26/10/2017

மருக்கள் உங்கள் அழகைக் கெடுக்கிறதா? கவலைய விடுங்க... வெங்காயம் போதும்... உடனே மரு மறைஞ்சிடும்...


பார்ப்பதற்கு மச்சம் போல் இருக்கும் மருக்கள் கொலாஜன் மற்றும் ரத்த நாளங்கள் ஒன்று சேர்ந்து சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாகும்.

பொதுவாக இந்த மருக்கள் முகம், கழுத்து, அக்குள், மார்பின் கீழ்ப்பகுதி, முதுகு போன்ற பகுதிகளில் தான் உண்டாகின்றன. இவை சருமத்தின் அழகையே கெடுத்துவிடுகின்றன. ஆனால் இதுபோன்ற மருக்களைப் போக்க சில எளிய வழிகளை நம் முன்னோர்கள் பின்பற்றியிருக்கின்றனர்.

அவற்றைப் பின்பற்றி, மருத்துவமனைக்குச் செல்லாமல் நம்முடைய வீட்டிலேயே அவற்றை எளிதமாககப் புாக்கிக் கொள்ள முடியும். என்னென்ன பொருட்கள் மருக்களைப் போக்கும் தன்மை கொண்டவை?

இஞ்சி...

ஒரு துண்டு இஞ்சியை எடுத்துத் தோல் சீவி, சிறிது தட்டிக் கொள்ளவும். அப்போது வெளியே வருகிற சாறினை மருக்களின் மேல் தேய்த்துவர வேண்டும். இப்படி தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு செய்து வந்தால், மருக்கள் தளர்ந்து தானாகவே உதிர்ந்துவிடும்.

வெங்காயம்...

வெங்காயத்துக்கும் மருக்களைப் போக்கும் சக்தியுண்டு. வெங்காயத்தை முதல் நாள் இரவே உப்பில் ஊறவைத்துவிட்டு, அடுத்த நாள் காலையில் அதை எடுத்து மை போல அரைத்து, மருக்கள் உள்ள பகுதிகளில் அப்ளை செய்து அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும். நன்கு உலர்ந்ததும் வெந்நீர் கொண்டு கழுவலாம். இதை இரவு தூங்கச் செல்லும் முன் அப்ளை செய்து கொண்டால், இரவு முழுக்க ஊற வைக்க முடியும்.

சீடர் வினிகர்...

ஆப்பிள் சீடர் வினிகரை காட்டனில் நனைத்து, மரு உள்ள இடத்தில் ஒற்றி ஒத்தடம் கொடுத்து வந்தால், மருக்கள் விரைவில் உதிரும்.

டீ ட்ரீ ஆயில்...

டீ ட்ரீ ஆயிலை தொடர்ந்து சருமத்தில் தடவி வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.  அதேசமயம் டீ ட்ரீ ஆயிலை சருமத்தில் அப்ளை செய்வதற்கு முன் மரு உள்ள இடத்தை சோப்பு போட்டு நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். அதற்கடுத்து டீ ட்ரீ ஆயிலைத் தடவலாம்.

ஆயில் தடவும் இடத்தில் சிறிது நேரம் எரிச்சல் உண்டாகும். இதை ஒரு நாளைக்கு மூன்று முறை செய்தால் போதும் மிக விரைவில் மருக்கள் இருந்த சுவடே தெரியாமல் உதிர்ந்துவிடும்

பூண்டு...

பூண்டு சாறினை எடுத்து மருக்கள் உள்ள இடத்தில் தடவி வர, அவை விரைவில் மறைய ஆரம்பிக்கும். இதை ஒரு நளைக்கு மூன்று வேளையும் தொடர்ந்து செய்துவர நல்ல பலன் கிடைக்கும்...

மெர்சல் திரைப்படத்தின் வெற்றிக்கு நன்றி - நடிகர் விஜய்...


தமிழரின் உயிரைக் காப்பற்ற 5 மணி நேரத்தில் 11 லட்சம் ரூபாய் திரட்டிய கேரள கிராமம்...


மதுரையைச் சேர்ந்த ஜெயன், நாமக்கல்லைச் சேர்ந்த மாரியம்மாளைத் திருமணம் முடித்த கையோடு கேரளாவில் குடியேறிவிட்டார். இந்தத் தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சிங்காவனம் என்ற கிராமத்தில் மனைவி, மகள்களுடன் வசித்துவந்தார். ஜெயன், சலவைத் தொழில் செய்துவந்தார். கிராம மக்களின் அன்பைப் பெற்றிருந்தார். கிராம மக்களுக்கு ஜெயனின் உழைப்பும் நேர்மையும் மிகவும் பிடித்துப்போனது. ஜெயனை ‘தமிழர்’ என்ற கண்ணோட்டத்துடன் அவர்கள் பார்க்காமல் தங்களுள் ஒருவராகவே கருதினர்.

தற்போது 45 வயதான ஜெயனுக்குச் சிறுநீரகப் பிரச்னை இருந்தது. கடந்த ஆறு மாதங்களாக மிகவும் அவதிப்பட்டார். சலவைத் தொழிலில் அவரால் ஈடுபட முடியவில்லை. வீட்டுக்குள்ளேயே முடங்கிப்போனார். வாரத்துக்கு இரு முறை டயாலிஸிஸ் செய்யவேண்டி இருந்தது. வறுமையும் வலியும் அவரைச் சூழ்ந்துகொண்டன. ஜெயனின் நிலைகுறித்து அறிந்த கிராம மக்கள் வருத்தமடைந்தனர். இத்தனை ஆண்டுகாலம் தங்களுக்காக உழைத்த அவருக்கு, கைம்மாறு செய்யக் கருதினர். தொடர்ந்து இரு கிராம மக்களும் சேர்ந்து, ஜெயனின் மருத்துவச் செலவுக்கு நிதி திரட்ட முடிவுசெய்தனர்.

‘ஜெயனின் உயிர் காக்கும் கமிட்டி' என்ற பெயரில் தனி இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டது. இரு கிராமங்களைச் சேர்ந்த 5 பேர், அதில் உறுப்பினர்களாக இருந்தனர். வழக்கமாக, கேரளாவில் மார்க்ஸிஸ்ட்-பாரதிய ஜனதா கட்சியினரும் எந்த விஷயத்திலும் கைகோத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால், ஜெயனைக் காப்பற்றும் விஷயத்தில் பாரதிய ஜனதா, மார்க்ஸிஸ்ட், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் இணைந்தனர். இரு கிராமங்களிலும் உள்ள வழிபாட்டுத் தளங்களிலும் ‘ஜெயனின் மருத்துவச் செலவுக்காக மக்கள் இயன்ற பங்களிப்பை வழங்கலாம்' என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அக்டோபர் 15-ம் தேதி விடுமுறை தினத்தில் கமிட்டியினர் கையில் வாளி ஏந்தி நிதி திரட்ட வீதி வீதியாகச் சென்றனர். காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டனர். 5 மணி நேரத்தில் 11.25 லட்சம் ரூபாய் திரண்டது. தங்கள் அன்பைப் பெற்ற சலவைத் தொழிலாளியின் உயிரைக் காப்பாற்ற கிராம மக்கள் நிதியை அள்ளி வழங்கினர். திரண்ட நிதி ஜெயன் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. அடுத்த மாதம் அவருக்குச் சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து கவுன்சிலர் டிகோ தாமஸ் என்பவர் கூறுகையில், “அக்டோபர் 14-ம் தேதி வாகனத்தில் சென்று ‘ஜெயனுக்காக நிதி திரட்ட வருகிறோம்' எனக் கடைசியாக ஒருமுறை அறிவிப்பு வெளியிட்டோம். அடுத்த நாள், 15-ம் தேதி நிதி திரட்ட நடந்தே சென்றோம். கோட்டயம் மாநகராட்சிக்கு உட்பட்ட 2,500 வீடுகளில் நிதி திரட்டினோம்.

கூலித்தொழிலாளர்கள்கூட தங்களது ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கினர். குழந்தைகள் 50 ரூபாய் கொடுத்தனர். சிலர் 25 ஆயிரம் ரூபாய் வரை நிதியளித்தனர். 10 லட்சம் ரூபாய் நிதி திரட்டுவதை இலக்காக வைத்திருந்தோம். திரண்டதோ... 11.25 லட்சம்'' என்கிறார்.

கிராம மக்கள் செய்த உதவியால் உயிர் பெற்றுவிடலாம் என ஜெயனுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. “கடந்த ஆறு மாதங்களாக டயாலிஸிஸ் செய்துவந்தேன். ஒருகட்டத்தில் மருத்துவர்கள், ‘சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யவில்லை என்றால், உயிர் பிழைக்க முடியாது' என்று கூறிவிட்டனர். மனம் உடைந்துபோனேன். எனக்கு இரு பெண் குழந்தைகள். நான் செத்துப்போனால் அவர்களை யார் பார்த்துக்கொள்வார்கள்? என்னிடம் சேமிப்பும் இல்லை. இந்தக் கிராமத்து மக்களின் அன்பைத் தவிர நான் எதையும் சம்பாதித்துவிடவில்லை. அந்த அன்புதான் இன்று என் உயிரை மீட்டுத்தந்துள்ளது'' என ஜெயன் நெகிழ்கிறார்.

கவுன்சிலர் தாமஸ் கூறுகையில், “எங்கள் மண்ணில் முருகன் என்ற தமிழர் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் ஆம்புலன்ஸிலேயே இறந்துபோனார். அந்தச் சம்பவம் எங்களை வெகுவாகப் பாதித்திருந்தது. தற்போது, ஜெயனின் சிகிச்சைக்கு உதவியதன் மூலம் அந்தக் களங்கத்தைத் துடைத்திருக்கிறோம்” என்றார்.

