15/04/2019

மாயமாக மறைந்த ஒரு கிராமம் – விடையின்றி தொடரும் மர்மம்...


அஞ்ஜிகுனி, கனடாவில் ஒதுக்குப்புறமாக மலையைச்சார்ந்து அமைந்திருந்த கிராமம்.

சுமார் 2000 மக்கள் சாதாரணமாக வாழ்ந்து வந்தார்கள்.

ஏரியில் மீன் பிடித்து விற்பதை முக்கிய தொழிலாக கொண்டிருந்தார்கள் அவர்கள்.

1930 ஆம் ஆண்டு கார்த்திகை ( நவம்பர்) மாதம் ஒரு நாள்…

பொறி வைத்து விலங்குகளை பிடிக்கும் தொழிலை மேற்கொண்ட ஜோலபல் என்பவர் அந்த ஊருக்கு சென்றார்.

அது முதல் தடவையல்ல… பல தடவைகள் அவர் அந்த ஊருக்கு சென்றுள்ளார்.

ஆனால் அன்று சற்று வித்தியாசமாக இருந்தது ஊர். ஊருக்குள் கால் வைத்தது முதல் யாரையும் அவர் காணவில்லை. ஊரின் மையப்பகுதிக்கு சென்றும் அவர் கண்களில் யாரும் அகப்படவில்லை. வீட்டுக்கதவுகள் திறந்து கிடந்தன. வீட்டிற்குள் சென்று பார்த்தால் சமைத்த உணவுகள் அப்படியே கிடந்தன. பாதி தைத்த உடைகளில் ஊசி கூட வெளியில் எடுக்கப்படாமல் இருந்தது.
இறுதியாக இரு வாரங்களுக்கு முதல் கூட அங்கே வந்திருந்தார் ஜோ.

கிராமத்தவர்கள் அனைவருமே கலகலப்பானவர்கள். சுமூகமான சமூகம்.
ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்த ஜோ, பகுதி காவலர்களுக்கு அறிவித்தார்.

அவர்கள் தேடியும் அந்த கிராமத்திற்கு என்ன நடந்தது? அங்கிருந்தவர்கள் எங்கே? போன்ற கேள்விகள் தேங்கித்தான் நின்றன.

சுற்று முற்றும் தேடி விசாரித்ததில்…

ஊரின் மறு முனையில் வண்டில்களை இழுத்து செல்லும் நாய்கள் இறந்து கிடந்தன. ( 7 நாய்கள் என்று சில தகவல்களும் சிலது 3 எனவும் மாறுபட்டு இணையத்தில் உள்ளது.) அந்த நாய்கள் எவ்வாறு இறந்தன என்பதை அப்போது பெரிதாக யாரும் சோதனையிடவில்லை.

அருகில் உள்ள ஊரைச்சேர்ந்த பலர் அந்த ஊரின் மலைப்பகுதியில் வெளிச்சத்தத்தை பார்த்ததாக கூறினார்கள்.

கூறப்படும் காரணங்கள்.

வேறு இடம் பெயர்ந்திருப்பார்கள் - சகல வசதிகளும் இருக்கும் அந்த மக்கள் பொருட்களை அப்படி அப்படியே விட்டு விட்டு கிளம்பிப்போக வாய்ப்பில்லை. அப்படி போய் இருந்தாலும் எங்கே?

படையெடுப்பு - ஏதோ ஒரு ஊரைச் சேர்ந்தவர்கள் படையெடுத்து சிறைப்பிடித்திருப்பார்கள். ஊரில் படையெடுப்பு நடந்தமைக்கான எந்த அறிகுறிகளும் இருந்ததில்லை. படையெடுப்பு அமைதியாக நடைபெற வாய்ப்பும் இல்லை.

வெம்பயர், காட்டேர்களின் தாக்குதல் - குறிப்பிட்ட காலத்தில் வெம்பயர்கள் தொடர்பான அதீத நம்பிக்களைகள் இருந்தமையால் இந்த கருத்து வெளியிடப்பட்டிருக்கலாம். மனித இறப்புக்களுக்கான சான்றுகளோ இரத்த அடையாளங்களோ கிராமத்தில் கண்டு பிடிக்கப்படவில்லை.

