16/03/2018

திமுக சாதி கட்சி இல்லிங்கோ...


திமுக வில் யாரும் சாதி பாக்கறது இல்லிங்கே...

சத்தியமா நம்புங்க அவங்க தலைவர் பெரியார் சொன்ன மாதிரி சாதிய ஒழிக்க போராடுறாங்கோ....

போங்கடா மானங்கெட்ட பயலுங்களா...

திமுக செய்த சாதனைகள் இது தான் டா...


பிரபஞ்சமும் எண்ணங்களும்...


ஒரு மனிதனின் மனதில் பல்லாயிர எண்ணங்கள் உருவாகும். அதில் தாழ்வு எண்ணங்கள், எதிர்மறை எண்ணங்கள், பலவீனமான எண்ணங்கள், முரட்டு எண்ணங்கள், அன்பு, தெய்வீகம் என பல உயர்ந்தும்.

அதே வேலையில் தாழ்வான எண்ணங்களும் அதே மனதில் தான் உருவாகின்றன.

மனோதத்துவ ஆராய்ச்சியின்படி ஒரு மனிதன் எதை நினைக்கிறானோ, அதுவாகவே தான் உருவாகிறான் என்பதை கண்டறியப்பட்டிருக்கிறது.

இதைத்தான் நம் முன்னோர்கள் "விதைப்பதே விளையும்" என்றார்கள்.

நாம் நம் வாழ்க்கையில் உயர்ந்து ஒளி வீச நம் மனம் தான் ஆணிவேர்.

உயர்ந்த எண்ணங்களை விதைத்து வாழ்வில் உயர வேண்டும் என்று தன்னம்பிக்கையுடன் உழைத்தல் நிச்சியம் வெற்றி கோட்டையை அடையலாம்.

தவறான எண்ணங்களை மனம் யோசித்தால் தவறான வழிகளைத் தான் அறிவு தரும்.

நம் எண்ணங்கள் எப்பொழுதும் சுத்திகரிக்கப்பட்டு புனிதமாக இருக்க வேண்டும்.

எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டிருந்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது. எண்ணம் சுத்திகரிக்கப்பட்டிருந்தால் வாழ்விற்கு நல்லது.

நீங்கள் ஒவ்வொருவரும் இரவும் பகலும் ஓடி ஓடி வேலை செய்து சொத்து, மாட மாளிகை, புது மாடலான வண்டி வாகனங்கள், பொன் பொருள் என வாழ்கையில் சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

நிலம் உள்ளவர்கள் நிலத்தை சுத்தம் செய்து உறமிட்டு நீர்பாய்ச்சி, பயிரிடுகிறார்கள்.

எத்தனை பேர் மனதை உழுது நல்லெண்ணங்களை விதைத்து , போட்டி, பொறாமை, புறம் பேசுதல், பிறருக்கு கேடு விலைவித்தல் என்ற எண்ணங்களை களையெடுத்து உள்ளன்போடு பழகுதல், உண்மையாக உழைத்தல், எதையும் எதிர்பாராமல் உதவி புரிதல் என்ற பண்புகளுடன் வாழ்கிறார்கள்.

இப்படி வாழக்கூடியவர்கள் வாழ்க்கையில் எப்போதும் சந்தோசமாகவும், உற்சாகத்துடனும் வாழ கற்றுக் கொள்கிறார்கள்.

எண்ணம் அணுகுண்டை விட ஆற்றலுள்ளது என்று கூறினால் எத்தனை பேர் நம்புவீர்கள்?

ஏனென்றால் அணுகுண்டை செய்யக்கூடிய ஆற்றல் உருவானதே எண்ணத்திலிருந்து தானே..

மனம் எண்ணியதினால் தான் அறிவு செயல்பட்டு அணுகுண்டு உருவானது.

ஒரு எண்ணத்தை நம்பிக்கையுடன் பலமுறை மனதில் நினைத்தால், அது நல்லதோ, கேட்டதோ அது நடந்தே தீரும்.

ஆகையால் நல்லதும் கேட்டதும் நடப்பது நாம் எண்ணும் எண்ணங்களினால் தான்.

"நீ எதை நினைக்கிறயோ அதுவாகவே மாறி விடுகிறாய்" என்பதை நீங்கள் கேள்விப்பத்டிருப்பீர்கள்.

உங்கள் எண்ணம் உறுதியாக இருந்தால் இயற்கையே உங்களுக்கு உதவி கரம் நீட்டி உதவி புரியும் என்பது உறுதி...

பாஜக கட்சியுள்ள அனைவருமே.. தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரானவர்கள் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்...


இது தான் வாழ்க்கை...


சொந்தம் என்று சொல்வதெல்லாம்
உனக்கு சொந்தம் இல்லை...

நீ வந்தாய், வாழ்ந்தாய், சென்றாய்.
இதுதான் வாழ்க்கை...

பெற்றோர் வைத்த பெயரும்
பிணம் என்று மாறுது...

விரும்பி அணிந்த துணியும்
கந்தல் என்று ஆகுது...

பாடுபட்டு சேர்த்த சொத்தும்
வாரிசு இடம் சேருது...

கூடி வாழ்ந்த மனைவி
கூடவே வா சாகுது...

ஓடி ஆடி உழைத்த உடம்பு
உயிரை விட்டு கிடக்குது...

உயிர் கொடுப்பேன் என்றதெல்லாம்
ஊமை யாக நிற்குது...

சொந்தம் என்று சொல்வதெல்லாம்
உனக்கு சொந்தம் இல்லை...

நீ வந்த இந்த உலகில்
அவன் தந்த உடம்பில்
சொந்தம் என்பது ஏதடா....

தங்கி செல்லும் வழிப்போக்கனே...

நீ வந்தாய், வாழ்ந்தாய், சென்றாய். இதுதான் வாழ்க்கை...

திருச்சிற்றம்பலம்...

தமிழக மக்கள் விரோதி எனும் காவல்துறை அராஜகம்...


மதுரை மாட்டுத்தாவணி  பஸ் ஸ்டாண்டில் கடை வைத்திருந்த இரு வயதான பெண்மணியிடம் மாமூல் கேட்ட காவலர், தட்டி கேட்ட கல்லூரி மாணவி, ஆத்திரத்தில் கல்லூரி மாணவியை பளார் என அறைந்த காவலர். ஆவேசமடைந்த மாணவி மறியல்...

அய்யா வழி என்பது தனி மதம்...


அது, அன்று திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த  இந்து வைதீக சாதிய ஆதிக்கங்களுக்கு  எதிராக தொடங்கப்பட்டது..

-அய்யா வழியின் தலைமைபதியில் இருந்து வந்த இந்த கடிதத்தை படித்து பார்த்தாவது தெளிவு பெறுங்கள்...

தமிழா நம்மை நன்றாக திசை திருப்பி.. ரசினி, கமல், எச்ச. ராஜா, ஆண்டாள்னு பேசி பேசியே இதை மறைத்து விட்டார்கள் இந்த விபச்சார ஊடகங்கள்...


அரிசிகளின் இரகசியம்...


1. கருப்பு கவுணி அரிசி : மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.

2. மாப்பிள்ளை சம்பா அரிசி : நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.

3. பூங்கார் அரிசி : சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.

4. காட்டுயானம் அரிசி : நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.

5. கருத்தக்கார் அரிசி : மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.

6. காலாநமக் அரிசி : புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.

7. மூங்கில் அரிசி: மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.

8. அறுபதாம் குறுவை அரிசி : எலும்பு சரியாகும்.

9. இலுப்பைப்பூசம்பார் அரிசி : பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.

10. தங்கச்சம்பா அரிசி : பல், இதயம் வலுவாகும்.

11. கருங்குறுவை அரிசி : இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.

12. கருடன் சம்பா அரிசி : இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.

13. கார் அரிசி : தோல் நோய் சரியாகும்.

14. குடை வாழை அரிசி : குடல் சுத்தமாகும்.

15. கிச்சிலி சம்பா அரிசி : இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.

16. நீலம் சம்பா அரிசி : இரத்த சோகை நீங்கும்.

17.சீரகச் சம்பா அரிசி : அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.

18. தூய மல்லி அரிசி : உள் உறுப்புகள் வலுவாகும்.

19. குழியடிச்சான் அரிசி : தாய்ப்பால் ஊறும்.

20.சேலம் சன்னா அரிசி : தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.

21. பிசினி அரிசி : மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.

22. சூரக்குறுவை அரிசி : பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.

23. வாலான் சம்பா அரிசி : சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.

24. வாடன் சம்பா அரிசி : அமைதியான தூக்கம் வரும்....

நம் பெற்றோர் நம் குழந்தைகளுக்கான ஒரு பதிவு முடியும் வரை நம் பிள்ளைகளிடம் கொடுப்பதை தவிர்க்கவும்...


தமிழக பட்ஜெட் : கர்ப்பிணி பெண்களுக்கு ரூ. 4000 மதிப்பில் அம்மா - தாய் ஊட்டச்சத்து பெட்டகம்...

       
கர்ப்பிணி பெண்களுக்கு ரூ. 4000 மதிப்பில் அம்மா - தாய் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  இன்று 2018-19 ஆம் ஆண்டுக்கான  பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 7 பட்ஜெட்களை சட்டசபையில் தாக்கல் செய்துள்ள  அவர் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட்  இதுவாகும்.

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்  வருமாறு...

எரிசக்தி துறைக்கு ரூ.13,967.08 கோடி ஒதுக்கீடு.

ரூ. 200 கோடி செலவில் நபார்டு வங்கி உதவியுடன் பள்ளிகளில் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் தரும் என நம்புகிறேன்.

17 மாவட்டங்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ரூ.20 கோடி ரூபாய் மதிப்பில் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் தொடங்கப்படும்.

கர்ப்பிணி பெண்களுக்கு ரூ. 4000 மதிப்பில் அம்மா - தாய் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும்.

அம்மா தாய் சேய் ஊட்டச்சத்து பெட்டக திட்டத்திற்கு ரூ.1001 கோடி நிதி ஒதுக்கீடு.

ஒரு டன் கரும்புக்கு ரூ.2,750 விவசாயிக்கு அளிக்க முடிவு.

500க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட குடியிருப்புகளுக்கு சாலை வசதிகள்.

26 மாவட்டங்களில் கிராமப்புற புத்தாக்க திட்டம் : ரூ.920 கோடி ஒதுக்கீடு.

ரூ.12,301 கோடியில் சென்னை சுற்றவட்டச் சாலை திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல்.

ரயில்வே பணிகள் திட்டத்திற்கு ரூ. 513.66 கோடியும், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களின் மானியத்துக்கு ரூ. 87.80 கோடி.

விவசாயம், இதர பயன்பாடுகளுக்கான மின்சார மானியமாக ரூ.7,537.78 கோடி ஒதுக்கீடு.

கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ. 8,000  கோடிக்கு புதிதாக பயிர்க்கடன்கள் வழங்கப்படும்.

சமூக பாதுகாப்பு உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கு ரூ.3881.66 கோடி ஒதுக்கீடு.

ரூ.1,000 கோடியில் 2500 கிலோமீட்டர் ஊரக சாலைகள் அமைக்கப்படும்.

ரூ. 48 கோடியில் மகப்பேறு, பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்கள் தரம் உயர்த்தப்படும்.

எண்ணூர்- தச்சூர், வடக்கு துறைமுக அணுகு சாலையை அமைக்க ரூ.200.60 கோடி ஒதுக்கீடு.

அணைகள் புனரமைப்பு திட்டம் : 23 அணைகளை மேம்படுத்த ரூ.166.08 கோடி...

இன்னும் சில காலத்தில் புரிந்து கொள்வீர்கள்.. ஆயுதங்களை விட கொடியது மக்களை பொருளாதார ரீதியாக அழிப்பது...


மறக்கப்படுமோ மானவீரம்?


மானம் என்பது உயிர்களின் உணர்வோடு கலந்த ஓர் உயிர்த்துடிப்பாகும்.

பூனை மிகவும் சாதுவான விலங்கு. ஆனால் அதனையே ஓர் அறையுள் பூட்டிவைத்து அடித்துப்பாருங்கள். தன் முன்னங்கால் நகங்களை விரித்து கொடும்புலியைவிட வேகமாகப் சீறிப்பாய்ந்து கடித்துக் குதறும். அதுவும் மானமே.

இப்படி உலக இயற்கையிடமிருந்து மனிதன் முதலில் கற்றபாடம் தற்காப்பு.

தற்காப்பால் எழுந்ததே தன்மானம். அதனை மனித வரலாற்றின் அடிச்சுவட்டை நுணுகி ஆராய்ந்து பார்ப்போர் அறிவர்.

மொழியும் இனமும் தோன்றமுன் மனிதன் தன்னந் தனியாக நின்ற போது ஏனைய கொடிய விலங்குகளிடமிருந்தும் இயற்கையின் சீற்றத்தில் இருந்தும் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள உதவியது அவனது தன்மானம் கொடுத்த நெஞ்சத்துணிவே. தன்மானம் கொடுத்த நெஞ்சத் துணிவுடன் சேர்ந்த வேகத்தையே வீரம் என்கின்றோம். அந்த வீரம் மட்டும் மனிதனுக்கு இல்லாது இருந்தால் இன்றும் மனிதன் விலங்காகவே வாழ்ந்திருப்பான். காட்டுவாழ் விலங்கினத்திடமிருந்து மனிதனை மனிதனாக இனங்காட்டிய மனித செயற்பாடுகளுள் முக்கிய பங்குவகிப்பது தன்மான வீரமே.

