16/04/2021

பேய்களின் திருவிழா...

 


திருவிழாக்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகம்..

இரவு திருவிழாக்களில் முக்கியமானது 'ஹேலோவீன்' என்பது..

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 31 -ந் தேதி இரவு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது..

கோடை முடியும் நேரம், பூமிக்கும் நரகத்துக்கும் இடையே உள்ள தூரம் குறைந்து விடும்.

எனவே பேய் பிசாசுகள் லோக்கல் சிட்டி பஸ்ஸில் பூமிக்கு வந்துவிடும் என்பது பண்டைய செல்டிக் மக்களின் நம்பிக்கை.

டவுன் பஸ் ட்ரிப்பில் சொந்தக்காரப் பேய்களும் வந்துவிடும் என்பது அவர்கள் நம்பிக்கை.

அந்த சொந்தக்காரர்களை தங்கள் வீட்டுக்கு விருந்தினர்களாக கூப்பிட்டு விருந்து வைப்பார்கள்.

கெட்ட ஆவிகளை வாசலிலேயே துரத்தி விடுவார்கள்..

மோசமான பேய்களை போலவே அன்றைக்கு மக்கள் மாறுவேஷம் போட்டுக் கொள்வார்கள்.

அட இது நம்ம ஆளுப்பா என்று கெட்ட ஆவிகள் ஏமாந்து, மனிதர்களை தேடி அடுத்த வீட்டுக்கு போகும்.

அங்கும் இப்படியே மனிதர்கள் வேஷம் போட்டிருப்பார்கள்.

இப்படி ஒவ்வொரு வீடாக அடைந்து ஏமாந்து மீண்டும் நரகத்துக்கே அந்த பேய் போய்விடும்.

அன்று விருந்துக்கு வரும் ஒவ்வொருவரும் டிராகுலா, வேம்பையர் என்று பதறவைக்கும் வேஷத்தில் அலறவைப்பார்கள்.

பூசணிக்காயில் பேய் உருவங்களை செதுக்கி உள்ளே லைட் போட்டு 'திகில் எபக்ட்' கொடுப்பார்கள்.

மண்டை ஓடு கேக், எலும்பு சாக்லேட், ரத்தக்கத்தி என்று இரவு சாப்பாடே மிரட்டலாக இருக்கும்.

ஒரு அறை முழுக்க பிளாஸ்டிக் எலும்புக் கூடுகளை அடுக்கி வைத்திருப்பார்கள்.

செட்டப் கல்லறைகள், நகரும் நிழல் உருவங்கள் என்று ஆவிகளை அலறவைப்பார்கள்.

விருந்து முடிந்ததும் திகில் படங்களை பார்த்து கூட்டமாக பயப்படுவார்கள்.

கன்னிப் பெண்கள் 'ஹேலோவீன்' இரவு அன்று தனியறையில் லைட் எதுவும் போடாமல் கண்ணாடியை பார்த்தால் அதில் எதிர்கால கணவனின் முகம் தெரியுமாம்.

ஒரு வேலை கண்ணாடியில் மண்டை ஓடு தெரிந்தால் அவ்வளவுதானாம்.

திருமணம் எதுவும் நடக்காமலேயே அந்த பெண் இறந்து விடுவாளாம்...

பாஜக மோடி கலாட்டா...

 


குடும்பத்தன்ஸ் பரிதாபங்கள்...

 


மனைவி கோபமாக பேசும் போது தலைவாசலை பார்த்து நின்று கொள்வது நலம்...

ஏதேனும் ஒரு ரூமுக்குள் சிக்கிக் கொண்டால் நிலமை கவலைக்கிடம்...

100% verified with friends...

இதுக்கு தான் டா நானெல்லாம் சிங்களா வே இருக்கேன்...

மது வியாபார அரசும்.. மது பிரியர்களும்...


 

முடி உதிர்தல், இளநரை சரியாக....