அழகால் மட்டுமல்ல, குணத்தாலும் கடவுளின் தேசம் ஆகிவிட்டது கேரளம்...

காணவில்லை காணவில்லை தலித் வியாபாரிகளை காணவில்லை...


திண்டுக்கலில் SMB நாடார் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கிடையே பைபிள் புத்தகத்தை கொடுத்து மதம் மாற்ற முயன்ற போதகர்கள்...




படம் பிடிப்பதை கண்டவுடன்
பைபிள்களை போட்டுவிட்டு காரில் ஏறி தப்பி ஓட்டம்...

நெல்லை கந்து வட்டி சம்பவம் : திசை திருப்பும் காவல்துறையும்.. அரசும்...


பலியான இசக்கிமுத்துவின் தந்தை தம்பி கைது. காவல் நிலைய வாசலில் இளைஞர்கள்...

பாஜக மோடியும் வட்டி தொழிலும்...


இந்த வட்டிக்காரன் எல்லாம் தன் பணத்தை கொடுத்து விட்டு.. பிறகு பல மடங்காக வசூல் செய்கிறான்...

ஆனால் மோடி யோ ஐந்து பைசா கூட கொடுக்காமல்.. நாம் கடன் வாங்கி அதில் உழைத்து சம்பாதிக்கும் பணத்தில்.. பாதியை ஏமாற்றி பிடிங்கிக் கொள்கிறார்...

இந்த வட்டிக்காரன்களை விடவும் பெரிய மோசடி வட்டிக்காரன் மோடி தான்...

தந்த ரோகம் - பல்பொடி...


அனைத்து விதமான பல் சம்பந்தமான நோய்களை வரவிடாமல் தடுக்கும் ஒரு சித்த மருத்துவ அனுபவ முறை...

பல்பொடி செய்முறை..

1 - சுக்கு
2 - காசுக்கட்டி
3 - கடுக்காய்
4 - இந்துப்பு

இந்த நான்கு சரக்கும் ஒரே எடை அளவு எடுத்து இடித்து போடி செய்யவும்.

இதனைக் கொண்டு தினமும் பல் துலக்கி வர பல் ஈறுகளில் இரத்தம் கசிதல், பல் ஆட்டம், பல் சொத்தை, இவை அனைத்தும் நீங்கும்.

இதனைக் கொண்டு காலை, மாலை, தினமும் இருமுறை பல் துலக்கி வர பல் நோய்களே வராது...

மனோசக்தி...


கண்ணுக்குத் தெரியாத மனோசக்தி ஒன்று நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருக்கிறது என்பதை அறியாமல் அதைத் தூங்க வைத்திருக்கிறோம். நாம்தான் அதைத் தட்டி எழுப்ப வேண்டும்.

நல்லதையே நினைத்தால் நல்லதே நடக்கும், அதைவிட்டு நாம் எப்போதும் பொல்லாததையே நினைத்தால் அதுவே நடக்கும்.

நாம் பிறந்ததிலிருந்தே மனோசக்தி நம்மிடம் இருக்கிறது. யாரிடமிருந்தும் நாம் மனோசக்தியை வங்க வேண்டியதில்லை. பயிற்சியின் மூலம் நாம் அதை அதிகப்படுத்தமுடியும். முனிவர்கள் மட்டும்தான் மனோசக்திப் பெற்றவர்களா? இல்லை தனிமனிதன் ஒவ்வொருவரும் மனோசக்தியைப் பயன்படுத்த முடியும்.

இரண்டு மனம் வேண்டுமென்று நாம் கேட்க வேண்டியதே இல்லை. இரண்டு மனங்களுடன்தான் நாம் பிறந்திருக்கிறோம். நாம் பயிற்சித்தப்படி நடக்கும் வெளிமனம், நாம் பயிற்சிக்காத உள்மனம். அதைப் பயிற்சித்து உபயோகிக்க ஆரம்பித்தால் உலகம் நம் கையில்.

படைப்பின்படி எல்லா மனித உள்மனங்களும் பிறப்பிலிருந்து இணைக்கப் பட்டிருக்கின்றன. அதைத் தூண்டுவதோ துண்டிப்பதோ நம் கையில் இருக்கிறது. பயிற்சியினால் தவிர நம் வெளிமனத்தால் அதை உணர முடியாது.

நாம் உறங்கும்போது நம் வெளிமனமும் உறங்குகிறது, ஆனால் நம் உள்மனம் மட்டும் மற்ற உள்மனங்களுடன் தொடர்புக் கொண்டுதான் உள்ளது.நம் உள்மனம் நாம் பயிற்சிக் கொடுத்தப்படி நல்லதும் செய்யும், கெடுதலும் செய்யும்.

இயற்கையாகவே மனோசக்தியைப் பயன்படுத்துவோரும் நல்லத் தரமானப் பயிற்சினால் மனோசக்தியைப் பயன்படுத்துவோரும் நல்லதையே நினைத்து ஏன் நல்லதையே செய்யக்கூடாது?

கேடுதல்கள் செய்பவர்கள் தற்சமயம் நலமாக வாழ்வது போல் தோன்றினாலும் இறுதியில் படுகுழியில் தள்ளப்படுவதை நாம் பார்க்கப் போகிறோம்.bவாழ்க மனோசக்தி...

பாஜக அருண்ஜெட்லியின் வங்கிகளுக்கு 2.11லட்சம் கோடி அறிவிப்பும்.. இசக்கிமுத்து குடும்பத்தின் மரணமும்...


பொதுத்துறை வங்கிகளுக்கு 2.11லட்சம் கோடியை மத்திய அரசு கொடுக்கவிருக்கிறது என்று நேற்று இந்திய ஒன்றியத்தின் நிதியமைச்சர்  அருண் ஜெட்லி அறிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்புக்கும் நெல்லையில் கடன் தொல்லையால் தீக்குளித்த இசக்கிமுத்து குடும்பத்தின் மரணத்திற்கும் என்ன சம்பந்தமென்று தானே கேட்கீறீர்கள்.

சம்பந்தமிருக்கிறது அன்பான தோழர்களே...

இந்திய வங்கிகளில் கார்ப்ரேட் முதலாளிகள் வாங்கி குவித்திருக்கும் கடன்கள் சற்றொப்ப 20லட்சம் கோடியை தாண்டி நிற்கிறது.

இதில் வரவே வராது என்று முடிவு செய்யப்பட்ட கடன்கள் மட்டும் 9லட்சம் கோடிகளை தொடுமென்று இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் நேற்று அறிவித்திருக்கிறார்.

இப்படி வங்கிகளில் வாங்கிய கடன்களை முதலாளிகள் கட்டாத காரணத்தால் வங்கிகள் திவாலாகும் நிலைமைக்கு சென்றது.

இந்த இக்கட்டான நிலைமையை சரிசெய்ய பலரும் அரசுக்கு ஆலோசனை வழங்கி கொண்டிருந்தார்கள். ஆனால் ஒருவரும் கார்ப்ரேட் கம்பெனிகளிடம் கண்டிப்பு காட்ட வேண்டுமென்று தவறியும் சொல்லவில்லை.

இதனையடுத்து இந்த சிக்கலுக்கு தீர்வாக முன்வைக்கப்பட்டதுதான் ஏழை எளிய மக்களின் கையில் இருக்கும் காசை புடுங்கி அதனை வங்கிகளுக்கு பகிர்ந்தளிப்பது என்ற திட்டம்.

அதன்படி முதலில்  கொண்டு வரப்பட்டது தான் 500 மற்றும் 1000ரூபாய் நோட்டு தடை எனும் 'பணமதிப்பிழப்பு' நடவடிக்கை.

இதன்படி நவம்பர் 8 2016 அன்று  நாட்டில் புழக்கத்திலிருந்த 86% நோட்டுகளான 500 மற்றும் 1000 ரூபாயை ஒரே நாளில் செல்லாது என்று அறிவித்தார் மோடி.

இதனால் இந்தியா முழுவதுமுள்ள மக்கள் தம்மிடமிருந்த பணத்தை வங்கிகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டனர். 

இதனால் 10 நாட்களில் மட்டும் 3.2லட்சம் கோடி பணம் வங்கிக்குள் வந்ததென்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அப்போது அறிவித்தது. ஒரு வங்கிக்கே இந்த நிலைமையென்றால் மற்றவங்கிகளுக்கு எவ்வளவு வந்திருக்குமென்று  நினைத்து பாருங்கள்.

அடுத்து இதை நிரந்தரமாக்க கொண்டு வரப்பட்ட திட்டம் தான் சரக்கு மற்றும் சேவை வரி திட்டம்.  இதன்மூலம் நாட்டிலுள்ள அனைவரும் விரும்பியோ விரும்பமலோ வங்கிகளுக்குள் செல்லும் நிலைமை உண்டாக்கி விட்டார்கள்.

அதிகபடியான வரியால் அரசாங்கத்திற்கும் வருமானம் அதிகரித்தது. உதாரணத்திற்கு ஜீலை 94,063 கோடியும் ஆகஸ்டில் 90,669 கோடியும் மற்றும் செப்டம்பரில் 92,150 கோடியும் வருவாய் வந்திருக்கிறது.

இப்படி நாட்டிலுள்ள குடிமக்களை வரி என்ற பெயரில் கசக்கி பிழிந்ததனால் கிடைத்த அதிக வருவாயை கொண்டு தனது சதிதிட்டத்தை மெல்ல மெல்ல மோடி அரசு ஆரம்பித்திருக்கிறது.

