17/07/2017

24 மணி நேரத்தில் கேன்சரை குணமாக்கும் பழம்...


உலகில் மிக கொடிய நோயான கேன்சரை குணமாக்கும் அறிய மருந்து ஒன்று குயின்ஸ்லாந்தின் மழைக்காடுகளில் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது.

பல நோய்களுக்கு மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்ட இடத்தில் கேன்சரின் விளைவுகளை எதிர்த்து போராடுவதற்கான அற்புதமான புதிய மருந்து ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

BREAK DRUG EBC-46, இது தான் புற்றுநோயை குணப்படுத்தும் அந்த மருந்து.

இந்த மருந்து பிளஷ்வுட் (Blushwood) எனப்படும் மரத்தில் காய்க்கும் பெர்ரியில் இருந்து பெறப்படுகிறது.

இந்த மருந்து நாய் மற்றும் பூனை போன்ற செல்ல பிராணிகள் மீது ஏற்கனவே சோதனை செய்யப்பட்டது.

இந்த EBC-46 என கூறப்படும் மருந்தானது தலை, கழுத்து, மற்றும் பெருங்குடல் ஆகிய பகுதிகளில் உள்ள கட்டிகளை குணப்படுத்துகிறது.

இந்த மருந்தை உபயோகித்த சுமார் 24 மணி நேரத்தில், உடலில் உள்ள கட்டிகள் கருப்பாக மாறி, இரண்டு நாட்களுக்கு பின்னர் அது வெறும் நிற மாறிய தோல் போல காட்சியளிக்கிறது.


பிறகு 1.5 வாரத்தில் அந்த நிறம் மாறிய தோல் விழுந்து, கேன்சர் கட்டிள் முழுவதும் குணமடைந்து சுத்தமான தோலாக காட்சியளிக்கிறது.

இதுகுறித்து பேசிய QIMR Berghofer மருத்துவ ஆராய்ச்சி மைய மருத்துவர் பாயில், இதன் வேகம் என்ன ஆச்சர்யப்படுத்துகிறது என்று கூறினார்.

மேலும், இந்த மருந்து மனித உடல்களில் சோதனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்...

பாரிஸ் தாக்குதலும் இலுமினாட்டி பின்னனி சந்தேகங்களும்...


13.11.2015 ஃப்ரான்சின் தலை நகர் பாரிஸ் மற்றும் அதை அண்டிய பகுதிகளில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கும் இலுமினாட்டிக்கும் இடையில் தொடர்பிருக்கலாம் எனக்கு தோன்றியதால் அதுபற்றி நான் தேடியதையும் ஊகிப்பதையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய தேசம் என்ற பெயரின் கீழ் இயங்கும் அமைப்பு காரணமென ஊகிக்கப்பட்டு அதை அவ் அமைப்பும் உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. (ஃப்ரான்சில் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் அதிக உயிர்களை பலிகொண்ட தாக்குதலாகும்.).

தாக்குதல் நடத்தப்பட்ட நாள்.

சரியாக 13.11.2015 இல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே இலுமினாட்டி தொடர்பாக நாம் பார்க்கையில் அவர்களின் விருப்ப இலக்கங்களாக 13 ,33, 11, (9) குறிப்பிட்டிருந்தேன்.

அதையே இத்தாக்குதலும் உறுதி செய்துள்ளது.

தாக்குதல் நேரம் கூட இரவு 9 மணியை அண்டிய நேரத்தில் நடைபெற்றுள்ளதோடு அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய‌ bataclan அரங்கத்தாக்குதல் பாரிஸ் 11 பகுதியில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


இது எதேர்ச்சையாக நடைபெற்றதா அல்லது திட்டமா என்ற கேள்வி சிந்தனையாளர் மனதில் நிற்கிறது.

பெரும்பாலும் இவ்வாறான தாக்குதல்கள் வார பிற்பகுதியில் நடைபெறுவதையும் அவதானிக்க முடிகிறது. (ஒரு வேளை சர்வதேச வியாபாரத்தை பாதிக்காதவாறு திட்டம் தீட்டி இருக்கலாம்.).

இலுமினாட்டி அட்டைகளில் இருந்து சில குறிப்புகளை பார்க்கலாம்.

இவ் இரண்டு அட்டைகளும் இவ் வருடத்தில் ஃப்ரான்சில் நடைபெற்ற தாக்குதல்களுடன் சற்று ஒத்துப்போவதாகவுள்ளது.

படம் 1: ஒரு அரங்கத்திற்கு விழும் அடியாக உள்ளது. அவ் அரங்கள் நேற்று தாக்குதலுக்குள்ளான bataclan அரங்கமாக இருக்கலாம்.

படம் 2: வருட ஆரம்பத்தில் நடைபெற்ற (7-9.2015) charlie hebdo attak உடன் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். குறித்த நபர் charlie hebdo வாக இருக்கலாம். (இத்தாக்குதலின் பின்னர் அப்பத்திரிகையின் வியாபாரம் பல மடங்கு அதிகரித்தது. அப் பத்திரிகையின் உரிமையாளர் ஒரு யூதர்).

அதே நேரம், தாக்குதல் பகுதிகளில் இருந்து தப்பிய சிலரின் வாக்குமூலங்கள்..

அல்லாஷ் அக்பர் என தீவிரவாதி கூச்சலிட்டார்.

சிரியாவில் நீங்கள் செய்ததற்கான பலன் என கூச்சலிட்டார். (சிரியா யுத்தத்தில் ஃப்ரான்சின் பங்கு அதிகம்.) உங்கள் ஜனாதிபதி விட்ட தவறு என கூச்சலிட்டார்.
– என வாக்கு மூலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இது தாக்குதல் நடத்தியவர்கள் இஸ்லாமியர்கள் என்பதை குறிப்பதாகவுள்ளது. இது இஸ்லாமியருக்கு எதிராக நடைபெறும் தாக்குதலுக்கு ஐரோப்பிய மக்களிடையே ஆதரவை தேடித்தரும் நோக்கு என ஒரு சாரார் கருத்து தெரிவித்துள்ளனர்.


இந்த இஸ்லாமிய அமைப்பை நீண்ட நாட்களாக முயன்றும் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகள் ஒடுக்க முடியாமல் இருப்பது ஒரு வேடிக்கை.

இத்தீவிரவாதிகளுக்கும் அவர்களே ஆயுத வினியோகம் செய்வதாக ஒரு கருத்துள்ளது. அது உண்மையாக இருப்பதற்கும் சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளன. இது ஒரு வியாபாரம்.

