08/12/2018

ரூ. 25 ஆயிரம் லஞ்சம் நாங்குநேரி தாசில்தார் கைது...


திருநெல்வேலி:சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, நாங்குநேரி தாசில்தார் கைது செய்யப்பட்டான்.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அடுத்த சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் பால்துரை. மினி பஸ் இயக்கி வருகிறார். இவரது பெயரில் உள்ள மினி பஸ் உரிமத்தை, மனைவி பெயருக்கு மாற்றம் செய்வதற்காக, இரண்டு மாதங்களுக்கு முன், சொத்து மதிப்பு சான்றிதழ் கேட்டு, நாங்குநேரி தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தார்.தாசில்தார் வர்கீஸ், 54, சான்றிதழ் தர, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு உள்ளான்.

திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு போலீசில், பால்துரை புகார் செய்தார். நேற்று மாலை, தாசில்தார் அலுவலகத்தில், வர்கீசிடம், 25 ஆயிரம் ரூபாயை பால்துரை வழங்கினார்.மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்பு, டி.எஸ்.பி., ஹெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார், வர்கீசை கைது செய்தனர். நாகர்கோவிலில் உள்ள வர்கீஸ் வீட்டிலும், போலீசார் சோதனை மேற்கொண்டனர்...

பாஜக மோடி கலாட்டா...


கும்பகோணத்தில், வங்கி பெண் ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேர் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்...


காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது...

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவருக்கு தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஒரு வங்கியில் வேலை கிடைத்தது. இதனையொட்டி அந்த பெண் தனது பணி தொடர்பான பயிற்சி பெறுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானில் இருந்து சென்னை வந்தார்.

பின்னர் சென்னையில் இருந்து ரெயிலில் இரவு கும்பகோணம் வந்த அவர் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியில் வந்து உள்ளார். அந்த பெண்ணுக்கு தமிழ் தெரியாது என்பதால் ஆங்கிலத்தில் அங்கு இருந்த ஒரு ஆட்டோ டிரைவரை அழைத்து தான் செல்ல வேண்டிய முகவரியை காண்பித்து அங்கு தன்னை கொண்டு சென்று விடுமாறு கேட்டுள்ளார்.

ஆனால் அந்த ஆட்டோ டிரைவர், அந்த பெண் குறிப்பிட்ட இடத்துக்கு செல்லாமல் வேறு பாதையில் ஆட்டோவை ஓட்டிச்சென்றுள்ளார். இதனால் அந்த பெண் கூச்சல் போடவே ஆட்டோ டிரைவர் அந்த பெண்ணை கும்பகோணம் செட்டி மண்டபம் பைபாஸ் சாலையில் இறக்கி விட்டு சென்றார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரிடம் தன்னை தான் செல்ல வேண்டிய இடத்தில் கொண்டு சென்று விடுமாறு கேட்டுள்ளார். ஆனால் அந்த வாலிபரும் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ளும் நோக்கத்துடன் அந்த பெண்ணை அந்த பகுதியில் உள்ள ஒரு மறைவான இடத்துக்கு அழைத்து சென்று உள்ளார். பின்னர் தனது நண்பர்கள் 3 பேரை அங்கு வரவழைத்து உள்ளார். அந்த பெண்ணை 4 பேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் தீவிர விசாரணையில் அந்த பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது கும்பகோணம் மோதிலால் தெருவை சேர்ந்த வசந்த்(வயது 21), தினேஷ்(24), புருஷோத்தமன்(19), அன்பரசன்(19) ஆகிய 4 பேர் என்பது தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து வசந்த் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் இந்திய தண்டனை சட்டப்பிரிவு(366) இளம்பெண்ணை கடத்தல், (376) பாலியல் பலாத்காரம், 506(2) கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், நேற்று முன்தினம் அவர்கள் 4 பேரையும் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இந்த நிலையில் தினேஷ் மற்றும் வசந்த் ஆகிய இருவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை நாங்கள் கைது செய்ய சென்றபோது அவர்கள் எங்களிடம் இருந்து தப்பி ஓடினர். அப்போது தினேஷ் மற்றும் வசந்த் ஆகியோர் கீழே விழுந்ததில் அவர்களது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்காக அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில் கோவில் நகரமான கும்பகோணத்தில் நடந்துள்ள இந்த தகவல் கும்பகோணம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சிலர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 2 பேரையும் நேற்று தாக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பாதுகாப்பு கருதி அந்த பெண்ணை போலீசார் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து விட்டனர்.

இந்த நிலையில் கும்பகோணத்தில் வக்கீல்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று சங்க தலைவர் சங்கர் தலைமையில் நடந்தது. செயலாளர் பாலமுருகன், துணை தலைவர் அன்பு முருகன், பொருளாளர் கவிதா மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

கும்பகோணம் வந்த வடமாநிலத்தை சேர்ந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். இந்த குற்றத்தில் தொடர்புடையவர்களுக்கு ஆதரவாக வக்கீல்கள் யாரும் ஆஜராக கூடாது. இதை தமிழகத்தில் உள்ள அனைத்து வக்கீல்கள் சங்கத்தையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக கும்பகோணத்தில் நேற்று வக்கீல்கள் கோர்ட்டு புறக் கணிப்பில் ஈடுபட்டனர்...

பாஜக - அதிமுக - ஸ்டெர்லைட் சதிகள்...


அல்சரை குணப்படுத்தும் கொடுக்கா புளி...


கொடுக்கா புளி ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை காய்க்கும். கொடுக்கா புளி இலைகளை பயன்படுத்தி செரியாமை, வயிற்று புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்...

கொடுக்கா புளி இலைகள், பூக்கள், நாட்டு சர்க்கரை, சீரகம், மிளகுப் பொடி. ஒருபிடி இலை மற்றும் பூ எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிது மிளகுப் பொடி, கால் ஸ்பூன் சீரகம், நாட்டு சர்க்கரை சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி அல்சர் உள்ளவர்கள் குடித்துவர நல்ல பலன் தரும். வயிற்றுப்புண் வராமல் தடுக்கிறது. வயிற்று கடுப்பு குணமாகும். செரிமானத்தை சீர் செய்யும். சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. வாயு கலைந்து வயிற்று வலி போகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

கொடுக்கா புளியின் சதை பகுதியை பயன்படுத்தி பற்கள், மூட்டுகளை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கொடுக்கா புளி, உப்பு, மிளகுப் பொடி. கொடுக்கா புளியின் மேல் தோலை நீக்கி சதை பகுதியை 15 வரை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிது மிளகுப் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர பல் வலி குணமாகும். பற்களுக்கு பலம் கொடுக்கும்.

எலும்புகளை பலப்படுத்தும். மூட்டு வலி சரியாகும். ரத்த சோகையை போக்க கூடியது. ஊக்கம் தரக்கூடிய சத்துக்களை உடையது. கொடுக்கா புளி இலைகளை பயன்படுத்தி மூட்டு வலிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் எடுத்துக் கொள்ளவும். கொடுக்கா நீர் விடாமல் அரைத்த புளி இலை பசையை சேர்த்து நன்றாக வதக்கவும்.

மேல்பூச்சாக போடும்போது மூட்டு வலி குணமாகும். வீக்கம் கரைந்து, வலி குறையும். கொடுக்கா புளியின் இலைகள் பால்வினை நோய்களுக்கு மருந்தாகிறது. கோண புளியங்காய் என்ற பெயரை கொண்ட இதன் சதை பகுதி எலும்பு, பற்களுக்கு பலம் தரக்கூடியது...

