22/06/2018

சிறுவாணி குடிநீருக்கு புகழ்பெற்ற கோவை இனி, பிரான்ஸ் நாட்டின் சூயஸ் நிறுவனத்தின் வேட்டைக் காடாகிறது...


ரூ.3150 கோடிக்கு, 26 ஆண்டுகளுக்கு உரிமம் பெற்றுள்ள அந்த நிறுவனம், குடிநீர் கட்டணத்தை நிர்ணயித்து விநியோகிக்கும்...

கருத்தியல்.. தலைவன்.. நினைவூட்டல்...


அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் புரியும் இந்த பாச பிணைப்பு...


திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் அரசினர் உயர்நிலை பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் பகவான், சுகுணா ஆகியோருக்கு நேற்று முன்தினம் பணி மாறுதல் வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து மாணவ–மாணவிகள் அனைவரும் வகுப்புகளை புறக்கணித்தனர். இவர்களில் பகவான் திருத்தணி அருகே அருங்குளத்திற்கும், சுகுணா வேலஞ்சேரிக்கும் பணி மாறுதலானார்கள்.

இந்த நிலையில் பணிவிடுவிப்பு கடிதம் பெற ஆசிரியர் பகவான் நேற்று பள்ளிக்கு வந்தார். பள்ளி தலைமை ஆசிரியர் அரவிந்திடம் அவர் பணிவிடுவிப்பு கடிதம் பெற்றுக்கொண்டு அவர் பள்ளியை விட்டு வெளியே வந்தார்.

அப்போது ஆசிரியர் வந்த தகவலறிந்து ஏராளமான மாணவ–மாணவிகள் பள்ளிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் ஆசிரியரின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து அவரை செல்ல விடாமல் தடுத்தனர். ‘‘நீங்கள் வேறு பள்ளிக்கு சென்றால் நாங்கள் பள்ளிக் கூடத்துக்கே வரமாட்டோம்’’ என்று மாணவ–மாணவிகள் உணர்ச்சி மிகுதியில் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதை கண்டு ஆசிரியர் பகவானும் கண்ணீர் விட்டார்.

இந்த காட்சியை கண்ட அங்கிருந்தவர்களும் மனம் வேதனை அடைந்தனர். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் அரவிந்த் மற்றும் பிற ஆசிரியர்களும் அவர்களை தேற்றினார்கள்.

மாறுதலில் செல்லும் ஆசிரியரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் அனுமதி பெற்று வாரத்தில் இரு நாட்கள் இங்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க மாணவ–மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் அரவிந்த் மாவட்ட கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். மாவட்ட கல்வி அலுவலர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியை தொடர்பு கொண்டு மாணவ–மாணவிகள் ஆசிரியர் பகவான் மேல் கொண்டுள்ள பாசத்தை தெரிவித்தார்.

இதை கேட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆச்சர்யம் அடைந்தார். அந்த ஆசிரியரை மேலும் 10 நாட்கள் அதே பள்ளியில் தொடர்ந்து பணி செய்ய அனுமதி வழங்கினார்.

இதுகுறித்து மாநில கல்வித்துறை இயக்குனரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவரது ஆலோசனை பெற்ற பிறகு ஆவண செய்யலாம் என கூறினார். இதையடுத்து ஆசிரியர் பகவான் அதே பள்ளியில் தனது பணியை தொடர்ந்தார்...

பாஜக - அதிமுக வின் பினாமி தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களை வைத்து திசை திருப்பும் வேலை ஆரம்பம்...


சென்னை ஓலா அலுவலகத்தில் பதற்றம்...


ஓலா உபேர் போன்ற நிறுவனங்களை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசு இந்த நிறுவனங்கள் தாமாகவே வாடகை கட்டணங்களை நிர்ணயணம் செய்வது , ஓட்டுனர்களுக்கு மாணியம்(சலுகை) என்ற பெயரில் அவர்களை கடுமையான இன்னல்களுக்கு ஆளாக்குவது மேலும் மனஅழுத்தத்தை உண்டாக்கி தற்கொலைக்கு தள்ளப்படும் நிலை உருவாக்கி... செயலி கொண்டு அடக்குமுறைக்கு தள்ளப்பட்டு இன்று வன்முறைகளில் இறங்க செய்துள்ளது. தமிழக அரசு உடனடியாக இது போன்ற தனியார் நிறுவனங்களை கட்டுப்படுத்த சட்டம் அவசியம்....

தொடர் வேலை நிறுத்தம் என உரிமை குரல் தொழில் சங்கம்
தெரிவித்துள்ளனர்...

விழித்துக்கொள் தமிழினமே...


ஆழ்ந்த உறக்கத்துக்கு பூண்டு....


கைவைத்தியத்துக்கு சிறந்தது பூண்டு. அதன் மருத்துவக்குணங்களைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தாலும், நாம் அதை எளிதில் மறந்து விடுவோம். அதனால்தான் என்னவோ நம் முன்னோர்கள் சமையலில் பூண்டை அதிகம் பயன்படுத்த நம்மை பழக்கப்படுத்திவிட்டனர்.

அன்றாட உணவில் பூண்டை சேர்ப்பதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளில் சில.....

குழந்தை பெற்ற பெண்களுக்கு தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது.

கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.

தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும்.

உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. ஆகையால்தான் கரையாத கொழுப்பு சத்து உள்ள மாமிச உணவு சமைக்கும்போது பூண்டை அவசியம் சேர்க்கின்றனர்.

இரவு உணவுடன் பச்சையாகவோ அல்லது பாலிலோ மூன்று பூண்டு பற்களை சாப்பிட்டால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். கனவுத் தொல்லை இருக்காது.

பூண்டிற்கு ரத்த அழுத்தத்தைக் கண்டிக்கும் சக்தி உண்டு. அதனோடு இதய தசைகளையும் ரத்தக் குழாய் தசைகளையும் வலுப்படுத்தும் சக்தி பூண்டிற்கு உண்டு.

பூண்டு ஒரு நார்சத்து மிகுந்த உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும் குணம் பூண்டிற்கு உண்டு.

பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ளும் வாய்ப்பு இல்லாதவர்கள் பூண்டு மாத்திரைகளை சாப்பிடலாம். இதனால் வயிற்று உப்பிசம் நீங்கி, தொப்பை குறையும் வாய்ப்பு அதிகம்...

தமிழகமும் யோகா தினமும்...


சமஸ்கிருதம் இந்திய மொழியுமல்ல, இந்துக்களின் மொழியுமல்ல...


