02/04/2019

தங்கள் சொந்த மண்ணிலேயே மக்களின் போக்குவரத்துக்குத் தடை..


இப்படித் தடை போட்டு சுங்கச்சாவடிகள் மூலம் கட்டணம் வசூலிப்பது மனித உரிமை மறுப்பு மற்றும் பறிப்பே..

வழிப்பறிகொள்ளைக்கூடங்களாய்த் திகழும் இந்தச் சுங்கச்சாவடிகள் வருடாந்தோறும் கட்டணத்தையும் உயர்த்திக்கொள்வதற்கு கண்டனம் தெரிவிகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

தமிழகத்தில் மொத்தம் 42 சுங்கச்சாவடிகள் இருந்தன. இப்போது 45 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிகிறது. அதில் 22 சுங்கச்சாவடிகளில் இன்று ஏப்ரல் 1ந் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. ஆண்டுதோறும் சுழற்சிமுறையில் செப்டம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கட்டணம் உயர்த்தப்படும். அந்தவகையில் இன்று முதல் கட்டண உயர்ந்திருக்கிறது.
இந்தக் கட்டண உயர்வு இவ்வளவுதான் என்று கூறப்படாமல், 10 விழுக்காடு வரை  இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு கட்டண உயர்வு 10 விழுக்காடு முதல் 20 விழுக்காடு வரை என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் வசூலுக்கப்படும் கட்டணத்திற்கும் அதற்கும் சம்பந்தமில்லை. 40 விழுக்காடு வரைகூட சில சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்பட்டது. இப்போது திட்டவட்டமாக அறிவிக்கப்படாமல் 10 விழுக்காடு வரை இருக்கும் என பொத்தாம்பொதுவாக அறிவிக்கப்பட்டிருப்பதால் வசூல் கடுமையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இப்படி வரைமுறையற்ற கட்டண வசூலாக இருப்பதால்தான் சுங்கச்சாவடிகளை வழிப்பறி கொள்ளைக்கூடங்கள் என்கிறோம். நாம் சொல்வதற்கிணங்கவே அவை நடந்துகொள்கின்றன. அப்பாவி பொதுமக்களின் வண்டியை மறித்து குடும்பத்தோடு வருபவர்களையும் தாக்குவது, கட்டணம் செலுத்திய பிறகும் கஞ்சா, அபின், டாஸ்மாக் சரக்கு போன்றவற்றுக்காக மிரட்டிப் பணம் பறிப்பது என சுங்கச்சாவடிகளில் நடக்கும் அக்கிரமங்களுக்கு அளவே இல்லை. புகார் கொடுத்தாலும் உரிய நடவடிக்கை இல்லை. காவல்துறை வாகனங்கள், தனியார் செக்யூரிட்டி (குண்டர்கள்) வாகனங்கள் உள்ளிட்டவை எந்நேரமும் சுங்கச்சாவடிகளுக்குப் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன. 99 விழுக்காடு வட இந்தியர்களையே ஊழியர்களாக வைத்துக்கொண்டு, அவர்களோடு உள்ளூர் ரவுடிகள், தாதாக்கள், கொலைக்குற்றவாளிகள் போன்றோரையும் இணைத்துக்கொண்டு இந்த அடாவடி அக்கிரமங்களைச் செய்துகொண்டிருக்கின்றன இந்தச் சுங்கச்சாவடிகள்.

தனியார் கையில் உள்ள 15 சுங்கச்சாவடிகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் உள்ள 7 சுங்கச்சாவடிகள் என 22 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. தனியார் கையில் என்பது கார்ப்பொரேட்டுகள் கையில் என்பதே. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் உள்ள 7 சுங்கச்சாவடிகள் என்பது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஏனெனில் அவையும் கார்ப்பொரேட்டுகளின் சுங்கச்சாவடிகள் போல்தான் செயல்படுகின்றன. பரனூர், வானகரம், சூரப்பட்டு, கிருஷ்ணகிரி, கப்பலூர், நாங்குநேரி, எட்டூர் வட்டம், பாலைபுத்தூர், பூதக்குடி, சிட்டம்பட்டி, பள்ளிகொண்டா, வாணியம்பாடி, திருப்பெரும்புதூர், வாலாஜா, வாகைகுளம், ஆத்தூர், பட்டறைப்பெரும்புதூர், எஸ்.வி.புரம், லட்சுமணப்பட்டி, லெம்பலாக்குடி, தனியூர் ஆகியவைதான் கட்டணம் உயர்த்தப்பட்ட இந்தச் சுங்கச்சாவடிகள். இவற்றில் சாலைகளின் தூரம், தரம், வசதி ஆகியவற்றிற்கேற்ப கட்டண விழுக்காடு மாறிமாறி இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

சாலைகளைப் பராமரிக்கவே ஆண்டுதோறும் 10 விழுக்காடு வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்கிறார்கள். ஆனால் அப்படி சாலைகள் பராமரிக்கப்படுவதில்லை. உதாரணத்திற்கு, பள்ளிகொண்டாவிலும் வாணியம்பாடியிலும் 4 வழிச்சாலை 6 வழிச்சாலையாக மாற்றப்படும் என்று 2009இல் அறிவித்து, அதற்கேற்ப அதிக கட்டணம் வசூலித்துவருகிறார்களே தவிர, இன்றுவரை அந்த சாலைப் பணி கூட தொடங்கப்படவில்லை.
சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ் எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும். ஆனால் அது நம் கண்ணில் பட்டதேயில்லை. குடிநீர், கழிப்பறை மற்றும் போதிய அளவில் சர்வீஸ் சாலைகள், மின்விளக்குகளும் இருக்க வேண்டும். ஆனால் அப்படி எங்கும் கானப்படவில்லை.

சுங்கக் கட்டண உயர்வால், வாகனங்கள் ஏற்றிச்செல்லும் சரக்குகளின் விலை உயரும்; இந்த விலைவாசி உயர்வு வரி என்ற பெயரில் மக்கள் தலையில் இடியாக இறங்கும்! நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் அதலபாதாளத்திற்குச் செல்லும். இதனால்தான் சுங்கச்சாவடிகளை அகற்றியாக வேண்டும் என்பதை சிறப்புக் கொள்கையாகவே கொண்டு போராடிவருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. அதனால் பொய்வழக்ககுகளையும் எதிர்கொண்டுவருகிறோம்.
சென்னை உயர் நீதிமன்றம் பல முறை சுங்கச்சாவடிகளின் நடைமுறைகளைக் கண்டித்திருக்கிறது; திருத்திக்கொள்ள உத்தரவிட்டிருக்கிறது. மேலும் 30 செகண்டுகளுக்கு மேல் வாகனங்கள் வரிசையில் நிற்கக்கூடாதென்றும் சொல்லியிருக்கிறது. ஆனால், பல சாவடிகளில் மணிக்கணக்காக, பல கி.மீட்டர்கள் தொலைவுக்கு வாகனங்கள் காத்துக்கிடக்கின்றன. இதில் நீதியரசர்கள், ஆம்புலன்ஸ், காவல் கண்கணிப்பாளர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள்,
பத்திரிகையாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் போன்ற விஐபிக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்காமல், அவர்களுக்கென்று சுங்கச்சாவடிகளில் தனி வழி ஏற்படுத்தப்பட வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் அப்படி ஒரு தனி வழி இதுவரை எந்தச் சுங்கச்சாவடியிலும் அமைக்கப்படவில்லை.

அப்படியென்றால் நீதிமன்றத் தீர்ப்பையே மதிக்காமல் லஞ்சம் ஊழலையே மூலதனமாக வைத்து சுங்கச்சாவடிகளை நடத்தும் கார்ப்பொரேட்டுகள் மத்திய, மாநில ஆட்சியாளர்களின் துணையில் தனி அக்கிரம சாம்ராஜ்யமே நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதானே என்றுதானே அர்த்தம்?