தஞ்சை கோவில் காப்பாற்றப்பட்டது...


திமுக அரசியல் நாகரீகம் கடை பிடிக்கும் கட்சி என்று சொல்லிக் கொண்டு திரியும் உடன் பிறப்புகள் கவனத்திற்கு...


1989.. தி.மு.க சட்டசபையில் மானபங்கம்… ஐயோ.. அதைச் சாகும் வரை மறக்காத முதல்வர் ஜெ..

பூ போல பிறந்து.. பூவாய் வளர்ந்து… பூ முகத்தை திரையில் காட்டி.. பூ போல சிரித்து மகிழ்ந்த ஒரு பெண்ணை.. செல்வச் சீமாட்டியை… உலுக்கி எடுத்த ஒரு அதிர்ச்சி சம்பவம் அன்று அரங்கேறியது..

ஆம்.. தமிழக சட்ட மன்றம் அதுவரை கண்டிராத அவலம்.. ஒட்டு மொத்த தமிழகமும்.. ஏன்.. உலகமே   ச்சீ.. என்று இகழ்ந்த காரி துப்பியச் சம்பவம் அன்று நடந்தது..

அத்தனை  பேர் கூடி இருந்த சபையில் திமுகவின் ரவுடி எம்.எல் .ஏ கள் பாய்ந்து சென்று முதல்வரின் சேலையைப் பிடித்து இழுத்து மரணத் தாக்குதல் நடத்தினர்..

கதறினார் ஜெ.ஜெயலலிதா...

கூக்குரலிட்டு அபயக் குரல் எழுப்பினார்… ஆனாலும் விடாமல் சேலையைப் பிடித்து இழுத்து கடுமையாகத் தாக்கினர் திமுக ரவடிகள்..

திடுக்கிட்டு ஓடிவந்த ஜெ.விசுவாச படை சூழ்ந்து நின்று தங்கள் மேல் அடியை தாங்கிக் கொண்டு ஜெயலலிதா வை கைப்பற்றினர்..

அன்று தான் பூ ஒன்று புயலானது..

அன்று அவர் போட்ட சபதம்.. இனி நான் சட்டமன்றத்தில் நுழைந்தால் முதல்வராக மட்டுமே நுழைவேன் என்று...

பிறகு முதல்வர் ஆகி ஜெ. சாகும் வரை தி.மு.க விற்கு சிம்ம சொப்பனமாக இருந்தார்…

இவை அனைத்தும் சட்டமன்ற குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட்டவையே.. தேவை படுவோர்.. உண்மையா என்று ஆராய்ந்துக் கொள்ளலாம்...

கார்ப்பரேட்டின் cerelacக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இதற்கு கொடுக்கவும்...


உங்கள் கைப்பட நீங்கள் தயாரித்தது, என்ன சேர்த்துள்ளீர்கள் என உங்களுக்கே நன்றாக தெரியும்...

நம்முள் ஜோதி தரிசனம் கிட்டும்...


எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன், பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுனை அளவு நெருப்பாக இருக்கிறான்.

நம் உடம்பில் உட்புகு வாசலாகிய இரு கண்மணியில் ஞான குருவால்  தீட்சை பெற்று..  கண்மணியில் உணர்வு பெற்று அதை நினைந்து நினைந்து உணர்ந்து  உணர்ந்து தியானம் செய்ய வேண்டும்..

தொடர்ந்து முயற்சி செய்யச் செய்ய நெகிழ்ச்சி ஏற்பட்டு கண்களில்  நீர் ஆறாக பெருகி பாயும். இப்படியே சாதனை தொடர வேண்டும்..

அப்போது கண்மணியின் உள் உள்ள சிறுஜோதி கொஞ்சங் கொஞ்சமாக பெருகும்.. கண்மணியின் சுழற்சி கூடுவாதால் இது நடக்கும்.. மனம் அங்கே நிற்பதால் கை கூடும்.. இரு கண்மணி வழி பெருகும் ஜோதி உள்புகுந்து சேர்ந்து அக்னி கலையுடன் போய் சேரும், அந்த இடம் நம் தலை உச்சிக்கு கீழ் , வாய் அண்ணாவுக்கு மேல் உள்ள இடமே..

"விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் ருறுக்கியொ  ரோப்பிலா   ஆனந்தக்
கண்ணின்று காட்டி களிம்பறுத்  தானே "

- திருமந்திரம்.

சனாதன தர்மத்திற்கு விளக்கம் இந்த ஒரு பாடலே போதும்..

நம் கண்மணியில், வலது கண் சூரியன் இடது கண் சந்திரன் ஆகிய கண்மணிகளிலும் தியானம் செய்வதால் பெருகும் ஒளி உட்புகுந்து அக்னி கலையில் சேரும் - அதுவே முச்சுடரும் ஒன்றான நிலை..

ஜோதி பாதம்.. திருவடி.. இந்நிலைபெறும் முயற்சியிலிருக்கும் சாதகனுக்கு படி படியாக  உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை உள்ள 72000  நாடி நரம்பிலும் கொஞ்சம் கொஞ்சமாக ஒளி பரவும். உடல் தூய்மையடையும்.. நோய் நொடி வராது.. உடல் உறுதி பெறும்.. உள்ளம் பண்பாடும்.. இறைஅருள் கிட்டும்.. எல்லா ஞானிகளின் ஆசிர்வாதமும் பெறுவான்.. ஜோதி தரிசனம் கிட்டும்.. திரை விலகும் ஆன்மா பிரகாசிக்கும்..

அங்கிருந்து ஜோதி ஊர்த்துவமுகமாக மேல் எழுந்து உச்சியை சகஸ்ராரத்தை அடையும்.. உச்சியை அடைந்தால் அறிவுப்பிரகாசம்.. பரவெளி காணலாம்.. வெட்ட வெளியில் உலாவலாம்..

பேரின்பம்.. பேரின்பம்.. பேரின்பமே...

10ம் தேதி எனக்கு கடைசி நாள் - ராமர் பிள்ளை...


புதினா பெண்களின் வரப்பிரசாதம்...


மாதவிடாய் சுழற்சிஒழுங்கின்மை, அதிக நாட்கள் போக்கு, அப்போதய வயிற்று வலி ,உடல் அசதி, இடுப்பு வலி நீங்கிட..
மாதவிலக்கு நாட்களில் தினசரி காலை வெறும் வயிற்றில் மூன்று ஸ்பூன் புதினா சாறு அருந்திவரவும்.