அதில் முதலாவதாக ’மேக் இன் இந்தியா’ என்ற திட்டத்தின் மூலம் உள்நாட்டு முதலாளிகளுக்கும், வெளிநாட்டு முதலாளிகளுக்கும் இராணுவத்திற்கு ஆயுதம் தயாரிக்கிறமென்று பல ஆயிரம் கோடிகளை அள்ளி கொடுத்திருக்கிறது.

அடுத்ததாக உள்நாட்டு கார்ப்ரேட் கம்பெனிகளால் திவாலாகும் நிலைமையிலுள்ள வங்கிளை காப்பாற்ற நம்மை கசக்கி பிழிந்து எடுத்த பணத்திலிருந்து 2.11லட்சம் கோடியை கொடுத்திருக்கிறது.

ஆனால் தவறியும் இதுவரை கடன் வாங்கிய பணக்காரர்களை நோக்கி எந்த அரசும் தங்களது சுண்டு விரலையும் நீட்டவில்லை.

இப்படி முதலாளிகளுக்காக ஏழை எளிய மக்களின் மேல் அதிக சுமையை செலுத்தியதனால் ஏற்பட்ட சூழலை சமாளிக்கவே இசக்கிமுத்து போன்றவர்கள் கந்துவட்டி என்ற அடாவடி கும்பல்களிடம் கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.

அதிலிருந்து மீள முடியாதளவிற்கு இந்த அரசுகள் புதிய புதிய சட்டங்களின் போட்டு இசக்கிமுத்துகளை  மீண்டும் மீண்டும் கடன் வாங்கும் சூழலுக்கு தான்  தள்ளிக்கொண்டிருக்கிறது.

இந்த சூழலை பயன்படுத்திக்கொள்ளும் கந்துவட்டி எனும் இந்த அடாவடி கும்பல்கள் இசக்கிமுத்துகளிடம் கொடுத்ததை விட அதிக பணத்தை அநியாய முறையில் பறிக்க முயலுகிறார்கள். பணத்தை செலுத்த முடியாத இசக்கிமுத்துகல் சாவை தேர்ந்தெடுக்கிறார்கள்.

நமக்கு நெல்லையில் நடந்த ஒரு சம்பவம் தெரிய வந்திருக்கிறது இதுபோல எண்ணெற்ற சாவுகள் நம் பார்வைக்கு வராமலையே இந்தியாவெங்கும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

எனவே இதுபோன்ற சாவுகள் இனியும் நடக்காமலிருக்க வேண்டுமென்றால் இந்த சாவுக்கு முதன்மை காரணமான 1% பணக்காரர்களுக்காக 99% மக்களை வாட்டி வதைக்கும் கொள்கையை திட்டங்கள் என்ற பெயரில் தொடர்ந்து கொண்டு வந்து கொண்டிருக்கும் அரசுகளை நோக்கி நாம் கேள்விகளை கூர்மையாக்க வேண்டும். அரசுகளின் கொள்கைகள் மாறினால்  இந்த சூழலை பயன்படுத்த நினைக்கும் ரவுடி கும்பல்களும் உள்ளூர் பொறுக்கி அதிகாரிகளும் தன்னால் மாறுவார்கள்...

- மே 17 இயக்கம்

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 42...


ஜென் தியானம்...

தியான முறைகளைக் குறித்து ஓஷோ ரஜனீஷ் அளவுக்கு யாராவது பேசியும், எழுதியும் இருக்கிறார்களா என்பது சந்தேகமே. ஆரம்ப காலங்களில் வட இந்தியாவில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றிய அவர் கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய தத்துவங்களை மிக ஆழமாகப் படித்து பல வருடங்கள் அவற்றைக் கற்பித்தும் வந்தவர்.

அவருடைய விஞ்ஞான பைரவா தந்த்ரா புத்தகத்தில் 112 வகை தியானங்களை விவரித்திருக்கிறார். பண்டைய காலத்தில் பின்பற்றப்படுத்தப் பட்ட பல தியானங்களை புதிய மனவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப மாற்றி தன்னுடைய தியான மையங்களில் அறிமுகப்படுத்தியவர் அவர். அந்த தியான முறைகளுக்கு அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் நல்ல வரவேற்பும் இருந்தது.

தியான முறைகளை முறைப்படி கற்று அதைச் சில நாட்கள் செய்து பாருங்கள். உங்கள் தன்மைக்கு ஏற்ற தியானங்களை மட்டும் முயன்று பாருங்கள். சில நாட்களில் உங்களிடம் எந்த நல்ல மாற்றத்தையும் ஏற்படுத்தா விட்டால் அது உங்களுக்கேற்றதல்ல. அதை விட்டு விட்டு அடுத்த தியானத்தை ஆரம்பியுங்கள். மாறாக சில நாட்களில் உங்களுக்குள் நல்ல மாறுதலை நீங்கள் உணர்ந்தீர்களானால், அதை மிகவும் ஆர்வத்துடனும், அக்கறையுடனும் தொடருங்கள் அது பல அற்புதங்களை உங்களுக்குள் ஏற்படுத்தும் என்று சொல்கிறார் ஓஷோ.

ஓஷோ ஏராளமான தியானங்களை விளக்கி இருந்தாலும் ஜென் பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் தியானம் ஒன்று அவர் உபதேசித்த தியானங்களுள் பிரதானமானது. அந்த தியானத்திற்கு அடிப்படையான சில விஷயங்கள் என சிலவற்றை ஓஷோ சொல்கிறார்.

முதலில் ஜென் தியானம் செய்யும் இடத்தை மிகவும் முக்கியமாகக் கருதுகிறார். அது இயற்கையழகு மிகுந்த ஆரவாரமற்ற அமைதியான இடமாக இருப்பது நல்லது என்கிறார். (பூனே போன்ற பெருநகரங்களில் இருக்கும் ஓஷோவின் தியான மையங்கள் இயற்கையான அழகான சூழ்நிலைகளுக்குப் பெயர் போனவை.) அப்படி இல்லா விட்டால் தினமும் வீட்டிலேயே ஒரு அறையில் தொடர்ந்து தியானம் செய்வது நல்லது என்கிறார். தொடர்ந்து தியானம் செய்யும் அந்த இடம் தியான அலைகள் நிறைந்திருக்கும் ஆதலால் நாட்கள் செல்லச் செல்ல தியான நிலை வேகமாகக் கைகூடும் என்கிறார் அவர்.

அடுத்ததாக உட்காரும் விதம் சௌகரியமாக இருப்பதும் மிக முக்கியம். உடல் அசௌகரியப்பட்டால் மனம் அதையே எண்ணியபடி இருக்கும், தியானம் கைகூடாது. உடல் பற்றிய நினைவே வராத அளவு நல்லது என்கிறார்.

ரிலாக்சாக இருப்பது அடுத்த முக்கியமான விஷயம். மனதோடு போராடுவது, மனதை அடக்க முயல்வது போன்றவை எதிர்மாறான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதால் அதைக் கைவிடுவது நலம் என்கிறார்.

ஜென் பௌத்தம் ஒருவனை உள்நோக்கிப் பயணம் செய்யச் சொல்கிறது. உள்ளே நடக்கும் அனைத்திற்கும் ஒரு பார்வையாளனாக இருக்க வலியுறுத்துகிறது. எண்ணங்களை எந்த விதமானமான தணிக்கைகளும், தீர்ப்புகளும் இன்றி கவனிப்பது முக்கியம்.

இனி இந்த எளிய தியான முறைக்குச் செல்லலாம்.

1) அமைதியான இடத்தில் சௌகரியமாக அமர்ந்து கொள்ளுங்கள்.

2) இயல்பாக மூச்சு விட்டு மூச்சு சீராகும் வரை மூச்சில் கவனம் செலுத்துங்கள்

3) இனி உங்கள் எண்ணங்களை விருப்பு வெறுப்பு இல்லாமல் கண்காணியுங்கள். இந்த எண்ணம் நல்லது, இந்த எண்ணம் கெட்டது என்ற பாகுபாடுகள் வேண்டாம். வெறுமனே கவனியுங்கள். உங்கள் எண்ணங்களுக்கு நீங்கள் பார்வையாளனாக இருங்கள்.

4) கூர்மையாக கவனிக்கப்பட, கவனிக்கப்பட மனதின் எண்ணங்களின் எண்ணிக்கை, வேகம் குறைய ஆரம்பிக்கும். ஒரு பார்வையாளனின் தொடர்ந்த கண்காணிப்பில் எவர் செயல்களும் சற்று குறையவே செய்யும். மனமும் அதற்கு விதிவிலக்கல்ல.

5) ஒரு எண்ணம் மனதில் எழுகிறது. அதைக் கவனிக்கிறீர்கள். இன்னொரு எண்ணம் எழுகிறது. அதையும் கவனிக்கிறீர்கள். எண்ணங்கள் குறையக் குறைய இன்னொரு அழகான அனுபவமும் நிகழும். அது என்ன தெரியுமா? ஒரு எண்ணம் முடிந்து இன்னொரு எண்ணம் எழுவதற்கு இடையே உள்ள இடைவெளி. அதையும் கவனியுங்கள். அந்த இடைவெளியில் தான் மனம் மௌனமாகிறது. அது தான் மனமில்லா நிலை. அது மிக அழகான அனுபவம்.

6) எண்ணம்-இடைவெளி-எண்ணம்-இடைவெளி என ஒவ்வொன்றையும் எந்த விமர்சனமும் இன்றி கவனியுங்கள். ஆரம்பத்தில் சில மைக்ரோ வினாடிகள் தான் அந்த இடைவெளி இருக்கும். உங்கள் தியானம் ஆழமாக ஆழமாக அந்த இடைவெளிகளின் கால அளவும் அதிகரிக்கும். அந்த மனமில்லா நிலை தான் தியானத்தின் உச்சக்கட்டம்.