இதைத் தன்னந்தனியாக நின்று தட்டிக்கேட்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. ஆனால் எங்கள் மேல் தேச துரோகம் உள்ளிட்ட பொய் வழக்குகளைப் போடுகிறார்கள் மத்திய, மாநில ஆட்சியாளர்கள்.

இந்தக் கொடூரத்தையும் பயங்கரவாதத்தையும் எதிர்கொண்டு தான் சுங்கச்சாவடிகளை அகற்றியே தீர வேண்டுமென்று போராடிக் கொண்டிருக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

போராட்டத்தின்போதெல்லாம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை அணுகி எங்கள் கோரிக்கையை சாத்வீக முறையிலேயே முறையீடாக அளிக்கிறோம். ஆனால் மத்திய, மாநில அரசுகள் அதனைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் நாங்கள் சோஎர்ந்துவிடமாட்டோம். மக்களுக்காக, அம்மக்களின் பேராதரவுடணேயே இதனைச் செய்து முடிப்போம்.

தங்கள் சொந்த மண்ணிலேயே மக்களின் போக்குவரத்துக்குத் தடை என்பதுதான் இந்தச் சுங்கச்சாவடிகள்!
இவற்றில் கட்டணம் வசூலிப்பது மனித உரிமை மறுப்பு மற்றும் பறிப்பே!
வழிப்பறிகொள்ளை செய்வது மட்டுமல்லாமல் ஆண்டுதோறும் கட்டணத்தையும் இவை உயர்த்துவது கண்டனத்துக்குரியது...

தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி முடிவு.. வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து ஆகுமா.?


https://youtu.be/mDzqJL0saVg

Subscribe The Channel For More News...

வான்கோழி வளர்ப்பு முறைகள்...


ஆடு, கோழி மற்றும் மீன் இறைச்சிகளுக்கு அடுத்தப்படியாக அசைவப் பிரியர்களின் உணவாக இருப்பது வான்கோழி ஆகும். இதன் சுவையும் அனைவருக்கும் பிடிக்கும். தற்போது கோழி வளர்ப்பவர்களின் அனைவரது கவனமும் வான்கோழி வளர்ப்பில் அதிகரித்துக் கொண்டு வருகிறது. தற்போது வான்கோழி வளர்ப்பு முறையை பற்றி பார்போம்.

இடம் தேர்வு செய்யும் முறை :

வான்கோழி வளர்க்க அதிக இடவசதியோ, முதலீடோ தேவையில்லை. வான்கோழி வளர்க்க விரும்புபவர்கள் 200 முதல் 250 சதுர அடி இடத்தில் 100 வான்கோழி குஞ்சுகளை வளர்க்கலாம்.

வான்கோழி இனங்கள் :

அகன்ற மார்புடைய வெண்கல இனம், அகன்ற மார்புடைய வெள்ளை இனம்(கரி-விரட்), பெல்ட்ஸ்வில்லி சிறிய வெள்ளை இனம், நந்தனம் வான்கோழி ஆகிய வான்கோழி இனங்கள் ஆகும். இதில் நந்தனம் வான்கோழி இனமானது நமது பகுதிகளுக்கு வளர்க்க ஏற்றதாகும்.

வான்கோழி கொட்டகை அமைக்கும் முறை :

வான்கோழி வளர்ப்புக்கு புறக்கடையில் அதிக செலவு செய்து கொட்டகை அமைக்கத் தேவையில்லை. அதற்கு பதிலாக பழைய டைமண்ட் லிங்க் வேலிகளை வாங்கி தடுப்பு அமைத்துக்கொள்ளலாம். வான்கோழி வளர்க்கும் போது கொட்டகைக்குள் மழை மற்றும் வெயில் பாதிக்காத அளவுக்கு மூங்கில், தென்னங்கீற்று ஆகியவற்றை கொண்டு கொட்டகை அமைக்க வேண்டும்.

கொட்டகையின் தரை பகுதியில் நான்கு அங்குல உயரத்துக்கு கடலைப்பொட்டு பரப்பிவிட வேண்டும். கடலைப்பொட்டுக்கு பதிலாக தேங்காய் நார்க்கழிவுகள், நெல் உமி ஆகியவற்றையும் பயன்படுத்தலாம். அதன் பிறகு ஒன்றரை மாத அளவிலான கோழிக்குஞ்சுகளை வாங்கி விடலாம்.

கொட்டகையின் சுவர்ப்பகுதியில் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை சுண்ணாம்புத் தூளை தூவி விட வேண்டும். அதே போல் 15 நாட்களுக்கு ஒரு முறை கடலைப்பொட்டை மாற்ற வேண்டும். பகல் வேலையில் கோழிகளை திறந்த வெளியில் மேய்ச்சலுக்கு செல்வதற்கு திறந்து விட வேண்டும்.

தீவனம் அளிக்கும் முறை :

வான்கோழி வளர்ப்புக்கு கடைகளில் விற்கும் தீவனங்களை வாங்கினால் கட்டுபடியாகாது. இதற்கு பதிலாக பச்சை புற்களை அதிக அளவில் கொடுக்க வேண்டும். நம் வயல்களில் உள்ள புற்கள், கீரைகளையும் தீவனமாக கொடுக்கலாம்.

மேலும் 60 சதவீதம் புற்கள், 20 சதவீதம் தவிடு, 20 சதவீதம் முட்டைக்கோழி தீவனங்களை சரியான விகிதத்தில் கலந்து கொடுத்தால் தீவனச் செலவை அதிக அளவில் குறைக்க முடியும்.

நோய் மேலாண்மை :

வான்கோழிகளை அம்மை மற்றும் சளி போன்ற நோய்கள் தாக்கும். இதற்கு சீரகம், மிளகு, வெந்தயம், மஞ்சள் தூள், கசகசா, கடுகு போன்றவற்றை தலா 2 தேக்கரண்டி, பூண்டு 5, வெங்காயம் 4 ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து வாரம் ஒரு முறை தண்ணீரில் கலந்து கொடுத்து வந்தால் நோய்கள் தாக்காது.

அதன் பிறகு மாதம் ஒரு முறை 20 லிட்டர் தண்ணீரில் 200 கிராம் மஞ்சள் தூளைக் கலந்து, வான்கோழியின் தலையை தவிர்த்து, உடல் முழுவதும் முக்கி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கோழிகளுக்கு தோல் நோய் தாக்காது.

வான்கோழியின் மூலம் லாபம் :

வான்கோழிகளை குஞ்சுகளாக வாங்கி வளர்க்கும் போது அடுத்த ஆறு மாதத்தில் முட்டை வைக்க தொடங்கும். 100 கோழிகளுக்கு 20 சேவல்கள் வேண்டும். இதன் மூலம் தினமும் 25 முட்டைகள் வரை கிடைக்கும்.

வான்கோழிகள் 36 மணி நேரத்திற்கு ஒரு முறைதான் முட்டை வைக்கும். இதன் மூலம் தினமும் வருவாயாக 500 ரூபாய் வரை லாபம் பார்க்கலாம். ஒரு வான்கோழியானது ஒன்றரை ஆண்டு வரை முட்டை இடும். வான்கோழிகளை தினமும் மற்றும் பண்டிகை காலங்களில் விற்பனை செய்தால் அதிகளவில் லாபம் பெற முடியும்...

பாரத் சேனா எனும் அமைப்பை சார்ந்தவனால் அந்த துடியலூர் சிறுமி தன்யாஸ்ரீ கற்பழிக்கப்பட்டு இருக்கிறாள்....


