02/02/2019

பைந்தமிழ்ச் சித்தர் பா.வே. மாணிக்க நாயகர் பிறந்த நாள் 2.2.1871...


தமிழ்நாட்டில் தமிழ்ப்பல்கலைக் கழகம் நிறுவப்படவேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்தவர் ஒரு கட்டிடப் பொறியாளர் என்பது பலரையும் வியக்க வைக்கும். புகைப்படம் எடுத்தல், ஓவியம் வரைதல், தோட்டக் கலை,  குதிரையேற்றம், தையற்கலை, மோட்டார் வண்டி பழுது பார்த்தல் ஆகியவற்றில் பல்கலை வித்தகராக ஒருவர் திகழ்ந்தார். அவர் வேறு யாருமல்ல, தமிழறிஞர் என்று போற்றப்படும் பா.வே. மாணிக்க நாயக்கர் ஆவார்.

இவர் சேலம் மாவட்டம் பாகல்பட்டி என்னும் சிற்றூரில் 1871-ம் ஆண்டு பிப்ரவரித் திங்கள்  2-ஆம் நாள் பாகல்பட்டி சமீன் குடும்பத்தைச் சேர்ந்த வேங்கடசாமி் - முத்தம்மை இணையருக்கு மகனாகப் பிறந்தார்.

இவருக்குப் பெற்றோர் மாணிக்கம் என்று பெயரிட்டனர். பிற்காலத்தில் இவர் பா.வே.மாணிக்க நாயக்கர் என்று அழைக்கப்பட்டார். " பா" என்பது பாகல்பட்டி ஊர் பெயரையும்,  " வே" என்பது தந்தை பெயரையும் குறிக்கும். இவரின் பெயருக்கு பின்னால் இருக்கும் "நாயக்கர்" என்ற பட்டம் சாதியை குறிப்பது அல்ல. இவரின் தாய்மொழி தமிழ். இவரின் முன்னோர்கள் விசயநகரப் பேரரசின் படைப்பிரிவில்  பணியாற்றி வந்ததால், பெயருக்குப் பின்னால்  "நாயக்கர்" எனும் பின்னொட்டை பயன்படுத்தி வந்தனர். இவரும் முன்னோர் மரபை பின்பற்றி பெயருக்கு பின்னால் " நாயக்கர்" என்று சேர்த்து கொண்டார். நாயகர்- என்ற தமிழ்ச் சொல்லே நாயக் , நாயக்கர், என்று பிறமொழிகளில் வந்தது. நாயகர் சொல்லுக்கு தலைவர் என்று பொருள். இனி அவரை கட்டுரையில் 'மாணிக்க நாயகர்' என்றே அழைப்போம்.

பாகல்பட்டியில் உள்ள ஒரு திண்ணைப் பள்ளியில் மணலில் எழுதிப் பழகி வந்தார் மாணிக்கம். அப்போது சோதிடன் ஒருவன் பன்னிரண்டு வயது வரை குழந்தையை வெளியில் அனுப்பினால் உயிருக்கு ஆபத்து என்று கூறிடவே, இதனை நம்பிய பெற்றோர் வீட்டிலேயே மாணிக்கத்திற்கு கல்வி புகட்டி வந்தனர்.

பதிமூன்றாம் வயதில் சேலத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் மாணிக்கம் சேர்க்கப்பட்டார். அந்த இளம்வயதில் தமிழில் கவிபாடும் திறனை வளர்த்துக் கொண்டார். பின்னர் சேலம் கல்லூரியில் எப்ஃஏ முடித்துவிட்டு, 1886இல் சென்னை பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். இவரின் குடும்பம் ஜமீன் குடும்பம் என்ற போதிலும், வறுமையில் வாடியது. அப்போது மாணிக்கத்தின் கல்வி கற்கும் திறனை உணர்ந்த இரா.முனுசாமி நாயுடு என்பவர் இவரின் கல்விச் செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்டார்.

பொறியியல் படிப்பில் மாநிலத்திலேயே முதல் மாணக்கராக தேர்ச்சி பெற்றார். கல்லூரி நிர்வாகம் இவருக்குத் தங்கம் பதக்கம் அணிவித்து கெளரவித்தது. 1896ஆம் ஆண்டில் இவருக்கு
பொதுப்பணித்துறையில் வேலை கிடைத்தது. பொறியியல் பணியில் இவர் சிறந்து விளங்கியதால் அடுத்தடுத்து பதவி உயர்வுகள் தரப்பட்டன. உதவிப் பொறியாளர், செயற் பொறியாளர், மேற்பார்வை பொறியாளர் என்று பதவி உயர்வு பெற்ற இவர் சேலம், கரூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, குண்டூர், பெஜவாடா, வால்டேர் ஆகிய ஊர்களில் பணியாற்றினார்.

சேலம் மாவட்டம் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மேட்டூர் அணை இடத் தெரிவிலும், சென்னை பூண்டி நீர்த் தேக்கத் திட்டத்திலும் இவரின் பங்கு முதன்மையானது.

1912ஆம் ஆண்டு மாணிக்க நாயகர் திருச்சியில் பணியாற்றிக் கொண்டிருந்த போது வடநாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றார். அப்போது, அவரின் நண்பரும், உறவினருமான நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் அவர்களை உடன் அழைத்துச் சென்றார்.  அப்போது  தில்லியில்  ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் முடிசூட்டு விழா நடைபெற்றது. அந்நிகழ்வில் ஓவியத்தில் சிறந்து விளங்கிய வெ.இராமலிங்கனார் அவர்கள் மன்னரின் உருவப்படத்தை வரைந்து தந்ததோடு, தங்கப் பதக்கமும் பெற்றார். இதற்கு மாணிக்க நாயகரே முழுக் காரணம்.

1913இல் மாணிக்க நாயகர் சட்டக் கல்வி பயில இங்கிலாந்து சென்றார். அத்தோடு, அங்குள்ள தொழில் நுட்பப் பள்ளியில் காரை கட்டிட வேலை குறித்த ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார்.  அதில் கட்டுமான பணிக்கு உதவும் 500 
கூட்டுக் கணக்குகளை ஒரே நொடியில் கண்டறியும் 'கால்குலோகிராப்'
( calculograph) கணக்கு முறையை அறிவித்தார். இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

மாணிக்க நாயகர் தமது பணியின் இடையே கிடைத்த ஓய்வு நேரங்களிலும், நீண்ட கால விடுப்பு காலங்களிலும் தமிழுக்கு  ஆற்றிய தொண்டு அளவிடற்கரியது. மாணிக்க நாயகர் அவர்கள் மறைமலையடிகள் முன்னெடுத்த தனித்தமிழ் இயக்கக் கொள்கையில் பற்றுறுதியோடு விளங்கினார். மறைமலை அடிகள் இவரை தம் நாட்குறிப்பில், "இவர் ஓர் தனித்திறமார் பேரரறிஞர் (மேதை)" என்று குறிப்பிட்டுப் பாராட்டினார்.

தமிழ் இலக்கியம், தமிழ் வரலாறு, மொழியியல், அறிவியல் தமிழ்ச் சொற்கள், கணக்கியல் ஆகிய துறைகளில் தமது ஆய்வின் மூலம் பல உண்மைகளைக் கண்டறிந்து வெளியிட்டார்.

