21/07/2021

இன்னமும் காத்திருக்கிறேன் உனக்காக...

 




நேசித்த என்னை 
காயப்படுத்திவிட்டு சென்றாய்...

அங்கு இன்னொருவன் 
உன் இதயத்தை 
காயப்படுத்திவிட்டு
சென்றான்...

இப்போது நீ 
துடித்து கொண்டு இருகிறாய்...

உன் பிரிவால் நான் தினம்
துடித்து கொண்டு இருக்கும் வலியை....

தற்போது 
நீ அறிந்திருப்பாய்...

நான் இன்னமும் உனக்காக
காத்து கொண்டிருக்கிறேன்...

உனக்கு சம்மதம் என்றால்
ஓடி வந்து 
என் தோளில் சாய்ந்து கொள்...

திமுக ஸ்டாலினின் பித்தலாட்டங்கள்...

 


அதிமுக பேனர் விழுந்து ஜெயஸ்ரீ என்ற பெண் இறந்த போது இனிமே நம்ம கட்சிக்காரங்க பேனர் வைக்க கூடாது,மீறி வச்சா கட்சியை விட்டு நீக்குவேன் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்ன்னு சொன்ன ஸ்டாலின் இப்ப எங்க போனாரு?

கார்ப்பரேட் தரகர் பாஜக மோடியின் பித்தலாட்டங்கள்...

 


எதிர்காலத் தமிழகமும் : எனது கனவும் : ஆட்சி நிர்வாகத்துறை...

 


ஆட்சி நிர்வாகத்துறை...

1. தமிழர் ஒவ்வொருவருக்கும் 18 வயது நிரம்பியதும் குடியுரிமை அட்டை வழங்கப்பட வேண்டும்.

2. அதுவே கூட்டுறவு பொருள் வாங்க மட்டுமல்ல, ஓட்டுனர் உரிமம், பண பரிவர்த்தனை, சொத்து விபரம், சம்பளம், வரவு-செலவு அனைத்திற்குமான ஒரே அட்டை.

3. வெளி மாநிலத்தவர் என்றால் அவர்களுக்கென இரு விதமான அட்டைகள் வழங்கப்பட வேண்டும்.

தனி மொழி வாரி மாநிலமான 1965 க்கு முன்பிருந்தே இங்கு வாழும் பிற மொழியினர் தங்களை தமிழ் மண்ணின் மக்கள் என்று ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவர்களும் தமிழர் என்றே அங்கீகாரம் வழங்கப்பட சிந்திக்கலாம்..

(ஆனால் அனைத்து உடைமையும் தமிழகத்தில் இருக்க வேண்டும்).

பணி நிமித்தமாக சில காலம் தங்கியிருப்பவர்களுக்கு வேறு ஒரு அட்டை வழங்கப்பட வேண்டும்...

மோடி உளவு பாத்து இருந்தாலும் ஆச்சரிய படுறதுக்கில்ல 😂

 


திருட்டு திமுக ஸ்டாலின் பித்தலாட்டம்...

 


அவளுக்காக நான் உறங்கினேன்...

 




நான் பார்த்தேன்
அவள் சிரித்தாள்..

அதை நான் விரும்பினேன் 
அவளையும் விரும்பினேன்
அவளும் விருப்பினால்
சில நாட்கள்...

என்னை அல்ல 
உங்களுக்கு நான் சொல்ல
தேவையே இல்ல..

அவளை நினைத்து ஏங்கினேன் கண்ணீர் வந்தது..

சில நாட்கள் 
அவள் நினைவுடன் 
பயணித்தேன் 
கல்லறை வந்தது...

அவளை 
உயிராய் நேசித்ததால்..

அவள் யோசிக்காமல்
எனக்கு 
கொடுத்த இடம் வந்தது 
நான் உறங்க...

அப்போதும் 
அவள் ஆசை அரங்கேறிட 
என் ஆத்மா அமைதியானது...

அவளுக்காக 
மண்ணுக்குள் முழுமையாக
உறங்கினேன்...

உளவு பார்த்து சிக்கிக் கொண்ட பாஜக மோடி...

 


போயா அங்கிட்டு...

 


மேரி இயேசு நாதரின் மனைவியா ?

 


இயேசுநாதர் திருமணமானவர் என்றும் அவருடைய முதன்மையான சிஷ்யையாக கருதப்படும் மேரி மெகதலீன்தான், இயேசுநாதரின் மனைவி என்ற தகவல்  வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது..

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் இறையியல் பிரிவு தலைவரான பேராசிரியர் கேரன் கிங் என்பவர்தான் இதுதொடர்பான ஆய்வு முடிவை வெளியிட்டார்.