இந்த பக்தாள் கூட்டம் கொலை செய்யவும் கற்பழிக்கவுமே கற்றுக் கொடுக்கப்பட்டு களத்தில் இறக்கி விடப்பட்டவர்கள்...

பிடில் / வயலின்...


இது மேல்நாட்டு இசைக்கருவி. இது தமிழ்நாட்டு மிடற்றிசைவாணருக்கு உதவி இசைக்கருவியாகக் கொண்டுவரப் பெற்று நீண்ட காலம் ஆகவில்லை. பாடுவதைப்போல் இசைக்கருவியில் வாசிக்கக் கூடும். எனினும் அது அத்துணை எளிதான காரியமன்று.

கேள்வியின் பயனாய் மிகவும் சாமான்னியமானவர் பாடிவரும் தெருப்பாட்டுகளில் அழகு விளங்குவது போல இக்கருவியில் இசைக்க இயலாது. இது மேல்நாட்டு இசைக்கருவியாயினும் இசை இயக்கம் பெறுவதில் மிகக்கடினமாயினும் ஏனைய இசைக்கருவிகளைவிட இதில் வாய்ப்பாட்டு நன்றாய் அனுசரிக்க கூடுமென்பதை உறுதியாகக் கூறலாம்.

இவ்வாறு செய்வதற்கு முதலில் இக்கருவியைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும். பிறகு தந்திகள் அதற்குத்தக எடுத்தல் வேண்டும். அதன்பிறகு பயிற்சிமுறைகள் எல்லாம் அனுகூலமாய் இருத்தலும், இதை இசைப்போர் பல மாதிரியான மிடற்றிசையின் ஏற்றத்தாழ்வுகளையும், பற்பல இசையமைப்புகளையும் நன்றாய் அறிந்திருக்க வேண்டும்.

அப்பொழுது தான் மிடற்றிசையிலிருந்து எழும் பாட்டை அனுசரித்து வாசிக்கக்கூடும். மிடற்றிசையைப் பிடில் கருவியில் அனுசரிக்கும் அறிவை அடைந்த ஒருவன், இலக்கண சேர்க்கைப் பெற்ற   மிடற்றிசை இவ்வாறானது என்பதைப் பிறருக்கு விளக்கிவரவும் எடுத்துக்கூறவும் முடியும். அக்காலத்தில் பாடுவோருக்கு யாழ்க்கருவியும், சாரந்தா என்ற கருவியுமே துணைக்கருவியாக இருந்தன.

பிடில் கருவியின் சுருதியின் தந்திகளைச் சுருதி செய்வதில் இரண்டு வகைகளுள்ளன. ஒன்று இந்திய முறையார் செய்வது, மற்றொன்று ஆங்கில முறையாற் செய்வது.

இந்திய முறையாற் சுருதி செய்வதில் இடமிருந்து வலமாக ‘4, 3, 2, 1’ ஆகிய தந்திகளின் முறையே மெலியுதானத்துக் குரல், அதாவது மந்தரஸ்தாயி ஸ, மெலியுத்தானத்து இளி, அதாவது மந்திரஸ்தாயி ப, சமன்தானத்துக் குரல், அதாவது மத்தியஸ்தாயி ஸ, சமந்தானத்துக் குரல், அதாவது மத்தியஸ்தாயி ப என்ற முறையில் சேர்க்கப் பெற்ற ‘ஸ-ப, ஸ-ப’ என்ற ஒலிக்கும், அதாவது மூன்றாவது தந்தியானது நாலாவது தந்தியின் ஐந்தாவது சுரத்தை ஒலிப்பதாயும், இரண்டாவது தந்தி மூன்றாவது தந்தியின் நான்காவது சுரத்தை ஒலிப்பதாயும், முதலாவது தந்தியானது இரண்டாவது தந்தியின் ஐந்தாவது சுரத்தை ஒலிப்பதாயும் இருக்கும்.

ஆங்கில முறையாற் சுருதி கூட்டுவதில் நான்காவது தந்தியின் ஐந்தாவது சுரம் மூன்றாவது தந்தியிலும், மூன்றாவது தந்தியின்  ஐந்தாவது சுரம் இரண்டாவது தந்தியிலும், இரண்டாவது தந்தியின் ஐந்தாவது சுரம் முதல் தந்தியிலும் ஒலிப்பதாய் சுருதியில் சேர்த்துக் கொள்வர். நான்காவது தந்தி பெரும்பாலும் (G) ஜி சுரத்திலேயே அதாவது மெலிவுத்தானத்து ப- என்ற சுர ஒலியே வரப்படுவதாய் வைத்துக் கொள்ளப் பெறுவதால், ‘4-3-2-1’ என்ற தந்திகள் முறையே ‘ப-ரீ-த-கா’ தந்திகள் என்ற பெயர்களில் வழங்கி வருகின்றன...

எல்லாம் போச்சு.. சிக்கியது மூட்டை மூட்டையாக பணம்.. பதறிப்போன திமுக எடுத்த முடிவு...


https://youtu.be/rGKeyEUGNHc

Subscribe The Channel For More News...

பிரபஞ்ச இரகசியம்...


புத்துணர்ச்சி பெற.. கவலைகள் நீங்க...

1.உங்களுக்கு நீங்களே இவ்வாறு கூறிக் கொள்ளுங்கள்..

கவலை என்பது வெறும் மனப்பழக்கம் தான்.

பிரபஞ்சத்தின் உதவியுடன் எந்தப் பழக்கத்தையும் என்னால் மாற்ற முடியும்.

2.கவலையைக் கடைப்பிடிப்பதன் மூலம் நீங்கள் கவலையாளர் ஆகி விடுகிறீர்கள்..

கவலைக்கு நேரெதிரான, வலிமையான, நம்பிக்கை என்னும் பழக்கத்தைக் கடைப் பிடிப்பதன் மூலம் உங்களால் கவலையில் இருந்து விடுபட முடியும்.

3.உங்களால் திரட்டக் கூடிய விசுவாசத்தைக் கடைப்பிடிக்கத் துவங்குங்கள்..

விசுவாசம் என்னும் பழக்கத்தை எவ்வாறு உருவாக்குவது?

தினமும் படுக்கையைவிட்டு எழுவதற்கு முன் முதல் வேலையாக.. நான் நம்புகிறேன் என்று உரக்க மூன்று முறை கூறுங்கள்.

4. இந்தச் சூத்திரத்தைக் கொண்டு பிரார்த்தனை செய்யுங்கள்..

நான் இன்றைய தினத்தையும், என் வாழ்க்கையையும், என் அன்பிற்கு உரியவர்களையும், என் வேலையையும் பிரபஞ்சத்தின் கைகளில் ஒப்படைக்கிறேன்.

பிரபஞ்சத்தின் கைகளில் எந்தத் தீங்கும் இல்லை.

நல்லது மட்டுமே உள்ளது.

எது நிகழ்ந்தாலும் சரி,

அது இயற்கையின் விருப்பம்.

அது நல்லதாகவே இருக்கும்.

5.நேர் மறையாகப் பேசுவதற்குப் பயிற்சி செய்யுங்கள்...

இன்று மிக மோசமான நாளாக இருக்கப் போகிறது என்று கூறாதீர்கள்.

மாறாக இன்று ஓர் அற்புதமான நாளாக அமையப் போகிறது என்று சுய பிரகடனம் செய்யுங்கள்.

என்னால் ஒருபோதும் அதைச் செய்ய முடியாது என்று கூறாதீர்கள்.

மாறாக இயற்கை சக்தியின் உதவியுடன் நான் அதைச் செய்வேன் என்று சுயபிரகடனம் செய்யுங்கள்.

6.கவலை பற்றிய உரையாடலில் ஒருபோதும் கலந்து கொள்ளாதீர்கள்...