அதனால் பண்டைத்தமிழர் வீரத்தைப் போற்றினர். தமிழரின் வீரம் என்னும் அந்த நெஞ்சக்கனலை ஊட்டி வளர்த்தோர் தாய்மாரே. அதனாலேயே வீர சுதந்திரம் வேண்டி நின்ற பாரதியாராலும் ‘வீரம் சேர்ப்பது தாய்முலைப்பாலடா’ என்று பாடமுடிந்தது. எந்த உயிரும் தாய்மையின் செழுமையின் சிலிர்ப்போடு தான் பெற்றதை எதிரிகளிடம் இருந்து காக்க வீறு கொண்டு எதிர்த்து போராடும். அது இயற்கையின் நியதி. அந்தத் தனிப்பண்பில் சிறிதும் குறைந்தவர்களாக தமிழ்ப்பெண்கள் இருக்கவில்லை என்பதை பண்டைய இலக்கியங்களும், கல்வெட்டுக்களும், நடுகற்களும் இன்றும் சான்றுபகர்கின்றன. தமிழ்ப் பெண்களில் வீரைகள் இருந்ததை மணிமேகலை சொல்கிறது. பல மாவீரம் மிக்க மறக்குல வீரைகளை புறநாநூறு காட்டுகிறது.

குழந்தை இறந்தாலும், தசைப்பிண்டமாய்ப் பிறந்தாலும் அவற்றின் மார்பில் வாளால் கீறி வீரத்தழும்பு ஏற்படுத்திய பின்னரே அவற்றைச் நம்முன்னோர்கள் புதைத்தார்கள் என்பதற்கு 
“குழவி இறப்பினும் ஊன் தடி பிறப்பினும்
ஆள் அன்று என்று வாளில் தப்பார்”
என்று சேரமன்னன் கணைக்கால் இரும்பொறை எழுதிய சங்க இலக்கியப் பாடலே சாட்சி.

தன்னலம் பொதுனலனாக மாறும் போது தன்மானம் இனமானமாக மாறுகிறது. தம் இனமானம் காப்பதற்காக இறந்தோரை இரண்டாயிர வருடங்களுக்கு முன்பிருன்ந்தே தமிழர் வணங்கினர் என்று சொல்வதைவிட அவர்களை விடச்சிறந்த கடவுளும் இல்லை என்று நம்பினர் என்பதை புறநானூறு சொல்கிறது. இனமானத்துடன் பகைவரின் படைகளின் முன்னின்று எதிர்த்துவராது  விலக்கிப் பாதுகாத்து, தாமும் இறந்து நடுகல்லானோரின் நடுகல்லைத் தொழுவதன்றி, நெல் சொரிந்து வழிபடும் கடவுள் வேறு கிடையாது என்பதை
“கல்லே பரவினல்லது நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே”
என்று மாங்குடிமருதனார் என்னும் புலவர் சொல்வதால் அறியலாம்.

புறநாநூற்று மறக்குல வீரர்களை விடச்சிறந்த மாவீரர்களை மாவீரைகளை கடந்த முப்பது வருடத்தில் நமது ஈழம் கண்டது. மா என்றால் மரணம் என்ற கருத்தையும் தரும். மரணத்தை மகிழ்வோடு எதிர்கொள்ளும் வீரமே மாவீரமாகும். எமது மாவீரர்கள் யாருக்காக, எதற்காக, வன்னிமண்ணில் சாவே வா! உன்னை சாப்பிடுகின்றேன் என நின்றார்கள்? எதை நினைந்து தம் ஆசைகளை, பாசங்களைத் துறந்து களம் புகுந்தார்கள்? தம் இன்னுயிரை கொத்துக் குண்டுகளுக்கும் இரசாயனக் குண்டுகளுக்கும் ஏன் கொட்டிக் கொடுத்தார்கள்?

தன் இனம் வாழ, தன் தாய்மொழி நின்று நிலைக்க, வருங்கால ஈழத்தமிழினம் தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழ தம்மையே ஈந்த அந்தச் செம்மல்களை நாம் மாறப்போமா? ஒன்றா! இரண்டா! எத்தனை ஆயிரம் மாவீரர் தம் ஆருயிரைக் ஈழத்து விடியலுக்கு வித்திட்டுச் சென்றிருக்கிறார்கள். சுந்திரம் வேண்டும் மனிதராய், தமிழராய் அவற்றை நாம் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போமா?

ஆசை, பாசங்களைத் துறத்தல் தவம் என்றால், தன்நலம் கருதாது பிறர் நலனுக்காக தம் இன்னுயிரத் துறந்து மாவீரர் ஆனோர் மா-தவத்தோர் அல்லவா?  தவம் செய்பவர்களில் யாரை உலகம் வணங்கும் என்பதை
“தன்உயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்உயிர் எல்லாம் தொழும்”
என திருவள்ளுவர் தவம் என்னும் அதிகாரத்தில் காட்டுகிறார். ஆதலால்  மாதவத்தோர் ஆன மாவீரரின் மாவீரம் மறக்கப்படுமோ? இழிநிலை வந்தபோது வாழாத மானமுடையோரின் புகழின் சிறப்பை இவ்வுலகே கைதொழுது வாழ்த்தும் என்று திருவள்ளுவரே கூறுகிறார்.

இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு - 970

தமிழராகிய நாமும் உலகுடன் சேர்ந்து மானவீரரை விளகேற்றித் தொழுது ஏத்துவோம்...

திருட்டு அதிமுக அரசும்.. மக்கள் விரோதி காவல் துறை சதியும்...


பண்டைத்தமிழர் கண்ட முப்பொருள் கொள்கை...


பண்டைய தமிழர்கள் உலகின் மேலும் உலக உயிர்கள் மேலும் பற்று உடையவர்களாக வாழ்ந்தார்கள். இந்த உலகமும் அதில் வாழ்கின்ற உயிர்களும் யாரல்? எப்படி? தோன்றி அழிகின்றன என்ற கேள்விக்கு அவர்கள் கண்ட விடையே கடவுள். அதனால் கடவுள் என்ற மெய்ப்பொருளை அவர்கள் உருவகித்துக் கொண்டார்கள்.

சுருங்கச் சொல்லப்போனால் இந்த உலகையும் உயிர்களையும் இயக்குவது கடவுளே என்ற முடிவுக்கு வந்தனர். ஆதலால் கடவுள், உயிர், உலகம் என்கின்ற முப்பொருள் கொள்கை உடையவர்களாகப் பண்டைத் தமிழர் இருந்தனர். முழு உலகையும் தழுவியதாய் அக்கொள்கை இருந்தது. அது தமிழர் நெறி என அழைக்கப்பட்டது. பிற மொழிகளும், பிற சமயக் கொள்கைகளும் தமிழரிடம் வேரூன்ற முன்னர் இருந்த முப்பொருள் கொள்கை அது.

முழுவுலகம் - கடவுள், உயிர், உலகம் - தமிழர் நெறி

தமிழர் முழு உலகம் தழுவிய தமது முப்பொருள் கொள்கையை பிறமொழி, பண்பாடுகளின் கலப்பால் மனிதனுக்காக மாற்றிய போது அறம், பொருள், இன்பம் என்ற முப்பொருட்கொள்கை பிறந்தது.

மனிதன் — அறம், பொருள், இன்பம் — தமிழர் சமய நெறி

இந்த மூன்றாலும் முத்தியை அடையலாம் என்றனர். அதுவே தமிழர் சமய நெறியாகும்.

சமண, பௌத்த, வைணவ, சாக்த மதங்களால் பின்னிப்பிணைய முற்பட்ட தமது சமயக் கொள்கையை அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகவும், அறிவார்ந்த உண்மைகள் உடையதாகவும் மாற்றினர். மனிதனுக்காக இருந்த முப்பொருள் கொள்கையை மாற்றி, உயிருக்காக சைவ சித்தாந்தக் கொள்கையை உருவாக்கினர். அதுவே பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள் கொள்கை. அதனை சைவசமய நெறி என அழைத்தனர்.

உயிர்  —  பதி, பசு, பாசம் —  சைவசமய நெறி.

கடவுளை பதி என்றும் ஆன்மாவை பசு என்றும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் பாசம் என்றும் குறிப்பிட்டனர்.

இவ்வாறு பண்டைய தமிழர் தமது கடவுட்கொள்கையை உலகிற்காகவும், மனிதனுக்காகவும், உயிருக்காகவும் பிரித்து - தனித்தனியான முப்பொருள் கொள்கை உடையோராய் வாழ்ந்தனர்.

அத்துடன் உலகம் தழுவியதாய் இருந்த அவர்களது முப்பொருள் என்ற சொல் கால ஓட்டத்தால் மனிதனுக்காகவும், உயிருக்காகவும் சுயநலம் கருதி மாறி அமைந்ததையும் காண முடிகின்றது...

தெறிக்கவிட்ட விவசாயிகளின் கால்கள்... கொள்ளை கூட்டத்திடமிருந்து இந்தியா விரைவில் மீட்க வேண்டும் -கார்டூனிஸ்ட் பாலா...


ஆரியர்களின் பூர்வீக நாடு எது?


யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்றார் கனியன் பூங்குன்றனார். இது தமிழர்களின் பரந்த மனப்பான்மையைக் குறிக்கின்றது.

தென்னாடு உடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..

தென்னிந்தியரின் /திராவிடரின் / சிவனடியாரின் பரந்த மனப்போக்கினை தெரிவிக்கின்றது.

இத்தகைய தென்னிந்தியரின் நாகரிகத்திற்கு மாறானது ஆரிய நாகரிகம். ஆரியர் உருவாக்கியது வேதமதம். இந்த  மதத்தின் வேதங்களை ஆரியர் தவிர மற்றவர்கள் படித்ததால் கொடுந்தண்டனை. வேதமதத்தில் ஆரியர்களே முதல் வர்ணத்தினர். ஆரியர்கள் உருவாக்கிய கடவுள்களுக்கு ஆரியர்களே அர்ச்சனை செய்ய வேண்டும். ஆரியர்களின் கடவுள்களுக்கு ஆரிய மொழியான சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும். சமஸ்கிருதம் தவிர இதர மொழிகள் மிலேச்ச மொழிகள் என்று கூறப்பட்டது. ஆரியர்கள் அல்லாதார் மிலேச்சர்கள், தஸ்யூக்கள், தாசர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இவ்வாறு பல சிறப்புகளை உடைய ஆரியர்களால் இந்தியர்களுக்கு கிடைத்த பயன்கள் என்ன? இந்த ஆரியர்கள் இந்திய நாட்டை முன்னேற்ற எந்த நாட்டிலிருந்து வந்தவர்கள்? இது குறித்த பல செய்திகளைக் கீழே காணலம்.

அய்ரோப்பிய வரலாற்று ஆசிரியரின் நூல்...

ஆடம் ஹார்ட் டேவிஸ் என்று வரலாற்றாளர், “History” என்ற வரலாற்று நூலை எழுதியுள்ளார். சமீபத்தில் இவரும் இவரது நண்பர் நாத்திகர் டாக்டர் சூசன்பிளாக்மோர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களை பெரியார் திடலில் சந்தித்து உரையாடினார். (விடுதலை நாளிதழ் 4.2.2012) இவர்கள் இருவரும் பகுத்தறிவுவாதிகள்.

ஆடம் ஹார்ட் டேவிஸ் தனது நூலில் எவ்வாறு ஆப்பிரிக்கர்கள், ஆஸ்திரேலியர்கள், இந்தியர்கள், அமெரிக்கர்கள் அடிமைப்படுத்தப் பட்டார்கள் என்பதை விரிவாகக் கூறியுள்ளார்.

அடிமைப்படுத்தப்பட்டவர்கள் எவ்வாறு விடுதலை பெற்றார்கள் என்பதையும் விவரிக்கிறார். அந்த நூலில் ஆரியர்கள் எவ்வாறு இந்தியாவுக்குள் நுழைந்தார்கள் என்பதை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

“The origin of (Hindu) religion can be traced to about 1500 BCE when it is believed that Aryan horseman invaded from central Asia, the indus valley, in Northern India accompanied by creator god Indra and a pantheon of lesser deities. These were the vidic gods who feature in Vedas, the 3000 years old scaret texts, that are central to the development of Hinduism.” The religion evolved to focus on senior deity called Brahma, Vishnu creator and Shiva the destroyer along with their consorts or sakthis From 6th century BCE Brahminism become the dominant form of Hinduism and triggered the composition of Brahminic epic, and puranic literature including the great texts of Mahabharata and Ramayana (கலைஞர் தொலைக்காட்சியில் எனது நேர்காணலில் நாள்: 02.09.2011 சொல்லியவை)

மேலே கண்ட வரிகளில் தெரிவிப்பது கீழ்வருமாறு. ஆரியர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். அவர்கள் இந்திரன் என்ற முதன்மைக் கடவுளையும், பிரும்மா, விஷ்ணு, ருத்திரன் (சிவன்) போன்ற உபக்கடவுள்களையும், அவர்களின் மனைவிகளையும் உள் அடக்கிய பல்வேறு கடவுள்களையும் இந்தியாவிற்கு கொண்டு வந்தார்கள், இந்த கடவுள்களின் உதவியால், பின்னர் பிராமணீயம் இந்தியாவில் மேலோங்கி இருந்தது...

பாரசீக மொழியில் இருந்து மதக்கடவுள்கள்...

சிரியா நாட்டைக் சேர்ந்த மித்தனி (Mittani) யிலிருந்து புறப்பட்ட ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழையுமுன் சில காலம் ஈரானை சேர்ந்த ஈஸ்பராயன் (Esfarayen) என்ற மாநிலத்தில் தங்கிவிட்டு வந்தார்கள். அப்போது பாரசீக நூல்களைக் கற்றார்கள் அதன்பின் இந்தியாவிற்குள் வந்தபின் பாரசீக மத நம்பிக்கையின் அடிப்படையில் ரிக்வேதத்தை உருவாக்கினார்கள். எனவே பாரசீக மொழியில் உள்ள கடவுள் பெயர்களை ஒரு பாரசீக அகராதியில் இருந்து தொகுக்கப்பட்டுள்ளது.