இயேசு நாதர் குறித்த இந்த முக்கிய தகவலை வெளியிட்ட அவர் கூறுகையில், மிக மிகப் பழமையான கையால் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய கோரைப்புல்லால் ஆன கையெழுத்துப் படி ஒன்று கிடைத்துள்ளது. அதில் இயேசுநாதரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த வாசகங்கள் இடம் பெற்றுள்ளன..

முழுமையான வாசகங்கள் அதில் இல்லை. பண்டைய எகிப்திய கோப்டிக் மொழியில் வாசகங்கள் உள்ளன.

அதை ஆராய்ந்து பார்த்ததில், இயேசுநாதரின் மனைவிதான் அவரது முதன்மையான பெண் சிஷ்யையான மேரி மெகதலீன் என்பது தெரிய வருகிறது..

இருவரும் கணவன், மனைவியாக இருந்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது..

இந்த கையெழுத்துப் படியானது 8 செமீ நீளமும், 4 செமீ அகலமும் கொண்டதாக அமைந்துள்ளது..

இந்த கையெழுத்துப் படியில் உள்ள வாசகங்கள் மூலம் இயேசுநாதரும், மேரி மெகதலீனும் கணவன் மனைவி என்பது திட்டவட்டமாக தெரிய வருகிறது..

ஒரு இடத்தில் மேரி மெகதலீனை எனது மனைவி என்று இயேசுநாதர் தனது சீடர்களிடம் குறிப்பிட்டதாக கூறப்பட்டுள்ளது.

நான் அவருடன் வசித்து வருகிறேன் என்றும் குறிப்பிட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த கையெழுத்துப் படி நம்பகத்துக்குரியதாக இருக்க வேண்டும் என்றே நம்புகிறோம் என்றும் அப்படி இருந்தால் இது மிகப் பெரிய ஆச்சரியகரமான தகவலாக அமையும் எனவும் கூறியுள்ளார்.

ஏற்கனவே மேரி மெகதலீனும், இயேசுநாதரும் தம்பதியர் என்று அமெரிக்க எழுத்தாளர் டேன் பிரவுன் தனது “தி டாவின்சி கோட்” நூலில் குறிப்பிட்டிருந்தார்.

இது பெரும் சர்ச்சையையும், எதிர்ப்புகளையும், புயலையும கிளப்பியிருந்தது என்பது நினைவிருக்கலாம்.

இந்நிலையில் மேரி மெகதலீன், இயேசுநாதரின் மனைவிதான் என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த மேரி மெகதலீன்?

மேரி மெகதலீன் குறித்து பைபிளில் பல்வேறு தகவல்கள் உள்ளன.

அவர் குறித்த சர்ச்சைக்கிடமான கருத்துக்களும் நிறைய உள்ளன.

மேரி மெகதலீன் இயேசுநாதரின் முதன்மையான பெண் சீடராக இருந்தவர். அவருக்கு சீடர்கள் குழுவில் மிகுந்த முக்கியத்துவம் இருந்தது.

மேரி மெகதலீன் ஒரு விபச்சாரப் பெண்ணாக ஆரம்பத்தில் இருந்தார் என்று 591ம் ஆண்டு ஒரு குறிப்பு உள்ளது.

பின்னர் இயேசுநாதர் அவரை சீர்திருத்தி தனது சிஷ்யையாக ஏற்றுக் கொண்டார் என்று கூறப்படுகிறது.

மேரி மெகதலீன் குறித்து இயேசுநாதரின் சீடர்களான லூக், மார்க், ஜான் ஆகியோரும் நிறையவே குறிப்பிட்டுள்ளனர்.

இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட பின்னர் அவரது ஆண் சீடர்கள் பலரும் போய் விட்டனர். ஜான் மட்டுமே உடன் இருந்தார். அவருடன் உடன் இருந்தவர் மேரி மெகதலீன்.

இதே போல இயேசுநாதர் உயிர்த்தெழுந்த போது அதை முதலில் கண்டவர் மேரி மெகதலீன் தான்.

இதை ஜானும், மார்க்கும் தங்களது குறிப்புகளில் சொல்லியுள்ளனர்.

இந்நிலையில் தான் இயேசு நாதருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த மேரி மெகதலீன் உண்மையில் இயேசு நாதரின் மனைவி என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்..

பயணியின் பதில்.. கடுப்பான பரிசோதகர்.. என்ன நடந்திருக்கும்?

 




டிக்கெட் பரிசோதகர் : ஐயா, டிக்கெட் கொடுங்க...

பயணி : முன்னாடி கண்டக்டர் நிக்கிறாரு பாருங்க, அவர்கிட்ட கேளுங்க..

