20/12/2018

தமிழ் டிவி....



நண்பர்களே... புதிதாக ஒரு Youtube channel தொடங்கியுள்ளார் நண்பர்...

ஆகையால் அனைவரும் அந்த Channel யை Subscribe செய்து Bell பட்டனை Click செய்து வைத்து கொள்ளுங்கள்..

அப்போது தான் உடனுக்குடன் தகவல்களை பார்க்க முடியும்...

மேலும் அதிலும் ஏதேனும் விளம்பரம் வந்தால் அதையும் திறந்து பார்க்கவும்..

இனி வீடியோ மூலம் பல தகவல்கள் அதிலும் வரும்....

உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது...


நாம் பெருமைபட வேண்டிய விசையமா ? இல்லை வெட்கபட வேண்டிய விசையமா?

உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது.

அது மொரீசியசு (Mauritius ) மட்டுமே.

(தமிழ் எண்கள் ௦ – 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9)

மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருப்பதை இப் படத்தில் காணலாம்.

எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.

மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்.

ஆனால் தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டே தமிழ் பேசுவதையே வெட்கப்படும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தமிழ் தமிழ் என்று மக்களை மூடனாக்கி பணம் சம்பாதிக்கும் பிழைப்பு நடத்தும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது...

பாஜக அடிமை அதிமுக வின் அடுத்த சதி...


https://www.vikatan.com/news/tamilnadu/144961-anbumani-ramadoss-slams-tamilnadu-government.html

இந்த விஷ வலையில் இருந்து எப்படி தப்பிப்பது...


நாளை முதல் தினமும் பதிவிடுகின்றோம் காத்திருங்கள் இது இரண்டாவது நினைவூட்டல் பதிவு...

பெண்கள் சாப்பிட வேண்டிய சேனைக்கிழங்கு...


கிழங்கு வகைகளுள் நீண்டகாலம் வைத்திருந்து பயன்படுத்தக் கூடிய கிழங்கு, சேனைக்கிழங்கு தான். ஆறு முதல் எட்டு மாதங்கள்வரை இக்கிழங்கு கெட்டு விடாமல் இருக்கும்.

அதனால் இக்கிழங்கைக் காய்கறியாகவும், ஊறுகாய் போடவும் பயன்படுத்துகிறார்கள்.

இக்கிழங்கு பெரிதாக யானைக்கால் போல் இருப்பதால் ‘யானைக்கால் கிழங்கு’ என்றும் இதை வழங்குகிறார்கள்.

கீல்வாதம், நீரிழிவு, தொழுநோய், மூலநோய், உடம்பு வறட்சி, உடல் பலவீனம், சுவாசகாசம் (asthma) முதலியவற்றை இக்கிழங்கு குணமாக்குகிறது. குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் நல்ல உணவு மருந்து இது. இது உடலை வலுவடையச் செய்யும்.

பெண்கள் முப்பது நாள்களும் பயம் இல்லாமல் சேனைக் கிழங்கைச் சேர்த்துக் கொள்ளலாம். அவர்களுக்குக் கெடுதல் எதுவும் செய்யாத கிழங்கு இது.

கருணைக் கிழங்கு போல் அவித்துச் சாப்பிடக்கூடிய இக்கிழங்கின் 100 கிராம் எடையில், புரதம் 1.2 கிராமும், தாது உப்புகள் 0.8 கிராமும், மாவுச்சத்து 18.4 கிராமும், வைட்டமின் ஏ 434 சர்வதேச அலகும், ரைபோஃபிளவின் 0.07 மி.கிராமும், கால்சியம் 50 மி.கிராமும், இரும்பு 0.6 மி.கிராமும், தயாமின் 0.06 மி.கிராமும், நிகோடினிக் 0.07மி.கிராமும் உள்ளன. கிடைக்கும் கலோரி அளவு 79 ஆகும்.

உணவு செரிமானம் ஆகி நன்கு பசி எடுக்க இக்கிழங்கை உபயோகிக்கின்றனர்.

ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், தென்னமெரிக்கா, தெற்கு பசிபிக், தென்கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளில் தவிர்க்க முடியாத உணவாக சேனைக்கிழங்கு இருந்து வருகிறது. இலட்சகணக்கான ஆப்பிரிக்கர்களின் பசியைப் போக்கும் முக்கிய உணவாக சேனைக்கிழங்கு இருந்து வருகிறது.

குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் நல்ல உணவு மருந்து, இது. காரணம், உடலை வலுவடையச் செய்யும் சத்து இதில் நிறைய உள்ளது.

இதில் உள்ள சுண்ணாம்பு சத்து வயதானவர்களின் எலும்பு பலவீனமடைந்துவிடாதபடி பாதுகாக்கிறது. பித்தக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் முதலியவற்றையும் இது குணமாக்குகிறது.

பஞ்சகாலத்தில் கை கொடுக்கும் சத்துணவும், மருந்தும் இதுவாகும். அதனால்தான் ஆப்பிரிக்கர்கள் சேனைக்கிழங்கை முக்கிய உணவாகச் சாப்பிட்டு வாழ்க்கையைச் சமாளிக்கிறார்கள்.

‘பி’ தொகுதி மாத்திரைகளைச் சாப்பிடுகிறவர்கள் அம்மாத்திரைக்குப் பதிலாகச் சேனைக் கிழங்கைச் சாப்பிடலாம்.