இந்த பாரசீக அகராதியின் பெயர் “Muslim and Parsi Names” இதை எழுதியவர்கள் திருமதி. மேனகாகாந்தி மற்றும் பேராசிரியர் ஓசைர் ஹுசைன். இந்த நூலில் ஒவ்வொரு சொல்லிற்கும், சொல் பெறப்பட்ட மொழிகள் _ Arabic, Avestan, Hindustani, Hebrew, Persian, Pazand, Phalavi Syria, Turkish, Not available (அரபி, அவெஸ்தன் ஹிந்துஸ்தானி, ஹிப்ரு, பாரசீகம், பாலவி, பசந்த், துருக்கி, சிரிய) விவரங்கள் தரப்பட்டுள்ளன. இதிலிருந்து பெறப்பட்ட மதம், அரசியல், குறித்த பாரசீக சொற்களை தொகுத்து கீழே உள்ளவாறு விவரிக்கப்படுகிறது.

பாரசீக மொழியும் ஆரியரும்...

வில்லியம் ஜோன்ஸ் கல்கத்தா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிந்தார். இவர் அய்ரோப்பிய மொழிகள், ஈராணிய மொழிகள், இந்திய மொழிகள் ஆகியவற்றை ஒப்பிட்டு அவைகளை வகைப்படுத்தினார். அதன்படி பாரசீக மொழியும் சமஸ்கிருதமும் அய்ரோப்பிய மொழி குடும்பத்தை சார்ந்தது எனக் கண்டறிந்தார் மற்றும் அதன் உட்பிரிவான இந்தோஇராணிய மொழிக்குடும்பத்தை சார்ந்தவை என்றும் கண்டறிந்தார். ஒரே மொழிக்குடும்பத்தை சேர்ந்த மொழியான பாரசீக மொழி ஆரியரின் நாகரிகத்தினைப் பற்றியும் பூர்வீகத்தைப்பற்றியும் பல சுவையான வரலாற்று செய்திகள் தருகின்றன.
அவைகள் கீழே தரப்பட்டுள்ளன. (பாரசீக சொற்கள் தொகுப்பு பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது).

1. ஆரியர்கள் இந்தியாவிற்கு வருமுன் சில காலம் பாரசீகத்தில் தங்கி இருந்துவிட்டு பின்னர்தான் இந்தியாவிற்குள் நுழைந்தார்கள். இது சுமார் கி.மு.1500இல் நடந்தது. இதன்பின் இஸ்லாமிய மதம் தோன்றி இந்தியாவுக்கு கி.பி.800இல் பரவியது. பாரசீக நாட்டிலிருந்து கஜினி முகம்மது (1012) படையெடுதது வந்தார். இறுதியாக தில்லியில் டில்லியில் சுல்தான்கள் ஆட்சி (கி.பி.1206-_1526) நடைபெற்றது. பின்னர் முகலாயர் ஆட்சி 1857 வரை நடந்தது. முகலாயர் ஆட்சிக் காலத்தில் பாரசீகர்கள் பெருமளவில் இந்தியாவிற்குள் வந்தனர். முகல் என்ற சொல்லே பாரசீக சொல் ஆகும். இது மங்கோலியரை குறிக்கும். பாரசீக மொழியின் தொடர்பு இந்திய வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த ஒன்றாகும்.

2. பாரசீகரின் மத நம்பிக்கைகளும், ஆரியரின் மத நம்பிக்கைகளும் பெருமளவில் ஒற்றுமை உடையவை. உதாரணம், ஈராணியரின் தொண்மையான மொழியான அவெஸ்தாவிற்கும் ரிக் வேதத்திற்கும் மிகவும் ஒற்றுமை உள்ளது.

3. வேத கால கடவுள்களான இந்திரன், வருணன், வாயு, மித்திரன் போன்றோர்களும், ரிஷிகளான வஷிஷ்டா, அகஸ்தியர், மரூத் போன்றவர்களும் பாரசீக மொழியில் இடம் பெற்றுள்ளனர்.

4. ஈராக்கில் கண்டுபிடிக்கப்பட்ட, கி.மு.1600அய்ச் சார்ந்த கல்வெட்டுகளிலும் கி.மு.1400 சேர்ந்த மித்தாணி கல்வெட்டுகளிலும் காணப்படும் பெயர்களும், வேதகால கடவுள்கள் பெயரும் ஒத்துப் போகின்றன.

5. ஆரியர்கள், யாகங்கள் செய்தனர். தீயை வணங்கினர். பசுவை வணங்கினர். குதிரையை வணங்கினர். காமதேணு போன்ற மனித உருவம் + மிருகம் + இறக்கை உடைய பறவை உருவம் ஒன்றாக அமைந்த உருவங்களைப் பற்றிய சொல் தீயைப்பற்றி பல சொற்கள், யாகங்களைப்பற்றி பல சொற்கள் பாரசீக மொழியில் காணப்படுகின்றன.

6. இராமன், ஆரியன், ராணா, ராணி, இந்திரன், வருணன், இரான், சாமி (கடவுள்), ரங்கா ராகவன், ரகு, பீஹார், (Daeva) தேவா, மணி (கடவுள்), கந்தர்வா, கயா, லஷ்கரி, ஜலம், மன்னன், மந்த்ரம், மாரி(கடவுள்), கௌ போன்ற சொற்கள் பாரசீக மொழியில் இடம்பெற்று, அதற்குரிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

7. பஞ்சாங்கம் என்ற ஆண்டுகாட்டியில் உள்ள அங்கம் பாரசீக சொல்லாகும். இதன் பொருள், காலம், பருவம் (Time) (Season) ஆகும். பஞ்ச என்ற சொல், அய்ந்து வகை ஆண்டு கணக்கீட்டு முறையைக் குறிக்கின்றது. பாரசீகத்தின் அன்பளிப்பு பஞ்சாங்கமாகும். இந்த பஞ்சாங்கத்தை வைத்து நாள் குறிப்பது. பூணூல் அணிந்த ஆரியர்களின் வேலை ஆகும்.

8. Gowpathi Sha = (கௌபதி+ஷா) = கௌபதி + ஷா = பசுபதி + மன்னன் (அ) அரசன். இந்த Pathi என்ற சொல் நேபாளத்தில் உள்ள பசுபதிநாத் என்ற பெயர் போன்றது.

9. Hom (ஓம்) என்ற சொல்லுக்கு, பாரசீக மொழியில் - யாக சடங்குகளில் பயன்படுத்தும் சாறு என்பதனை குறிக்கின்றது. இது சோமபானம் போன்றது.

10. Jal (ஜலம்) என்ற பாரசீக சொல்லுக்கு தண்ணீர் என்று பொருள். இன்று கூட ஆரியர்கள், தமிழர் திருமணங்களில் ஜலம் விடுங்கள் என்கிறார்கள்.

11. பாரசீக மொழியில் ஈரான் நாட்டினைக் குறிக்கும் சொல் Airan இந்த பாரசீக சொல்லுக்குப் பொருள் ஈரான் ஆகும். இந்த நாட்டை ஆரியர்களின் தாயகமாக இந்த பாரசீக அகராதியில் கூறப்பட்டிருக்கிறது.  இது ஆரியர்கள் பாரசீகம் வழியாக இந்தியாவிற்குள் வந்தார்கள் என்பதனை உறுதிப்படுத்துகின்றது.

12. பாரசீக மொழி அகராதியில் ஆரியர்களின் மூதாதையர் பிறந்த நாடாக துர்கிஸ்தான் (Turkistan) அய் குறிப்பிடுகின்றது. ஆரிய இனம் தோன்றிய பகுதியின் பெயர் “Airyana Vaeja” இது துர்கிஸ்தான் நாட்டில் புல்வெளிகள் நிறைந்த பகுதியில், வடக்குப்பகுதியில் அமைந்துள்ளது. இங்குதான் மேய்ச்சல் நாகரிகம் என்று அழைக்கப்படுகின்ற Stepi Culture என்று வரலாறு கூறுகின்ற நாகரிகம் தொடங்கியது. இந்த “Airyana Vaeja” என்ற இடம் பாரசீக மொழியில், நிணீஹ்ணீ/கயா வழங்கப்படுகின்றது. இந்த கயா என்ற சொல் அவெஸ்தான் மொழியில் முதலில் தோன்றியது.

13. துர்கிஸ்தானில் உள்ள கயா என்ற ஊரைப் போல பீகார் மாநிலத்தில் கங்கைக்கரையில் புத்தகயா உள்ளது. இது தென்னிந்திய ஆரியர்களுக்கு புனிததலமாகும். இங்கு முன்னோர்களுக்கு திதி கொடுப்பது மிகவும் சிறந்தது என்று ஆரிய சாஸ்திரங்கள் கூறுகின்றன. இது ஆரியர்கள் துர்க்கிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்கின்றது.

14. உருது என்ற பாரசீக சொல்லுக்கு படை,  முகாம் (Camp) படைவீடு, சந்தை (மார்க்கெட்) என்று பொருள். இதன் அடிப்படையில் ஹுமாயுன் / முகலாயர் காலத்தல் படைவீரர்கள் சந்தையில் பேசிய மொழியே பிற்காலத்தில் இந்தி என்றும் உருது என்றும் அழைக்கப்பட்டன. இந்த மொழிகள் ஆரம்பத்தில் Campu Language என்று அழைக்கப்பட்டன. (Camp = உருது) (Camp=  பாசறை).

15. பாரசீகமொழியில், இந்தியாவில் வாசிக்கப்படும, தம்புரா, வீண்(ணா), வாத்ய (வாத்யம்) என்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன. வாத்யம் என்ற சொல் அவஸ்தன் நூலில் உள்ளது.
16. வீர் (Vir) என்ற சொல் பாரசீக மொழியில் உள்ளது. இந்த சொல்லே வடமொழியில் வீர்பூமி, பரம் வீர் சக்ரா போன்ற சொற்களில் உருப்பெற்றுள்ளது.

முடிவுரை:

1. துருக்கிஸ்தான் என்று அறியப்பட்ட பகுதியில் (துர்க்மேனிஸ்தான் அருகில்) இருந்து முதல் ஆரியர் தோன்றியதை இந்த அகராதி தெரிவிக்கின்றது. இந்த நூல் பாரதீய ஜனதா கட்சியின் தலைமையில் அமைந்த NDA அரசில் அமைச்சராக இருந்த திருமதி. மேனகா காந்தி அவர்களால் எழுதப்பட்டுள்ளதால், இந்த நூலில் ஆரியர் பற்றி சொல்லப்படும் செய்திகள் மற்றும் விளக்கங்கள் சிறப்புப் பெறுகின்றன.

2. பாரசீகத்திலிருந்து வந்த வேதகால கடவுள்கள், இந்திரன், பிரம்மா, விஷ்ணு போன்ற கடவுள்கள் இந்தியாவில் பிராமணீயத்தை வளர்க்க உதவியதாக வரலாற்று ஆசிரியர் ஆடம் ஹார்ட் டேவிஸ் தனது நூல் “History” இல் தெரிவிக்கின்றார்.

3. கனிஷ்கர் காலத்தில் கல்வெட்டுகள் 1993இல் ஆப்கானிஸ்தானில் கண்டெடுக்கப்பட்டன. இதில் இராணிய மொழியை ஆரிய மொழியாகக் குறிக்கப்பட்டுள்ளது.

4. Helena Petroun Blavatsky தனது “Secret Doctrine” (1888) இல் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார். யூதர்கள் ஆரியன் அல்லாதவர்கள் ஆபிரஹாம்_அய் சார்ந்தவர்கள். Abraham x-brham (பிரம்மன்=பிராமணர்) கிதீக்ஷீலீணீனீ பிராமணனின் எதிர்பதம்.

5. பிராமணர் அல்லாத யூதர்களை அறவே அழிக்கும் கொள்கையை நாசி (NAZI) கொள்கை என்று கூறுவர். இந்த கொள்கை Aryanization ஆரியமயமாக்குதல் என்று பெயர். இதனால் இரண்டாம் உலகப்போர் ஹிட்லரால் நடத்தப்பட்டது. இந்த ஆரியமயமாக்கும் கொள்கைகயை (NAZI) அமெரிக்கா, இங்கிலாந்து, இரசியா போன்ற நாடுகள் போரிட்டு தோற்கடித்தன.

6. ஆரியமயமாக்கும் கொள்கையை ஜெர்மனி கடைபிடித்ததால் “The American Hertage Dictionary of English Language” என்ற அகராதியில் ஆரியர் என்பவருக்கு கீழ்கண்ட விளக்கம் தந்துள்ளது. “It is one of the ironies of History that Aryan, a word nowadays referred to the blond haired, blue eyed, physical, ideal of NAZI Germany. Originally it referred to people looked different. Its history starts with Ancient Indo Iranian People, who inhabited parts of Iran, Pakistan, Afghanistan, India, Bangladesh.”

7. ஆரியர்கள் துர்கிஸ்தான் (துர்க்மேனிஸ்தான்) இருந்து வந்தார்கள் என்று அகராதி உருவாக்கிய மேனகா காந்தியும், ஆரியர்கள் நாசிகள் (NAZI) நாசகாரர்கள் என்று அகராதி எழுதிய அமெரிக்கப் பண்பாட்டு கழகமும் போற்றுதலுக்குரியவர்கள்...

நன்றி- பொறியாளர் பி.கோவிந்தராசன்...

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய அமைப்பை தொடங்கினார் டிடிவி தினகரன்...


கருப்பு, வெள்ளை, சிவப்பு நிற கொடியில் ஜெயலலிதா இருப்பது போன்ற கொடியை அறிமுகப்படுத்தினார் டிடிவி தினகரன்...

புரட்சியே தமிழனைத் தலை நிமிர வைக்கும்...