புதினாக்கீரையைச் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள இரத்தம் சுத்தமாவதோடு, புதிய இரத்தமும் உற்பத்தியாகும்.
.
வயிறுபோக்கு அதிகமாக இருந்தால், புதினா கீரையை துவையலாக அரைத்து சாப்பிட்டால், வயிற்றுப் போக்கு குணமாகும்.
.
புதினாக் கீரை, ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும், உதவுகின்றது.
.
வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது.
.
புதினாக் கீரையை கிள்ளி போட்டு கஷாயம் வைத்து சாப்பிட்டால் இளமையுடன் வாழலாம். அரை சங்கு புதினாக் கீரையை குழந்தைகளுக்கு கொடுக்க கபம் நீங்கும்.
.
புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்த பின்னர். சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகு மறைந்துவிடும். .
.
புதினா இலைகளை வெயிலில் நன்றாக காயவைத்து அதனுடன் அதன் அளவில் எட்டில் ஒரு பங்கு உப்பு சேர்த்து தூள் செய்து சலித்து பாட்டிலில் வைத்துக்கொள்ளக்கொள்ளவேண்டும். இந்த பொடியில் தினமும் பல் தேய்த்து வந்தால், ஆயுள் முழுவதும், பல் சம்பந்தமான எந்த ஒரு நோயும் உங்களை தீண்டாது. மேலும் பற்கள் பளபளக்கும், ஈறுகளில் இரத்தம் வருவது, வாய் துர்நாற்றம் போன்றவை நீங்கும்.
.
முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் புதினா சாற்றை முகத்தில் தடவி வர விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
.
தொண்டைப்புண், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகளுக்கு, புதினாக்கீரையை நன்கு அரைத்து கழுத்தில் வலியுள்ள பகுதியில் பற்றுப் போட்டு வர பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.
.
புதினாக்கீரையைத் துவையலாக சாப்பிட்டு வந்தால் பெண்களின் மாதவிலக்கு கோளாறுகள் குணமாகும்.
.
புதினாக்கீரையை கஷாயமாகவோ அல்லது சூப்பாகவோ தயாரித்து அருந்தினால், இருதய சம்பந்தமான நோய்கள் நிவாரணம் பெறும்.
.
மஞ்சள் காமாலை, வறட்டு இருமல், வாதம், ரத்த சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது...

அதிமுக வும் ஊடகமும் மூடி மறைக்கும் விவசாயிகளின் தற்கொலை...


மரணத்திற்கு பின்...


மனிதன் மரணத்தை கண்டு பல கோடி ஆண்டுகளாக அஞ்சி வந்ததன் காரணம், இறந்தபின் இருக்கும் நிலையை அறியாததே.

ஆம் மரணத்திற்கு பின் வாழ்க்கை உண்டு என்பதை அறியாமலேயே இருப்பதால் தான் அந்த பயம்.

மரணம் மனிதனின் ஆட்டத்தை முடிப்பதாக கருதப்படும் ஒன்று.

ஆண்டாண்டு தோரும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவதில்லை என்ற கோட்பாடே அவர்களை குழப்பம் அடைய செய்தது.

ஆனால் உண்மை அதுவல்ல, உறங்குவது போலாம் சாக்காடு உறங்கி விழிப்பது போலாம் பிறப்பு.

மரணம் என்பது ஆன்மா எடுத்துக்கொள்ளும் தற்காலிக ஓய்வே.

நாம் ஒவ்வொரு பிறவியிலும் பலவித சிக்கலான அனுபவங்களை பெறுகிறோம்.

மரணத்திற்கு பின் நாம், செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப இனிமையான மற்றும் துக்கமான எண்ணங்களால் அலைக் கழிக்கபடுகிறோம்.

ஆவி நிலையில் நாம் பெற்ற அனுபவங்களை நினைத்து நினைத்து சுக துக்கங்களை அடைகிறோம்.

ஆம் அதிகம் பாவம் செய்த ஆன்மா கேட்பாரற்று ஆதரவற்று நிர்கதியாக தனிமையில் சொல்ல முடியாத துயரத்தில் சிக்கி தவிக்கிறது.

புண்ணியம் அதிகம் செய்த ஆன்மாவோ சொர்கம் எனும் பரிமாணத்தில் நிறைய ஆன்மாக்களோடு கூடி மகிழ்கிறது.

வாழ்க்கை ஒரே முறை தான். தயவு செய்து வாழ்க்கையை வாழுங்கள்...

மருத்துவ மாப்பியா - தடுப்பூசி...


கேள்விக் கேட்க பழகுங்கள்..

ஏனெனில் இங்கு அரசாங்கம் ஒன்றை உங்களிடம் திணிக்கிறது தடுப்பூசி முறையே...

தடுப்பூசியை தயாரித்தவர்களுக்கே அது பலனில்லை என்பது தெரியும், ஆனால் அவர்கள் அதை விற்க ஆரம்பித்தனர்..

அனைத்து வழிகளிலும் விற்க ஆரம்பித்தனர்...

திமுக தெலுங்கர் கருணாநிதி கலாட்டா...


நமக்கு எதுக்கு இப்ப சிலை வைக்குறானுங்க. அப்படியென்ன சாதிச்சிட்டோம்...

தஞ்சாவூர் பெருவுடையார் கோயில்...


தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு.

இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே.

அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.

தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன.

ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.

இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..

பெரிய கோயில் அளவுகோல்...

எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழமே இருவிரல் நீட்டித்து பதினாறு விரல் அகலத்து, ஆறுவிரல் உசரத்து பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.

தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.

இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. சுமார் 1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு
180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின் 13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.

அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தர் என்று தெரிகிறது.

சாரங்களின் அமைப்பு..

கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் - ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் - சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.

இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.

இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் (நஇஅஊஊஞகஈ) அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் (யஉதபஐஇஅக டஞநப), நேர்ச்சட்டங்கள் (தமசசஉதந), குறுக்குச் சட்டங்கள் (ஆதஅஇஉந) அனைத்தும் முட்டுப் பொருத்துகள் (இஅதடஉசபதவ ஒஞஐசபந) மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள உதவின.
அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.

மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறிப்பிடத்தக்கதது...

திமுக வந்தால் என்ன ஆக போகிறது...


இவை அனைத்திற்கும் முக்கிய காரணமே திமுக தானே...

குருவாய் வருவாய் குகனே...


காரணகுரு... காரியகுரு...

'கு' ஆகிய இருளிலிருந்து 'ரு' ஆகிய வெளிச்சத்தைக் காட்டக்கூடிய ஆற்றல் பெற்றவரே குரு என்பவர். உலகில் காரணகுரு, காரியகுரு என இருவகையினர் உள்ளனர்.

காரியகுரு...

காரியகுரு எனப்படுபவர் சில சித்திகளை கைவரப் பெற்று, முற்றுப் பெறாமல் பொருளை இச்சித்து செயல்படுவராவர். காரியகுருவாகியவர் தவறாகப் போதிப்பவரே உண்மையில் 'குருடு' என்ற தமிழ்ப்பதத்திற்குப் பொருத்தமானவர். கண் பார்வையற்றவரைக் 'குருடு' என்பது தவறான சொற் பிரயோகமாகும். இப்போலிக் குருவாகிய குருடுகளை ஆசான் திருமூலர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே.
- திருமந்திரம் (10.6.105)

காரணகுரு...

எந்தப் பொருளின் மீதும் பற்றற்று இருப்பவரே காரணகுரு ஆவார். ஞானபண்டிதன் முருகப்பெருமானின் சீடர்களான முற்றுப்பெற்ற சித்தர்களே காரணகுரு ஆவார்கள். மகான் அகத்தீசர், மகான் நந்தீசர், மகான் திருமூலதேவர், மகான் போகர், மகான் கருவூர்தேவர், மகான் பட்டினத்தார், மகான் சிவவாக்கியார், மகான் காலாங்கிநாதர், மகான் வள்ளலார் போன்ற ஞானிகளே காரணகுரு ஆவார்கள். ஆசான் அகத்தீசரின் ஆசிபெற்ற ஒன்பது கோடி ஞானிகளும் காரணகுரு ஆவார்கள்.

