08/10/2021

தாழ்த்தப்பட்டவர்களைக் கேவலப் படுத்திய ஈ.வே.ரா...

 


தாழ்த்தப்பட்டவர்களுக்காக என்ன போராடினார் ஈ.வே.ராமசாமி நாயக்கர்? என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும்.

ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களை எவ்வளவு கேவலமாக பேசினார் தெரியுமா?

வட ஆற்காடு பசுமந்தூரில் 1948 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற திராவிடர் கழக கூட்டமொன்றில் பெரியார் பேசிய போது, கூட்டத்திலிருந்து ஒருவர் ஆதிதிராவிடர் திராவிடர் கழகத்தில் சேருவதால் ஆதிதிராவிடர்களுக்கு என்ன நன்மை? எனக்கேட்ட கேள்விக்கு..

ஆதிதிராவிடர்கள் திராவிடர்கழகத்தில் சேருவதால் திராவிடர் கழகத்துக்குத் தான் என்ன நன்மை? என்று எதிர்க் கேள்வி கேட்டார் பெரியார்.

அதாவது ஆதிதிராவிடரால் ஒரு நன்மையும் இல்லை என்று இலை மறையாகச் சொல்லிவிட்டார்.

இதை எதிர்த்து அன்றைய சென்னை மாகாணத்தின் சட்டசபை எம்.எல்.ஏ அவர்களின் உரிமை’ இதழின் ஜூலை 1949 பதிப்பில் பெரியாரின் கூற்றை தலைப்பாக வெளியிட்டு சேரிமக்கள் ஆதரவால் பெரியாரான ஈ.வே.ரா. ஆதிதிராவிடனை தனித்து ஓதுக்கி விட்டதால் இனி அவன் தன் சுயபலத்தால் நின்றாலன்றி வாழ்வில்லை என்பதை விளக்கி, தலையங்கம் எழுதினார்.

(நூல்: கோலார் தங்கவயல் வரலாறு, கே.எஸ்.சீதாராமன்).

அதே போல, துணி விலை ஏறிவிட்டதற்குக் காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவது தான்.

வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்கு காரணம் பறையன்களெல்லாம் படித்துவிட்டது தான் என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறியதாக தாழ்த்தப்பட்ட தலைவர்கள் இன்றும் கூறுகின்றனர்.

இது உண்மை இல்லை என்று இதுவரை திராவிடர்க் கழகம் தெளிவுப்படுத்தவில்லை.

ஆனால் இது உண்மைதான் என்று ஓர் ஆதாரம் கூறுகிறது.

சென்னையில் சில அம்பேத்கர் வாதிகளால் நடத்தப்பட்டு வந்த ‘அம்பேத்கர்‘ இதழின் ‘சூட்டுக்கோல்‘ என்ற பகுதியில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது.

ஓரு முறை ஈ.வே.ரா. துணி விலை ஏறிவிட்டதற்குக் காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவதுதான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்குக் காரணம் பறையன்களெல்லாம் படித்துவிட்டதுதான் என்று கூறினார். அதற்கு அன்று மறுப்புக் கூறினோம்.

(அம்பேத்கர் மாத இதழ் – நவம்பர் – டிசம்பர் – 1963).

இதிலிருந்து தெரிவதென்ன?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் பறையர்களை எவ்வளவு கேவலமாகப் பேசியிருக்கிறார் என்பது தெரிகிறதல்லவா.

தாழ்த்தப்பட்டவர்களை கேவலமாகப் பேசிய ஈ.வே.ராமசாமி நாயக்கரைத்தான் இன்று தாழ்த்தப்பட்டவர்களுக்காக உழைத்தவர் என்று பாராட்டுகிறார்கள்.

ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களை மட்டுமல்ல, அண்ணல் அம்பேத்கரையும் கேவலமாகப் தான் பேசியிருக்கிறார்...

பிராடு பாஜக மோடி கலாட்டா...

 


கணவனும்... நீதிபதியும்...