அமெரிக்காவில் உள்ள லூசியானாவில் விளையும் சேனைக்கிழங்கு மிகவும் பிரபலமானது. அது சாதாரணமாய் இருபது முதல் நாற்பது கிலோ வரை எடை கொண்டதாய் இருக்கிறது.

தென்னமெரிக்கர்கள் இதைக் கால்நடைகளுக்கும், உணவாகக் கொடுக்கின்றனர். இதனால் அவை ஊட்டத்துடன் நன்கு வளர்கின்றன...

பிராமணர் அல்லாத மக்களே உங்களுக்கு கோபமே வராதா?


மூன்று விஷயங்கள்...


1. மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை.

நேரம்
இறப்பு
வாடிக்கையளர்கள்

2. மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும்.

நகை
பணம்
சொத்து

3. மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது.

புத்தி
கல்வி
நற்பண்புகள்

4. மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்.

உண்மை
கடமை
இறப்பு

5. மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை.

வில்லிலிருந்து அம்பு
வாயிலிருந்து சொல்
உடலிலிருந்து உயிர்

6. மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்.

தாய்
தந்தை
இளமை

7. இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு.

தாய்
தந்தை
குரு

நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்...

1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செல்வத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு

வழிகாட்டும் ஏழு விஷயங்கள்...

1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்...

1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்

கவனிக்க ஏழு விஷயங்கள்...

1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை

நான் இப்போ உலகத்திலே விலை உயர்ந்த உணவகம் அருகில் உள்ளேன்.. சீக்கிரம் கடந்து போகனும்...


மருத்துவமனையில் ஜெயலலிதாவின் உணவு செலவு....


அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 75 நாளில் உணவுக்காக மட்டும் ரூ. 1.17 கோடி செலவாகியுள்ளது தெரியவந்துள்ளது.

ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அளித்த பதிலில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது...

தமிழினத்தை அழிப்பது முதலில் இந்தியா தான்...


தமிழர் வீடுகளில் திண்ணைகளின் பயன்பாடுகள்...


திண்ணை என்பது, மரபுவழி வீடுகள் மற்றும் அது போன்ற கட்டிடங்களில், வாயில் கதவுக்கு அருகிலோ அல்லது அவற்றின் உட்பகுதியில் சில இடங்களிலோ காணப்படுகின்ற மேடை போன்ற அமைப்புக்களாகும்.

சாலைகளை அண்டியுள்ள வீடுகளின் திண்ணைகள் பொதுவாகச் சாலைகளுக்குத் திறந்தே இருப்பது வழக்கமாதலால் பழங்காலத்தில் தூரப் பயணத்தில் ஈடுபட்டுள்ள வழிப்போக்கர்கள் தங்கிச் செல்வதற்கு உரிய இடமாகவும் இவை பயன்பட்டன. பழந் தமிழ் இலக்கியங்களில் இதற்கான சான்றுகளைப் பரவலாகக் காணமுடியும்.

உடன்பிறந்தோர் வந்தாலே விரட்டி அடிக்காக் குறையாக உபசரிக்கும் இக்காலத்து மனிதர்கள் இருக்கையில்,

வழிப்போக்கர்களும் தங்கி செல்ல ஓரிடத்தை ஒதுக்கிய பழந்தமிழர்கள் எத்தகைய சிறப்புடையவர்கள் ?

முன்னைய காலத்தில் போக்குவரத்துச் சாதனங்களின் போக்குவரத்து ஒழுங்கு மிகவும் அரிதாகவும், குக்கிராமங்களிற்கு முற்றாகவே அற்றுமிருந்தது.

ஆகையால் மக்கள் இப்படியான திண்ணைகளை மிக அதிகமாகப் பயன்படுத்தினார்கள். அப்போதெல்லாம் வழிப்போக்கர்கள் மிகவும் நேர்மையாகவும், களவுகளில் ஈடுபடாது தமது பயணங்களைத் தொடர்ந்தனர்.

இப்பொழுதெல்லாம் இப்படியான திண்ணைகளுமில்லை இவற்றில் வந்து தங்கிப்போகும் வழிப்போக்கர்களை நம்பி வீட்டுக்காரர்கள் வீட்டில் தூங்கக் கூடியதாக தமிழ்மக்களின் வாழ்க்கைமுறையும் இல்லை...

தவறு...


தவறு செய்யாமல் வழி பிறக்காது
செய்த தவறை மீண்டும் செய்தால் வழியே பிறக்காது...

திருப்பூர் வங்கியில் 20 கோடி கடன் மோசடி’ - அதிர்ச்சியில் நண்பர்கள்; அதிரடி காட்டிய போலீஸ்...


திருப்பூரில், போலி ஆவணங்களைக் கொடுத்து வங்கியில் 20 கோடி ரூபாய் வரை கடன் மோசடிசெய்த வழக்கில், மேலும் ஒருவரை காவல் துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் செந்தில்குமார் -  பிரியா தம்பதியர். இவர்கள், திருப்பூர் ஆலங்காடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்துவந்தனர். செந்தில்குமார், திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்தார். இவர், திருப்பூர் ஏ.பி.டி. சாலை அருகே உள்ள கார்ப்பரேஷன் வங்கியில் எந்தவித உரிய ஆவணங்களும் சமர்ப்பிக்காமலேயே, சுமார் 10.25 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்றுள்ளார். அத்துடன், மேலும் சில நபர்களின் பெயர்களில் அதே வங்கியில் கடன் பெறுவதற்கான வேலைகளிலும் அவர் இறங்கியிருக்கிறார்.