தொன்மையும், தெய்வத்தன்மையும் கொண்ட மொழி தமிழே என்றும், தமிழால் உலக மொழிகளை எழுதவும் முடியும், எழுதிப் படிக்கவும் முடியும். உலகில் தோன்றிய அனைத்துக் கலைகளையும்  தமிழில் எழுதவோ, எழுதி அறியவோ முடியும் என்பதே மாணிக்க நாயகர் வந்தடைந்த முடிவாகும்.

1917இல் சென்னையில் நடைபெற்ற தென்னிந்தியக் கழகத்தின ஆண்டு விழாவில் தமிழ் எழுத்துகளின் அமைப்பு முறைகளை விளக்கும் " தமிழ் எழுத்துகளின் நுண்மை விளக்கம்" ( The Tamil Alphabet its Mystic Aspect )எனும் தலைப்பில் உரையாற்றினார். இதில் உயிர் எழுத்துகளான பன்னிரெண்டு எழுத்துகளில் குறில் எழுத்தான 'ஒ'  எழுத்து சிறப்பானது என்றும், அதுவே எல்லா எழுத்துகளுக்கும் மூல எழுத்தும் என்றார்.  இதற்கு திருமூலரின்  "ஒமென்னும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி ஒமெனும்" என்று தொடங்கும் திருமந்திரப் பாடலை சான்று காட்டினார்.  தமிழ் எழுத்துகளில் தாம் கண்ட மறை பொருள் கொள்கை நிலைப்பாட்டை யாவரும் ஏற்க வேண்டும் என்று அறுதியிட்டு கூறவில்லை என்பதையும் தெளிவு படுத்தினார்.

மேலும், அவர் தமிழ் எழுத்துகளை ஒலியியல் (phonetics) என்றும், வடிவியல் (Form) என்றும் வகைப்படுத்தினார். ஒலி உச்சரிப்பை படித்தவர்கள்  தவறாகவும், கல்வி பயிலாத மக்கள் சரியாகவும் பயன்படுத்துவதாக கூறியதோடு, சென்னை பல்கலைக் கழகத் தமிழ் அகராதியில் தமிழ் உச்சரிப்பை ஆங்கில எழுத்துகளில் அச்சிட்டு இருப்பதை கண்டித்துப் பேசினார்.

எடுத்துக் காட்டாக, F, S - என்ற இரண்டு எழுத்திற்கு ஒலியையும், வடிவத்தையும் உருவாக்க இயலும். இதனை ஃபோர் - Four, ஃபவ்- Five என்றும், ஃசிக்ஃச் -Six, ஃசெவன் - Seven என்றும் எழுதுவதன் மூலம் வேறு அயல்மொழி எழுத்து வடிவங்களையும், ஒலிகளையும் தமிழில் கொண்டு வர முடியும் என்றார்.

"அறிவியல் தமிழ்ச் சொற்களின் அகராதி" என்ற தலைப்பில் இவரது தொகுப்புகள் சென்னை மறைமலையடிகள் நூலகத்தில் இன்றும் உள்ளன.

மாணிக்க நாயகர் தாம் நிகழ்த்திய சொற்பொழிவுகளை ஆங்கிலத்தில் கட்டுரைகளாக எழுதி வெளியிட்டார். அதில் முதன்மையாக மூன்று கட்டுரைகளை குறிப்பிடலாம். இக்கட்டுரைகள் அக் கால மெய்யியல் அறிஞர்களிடமும், மொழியியல் அறிஞர்களிடமும் பெருந்தாக்கத்தை உண்டாக்கின. முதலிரண்டும் மெய்யியல் தொடர்பானது. அடுத்தது தமிழ் ஒலி இலக்கணம் பற்றியது. அது பின்வருமாறு:

1. The Tamil Alphabet and it's Mystic
2. The Evolution of Intellect in Co- ordination with God
3. Tamil Phonetics

2.10.1920இல் சேலம் நகராட்சி கல்லூரி மண்டபத்தில் "தமிழகம்" எனும் தலைப்பில் "இலெமூரியக் கண்டம்" குறித்த மாணிக்க நாயகரின் உரை அறிவியல் நோக்கோடு இருந்தது.

 மண்ணுலகம் தொடக்கத்தில் நெருப்பு உருண்டையாக இருந்ததென்றும், பின்னர் பூமியின் நடுக்கோட்டுப் பகுதியே முதலில் குளிர்ந்ததென்றும், அந்த குளிர்ந்த பகுதியில்தான் தமிழகம் அமைந்திருந்ததாகவும், அதன் தெற்கில் இருந்த பெயரே இலெமூரியா என்றும் குறிப்பிட்டு விட்டு, அது எப்படி கடலில் மூழ்கியது என்பதை பின்வருமாறு விளக்குகிறார்;

"ஆஸ்திரேலியா ஒரு விந்தையான நாடு. உலகின் மற்ற நிலப்பகுதியில் இருந்து அது முற்றிலும் மாறுபட்டது. இங்குள்ள தாவரங்கள், விணைப்பறவை, சுவர்க்கப் பறவை, ஏமு, கங்காரு முதலிய விலங்குகள் வேறெங்கும் காணப்படாதவை.

"ஆகவே ஆஸ்திரேலியா தொடக்கத்தில் நமது நில உலகத்துடன் சார்பு பெற்றிராத ஒரு நில உருண்டை என்பதே. இது ஒரு விண் வீழ் மீன் ( வானிலிருந்து விழுந்த பெரிய எரிகல்) இது இருவகை இயக்த்துடன் (1) தன்னைத்தானே பூமி சுற்றுதல், (2) கதிரவனன சுற்றி வருதல், கூடிய உலகின் மீது வீழ்ந்த போதுதான் இலெமூரியா கடலில் மூழ்கியது. அப்போதுதான், சிந்து கங்கைச் சமவெளி, இமயமலை, மத்திய ஆசியா முதலிய நிலப்பகுதிகள் வெளிக் கிளம்பின."

ஆஸ்திரேலியா விண்ணிலிருந்து தென்கடலில் விழுந்த ஒரு அயல்கோள் என்பதே அவரின் கருத்தாகும். மேலும், இலெமூரியா கடல் கொள்ளப்பட்ட போது அங்கு வாழ்ந்த மக்கள் வடதிசை நோக்கிச் சென்றதாக தமது உரையில் குறிப்பிடுகிறார். தற்போது இலெமூரியக் கண்டம் பற்றி விரிவான ஆய்வுகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் 90 ஆண்டுகளுக்கு முன்பே மாணிக்க நாயகர் கூறியிருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

1923இல் ஆண்டு மு.இராகவையங்கார் எழுதிய "தொல்காப்பிய பொருளதிகார ஆராய்ச்சி" நூலினை மதுரை தமிழ்ச்சங்கம்  வெளியிட்டது.  இந்த நூலினைப் படித்த மாணிக்க நாயகருக்கு பல்வேறு ஐயங்கள் எழுந்தன. இவர் தாம் பணியாற்றி வந்த பெர்காம்பூரில் (ஒடிசா) இருந்து நான்கு கடிங்கள் எழுதினார். இவற்றுக்கு  மு.இராகவையங்கார் இரண்டு கடிதங்கள் வாயிலாக வினா வகையில்  பதில் எழுதினார்.  இந்த வினா தொடர்பாக நா.மு.வேங்கட சாமி நாட்டாரும் மாணிக்க நாயகருக்கு இரண்டு கடிதங்கள் எழுதினார்.