அனைத்து உரையாடல்களிலும் நம்பிக்கையைப் புகுத்துங்கள்.

மோசமான விஷயங்களுக்கு மாறாக உற்சாகமூட்டும் விஷயங்களைப் பற்றி பேசுவதன் மூலம் மனச்சோர்வூட்டும் சூழலை விரட்டி விட்டு, அனைவரும் நம்பிக்கை யையும் மகிழ்ச்சியையும் உணர உங்களால் உதவ முடியும்.

7. கவலையாளராக இருப்பதற்கு ஒரு காரணம்.. மனம் பய எண்ணங்களாலும், தோல்வி எண்ணங் களாலும், சோர்வூட்டும் எண்ணங்களாலும் நிரம்பி வழிவது தான்...

அதை முறிப்பதற்கு, நம்பிக்கை, மகிழ்ச்சி, புகழ், பொலிவு ஆகியவற்றைப் பற்றிய பகுதிகளைக் குறித்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொன்றையும் மனப்பாடம் செய்து மனத்தில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

அவற்றை மீண்டும் மீண்டும் கூறி வாருங்கள். அப்போது, நீங்கள் உங்கள் ஆழ் மனத்திற்குக் கொடுத்துள்ள தன்னம்பிக்கையை உங்கள் ஆழ்மனம் உங்களுக்குத் திருப்பிக் கொடுக்கும்.

8.நம்பிக்கையான மக்களிடம் நட்புறவை வளர்த்துக் கொள்ளுங்கள்...

நேர்மறையான, விசுவாசத்தை உருவாக்கும் எண்ணங்களைச் சிந்திக்கும் படைப்புச் சூழல் உருவாவதற்குப் பங்களிக்கும் நண்பர்களை உங்களைச் சுற்றி வைத்துக் கொள்ளுங்கள்

இது நம்பிக்கை மனப்போக்கை மீண்டும் தூண்டும்.

9. தங்கள் சொந்தக் கவலைப் பழக்கத்தை விட்டொழிக்க...

உங்களால் எத்தனை பேருக்கு உதவ முடியும் என்று பாருங்கள்.

மற்றவர்கள் தங்கள் கவலைகளில் இருந்து மீள்வதற்கு நீங்கள் அதிக  சக்தியைப் பெறுவீர்கள்.

10.உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளும் கடவுளின் கூட்டாளியாகவும், நண்பனாகவும் வாழ்வதாகக் கற்பனை செய்யுங்கள்...

கடவுள் உண்மையிலேயே உங்களோடு நடந்து வந்தால், நீங்கள் கவலைப்படுவீர்களா? பயப்படுவீர்களா?

கடவுள் என்னோடு இருக்கிறார் என்று கூறுங்கள்.

நான் எப்போதும் உன்னோடு இருக்கிறேன் என்று சத்தமாக சுயபிரகடனம் செய்யுங்கள்.

பிறகு அதை மாற்றி நீ இப்போது என்னோடு இருக்கிறாய் என்று கூறுங்கள். தினமும் அந்த சுய பிரகடனத்தை  மூன்று முறை கூறுங்கள்.

உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும்...

ஸ்டெர்லைட் ஆலை பினாமி திமுக...


YOU BE THE JUDGE:  தூத்துக்குடியில், கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தபோது, ஸ்டெர்லைட் ஆதரவாளர் ஜான் அலெக்ஸாண்டர் கூட வந்தது ஏன்?

உணவே மருந்து - எளிய இயற்கை மருத்துவம்...


1) பூண்டு சாப்பிட்டீர்களென்றால்... உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

2) சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

3) பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

4) சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்... நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

5) வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

6) பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்... கண் நோய்கள் நெருங்காது.

7) சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

8) பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

9) தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்...

வேலூரில் மூட்டை மூட்டையாக சிக்கிய பணம், ஆவணம், சிக்கிய துரைமுருகன் உதவியாளர்.. கப் சிப் திமுக...


https://youtu.be/Ho8HdSDxakw

Subscribe The Channel For More News...

ஒரு அடிப்படையான விஷயத்தை நினைவில் கொள்...


நீ செய்வது எதுவாக இருந்தாலும் அதை விரும்பி செய், அதில் அங்கீகாரம் தேடாதே. அது பிச்சையெடுப்பதைப் போன்றது. ஏன் ஒருவர் அங்கீகாரம் தேட வேண்டும் ஏன் ஒருவர் அடையாளம் காணப்படுவதில் இவ்வளவு ஆர்வமாக உள்ளார்.

உன்னுள் ஆழ்ந்து பார் நீ செய்வதை நீ விரும்பாமல் இருக்கலாம், நாம் தவறான வழியில் போகிறோமோ என்ற பயம் உனக்கு இருக்கலாம், எல்லோரும் பாராட்டப்படுவதன் மூலம் நீ நாம் சரிதான் என்ற உணர்வைப் பெறலாம். அங்கீகாரம் நீ சரியான இலக்கை நோக்கி தான் போய் கொண்டிருக்கிறாய் என்ற நம்பிக்கையை கொடுக்கலாம்.

இது உன்னுடைய உணர்வுதான். இதற்கும் வெளி உலகுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் ஏன் அடுத்தவர்களை சார்ந்திருக்க வேண்டும் எல்லா விஷயங்களுக்கும் அடுத்தவர்களை சார்ந்திருக்கையில், நீயே சார்ந்தவனாகி விடுகிறாய்

நான் நோபல் பரிசை ஏற்றுக் கொள்ள மாட்டேன். அதற்கு பதிலாக இந்த உலகத்திலுள்ள எல்லா நாடுகளிலிருந்தும், எல்லா மதங்களிலிருந்தும் வரும் கண்டனத்தை நான் பெரிதாக மதிக்கிறேன். நோபல் பரிசை நான் ஏற்றுக் கொண்டால் நான் சார்ந்து இருப்பவனாகி விடுகிறேன். நான் என்னை மதிக்கவில்லை, பதிலாக நோபள் பரிசை மதிக்கிறேன் என்றாகி விடும். இப்போது நான் என்னை மதிக்கிறேன் வேறு எதற்க்கும் நான் மதிப்பளிக்கவில்லை. இந்த வழியில் நீ தனித்துவமானவனாக இருக்கலாம். இப்படி தன்னுடைய வழியில் முழுமையான சுதந்திரத்தில் வாழ்வது, உன்னுடைய சொந்த காலில் நிற்பது, தன்னுடைய சொந்த முயற்சியில் இருப்பது ஒரு மனிதனை உண்மையான நிலை பெற்றவனாகவும் வேரூன்றியவனாகவும் மாற்றும். அதுதான் ஒரு மனிதன் மலர்தலின் ஆரம்பம்.

தன்னைப் பற்றிய உணர்வு சிறிதளவாவது இருக்கும் மனிதன் தனது அன்பில், தனது சொந்த முயற்சியில், மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி சிறிதளவு கூட கவலைப்படாமல் வாழ்வான். உனது வேலை எந்த அளவு மதிப்பு வாய்ந்ததோ அந்த அளவு குறைவாகத்தான் உனக்கு மரியாதை கிடைக்கும். மேலும் உனது வேலை மிகுந்த புத்திகூர்மை கொண்ட வேலையாக இருக்கும் பட்சத்தில் உனது வாழ்நாளில் உனக்கு மதிப்பு கிடைக்காது. நீ கண்டனம் செய்யப் படுவாய். இரண்டு மூன்று நூற்றாண்டுகள் கடந்த பிறகு உனக்கு சிலை வடிக்கப்படும். நீ எழுதிய புத்தகங்கள் மதிக்கப்படும். ஒரு உண்மையான அறிவாளியை புரிந்து கொள்ள இந்த சாதாரண மனித குலத்திற்கு மூன்று நூற்றாண்டுகள் தேவைப்படும். இந்த இடைவெளி மிகப் பெரியது. முட்டாள்களால் மதிக்கப்பட நீ அவர்களது கோட்பாட்டிற்க்குள் அடங்க வேண்டும், அவர்களது எதிர்பார்ப்பின்படி இருக்க வேண்டும். இந்த நோய் பிடித்த மனித குலம் மதிக்க வேண்டுமானால் நீ அவர்களை விட நோய் பிடித்தவனாக இருக்க வேண்டும். அப்போது அவர்கள் உன்னை மதிப்பார்கள். ஆனால் அதனால் நீ பெறுவது என்ன நீ உனது ஆன்மாவை இழக்கிறாய், நீ எதையும் பெறுவதில்லை...