நூறு ஆண்டுகள் கடந்தாலும் இந்திய மக்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியே இருப்பார்கள். குறிப்பாக தமிழ் இனம் பின் தள்ளப்பட்ட இனமாகவே இருப்பார்கள். தம்மை தமிழர்களாக அடையாளப்படுத்தி தமிழர் தேசங்களில் சூறையாட முனையும் பல ஆரிய மற்றும்  திராவிடரே முன்னோக்கி செல்வார்கள்.

தமிழினம் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்றால் அவர்கள் பொருளாதரத்தில் உயர்வு பெற வேண்டும்.

இவைகள் இடம்பெற வேண்டுமாயின் அவர்களுக்குள் புரட்சி வந்தாலே ஒழிய அவர்களின் பொருளாதார நிலமையை யாராலும் மாற்ற முடியாது. 

அப்படியாயின் எப்படி வறுமையின் கீழ் வாழும் பெரும்பான்மையான தமிழ் நாட்டு மக்களை மாற்ற முடியும் என்ற கேள்வி எழுகின்றது.

தமது அன்றாட வாழ்க்கையைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும் இவர்கள் அடுத்த நூறு ஆண்டுகளில் அவர்களின் வம்சாவளிக்கு என்ன நடக்கும் என்பதை அவர்கள் கடுகளவும் சிந்திக்க முடியாதவர்கள்.

தமிழ் நாட்டு ஊடகங்களோ அவர்களின் ஊடகங்கள் மூலமாக எப்படி பணத்தை சம்பாதிக்க முடியும் என்ற கொள்கையுடன் செயலாற்றுகின்றார்கள். சில ஊடகங்கள் சமூக மாற்றத்துக்காக வெளிவந்தாலும் அவைகள் பின்னாளில் தோல்வியைத் தழுவுகின்றன.

குறிப்பாக இந்த நிறுவனங்கள் மூடி விடும் அளவு பொருளாதார சிக்கலுக்கு உள்ளாகிறார்கள். திரையுலக விமர்சனைங்களையும் மற்றும் கோமாளி அரசியலையும் மக்கள் முன் கொண்டு செல்லும் ஊடகங்களைத் தான் பல கோடி மக்கள் ஆதரித்து பணத்தை அள்ளி வீசுகின்றார்கள்.

ஆக ஊடகத் தர்மம் என்பது காசோலையால் மூடி மறைக்கப்பட்டு விட்டதென்பது தான் மறைக்க முடியாத உண்மை.

இப்படியான ஒரு நிலையிலேயே தமிழினம் இந்தியாவில் இன்று இருந்து கொண்டிருக்கின்றது.

இந்திய மத்திய சர்க்காரோ மக்கள் எவ்வளவு அறியாமையாக இருக்கின்றார்களோ அந்தளவுக்கு அவர்களில் செல்வாக்கு புது டெல்லியில் உயரும் என்று கணக்குப் போட்டு செயலாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

இது போதாதென்று தமிழ் நாட்டை ஆளும் தான் ஒரு பச்சைத் திராவிடன் என்று பறைசாற்றும் கருணாநிதியோ தனது சுய லாபத்திற்கும் குறிப்பாக தனது குடும்பத்தை எப்படி அடுத்த பல நூறாண்டுகள் இந்தியாவை ஆளும் வர்க்கமாக ஆக்க வேண்டும் என்று இந்த தள்ளாடும் வயதிலும் போராடும் கருணாநிதியே சிந்திக்கும் போது எப்படி பாமர தமிழ் நாட்டு மக்கள் அவர்கள் இனம் பற்றி சிந்தித்து செயலாற்றுவார்கள் என்பது தான் இப்பொழுது எழும் கேள்வி.

இருப்பினும் இந்த மக்கள் குறுகிய வட்டத்திற்குள் இருந்து வெளியே வந்து செயலாற்றுவார்களேயானால் இப்படியான சுயநலவாதிகள் நிச்சயம் மக்களால் இனம் காணப்படுவார்கள்.

ஆக இவைகள் அனைத்துக்கும் ஒரே வழி அமைதி வழியில் உருவாகும் மாபெரும் எழுச்சியே.

ஈழத் தமிழர்கள் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆயுத வழியில் போராடி பல இன்னல்களை சந்தித்தவேளை தமிழ் நாட்டு மக்களோ தாமும் தமது குடும்பமும் என்றே வாழ்க்கையை நடத்திவந்தார்கள்.

சில நூறு தமிழ் நாட்டு மக்களைத் தவிர மற்றவர்கள் சுய லாபத்திற்காக ஈழத்தமிழரின் விடுதலைப் பயணத்தைக் கையாண்டார்கள்.

வறுமைக் கோட்டின்கீழ் வாழும் மக்களிடம் ஈழத் தமிழரின் உண்மையான பிரச்சனை எடுத்துச் செல்லப்படவில்லை.

உண்மையிலையே ஈழத் தமிழரின் துன்பத்தை ஒவ்வொரு சந்து பொந்துகளுக்கும் தமிழ் நாட்டில் எடுத்துச் செல்லப்பட்டிருக்குமாயின் நிச்சயம் ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழரையும் தமிழருக்கு என்ற ஒரு தனியான நாடு அமைய வேண்டும் என்ற தாகத்துடன் ஈழம் காணப் புறப்பட்ட முப்பதினாயிரத்துக்கும் அதிகமான தமிழ் இளைஞரையும் காப்பாற்றி இருந்திருக்கலாம்.

பல சுயநலவாதிகள் இவைகளைச் செய்யாமல் தமது வளர்ச்சியிலையே கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்.

ஒரு சோறு சாண் வயிற்றிற்காக ஏங்கித் தவிக்கும் தமிழ் நாட்டுத் தமிழர் நிச்சயம் ஒரு புரட்சி கொண்டவர்களாக இந்தியாவையே ஸ்தம்பிக்க வைத்து இந்திய நடுவண் அரசையும் ஏன் முழு உலகையும் ஈழம் பால் கவர்ந்து சிறிலங்காவின் கொடுங்கோல் தேசத்தை பயங்கரவாதிகளாகக் காட்டியிருக்க முடியும்.

ஆனால் நடந்தது என்ன?

இவர்களின் சோம்பேறித்தனமும் தமது அன்றாட வாழ்க்கையிலும் பாழாய்ப் போன திரையுலகமும் இந்த மக்களை முடமாக்கி இன்று தமிழன் பல இன்னல்களை பல நாடுகளில் சந்தித்து கொண்டுள்ளான். ஏன், இந்தியாவிற்குள் இருக்கும் தமிழனுக்கே பாதுகாப்பில்லை.

இவைகள் அனைத்துக்கும் ஒரு முடிவு கிடைக்க வேண்டும் என்றால் தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் ஓன்று திரண்டு புரட்சி நடாத்தினால் பல மாற்றங்களை காண முடியும்...

அதிமுக வின் பகல் கொள்ளை...


உலகின் வரலாறு - ஒரு வரலாற்று ஆய்வு - 2...



கி.பி..

கிருத்துவுக்கு முன்…. கிருத்துவுக்குப் பின் என காலம் இரண்டாகப் பிரிந்தக் காலம்.

செய்தி கேட்டாயா சகோதரா… இறைவனின் மைந்தன் நமக்காக இன்னுயிர் துறந்தாராம்… பின் மீண்டும் உயிர்தெழுந்து விண்ணுலகம் சென்றாராம். கண்டவர்கள் சொல்கின்றனர். மேலும் அவர் கூறியதாக பல அறியக் கருத்துக்களையும் கூறுகின்றனர். கேட்பதற்கே இனிதாக இருக்கின்றது. நீயும் வா…போய் அவர்கள் கூறுவதை முழுவதுமாகக் கேட்போம்” என்று உலகின் மக்கள் தாங்கள் அது வரை தான் கொண்டிருந்த கொள்கைகளில் இருந்து புதுக் கொள்கைகளுக்கு மாற ஆரம்பித்தக் காலம்.

அந்த மாற்றம் இந்தியாவிற்கும் வருகின்றது…. தோமா என்னும் கிருத்துவின் சீடர் வாயிலாக.

 ’தோமா’ என்ற இந்தப் பெயர் நிச்சயம் தமிழர்களுக்கு பழக்கப்பட்ட ஒருப் பெயராக இருக்கும்… அதுவும் குறிப்பாக சென்னையில் வாழ்கின்ற மக்கள் நிச்சயம் இந்தப் பெயரினைக் கேள்விப்பட்டு இருப்பர்.

சாந்தோம்… பரங்கி மலை… போன்ற இடங்கள் இவரின் வரலாறினை இன்றும் சுமந்துக் கொண்டு இருக்கின்றன.

“தோமா இந்தியா வந்தது வரலாறா…? சுத்த ஏமாற்றுத்தனம்…தோமா என்பது ஒருக் கட்டுக்கதை” என்றுக் கூறுவோரும் உளர்.

தோமாவின் கதை வரலாறா அல்லது கட்டுக்கதையா என்பது நாம் நிச்சயம் காண வேண்டிய ஒன்று. ஆனால் நாம் இப்பொழுது சமசுகிருதத்தை பின் பற்றிச் சென்றுக் கொண்டு இருப்பதனால் தோமாவின் கதையினை நாம் தற்சமயம் ஒதுக்கி வைத்து விட்டு பயணிக்க வேண்டி இருக்கின்றது.

ஏற்கனவே சமணம், புத்தம் போன்ற சமயங்களின் கருத்துக்களை பரப்புவதற்கு ஒரு புது மொழி தேவை என்று அரசர்கள் சிந்தித்து முடிவினை செய்தப் பொழுது கி.பி ஒன்றாம் நூற்றாண்டில் தோமாவின் வாயிலாக கிருத்துவின் கருத்துக்களும் இந்தியாவிற்கு வருகின்றன.

“கடவுள் இல்லை என்று சமணமும் கடவுளைப் பற்றியே ஒன்றும் சொல்லாது புத்தமும் இருக்கும் பொழுது, இவர் கடவுள் நமக்காக அவரின் புதல்வனை பலி கொடுத்தார் என்று சொல்கின்றாரே…மேலும் பல நல்லக் கருத்துக்களை கூறுகின்றாரே…இவரின் கருத்துகளையும் நாம் இந்த தேசம் முழுவதும் பரப்ப வேண்டும்.” என்று எண்ணிக் கொண்டு தோமாவின் கருத்துக்களை பரப்ப மன்னர்கள் ஆரம்பிக்கின்றனர்.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இக்காலக் கட்டத்தில் தான் கடவுளைப் பற்றி எதுவுமே பேசாத புத்த மதத்தில் கிருத்துவின் கொள்கையான ‘மூஒருமைக் கோட்பாட்டினை’ ஏற்றுக் கொண்டு ‘மகாயானம்’ என்னும் ஒரு பிரிவு தோன்றுகின்றது. கடவுள் மனிதராக வந்தார் என்னும் அவதாரக் கோட்பாடும் தோன்றுகின்றது. தமிழில் திருக்குறளும் தோன்றுகின்றது. நிற்க!!!

சமசுகிருதம் உருவாக்கப்பட்டதற்கு முழுமுதற் காரணம் அப்பொழுது இந்தியாவில் வந்து தங்கி இருந்த யவனர்கள் மற்றும் மற்ற மொழி பேசும் மக்களிடம் அந்த ஆன்மீகக் கருத்துக்களைப் பரப்புவதற்கே.

“சரி மொழியினை உருவாக்கியாயிற்று… நல்லது… ஆனால் இந்தக் கருத்துக்களை அதில் எப்படிப் பரப்புவது…? ம்ம்ம்… சிறப்பு பள்ளிகள் அமைக்கலாம்… அந்தப் பள்ளிகளில் யவனர்களின் (இங்கே யவனர்கள் என்பது ஆரியர்களையும் குறிக்கின்றது) பழைய பாடல்கள்… வரலாறு… பழக்க வழக்கங்கள் முதலியவையை முதலில் சமசுகிருதத்தில் தொகுக்கலாம்… பின்னர் அவற்றில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி அதன் திருத்தங்களை தொகுக்கலாம்… அவர்களின் கதைகளை ஒட்டியக் கதைகளை உருவாக்கலாம்… அதில் இந்தச் சமயக் கருத்துக்களைப் புகுத்தி அவர்களைத் தெளிவு நிலைக்கு கொண்டு வரலாம்… ஆம் அது தான் சரியானதாக இருக்கும்.” என்று எண்ணி சமசுகிருதத்தில் நூல்களை உருவாக்கவும் தொகுக்கவும் பள்ளிகள் நிறுவப்படுகின்றன.

அப்பள்ளிகளில் தான் யவனர்களின் பாடல்களான வேதங்கள் தொகுக்கப்படுகின்றன. அவற்றின் திருத்தங்களாக உபநிடங்களும் உருவாக்கப்படுகின்றன.
மகாபாரதமும் தோன்றுகின்றது. அவற்றினைத் தொகுத்த வியாசர் என்னும் தமிழர் வேதவியாசர் எனப்படுகின்றார் (வியாசர் என்பது தனி மனிதனைக் குறித்தச் சொல் இல்லை என்றும் அந்தப் பள்ளிகளில் தொகுக்கும் பணியினைச் செய்த அனைவரையும் குறித்தச் சொல் என்றும் கருத்துக்கள் உண்டு. இவற்றினைப் பற்றி ஆராய்ச்சிகள் நடந்துக் கொண்டு இருக்கின்றது).

இவ்வாறே காலங்கள் நகர்ந்துக் கொண்டு இருக்க தமிழகத்தின் இருண்டக் காலமும் வருகின்றது. சோழனும் பாண்டியனும் செல்வாக்கினை இழக்க தமிழகம் களப்பிரர்கள் வசம் போகின்றது. அத்துடன் கடைச் சங்கக் காலமும் முடிவிற்கு வருகின்றது. இது நடந்தது கி.பி மூன்றாம் நூற்றாண்டில்.