அந்த வகையில் ராமசாமி, நடராஜ் மற்றும் ஹாரூண் ரஷித் ஆகிய 3 நபர்களின் பெயர்களில் ரூபாய் 18 கோடி கடன் பெற்றுள்ளார் செந்தில்குமார். இந்த நிலையில் சில மாதங்கள் கழித்து ராமசாமி உட்பட 3 பேருக்கும் வங்கியிலிருந்து கடன் தொகையை செலுத்தவேண்டி முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்போதுதான் தாங்கள் மூவருமே செந்தில்குமாரால் ஏமாற்றப்பட்ட விவரம் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

பின்னர், இந்தக் கடன் மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள், திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து, புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்,  செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி பிரியா ஆகியோரைக் கைது செய்தனர். அத்துடன், சம்பந்தப்பட்ட வங்கியின் அந்நியச் செலாவணிப் பிரிவில் பணியாற்றும் சீனியர் மேனேஜர் சங்கர், சோமையாஜுலு ஆகியோரும் கைதுசெய்யப்பட்ட நிலையில் தற்போது, மோசடியில் செந்தில்குமாருக்கு உதவிபுரிந்ததாக அவரது நண்பர் ராஜேஷ்கண்ணா என்பவரையும் கைதுசெய்திருக்கிறது காவல் துறை.

திருப்பூர் வேலம்பாளையம் பகுதியில் வசித்துவந்த ராஜேஷ்கண்ணா, தான் தங்கியிருந்த வீட்டை காலி செய்துவிட்டு, கடந்த சில மாதங்களாகத் தன்னுடைய சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வசித்து வந்திருக்கிறார். காவல் துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி, அவரையும் தற்போது கைது செய்திருக்கிறார்கள்...

திமுக என்பதே மானங்கெட்ட கட்சி தானே...


தமிழர் வரலாறு பகுதி - 5...


(தமிழர் வரலாறு அமையும் வகை) - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்..

9. தமிழர் வரலாறு அமையும் வகை..

காட்சிப் பொருள், கருத்துப்பொருள் ஆகிய ஒவ்வொன்றற்கும் தனித்தனி வரலாறுண்டு. ஆயின், ஒரு நாட்டின் (National) அல்லது மக்கள் வகுப்பு வரலாறே பொதுவாக வரலாறெனப்படுவது.

அதுவும், மக்கள் வரலாறு, மொழி வரலாறு, அரசியல் வரலாறு, சட்ட அமைப்பியல் வரலாறு முதலியனவாகப் பலதிறப்படும். அவற்றுள், அரசியல் வரலாறே கல்வித் துறையில் வரலாறெனச் சிறப்பாக வழங்குவது.

வரலாற்று மூலங்கள் (Sources of History)
பொதுவாக ஒரு நாட்டு வரலாற்று மூலங்கள் பின்வருமாறு எழுவகைப்படும்:

1. தொல்பொருள்கள் (Antiquities) பழங்காலக் கருவி, ஏனம் (கலம்), கட்டடம், காசு, நடுகல், கல்லறை, மாந்தனெலும்பு முதலியன.

2. இலக்கியம் வெட்டெழுத்து (Epigraph), திருமுகம் (Royal letter or order), திருமந்திர வோலைச்சுவடி, நாட்குறிப்பு (Diary), வழிப்போக்கர் வண்ணனை, வரலாற்றுக் குறிப்புகள், வரலாற்றுப் பனுவல்கள் அல்லது பொத்தகங்கள் முதலியன.

வெட்டெழுத்தும் பட்டைப் பொறிப்பு, (சுடுமுன்) களிமட் குழிப்பு, கல்வெட்டு, செப்புப் பட்டையம் முதலியனவாகப் பல திறப்படும்.

3. செவிமரபுச் செய்திகள் (Traditions).

4. பழக்கவழக்கங்கள்.

5. மொழிநூற் சான்றுகள்.

6. நிலநூற் சான்றுகள் (Geological evidence).

7. கடல்நூற் சான்றுகள் (Oceanographic evidence) நிலம், தட்பவெப்பநிலை, பழக்கவழக்கம், தொழில், உணவு முதலியவற்றால் மக்கள் உடலமைப்பும் நிறமும் வேறுபடுவதனாலும், ஒரேயினத்தில் மட்டுமன்றி ஒரே குடும்பத்திலும் நீள்மண்டை (Dolichocephalic), குறுமண்டை (Brachycephalic), இடைமண்டை (Mesaticephalic) என்னும் மூவகை மண்டையர் பிறப்பதனாலும், இங்ஙனமே ஏனை யுறுப்புகளும் நிறமும் இயற்கையாலும் செயற்கையாலும் வேறுபடுவதனாலும், மாந்தன் மெய்யளவியலும் (Anthropometry), குலவரைவியலும் (Ethnography) ஒரு மக்களின வரலாற்றிற்குப் பிற சான்றுகள்போல் அத்துணைத் தேற்றமாகப் பயன்படுவனவல்ல.