தொல்காப்பியர் கால மறை என்பது வடமொழி கலவாத தூய தமிழ் மறை என்பதே மாணிக்க நாயகர் எழுப்பிய வினாவின் கருத்தாகும். தொல்காப்பிய காலத்திற்கு முற்பட்டே வடமொழியும், தமிழும் கலந்து வந்துள்ளது என்பதே மு.இராகவையங்கார் தந்த விடையின் கருத்தாகும்.

மாணிக்க நாயகர் எழுதிய கடிதங்களைப் படிப்போருக்கு தொல்காப்பியத்தில் அவருக்கிருந்த ஈடுபாட்டை உணர்த்தும். அதனால்தான் என்னவோ, திரு.வி.க. இவரைப்பற்றி கூறுகிற போது, "தொல்காப்பிய கடலை நாளும் கடைவார்" என்றார்.

மூவரும் எழுதிய எட்டு கடிதங்களையும் தொகுத்து "தமிழ்வகைத் தொடர் - தொல்காப்பிய ஆராய்ச்சி" என்னும் பெயரில் 1924 இல் தமது சொந்தச் செலவில் மாணிக்க நாயகரே நூலாக வெளியிட்டார்.

1927ஆம் ஆண்டு சென்னை இராயப்பேட்டை பால சுப்பிரமணிய பக்தசபை ஆண்டு விழாவில் மாணிக்க நாயகர் "தமிழ் அறிவியல் சொற்கள்" எனும் தலைப்பில் உரையாற்றினார். இக்கூட்டத்திற்கு கா.சுப்பிரமணிய பிள்ளை தலைமை தாங்கினார். அக் கூட்டத்தில், " தமிழிலேயே அளவிறந்ந சொற்கள் இருக்கின்றன. தமிழ் இயற்கை மொழி. செயற்கை மொழிகளை இயற்கை மொழிகளோடு சேர்ப்பதால் தமிழ்மொழி தனது இயற்கை வளமிழந்து இறந்து விடும். தமிழ்மொழி்யானது, வடமொழி, ஆங்கில மொழி முதலியவற்றால் கலப்புற்றுக் காணப்படுவது பெரிதும் வருந்தத் தக்கதாகின்றது . இதனை நீக்கவே இச்சொற்பொழிவை ஈண்டு பேச எடுத்துக் கொண்டேன்" என்றார்.

தமிழ் அறிவியல் நூல்களில் வடசொல் கலப்பு கூடவே கூடாது என்றும், அது தெளிந்த நீருடைக் குட்டத்தில் (குளத்தில்) எருமைகளை ஓட்டிக் கலக்கிச் சேறாவதற்கு ஒப்பாகும் என்று அழுத்தந் திருத்தமாக இரண்டு மணிநேரம் பேசினார்.

ஆங்கிலேயர்கள் தங்கள் மொழியில் தமிழ்ச்சொற்களை பயன்படுத்தியதையும், அது உருமாற்றம் பெற்று இவ்வாறாக,
அலகை- ஆலோ, இஞ்சி- ஜிஞ்சர், முருங்கை- மொருங்கி, ஒதிய மரம்- ஒதினா, ஆடாதோடை- ஆடாதோடாவாசிகா, மாங்காய்- மேங்கோ என்று அழைக்கப்பட்டு வருவதையும் எடுத்துக் காட்டினார்.

மாணிக்க நாயகர் எழுதிய பெரும்பாலான  ஆங்கிலக் கட்டுரைகளையும், தமிழ்ச் சொற்பொழிவுகளையும்  சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடான 'செந்தமிழ்ச் செல்வி' ஏடு வெளியிட்டது.

இவரது உரைகளை தமிழாக்கம் செய்தவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்
காழி.சிவ.கண்ணுசாமிப் பிள்ளை,
க.ப.சந்தோசம் ஆகியோர் ஆவார். நீதிக்கட்சி ஆதரவாளராகவும் மாணிக்க நாயகர் விளங்கியதால், அவரின் பல ஆய்வுக் கட்டுரைகளை "ஜஸ்டிஸ்" ஏடு வெளியிட்டது.

மாணிக்க நாயகர் பிராமணீய மத, மூடநம்பிக்கை கருத்துகளை எப்போதும் எதிர்த்துப் பேசுபவர். அது சமய நூல்களில் வெளிப்படும் போதும் எதிர்க்கத் தயங்காதவர். கம்ப இராமாயாணத்தை மிகச் சிறந்த தமிழிலக்கிய நூலாகக் கருதினாலும், அது ஆரியர்களுக்கு ஏற்றம் தரும்  நூலாகவே கருதினார்.

1919ஆம் ஆண்டு குன்னூர் ஆனந்தாஸ்ரமம் மகரிசி சிவத்தியானாந்த சுவாமிகள் வால்மீகி ராமாயணத்தில் இருந்து கம்பன் பிறழ்ந்து நிற்பதை குறிப்பிட்டு கடிதம் எழுதினார். அதுமுதலே இராமயண ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபாடு காட்டினார். வால்மீகியின் நூலில் காட்டும் ஆரிய ஒழுக்கத்திற்கும், கம்பன் காட்டும் மக்கள் ஒழுக்கத்திற்கும் வேறுபாடு இருப்பதை உணர்ந்ததால் கடும் எதிப்பைக் காட்டினார்.

1931இல் சென்னை பல்லாவரம் பொதுநிலைக் கழகத்தில் மறைமலையடிகள் முன்னிலையில் "கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும்" என்ற தலைப்பில் மாணிக்க நாயகர் உரை நிகழ்த்தினார். அது பின்னர் நூலாகவும் வெளி வந்தது.

பெரியாரும், அண்ணாவும் கம்பராமாயணத்தை எதிர்ப்பதற்கு முன்பே எதிர்த்தவர் மாணிக்க நாயகர். பெரியாரும் கூட  இவரிடமிருந்தே இராமாயண எதிர்ப்பை கற்றுக் கொண்டார்.  மாணிக்க நாயகரும் பெரியாரின் நெருங்கிய நண்பர்கள். ஈரோட்டில் வெ.இராமலிங்கனாரும், பெரியாரும் மாணிக்க நாயகரை சந்தித்து உரையாடுவது வழக்கம். அப்போது மாணிக்க நாயகர்  ராவணனை உயர்த்திப் பிடித்து "ராவாயாணம்" பேசுவதை பெரியார் ஆர்வத்தோடு கேட்டதாக வெ. இராமலிங்கனார் தாம் எழுதிய 'என்கதை' நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மாணிக்க நாயகர் இறக்கும்வரை தமிழுக்கு உழைப்பதை நிறுத்திக் கொள்ள வில்லை. 1931ஆம் ஆண்டு திசம்பரில்  சென்னை திருமயிலை சன்மார்க்க சகோதரத்துவ சங்க விழாவில் "மொழி முதற் தமிழர் கடவுட் கொள்கை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்த இருந்தார். அவர்உடல்நலம் குன்றி வரமுடியாமல் போனதால் மகன் குணா மாணிக்கம் உரையைப் படித்தார்.

மொழி முதல் தமிழர் தமது கடவுள் கொள்கையை ஏடுகளில் எழுதவில்லை என்றும்,  தமிழ்மொழி அமைப்பிலே கடவுள் கொள்கை இருப்பதாகவும், கல்லிலோ, மண்ணிலோ தமிழர் வழிபாடு நடத்தவில்லை என்றும், தொல் காப்பியம் கூறுகின்ற  கொடிநிலை, கந்தழி, வள்ளி இந்த மூன்றிலும் இறைவன் உருவமற்று அருவமாக இருப்பதாகவும் உரையில் வாசிக்கப்பட்டது. இதிலிருந்து இறுதிக் காலத்தில் அவரின் பழைய உருவ வழிபாட்டு நம்பிக்கையிலிருந்து விடுபட்டதைக் காணலாம்.