அதில் ரஷ்யா குறுக்கிட்டு கடந்த சில மாதங்களாக மேற்கத்தைய சிந்தனைகளுக்குள் முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.

அதற்காக சொந்த நாட்டு மக்களை ஒரு நாடு கொல்லுமா என்ற கேள்வியுள்ளது. அதற்கு ஆம் என்ற பதிலை தாராளமாக சொல்லலாம்.

Operation Gladio என்று இத்தாலியில் நடைபெற்ற ஒரு திட்டமிட்ட தொடரூந்து நிலைய தாக்குதலின் பின்னனியில் CIA மற்றும் இத்தாலிய உளவுத்துறை செயற்பட்டமை தனியார் உளவு நிறுவனங்கள் மூலம் சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டது. பின்னர் அவ் நிறுவனங்கள் இல்லாமல் போனது..

அதேவேளை மேலும் ஒரு குறிப்பாக, நாஸ்ராடமஸின் எதிர்வு கூறல்களிலும் பரிஸில் இவ்வாறான ஒரு தாக்குதல் இடம்பெறும் என்ற குறிப்புக்கள் உள்ளன. அதுவும் இஸ்லாமிய தேசத்தாரால் என குறிக்கப்பட்டுள்ளது.

இது பற்றிய போதுமான அலசல் இணையத்தில் இடம்பெறவில்லை.
அலசலின் பின்னர் மேலதிக தகவல்கள் இணைக்கப்படும்.

Ref : sott , toolsforfreedom, beforeitsnews, veteranstoday (3592)...

தமிழா விழித்தெழு...


நடிகர் கமல் தமிழரா...


கமல்ஹாசன் கன்னட பிராமணர்.

இவர் மூதாதையர்களுடைய பூர்வீகம் கர்நாடகாவில் ஹாஸன் மாவட்டம் என்று சொல்லப் படுகிறது.

தமிழகத்தில் குடியேறி செட்டில் ஆகிவிட்ட குடும்பம்.

பரமக்குடியில் 'கண்ணாடி ஐயர்' என்று சொல்லப்படும் வகையைச் சார்ந்தவர்.

கன்னட ஐயர் அல்லது கன்னடிய ஐயர் என்பது தான் காலப் போக்கில் கண்ணாடி ஐயர் என்று மாறி அர்த்தம் புரியாமல் வழங்கப் பட்டு வருகிறது...

தாமிரபரணியை சுத்தப்படுத்தப்படும் பணியில் 2500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்...


அப்போ நதிகளை தூய்மைபடுத்த 4500 கோடி அதிமுக ஒத்துக்குனது எல்லாம் ஸ்வாகா...

வெள்ளையன் வெளியேறினால்.. விஞ்ஞானம் வெளியேறிவிடும்.. திமுக தெலுங்கர் அண்ணாதுரை...


1942ல் காந்தி.. வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கி.. செய்யுங்கள் இல்லை செத்துமடியுங்கள் என்றார்.

அப்போது அண்ணா, என்ன சொன்னார்..

தம்பி (கருணாநிதி) காந்தியாருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது.

இவரைக் குணப்படுத்த இங்கிலாந்து தேசத்து வைத்தியர்கள் தேவை.

வெள்ளையர்கள் வெளியேறினால், விஞ்ஞானமும் வெளியேறிவிடும்.

கார் ஓடாது,
பஸ் ஓடாது,
ரயில் ஓடாது,
தந்தி கூட இருக்காது,
ஏரொப்ளேன் இருக்காது.

ஆல மரத்தையும், அரச மரத்தையும் சுற்றிக் கும்பிட்டு, பருந்தைக் கண்டால் கன்னத்தில் போட்டுக் கொள்ளத்தான் முடியும். நம் மக்களால் குண்டூசி கூட செய்ய முடியாது என்றார்.

இவர் அறிஞராம்? ப்ப்ப்ப்பா அடிக்கிற வெயிலில் கறுப்புச்சட்டை போடும் திராவிட பகுத்தறிவு...

சென்னை கொடுங்கையூர் பேக்கரி தீ விபத்தில் பலியான தீயணைப்பு வீரர் ஏகராஜ் குடும்பத்திற்கு ரூ 13 லட்சம் உதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - முதலமைச்சர் அறிவிப்பு...


சித்தர்கள் பறப்பது எப்படி?


நம் புராணங்களில் சித்தர்கள் முனிவர்கள் போன்றவர்கள் பறந்து வருவதைப் போல படித்திருக்கிறோம். சில திரைப்படங்களில் காட்சிகளாகக் கூட கண்டிருக்கிறோம். அது எப்படி சாத்தியம் ஆகிறது.

சித்தர்கள் பறந்து செல்பவர்கள், நீரில் நடப்பார்கள். அந்தரத்தில் மிதப்பார்கள் என்றெல்லாம் படித்திருக்கிறோம் அல்லவா. அவை எதுவும் மாயாஜால்மோ அல்ல நடக்க முடியாத கட்டுக் கதையோ அல்ல. பிறகு எப்படி பறக்கிறார்கள்?

எல்லா ஜீவன்களுக்கும் இரண்டு உடல்கள் இருக்கும். ஒன்று நாம் கண்ணால் காணக்கூடிய எலும்பும் சதையும் கொண்ட புற உடல். மற்றொன்று கண்களுக்குப் புலப்படாத மாயா உடல். உதாரணமாக, நாம் பின்னால் ஒருவர் தொடும் தூரத்தில் வந்தி சத்தமில்லாமல் நின்றால் கூட நம்முடைய உள்ளுணர்வு காரணமாக திரும்பி பார்த்து விடுவோம். யோரோ நம் பின்னால் நிற்பது போல இருக்கிறதே என்ற உள்ளுணர்வின் உந்துதல் எதனால் ஏற்படுகிறது? அருகே நிற்பவர் நம் புற உடலைத் தொடாவிட்டாலும் ஆத்மாவின் உடலான மாய உடலைத் தீண்டி நிற்பதால் நமக்கு உள்ளுணர்வு உண்டாகிறது. இவ்வாறுநடமாட்டத்தை உணர்வலைகளின் வாயிலாகவும் மின்காந்தப்புலத்தின் பரிமாற்றத்தாலும் நாம் கண்ணால் பார்க்காவிட்டாலும் உணரமுடிகிறது.

இவற்றில் புற உடல் புவி ஈர்ப்பு விசைக்கு கட்டுப்பட்டது. மாய உடல் ஆத்மாவின் உடல். இது பூமியின் ஈர்ப்பு விசைக்கு கட்டுப்படாதது.