 


நீதிபதி : எதுக்காக விவாகரத்து கேக்கறே நீ?

கணவன் : சில உண்மைகளை மறைச்சு கல்யாணம் பண்ணிட்டாங்க யுவர் ஆனர்... ?

நீதிபதி : அப்படி என்ன உண்மைகளை மறைச்சுட்டாங்க...?

கணவன் : பொண்ணுக்கு..

கராத்தே, குங்ஃபூ, குஸ்தில்லாம் தெரியும்னு சொல்லாம மறைச்சுட்டாங்க யுவர் ஆனர்....

நீதிபதி : யோ இதெல்லாம் வெளியில காட்டிக்காம வாழனும்.. என்னைய மாதிரி.. அப்போ தான் வாழ்க்கை நிம்மதியா போகும்...

கணவன் : 😳😳😳

🤣🤣

பாஜக உ.பி. யோகி யின் பயங்கரவாத ஆட்சி...

 


மனிதன் ஓர் இரட்டை பிறவி.. இருட்டு பிரபஞ்சத்தின் திறவுகோல்...

 


மனிதர்களுக்கு வணக்கம்...

பொதுவாக மனிதனோடு ஒட்டி பிறந்த இரட்டை பிறவி உண்டு அது அவனது மூளைதான்..

ஆம் நீங்கள் இருவரும் பிண்ணிப்பிணைந்த இரட்டை பிறவிகள் இந்த பிணைப்பை மூளைதான் உங்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது..

காரணம் மூளை உங்களை கட்டுப்படுத்துவதை நீங்கள் ஒரு போதும் அறிந்து விடக்கூடாது என்பதற்காக.. 

அதெப்படி நான் என்பதும் எமது மூளையின்  வெளிப்பாடுதானே அப்படியானால் நான்தானே அனைத்தையும் தீர்மானிக்கிறேன் என்று நீங்கள் எண்ணலாம் அப்படி எண்ணத்தான் உங்கள் மூளை தூண்டும்.. ஆனால் உண்மை அதுவல்ல.. 

சரி சற்று விரிவாக பார்ப்போமா?

உங்கள் மூளை இரண்டாக பிரிப்போம்..

1.ப்ரைமரி ப்ரைன் (PRIMARY MIND)

2.சப்கான்சியஸ் ப்ரைன் (SUBCONSCIOUS MIND)

ப்ரைமரி_ப்ரைன்..

உதாரணமாக நீங்கள் உங்கள் தாயின்  கருவறை இருட்டில் கண் திறந்தது முதல் இன்று வரை அனைத்தையும் உங்கள் மூளை பதிவேற்றி வைத்திருக்கும்..

ஆனால் அதை நினைவுகூறவோ அதைப்பற்றி தெரிந்து கொள்ளவோ நீங்கள் முயல எண்ணும் போது உங்கள் மூளையின் நினைவுகள் அதை நோக்கி போகாது.. காரணம் ப்ரைமரி பிரைன் அன்றைய சூழலுக்கு ஏற்றவாறு மட்டுமே சிந்தனையை உங்களுக்கு கொடுக்கும்  இந்த ப்ரைமரி ப்ரைன் எப்போதும் ஏதோ ஓர் அலைவரிசையில் பயணித்து கொண்டே இருக்கும்.. சூழலைப் பொறுத்து மட்டுமே முடிவுகளை எடுக்கும் உங்களுக்கு எது தேவையோ அதை மட்டுமே காட்டும் நினைவுபடுத்தும்..

எல்லாத்தையும் பதிவு செய்து வைத்திருக்கும் மூளை ஏன் மனிதர்கள் நினைக்கும் நேரத்தின் பதிவை எடுத்து காட்டுவதில்லை ? அப்படியான் இதை யார்தான் கட்டுப்படுத்துகிறார்கள்? இந்த அலைவரிசை இறந்த காலத்தை மட்டும் அசைபோடுவதில்லை எதிர்காலத்தையும் அசை போடும் உங்களுக்கான எதிர்காலம் எப்படி வேண்டும் என இது பல அலைவரிசையில் பரிணமிக்கும்.. எண்ணிலடங்கா அலைவரிசையை ஏற்படுத்தி உங்களால் பயணப்பட்டுக்கொண்டே இருக்க முடியும்..

