் கேஸ் குறிப்பிட்ட ஆகாய ஆவணங்களை முழுமையாக நம்பிய ஒரு அமைப்பு தியோசோபிகல் சொசைட்டி. அதன் நிறுவனர்கள் ரஷியாவைச் சேர்ந்த எச்.பி.ப்ளாவட்ஸ்கீயும், அமெரிக்காவைச் சேர்ந்த கர்னல் எச்.எஸ்.ஓல்காட்டும். கர்னல் ஓல்காட் தன்னுடைய அனுபவங்களை 'பழைய டைரித் தாள்கள் (Old Diary Leaves)' என்ற நூலில் எழுதியுள்ளார். அதில் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் ஆகாய ஆவணங்களைப் பயன்படுத்தி 'முகத்திரை அகற்றப்பட்ட ஐசிஸ்' (Isis Unveiled) எழுதிய விதத்தை சுவைபட விவரித்துள்ளார்.

"ப்ளாவட்ஸ்கீ அம்மையார் எழுதும் விதத்தைப் பார்க்கவே அற்புதமாக இருக்கும். மேசையில் பக்கம் பக்கமாக மிக வேகமாக எழுதிக் கொண்டே போவார். திடீரென்று ஏதாவது வேறு நூலில் இருந்து குறிப்புகள் தேவைப்பட்டால் கண்களை சுருக்கிக் கொண்டு வெட்ட வெளியைப் பார்ப்பார். பின் அந்த இடத்தையே பார்த்து பார்த்து சில வரிகள் எழுதுவார். தேவைப்பட்ட குறிப்பை எழுதி முடித்தவுடன் மறுபடி மின்னல் வேகத்தில் எழுத ஆரம்பிப்பார்... மறுபடி வேறு குறிப்புகள் தேவைப்படும் போது மறுபடியும் கண்களை சுருக்கிக் கொண்டு வெற்றிடத்தைப் பார்ப்பார்..."

பின் அந்தக் குறிப்பு நூல்களைத் தேடி எடுத்து அந்த அம்மையார் எழுதியதையும் சரிபார்த்தால் அவை வரிக்கு வரி அப்படியே இருந்ததாக கர்னல் ஓல்காட் கூறுகிறார். ப்ளாவட்ஸ்கீ அம்மையார் தனக்கு 'மஹாத்மா'க்கள் என்று அவர் அழைத்த உயர்நிலை சக்தி வாய்ந்த மனிதர்கள் அரூபமாக வந்து சம்பந்தப்பட்ட புத்தகங்களைக் காண்பிப்பதாகக் கூறினாலும் ஆகாய ஆவணங்களை அவர் பயன்படுத்தியதாகவே பலர் கருதினர். அப்படி அந்த அம்மையார் எழுதிய பல நூல்கள் இன்றும் பிரபலமாக உள்ளது.

விவேகானந்தருக்கும் இளமையில் இப்படியொரு அனுபவம் ஏற்பட்டதை 8-1-1900 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.

மனதில் நினைத்த கேள்விகளுக்கு வாய் விட்டுக் கேட்காமலேயே பதில் சொல்லும் ஒரு சாதுவைப் பற்றிக் கேள்விப்பட்ட விவேகானந்தர் தன் இரண்டு நண்பர்களுடன் அவரைப் பார்க்கச் சென்றார். குழப்பம் ஏற்பட்டு விடக்கூடாது என்று எண்ணி மூவரும் ஒவ்வொரு கேள்வியை மனதில் நினைத்து அதை எழுதியும் வைத்துக் கொண்டு அந்த சாதுவைப் பார்க்கச் சென்றனர். அந்த மூன்றையும் அவர் சொல்லி அதற்கான பதிலையும் சொல்லி விட்டார்.

விவேகானந்தர் சிறு வயதிலிருந்தே எதையும் எளிதாக நம்பி விடாதவராக இருந்தார். அவரும் அவர் நண்பர்களும் அந்த சாது கேள்வியையும் பதிலையும் சொன்னாலும் இன்னும் சங்தேகம் நீங்காதவர்களாக இருந்தனர்.

