03/10/2017

எதிர்காலத் தமிழகமும் - சமூக மேம்பாடு...


1. ஒவ்வொரு மாவட்டத்திற்கும், விளையாட்டுக்குழு, சிந்தனையாளர் குழு, இலக்கியக்குழு, சுற்றுலா இடங்கள், கண்காணிப்பு அமைப்பு, நிதி அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

2. ஒவ்வொரு வட்டாரத்திலும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் விவசாய, உணவு, தொழில் பொருட்கள் வட்டார மக்களால் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு நிர்வகிக்கப்பட வேண்டும்,  இலாபமும் மக்களால் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்...

வீரப்பனாரும் புலிகளும்..


15-08-1995வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டிருந்த 43 புலிகள் (3 பெண் புலிகள் உட்பட) தப்பித்தனர்..

செய்தித்தாளில் செய்தியைப் படித்துக் கொண்டிருந்தார் மாறன். புலித் தளபதி மாறன்.

அவருடன் 4,5 புலிகள் வேலூர் காட்டுப் பகுதியில் ஒரு குகையில் பதுங்கியிருந்தனர்.

ஊருக்குள் போய்விட்டு ஒரு புலி வந்தார்.

பழ.நெடுமாறன் ஐயாவுக்கு கடிதம் போட்டுவிட்டேன்.

தலைமைக்குத் தகவல் கொடுத்து விட்டு நம்மை எப்படியும் அழைத்துச் சென்று விடுவார்.

பணம் எப்படி கிடைத்தது?

ஊருக்குள் சென்று பேசியதுமே பேசும் தமிழ்நடையை வைத்து ஈழத்தான் என்று கண்டு பிடித்துவிட்டனர்.உதவியும் செய்தனர்.உணவும் தேநீரும் கூட கிடைத்தது..

அடடா! தமிழ்நாட்டு மக்களின் பாசத்தை என்னவென்பது?நீ புலி என்று கூறிவிடவில்லையே?

இல்லை. ஆனால் ஊர் மக்களுக்கு நாம் தப்பித்த செய்தி தெரிந்துள்ளது.அவர்களுக்குப் புரிந்திருக்கும்..

சரி, நாம் காட்டில் இருக்கும் வரை கவலையில்லை..

"கையிலே பணமில்லை, உதவி வரும் வரை என்ன செய்வது?"

காட்டிலே ஏதாவது பழம், கிழங்கு கிடைக்கக்கூடும்.

உணவு தேடி காட்டுக்குள் சென்றனர்.

காக்கி உடை தரித்த ஒரு கூட்டம் வருவது தெரிந்தது.

ஓடிப் போய் குகையினுள் பதுங்கிக் கொண்டனர்.

யாரது குகை உள்ளே? பயப்படாமல் வெளியே வாருங்கள்.

நான் வீரப்பன் வந்திருக்கிறேன்.

வீரப்பன் என்ற பெயரைக் கேட்டதுமே புலிகளின் மனதில் நிம்மதி பிறந்தது.

புலிகள் வெளியே வந்தார்கள்.

யார் நீங்கள்?

நாங்கள் புலிகள்..

அடடே! நம் புலித்தம்பிகளா?

ஏது இந்த பக்கம்?

ஓ சிறையில் இருந்து தப்பியவர்களா?

ஐயா! அதற்குள் உங்களுக்கு எப்படி தெரியும்?

காட்டில் இருந்தாலும் நாட்டு நடப்புகளை உடனுக்குடன் எனக்குத் தெரிந்துவிடும்.

நேற்று இரவு இங்கே சந்தேகத்திற்குரிய சிலர் நடமாடியதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

அதனால்தான் காண வந்தேன்.

நீங்களாகத்தான் இருப்பீர்கள் என்று யூகித்தேன்.

ஆமாம். அத்தனை வலிமையான கோட்டையில் இருந்து எப்படி தப்பித்தீர்கள்?

10 வாரங்களாகச் சுரங்கம் தோண்டி மதில் சுவர் ஏறிக்குதித்து தப்பித்தோம்.

அடேயப்பா புலிகள் புலிகள்தான்.

சரி, இது என் கட்டுப்பாட்டுப் பகுதியின் எல்லை.

காட்டிற்குள் வந்தால் என்னுடன் பாதுகாப்பாக இருக்கலாம்.

உங்களை நான் பத்திரமாக அனுப்பிவைக்கிறேன்.

இல்லை. இங்கேயிருப்பதாகத் தகவல் கொடுத்துவிட்டோம்.ஓரிரு நாட்களில் அழைத்துச் செல்ல வருவார்கள்.

யார் வருவார்கள்?

அனேகமான தமிழ்நாடு மீட்சிப்படை சுப.முத்துக்குமார்..

ஓ. சரி கவனமாக இருங்கள்.

வீரப்பனாரின் தளபதி சேத்துக்குளி கோவிந்தன் ஒரு மஞ்சள் பையை கொடுக்க அதை மாறனிடம் கொடுத்தார்.அது நிறையப் பணம் இருந்தது..

தேவையானவற்றை வாங்கிக் கொள்ளுங்கள்..

பணம் தீர்ந்துவிட்டால் என் பெயரைச் சொல்லி பொருள் வாங்கிக் கொள்ளுங்கள்.

நான் இரண்டொரு நாட்களில் மீண்டும் வருகிறேன்.

அதற்குள் கிளம்பிவிட்டால் பிரபாகரனை நான் கேட்டதாகச் சொல்லுங்கள்..

நன்றி ஐயா, உங்களைச் சந்தித்ததே பெரிய பாக்கியம்.

தலைவர் உங்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளார்.

நான்காண்டுகள் முன்பு காவிரிக் கலவரம் நடந்தபோது படையோடு போய் கன்னடவரைத் தட்டிக் கேட்டீர்களாமே.

அந்த செய்தி எத்தனை பெருமையாக இருந்தது தெரியுமா?

வீரப்பனார் சிரித்துக் கொண்டே ஏனப்பா இப்படியான வீரசாகசங்களை பிரபாகரன் மட்டும்தான் செய்ய வேண்டுமா?

உங்கள் அண்ணன் தம்பிகள் நாங்களும் சளைத்தவர்கள் அல்லர்..

வன்னிக்காடு அளவை ஒத்த காட்டுப்பகுதி என் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

ஆனால் பிரபாகரன் என்னைவிடப் பெரிய ஆளாக வருவான்.

காலம் வரும் போது கை கோர்ப்போம்.

சரி. கவனமாக இருங்கள்.

கூறிவிட்டு வீரப்பன் போய்விட்டார்.

இரண்டொரு நாட்கள் கழித்து காக்கி உடை தரித்த காவலர்கள் அங்கே வத்தனர்.

வீரப்பனார்தான் வருகிறார் என்று நினைத்து அசட்டையாக இருந்த புலிகள் பிடிபட்டனர்.

மீண்டும் சிறையிலடைக்கப்பட்டனர்.

இவர்களைத் தவிர சுவர் ஏறிக் குதிக்கும்போது இருவர் கால் முறிந்து பிடிபட்டனர்.

மற்ற அனைவரும் சுப.முத்துக்குமார் அவர்களால் பத்திரமாக ஈழத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

படம்: வீரப்பன் ஃபேன்ஸ் அசோசியேசன் (கேரளா)...

அதிமுக எம்.ஜி.ஆர் செய்த கொலைகள்...


அருப்புக்கோட்டை அருகே வாகைக் குளத்தில் மிகப்பெரிய ஆழ்துளைக் கிணறு தோண்டுவதை எதிர்த்து போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 2 பெண்கள் உட்பட 5 பேரைக் கொன்றார்..

நாராயணசாமி நாயுடு தலைமையில் நடந்த விவசாயப் போராட்டத்தில் காவல்துறையை ஏவி 14 விவசாயிகளைச் சுட்டுக் கொன்றார்..

தர்மபுரி, ஆற்காடு பகுதிகளில் நக்சலைட் ஒழிப்பு என்ற பெயரில் 21 இளைஞர்கள் தேவாரம் தலைமையிலான காவல்படை சுட்டுக் கொலை செய்தது..

வேப்பந்தட்டையில் பஸ் வசதி கேட்டு போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 3 பேரைக் கொன்றார்..

சென்னை வியாசர்பாடியில் விசாரணை என்ற பேரில் ஒரு அப்பாவி இளைஞனைத் துன்புறுத்திக் கொன்றது போலீஸ்.
அதைக் கண்டித்துத் திரண்ட மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 5 பேரை கொன்றது..

நடு இரவில் சென்னை கடற்கரையில் மீனவர் குடியிருப்பை அடித்து நொறுக்கிய போலீஸ் பலரை சுட்டுக் கொன்றது..

விழுப்புரம் நகரில் பட்டியல் சாதியினர் 12 பேர் அ.தி.மு.க வினரால் வெட்டிக்கொலை
ஒரு பட்டியல்சாதி பெண்ணை மதுராந்தகம் அ.தி.மு.க அலுவலகத்திற்கே தூக்கிவந்து கற்பழித்து கொன்று போட்டனர்..