மூன்றாம் நூற்றாண்டில் ஆட்சியினைப் பிடித்த களப்பிரர்கள் கிட்டத்தட்ட கி.பி ஆறாம் நூற்றாண்டு வரை ஆட்சியில் வீற்று இருந்தார்கள். அவர்கள் யார்? தமிழர்களா?… எவ்வாறு ஆட்சியினைப் பிடித்தார்கள்….??? அவர்கள் காலத்தில் தமிழகத்தில் நடந்தது என்ன? - தெரியவில்லை. இன்னும் யாரும் அதிகமாகப் படிக்காத பக்கங்களாகவே அந்தக் காலங்கள் இருந்துக் கொண்டு இருக்கின்றன. படிப்பதற்கும் தெளிவான விடயங்கள் இதுவரையும் கிட்டவில்லை.

இப்படிப்பட்ட களப்பிரர்களின் வரலாறு கி.பி நான்காம் நூற்றாண்டில் பல்லவர்களின் எழுச்சியோடு முடிந்துப்போகின்றது. காஞ்சியினை தலைநகராகக் கொண்ட பல்லவப் பேரரசு தமிழகத்தினை ஆளத் தொடங்குகின்றது…. பிராகிருதத்தையும் சமசுகிருதத்தையும் ஆட்சிமொழியாக வைத்துக் கொண்டு. சமசுகிருதப் பள்ளிகள் பல காஞ்சி மாநகரத்தில் வளரத் தொடங்குகின்றன. கூடவே பல புத்த மடங்களும் தான். காஞ்சி மாநகரம் புத்தத்தையும் சமசுகிருதத்தையும் நன்கு வளர்க்கின்றது. (புத்தத்தினை வளர்க்க ஆறாம் நூற்றாண்டில் சீனா சென்ற போதிதர்மன் இங்கே உங்கள் நினைவிற்கு வரலாம்).

கி.பி ஆறாம் நூற்றாண்டில் தென் இந்தியாவில் பல்லவர்கள் சிறப்புற்று இருக்கின்றார்கள்… புத்தமும் சமசுகிருதமும் அவர்களால் போற்றப்பட்டு இருக்கின்றன. நிற்க…. இப்பொழுது நாம் சற்று வட இந்தியாவினைக் கண்டு வந்து விட வேண்டிய அவசியம் இருக்கின்றது.

தென் இந்தியாவினைப் போலவே கி.பி ஒன்றாம் நூற்றாண்டு முதல் கிட்டதட்ட வட இந்தியாவின் வரலாறும் ஒருக் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. சீனாவில் இருந்து புறப்பட்ட ஒரு நாடோடிக் குழுவினரான குசானர்கள் வட மேற்கு இந்தியாவினை கி.பி ஒன்றாம் நூற்றாண்டு முதல் ஆண்டுக் கொண்டு வருகின்றனர். இந்தியர்கள் அல்லாத அவர்களின் ஆட்சி பின்னர் குப்த பேரரசின் எழுச்சியினால் கி.பி நான்காம் நூற்றாண்டில் ஒரு முடிவிற்கு வருகின்றது. ஆனால் குப்த பேரரசும் நீண்டக் காலம் நிலைத்து நிற்கவில்லை. கி.பி ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் அப்பேரரசு ஒரு முடிவிற்கு வருகின்றது.

அதன் இறுதி மன்னர்… வட இந்தியாவின் இறுதி திராவிட பேரரசின் மன்னர் அரச வரதன் (Harshavardhan ) கொலை செய்யப்படுகின்றான். அவனின் குடும்பமும் கொலை செய்யப்படுகின்றது. அந்தக் காலத்தில் நிகழ்ந்த பல விடயங்களைப் போலவே இச்செயல்களும் மர்மமாகவே உள்ளன. அரச வரதன் கொலை செய்யப்படும் காலமும் வட இந்தியாவில் அன்நேர்கள் (Huns ) படையெடுத்து வரும் காலமும் ஒன்றாக இருப்பது இங்கே கவனிக்கத்தக்கது.

அக்காலத்தில், குப்த பேரரசு வீழ்கின்றது. வட இந்தியாவின் மீது அன்நேர்கள் படை எடுக்கின்றனர். வட இந்தியா பல சிறு பகுதிகளாக சிதறுகின்றது.

இதேக் காலத்தில் தான் வட இந்தியாவில் ‘ஆரியவர்தமும்’ ஆரம்பமாகின்றது. இந்தியாவின் மீது பல காலங்களில் படையெடுத்து வந்த பாரசீகர்கள்,கிரேக்கர்கள்,குசானர்கள்,அன்நேர்கள் மற்றும் வணிகத்திற்காக வந்த ரோமர்கள் அனைவரும் ஒன்றுக் கூடி ஆரம்பித்ததே ‘ஆரிய வர்த்தம்’ என்றே அறிஞர்கள் கருதுகின்றனர். நிறத்தால் ஒன்றுப்பட்டு ’ஆரியவர்தத்தினை’ ஆரம்பித்த அவர்கள் தான் நாம் இன்றுக் கூறும் ஆரியர்கள் என்றும் கூறுகின்றனர் அவர்கள்.

அக்காலத்தில் தான் ஆரியர்கள் தங்களை நெறிப்படுத்திக் கொண்டு ஒரு பேரரசாக மாற சில பிரிவுகளையும் சட்டங்களையும் உருவாக்குகின்றனர். அந்தப் பிரிவுகளே பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகும்.

பிற நாடுகளில் சென்று ஆன்மீகப் பொறுப்புகளை கவனிப்பவன் - பிராமணன்.

பிற நாடுகளுடன் போரிடச் செல்பவன் - சத்திரியன்.

பிற நாடுகளில் வணிகத்தினை மட்டும் பார்ப்பவன் - வைசியன்.

இவை எதையுமே செய்யாதவன் - சூத்திரன்.

இவர்களை எதிர்க்கும் எதிரிகள் அனைவரும் - பஞ்சமன்(திராவிடர்கள்).

இவர்களுக்காக எழுதிய அந்தச் சட்டமே மனு நீதி நூல் ஆகும்! இந்த நூல் பின்னர் பல மாற்றங்களைக் கண்டது மேலே உள்ளப் பிரிவுகளைப் போலவே!

தென் இந்தியாவிலும் சமசுகிருதம் இருக்கின்றது. வடக்கேயும் இருக்கின்றது. ஆரியர்கள் முதல்முறையாக ஆட்சிப் பொறுப்பினை வடக்கே அடைந்து இருக்கின்றனர். திராவிடர்கள் தெற்கில் இருக்கின்றனர். புத்தம் இந்தியா முழுவதும் இருக்கின்றது. இக்காலத்திலே தான் பக்தி இயக்கமும் ஆரம்பம் ஆகின்றது. இந்நிலையில் என்ன நடந்தது வரலாற்றில்….

காண்போம்… வரலாற்று ஆராய்ச்சி முயற்சி தொடரும்…

பி.கு...

கி.பி முதல் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு வரை வரலாறு இன்னும் புதிராகவே இருக்கின்றது… அது வட இந்தியாவின் வரலாறாக இருக்கட்டும்… அல்லது தென் இந்தியாவின் வரலாறாக இருக்கட்டும். வட இந்தியாவின் மேல் பல படையெடுப்புகள் நிகழ்ந்த அதேக் காலக்கட்டத்தில் தென் இந்தியாவிலும் ஆட்சிகள் மாறி உள்ளன. சமசுகிருதம் வளர்ந்த இக்காலக் கட்டம் தெளிவில்லாத சூழல்களால் சூழப்பட்டு உள்ளது. இக்காலத்தின் வரலாற்றினைப் பற்றிய ஆய்வுகள் இன்றும் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டு இருக்கின்றன...

தமிழக பட்ஜெட் 2018-2019...



உலகின் வரலாறு - ஒரு வரலாற்று ஆய்வு -1...


சென்ற பதிவின் முடிவில் நாம் இந்தியா முழுவதும் அசோகர் புத்த மதத்தினை பரப்புவதைக் கண்டோம்.

பலி வேண்டாம்... எல்லா உயிர்களும் ஒன்றே.. என்ற புத்த மதத்தின் கோட்பாட்டின் காரணமாக வேள்வி மற்றும் பலிகளை நம்பியே வாழ்ந்து வந்த ஆரியர்கள் திகைக்கின்றனர். அடுத்து என்ன செய்வது என்று சிந்திக்கின்றனர்.

அவர்கள் என்ன செய்தனர் என்பதனை நாம் காணும் முன் அக்காலம் ... அதாவது கிமு மூன்றாம் நூற்றாண்டில் இந்தியா எவ்வாறு இருந்தது என்பதினை நாம் கண்டுவிடலாம்.

மௌரிய பேரரசு கிட்டத்தட்ட இந்தியா முழுவதுமே பரவி இருந்தது. சந்திர குப்த மௌரியன் தொடங்கி வைத்த அந்த பேரரசு அசோகரின் கீழ் அதன் உச்ச நிலையினை அடைந்து இருந்தது. ஆரியர்களின் செல்வாக்கு வடக்கே மிகுந்து இருந்தது (சந்திர குப்தனின் ஆசிரியராகவும் பின்னர் அமைச்சராகவும் சாணக்கியன் என்ற ஆரியன் இருந்ததினை நோக்குக).

இந்த நிலையில் தான் கலிங்க யுத்தத்திற்கு பின்னர் அசோகனின் மனம் மாறுகின்றது. அசோகன் போரில் இருந்த நாட்டத்தினை மறந்து புத்தத்தின் பால் நாட்டம் கொள்கின்றான். பலிகள் கூடாது என்று புத்தம் சொல்கின்றது. எனவே அசோகனும் பலிகள் கூடாது என்கின்றான். அரசன் கட்டளையினை இட்டப் பின்பு மக்கள் கேட்காமலா இருப்பார்கள். மக்களும் பலிகள் வேண்டாம் என்கின்றார்கள். மௌரியப் பேரரசு முழுவதுமே புத்தம் பரவுகின்றது. நிற்க. இது வட இந்தியாவின் அன்றைய நிலை.

இப்பொழுது அக்காலத்தில் தென் இந்தியா எவ்வாறு இருந்தது என்பதினை நாம் சற்றுக் காண்போம்.

வடக்கே என்னத்தான் மௌரிய பேரரசு இணையின்றி விளங்கிக் கொண்டு இருந்தாலும் அதற்கு கட்டுப்படாமல் சுதந்திரமாக தெனிந்தியாவில் இரண்டு பேரரசுகள் இயங்கிக் கொண்டு தான் இருந்தன. ஒன்று சோழப் பேரரசு... இன்னொன்று பாண்டியப் பேரரசு. அப்பேரரசுகள் மௌரிய பேரரசிடம் வணிகத் தொடர்பினை மட்டுமே வைத்து இருந்தன. தெற்கில் இருந்து வணிகர்கள் வடக்கே செல்வதும் வடக்கே இருந்து தெற்க்கே வருவதுமாக இப்பேரரசுகளிடையே வணிகம் நன்றாக நடைப் பெற்றுக் கொண்டு இருந்ததாக அசோகனின் கல்வெட்டுகளும் பல இதர சான்றுகளும் நமக்குத் தெரிவிக்கின்றன.

எனக்கு ஒன்று பிடிப்படவில்லை, ஏன் வரலாற்று ஆய்வாளர்கள் தமிழ் வரலாற்றின் மீது அதிகமாக அக்கறை காட்ட மறுக்கின்றார்கள்?. அசோகனின் வரலாற்றையும் சந்திர குப்தனின் வரலாற்றையும் ஆராயும் அவர்கள், அப்பேரரசர்களின் காலத்திலையே அவர்களுக்கு கட்டுப்படாமல் இயங்கி வந்த தமிழ் அரசர்களைப் பற்றி ஏன் ஆராய மறுக்கின்றார்கள். வட இந்தியா முழுவதையுமே வென்ற அந்தப் பேரரசர்கள் ஏன் தெற்கில் அவர்களது செல்வாக்கினை காட்டவில்லை என்றக் கேள்வி அந்த வரலாற்று ஆசிரியர்களின் மனதினில் எழாமலா இருந்து இருக்கும்?. அதுவும் ஆங்கிலேயர்களுக்கு முன்னால் வரை எந்த இனமும் எந்த பேரரசும்... அது அசோகனாக இருக்கட்டும், முகலாயர்களாக இருக்கட்டும், தேவராயராக இருக்கட்டும், தென் இந்தியாவினை முழுமையாக போரிட்டு வெல்ல முடியவில்லையே. அது ஏன் என்றக் கேள்விக்கு அவர்கள் ஏன் விடையினைத் தேடவில்லை என்பது தான் எனக்கு பிடிப்படவில்லை. சரி அது இருக்கட்டும். நம் வரலாற்றுக்கு நாம் மீண்டும் வருவோம்.

மௌரிய பேரரசிற்கு கட்டுப்படாமல் சோழனும் பாண்டியனும் தெற்க்கே ஆண்டு வருகின்றார்கள். நாம் முந்தைய பதிவுகளில் பார்த்தது போல் அவர்கள் நாகரீகத்திலும் கலைகளிலும் சரி சிறந்து விளங்குகின்றனர். அறிஞர்களின் கணிப்புப்படி அக்காலத்தில் கடைச் சங்கம் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கின்றது. தமிழ் மேலும் வளர்ந்துக் கொண்டு இருக்கின்றது.