 


கரிசலாங்கண்ணி இலையை (200 கிராம்) மையா அரைச்சி, அதோட அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி பதத்துக்கு வந்ததும் இறக்கி வச்சிரணும். வழக்கமா தலைக்கு எண்ணெய் தேய்க்கிற மாதிரி அதை தேய்ச்சிட்டு வந்தா.... முடி உதிர்றது, இளநரை எல்லாம் சரியாகும்.

கரிசலாங்கண்ணி சூரணத்தை கால் ஸ்பூன் எடுத்து, தேன் சேர்த்து சாப்பிட்டாலும் நரை விழுற பிரச்னை சரியாகும்.

மருதாணி இலை 300 கிராம், நல்லெண்ணெய் 1 1/2 லிட்டர், பசும்பால் 700 மில்லி சேர்த்து பதமா காய்ச்சி, தலைக்கு தேய்ச்சிட்டு வந்தா... கூந்தல் நல்லா வளரும். அதோட நரை விழுறதையும் தடுக்கும்...

சாமானிய மக்களை முடக்க திட்டம்...

 


திமுக தெலுங்கர்கள் தமிழர்களை கொலை நாள் இன்று...

 


ஆறு கால் ஆச்சரியம் எறும்பு...

 


நாம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போதோ அல்லது நாம் கவனிக்காமலோ ஒரு சில உணவுத் துகள்கள் கீழே சிந்திவிட்டால், கொஞ்ச நேரத்தில் அங்கு ஒரு எறும்புக் கூட்டமே வந்து சேர்ந்து விடுவதைப் பார்த்திருக்கலாம். இது எப்படி நடக்கிறது? இதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன? எறும்புகளுக்குக் கண்கள் கூட ரொம்பத் தெளிவாகத் தெரியாது.

ஆனால் மோப்ப உணர்வு அதிகம். இது மட்டுமில்லாமல் ஓரிடத்தில் உணவு இருப்பதைப் பார்க்கும் முதல் எறும்பு, அத்துகளின் அருகே சென்று தன் தலையில் உள்ள உணர்ச்சிக் கொம்பு (Antenna) போன்ற உறுப்பால் அதைத் தொட்டுப் பார்க்கிறது. அதன் பிறகு அங்கிருந்து திரும்பிச்செல்லும்போது உடலின் பின்பகுதியிலிருந்து ஃபெரமோன் என்ற வேதிப்பொருளைத் தரையில் கோடுபோல இட்டுக்கொண்டே செல்கிறது. இந்தக்கோடு அதன் கூடு வரை நீளும். இதை மோப்பம் பிடிக்கும் மற்ற எறும்புகளும் அந்தத் தடத்தை பின்பற்றிச் சென்று, உணவு இருக்கும் இடத்தை விரைவாகச் சென்றடைந்து விடுகின்றன.

எறும்புகள் ராணுவ வீரர்களைப் போல எப்போதும் சாரிசாரியாக ஊர்ந்து செல்வதன் மூல ரகசியம் ஃபெரமோன் என்ற வேதிப்பொருள்தான். அந்தக் கோட்டை தவறவிட்டால், வழி தெரியாமல் போய்விடும்.எறும்புகள் போடும் இந்த ஃபெரமோன் பாதை எப்போதும் வளைந்து வளைந்துதான் இருக்கும். இடையே சில இடங்களில் நீர் சொட்டிக்கொண்டிருப்பது போன்ற சிறுசிறு ஆபத்துகள் இருந்தாலும் கூட, உணவு கிடைத்துவிட்டால் எறும்புக் கூட்டம் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாது.இதை நீங்கள் நேரில் பார்க்கும்போது கவனித்திருக்கலாம்.