நாகப்பட்டணம் எம்.பி யையே அ.தி.மு.க கொலை செய்தது..

திருச்செந்தூர் நகைக் கொள்ளை, அதை சரி பார்க்க வந்த அரசு அதிகாரி கொலை..

இன்னும் வெளிவராத அ.தி.மு.க குண்டர்கள் செய்த கொலைகள் பல உண்டு..

நன்றி: வினவு தளத்தின் - எம்.ஜி.ஆர் : முழு வரலாறு
கட்டுரை..

இது போக தனித் தமிழ்நாடு போராளி தமிழரசன் மற்றும் கூட்டாளிகள் இந்திய உளவுத்துறை கொலை செய்தது இவர் ஆட்சியில் தான்..

இடவொதுக்கீடு போராட்டத்தின் துணை ராணுவம் வந்து 21 பேரைக் கொன்றதும் இவர் காலத்தில்தான்..

M.G.R ஒரு மலையாளியே...

எதிர்காலத் தமிழகமும் - பாதுகாப்பு...


1. காவல் துறை, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு துறையாக மாற்றப்பட வேண்டும்.

குற்றங்களை விட குற்றங்களுக்கான சூழல், வாய்ப்புகள் களையப்பட வேண்டும்.

2. ரௌடிகள், அடியாட்கள், கட்டப்பஞ்சாயத்து அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்.

3. வன்முறையான செயலில் தொடர்ந்து செயல்படும் நபர்களின் உடலில் சிப் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும்.

4. மாணவர்கள் கல்லூரிப்படிப்பில் ஒரு வருடம் இந்தப் பாதுகாப்பு துறையில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

5. அனைத்து வாகனங்களும் செய்மதியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட வேண்டும்.

ஒழுங்கு மீறி செல்லும் வாகனங்கள், விபத்து ஏற்படுத்திய வாகனங்கள், உடனுக்குடன் கண்காணிக்கப்பட வேண்டும்.

தண்டனைத்தொகை அவர்களின் கணிணி முகவரிக்கு, அல்லது செல்லிட பேசிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

மீறுவோரின் உரிமம் பறிக்கப்பட வேண்டும்...

பிள்ளையார் வேற்று கிரகவாசியா?


ஏன்சியன்ட் ஏலியன்ஸ் என்று ஒரு கருத்தாக்கம் உண்டு, கேட்க கேட்க சுவாரசியமாக இருக்கும் ஒன்று..

இது குறித்து ஹிஸ்டரி சேனல் பல டாக்குமெண்ட்ரிகளை வெளியிட்டுள்ளது.

அதில் ஒன்று தான் பிள்ளையார் ஒரு வேற்று கிரகவாசியாக இருந்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்கள்.

இந்த படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள முகமூடிகள் அமெரிக்க ஜெட் பைலட்டுகள் சுவாசிப்பதற்கு ஏற்ப அணிந்துள்ள ஆக்சிஜன் மாஸ்க்குகள்..

பிள்ளையாரின் தும்பிக்கை என்பது வேற்று கிரகவாசி சுவாசிப்பதற்கு ஏற்ற ஒரு குழாயாக‌ இருந்திருக்கலாம்..

குழாய் முகமூடி அணிந்து வேற்று கிரகவாசி இவ்வுலகிற்குள் வந்திருக்கலாம்..

அதைகண்ட இந்திய மக்கள் அது குறித்து புரியாமல் இந்தியாவில் இருந்த யானையுடன் ஒப்பிட்டு  அவர்களை யானை முகம் கொண்ட கடவுளாக ஆக்கியிருக்கலாம்..

இந்திய துணைக் கண்டத்தில் கிடைத்துள்ள பிள்ளையார் சிலைகள் அல்லது அது போன்ற முக அமைப்புடைய யட்சன் சிலைகள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுகளில் இருந்துள்ளதாக ஆதாரங்கள் கிடைத்துள்ளன..

எனவே இந்த யட்சன், பிள்ளையார் எல்லாம் வேற்று கிரகவாசி பைலட்டுகளாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது..

உண்மையோ பொய்யோ கேட்கவும் யோசிக்கவும் நம்பும் படியாகவுமாக சுவாரசியமாக உள்ளதல்லவா...

எதிர்காலத் தமிழகமும் - சுற்றுச்சூழல், சுகாதாரம், மருத்துவம்...


1. புகையிலை சிகரெட் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும்.
இருப்பினும் அதற்குப்பதில் உடலுக்கு நலம் தரும் மூலிகை சிகரெட்டுகள் (துளசி, கற்றாழை, வேம்பு, புதினா, போன்றவை) அறிமுகப்படுத்தப்பட வேண்டும்..

2. அந்நிய மதுபானம் தடை செய்யப்பட வேண்டும்

3. தென்னை, பனை கள் பக்குவப்படுத்தப்பட்டு குடியுரிமை அட்டை உள்ளவர்க்கு (18 வயது) மட்டும் விற்கப்பட வேண்டும்.

4. அவரவர் இல்லத்தில் மட்டுமே குடிக்க முடியும். பொது இடங்களில் கள் அருந்துவதற்கு தடை வேண்டும்..

5. தமிழகம் முழுவதும் கொசு ஒழிக்கப்பட வேண்டும்.

விஷப்பாம்புகள் உயிருடன் பிடித்து தருவோருக்கு பரிசுகள் தரவேண்டும். அந்த பாம்புகள் அனைத்தும் காடுகளில் பாதுகாப்பாக விடப்பட வேண்டும்..

6. காடுகளில் இருந்து எந்த விதமான ஆபத்தான விலங்கும் நாட்டிற்குள் நுழையாதபடி உயரமான வேலி அமைக்கப்பட வேண்டும்..

7. அந்நிய காட்டுக்கருவேல மரங்களும், யூகலிப்டஸ் மரங்களும், பார்த்தீனிய செடிகளும் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும்..

8. அந்நிய குளிர்பானங்கள் ஒழிக்கப்பட்டு மோரும், இளநீரும், எலுமிச்சை, பழ, கீரை பானங்கள் நாடெங்கும் அறிமுகத்தப்பட வேண்டும்..

9. ஆங்கில வழி மருத்துவ முறை படிப்படியாக ஒழிக்கப்பட்டு சித்தா மருத்துவ முறை அனைத்து இடங்களிலும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட வேண்டும்..

10. ஒவ்வொரு கிராமத்திலும், ஊரிலும் சித்தா மருந்தகங்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் சித்தா மருத்துவக்கல்லூரி, மூலிகைப் பண்ணைகள்  இருக்க வேண்டும்..

11. மருந்து பொருட்கள் அனைத்தும் தமிழிலேயே எழுதப்பட்டிருக்க வேண்டும். மாத்திரையின் பெயர் முதல் மருந்தின் உப பொருட்கள், காலாவதி தேதி வரை தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்...

இலுமினாட்டி = திராவிடம் = கம்யுனிசம் = ஆரியம்...


இலுமினாட்டிகளை பற்றி பதிவிடுவோருக்கு கம்யுனிசமும் இல்லுமினாட்டிசமும் ஒன்றாகவே தெரியும்..

திராவிடம் எப்படி ஒரு கோட்பாடோ அது போலவே, கம்யுனிசம், மார்சிஸிசம் அனைத்தும் கோட்பாடுகள்!

திராவிடம் எப்படி தமிழர்களை ஏமாற்றி வடுக அரசியலை உள்ளே மறைத்து வைத்ததோ..

அதுபோலவே கம்யுனிசம், மார்சிஸிசம் உலக மக்களை ஏமாற்றி யூத இன ஆதிக்கத்தை மறைத்து வைத்தது..

திராவிடம் ஆதிக்க தெலுங்கர்களால் உருவாக்கப்பட்ட கோட்பாடு மற்றும் திராவிடத்தால் என்னென்ன இழந்தோம் என்பது தெரியவந்த உடனே உண்மையான தமிழர்கள் திராவிடத்தை எதிர்த்தார்கள்..

அந்த திராவிடத்தால் பயன் அடைந்த தமிழர்கள் துரோகிகளாக இன்னும் திராவிடத்தை பிடித்து தொங்குகிறார்கள்..

இன்னும் சிலர் திராவிட கட்சிகள் செய்த தவறுக்கு திராவிட கருத்தியலை குறை சொல்லாதீர்கள் .. ஈ.வே.ரா ரொம்ப நல்லவர் அவர் கடவுள் மாதிரி என்று சொல்கிறார்கள் .

இதை இவ்வாரே இந்த கமுனிசத்தோடு பொருத்தி பார்த்தல் வேண்டும்!

முதலில் இந்த கம்யுனிச கோட்பாட்டை உருவாக்கிய காரல்மார்க்ஸ் ஒரு யூதர், டிராட்ஸ்கி ஒரு யூதர், லெனின் ஒரு யூதர், பிரீட்ரிச் ஏங்கல்ஸ் ஒரு யூதர் இப்படி இந்தப் பட்டியல் நீளும்..

மற்றும் இவர்கள் அனைவரும் முதலாளிகள் என்பது ஒரு கசக்கும் உண்மை..