7) ஆனால் இடைவெளிகளையே அதிகம் நீங்கள் எதிர்பார்த்தால் தோற்றுப் போவீர்கள். ஏனென்றால் இடைவெளியின் மீது உங்களுக்கு விருப்பம் ஏற்பட்டு விட்டது என்றால் விருப்பு வெறுப்பற்ற பார்வையாளனாக இருக்க உங்களுக்கு முடியாது. அது முடியா விட்டால் தியானமும் நிகழாது.

8) எண்ணம் எழுவதைக் கவனிப்பதும் ஒன்று தான். இடைவெளி வருவதைக் கவனிப்பதும் ஒன்று தான் என்கிற சமமான மனோபாவமே இங்கு முக்கியம். சூரிய ஒளியை ரசிக்கிறீர்கள். அடுத்ததாக மேக மூட்டம் வருகிறது. அதையும் ரசிக்கிறீர்கள். இதில் நீங்கள் எதையும் தேர்ந்தெடுப்பதில்லை. நிகழ்வதைக் கவனிக்கும் சம்பந்தமில்லாத பார்வையாளனாக இருக்கிறீர்கள். இது தான் சரியான மனநிலை.

9) தியானம் ஆழப்பட்ட பின் பேரமைதியை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள். விருப்பு வெறுப்பில்லாத அந்த பார்வையாளனின் மனோபாவம் உங்களிடம் உறுதிப்பட ஆரம்பிக்கும். அது தியான சமயங்களில் பூரணமடைந்தால் மற்ற நேரங்களிலும் உங்களிடம் தங்க ஆரம்பிக்கும். தினசரி வாழ்க்கையே தியானம் ஆக ஆரம்பிக்கும். ஆரவாரங்களுக்கு நடுவேயும் நீங்கள் தியான நிலையில் இருக்க முடியும். ஜென் பௌத்தத்தின் குறிக்கோளே அது தான்.

மிக எளிதாகத் தோன்றும் இந்த தியானத்தைப் பயிற்சியாக செயல்படுத்துகிற போது அந்த அளவு எளிதானதாக இருப்பதில்லை என்பது அனுபவம். ஆனால் விடா முயற்சியோடு தொடர்பவர்கள் கண்டிப்பாக இதில் வெற்றி அடைய முடியும். தேவையான அளவு தியான முறைகளைச் சொல்லி விட்டதால் அவற்றை இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.

மேலும் பயணிப்போம்......

நெஞ்சு சளி நீங்க மருந்துவம்...


தினமும் துளசிச் சாரை பருகினால் நெஞ்சு சளி கரையும்..

நெஞ்சு சளி நீங்க நெல்லிக்காய், மிளகு, தேன் மருந்து..

நெல்லிக்காய் சாறில் மிளகுத் தூள் மற்றும் தேன் இரண்டையும் கலந்து குடித்து வந்தால் சளி, மூக்கடைப்பு நீங்கும்..

நெஞ்சு சளி நீங்க புதினா, மிளகு மருந்து..

புதினா இலை (ஒரு கைப்பிடி) மிளகு(3) இரண்டையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள் நீங்கும்.

நெஞ்சு சளி குணமாக வெற்றிலை மருந்து..

வெற்றிலைச் சாற்றில் இரண்டு சொட்டுக்களை காதில் விட்டால் சளி ஒழுகுவது நிற்கும்.

நெஞ்சு சளி குணமாக வெற்றிலை, இஞ்சி மருந்து..

வெற்றிலைச் சாறு, இஞ்சிச் சாறு இரண்டையும் ஒன்றாகக் கலந்து குடித்தால் மார்பு சளி, சுவாசக் கோளாறுகள் குணமாகும்.

நெஞ்சு சளி குணமாக பொடுதலை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை மருந்து..

பொடுதலை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை வைத்து துவையல் செய்து சுடுசோற்றில் நெய்யிட்டு உண்ண மார்பு சளி நீங்கும்...

சூப்பர் சார். அப்படியே அந்த மாநிலங்களின் ஒரு பைசாவைக்கூட தொட மாட்டோம் என்று சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும் ( ரூபாய் நூறு வரி மத்திய அரசிற்கு கொடுத்து வெறும் 30 ரூபாயை பெறும் தமிழகம் )..

இதை எல்லாம் கேட்க மானம் ரோஷம் துணிவு உள்ள முதல்வர்கள் வேண்டும்...

காணவில்லை காணவில்லை கன்னட ஈவேரா வின் வாரிசுகளை காணவில்லை...



ஆளப்போகிறான் தமிழன் என்று சொன்னால் பெரியாரின் வாரிசுகளுக்கு எரியும்  தானே.. அவன் எப்படி இதுக்கெல்லாம்  வருவான்...

பாஜக வின் திருட்டு அரசியல்...


பாஜக மோடியின் சாதனை...


ஏழை மக்களிடம் இருந்து மானியத்தை பறித்து பணக்கார முதலாளிகளான தனது மார்வாடி இனத்தை சேர்ந்த அதானி, அம்பானிகளுக்கு மானியத்தை வாரி வழங்கும் பணியா மார்வாடிகளான பாஜக மோடி அமித் ஷா கூட்டம்...

தமிழக அரசா உங்களை காக்க போகிறது...


தமிழகத்தை அழப்பதே தமிழக அரசு தானே...

பிரம்மத்தை நோக்கி - 2...


மரண பயம் இல்லாத மனிதர் எவரும் இல்லாத அளவிற்கு மரணம் நம்மை பயமுறுத்தி வைத்துள்ளது. இங்கு இருப்பதெல்லாம் அப்படியே இருக்கும், தான் மட்டுமே இல்லாது போய் விடுவோம் என்கிற அறியாமை தான் அதற்கு காரணம்.

உண்மையில் இல்லாமல் போவது நம் மனதும் உணர்வும் மட்டுமே. மரணத்திற்கு பின் இல்லாமல் போவது இவை இரண்டும் தான். உண்மையில் இல்லாமல் இருப்பவை தான் இவை.

உன் உடலை விட்டு உயிர் நீங்கிய பின் உடலை எரித்து சாம்பலாக்கிய பின் எது உள்ளதோ அதுவே உண்மை. அதுவே நிரந்தரம்.

அதற்கு ஆதியுமில்லை, அந்தமுமில்லை. அது நிலையான ஒன்று. தியானத்தின் மூலம் இந்த நான் என்கிற அறியாமையை கடந்து அந்த உண்மை நிலையில் நீ பிரவேசித்து விட்டால் உனக்கு மரணமில்லை.

மரணம் எதில் நிகழுமோ அதையே தொலைத்த பின் மரணம் எங்கு நிகழும். கடந்தகால எண்ணங்களை நீ என நினைப்பது அறியாமை தானே, அந்த எண்ணங்கள் நீயா?

இல்லை அதே போல் ஒவ்வொரு கனமும் மாறிக்கொண்டே இருக்கும் இந்த உணர்வு தான் நீயா? இவை இரண்டும் அல்லாத சாட்சி தன்மையாகிய பிரம்மமே நீ...

பிரம்மத்தை நோக்கிய பயணம் தொடரும்...

இந்தியா என்பது ஒரே நாடல்ல பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு...


மொழி வழி மாநிலங்களில் ஹிந்தி என்ற ஒரு மொழியை திணித்தால் எதிர்ப்பை அருவடை செய்தே ஆக வேண்டும்...

அல்சர் நோய் க்கு இயற்கை மருத்துவம்...


ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர் வரவே வராது..

தினமும் ஒரு ஏலக்காயை தேனோடு உண்பது கண் பார்வைக்கும், நரம்பு மண்டலத்திற்கும்மிகவும் நல்லது..

தினமும் இரண்டு அல்லது மூன்று ஓமம் சாப்பிட்டால் ஒரு மனிதனுக்கு தேவையான இரும்புச் சத்தில் பத்து சதவீதம் கிடைக்கிறது..

குழந்தைகளுக்கு முகத்தில் பாலுண்ணி தோன்றியதும், வெங்காயத்தை வெட்டி அதன் மேல் தேய்த்துவிட்டால் இரண்டு மூன்று தினங்களில் உதிர்ந்து விடும்..

மஞ்சள், பூண்டு இவை இரண்டையும் பால் விட்டு அரைத்து தலைக்கு பற்றுப் போட்டால், தலைவலி நீங்கும்...

நிலவேம்பு கசாயம் தொடர்பாக கமல் கூறிய கருத்தில் முகாந்திரம் இருந்தால் அவர் மீது வழக்கு பதிவு செய்யலாம்- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி...


டால்ஃபின் ஓர் உலக அதிசயம்...


அதற்கென்று மொழி உண்டு அவை தங்களுக்கள் பேசி கொள்கின்றன என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறாகள்.

அதற்கென்று இசையும் உண்டு.

டால்ஃபின்கள் பாடும் இவை தவிர புத்திசாலிதனம், சமூக உணர்வு, உதவும் தன்மை இரக்கம் என்று பலவித உணர்வுகள் கொண்டது டால்ஃபின்..

டால்ஃபின் மனிதனைவிட வலது மூளையை (Right hemisphere) உபயோகிக்கிறதென்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

கடலில் மூழ்கித்தத்தளிக்கும் மனிதர்களை டால்ஃபின்கள் தங்கள் முதுகில் சுமந்து கரை சேர்த்திருக்கின்றன.

டால்பின்கள் சொல்லி வைத்தாற்போல் ஒரே சமயத்தில் தண்ணீருக்கு வெளியே பாய்ந்து டைவ் அடிப்பதை நாம் பார்த்திருக்கிறோம், அதை விட ஆச்சரியம் சில நோய்களை டால்ஃபின்கள் குணப்படுத்துவதாக டாக்டர்கள் சொல்கிறார்கள்.