தம் வாழ்வின் இறுதிக்காலத்தில்  மாணிக்க நாயகர் சென்னையில் உள்ள தமது மாளிகையில்தான் ஓய்வெடுத்து வந்தார்.  ஒருநாள் தமது சிற்றுந்தை பழுதுபார்க்கும் போது அதன் எஞ்சின் சூட்டினால் காலில் புண் ஏற்பட்டது. சர்க்கரையும், குருதி அழுத்தமும் கூடிய நிலையில் புண் ஆறாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் தமது அறுபதாம் வயதில் 25.12.1931 அன்று காலமானார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது நினைவிடத்தில் எழுதப்பட்ட கடைசி வாக்கியம் பின்வருமாறு:

"மண்ணில் மறைந்தாலும் மாணிக்கம் தன்னொளி குன்றாது
காற்றில் கலந்தாலும் கவின்மலர் தன் மணம் மாறாது"

மாணிக்க நாயகரின் தமிழ்த் தொண்டினை தலைவணங்கிப் போற்றுவோம்.

நன்றி:

1. பா.வே. மாணிக்க நாயக்கர்
- பா.அன்பரசு.

2. என்கதை - நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை.

3. தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள்
- குன்றக்குடி பெரியபெருமாள்.

4. தனித்தமிழ் இயக்கப் புரவலர் பா.வே.மாணிக்க நாயக்கர்
-க.திருநாவுக்கரசு.
தனித்தமிழியக்க நூற்றாண்டு விழா
மலரில் எழுதியது (2016).

கட்டுரை வந்த இதழ்
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்
சனவரி 16-31 (2018)...

இதையெல்லாம் உணர்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்...


திராவிடம் - ஆரியம் கூட்டுச் சதிகள்...




இப்படி தான் கடந்த 50 ஆண்டுகளாக நம் வேலைகளை பரித்து.. நம்மை வெளிநாட்டில் பிச்சை எடுக்க வைத்து... நம் வளங்களை கொள்ளை அடிக்கின்றனர்...

விழித்துக்கொள் தமிழினமே...

ஆரியத்தையும் திராவிடத்தையும் செருப்பால் அடித்து விரட்டு...

தமிழர்களுக்கு... தமிழ் தேசியம் மட்டுமே தீர்வு...

Make Birthday Song With ur Name...


https://youtu.be/cqe0v05rdfw

Subscribe the channel for more tips...

33 எண்ணின் இரகசியம்...


நாவல் பழம் (நவ்வா பழம்)...


நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.

நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.

அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.

தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.

மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.

நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்., எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில் அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்...

வயிற்று வலி குணமாக...


கண்ணீர் சில அரிய தகவல்கள்...


பொதுவாக உடலில் காயம் பட்டக் குழந்தைகள் அழுவதால், அவர்களது காயம் விரைவில் ஆறும் என்று கூறினால் நம்புவீர்களா?

ஆம், நிச்சயமாக, அழாத குழந்தைகளை விட, அழும் குழந்தைகளின் காயம் விரைவில் ஆறுவது அறிவியல் உண்மைதான். இதற்குக் காரணமாக அமைவது கண்ணீ ரில் உள்ள கிருமிநாசினி.

மனிதர்களின் கண்ணீரில் ஒரே ஒரு துளியை எடுத்து 6 ஆயிரம் துளி தண்ணீருடன் கலந்தால் கூட அந்த கலப்பு நீர் நூற்றுக்கணக்கான நோய்க்கிருமிகளைக் கொல்லும் சக்தி கொண்ட கிருமி நாசினியாகவே இருக்கும்.

லைனோசம் என்ற ஒரு வகை இரசாயனம் மனிதர்களின் கண்ணீரில் ஏராளமாய் இருக்கிறது. இதுவே கிருமி நாசினியாக செயல்படுகிறது.

இனி காயம் பட்ட குழந்தைகள் அழுதால் அதற்காக அவர்களைத் திட்ட வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்காக அழச்சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள்.

மேலும் பெண்களின்  கண்ணீர் பற்றிய மேலும் சில தகவல்கள்...

ஆண்களின் பாலியல் உணர்வினை அடங்கச் செய்யும் சக்தி பெண்களின் கண்ணீருக்கு உண்டு.

ஆண்களின் பாலியல் உணர்வினை அடங்கச் செய்யும் சக்தி பெண்களின் கண்ணீருக்கு உள்ளதாக இசுரேலிய வீசு(ஸ்)மான் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவொன்று தமது ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளது.

பெண்களின் கண்ணீரில் அடங்கியுள்ள சில வேதியற் பொருட்களே இதற்கான காரணமென அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை எலிகள் போன்ற சில உயிரினங்கள் கண்ணீரின் மூலம் இரசாயன ரீதியாக தொடர்பாடலில் ஈடுபடுவதாகவும், குறிப்பாக ஆண் எலிகளின் கண்ணீரானது ஒருவகை புரதத்தினை கொண்டுள்ளதாகவும் இதுபெண் எலிகளை புணர்ச்சியில் ஈடுபடுவதற்குத் தூண்டுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது பெண்களின் கண்ணீரின் மணமானது அவர்களை ஆண்களிடத்தில் கவர்ச்சி அற்றவர்களாக உணர வைத்ததாகவும், ஆண்களின் இதயத்துடிப்பு வீதம், தோலின் வெப்பம், தெசு(ஸ்)தெசு(ஸ்)தரோன் சுரப்பு வீதம் ஆகிய வற்றைக் குறைத்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுவாக ஆண்களுடைய மூளையின் குறிப்பிட்ட சில பகுதிகளான கை(ஹை)ப்போதலமசு(ஸ்), பியுசிபோர்ம் ஜயிரசு(ஸ்) ஆகியவை காம உணர்வின் போது தூண்டப்படுவதாகவும், ஆனால் பெண்களின் கண்ணீரை நுகர்ந்தபோது மூளையின் இப்பகுதி நரம்புகளின் செயற்பாடுகள் குறைவடைந்ததாகவும் அவர்கள் தங்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் இன்னும் பல ஆய்வுகள் நடத்த வேண்டியுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

பெண்களின் கண்ணீர் வேசமா இல்லை ஆயுதமா?

கண்ணீர் என்பது ஒரு மனிதன் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படும் போதும், இயலாமை எனும் உணர்வானது ஒருவனிடத்தேவருகின்ற போதும் தான் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது என்று கூறுகிறார்கள். கண்ணீரை ஆயுதமாகப் பயன்படுத்துவதில் பெண்கள் வல்லவர்கள் என்று ஆய்வாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். நாம் சிறு பிள்ளையாக இருக்கும் போது ‘எமக்குப் பிடித்த ஒரு பொருளை வாங்கித் தரவில்லை என்றால்’ கூப்பாடு போட்டு அழுது, தரையில் விழுந்து கத்திக் குழறித்தான் எமக்குப் பிடித்தமான பொருளைக் கேட்டு வாங்குவோம்.