ஏலியன்ஸ் - பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்கள் மலையில் வெளிச்சத்தை பார்த்ததாக கூறியதன் படி, ஏலியன்ஸ் ஒரே தடவையில் அந்த ஊர் மக்களை/ உயிரினங்களை மட்டும் கடத்தி இருக்க கூடும்.

பரிமாணம் - அந்த ஊர் மக்கள் பரிமாண மாற்றத்தில் மறைந்திருக்கலாம். இதுவும் சற்று குழப்பமானது. விரிவாக பின்னர் பார்க்கலாம்.

எமது கருத்துப்படி, மறை உலகம்.. கிட்டத்தட்ட இது பரிமாணத்தை ஒத்துப்போகும்.

இவ்வாறு பல கருத்துக்கள் கூறப்பட்டாலும், இந்த கிராம மக்கள் காணாமல் போய் 83 வருடங்களைத் தாண்டியும் இன்னமும் இதற்கான விடையை கனேடிய போலிஸாரும் ஆய்வாளர்களும் கண்டறிய முடியாதுள்ளனர்...

தருமபுரியில் உடைந்தது திமுக...


தருமபுரி மாவட்ட திமுக முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன் அவர்கள் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாமக வெற்றி வேட்பாளர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்...

ஆவிகள் - பேய்கள் பற்றிய உண்மைகள்...


1.பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே விரும்பும். எனவே தான் அறைகளில் நறுமணம் அல்லது வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன.

2.பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோன உடல்களை சுற்றியோ அல்லது சுடுகாட்டிலோ இருக்காது. எப்பவுமே கோவில்கள், ஆலயங்கள் என வழிபாட்டுத் தலங்களை அண்டியே சுற்றிய படி இருக்கும். சிலநேரம் பாழடைந்த கட்டடங்களை அண்டியும் இருக்கும்.

3.பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல. விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும்.

4.பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல விரும்பாதவ்ரகள் தான் கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக சுற்றும்.

5.பேய்கள் உறங்குவதில்லை. தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும் வரை அலைந்தபடியே இருக்கும்.

6.பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள் எதிர்காலம் நன்றாகவே தெரியும். சில நேரங்களில் அவை கனவுகளின் மூலம் வெளிப்படுத்த முயற்சி செய்யும்.

7.பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காணமுடியும். உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக் கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம்.

8. பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உணர்ச்சிகள் (feelings) உண்டு. ஆனால் உணர (sense) முடியாது.

9.பேய்கள் அல்லது ஆவிகள் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அல்லது தன் சாவுக்கு காரணமானவர்களுக்கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக் கொள்ள முயற்சிக்கும்.

10.பேய்கள் அல்லது ஆவிகளால் கொலை செய்ய முடியாது. ஆனால் ஒருவன் தன்னைத்தானே கொலை செய்யும் அளவுக்கு தூண்டி விடும் சக்தி உண்டு.

11. பேய்கள் அல்லது ஆவிகளால் தரையை கால்களால் தொட முடியும். கைகளாலோ அல்லது உடலின் வேறு பகுதிகளாலோ அல்ல. எனவே தான் உங்களால் அவைகளின் காலடி ஓசையை கேட்க முடியும்.

12.பேய்கள் அல்லது ஆவிகளால் ஒரு மனித உடலில் புகுந்து மற்றொருவருடன் தகவல் தொடர்பு கொள்ள முடியும்.

13.பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்கள் மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள் வீட்டில் அருகில் இருக்க முடியும்.

14.பேய்கள் அல்லது ஆவிகள் இறந்து போனவரின் உடலை அடக்கம் செய்யும் வரை அவர்களை பற்றி யார் பேசிக் கொண்டு இருந்தாலும் அருகில் நின்று கேட்கும் குணம் உண்டு.