மனநிலை பாதிக்கப்பட்ட சில குழந்தைகள் தொடர்ந்து சில நாள்கள் டால்ஃபின்களோடு விளையாடிய பிறகு முழுமையாக குணமடைந்தார்கள்.

பார்வையிழந்த ஒரு பெண், டால்ஃபினகளை ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானி ஒருவரை மணந்து கொண்டார் கணவரின் வீட்டு தோட்டத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நிறைய டால்ஃபின்கள் உண்டு. ஒரு முறை நீச்சலடிக்க குளத்துக்குள் மெல்ல இறங்கிய அந்த பெண்ணுக்கு ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது.

டால்ஃபின்கள் ஏதேதோ தன்னிடம் பேச முயற்சிப்பது போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது சில நாள்களில், டால்ஃபின்கள் தண்ணீருக்குள் அவருக்கு வழிகாட்ட ஆரம்பித்தன.

டெலிபதி மூலம் தண்ணீரில் பந்து எங்கேயிருக்கிறது என்பதைக்கூட அந்த பெண்ணால் கண்டு பிடிக்க முடிந்தது.

ஒருநாள் பார்வையிழந்த அந்த பெண்ணுக்கு டால்பின்கள் விதவிதமான வண்ணங்களை மாற்றி மாற்றிக் காட்டின மனக்கண்முன்.

டாக்டர் ஜான் லில்லி என்கிற டால்ஃபின் ஆராய்ச்சியாளர் நெத்தியடியாக ஒரு கருத்தை சொல்கிறார் நாம் வேற்றுக் கிரகங்களில் (நம்மை விட புத்திசாலியான) மனிதர்கள் (aliens) இருக்கிறார்களா என்று தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறோம். ஆனால் நமக்கு அருகிலேயே உள்ள மீன் உருவம் கொண்ட ஏலியன்ஸ் தான் டால்ஃபின்கள்...

விழித்தெழு தமிழா...


மூட்டு வலி முழுமையான நிவாரணம் வேண்டுமா ?



இதை முயற்சி செய்து பாருங்கள்...

முடக்கொத்தான் இலை ஒரு கைப்பிடி
கொத்தமல்லி 50 கிராம்
கருஞ்சீரகம் 30கிராம்
சுக்கு 10கிராம்
சித்தரத்தை 10கிராம்
மிளகு 10 கிராம்
கொடம்புளி இரண்டு துண்டுகள்
பெருங்காயம் சிறிதளவு
பூனைக்காலி விதை பத்து

எல்லாவற்றையும் நன்றாக தட்டி ஒரு பானையிலிட்டு 8 டம்லர் நீர்விட்டு  பாதியாக வற்ற வைத்து..

காலை மாலை விதம்  ஒரு டம்ளர் சாப்பிட்டுவர இளந்த சக்திகள திரும்ப பெற்று கை கால் அசதி, மூட்டுவலி, உடல் பலவினம், பாலியல் பலவினம், உடல்நடுக்கம் போன்றைவை  குணமாகி வலிமையும் இளமையும் உண்டாகும்....

இந்த பொருள்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்...

பாஜகவின் தேசப்பத்தி ஞாபகம் இருக்கிறதா..?


இன்று வரை இதன் மேல் நடவடிக்கை கூட இல்லை...

அழகிய முத்துக்கள் எவ்வாறு உருவாகின்றன?


பார்ப்பதற்கு அழகாக இருக்கும் முத்துக்கள், பெண்களை வர்ணிப்பதற்கும் அவர்களின் கழுத்து, காது, இடுப்பு போன்றவற்றினை அலங்கரிப்பதற்கும் பயன் படுத்தப்படுகின்றன.

முத்துப் போன்று பற்கள், முத்துச் சிரிப்பு என்று வர்ணிக்க பயன்படும் இந்த முத்துக்கள் இயற்கையின் சிறந்த படைப்புகளுன் ஒன்று.

முத்துக்கள் உருவாவது எப்படி?

சிப்பிக்குள் தோன்றும் கெட்டியான பொருளே முத்து எனப்படுகிறது.

கடலில் காணப்படும் முத்துச் சிப்பியினுள் சிறிய திண்மப் பொருளொன்று புகுந்து கொண்டால் உயிருள்ள அந்தச் சிப்பி தன் புறத்தோல் அடுக்காகிய எபிதீலியம் என்னும் படலத்தால் அதை நன்கு பொதிகின்றது.

நாளடைவில் அச்சிப்பியில் சுரக்கும் திரவம் மெல்லிய அடுக்குகளாக அதன் மீது படிந்து முத்தாக மாறுகிறது.

முத்து உருவாகும் போது மெல்லிய அடுக்குகள் பொதியப்படுவதினால் அது ஒளியை உட்பிரவேசிக்கவும் பிரதிபலிக்கவும் ஏற்ற தன்மையுடையதாகக் காணப்படுகின்றது.

இதனால் சாதாரண முத்துக்கள் கூட பார்ப்பதற்கு மிகவும் ஒளிர்வுடையதாகத் தோன்றுகின்றன.

கறுப்பு நிறமான முத்துக்களும் மிக அருமையாகக் காணப்படுகின்றன.

முத்துக்களின் வகைகள்..

முத்துக்கள் நன்னீரில் உருவானவையா, கடல் நீரில் உருவானவையா, அவற்றை உருவாக்கிய முத்துச்சிப்பி வகை, உருவான பிரதேசம் என்பவற்றைப் பொறுத்து முத்துக்களின் இயல்புகள் வேறுபடுகின்றன.

முத்துக்களில் அக்கோயா முத்து, தென்கடல் முத்து, தகித்தியன் முத்து, நன்னீர் முத்து போன்ற வகைகள் உள்ளன.

சிலவகைகள் அரிதாகவே கிடைக்கின்றன, இதனால் முத்துக்களின் மதிப்பும் அதிகம்.

சிப்பியிலிருந்து முத்தை பிரித்தல் முட்டை வடிவிலான முத்துக்கள் பொதுவாகத் தென்பட்டாலும் உருண்டையான தோற்றமுடைய முத்துக்களுக்கே (Pearls) மதிப்பு அதிகம்.

தூசி, மிதமிஞ்சிய வெப்பம், ஈரலிப்புத்தன்மை போன்றவற்றினால் முத்து பழுதுறும் வாய்ப்பு ஏற்படலாம்.

இயற்கை முத்துக்கள்...

அவிகுலிடி சிப்பிகளிலும், யூனியனி என்னும் மட்டிகளிலும் உற்பத்தியாகும் முத்துக்கள் இயற்கை முத்துக்கள் ஆகும்.
செயற்கை முத்துக்கள் சிப்பியின் உட்புறம் முத்துப்போல் அழகான மெல்லிய பொருள் ஒன்றினால் மூடியிருக்கும். இதை நேக்கர் என்பர்.

அந்த நேக்கரினால் உருவாக்கிய மணியை உயிருள்ள முத்துச் சிப்பியின் திசுவிற்கும் சிப்பிக்குமிடையே கவனமாக திணிப்பார்கள்.

அவ்வாறு திணிக்கப்பட்ட சிப்பிகளை கூண்டு ஒன்றினுள் வைத்து நீரில் பாதுகாப்பாக அமிழ்த்தி விடுவார்கள்.

நாளடைவில் மணிகள் பொதிக்கப்பட்டு முத்துக்கள் உருவாகும். தோற்றத்தில் பெரிய முத்துக்கள் பெறுவதற்கு பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

இவ்வாறு பெறப்படும் முத்துக்கள் செயற்கை முத்துக்கள் எனப்படும்.

இந்த அரிய முறையை ஜப்பானியர் ஒருவர் 1804 ஆம் ஆண்டு கண்டு பிடித்தார்.

முத்துக்களின் தரத்தை எக்ஸ்-கதிர் எண்டாஸ் கோப் என்னும் கருவியின் மூலம் துல்லியமாகக் கண்டு பிடித்து விடலாம். சில வகை மீன்களின் செதில்களைக் கொண்டு முத்துச்சாறு (Pearlessence) உற்பத்தி செய்யப்படுகின்றது.

ஊன் பசையுடன் கலந்து கண்ணாடி மணிகள் மீது அவற்றைப் பூசி முத்துக்கள் தயாரிக்கின்றனர்...

குங்குமம் வைப்பது எதற்காக....?



சுமங்கலிப்பெண்களின் தலை உச்சியின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள்..

அம்பிகையின் உச்சியில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.

சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது..

வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்..

குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்..

பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்..

அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும்..

திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது..

தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்..

திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் உச்சியின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.

ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்..

கட்டை விரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.

குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித் தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.

சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும்.

குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது...

மெர்சல் பின்னனி என்ன?


மெர்சல் திரைப்படமும் அது தொடர்பான தொடர் breaking news செய்திகளும் என் மனதில் ஆழமான சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

கடந்த காலங்களில் ஒவ்வொரு முறையும் இப்படி வந்த போதும் தமிழினத்தின் மிகப்பெரும் உரிமை எதோ ஒன்று பறிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தின் உரிமையை பாதுகாத்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தின் கடைசி கட்டத்திலேயே இது ஆரம்பித்து விட்டது.

இரண்டு உதாரணங்களை சொல்லுகிறேன்..

சுவாதி படுகொலை breaking news செய்திகளின் பின்னணியில் தான் நீட் மசோதா நிறைவேற்றப்பட்டது. அது தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா கேட்ட நியாயமான கேள்விகள் ஊடகங்களால் திட்டமிட்டு மறைக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு போராட்டங்கள் உச்சகட்டத்தில் இருந்த போது தான் 16.01.2017 அன்று தமிழக கடற்கரைகளில் வரி போடும் உரிமை தமிழகத்திடம் இருந்து பறிக்கப்பட்டது. இதை செய்தது மா.பா.பாண்டியன்.