பரிசோதகர் : என்ன குசும்பா? நான் செக்கர் யா, உங்க 'பயண சீட் டை காட்டுங்க..

பயணி : கொஞ்ச முன்னாடி வரைக்கும் அந்த சீட்ல உட்கார்ந்து இருந்தேன், இப்பதான் இந்த சீட் கெடச்சுதுங்க..

பரிசோதகர் : (கடுப்புடன் பக்கத்திலிருந்தவர் டிக்கெட்டை காட்டி) நான் கேக்குறது இந்த டிக்கெட்டைய்யா...

பயணி : இதுவா... கண்டக்டர் எனக்கு டிக்கெட் எடுக்க வேணாமுன்னு சொல்லிட்டாரு..

பரிசோதகர் : என்னய்யா சொல்ற, ஏன் வேணாமுன்னு சொன்னாரு...?

பயணி : அவர்தான குழந்தைங்களுக்கு டிக்கெட் எடுக்க வேணாமுன்னு சொன்னார்... என் பேரு கூட குழந்தைதாங்க..

பரிசோதகர் : 😣😣

திருட்டு திமுக உதயநிதி தன் நடிப்பு தொழிலுக்கு கிளம்பினான்...

 


முதல் சட்டமன்ற கூட்டத்திலே நீட் தேர்வை தடை செய்த ஆண்மையுள்ளது என்று சொன்ன.. உதயநிதி ஆண்மையோடு நீட் தேர்வு தடை செய்ய கிளம்பிய போது...

திமுக Vs அதிமுக கலாட்டா...

 


உன்னிடம் இருப்பது இதயம் தானா...

 




பெண்ணே...

உன் இதயம் எனக்காக
துடிகிறது என்றாய்...

வலித்தால் நிறுத்திவிடு என்றேன்
நீ நிறுத்திவிட்டாய்...

அன்று எனக்காக துடித்த 
உன் இதயம் 
இன்று வேறோருவனுகாக....

திராவிட திருமண முறை...



இவர்கள் பெண்ணுரிமை போராளிகள்..

ஒருவன் மகள் வயது உள்ளவர்களை அதாவது தனது 70 வது வயதில் இரண்டாவது திருமணம் செய்தான் கன்னட இராமசாமி நாயக்கன்..

இன்னொருவன் முதல் மனைவியை பைத்தியகாரி என்று சொல்லிவிட்டு இரண்டாவது திருமணம் செய்தான்.

முன்றாவதாக ஒருவரை திருமணம் செய்து துனைவி என்றான்  கருணாநிதி...

வரி கொள்ளையடித்து ஊழல் செய்யும் பாஜக மோடி...

 


உளவு பார்த்து மிரட்டப்பட்டதா நீதித்துறை?

 


2018 ஜனவரி - இந்திய நீதித்துறையின் வரலாற்றிலேயே இல்லாதபடி, நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றமாகிய உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் நான்கு பேர் பத்திரிகையாளர் கூட்டத்தைக் கூட்டி, நீதித் துறையில் உள்ள குறைபாடுகள் குறித்துப் புகார் சொல்கிறார்கள். அமித் ஷா சம்பந்தப்பட்ட சோராபுத்தீன் கொலை வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயாவின் மரணமும் (கொலையும்), வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தன்னிச்சையான போக்கும் அவர்கள் குறிப்பிட்ட விஷயங்களில் அடங்கும். அந்த நான்கு நீதிபதிகளில் ரஞ்சன் கோகோய் ஒருவர்.


2018 ஜூன் - ரஞ்சன் கோகோய் தலைமை நீதிபதி ஆகிறார்.


2019 ஏப்ரல் - உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் பெண் ஒருவர், 2018 அக்டோபர் 10-11 தேதிகளில் ரஞ்சன் கோகோய் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டுகிறார். அவர் வேலை நீக்கம் செய்யப்படுகிறார். தில்லி போலீசில் பணியாற்றி வந்த அவருடைய கணவரும், மைத்துனரும் கவைக்குதவாத காரணம் காட்டி சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள். அந்தப் பெண்ணின் இன்னொரு மைத்துனர் உச்சநீதிமன்ற நீதிபதியின் தனியுரிமைப்படி அக்டோபர் மாதம் நீதிமன்றப் பணியாளராக நியமிக்கப்பட்டிருந்தார், அவரும் வேலை நீக்கம் செய்யப்பட்டார். கடைசியாக, அந்தப் பெண் லஞ்சம் வாங்கினார் என்று ஒரு குற்றம் சுமத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகிறார். 