உணவைச் சேகரித்து வைப்பது எறும்பின் வேலைகளில் மிக முக்கியமானது. ஆனால் இப்படி சேகரித்துவைக்கும் உணவு, மழைக்காலத்தில் பூசனம் பூத்து கெட்டுப்போய் விடாமல் இருக்க அவை ஒரு வேதிப்பொருளை பயன்படுத்துகின்றன. அந்த வேதிப்பொருளும், அதன் இயல்பும் தற்போது கண்டறியப்பட்டு மருந்து தயாரிப்பில், அது பயன்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு எறும்பின் காலனியில் முகப்பில் இருக்கும் காவலாளி எறும்பு, அங்கே வரும் ஒவ்வொரு எறும்பையும் முகர்ந்து பார்த்துவிட்டு, அது தனது குழுவைச் சார்ந்ததா என்று உறுதி செய்த பிறகே, உள்ளே செல்ல அனுமதிக்கும். எறும்புகள் நகர்ந்து செல்லும்போது சில நேரம் ஆண்டெனாவை, மற்றொரு எறும்பின் தலையில் வைத்து, தங்கள் கூட்டத்தைச் சேர்ந்தது தானா என்று பரிசோதிப்பதையும் நீங்கள் பார்த்திருக்கலாம்.

உணவுப் பாதை போடுவது போலவே, ஆபத்து ஏற்படுவதையும் வேறொரு வேதிப்பொருளை வெளியிட்டு சிப்பாய் எறும்புகள் எறும்புக் காலனிக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிடுகின்றன. இதை அறிந்து மற்ற எறும்புகள் தப்பிச் செல்லும். அதேபோல ஆண் எறும்பை இனப்பெருக்கம் செய்ய ஈர்க்கவும் ராணி எறும்புகள் ஒரு வகை ஃபெரமோனை வெளியிடுகின்றன.

இப்படியாக வழிகாட்ட, ஆண் எறும்பை ஈர்க்க, எச்சரிக்கை செய்ய என பல்வேறு செயல்பாடுகளுக்காக எறும்பு வெளியிடும் எல்லா வேதிப்பொருளும் ஃபெரமோன்தான். ஆனால், ஒவ்வொரு செயல்பாட்டுக்கான ஃபெரமோனின் வகையும் வேறுபட்டிருக்கும். இந்த வேறுபாட்டை வைத்தே, மற்ற எறும்புகள் விஷயத்தை புரிந்துகொள்கின்றன. இப்படியாக எறும்புகளின் வாழ்க்கையில் வேதியியல் மிகப்பெரிய பங்காற்றுகின்றது.

இந்தியாவில் 1903இல் பணிபுரிந்த ராணுவ அதிகாரியான கர்னல் பிங்காம் எழுதிய புத்தகம்தான் இந்தியாவில் எறும்புகளைப் பற்றிப் பேசிய முதல் புத்தகம். அதற்குப் பிறகு ஏறக்குறைய நூறாண்டுகள் ஆகியும்கூட, எறும்புகள் பற்றிய விரிவான நூல்கள் அதிகமாக வரவில்லை. 

தமிழகத்தில் நமக்குத் தெரிந்தவை சிவப்பு நிற சிறிய நெருப்பெறும்பு, உருவத்தில் சற்றுப் பெரியதாக இருக்கும். கருப்பு நிற கட்டெறும்பு, மரத்தில் இருக்கும் கருப்பு நிற கட்டெறும்பு, மரத்தில் இருக்கும் வெளிர் சிவப்பு நிற சூவை எறும்பு, சிறிய பிள்ளையார் எறும்பு ஆகிய நான்கு வகைகள்தான். கட்டெறும்பு பெரும்பாலும் மாமரங்களில் அதிகம் இருக்கும்.

சுள்ளெறும்பு என்று அழைக்கப்படும் சிவப்பு எறும்புகளும், கட்டெறும்புகளும் எதிரி என்று கருதுபவர்களைக் கடிக்கும்.அப்போது உடலில் படும் வேதிப்பொருளால் நமக்கு சிறிது நேரம் வலிக்கிறது. அந்த வேதிப்பொருளின் வீரியம் குறையும் வரை வலிக்கும். சாமி எறும்புகள் எனப்படும் கறுப்பு எறும்பு பெரும்பாலும் கடிப்பதில்லை. கூசுவது போல ஓடிச் சென்று விடும். சில நேரம் பளிச்சென்ற நிறம் ஏதுமில்லாமல் சிறியதாக, வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் எறும்புகளைப் பார்த்திருக்கலாம். அவை முழு வளர்ச்சி அடையாத குட்டி எறும்புகள்.