அத்தகு காரணகுருவின் திருவடிப்பற்றி பூசித்து ஆசிமாறாமல் உடம்பைப் பற்றியும், உயிரைப் பற்றியும் அறிய முடியாது. சத்தைப் பற்றியும், அசத்தைப் பற்றியும் அறிய முடியாது.

காலம் உள்ள போதே அதாவது இளமை இருக்கும் போதே காரண குருவை அறிந்து, அவரது உபதேசத்தைப் பெற்றுப் பிறவி ப்பிணியை நீக்கிக் கொள்ள வேண்டும்...

பழங்குடி சமுகத்தை சார்ந்தவரிடம் இருந்து வந்த சொற்க்கள்...


நோய் எதிர்ப்பு சக்தி தரும் வாழைப்பழம்...


நம்மில் பலர் விலையுயர்ந்த கனிவர்க்கங்களைப் பார்க்கும் விதத்தில், விலைகுறைந்த கனிவர்க்கங்களைப் பார்ப்பதில்லை. ஆனால் விலை குறைந்த பழவகைகளிலும் எல்லா சத்துக்களும் நிறைந்து கிடைக்கின்றன.

அவ்வகையில் இந்த உலகத்தில் எல்லா பாகங்களிலும், எல்லா நேரங்களிலும் கிடைக்கும் ஒரே கனிவகை வாழைப்பழம் மட்டும்தான். வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் கொண்டுள்ளது.

அதாவது சுக்ரோசு(ஸ்) (Sucrose), ஃபுருக்டோசு(ஸ்) (Fructose) மற்றும் குளுகோசு(ஸ்) (Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான நார் சத்தையும் (Fiber) கொண்டுள்ளது. இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 11/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை தருவதோடு மட்டுமல்லாமல் நோய்கள் வராமல் தடுக்க நோய்எதிர்ப்பு நாசினியும் கூட செயல்படுகிறது..

எப்போதும் மந்தமாக இருக்கிறோம் என கருதுபவர்களுக்கு வாழைப்பழம் சிறந்த உணவாகும்.. வாழைப்பழத்துடன் தேனையும், பாலையும் சேர்த்து ஒரு குவளை பாற்சாறு (Milkshake) தயார் செய்து குடிக்கவும்.

வாழைப்பழம் தேனுடன் சேர்த்து வயிற்றை அமைதிப்படுத்தி இரத்தத்திலுள்ள இனிப்புச் சத்தை அதிகரிக்கிறது. அத்துடன் இதில் பாலும் சேர்ப்பதால் பால் நீர் சத்துகளை சரியாக வைத்துக்கொள்கிறது. இம்மூன்றும் சேர்வவதால் உடல் மந்தம் நீங்கிவிடும்

வாழைப்பழத்திற்கு இயற்கையாக அமில எதிர்ப்பு சக்தி இருப்பதால் வாழைப்பழத்தை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர நெஞ்செரிப்பு தொந்தரவு நீங்கி குணம் பெறலாம்.

மேலும் வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் குடலின் உட்பகுதி மென்மையாகி அதிகமான அமிலத்தன்மை மூலம் குடற்புண்ணை அழித்து குடற்புண் வராமல் பாதுகாக்கிறது.

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் அவை இதயத்துடிப்பை கட்டுக் கோப்புக்குள் வைத்துக் கொள்வதுடன் பிராணவாயுவை மூளைக்குச் செலுத்தி உடலில் உள்ள தண்ணீரின் அளவை சமப்படுத்துகிறது.

இதனால் மன அழுத்த நோய் நீங்கும். மூன்று நேர உணவு இடைவேளைக்கு பின்னர் வாழைப்பழத்தை சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள குளுகோசின் அளவு அதிகமாகி காலைத் தூக்க நோயிலிருந்து விடுபடலாம்...

மனிதன் தற்சார்பாய் மட்டும் வாழ்ந்தால் இயற்கை மீட்சி பெறுமா? பெறாதா...


மனிதன் சுயநலமாக இல்லாமல் மனிதன் இயற்கையுடன் மகிழ்ந்து இருந்தால் அவனது வாழ்வு மெய்யியல் அடையாதா?

எல்லா வித மனிதனுக்கும் அன்பு,கருனை, மகிழ்ச்சி இவை உணர்ந்தால்...

ஆசை, பேராசை, போர்கள், எதிரி,  யாரையும் அடிமை செய்யாமை, ( தலைமை) கருத்தியல், திருட்டு, செயற்கை கட்டமைப்பு, வேறுபாடு, பணக்காரன், ஏழை,அரசியல்,  பாகுபாடு, மதங்கள், கற்பழிப்பு, தற்பெருமை, அழியாத?

மனிதனின் மனம் மாறும் வரை இங்கே ஏதும் மாறாது...

சிறுநீரகக் கற்கள் ஏற்பட முக்கிய காரணம்...


இன்றைய கால கட்டத்தில் சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது எனலாம்.

சிறுநீரகத்தில் கல் உள்ளவர்களுக்கு தாங்க முடியாத அளவிற்கு வயிற்று வலி ஏற்படும். நாளடைவில் சிறுநீர் பாதையில் தடையை உண்டாக்குகிறது. சில உணவுப் பொருட்களை தவிர்ப்பதன் மூலம் சிறுநீரக கல் வராமல் தடுக்கலாம். இதற்குமுக்கிய காரணம் தண்ணீர் அதிகளவு எடுத்துக் கொள்ளாததே.

பால், தயிர். மோர் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளாவிட்டால் உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்படும். கால்சியத்தின் தேவை காரணமாக, குடல் அதிக அளவில் ஆக்ச(ஸ)லேட்டை ஈர்த்துக் கொள்ளும். இவ்வாறு ஈர்க்கப்பட்ட ஆக்சலேட் ரத்தத்தில் கலந்து சிறுநீரகத்தில் கற்களை ஏற்படுத்திவிடும்.

வருடக்கணக்கில் சிறுநீரகங்களின் உள்ளமைப்புக் கூறுகள் சேதமடைதல், சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பினால் உடலில் திரவம் மற்றும் தேவையற்ற வீணான பொருட்கள் சேர்ந்து இவை இரத்தத்திலும் அதிகரிப்பதினால் கற்கள் ஏற்படுத்துகின்றது.

அசோடிமியா என்பது எந்த அறிகுறியும் இன்றி இரத்தத்தில் யூமிரியா போன்ற நைதரசன் பொருட்கள் அதிகரிப்பதாகும். யூமிரியா என்பது சிறுநீரகங்கள் செயல் இழப்பதினால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய குறைவு ஆகும்.

அதிக அளவு வெப்பத்தால் உடலில் அதிகம் வியர்க்கிறது. வெளியேறும் வியர்வைக்கு ஏற்ற அளவில் தண்ணீர் குடிக்காவிட்டால், சிறுநீரகக் கற்கள் உருவாகி விடுகின்றன. நாம் உட்கொள்ளும் உணவு முறைகளில் இப்போது பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது. புரச்சத்து, நீர்சத்து அதிகமுள்ள காய்கறிகளைத் தேவையான அளவு உட்கொள்வதில்லை. இவை சீறுநீரகக் கற்கள் உருவாகக் முக்கிய காரணம்...