ஆத்மாவில் லயித்திருக்கும் போது மாய உடலோடு ஒன்றியிருப்பதும், புற உலகில் லயித்திருக்கும் போது சாதாரண உடலோடு ஒன்றியிருப்பதும் நடக்கிறது. சித்தர்களும் முனிவர்களும் தொடர்ந்த பயிற்சியின் மூலமாக மாய உடலையும் , புற உடலையும் ஒரு சேர இயக்க கற்றுக்கொள்கிறார்கள்.

மொத்த சக்தியையும் நாபி எனப்படும் தொப்புளுக்கும் கீழே உள்ள இடத்தில் ஒரு உருண்டையைப் போல திரட்டி அந்த சக்தியையே உடலின் மைய புள்ளியாகக் கொண்டு புவி ஈர்ப்பு விசைக்கு எதிர் விசை கொடுத்து பறக்கிறார்கள்.

மாய உடலை இயக்கும் போது புவியீர்ப்பிலிருந்து விடுபட்டு இவர்களால் பறக்க முடியும். மாய உடலின் ஆதிக்கத்தைக் குறைத்து புற உடலை இயக்கும் போது புவியீர்ப்பு விசைக்குக் கட்டுப்பட்டு சராசரியாக இயங்க முடியும். இவ்வாறு இவர்களால் புவி ஈர்ப்பு விசையைக் கட்டுப்படுத்த முடியும் போது அந்தரத்தில் நடக்க முடிகிறது. நீரில் நிற்க முடிகிறது. அதற்கு காரணம் தொடர்ந்த பயிற்சிகளால் புற மற்றும் அக உடல் இரண்டின் சக்தியையும் இயக்கக் கற்று விடுகிறார்கள். ப்ரபஞ்சத்தின் சக்தியோடு முழுமையாக ஒன்றி விடுகிறார்கள்.

சலனமற்ற மனமும் அமைதியான தியானமும் இதுபோன்ற உள்ளிருப்பு சக்திகளை வெளியே கொண்டு வர உதவும் முதல் படிகள் என்று பெரியோர்கள் கூறுகிறார்கள்.

நம்மைப் போன்றவர்கள் தான் சலனப்படாத நிமிடங்கள் கூட கிடையாதே! அதனால் தான் 58 பெருக்கல் 28 என்ன என்று கேட்டால் கூட மன சக்தியை பயன்படுத்தாமல் கால்குலேட்டருக்குத் தாவுகிறோம்...

பாஜக S.V. சேகர் கலாட்டா...


கல்ப விக்ரகமும் மர்மங்களும்...


முதலிலேயே ஒரு விஷயத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன், இந்த தகவல்கள் அனைத்தும் அமெரிக்காவின் CIA நிறுவனத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற அலுவலர் வெளிபடுத்தியவை.

இப்பொழுது விஷயத்திற்கு வருவோம் 47 கிராம் மட்டுமே எடை கொண்ட ஒரு வகையான பித்தளை போன்ற உலோகத்தினாலான மிக புராதனமான இந்து கடவுளின் அந்த சிலையை இழந்த அமெரிக்க CIAமிகுந்த வேதனயும் கவலையும் அடைந்தது.

அந்த சிலையை குறித்து சில வினாக்கள் அந்த சிலைக்கும் அமெர்க்க CIA நிறுவனத்திற்கும் என்ன தொடர்பு?

ஹிந்துக்களின் கடவுள் சிலையை கொண்டு CIA செய்த காரியம் என்ன?

இவ்வளவு கவலை கொள்ளும் அளவு அந்த சிலையின் மர்மம் என்ன?

ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு முன்பு 1959-1960 திபெத்தின் ஒரு துறவி CIA அதிகாரிகளிடம் ஒரு பேழையை மற்றும் அதனுள் அடங்கிய மிக முக்கியமான பொருளுடன் தருவதுடன், அதனை மிக கவனமாக பாதுகாக்கும் படி லோ மோந்தங் இடத்தில் தருகிறார்.

அத்துடன் அந்த துறவி அந்த பேழையின் முக்கியத்துவத்தை இதற்குரிய CIA அதிகாரியிடம் கூறியதை, அவர் அப்படியே இந்த பேழை மற்றும் அதனுள் இருக்கும் விக்ராகத்தினை பற்றி துறவி கூறியதை குறிப்பினை எடுத்துகொல்கிறார்.

சைனா திபெத் போரில் துறவியும் மற்ற பாதுகாவலர்களும் கொல்லபடுகின்றனர். இதன் பின்னர் அந்த பேழை இந்தியவின் வழியாக ரகசியாமாக தற்பொழுது அமெரிக்காவில் கொலராடோவில் உள்ள கேம்ப் ஹால் கொண்டு செல்லபடுகிறது.

சில வாரங்களுக்கு பின் அந்த சிலை கொண்ட பேழை வாஷிங்கடனில் உள்ளCIAஸ்டோர் ரூமில் "ST Circus Mustang-0183". என்ற லேபிளுடன் வைக்க படுகிறது.

சிலகாலம் கழித்து CIA வின் பார்வை அந்த பேழை மீது திரும்புகிறது, அதன் உள்ளிருக்கும் பொருளின் மர்மம் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் கொண்ட சியா, அந்த பேழைக்குள் வினோத கையெழுத்து பிரதி ஒன்றை கண்டேடுக்கின்றனர்.

மேலும் மிக வினோதமான முறையில் வடிவமைக்கப்பட்ட அதனை மேலும் சோதனை உட்படுத்த முடிவு செய்கின்றனர்.

அந்த பேழை செய்யப்பட்ட மரம் குறித்து அறிய ரேடியோ கார்பன் சோதனை செய்யபடுகிறது.

அமெரிக்காவின் the University of California Radiation லபோரடோரி செய்யப்பட்ட ஆய்வு முடிவுகளை கண்ட CIA அதிகாரிகள் அதிர்ந்து போகின்றனர், காரணம் அந்த பேழை இந்த யுகத்தினுடயது இல்லை ஆம் ஹிந்துக்களின் காலகணக்கு படி துவாபர யுகத்தை சேர்ந்தது.

ரேடியோ கார்பனின் ஆய்வுப்படி ஒன்பது அங்குல தடிமன் கொண்ட அந்த பேழையின் வயது ஏறத்தாழ 28450 வருடங்கள் ஏறத்தாழ குருஷேத்திர போருக்கு முந்தியது.