ஆனால் ஒரு சில வீடுகளில் ‘இந்தச் செயலுக்கு இடங்கொடுக்க மாட்டார்கள்.
அழுத பிள்ளை பால் குடிக்காது எனும் சான்றோர் வாக்கினைக் காரணங்காட்டி, ‘இன்னைக்கு ஒருவாட்டி இவன் அழும் போது, அவனது கோரிக்கைக்கு நாம செவி சாய்த்தால், தொடர்ந்தும் அழுதுகிட்டே இருப்பான்.

’அழுது மிரட்டி இடங்கண்டு கொண்டான்’ என்று ஏசி, அழுகின்ற பிள்ளையைக் கவனிக்காது விட்டு விடுவார்கள்.

மேற்படி சம்பவ விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கின்ற போது, எமக்குரிய தேவைகள் நிறைவேற்றப்படாத போது சிறு வயதில் அழுகையினை ஆயுதமாக்கியிருக்கிறோம். ஆனால் பெண்களின் அழுகை கொஞ்சம் வித்தியாசமானது. பாடசாலை படிக்கும் போது, சக நண்பர்களின் கேலி – கிண்டல் பேச்சுக்கள் மூலமாக ஒருவன் அழுகின்ற போது, ‘ஏன் பொட்டைப் புள்ள மாதிரி அழுதுகிட்டிருக்காய்’ என்று கேலி பண்ணிச் சக நண்பர்கள் கிணடல் பண்ணுவார்கள்.

சில பெண்கள் அழுகை மூலம் தமக்குரிய காரியங்களைச் சாதகமாக நிறைவேற்றவும் அழுகையினை ஆயுதமாகப் பிரயோகிக்கிறார்கள். முதலில் கணவனைக் கொஞ்சிக் குலாவி ‘என் அத்தானெல்லே, என் மாமாவெல்லே, பக்கத்து வீட்டுப் பெண் புதிதாக வந்திருக்கும் புடவை வாங்கிக் கட்டியிருக்கா’ அதே மாதிரிப் புடவை ஒன்னு எனக்கு வாங்கிக் கொடுக்க முடியுமா’ என்று கேட்டுப் பார்ப்பார்கள். இன்றைய கால கட்டத்தில் பெண்களும் ஆண்களுக்குச் சரி சமனாக வேலை செய்யப் பழகினாலும், கணவனிடம் அடிபட்டு, அழுகை மூலம் சாதித்து வாங்குவதில் ஒரு சுகம் இருக்கிறதோ எனக் கருதுகிறார்களோ தெரியவில்லை.

கணவன் கொஞ்சம் மசிந்து கொடுக்கா விட்டால்...

‘நீங்களும் தான் இருக்கியளே, உங்களைக் கலியாணம் கட்டி இத்தனை வருசத்திலை என்ன பிரயோசனம்?

நம்ம பக்கத்து வீட்டுப் பரிமளத்திற்கு, அவளோடை கணவன் எப்படி அழகான புடவை வாங்கிக் கொடுத்திருக்கான்! நீங்களும் தான் இப்படி இருக்கிறீங்களே? இப்பவே நான் உங்களை விட்டுப் போறேன்’ என்று ஒரு கண்ணீர் விடுவார்கள் பாருங்கள்.

அதற்கு கணவன் கட்டுப்பட்டு விடுவாராம். (அனுபவப்பட்ட பெரிய வங்க சொல்லி வேதனைப்பட்ட விடயம்.)

இங்கே கணவன் அன்பிற்கு கட்டுப்படுகின்றாரா? அல்லது கண்ணீரை ஆயுதமாக்கிப் பெண் வார்த்தைகளைக் கொட்டுகின்ற போது, கண்ணீருக்குக் கட்டுப்படுகின்றாரா? என்பது புரியாத விடயமாக இருக்கின்றது.

இத்தகைய கண்ணீரை நீலிக் கண்ணீர் என்றும் கூறுவார்கள். அலுவலகங்களிலும் சரி, பாடசாலைகளிலும் சரி சக நண்பர்கள் யாருடனாவது சண்டை என்றால், தம்மால் முடிந்த வரை வாய் வீரத்தினைப் பெண்கள் நிலை நாட்டப் பார்ப்பார்கள். இல்லையேல் இறுதி ஆயுதமான கண்ணீரை ஆயுதமாக்கி ஒரு சில வார்த்தைகள் சொன்னாலே போதும். எதிர்த் தரப்பினர் மௌனமாகி விடுவார்கள்.

பெண்களின் கண்ணீர் அவர்களைப் பாதுகாக்கிறது.

பெண்களின் கண்ணீரானது ஆண்களைத்தம் வசப்படுத்தவும் பெண்களுக்கு உதவுகிறது என்று கூறுகிறார்கள்...

Earn bitcoin online / without Investment / 100% Free...


https://youtu.be/YX3Zq3GCbck

Subscribe the channel for more tips...

நோயின்றி காக்க சுரக்கும் அமிர்த நீர் எச்சில்...


எச்சிலைத் துப்பாதீர் என்ற வாசகம் தாங்கிய பலகைகளை நாம் பல இடங்களில் பார்த்திருப்போம்.

எச்சில் என்பது வாயில் ஊறும் உமிழ்நீர். அது உணவை செரிப்பதற்கும், வாயின் உள் பகுதியையும், தொண்டைக் குழியையும் ஈரப்பதமாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது.

உடல் என்னும் வீட்டில் இருக்கும் ஒன்பது வாசல்களில் வாயும் ஒன்று. இது உணவை உண்பதற்கும், பேசுவதற்கும் பயன்படுகிறது.

உமிழ்நீரை வெளியில் துப்புதல் ஆகாது என சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை கூறுகின்றனர்.

புளிப்பு, இனிப்பு இவற்றின் சுவையை உணர்ந்தால் வாயில் உமிழ்நீர் தானாக ஊறும்.

அதுபோல் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகின்ற உணவுகளை சாப்பிட்டாலும் உமிழ்நீர் அதிகம் சுரக்கும்.

உடலில் உமிழ்நீர் சுரப்பிகள் மூன்று சோடிகள் உள்ளன.

1. பரோடிட் சுரப்பி
2. சப்மாண்டிபுலர் சுரப்பி
3. சப்லிங்குவல் சுரப்பி

பரோடிட் சுரப்பி..

இது காதுகளுக்குக் கீழே அமைந்துள்ளது. இதன் நாளங்கள் வழியாக கன்னங்களின் உட்புறம் இரண்டு மேல் கடவாய் பற்களுக்கு மேல் இந்த சுரப்பு நாளங்களின் துவாரங்கள் உள்ளன. இந்த நாளங்களுக்கு ஸ்டென்சன்ஸ் நாளங்கள் என்று பெயர். இது மனித உடலில் நீர் வறட்சி ஏற்படும்போதெல்லாம் அதிகம் சுரந்து வறட்சியைக் குறைக்கிறது.

சப்மாண்டிபுலர் சுரப்பி...

இது பரோடிட் சுரப்பிகளுக்குக் கீழே அமைந்துள்ளது. இதன் நாளங்கள் நாக்கின் அடிப் பகுதியில் துவாரங்களாக அமைந்துள்ளன.

சப்லிங்குவில் சுரப்பி...

கன்னங்களின் உள்ளே இரண்டு பக்கங்களிலும் அமைந்துள்ளன. இதன் துவாரங்கள் வாய் முழுவதும் அமைந்துள்ளன.

உமிழ்நீரின் தன்மைகள்...

உமிழ்நீர் காரத்தன்மை கொண்டது. இது அதிக என்சைம்களைக் கொண்டது. இதில் ஆண்டிபயாடிக் அதிகம் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.