சரி, கமுனிசத்தை உருவாக்கியவர்கள் பெரும்பாலும் யூதர்கள், சரி கம்யுனிசத்தால் மக்களுக்கு வந்த பாதிப்புகள்.பற்றி பார்போம்..

1) கமுனிச தலைவர் மாவோ, தனது புரட்சியாக குருவிகள் திங்கும் உணவை எல்லாம் கணக்குப் போட்டு, அதிகமாக தானியங்களை அவை தின்று வீணாக்குகின்றனர்.

ஆகவே குருவிகளை இனப் படுகொலை செய்தார், (எப்படி இங்கே ஈ.வே.ரா தென்னைமரம் வெட்டினாரோ அதேபோல்) விளைவாக ஐந்து கோடி மக்கள் பஞ்சத்தால் இறந்தார்கள்..

2) தனிச்சொத்து கூடாது என்று சொல்லும் கம்யுனிச கோட்பாட்டை முதலில் எதிர்த்தவர்கள் விவசாய மக்களே..

அவ்வாறு எதிர்த்த மக்களின் விவசாய கருவிகளை எல்லாம் கையகப் படுத்தி, பஞ்சத்தை உருவாக்கி 35 மில்லியன் ரஸ்சிய மக்களை கொன்றவன் கொடுங்கோலன் லெனின்..

இது போல் இந்த கமுனிச முதலாளிகள் செய்தது கொஞ்ச நஞ்சமல்ல...

ஆக கம்யுனிசத்தால் பதிப்புகள் மக்கள் அடைந்துள்ளார்கள்..

இவையிரண்டையும் பொருத்திப் பார்த்தால் கம்யுனிசம் ஒரு அழிவுக் கோட்பாடு என்று நாம் அறியலாம்.

இல்லுமினாட்டிகளின் அடிப்படை கருத்து...

1)குடும்பம்
2)தனிச்சொத்து
3)பண்பாடு
4)ஆன்மீகம்
5)ஒழுக்கம்
6)தேசபக்தி

இவை எதுவும் மக்களிடம் இருக்கக் கூடாது என்பதே !

இதையே தான் கம்யுனிசமும், திராவிடமும், சொல்லுது..

அதனால் தான் சொல்றோம் எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது!

இல்லுமினாட்டிகள் என்று ஒன்று இல்லை என்று உறுதியாக சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கு சமம்மானது.

எங்கள் பார்வையில்
இல்லுமினாட்டி = திராவிடம் = கம்யுனிசம் = ஆரியம்..

முதலில் நமது வரலாற்றுப் பகைவர்களான திராவிடத்தை வீழ்த்துவோம்..

அதற்குப்பின் காலம் நமக்கான வழியைக் காட்டும்..

நாம் விழிப்போடு இருப்பதே நம் இனத்தைக் காக்கும்..

நமக்குள் இருக்கும் மோதல் நம் பகைவர்களையே வலிமை அடைய செய்யும்...

குறிப்பு : இவர்களை யூதர்களாக பார்ப்பது தவறு...

எதிர்காலத் தமிழகமும் : நிதி, பொருளாதாரம்...


1. ஒவ்வொரு 10 வருடத்திலும் பணம் முறை முற்றிலும் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

உதாரணமாக காகிதப்பணம் ஒழிக்கப்பட்டு நெகிழி (பிளாஸ்டிக்) பண முறை கொண்டுவரப்பட வேண்டும்.

பின்பு முற்றிலும் உலோகப் பண முறை இப்படி.

காரணம் பணப்பதுக்கலுக்கு வாய்ப்பு இருக்காது. கறுப்புப்பணம் தானாக வெளி வந்துவிடும்.

2. எந்த வித நிதி தொடர்பான கொடுக்கல் வாங்கல் முறைக்கும் நிதி அட்டை (பான் அட்டை போல நிதி நிர்வாக அட்டை) கொண்டு வர வேண்டும்..

3. தேநீர்க்கடையில் கூட ரசீது தரவில்லை என்றால் கடை இழுத்து மூடப்பட வேண்டும்.

4. ஒவ்வொருவரின் நிதி நிலவரமும் மாநில மைய அமைப்போடு இணைக்கப்பட வேண்டும்.

தவறான வழியில் எந்தத் தனி நபரும் செல்லாத நிலையில் எந்தவித அரசுக்குறுக்கீடும் இல்லாது அவர்கள் சுதந்திரமாக செயல்பட முடியும்.

தனி நபர் உரிமையும் சமூகக் கட்டுப்பாடும் இணைந்தே செல்லும்...

சாராயக் கடவுள்...


சாராய ஆலை.. சாராய வியாபாரி.. என்று தானே நாம் கேள்விப்பட்டுள்ளோம்
அதென்ன சாராயக் கடவுள் ..

கிரேக்கத்தில் மக்கள் தொகை போல, கடவுளின் தொகையும் அதிகம்..

ஏறக்குறைய 30,000 க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட கடவுள்கள் உள்ளனராம்..

சாப்பாட்டுக்கு ஒரு கடவுள்..
தண்ணீருக்கு கூட கடவுள் உண்டு..

இதெல்லாம் விட கொடுமையானது தான் சாராயக் கடவுள்..

ஒரு கடவுளின் பெயர் டைனோசயிஸ்..

இவருடைய டிபார்ட்மெண்ட் விவசாயம்..

ஆம் விவசாயத்துக்கு இவர் கடவுளாம்..

ஆனால் இவரு தான் திராட்சை பழத்தில் இருந்து முதல் முறையாக ஒயினை தயாரித்தாராம்..

அதனால் இவருக்கு (god of wine) ஒயினுடைய கடவுள்..

என்ற பெயரும் உண்டு...

எதிர்காலத் தமிழகமும் : மதம்...


1. எல்லாவித மதங்களும் அவரவர் தனி மனித உரிமைக்காக மதிக்கப்பட வேண்டும்..

2. ஆனால் தமிழர் சமயம் என்ற உயர்ந்த வாழ்க்கை வழிமுறை மட்டுமே அரசின் கொள்கையாக இருக்க வேண்டும்..

மெய்ப்பொருள் காண்பதே அறிவாக, சமய நெறியாக அமைய வேண்டும்..

3. தனி நபர் கடவுள்களை கொண்டுள்ள மதங்களை கொள்கையளவில் ஏற்காத நாடாகவே தமிழ்நாடு இருக்க வேண்டும்..

4. இதைப் பின் பற்றுவோர் தமிழர் சமயத்தை சேர்ந்தவராக ஏற்கப்பட வேண்டும்.

குறிப்பு : (சமயம் என்பது மதமல்ல வாழ்வியல் முறை)...

கவரிமான் என்னும் வார்த்தையின் உண்மையான விளக்கம்...


கவரிமா அல்லது யாக் (Yak) என்பது நீண்ட மயிர்க்கற்றைகளைக் கொண்ட இமயமலைப் பகுதிகளில் காணப்படும் ஒரு மாட்டினம்.

காட்டுக் கவரிமா மாட்டினத்திலேயே பெரிய விலங்குகளுள் ஒன்று.

நன்கு வளர்ந்த கவரிமாக்கள் 1.6 முதல் 2.2 மீட்டர் உயரமும் (தோள் வரை) 325 முதல் 1000 கிலோ எடையும் இருக்கும். பசுவின் எடை காளையின் எடையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியே இருக்கும்.

கவரிமாக்கள் அவற்றின் பால், இறைச்சி, உரோமம் ஆகியவற்றுக்காகவும் சுமைகளை எடுத்துச்செல்லவும் வளர்க்கப்படுகின்றன.

மேலும் கவரிமாவின் காய்ந்த சாணமானது திபெத்தில் ஒரு முக்கியமான எரிபொருளாகும். ஏனெனில் அப்பகுதியில் மரங்கள் எதுவும் இல்லாததால் இது ஒன்றே அங்கு எளிதாகக் கிடைக்கும் எரிபொருளாகும்.

கவரிமாவின் பாலில் இருந்து பெறப்படும் வெண்ணெய் தேநீர் செய்யவும், விளக்கெரிக்கவும், வெண்ணெய்ச் சிற்பங்கள் செய்யவும் பயன்படுகிறது...

எதிர்காலத் தமிழகமும் : வேளாண்மைத்துறை...


1. தமிழகத்தில் உள்ள ஏழு பெரும் அணைகளான மேட்டூர், பவானிசாகர், வைகை, பாபநாசம்-காரையாறு-மணிமுத்தாறு, பேச்சிப்பாறை அணைகள் நிலத்திற்கடி பெரும் குழாய்கள் மூலம் இணைக்கப்பட வேண்டும். நீரில்லா அணைகள் நீருள்ள அணைகளிடமிருந்து நீர் பெரும்.

2. கல்லனைக்கருகில் கொள்ளிட ஆற்றில் பெரும் அணை கட்டப்பட்டு மழை காலத்தில் வீணாக கடலில் சேரும் வெள்ளம் தடுக்கப்பட வேண்டும்.

3. தமிழகத்திலுள்ள அணைகள், ஆறுகள், குளங்கள், கண்மாய்கள் அனைத்தும் இணைக்கப்பட வேண்டும்.