தமிழன் பிறந்தகமும் பழம்பாண்டிநாடுமாகிய தென்பெரு நிலப்பரப்பு மூழ்கிப்போனமையால், தொல்பொருளியற் சான்று(Archaeological evidence) இன்று அறவே இல்லாத தாயிற்று.

நீலமலை, ஆனைமலை, சேரவரையன்மலை முதலிய மலைகளிலுள்ள இற்றைப் பழங்குடி மாந்தரெல்லாம், கொள்ளைக்கும் போருக்குந் தப்பிக் கீழிருந்து மேற்சென்றவரே.

அவர் மொழிகளெல்லாம், செந்தமிழ்ச் சிதைவான கொடுந்தமிழுங் கொச்சைத் தமிழுமே யன்றிக் குமரிநாட்டுத் தமிழ் வளர்ச்சி காட்டும் முந்துநிலைகளல்ல. கற்றார் தொடர்பும் நாகரிக மக்களுறவு மின்மையால், மலைநிலத்திற் கேற்றவாறு அவர்களின் வாழ்க்கைநிலை தாழ்ந்துள்ளது. தமிழரின் கற்கால நிலையெல்லாம் குமரிநாட்டிலேயே கழிந்துவிட்டது.

எந்தக் காலத்திலும், நாகரிக மக்கள் வாழும் நாட்டில் அநாகரிக மாந்தரும் வதியலாம்.

நாகரிகம் மிக்க இவ் விருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும், தமிழ்நாட்டு வேட்டுவப் பெண்டிர் தழையுடையும் மலையாள நாட்டுத் தந்தப் புலைமகளிர் கோரையுடையும் அணிந் திருந்தனர். இதனால் தமிழப் பெண்டிர் அனைவரும் அங்ஙனமே அணிந்திருந்தனர் என்று கூறிவிட முடியாது. ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே, பஞ்சு மயிர் பட்டு நூலால் நூற்றுக்கணக்கான ஆடை வகைகள் தமிழகத்தில் நெய்யப்பட்டன. ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பு, சிறந்த ஆடைவகைகளெல்லாம் தமிழகத்தினின்றே மேலை நாடுகட்கு ஏற்றுமதியாயின.

துடவரையும் கோத்தரையும் முந்தியல் (Primitive) தமிழராகக் கொண்டு, நீலமலையைத் தமிழன் பிறந்தகம் போலப் பேரா. எக்கேல் (Haeckel) கூறுவதும், திரு. புரூசு பூட்டு (Bruce foote) தொகுத்த பழம் பொருள்களைக் கற்காலத் தமிழர் கருவிகளுங் கலங்களுமென்று கருதுவதும், இங்ஙனமே ஆதிச்சநல்லூர் முதலிய பிறவிடத்துப் பொருள்களை மதிப்பிடுவதும், தமிழின் தொன்மையறியார் தவறாகும்.

மலைவாழ் குலத்தாரெல்லாம் முந்தியல் மாந்தரல்லர். புதைந்து கிடக்கும் கற்கருவிகளெல்லாம் கற்காலத்தன வல்ல. கடைக் கழகக் காலத்தில் ஓரி, பாரி முதலிய சிற்றரசரும் அவர் படையினரு மாகிய நாகரிக மக்களே பறம்பு, கொல்லி முதலிய மலைகளை அரணாகக் கொண்டு, அவற்றின்மேல் வாழ்ந்திருந்தமையை நோக்குக. தென் மாவாரியில் மூழ்கிக் கிடக்கும் குமரி மாநிலம் மீண்டும் எழுந்தாலொழிய, கற்காலத் தமிழரின் கருவிகளைக் காணமுடியாது. இன்று கிடைக்கும் கற்கருவிகளெல்லாம் பிற்காலத்துக் காடுவாழ் குலங்கள் செதுக்கிப் பயன்படுத்தினவையே.

இனி, பல்துறைப்பட்டனவும் அயற்சொல்லுங் கருத்தும் அறவே யில்லவுமான முதலிரு கழக ஆயிரக்கணக்கான தமிழ் நூல்களும், இயற்கையாலும் செயற்கையாலும் அழியுண்டு போனமையாலும்; அவற்றிற்குப் பிற்பட்ட கிறித்துவிற்கு முன்னைத் தமிழ்நூல்களும் ஒன்றிரண்டு தவிர ஏனைய வெல்லாம், சிதலரித்தும் அடுப்பி லெரிந்தும் குப்பையிற் கலந்தும் பதினெட்டாம் பெருக்கில் வாரியெறியப்பட்டும் பல்வேறு வகையில் இறந்துபட்டமையாலும்; முதுபண்டை வரலாற்றிற்கு அக்காலத்து இலக்கியச் சான்றும் இல்லாது போயிற்று.
ஆரியர் வருகைக்கு முற்பட்ட தனித்தமிழ் இலக்கியம் அனைத்தும் அழியுண்டு போயினும், தொல்காப்பியம், இறையனாரகப்பொருளுரை முதலிய நூல்களிலுள்ள வரலாற்றுக் குறிப்புகள் குமரிநாட்டுத் தமிழர் வாழ்க்கையையும் அந் நாட்டியல்பையும் பற்றியனவாதலால், அவை தமிழரின் முது பண்டை வரலாற்றிற் குதவுவனவே.