இப்போது எதை மறைக்க முயற்சி நடக்கிறது என்பதை இரண்டு நாளாக தேடுகிறேன். எனக்கு தெரிவது காசிமேட்டில் நடந்த கலவரம். ஆனால் இது தானா அல்லது இதை விட வேறு ஏதும் பெரிய கேடு அடிமை எடப்பாடி மூலமாக நிறைவேற்றி விட்டார்களா எனத் தெரியவில்லை.

தமிழக மீனவ மக்கள் வெகு கவனமாக இருங்கள்.தமிழ்நாட்டை இப்போது மட்டும் அல்ல எப்போதுமே அரணாக காப்பது நீங்கள் மட்டும் தான்.

நீங்கள் கடற்கரையில் தொடர்ந்து வசிப்பது உங்களுக்கு மட்டும் அல்ல.தமிழ்நாட்டின் உயிருக்கே முக்கியமானது...

கறிவேப்பிலை இலைகளுடன் ஒரு பேரீச்ச‍ம் பழத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால்...


தினமும் காலை நேரத்தில் கறிவேப்பிலை இலைகளுடன்  ஒரு பேரிச்சம் பழத்தை பச்சையாக சாப்பிட்டு வந்தால் ரத்த‍ சோகையால் பாதிக்க‍ப்பட்ட‍ ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து இரத்த‍ ஓட்ட‍ம் சீராகும்..

ரத்த சோகை நோயும் முற்றிலும் குணமடையும் என்கிறார்கள் மருத்துவர்கள்..

உங்கள் மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனை பெற்று உட் கொள்ள‍வும்...

உயிரோடு இருப்பவர்களுக்கு கட் அவுட் பேனர் வைக்க தடை - சென்னை உயர்நீதிமன்றம்...


தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிந்து கொள்ளலாமா?


இது ஒரு எச்சரிக்கை பதிவு படித்து விட்டு கட்டாயமாக படியுங்கள்...

தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது.. என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஜாக்கிரதை.....

இனிக்கும் செய்தியல்ல..

தேனீ... உலகின் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான உயிரினம். அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிந்து கொள்ளலாமா?

முதலில்... ஆச்சரியம். தக்கனூண்டு சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச் சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர்.

தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச் போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய், பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச் சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும் தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும் காரணம்..

தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப், வாட்ஸ்அப் முறைகளை விடத் துல்லியமானது.

யானை, ஆமைகளுக்கு ஞாபகசக்தி அதிகம் என்போம். ஆனால், அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி கொண்டவை தேனீக்கள்.

இதுபோல இன்னும் பல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு உடம்பில் இருக்கின்றன.

ஆனால், அதிர்ச்சி தரும் விஷயம்...

அந்தத் தேனீக்கள் இப்போது 'அழிந்துவரும் உயிரினங்கள்’ பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றன..

ஆம்... 'உலகை உலுக்கும் செய்தி’ என்றால், நிச்சயம் இதுதான்..

ஒட்டு மொத்த மக்கள் தொகையாலும் பூமிக்கு விளையாத நன்மை, ஒரே ஒரு தேனீயால் விளையும்.

அந்த அளவுக்குத் தேனீயின் ஒவ்வொரு சிறகசைப்பும் பூமிப் பந்தில் பசுமைப் போர்வையைப் போத்துகிறது.

தேனீக்களின் 'லைஃப்ஸ்டைல்’ பற்றி தெரிந்து கொண்டால் தான், அது காடுகளின் பெருக்கத்துக்கு எப்பேர்ப்பட்ட நன்மை விளைவிக்கிறது என்று புரியும்.

தேனீக்களின் வாழ்வியல் குணங்களைப் பற்றி கேட்டதும், சுவாரஸ்யமாகப் பட்டியலிட்டார் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பூச்சிகள் துறையைச் சேர்ந்த டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்...

உலகத்தில் அஞ்சு வகை தேனீக்கள் இருக்கு. மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத் தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத் தேனீ..

இதில் இந்திய, இத்தாலிய மற்றும் கொடுக்கில்லாத் தேனீக்களைத் தான் மனிதர்கள் வளர்ப்பாங்க.

மத்த தேனீக்கள் தானாகவே காட்டில் வளரும்.

ஒரு குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித் தேனீக்கள் (பெண்கள்) இருக்கும்.

இதில் ஆண் தேனீக்களுக்கு 90 நாள்களும், பணித் தேனீக்களுக்கு 70 நாள்களும், ராணித் தேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுள்.

ராணித் தேனீக்களுக்கு முட்டையிடுவது மட்டும் தான் வேலை.

ஆண் தேனீக்கு, ராணியோடு புணர்வதும் தேன் கூட்டைப் பாதுகாப்பதும் கடமை.

மற்ற எல்லா வேலைகளும் பணித் தேனீக்கள் பொறுப்பு.

உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது, தேனைப் பக்குவப்படுத்துவது, கூட்டைச் சுத்தமாகப் பராமரிப்பதுனு எல்லா வேலைகளையும் பணித் தேனீக்கள்தான் கவனிக்கும்.

தேனீக்களின் பொறியியல் அறிவு அபாரமானது. தேன் கூட்டை அறுங்கோண வடிவத்துல கட்டும்.

ஏன்னா, அப்பத்தான் ஒரு சென்ட்டிமீட்டர் இடத்தைக்கூட வீணாக்காம முழுசாப் பயன்படுத்த முடியும்.

ஆண் தேனீகளுக்குப் பெரிய அறுங்கோண செல், பணித் தேனீக்களுக்குச் சிறிய அறுங்கோண செல் வடிவத்தில் கூடு கட்டிட்டு, ராணித் தேனீக்கு சிலிண்டர் வடிவில் செல் கட்டும்.

கூட்டின் கட்டுமானம் திருப்தியாக இருந்தால் மட்டுமே, ராணித் தேனீ அதில் முட்டையிடும்.

பூக்களின் மகரந்தம், மதுரம்...

இரண்டும் தான் தேனீக்களின் உணவு.

அப்போதைய பசிக்கு அப்போதே சாப்பிட்டுவிடும். அப்புறம் ஏன் தேன் சேகரிக்கிறது?

குளிர் காலங்கள், பூ பூக்காத காலங்களில் உணவுத் தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேன் சேகரிக்கிறது.

தேனீக்கள் தேன் சேகரித்துப் பதப்படுத்துவது தான் உலகின் சிறந்த உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம்.

தேன் தேடிச் செல்லும் பணித் தேனீக்கள், பூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில் இருக்கும் 'தேன் பை’யில் சேகரித்துக் கொள்ளும்.

அந்த மதுரம் முழுவதும் செரிக்காமல், தேனீயின் வயிற்றில் இருக்கும் நொதிகளுடன் சேர்ந்து திரவமாக மாறிவிடும்..

கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள், கூட்டின் வாசலில் காத்திருக்கும் தேனீக்களிடம் அந்தத் திரவத்தை ஒப்படைக்கும்.

அதற்காக ஏப்பமிட்டு ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து திரவத்தை வெளியில் கொண்டு வந்து எதிர் தேனீயின் வாயில் கொட்டும்.

ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால் தான், ஒரு துளி தேன் சேரும்.

கூட்டைப் பராமரிக்கும் தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர் ஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி, அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச் சேர்க்கும்.

பிறகு அந்தத் திரவத்தில் இருந்து நீர்த்தன்மை வற்றிப் போவதற்காக தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும்.

பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை மெழுகைப் பூசிவைக்கும்.
இத்தனை நடைமுறைகளுக்குப் பிறகு தான் நாம் சுவைக்கும் தேன் உருவாகும்.

தேன் எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை தேனிக்களுக்கு எனக் கூட்டில் விட்டுத்தான் எடுப்பார்கள்.

அதுதான் தேன் சேகரிக்கும் தர்மம்!

இந்த வேலை நடக்கும் போது ராணித் தேனீ அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும்.

இனப்பெருக்கக் காலத்தில் மட்டும் தான் அதற்கு வேலை வரும்.

அந்தச் சமயத்தில் வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப் பறக்கும்.

அதை எந்த ஆண் தேனீ துரத்திப் பிடிக்கிறதோ, அதோடுதான் இணை சேரும் ராணி.

புணர்ச்சி முடிந்தவுடன் ஆண் இறந்து விடும். அதன் பிறகு ராணித் தேனீ முட்டையிட, முட்டையில் இருந்து வரும் தேனீக்களைப் பணித் தேனீக்கள் தான் வளர்ப்புத் தாயாக வளர்க்கும்!

தேன் சேகரிப்பதற்கான தகவல்களை தேனீக்கள் பகிர்ந்து கொள்ளும் முறை அட்டகாசமானது.

உணவுத் தேவை ஏற்படும் போது 'ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள் முன்னே சென்று பூக்கள் இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து விட்டுக் கூட்டுக்குத் திரும்பும்.

கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள், தாங்கள் கண்டு பிடித்த தோட்டம் அல்லது சோலை எந்தத் திசையில் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித் தெரிவிக்கும்..

இதில் இரண்டு வித நடனங்கள் உள்ளன..

வட்ட நடனம் மற்றும் வாலாட்டு நடனம்.

வட்ட நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள் இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும்.

வாலாட்டு நடனத்தில் உயரப் பறந்து வாலை ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது என்றும் அர்த்தம்.