4. காவிரி, பவானி, வைகை, தாமிரபரணி ஆறுகளின் கரைகள் கட்டப்பட்டு மணல் கொள்ளை தடுக்கப்படுவதோடு நீர் வழிப் போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும்.

5. செந்நெல் போன்ற அரிசி ரகங்கள் ஆராய்ச்சி தொடங்கப்பட்டு மக்களுக்கு நீரிழிவு போன்ற நோய்களைத் தராத அரிசி ரகங்கள் மட்டுமே பயன்பாட்டிற்கு வர வேண்டும்.

6. அரிசி தவிர கம்பு, கேழ்வரகு, சாமை, போன்றவைகளால் ஆன உணவு, எல்லா உணவகங்களிலும் கொண்டுவரப்பட வேண்டும்.

7. தமிழகம் முழுவதும் பகுதி வாரியாக விவசாயமும் தொடங்கப்பட வேண்டும்.

உதாரணமாக,
தஞ்சை பகுதியில் அரிசி, மதுரைப்பகுதியில் சோளம், தானியங்கள், மலர்,
நெல்லையில், காய்கறிகள், பழங்கள் பண்ணைகள்,
கோவைப்பகுதியில் பருத்தி, கரும்பு போன்றவை.

8. விவசாயிகளின் நில அளவு, உற்பத்திக்கேற்ப, நாட்டிற்கான அவர்களின் பங்களிப்புக்கு ஏற்ப மாதச்சம்பளம், ஓய்வூதியம் போன்றவை வழங்கப்பட வேண்டும்.

9. விவசாயமும் ஒரு தொழிலாக்கப்பட்டு பலரும் ஈடுபடும் வகையில் லாபகரமாக்கப்பட வேண்டும்.

10. ஒரு எம்.எல்.ஏ வின் அடிப்படை சம்பளமும், ஒரு விவசாயியின் அடிப்படை சம்பளமும் சமமாக இருக்க வேண்டும்.

அது போன்றே அனைத்து துறைகளின் அடிப்படை சம்பளமும், திரைத்துறை நடிகர் சம்பளம் உட்பட இருக்க வேண்டும்...

உலகில் தாயிற்காக கட்டிய முதல் கோயில்...


தாஜ் மஹால் கட்டுவதற்கு 600 வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் ஒரு தாயின் பிரிவை தாளாமல் கட்டிய கோயில் ஒன்று உள்ளது என்பது உலகிற்கு தெரியுமா?

பளிங்குக் கல்லில் தாஜ்மஹால் கட்டினால் மட்டும் தான் பாசமா?

ஐயா பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை கோயிலுக்கு போகணும்…. வழி…. என்று இழுத்ததும், அந்த பேரில் இங்க எந்த கோயிலும் இல்லீங்களே..

ராமசாமி கோயில் தான் ஒன்னு இருக்கு, அந்த கோயிலும் பூட்டியே தான் கெடக்கும், அங்க போகும் போது அந்த தெருவுல ஒரு பெரியவர் இருப்பாரு அவர கூட்டிட்டு போங்க அவர் தான் அந்த கோயில பாத்துக்குறாரு என்று வழிகாட்டினார் அந்த பெரியவர்..

பள்ளிப்படை கோயில் தான் இன்று பெயர் மாறி ராமசாமி கோயிலாகியுள்ளது.

உலகப் புகழ் பெற்று இருக்க வேண்டிய இடம், வழி கேட்டு செல்லும் நிலையில் உள்ளது.

பட்டீஸ்வரம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் உள்ள சிறிய கிராமம்.

இந்த ஊரின் பெற்ற துர்க்கை கோயிலின் வாயிலில் நின்று நேராக பார்த்தால் இரண்டு சாலைகள் இடது வலதாக பிரியும், இடது பக்கம் திரும்பினால் சோழர்களின் பழைய தலை நகரான “பழையாறை” செல்லும் சாலை, வலது புறம் நடந்தால் ஒரு மசூதி, அப்படியே இன்னும் நடந்தால் ஒரு சிமெண்ட் சாலை பிரிவு, அங்கே தான் பார்க்க நாதியில்லாமல் கிடக்கின்றது இந்த ஆயிரம் வருட அற்புதம்...

தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த ராஜ ராஜ சோழனின் மனைவி தான் இந்த பஞ்சவன் மாதேவி..

தன்னை மிகுந்த பாசத்தோடு வளர்த்த சிற்றன்னையின் பிரிவை தாங்க முடியாமல் அவருக்காக ஒரு கோயிலை எழுப்பியுள்ளான் கங்கை முதல் கடாரம் வரை வென்ற ராஜேந்திர சோழன்.

உலகில் தாயிற்காக கட்டிய முதல் கோயில் அநேகமாக இதுவாகவே இருக்கக்கூடும், அதுவும் அதை ஒரு தமிழ் மன்னன் கட்டியிருக்கிறான் என்பது நாம் எவ்வளவு பெருமைப்பட வேண்டிய விசயம்.

தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் அவளின் நினைவாக எழுப்பப்பட்ட தாஜ்மஹாலை இந்த உலகமே கொண்டாடுகிறது, தாஜ் மஹாலை பற்றி பேச எனக்கு விருப்பமில்லை காரணம் அது பாசத்திற்காக உருவானதில்லை...

ஆனால் தாஜ் மஹால் கட்டுவதற்கு 600 வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் ஒரு தாயின் பிரிவை தாளாமல் கட்டிய கோயில் ஒன்று உள்ளது என்பது உலகிற்கு தெரியுமா?

குறைந்த பட்சம் எத்தனை தமிழர்களுக்கு தெரியுமா?

பளிங்குக்கல்லில் கட்டினால் மட்டும் தான் பாசமாக கணக்கிடப்படுமா?

வேதனை! இந்த பட்டீஸ்வரத்தின் அருகில் தான் சோழர்களின் மாளிகை இருந்தது, ராஜ ராஜன் தன் மகனிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு தன் கடைசி காலத்தை இங்கு தான் கழித்தார், தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்காமல் அடிக்கடி இந்த கோயிலுக்கு வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இன்றைக்கும் அந்த ஊரின் பெயர் “சோழன் மாளிகை”. கேட்பாரற்று இடிந்து கிடந்த இந்த கோயிலை சில வருடங்களுக்கு முன் தான் புதுப்பித்து இருக்கிறார்கள்.

தற்போது இந்த கோயிலை படத்தில் இருக்கும் இந்த பெரியவரும் அவரின் பேத்தியும் தான் பார்த்துக் கொள்கிறார்கள்..

இங்கு யாருமே வராததால் வெளியே இந்த கோயிலின் சிறப்பு குறித்த அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

உலகில் பெரிய ஆட்கள் கூட யாரும் இதை சென்று பார்க்க வேண்டாம், உள்ளூரில் உள்ள நாமேனும் ஒரு முறை சென்று பார்த்துவிட்டு அங்கு ஒரு விளக்கேற்றி வைத்து விட்டு வரலாமே...

எதிர்காலத் தமிழகமும் : ஆட்சி நிர்வாகத்துறை...


1. தமிழர் ஒவ்வொருவருக்கும் 18 வயது நிரம்பியதும் குடியுரிமை அட்டை வழங்கப்பட வேண்டும்.

2. அதுவே கூட்டுறவு பொருள் வாங்க மட்டுமல்ல, ஓட்டுனர் உரிமம், பண பரிவர்த்தனை, சொத்து விபரம், சம்பளம், வரவு-செலவு அனைத்திற்குமான ஒரே அட்டை.

3. வெளி மாநிலத்தவர் என்றால் அவர்களுக்கென இரு விதமான அட்டைகள் வழங்கப்பட வேண்டும்.

தனி மொழி வாரி மாநிலமான 1965 க்கு முன்பிருந்தே இங்கு வாழும் பிற மொழியினர் தங்களை தமிழ் மண்ணின் மக்கள் என்று ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவர்களும் தமிழர் என்றே அங்கீகாரம் வழங்கப்பட சிந்திக்கலாம்..

(ஆனால் அனைத்து உடைமையும் தமிழகத்தில் இருக்க வேண்டும்)

பணி நிமித்தமாக சில காலம் தங்கியிருப்பவர்களுக்கு வேறு ஒரு அட்டை வழங்கப்பட வேண்டும்...

தமிழரும் மதங்களும்...


தமிழர்கள் இசுலாமியர் ஆக்கப்பட்டனர் என்பதை ஏற்கும் கூட்டம்.

தமிழர்கள் கிறித்துவர் ஆக்கப்பட்டனர் என்பதை ஏற்கும் கூட்டம்.

தமிழர் இன்னும் பல மதங்களுக்கு மாற்றப்பட்டதை ஏற்கும் கூட்டம்.

தமிழர் இந்துவாக்கப்பட்டதை ஏற்க மறுக்கிறது.

காரணம் அதில் இருக்கும் வழிபாட்டு/பண்பாட்டு முறைகள்.