சமக்கிருத மனுவாதிகள் எல்லோரும் சமஸ்கிருதம் இந்தியாவில் உருவாகிய, இந்தியாவின் பழமையான மொழி மட்டுமல்ல, இந்திய மொழிகள் எல்லாவற்றுக்கும் தாய் என்கிறார்கள்.

பழமையான மொழியாகிய தமிழ் கூட சமஸ்கிருதத்திலிருந்து உருவாகியது என்றும் கூட சிலர் வாதாடுகின்றனர்.

ஆனால் சமஸ்கிருதம் இந்தியாவுக்கு வெளியிலிருந்து வந்த மொழி,  அதன் மூலம் (Source) இந்தியாவுக்கு வெளியே தான் உள்ளது என்பதை பெரும்பாலான மொழி ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.

அத்துடன், ரிக் வேதத்துக்கும் இந்திய  இந்துக்களுக்கும் எந்த தொடர்புமில்லை, ரிக் வேதத்தில் கூறப்படும் கடவுள்கள் இந்தியாவின் தெய்வங்கள் அல்ல என்கிறார் பிரிட்டிஸ் வரலாற்றாசிரியர் மைக்கல் வூட்ஸ் (Michael Woods). 

ஆரியர்கள் ஹைபர் கணவாய்க்கு அப்பாலிருந்து  இந்தியாவுக்கு வந்ததாக ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது (7:08) என்கிறது

"........There’s a lot of interesting stuff on the Dravidian language group as a whole which must be older than Sanskrit as the earliest hymns in the Rig Veda have borrowings from Dravidian. For a short guide Try Kamil Zvelebil’s Dravidian Linguistics (published in Pondi about 15-20 years ago)."

-Michael Woods, Historiann..

சேது சமுத்திரத்திற்க்கு கீழே பாலம் இருக்குதுன்னு நம்புற பாஜக துரோகிகள்.. சேலம் To சென்னை பாதையில் விவசாயநிலம் இருக்குதுன்னா நம்ப மாட்டேங்கிறான்...


மருத்துவ குணம் கொண்ட அரச மரம்...


மருத்துவ குணம் கொண்ட அரச மரம், ஒரு அரச மரத்தை வைத்தால் சந்ததியினர் அனைவருக்கும் சொர்க்கத்தில் இடமுண்டு என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். ஒரு அரச கண் நடுவதற்கு, ஒரு அரச மரத்திற்கு அவ்வளவு சிறப்பு இருக்கிறதா?

அரச மரத்தில் ஒருவித மின் ஆற்றல்கள், பாசிடிவ் எனர்ஜி அளிக்கக் கூடிய மின் ஆற்றல்கள் அரச இலை போன்றவற்றில் இருக்கிறது.

ஹோமங்களில் நாம் போடும் பொருட்களில் அரசங்குச்சி அவசியமாக அதில் இடம் பெறுகிறது. இந்த அரசங்குச்சியில் இருந்து வரக்கூடிய புகை மூச்சுத் திணறல், சளித் தொந்தரவுகளை போக்கக் கூடியது. நரம்புகளை முறுக்கேற்றக் கூடியது. சோர்வு, களைப்பு, நரம்புத் தளர்ச்சியுடன் இருப்பவர்களுக்கெல்லாம் மிகவும் நல்லது.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால், விந்தணுக்களினுடைய எண்ணிக்கை அதிகப்படுத்தக்கூடிய, பலப்படுத்தக்கூடியதெல்லாம் அரச பழத்தை பதப்படுத்தி உண்ணும் போது வருகிறதுநம்முடைய மூதாதையர்கள், முன்னோர்கள் மருத்துவ குணங்களை சூசகமாக சொல்லிச் சென்றிருக்கிறார்களே தவிர, நேரடியாக அறிவியலாக அதை சொல்லாமல் சென்றுவிட்டார்கள்.

அதனால், பாதியில் வந்தவர்கள் இதெல்லாம் மூட நம்பிக்கை, அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

இதையே சிகாகோவில் இருக்கக் கூடிய பல்கலைக்கழகம், அரச மர இலையில் இவ்வளவு வீரியம் இருக்கிறது. அந்த மரத்திற்கு கீழ் உட்கார்ந்து அரை மணி நேரம் சுவாதித்தால் இத்தனை கலோரிகள் கிடைக்கிறது என்று அவர்கள் சொல்லும் போதுதான் மக்கள் நம்பப் போகிறார்கள்...

பாஜக - அதிமுக வின் காவல்துறை கலாட்டா...


மனோதிடம்...


மனிதனாகப் பிறந்துவிட்ட நம்மை முன்னேற்றியே தீருவது என்று கச்சை கட்டிக் கொண்டு நிற்கிறார்கள் பல புத்தக வெளியீட்டாளர்கள். ஆண்டவனின் திருவடியை அடைய அறுபது சுலப வழிகள் என்பது முதல் இடது கால் சுண்டு விரலின் நகத்தை இடது கையால் வெட்டுவது எப்படி என்பது வரையில் சகலவிதமான தந்திரங்களையும் சொல்லித் தரும் புத்தகங்கள் ஏராளமாக வருகின்றன. கடைப் பிடிக்கிறோமோ இல்லையோ சுவாரஸ்யமாகப் படிக்க முடிகிறது.

இன்னொரு உபயோகம் என்னவென்றால் அந்தக் கஷ்டம் இந்தக் கஷ்டம் என்று நம்மிடம் வந்து புலம்புகிற பேர்வழிகளிடம் 'இந்தப் புத்தகத்தைப் படியுங்கள் உங்கள் கவலைகள் யாவும் தீரும்' என்று கூறிக் கொடுத்தனுப்பலாம். பிறகு அவர்கள் உங்களிடம் வரவே மாட்டார்கள்.

ஆனால் அடிப்படையில் மனோதிடம், மனோதிடம் என்கிறார்களே அது மட்டும் இருந்துவிட்டால் எந்தப் புத்தகமும் தேவையில்லை. சிகரெட் பழக்கத்தை நிறுத்துவதற்கான வழிமுறைகளைப் பற்றி விகடன் பிரசுரம் ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறது. அழகான அச்சு. கவர்ச்சியான வடிவமைப்பு. பீட்டர் க்ராஸ் என்பவரும் க்ளைவ் ஹாப்வுட் என்பவரும் இணைந்து எழுதிய ஆங்கிலப் புத்தகத்தின் மொழி பெயர்ப்பு. 200 பக்கங்கள். விலை நூறு ரூபாய். 'புகைப்பதை நிறுத்துவோம்' என்ற இந்தப் புத்தகத்தில் சின்னதும் பெரிதுமாகப் பல விஷயங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
என் நண்பரொருவர் நிறைய சிகரெட் பிடிப்பவர். அவரது மனைவியிடம் இதைக் கொடுத்து 'உங்கள் கணவரிடம் கொடுங்கள்' என்றேன். 'இதைப் போல நூறு புத்தகங்களை வாங்கித் தந்துவிட்டேன். அவரைத் திருத்த முடியவில்லை' என்றார் அலுப்புடன்.

