19/09/2017

பாமக அன்புமணி ராமதாஸ் கூறிய விதி எண் 371 என்றால் என்ன?


விழுப்புரத்தில் நடந்த பாமக மாநாட்டில் பிணத்தை வைத்து அரசியல் நடத்தும் கட்சிகளுக்கு மத்தியில் சட்டப்படி மக்கள் அரசை எதிர் கொள்ள டாக்டர் அன்புமணி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதி 371 பற்றி மேடையில் பேசி, அதன் படி மக்கள் செல்லுங்கள் என்ற பாதையை அமைத்து கொடுத்திருக்கிறார்.

காஷ்மீருக்கு சிறப்புரிமைச் சட்டம் 370 இந்திய நடுவண் அரசால் வழங்கப்பட்டிருக்கிறது.

ஜம்மு - காஷ்மீர் என்கிற இரண்டு வெவ்வேறான சிறப்பியல்புகளையும், அது இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி என்பதையும் விதி 370ன் கீழ் சிறப்பு அதிகாரங்களை அனுபவித்து வருகிறது.

இதன் படி, இராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு துறைகள் தவிர, பிற துறைகள் தொடர்பாக நடுவண் அரசு நாடாளுமன்றத்தில் இயற்றும் சட்டங்கள்,
இம்மாநிலத்தின் இசைவு இல்லாமல் இயற்றினால், அந்த சட்டங்கள் இம்மாநிலத்திற்கு பொருந்தாது.

ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் பிற மாநிலத்தவர்கள் அசையாச் சொத்துக்கள் வாங்க முடியாது. ஆனால் இம்மாநில மக்கள் இந்தியாவின் பிற மாநிலங்களில் அசையாச் சொத்துக்கள் வாங்கலாம்.

இம்மாநில பெண்கள் வெளிமாநில ஆண்களை திருமணம் செய்து கொண்டால், அப்பெண்கள் இம்மாநிலத்தில் அசையாச் சொத்துகள் வாங்க முடியாது. ஆனால் ஆண்கள் வெளிமாநில பெண்களை திருமணம் செய்து கொண்டாலும், அவர்கள் இம்மாநிலத்தில் அசையாச் சொத்துக்களை வாங்கலாம்.

இந்திய அரசியல் சாசனத்தின் 238 வது பிரிவு இம்மாநிலத்திற்கு பொருந்தாது. இம்மாநிலத்தின் எல்லைகளை குறைக்கவோ அல்லது கூட்டவோ முடியாது. இப்படி மாநில சுயாட்சிக்கு வித்திடும் உரிமைகள் விதி எண் 370 கீழ் வருகின்றது. இது காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டுமே பொருந்தும்.

இதை போன்றே மற்ற மாநிலங்களுக்கும் உரிமை அளிக்கும் விதி தான் 371. இதன் கீழ் மாநிலங்களுக்கு சிறப்புரிமை வழங்கப்படுகிறது.

அந்த வகையில், சிறப்புரிமை பெற்ற மாநிலங்களும் அதற்கான விதிகளும் பின்வருமாறு:

விதி 370 – ஜம்மு காஷ்மீர்
விதி 371 – மகாராஷ்டிர, குஜராத்
விதி 371A – நாகலாந்து
விதி 371B – அசாமின்
விதி 371C – மணிப்பூர்
விதி 371D – ஆந்திரப்பிரதேசம்
விதி 371E – ஆந்திரப்பிரதேசம் மத்திய பல்கலைக்கழகம் அமைத்தல்
விதி 371F – சிக்கிம்
விதி 371G – மிசோரம்
விதி 371H – அருணாசல பிரதேசம்
விதி 371 I – கர்நாடகா

இப்படி எல்லா மாநிலங்களும் தங்களுக்கான தேவைக்காக சிறப்பு விதியை உருவாக்கி கொள்ளும் போது, தமிழகம் மட்டும் மவுனம் காப்பது ஏன்?

நீட் வேண்டாம் என்று போராடுவதை விடுத்து தமிழகத்திற்கு சிறப்பு சட்டம் வேண்டும் என்ற கோரிக்கை விடுக்க வேண்டும் இனி.

அதன் மூலம் எந்த வித சட்ட சிக்கலையும் எதிர் கொள்ளாமல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும்.

தமிழகத்தில் மாற்றம் ஒன்று நிகழ வேண்டும் என்றால் விதி 371 வேண்டும் என்று பலதரப்பட்ட மக்களும் களத்தில் இறங்கி குரல் கொடுக்க வேண்டும்.

அது ஒன்றே இந்திய அரசியலின்பால் தமிழகத்திற்கு கிடைக்கும் ஆதாயங்களில் ஒன்றாக அமையும்.

சிறப்பு பாராட்டுக்கள் டாக்டர் அன்புமணி அவர்களுக்கு...

குலதெய்வ வழிபாட்டின் அவசியம் என்ன.. குலதெய்வமாக இருப்பவர் யார் ..?


தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமே (just a mode of communication) என்று சொல்லி கொண்டிருக்கும் அதிமேதாவிகளின் (நான் தமிழன் இல்லை, தமிழ் பேசும் இந்தியன் மட்டுமே என்று கூறுபவர்கள் உள்பட) பார்வைக்கு...


தமிழ் வெறும் மொழியல்ல,
அது ஒரு கலாச்சாரம்,
அதுஒரு வாழ்க்கை வழி.

எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வழிகாட்டிய திருக்குறளுக்கு நிகரான ஒரு நூலைக் காட்டுங்கள்.