அடுத்த 2 நாட்களுக்கு உள்தமிழகத்தில் கடுமையான வெயில்.. மக்களே உஷார்...


https://youtu.be/cDizR0VK9Ws

Subscribe The Channel For More News...

துளசி...


எந்த வீட்டில் காலையிலும் , மாலையிலும் " துளசிதேவி யை" வணங்கி வருகிறார்களோ , அங்கு " யமதேவன் " நுழைய முடியாது, கெட்ட ஆவிகளும் அண்டுவதில்லை.

நாள்தோறும்  " தீபமேற்றி " பூஜிப்பவர்களுக்கு 100 க்கணக்கான யாகம் செய்ததின் பலனை அடைவர்.

துளசியின் காற்று பட்டாலும்,, துளசியை வலம் வந்து வணங்கி னாலும் எல்லா பாபங்களும் நீங்கும்.

தொடுபவர்கள் புனிதம் அடைகிறார்கள். துளசியின் வேர்ப்பக்கம் உள்ள தூசியை நெற்றியிலிடுவது மாபெரும் கவசமாகும்.

பகவான் ஹரிக்கு ஸமர்ப்பிக்கப்பட்ட துளசி தீர்த்தத்தை, பக்தியுடன் ஏற்பவர் கங்கையில் நீராடிய பலனை அடைவர்.

பகவானது தாமரைப் பாதங்களில் சந்தனம் கலந்து துளசி இலையை ஒட்டுபவர், ஒரு லட்சம் அஸ்வமேத யாகத்தை நடத்திய பலனை பெறுவர்.

துவாதசி தினத்தில் பகவான் துளசியுடன் வசிக்கிறார்.

துளசி இலைகளை பெளர்ணமி, அமாவாசை , துவாதசி", சூர்ய சங்க்ராந்தி , உச்சி மதியம் , இரவு,vசந்த்யா வேளைகளில் பறிக்கக் கூடாது.

பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரஹங்கள் மதிக்கப்படுகின்றன. ஆனால் பிரதிஷ்டை ஆகாமலேயே மதிக்கப்பட வேண்டியவர்கள் ஶ்ரீமத்பாகவதம் , துளசி சாளக்ராம் கங்கை , வைஷ்ணவர்கள் ஆவார்கள் ஆவார்கள்.இவர்கள் நால்வரும் " ப்ரகாஷ்க் மூர்த்தீகள் " என அழைக்கப்படுவர்.

துளசி ஜெயந்தி " கார்த்திகை பெளர்ணமி " ஆகும்.

துளசியின் பிற பெயர்கள் − ப்ருந்தா , ப்ருந்தாவனி , விஸ்வபூஜிதா , விஸ்வ பவானி , புஷ்பஸரா நந்தினி , க்ருஷ்ண ஜீவானி , ஹரிப்ரியா , கேசப்ரியா , ஸுலபா, வைஷ்ணவி , ஸ்யாமா , ராமா, கெளரி , பஹுமஞ்சரி , அம்ருதா, தமிழில் " திருத்துழாய் ".

பாற்கடலில் தன்வந்த்ரி பகவான் அம்ருதம் கொண்டு வருகையில் அதில் துளசி தளமும் இருந்தது என ப்ரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது...

திமுக பொருளாளர் துரைமுருகன் சிமென்ட் குடோனில் வாக்காளருக்கு கொடுக்க வைத்திருந்த பணம் சிக்கியது...


https://youtu.be/MfrVf08gSFc

Subscribe The Channel For More News...

கம்யூனிசம் என்றால் என்ன.?


இங்கே பலரும் கம்யூனிசத்தை ஏதோ உயர்ந்த கொள்கை போல பேசுகிறார்கள்.

கம்யூனிசம் என்பது அடிப்படையில் முதலாளிகள் செய்யும் இயற்கை அழிவுகளைப் பற்றி கவலைப்படாமல்
அவர்களின் லாபத்தில் பங்கு கேட்கும் கொள்கையே ஆகும்.

ஐரோப்பாவில் 1800களுக்குப் பிறகு மனிதர்கள் மூலம் செய்யும் வேலையை இயந்திரங்கள் மூலம் செய்விக்கும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன.

தொழிலாளர்களின் முக்கியத்துவம் குறைந்து அவர்கள் நசுக்கப்பட்டனர்.

உற்பத்தி பல மடங்கு அதிகமாகிறது. இந்த தொழிற்சாலைகளுக்கு தீனி போடவே கடல்கடந்து நாடுகளைப் பிடித்து வளங்களை சுரண்டி கொண்டு வந்து தொழிற்சாலையில் அதனை பயன்பாட்டுப் பொருளாக மாற்றி மீண்டும் கடல்கடந்து அதே  நாட்டில் கொண்டு போய் விற்று நன்கு கொழுத்தன ஐரோப்பிய நாடுகள்.

அப்போது ஐரோப்பாவின் காற்று நீர் நிலம் என எல்லாமே மாசடைந்து போனது.

இதில் ஏற்பட்ட போட்டியே உலகப் போருக்கு வழிவகுத்தது.

இந்த காலகட்டத்தில் உருவானதே கம்யூனிசம்.

அவர்கள் மாசடைந்த இயற்கைக்காகப் போராடவில்லை.லாபத்தில் பங்கு கேட்டுத்தான் போராடினர்.

இதற்கு வெளிமுலாம் பூசவே பல்வேறு பிரச்சனைகளை உள்வாங்கி தொடர்புபடுத்தி 'உலகப் போராட்டம் அனைத்தும் வர்க்கப் போராட்டமே' என்று ஒற்றை வரியில் முடித்தனர்.

பேராசான் மார்க்ஸ் கூறிய முதன்மை முழக்கம் 'உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' என்பது இல்லை,
'உலக நாடுகளின் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' என்பதே.

அதாவது தொழிலாளர்களுக்குள் சாதி மத பேதமெல்லாம் கிடையாது.

ஆனால் நாடு என்னும் வேறுபாடு உள்ளது என மார்க்ஸ் கூறுகிறார்.

நாடு என்பதற்கு பொதுவான மொழி பொதுவான உணர்ச்சி கொண்ட மக்கள் தனிநாடாக இருக்க வேண்டும் என வரையறை செய்கிறார் மார்க்ஸ்.

இங்கே சுரண்டலை எதிர்த்து போராடும் கம்யூனிஸ்டுகளை நான்... தாங்கள் சுரண்ட வைத்துள்ளதை வேறொருவன் சுரண்டுவதை எதிர்ப்பதாகவே பார்க்கிறேன்.

ஆக கம்யூனிசம் தமிழர்களுக்கான தீர்வு அல்ல என்பது என் கருத்து...

திமுக துரைமுருகன் வீட்டில் ரைடு.. எல்லாம் போச்சு.. தேர்தல் ஆணையத்திற்கு பறந்த கடிதம்...


https://youtu.be/0m8JZgRMvds

Subscribe The Channel For More News...