ஒன்றை தமிழர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

உலகில் மதங்களில் இனங்களில் மொழிகளில் எல்லாவற்றிலும் தமிழ்/தமிழர் தாக்கம் இருக்கும். காரணம் தமிழ் தான் முதன் மொழி தமிழர் தான் மூத்த மாந்த இனம்.

இசுலாம் கிறித்து இன்னும் பிற மதங்கள் வேறு நிலப்பரப்பில் இருந்து தமிழர் நிலப்பரப்பினுள் நுழைந்து தமிழரை மதமாற்றம் செய்தது.

ஆனால் இந்து என்று இன்று அழைக்கப்படும் ஆரிய கோட்பாட்டின் கருத்தியல் மதம், தமிழர் பாரம்பரியம், பண்பாடு, மொழி, கலை போன்றவற்றை நம் நிலப்பரப்பில் இருந்துகொண்டே, அதை களவாடி(திருடி) பின் திரித்து(ஆரிய கோட்பாடை கலந்து) நம்மிடம் திணிக்கப்பட்டது.

எனவேதான் தமிழர் நாம் இயல்பாகவே தொன்றுதொட்டே நம்மை இந்துக்கள் என்று எண்ணி ஏமாந்து வாழ்கிறோம்.

இதையெல்லாம் அறிந்து தெளிந்து எடுத்துரைத்தால், தமிழர்களே அதற்கு எதிராக நிற்பது, 1800 ஆண்டுக்கும் மேல் அடிமைபட்டு, அடிமைக்கும் அடிமையாகிப் போன நிலை தந்த அறியாமையே.

என் பாட்டன் சொன்னார் என் அப்பன் சொன்னார் என்று நான் மாற மாட்டேன் நான் இப்படித்தான் வாழ்வேன் என்னும் சில வாதங்கள் வேதனைக்குரிய ஒன்று.

நம் பாட்டனும் அப்பனும் அறியாத வரலாற்றை நாம் மீட்டெடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்து தெளி என் தமிழினமே.

தொன்றுதொட்டு வந்ததை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று மடமையில் விழுந்து உன் இனம் அழிய நீயே வழிகாட்டாதே.

மலேசிய வரலாறுபடி 200 ஆண்டுக்கு முன் அடிமையாய் இந்த நாட்டுக்கு வந்தோம் என்கிறான். எனவே நான் அடிமையாய் வந்தேன் அடிமையாய் தான் இருப்பேன் என்றால் அது சரியா?

200 ஆண்டுதானா உன் வரலாறு?
உன் பாண்டிய சேர சோழன் காலத்தில் நீ உலகை ஆண்டவனா அடிமையா?

2000 ஆண்டுக்கு முன் வாழ்ந்த வள்ளுவன்.

6000 ஆண்டுக்கு முன் வாழ்ந்த காப்பியன்.

இவர்கள் தமிழரா இந்துவா?

இதற்கு பதிலுண்டா உன்னிடம். புரிந்துகொள், நீ 50,000 ஆண்டுக்கும் மூத்த நீண்ட நெடிய வரலாறு கொண்ட மாபெரும் தமிழர் எனும் தேசிய இனம்.

இனியும் நீ எழாவிட்டால்..

எழு.. மதத்தை தூரப்போடு
குலத்தில் ஏற்றதாழ்வை தூக்கிப்போடு.

இனம் மீள விடுதலை வெல்ல.

உன் களப்பணியை
செய்.... அல்லது செத்துமடி..

தமிழர் வெல்வது உறுதி...

திராவிடம் - 8...


1900களில் பிராமண ஆதிக்கத்தையும் அதைப் பிடுங்கிக்கொள்ள ஆதிக்க சாதியர் பிராமணருடன் போட்டியிட்டதையும்,  திராவிடப் பரப்புரை முடுக்கி விடப்பட்டதையும் பார்த்தோம்..

முதலாம் உலகப்போர் 1914 தொடங்கி 1918 ல் முடிந்தபிறகு ஆங்கிலேய அரசின் பொருளாதாரச் சரிவைத் தொடர்ந்து இந்திய விடுதலைப் போராட்டம் வீறிட்டெழுந்தது.

அப்போது நாடு முழுவதும் காங்கிரசை விட செல்வாக்காக இருந்தது 'அன்னிபெசண்ட்' அம்மையாரின் 'அகில இந்திய ஹோம்ரூல் லீக்'.

இதன் சென்னைக்கிளை தமிழ்ப்பிராமணர் கட்டுப்பாட்டில் இருந்தது..

(உண்மையாகவே விடுதலையை நோக்கமாகக் கொண்ட தமிழ்ப்பிராமணர்).

இந்நேரத்தில் இந்திய சட்டசபை உறுப்பினர் 19 பேர் கையொப்பமிட்ட கூட்டறிக்கை ' பூரண சுயாட்சி'  கோரியது..

ஏதேது ஆங்கிலேயர் சுயாட்சி வழங்கினால் அது ஹோம்ரூல் மூலமாக தமிழ்ப் பிராமணருக்குப் போய்விடுமோ என்று வேற்றுமொழி ஆதிக்க சாதியினர் பதற்றமடைந்தனர்..

இந்நிலையில் தான் அவர்கள் தமக்கென்று ஒரு கட்சியை தொடங்குவது என்று தீர்மானித்தனர்..

இவ்வாறு அவர்கள் தோற்றுவித்த முதல் திராவிடக் கட்சியான 'நீதிக் கட்சியின்' முகத்திரையை சற்று  விலக்கிப் பார்ப்போம்..

இக்கட்சியை தொடங்கிய இருவரில் முதலில் டாக்டர்.டி.எம்.நாயர் பற்றி அறிவோமாக..

மலையாளியான இவர் முதலில் காங்கிரசில் இருந்தார்..

சென்னை மாநகராட்சித் தேர்தலில் தமிழ்ப்பிராமண வாக்காளர் நிறைந்த திருவல்லிக்கேணித் தொகுதியில் நான்குமுறை வெற்றிபெற்றவர்..

பிறகு ஒருமுறை தொல்வியைத் தழுவினார்..

தமிழ்ப்பிராமணர் மீது வந்ததே கோபம், உடனே தமிழரல்லாத இயக்கம் ஒன்றை ஆரம்பிக்க முடிவெடுத்தார்..

அப்போது சென்னை மாநில கவர்னராக இருந்த 'வெல்லிங்டன் பிரபுவை' சந்தித்தார்..

'தமிழரல்லாத இயக்கத்தை  பிராமணரல்லாத இயக்கம் என்கிற பெயருடன் தொடங்குவாயாக ' என்று கவர்னர் ஆசிவழங்கினார்.

இவரை சகமலையாள ஆதிக்க வர்க்கத்தினர் தூண்டினர்..

இரண்டாமவர் தமிழ்நாட்டுத் தெலுங்கரான சர்.பி.டி.தியாகராயர்.
இவர் தனிப்பட்ட முறையில் பண்பான மனிதராகவே பலருக்கும் தோன்றியவர்.

இவர் நீதிக்கட்சியான 'ஜஸ்டிஸ் கட்சி'யைத் தோற்றுவித்து அதன் தலைவராக தனது கட்சியின் கொள்கைப்பிரகடனம் ஒன்றை வெளியிட்டார்..

இந்த முதல் அறிக்கையே தமது கட்சிக்கு வித்தூன்றிய சர்.அலெக்சாண்டர் கார்ட்யூவுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துவிட்டு,
இந்தியர்கள் ஒரேடியாக ஆங்கிலேயரிடமிருந்து அதிகாரம் கோரக்கூடாதென்று கூறியது..

அதேபோல 19 டெல்லி சட்டசபை உறுப்பினர் ஒப்பமிட்டு சுயாட்சி கோரியதையும் வன்மையாகக் கண்டித்தது.

தவிர நாட்டில் வாழும் பல்வேறு மக்களுக்கு இடையே தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்கக் கூடியவர் ஆங்கிலேயரே என்று கொஞ்சமும் ஒளிவு மறைவின்றி அப்பட்டமான தமது ஆங்கிலேய விசுவாசத்தை வெளிப்படையாகக் காட்டியது..

ஆங்கிலேய ஆளுகையில் ஒட்டு மொத்த நாடே அடிமைப்பட்டுக் கிடக்கும் போதே தமது நலனில் மட்டும் அக்கறை கொண்ட புண்ணியவான்களின் பாசறைதான் திராவிடக் கூடாரம் என்பதை இதைவிடத் தெளிவாக கூற வேண்டியதில்லை..

திராவிடவாதிகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆங்கிலேயரை எதிர்த்ததே கிடையாது..

எப்படி எதிர்ப்பர்?

ஆங்கில வல்லாதிக்கத்தின் நீட்சிதானே திராவிட ஆதிக்கம்..

அப்படி இருந்தும் இந்தக் கட்சி 1936வரை ஆட்சியும் செலுத்தி தமிழர் எவரையும் ஆளவிடாமல் தாழ்த்தப்பட்டவரையும் மேலே வரவிடாமல் சாதனைமேல் சாதனை புரிந்ததை பார்க்கத்தானே போகிறோம்...

எதிர்காலத் தமிழகமும் : போக்குவரத்து துறை...


1. அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நிலத்தடி தொடர்வண்டி (மெட்ரோ) போக்குவரத்து.