அன்று தமிழ் வெறும் மொழியே என்று நான் ஒப்புக் கொள்கிறேன்.

நான் இந்தியன் என்று சொல்லி திரியும் மானங்கெட்ட தமிழினத் துரோகிகளே...

என்றொருவன் தன் தாய்மொழியையும், கலாச்சாரத்தையும் விட்டு கொடுக்கிறானோ, அன்றே அவன் பிணத்திற்கு சமம்...

குதிரை சிலையின் மறைபொருள்...


நாம் பொதுவாக பார்க்கும் குதிரை சிலைகளில் எப்போதுமே ஒரு கம்பீரம் இருக்கும்.

குதிரை சிலை என்றாலே அதில் அரசனோ அல்லது வீரனோ கம்பீரமாய் வீற்றிருப்பார்கள்.

அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அமைந்திருக்கும். பலர் அது சிற்பியின் வெளிப்பாடு என நினைப்பதுண்டு. ஆனால் உண்மை காரணம் அதுவல்ல..

அச்சிலைகளின் வடிவமைப்பை மூன்று விதமாக வகைப்பிரிக்கலாம்.

1- இரண்டு கால்களையும் தூக்கிய படி நிற்கும் சிலை. அந்த மன்னர் ஒரு போர் வீரனாக களத்தில் இறந்திருக்கிறார் என்பதை குறிக்கிறது.

2- ஒற்றைக் காலை தூக்கிய படி நிற்கும் சிலை. அந்த மன்னர் இயற்கை மரணமடையவில்லை என்பதை குறிக்கிறது. சிலவேளை அந்த மன்னர் விழுப் புண் அடைந்து இறந்திருந்தால் கூட இப்படித்தான் கருதப்படும்.

3- நான்கு கால்களையும் தரையில் பதித்த படி நிற்கும் சிலை. அந்த மன்னர் போர்க் களத்தில் இறக்க வில்லை,  இயற்கை மரணமெய்தார் என்பதைக் குறிக்கும்...

உட‌ல் நலனு‌க்கு ஏ‌ற்றது நில‌க்கடலை இருதய‌ம் பல‌‌வீனமாக இரு‌ப்பவ‌ர்க‌ள் முளைக‌ட்டிய ப‌ச்சை‌ப் பரு‌ப்பை சா‌ப்‌பி‌டுவது ந‌ல்லது...


முழு ப‌ச்சை‌ப் பரு‌ப்பு எலு‌ம்புக‌ள் வலுவடைய உதவு‌ம். முடி ‌நீ‌ண்டு வளரு‌ம். குட‌ல், க‌ல்‌லீர‌ல் முத‌லிய உறு‌ப்புகளு‌‌க்கு வலுவை‌த் தரு‌ம்.

உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ர‌த்த‌ப் பெரு‌க்கை ‌நிறு‌த்தவு‌ம், மூ‌க்‌கி‌ல் ர‌த்த‌ம் வருவது, மாத‌வில‌க்‌கி‌ன் போது ஏ‌ற்படு‌ம் அ‌திக‌ப்படியான ர‌த்த‌ப் போ‌க்கு ஆ‌கியவ‌ற்றை ‌நிறு‌த்த ‌நில‌க்கடலை உதவு‌ம்.

ச‌ர்‌க்கரை நோயா‌ளிக‌ள் ‌தினமு‌ம் ஒரு கை‌ப்‌பிடி ‌நில‌க்கடலை சா‌ப்‌பி‌ட்டா‌ல், ச‌த்து குறை‌ந்து உட‌ல் மெ‌லிவது த‌வி‌ர்‌க்க‌ப்படு‌ம். உடலு‌க்கு வ‌லிமை தரு‌ம், தசையை வள‌ர்‌க்கு‌ம்.

உட‌ல் வ‌லிமை பெற, மூ‌க்கடலை என‌ப்படு‌ம் கொ‌ண்டை‌க்கடலையை முத‌ல் நா‌ள் இர‌வி‌ல் ஊற வை‌த்து அடு‌த்த நா‌ள் த‌ண்‌ணீரை வடிக‌‌ட்டி ப‌ச்சையாக சா‌ப்‌பி‌ட்டா‌ல் உடலு‌க்கு ‌மிகவு‌ம் ந‌ல்லது...

திருப்பூர் குடிமங்கலத்தை சேர்ந்த விவசாயி நல்லசிவம் ஸ்மார்ட் கார்டில் விநாயகர் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது...


தமிழக காவல்துறையின் சாதனைகள்...


சென்னையில் இளைஞர் ஒருவரிடம் பைக்கை வேகமாக ஓட்டியதாக, பைக்கின் சாவியை பிடுங்கிய டிராபிக் போலீசின் லட்சணம்.

ஷூ அணியவில்லை. பேட்ஜ் இல்லை. ஹெல்மெட் அணியவில்லை...

அனைத்து அரசு ஊழியர்கள் டெபாசிட் செய்த பழைய நோட்டுக்கள் குறித்து விசாரனை நடத்தப்படும் - மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அதிரடி அறிவிப்பு...


விவசாயிகள் போராட்டம்...


இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் என்பதை நமது பிரதமர் பல நாடுகளில் பெருமையாகச் சொல்லி வருகிறார். அதேசமயம் தலைநகர் டெல்லியில், விவசாயக் கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்பட சில கோரிக்கைகளை முன்வைத்துத் தமிழக விவசாயிகள்  100 நாள்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இத்தனை நாள் போராட்டத்துக்குப் பிறகும் பிரதமர், விவசாயிகளை நேரில் சந்திக்காதது வருத்தமளிப்பதுடன் உலக நாடுகளில் நமது விவசாயத்தைப் பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை'' என்கின்றனர் விவசாயத் தலைவர்கள். இந்தச் சூழலில், பிரதமரைச் சந்திப்பதற்காகத் தமிழக விவசாயிகள் அவர் வீட்டுக்கு நேரில் சென்றால், போலீஸார் அவர்களைக் கைதுசெய்ததுடன்... அங்கிருந்து வர மறுத்தவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றனர்.

தமிழக விவசாயிகள் கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி முதலில் போராட்டத்தைத் தொடங்கினர். முதல் நாள் அன்றே அரை நிர்வாணத்துடன் போராட ஆரம்பித்த அவர்களின் போராட்டம், நாளுக்குநாள் வலுப்பெற்றுக்கொண்டே வந்தது. எலிகளைத் தின்றபடியும், பிச்சைப் பாத்திரத்தை ஏந்தியபடியும், மொட்டை அடித்தபடியும் என தினந்தோறும் பல்வேறு விதங்களில் போராடிய அவர்கள், ஏப்ரல் 10-ம் தேதி முழு நிர்வாணமாகப் பிரதமர் அலுவலகம் முன்பு போராடத் தொடங்கினார்கள்.

இப்படிப் பல போராட்டங்கள் நடத்தியும் கடைசிவரை பிரதமர் அவர்களைச் சந்திக்கவில்லை. இதையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று தமிழகம் விவசாயிகளிடம் பேசி, அவர்களுடைய போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெறவைத்தார். இதனையடுத்து, ''விவசாயப் பிரச்னைக்குத் தீர்வுகாணாவிட்டால் மீண்டும் டெல்லியில் போராட்டம் நடத்துவோம் என்று பேட்டி கொடுத்து விட்டுத் தமிழகம் திரும்பினார்கள் விவசாயிகள்.

முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தப் பயனும் விளையாததால் தொடர்ந்து அவர்கள் அறிவித்தபடி மீண்டும் டெல்லிக்குச் சென்று போராடத் தொடங்கினர். இந்த முறையும் பல்வேறு விதமான நூதன வழிகளில் போராடிய அவர்கள், கடந்த வாரம் அனைவரும் எதிர்பாராத வகையில் மனித மலம் உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர். உலகத்தினரையே திரும்பிப் பார்க்கவைத்த இந்தப் போராட்டத்தாலும் அவர்களுக்கு எந்தப் பதிலும் இல்லை.

இந்நிலையில், தமிழக விவசாயிகள் டெல்லியில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்மூலம் அவர்களுக்குக் கிடைத்த 6, 666 ரூபாயை அங்கிருந்த அனைத்து விவசாயிகளும் எடுத்துச்சென்று பிரதமரிடம் ஒப்படைக்க முடிவெடுத்தனர். அதன்படி, அவர்கள் அனைவரும் போராட்டக் குழுத் தலைவரான அய்யாக்கண்ணு தலைமையில், ஜந்தர் மந்தரில் இருந்து பிரதமர் வீட்டை நோக்கிப் பயணித்தனர்.

அப்போது, பெண்கள் உள்ளிட்ட 28 விவசாயிகளையும் போலீஸார் கைதுசெய்து, போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயற்சி செய்தனர். அதில், ஏற மறுத்தவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கி வாகனத்தில் ஏற்றினர். கைதுசெய்தவர்களைப் பாராளுமன்றத் தெருவில் உள்ள போலீஸ் நிலையத்துக்குக் கொண்டுசென்று, பின்பு விடுவித்தனர். இந்தப் பிரச்னை  குறித்து அய்யாக்கண்ணு கூறுகையில்,

இங்குப் போராட்டம் நடத்தும் எங்களைப் பிரதமர் கண்டுகொள்ளவில்லை. விவசாயிகளுக்கு வறட்சி நிதி கொடுக்கவும் பிரதமர் மறுக்கிறார். இப்படி இருக்கும் சூழலில், நாங்கள் பிச்சையெடுத்து வசூலித்த பணத்தையாவது அவரிடம் கொடுத்து, அதை தமிழக விவசாயிகளுக்கு  அளிக்கும்படி கேட்பதற்காகத்தான் பிரதமர் வீட்டுக்குச் செல்ல முயன்றோம் என்றார்.

ஒருபக்கம், மெள்ளமெள்ள இந்தியாவில் விவசாயம் அழிந்துகொண்டிருக்க... மறுபக்கம் டிஜிட்டல் இந்தியாவை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எல்லாமே டிஜிட்டல் ஆனாலும், உணவு டிஜிட்டலில் கிடைக்காது என்பதை நாம் புரிந்து விவசாயிகளுக்கு உதவ வேண்டிய தருணம் இது. இதில், போராடும் பல விவசாயிகளுக்கு உடல் நலக் குறைவும் ஏற்பட்டு வருகிறது. இதன்பிறகாவது, பிரதமர் விவசாயிகளின் கோரிக்கைகளைத் தெரிந்துகொள்வாரா என்றுதான் அனைவரும் எதிர்பார்க்கின்றனர். வெளிநாடுகளில் இந்திய மேம்பாட்டுக்காக உரை நிகழ்த்தும் பிரதமர், எங்களின் கோரிக்கைகளுக்கு முதலில் செவி சாய்க்க வேண்டும். புதிய இந்தியா பற்றிக் கனவு காணும் பிரதமர், அதிலும் விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் தமிழக விவசாயிகள்.