15. பேய்கள் அல்லது ஆவிகளை சாதாரணமாக் காணக்கூடியவர்களின் இரத்த பிரிவு (Blood Group) ‘O’ (+) அல்லது O’ (–) ஆக இருக்கும். மற்றவகை இரத்த பிரிவு உள்ளவர்களின் கண்களுக்கு தெரிவது அபூர்வம்.

16.குழந்தைகளாக இறந்து போயிருந்தால் பேய்கள் அல்லது ஆவிகள் தேவதைகள் என அழைக்கப்படுவார்கள்.

17.பேய்களால் சும்மா இருக்க முடியாது. எப்பொழுதும் தங்கள் மேல் கவனம் இருக்க வேண்டும் என்பதற்காக மற்றவர்களை தொந்தரவு செய்த படியே இருக்குமாம்.

18.பேய்கள் எப்போதுமே தாங்கள் இறந்து விட்டதாக நினைப்பது இல்லை. எதாவது ஒன்றை செய்து தான் இறக்கவில்லை என்பதை நிரூபிக்க முயற்சிக்கும்.

19.பேய்கள் பல்வேறு விதங்களில் மனிதர்களுடன் தொடர்பு கொள்ளுகின்றன.. கனவுகள், மர்ம குறியீடுகள், தானாக எழுதுவது, சத்தம், புகை, போன்ற பல்வேறு வகையான தந்திரங்களை பயன்படுத்துகின்றன.

20.பேய்களுக்கு வாசனை மோப்பசக்தி அதிகம். சில வாசனைகளை அவைகள் நுகர்ந்த்து அது பிடித்து விட்டால் அங்கே தன்னை இருக்க வைக்க முயற்சிக்கும். சில வகை பெர்ஃபியூம் வாசனைகளும் ரொம்ப பிடிக்கும்.

21. பேய்களுக்கு நேரம் காலம் தெரியாது என்றாலும், நள்ளிரவு நேரங்களில் பகலை விட கூடுதலாக அலையும். எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், சத்தங்கள் இருந்தால் பேய்கள் வராது என்று நினைப்பவர்களும் உண்டு. ஆனால், பேய்களால் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் வேகத்தையும், அதன் இயக்கத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் சக்தி நிச்சயமாக உண்டு.

22.அமைதியான இடம், நிசப்த்தமான இடங்கள், நேரங்களில் திடீரென சத்தத்தை உண்டாக்கி திகிலூட்டுவது பேய்களுக்கு பிடித்த விசயம்.

23.பேய்கள் ஒளிக்கீற்று, அமானுஷ்யக் கோடுகள், மூடுபனி, புகார், கருநிழல், நிழலுக்குள் நிழல், மங்கலான தெரிவது, கரு உருவம், காற்றுத் தூசிகள், காற்று சலங்கை சத்தம், பெண்குரல் சிரிப்பு போன்றவைகள் மூலம் தங்களை வெளிப்படுத்துகின்றன. முழு உருவத்தையும் எப்பொழுதும் வெளிப்படுத்துவது இல்லை. ஆனால் சாத்தியம் உண்டு.

24.கூட்டமாக வருபவர்களுக்கு பேய்கள் தன்னை வெளிப்படுத்த விரும்புவதில்லை. அதில் ஒரு ஆளை தேர்ந்தெடுத்து அவரை மட்டுமே பின்தொடர்ந்து செல்லும்.

25.பேய்கள் குழந்தைகள், அல்லது பெண்கள், ஆண்கள் உடலுக்குள் நுழைய முடியும். பேய்களுக்கு நிறை அதிகம் என்பதால் அவைகளுக்கு நிறைய சக்தி தேவை என்பதால் பீடிக்கப்பட்டவர்கள் அதிகமாக சாப்பிடுவார்கள். நிறைய சக்தியை உறிஞசி விடுவதால் பீடிக்கப்பட்டவர்கள் நாளடைவில் மெலிந்து போவார்கள்.