இந்த ப்ரைமிரி ப்ரைன் தான் நீங்கள்..

சப்கான்சியஸ்_ப்ரைன் (ச.ப்)...

இருப்பதிலே மிகவும் சக்தி வாய்ந்தது இதுதான்.. இதுதான் ப்ரைமரி ப்ரைனை கட்டுப்படுத்தி வைத்திருப்பது.. இதை ஒரு போதும் உங்களால் உணர முடியாது காரணம் ச.ப் அப்படியான கட்டமைப்பை உங்களுக்கு ஏற்படுத்தி வைத்திருக்கிறது..

இது பெரும்பாலும் எப்போதும் விழித்துக் கொண்டே இருக்கும் உங்களது அனைத்து பதிவுகளும் இதில் இருக்கும் அது எந்த (இறந்த,நிகழ்,எதிர்) காலம் ஆனாலும் அனைத்தையும் உருவாக்குவது இதுதான்.. அதில் உங்களுக்கு எது தேவையோ அதை மட்டுமே இது பிம்பப்படுத்தும்.. அது எடுப்பதுதான் உங்கள் தலைவிதி அனைத்தும்.. உங்களுக்கு பேயை காட்ட வேண்டுமா கடவுளை காட்ட வேண்டுமா..? இல்லை அணுவை காட்டவேண்டுமா அவற்றால் இணைந்த ஒரு பொருளை காட்ட வேண்டுமா .? இப்படி எல்லாவற்றையும் முடிவெடுப்பது அதுதான்..

ஆனால் மேலே கூறியவை அனைத்தையும் உயிர்ப்பிப்பது உங்களது சப்கான்சியஸ் ப்ரைன் தான் மன்னிக்கவும் உங்களது அல்ல காரணம் இதுநாள் வரை அதற்கு தான் நீங்கள் அடிபணிந்து உள்ளீர்கள்.. அதுதான் உங்களை கட்டுப்படுத்துகிறது..

என்று மனிதன் ச.ப் கட்டுப்படுத்த முயன்று அதில் வெற்றி காணுவனோ அன்று அவன் இந்த பிரபஞ்சத்தின் அதிபதி ஆகிறான்..

இதை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் உள்ளதா..? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.. இருக்கிறது..

எதிரி தந்தது சுதந்திரம் அது மனிதனுக்கல்ல அவனது மூளைக்கு (ச.ப்) இதனாலேயே அவன் பெரும்பாலும் அத்தகைய அலைவரிசைகளை பயன்படுத்தி இன்றளவும் மனித இனத்தை அடிமைப்படுத்தி வருகிறான்...

ஆதியில் மனிதனுக்கு அடிபணிந்த மூளை(ச.ப்), இன்று அதற்கு அடிபணிந்து மனிதன் வாழ்கிறான்...

பிராடு மோடி சொன்ன கருப்பு பணம் 😁

 


பிராடு பாஜக மோடி கலாட்டா...

 


சித்தர் ஆவது எப்படி - 10...

 


பழைய சித்தர் பாடல்களில் அதி கவனம் உண்மையை சொன்னால் பூகம்பம்.. அதனால் உண்மையை மறைக்கப் பட்டது..

உண்மையை வெளிபடுத்த பொய்யையே பயன் படுத்த வேண்டி, மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் உண்மையை பலப்படுத்தாது பொய்யையே பலப்படுத்தியது.. முடிவில் பொய்யே நிலைத்தது..

உலக புகழ் பெற்ற குருக்கள் தேர்ந்தெடுத்த வழிதான் பொய்யை பயன் படுத்தி உண்மையை வெளிப்படுத்த முயற்சித்தது.. முடிவில் தோல்வியே கண்டனர்..