தன் நாட்டுப் பிரச்னையைத் தீர்ப்பது தானே ஒரு தலைவரின் முக்கியக் கடமையாகும். அதை தீர்க்காதவன் ஒரு தலைவனா.?

அட பாஜக அயோக்கி பயலுங்கலா எல்லாம் தில்லுமுல்லு தானா...?


ஆழ்மனதின் அற்புத சக்திகள்-19...


மெஸ்மர் காலத்தில் அவர் பரிகசிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்படாதவராக இருந்தாலும் அவர் காலத்திற்குப் பின் வந்தவர்களை ஒரு உண்மை நிறையவே சிந்திக்க வைத்தது. அவருக்கு எதிராக ஆயிரம் வாதங்கள் அக்கால அறிவியலறிஞர்கள் முன் வைத்த போதும் பல நோயாளிகளை கும்பல் கும்பலாக அவர் குணமாக்கியதைப் பெரிய அற்புதமாகவே பலரும் நினைத்தனர்.

(விஞ்ஞானம், மருத்துவம் எல்லாம் பெருமளவு நவீனமாக்கப்பட்ட இன்றைய நாட்களில் கூட இது சாத்தியமில்லாததாகவே இருக்கிறதல்லவா?).

பல மேலை நாடுகளிலும் ஆழ்மன சக்திகள் முறையாக ஆராயப்பட வேண்டிய விஷயம் என்ற சிந்தனை எழ ஆரம்பித்தது. 1882ல் லண்டனில் மனோசக்தி ஆராய்ச்சிக் கழகம் (Society for Psychical Research (SPR)) ஆரம்பிக்கப்பட்டது தான் விஞ்ஞான முறைப்படி ஆராய முற்பட்ட முதல் அமைப்பு. பின் பல நாடுகளிலும் அதைப் பின்பற்றி பல அமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.

1888ல் ப்ரெஞ்சு மனோதத்துவ நிபுணர் சார்லஸ் ரிச்சட் என்பவர் விளையாட்டு சீட்டுகளை வைத்து பல ஆராய்ச்சி செய்தார். முதல் முறையாக புள்ளி விவரப்படி ஆராய்ச்சி செய்த அவர் நம் ஆறறிவுக்கு அப்பாற்பட்ட அதீத மனோசக்தி இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டியிருக்கிறது என்று தன் கட்டுரையில் வெளியிட்டார்.

1908ல் பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜே.ஜே.தாம்சன் என்பவர் மனிதர்களுக்கிடையில் மின்காந்த அலைகளாய் தகவல்கள் பரிமாறப்படுகின்றன என்று கருத்து தெரிவித்தார்.

சிக்மண்ட் ஃப்ராய்டு போன்ற மனோதத்துவ அறிஞர்களும், மனித வரலாற்றை ஆராய்ந்த அறிஞர்களும் மொழிகள் தோன்றாததற்கு முந்தைய காலத்தில் மனிதன் சைகளையும், சத்தங்களையும் உபயோகிப்பதற்கும் முன்னால் மனோசக்தி மூலமாகவே கருத்துப் பரிமாற்றங்கள் செய்து வந்திருக்க வேண்டும் என்று கூறினர். பின்னால் இது மனிதன் மறந்த கலையாகி விட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இந்தக் கருத்தோடு ஜே.ஜே.தாம்சன் தெரிவித்த மின்காந்த அலைகளாய் தகவல்கள் பரிமாறப்படுகின்றன என்று தெரிவித்த கருத்தையும் சேர்த்துப் பார்த்த போது தாம்சன் சொன்னபடியே இருக்கலாமோ என்று சந்தேகித்த அறிவியலறிஞர்கள் அதை ஆராய்ந்தறிய முற்பட்டனர்.

அவர்களுக்கு அந்த ஆராய்ச்சிக்கு உதவியது மைக்கேல் ஃபாரடே என்ற விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு கூண்டு. 1836ல் அவரால் உருவாக்கப்பட்ட அந்தக் கூண்டு அவர் பெயராலேயே “ஃபாரடே கேஜ் (Faraday Cage) என்று அழைக்கப்பட்டது. எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் அது ஒரு மின்காந்தக் கவசம். அந்தக் கூண்டில் உள்ளிருந்து வெளியேயோ, வெளியேயிருந்து உள்ளேயோ மின்காந்த அலைகள், ரேடியோ அலைகள் போன்றவை போக முடியாதபடி அவர் வடிவமைத்திருந்தார். அதை பிறகாலத்தில் வந்த விஞ்ஞானிகள் மேலும் நுட்பமாக மேம்படுத்தி இருந்தார்கள். சிறிய கூண்டு முதல் பெரிய அறை வரை ஃபாரடே கூண்டுகள் பல அளவுகளில் ஆராய்ச்சிக்குப் பயன்படும்படி வடிவமைக்கப்பட்டன.

தொலை தூரத்திற்கு எண்ண அலைகள் மூலம் செய்திகள் அனுப்ப முடிந்த, தூரத்தில் இருந்த பொருள்களையும், தகவல்களையும் அறிய முடிந்த சில அபூர்வ மனிதர்கள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஃபாரடே கூண்டில் அமர வைத்து ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டார்கள். அந்தக் கூண்டின் உள்ளே அமர்ந்திருந்த நபர் வெளியே உள்ள குறிப்பிட்ட ஒரு நபருக்கு ஆராய்ச்சியாளர்கள் தேர்ந்தெடுத்த தகவலை அனுப்புவது, தூரத்தில் ஒருவர் மனதில் நினைத்திருந்த அல்லது வைத்திருந்த ஒரு பொருள் என்னவென்று அறிவது போன்ற ஆராய்ச்சிகளை நடத்தினார்கள்.