உமிழ்நீர் சராசரியாக ஒரு மனிதனுக்கு 1500 மி.லி. அளவு சுரக்கிறது. இந்த அளவு உண்ணும் உணவின் அளவைப் பொறுத்தும் மன எண்ணத்திற்கும் ஏற்றவாறு மாறுபடுகிறது..

உமிழ் நீரின் முக்கிய பணி சீரணமாக்குவது.

நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது பழமொழி.

நொறுங்க என்பது நன்றாக மென்று என்று பொருள்.

உணவை நன்கு மென்று சாப்பிட்டால் நோயின்றி நூறுவயதுக்கு மேல் வாழலாம் என்று கூறுகின்றனர்.

உணவை மெல்லும்போது உமிழ்நீர் உணவுடன் நன்கு கலந்து அதில் உள்ள என்சைம்கள் உணவின் நச்சுத்தன்மையைப் போக்கி உணவுக் குழலுக்குச் செல்ல ஏதுவாகிறது. மேலும் இதில் கலந்துள்ள நொதி பித்தத்துடன் சேர்ந்து உணவை எளிதில் சீரணிக்க உதவுகிறது.

பொதுவாகவே உணவு செரியா நிலை, வாந்தி, தலைச்சுற்றல் உண்டானால் கூட உமிழ்நீர்தான் அதிகம் சுரந்து உடலை சீர்படுத்துகிறது. வாய்ப்புண்ணை ஆற்ற உதவுவதும் உமிழ்நீர்தான்.

உமிழ்நீர் சுரப்பியின் அளவு குறைந்தாலும், அதிகரித்தாலும் கடினத் தன்மை அடைந்தாலும் அது நோயின்அறிகுறியாகும்.

சிலர் பாக்கு புகையிலை மற்றும் போதை பொருள்களை உபயோகிப்பார்கள். அது உமிழ்நீருடன் சேர்த்து விசநீராகி உடலைக் கெடுக்கிறது.

மதக் கோட்பாடுகளில் விரதம் இருக்கும் காலங்களில் உமிழ்நீரை விழுங்காமல் வெளியே துப்பிவிடுவார்கள். இந்த உமிழ்நீரானது உள்ளே சென்றால் அதிகமாக பசியைத் தூண்டும் என்ற காரணத்தால் விரத காலங்களில் உமிழ்நீரை விழுங்குவதில்லை.

ஆனால் இத்தகைய சிறப்பு வாய்ந்த உமிழ்நீரை சிலர் தங்களுக்குப் பிடிக்காதவர்களை அவமானப் படுத்துவதற்காக வெளியே துப்புவார்கள்.

உமிழ்நீர் என்பது அடுத்தவரை அவமானப் படுத்தும் நீர் அல்ல. அது நம்மை நோயின்றி காக்க சுரக்கும் அமிர்த நீராகும்...

தமிழகத்திற்கு பஞ்சம் பிழைக்க வந்த தெலுங்கு கூட்டம்...


மனிதனால் முடியாத காரியம் எதுவும் இல்லை...


நம்மால் எதையும் செய்து முடிக்கவும் முடியும்; அழிக்கவும் முடியும். மனித சக்தியைத் தவிர வேறு எந்த சக்தியானாலும் காரியங்களை செய்து முடிக்க முடியாது.

இந்த சக்தியை தெரிந்து பயன்படுத்தி பலவிதமான சித்துக்களையும் காட்டி மறைந்த பெரியோர்கள், ஞானிகள், சித்தர்கள், நாயன் மார்கள், ஆழ்வார்கள், மகான்கள் போன்றவர்கள் எல்லா மதத்திலும் தோன்றி மறைந்து இருக்கிறார்கள்.

இவைகளை தெரிந்தும், படித்தும், கேட்டும் இன்னமும் செயல்படாமல் கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். காரணம் நம்மை நாம் அறியாததே. நமது சக்தியின் தன்மையை நாம் தெரிந்து செயல்பட்டால் இவ்வுலகில் நாம் சுகபோக வாழ்வு வாழலாம்.

அதற்கு முதலில் நமது எண்ணங்களை நமக்கு எது தேவையோ அதிலேயே நிறுத்தி வைக்க வேண்டும். மனதில் வேறு பல எண்ணங்கள் புகவிடாமல் மனம் அலைபாயாமல் – நமது என்ன அலைகளை சிதறவிடாமல் ஒரு பிடியாக நாம் நினைத்த காரியத்திலேயே கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

ஆத்ம சக்தி என்ற நமது மனோதிட சக்தியை நமது எண்ணம் எதுவோ அதிலேயே இருக்கச் செய்ய வேண்டும்.

நமது விருப்பங்களை இடைவிடாமல் ஏற்றத் தாழ்வு இல்லாமல் சமநிலையில் வைராக்கியத்துடன் எண்ணி அதிலேயே ஊன்றி கவனத்தைச் செலுத்தி வரவேண்டும்.

நாம் விரும்பும் காரியம் முடியும்வரை அதிலேயே மனதை வைத்து செயல்பட வேண்டும். வேறு சிந்தனை கூடாது. எவ்வளவு கஷ்டங்கள் ஏற்பட்டாலும் மனதைத் தளரவிடாமல் நம்பிக்கையுடனும் வைராக்கியத்துடனும் இருந்து நினைத்ததை சாதிக்க வேண்டும்.

நமக்கு நன்மைகளை செய்யக்கூடிய ஒரு எண்ணத்தை மனதில் நிறுத்தி தொடர்ந்து அமைதியாவும், அழுத்தமாகவும் அந்த எண்ணத்தை பற்றியே மனதில் தியானத்துக் கொண்டு இருப்பதே மனதை ஒரு நிலைப்படுத்தும் நிலையாகும்.

இந்த மனதை ஒரு நிலைப்படுத்தும் விதத்தைப் பயிற்சிகளினால் தான் பழக்கத்துக்குக் கொண்டுவர முடியும். மனதை ஒரு நிலைப்படுத்தி நிற்பது கடினம். காரணம் மனதில் ஆயிரக்கணக் கான எண்ணங்களை வைத்துக் கொண்டு நம் சிந்தனையை பல வழிகளிலும் சிதரவிட்டுக் கொண்டு பலவற்றையும் எண்ணிக்கொண்டே இருப்பதுதான்.

நமக்கு எது வேண்டுமோ அந்த எண்ணத்தையே அடிக்கடி மனதில் எண்ணி அதே எண்ணத்தில் விடாப்பிடியாக இருந்தால் நாம் நினைத்ததை அடைய முடியும்.

வாழ்க்கையில் தினசரி நாம் நமது மனதை ஒரு முக்கியமான கருவியாக எல்லா வகையிலும் நல்லது-கெட்டது இரண்டுக்குமே உபயோகப் படுத்தி வருகிறோம். மனம் இயங்காமல் எதையும் செயல்படுத்த முடியாது...

சட்டவிரோத தொலைபேசி இணைப்பக வழக்கு திமுக மாறன் சகோதரர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு: விசாரணை பிப்.19-க்கு தள்ளிவைப்பு...


சட்டவிரோத தொலைபேசி இணைப்பக வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் மீதும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டை பதிவு செய்தது. இந்த வழக்குக்கு அடிப்படை ஆதாரமில்லை என அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து மாறன் சகோதரர்கள் பதிலளித்தனர்.