கல்ப விக்ரகம் கண்டெடுக்கப்பட்ட பேழை பண்டைய காலமுறை முடி கொண்ட அமைப்புடன் கம்பி கொண்டு பூட்டும் முறையில் இருந்தது, மேலும் பேழையின் நான்கு புறமும் எட்டு அங்குலம் தடிமனும் அதன் மூடியானது ஆறு அங்குலதடிமனும் கொண்டதாக இருந்தது, இதன் பலகைகள் தேக்கினால் செய்யபட்டும் பித்தளை போன்ற ஒருவித கலவை உலோக தகடு ஒரு அங்குல தடிமனுடன் பொருத்தப்பட்டு பலகையும் தகடும் கடையாணி மூலம் இறுக்கப்பட்டு பலகைகள் காலகாலத்திற்கும் காக்கும்படி பொருத்தபட்டிருந்தது. பேழையின் வெளிப்புற தோற்றமே அது பலகாலம் புதையுண்டு இருந்ததை கூறுவதாக இருந்தது.

மேலும் தொடருவோம்...

கதிராமங்கலம் எரிவாயுக் கசிவும் மக்கள் போராட்டமும்: உண்மை அறியும் குழு அறிக்கை...


கும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திற்குச் சற்று முன்னதாக, அங்கிருந்து வடக்கே சுமார் இரண்டு கல் தொலைவில் வற்றிக் காய்ந்து கிடக்கும் காவிரியின் வட கரையில் அமைந்துள்ள இயற்கை வளம் மிக்க கிராமம் கதிராமங்கலம். கடந்த ஜூன் 30 முதல் இந்த ஊர் மக்கள் இப்பகுதியில் செயல்பட்டு வருகிற ‘எண்ணை மற்றும் எரிவாயு நிறுவனத்தையும்” (Oil and Natural Gas Corporation – ONGC) அரசையும் எதிர்த்துப் போராடிக் கொண்டுள்ள செய்தி தற்போது தமிழக அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.

முப்பதாண்டு காலமாகக் காவிரியின் கடைமடைப் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து எரிபொருளை உறிஞ்சி எடுத்து, விவசாய நிலங்களுக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் எடுத்துச் செல்வதால் தம் நில வளம் மட்டுமின்றி, குடிநீர் உட்பட சுற்றுச் சூழல் பெரிய அளவில் மாசுபடுவதால் ONGC யின் செயல்பாடுகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக இன்று எழுந்துள்ளது. எரிபொருள் கசிவு ஒன்றை ஒட்டி நடந்த பிரச்சினையில் இன்று பத்து பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு மக்கள் தொடர் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

இது குறித்த உண்மைகளை ஆராய்ந்து மக்கள் முன் வைக்க ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை கீழே உள்ள இணைய முகவரியில் காண்க...

http://www.peoplesrights.in/tamil/?p=962

ஜூன் 30 அன்று நெல் வயலொன்றின் வழியே சென்று கொண்டுள்ள எரிவாயுக் குழாய் வெடித்த இடத்திற்கு நாங்கள் சென்று பார்க்க முனைந்தபோது அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் எங்களை அருகே நெருங்க விடாமல் தடுத்தனர். நாட்கள் 15 ஆகியும் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் இன்னும் வீசிக் கொண்டுள்ளது. அருகே நெருங்க அனுமதிக்காவிட்டாலும் சுமார் 20 அடி தொலைவில் நின்று குழாய் வெடித்த இடத்தைப் பார்த்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டோம்...

RSS தோசைபக்தர்கள் எப்படி இந்தியா சுதந்தத்திற்கு பாடுபட்டார்கள் என்று இதை படித்து தெரிந்து கொள்ளவும்...



குறிப்பு... இப்போது தேசபக்தி பெயரில் அந்நியர்களுக்கு நாட்டை  விற்றுக் கொண்டிருப்பதும் இதே கூட்டம் தான்...

டெல்லியில் பிரதமர் வீட்டின் அருகே இன்று போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகளை வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்ற டெல்லி போலிஸ்...


அய்யா கண்ணு தலைமையில் இன்று டெல்லியில் தமிழக விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை துவங்கியுள்ளனர்...

விந்தணு சிற்பம்...


அண்மையில் குண்டடம் வடுக நாதபைரவர் கோவிலில் இருக்கும் கருக்குழந்தை சிற்பங்கள் பற்றி சில பதிவுகள் பார்த்தேன்.

இது என்ன அதிசயம் எனுமளவுக்கு சென்னிமலை முருகன் கோவிலில் விந்தணு அண்ட அணுவுடன் சேர்வது போல இருக்கும் சிற்பங்கள்.

திருமணத்தடை நீங்கவும் பிள்ளைப்பேறு வேண்டியும் இங்கு செல்வர்.

முருகனின் கையில் இருக்கும் வேலின் அடியில் இருக்கும் வடிவத்துடன் சேர்த்து பார்த்தால் வேலின் முழு வடிவம் விந்தணுவுடன் ஒத்துப்போகிறது..

(முருகன் எனும் அதிசயம் - யூட்யூப்
_tamil chinthanaiyalar peravai).

ஆணுக்கான குறியீடான மேல்நோக்கிய முக்கோணம் (ப்ளேட்)

பெண்ணுக்கான குறியீடான கீழ்நோக்கிய முக்கோணமும் (சாலிஸ்)

இணைந்த அறுகோண முக்கோணம்தான் முருகனின் சின்னம். (இஸ்ரேல் கொடியில் உள்ள வடிவம்)..

நன்றி: ஆன்றோர்களின் அறிவியல் ஆன்மீகமாய்...

இதுவரை உலகில் ஏற்பட்ட மிக பெரிய மின் தடைகள்...


July 31, 2012: வடஇந்தியா முழுவதிலும் 22 மாநிலங்களில் மின்தடை ஏற்பட்டது. ஏறத்தாழ 600 மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டனர்.  உலகிலேயே மிக பெரிய மின் தடை என்ற பெயரும் பெற்றது.

July 30, 2012: வடைண்டியாவிற்கு மின்சாரம் வழங்கும் வடக்கு பவர்  செயலிழந்தது, 8 மாநிலங்களில் மின்தடை ஏற்பட்டது. 370 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

Nov. 10, 2009: Paraguay-Brazil எல்லையில் உள்ள நீர் மின் நிலையத்தை புயல் தாக்கியது. இதனால் பிரேசிலில் 60 மில்லியன் மக்களும் பராகுவேயில் 7 மில்லியன் மக்களும் மின்சாரம் இன்றி தவித்தனர்.