எந்த நல்ல காரியமானாலும் முதலில் ஆசமனம் செய்ய வேண்டுமென்று பெரியவர்கள் சொல்வார்கள். (ஆசனம் செய்வது என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள அதற்கான புத்தகத்தைப் படியுங்கள்.) மனோதிடம் பெறுவதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன.

 பசியெடுத்தால் உடனே சாப்பிட உட்காராதீர்கள். ஒரு மணி நேரம் தள்ளிப் போடுங்கள். ஒரு கடினமான வேலையை செய்து கொண்டிருக்கும்போது கைக்கருகே உள்ள தினசரி 'வேளச்சேரியில் இரட்டைக் கொலை' என்று கொட்டை எழுத்தில் பேப்பரை எடுக்காதீர்கள். இப்படியே செய்து வந்தால் எடுத்துக் கொண்ட வேலையை முடிப்பதில் முனைப்பு ஏற்படும்.

உங்கள் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதில் கவனமாக இருங்கள். உங்கள் அம்மாவிடம் சொல்வதற்கு வெட்கப்படும் எந்தக் காரியத்தையும் செய்யாதீர்கள்.

தூக்கத்தைக் குறையுங்கள். காலையில் எழுந்தவுடன் அன்றைக்கு செய்ய வேண்டிய வேலைகள் என்ன. அவற்றை எப்படி செய்ய போகிறோம் என்று சிந்தியுங்கள். மென்மையான இசையைக் கேளுங்கள்.
கண்ணாடி முன் நின்று ஐந்து நிமிடங்கள் வாய்விட்டு சிரியுங்கள். நாலு வயதுக் குழந்தை ஒரு நாளைக்கு 500 தடவைகள் சிரிக்கிறதென்று கணக்கிட்டிருக்கிறார்கள். அந்தக் குழந்தை மனம் உங்களுக்கு இருக்க வேண்டும்.

நடைப் பயிற்சியின் போது, எத்தனை அடிகள் எடுத்து வைக்கிறோம் என்பதை எண்ணிக் கொண்டே நடங்கள். மன ஒருமைப்பாட்டுக்கு இது மிகவும் உதவும்.

இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை உபவாசம் இருங்கள். பழ ரசத்தை மட்டுமே அருந்துங்கள் அல்லது பழங்களை சாப்பிடுங்கள்.

நாளொன்றுக்கு குறைந்த பட்சம் பத்து டம்ளர்கள் தண்ணீரைக் குடியுங்கள்.

இப்படி செய்யலாமா அப்படி செய்யலாமா என்ற பிரச்னை ஏற்படும்போது இரண்டில் எது கடினமானதோ அதை செய்யுங்கள்.

ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவருடைய பெயரை அடிக்கடி சொல்லுங்கள். 'நான் என்ன சொல்கிறேன் என்றால், மிஸ்டர் நாராயணசாமி', நீங்கள் சொல்வது புரிகிறது மிஸ்டர் தாமஸ்' என்பது போலப் பேசினால் உறவு பலப்படுகிறது. எந்த மனிதருக்கும் அவருடைய பெயர் இனிய சங்கீதம்.

செய்யப் பிடிக்காத இரண்டு வேலைகளை ஒவ்வொரு நாளும் செய்யுங்கள். புத்தக அலமாரியை சுத்தம் செய்வது, உறவினருக்குக் கடிதம் எழுதுவது, செடிக்குத் தண்ணீர் ஊற்றுவது, பத்திரிக்கைகளைத் தேதி வாரியாக அடுக்கி வைப்பது இப்படி ஏதாவது இரண்டு வேலைகளை செய்து முடியுங்கள்.

அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கு எழுந்திருக்க வேண்டுமானால் அதற்கு அலாரம் தேவையில்லை. உங்களுக்குள்ளேயே ஒரு அலாரம் இருக்கிறது. படுப்பதற்குப் பத்து நிமிடங்களுக்கு முன், வசதியான நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்கள் கைகளை முழங்காலின் மீது மேலோடு வைத்துக் கொண்டு கண்ணை மூடிக் கொள்ளுங்கள். 'நாளைக் காலையில் ஐந்து மணிக்கு நான் புத்துணர்வுடன், உற்ச்சாகத்துடன், சுறுசுறுப்புடன் எழுந்திருப்பேன்' என்று இருபது முறைகள் சொல்லுங்கள். மறுநாள் காலை தானென்று ஐந்து மணிக்கு எழுந்து கொள்வீர்கள்.

எழுந்ததும் மூன்று மந்திரங்களை சொல்லுங்கள்: 'இன்று நான் பிறரிடம் பரிவு காட்டுவேன். இன்று நான் பிறருக்கு உதவி செய்வேன். இன்று நான் கருணையுடன் நடந்து கொள்வேன்'...

அந்த காலத்துலேயே பெண்களுக்கு ஜிம் வச்சிருந்த தமிழ் சமுகம்...


நட்சத்திரங்கள் மற்றும் நட்சத்திரக் கூட்டங்களை பற்றி பழந்தமிழன் அறிந்திருந்தான் என்பதற்கு சான்றுகள்...


நட்சத்திரங்கள் – உடு,
நட்சத்திரக் கூட்டம் – உடுமீன்கள் என்று தமிழில் குறிப்பிடப்படுவதும் மற்றும் ஞாயிறு போன்ற தமிழ்ச் சொற்களும் சான்றாகும்.

செவ்வாய் என்ற சொல், செவ்வாய்க் கோள் சிவப்பானது என்பதை குறிப்பிடுகிறது.

சனிக் கோளினை சுற்றி இருக்கும் கரிய வளையத்தை குறிக்கும் விதத்தில், சனிக்கிரகம் – கரியன் என தமிழில் அழைக்கப்படுகிறது.

கலிலியோ தொலைநோக்கி மூலம் வான மண்டலத்து கோள்களைப் பற்றி கண்டறிந்து சொல்வதற்கு முன்பே தமிழன் அவற்றைப் பற்றி அறிந்திருந்தான்.

– மறைக்கப்பட்ட தமிழனின் பெருமைகள்...

நினைத்த போதெல்லாம் தண்ணீர் திறந்து விட காவிரி என்ன என் பாக்கெட்டிலா இருக்கு- தமிழக அதிமுக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு அதிர்ச்சி பேச்சு...