அதைக் கண்ட அந்த சாது அவர்கள் மூவரிடமும் ஒவ்வொரு தாளில் ஏதோ எழுதி அதை அப்போது படிக்க வேண்டாம் என்று சொல்லி அவரவர் சட்டைப் பையில் வைத்துக் கொள்ளச் சொன்னார். அவர்களும் அவற்றை அப்படியே படிக்காமல் சட்டைப்பையில் வைத்துக் கொண்டனர். பின் சிறிது நேரம் அவர்கள் மூவருக்கும் அவர்களுடைய எதிர்காலப் பலன்களையெல்லாம் சொல்லிய சாது மறுபடி மூன்று பேரிடமும் "ஏதாவது ஒரு வார்த்தை அல்லது வாக்கியத்தை நினைத்துக் கொள்ளுங்கள். அது எந்த மொழியிலாக இருந்தாலும் பரவாயில்லை" என்றார்.

உள்ளூர் மொழியைத் தவிர வேறெந்த மொழியையும் அறிந்தது போல் தெரியாத அந்த சாது அப்படி சொன்னவுடன் விவேகானந்தரும் அவரது நண்பர்களும் தனியாகச் சென்று கூடிப் பேசி கஷ்டமான மொழிகளில் வார்த்தை அல்லது வாக்கியம் நினைக்க முடிவு செய்தார்கள். விவேகானந்தர் சம்ஸ்கிருத மொழியில் ஒரு நீண்ட வாக்கியத்தை நினைத்தார்.

விவேகானந்தருடன் வந்த ஒரு நண்பர் முஸ்லீம். அவர் குரானிலிருந்து ஒரு வாக்கியத்தை அரபு மொழியில் நினைத்தார். மற்ற நண்பர் மருத்துவர். அவர் ஜெர்மானிய மொழியில் ஒரு மருத்துவச் சொல்லை நினைத்தார். 'இந்த முறை அந்த சாதுவால் முன்பு சொன்னது போல் சரியாகச் சொல்ல முடியாது' என்று திடமாக நம்பினார்கள் விவேகானந்தரும் அவர் நண்பர்களும்.

நினைத்து முடித்தவுடன் அந்த சாதுவை உற்சாகமாக அணுக அந்த சாது அவர்களை அந்தக் காகிதங்களை எடுத்துப் பார்க்கச் சொன்னார். அவர்கள் எடுத்துப் பார்த்த போது அவரவர் நினைத்தது அந்தந்த மொழியில் எழுதப்பட்டிருந்தது. அத்துடன் 'நான் எழுதிய இந்த வார்த்தைகளை இந்த இளைஞன் நினைப்பான்' என்று
ஒவ்வொன்றிலும் எழுதியிருந்தார். விவேகானந்தரும் அவர் நண்பர்களும் மலைத்துப் போனார்கள்.

இவர்கள் நினைத்ததை அவர் சொல்வார் என்பதற்கு ஒருபடி மேலே போய் அவர் எழுதியதை இவர்கள் அதிசாமர்த்தியமாகத் தாங்கள் நினைத்ததாய் தேர்ந்தெடுக்க வைத்தது பேரதிசயமே அல்லவா? அதுவும் அவரவர்கள் சம்பந்தப்பட்ட துறையில் அவரவர்கள் கஷ்டமானது என்று நினைத்த வார்த்தைகளை அவர்கள் நினைப்பதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பே எழுதி வைத்தது எப்படி சாத்தியம்?

பதில் ஆகாய ஆவணங்களில் இருக்கலாம் என்பது பலருடைய அபிப்பிராயம். எல்லாமே அலைகளாக பிரபஞ்சத்தில் பரவியிருக்கின்றன என்கிறார்கள். மற்றவர்களுடைய எண்ண அலைகளைப் படிக்க முடிவதும், அவர்கள் எண்ணங்களில் ஆதிக்கம் செலுத்த முடிவதும் என்றோ சித்தர்களும், ஞானிகளும் அறிந்திருந்தனர் என்பதற்கு எட்கார் கேஸ், ப்ளாவட்ஸ்கீ, விவேகானந்தர் சந்தித்த அந்த சாது எல்லாம் சாட்சிகள். இந்த மூன்று நபர்களும் 19 ஆம் நூற்றாண்டு இறுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் வாழ்ந்தவர்கள் என்றாலும் அவர்களுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பதஞ்சலி முனிவர் இதை விடப் பெரிய சாதனைகளும் மனதைக் கட்டுப்பாட்டில் வைத்து, பயிற்றுவித்தால் சாத்தியம் தான் என்பதை தன் "யோக சூத்திரங்களி"ல் எழுதியிருக்கிறார்.