மன்னா ( Manna) வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


'மன்னா'(Manna) என அழைக்கப்படுவது. விண்ணிலிருந்து பொழிந்த ஒரு மர்மமான உணவுப்பொருளாகும், இது கடவுளால் அனுப்பப்பட்டு, யாத்திராகமத்தின் கடைசி நாற்பது வருட காலப்பகுதியில் பாலைவனப் பயணத்தின் போது இஸ்ரவேலருக்கு உணவாக கொடுக்கப்பட்டது.

இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்தபோது, ​​அவர்கள் அடிமைகளாக இருந்தார்கள். அவர்கள் சினாய் பாலைவனத்தை கடக்க வேண்டியிருந்தது. நிறைய இஸ்ரவேலர்கள் வேறு இருந்தனர், இந்த கட்டத்தில், மக்கள் பட்டினியால் மடிவதை தடுப்பதற்காக,அவர்களின் கடவுள் மன்னாவை பரலோகத்திலிருந்து பூமியில் அனுப்பினார். சனிக்கிழமை தவிர, ஒவ்வொரு நாளும் உணவை வழங்கினார் என்று கூறப்படுகிறது.

யாத்திராகமத்தின் விவிலியத்தில் கூறப்படுகிறது: ஒவ்வொரு நாளும் இரவும் பகலும் பனி தோன்றி மறைந்து, சூரியன் உஷ்ணத்தில் உறிஞ்சுவதற்கு முன்பு அதை சேகரிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.  மேலும் அது தேனோடு தயாரிக்கப்பட்ட பாசியை போல் இருக்குமாம். இது கடவுள் அனுப்பிய ஒரு உணவு இருந்தாலும்  அது என்னவென்று சரியாக தெரியவில்லை.

ஆனால் சதி கோட்பாட்டாளர்கள்: இந்த மர்மமான உணவு ஆதாரத்தைப் பற்றியும் அந்த கடவுளை பற்றியும் யுதர்களின் புனித நூல்களான #சோஹார் #தோரா மற்றும் 13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட #மாய_கஸ்பலா ஆகியவற்றில் விளக்கங்கள் இருப்பதாக கூறுகின்றனர். இந்த நூல்களில் அந்த உணவை வழங்கிய கடவுளை வர்ணிக்கும் போது பல்வேறு அளவிலான மூளை, வெவ்வேறு அளவிலான முகங்கள் மற்றும் ஒளி ஆதாரங்களுடன் இணைந்த வெவ்வேறு அளவிலான உடல் உறுப்புகள் என்றே விவரிக்கிறது.

இது கடவுள் பற்றிய ஒரு விளக்கமாக இருக்கிறது என்று போதித்த போதிலும்கூட, பண்டைய தத்துவவாதிகள், நவீன கண்ணோட்டத்தில், இது ஒரு கடவுள் உருவம் அல்ல, மாறாக இது ஒரு வகை இயந்திரம் என்று வாதிடுகின்றனர்: இவற்றில் மன்னா உணவு ஒரு கடவுளிடமிருந்து வந்த உணவு என்பதை விட, அது ஒரு இயந்திரம் உருவாக்கம் என்றே கூறுகின்றனர்.

மேலும் இந்த இயந்திரம் இஸ்ரேலியர்கள் எங்கிருந்து வந்ததது என்பதற்கான  விளக்கங்களை சதி ஆலோசனை குழு அளிக்கின்றன. எகிப்திலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்னர் அதை அவர்களிடமிருந்து யூதர்கள் திருடிவிட்டதாக கூறப்படுகிறது. சரி இந்த இயந்திரம் எகிப்தியர்களுக்கு எப்படி கிடைத்தது.

முதலாவதாக நாம் அறிய வேண்டியது, #அக்னேடென் Akhenaten (ஆக்கியநாதன்) எகிப்திய பாரவோன்களிலே வித்தியாசமானவராக இருந்தார். நீண்ட மெல்லிய கழுத்து, நெற்றிக்கண், மற்றும் நீளமான மண்டை ஓடுகள் என்று. அவரது உடலின் ஒட்டுமொத்த விசித்திரமான வடிவம், அவர் நம்மிலிருந்து அன்னிய தோற்றத்தை இருப்பதையும். அவர் ஒரு வேற்றுகிரகவாசியாக இருக்கலாம் என்று நமக்கு ஞாபகப்படுத்துகிறது.

மேலும் "அக்னனேடன்" என்ற பெயர், "ஆவி உலக வாழ்க்கை" அதாவது  "வேற்றுலக வாழ்க்கை" என்று எகிப்திய மொழியில் பொருள்படுகிறது. மேலும் சூரியனை போன்ற வட்டவடிவ ஒளி பிழம்பு ஒன்றை வணங்குவார். அது விண்ணில் தென்படும் மறைந்து விடும் என்றும், ஒருவேளை இந்த "வட்ட வடிவம்" ஒரு யுஎஃப்ஒ என்றும்,
அதனுள் உள்ள ஒரு பொருளின் ஆற்றலே அந்த ஒளிப் பிழம்பு என்றும் கூறப்படுகிறது. அது சூரியன் என்று எதிர் வாதம் செய்தாலும் அகேனெட்டன் அதைக் பூமிக்கு கொண்டு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.!

அதாவது அவர் ஒரு விண்கலம் வைத்திருந்ததாகவும், மக்களின் கண்ணிலிருந்து மறையக்கூடிய அந்த விண்கலத்தினுள் உள்ள ஒஒரு பேழை இருந்ததாகவும், அதன் மூலம் பாலைவனத்தில் மழை பொழியச் செய்ததாகவும், செங்கடலையும் பிரித்ததாகவும் கூறப்படுகிறது. அந்த விண்கலம், ஒரு நகரும் மேகம் என்றே பைபிளில் விவரிக்கப்படுகிறது. பின்னர் இந்த மன்னா உணவும் அந்த பேழையின் ஆற்றலின் மூலம் வெளியிடப்பட்டது என்றும். அந்த இயந்திரத்தையே இஸ்ரேலியர்கள் அபகரித்து சென்றதாக Deadsea scroll இல் கூறப்பட்டுள்ளது.

உண்மையில் மன்னா உணப்பொருள்: உடன்படிக்கை பேழையில் உண்டாகும் ஒருவித அணுக்கரு ஆற்றலை மையமாகக் கொண்டு காற்றிலுள்ள ஈரப்பதத்தை, ஒருவித உண்ணத்தகுந்த பாசிகளாக மாற்றியதாக கூறப்படுகிறது. யூதர்கள் இஸ்ரவேலை அடைந்தபோது, ​​மன்னா இயந்திரம் உணவை வழங்குவதற்கு இனி தேவைப்படாது என்று உணர்ந்து, சாலமன் ஆலயத்தில் உள்ள பேழையில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது..

பின்னர் ஆலயமானது பாபிலோனிய படையெடுப்பில் அழிக்கப்பட்டு பிறகு
பேழையானது எகிப்து கிசா பிரமிடில் தஞ்சமடைந்நிருக்கலாம்.! இதை கூற காரணம் முன்னர் ஒரு பதிவில் கிசா பிரமிடில் வெப்பம் அலை சிக்னல்கள் விண்ணிற்க்கு செல்வதை பார்த்தோம். பேழையின் ஆற்றல் மூலமே இது சாத்தியம். எனவே இது ஒருவேளை தங்கள் எஜமானர்களுக்கு இந்த கிரகத்தினை பற்றிய தகவல்களை அனுப்பும் இயந்திரமாகவே தோன்றுகிறது.

காரணம் இந்த பேழையின் பிரதிபலிப்பினாது. மனித இனத்தின் வளர்ச்சியடைந்து நாகரீகங்கள் முதல், பழங்குடியினர் வரை அனைவரிடமும் காணப்படுகிறது.