January-February 2008: சீனாவில் உள்ள Chenzhou நகரத்தில் புயல் தாக்கியதால் 4 மில்லியன் மக்கள் இரண்டு வாரம் மின்சாரம் இன்றி தவித்தனர். இதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டவர்களில் 11 தொழிலாளர்கள் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

November 2006: ஜெர்மன் பவர் கம்பெனியின் உயர் மின் கடத்தியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் இல் 10 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர்.

Aug. 18, 2005: இந்தோனேசிய வில் பவர் கிரிடில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 100 மில்லியன் மக்கள் 5 மணி நேரம் மின்சாரம் இன்றி தவித்தனர்.

July 12, 2004: Greece இல் 7 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர்.

Sept. 28, 2003: Switzerland இல் உயர்  மின்கடத்தியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 95% இத்தாலி மின்சாரம் தடைபட்டது. 55 மில்லியன் மக்கள் 18 மணிநேரம் மின்சாரம் இன்றி தவித்தனர்.

Aug. 14, 2003: மத்திய அமெரிக்காவில் மின்கடதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அமெரிக்காவின் 8 மாநிலங்கள் மற்றும் கனடாவில் 50 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர்

March 11, 1999: Brazil’s Sao Paulo மாநிலத்தில் துணை மின்நிலையத்தில் மின்னல் தாக்கியதால் 97 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர்

March 1989: கனடா மற்றும் அமெரிக்காவின் சிலபகுதிகளில் சூரிய மின்காந்த புயல் தாக்கியதால் 6 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர்.

July 13, 1977: நியூயார்க் நகரத்தில் துணை மின் நிலையத்தில் மின்னல் தாக்கியதால் மின்தடை ஏற்பட்டது 8 மில்லியன் மக்கள் 25 மணி நேரம் மின்சாரம் இன்றி தவித்தனர்

Nov. 9, 1965: துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நியூயார்க் நகரம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகள் மின்தடை ஏற்பட்டது. 25 மில்லியன் மக்கள் 14 மணி நேரம் மின்சாரம் இன்றி தவித்தனர். இதை தழுவி  “Where Were You When the Lights Went Out?” பிரபலமான திரைப்படமும் எடுக்கப்பட்டது...

இலுமினாட்டி யும் பிராமணனும்...


நரம்புகள் புடைக்கும் நோயை குணப்படுத்தும் ஒரு அற்புத மருத்துவம்...


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் இந்த வெரிகோஸ் நோய் ஏற்படலாம்.

நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், மைக்ரோபியல் போன்ற நோய்கள் நம்மை எளிதாக தாக்குகிறது.

வெரிகோஸ் வெயின் நோய் ஏற்பட காரணம் என்ன?

நமது உடலில் உள்ள ரத்தம் வேறொரு பகுதிக்கு செல்ல முடியாமல் ரத்த நரம்புகளிலே தங்குவதால் நரம்புகள் புடைத்து மற்றும் விரிவடையும் இதை தான் வெரிகோஸ் வெயின் நோய் என்கிறோம்.

இந்நோயை குணப்படுத்துவதற்கு நீண்ட நாட்கள் சிகிச்சை எடுக்க வேண்டும். இந்த வெரிகோஸ் வெயின் வருவதற்கு முக்கிய காரணம் அதிகமான உடல் எடை மற்றும் ரத்த அழுத்தம் போன்றவை முக்கிய காரணமாகும்.

ஆனால் இந்த வெரிகோஸ் நோயை இயற்கையான முறையில் குணப்படுத்த ஒரு அற்புத பாட்டி மருத்துவம் உள்ளது.


தேவையான பொருட்கள்...

பச்சை தக்காளி - 2
தேன் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை...

முதலில் பச்சை தக்காளிப் பழங்களை எடுத்து அதனுடன் தேன் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
பின் அரைத்த அந்த பானத்தை தினமும் காலையில் உணவுக்கு முன் குடிக்க வேண்டும். அல்லது இந்த தக்காளி பழங்களின் தோலை உரித்து விட்டு வெரிகோஸ் வெயின் ஏற்பட்ட இடத்தில் தேய்க்கலாம்.

நன்மைகள்...

இந்த இயற்கை முறை மருத்துவமானது, வெரிகோஸ் வெயின் பிரச்சினையை குணப்படுத்துகிறது என்பது நீருபிக்கப்பட்டுள்ளது. இதை தினமும் சரியான அளவில் எடுத்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

பச்சை தக்காளியில் உள்ள அல்கலாய்டு சோலனின், நமது உடலில் ஏற்படும் ரத்தம் கட்டுதலை குறைக்கிறது. மேலும் இது நரம்புகளின் சுவர்களை வலிமையாக்கி, வெரிகோஸ் வெயினை எளிதில் குணப்படுத்த உதவுகிறது.

குறிப்பு : வெரிகோஸ் வெயின் சிகிச்சை எடுக்கும் போது, மருத்துவரிடம் டயாபெட்டீஸ் மற்றும் ஹைபர் டென்ஷன் உள்ளதா என்பதை சோதனை செய்துக் கொள்வது நல்லது...

தீர்க்க தரிசி எரிக்கும் நாஜி படையும்...


1930 எரிக் தனது அசாத்திய அமானுஷ்ய ஆற்றல் மூலம் கிடைத்த புகழையும் பொருளையும் மூலதனமாக கொண்டு இரண்டு இதழ்களை தொடங்குகிறார். ஹன்னுசின் மேகசின் எனும் மாதந்திர இதழும், மற்றுமொரு இருவாரங்களுக்கு ஒரு முறை வெளிவரும் இதழ், ஒன்றையும் துவங்கி நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரம் குறித்த தனது முன்னறிவிப்பு மற்றும் மறைபொருள் குறித்த செய்திகளை இந்த இதழ்களின் மூலம் எரிக் வெளிப்படுத்தினார்.

அதில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முன்னறிவிப்பினை வெளியிட்டார். ஜெர்மனியின் பெரும் கூட்டு பங்கு பணபரிவர்த்தனை செய்யும் வங்கிகள் சரிவினை சந்திக்கும் என்ற அவரது கணிப்பு அடுத்த மூன்று வாரங்களில் நிஜமானது. ஜெர்மனியின் மிக முக்கிய இரண்டு வங்கிகள் இழுத்து மூடப்பட்டது .