7 பேர் மீது குற்றச்சாட்டு...

மத்திய அமைச்சராக பதவி வகித்த தயாநிதி மாறன், தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து சன் தொலைக்காட்சிக்காக சட்டவிரோத தொலைபேசி இணைப்பகம் நடத்தியதாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதுதொடர்பாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன்மற்றும் பிஎஸ்என்எல் அதிகாரிகள் என 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில், சென்னை சிபிஐசிறப்பு நீதிமன்றத்தில் நேற்று குற்றச்சாட்டு பதிவு நடந்தது. இதற்காக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சன் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறன், பிஎஸ்என்எல் முன்னாள் பொதுமேலாளர் கே.பி.பிரம்மநாதன், முன்னாள் துணைப் பொதுமேலாளர் வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச்செயலாளராக இருந்த வேதகிரி கவுதமன், சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், சன் தொலைக்காட்சி எலெக்ட்ரீசியன் ரவி உள்ளிட்ட 7 பேர் நீதிபதி ஆர்.வசந்தி முன்பாக நேற்று காலை ஆஜராகினர்.

மதியம் 12 மணி அளவில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி,குற்றச்சாட்டுகளை தனித்தனியாக வாசித்துக்காட்டி அவற்றை பதிவுசெய்தார். அந்தக் குற்றச்சாட்டுகளை மாறன் சகோதரர்கள் மறுத்தனர்.

தயாநிதி மாறன் பதில்...

அப்போது தயாநிதி மாறன், ‘‘மத்திய அமைச்சர் என்ற பதவியை எந்த தருணத்திலும் தவறாக பயன்படுத்தவோ, அதிகாரதுஷ்பிரயோகமோ செய்யவில்லை. என் மீதுள்ள குற்றப்பத்திரிகையில் எந்த இடத்திலும் என் மீதான குற்றச்சாட்டுகளை சிபிஐ அறுதியிட்டுக் கூறவில்லை.

யூகத்தின் அடிப்படையில் சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை’’ என பதிலளித்தார்.

அதேபோல கலாநிதிமாறன் பதிலளிக்கும்போது, ‘‘எனக்கு எதிராக சிபிஐ பக்கம் பக்கமாக சுமத்தியுள்ள குற்றச்சாட்டு ஆவணங்களில் எந்த இடத்திலும் என் பெயர் இல்லை. அரசியல் உள்நோக்கத்துடன் சன் தொலைக்காட்சியை குறிவைத்து இந்தவழக்கில் என்னையும் எதிர்தரப்பாக சேர்த்துள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன்’’ என தெரிவித்தார்.

மீண்டும் பிற்பகலுக்கு இந்தவழக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதிபதி, மாலை 3 மணி அளவில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட7 பேர் மீதான குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து, வழக்கு விசாரணையை பிப்.19-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்றைய தினம் சாட்சி விசாரணை தொடங்கும் என நீதிபதி அறிவித்தார். மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரும் காலை முதல் மாலை வரை நீதிமன்றத்தில் காத்திருந்தனர்...

பாஜக மோடியும் ஏமாற்று வேலைகளும்...


போன வாரம் மோடி ஜி: நாலு வருடத்தில் நான் செய்த  சாதனையை வேறு கட்சி சாதிக்க 40 வருடம் தேவை படும்.

இன்றைய செய்தி: வேலையில்லாதோர் எண்ணிக்கை 40 வருட உச்சம் தொட்டது.

குறிப்பு: புள்ளி விவரத்தை மறைக்க முயன்றதாக அரசின் மீது குற்றம் சுமத்தி தேசிய புள்ளிவிபர ஆணையர் மோகனன் பதவி விலகினார்...

தமிழகத்தின் சுவையான உணவுகளும்... அவற்றின் இடங்களும்...


 தமிழகத்தில் எந்த மாவட்டத்தில், எந்த உணவு சிறப்பு என்று ருசியுங்கள்...

1. சிம்மக்கல் - கறி தோசை, கோலா உருண்டை.
2. நடுக்கடை - இடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா.
3. சிதம்பரம் -கொத்சு.
4. புத்தூர் -அசைவச் சாப்பாடும் கெட்டித் தயிரும்.
5. திருவானைக்கா - ஒரு ஜோடி நெய் தோசை.
6. கும்பகோணம் - பூரி-பாஸந்தி.
7. ஸ்ரீரங்கம் - இட்லி பொட்டலம்.
8. மன்னார்குடி - அல்வா.
9. கூத்தாநல்லூர் - தம்ரூட்.
10. நீடாமங்கலம் - பால்திரட்டு.
11. திருவையாறு - அசோகா.
12. கும்பகோணம் - டிகிரி காபி.
13. விருதுநகர் - பொரிச்ச பரோட்டா.
14. கோவில்பட்டி - கடலை மிட்டாய்.
15. ஆம்பூர் - தம் பிரியாணி.
16. நாகர்கோவில் - அடை அவியல்.
17. சாத்தூர் - சீவல்.
18. திருநெல்வேலி - இருட்டுக் கடை அல்வா.
19. ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா.
20. செங்கோட்டை - பார்டர் கடை. பரோட்டா, நாட்டுக் கோழி வறுவல்.
21. மணப்பாறை - அரிசி முறுக்கு.
22. கீழக்கரை - ரொதல் அல்வா.
23. திண்டுக்கல் - தலப்பாக் கட்டி பிரியாணி.
24. பண்ருட்டி - முந்திரி சாம்பார்.
25. மதுரை - ஜிகர்தண்டா மற்றும் பருத்திப்பால்.
26. சாயல்குடி - கருப்பட்டி காபி.
27. பரமக்குடி - சிலோன் பரோட்டா, சிக்கன் சால்னா.
28. பழனி - சித்தநாதன் பஞ்சாமிர்தம்.
29. கமுதி - மாரியம்மன் பால் பண்ணை லஸ்ஸி.
30. ‪புதுக்கோட்டை - முட்டை மாஸ்‬.
31. தூத்துக்குடி - மக்ரூன்.
32. சௌக்கார் பேட்டை - மன்சுக்லால் சேட் டோக்லா மற்றும் கச்சோடி.
33. கன்னியாகுமரி - தேங்காய் சாதம், மீன் குழம்பு.
34. ராமநாதபுரம் - கணவாய் கோலா உருண்டை, இறால் ஊறுகாய்.

35. செட்டிநாடு - ஒவ்வொரு ஊருக்கும் ஏதாவது ஒன்று சிறப்பா இருக்கும், ஆனா நம்ம ‘செட்டி நாட்டுலே’ மட்டும் தாங்க செய்யிற எல்லா உணவுமே சிறப்பாயிருக்கும்.

அப்படிபட்ட செட்டி நாடு உணவு வகைகளில் சில...

1. குழிப்பணியாரம்.
2. வாழைப்பழ தோசை.
3. எண்ணெய் கத்தரிக்காய்.
4. பால் பணியாரம்.
5. பூண்டு வெங்காய குழம்பு.
6. ரவா பணியாரம்.
7. பால் கொழுக்கட்டை.
8. சேமியா கேசரி.
9. மோர் குழம்பு.
10. நாட்டுகோழி மிளகு வறுவல்.
11. இறால் தொக்கு.
12. நாட்டுக் கோழி ரசம்.
13. நண்டு மசாலா.
14. வெண்டைக்காய் புளிக்கறி.
15. பருப்பு சூப்.
16. ரிப்பன் பக்கோடா.
17. பருப்பு உருண்டை குழம்பு.
18. குருமா குழம்பு.
19. தேன்குழல்.
20. கருப்பட்டி பணியாரம்.
21. சீயம்.
22. மாவுருண்டை.