தொல்காப்பியம் கி.மு. 7ஆம் நூற்றாண்டு நூலேயாயினும் அதிற் சொல்லப்பட்டுள்ள செய்திகள் கி.மு. 50ஆம் நூற்றாண்டிற்கு முந்தினவையாகும்.

"முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்"

என்று தொல்காப்பியரின் உடன்மாணவரான பனம்பாரனார் கூறி யிருப்பதோடு, நூல்முழுவதும் "என்ப" "என்மனார் புலவர்" எனச் சார்பிற் சார்பு நூன்முறையில், முன்னூலாசிரியரைத் தொல்காப்பியர் தொகுத்துக் குறித்திருத்தல் காண்க.

உலகில் முதன்முதல் எழுதப்பட்ட மொழி சுமேரியம் என்றும், அது கி.மு. 3100-ல் எழுத்துமொழியாய் வழங்கியதற்குச் சான்றுள்ள தென்றும் பிரித்தானியக் கலைக்களஞ்சியத்திற் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தினின்று சென்ற ஒரு கூட்டத்தாரே சுமேரியரின் முன்னோர் என்னும் உண்மையை, பேரா.

இராமச்சந்திர தீட்சிதர் எழுதியுள்ள 'தமிழரின் தோற்றமும் பரவலும்' (Origin and Spread of the Tamils) என்னும் நூலிற் கண்டு தெளிக.

தமிழிலக்கணம், தமிழிலக்கியப் பாகுபாடு, தமிழ் மரபு, குமரிநாட்டுத் தமிழர் வகுப்புகள், அவர் தொழில்கள், அவர் மணமுறை, அவர் பழக்கவழக்கம், அக்காலத்து அரசியல், அக்காலப் போர்முறை முதலியன தொல்காப்பியத்திற் சொல்லப்பட்டுள்ளன.

இறையனா ரகப்பொருளில், முக்கழக வரலாறும், தென்மதுரை கதவபுரம் (கவாடபுரம்) என்னும் பழம் பாண்டிநாட்டுத் தலைநகர்ப் பெயர்களும், கழகப் பாண்டியர் புலவர் தொகையும்; சிலப் பதிகாரத்தில், பஃறுளியாறும் குமரிமலையும் முதற் கடல்கோளும் பாண்டிய ஆள்குடி முன்மையும்; அடியார்க்குநல்லாருரையில்,
முழுகிப்போன பழம்பாண்டி நாட்டு நிலப்பரப்பும், அதன் தென்வட வெல்லைகளும், அவற்றிடைப் பட்ட பல்வேறு நாடுகளும்; புறநானூற்றில் பஃறுளியாறும் அவ் வாற்றையுடைய பாண்டியன் பெயரும்; கலித்தொகையில், இரண்டாங் கடல்கோளும் அதற்குத் தப்பிய பாண்டியன் செய்கையும் குறிக்கப்பட்டுள்ளன.

முதலிரு கழகமும் வரலாற்றிற்கு முற்பட்ட நெடுஞ் சேய்மைக் காலத்தன வாதலின், அக்காலத்துப் புலவர் பெயர்களும் நூற்பெயர் களும் தவறாகக் கூறப்பட்டுள்ளன. குமரிநாட்டின் தொன்மையையும் அந் நாட்டை யாண்ட பாண்டியர் தொகையையும் தமிழின் முன்மையையும் நோக்கின், முக்கழக வரலாற்றிற் குறிக்கப்பட்டுள்ள கால அளவுகள் நம்பத்தகாதனவும் நிகழ்ந்திருக்கக் கூடாதனவும் அல்ல. கடைக்கழகத்திற்குக் குறிக்கப்பட்டுள்ள கால அளவில், இடைக் கழகத்திற்கும் அதற்கும் இடைப்பட்ட காலமும் சேர்க்கப் பட்டிருத்தல் வேண்டும்.

பஃறுளியா றென்பது திருவாங்கூர் நாட்டிலுள்ள பறளியா றென்றும், அதன் கயவாயில் கடலரிப்பாற் கரைநிலங் கரைந்து போனதையே, இளங்கோவடிகளும் பிறரும் ஒரு தென்பெரு நிலத்தைக் கடல்கொண்டதாகக் கூறிவிட்டன ரென்றும், தமிழ்ப்பகைவரான சில ஆரியர் ஒரு புரளியை உண்டுபண்ணி யுள்ளனர். தென்பாலிமுகம், தென்மதுரை, பன்மலைத் தொடரான குமரிமலை, ஏழேழ்நாடுகள், பிறநாடுகள், குமரியாறு, எழுநூற்றுக் காதவழி முதலிய செய்திகளுள் ஒன்றுகூட அவர் கூற்றால் விளக்கப்படாதிருத்தல் காண்க.
இடைக்கழகத்தில் எண்ணாயிரத் தெச்சம் தமிழ்நூல்கள் இருந்தன என்பது போன்றவை செவிமரபுச் செய்திகள்.
பழக்கவழக்கங்கள் என்பன, இலக்கியத்திற் சொல்லப்பட்டுள்ளனவும் இன்று நடைமுறையிற் காண்பனவுமான பல்துறை மரபுவினைகள்.

தமிழின் தோற்றம், வளர்ச்சி, அமைப்பு, (சொல்) வளம், தொன்மை, முன்மை, தாய்மை, தலைமை முதலிய நிலைமைகளை யுணர்த்தும் சொற்களும் சொல்லமைப்பும் சொற்றொடரமைப்பும் மொழியியற் சான்றுகளாம்.