2. நகரப்பேருந்துகள் தொலைவிலுள்ள கிராமங்களுக்கு மட்டுமே. நகரங்களில் போக்குவரத்து நெரிசல் இருக்காது.

3. நகரமயமாக்கம் குறைக்கப்படும். அனைத்து ஊர்களிலும் அனைத்து வசதிகளும் இருக்கும்.

4. அனைத்து தமிழக தொடர்வண்டிகளும் பேருந்துகளும் மின்மயமாக்கப்பட வேண்டும்..
வாகனப்புகையற்ற சுகாதார தமிழ்நாடு உருவாக்க வேண்டும்..

5. அனைத்து பேருந்துகளும் சீரான வேகத்துடனும், பாதுகாப்புடனும் செல்லும் வகைச் செய்து  கண்காணிப்போடு  விபத்தை தடுக்கப்பட வேண்டும்..

6. மிக முக்கியமாக நீர் வழிப்போக்குவரத்து உருவாக்கப்பட வேண்டும்...

1. ஆற்று வழி நீர்ப் போக்குவரத்து:

 1. தாமிரபரணி ஆற்றில் பாபநாசம் முதல் திருநெல்வேலி, திருநெல்வேலியில் இருந்து புன்னைக்காயல் வழியாய் தூத்துக்குடி வரை.

 2. காவிரி, பவானி ஆறுகளில் மேட்டூரிலிருந்து ஈரோடு, சத்தியமங்கலத்திலிருந்து ஈரோடு, ஈரோடு-கரூர்-திருச்சி-சிதம்பரம், திருச்சி-தஞ்சாவூர், திருச்சி-நாகூர்.
       
3. வைகையில் தேனீ-மதுரை, மதுரை-பரமக்குடி

இவைதவிர...

2. கடல்வழி நீர்ப் போக்குவரத்து :

சென்னை-மகாபலிபுரம்-பாண்டிச்சேரி-கடலூர்-சிதம்பரம்-நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி-கோடியக்கரை-மணமேல்குடி-தொண்டி-இராமேஸ்வரம்-கீழக்கரை-தூத்துக்குடி-திருச்செந்தூர்-உவரி-கன்னியாகுமரி-குளச்சல்.

என அமையும் 1000 கிலோமீட்டருக்கான கடல்வழிப்போக்குவரத்தின் பயன்கள்:

1. தரைவழிப் போக்குவரத்து (சென்னை-விழுப்புரம்-திருச்சி-மதுரை-நெல்லை-கன்னியாகுமரி வரை) (பேருந்து-தொடர்வண்டி) நெரிசலைக் குறைக்கும்.

 2. அதிக செலவில்லா போக்குவரத்தாக அமையும். கடலில் ஒவ்வோர் ஆண்டும் சாலை போடும் தேவையே இருக்காது. தஞ்சையில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவில் செல்லும் கப்பல், சூரிய ஒளி கப்பல் என அமையும்.

3. சுற்றுலா பெருக்கும் வழிமுறையாக அமையும். கப்பலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் தவிர உள்ளூர் மக்களும் விரும்புவர். ராமேஸ்வரம்-தூத்துக்குடி வரை உள்ள 12 தீவுகளில் தங்கும் விடுதி வசதி போன்றவை அமைக்க வேண்டும்..

சென்னைக்குள்ளேயே புலிகாட் ஏரி, எண்ணூர் லிருந்து திருவொற்றியூர், பாரிமுனை, சாந்தோம், பட்டினம்பாக்கம், நீலாங்கரை, வி.ஜி.பி. தங்கக்கடற்கரை வரை நகரப்பேருந்து போல படகு இயக்க வேண்டும்...

வள்ளலார் கூறும் பாவப் பட்டியல்...


பாவ புண்ணியக் கணக்குகள் மறந்து போய், சுயநலமும் அலட்சியமுமே பிரதானமாய் மாறி விட்ட இந்தக் காலத்தில் துக்கமும், நிம்மதி இன்மையும் தான் எல்லா இடங்களிலும் கோலோச்சுகிறது.

அதற்கான காரணங்களை ஒவ்வொருவரும் வள்ளலார் போல் தங்களையே கேட்டுக் கொண்டு, திருத்தியும் கொண்டால் ஒழிய நிம்மதிக்கு வாய்ப்பில்லை.

இதோ வள்ளலாரின் பாவப் பட்டியல்..

நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சிநேகிதரைக் கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!
வேலையிட்டுக் கூலிலி குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் பாரா திருந்தேனோ!
கோள்சொல்லிக் குடும்பங் கலைத்தேனோ!
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!
அன்புடையவர்க்குத் துன்பம் செய்தேனோ!
தவஞ்செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!
சுத்த ஞானிகளைத் தூஷணை செய்தேனோ!
தெய்வம் இகழ்ந்து செருக்கடைந்தேனோ...

நேருவின் குடும்ப வரலாறு...


படிக்கிற காலத்துல "பண்டிட் நேரு", "பண்டிட் நேரு"ன்னு சொன்னாங்க. பிறகுதான் தெரிந்தது அது படித்து  வாங்கின பட்டமல்ல, "காசுமீர பண்டிதர்' அப்படி என்றால் பிராமண குலமென்று.

இந்த குழப்பதிருக்கு காரணம். விருதாக பெற்ற பட்டங்களை பெயருக்கு முன்பும் ஜாதியின் பெயர்களை பெயருக்கு பின்பும் போடுகிற முறை இருந்ததுதான்.

ஆனால் எப்படியெல்லாமோ போட்டு அசத்திவிட்டார்.



இவர் மவுண்ட்பேட்டன் மனைவி எட்வினாவுடன் சிகரெட்டு பற்றவைத்து கொடுத்துவிட்டு, ஒரு சமத்துவதிற்காக தானும் உடன் சேர்ந்து புகைப்பது உலகப் பிரபலமடைந்த திருத்தப்படாத புகைப்படமாகும்.

இவர்களது உறவு மரணம் வரை நீடித்ததாக வரலாறு கூறுகிறது.

மௌன்ட்பாட்டனின் மனைவியை விமான நிலையம் சென்று வழியனுப்பிய படம்...

எதிர்காலத் தமிழகமும்: தொழில்துறை...


1. பொருட்களுக்கான தர நிர்ணயகுறியீடு "த". (ISI) போல ஆனால் உலகத்தரம் வாய்ந்த தரக்குறியீடாக அது "த" உருவாக்கப்படும். (த-தமிழையும் குறிக்கும், தரத்தையும் குறிக்கும்)

2.  மக்கள் பயன்படுத்தும் நெகிழி, குடிநீர், துணி, மருந்து, மகிழுந்து, பேருந்து, தொடர்வண்டி என அனைத்து உற்பத்தி பொருட்களும் இந்தக் குறியீடு இல்லை என்றால் உற்பத்தி செய்ய முடியாது.

3. அதே போல தொழில் துறையில் பகுதி வாரியாக தொழில் மண்டலங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்..

சென்னை-வாகனம், கணினி
கடலூர்-தூத்துக்குடி, கன்னியாகுமரி-மீன், கடல் பொருட்கள், கப்பல் கட்டுமானம்
திருச்சி-பாத்திரங்கள், வீட்டு உபயோக மின் பொருட்கள்
கோவை- தொழில், எந்திரங்கள்,
ஈரோடு-மளிகைப்பொருட்கள்
திருப்பூர்-ஆடைகள் ,
கரூர்-வாகனங்கள், உதிரி பாகங்கள், பேருந்து, மகிழுந்து, தொடர்வண்டி, விமானம் தயாரிப்பு.
சேலம்-இரும்பு, அலுமினியம்
மதுரை-விவசாய, பண்ணைக்கருவிகள், எந்திரங்கள்,
நெல்லை-குளிர்பானங்கள், உணவு பதப்படுத்தும் கருவிகள் உற்பத்தி
சிவகாசி-காகிதம், புத்தகம், அச்சிடும் கருவிகள், (பட்டாசு, வெடி பொருட்கள் தொழில் தடை செய்யப்பட வேண்டும்)

ஒவ்வொரு பகுதியிலும் இவையெல்லாம் ஏறக்குறைய இருந்தாலும் அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்..

1. முக்கியமாக உள்நாட்டு தொழிநுட்பத்தில் ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், மாணவர்கள், தொழில் முனைவோர் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்..

2. அனைத்து ஆராய்ச்சிகளும் தமிழில் மட்டுமே நடக்க வேண்டும்..

3. தமிழில் கற்றோருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்..

4. தாய்த்தமிழ் மொழியிலான சிந்தனை, புதுக்கண்டுபிடிப்பு, முன்னேற்றம், தரமான பொருட்கள், கருவிகள், எந்திரங்கள் உற்பத்திக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும்...

திராவிடம் - 7...



திராவிடம் - இந்தச் சொல்லை நூறு வருடங்களுக்கு முன் ஒரு தமிழரிடம் கூறினால் அவர் புரியாமல் விழித்திருப்பார்.

ஆனால் இன்று அந்த சொல்தான் தமிழரை ஆண்டு வருகிறது. இந்த அதிசயம் எப்படி நடந்தது?