 

இதுபோல குற்றச்சாட்டுகள் எழுந்தால், குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் அல்லாதவர்களைக் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆனால், கோகோய் தானாகவே ஒரு குழுவை நியமிக்கிறார். அதில் அவரும் பங்கேற்கிறார். 


2019 மே - அவர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க அவரே நியமித்த குழு, பாதிக்கப்பட்ட பெண்ணை விசாரிக்காமலே அவர் மீது தவறு இல்லை என்று சொல்லி விடுகிறது. அந்தக் குழுவுக்கு தலைமை வகித்தவர் நீதிபதி போப்டே. அவர்தான் பிற்பாடு கோகோய்க்குப் பிறகு தலைமை நீதிபதி ஆகிறார். நாக்பூரில் பாஜக தலைவர் ஒருவரின் ஹார்லே பைக்கை இரவல் வாங்கி உட்கார்ந்திருந்த புகைப்படங்கள் வெளியாக சர்ச்சை ஆனதே, அதே போப்டேதான் இவர்.


2019 மே-நவம்பர் - இந்த சம்பவத்திற்குப் பிறகு கோகோய் ஓய்வு பெற்ற நவம்பர் 17ஆம் தேதிக்கு இடையில் முக்கியமான பல தீர்ப்புகளை தலைமை நீதிபதி கோகோய் வழங்குகிறார். குறிப்பாக, ஓய்வு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன் அவரும் பங்கேற்ற பெஞ்சுகள் முக்கியமான தீர்ப்புகளை வழங்கின. அவற்றில் குறிப்பிடத் தக்கவை —


நவம்பர் - அயோத்தியில் பாபர் மசூதி வழக்கில் சர்ச்சைக்குரிய இடம் ராமருக்கே சொந்தம் என்று தீர்ப்பளித்தது. இடம் யாருக்குச் சொந்தம் என்பதுதான் வழக்கு. இடம் ராமருக்குச் சொந்தம் என்று தீர்ப்பளித்ததுடன் நில்லாமல், ராமர் கோயிலைக் கட்டுவதற்கு மூன்று மாதங்களுக்குள் ஒரு டிரஸ்ட் உருவாக்க வேண்டும் என்றும் அந்த பெஞ்ச் தீர்ப்பளித்தது. 

நவம்பர் - ரஃபேல் ஊழல் குறித்தான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று பல வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன. 2018இல் ரபேல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டபோது, அரசு தவறான தகவல்களை முன்வைத்திருந்தது என்பதால், மீள் விசாரணை தேவை என்று பிரசாந்த் பூஷண், முன்னாள் பாஜக தலைவர்கள் அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் கோரியிருந்தனர். அனைத்தையும் நிராகரித்தது உச்சநீதிமன்றம். 


கஷ்மீரில் 370 பிரிவை செல்லாது என அறிவித்த மோடி அரசு, கஷ்மீரின் அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாரையும் கைது செய்தது அல்லது வீட்டுக் காவலில் வைத்தது. அங்கே என்ன நடக்கிறது என்று யாருக்குமே தெரியாத நிலை. தனது கட்சி எம்எல்ஏ குறித்து மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யச்சூரியும் மற்றொரு மாணவரும் தொடுத்த ஹேபியஸ் கார்ப்பஸ் மனுவை விசாரித்த கோகோய் நீதிமன்றம், தலைவர்களை கைது செய்து வைத்திருப்பது சரியா தவறா என விசாரிக்க மறுத்து விட்டது. சீதாராம் யச்சூரி வேண்டுமானால் கஷ்மீருக்குப் போய் அவரை சந்திக்கலாம். ஆனால் சந்திப்பைத் தவிர வேறு எந்த நோக்கமும் இருக்கக்கூடாது என தீர்ப்பளித்தது. ஹேபியஸ் கார்ப்பஸ் என்பதே ஆள்கொணர்வு மனுதான். சம்பந்தப்பட்ட நபரைக் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்பதே அதன் நோக்கம். ஆனால் கோகோய் நீதிமன்றம் விந்தையான தீர்ப்பளித்தது.


அசாமில் என்ஆர்சி நடைமுறைப் படுத்த உத்தரவிட்ட பெஞ்சில் கோகோய் முக்கியமானவர். அசாமின் என்ஆர்சியில் சுமார் இருபது லட்சம் பேர் விடுபட்டு விட்டனர். அவர்களில் பெரும்பாலோர் இந்துக்கள். அவர்களைப் பாதுகாக்க - முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மட்டும் குடியுரிமை தருவதற்கு மோடி அரசு உருவாக்கியதுதான் சிஏஏ. 