வாலை வேகமாக ஆட்டினால், சோலை அருகில் உள்ளது என்றும், மெதுவாக ஆட்டினால், தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம்.

சூரியன், சோலையின் திசை, தங்கள் கூட்டின் இருப்பிடம்...

இந்த மூன்றையும் சம்பந்தப்படுத்தி நடன அசைவுகள் இருக்கும்.

இந்த நுட்பமான நடன ரகசியத்தைக் கண்டுபிடித்த ஆஸ்திரிய ஸ்காலர் கார்ல்வான் ஃப்ரிஸ்-க்கு நோபல் பரிசு கொடுத்தார்கள்.

தேன் சேகரிக்கும் போது தேனீக்களின் காலில் ஒட்டிக் கொள்ளும் பூக்களின் மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல் உட்காரும் போது, விதவிதமான கூட்டணியுடன் பரவும்.

இதுதான் காடுகளின், சோலைகளின் பரவலுக்குக் காரணம்.

தேனீக்களை அதிகம் காடுகளுக்குள் தான் பார்க்க முடியும்.

காரணம், தேனீக்கள் இருக்கிற இடத்திலேயே இயற்கையாகவே அடர்ந்த காடுகள் உருவாகிவிடும்!

'அழியும் உயிரினம் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு என்ன ஆபத்து?'

அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் தேனீக்கள் அழிந்து வரும் உயிரினங்கள்..

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் அழிந்து விட்டன.

அதாவது, தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

இன்னும் இந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை.

ஆனால், கூடிய சீக்கிரமே அந்த நிலைமை வரலாம்.

தேனீக்களின் இந்தப் பேரழிவுக்குக் காரணம், Colony Collapse Disorder - சுருக்கமாக... CCD. அதாவது கூட்டில் இருந்து உணவு சேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள் கொத்துக் கொத்தாகக் காணாமல் போய்விடும்.

ராணி மட்டும் கூட்டில் இருக்கும்.

பணித் தேனீக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால், ராணித் தேனீ என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பி, சீக்கிரமே இறந்து விடும். இல்லையெனில், வேறு கூடு தேடிப் போய்விடும்.

பணித் தேனீக்கள் இப்படித் தொலைந்து போவதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது... செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்.

செயற்கை உரத்தில் உள்ள நியோ நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து அவற்றின் நினைவுத்திறனை மழுங்கடித்து விடும். இதனால் கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்து போய் பறந்து போய் அலைந்து திரிந்து இறந்து விடும்.

மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்களின் விதைகளை 'டெர்மினேட்டர் சீட்ஸ்’ என்பார்கள். அதாவது, அந்தப் பயிர்கள் 'விதை தானியத்தை’ உருவாக்காது. மலட்டு விதைகளைத் தான் உருவாக்கும்.

அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம் செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி, ஒரு கட்டத்தில் தேனீக்களைக் கொன்றே விடும்.

இப்படி விவசாயத்தில் 'வணிக லாபத்துக்காக’ மனிதன் செய்த பல மாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன.

ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து வருடங்களாக விவசாய உற்பத்தி பெருமளவு குறைந்துவருவதற்குக் காரணம் தேனீக்களின் இறப்பு எனத் தெரியவந்தது.

அதனால், அங்கு செயற்கை உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள் போன்றவற்றைத் தடை செய்து விட்டனர். வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து தங்கள் வயல்களில் பறக்கவிட்டு மகரந்தச்சேர்க்கை உண்டாக்க முயற்சிக்கிறார்கள்.

பல லட்சம் தேனீக்களை அழித்த சுயநல மனிதனால், ஒரே ஒரு தேனீயைக்கூட உருவாக்க முடியாது. இதை நாம் எப்போது உணர்வோம்?' என்று வருத்தமாகச் சொல்கிறார் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்து விட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது! என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஜாக்கிரதை.....

திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுகள் சாதனை...


சித்தராவது எப்படி - 23...


ஆனாய் ஆனால் அடைந்தாயா ? என்ற கேள்வி...

பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் வெகு விரைவாக பிரபலமாகி விடுவார்கள்..

பிரபலமாக ஒன்றும் செய்ய தேவை இல்லை... ஏதோ ஒரு தெய்வத்தைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.. பிடித்து பிடித்து அதுவாய் ஆக வேண்டும்..

அதில் தன் நிலையை கரைத்து, அதில் தன் மன நிலையை பலவீனப் படுத்தி செயல் அற்ற ஒரு முடமான நிலைக்கு போக வேண்டும்..

அந்த தெய்வ சிந்தனையில், தனக்கு இறைவனால் அளிக்கப் பட்ட கடமைகளை உதறி தள்ளி விட்டு, அவன் சிந்தனையிலேயே தன் ஜீவ சக்தி முழுமையாக இழந்து எந்த உலக குறிக்கோளையையும் பற்றி நிற்க முடியாத அளவிற்கு பலம் இழந்து, அதனால் உலகப் பற்றுகளை பற்ற முடியாமல் எந்த பற்றும் பற்றாத ஞானி என்ற போலியான பட்டம் பெற்று, தன் முடிவு காலத்தில் தேள் கொட்டிய திருடன் போல், உயிர் துயரத்தை சொல்ல முடியாமல் பெரும் வேதனையை அனுபவித்து, தன் துன் மரணத்தை ஜீவ சமாதியாக தன்னை போற்றியவர்களால் கொண்டாடி கொள்ள வேண்டியது தான்..

நிகழ் கால மகா சக்தியாகிய சிவகலப்பு என்ற உன்னத நிலையை அறவே இழந்து, சவகலப்பு நோக்கிய பயணமே அது..

சிவனை சதா காலம் தன் மனதால் நினைத்து நினைத்து சிவனை பற்றிய விசயங்களாகவே ஆகி விடுவார்களே தவிர சிவன் பெற்ற சக்தியை ஒரு சிறு துளியேனும் பெற்றார்கள் என்றால் கேள்வி குறிதான்...

மனதால் ஆனார்கள் ஆனால் சக்தியை அடைந்தார்களா என்றால் துளியும் இருக்காது..

நிகழ் காலத்தில் இருக்க துளிசக்திகூட இல்லாத அளவிற்கு தெய்வ சிந்தனையால் மோன நிலை என்ற நிகழ் கால தொடர்பை அறுந்த சவ நிலைக்கு ஒத்த மயக்க நிலையை மக்கள் அதிகமாக மதிப்பது ஒரு அறியாமையே...

சிவநிலை என்ற உயர்ந்த தத்துவம் நாம் இழந்து பல காலம் ஆகிவிட்டது..

அதை மீண்டும் நிலை நிறுத்துவது என்பது முடியாதது போல் தோன்றினாலும் நிறைநிலை மனிதன் தோற்றத்திற்கான இரகசியங்கள் வெளிப் பட்டுக் கொண்டு இருப்பதால் அது முடியும் என்பதே உறுதியாக தெரிகிறது..

சில உறுதி செய்யப் படாத விதிவிலக்குகள் பக்தியோகத்தில் இருந்தாலும், அவைகள் தனது இரகசியங்களை வெளிப்படுத்த முடியாத நிலையில் பழைமையாக உள்ளது...

காளி பக்தரான மிக பிரபலமடைந்த இராமகிருஷ்னர் மோன நிலையிலேயே மயங்கி மயங்கி தன் தேகத்தை காப்பாற்றும் வல்லமையை இழந்து புற்று நோயால் மரண அடைந்தார்..

உலகிற்கு, உலக உய்ய என்ன உளவுகளை வைத்து சென்றார் என்றால் கேள்விக் குறிதான்..

ஆனால் உளவுகளை பக்தி யோகம் தாண்டிய நிலையில் சில தகுந்த உளவுகளை வைத்து விட்டுப் போன 3000 ஆண்டுகள் வாழ்ந்த, திருமூலருக்கு எந்த மடங்களும் அமைப்புகளும் இல்லை..

காரணம் மயக்கத்தை நீக்கி தெய்வீக விழிப்பு நிலையாகிய சிவகலப்பை தந்ததால், மயக்கத்தை விரும்பும், மாயையில் சிக்கிய மக்கள், அதனை விரும்பவில்லை..

மயக்கம் தரும் போதை பொருள்களிலும், மயக்கம் தரும் கருத்து போதைகளிலும் மயங்கி கிடக்கவே மனிதனின் சோம்பல் மனம் விரும்புகிறது..

ஆகவேதான் விழிப்பு நிலையில் உள்ள புத்தியும், அறிவும், செயல் படவேண்டிய அவசியம் ஆகிறது..

அவை செயல் பட தொடங்கி விட்டால் எந்த மயக்கமும், தன்னை மறந்த மோன நிலையும், தூக்கமும், முடிவில் மரணமும் இல்லை என்பதாகிறது..

இந்த உயர்ந்த உன்னத நிலை, வெறும் சாதாரண சுவாச ஒழுங்கில் உள்ளது என்றால் மனம் ஏற்றுக் கொள்வது இல்லை..

விழிப்பு நிலையை வெறுப்பதே மனதின் இயல்பு..

இந்த உலகம் ஒரு நிறைநிலை மனிதன் வரவுக்காக ஏங்கி கொண்டு இருக்கிறது..

அந்த ஏக்கத்தை போக்க நிறைநிலை மனிதனாக முனைவோமாக....

மெட்டி அணிவது ஏன்..?


மெட்டி அணிவது ஏன் என்று தெரியாமல் வெறும் சம்பிரதாயமாகவே அதனை பார்க்கின்றோம்.

ஆனால் அதற்கு பின்னால் தமிழனின் அறிவியல் ஒளிந்திருக்கிறது...