பாஜக மோடியின் தலைமை பொருளாதார ஆலோசகர்...


எப்படிப்பட்ட ஆளுக்கு தலைமை பொருளாதார ஆலோசகர் பொறுப்பு மோடி கொடுத்து நான்கு வருடமாக  கொஞ்சி உள்ளார்  பார்த்தீர்களா...

முக்கிய சரித்திர குறிப்பு : படத்தில் ஜெட்லி காதில் கிசிகிசுபவர் தான் 07.06.1959 சென்னையில் பிறந்து ., அமெரிக்காவில் செட்டில் ஆகி பின்னர்  இந்தியாவுக்கே  தலைமை பொருளாதார ஆலோசகர் 2014-2018 பாஜக காலத்தில்...

நம்ப முடியாத உண்மைகள்...


வேற்று கிரக வாசிகள் பற்றிய அபூர்வ தகவல்கள்...


வேற்று கிரக வாசிகள் எனப்படும் ஏலியன்ஸ் பூமியில் யாருக்கும் புலப்படாமல் அவ்வப்போது வந்து செல்கிறது என கூறப்படுகிறது.

இதனை நம்புவோரின் எண்ணிக்கை தற்போது பரவலாக அதிகரித்து வருகிறது.

கலிபோர்னியா நகரில் மோனோ என்ற ஏரி உள்ளது. இந்த ஏரியில் அதிக விஷ தன்மை கொண்ட ஆர்சனிக் என்ற நச்சு பொருள் கலந்துள்ளது.

இதில் உயிர்கள் வாழ்வது என்பது அரிதான ஒன்று என கருதப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஆராய்ச்சியாளர்கள் ஏரியின் கீழ்பகுதியில் நுண்ணிய பாக்டீரியா வகையினை கண்டறிந்துள்ளனர்.

இது ஆர்சனிக் என்ற நச்சு பொருளை எடுத்து கொண்டு வாழ்வது தெரிய வந்துள்ளது.

இதனை அடிப்படையாக கொண்டு வேற்று கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்குரிய சாத்தியக்கூறுகள் உள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.

மேலும் விஞ்ஞானிகள் பல நூறு பில்லியன் டிரில்லியன் ஆண்டுகளை கடந்து விண்வெளியில் அமைந்திருக்கும் பூமி போன்ற வேற்று கிரகங்களில் உயிரினங்கள் வாழும் வாய்ப்புள்ளது என கணித்துள்ளனர்.

கடந்த 10 வருடங்களில் சூரிய குடும்பத்தை தவிர்த்து 500 கிரகங்கள் வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பர் மாதம் வானியலாளர்கள் பூமி போன்று 3 மடங்கு பெரிதான கிரகம் ஒன்றை கண்டறிந்துள்ளனர்.

இந்த கிரகத்தில் நம்முடைய பூமியில் இருப்பது போல் வளிமண்டலம் புவியீர்ப்பு விசை மற்றும் மேற்பரப்பில் நீர் ஆகியவை இருப்பதற்கான ஆதாரங்கள் தெரியவந்துள்ளது .

இதற்கு கிளீஸ் ஜி என பெயரிட்டுள்ளனர்.

இது ஏறத்தாழ 118,000,000,000 ,000 மைல்கள் அளவிற்கு தூரம் இருக்கும்.

மேலும் இதிலிருந்து வெளிப்படும் ஒளியானது பூமியை வந்தடைய 20 வருடங்கள் ஆகும் எனவும் கணக்கிட்டுள்ளனர்.

இதனையடுத்து வேற்று கிரகத்தில் உயிரினங்கள் பற்றிய ஆராய்ச்சி மேலும்
வலுவடைந்துள்ளது. அது தொடர்பான விவாதங்களும் சூடுபிடித்துள்ளன.

இதுவரை நமக்குத் தெரிந்த வைரஸ் முதல் மனிதன் வரை அனைத்து உயிர்களும் கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்பரஸ் மற்றும் சல்பர் இந்த 6 ரசாயனங்களால் உருவானவை இந்த பாக்டீரியாவின டி.என்.ஏ வில் பாஸ்பரஸ் இல்லை. அதன் டி.என்.ஏ வில் பாஸ்பரசுக்குப் பதிலாக ஆர்சனிக் என்ற ரசாயனம் தான் உள்ளது.

ஆர்சனிக் பாக்டீரியா கண்டு பிடிக்கப்பட்டதன் மூலம் உயிரின் அடிப்படை விதியே தகர்க்கப்பட்டுள்ளது...

ஊடகங்களை புறக்கணியுங்கள்...


சாகர்மாலா உண்மைகள் - 3...


எந்தந்த துறைக்கு எந்தந்த நாடு பொறுப்பேற்க போகிறது என்பதின் பட்டியல்...

இந்தியா-சுற்றுலா, போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு, சுற்றுசூழல் மற்றும் இயற்கை பேரிடர் மேலாண்மை (ஒகி புயலின் போது இவர்கள் செய்த மேலாண்மையை மக்கள் கவனிக்கனும்), பயங்கரவாதம்.

தாய்லாந்து-மனித உறவு மேம்பாடு, மீன்பிடித்துறை, பொது நலம்
வங்கதேசம்-வணகிம் மற்றும் முதலீடு
மியான்மர்-ஆற்றல், வேளாண்மை
இலங்கை-தொழில்நுட்பம்
பூட்டான்-பண்பாடு.. நேப்பாளம்-வறுமை ஒழிப்பு..

பாதுகாப்பு-வணிகம்-முதலீடு-தொழில்நுட்பம் போன்ற அறிக்கைகள் பொதுவாகவே கூட்டமைப்பு நாடுகளில் இருப்பது தான். ஆனால், வேளாண்மை, மீன்வளம், மனிதவளம், சுற்றுலா போன்ற மற்றவைகளை இவர்கள் கவனித்துக் கொண்டார்கள் என்றால் தமிழக மக்கள் (குமரி மக்கள்)  அப்போ என்ன தலைல துண்ட போட்டு தூங்கனுமா?

நன்கு சிந்திக்கவும் மக்களே எல்லாத்தையும் அவர்கள் வசம் பிடுங்க போகிறார்கள் அதற்கு அவர்கள் கொடுக்கும் பெயர் வளர்ச்சி, வேலைவாய்ப்பு. ஒரே கேள்வி கேட்கிறேன், என் நிலத்தை புடுங்கி எனக்கே வேலை போட்டு தருவது என்ன வளர்ச்சி இது சர்வாதிகாரம் இல்லயா...