பெரும்பாலான ஆராய்ச்சிகள் மிகச்சரியான முடிவுகளைத் தெரிவிப்பனவாக இருந்தன. அனுப்பிய தகவல்களும், பெற்ற தகவல்களும் பெரும்பாலான சமயங்களில் பொருந்தி வந்தன. மின்காந்த அலைகள் மூலம் தகவல்கள் பரிமாற்றம் ஃபாரடே கூண்டில் இருந்து நடைபெற சாத்தியமில்லை. ஆனால் மனோசக்தி மூலம் தகவல்கள் வெற்றிகரமாகப் பரிமாற்றம் நடந்துள்ளன. பின் அந்த மன அலைகளின் தன்மை தான் என்ன என்பதற்கு இன்று வரை விஞ்ஞான ஆராய்ச்சிக்கு விடை கிடைக்கவில்லை.

தொடர்ந்து நடைபெற்ற ஆராய்ச்சிகளில் இன்னும் ஒரு படி மேலே போய் வெளியே சாதாரண இடங்களில் இருந்து மனோசக்தியைப் பயன்படுத்தி அனுப்பிய, பெற்ற தகவல்களின் வெற்றித் தன்மையை விட ஃப்ராடே கூண்டில் இருந்து அனுப்பிய, பெற்ற வெற்றித் தன்மைகள் எண்ணிக்கை அளவிலும், தன்மை அளவிலும் மேம்பட்டு இருந்தன என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஆராய்ச்சியாளர்களை மேலும் குழப்பியது.

மேலும் பயணிப்போம்...

விளாம்பழம் (wood apple)...


பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது.

இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.

பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும்.

விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக்கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து...

இயக்கவியலை உணர்த்தும் படங்கள்...


முதல் படம் இங்கு எல்லாம் காடுகள் என்றும் காடுகள் அழிக்கப்பட்டு சமவெளி உருவாக்கப்பட்டு நாகரிகம் என்ற அடிமை வாழ்கை உருவான விதம் பற்றி கூறும் படம்  (மண்ணின் மைந்தர்கள் அடிமை ஆக்கப்பட்ட கதை)...

இரண்டாவது படம் சமவெளி உருவான பின் ஜமின், பண்ணையார், பண்ணை அடிமையின் கதை (இதில் ஓவ்வொரு கதாபாத்திரத்தையும் பாருங்கள் புரியும்)...

பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர வேண்டும் , மாநில அரசுகள் வரியை விட்டுக் கொடுக்க வேண்டும் - மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி...


பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வரும் போது பெட்ரோல் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது குறிப்பிடதக்கது...

தினகரன் ஆதரவு எம்எல்ஏ செந்தில் பாலாஜி யை தேடும் மத்திய குற்றப்பிரிவு போலிஸ், கைது செய்யப்படவுள்ளதாக தகவல்...


இவர் அமைச்சராக இருந்த போது பதிவான மோசடி வழக்கில் போலிசார் தற்போது இவரை தேடி வருகின்றனர்.

அமைச்சராக இருந்த போத தேடவில்லை , நேற்றுவரை தேடவில்லை, என்றோ போட்ட வழக்கில் இன்னைக்கு திடீர் என போலிஸ் தேட என்ன காரணம் எனக் சமூக வலைதளத்தில் கேள்விகள் எழுந்து வருகின்றது...

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் திமுக எம்எல்ஏக்கள் ராஜினமா செய்தால் ஆட்சி கவிழுமா - அரசியல் விமர்சகர்கள் கருத்து...


எனினும் மேலிடத்தின் ஆதரவு இருந்தால் கவர்னர் அவ்வாறு செய்வாரா அல்லது இடைத் தேர்தல் நடக்குமா எனவும் அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்...

நதி நீர் இணைப்பு என்னும் நாசகர திட்டம் விரைவில் நம்மை தண்ணீருக்கு கார்ப்பரேட் கையேந்த வைக்கும்...


நதி உருவாகி மலைகளை கடந்து, சமவெளியில் பாய்ந்து, கடலில் கலந்தால் தான், இந்த உலகம் உயிர்ப்பித்து இருக்கு இல்லையென்றால் அழிந்து விடும்...

மூனு பேர் ஒன்னா சேர்ந்து நடக்கக்கூட உரிமை இல்லைனா, இது ஜனநாயக நாடா இல்லை சர்வாதிகார நாடா...


அ.தி.மு.க அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பதவிநீக்கம் ஜனநாயகப் படுகொலை - பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை...