பல்வேறு ஊழிகளில், நீர்வினையாலும் நெருப்புவினையாலும் தோற்றமும் மாற்றமுமடைந்த நிலப்படைகளும் பாறைகளும் மலைகளும் நிலநூற் சான்றுகளாம்.

நாடும் நகரும் ஆறும் மலையும் கடற்குள் மூழ்கியிருப்பதும், கடலின் பரப்பும் எல்லையும் ஆழமும் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு வகையில் மாறியிருப்பதும் கடல்நூற் சான்றுகளாம்.

கடைக்கழகத்திற்குப் பிற்பட்ட தமிழக வரலாறு, ஆள்குடி (Dynasty) வாரியாகவும், ஆள்நில (Territory) வாரியாகவும் நூற்றாண்டு வாரியாகவும், அரச வாரியாகவும் வெவ்வேறு வரலாற்றாசிரியரால் இயன்றவரை காலக்குறிப்புடன் விளத்தமாக வரையப்பட்டுள்ளது. ஆதலால், கடைக்கழகத்திற்கு முற்பட்டது மக்கள் வரலாறாகவே யிருக்க, பிற்பட்டதே மக்கள் வரலாற்றோடு அரசியல் வரலாறாகவும் அமைதல் கூடும்.

கி. பி. 900-க்கு முற்பட்ட தென்னாட்டுத் தமிழரையங்களின் துல்லியமான காலக்குறிப்போடு கூடிய தூய கிளத்தியல் (Narrative) அரசியல் வரலாற்றை இன்றெழுத வியலாது. இதற்கு மறுதலையாக, துல்லியமான காலக்குறிப்பை நீக்கியமைவோமாயின், திரவிடரின் குமுகாய வரலாற்றைத் தொகுத்து வரைதற்கு வேண்டிய கருவிச் சான்றுகள் பேரளவில் உள்ளன என நம்பு கின்றேன். அத்தகைய வரலாறு, திரவிட இனங்களின் மொழிகளிலும் இலக்கியங்களிலும் பழக்கவழக்கங்களிலும் போதிய அளவு தேர்ச்சிபெற்ற புலவரால் வரையப்பெறின், அது அனைத்திந்திய வரலாற்றாசிரியனுக்கு இன்றியமையாத துணையாயிருப்பதுடன், இந்திய நாகரிக வளர்ச்சி மாணவன் தன் துறைப்பொருளை உண்மையான அமைப்பிற் காணவுஞ் செய்யும் என்று வின்சென்று சிமிது வரைந்திருத்தல் காண்க்.10 அவர் காலத்திற்குப்பின் பல கருவி நூல்கள் வெளிவந்துள்ளமையால்.
இன்று தமிழக அரசியல் வரலாற்றை 7ஆம் நூற்றாண்டினின்று தொடங்குதல் கூடும்.

தமிழ்மொழி, குமரிநாட்டு மாந்தர் தம் கருத்தை யறிவித்தற்கு முதன்முதலாக வாய்திறந் தொலித்த காலந்தொட்டு இன்றுவரை இடையறாது தொடர்ந்து வழங்கிவருவதனாலும்; இயற்கையாலும் செயற்கையாலும் சிதைவுண்டு மிக வளங்குன்றியுள்ள இந் நிலையிலும், தமிழரின் கொள்கை கோட்பாடுகளையும் நாகரிகப் பண்பாடுகளையும் மதிநுட்பத்தையும் பேரளவு தெரிவிப்பதனாலும்; எழுவகை வரலாற்று மூலங்களுள்ளும் தலைசிறந்தது மொழியியலே யாம். அதனால், பெரும்பால் அதனையும், சிறுபால் இலக்கியத்தில் ஆங்காங்குள்ள வரலாற்றுக் குறிப்புகளையும், துணைக்கொண்டே இந் நூல் எழுதப்படுகின்றது.

தொடக்கந்தொட்டு இன்றுகாறும் தமிழ்மக்கள் வரலாற்றையே இந் நூல் கூறுவதால், கிளத்தியல் முறையல்லாது வண்ணனை (Descriptive) முறையிலேயே இருக்குமென்றும், நாகரிகக் காலத்திற்கு முந்திய கற்காலச் செய்திகள் சில உத்திக்கும் இயற்கைக்கும் ஒத்த உய்த்துணர்வாகவே யிருத்தல் கூடுமென்றும் அறிதல் வேண்டும்.

ஆரியர் வருகைக்கு முற்பட்ட தனித்தமிழ்க்காலச் செய்திகளைக் கூறும் தனிநிலைக் காண்டம், ஆரியர் வந்தபின் ஆரியச் சொல்லுங் கருத்தும் தமிழிலும் தமிழிலக்கியத்திலும் தமிழர் வாழ்க்கையிலும் கலந்ததைக் கூறும் கலவுநிலைக் காண்டம், ஆங்கிலர் வந்தபின் தமிழ்மொழியும் தமிழிலக்கியமும் தமிழர் உள்ளமும் ஆரியக் கலப்பு நீங்கித் தெளிந்ததைக் கூறும் தெளிநிலைக் காண்டம் என முப்பெரும் பகுதிகளைக் கொண்டது இந் நூல்...

அது தமிழன் தன்னை திராவிடன் என்று நம்பி ஏமாந்த காலம்...