சரி இந்த 'திராவிடம்',என்கிற சொல் வேதங்களிலோ இலக்கியங்களிலோ காணப்படுவதில்லை.

பிறகு எங்கிருந்து இந்த வார்த்தை முளைத்தது.அதற்கான விடையைத் தேடுவோம்.

திராவிடம் என்பது ஒரு தெலுங்குச் சொல்..

என்ன வியப்பாக இருக்கிறதா?

தெலுங்கு மக்கள் தமிழரைக் குறிக்க இந்தச் சொல்லைப் பயன்படுத்தினர்..

இதற்கான விளக்கத்தை முனைவர்.எஸ்.செல்லப்பா  அவர்கள் கொடுத்துள்ளார்.

தமிழ் உணர்வாளரான இவர் ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசுவதில் வல்லவர், தெலுங்கு மக்கள் மத்தியில் பலகாலம் வாழ்ந்தவர்..

இவரது நீண்ட விளக்கமாவது,

A BRIEF NOTE ON THE WORD 'DRAVIDIAN'

A few years ago I made an in-depthstudy of certain root words in Tamil language.
One of the words is ‘Dravidian’.
I couldnot publish that work due to myadministrative pre-occupations.

Traditionally Tamil scholars is of the viewthat this term “Dravidian”is of Sanskrit Origin.
They consider that the term Dravidian isderived from the word“Dramilam”.
If that be so, what, then, is theroot of Dramilam?
Thisled me to ponder over the root word for‘Dravidian’.
Thereafter Istarted reading a few original Telugu workssystematically and alsoconsidered the speaking language of theAndhras.

‘Aravam’, ‘Tamilamu’and ‘Dravida Basha’ are the three words usedby the Andhras to referto Tamil language.
Aravamu is used in thesense well-defined.
‘Dravida Basha’ is used only to connote toTamil language.

It was Robert Caldwell who extended thelinguistic area of ‘Dravidian’to include Malayalam, Kannadam, Telugu,Tulu, Brahmi etc.
Otherwise,the Telugus used the term Dravidam to meanonly Tamil language.
For example, Sri Krishna Devaraya, belongingto 15th Century A.D.wrote the great literary work“Amuktamalyada” in Telugu, uses the word“Dravida Kutumbi” (I:64) to refer to Tamil families
Gurram Joshuva, another very renowned poet of 20th Centuryuses the term “Dravidia inhis famous poem “Gabbilam” to refer toTamil only.
Similarly P.Gopalreddy who did elaborate study on the Geo-physical concept of villagenames also uses the term Dravida basha torefer to Tamil.
At present, I am translating Gabbilam intoTamil language.
Joshuvauses “Dravida Bhumi” to refer to the Tamilland.

My curiosity did not stop here.
Is there anyconnection between
Dravida and Tamil?
After so much research,
I came to the conclusionthat Dravidam and Tamilam mean one andthe same.
Or Dravidam perhapsis a Telugu derivative of Tamilam and it isnot of Sanskrit origin,
assome Tamil scholars think.
Now we shall split the word Tamil into threeparts:
Tatmizh.
Incertain Telugu words ‘ta’ becomes “tra”.
1. Thadu > Thradu (rope)
2. Thova > Throva (way)

Hence the ‘ta’ in Tamil becomes “tra”, whichin turn becomes “Dra”,
which is quite common in Telugu language.

In Telugu language ‘ma’ becomes ‘va’ incertain words.
1. Mamidi > Mavidi (mango)
2. mama > mava (uncle)
3. bhumi > bhuvi (earth)

Hence the ‘mi’ in Tamil becomes ‘vi’ inTelugu.

Similarly Tamil ‘Zha’ becomes ‘da’ in Telugulanguage.
This is anaccepted linguistic rule.
Example:
1) Chozha > Choda (The Cholas)
2) Kozhi > Kodi (a hen)
3) Pazh > padu (waste, useless)
4) Keezh > Keedu  (harm)
5) Appozhudu > Appudu (then)
6)Ippozhudu > Ippudu (now)

To conclude, the term Dravidian is purely aTelugu word to refer toTamil language only.
This is in vogue even to-day amongst Teluguscholars.

As mentioned earlier, it was Robert Caldwell, who expanded the scope of the term Dravidian to includeother southern languages ina linguistic sense.
There is another soundreason for Caldwell to usethe term “Dravidian” to connote otherSouthern languages of India.

For Tamil was the only language amongSouthern languages with a long history of literature, grammar and originalityof its own.
Dr. S. Chellappa IAS .

சரி இப்போது விட்ட இடத்துக்கு வருவோம்.

ஏற்கனவே உருவாக்கி வைத்திருந்த திராவிடக் கருத்தியலை சிறிது திருத்தங்களுடன் பரப்புரை செய்த ஆங்கிலேயர்.

அதற்கான ஆதரவு நன்கு பெருகியதும் சரியான நேரம் பார்த்து திராவிடத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தனர்.

சர்.அலெக்சாண்டர் கார்டியூ இவர் 1916-ல் 'கவர்னர் நிர்வாக கவுன்சில்' உறுப்பினராக இருந்தவர்.

இவர் 1913- ல் 'இந்திய நிர்வாகக் கவுன்சில'  முன்பு சாட்சியமளித்தார்.

அதில் தமிழ்ப் பிராமண ஆதிக்கம் பற்றி விபரமாகக் கூறினார்.

அப்புள்ளி விபரம் பின்வருமாறு:

இந்தியன் சிவில் சர்வீசுக்கென இந்தியாவிலும் இங்கிலாந்திலும் தேர்வுகள் வைக்கப்படுகின்றன.

இதில் பிராமணர்களே முழுவதும் தேர்ச்சியடைந்து வருகின்றனர்.

1892 முதல் 1904 வரை நடைபெற்ற தேர்வுகளில் 16 ல் 15 பிராமணர் ஆவர். இது 95% ஆகும்.

சென்னை மாகாணத்தில் 'உதவிப்பொறியாளர் வேலைக்கு ஆட்கள் எடுக்கப்பட்ட போது 20 ஆண்டுகளில் பிராமணர் 17 பேரும் பிராமணரல்லாதோர் 4 பேரும் எடுக்கப்பட்டுள்ளனர்..

கணக்குத் தணிக்கைத் துறைத் தேர்வுகளிலும் இதேநிலை இருந்து வருகிறது.

சென்னைமாகாண 'உதவி கலெக்டர்' பதவிக்கான 140 இடங்களில் பிராமணருக்கு 77 இடங்கள்; பிராமணரல்லாதோருக்கு 30 இடங்கள்;

ஏனைய கிறித்துவர், முகம்மதியர், ஐரோப்பியர், ஆங்கிலோ- இந்தியருக்குக் கிடைத்தன.

1913 ல் மாவட்ட நடுவர்களுக்குரிய 128 நிலையான இடங்களில் பிராமணர் 93 இடங்களுக்கும், பிராமணரல்லாதோர் 25 இடங்களுக்கும், இந்திய கிறித்துவர், ஐரோப்பியர், ஆங்கிலோ-இந்தியர் ஆகியோர் எஞ்சிய இடங்களுக்கும் நியமிக்கப்பட்டனர்..

இத்தகவல்கள் உண்மையானவையே. இதைப் பார்க்கும் போது பிராமணர் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது தெளிவாகிறது.

இதில் கூறப்பட்டுள்ள விபரங்களில் உதவிப்பொறியாளர் மற்றும் உதவி கலெக்டர் பற்றி இருக்கிறதே தவிர தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமை கலெக்டர் பற்றி எதுவும் இல்லையென்பதை நொக்குக.

இவை அக்காலத்தில் இந்தியருக்கு ஒதுக்கப்படவில்லை,
முழுதும் ஆங்கிலேயரே இருந்தனர்.

'ஆங்கிலேயர் என்னதான் இந்தியருக்கு உரிமைகளை அளித்தாலும் அதில் குறிப்பிட்ட வகுப்பினரே ஆதிக்கம் செலுத்துவர்..

அதனால் ஆங்கிலேயருக்கு கட்டுப்பட்டு இருப்பதே அனைத்து வகுப்பினருக்கும் நல்லது' என்று மறைமுகமான அறிவித்தல் இது.

தவிர பிராமண ஆதிக்கம் குறைந்திருந்த புள்ளிவிபரங்கள் மறைக்கப்பட்டன.

இதன் மூலம் பிராமணரல்லாத மக்களுக்கு விழிப்புணர்வூட்டியதாகக் காட்டிக்கொண்டனர்.

அதாவது கிறித்துவரும் முகம்மதியரும் தனி ஒதுக்கீடு பெற்றிருக்க பிராமணரல்லாத இந்துக்களை பிராமணர் ஒடுக்குவதாகக் காட்டி அதன்மூலம் பிராமணரல்லாத இந்துக்கள் அமைப்பை உருவாக்கி தமக்கு ஆதரவாக தமது நிழலில் வைத்துக் கொள்ளத் திட்டமிட்டனர்.

ஆம்; கடைசியில் அதுதான் நடந்தது.