கவர்ச்சிகரமான பொய்களை பலவற்றை தேர்ந்தெடுத்து அதில் உண்மையை மறைமுகமாக உபதேசம் செய்ய துணிந்தனர்...

நேரடியான உண்மையை சொன்னால், கடை விரித்தேன் கொள்வார் இல்லை என்ற வள்ளலார் நிலைக்கு செல்ல வேண்டி வருமே என்ற தயக்கமே.. இதற்கு நல்ல உதாரணம் ஓசோ..

பல கவர்ச்சி பேச்சுகள் நகைசுவை பல சம்பவங்கள் நடுவே உண்மையை சொல்ல முயன்றார்.. ஆனால் அவரின் நகைசுவையிலும், கதைகளில் ஈர்க்கப் பட்டார்களே தவிர அவர் சொன்ன உண்மையில், எவரும் கவனம் செலுத்தவே இல்லை..

ஓசோ சொன்னவை அற்புதம் அற்புதம் என்று சொல்லுபவர்கள் எல்லாம் அவர் சொன்ன கதைகளையும் நகைசுவைகளையும் மட்டுமே..

அவர் சொன்ன இருப்பு தன்மை, Beingness, existential, Emptiness சூன்யம், அன்பு போன்றவைகள், அவரின் கவர்ச்சி பேச்சில், தொலைந்து போய் விட்டது...

உண்மைகளை பற்றி குறிப்பாக பேசும் ஓஸோ அன்பர்கள் ஒருவரையேனும் இன்று காணோம்.. அன்றும் ஒஸோ காலத்திலும் இல்லை....

அதே போலத்தான் சித்தர்கள் சொன்ன கவர்ச்சியற்ற சத்திய உண்மைகள் துளி அளவும் எடு படவில்லை...

அதை போக்க சின்ன தவறு செய்தார்கள்.. சற்று கவர்ச்சி கூட்ட இரசவாதம், இரசமணி, முப்பு என்று உலகியலையும் அகயியலையும் குறிக்கும் இரண்டு பொருள் பட கொண்ட வார்த்தைகளை உபயோகப் படுத்தினார்கள்..

உண்மை புரியாமல் மறைப்பு பொருள் என நம்பி உலகத்தார் உலகியல் பொருள் அர்த்தமாக கொண்டு அதை தேடி தேடி பல நூற்றாண்டுகளாக தங்கள் வாழ்வினை வீணாக்கினர்..

அந்த மறைப்பு பொருளில், தான் உண்மையை கண்டு கொண்டதாக சொன்னவர்கள் தனது பிழைப்புக்காகவும், பின் தான் தப்பித்து கொள்வதற்காகவும், சித்தர் பாடல்களை திருத்தி திருத்தி மக்களை திசை திருப்பினர்..

பழைய சித்தர் பாடல்களை அடையாளம் தெரியாமல் எரித்து விட்டனர்..

பழைய சித்தர்கள் பாடல்கள் அனைத்தும் பிழைப்புக் காரர்களால் சித்தர் நடையிலே பாரப்பா, வாருமப்பா, சேரப்பா என்ற தோரணையில் திருத்தி எழுதப்பட்டவையே..

அந்த பிழைப்புக் காரர்கள் கவர்ச்சியற்ற உண்மையை சொல்ல முயன்ற திருமுலர், சிவ வாக்கியர் போன்றோர் நூல்களில் கைவைக்க முடியாமல் அப்படியே விட்டு விட்டனர்..

காரணம் இலக்கணம் என்ற முத்திரை பலமாக பதிக்கப் பட்டதால் அவைகளில் கைவைக்க முடியவில்லை..