1932 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எரிக் தனது பத்திரிக்கையில் மேலும் ஒரு செய்தியை வெளியிடுகிறார் "ஹம்பர்க் நகரம் அருகே ரத்த ஆறு ஓடுவதை" தன்னால் காண முடிவாதாக வெளியிட்டார் .சில நாட்களில் ஹாம்பர்க் நகரின் அருகே உள்ள அட்லான நகரில் கம்யுனிஸ்ட் மற்றும் நாஜி படைக்கும் இடையே நடைபெற்ற ஐந்து மணிநேர கோரமான போரில், அட்லான நகரில் ரத்த ஆறு ஓடியது இந்த போர் அட்லானவின் கருப்பு ஞாயிறு என அழைக்கபடுகிறது .எரிக் இதனை தன் தீர்க்கதரிசனம் மூலம் அறிந்து கொண்டார ,அல்லது உயர் அதிகாரிகளின் மூலம் இந்த ரகசியங்களை அறிந்து வெளியிடுகிறாரா, என சந்தேகங்கள் இருந்த போதும் பெரும் பணம்படைத்தவர்கள் எரிக்கின் ஆலோசனையை நாடத்தொடங்கினார். தங்கள் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள .

இந்த நிலையில் நாஜிக்களின் படையுடன் படையின் முக்கியஸ்தர்களுடன் எரிக் நட்ப்பினை வளர்த்து கொண்டார். மேலும் இவ்வாறு நாஜிக்களுடன் தனது நடப்பை வலுபடுத்தி கொண்டபோதும் . சாமானிய மக்களுடனும் எரிக் நெருங்கி பழகிவந்தார்
சில வரலாற்று அறிஞர்களின் கூற்று படி நாஜிக்களுக்கு ஸ்வஸ்திக் சின்னத்தினை தங்கள் சின்னமாக வைக்கும் படி கூறியது எரிக் தான், இந்துக்களின் இந்த சின்னம் நாஜிக்களுக்கு பெரும் வெற்றியை தேடி தரும் என்றும் அவர் கூறியதாகவும் கூறுகின்றனர் .மேலும் தனது இதழ்களில் எரிக் தேர்தலில் கோள்களின் நிலைப்படி ஹிட்லரே மகத்தான வெற்றியை அடைவார் எனவும் ,அவருக்கே காலநிலை சாதகமாக இருப்பதாகவும் எழுதி தனது பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளார் .

மேலும் ஜேர்மனிய பத்திரிகையலர்களின் கூற்று ஹிட்லருக்கு மேடை பேச்சிற்கு எரிக்கே மூல காரணம், ஹிட்லருக்கு எரிக் மேடை பேச்சின் நெளிவு சுழிவுகளை பயிற்சி அளித்ததாகவும் கூறுகின்றனர். மேடை நிகழ்ச்சி நடத்தி புகழ் பெற்ற எரிக் ஹிட்லருக்கு வார்த்தையை உச்சர்க்கும் விதம் உடல்மொழி போன்றவற்றை பயிற்றுவித்ததாக கூறுகின்றனர். இந்த அசாத்திய பேச்சுத்திறன் மற்றும் தவறான நம்பிக்கையின் காரணமாக ஹிட்லர் தன் தேசத்தையும் இந்த உலகத்தையும் போரை நோக்கி கொண்டு சென்றார். எரிக்கும் செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தார்.

அடுத்த பகுதியில் காண்போம்...

நாஞ்சில் நாட்டு அவலம்...


தோளுக்கு சீலை போராட்டம் - நீங்கள் கேள்விபடாத ஒரு சமூக அவலம்..

ஒரு நடிகை சினிமாவில் மேலாடை இல்லாமல் நடித்தால், இன்றைய சமுதாயத்தில் சிலர் கொஞ்சம் ஓவராகவே பொங்கியெழுந்து விடுகிறார்கள். அவர்களில் சிலர், இன்னும் ஒருபடி மேலே போய், சம்பந்தப்பட்ட நடிகைக்கே சேலையை இலவசமாக அனுப்பி வைக்கும் போராட்டம் நடத்துகிறார்கள். காரணம் கேட்டால், 'ஒரு நடிகை மேலாடை இல்லாமல் நடித்தால், கலாச்சாரம், பண்பாடு சீர்கெட்டுப் போய்விடும்' என்கிறார்கள்.

ஆனால், கி.பி.1800களில் ஒரு நாட்டில் பெண்கள் மேலாடை அணியாமலேயே வாழ்ந்தார்கள் என்றால், அதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும்.

அந்த நாடு, எங்கோ எத்தியோப்பியாவிலோ, சோமாலியாவிலோ அல்லது தென் ஆப்பிரிக்காவிலோ இல்லை. நம் தமிழ்நாட்டில்தான் இருந்தது. அதுதான் நாஞ்சில் நாடு.

வருடத்தின் எல்லா நாட்களும் சலசலத்துக்கொண்டு ஓடும் நீரோடைகள், இறைச்சலுடன் பாயும் ஆறுகள், வெள்ளியை உருக்கிக் கொட்டுவது போன்ற நீர்வீழ்ச்சிகள்... என்று கேரளத்தின் 'அக்மார்க்' அடையாளங்கள் நிறைய.

இந்த கேரள மாநிலத்தின் தென் பகுதிகளையும், இன்றைய தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தையும் உள்ளடக்கி இருந்த ஒரு சமஸ்தானம்தான் திருவிதாங்கூர். திருவனந்தபுரம் இவர்களது தலைநகரமாக இருந்தது. வெள்ளி நிறத்தில் வலம்புரிச் சங்கு பொறித்த செம்மை நிறக் கொடி, இந்த சமஸ்தானக் கொடியாக திகழ்ந்தது.

இந்த சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்ததுதான் நாஞ்சில் நாடு. வயலில் உழுவதற்கு பயன்படும் கலப்பைக்கு நாஞ்சில் என்ற பெயரும் உண்டு. இந்த பகுதியில் உழவுத் தொழில் அதிக அளவில் நடந்ததால், இப்பகுதியும் நாஞ்சில் நாடு என்று அழைக்கப்பட்டது. இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தின் அகஸ்தீஸ்வரம், பூக்களுக்கு பெயர்போன தோவாளை ஆகிய வட்டங்களை உள்ளடக்கி பகுதிதான் நாஞ்சில் நாடு என்று அழைக்கப்பட்டது.