திருமணமான இந்து பெண்கள் கால்களில் மெட்டி அணிவார்கள்.

மெட்டி அணிவது திருமணம் ஆனதற்கு அடையாளம் மட்டுமல்ல, அது அறிவியலும் கூட. பெண்கள் இரு கால்களிலும் மெட்டி அணிவதால், அவர்களின் மாதவிடாய் சுழற்சி சீரான முறையில் செயல்படும் என்று இந்திய வேதங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மெட்டி அணிவது திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் நல்ல நோக்கத்தை அளிக்கிறது.

அது மட்டுமல்லாமல், பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலான நடு விரலில் ஓடும் நரம்பானது பெண்களின் கருப்பையுடன் இணைந்து இதயம் வழியாக செல்கிறது என்று கூறப்படுகிறது.

ஆகவே பெண்கள் மெட்டியை பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலில் அணிவதன் மூலம் கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும், கர்ப்பப்பையில் இரத்த ஓட்டம் சீராகவும் பாதுகாக்கப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் பெண்கள் கர்ப்பம் அடைந்து இருக்கும் போது மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். தற்பொழுது மயக்கம் ஏற்பட்டால் உடனே பெண்களை படுக்க வைத்து அவரின் கால் விரல்களை இறுக்கி பிடித்து கொண்டு உள்ளங்காலை தேய்ப்பார்கள்.

ஏனெனில் கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும் மயக்கம் சோர்வு போகும்.

இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள்.

காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோ, சோர்வு, மயக்கம் போன்றவற்றை குறைக்கிறது.

கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்..

அதுமட்டுமா? வெள்ளி ஒரு நல்ல கடத்தி (Good Conductor) என்பதால், பூமியின் துருவத்தில் இருந்து நிறைய ஆற்றலை உள்வாங்கி, உடல் முழுவதும் புத்துணர்ச்சியைப் பரவ செய்கிறது.

இதனாலயே வெள்ளியில் மெட்டி அணியப்படுகிறது...

நம்மாழ்வார் சொன்ன நான்கு ரகசியங்கள்...


உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்...

ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்டும்,

இரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும்,

மூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும்,

நான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும்.’

இந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள்.

ஆனால், பட்டண வாழ்க்கையில் வேலைப் பளு காரணமாக இந்த விஷயங்கள் எதுவுமே சாத்தியம் இல்லாமல் இருக்கிறது..

நோய் வந்த பிறகு தான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது..

மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள்.

ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை.

உணவு, நீர், காற்று... இந்த மூன்றில் இருந்துதான் நம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது..

இந்த மூன்றில் இருந்து தவறான விஷயங்கள் ஏதேனும் உடலுக்குள் சென்றுவிட்டால்தான் நோய் வருகிறது.

நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நாளமில்லாச் சுரப்பிகளை தியானம், யோகாசனம் போன்றவைதான் ஊக்குவிக்கின்றன..

அதனால், ஒவ்வொருவரும் தங்கள் உடலைப் பராமரிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும்..

உடலுக்குள் தேங்கிவிடும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும், உணவின் கலோரிகள் எரிக்கப்படுவதற்கும் காரணம் இந்த மூச்சுக் காற்று தான்..

நாம் சுவாசிக்கும் இந்த பிராண வாயுதான் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது..

மூச்சை இழுக்கும்போது, காற்று நுரையீரலுக்குள் முழுமையாகச் சென்று சேர வேண்டும்.

ஆனால், நாம் பெரும்பாலும் மேலோட்டமாகவே சுவாசிக்கிறோம்.

இதனால், நுரையீரல் முழுமையாகச் சுருங்கி விரிவது இல்லை.

நுரையீரல் நன்றாகச் சுருங்கி விரிய மூச்சுப் பயிற்சி அவசியம்.

எந்த ஒரு வலியும் இல்லாமல் நம்மைக் குணப்படுத்தும் வல்லமை மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனங்களுக்கு உண்டு என்றார் மறைந்த பசுமை நாயகன் நம்மாழ்வார்...

திமுக வும் அனைத்துக் கட்சி கூட்டமும்...


கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை, மிக அவரசரமாக 1974 ஜுன் 29-ந்தேதி சென்னை கோட்டையில் அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி கூட்டினார்.

அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டன..

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது..

இந்தியாவுக்குச் சொந்தமானது என்று நாம் கருதுவதும், தமிழ்நாட்டுக்கு நெருக்கமான உரிமை கொண்டதுமான கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவை இந்தக் கூட்டம் விவாதித்தது..

தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு மத்திய அரசு இதனை மறு பரிசீலனை செய்து கச்சத்தீவின் மீது இந்தியாவுக்கு அரசு உரிமை இருக்கும் வகையில் ஒப்பந்தத்தை திருத்தி அமைத்து தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது..

அதற்கு பின்னும் எந்த மாற்றமும் இல்லை.. கச்சதீவு பறிபோய் 500க்கும் மேற்பட்ட உயிர்களும் எண்ணற்ற இழப்பும் ஏற்பட்டது தான் மிச்சம்...

தமிழீழத்தில் நடைபெற்ற தமிழின படுகொலையை எதிர்த்து அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி 2008 அக்டோபர் 14ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார்..

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது..

இரண்டு வாரங்களுக்குள் இந்திய அரசாங்கம் இலங்கையில் போரை நிறுத்த முன்வராவிட்டால் தேசிய பாராளுமன்றத்தில் இருக்கும் மாநில உறுப்பினர்கள் அனைவரும் மொத்தமாக இராஜிநாமா செய்துவிடுவர்..

அதற்கு பின்னும் எந்த மாற்றமும் இல்லை..

ராஜினாமாவும் ஒரு நாடகம் என்று தெரிந்தது தான் மிச்சம்..

இந்திய அரசின் துணையோடு சிங்கள பௌத்த இனவெறி ராணுவம் கோரத்தாண்டவம் ஆடி மே மாதத்தில் மொத்த இனத்தையும் அழித்து முடித்தது..

ஆட்சியில் இருந்து போட்ட அனைத்துக்கட்சி கூட்டமே இந்த லட்சணம் என்றால் எதிர்கட்சியாக இருந்து கொண்டு போடும் இந்த அனைத்துக்கட்சி கூட்டம் என்ன தந்துவிட போகிறது..

தந்தையும் மகனும் இன்னும் பலி எடுக்காமல் இருந்தால் போதும்...

ஊசல் என்னும் ஊசலாட்டம்...


பழங்காலத் தமிழர்கள் தங்கள் உடலை வளர்க்கும் பண்பாட்டில் அதிக கவனம் செலுத்தியுருக்கின்றனர்.

உடலைச் சிறந்த முறையில் பேணுத அறம் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் உடல் திறனும் தேடிய செல்வமும் அழியும் என்று நம்பியிருக்கின்றனர்.

எனவே, பழந்தமிழர்கள் தங்கள் இளைய பருவத்தினரைத் விளையாட்டில் ஈடுபாடு கொள்ளச் செய்து அவர்களின் உடல் வளத்தைப் பெருக்குவதில் நாட்டம் கொண்டனர்.

அக்கால மக்கள் தாங்கள் வாழ்ந்த திணைக்கேற்ப விளையாட்டுகளை உருவாக்கிக்கொண்டனர்.

ஊசல் என்னும் ஊசலாட்டம் இன்று ஊஞ்சல் எனப்படுகின்றது.

மரக்கிளைகளில் அல்லது வீடுகளில் உயர்விட்டங்களில் கயிறுகளால், கொடிகளின் தண்டுகளால் ஊஞ்சல் கட்டி அதில் அமர்ந்து ஆடி மகிழ்தல் ஆகும்.

இதில் பெரும்பாலும் பெண்களே பங்கேற்பர்.

சங்க இலக்கியங்களில் தலைவியை ஊஞ்சலில் வைத்து ஆடியவாறு பாடியதாகக் குறிப்புகள் உள்ளன. நற்றினை எனும் நூலில்..

“பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல்
பூங்கண் ஆயம் ஊக்க ஊங்காள்”

என்ற வரிகள் வெளிப்படுகின்ற “மடவோர்க்கியற்றிய மாமணி யூசல்” என்று சொல்லப்படுகின்றது.
முப்பது வருடங்களுக்கு முன்பு இருந்த ஊஞ்சல் விளையாட்டு இன்று குறைந்து விட்டது.

ஆனால், மேற்கு நாடுகளில் பொதுப் பூங்காதோறும் ஊஞ்சல்கள் அமைத்து ஊஞ்சலாடுவது இன்று வழக்கமாகிவிட்டது...

பாம்புகள் ராஜ்ஜியத்தால் தடைவிதிக்க பட்ட பகுதி...


பாஜக மோடியின் மெகா ஊழல்...


சென்ற ஆண்டு புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து அனுப்பும்போது முதல் ஒரு மாதமாக‌ அனுப்பிய நோட்டுக் கட்டுகளின் சீரியல் எண் விவரங்கள் ரிசர்வ் வங்கியிடம் பதிவாகவில்லை.

யார் யாருக்கு, எந்த எந்த வங்கிக்கு எவ்வளவு அனுப்பப்பட்டது என்பது குறித்த ஆதாரம் எடுக்க முடியவில்லை.

பல லட்சம் கோடி ரூபாய் தவறான முறையில் பங்கு வைக்கப்பட்டிருக்கிறது.

இதனால் சேகர் ரெட்டி போன்றவர்களிடம் பிடிபட்ட கணக்கற்ற கோடிகள் நடவடிக்கைக்கு தப்பி விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

மோடி அரசு செய்த மெகா ஊழல் இதுதான் ஆகவே மோடி ராஜினாமா செய்ய வேண்டும்...