காட்டில் வாழ்ந்த சித்தர்கள் இலக்கணம் இலக்கியம் போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்தாமல் யதார்த்த நடையிலே சொன்னதால் பிழைப்புக் காரர்கள் அவர்களின் பாடல்களை நன்றாகவே தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு, எங்கும் கிடைக்காத சித்தர் பாடல்களை தனக்கு மட்டுமே கிடைத்தது என அப்பாவி மக்களுக்கு ஏமாற்றி, திருத்திய பாடல்களை விற்றார்கள்..

இதற்கு சாட்சி பல நூற்றாண்டுகள் முன்பு எழுதிய பாடல்களில் குறுகிய காலத்தில் பயன் பட்ட வார்த்தைகளை சேர்ந்து இருப்பதே.. இதனை பல தமிழ் அறிஞர்கள் சுட்டி காட்டி இருக்கிறார்கள்.. நம்பகதன்மை அற்ற நிலையை நிரூபித்து இருக்கிறார்கள்..

அப்படி திருத்திய பாடல்களில் சிக்கிய மனித குலம் அன்று முதல் இன்று வரை மீளவே முடியாமல் இருக்கிறது..

இரசவாதம் ரசமணி முப்பு போன்றவற்றிலும், சில யோக நூல்களும், உண்மைக்கு புறம்பாக திருத்தி எழுதப் பட்ட நிலையில் சிலர் அதனை வேத வாக்காக கொண்டு பித்தர்கள் போல் அலைந்து தன் வாழ்நாளை வீணாக்கி பரிதாப நிலைக்கு செல்லுகிறார்கள்..

இதுவரை ஒருவரும் முப்பை கண்டதும் இல்லை; இரசவாதத்தில் தங்கம் பண்ணவும் இல்லை..

மனம் என்ற பூதம் மட்டுமே நெருப்பு தன்மையால் இராசயன மாற்றம் ஏற்படுத்தக் கூடியது.. மற்ற பூதங்கள் பௌதிக மாற்றம் மட்டுமே செய்யும்..

இராசயன மாற்றம் செய்யும் நெருப்பு என்ற பூதம் தன் இருப்பு தன்மையில் இரசம் என்ற சத்துப் பொருளான பிரபஞ்ச ஆற்றலை கனலாக தக்க வைக்கவும், வெளிச்சமாக மாற்றி, பொறி புலன்களில் வெளியேற்றவும் செய்யவல்லது..

பல பல ஜென்மங்களின் பதிவுகளின் அம்சமான சித்தத்தின் வெளிச்சத்தை, அளவற்ற கனலாக மாற்றி மிக பெரிய சக்தியை, தன் இரசாயன மாற்றத்தால் கனலாக மாற்றி வாதம் என்ற காற்று பூதமான புத்தியில் கலக்க செய்யும் யுக்தியே இரசவாதம்..

பிழைப்புக் காரர்கள் தங்களுக்கு சாதகமாக மாற்றியதால் பல பேர் தங்கம் மாற்றும் வித்தையில் சித்தம் கலங்கி போய் இருக்கிறார்கள்..

நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டிய விசயம் என்னவெண்றால் இப்படி திருத்தி அமைக்கப் பட்ட சித்தர் பாடல்களிலே சிக்குண்டவர்கள் பேச்சுக்கள் நடைமுறைகள் அனைத்தும் சித்தம் கலங்கியது போலவே இருக்கும்..

தாங்கள் கற்றதை, விடமுடியாமல் ஏற்கெனவே சொன்ன பொய்களிலிருந்து தப்பித்துக் கொள்ள, வகை அறியாமல் சொன்னதையே சொல்லி சொல்லி தன்னை காத்துக் கொள்ள முயற்சி செய்வார்கள்..

உண்மையை அறிந்தாலும் தன்னை காத்துக் கொள்ள பொய்யை விடமாட்டார்கள்..

இத்தகையவர்களிடமிருந்து உண்மையை துளியும் பெற முடியாது என்பது இயற்கையே... அவர்களை பாவம் என்று விட்டு விட வேண்டியது தான்..