நம்ப முடியாத உண்மைகள்...


திராவிடலு பகுதி - 7...


திராவிடம் - இந்தச் சொல்லை நூறு வருடங்களுக்கு முன் ஒரு தமிழரிடம் கூறினால் அவர் புரியாமல் விழித்திருப்பார்.

ஆனால் இன்று அந்த சொல்தான் தமிழரை ஆண்டு வருகிறது. இந்த அதிசயம் எப்படி நடந்தது?

சரி இந்த 'திராவிடம்',என்கிற சொல் வேதங்களிலோ இலக்கியங்களிலோ காணப்படுவதில்லை. பிறகு எங்கிருந்து இந்த வார்த்தை முளைத்தது.அதற்கான விடையைத் தேடுவோம்.

திராவிடம் என்பது ஒரு தெலுங்குச் சொல்...

என்ன வியப்பாக இருக்கிறதா?

தெலுங்கு மக்கள் தமிழரைக் குறிக்க இந்தச் சொல்லைப் பயன்படுத்தினர்.

இதற்கான விளக்கத்தை முனைவர். எஸ்.செல்லப்பா இ.ஆ.ப அவர்கள் கொடுத்துள்ளார்.

தமிழ் உணர்வாளரான இவர் ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசுவதில் வல்லவர்,
தெலுங்கு மக்கள் மத்தியில் பலகாலம் வாழ்ந்தவர்.

இவரது நீண்ட விளக்கமாவது,

A BRIEF NOTE ON THE WORD 'DRAVIDIAN'

A few years ago I made an in-depthstudy of certain root
words in Tamil language.
One of the words is ‘Dravidian’.
I couldnot publish that work due to myadministrative pre-occupations.

Traditionally Tamil scholars is of the viewthat this term “Dravidian”is of Sanskrit Origin.
They consider that the term Dravidian isderived from the word“Dramilam”.
If that be so, what, then, is theroot of Dramilam?
Thisled me to ponder over the root word for‘Dravidian’.
Thereafter Istarted reading a few original Telugu workssystematically and alsoconsidered the speaking language of theAndhras.

‘Aravam’, ‘Tamilamu’and ‘Dravida Basha’ are the three words usedby the Andhras to referto Tamil language.
Aravamu is used in thesense well-defined.
‘Dravida Basha’ is used only to connote toTamil language.

It was Robert Caldwell who extended thelinguistic area of ‘Dravidian’to include Malayalam, Kannadam, Telugu,Tulu, Brahmi etc. 
Otherwise,the Telugus used the term Dravidam to meanonly Tamil language.
For example, Sri Krishna Devaraya, belongingto 15th Century A.D.wrote the great literary work“Amuktamalyada” in Telugu, uses the word“Dravida Kutumbi” (I:64) to refer to Tamil
families
Gurram Joshuva, another very renowned poet of 20th Centuryuses the term “Dravidia inhis famous poem “Gabbilam” to refer toTamil only.
Similarly P.Gopalreddy who did elaborate study on the Geo-physical concept of villagenames also uses the term Dravida basha torefer to Tamil.
At present, I am translating Gabbilam intoTamil language.
Joshuvauses “Dravida Bhumi” to refer to the Tamilland.

My curiosity did not stop here.
Is there anyconnection between
Dravida and Tamil?
After so much research,
I came to the conclusionthat Dravidam and Tamilam mean one andthe same.
Or Dravidam perhapsis a Telugu derivative of Tamilam and it isnot of Sanskrit origin,
assome Tamil scholars think.
Now we shall split the word Tamil into threeparts:
Tatmizh.
Incertain Telugu words ‘ta’ becomes “tra”.
1. Thadu > Thradu (rope)
2. Thova > Throva (way)

Hence the ‘ta’ in Tamil becomes “tra”, whichin turn becomes “Dra”,
which is quite common in Telugu language.

In Telugu language ‘ma’ becomes ‘va’ incertain words.
1. Mamidi > Mavidi (mango)
2. mama > mava (uncle)
3. bhumi > bhuvi (earth)

Hence the ‘mi’ in Tamil becomes ‘vi’ inTelugu.

Similarly Tamil ‘Zha’ becomes ‘da’ in Telugulanguage.
This is anaccepted linguistic rule.
Example:
1) Chozha > Choda (The Cholas)
2) Kozhi > Kodi (a hen)
3) Pazh > padu (waste, useless)
4) Keezh > Keedu  (harm)
5) Appozhudu > Appudu (then)
6)Ippozhudu > Ippudu (now)

To conclude, the term Dravidian is purely aTelugu word to refer toTamil language only.
This is in vogue even to-day amongst Teluguscholars.

As mentioned earlier, it was Robert Caldwell, who expanded the scope of the term Dravidian to includeother southern languages ina linguistic sense. 
There is another soundreason for Caldwell to usethe term “Dravidian” to connote otherSouthern languages of India.

For Tamil was the only language amongSouthern languages with a long history of literature, grammar and originalityof its own. Dr. S. Chellappa IAS .

சரி இப்போது விட்ட இடத்துக்கு வருவோம்.

ஏற்கனவே உருவாக்கி வைத்திருந்த திராவிடக் கருத்தியலை சிறிது திருத்தங்களுடன் பரப்புரை செய்த ஆங்கிலேயர்.

அதற்கான ஆதரவு நன்கு பெருகியதும் சரியான நேரம் பார்த்து திராவிடத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தனர்.

சர்.அலெக்சாண்டர் கார்டியூ இவர் 1916-ல் 'கவர்னர் நிர்வாக கவுன்சில்' உறுப்பினராக இருந்தவர்.

இவர் 1913- ல் 'இந்திய நிர்வாகக் கவுன்சில'  முன்பு சாட்சியமளித்தார்.

அதில் தமிழ்ப் பிராமண ஆதிக்கம் பற்றி விபரமாகக் கூறினார்.

அப்புள்ளிவிபரம் பின்வருமாறு..

இந்தியன் சிவில் சர்வீசுக்கென இந்தியாவிலும் இங்கிலாந்திலும் தேர்வுகள் வைக்கப்படுகின்றன.இதில் பிராமணர்களே முழுவதும் தேர்ச்சியடைந்து வருகின்றனர்.1892 முதல் 1904 வரை நடைபெற்ற தேர்வுகளில் 16 ல் 15 பிராமணர் ஆவர். இது 95% ஆகும்.

சென்னை மாகாணத்தில் உதவிப் பொறியாளர் வேலைக்கு ஆட்கள் எடுக்கப்பட்ட போது 20 ஆண்டுகளில் பிராமணர் 17 பேரும் பிராமணரல்லாதோர் 4 பேரும் எடுக்கப்பட்டுள்ளனர்.