எறும்புப்புற்றில் சேர்த்து வைத்திருந்த தானியங்களை வறுமையால் வாடிய மனிதர்கள் சிலர் எடுத்து, சமைத்து உண்டதாக அகநானூற்றுப் பாடல் ஒன்று கூறுகிறது...

பிராடு பாஜக மோடி அரசின் கலாட்டா...

 


மாரி செல்வராஜ் திமுக உதயநிதியை லெப்ட் ஹேண்டில் டீல் செய்த பொழுது 😁

 


ஏழை எளிய மக்களிடம் வங்கிகள் நடத்திய வசூல் வேட்டை ; ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்...

வங்கிகளில் ஏழை மக்கள் வைத்திருக்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்கத் தேவையில்லாத அடிப்படை வங்கிக் கணக்குகளுக்கு ( பிஎஸ்பிடிஏ ) , குறிப்பிட்ட சேவைகளுக்காக எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது .

கடந்த 5 ஆண்டுகளில் எஸ்பிஐ வங்கி ரூ .300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.இது குறித்து மும்பை ஐஐடி நடத்திய ஆய்வில் அம்பலமாகியுள்ளது .

அந்த ஆய்வு முடிவில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது : 

எஸ்பிஐ வங்கியில் அடிப்படை வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் 4 பணப் பரிமாற்றங்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் ரூ . 17.70 வீதம் கட்டணம் வசூலிக்க வங்கி நிர்வாகம் முடிவெடுத்திருப்பது , ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை .

சேவைக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் விதிப்பதன் மூலமாக கடந்த 2015 முதல் 2020 - ஆம் ஆண்டு வரை அடிப்படை வங்கிக் கணக்கு வைத்திருக்கும் 12 கோடி பேரிடமிருந்து ரூ 300 கோடிக்கும் அதிகமாக எஸ்பிஐ வங்கி வசூலித்துள்ளது .

இந்தியாவின் 2 - ஆவது மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி அடிப்படை வங்கிக் கணக்கு வைத்திருக்கும் 3.9 கோடி வாடிக்கையாளர் களிடமிருந்து அதே கால கட்டத்தில் ரூ .9.9 கோடியை பல்வேறு சேவைகளுக்காக வசூலித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் 2013 - ஆம் ஆண்டு வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே அடிப்படை வங்கி கணக்குகள் மீது கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன 

அதன்படி , அடிப்படை வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்க வங்கிக் கணக்கிலிருந்து கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கிக் கணக்கிலிருந்து மாதத்தில் 4 முறைக்கு மேல் பணம் எடுக்க அனுமதிக்கப்படுகின்றனர் . 

இந்த கூடுதல் பரிமாற்றத்துக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்று வங்கிகள் வாக்குறுதியும் அளிக்கின்றன .

அதோடு , அடிப்படை வங்கி கணக்கில் இடம்பெற்றிருக்கும் வசதிகள் மற்றும் சலுகைகள் குறித்து வங்கிகள் விவரிக்கும்போது , 4 முறை சேவைக் கட்டணம் இன்றி பணம் எடுக்கும் வசதி உள்ளிட்ட இலவச வங்கிச் சேவை அளிக்கப்படும் என்பதோடு , மதிப்புக்கூட்டு வங்கிச் சேவைகளுக்கும் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்றும் வங்கிகள் சார்பில் தெரிவிக்கப்படுகிறது .

அதுபோல , வங்கிக் கணக்கில் 4 பணப் பரிமாற்றத்துக்கு பிறகான பரிமாற்றத்தை , வங்கியின் மதிப்புக்கூட்டு சேவையாகவே ரிசர்வ் வங்கியும் கருத்தில் கொள்கிறது . 