புரோக்கர் விசிக திருமா வின் வாக்குமூலம்...


50 லட்சம்  சும்மா தரவில்லை நாள்வர் கூட்டணியில் அவரை முதலமைச்சர் ஆக்கும்படி கூறி கொடுத்தார்..

எனக்கும் துணை முதல்வர் பதவி தருகிறேன் என்றார்..

முத்தரசனுக்கு அமைச்சர் பதவி தருவதாகவும் சொன்னார்...

- விசிக திருமாவளவன்....

ஆழ்மனம் இரகசியம் - மனமும் உடலும்...


நம் உடலானது  உயிரை தக்க வைத்துக் கொள்வதற்காக 24 மணிநேரமும் போராடுகின்றது.

நாம் எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும் நம் உடல் நமக்காக வேலை செய்து கொண்டே இருக்கும்.

என்ன உணவுக்கு என்ன இரசாயனம் சுரக்க வேண்டும். எதை கொழுப்பாக மாற்ற வேண்டும். எதை இரத்தத்தில் இருந்து பிரிக்க வேண்டும் போன்ற பல தகவல்கள் ஒவ்வொரு செல்களிலும் உள்ளது.

நாம் உடலை பற்றி என்ன யோசித்தாலும் அதை உடனே நம் உடல் செயல்படுத்த ஆரம்பித்து விடும்.

உதாரணமாக நீங்கள் படுத்துக் கொண்டு, ஓடுவதாக கற்பனை செய்தால் உடனே உடல் அதை உண்மை என நம்பி அதற்கு தேவையான அனைத்து தசைகளையும் இயக்க ஆரம்பித்து விடும்.

ஆம் உடலை மனதால் ஏமாற்றி விடலாம். நீங்கள் நம்ப முடியாத ஒரு விடயத்தை இங்கே கூற போகிறேன்.

நீங்கள் தினமும் ஒரு அரைமணி நேரம் படுத்துக் கொண்டு, வெறும் கற்பனையால் யோகாசனம் செய்வதாக நினைத்தாலே போதும். நீங்கள் யோகா செய்தால் என்ன பலனோ அதே பலன் இதிலும் கிடைத்து விடும்.

ஆம் சூரிய நமஸ்காரம் ஒவ்வொன்றாக செய்வதாக மனதில் ஆழ்ந்து நினைத்துவந்தாலே போதும்.

மனதிற்குள் புக முடிந்தால் உடலுக்குள்ளும் புக முடியும்...

தேடல்...


எந்த ஒரு தேடலும் கருத்தியல் ஆகாது..

அது கருத்தியல் ஆனால் அதற்கு பெயர் தேடல் கிடையாது..

தேடு முடிவில்லா பாதை கிடைக்கும்...

வைகோ நாயூடு... போராளியும் நானே புரோக்கரும் நானே...


மூன்று மாநிலங்கள் துரத்தியடித்த ஸ்டெர்லைட்டுக்கு கருணாநிதி அனுமதி அளித்து..

ஜெயலலிதா அடிக்கல் நாட்டியதில் இருந்தே மக்கள் தீவிரமாகப் போராடி வந்துள்ளனர்..

வழக்குரைஞர் வி.பிரகாஷ் என்பவர் தொடுத்த வழக்கில் அரசியல் தரகர் வைகோ பிற்பாடு வந்து செருகிக் கொண்டார்.

தமிழகத்தில் அவ்வப்போது போராட்டம் வெடிக்கும் போது தானே கலந்து கொண்டு முதல் வரிசையில் நின்று வாயாலேயே வடை சுட்டு தலைமை தாங்குவது போல காட்டிக் கொள்வார்.

ஊடகங்களும் இவரையே முன்னிலைப்படுத்தும்.

போராடும் மக்கள் சிறிது சோர்வடைந்த்தும் வைகோ பல படங்களில் வரும் யூனியன் லீடர் போல நிர்வாகத்திடம் தனியே டீல் பேசுவார்.

பிறகென்ன.. கமிசன் அவருக்கும் வாக்குறுதி மக்களுக்கும் கிடைக்கும்.

இவ்வாறாக வைகோவின் மகன் வையாபுரி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் 2% பங்குதாரர் ஆனது அனைவருக்கும் தெரியும்.

(வைகோவின் மகன் ஒரு மாவட்டத்திற்கே புகையிலை சப்ளை செய்யும் டொபாக்கோ ஏஜன்ட் என்பதையும் பலர் அறிவீர்கள்).

மேலும் தம்பி ரவிசந்திரனின் மைத்துனன் ஜெகதீஸ் என்பவருக்கு ஸ்டெர்லைட் ஆலைக்கான எரிபொருள் ஏஜென்சியை வைகோ பிடித்துக் கொடுத்துள்ளார் என்பதையும் தற்போது அறிவோமாக.

ஏதோ மதிமுக மட்டும் தான் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருவது போல வைகோவின் எடுப்புகள் ஊடகங்களில் பரப்பிவருகின்றனர்.

அதை யாரும் நம்ப வேண்டாம்...

ஸ்டெர்லைட் பிரச்சனை இழுத்துக் கொண்டே போவதற்கு வைகோ தான் காரணம்...

அரசு - ஊடகம் - துரோகம்...


எங்கே போகரின் இரண்டாம் பாஷாணம்...


தமிழ் மண்ணில் தலைசிறந்த  சித்தர்கள் வந்து போனார்கள் என்பதற்கு அவர்கள் விட்டு சென்ற பாதசுவடுகளாகிய ஒலைச்சுவடிகள் அடையாளமாய் இருக்கின்றன..

இப்படி எத்தனையோ சித்தர்கள் இங்கே வந்து போனாலும்  வந்து போனவர்களில் ஒரு வித்தியாசத்தை தந்து போனவர் போகர்  முனிவர்..

போகர் என்றாலே பாஷாண நினைவு பலருக்கு வரும்..

போகரையும் பாஷாணத்தையும் பற்றி அறிய பலர் முயற்சி செய்து பல நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளிலும் வலைதளத்திலும் போடுவதை பார்க்கிறோம்..

கிராமங்களில் பொதுவான சில கதைகள்  தன் முன்னோர் காலத்தில் நடந்ததாய் சொல்வார்கள்..

தன் வீட்டில் உள்ள முன்னோர்கள் நாகரத்தினத்தை  வைத்திருந்தார்கள் என்ற கதையை சொல்வது போல் போகருடைய விசயத்திலும் ஒரு கதை உருவாகிவிட்டது..

அதாவது போகர் இரு பாஷாணங்களை செய்தார் என்றும்  அதில் ஒன்று தற்போது பழனியிலே சீல் வைக்கப்பட்ட செல்லா சிலையா இருக்கும் முருகர் சிலை.. மருத்துவ குணம் கொண்ட மகத்தான இந்த சிலை..

சித்தவைத்தியத்தில் சிறப்பாய் பேசப்படும்  மருந்துகள், மூலிகைகள், கசாயங்கள் (ஆயுர்வேதம்), யுனானி, என பலதரப்பு மருந்துகள் இருந்தாலும் ரசவாதிகள் என சொல்லப்படும் உயர்தர சித்தர்களால் செய்யப்படும் பாஷாணம்  எல்லாவற்றையும் விட உயர்வானதாய்  வீரியமிக்கதாய் பேசப்படும்..