கணக்குத் தணிக்கைத் துறைத் தேர்வுகளிலும் இதேநிலை இருந்து வருகிறது.

சென்னைமாகாண 'உதவி கலெக்டர்' பதவிக்கான 140 இடங்களில் பிராமணருக்கு 77 இடங்கள்; பிராமணரல்லாதோருக்கு 30 இடங்கள்;
ஏனைய கிறித்துவர், முகம்மதியர், ஐரோப்பியர், ஆங்கிலோ- இந்தியருக்குக் கிடைத்தன.

1913 ல் மாவட்ட நடுவர்களுக்குரிய 128 நிலையான இடங்களில் பிராமணர் 93 இடங்களுக்கும், பிராமணரல்லாதோர் 25 இடங்களுக்கும், இந்திய கிறித்துவர், ஐரோப்பியர்,ஆங்கிலோ-இந்தியர் ஆகியோர் எஞ்சிய இடங்களுக்கும் நியமிக்கப்பட்டனர்.

இத்தகவல்கள் உண்மையானவையே.

இதைப்பார்க்கும் போது பிராமணர் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது தெளிவாகிறது.

இதில் கூறப்பட்டுள்ள விபரங்களில் உதவிப்பொறியாளர் மற்றும் உதவி கலெக்டர் பற்றி இருக்கிறதே தவிர தலைமைப்பொறியாளர் மற்றும் தலைமை கலெக்டர் பற்றி எதுவும் இல்லையென்பதை நொக்குக.

இவை அக்காலத்தில் இந்தியருக்கு ஒதுக்கப்படவில்லை, முழுதும் ஆங்கிலேயரே இருந்தனர்.

ஆங்கிலேயர் என்னதான் இந்தியருக்கு உரிமைகளை அளித்தாலும் அதில் குறிப்பிட்ட வகுப்பினரே ஆதிக்கம் செலுத்துவர், அதனால் ஆங்கிலேயருக்கு கட்டுப்பட்டு இருப்பதே அனைத்து வகுப்பினருக்கும் நல்லது என்று மறைமுகமான அறிவித்தல் இது.

தவிர பிராமண ஆதிக்கம் குறைந்திருந்த புள்ளிவிபரங்கள் மறைக்கப்பட்டன.

இதன் மூலம் பிராமணரல்லாத மக்களுக்கு விழிப்புணர்வூட்டியதாகக் காட்டிக்கொண்டனர்.

அதாவது கிறித்துவரும் முகம்மதியரும் தனி ஒதுக்கீடு பெற்றிருக்க பிராமணரல்லாத இந்துக்களை பிராமணர் ஒடுக்குவதாகக் காட்டி அதன்மூலம் பிராமணரல்லாத இந்துக்கள் அமைப்பை உருவாக்கி தமக்கு ஆதரவாக தமது நிழலில் வைத்துக்கொள்ளத் திட்டமிட்டனர்.

ஆம், கடைசியில் அதுதான் நடந்தது.

1916 ல் ஆங்கிலேயரின் செல்லக்குழந்தையாக முதல் திராவிடக்கட்சியான  'நீதிக்கட்சி' பிறந்தது.

இதைத் தொடங்கியவர் மலையாளியான டாக்டர்.டி.எம்.நாயர், மற்றும் தமிழ்நாட்டுத் தெலுங்கரான சர்.பி.டி.தியாகராச செட்டியார்.

இவர்கள் இருவருக்கும் அக்கட்சியைத் தொடங்க என்ன அவசியம் இருந்தது?

இவர்களின் பின்புலம் என்ன?

திராவிடம்  தமிழருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும், பிறமதத்தினருக்கும் ஏதாவது ஒரு  நன்மையாவது செய்ததா?

- தொடரும்...

இயற்கையே கடவுள்...


வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும் என்கிறார் தமிழின துரோகி பாஜக தமிழிசை...


ஸ்டெர்லைட் காட்டிலும், 277கிமீ எட்டு வழி சாலை காட்டிலும்,30 மணி நேரம் கப்பல் நேரத்தை மிச்ச படுத்தும் சேது சமுத்திரக் கப்பல் கால்வாய்த் திட்டம் மிக்க லாபத்தை மட்டும் அல்ல அதிக பட்ச தொடர் வேலைவாய்ப்புகளை பெற்று தரும்...

காரணம் சேது சமுத்திரக் கப்பல் கால்வாய்த் திட்டம் நிறைவேறும் பொழுது இக்கால்வாய் வழியாக செல்லக்கூடிய அளவும் வேகமும் கொண்ட பெரிய கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் இருந்து இலங்கையைச் 400 கிமீ சுற்றாமல் சேதுக் கால்வாய் வழியாக வங்கக் கடலை அடைய முடியும்.இதன் பலன்கள் பல... அவற்றில் இதோ சில...

இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்கு இடையேயான தூரம் 424 கடல்மைல் வரை குறையும் . அதனால் கணிசமான எரிபொருள் சேமிப்பு எற்பட்டு அந்நியச் செலாவணி சேமிப்பு நடக்கும்.

கப்பல்களின் பயண நேரம் 30 மணிநேரம் வரை குறைந்து கப்பல் வாடகைக் கட்டணத்தில் சேமிப்பு நடக்கும . அதனால் எற்படும் inland water ways தேசிய நெடுஞ்சாலை லாரிகள் போக்குவரத்து குறைய மீண்டும் அந்நியச் செலாவணி சேமிப்பு நடக்கும்.

கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் ஒன்று சரக்குப் பெட்டகப் போக்குவரத்திற்கென ஒருங்கிணைப்புத் துறைமுகமாக மேம்படுத்தப்பட்டால்  அதனால் தமிழ்நாடு வளர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு பெருகும்.

இத்தனை பயனை தரும் சேது  சமுத்திர திட்டம் எதிர்த்து நீதிமன்றத்திலே தடை கோரும் பாஜக எம்பி  Subramanian Swamy யையும் ., அந்த குரலுக்கு அதரவாக பேசி பிரமாண பத்திரம்  தாக்கல் செய்த    மோடி அரசின் சட்டதுறை மந்திரி ரவிஷஙகர் பிராசத்தையும் எங்கெ எப்போது எப்படி கைது செய்யலாம் என்றும் மாண்புமிகு தமிழிசை கூறினால் அவருக்கு புண்ணியம் கிட்டும்...

கருப்பட்டி உபயோகபடுத்தி நமது உடலை சக்கரை நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்...


பசுமைச் சாலையா? பசுமை அழிப்புச் சாலையா? வைகோ நாயூடு அறிக்கை...