ஆனால் , ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் மற்றும் தனது வாக்குறுதிகளை மீறி , 4 முறைக்குப் பிறகான பணப் பரிமாற்றத்துக்கு மிக அதிக கட்டணத்தை எஸ்பிஐ வங்கி வசூலித்து வருகிறது .

அதாவது என்இஎஃப்டி , ஐஎம்பிஎஸ் , யுபிஐ , பிஹெச்ஐஎம் - யுபிஐ , பண அட்டை உள்ளிட்ட வழிகளிலான டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களுக்கு ரூ .17.70 வீதம் கட்டணம் வசூலிக்கிறது . ரிசர்வ் வங்கி இதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதால் தனியார் வங்கிகளும் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் சேவைக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளன.

ஐடிபிஐ வங்கி அதன் வாடிக்கையாளர்களிடம் 4 முறைக்குப் பிறகான ஒவ்வொரு பணமில்லா டிஜிட்டல் பரிமாற்றத்துக்கும் கடந்த ஜனவரி 1 - ஆம் தேதி முதல் ரூ .20 வீதம் கட்டணம் வசூலித்து வருகிறது . ஏடிஎம் சேவைக் கட்டணமாக ரூ .40 வசூலிக்கிறது .

இந்த வகையில் வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் தனது கடமையிலிருந்து ரிசர்வ் வங்கி தவறி , அவர்களை முறைகேடுகளுக்கு இரையாக்கியுள்ளது என்று மும்பை ஐஐடி ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது...

பிராடு ஜோதிடர் ஷெல்லி கலாட்டா...

 


மது வியாபார அதிமுக அரசின் விழிப்புணர்வு மது...

 


காலகுத்திரம்...

 


பெரியோர்களையும் பெற்றோர்களையும் அடித்து அவமதித்தும், துன்புறுத்தியும் பட்டினி போட்டும் வதைத்த பாவிகள் செல்லும் நரகம் இதுவாகும். 

இங்கு அதே முறையில் அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கபடுவது உறுதி.

அசிபத்திரம்: தெய்வ நிந்தனை செய்தவர்களும் தர்மநெறியைவிட்டு அதர்ம நெறியைப் பின்பற்றியவர்களும் அடையும் நரகம் இது. 

இங்கு பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு அவதிப்படுவார்கள். இனம் புரியாத ஒரு பயம் உண்டாகும்...

முடி உதிர்தல், இளநரை சரியாக....

 


கரிசலாங்கண்ணி இலையை (200 கிராம்) மையா அரைச்சி, அதோட அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி பதத்துக்கு வந்ததும் இறக்கி வச்சிரணும். வழக்கமா தலைக்கு எண்ணெய் தேய்க்கிற மாதிரி அதை தேய்ச்சிட்டு வந்தா.... முடி உதிர்றது, இளநரை எல்லாம் சரியாகும்.

கரிசலாங்கண்ணி சூரணத்தை கால் ஸ்பூன் எடுத்து, தேன் சேர்த்து சாப்பிட்டாலும் நரை விழுற பிரச்னை சரியாகும்.

மருதாணி இலை 300 கிராம், நல்லெண்ணெய் 1 1/2 லிட்டர், பசும்பால் 700 மில்லி சேர்த்து பதமா காய்ச்சி, தலைக்கு தேய்ச்சிட்டு வந்தா... கூந்தல் நல்லா வளரும். அதோட நரை விழுறதையும் தடுக்கும்...

முடியலடா ☹️

 


அட குடிகார டாய்லி அட்மின் என்னடா நியூஸ் இது 🙄

 


ஹனிமூன்...

 


திருமணமான ஜோடிகளுக்கு மிகப்பெரும் இன்ப நிகழ்வாக அமைவது ஹனிமூன் என்கிற தேன்நிலவு தான்.

தம்பதிகள் உல்லாசமாக சில மாதங்களை கழிப்பதே ஹனிமூன்.

ஆரம்ப காலங்களில் ஹனிமூன் கிடையாது. ஹனிமன்த் தான் இருந்துள்ளது.

அதுதான் பின்னாளில் ஹனிமூனாக மாறியதாக கூறுகின்றனர்.