26.பேய்களுக்கு ஞபாக சக்தி அதிகம். வாழும் காலத்தில் நடந்த உணர்வுப் பூர்வமான விடயங்களை , சம்பவங்களை அடிக்கடி நினைத்து பார்க்குமாம். ஆனால், சாவுக்கு காரணமான சம்பவம் தான் அதிகம் நினைவில் நிற்கும். பழிவாங்கும் எண்ணம் ஏற்பட அதுவே காரணமாகும்.

27.குழந்தைகள், மிருகங்களால் பேய்களை அடையாளம் காணமுடியும். மிருகங்களின் மீதும் பேய்கள் இறங்கி அவைகளை தாறுமாறாக செயல்பட வைக்க முடியும்.

28. பேய்களுக்கு உதவி செய்யும் குணம் உண்டு. பல சந்தர்ப்பங்களில், குழந்தைகள் முதல் பெரியவர்களை காப்பாற்றி இருப்பதை நீங்களே கேள்விப்பட்டிருப்பீர்கள். பேய்ப் பிடித்தவருக்கே பல சமயங்களில் உதவி செய்த சம்பவங்களும் உண்டு. அவர் குடும்பத்தினரை கூட ஆபத்துகளில் காப்பாற்றியிருக்கிறது. புதையல்கள், கொலைகளில் துப்புகளை கூட காட்டிக்கொடுத்தும் இருக்கின்றனவாம்.

29. இருப்பிடத்தை விட்டு வெளியே வராத பேய்களும் உண்டு. ஆனால், அந்த வழியாக யார் வந்தாலும் அவர்களை மட்டும் பயமுறுத்தி வேடிக்கை காட்டும் பழக்கம் பேய்களுக்கு உண்டு.

30.பேய்கள் இடம்பெயரும்பொழுது பயங்கர காற்று, காற்றுச்சுழல், நீர்நிலைகள் அதிருதல், சுழிகள் உண்டாகுதல், மரங்களை முறித்தல், கதவுகள் தானாக அடிபடுதல் போன்றவை ஏற்படுகின்றன...

திக்குத் தெரியாமல் தில்லையில் விசிக திருமாவளவன்.. வெளியான உண்மை நிலவரம்...


https://youtu.be/C266Aciuq5w

Please Subscribe The Channel For More News...

ஆவடி அருகே, 70 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த 7 வயது சிறுவன்...


அவரை காப்பாற்ற முயன்று உள்ளே தவறி விழுந்து வெளியேற முடியாமல் தவித்த முதியவர் இருவரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்...

ஆவடி ஜே.பி.எஸ்டேட், சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரேசன். இவர், வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவருடைய மகன் சந்தோஷ் (வயது 7). அங்குள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான்.

வீட்டின் முன்புற பகுதியில் தரைமட்ட திறந்தவெளி உரை கிணறு உள்ளது. 3 அடி அகலம், 70 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் தற்போது தண்ணீர் இல்லை. நேற்று மதியம் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் சந்தோஷ், எதிர்பாராதவிதமாக 70 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்துவிட்டான்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் துரை(60) என்ற முதியவர், தான் ஏற்கனவே கிணறுகளை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வந்த அனுபவம் காரணமாக சிறுவனை மீட்பதற்காக தனது இடுப்பில் கயிறு கட்டிக்கொண்டு கிணற்றுக்குள் இறங்கினார்.

அப்போது அவரும் நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். பின்னர் அவரால் சிறுவனை மீட்டு மேலே கொண்டு வரமுடியவில்லை. கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவனும், அவனை காப்பாற்ற முயன்ற முதியவரும் உள்ளே விழுந்து மேலே வரமுடியாமல் பரிதவித்தனர். அதற்குள் தகவல் அறிந்து அந்த பகுதியில் பொதுமக்கள் கூட்டம் கூடியது.

இதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்துவந்து இடுப்பில் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி, சிறுவனையும், முதியவரையும் உயிருடன் மீட்டனர்.