தமிழ்நாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நீக்க வேண்டும் என்று தமிழக ஆளுனரிடம்  கடிதம் கொடுத்த 19 சட்டப்பேரவை உறுப்பினர்களில் 18 பேரை தகுதிநீக்கம் செய்து பேரவைத்தலைவர் ஆணையிட்டுள்ளார். கட்சித் தாவல் தடை சட்டத்தின் எந்த பிரிவும் பொருந்தாத ஒரு செயலுக்காக இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஜனநாயகப் படுகொலை கண்டிக்கத்தக்கது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய சட்டப்பேரவை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி தமிழக அரசின் தலைமைக் கொறடா அளித்த மனுவின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை பேரவைத் தலைவர் எடுத்திருக்கிறார். தகுதி நீக்கத்திற்கான இந்த அடிப்படையே தவறு ஆகும். சட்டப்பேரவைக்குள் கொறடா ஆணையை மீறி செயல்படும் பட்சத்தில் தான், சட்டப்பேரவை உறுப்பினர்களை பேரவைத் தலைவர் பதவி நீக்கம் செய்ய முடியும். கொறடா உத்தரவை 18 உறுப்பினர்களும் மீறாத நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது முறையற்றது.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பினாமி அரசை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக முதல்வரும், அவரது துதிபாடிகளும் துடித்துக் கொண்டிருக்கின்றனர். மீதமுள்ள 3.5 ஆண்டுகள் பதவிக்காலத்தை பயன்படுத்தி கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காகவே பதவியை தக்கவைத்துக் கொள்வதற்கு துடிக்கின்றனர். ஆனால், மொத்தமுள்ள 233 உறுப்பினர்களில் பெரும்பான்மைக்குத் தேவையான 117 உறுப்பினர்களின் ஆதரவு எடப்பாடி அரசுக்கு இல்லை என்பதால், தங்களிடம் உள்ள உறுப்பினர்களையே பெரும்பான்மை பலமாக்கிக் கொள்ளும் முயற்சியில் ஆட்சியாளர்கள் துடித்தனர். அதற்காக உரிமைப் பிரச்சினையை எதிர்கொண்டு வரும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 21 பேரை தகுதி நீக்கம் செய்து பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுங்கட்சி முடிவு செய்தது. ஆனால், அந்த முயற்சிக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து விட்ட நிலையில், இப்போது அதிமுக அதிருப்தி உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்து தங்களின் பெரும்பான்மையை நிரூபித்துக் கொள்ள ஆளுங்கட்சி துடிக்கிறது. தங்களின் பிழைப்புக்காக அரசியலமைப்புச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், இந்திய ஜனநாயகம் உள்ளிட்ட அனைத்தையும் பினாமி முதல்வர் படுகொலை செய்ய பேரவைத்தலைவர் துணை போயிருக்கிறார்.

தமிழகத்தில் இத்தகைய ஜனநாயகப் படுகொலை நடத்தப்பட்டிருப்பதில் தமிழக ஆளுனர் வித்யாசாகர் ராவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. கடந்த மாதம் 22-ஆம் தேதி எடப்பாடிக்கு அளிக்கப்பட்டு வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக 19 உறுப்பினர்களும் கடிதம் கொடுத்த போதே நம்பிக்கை வாக்கெடுப்பு  நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்கும்படி முதலமைச்சருக்கு ஆளுனர் ஆணையிட்டிருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாத ஆளுனர், குதிரைபேரம் மூலம் உறுப்பினர்களை வளைப்பதற்கு வசதியாக  இந்த விஷயத்தில் காலதாமதம் செய்து வந்தார். அதன்படி நடத்தப்பட்ட குதிரைபேரம் வெற்றி பெறாத நிலையில் இப்போது சம்பந்தப்பட்ட 18 உறுப்பினர்களும் சட்டவிரோதமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆளுனர் மட்டும் மிகவும் நேர்மையாக செயல்பட்டிருந்தால் இந்த ஜனநாயகப் படுகொலை நடத்திருக்காது.

கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த 11 பேர் உட்பட 16 உறுப்பினர்கள் கடந்த 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி அம்மாநில ஆளுனர் பரத்வாஜிடம் கடிதம் கொடுத்தனர். அதையேற்ற ஆளுனர் பரத்வாஜ் அக்டோபர் 11-ஆம் தேதிக்குள் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு ஆணையிட்டார். அதைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில் 16 பேரவை உறுப்பினர்களையும் பதவி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் போப்பையா ஆணையிட்டார். ஆனால், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்  கர்நாடக பேரவைத் தலைவருக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அவரது நடவடிக்கை செல்லாது என்று கூறி, 16 பேரவை உறுப்பினர்களின் பதவியையும் மீண்டும் வழங்கி தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை  மதிக்காமல் பேரவைத் தலைவர் மேற்கொண்டுள்ள இந்நடவடிக்கை சட்டத்தின் முன் செல்லுபடியாகாது.

பதவியில் தொடர்வதற்காக எந்த பாதகத்தையும் செய்யத் துணிந்து விட்ட எடப்பாடி பழனிச்சாமி அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். ஆளுனரும், பேரவைத் தலைவரும் முட்டுக்கொடுத்தாலும் கூட சட்டத்தின் உதவியுடன் இந்த ஆட்சி அகற்றப்படுவது உறுதி...

கீழடியில் அகழாய்வு நடக்கும் பகுதியில் 60 ஏக்கரில் குடியிருப்பு கண்டு பிடிப்பு...


சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் மத்திய தொல்லியல் துறையினரால் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பெங்களூரு அகழாய்வுப் பிரிவு தொல்லியல் கண்காணிப்பாளர் ஸ்ரீராமன், கீழடியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது...


கீழடியில் கடந்த 2 ஆண்டுகளாக அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பருவத்தில் மிகவும் சிதிலமடைந்த, வளைந்த நிலையில் ஒரு செங்கல் கட்டிடம் மற்றும் மூன்று உறைகிணறுகள் மாத்திரமே தற்போது வெளிப்பட்டுள்ளன.

சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் குடியிருப்புகள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.


இதுதவிர சுமார் 3 மீட்டர் ஆழத்தில் தொடர்ச்சியற்ற நிலையில் பெரிய அளவிலான செங்கற்களை (38 செமீ நீளம்) கொண்டு கட்டப்பட்ட துண்டுச் சுவரொன்றும் காணக் கிடைத்துள்ளது.