வேற்றுக்கிரகதின் ஒரு இனம். பேழையின் மூலம் நம்மை வழிநடத்துகிறார்களா? அல்லது நமது கிரகத்தை எடுத்துக் கொள்வதற்க்கா காத்துக் கொண்டிருக்கிறார்களா!? காலம்தான் இந்த கேள்விகளுக்கு விடையளிக்க முடியும்...

தமிழனின் இயற்கை வளங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது...


மிளகின் மருத்துவ பயன்கள்...

           
மிளகில் உள்ள வேதிப் பொருட்கள் அனைத்தும் நம்மை நோயிலிருந்து காக்கும் வேலையைச் செய்கிறது..

மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

மிளகிற்கு வீக்கத்தைக் குறைக்கும் பண்பும் (Anti-inflamattory) வாதத்தை அடக்கும் பண்பும் (Anti vatha)பசியைத் தூண்டும் பண்பும் (Appetizer), வெப்பத்தைக் குறைக்கும் பண்பும் (Antypyretic), கோழையை அகற்றும் பண்பும் (Expectorant), பூச்சிக்கொல்லியாக செயல்படும் பண்பும் (Anti-helmenthetic) உள்ளது.

நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மதிமயக்கம், இவற்றிற்கு நல்ல மிளகு சிறந்த மருந்தாகும்.

வீரியத்தை அதிகரிக்கும் தன்மையும் இதற்குண்டு.

நல்ல மிளகில் பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மாங்கனீசு, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம், வைட்டமின் சி, சத்துக்கள் அதிகம் உள்ளது.

வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் ஆண்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது.

நல்ல மிளகில் piperine என்ற ஆல்கலாய்டு இருப்பதால் பசியைத் தூண்டுகிறது. வயிற்றில் சுரக்கும் என்ஸைம்களை தூண்டி சுரக்கச் செய்கிறது.

மேலும் உமிழ்நீரை சுரக்கச் செய்கிறது. இதனால் ஜீரணத் தன்மை அதிகரிக்கப்படுகிறது.

உணவு சரியான முறையில் செரிக்கப்பட்டால் தான் வாயுத் தொந்தரவு இருக்காது. மேலும் நச்சுக் கழிவுகள் உடலில் தங்காது.

இந்த நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் தன்மை மிளகில் அதிகம் இருப்பதால் தான் நம் முன்னோர்கள் இந்த பழமொழியை பயன்படுத்தினார்கள்.

இதனாலேயே நம் முன்னோர்கள் வெளியிடங்களில் சாப்பிட்டு வரும் போது பத்து மிளகை வாயில் போட்டு சுவைத்து சாப்பிட்டு விடுவார்கள்.

வெளியில் தயாரிக்கப் படும் உணவினால் ஏற்படும் நச்சுத்தன்மை அனைத்தையும் இந்த பத்து மிளகு முறித்து விடும்...

திமுக கூட்டணிக்குள் விரிசல். விசிக திருமாவளவனின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றிய கொமதேக...


https://youtu.be/TasX-Fp6B4w

Subscribe The Channel For More News...

பிரபஞ்ச இரகசியம்...


நமக்கு தேவையான அனைத்தையும் இப் பிரபஞ்சத்திடம் இருந்து நாமே பெறலாம்.

இப் பிரபஞ்சம் அனைவருக்கும் சொந்தம்.

இப் பிரபஞ்ச பேராற்றல் நமக்கு தேவையான அனைத்தையும்  கொடுப்பதற்கு தயாராக உள்ளது, நாம் தான் பெறுவதற்கு தயராக இல்லை. தவறு நம் மீது தான்..

அனைவருக்கும் சூரியன். சந்திரன் காற்று என இயற்கைக்கு உட்பட்ட அனைத்தும் சமமாகவே கொடுக்கிறது.

நாம் விரும்பியதை அடைய நமக்கு முழு அதிகாரம் இருக்கிறது.

இதற்காக நாம் யாரும் நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

நமக்கு நாமே குரு.. நாம் தான் பில்கேட்ஸ்க்கு ஒரு சூரியன் நமக்கு ஒரு சூரியன் என்று தவறாக புரிந்து கொண்டு இருக்கிறோம்.

நமக்கு ஒரு பிரச்சனை என்றால் நாம் இப் பிரபஞ்சத்திடம் கேட்கும் விதத்தில் தான் தவறு நடக்கிறது.

ஆக மொத்தத்தில் நம்முடைய புரிதல் கோணம் தான் தவறானது.

சரி இப்பொழுது இப் பிரபஞ்ச பேராற்றலை நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி எப்படி வெற்றி காண்பது என்பதை பார்ப்போம்.

மிக மிக சுலபமான வழி முறையாக உள்ளதே, பலன் அளிக்கு்மா என நினைக்க வேண்டாம். பயன்படுத்தி பாருங்கள்  பலன் நிச்சயம்.

மந்திரம் சொல்ல வேண்டாம. தியானம் செய்ய வேண்டாம். பணம் செலவு செய்ய வேண்டாம் நேரம் ஒதுக்க வேண்டாம்.

நாம் சாதாரணமாக செயல்களில் ஈடு பட்டுக்கொண்டே  இப் பிரபஞ்ச சக்தியிடம் அனைத்தையும் பெறலாம்.

இதற்கு எல்லாம் என்ன செய்ய வேண்டும் மிக சுலபம் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபருக்கும் மனதார நன்றி மூன்று முறை கூற வேண்டும்.

அவ்வளவு தான் மற்றதை இப்பிரபஞ்சம் நமக்கு தேவையானதை நடத்தி காட்ட தயாராகி விடும்.

இதை நாம் செய்வதற்கு மறந்து விடுவோம் இதையும் விட சுலபமான ஒரு வழி உள்ளது.

அது என்ன வென்றால் தற்காலத்தில் தொலைபேசி இல்லாமல் யாரும் இல்லை ஆகவே ஒவ்வொரு தொலைபேசி அழைப்பு மணி ஒலிக்கும்  போதும் நன்றி என்ற ஒரு மாயாஜால வார்த்தயை கூறிவிட்டு பச்சை நிற வண்ணத்தை தொட்டு பேச தொடங்குங்கள்.

பிறகு உங்கள் வாழ்க்கை முறையை மாற்றி நல்ல ஒரு உயர்ந்த நிலையை அடையவதற்க உண்டான  தொடக்க பாதைக்கு இப்பிரபஞ்சம் பச்சை நிற கொடி அசைத்து காட்டி விடும்..

சரி இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் கேட்கலாம்.

நமக்கு ஒருவர் பரிசு பொருட்கள் அல்லது உதவி செய்யும் பொழுது நாம் என்ன கூறுகிறோம் நன்றி என்கின்ற வார்த்தையை கூறுகிறோம் அல்லவா அதே போல் தான் இதுவும்.

ஐஸ்டீன் சூத்திர படி எந்த ஒரு நேர் வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு..

அது போலவே இப்பொழுது இங்கே நமக்கு கொடுப்தற்கு முன்பே நன்றி கூறி விடுகிறோம். இப்பொழுது பிரபஞ்சம் நமக்கு கடமை பட்டு விடுகிறது நமக்கு தேவையை நிறைவு செய்யகிறது...

ஒபிஎஸ் தன் மகனுக்காக 1000 கோடி செலவு செய்ய திட்டம்... இரகசியத்தை போட்டுடைத்தை தங்க தமிழ்ச்செல்வன்...


https://youtu.be/-MwF8go82Eg

Subscribe The Channel For More News...

மூலிகைக் குடிநீர்...