மாங்கனி நழுவி பாலில் விழுமானு எழுதியிருப்பது திமுக சார்பு ஊடகம் ஒன்இந்தியா...


பாமகவை கூட்டணிக்கு அழைத்திருப்பது யாருனு அடிப்படை தமிழ் புரிஞ்சவங்க கீழுள்ள செய்திய படிச்சா தெரியும்,

காலையில திமுக உபி ஒருவர் எழுதினார் பாமக தூது விட்டதாம்🤣

திமுகவுக்கு உதறல் ஆரம்பிச்சுடுச்சு போல...

விசிக மற்றும் மதிமுக வை செருப்பால் அடிக்கும் திமுக...


மிளகின் அற்புதமான மருத்துவக் குணங்கள்...


வரலாற்று ஆசிரியர்கள் கூற்றுப்படி கிமு 3000 ஆம் ஆண்டுகளிலிருந்து சிறந்து விளங்கிய கடல் வியாபாரத்தில் தங்கம் போல் விலை மதிக்க முடியாத ஒன்று மிளகு.

மிளகை வீணடித்தால் உப்பு போட்டு அதில் நாள் முழுவதும் மண்டியிட வைக்கும் தண்டனை போர்ச்சுகல் நாட்டில் நடைமுறையில் இருந்தது.

மிளகில் உள்ள சத்துக்கள்...

தாது உப்புகள்..

1. கால்சியம்
2. பாஸ்பரஸ்
3. இரும்பு

வைட்டமின்கள்..

1. தயாமின்
2. ரிபோபிலவின்
3. ரியாசின்

சளித் தொல்லைக்கு..

மிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும். அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.

கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும். கல்யாண முருங்கை இலையுடன், அரிசி சிறிது மிளகு சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிட்டு வர சளி குணமாகும்.

FILE பற்களுக்கு..

மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி, சொத்தை பல், ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் குணமாகும், பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை போக்கும்.

தலைவலி..

மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலைபாரம் குணமாகும். மிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும். மிளகை சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும்.

இரத்தசோகைக்கு..

கல்யாணமுருங்கை இலை, முருங்கை இலை, மிளகு மற்றும் பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை குணமாகும் .

பசியின்மைக்கு..

ஒரு ஸ்பூன் அளவு மிளகை வறுத்து பொடி செய்து அதனுடன் கைபிடியளவு துளசியை சேர்த்து கொதிக்க வைத்து அதனை ஆற வைத்து அதனுடன் சிறிது அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர பசியின்மை குணமாகும் மற்றும் வயிறு உப்பசம் குணமடையும்.

மிளகு வயிற்றில் உள்ள வாய்வை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தை கரைக்கும் தன்மையுடையது. மிளகு உணவை எளிதில் செரிக்க வைக்கும் தன்மை கொண்டது. மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது...

அநியாயம் ஒரு ஜோடி செருப்பு 900(899)ஓவா சொல்றான்யா...


இனி எப்படி தேயும் ன்னு பார்த்துடறேன்...

அப்டியே பிஞ்சாலும் வெல்டிங்  செலவு வெறும் அம்பது ரூபா தான்...

30 நாட்களுக்கு பிறகு வந்த மின்சாரம்.. அப்பாவி பெண்ணின் உயிரை பறித்த கொடூரம்...


கடந்த மாதம் கஜா புயல் டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கோரதாண்டவம் ஆடியது. இதனால் பலர் வீடு மற்றும் உடைமைகளை இழந்தனர். இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் கிராமப்புறங்களில் தற்போது வரை மின் விநியோகம் சீராகவில்லை.

இதற்கிடையில் கஜா புயல் பாதித்து 30 நாட்களுக்கு பிறகு நேற்று மாலை அறந்தாங்கி பகுதிகளில் மின்விநியோகம் வழங்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

அறந்தாங்கி அருகே உள்ள மங்களநாடு கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை. அதே ஊரில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயா மிக்சியை இயக்கினார். அப்போது அதில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்தது.

இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்ககுப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

ஆரம்பம்தான் தினமலர்.... காத்திரு வரிசையா அப்லோட் பன்றோம்...


புன்னை மரம்...


1. மூலிகையின் பெயர் - புன்னை.

2. தாவரப்பெயர் - CALOPHYLLUM INOPHYLLUM.

3. தாவரக்குடும்பம் - CLUSIACEAE.

4. பயன் தரும் பாகங்கள் - இலை, பூ, விதை, பட்டை மற்றும் எண்ணெய் ஆகியன.

5. வளரியல்பு - புன்னை ஒரு மரவகையைச் சேர்ந்தது.

மணற்பாங்கான இடம், வளமான ஈரமான இடங்களில்  நன்கு வளரும்.

கழிமண் நிலத்திலும், உப்புத் தண்ணீரிலும் வளரும்.

இது சற்று நீண்ட எதிர் அடுக்கில் அமைந்த பெரிய பச்சையான பளபளப்பான இலைகளையும்  உருண்டையான உள் ஓடு உள்ள  சதைக் கனிகளையும் உடைய பசுமையான மரம்.

இது சுமார் 5 அடிக்குமேல் 12 அடிவரை உயரம் வளரும்.