பண மசோதா - ஒன்றிய அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமானால் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் முன்வைக்க வேண்டும். ஆனால், ஒரு சட்டம் பண மசோதாவாக (மனி பில்) முன்வைக்கப்பட்டால், மாநிலங்களவையின் ஒப்புல் தேவையில்லை. மத்தியில் ஆளும் கட்சி, மாநிலங்களவையில் தனக்கு மெஜாரிட்டி இல்லை என்கிறபோது, எந்தவொரு சட்டத்தையும் பணமசோதாவாக முன்வைத்து நிறைவேற்றிக் கொள்கிறது. ஆதார் அட்டை விவகாரமும் பணமசோதாவாகவே நிறைவேற்றிக் கொண்டது. இதை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்ற பெஞ்ச் 2018இல், பணமசோதாவாக நிறைவேற்றியதில் தவறில்லை என்று தீர்ப்பளித்துவிட்டது. இதற்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பண மசோதா விவாகரத்தை இன்னும் பெரிய பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என்று ஒத்தி வைத்து விட்டது. (இன்றுவரை அதன் கதி என்னவென்று தெரியவில்லை.)


ஆக, கோகோய் தலைமை நீதிபதியாக இருந்தவரையில், மோடி அரசுக்கு, பாஜகவுக்கு சாதகமான தீர்ப்புகளையே வழங்கி வந்தார். அதற்குப் பரிசாக, அவர் ஓய்வு பெற்றதும் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஓய்வு பெற்ற நீதிபதிகள் பதவிகளில் அமர்த்தப்படுவதை விமர்சித்த அதே கோகோய், ஓய்வு பெற்ற பிறகு வெட்கமே இல்லாமல் பதவியைப் பெற்றுக் கொண்டார்.


இதெல்லாம் பழைய கதைகள். இப்போது எதற்கு என்று கேட்பீர்கள்.


பிகாசஸ் உளவு விவகாரத்தில் உளவு பார்க்கப்பட்ட தொலைபேசி எண்கள் பட்டியல் வெளியாகி வருகிறது. அதில் கோகோய் மீது குற்றம் சாட்டிய பெண், அவரது உறவினர்களின் எண்களும் இருந்துள்ளன. அவர் குற்றம் சாட்டிய அடுத்த சில நாட்களில் அவருடன் தொடர்புடைய 11 எண்களும் உளவுபார்க்கப்பட்டுள்ளன.

(ஒரு நீதிபதியின் எண்ணும் உளவுபார்க்கப்பட்டுள்ளதாகத் தகவல். கோகோய்தானா அல்லது வேறு யாருமா என்று தெரியவில்லை.)

2018இல் நீதித்துறை சுதந்திரத்துக்காகக் குரல் கொடுத்த கோகோய், 2019இல் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, மோடி அரசுக்கு சாதகமாக தீர்ப்பளித்ததையும், அதே காலத்தில் இந்தத் தொலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டதையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் ......

தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம்...

 




01. துணைவி
 02. கடகி 
03, கண்ணாட்டி
04. கற்பாள் 
05. காந்தை
06. வீட்டுக்காரி
07. கிருகம்
08. கிழத்தி
09. குடும்பினி
10. பெருமாட்டி
11. பாரியாள்
12. பொருளாள்
13. இல்லத்தரசி,
14. மனையுறுமகள்
15. வதுகை
16. வாழ்க்கை
17. வேட்டாள் 
18. விருந்தனை 
19. உல்லி
20. சானி
21. சீமாட்டி
22. சூரியை
23. சையோகை
24. தம்பிராட்டி
25. தம்மேய் 
26. தலைமகள்
27. தாட்டி
28. தாரம் 
29. மனைவி
30. நாச்சி
31. பரவை
32. பெண்டு 
33. இல்லாள்
34. மணவாளி 
35. மணவாட்டி
36. பத்தினி 
37. கோமகள்
38. தலைவி 
39. அன்பி
40. இயமானி
41. தலைமகள்
42. ஆட்டி
43. அகமுடையாள்
44. ஆம்படையாள் 
45. நாயகி
46. பெண்டாட்டி
47. மணவாட்டி 
48. ஊழ்த்துணை
49. மனைத்தக்காள்
50. வதூ 
51. விருத்தனை
52. இல்
53. காந்தை
54. பாரியை
55. மகடூஉ
56. மனைக்கிழத்தி
57. குலி
58. வல்லபி
59. வனிதை
60. வீட்டாள்
61. ஆயந்தி
62. ஊடை

இப்போது புரிகிறதா...

இந்த  62 அவதாரங்களை..

ஒரு அப்பாவி சமாளிப்பது 
எவ்வளவு பெரிய கலையென்று 🤪