சுமார் 3 மீட்டர் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட துண்டுச் சுவரின் மூலம் இவ்விடத்தில் இரு காலகட்டங்களில் கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளன என்று தெரிய வருகிறது.

இத்துண்டுச்சுவரே காலத்தால் முந்தைய கட்டுமானமாகும்.


400 ச.மீ பரப்பளவில் மட்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடர்மழை காரணமாக ஒரு சில குழிகளில் மட்டும் அகழ்வாராய்ச்சி தொடர்கிறது. அகழாய்வு அறிக்கை விரைவில் தயாரிக்கப்படும்.

இதுதவிர இடைக்கால அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டு இந்திய தொல்லியல் துறையின் தலைமையிடத்திற்கு இரு மாதங்களில் அளிக்கப்படும்.

இப்பருவத்திற்கான அகழாய்வு அனுமதி செப். 30ம் தேதியுடன் முடிவடைகிறது.


ஐகோர்ட் மதுரை கிளை அறிவுறுத்தலின் பேரில் அருங்காட்சியகம் அமைக்க  நடவடிக்கை எடுக்கப்படும்.

4ம் கட்ட அகழாய்வு மேற்கொள்ள தொல்லியல் துறைக்கு வரைவுத் திட்டம் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

இணையத்தில் பதிவேற்றம்
ஸ்ரீராமன் கூறுகையில்...

கீழடியில் தற்போது கிடைத்து ஆவணப்படுத்தப்பட்டுள்ள  அனைத்து தொல்பொருட்களின் விவரங்கள் http://nmma.nic.in என்ற இணையதளத்தில்  பதிவேற்றம் செய்ய அனுப்பப்படும்.

இது தேசிய நினைவுச்சின்னம் மற்றும்  தொல்பொருட்கள் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமாகும், என்றார்.

1800க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டு பிடிப்பு..

கீழடியில் நடந்த அகழாய்வில் இதுவரை 1,800க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள்  கிடைத்துள்ளன. அவற்றில் 1,500க்கும் மேற்பட்டவை மணிகளே.

மொத்த மணிகளில் 90  சதவீதம் கண்ணாடியால் ஆனவை. மீதமுள்ள மணிகள் பளிங்கு,  பச்சைக்கல் மற்றும் சுடுமண்ணில் செய்யப்பட்டவையாகும்.

இதுதவிர தந்தத்தில்  செய்த சீப்பின் உடைந்த பகுதி, விளையாட்டுக் காய்கள், காதணிகள், செப்பு,  எலும்பு முனைகள், இரும்பு உளிகள் கிடைத்துள்ளன.

இன்றுவரை 14  தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய பானையோடுகள் கிடைத்துள்ளன.

அவற்றுள் ஒளிய(ன்) என்ற முழுப்பெயரும் மற்றவை தனி நபர்களின் பெயர்களில் ஓரிரு  எழுத்துக்களே காணப்படுகின்றன.

இதில் பனிரெண்டு எழுத்துகளைக் கொண்ட பானை ஓடு ஒன்று குறிப்பிடத்தக்கது. இதன் மீது `……ணிஇய் கிதுவரன் வேய்இய்’ என்று பொறிக்கப்பட்டுள்ளது.

மேலும், சதுர மற்றும் வட்ட வடிவிலான தேய்ந்த  செப்புக்காசுகள், ஐந்து தங்கப் பொருட்கள், ஒரு சில மண்ணுருவங்களும்  அகழாய்வில் கிடைத்துள்ளன...

தமிழக அரசின் புதிய திட்டம் அறிமுகம்...


ஹேஷ்டேக் ரகசியம் அம்பலம்...



RightDecisionBySpeaker என்ற ஹேஷ் டாக் ஐ இந்திய அளவில் ட்ரண்ட் ஆக்கி விடும் வட மாநில Paid சோசியல் மீடியா ப்ரோகர்கள்..


சபாநாயகர் எடுத்த முடிவு சரி தான் என்ற ஹேஷ்டேக் தற்போது இந்திய அளவில் ட்ரண்ட் ஆகி வருகின்றது.


இதற்கு பின்னால் உள்ள வேலையை நெட்டிசன்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.


இவர்களே சோசியல் மீடியா ப்ரோகர்களை தேடி கண்டு பிடித்தார்களா அல்லது இதில் கைதேர்ந்தவர்கள் வழி காட்டினார்களா?


வட மாநில காரனுக்கு தமிழ்நாட்டு அரசியலை பற்றி எப்படி தெரியும் ?

சென்னை, கேளம்பாக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த முகாமில் 19 குடும்பங்களாக மொத்தம் 93 ரோஹிங்யா இஸ்லாமியர் தங்கியிருக்கிறார்கள்...


2012-ஆம் ஆண்டு மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் இருந்து கடல் வழியாக வங்கதேசத்துக்கு வந்து பின்னர் சென்னைக்கு வந்து சேர்ந்ததாக இவர்கள் கூறுகிறார்கள்.

ஐ.நா. மேற்பார்வையில் தங்கியிருக்கும் இந்த ரோஹிங்யா அகதிகள் தங்களுக்கு அங்கு நடந்த கொடுமைகளை விவரிக்கின்றனர்.

மியான்மரின் ராணுவ அடக்குமுறைக்கு அஞ்சி, புலம்பெயர்ந்த ரோஹிங்யா இஸ்லாமியரில் ஒரு பிரிவினர் சென்னையிலும் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் ரோஹிங்கியாவில் அடைந்த துன்பங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

திருமணம் செய்து கொள்வது, குழந்தை பெற்றுக் கொள்வது ஏன் தங்களது சொந்த வீட்டில் தங்குவது என அனைத்துக்கும் மியான்மரின் அரசு அதிகாரிகளுக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்ற கொடுமைக்கு இவர்கள் நேரடிச் சாட்சியங்களாக இருக்கிறார்கள்.