மக்களுள் தொழில் அடிப்படையில் சாதிகள் இருக்கின்றன. அந்தப் பிரிவுகள் கலை முன்னேற்றதிற்க்காகவும் தொழில் முன்னேற்றதிற்க்காகவுமே உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

அதாவது, இன்று எப்படி மருத்துவம் பயின்றவர்கள் மருத்துவன் என்று ஒரு பிரிவாகவும், விஞ்ஞானம் பயின்றவர்கள் விஞ்ஞானிகள் என்று ஒரு பிரிவாகவும், பொறியியல் படித்தவர்கள் பொறியாளர்கள் என்றும், பயிற்றுவிப்பவர்கள் ஆசிரியர்கள் என்றும் பலப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றனரோ அதேப் போல் அன்று,

பள்ளமான விவசாய நிலங்களில் நன்றாக வேலை செய்து விவசாயத்தினை வளர்த்தவர்களை 'பள்ளர்கள்' என்றும்,

பறை அறைந்து மக்களுக்கு செய்திகளை தெரிவித்த செய்தி தொடர்பாளர்களை பறையர்கள் என்றும்

இசைக் கருவிகளான பாணங்களை இசைத்து இசைத் தமிழ் வளர்த்த தமிழர்களை பாணர்கள் என்றும்

அது போன்று மேலும் பல சிறப்பு மிகுந்த தொழில்களைச் செய்த மக்களுக்கு அவர்களின் தொழில் அடிப்படையில் துறைகளை ஒதுக்கி மேலாண்மைத் துறையில் சிகரங்களைக் கண்டார்கள் தமிழர்கள். இந்தப் பிரிவுகள் செய்யும் தொழில் அடிப்படையில் அமைந்தனவே அன்றி பிறப்பின் அடிப்படையில் அல்ல.

அவர்கள் அனைவரும் எவ்வித ஏற்றத்தாழ்வும் இன்றி தமிழகத்தில் வாழ்ந்து வந்து கொண்டு இருக்கின்றனர்.

இக்காலத்தில் தான் வடக்கே அசோகன் புத்தத்திற்கு மாறுகின்றான். ஆரியர்கள் என்ன செய்வது என்று யோசிக்கின்றனர்.

இப்பொழுது ஒருக் கேள்வி,

நீங்கள் ஒருத் தொழிலினை செய்துக் கொண்டு வருகின்றீர். அந்தத் தொழிலுக்கு உங்கள் நாட்டில் திடீர் என்று தடை விதிக்கின்றார்கள். ஆனால் பக்கத்துக்கு நாட்டில் அதற்குத் தடை இல்லை. அங்கே நீங்கள் செல்லவும் தடை இல்லை. இந்த நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள். பக்கத்துக்கு நாட்டிற்க்கு சென்று உங்கள் தொழிலை ஆரம்பிப்பீர்களா இல்லையா? ஆரம்பிப்பீர்கள் தானே!

அதையே தான் அந்த ஆரியர்களும் செய்தார்கள். புத்தம் பரவாது இருந்த, புத்த மன்னர்கள் இல்லாது இருந்த தமிழகத்தில் அவர்கள் நுழைய தடை ஒன்றும் இல்லை. போதாக்குறைக்கு வந்தோரை வாழ வைத்தே பழகிய தமிழகமும் அவர்களை வரவேற்க தடை ஒன்றும் இடவில்லை. போதாதா!!!

காலப்போக்கில் ஆரியர்கள் தமிழகத்தில் நுழைகின்றனர்.

"என்ன ஐயா... உங்களுக்கு பிழைக்க இடம் இல்லையா... அவ்வாறு சொல்லாதீர்கள்... நாங்கள் இருக்கும் வரை எங்கள் தேசத்தில் இல்லை என்பதே இல்லை... தாராளமாக நீங்கள் வரலாம்... தமிழகம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது" என்றவாறே மன்னர்கள் அவர்களை வரவேற்கின்றனர்.

இந்த நிகழ்வு கிமு மூன்றாம் நூற்றாண்டில் தொடங்குகின்றது. வடக்கில் செல்வாக்கினை இழந்த ஆரியர்கள் தெற்க்கே நுழைகின்றனர். வடக்கே வழக்கிழந்த வேள்விகளையும் இதர செயல்களையும் அவர்கள் தமிழகத்தில் மறு சீரமைப்பு செய்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுது தான் அவர்கள் எதிர்பாராத ஒரு செயல் நிகழ்கின்றது.

தன் பேரரசு முழுமையும் புத்தத்தினை பரப்பிய அசோகன் அதனை மற்ற நாடுகளுக்கும் பரப்ப ஆட்களை அனுப்புகின்றான். அசோகனின் செய்தியினை சுமந்தப்படி துறவிகள் உலகெங்கிலும் செல்லுகின்றனர். சீனத்திற்கு, கிரேக்கத்திற்கு...தமிழகத்திற்கு!

ஆரியர்களை வரவேற்று ஏற்றுக் கொண்ட தமிழர்கள் ... அசோகனின் துறவிகளையும் வரவேற்று ஏற்றுக் கொள்ளுகின்றனர். அவ்வாறே அசோகனின் கருத்துகளையும்!!! புத்தம் தமிழகத்திலும் பரவுகின்றது. புத்ததினைப் போன்றே ஏற்கனவே மற்றொரு நாத்திக சமயமான சமணமும் தமிழகத்தில் பரவி இருக்கின்றது.

சமணம் மற்றும் புத்த சமயங்களின் கருத்துக்கள் தமிழக மன்னர்களின் மனதினைக் கவர அவர்களுள் சிலர் அம்மதங்களுக்கு மாறுகின்றனர். ஒரு வித்தியாசமான சூழ்நிலையினை தமிழகம் சந்திக்கின்றது.

பல மொழி பேசும் பல மனிதர்கள், வணிகத்திற்காக வந்த கிரேக்கர்கள் மற்றும் இன்னும் பல மேற்கு நாட்டவர்கள்... பாலி மொழி பேசும் மௌரியர்கள்... சமயத்தினை பரப்ப வந்த துறவிகள்... ஆரியர்கள், ஒரே நேரத்தில் தமிழகத்தில் வந்து சேர்ந்து இருந்தனர்.

இவர்கள் அனைவரும் நலமாக வாழ வேண்டும். தங்கு தடையின்றி பேசிப்பழக வேண்டும். அதற்கு என்ன செய்வது... சிந்திக்க ஆரம்பித்தனர் தமிழக மன்னர்கள்.

"தமிழ் இனிமையான மொழி... ஆனால் நம்முடைய மொழியினை இவர்கள் கற்க வேண்டும் என்று திணிப்பது சரியல்ல... மேலும் இவர்களுள் பலர் சில வேலை நிமித்தமாக வந்து இருக்கின்றனர்... இவர்கள் அனைவருக்கும் பொதுவாக ஒரு மொழியினை நாம் உருவாக்கினால் என்ன?... நம் வணிகர்களும் அந்த நாட்டிற்கு சென்று வணிகம் செய்வதற்கு அம்மொழி உதவும் தானே!!!" என்று எண்ணி ஒரு மொழியினை உருவாக்கும் முயற்சியினை மேற்கொள்கின்றனர்.

தமிழ் அறிஞர்கள் அப்பொறுப்பினை எடுத்துக் கொண்டு முழு வீச்சில் ஒரு மொழியினை செம்மையாக உருவாக்க ஆரம்பிக்கின்றனர். தமிழில் இருந்தே மற்ற மொழிகள் தோன்றி இருப்பதினால் அவர்களின் வேலை எளிதாக அமைகின்றது. கிரேக்கம், இலத்தின், பாலி, அரேமியம் போன்ற மொழிகளையும் தமிழையும் சேர்த்து ஒரு மொழி உருவாக்கப்படுகின்றது.

"எம் தமிழ் மக்கள் பேசி மகிழ எம் உயிரினும் மேலான தமிழ் இருக்கின்றது... பிறநாட்டவர் தங்களது பணிகளை எளிதாக இங்கே மேற்கொள்ள இந்த புதிய மொழி உதவட்டும்... தமிழில் உள்ள செல்வங்கள் இம்மொழியின் வாயிலாக உலகிற்கு செல்லட்டும்" என்றக் கொள்கையோடு தமிழ் மன்னர்கள் அந்த புதிய மொழியினை உருவாக்கிப் பரப்புகின்றனர்.

அம்மொழி தான் சமசுகிருதம்.

சமசுகிருதம் என்றால் 'செம்மையாக செய்யப்பட்டது' என்பதே பொருள். இம்மொழி தோன்றியக் காலம் கிமு முதல் நூற்றாண்டு என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

இவ்வாறு தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஒரு மொழி பிற்காலத்தில் தமிழினையும் தமிழையும் அடக்கி ஒடுக்க பயன்படும் ஒருக் கருவியாக மாறியது.

அது எவ்வாறு... காண்போம்! நம் பயணம் இப்பொழுது 'கிபி'யினுள் முதல் முறையாக நுழைகின்றது...

ஆகச்சிறந்த அழிவு என்ற தொழில்நுட்பத்தின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழையா விருந்தாளியாக செல்ல விரும்புகிறீர்களா..?


இயற்கை ஒருபோதும் நம்மை மன்னிக்காது...

தமிழரின் கடல் வணிகச் சிறப்புக்கு...


தமிழரின் கடல் வணிகச் சிறப்புக்கு மேலும் ஒரு ஆதாரம்...

எகிப்து நாட்டில் தமிழ் எழுத்துகள் 2100 ஆண்டுகளுக்கு முற்பட்டவை (tamil brahmi inscription belonging to first century AD) கண்டுபிடிக்கப்பட்டன.

செங்கடல் கரையில் உள்ள குவெய்ர் அல் கடிம் (Quseir-al-Qadim, an ancient port with a Roman settlement on the Red Sea coast of Egypt) என்னும் துறைமுக நகரில் உடைந்த மண்ஜாடி ஒன்றில் தமிழ் பிரம்மி எழுத்துக்கள் உள்ளன என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் துறைமுகத்தில் ரோமானியர்கள் தங்கி வாணிபம் செய்துள்ளனர். இந்த எழுத்துகள் கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பதும் கண்டு அறியப்பட்டுள்ளது.

ஜாடியின் இரண்டு பக்கங் களிலும் இந்த எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. “பனை உறி” என்ற எழுத்துகள் உள்ளன. கயிறுகள் கட்டித் தொங்க விடப்பட்டு அதில் பானைகள் அடுக்கி வைக்கப்படும். அது உறி எனப் பெயர்ப்படும்.

எகிப்துத்துறைமுக நகரில் அகழ்வாராய்ச்சியை மீண்டும் தொடங்கிய இங்கிலாந்தின் சவுத்ஆம்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் பீகாக் மற்றும் புளு (Prof. D. Peacock and Dr. L. Blue of University of Southampton, U.K) ஆகியோர் இதைக்கண்டு அறிந்துள்ளனர்.

லண்டனில் உள்ள பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தின் மட்பாண்ட வல்லுநர் (Dr. Roberta Tomber) இதனை ஆராய்ந்து, இது இந்தியாவில செய்யப்பட்ட மண்பாண்டம் என சான்று அளித்துள்ளார்.

தமிழ் எழுத்தாய்வறிஞர் அய்ராவதம் மகாதேவன் (Iravatham Mahadevan) இவை தமிழ் எழுத்துகள் என்றும், 2100 ஆண்டுகளுக்கு முந்தையவை என்றும் உறுதிப் படுத்தியுள்ளார்.

புதுச்சேரியிலுள்ள பிரஞ்ச் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த பேராசிரியர் சுப்பராயலு (Prof. Y. Subbarayalu, French Institute of Pondicherry), நடுவண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராஜன் (Prof. K. Rajan of Central University, Puducherry) மற்றும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் செல்வகுமார் (Prof. V. Selvakumar, Tamil University, Thanjavur) ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்து இதனைக் கண் டறிந்து அறிவித்துள்ளனர்..

“பானை உறி” என்ற எழுத்துகள் மிகவும் தெளிவாகவே பொறிக்கப்பட்டுள்ளதாக அய்ராவதம் மகாதேவன் தெரிவிக்கிறார். இந்தப் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அகழ்வாராய்ச்சியில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட இரண்டு பானைகள் கண்டு எடுக்கப்பட்டன. இவை கி.பி. முதல் நுற்றாண்டைச் சேர்ந்தவை ஆகும்.

இதே காலத்தைச் சேர்ந்த தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் 1995 இல் பெரனைக் என்னும் ரோமானியர் வசித்த பகுதியில் (Berenike, a Roman settlement, on the Red Sea coast of Egypt) கண்டு எடுக்கப்பட்டன என்கிற விவரத்தை அய்ராவதம் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் செங்கடல் வழியே ரோம நாட்டுடன் கடல் வணிகம் செய்து வந்தனர் என்று தமிழ்ச் சங்கப் புலவர்கள் எழுதிய பாடல்களிலும் மேலை நாட்டின் பழைய இலக்கியவாதிகளும் எழுதியதற்கு ஆதாரமாக இவை அமைந்துள்ளன.

கடலோடிகளாகக் கப்பல் மூலம் வணிகம் செய்து உலகில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் சிறந்து விளங்கினர் என்பதனை இதனாலும் விளங்கிக் கொள்ளலாம்...

திமுக தமிழை காத்த போது...


ஆப்பிரிக்க கிழக்குக் கரையோரச் சமுத்திரத் தீவான மொரிசியசு நாட்டில்...


இந்தக் கோயில் எங்கேயிருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களோ தெரியாது. ஆப்பிரிக்க கிழக்குக் கரையோரச் சமுத்திரத் தீவான மொரிசியசு என்னும் நாட்டில்...

மொரிசியசில் பிரெஞ்சுக்காரர்கள் குடியேறிய 1721ஆம் ஆண்டளவில் தமிழர்கள் பயிற்சி பெற்ற தொழிலாளர்களாகவும் வெள்ளைகாரர்களின் பிள்ளைகளுக்கு ஆசிரியர்களாகவும் வந்துசேர்ந்தார்கள். ஏனைய இந்தியக் குடியேற்றவாசிகள் போன்றே தமிழர்களும் புத்திசீவிகளாகவும் வணிகர்களாகவும் சிறந்து விளங்குகிறார்கள்.

இவர்கள் மத்தியில் கொடை வள்ளல்களுக்கும் குறைவில்லை என்பதையும் இங்கே குறிப்பிடுவது அவசியமாகும். இயலாதவர்களுக்கு உதவுவதில் அரசாங்கத்தையும் தட்டிக்கேட்கவும் இவர்கள் தயங்குவதில்லை.