கிணற்றில் தவறி விழுந்ததில் சிறுவன் உடலில் லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் இருவரையும் ஆவடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆவடி போலீசார் விசாரித்து வருகின்றனர்...

திமுக ஸ்டாலின் தவாக வேல்முருகன் இருவரின் முகத்திரையை கிழித்து தொங்கவிடும் பேராசிரியர் தீரன்...


https://youtu.be/FkgClYMF4U8

Please Subscribe The Channel For More News...

நாவல் பழம் (நவ்வா பழம்)...


நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.

நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.

அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.

தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.

மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.

நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்., எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில் அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்...

பாமக அன்புமணியுடன் இணைந்து நீர் மேலாண்மை பற்றி பேசும் எடப்பாடி பழனிசாமி...


 https://youtu.be/F2sX55RHDQE

Please Subscribe The Channel For More News...

பூசணி - அதிசயத்தின் உச்சம்...


ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா? முடியும் என்கிறது நம் தமிழ் செய்யுள்.

"கணக்கதிகாரம்" கொறுக்கையூரைச் சேர்ந்த காரி நாயனார் என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல்.

"கீற்றெண்ணி முத்தித்துத் கீழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல்"

ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு, ஐந்து இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை "அ" என்க.
பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90அ" ஆகும் அதை பாதியாக்கினால் கிடைப்பது "45அ" ஆகும். அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது "135அ" ஆகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை அ=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஐ ஆறால் பெருக்க கிடைப்பது 810 ஆகும். எனவே பூசணியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்...

பாஜக மோடி தன் நண்பர் ரிலைன்ஸ் நிறுவனர் அனில் அம்பாணிக்கு 1100 கோடி வரிச்சலுகை அதிர்ச்சி தகவல்...


https://youtu.be/c-v7RUCtWpM

Please Subscribe The Channel For More News...

எண்ணமும் பிணியும்...


நல்ல ஆரோக்கியமான உணவு, முறையான வாழ்வியல்முறை மற்றும் உடற்பயிற்சி மட்டும் நோயை தீர்த்துவிடாது.

ஒருவரின் எதிர்மறை எண்ணமும், மனஉளைச்சலும் தான் அவருடைய உடல் நலனை 70% வரை பாதிக்கிறது.

மனதை சரி செய்யாமல் என்ன வகை மருந்து எடுத்தாலும் அது உங்களுக்கு வேலை செய்யாது.

எதிர்மறை எண்ணங்களும், மனஉளைச்சலும் ஏற்படுத்தும் உடல் நலக்குறைவின் பட்டியல்...

1. பொறாமை குணம்...

அணைத்து வகையான கேன்சர் நோய்களை வரச்செய்யும்.

உடலின் நோய் எதிர்பாற்றலை குறைத்து விடும்.

2. சினம், எரிச்சல், கோபம் கொள்பவர்கள்...

மூச்சுக்குழாய் மற்றும் சுவாச பிரச்சனைகள் ஏற்படுத்தும்.

3. பழிவாங்கும் குணம்...

தொண்டை பகுதியை பாதிக்கப்படுத்தும்.

தூக்கமின்மை கோளாறு ஓங்கும்.

4. பிடிவாத குணம்...

ஒற்றை தலைவலி, அடிக்கடி கடுமையான தலைவலி ஏற்படுத்தும்.

கை கால் வீக்கம் ஏற்படுத்தும்.

உடலில் அடிக்கடி கட்டியை தோன்றுவிக்கும்.

நீரிழிவு நோயை உண்டாக்கும்.

5. ஒழுக்கமின்மை...

தொற்றுநோய்க்கு ஆளாகி, தோல் நோயால் பாதிக்கபடக்கூடும்.

நீண்டநாள் சரி செய்ய முடியாத நோய்க்கு ஆட்படுவார்கள்.

6. விரோத குணம்...