1916 ல் ஆங்கிலேயரின் செல்லக்குழந்தையாக முதல் திராவிடக்கட்சியான  'நீதி(?)க்கட்சி' பிறந்தது.

இதைத் தொடங்கியவர் மலையாளியான டாக்டர்.டி.எம்.நாயர், மற்றும் தமிழ்நாட்டுத் தெலுங்கரான சர்.பி.டி.தியாகராச செட்டியார்..

இவர்கள் இருவருக்கும் அக்கட்சியைத் தொடங்க என்ன அவசியம் இருந்தது?

இவர்களின் பின்புலம் என்ன?

திராவிடம்  தமிழருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும், பிறமதத்தினருக்கும் ஏதாவது ஒரு  நன்மையாவது செய்ததா.?

மனிதநேயம்..


மனிதனிடத்திலும் மனிதநேயத்தை காண்பதே அதிசயமாய் மாறிவிட்ட இக்காலத்தில்....

பார்வையற்ற இவர்களுக்கு ஒரு குரங்கு உதவி செய்வதை பார்க்கும் போது இறைவன் இன்னமும் ஏதோ ஒரு உருவத்தில் உலகில் இருந்துக் கொண்டுதான் இருக்கிறான் என்று தோன்றுகிறது..

மனிதநேயத்தை பரப்புவோம்.. அனைத்து உயிரிடத்திலும் அன்பை செலுத்துவோம்..

தமிழா சிந்தித்து விழித்தெழு...


1800 ஆண்டு காலமாகத் தமிழரின் நாட்டை தமிழர்களால் ஆள முடியவில்லை என்பதை ஏதோ எக்குத்தப்பாக நடந்துவிட்டது என்று தட்டிக் கழிக்க முடியாது..

ஓர் அங்குல நிலம் கூட இல்லாத யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாட்டை அமைத்துக் கொள்ள முடியுமென்றால்..

அமெரிக்க வல்லாதிக்க வெறியிலிருந்து உலகின் பல நாடுகள் திமிறிக் கொண்டு விடுதலை பெற்றுக் கொள்வது சரியென்றால்..

சோவியத் ஒன்றியத்திலிருந்து தேசிய இனங்கள் விடுதலை பெற இயலும் என்றால்..

சீனாவிற்கெதிரான திபத்தியர்களின் போராட்டத்தில் ஞாயம் இருக்கிறது என்றால்..

உலகில் வாழும் பதிமூன்று கோடித் தமிழர்களுக்கென்று ஒரு நாடு அமைவது எந்த விதத்தில் ஞாயமற்றதாக இருக்க முடியும்?

நாங்குநேரியில் புதிதாக கிரானைட் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 12கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டம்...


எதிர்காலத் தமிழகமும்: மின்சாரம், தகவல் தொடர்பு...


1. மின்சாரத்துக்கென தனிப்பட்ட வானியல் செய்மதி நிலையங்கள் (Space Stations) வானில் நிறுவப்பட்டு (24 மணிநேரமும் சூரிய ஒளி அங்கு கிடைப்பதால்), சூரிய மின்சாரம் பெறப்பட வேண்டும்..

2. ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடி மின் தொடர்பு சாதனங்கள் (மின் ஈர்ப்புக்கருவி) வழங்கப்பட்டு சூரிய மின்சாரம் இலவசமாக்கப்பட வேண்டும்...

3. தமிழகம் மின் கம்பியற்ற மாநிலமாக்கப்பட வேண்டும்..

4. அதே போல் நிறுவுவதற்குரிய செலவு மட்டுமே உண்டு என்பதால் மின்சாரம் போன்று செல்லிட பேசியில் பேசுவதும் இலவசமாக்கப்பட வேண்டும்..

5. சமையல் அடுப்பும் அனைத்து வீடுகளிலும் இந்த சூரிய மின் மயமாக்கம் என்பதால் அதுவும் இலவசமே. எனவே காஸ் அடுப்பு, மருமகள் சாவு இருக்காது.

6. தொலைக் காட்சி கட்டணமும் இருக்கக் கூடாது..

7. ஆனால் இவையெல்லாம் தமிழ் குடியுரிமை அட்டை பெற்றவருக்கு மட்டுமே.

8. ஒரு சிறு தொகை பராமரிப்பு செலவுக்கென முதல் 5 வருடங்களுக்கு மட்டும் பெறப்பட்டு பின்பு அனைத்தும் இலவசமாக வேண்டும்..

9. பல்வேறு வரிகள் மூலம் பெறப்படும் தொகை அனைத்தும் தமிழ், தமிழர், தமிழக வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்...

துடைச்சிட்டு போறது தந்தி டிவி பாண்டேக்கு என்ன புதுசா...



எதிர்காலத் தமிழகமும் : தமிழ்ப் பண்பாடு...


1. திரைப்பட, தொலைக்காட்சி தணிக்கை முறையில் தமிழ், தமிழ் சமூக மேம்பாட்டுக்கு எதிரானவை தடை செய்யப்படும்.

2. ஆங்கிலக்கலப்பு மிக்க நிகழ்ச்சிகள் தடை செய்யப்படும்.

3. ஆங்கிலம் உட்பட பிற மொழிகளில் உள்ள தொலைக்காட்சிகளும் செயல்படும். ஆனால் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தமிழ் மட்டுமே.

4. தமிழர் பண்பாடு, தமிழர் வரலாறு, மக்கள் முன்னேற்றம், அறிவியல், மனித நேயம், ஆண் - பெண் சமத்துவம், மருத்துவம், விளையாட்டு போன்ற மதிப்பீடுகளை உயர்த்தும் திரைப்படங்கள், நூல்களுக்கு மட்டுமே வரிவிலக்கு, விருதுகள் வழங்கப்படும்.

5. இத்தகைய மதிப்பீடுகளுடன் தமிழ் சமூகத்துக்காக உழைக்கும் நபருக்கு ஒவ்வோர் ஆண்டும் தமிழ் ரத்னா விருது வழங்கப்படும்...

பாஜக கலாட்டா...


எதிர்காலத் தமிழகமும்: தமிழ் மற்றும் கல்வித்துறை...


1. தமிழ் உலகின் முதல் மொழி என்பதனை சர்வதேச சமூகம் ஆராய்ந்து அங்கீகரிக்க அனைத்து கடலியல், மொழியியல் ஆராய்ச்சி ஏற்பாடுகளும் செய்யப்படும்.

2. தமிழ் மொழியே தமிழ்த் தேசிய மொழி, ஆட்சி மொழி, கல்வி மொழி, அலுவல் மொழி, தொழில் மொழி.

3. 12 வகுப்புகள் வரை இலவசக் கல்வி, கட்டாயக்கல்வி. தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்காத பெற்றோர் கைது செய்யப்படுவர்.

4.  அனைத்து பள்ளிகளும் அரசுப் பள்ளிகளாக்கப்படும்.

5. அனைத்தும் இரு பாலார் பள்ளிகளாகவே இருக்கும். ஆண் - பெண் சமத்துவம், இணைந்து செயலாற்றும் திறன் வளர்க்கப்படும்.

6. பள்ளியில் தமிழ் தவிர ஒரு இந்திய மொழி, ஒரு ஐரோப்பிய மொழி கற்றுக்கொடுக்கப்படும் (அவரவர் விருப்பத்திற்கேற்ப). ஆனால் பயிற்று மொழி தமிழே.

7. 12 ம் நிலை முடிக்கும் முன்பாக அனைத்து மாணவருக்கும் நீச்சல் திறன், வாகன ஓட்டும் திறன், கணிணி திறன் இவைகளை கற்றுக்கொள்வது அடிப்படை. கணினி விசைப்பலகையில் (keyboard) தமிழ் மட்டுமே.

8. இங்கு அவர்கள் உருவாக்கும் ஈ மெயில் முகவரி அவர்களுக்கென இறுதி வரை இருக்கும். அரசின் அனைத்து தகவல்களும் அதன் மூலமே அனுப்பப்படும், அவர்கள் வாகன விதி மீறினால் வரும் தண்டனைத் தொகைத்தகவல் உட்பட.

9. அலுவலகம், பள்ளி அனைத்திலும் தமிழில் மட்டுமே பேச வேண்டும்.

10. விளையாட்டு: தமிழக தேசிய விளையாட்டாக பலர் இணைந்து செயல்படும் வகையில் உள்ள கால்பந்து அறிவிக்கப்படும். வட்டம், மாவட்டம், மாநிலம் வாரியாக ஆண்-பெண் களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு ஒலிம்பிக்கிலும் நேரடியாக பங்குபெற்று பலரும் வெற்றி பெறும் வகையில் பள்ளியிலிருந்தே வீரர்கள் உருவாக்கப்படுவர்.

11. கல்வி முடித்த எவரும் முதல் ஐந்து வருடத்திற்கு தமிழ் நாட்டில் தான் பணி செய்ய வேண்டும்.

12. அயல் நாடு செல்வோர் 5 வருடங்களுக்கு மேல் அங்கு படிப்போ, பணியோ செய்ய முடியாது. தாயகம் திரும்ப வேண்டும்...