டியூட்டன் என்ற இன மக்கள் திருமணமான தம்பதிகளுக்கு தேனை முப்பது நாட்கள் கொடுப்பார்களாம்.

இதைத்தான் ஹனிமன்த் என்று கூறியுள்ளனர்.

எகிப்து, பாரசீகம், சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளில் தேனுக்கும், திருமணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது.

புதுமண தம்பதிகள் ஒரே கிண்ணத்தில் இருந்து தேன் பருகும் வழக்கம் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் உண்டு.

மணமகள் வீட்டு கதவில் தேனை தெளிப்பது கிரேக்க விவசாயிகளின் வழக்கம்.

ருமேனிய மக்கள் புதுமண பெண்ணின் முகத்திலும், உடலிலும் தேனை தடவிக்கொண்டு முதலிரவை கொண்டாடுவார்கள்.

புகுந்தவீட்டில் அடியெடுத்து வைக்கும் பெண்ணுக்கு ஒரு கோப்பை தேனை பருக கொடுப்பது துருக்கியர் வழக்கம்.

போலந்து நாட்டில் மணப்பெண்ணின் உதட்டில் தேன் தடவி, அதை மணமகனை சுவைக்க வைப்பார்கள்.

பலகாரங்களை தேனில் தொட்டு மணமக்கள் சாப்பிடுவது பால்கன் நாடுகளில் உள்ளமரபு.

ஒரு கோப்பையில் தேனை வைத்துக் கொண்டு மணமகனும் மணமகளும் மாறிமாறி பருகுவது சீனர்கள் வழக்கம்.

இப்படி புதுப்பெண், மாப்பிள்ளைக்கு பல தரப்பட்ட பழக்கங்களை தேனைக் கொண்டே உருவாக்கியுள்ளார்கள்.

எல்லா நாடுகளிலுமே திருமணமான தம்பதிகளுக்கு தேனை கொடுப்பது ஒரு வழக்கமாக இருந்து வந்திருக்கிறது.

அதனால் தான், புதுமண தம்பதிகள் செல்லும் முதல் சுற்றுலாவிற்கு ஹனிமூன் என்று தேனின் பெயரையே வைத்து விட்டார்கள்...

தை 1 தமிழ் புத்தாண்டு...

 


நம் வரலாற்றை சிதைத்து மாற்றி தமிழர்களை குழப்பி அரசியல் செய்து உள்ளார்கள்..

அவர்களின் வேலை தமிழர்களின் வரலாற்று அழிப்பும் , உரிமை பறிப்பும்...

பாஜக மோடியின் முதலாளி அம்பானி வாழ சாமானிய மக்கள் சாகனும்...

 


புளியம்பழ மருத்துவம்...



புளி இரத்தத்தைச் சுண்ட வைக்கும் என்பது ஒரு மூட நம்பிக்கை. இரத்தத்தை முறிக்கக் கூடிய சத்து ஏதும் புளியில் இல்லை.

குமட்டல், வாந்தி ஏற்பட்டால் சிறிதளவு புளியை வாயில் போட்டு நீரை விழுங்கினால் வாந்தி நிற்கும்.

அடிபட்டு இரத்தக்கட்டு ஏற்பட்டால் புளியும், உப்பும் கலந்து அரைத்து வடிகட்டி அடுப்பில் வைத்து தாங்கக்கூடிய சூட்டுடன் பற்றுப் போட்டால் இரத்தக்கட்டு கரைந்துவிடும்.

எகிர் வீக்கம், பல் வலி இவற்றிற்கு சிறிதளவு புளியும் அதே அளவு உப்பும் கலந்து வலியுள்ள இடத்தில் வைத்திருந்து 10 நிமிடம் கழித்து வாயில் வைத்திருந்த புளியை துப்பி வெந்நீரால் வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படி மூன்று வேளையும் செய்தால் பல் வலி குறையும். அந்த உமிழ் நீரை விழுங்கக்கூடாது...

அய்யோக்கிய பயலுங்க...