உணவு செரிமானமின்மை, நெஞ்செரிச்சல், குடல் புண், குடல் ரணம் ஏற்படுத்தும்.

7. ஏமாற்றும் குணம்...

போதைக்கு அடிமையாதல், ஒட்டுண்ணி தொற்று, அழற்சி ஏற்படுத்தும்.

உடலின் நோய் எதிர்பாற்றலை குறைத்து விடும்.

8. முரட்டுகுணம், மனிதாபிமானமற்ற, இரக்கமற்றத்தனம்...

இரத்தசோகையை ஏற்படுத்தும்.

காசநோய் ஏற்படுத்தும்.

கால்-கை வலிப்பு (epilepsy) தோன்றும்.

9. கூச்சசுபாவம், அதிகம் பேசாத குணம்...

சிறுநீரகம் பாதிப்படைகிறது.

மனநலம் பாதிப்படைகிறது.

10. சர்ச்சை ஏற்படுத்தி சண்டையிடும் குணம்...

THYROID சுரபி பிரச்சனையை அதிகமாக்கும்.

11. அலட்சியகுணம், உற்சாகமின்மை.

நீரிழிவு நோயை உண்டாக்கும்.

12. உணர்ச்சிவசப்படக்கூடிய குணம், நிலையான சிந்தனை இல்லாமை...

ஆணோ/பெண்ணோ இருவருக்கும் மலட்டுதன்மையை ஏற்படுத்தும்.

13. துஷ்பிரயோகம், பண்பற்ற பலவந்தப்படுத்தும் குணம்...

அணைத்து வகையான இருதய கோளாறுகளையும் ஏற்படுத்தும்.

நீரிழிவு நோயை உண்டாக்கும்.

14. பொருளாசை, பேராசை அடையும் குணம்...

உடலில் ரத்தகட்டிகள், கருப்பையில் நீர்க்கட்டிகள் உண்டாக்கும்.

உடல் பருமனை ஏற்படுத்தும்.

அணைத்து வகையான இருதய கோளாறுகளையும் ஏற்படுத்தும்.

15 கவலை, பயந்தசுபாவம், பதற்றகுணம்...

சரும நோய்களை ஏற்படுத்தும்.

அணைத்து வகையான இருதய கோளாறுகளையும் ஏற்படுத்தும்.

குடல் செரிமானம் சமந்தப்பட்ட அணைத்து கோளாறுகளையும் வரச்செய்யும்.

நல்லெண்ணத்தை வளர்த்தால், நலம் தானே தேடிவரும்...

இந்திய நாடாளுமன்ற தேர்தல் இறுதிகட்ட கருத்து கணிப்பு நூலிழையில் பாஜக மெஜாரிட்டி பெறும் அதிரடி தகவல்...


https://youtu.be/OyIeCgldmMg

Please Subscribe The Channel For More News...

சீனியின் (சக்கரை) உபயோகமும் அபாயமும்...


உங்கள் சட்டைக் கழுத்துப்பட்டையில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா?

கவலைப்படாமல் அரை தேக்கரண்டி சீனியை எடுத்து தேய்த்துப்பாருங்கள். நிச் சயமாகப்போய்விடும்.

ஆக, சட்டை அழுக்கைப்போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் சீனி என்ற பெயரில் அன்றாடம் அள்ளி அள்ளித்தின்று கொண்டிருக்கிறோம். விடாத மை அழுக்கையே சில நொடிகளில் போக்கும் இந்த சீனியை சலிக்காமல் தினந்தோறும் உட்கொள்ளும் நமது குடல் என்ன பாடுபடும்? என்ற நமது சிந்தனையை சீனியின் இனிப்பு சுவை மழுங்கடித்து விடுகிறது என்ற அதிர்ச்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது..

இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் டீ, கோப்பியில் இருந்து இரவு படுக்கச்செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனியும் நமது அன்றாட உணவினூடே ஒரு ஊடுபொருளாக நமது குடலுக்குள் செல்கிறது.