இன்று விஞ்ஞானத்தில் எத்தனையோ முன்னேறி, எத்தனையோ கண்டுபிடிப்புகள் செய்திருக்கும் நாம் முன்னொரு காலத்தில் அறியப்பட்டும் பெரிதும் உபயோகப்படுத்தியும் வந்த மனோசக்தியை அலட்சியப்படுத்தி விட்டோமோ?

விக்ஸ் - Vicks உண்மைகள்...


மனம்...


தவறிழைப்பது மனம் இனி தவறு செய்யக்கூடாது என்று தீர்மானிப்பதும் அதே மனம் தான்.

தவறு செய்யாத வழியைத் தேர்ந்து ஒழுக வேண்டியதும் மனமே , மனதை பழைய நில்லையிலேயே வைத்துக்கொண்டு புதிய நல்ல வழியில் எப்படிச் செல்ல முடியும் ?

மனத்தின் குறைகளைப்  போக்கியாக வேண்டும், நல்வழியில்  தீர்மானமாக நிற்கின்ற சுயபலத்தை மனதிற்கு ஊட்டி யாகவேண்டும் , அதையார் செய்வது?

மனம் தான் தனக்குத் தானே வைத்தியம் செய்து கொள்ள வேண்டும்.

மனத்தை தாழ்த்திக்கொள்வதும் உயர்த்திக் கொள்ளவதும் மனத்திடம் தான் இருக்கிறது , மனம் தன்னை உயர்த்திக்கொண்டால் இடையறா இன்பநிலையை  அடையலாம்.

இன்பமும் அமைதியும் மனத்திற்க்குள்ளிருந்து தான் வர வேண்டும், அதற்க்கு மனம் தன்னையே நன்கு பூரணமாய் அறிந்து கொள்ள வேண்டும்.

மனம் தனது மூலமான உயிரில் ஒடுங்கிப் பின்னர் உயிரின் மூலமான இறைநிலையை எழுதினால் அறிவாகிறது , அன்னில்லையைப் பெற்ற மனத்தினைக் கொண்ட மனிதனும் தெயவதரத்தில் ஒன்றே

மனம்-இயற்க்கை-சமுதாயம் என்ற முக்கோணத்திற்குள் தான் மனிதன் வாழ்ந்தாக வேண்டும்.

இதில் இயற்கை மாற்றபட முடியாது, அதனை மனம் அறிந்து மதிக்கின்ற அளவுதான் மனத்திற்கு உயர்வு கிட்டும்...

இது தான் தமிழக காவல்துறை....


சிசேன் இட்ஷா பிரமிட். - Chichen_Itza...


மாயன்களால், 'குக்கிள்கான்' என்னும் அவர்களுடைய பாம்பு கடவுளுக்காக சீசென் யீட்ஸா (Chichen Itza ) என்ற நகரத்தில் கி. மு. ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது தான் இந்த பிரமிட்.

இந்தக் குக்ககிள்கான் என்னும் கடவுள் தான், மாயன்களின் அறிவுக்கே அடிப்படைக் காரணமானவர் என்று சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

உண்மையில் இந்தக் குக்கிள்கான் ஒரு ஊர்வன இன வேற்றுகிரக கடவுள், 

மாயன்களின் கல்வேட்டுகள் சித்திரங்கள் அனைத்திலும் இந்த ஊர்வன வேற்றுகிரகவாசிகள் உருவங்கள் தான் காணப்படுகின்றன.

உலக அதிசயங்களைத் தன்னுள் அடக்கிய ஒரு பிரமிட் அது.

மாயன்களின் கணித அறிவையும், வானியல் அறிவையும், கட்டடக்கலை அறிவையும் இன்றும் பறைசாற்றிக் கொண்டு, நிமிர்ந்து நிற்கிறது
இந்தப் பிரமிட்.