இங்கு தமிழும் சைவமும் தளைத்தோங்குவதை இவர்கள் பெருமையுடன் இன்றும் கூறுகிறார்கள்.

கோயில் திருவிழாக்களில் காவடியும் தீமிதிப்பும் தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் நடைபெறுவதுபொலவே இங்கும் நடைபெறுகின்றன.

முதலில் 1850 இல் Terre Rouge என்னுமிடத்தில் தமிழ் செல்வந்தர்களால் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி துரோபதை அம்மன் கோயில் நிர்மாணிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து லூயிஸ் துறையில் ஸ்ரீ சொக்கலிங்க மீனாட்சி அம்மன் கோயிலும் கிளெமென்சியாவில் அருள்மிகு பாலதந்தை கோயிலும் Plaines des Roches என்னும் நகரில் சிவ சுப்பிரமணியன் கோயிலும் நிர்மாணிக்கப்பட்டன.

இக்கோயில் நிர்மாணிப்புப் பணிகளில் காலத்துக்குக் காலம் வந்த தமிழக அரசாங்கங்கள் எண்ணற்ற உதவிகளைக் கொடுத்துதவின என்பதையும் இங்கு நான் நன்றியுடன் குறிப்பிட விரும்புகிறேன்.

சமயமே தமிழர்களை இணைப்பதும் ஒற்றுமைப்படுத்துவதுமான சக்தியென இவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

நமது கண்ணுக்கு எட்டாத தூரத்திலிருக்கும் இந்த உடன்பிறப்புகளின் வாழ்வில் சுகமும் செல்வமும் சகோதரத்துவமும் வளர வாழ்த்துவோம்...

பாஜக தோல்வியை ஆராய்ந்த போது...


திருட்டு திராவிடமும் தமிழின அழிப்பும்...


மது, மாது, சூது..... நல்ல மனிதருக்கு கேடு என்று சொல்வார்கள்...

திராவிடம் - பேரறிஞர் என சொன்ன அண்ணாதுரை தமிழனை சூதில் தள்ளினார்.. லாட்டரி சீட்டை அறிமுகபடுத்தி...

திராவிடம் முத்தமிழ் அறிஞர் - என சொன்ன கருணாநிதி.. தமிழனை மதுவில் தள்ளினார்....

புரட்சி தலைவர்களும், தலைவிகளும் மதுவை வீட்டு வாசல் படி வரை கொண்டு வந்துவிட்னர்.....

அடுத்து மிஞ்சி இருப்பது மாது மட்டும் தான்..

அநேகமாக திராவிடத்தின் ஐம்பதாம் ஆண்டு ஆட்சி வந்தால் அது தமிழனுக்கு ஆங்காங்கே விலையில்லாமல் இலவசமாக கூட கிடைக்கலாம்!

தமிழன் போதையில் இருந்தால் தான் அவன் அடிமையாய் இருப்பதை அறிய மாட்டான்.. என்ற திராவிடத்தின் திட்டத்தை உடைத்றெிந்து...

தமிழர் கட்சிகளை ஆளவும், எதிர்கட்சியாகவும்.. தேர்ந்தெடுப்போம்...

பாஜக வின் பினாமி கன்னடன் கமல் என்பதை புரிந்துக் கொள் தமிழா...


பச்சைத் தமிழன் என்ற முகமூடி அணிந்துள்ள மராட்டிய ரஜினியின் குடும்ப வரலாறு...


ரசினியின் மகள் சவுந்தரியம் தன் தந்தை மராட்டியன், தன் தாய் அய்யங்கார் வகுப்பை சார்ந்தவர், தன்னை சவுந்தரியம் என்று அழைப்பதை விட 'சக்கு பாய் கெயிக்வாடு' என்று அழைப்பதையே பெருமையாக கருதுகிறேன் என்று டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு வழங்கிய பேட்டி (ஜன. 15, 2017)...

மராட்டியனுக்கும், கன்னட அய்யங்காருக்கும் பிறந்த 'சக்கு பாய்' பச்சை தமிழச்சியாகி, கலைமாமணி விருதெல்லாம் வென்ற வரலாறு தான் இதுவரையான தமிழினம் வீழ்ந்த சுருக்கமான ஒருவரிக் கதை..

எல்லா புகழும் திராவிட அரசியலுக்கே. ராம்சாமி பூமிடா, தமிழன் வாயில மண்ணுடா...

யார் மண்ணை யாருடா குத்தகைக்கு விடுவது...


தமிழகத்துக்கு தேவை நியுட்ரினோ அல்ல.. தண்ணியும், சோறும், விவசாயமும் தான்..


நதி நீர்களை இணைக்கவில்லை, கடல்ல கலக்கும் நீரை சேமிக்க நீர் நிலைகளை அமைக்கவில்லை.. ஆனா நியூட்ரினோ ஆராய்ச்சி அமைத்து மக்களுக்கு என்ன நல்லது செய்ய போறாங்கன்னு தெரியல...

இப்போது புரிந்ததா.. தேனி காட்டில் எப்படி தீ பற்றியது என்று...

பாஜக மற்றும் அதிமுக கலாட்டா...


கவலை மாற...


கவலைகள் மனதில் இருந்தாலே தோல்வியையும். மூதேவியையும் விருந்து வைத்து அழைப்பது போலாகும், கவலைகள் உள்ள உள்ளத்தில் தெய்வ தேவாதைகள் குடிகொள்ளாது..

அதனால் தான் முன்னோடிகள் ஆசையை ஒழித்தால் அனைத்தையும் பெறலாம் என கூறினார்கள்..

ஆசை நிறைவேறாத போது கவலைகள் உண்டாகும்..

ஆசையில்லாத போது கவலைகள் குடிகொள்ளாது..

எனவே மனதில் தெய்வ தேவாதைகளுக்குத்தான் இடம் கொடுக்க வேண்டுமே தவிர கவலைகளுக்கு அல்ல..

கவலை இருந்தால் சிந்தனை சிதறும். மனதை அடக்கvமுடியாது , எனவே எப்பிரச்சினை உங்களுக்கு இருந்தாலும் அதை முதலில் மறக்கவும், அல்லது விலக்கவும், ஜெயம் உண்டாகும்..

கவலையில்லாத மனிதன் யாருமே இல்லை தான்..

கடந்தகால கவலை. நிகழ்கால கவலை. வருங்கால கவலை. இந்த மூன்று கவலையில் ஏதாவது ஒரு கவலையில் மனிதன் வாழ்கிறான்..

இதில் எதிலுமே கவலை இல்லாதவன் வாழ தகுதி அற்றவன் என சாஸ்திரம் கூறுகிறது..

எனினும் லட்சியக் கவலை இருக்கலாமே தவிர. வீண்கவலை இருக்க கூடாது.

அக்காலத்தில் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் ஆசையை அழித்துதான் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

மன்னர்களெல்லாம் போர்க்களம் செல்லும் போது உயிர் மேல் ஆசை வைக்காமல் சென்றவர்கள் அவர்களெல்லாம் கூட வெற்றி பெற அது ஒன்றே காரணம் என வரலாறு கூறுகிறது.

வெற்றி என்ற லட்சிய கவலையை ஆயுதமாக கொண்டு வெற்றி பெற்றவர்கள் அவர்கள்..

தாங்களும் நம்பிக்கையும். விடா முயற்சியையும் கேடயமாக கொண்டு அன்பை ஆயுதமாக கொண்டு முயற்சியுங்கள் வெற்றி உண்டு.

நமக்கு இருப்பது ஒரு மனம் அதை கவலைக்காக இடம் ஒதுக்கிவிட்டால் தெய்வத்திற்கு இடம் இல்லாமல் போய்விடும் உணர்வீராக...

இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழன் அழிய வேண்டுமா.?


சாலையோரக் கிணற்றுக்குள் கார் பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினர்...



கோவை மாவட்டம் சோமனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவர் தன்னுடைய மனைவி ராதாமணி மற்றும் உறவினர்கள் 5 பேருடன் உடுமலைப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், பல்லடத்தை அடுத்துள்ள மந்திரிபாளையம் என்னும் இடத்தைக் கார் கடக்கும்போது, காரின் பின்பக்க டயர் திடீரென வெடித்திருக்கிறது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரத்தில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது.

விவசாயி ஒருவருக்குச் சொந்தமான அந்தக் கிணற்றில் கார் விழுந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக ஓடிச்சென்று காரில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் பகுதி தீயணைப்புத் துறையினர், சுமார் ஒரு மணி நேரம் போராடி, காருடன் கிணற்றுக்குள் சிக்கித் தவித்த அனைவரையும் சிறு காயங்களுடன் மீட்டனர். கிணற்றில் தண்ணீர் வற்றியிருந்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு இருக்கிறது. இச்சம்பவத்தால் சில மணி நேரம் உடுமலை சாலை பரபரப்புடன் காணப்பட்டது...

திமுக வும் தமிழின அழிப்பும்...


பண்டைய எகிப்தியரின் மின்விளக்கு...


எகிப்தில் டெண்டீரா வளாகப் பகுதிகளில் நடத்தப் பட்ட ஆய்வின் போது ஆராய்சியாளர்களை  ஆச்சர்யத்தை உண்டாக்கின சுவரில் செதுக்கப் பட்டு இருந்த கற்சித்திரங்கள். நிலவறைகளில், இரகசிய பெரிய அறைகள் மிகவும் பாதுகாக்கப் பட்ட பகுதிகளாகவும், அரசர் மற்றும் மிக முக்கிய மத போதகர்கள் மட்டுமே அனுமதிக்கப் பகுதியாகவும் இருந்திருக்கும் என நம்பப் படுகிறது.

அங்கு அவர்களுக்கு மிகவும் ஆச்சர்யத்தையும் அதிசயத்தையும் கொடுத்த செதுக்கப்பட்ட கற்சித்திர (கற்சிலை) வடிவம் ஒன்று,  அது இப்போது நமக்கு பரிசயமான ஒன்றாக இருக்கும் இருந்த பொருளை பிரதிபளிப்பதாக இருந்த  அதை பார்த்த போது மின் விளக்கு போன்று இருந்தது.

அந்த காலத்திய மின்விளக்கு சித்திரங்கள் எப்படி?

எகிப்தியர்கள் மின் விளக்கு பயன் படுத்தி இருப்பார்களா?

இருட்டான நிலவறைகளில் எப்படி வெளிச்சத்தை கொண்டு வந்து இருப்பார்கள்?

டார்ச் போன்ற உபகரணங்களை உபயோகப் படுத்தி இருப்பார்களா?

பக்க சுவர்களில் மட்டுமல்ல கூரைச் சுவர்களிலும் செதுக்கப்பட்ட சித்திரங்கள் காணப்பட்டன.

எகிப்திய பிரமீடுகளின் உட்புற அறைகளுக்கு, மிகப்பெரிய தாமிரக் கண்ணாடி பொருட்களை உபயோகித்து, சூரிய ஒளியை பிரதிபளிக்க செய்து வெளிச்சத்தை ஏற்படுத்தி இருப்பார்கள். விளக்குகளையோ மெழுகு வர்த்திகளோ ஏன் சிகர் லைட்டர்களோ கீஸா அறைகளில் எரியவில்லை. அப்படியானால் செயற்கை விளக்குகளை அவர்கள் பயன் படுத்தி இருக்கிறார்கள்.

சிற்பத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட  மின்சார விளக்கு..

தெந்தேரா அறைகளில் உள்ள மின்விளக்கு சுவர் செதுக்கு சிற்பத்தை ஆராய்ந்த போது தாமரை வடிவிலான அடிப்பாகமும் அதை சுற்றி பல்பு போன்ற உருவமும், நான்கு பேர் அதை தாங்கி பிடிப்பது போன்றும், பல்ப் உருவத்தின் உள்ளாக பாம்பு உருவமும் செதுக்கப் பட்டு இருந்தது.

அடுத்த கேள்வி சரி மேற்படி செதுக்கல் சிற்பம் ஏன் பிரமீடுகளின் உள் காணப் படவில்லை.  இந்த தொழில் நுட்பம் மிக ரகசியமான ஒன்றாகவும் தெந்தேரா ரகசிய கருவறைப் பகுதி போல அங்கு அமைக்கப் பட்டு இருப்பதற்கான முக்கிய காரணமும் இருந்திருக்கலாம்.

அடுத்து வரும் வாரிசுகளுக்கு இதை தெரிவிப்பதற்காகவும் இதை செதுக்கி வைத்திருக்கலாம்.

இன்னொரு முக்கிய கருத்து வேற்று கிரக வாசிகள் பிரமிடின் தொழில் நுட்பத்தையும், இது போன்ற பல நுட்ப ரகசியத்தையும் கற்றுக் கொடுத்திருக்கலாம் என்பது, ஆய்வுகள் தொடர்கின்றன.

வேற்று கிரக வாசிகள் பூமியோடு தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என அது குறித்து 1968 ல் தொடங்கி இன்னும் கள ஆராய்ச்சி செய்து நூல்களை (chariots of the gods) எழுதிவருகிறார் பிரபல ஜெர்மன் எழுத்தாளர் எரிக்வான் டேனிக்கன்.

மின்விளக்கு இருந்திருந்தால் மின்சாரம் இருந்திருக்க வேண்டும் அதற்கு மின் கலன்களை உபயோகித்து இருப்பார்களோ ?

மின்சாரம் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தான் கண்டுபிடிக்கப் பட்டதாக சொல்லப்படுவது சரியா?

மின் கலன்கள் எனும் போது பாக்தாத் பேட்டரிகள் பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

பாக்தாத் பேட்டரிகளை பற்றி தகவலுடன் சொல்லப்படுவது அகத்தியர் காலத்தில் இது இருந்திருக்க வேண்டும் என்பது ஆனால் இதற்கு இது போன்ற ஆதாரம் கிடைக்கவில்லை (இரசவாத பாடலை மட்டுமே ஒரு சாரர் ஆதாரம் காட்டுகிறார்கள்) பாக்தாத் பேட்டரி பற்றிய விவரங்களுக்கு இங்கு சொடுக்கவும்.