இது தவிர, கிலோ கிலோவாக இனிப்பு தின்பண்டங்களை தின்று தீர்ப்பவர்களும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

’இல்லாத ஊருக்கு இலுப்பம் பூதான் சர்க்கரை’ என்ற முதுமொழிக்கு ஏற்ப, இலுப்பம் பூவைப் போன்று வெள்ளை வெளேர் என்று சிரிக்கும் சீனியை, ஆலைகளில் எப்படி தயாரிக்கிறார்கள்? என்கிற விபரத்தை முழுமையாக தெரிந்து கொண்டவர்கள் அதைத் தொடக்கூட ஒன்றுக்கு இரண்டு முறை யோசிப்பார்கள்..

இந்த வெள்ளை சீனியை தயாரிக்க என்னென்ன வகையான ரசாயன‌ப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன? என்பதை பார்ப்போம்..

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் புளுயுடு பாக்டீரியாவை கட்டுப்படுத்த பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது..

2. பிழிந்தெடுக்கப்பட்ட கரும்பு சாற்றுடன் 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரேட் கொதிநிலையில், ஒரு லிட்டர் கரும்பு சாற்றுடன் 200 மில்லி பாஸ்போரிக் ஆசிட் வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த கட்டத்தில் பாஸ்போரிக் ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது..

3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்தப்படுகிறது..

4. 102 சென்டிகிரேட் வெப்பநிலை கொண்ட கொதிகலனில் சூடுபடுத்தப்படும் இந்த சாறு தன்வசம் தேக்கி வைத்திருந்த நல்ல விட்டமின்களை இழக்கின்றது: எதிர் வினையாக, அளவுக்கு அதிகமான செயற்கை சுண்ணாம்பு சத்து கூடி விடுகிறது..

5. அடுத்த கட்டமாக, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் இட்டு மண், சக்கை போன்ற பொருள்களை தெளிய வைத்து, வடிகட்டி, பிரித்து எடுத்த பின்னர் தெளிந்த சாறு கிடைக்கிறது..

6. மீண்டும் கொதிகலனில் இட்டு காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து, நீர்த்துப் போய் கிடக்கும் கரும்பின் சாறு அடர்த்தி மிக்க சர்க்கரை குழம்பாக உருமாற்றப்படுகிறது..

7. அதன் பின்னர், சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்கப்பட்டு, படிக நிலையில் கற்கண்டாக சர்க்கரை மறுபிறவி எடுக்கிறது. இந்த மறுபிறவி காலத்தில் சல்பர் டை ஆக்சைடு எனப்படும் மெல்லக் கொல்லும் நஞ்சு, ஒவ்வொரு துளி சர்க்கரையிலும் பரவி, கலந்து விடுகிறது..

8. இவ்வாறு தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே. அதனால் தான், தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சர்க்கரையை பயன்படுத்த கூடாது என நமது முன்னோர்கள் வலியுறுத்தி வந்தனர்..

9. தயாரிக்கப்பட்டு ஆறு மாத காலத்தை கடக்கும் போது சர்க்கரையில் உள்ள சல்பர் டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது..

இதன் விளைவாக, குடல் சார்ந்த நோய்கள் மட்டுமன்றி, பல் வலி, பல் சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் போன்ற கொடிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது..

எனவே, ஆலைகளில் தயாரான வெள்ளை சர்க்கரையின் பயன்பாட்டை குறைத்துக் கொண்டு, வெல்லம், பனை வெல்லம், நாட்டுச் சர்க்கரை போன்றவற்றை தாராளமாக பயன்படுத்தி மேற்கண்ட நோய்களின் தாக்கத்தில் இருந்து விலகியே இருப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நாம் ’இனிதாக’ மேற்கொள்ள முடியும்...

டிடிவி தினகரன் கட்சியில் நடிகர் விவேக்.. அனலை கிளப்பும் அமமுக...


https://youtu.be/o0t9NtSdp9s

Subscribe The Channel For More News...