'நாங்கள் தோளில் சீலை அணிய உரிமை வேண்டும்...' என்று அவர்கள் போராடத் துவங்க... பல ஆண்டுகளுக்கு பிறகு அதில் வெற்றியும் கிடைத்தது. இந்த வெற்றிக்காக ரத்தம் சிந்திய, மானத்தை தியாகம் செய்த உயிர்கள் ஏராளம்... ஏராளம்... தாழ்த்தப்பட்ட பட்டியலில் இடம்பெற்ற ஜாதியைச் சேர்ந்த பெண்கள்தான் இந்த கொடுமைகளை அனுபவித்தனர் - தாங்கிக்கொண்டனர்.

இவர்கள் எங்கு சென்றாலும், ஆதிக்க ஜாதியினருக்கு மரியாதை கொடுப்பதற்காக தங்கள் மேலாடையை அணியக்கூடாது என்பது, நாஞ்சில் நாட்டை உள்ளடக்கி ஆட்சி செய்த திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்களின் கண்டிப்பான உத்தரவு.

'சமூகத்தில் பெரும் மரியாதைக்குரிய ஒரு மனிதரிடம் ஒரு பெண் தனது மார்பை திறந்து காட்டுவது என்பது, அந்த நபருக்கு சமூகம் அளிக்கும் மரியாதையாகவே கருதப்பட்டது' என்கிறார், 'திருவிதாங்கூரின் இயல்பு வாழ்க்கை' என்ற நூலை எழுதிய ஆங்கிலேயரான சாமுவேல் மேட்டீர். அதை மீறி மேலாடை அணிந்தால் கொடுமையான தண்டனைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். அதற்கு பயந்தே, மேலாடை இன்றி நடமாடினர், ஒடுக்கப்பட்ட ஜாதியினர்.

ஆனாலும், எத்தனை நாட்களுக்குத்தான் மேலாடை அணியாமல் இருப்பது? என்று மனம் புழுங்கிய அவர்களில் சிலர் போராடத் துவங்கினர். அவர்களுக்கு ஆதரவாக அய்யா வைகுண்டர் போன்றோர் குரல் கொடுத்தனர். அந்த தெம்பில் ஆங்காங்கே கலகங்களும் எழுந்து அடங்கின.

தோளுக்குச் சீலை உரிமை கேட்டு தாழ்த்தப்பட்டவர்கள் போராடுகிறார்கள் என்பதை அறிந்த சமஸ்தான மன்னன் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான். ‘அவர்கள் அப்படித்தான் ஆடை அணியாமல் இருக்க வேண்டும்; மீறி அணிந்தால், அவர்கள் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஏன்... கொலை கூட செய்யலாம்...’ என்று அரக்கத்தனமாக வாய்மொழியாக உத்தரவிட்டான் மன்னன்.

அதன்விளைவு... மார்பை மறைக்க முயன்ற பெண்கள் ஆடை கிழித்து அவமானப்படுத்தப்பட்டனர். சிலர் கொலையும் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாஞ்சில் நாட்டில் உள்ள நெய்யாற்றின்கரை, நெய்யூர், கல்குளம், கோட்டாறு, இரணியல் போன்ற பகுதிகளில் கலவரம் வெடித்தது.

அய்யா வைகுண்டரும் இந்த போராட்டத்தில் பெரும் பங்கெடுத்துக் கொண்டார். தன்னை காண வரும் பெண்கள் கண்டிப்பாக தோளுக்கு சீலை அணிந்துதான் வரவேண்டும் ஆணையிட்டார். அன்றைய காலக்கட்டத்தில், ஒடுக்கப்பட்ட வகுப்பு பெண்கள், தோளுக்கு சீலை அணியக்கூடாது என்று இருந்த வழக்கம் பற்றி தனது அகிலத்திரட்டிலும் பதிவு செய்திருக்கிறார் அவர்.

"பூமக்கள் நீதமுடன் போட்ட தோள்சீலை தன்னைப்
போடாதே என்றடித்தானே சிவனே அய்யா..." என்று குறிப்பிடும் அய்யா,
"என் மக்கள் சான்றோர்கள் இடுப்பில் எடுத்த குடம்
ஏண்டி இறக்கென்றானே சிவனே அய்யா...." என்று, நாடார் குல பெண்கள் இடுப்பில் குடம் வைத்து செல்லக்கூடாது என்று ஆதிக்க ஜாதியினர் கூறியதையும் பதிவு செய்கிறார்.

இதற்கிடையில், மேலை நாட்டில் இருந்து வந்திருந்த கிறிஸ்தவ பரப்பாளர்கள், நாஞ்சில் நாட்டில் நிலவிய சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தனர். கி.பி.1780களிலேயே அவர்கள் நாஞ்சில் நாட்டிற்குள் நுழைந்துவிட்டாலும், தோளுக்கு சீலை போராட்டம் தீவிரம் அடைந்தபோது, அதற்காக போராடியவர்களுக்காக தங்கள் சுயநல குரலை எழுப்பினர்.

‘தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்ததற்காக ஏன் வருத்தப்படுகிறீர்கள்? கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் உங்களுக்கு எல்லா உரிமைகளும் கிடைக்கும். திறந்த மார்போடு திரியாமல் தோளுக்கு சீலை அணிந்து கொள்ளலாம். மேலும், உங்களது பொருளாதார - கல்வி வசதிகளுக்கும் ஏற்பாடு செய்து தருகிறோம். உண்பதற்கு சுகாதாரமான - ஆரோக்கியமான உணவும் எங்கள் நிறுவனங்கள் சார்பில் தருகிறோம்...’ என்று கூறிய அவர்களது ஆசை வார்த்தைகள், தாழ்த்தப்பட்டோர் பலரது மனதை மாற்றியது.

ஏராளமானபேர் தங்களை கிறிஸ்தவர்களாக்கிக் கொண்டார்கள். தோளுக்கு சீலை அணிந்து மார்பை மறைத்தும் கொண்டனர். அவர்களை பின்பற்றி தாழ்த்தப்பட்ட வகுப்பில் இருந்த பிற பெண்களும் தோளுக்கு சீலை அணிய ஆரம்பித்தனர்.

இது, ஆதிக்க ஜாதியினருக்கு பிடிக்கவில்லை. ‘நீங்கள் எந்த மதத்திற்கு மாறினாலும் தாழ்த்தப்பட்டவர்கள்தான்...’ என்று கூறி, அவர்களை பொது இடங்களில் அவமானப்படுத்தினர். மதம் மாறிய பெண்கள் அணிந்த மேலாடையை கிழித்து எறிந்தனர்.