கவர்ச்சி இல்லாத சித்தர் பாடல்களில் கவனம் செலுத்த, வெளிச்சமான மனம் ஒரு போதும் உதவாது.. புத்தி ஒன்றே உதவும்..

ஆகவே தான் கனல் மயமான புத்தியை அதாவது சத்திய வழி காட்டலான அக குருவை பலப்படுத்த வேண்டிய அவசியம் ஆகிறது..

இனி வரும் பகுதிகளில் சத்தியத்தை, உண்மையை, நோக்கி சிறுக சிறுக ஆனால் உறுதியான பிடிப்போடு முன்னேறுவோம்...

காதலியே...

 




ஒரே பெயரையா...
ஓராயிரம் பேருக்கு
வைப்பது...

நீ என்னை ஏமாற்றிவிட்டு
வேறோருவன் கைபிடித்து
சென்ற பிறகும்...

திரும்ப திரும்ப கேட்கப்படும்
உன் பெயரால்...

அடித்து துவைக்கப்படுகிறது
என் அடி மனசு...

காதல் என்ற பெயரில்...

உனக்கு கிடைத்ததோ
பொழுப்போக்கு...

எனக்கு கிடைத்ததோ...
நரக வாழ்க்கை...

காலை வணக்கம்...

 


இன்னைக்கு நான் வீட்டுல தான்டா இருப்பேன் ஆண்டவா...

காலையில இம்பூட்டு சீக்கிறமா எழுந்து நான் என்ன பண்ண போறேன்..

நிம்மதியா தூங்க கூட விட மாட்டீயா..

தூக்கத்த கொடுடா...

பயங்கரவாத பாஜக கட்சியை தடை செய்ய வேண்டும்...

 


ஹிப்னாடிசம் எனும் மனோவசியம் கலை...

 


நாம் ஒவ்வொருவரும் ஆழ்மனம் எனும் அற்புத சக்தியோடு தான் பிறப்பெடுத்துள்ளோம்.

எது இந்த அண்ட பிரமாண்டத்தை உருவாக்கியதோ அதுவே நாம்.

கடவுளின் மறுவடிவம் தான் நாம். அறியாமை எனும் இருளால் அதை உணராமல் இருக்கின்றோம்.

நம் ஆழ்மனதை சில பயிற்சிகள் மூலம் பண்படுத்தினால் அடைய முடியாத இலக்குகளை அடையலாம், நம்ப முடியாத அதிசயங்களை நிகழ்த்தலாம்.

ஹிப்னாடிசம் எனும் அரிய கலையை பயன்படுத்தி பல நோய்களையும் பலவித மனப் பிரச்சனைகளையும் அகற்றலாம்.

உதாரணமாக திக்குவாய், தேவையற்ற பயம் பதட்டம், பல்பம் கல் மண் சாப்பிடுதல், மருத்துவத்தால் கண்டறிய முடியாத வலிகள், கெட்ட கனவுகள், முன்சென்ம தொடர்புகள், கல்வியில் மந்தம், கெட்ட பழக்க வழக்கங்கள், குடும்ப விரிசல், கணவன் மனைவி மனக்கசப்புகள் போன்ற பல விடயங்களை இதன் மூலம் சரி செய்யலாம்...

என் நண்பன் கலாட்டா...

 


இந்திய மக்கள் எதிரி பாஜக மோடியின் பித்தலாட்டங்கள்...

 


சித்தர் ஆவது எப்படி - 9...

 


இருப்பு நிலையின் பொறுப்பு...

இருப்பு நிலை, இருத்தல் நிலை, பற்றி பேசாத குருக்களே இல்லை.. ஓசோ அதிகமாகவே கூறி இருக்கிறார்.. மற்றும் இன்றைய குருமார்கள் மிக அதிகமாகவே பேசிக் கொண்டு இருக்கிறார்கள்...

இருந்த போதிலும் பஞ்சபூத கூட்டமைப்பில் சில விவரங்களை சொல்ல வேண்டிய அவசியம் ஆகிறது...