மத்திய அரசின் ‘பாரத் மாலா பிரயோஜனா’ திட்டத்தின் கீழ் சென்னை - சேலம் இடையே 277.3 கி.மீ. தொலைவுக்கு எட்டு வழி பசுமைச் சாலை அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்திடத் தமிழக அரசு முனைந்துள்ளது. பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் அமைய உள்ள எட்டு வழி பசுமைச் சாலைக்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் சுமார் 5790 ஏக்கர் பரப்பளவு நிலம் கையகப்படுத்த அரசு ஆணைப் பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றது.

சேலம் மாவட்டம், அரியானூரில் இருந்து சென்னை வண்டலூர் வரை அமைக்கப்படும் பசுமைச் சாலை 257 கி.மீ. விளை நிலங்களின் வழியாகவும், 13.30 கி.மீ. அடர்ந்த காடுகள் வழியாகவும் அமைய இருப்பதாகத் திட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

இதனால், இந்த வழியில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் பசுஞ்சோலைகள், விளை நிலங்கள்,  கஞ்ச மலை, ஜருகு மலை, கல்ராயன் மலை, தீர்த்த மலை, கவுதி மலை, வேடியப்பன் மலை ஆகிய 8 மலைகளும், நூற்றுக்கு மேற்பட்ட ஏரிகளும், இலட்சக்கணக்கான மரங்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.

இயற்கை வளங்களைச் சூறையாடி, பசுமையை அழித்து உருவாக்கப்படும் 8 வழிச்சாலைக்கு ‘பசுமைச் சாலை’ என்று மோசடியான பெயரை மோடி அரசும், எடப்பாடி பழனிச்சாமி அரசும் சூட்டி இருப்பதுதான் முரண்பாடாக இருக்கின்றது.

சென்னை - சேலம் பசுமை வழி விரைவுச் சாலைத் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்து கொண்டுள்ள மக்கள், தங்கள் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு நிர்க்கதியாக நிற்கும் நிலை ஏற்படுகின்றதே என்று தன்னெழுச்சியாக இத்திட்டத்திற்கு எதிராகக் குரல் எழுப்புகின்றார்கள்.

கருத்துக் கேட்புக் கூட்டங்களைக் கண்துடைப்புக்காக நடத்திவிட்டு, மோடி அரசின் உத்தரவைச் செயல்படுத்த துடிக்கின்ற எடப்பாடி பழனிச்சாமி அரசு வாழ்வுரிமைக்காகப் போராடும் மக்களைக் கிள்ளுக் கீரையாகக் கருதி, அடக்குமுறை தர்பாரை ஏவி விட்டுள்ளது.

சேலத்தில் கஞ்ச மலை, திருண்ணாமலையில் கவுந்திமலை, தருமபுரி, அரூர் ஆகிய இடங்களில் உள்ள மலைகளிலுல், நிலத்திற்குக் கீழே புதைந்து கிடக்கும் கனிம வளங்களை வரைமுறையின்றிச் சூறையாடி, சென்னைத் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லும் வகையில்தான் கார்ப்பரேட் பெரு நிறுவனங்களின் ஆதாயத்திற்காக சேலம்-சென்னை 8 வழி பசுமைச் சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சிக்கின்றன என்று வெளிவரும் தகவல்கள் பொய்யானவை அல்ல.

விளைநிலங்களையும், வீடுகளையும் இழந்து, நாதியற்றவர்களாக குடும்பத்துடன் ஏதிலிகளாக சொந்த மண்ணில் அலையும் நிலை வருகின்றதே என்று கண்ணீரும் கம்பலையுமாக அழுது புரளும் மக்களை, குறிப்பாகப் பெண்களையும், வயதான முதியவர்களையும் மூர்க்கத்தனமாக காவல்துறையை ஏவி தாக்குதல் நடத்துவதும், கிராமம் கிராமமாக நள்ளிரவில் வீடு புகுந்து மக்களைக் கைது செய்து சிறையில் பூட்டுவது, அச்சுறுத்தி மிரட்டுவது போன்ற எடப்பாடி பழனிச்சாமி அரசின் ஏதேச்சாதிகார பாசிச நடவடிக்கைகள் கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எந்த வளர்ச்சித் திட்டங்களுக்கும் எதிரானது அல்ல. ஆனால் வளர்ச்சி யாருக்கு? என்பதுதான் எங்கள் கேள்வி.

பாதிக்கப்படும் மக்களின் கொந்தளிப்பையும், தவிப்பையும் புரிந்தும் புரியாதது போல ஜூன் 11 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில், பசுமைச் சாலைத் திட்டத்தைச் செயல்படுத்தியே தீருவோம் என்று முதல்வர் எடப்பாடி மார்தட்டுவது ஜனநாயக நாட்டில் ஏற்புடையது அல்ல.

தமிழகத்தின் பல பகுதிகளில் பொதுமக்கள் தன்னெழுச்சியாக அறப்போர் களத்தில் மத்திய, மாநில அரசுகளின் நாசகாரத் திட்டங்களை எதிர்த்துப் போராடும் போது காவல்துறை குண்டாந்தடி மூலம் அடக்கி, ஒடுக்கிவிடலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி அரசு நினைப்பது எதிர்விளைவுகளைத்தான் உருவாக்கும்.

சேலம் - சென்னை எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் 5 மாவட்ட மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ‘பசுமையை அழிக்கும்’ இத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும்.

வாழ்வாதாரத்திற்காகப் போராடும் மக்களை கைது செய்து, சிறையில் அடைக்கும் கொடுமையை நிறுத்த வேணடும். இயற்கையைக் காக்கக் குரல் எழுப்பும் சமூக ஆர்வலர்கள் மற்றும் ந்டிகர் மன்சூர் அலிகான், சேலம் பியூஸ் மனுஷ், மாணவி வளர்மதி போன்றவர்களை, சிறையில் இருந்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்...

அமெரிக்காவின் அடுத்த அதிரடி...


இந்திய ரூபாயை ரொக்கமா வைக்காதீர்: மக்களுக்கு பூடான் ரிசர்வ் வங்கி எச்சரிக்கை...


இந்திய ரூபாயை ரொக்கப் பணமாக கையில் வைத்திருக்க வேண்டாம், மீண்டும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதற்குப் பொறுப்பேற்க முடியாது என்று பூடான் ரிசர்வ் வங்கியான ராயல் மானிட்டரி அத்தாரிட்டி (ஆர்எம்ஏ) எச்சரிக்கை செய்துள்ளது

இந்தியாவில் கறுப்புப் பணம், கள்ளநோட்டு, ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளைச் செல்லது என்று பணமதிப்பு நீக்க நடவடிக்கையைப் பிரதமர் மோடி கடந்த 2016, நவம்பர் 8-ம் தேதி அறிவித்தார்.