எகிப்தியர்கள், ரோமானியர்களோடு இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு வாணிக தொடர்புகள் இருந்திருக்கிறது.

இந்த பதிவு குறிப்பாக அக்காலத்திய எகிப்திய மின் விளக்கு பற்றிய ஒரே ஒரு தகவலுக்காக மட்டுமே...

எத்தனை மணி நேரத்தில் மரத்தை வெட்டினீர்களோ? அதே மணி நேரத்தில் மீட்டு தர முடியுமா?


வாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்...


பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க மாட்டோம். பூக்களின் மருத்துவக் குணங்களைக் கொண்டு பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளனர் சித்தர்கள். தற்போது மலர் மருத்துவமாகவே மேல் நாடுகளில் சிகிச்சை செய்து வருகின்றனர்.

பூக்களில் நாம் பலவற்றை அறந்திருப்போம். அவற்றில் வாழைப்பூவைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. வாழையை இந்தியாவில் வீட்டு மரமாக வளர்க்கின்றனர். வாழைமரத்தில் மொத்தம் 14 வகைகள் உள்ளன.

முன்னோர்கள் பொதுவாக வாழையை பெண் தெய்வமாகவே வணங்கி வந்தனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த வாழையின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை. இதில் வாழைப் பூவின் மருத்துவக் குணங்களை அறிந்து கொள்வோம்.

மருத்துவப் பயன்கள்...

இரத்தத்தைச் சுத்தப்படுத்த...

வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும்.

மேலும் இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் இரத்தமானது அதிகமான ஆக்ஸிஜனை உட் இரப்பதுடன், தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு...

இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.

வயிற்றுப்புண் நீங்க...

இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகரிக்கும்.

மூலநோயாளிகளுக்கு...

மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

பெண்களுக்கு...

பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு, அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் நீங்கும்.

வாழைப்பூ கஷாயம்...

வாழைப்பூ (இரண்டு அல்லது மூன்று இதழ்களை நீக்கி விட்டு பூவை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொண்டு) அதனுடன்..

இஞ்சி 5 கிராம்..

பூண்டு பல் 5..

நல்ல மிளகு 1 ஸ்பூன்..

சீரகம் 1 ஸ்பூன்..

சோம்பு 1 ஸ்பூன்..

கொத்தமல்லி விதை 1 ஸ்பூன்..

கறிவேப்பிலை 5 இணுக்கு..

எடுத்து இடித்து கஷாயம் செய்து காலை, மாலை என இருவேளையும் மாதவிலக்கு தோன்றும் காலத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும், மாதவிலக்கு காலங்களிலும், மாதவிலக்கு முடிந்து இரண்டு நாட்கள் என மூன்று அல்லது நான்கு மாதங்கள் அருந்தி வந்தால் கருப்பைப்புண், கர்ப்பப்பைக் கட்டி, வெள்ளைபடுதல், மாதவிலக்கு சீரற்ற தன்மை போன்றவை மாறும். இது கை கண்ட மருந்தாகும். அடிவயிறு கனம் குறையும். புண்புரை நீங்கும், சீராக இரத்த ஓட்டம் பெறும். உடல் வலுவடையும்.

பெண்களுக்கு உண்டாகும் சூடு மற்றும் வெள்ளை படுதலை போக்கும். கர்ப்பப்பையை வலுப்படுத்தும் குணமுண்டு. மலட்டுத் தன்மையைப் போக்கும். ஈறு வீக்கம், புண் இவற்றிற்கு சிறந்த மருந்தாகும். வியர்வை நாற்றத்தைப் போக்கி, வியர்வையை நன்கு வெளியேற்றும்.

கை, கால்களில் உண்டாகும் பித்த எரிச்சலைக் குணப்படுத்தும். உடல் எரிச்சலைப் போக்கும். தாதுவை விருத்தி செய்து விந்துவை கெட்டிப்படுத்தும். பருவ வயதினருக்கு உண்டாகும் சொப்ன ஸ்கலிதத்தை மாற்றும்.

நரம்புகளுக்கு வலுவூட்டும். குறிப்பாக மூளை நரம்புகளில் சூட்டைத் தணித்து மூளைக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

இத்தகைய சிறப்பு மிகுந்த வாழைப்பூவை நாமும் சமைத்து உண்டு நோயில்லா பெருவாழ்வு வாழ்வோம்...

பாஜக பினாமி அதிமுக அடிமைகளின் மானத்தை உலகறிய செய்த சந்திரபாபு நாயுடு...


திமுக விற்கு என்று ஒரு வாக்கு வங்கி உள்ளது...


1- ஆதி ஆந்திர நற்பணி மன்றம்.

2- தமிழ் மாநில திராவிட முன்னேற்ற கழகம்.

3- கருநாடக மாநிலம் தெலுங்கு தேசம் பார்டி.

4 - திராவிட தேசம் கட்சி.

5 - தமிழ் நாடு பாரதிய ரிபப்ளிகன் பார்டி.

6 - சமாஜ்வாடி பார்ட்டி தமிழ்நாடு.

7 - பழங்குடியினர் வெற்றி சங்கம்.

8- தமிழ்நாடு போயர் சேவா சங்கம்.

9- தமிழ் நாடு கன்னட சமுதாயம்.

10 - நாடாளும் தெலுங்கு மக்கள் கட்சி..

உள்ளிட்ட இன்னும் சில கட்சிகளின் ஆதரவில் திமுகவிற்கு வாக்கு வங்கி இருக்கிறது..

ஆனால் இதில் எது தமிழ் மக்களின் கட்சி..?

இந்தியா முழுமைக்கும் உள்ள மக்களை திமுக ஏன் தமிழ் நாட்டில் குடியேத்தியது என்று இதை பார்க்கும் மக்களுக்கு நன்றாகவே தெரியும்..

தமிழர்கள் திமுகவிற்கு வாக்கு செலுத்த மாட்டார்கள் என்று பக்கத்து மாநில மக்களை குடியேற்றி அவர்களின் வாக்கு சதவிகிதத்தில் வென்று விடாலாம் என்ற திட்டத்திலே இவைகளை செய்து...

தமிழர்களின் வேலை வாய்ப்புகளையும் உரிமைகளையும் பறித்து அவர்களுக்கு கொடுத்துள்ளது...

தமிழா விழித்துக்கொள்.. நாளை தமிழகம் தமிழன் நாடில்லை என்று சொல்ல வைத்தாலும் சொல்ல வைப்பார்கள்...

தமிழனின் உப்பும் கார்பரேட் வியாபாரமும்...


ஒரே நபர் ஒரே நேரம் ஆனால் வெவ்வேறு இடங்கள் எனும் அமானுஷ்யம்...


அல்ஃபோனா (Alfonso) இத்தாலியில் வாழ்ந்த கிறிஸ்தவ மதகுரு, 22/9/1774 ஆம் ஆண்டு இத்தாலியில் இருந்த பலஸ் தெல் கொதி இல் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தியானித்துக் கொண்டிருந்தார்.

சற்று நேரம் வெளியில் வந்து, அங்கிருந்த மக்களை பார்த்துவிட்டு மீண்டும் அறைக்குள் சென்றார்.

சற்று நேரத்தில் திரும்பி வந்து போப் சற்று முன்னர் இறந்து விட்டார் என அறிவித்தார்…

அனைவருக்கும் ஆச்சரியம், பலர் நம்பவுமில்லை…

போப் இருப்பது ரோம் நகரில், அதாவது அந்த காலப்பகுதியில் இவர்கள் இருந்த இடத்தில் இருந்து ஒரு நாள் பயணம்..

மறு நாள்… ரோமில் இருந்து உத்தியோக பூர்வமாக போப் இறந்த தகவல் அந்த நகருக்கு வந்தது.

அனைவருக்கும் ஆச்சரியம், எப்படி இங்கிருந்தபடியே அல்ஃபோனால் அந்த தகவலை கூறமுடிந்தது? உள் உணர்வாக இருக்கும் என முடிவெடுத்தவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சிதகவல் கிடைத்தது.

போப் இறந்த போது அங்கிருந்த சூழ் நிலை பற்றிய தகவல்கள் கிடைக்கத் தொடங்கின.

அதில், போப் இறப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக அங்கு வந்த அல்ஃபோனா அவரின் அருகில் இருந்து ஜெபம் (செபம்) செய்ததாக உறுதியான தகவல்கள் கிடைத்தன...

இது எப்படி? ஒரே நபர் ஒரே நேரத்தில் பல கிலோமீட்டர் தூர இடைவெளியில் உள்ள இருவேறுபட்ட இடங்களில் இருக்க முடியும்?

இது தான் Bilocation (இரட்டை மனை) எனப்படும் மர்மம்..

மேலே நாம் பார்த்தது வரலாற்று பதிவில் இடம்பெற்ற ஒரு சம்பவம். இது மட்டும் தானா?

சமீபத்தில் 2000 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஒரே நபருக்கு இடம்பெற்ற இருசம்பவங்களை பார்ப்போம்…

அமெரிக்காவில் Wisconsin பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பம்… தாய், தந்தை, சித்தி மற்றும் இரு பிள்ளைகள் அடங்கிய ஒரு குடும்பம்.

ஒரு நாள், மூத்த மகள் தனது நண்பியின் வீட்டில் நடைபெற்ற விருந்துபசாரத்தில் கலந்து கொள்ள சென்றிருந்தால்.

தாய் தனது வீட்டு வேலைகளை முடித்து விட்டு தூங்குவதற்காக கட்டிலுக்கு சென்றால். அங்கு அவர் கணவர் ஏற்கனவே தூக்கத்தில் இருந்தார். பல நிமிடங்கள் ஆகியும் தாயாருக்கு தூக்கம் வரவில்லை. எதேச்சையாக அறையைவிட்டு வெளியேறினார். வெளியே, மின் விள‌க்குகள் எரிந்து கொண்டிருந்தன… வீட்டு வாசல் கதவை அவரது மகள் பூட்டிக்கொண்டிருந்தாள்.  நேரம் கடந்துவிட்டது போய் தூங்கு… என சொல்லி விட்டு தாயார் அடுப்படிக்கு சென்றார். ஆனால், கதவைப்பூட்டிய தனது மகளின் முகத்தில் ஒரு வித்தியாசம் இருந்ததை உணர்ந்தார். அதனால், மகளின் அறைக்கு சென்றார். அங்கு மகள் இல்லை..

மீண்டும் மகள் வெளியே சுற்ற சென்று விட்டாள் என ஆத்திரம் அடைந்த அவர், தனது மகளின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்தார். அழைப்பை ஏற்றுக்கொண்ட அவரது மகள் தான் இன்னமும் நண்பியின் வீட்டில் இருப்பதாக கூறினாள். தாயாரால் நம்ப முடியவில்லை. அவளது நண்பியின் தாயாரிடம் கைபேசியை கொடுக்கும்படி கூறினார். அவரது தாயாரும் அந்தப் பெண் மாலையில் இருந்து அங்கேயே இருப்பதை உறுதிப்படுத்தினார்.
இவரால் நம்ப முடியவில்லை. அவர்களது வீட்டு தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தினார். அவரது மகளே அந்த தொலைபேசி அழைப்பையும் எடுத்தாள்…

எப்படி? தனது மகள் வெளியில் இருப்பதை நினைத்துக் கொண்டிருந்த அந்த தாயாருக்கு அந்த நினைவலைகள் உருவமாக பரிணமித்தனவா… என சிந்தித்தால், இதுவரை நினைவலைகள் பற்றி வெளியான அனைத்து ஆராய்வு முடிவுகள் மற்றும் சம்பவங்கள் அந்த உருவங்கள் மங்களாக தெளிவற்று தெரிவதை உறுதிப்படுத்தியுள்ளன.

ஆனால், இந்த சம்பவத்தில் வீட்டு கதவை திறந்து பூட்டியுள்ளார். எந்த வித மங்களும் இல்லை. வீட்டு மின் விளக்குகள் கூட அந்தப் பெண்ணால் போடப்பட்டவை தான்..

இதே குடும்பத்தில் அடுத்த சம்பவம்…

விடுமுறை நாள் ஒன்றில், அந்த குடும்பத்தின் இரண்டாவது மகள் குளிரான காலைப்பொழுதில் வீட்டிற்கு வெளியே குளிர் அங்கி அணியாது சென்றுகொண்டிருப்பதை பார்த்த சித்தி, மேல் மாடியில் இருந்த படியே அவளது தாயாருக்கு தகவல் கொடுத்தார். தாயாரும் அதை பார்த்தார். என்றாலும் தனது மகளுக்கு அவ்வாறான தட்ப வெப்ப நிலையில் செல்வது பிடிக்கும் என்பதால் அவர் அந்த தகவலை பெரிதாக கருதாமல், தொலைக்காட்சி பார்பதற்காக இருக்கையில் அமர்ந்தார். அமர்ந்து அடுத்த கணம், மேல் மாடியில் இருந்து, அப்போது தான் படுக்கையில் இருந்து எழுந்த உடையுடன் அவரது மகள் வந்தார்…

இக் குடும்ப சம்வத்தில் முதல்கூறிய சம்பவத்தின் உறுதிக்கு பெரிதாக சான்றுகள் இல்லை… ஆனால் இரண்டாவது சம்பவத்திற்கு, அருகில் இருந்த வீட்டாரும் சாட்சி..

எப்படி இவை சாத்தியம்?

இவை இயற்கையானதா? நம்மாளும் முடியுமா?

போன்ற கேள்விகளுக்கான விளக்கங்களுடனும் மேலும் எமது சமுதாயத்தோடு தொடர்புடைய ஒரு சம்பவத்தையும் பார்க்கலாம்...