ரோஹிங்யா இஸ்லாமியர் அல்கமா பீபி கூறுகையில், ‘திருமணம் செய்து கொள்ள விரும்பும் பெண் ஒரு லட்ச‌ கொடுக்க வேண்டும். அதேபோல் ஆணும் ஒரு லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும். ஆண் தந்தையின் வீட்டில் இருக்க வேண்டுமானால் தினமும் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்’ என்கிறார் பரிதாபமாக...

கேளம்பாக்கம் முகாமில் வசிக்கும் ரோஹிங்யா இஸ்லாமிய அகதிகளுக்கு சென்னையில் இயங்கும் ஐக்கிய நாடுகள் அவையின் அகதிகள் ஆணையக் கிளையின் மூலமாக அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. சிலருக்கு இந்திய அரசின் சார்பில் வழங்கப்படும் ஆதார் அட்டையும் கிடைத்திருக்கிறது.

ரோகிங்யா மொழி பேசும் தஸ்லிமா ஐந்து ஆண்டுகளுக்கு முன் மியான்மர் நாட்டின் ராக்கைன் மாநிலத்தில் நடத்தப்பட்ட ராணுவ அடக்குமுறைகளில் இருந்து தப்பி வந்தவர். இவர் கூறுகையில்,

’மியான்மரில் ராணுவம் எங்களை வாழவிடவில்லை. எல்லாவற்றுக்கும் பணம் கேட்பார்கள். பணம் கொடுக்க முடியாதவர்கள் அங்கு வாழ முடியாது. திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் அரசாங்கத்துக்குப் பணம் கட்ட வேண்டும் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என்ற கருணை சற்றும் இல்லாமல் ராணுவத்தினரும் பௌத்தர்களும் எங்கள் மீது வன்முறைத் தாக்குலை நடத்தினர்’எனக் கூறுகிறார்.

முகமது யூசுப் கூறுகையில், ’நான் ரோஹிங்யா இஸ்லாமியர். மியான்மரில் அராக்கன் எனப்படும் ராக்கைன் மாநிலத்தைச் சேர்ந்தவன். பௌத்தர்கள் இஸ்லாமியர்களாகிய எங்களைத் அடித்துத் துன்புறுத்தினார்கள். அதனால், அங்கிருந்து படகு மூலம் வங்கதேசத்துக்கு வந்தோம். அங்கு ஒரு ஏஜெண்ட் மூலமாக பேருந்தைப் பிடித்து கொல்கத்தாவுக்கு வந்தோம். பின்னர் ரயிலில் சென்னைக்கு வந்து சேர்ந்தோம்’என்கிறார். இவர்களில் பெரும்பாலானோர் மியான்மரில் விவசாயம் செய்து கொண்டிருந்தவர்கள். இங்கு குப்பைகளில் இருந்து கிடைக்கும் இரும்பு, பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருள்களை விற்றுப் பிழைக்கிறார்கள். பெண்கள் குழந்தைகளைக் கவனித்துக் கொண்டு, வீட்டு வேலைகளைச் செய்கிறார்கள். ரோஹிங்யா குழந்தைகளில் பெரும்பாலானோர் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கிறார்கள்.

தமிழில் சரளமாகப் பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். கேளம்பாக்கத்தின் ஒரு மூலையில் அமைந்திருக்கும் ஓலையும் தகரமும் மூடப்பட்ட குடிசைகள், ஒரு நெருக்கடியான கட்டடம் போன்றவை தான் இவர்களது இருப்பிடம். என்றாலும் அதிலும் ஒரு குறிப்பிட்ட இடத்தை தங்களது மதக்கடமைகளை ஆற்றுவதற்காக ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்...

சீனாவில் இருந்து வரும் ஆபத்தை தடுக்கவே ஓபிஎஸ் ஐ மோடி துணை முதல்வர் ஆக்கினார்...


ஓபிஎஸ் அணி செய்தி தொடர்பாளர் பழனிசாமி,  புதிய தலைமுறையில்...

எதுக்கு எதிரி வந்தா வெள்ளைக்கொடி காட்டுறதுக்கா.. இருந்தாலும் நம்ம பிரதமர் ராஜதந்திரங்கள் அனைத்தையும் கரைத்து குடித்தவராகவல்லவா இருக்கிறார்...

அதிமுக ஓபிஎஸ் கலாட்டா...


சீன படை நடுநடுங்க..
இலங்கை படை திணறடிக்க..
வர்றார் பாரு வேட்டைக்காரன்..

சிரிச்சா போச்சு..
சிரிக்காதவங்க மட்டும் லைன்ல வாங்க...

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு தோழர் முகிலன் அவர்களை சற்றுமுன் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி பகுதியில் வைத்து சீருடையல்லாத காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர் பிடி வாரண்ட் எதையும் காட்டாமல் இழுத்து சென்றுள்ளனர்...


ஊடகங்கங்கள், வழக்கறிஞர்கள், மக்கள் இயக்கங்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். காவல்துறையின் இந்த எதேச்சதிகார போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்.

மேலும் விபரத்திற்கு தோழர் குணசீலன் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்: 7200696746..

18.09.2017, இரவு 8.30..

செய்தி - தமிழ்தாசன்...