மனத்தின் இயல் நிலையே இருப்பு தன்மை தான்... இதுதான் பஞ்சபூத கூட்டமைப்பில் மிக முக்கியமான இரகசியம்..

இந்த இருப்பு தன்மையை மனம் அடைந்த பின்னே தான் எந்த ஆன்மீகம் மார்க்கமும் தொடங்குகிறது.. அதுவரை எதுவும் துளியும் பயன் தராது..

இருப்பு தன்மை அடையாத பட்சத்தில் மனதில் எந்த கடவுள் உருவமும் எந்த யோகப் பலனும் எந்த நிலையான ஞானமும் எந்த திட சிந்தனைகளும் நிலைத்துநிற்க முடியாது..

காரணம் இயல்பாகவே இருப்பு தன்மை வாய்ந்த வெற்றிடத்தில் சித்தத்தின் எண்ண ஆதிக்கம் கொடி கட்டி பறக்கும்..

எங்கே எல்லாம் வெற்றிடம் உள்ளதோ அங்கே எல்லாம் எப்படி காற்று புகுந்து கொள்கிறதோ, அப்படியே இருப்பு தன்மை வாய்ந்த சுத்த மனத்தின் வெற்றிடத்தை, எல்லாம் இந்த சித்தத்தின் எண்ண ஆதிக்கம் ஆக்கிரமித்து விடும்..

அப்படியான மனம் சித்த மயமாகி விட்ட நிலையில் சித்தத்தின் பழைய எண்ண பதிவுகளின் ஆதிக்கத்தின் பிரகாரமே இயங்க தொடங்கும்..

எல்லா விலங்குகளும் அப்படியே அப்படி பட்ட மனதின் பிரகாரம் பூரணமாக இயங்குகின்றன...

ஆகவே தான் அவைகள் தங்கள் இயல்பிலிருந்து மாறி மனிதனை போல் வேறு விசேசமான முன்னேற்றம் மனதளவில் எதையும் அடைய முடிவதில்லை..

விலங்குகள் மனதில் சித்தத்தின் உச்ச கட்ட ஆதிக்கம் இருப்பதே இதற்கு காரணம்...

பின் மனிதன் எவ்வாறு வேறு படுகிறான் என்பதை பார்க்க வேண்டும்..

மனிதன் ஏதோ ஒரு வகையில் தன் மனதில் புத்தியின் அம்சமான கனலை, சித்தத்தின் ஆதிக்கத்தையும் மீறி மனதில் கனலை தக்க வைத்துக் கொள்ளும் பண்பை உடையவனாக இருக்கிறான்..

இந்த கனல் தான் சித்தத்தின் ஆதிக்கம் வழி செல்லாமல் தடுத்து நிகழ் காலத்திற்கும், நிகழ் கால நிகழ்வுகளை எதிர் கொள்ள பயன் படுகிறது...

இந்த நிகழ் காலத்தை தொலைத்தவனுக்கு விலங்குகள் போல் எந்த முன்னேற்றமும் காண முடியாது...

நிகழ் காலத்தை சந்திக்க முடியாதவனிடம் கனல் என்ற சக்தியின் குறை பாட்டு தன்மையே அதிகம் இருக்கும்.. சித்தத்தின் பிடியில் இருந்து மீள முடியாமல் தவிப்பார்கள்...

கனல் பெருக்கம் பெற்றவர்கள் மட்டுமே நிகழ்கால தொடர்பு பெற முடியும்..

இல்லையேல் சித்தத்தின் எண்ண பதிவுகளின் ஆதிக்கமான இறந்த கால நடப்புகளிலேயே தன் காலத்தை முற்றிலும் தொலைத்து விட்டு வள்ளலாரின் மொழியில் சொன்னால் செத்தாரை போல அதாவது செத்துப் போனவர்களை போல் இருக்க வேண்டியது தான்...