இப்படி வீரியமிக்க விஷேசமான பாஷாணத்தை கட்டி போகர் பழனி மலையிலே சிலையாய் வைத்து முப்பூ என்ற தன்மையில் ஒப்பு உயர்வு அற்றதாய்  மருத்துவத் தன்மையோடு மகத்தான தன்மைபெற நன்மைபெற வைத்தார் போகர்..

எனவே முதல் சிலையைப் பற்றி எந்த பூடகமும் இல்லை..

சொல்லும் ஊடங்களில், பிரச்சனையே அவரால் எழுப்பபடும் இரண்டாம் பாஷாணம் தான்.

முன்னதை விட  மிக மிக சிறப்புப் பொருந்தியதாக தீர்க்க தரிசனங்களில்  திவ்யமாய் உரைக்கப்பட்டு நிற்கிறது..

இறுதிகால இறையரசு எனும் சித்தராட்சி  இந்த பூமியிலே வர போகரின் தலைமைக் கொண்டு சித்தர்கள் ஒன்று கூடி சித்தர் ஆட்சியை அதாவது இறையரசை இங்கே (தமிழ்நாட்டில்) நிறுவுவார்கள், போகர், கோரக்கர், அகத்தியர்,போன்ற தீர்க்க தரசிகளெல்லாம் நிறையவே சொல்லி நிற்கிறார்கள்...

உலக அரசு உன்னதமாய் ஒரு குடைக்குள் அமையும்..

இறையரசு எனும் சித்தராட்சி சிறப்பாய் தமிழ் மண்ணில் மலரும் என்று சொல்வதில் முதன்மை பெற்று நிற்கிறார் போகர்..

போகரின் சீடர் கோரக்கர் வளமையாய் இக்கருத்தை ஆமோதித்து இறுதி நாள் இறைவனின் நியாய தீர்ப்பு நாளில் என் குருநாதர் போகர் தலைமையில் சித்தர் ஆட்சி மலரும் என தமிழராட்சி தவழும் என சொல்லி நிற்கிறார்..

உலகத்திலே எழுந்து வந்த மார்க்கங்கள் எல்லாம் இதே இறையரசை எடுத்து சொல்லி நிற்கின்றன..

ஒரு மார்கத்தில் இறுதி நாளில்  மோஸஸ் தன் தலைமையில் இறையரசு வருவதாயும் ஒருவர் யகோவா தலைமையில் ஏற்படும் என்றும், இயேசு தலைமையில் ஏற்படும் என்றும், போகர் தலைமையில் ஏற்படும் என்றும்  சொல்லி இறையரசை வர்ணிக்கும் காட்சிகள் எல்லாம் ஒரே காட்சிகளாய் இருப்பதைப் பார்த்து வியப்பாய் இருக்கிறது..

ஆம் மோசேவாகட்டும், எசாயாவாகட்டும், எரேமியாவாகட்டும், எசேக்கியேலாகட்டும், தானியேலாகட்டும், யோவேலாகட்டும், ஆமோஸ், மீக்கா, ஆகாய், மலாக்கி, செக்கரியா, இயேசு, திருவெளிப்பாடு யோவான், பவுல் முகமதுநபி மற்றும் தமிழ் சித்தர்களாகட்டும்  அத்தனை பேரும் ஒரே கருத்தை ஒரே விதமான காட்சிகளை விவரித்து நிற்கின்ற பொழுது, தலைமை தாங்குபவர் மட்டும் பெயர்மாறி நிற்பதை  இங்கு காண முடிகிறது..

இதில் எவர் சொல்வதும் பொய்யில்லை என்றால்  அனைவரும் குறிப்பிடும் நபரும் ஒரே ஒரு ஆன்மாவாகத் தானே இருக்க முடியும்..

எனவே இறுதியில் வரும் அந்த ஒப்பற்ற ஆன்மா கலாச்சார ஓட்டத்தில் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் இறுதியில் முக்கிய ஆளுமையில் வந்து நிற்கிறது..

இப்படி இறுதியில் வரும் ஆன்மா அவரவர் கருத்துபடி, மார்க்கப்படி யாரை வைத்து அடையாளம் காட்டி நின்றாலும், அனைவரும் இறுதியில் வரும்  ஒருவரையே அடையாளம் காட்டி நிற்கிறார்கள்..

இப்படி இறுதியில் வருபவர் தான் மண்ணின் வாசனைப்படி மணக்கும் போகர் எடுக்கும் இறுதி பிறப்பு பாஷாணத்தோடு சம்பந்தபட்டது அல்லவா.. இது ஒருபுறம் இருக்கட்டும்..

இதுகாறும் போகரைப் பற்றி கதையாய் கதைத்து நின்றவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள்..

வைத்திய மார்க்கங்களில் மருந்துகளுக்கு மருந்தின் வீரியம் மடியும் நாள் (expiry date) என்று ஒன்று உண்டு.

அவை "பஸ்பத்திற்கு" ஒரு விதமாய், " கசாயத்திற்கு "ஒருவிதமாய்" இலேகியத்திற்க்கு"  ஒருவிதமாய் இருப்பது போல்  "பாஷாணத்திற்க்கும் " மருந்தின் வீரியம் மடியும் நாள் உண்டு.

ஒரு பாஷாணம் கட்டி செய்து விட்டால் அதன் வீரியம் ஒரு கல்பம் பூராவும் நிற்கும் என்ற கதையைக் கட்டி விடுவதில் கெட்டிகாரரர்களாக இருக்கிறார்கள் அநேகர்.

எப்படிபட்ட நிலையில் செய்த பாஷாணமானாலும்  மிக அதிகபட்சமாக 700வருடங்களுக்கு மேல் இருக்காது.

அதற்கு பிறகு அதன் வீரியம் மடிவதோடு அதுவும் வீணாகி போகும்.

ஏன் புழு பூச்சிகள் கூட வைத்து விடும்.

அப்படியிருக்க போகரின் இரண்டாம் பாஷாணம் இந்த பூமியில் எழுந்து வந்து உலகாளும் என்று சொல்லி திரிபவர்களை பற்றி என்ன சொல்வது, போகர் செய்த" முதல் பாஷாணசிலை வீரியமிழந்து  சிதலமடைந்து  சீல்வைக்கப்பட்டு "அந்த இடத்தை  விட்டு அப்புறபடுத்தி  நகர்த்தி வைத்ததை உலகம் அறியுமல்லவா..

அப்படியிருக்க அதே காலத்தில் செய்யபட்ட இன்னொரு பாஷாண சிலை இப்போது இருந்தால் அதன் வீரியம் மட்டும் எப்படி காலத்தில் ஜீவிக்க முடியும். கொஞ்சமாவது சிந்தித்தார்களா இந்த அப்பாவிகள்.. தேடி நிற்கிறார்கள் இரண்டாம் பாஷாணத்தை..

வீரியமற்ற அந்த இரண்டாம் பாஷாணம் என்ன விடியலை தரபோகிறது என்று சிந்தித்துப் பாருங்கள்..

எனவே இந்த ரகசிய முடிச்சை " போகர் ஒருவரே அவிழ்க்க கூடியவர்..

அப்படியென்றால் போகரின் இறுதி பிறப்பு நிச்சயமாய் இதற்கு விடைச் சொல்லி நிற்கும். 

அப்படியென்றால் மறுபிறப்பெடுக்கும் இரண்டாம் வருகை போகர் தான் எழுப்பி தரமுடியும் இன்னொரு பாஷாணத்தை புதிதாக தன் காலத்தில் இப்போது...