இந்த அறிவிப்பால், அண்டை நாடான நேபாளம், பூடான் நாடுகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. ஏனென்றால், இந்திய ரூபாயை அங்கு மக்கள் தாராளமாக பயன்படுத்திக்கொள்ள மக்களுக்கு அந்த நாட்டு ரிசர்வ் வங்கிகள் அனுமதி அளித்து இருந்தன.

இந்திய அரசின் திடீர் உத்தரவால் அந்த நாட்டில் உள்ள மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி, பணத்தை வங்கிகளில் கொடுத்து மாற்றினார்கள். ஏறக்குறைய ஒரு ஆண்டுக்குப் பின் அங்கு நிலைமை சீரடைந்தது.

இந்தச்சூழலில் அண்டை நாடான பூடான், தனது மக்களுக்குக் கடந்த சில நாட்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய ரூபாயை கையில் ரொக்கமாக அதிகமான அளவுக்கு வைத்திருக்க வேண்டாம் எனத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

''இந்திய ரூபாய் நோட்டுகளைக் கையில் ரொக்கமாக வைத்திருக்கும் மக்கள், முடிந்தவரை அதை வங்கியில் செலுத்தி தேவைக்கு ஏற்றார்போல் எடுத்துப் பயன்படுத்துங்கள். இந்திய ரூபாயை ரொக்கமாகக் கையில் வைத்து செலவு செய்வதையும், சேமித்து வைத்திருப்பதையும் தவிர்க்கவும் என ராயல் மானிட்டர் அதாரிட்டி (ஆர்எம்ஏ) கேட்டுக்கொள்கிறது.

கடந்த 2016-ம்ஆண்டில் இந்தியாவில் கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்கம் போல் ஏதேனும் எதிர்காலத்தில் கொண்டுவரப்பட்டால், மக்கள் கையில் வைத்திருக்கும் இந்திய ரூபாய்க்கு பூடான் ரிசர்வ் வங்கி எந்தவகையிலும் பொறுப்பேற்காது.

இந்திய ரூபாயில் 500 ரூபாய் நோட்டுகளில் கள்ளநோட்டுகள் அதிகமாகப் புழங்குவதால், 500 ரூபாய் நோட்டுகளை ஏற்கும் போது, மிகுந்த கவனத்துடன் செயல்படுங்கள். இந்திய ரூபாய்களில் ரூ.500 நோட்டுகளை ரூ.25 ஆயிரத்துக்கு மேல் அதிகமாக வெளியே எடுத்து செலவு செய்ய வேண்டாம், சேமிக்கவும் வேண்டாம்.''

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பூடானில் உள்ள இந்தியத் தூதரகத்தில் உள்ள ஒரு அதிகாரியிடம் இந்த அறிவிப்புக்குப் பின்புலம் குறித்துக் கேட்டபோது, ரிசர்வ் வங்கி ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்போகிறதா என்பது குறித்து ஏதும் தெரியாது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய ரூபாயைக் கவனமாக வைத்திருக்கவும், சேமிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

Source : http://tamil.thehindu.com/india/article24221847.ece/amp/?utm_source=HP&utm_medium=hp-tsothers&__twitter_impression=true

விழித்துக்கொள் எம் தமிழினமே...


பாலஸ்தீனத்தில் புலிகள்...


உங்களுக்கு பாலஸ்தீன விடுதலைத் தலைவர் திரு.யாசர் அராபத் அவர்களைத் தெரிந்திருக்கும்.

பாலஸ்தீன அரபுத் தந்தைக்கும் எகிப்து அரபித் தாய்க்கும் பிறந்தவர்.

எகிப்திலேயே வளர்ந்து கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டுக்குக்கூட போகாமல் நேராக தனது இனத்தை இனவெறி யூதர்களிடமிருந்து காக்க பாய்ந்தோடியவர்.

அங்கீகரிக்கப்படாத ஒரு நாட்டில் ஆயுதவழியில் போராடி அதிபராக உயர்ந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.

அவருக்கும் புலிகளுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா?இருக்கிறது..

அவர் தலைவராக இருந்த பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் (P.L.O) புலிகள் பயிற்சி எடுத்துள்ளனர்.

இதை ஏற்பாடு செய்தவர் ஈழப் புரட்சிகர மாணவர் அமைப்பை (E.R.O.S) நிறுவிய திரு.இளையதம்பி இரத்தின சபாபதி ஆவார்.

இவர் இலண்டன் வாழ் ஈழத்தமிழர்.

பாலஸ்தீன விடுதலை அமைப்பைச் சேர்ந்த இங்கிலாந்துக்கான பாலஸ்தீனத் தொடர்பாளர் திரு.சையது அமீது அவர்களுடன் நட்பு ஏற்பட்டபோது,
அவருடன் பேசி தமது இயக்கத்திற்காக பயிற்சி தர ஏற்பாடு செய்தார்.

பிறகு 1976 மே மாதம் பெய்ரூட் சென்று பாலசுத்தீனப் போராளி திரு.அபு ஜேஹத் என்பவரை (இசுரேலிய உளவுத்துறையால் கொல்லப்பட்டவர்) சந்தித்துப் பேசி  நேரில் பார்த்து விபரங்களை தெரிந்து கொண்டு
வவுனியாவிலும் சென்னையிலும் இயங்கிக் கொண்டிருந்த தமது இயக்கத்தினரையும், வவுனியாவில் ஈரோசுடன் கூட்டாக இயங்கிக் கொண்டிருந்த பிரபாகரனின் குழுவையும் (அப்போது இயக்கத்திற்கு பெயர் இல்லை) லெபனானுக்கு அழைத்துச் சென்று பாலஸ்தீன விடுதலை இயத்தினரிடம் பயிற்சி பெறச் செய்தார்.

இந்தப்பயிற்சி 1976ன் பிற்பகுதியில் தொடங்கி 1977 முற்பகுதி வரை நடந்தது.

1983லும் புலிகள் மீண்டும் பாலசுத்தீனப் போராளிகளிடம் பயிற்சி பெற்றதாகவும் கூறுவர்...

தமிழர் வழிபாடு பற்றிய மேலோட்டமான பதிவுகள். இவை அடிபப்டை புரிதலுக்காக...

குலதெய்வம் - முன்னோர் வழிபாடு...






விழிப்புணர்வே எமது நோக்கம் என்று பகிர்கிறேன்...