உணவுக்காக, உணவுப் பொருட்களுக்காக போர் புரிந்த கதை எல்லாம் நம்ம ஊரிலே மட்டும் தான் எப்படி நடந்துச்சுனு இப்ப தெரியுதா? அவ்வளவு ஏன்..

கொலம்பஸுகளும் வாஸ்கோடமாக்களும் இந்தியாவை தேடி எதுக்கு அலைஞ்சாங்க?

இங்கே கொட்டி கிடந்த வேறு எங்குமே கிடைக்காத 'மசாலா' பொருட்களுக்காக மட்டுமே தான்னுங்கிறது நிதர்சமான உண்மை...

சூடான குடிநீர்...


நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?

அப்படியென்றால் இது உங்களுக்குத் தான் உங்களுக்காக...

உங்களின் விலைமதிப்பற்ற இரண்டு நிமிடங்களை செலவழித்து இதை கண்டிப்பாக படிக்கவும்…

மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்...

சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின்
உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது.

சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம் உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கி விடும். திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு (Acid) வினைபுரியும்.

இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால் உறிஞ்சபடும்.

இது நம் குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில், இது கொழுப்புகளாக மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்லது.

மாரடைப்பு பற்றி ஒரு குறிப்பு...

மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கையில் ஏற்படும் கடுமையான வலி ஆகும்.

தாடையில் தீவிர வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மாரடைப்பு வரும் போது பொதுவாக நெஞ்சு வலி ஏற்படாது. குமட்டல் மற்றும் கடுமையான வியர்வையே மாரடைப்பு ஏற்பட பொதுவான அறிகுறிகள் ஆகும்.

60% சதவீத மக்கள் தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படும் போது அவர்களால் எழுந்து கொள்ள முடியாது. உறக்கத்திலேயே இறந்து விடுவர்.

தாடை வலி ஏற்பட்டவர்கள் மட்டுமே அயர்ந்த தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள முடியும்.

ஆகவே எப்பொழுதும் கவனமாகவும்
எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்...

Cure Acne At Ur Face / முகத்திலுள்ள தழும்புகளை நீக்குவது எப்படி.?


https://youtu.be/M0U6xoy1N6k

Subscribe the channel for more tips...

அடிக்கடி வரும் ஏப்பம்: கட்டுப்படுத்த எளிய இயற்கை மருத்துவ குறிப்புகள்...


உடலில் காற்றின் அளவு அதிகமாக இருந்தால் தான் ஏப்பம் வரும். அதுவும் காற்றானது இரைப்பையில் இருந்தால் அவை ஏப்பமாக வெளியேறும். அதுவே இரைப்பையைத் தாண்டி குடலை அடைந்து விட்டால், வாய்வாக வெளியேறும்.

ஆனால் சிலருக்கு தொடர்ச்சியாக ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். அலுவலகத்தில் இருக்கும் போது இப்படி அடிக்கடி ஏப்பம் வந்தால், அது மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி, நம்மீது கெட்ட அபிப்ராயத்தை ஏற்படுத்திவிடும்.

இதோ அதனை சரி செய்வதற்கான டிப்ஸ்...

அடிக்கடி ஏப்பம் வரும் போது, ஒரு கப் புதினா டீ குடித்தால், ஏப்பப் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடலாம்.

ஒரு கப் வெதுவெதுப்பான ப்ளாக் டீயை குடித்தால் ஏப்பத்திலிருந்து நிவாரணம் பெறலாம்.

சோம்புவை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால், அடிக்கடி ஏப்பம் ஏற்படாமல் இருக்கும். இந்த முறையால் உடனே ஏப்பம் நிற்காவிட்டாலும், தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஏப்ப பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுபடலாம்.

ஒரு கப் ஏலக்காய் டீ குடித்தால், செரிமான பிரச்சனை நீங்கி, அடிக்கடி ஏப்பம் வருவது உடனே நின்றுவிடும்.

ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மென்றாலோ அல்லது இஞ்சி டீ குடித்தாலோ, தொடர் ஏப்பம் வராமல் இருக்கும்.

சிட்ரஸ் பழங்கள் கூட ஏப்ப பிரச்சனைக்கு நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும். அதிலும் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையை சாப்பிட்டால், அது வயிற்றில் உள்ள காற்று உடனே வெளியேற்றி, அடிக்கடி ஏப்பம் வருவதைத் தடுக்கும்.

தினமும் ஒரு கப் சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை ஜூஸ் குடியுங்கள். இதனால் செரிமான பிரச்சனையுடன், ஏப்ப பிரச்சனையும் குணமாகும்.

இதில் ஏதாவது ஒற்றை தினமும் பின்பற்றி வந்தால் ஏப்பம் வரும் போது மற்றவர் எதிர் அசிங்கப்படாமல் தப்பிக்கலாம்...

இந்த நிலை தொடர்ந்தால் மனித இனமும் வெகு விரைவில் இதே நிலை தான்...


சுமேரியன் மொழியில் தமிழ் இருக்கிறது என்று ஆதாரத்துடன் நிருபித்தாலும் நிராகரிக்கப்படுகிறது...


உலக அரசியல் சுமேரிய நாகரிகத்தை புகழ்பெற வைக்கிறது. அதை மார்தட்டிக் கொள்ளும் சிலர் சில சதியை செய்கின்றனர்.

தமிழ் நசுக்கப்படுகிறது. அதிகாரமற்ற நிலை என்று நம் தமிழ் ஆராய்ச்சியாளர் புலம்புகிறார்கள்..

பாமக அன்புமணி ராமதாஸ் பற்றி ரங்கராஜ் பாண்டே கருத்து...


https://youtu.be/Zc4dI1Btzjo

Subscribe the channel for more news...

கிஸ் மிஸ் பழம் எனும் உலர் திராட்சை பற்றிய தகவல்...


கிஸ்மிஸ் பழம் என்று அழைக்கப்படும் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை (ஆண்மைக்கு) தரும் சத்துக்கள் பல நிறைந்துள்ளன. இதில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளன. விட்டமின்களும் அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. பொட்டாசியமும், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திராட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

மஞ்சள் காமாலை உள்ளவர்கள் தினமும் இருவேளை உலர் திராட்சையைச் சாப்பிட்டு வர காமாலை நோய் கு ணமடையும்.

உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து பசும்பாலில் போட்டு காய்ச்சி ஆற வைத்து, பழத்தை சாப்பிட்டு விட்டு பாலைக் குடித்தால் காலையில் மலச்சிக்கல் பிரச்னை சரியாகும்.

இதில் உள்ள கால்சியத் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

குழந்தைக்கு பால் காய்ச்சும் போது அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சியபின் பாலை வடிகட்டிக் கொடுத்தால் தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடகாத்திரமாக வளரும்.

தொண்டைக்கட்டு பிரச்சனை இருந்தால் இரவு படுக்கும் முன் 20 உலர் திராட்சைப் பழங்களை சுத்தம் செய்து பசும்பாலில் போட்டுக் காய்ச்சி 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் நிவாரணம் பெறலாம்.

மூல நோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்குப் பின்னர் காலையிலும் மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களைத் தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம்...