போர் உண்மைகள்...


குடகு...


62 ஆண்டுகள் முன்பு வரை கர்நாடகாவின் பாகமாக இராத பகுதி குடகு.

1956 ல் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது தமிழகத்துடன் இணைய விரும்பிய பகுதி குடகு.

காவிரி உற்பத்தி ஆகும் இடமான தலைக்காவிரி இருக்கும் பகுதி குடகு.

கன்னடரை விட தனித்துவமான தேசிய இனமாக  இருந்தாலும் கர்நாடகாவுடன் சேர்க்கப்பட்டது குடகு.

காவிரிப் பிரச்சனைக்காக பதவியைத் தூக்கியெறிந்த அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி அதற்கு தீ்ர்வாகக் கேட்டது தனி குடகு.

மொழியும் கலாச்சாரமும் அழிந்து கன்னடவர் குடியேற்றத்தையும் ஆதிக்கத்தையும் சந்திக்கும் பகுதி குடகு.

நாளைய தமிழர்நாட்டின் ஒரு மாநிலம் குடகு...

பூகோல பிரளயங்களாலேயே அழிந்து போகட்டும் பைத்தியக்காரக் கூட்டம்...


மதம் மனிதனை மிருகமாக்கும் சாதி மனிதனை சாக்கடையாக்கும்...

நம் உடலில் உயிர் எங்கு உள்ளது?


எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்...

நம் உயிர் நம் தலையின் நடுவில் அதாவது , நம் தலை உச்சிக்கு கீழ் நம் உண்ணாவுக்கு மேல் நம் இருகண்ணும் உள்ளே சேரும் இடத்தில் இருக்கிறது. அது துலங்குவது இரு கண்களில்.

நமது சிரசில் உச்சியில் இருந்து ஒரு நாடி கீழே இறங்குகிறது.

அது நமது கண் காது மூக்கு உள்ளே சேரும் மத்தியில், வாயில் உள் அண்ணாக்குவின் சற்று மேல் வந்து நிலைகொண்டு , அங்கிருந்து இரு நாடியாக பிரிந்து இரு கண்களில் வந்து சேர்கிறது.

இவ்விடத்தை லல்லாடஸ்தானம் , ஆன்ம ஸ்தானம், பத்தாம் வாசல், கடை கண் என்று சித்தர்கள் கூறுவர்.

“உச்சிக்கு கீழ் உண்ணாவுக்கு மேல் அணையா விளக்கு நிதம் எரியுதடி” – சித்தர் பாடல்.”மையமர் கண்டன்” என்று மாணிக்கவாசகரும் தலையின் மத்தியில் உயிர் உள்ளதை கூறிப்பிடுகிறார்...

இது என்னடா உலகததுக்கு வந்த சோதனை...


இது என்னடா உலகததுக்கு வந்த சோதனை...


ஒரிஜினல் வேண்டாம்... டிஜிட்டல் போதும்... வாகன ஓட்டிகள் வயிற்றில் பால் வார்த்த ஹைகோர்ட்...


'இனிமேல், ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் இதர ஆவணங்களைக் கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை'. டிஜிட்டல் முறையில் வைத்திருந்தாலே போதுமானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றம்....

சில மாதங்களுக்கு முன், மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை சார்பில், மாநில அரசுகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், வாகன ஓட்டிகள் கட்டாயம் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் போன்ற ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அதே சுற்றறிக்கையில், டிஜிட்டல் முறையில் ஆவணங்களைச் சேமித்துப் பயன்படுத்தலாம் என்றும், இன்னொரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருந்தது. இதை தமிழக அரசும் நடைமுறைப்படுத்தியது. ஆனால், ”டிஜிட்டல் ஆவணங்களைப் பல இடங்களில் போக்குவரத்து அதிகாரிகள் ஏற்றுக்கொள்வதில்லை” என்று வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தனர்.

இது தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் அனிதா சம்பத் ஆகியோர் அடங்கிய அமர்வு, “இனிமேல் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் இதர ஆவணங்களைக் கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. டிஜிட்டல் முறையில் வைத்திருந்தாலே போதுமானது. அதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

”அதென்ன டிஜிட்டல்?” என்று குழம்ப வேண்டாம். மத்திய அரசு,  ’டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் கீழ், ’டிஜிலாக்கர்’ எனும் செயலியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. கூகுள் பிளே ஸ்டோரில் அந்தச் செயலியை டவுண்லோட் செய்து கொள்ளலாம். டவுண்லோட் செய்ததும், செயலியில் ஆதார் எண்ணைப் பதிவிட்டு இணைக்க வேண்டும். இது கட்டாயம். அதற்குப் பிறகு, டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி. புக் போன்ற ஒரிஜினல் ஆவணங்களை ’ஸ்கேன்’ செய்து, டிஜிலாக்கர் செயலியில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். ஆவணங்கள் சரிபார்ப்புக்கு, அதையே பயன்படுத்திக் கொள்ளலாம்...

விண்ணுலகப் பயணம் மிஃராஜ்...


External factor...


கடந்த பதிவை பார்த்த சிலர் external factor என்றால் வேற்று கிரகவாசியானு கேள்வி எழுப்பி இருந்தாங்க..

என்னுடைய புரிதலின் படி இந்த  external factor என்னவா இருக்கலாம்னு விளக்குறேன்.

மீண்டும் இதில் இருந்து துடங்கவே விரும்புகிறேன் இயற்கை மற்றும் மற்ற உயிர்கள் நிம்மதியாக இவுலகில் வாழவேண்டும் என்றால் ஆறறிவு கொண்ட இந்த மனித இனம் முற்றிலும் அழிக்கப்படவேண்டும்.

இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களையும் அதன் படி நிலைகளையும் உணர்வுகளை வைத்து மட்டுமே பிரிக்க முடியும்.

உதாரணத்திற்கு ஒரு செல் உயிர்களான பாக்டீரியா சில ராசாயினங்களை உணர கூடியவை. ஒளிச்சேர்க்கை உயிரான Euglena என்னும் ஒரு செல் உயிரி வெளிச்சத்தை உணர்ந்து அதை கிரகித்து அதன் மூலம் உணவை உற்பத்தி செய்துகொள்ளும் வல்லமை வாய்ந்தது. இந்த நிலையில் உள்ள உயிர்களை உணர்வின் பால் கீழ் நிலையில் உள்ள உயிர்கள் என வகுக்கலாம். அடுத்தகட்டமாக இந்த உணர்வு படிநிலையில் நாம் தாவரங்களை பார்க்கப்போகிறோம் தாவரங்களுக்கு ரசாயனத்தை உணர்வது, வெளிச்சத்தை உணர்வது, சில தாவரங்களுக்கு தோடு திறன், வேர்கள் மூலம் ஒரு மரம் இன்னொரு மரத்திற்கு தகவல்களை பரிமாற்றிக்கொள்ளும் திறன் என பல சொல்லலாம். புல்லை நீங்கள் வெட்டும் பொது அது ஒரு வித ஹார்மோனை உற்பத்தி செய்து அருகில் இருக்கும் புற்களுக்கு சமிக்கை தருமாம். இதற்க்கு அடுத்தகட்டமாக சிறு பூச்சிகளை எடுத்துக்கொள்வோம், அவற்றிற்கு தோடு திறன், பார்வை, முகர்த்தல், கேட்டல் என பல திறன்கள் நம்மை போல் உண்டு. அதே போல் அடுத்த கட்டமாக விலங்குகள் மற்றும் பறவைகள் இவற்றிற்கும் பூச்சிகளுக்கு இருக்கக்கூடிய அணைத்து திறன்களும் அதை தாண்டிய சில திறன்களை சுற்றத்திற்கு ஏற்றவாறு பரிணமித்து வைத்துள்ளன.