இந்த பிரச்சினை சென்னை மாகாண நீதிமன்றத்திலும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஆங்கிலேயர்கள் என்பதால் ஒரு சார்பாகவே தீர்ப்பு கூறப்பட்டது. 1847 மார்ச் 19-ம் தேதி ஒரு தீர்ப்பை அவர்கள் வெளியிட்டனர்.

‘ஒடுக்கப்பட்ட இந்துக்கள் மேலாடை அணியவோ, நகைகள் அணியவோ உரிமை அளிக்கப்பட மாட்டாது. ஆனால், கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது’ என்று தீர்ப்பு கூறியது சென்னையில் உள்ள ஆங்கிலேயே நீதிமன்றம்.

இந்த தீர்ப்பு ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் கிளர்த்து எழச் செய்தது. ஆங்காங்கே கலகங்கள் நடந்தன.

சான்றோர் என்கிற நாடார் இனத்தில் உயர் வகுப்பினர் இருந்தனர். இவர்கள் நல்ல வசதியோடு வாழ்ந்ததால், இவர்களது பெண்கள் தோளுக்கு சீலை அணிந்து மார்பை மறைத்துக் கொண்டனர். அதேநேரம், அந்த இனத்தில் மேலும் சில உட்பிரிவுகள் இருந்தன. இந்த பிரிவில் உள்ளவர்களே பனை சார்ந்த தொழிலில் ஈடுபட்டனர் (இன்றும்கூட இந்த பாகுபாடு இந்த சமூகத்தில் உள்ளது. உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள், சம அந்தஸ்தில் உள்ள குடும்பங்களில்தான் பெண் கொடுப்பதும், எடுப்பதுமாக உள்ளனர்). இந்த சமூகத்தில் அவர்களே சமஸ்தான கொடுமைகளுக்கு அதிகம் ஆளாக்கப்பட்டனர். இவர்களைப் போன்று, தாழ்த்தப்பட்ட பட்டியலில் இடம் பெற்றிருந்த பிற சமூகத்தினரும் பாதிக்கப்பட்டனர்.

‘கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் மட்டும்தான் எங்கள் மானம் காக்கப்படுமா?’ என்று பொங்கியெழுந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக, அதுவரை போராட்டத்தில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்த நாடார் இன உயர் வகுப்பினரும் போராட்டத்தில் பங்கு பெற்றனர். இவர்கள் மெஜாரிட்டியாக இருந்த பகுதிகளில் ஆதிக்க ஜாதியினருக்கு பதிலடி கொடுக்கப்பட்டது.

நிலைமை மோசமானதால் சென்னை மாகாண கவர்னர் இந்த பிரச்சினையில் தலையிட்டார். அதைத்தொடர்ந்து, 1859 ஜூலை 26-ந் தேதி திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ‘தோளுக்கு சீலை அணியாத பெண்கள் இனி அதை அணிந்து கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. அதேநேரம், மேல் ஜாதிப் பெண்களைப் போன்று ஆடை அணியக்கூடாது...’ என்பது தான் அந்த அறிவிப்பு.

இதைத்தொடர்ந்து தோளுக்கு சீலை போராட்டம் நிறைவுக்கு வந்தது.

ஆனாலும், இந்த சுதந்திர உரிமையைப் பெற நாஞ்சில் நாட்டு வரலாற்றில் படிந்த ரத்தக்கறையை மட்டும் யாராலும் அகற்ற முடியாது...

யார் தமிழர் ?


1956க்குமுன் வந்தவர்கள் எல்லாம் தமிழ்ர்களா?

அப்படியானால் சுமார் 250 அண்டுகளுக்கு முன் வியாபாரம் செய்ய வந்து பின் இந்தியாவை ஆண்ட சிறுபான்மை இனமான வெள்ளையர்களை நாம் ஏன் விரட்ட வேண்டும்.

500 ஆண்டுகளுக்கு முன் படை எடுத்துவந்து தமிழ்நாட்டை நாசம் செய்த வடுக வந்தேறிகளை மட்டும் இன்னும் தமிழர்களை ஆள விடவேண்டும் என்று சொல்வது அயோக்கியத்தனம் இல்லையா?

மேலும் அவர்களையும் தமிழர்களாக ஏற்கிறோம் என்று சொல்வதும் அயோக்கியத்தனம் இல்லையா?

வடுகனுக்கு ஒரு நியாயம், வெள்ளையனுக்கு ஒரு நியாயமா?

இதற்குப் பெயர் தமிழ்தேசியமா? அல்லது பெரியாரியக்கமா?

வெள்ளையனே வெளியேறு என்பது சரியென்றால்... திராவிடனே வெளியேறு என்பதும் சரி தானே...

திருமண அழைப்பிதழ்களை கையில் கொடுக்காமல் தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுப்பது எதனால்?


திருமணம அழைப்பிதழ்கள் மட்டுமல்ல.

ஒருவர் இன்னொருவரிடம் பொருளொன்றை கடனாகக் கொடுக்கையில் தட்டில் வைத்துத்தான் கொடுப்பார்கள்.

அரிசி, நெல் முதலானவற்றை கொடுக்கையில் முறத்தில் வைத்துத்தான் கொடுப்பார்கள். பணமாயிருந்தால் தட்டு.

இது எதனாலென்றால், கொடுப்பவரும் வாங்குபவரும் பொருளாதார அளவில் மேல்கீழாய் இருந்தாலும் அந்த வேற்றுமை மனதிலில்லை என்பதை காட்டுவற்காகவே.

வெறுமனே கையால் கொடுத்தால்,
கொடுப்பவர்கை மேலும் வாங்குபவர்கை கீழுமிருக்கும்.

இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள்
நம்மவர்களின் மனதுள் தோன்றக்கூடாது என்பதற்காகவே, எப்பொருளை கொடுத்தாலும் தட்டில் வைத்துக்கொடுப்பதை பழக்கமாகக்கொண்டிருந்தனர் நம் முன்னோர்கள்.

இதே முறைதான் ஒருவரை அழைப்பதிலும் இன்றுவரை கடைபிடிக்கப்படுகிறது.

அழைப்பிதழ் கொடுக்கப் போகும் போது
கூடவே தாம்பூலத்தட்டையும் எடுத்துக்கச் செல்லுங்கள்...

உயிரெனும் தூரிகை உறவெனும் ஓவியம்...


திருமணம் ஆன பெண்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணச் சொல்லுவார்கள் அது ஏன் என்று தெரியுமா?

அதற்க்கு ஒரு காரணம் உண்டு,

கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான்,

அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம்,

பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும்.

இப்போதெல்லாம் இது சாத்தியமாகுமா..?