இதன் பூக்கள் அழகாக இருக்கும். பூவின் அகலம் 25 எம். எம். ஆகும். ஒரு கொத்தில் 4 - 15 பூக்கள் இருக்கும்.

இதன் காய்கள் முதலில் மஞ்சளாகவும் பின் முற்றிய பின் மரக்கலராகவும் மாரும்.

ஒரு மரத்தின் காய் 100 கிலோ கிடைக்கும். அதில் 18 கிலோ எண்ணெய் கிடைக்கும். 

புன்னை மரத்திற்கு ஆங்கிலத்தில் ‘Ballnut’ என்று சொல்வார்கள்.

இதன் பூர்வீகம் கிழக்கு ஆப்பிரிக்கா, பின் இந்தியாவின் தென் கடற்கரையோரங்கமளிலும், மலேசியாவிற்கும், மாலத்தீவிற்கும்,  ஆஸ்த்திரேலியாவுக்கும், அவாய் தீவுகள், புயூஜி தீவு, பிலிப்பன்ஸ், அமரிக்கா, உகந்தா போன்ற நாடுகளுக்குப் பரவிற்று.

இந்தியாவில் தமிழ் நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது.

பழங்கால இலக்கியங்களில் புன்னை மரம் பற்றிக் காணப்படுகிறது.

புன்னை மரம் அழகிற்காகவும் வளர்க்கப்படுகிறது.
 
சோதிடத்தில் ஆயில்ய நட்சத்திரத்தின் மரம் புன்னை.

இது நோயைகுணமாக்கும் மரமாக விளங்கியுள்ளது.

புன்னை கோயில்கள், சர்ச்சுகளிலும் வளர்க்கப்படுகிறது.

கேரளம் தமிழ்நாட்டில் கோயில்களில் காணப்படுகிறது.

புன்னை மரம் வலுவானது. இந்த மரத்தில் படகுகள் செய்வார்கள். வீடுகள் கட்டவும் பயன்படுத்துவார்கள். 

இதன் எண்ணெயில் ஆதிகாலத்தில் விளக்குக்குப் பயன் படுத்தினார்கள். 

தற்போது இதை பயோடீசல் தயார் செய்து டீசலுக்ககுப் பதிலாகப்பயன் படுத்துகிறார்கள்..

காட்டாமணக்கு, புங்கன், சொர்க்கமரம், வேம்பு மற்றும் இலுப்பை மரங்களில் கிடைக்கும் விதை போன்று இதன் விதையும் பயன் படுகிறது.

புன்னை விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.

6. மருத்துவப் பயன்கள் - புன்னை தாது அழுகல் போக்கியாகவும், உடல் இசைவு நீக்கியாகவும், நாடி நடையை உயர்த்தி உடல் வெப்பு தரும் மருந்தாகவும் பயன்படும்.

இது சளி, ஒற்றைத் தலைவலி, தலைசுற்றல் கண் எரிச்சல், வாத நோய், தோல் வியாதி, வயிற்றுப் புண், வெட்டை, மேகப்புண், சொறி சிரங்கு குஷ்டம்  ஆகியவைகளைக் குணப்படுத்தும்.

பூவை அரைத்துச் சிரங்கிற்குப் போடலாம்.

இலையை ஊரவைத்த நீரில் குளித்து வர மேகரணம், சொறி, சிரங்கு யாவும் மறையும்.

பூவை நிழலில் உலர்த்தித் தூள் செய்து ஒரு சிட்டிகை காலை, மாலை கொடுத்து வர டைபாய்டு தீரும்.

புன்னை எண்ணெய் பூசி வர மகாவாத ரோகம் முன் இசைவு, பின் இசைவு, கிருமி ரணம் சொறி சிரங்கு, குட்டரோகப் புண்கள் தீரும்.

புன்னை எண்ணெய் 10, 15 துளி சர்கரையில் கொடுத்து உப்பில்லா பத்தியம் இருக்க கொனேரியா என்ற வெள்ளை மேகரணம் தீரும்.

புன்னை மரம் கோயில்களில் உள்ளதை ஆயில்யம் நட்சரத்தில் பிறந்தவர்கள் அந்த மரத்தைச் சுற்றி வந்து கட்டிப் பிடித்துத் தழுவும் போது அந்த மரத்தின் கதிர் வீச்சுக்கள் உடலில் படும் போது நோய்கள் குணமடைகிறது.

முக்கியமாக பெண்களுக்கான இதய நோய்கள், மார்பக நோய்கள் குணமடைவதாகச் சொல்கிறார்கள்.

புன்னை விதையை அரைத்துக் கொதிக்க வைத்துப் பற்றுப் போட முடக்கு வாதம், கீல்வாயு, வாதவலிகள் தீரும்.

பட்டைக் குடிநீரால் புண்களைக் கழுவலாம்.

புன்னையின் இலைகள் பூக்கள் மற்றும் பட்டையை அரைத்துப் பவுடராக்கி தினம் ஒரு வேளை கொடுக்க மூட்டுவலி, சொறி, சிரங்கு குஷ்டம் மேகம் ஆகியவை குணமாகும்...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து ஏழை எளிய மக்களின் நோய் தீர்த்தவர்..


மக்கள் மருத்துவர் என்று சென்னை வாசிகளால் பாசத்துடன் அழைக்கப்பட்டு வந்த ஐயா ஜெயச்சந்திரன் நாயகர் அவர்கள் காலமானார்...