மூலிகைகள் கலந்த குடிநீர் மூலிகைக் குடிநீர் எனப்படுகிறது. சீரகத்துடன், ஆவாரம்பூ (Cassia auriculata), ஆடாதோடை (Justicia adhatoda) இலைகள், துளசி இலைகள், வல்லாரை இலைகள், கரிஞ்ஞாலி (Acacia catechu) வேர், மாம்பட்டை, நெல்லிக்காய்ப் பட்டை ஆகிய மூலிகைகளை சம அளவில் கலந்து பொடியாக நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகிறது. அதிலிருந்து தயாரிக்கப்படுவதே மூலிகைக் குடிநிர்.

வெறும் குடிநீரை அருந்துவதை விட சித்தர்கள் கண்டறிந்து கூறியுள்ள மூலிகைக் குடிநீரை அருந்தினால் உடலுக்கு சக்தி கிடைப்பது மட்டுமின்றி நோயும் தடுக்கப்படும்.

அந்த வகையில் ஆவாரம் பூ குடிநீர், கரிசாலை குடிநீர், நன்னாரி குடிநீர், துளசி குடிநீர், வல்லாரை குடிநீர், சீரகக் குடிநீர், நெல்லிப்பட்டைக் குடிநீர், மாம்பட்டைக் குடிநீர், ஆடாதோடைக் குடிநீர் போன்றவை அடங்கும்.

நோயில்லாத வாழ்வே சிறப்பான வாழ்க்கையாகும். இத்தகைய வாழ்வு வாழ நாம் கடைப்பிடிக்க வேண்டியது சுகாதாரமே..

சுகாதாரம் என்பது உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை எல்லாமே அடங்கும். அதுபோல், உடலும், மனமும் நன்றாக இருந்தால் அதுவே ஆரோக்கியமாகும்.

இன்றைய சூழலில் குடிநீர், உணவு, இருப்பிடம், காற்று என அனைத்தும் மாசுபட்டுக் கிடக்கின்றன. குடிநீரினால் உண்டாகும் நோய்களே மக்களை அதிகம் பாதிப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கும் நீர் கூட சுத்தமானது என்பதை உறுதி செய்ய முடியாது. இவைகள் பெரும்பாலும் இரசாயன வேதிப் பொருட்கள் கலந்ததாக உள்ளன. இவற்றை அருந்துவதால் பல நோய்களுக்கு இதுவே அஸ்திவாரமாக அமைந்து விடுகிறது. இதனால் நன்கு சுத்தமான நீரை அருந்த வேண்டும்.

ஆவாரம்பூ குடிநீர்...

ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..

என்ற மருத்துவப் பழமொழி உண்டு. ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது. இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான்.

நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.

இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போõக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.

நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.

இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

துளசி குடிநீர்...

துளசி நமக்கு அருமருந்தாகும். துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு.

அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும், வெயில் மற்றும், மழைக்காலங்களில் அலைந்து திரிபவர்களுக்கு துளசி குடிநீர் அருமருந்தாகும். இது உடற்சூடு, பித்தம் போன்றவற்றைத் தணிக்கக் கூடியது.

டைபாய்டு, மஞ்சள்காமாலை, மலேரியா, காலரா நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். தொண்டைச்சளி, வறட்டு இருமல், புகைச்சல், தலையில் நீர் கோர்த்தல், அடிக்கடி தும்மல், போன்றவற்றைப் போக்கும். இரத்தத்தில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

வல்லாரை குடிநீர்...

எல்லா நோய்களுக்கும் கொடுக்கப்படும் மருந்தில் முதல் மருந்தாகவும், துணை மருந்தாகவும் இருப்பது வல்லாரை.

இதனை சரஸ்வதி மூலிகை என்று அழைக்கின்றனர். இது மூளைக்கும், அதன் செயல்பாட்டிற்கும் அதாவது அறிவுத் திறனுக்கும், ஞாபக சக்திக்கும் ஏற்ற மூலிகையாகும்.

காயவைத்த வல்லாரை பொடியை நீரில் போட்டு கொதிக்க வைத்து அனைவரும் அருந்தலாம்.

இது ஞாபக சக்தியைத் தூண்டுவதுடன், பித்த அதிகரிப்பைக் குறைக்கும். இரத்தத்தில் ஏற்படும் இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கி இரத்தச் சோகையை நீக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும். தொழுநோய், யானைக்கால் நோய், மூலம், மூட்டுவலி போன்ற வற்றிற்கு சிறந்த மருந்தாகும்.

கரிசாலை குடிநீர்...

ஏர்தரும் ஆன்ற கரிசாலையால் ஆன்மா சித்தி..

என்றார் வள்ளலார் இராமலிங்க அடிகள். அத்தகைய சிறப்பு வாய்ந்த கரிசாலை கண்களுக்கு ஒளியையும் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தையும் தரக்கூடியது.

வெள்ளை கரிசாலை இலைச் சூரணம் 200 கிராம் எடுத்து அதனுடன் முசுமுசுக்கை இலை 35 கிராம், நற்சீரகத்தூள் 35 கிராம் அளவு சேர்த்து கொதிக்க வைத்து தேவையான அளவு பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் கலந்து காலை, மாலை தேநீருக்குப் பதிலாக அருந்தலாம். அல்லது, கரிசாலையுடன் நற்சீரகம் சேர்த்துகொதிக்க வைத்து குடிநீராகவும் அருந்தலாம்.

கரிசாலை இரத்த சோகையைப் போக்கக் கூடியது. இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. இரத்தத்தில் உள்ள பித்தத்தைக் குறைக்கும்...

திமுக வின் மெகா ஊழல்கள்...


பிரபஞ்ச சக்தி...


உங்கள் மனதை போட்டு குழப்பும் பிரச்சனை விரைவில் சரியாகி ஆகி விடும் என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லிவிட்டு வேலையை பாருங்கள்..

விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்பட போகும் அதிசயங்களுக்கு நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி கொண்டே இருந்தால் போதும்..

அது எப்படி சரி ஆகும், சரி ஆகும் வழிகளை பற்றியெல்லாம் நீங்கள் ஆராய வேண்டாம்..

நமக்கு ஒரு சில வழிகள் தான் தெரியும்,
ஆனால் பிரபஞ்சத்திற்கு ஆயிரம் வழிகள் இருக்கும். அது எப்படியும் சரி செய்து விடும்..

உங்கள் வார்த்தைகள் மற்றும் எண்ணங்கள் பிரபஞ்சத்திற்கு கட்டளைகளாக அனுப்பப்பட்டு எல்லாவற்றையும் விரைவில் சரி செய்து விடும்...

உங்களை சுற்றி எதிராக நடப்பதை பற்றி கவலை பட வேண்டாம்.

உங்களுக்கு எதிராக எத்தனை பேர் செயல்படுகிறார்கள் என்பதையும் பற்றி பொருட்படுத்த வேண்டாம்.

பயம் மற்றும் குழப்பங்கள் வரும் போது பதட்டமில்லாமல் ஆழ்ந்த அமைதியாக இருக்க கற்று கொள்ளுங்கள்..

நான் மிகுந்த நம்பிக்கையாக இருக்கிறேன், விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்பட போகும் எல்லா அதிசயங்களுக்கும் நன்றி, பிரபஞ்சத்திற்கு நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி கொண்டே இருங்கள். நிறுத்தாமல் சொல்லி கொண்டே இருங்கள்..

உங்கள் வார்த்தைகள், சந்தோஷமான மற்றும் நம்பிக்கையான உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் போதும் எல்லாவற்றையும் சரி செய்து விடும்...

உங்கள் நேர்மறையான சக்தி இந்த பிரபஞ்சத்தை காட்டிலும் சக்தி வாய்ந்தது என்பதை மட்டும் உணருங்கள்...