சராசரியாக ஒரு மனிதன் தன் வாழ்நாள் காலத்தை 2 சதவீதம் முதல் 5 சதவீதம் வரைதான் நிகழ்காலத்தில் கழிக்கிறான்.. மீதி நேரம் எல்லாம் இறந்த கால எண்ண ஆதிக்கத்தில் விரையம் ஆகிறது..

நிகழ்கால தொடர்பு என்பது சிவநிலை என்றும், சித்தத்தின் இறந்த கால தொடர்பு என்பது சவநிலை என்றும் சொல்லப் படுகிறது..

நாம் ஒரு நாள் வாழ்க்கையில் எவ்வளவு நேரம் சவநிலை வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதை கணக்கிடும் போது நமக்கும் விலங்கிற்கும் அதிக வித்தியாசம் இல்லை..

ஒரு சதவீத வித்தியாசத்தில் மட்டுமே உள்ள நாம் அந்த ஒரு சதவீதத்தால் நாம் எவ்வளவு தூரம் விலங்குவிட மேம்பட்டு இருக்கிறோம் எனபதை கணக்கிட்டு பார்ப்பது மிகவும் அவசியமாகிறது..

அந்த ஒரு சதவீதத்திற்கே இப்படி என்றால் 100 சதவீதம் இருந்தால் எப்படி இருப்போம் என்பதை யூகிக்க வேண்டிய அவசியம் ஆகிறது..

இந்த கனலை எவ்வாறு பெறுவது அல்லது பெருக்குவது என்பது தான் யோகம்..

அப்படி பெருக்கும் எந்த யோகமும் பொதுவாக சிவயோகம் என்றே அழைக்கலாம்.. மற்றவை அனைத்தும் சவயோகம்...

கனலை பெறுவதற்கு முன்னால் நாம் மனதளவில் அடைய வேண்டிய ஒன்று தான் மனதில் இருப்பு தன்னம அல்லது இருத்தல் தன்மை.. அந்த இருத்தல், இருப்பில் மட்டுமே கனல் நிற்கும்..

இருப்பு தன்மை பெற்றால் மட்டும் போதாது, அதில் நீடித்து இருக்க வேண்டிய அவசியம் ஆகிறது..

பெற்ற கன்லை சித்தத்தின் எண்ண ஆதிக்கம் கவர்ந்து போகாதவண்ணம் பாது காப்பதும் அதை விட அவசியம் ஆகிறது..

சும்மா வந்து விடாது சுதந்திரம் என்பார்களே அது போல் சித்தத்தின் எண்ண ஆதிக்கத்திலிருந்து, சவநிலையிலிருந்து, மீண்டு சிவ நிலைக்கு சுதந்திரமாய் வருவதற்கு ஆரம்பத்தில் மனம் என்ற நெருப்பில் பயின்றால் மட்டுமே முடியும்..

அந்த இருப்பு தன்மையை தக்க வைக்கும் பொழுது பேரண்ட பேராற்றல் கனலாக புத்தியில் நிலைகொண்டு, இருப்பு தன்மையால் மனதை கனலாக மாற்றி, சிவகலப்பாக மாற்றும் பொழுது, மனதில் மோதும் சித்தமும் சிவமாகி போகிறது..

அப்படி சித்தம் எல்லாம் சிவமாகி நின்ற நிலையில் தான் குறைந்த சதவீத கனல் நிலை அதிக சதவீதம் பெருக்கம் அடைந்து மனிதன் மேன்மை நிலை நோக்கி விரைவு கொள்கிறான்..

அந்த நிலையான இருப்பு நிலை பெறுவதற்கான பயிற்சிதான் சித்தர்கள் கண்ட வாசியோகமும் கனல் தீட்சையும்...

இருப்பு தன்மை பெறாத வாசியோகம் நாசம் விளைவிக்கும்...

பாஜக மோடி எனும் கார்ப்பரேட் அடிமை...

 


விரைவில் இந்திய மின்சாரத்துறை அம்பானிக்கு சொந்தமாக போகிறது...