எதையோ கூறவந்து சம்பந்தம் இல்லாததை விளக்குகிறேன் என எண்ணவேண்டாம். உணர்வுகளின் கட்டமைப்பை உணர்ந்தாள் மட்டுமே அந்த External factor பற்றி சிறிது விளக்க முடியும். இப்பொழுது இந்த படிநிலை படி பார்த்தல் ஒரு ஒரு செல் உயிரான பாக்டீரியாவால் அது வாழும் அதே சமூகத்தில் வாழும் ஓர் தாவரத்தை உணரமுடியாது. நீங்கள் இதை தாவரத்தின் அளவையும் ஒரு செல் உயிரின் அளவையும் வைத்து புரிந்து கொள்ள வேண்டாம். பாக்டீரியா அளவிற்கு அந்த தாவரம் இருந்தாலும் அந்த பாக்டீரியாவால் இந்த தாவரத்தை உணரமுடியாது. ஏன் என்றால் அதை உணர கூடிய எந்த விதமான ஒரு உறுப்பும் ஒரு செல் உயிரான பாக்டீரியாவிற்கு கிடையாது. பாக்டீரியாவில் உலகை பொருத்தமட்டும் அதனுடைய உலகில் அதுவே மேல் தட்டு. அதே போல் தாவரங்களால் அதை விட மேம்பட்ட உணர்வுள்ள எந்த ஒரு உயிர்களையும் உணர முடியாது. வெகு  சில மாமிச உண்ணி தாவரங்கள் மட்டுமே பூச்சிகளை உணர்ந்து உணவாக உண்ணும் திறனை கொண்டது. எனவே தாவர உலகை பொறுத்த மட்டும் அதன் உலகில் அதுவே மேல் நிலை. அதாவது தாவரங்கள் அந்த எண்ணத்தில் உள்ளன என கூறவில்லை. அவற்றை பொருத்தமட்டும் தாவரங்கள் மட்டுமே உலகம் மற்றும் அதனுடன் கீழ் நிலையில் உள்ள ஒரு செல் உயிர்களை உணர கூடியது. தாவரங்களுக்கு அது வசிக்கும் அதே உலகில் ஒரு சிங்கம் நடமாடுவது ஓர் பறவை தன மீது கூடு கட்டி இருப்பதையும் உணரும் அளவிற்கு உணர்வுகளை பெறவில்லை. இதே போல் இதற்க்கு மேல் நிலை தான் விலங்குகளும் மனிதனும். பெரிய வித்தியாசமில்லை இந்த மனிதனை விலங்குகளிடம் இருந்து பிரிக்க ஆறறிவை தவிர. இந்த ஆறறிவை தவிர மனித இனமும் மிருக இனமும் ஒரே வகையான உணர்வுகளையே கொண்டுள்ளன. (சொல்லப்போனால் சில மிருகங்கள் மனிதனையும் தாண்டிய பல உணர்வுகளை கொண்டுள்ளன).

எப்படி ஒரு செல் உயிர்க்கு அது வாழும் அதே சுற்றத்தில் இருக்கும் தாவரத்தை உணர உறுப்பு இல்லையோ, எப்படி ஒரு தாவரத்திற்கு அது வாழும் அதே நிலப்பரப்பில் வாழும் விலங்கையும் மனிதனையும் உணர உறுப்பில்லையோ, அதே போல் மனிதனுக்கும் அவன் வாழும் அதே நிலப்பரப்பில்  உள்ள அந்த external_factor ஐ உணரக்கூடிய எந்த ஒரு உறுப்பும் இல்லை என எடுத்துக்கொள்ளலாம். ஆம் ஒரு தாவரத்தின் அருகிலேயே ஒரு மாடு நிற்கும் அந்த தாவரத்தையே அந்த மாடு உண்ணும் ஆனால் அந்த தாவரத்திற்கு மாடை பற்றியும் தெரியாது நாம் தான் இந்த மாட்டின் உணவு என்றும் தெரியாது . அதே போல் நம் அருகிலேயே அந்த external_factor இருந்தாலும் அதன் உருவம் ஒரு ஒரு செல் உயிருக்கும் ஒரு புழுவுக்கும் உள்ள அளவு இருந்தாலும் சரி அதன் அளவு சராசரி மனிதனின் அளவு இருந்தாலும் சரி அதை உணர கூடிய உணர்ச்சி, உடல் உறுப்பு  மாந்தனிடம் இல்லை. ஏன் அந்த external_factor ஐ உணர கூடிய அந்த உறுப்பு நெற்றிக்கனாக இருக்க கூடாது ? என நீங்கள் கேட்கலாம். இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் அது அல்ல இந்த கட்டுரையின் நோக்கம். ஏன் அந்த external_factor இந்த மானுட இனத்தை உருவாக்கியது எதற்கு இந்த ஆறறிவை தந்தது என்பதே. இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம் கீழ் நிலையில் உள்ள உயிரை மேல் நிலையில் உள்ள ஒரு உயிர் தான் உருவாக்கி இருக்க வேண்டுமா ? அனைத்து உயிர்களும் இயற்கையின் சுழற்சியில் தானே அதன் பரிணாம படி நிலையை அடைகின்றன.. அப்புறம் ஏன் மனித இனம் மட்டும் ஓரு external_factor என்னும் மேல் நிலையை சேர்ந்த ஒன்றால் உருவாக்க பட்டது என உளறுகிறாய் என கேட்கலாம்.

இதற்கான பதில், மனித இனம் இயற்கையாக உருவான ஒன்றே அனால் அதன் ஆறறிவு அதற்க்கு சொந்தமல்ல அதை தந்தது தான் அந்த external_factor . இது ஒன்றும் புது விடையம் அல்ல இதே விடையத்தை மனித இனம் இன்று அதற்க்கு கீழ் நிலையில் உள்ள தாவரங்கள், விலங்குகள் என அனைத்திலும் மரபணு மாற்றம் என்ற பெயரில் செய்து வருகிறது. தன்னுடைய வயிற்று மற்றும் முக்கியமாக அறிவு பசியை போக்க இயற்கை தாவிரங்கள் பலவற்றை GMO  என்று கூறி மூல கூறுகளை மாற்றியமைக்கிறது.  GMO கொசுக்கள் கூட உருவாக்கப்பட்டது. மனிதனாகிய மேல் நிலை உயிர்களால் மாற்றியமைக்கப்பட்ட இந்த கீழ் நிலை உயிர்கள் முற்றிலும் இந்த சூழலுக்கு எதிரானவை அதை மாசுபடுத்த கூடியவை. அதே போல் தான் மனித இனமும் ஒரு மேல் நிலை external_factor ஆள் மாற்றியமைக்க பட்டு ஆறறிவு என்னும் விஷம் பொருத்தப்பட்டு இங்கே உலாவ விடப்பட்டுள்ளது.

ரொம்ப simple ஆ சொல்லனும்னா மனித இனமே ஒரு ப்ராய்லர் கோழி போல தான்...