இதன் நான்கு பக்கமும், வருடத்தின் நான்கு காலங்களையும், அதில் உள்ள படிகளின் எண்ணிக்கைகள் 365 நாட்களையும் குறிப்பது இந்தப் பிரமிட்டின் சிறப்பு.

அத்துடன் இந்த நான்கு பக்கமும் உள்ள படிகள் மிகச் சரியாக 45 பாகை கோணத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

அதுமட்டுமில்லாமல், இந்தப் பிரமிட்டின் நான்கு மூலைகளையும் குறுக்காக இணைக்கும் இரண்டு கோடுகளும், மிகச் சரியாக வடக்குத் தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் அமைந்திருக்கின்றன்.

இவையெல்லாம் மாயன்களின் அறிவுக்கும் கட்டடக் கலைக்கும் முக்கிய சான்றுகளாகும்.

இவற்றை விடவும் மிக ஆச்சரியமான ஒன்று அந்த பிரமிட்டில் உண்டு...

இந்தப் பிரமிட்டின் நான்கு பக்கப் படிகளிலும், வடக்குப் பக்கத்தில் உள்ள படிகளில் ஒரு சிறப்பான அம்சம் அமைக்கப்பட்டிருக்கின்றது.

அந்தப் படிகளின் அடிப்பக்கம் இரண்டு பக்கமும் இரண்டு பாம்புகள் வாயைத் திறந்து கொண்டிருப்பது போல அமைக்கப்பட்டிருக்கின்றன.

வருடத்தில் இரண்டு முறைகள், மிகச் சரியாக மார்ச் 21ம் திகதியும், செப்டம்பர் 22ம் திகதியும் அந்தப் படிகளின் பக்கச் சுவர்களில், சூரியனின் நிழல் படுகின்றது.

பிரமிட்டின் மூலைகளில் படும் சூரிய ஒளி, அந்தப் பாம்பின் உடல் போல வளைந்து வளைந்து சரியாக அதன் தலையுடன் பொருந்தும்.

இதில் இன்னுமொரு விசேசம் என்னவென்றால்...

மாயன்கள் அந்தப் பக்கச் சுவரில் மட்டும் பாம்பின் தோல் போன்ற அமைப்பில் கற்களை வைத்துக் கட்டியிருக்கிறார்கள்.

இப்படி ஒவ்வொரு வருடமும் சரியாக மார்ச் 21ம் திகதியும், செப்டம்பர் 22ம் திகதியும் மாற்றமே இல்லாமல் இந்த நிழல்கள் தெரியும்.

"அப்படி என்ன விசேசம் இந்த மார்ச் 21ம் திகதிக்கும், செப்டம்பர்22ம் திகதிக்கும்" என்று யோசிக்கிறீர்களா?

உலகில் எந்த ஒரு இடத்திலும், வருடத்தில் எப்போதும், இரவும் பகலும் ஒரே அளவு நேரமாக்க் கொண்டிருப்பது இல்லை. வருடத்தில் இரண்டே இரண்டு நாட்கள் மட்டும்தான் இரவும், பகலும் ஒரே அளவாக இருக்கும்.

மாயன் பிரதேசத்தில் இந்த இரவும் பகலும் ஒன்றாக இருக்கும் நாட்கள்தான் மார்ச்21ம் திகதியும், செப்டம்பர் 22ம் திகதியும். தற்கால கட்டட நிபுணர்களே தடுமாறும் இந்த ஆச்சரியமான கட்டட அமைப்பைக் கொண்டு அமைந்த இந்தப் பிரமிட்டில், பல அதிசயங்கள் நடக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை சிற்றரசர்கள் அவர்களுடைய இந்த வேற்றுகிரக ஊர்வன கடவுளிடம் பேசி ஆலோசனை பெறும் ஒரு சடங்கை நடத்துவார்களாம்.

இந்த பிரமிடு, மாயன்கள், ஊர்வன கடவுள் விசயங்களில் நாம் புரிந்து கொள்ள முடியாத ஏதோ ஒரு  தாத்பரியம் இவற்றிற்குள் மறைந்திருக்கிறதோ?