சாதி சண்டைகள் ஏன் எப்போதும் தமிழ் சாதிகளுக்கு உள்ளே நடக்கிறது?


அருந்ததியினர் மீது மிக கொடூரமாக இன்றும் தீண்டாமை கடைபிடிப்பது நாயுடு, ரெட்டி போன்ற மக்களே....

இவர்களை பற்றியோ, நாயுடு ஆதிக்க சாதி வெறி என்றோ திராவிடம், தமிழ் சாதி பிரச்சனைகளை பேசும் அளவுக்கு பேசாமல் மறைப்பது ஏன்?

அப்படி மறைக்க நினைக்கும் உங்கள் நோக்கம் என்ன?

தமிழர்கள் சாதி வெறி பிடித்தவர்கள், தெலுங்கர்கள் அப்படி அல்ல என்று மக்கள் மனதில் பதிய வைப்பது தானே...?

இது நாள் வரை மேற்ப்படி திராவிடம் சாதி பாகுபாடு பார்க்காமல், அனைத்து சாதி வெறி உணர்வையும் கடித்து வந்துள்ளது, பள்ளர் பறையர் என எல்லாருக்கும் போராடியது என்று கூறி வந்ததன் நோக்கம் போலித்தனம் இல்லையா?

மட்டன் சுக்கா / Mutton chukka வீட்டிலே செய்வது எப்படி.?


 https://youtu.be/Ws9FWvt0RmI

Please Subscribe The Channel For More Recipes...

தமிழர் நாடு... தமிழர் தேசியம்...


1800 ஆண்டு காலமாகத் தமிழரின் நாட்டை தமிழர்களால் ஆள முடியவில்லை என்பதை ஏதோ எக்குத்தப்பாக நடந்துவிட்டது என்று தட்டிக் கழிக்க முடியாது...

ஓர் அங்குல நிலம் கூட இல்லாத யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாட்டை அமைத்துக் கொள்ள முடியுமென்றால்...

அமெரிக்க வல்லாதிக்க வெறியிலிருந்து உலகின் பல நாடுகள் திமிறிக் கொண்டு விடுதலை பெற்றுக் கொள்வது சரியென்றால்...

சோவியத் ஒன்றியத்திலிருந்து தேசிய இனங்கள் விடுதலை பெற இயலும் என்றால்...

சீனாவிற்கு எதிரான திபத்தியர்களின் போராட்டத்தில் ஞாயம் இருக்கிறது என்றால்..

உலகில் வாழும் பன்னிரண்டு  கோடித் தமிழர்களுக்கென்று ஒரு நாடு அமைவது எந்த விதத்தில் ஞாயமற்றதாக இருக்க முடியும்?

ஜிடிபி (GDP) எனும் மாயை...


எங்கு சென்றாலும் ஜிடிபி வளர்ச்சி, ஜிடிபி வளர்ச்சி என்று சதா மக்கள் பிதற்றுகிறார்கள். ஆனால் அதைப் பற்றிப் பெரும்பான்மை யானவர்களுக்குப் புரிதல் இருப்பதில்லை. உண்மையில் ஜிடிபி நம்மை நச்சு கலந்த உணவை நோக்கித் தள்ளுகிறது.

ஒரு மரம் உயிருடன் நின்று கொண்டிருந்தால் அதனால் ஜிடிபி வளர்ச்சி இருக்காது. ஆனால், அதே மரம் வெட்டப்பட்டு ஒரு பொருள் செய்து பணம் ஈட்டினால் ஜிடிபி வளரும். ஒரு கார் வாங்கினால் ஜிடிபி வளரும். அதே காரை பெட்ரோல் போட்டு அடிக்கடி ஓட்டினாலும் ஜிடிபி வளரும்.

ஏனென்றால் பொருளாதார அறிஞர்கள், 'நுகர்வு, வளர்ச்சிக்கு வழிகோலும்' என்கிறார்கள். சிலர் நாட்டின் ஜிடிபி மேலும் வளர சிக்னலில் சிவப்பு விளக்கின் நேரம் அதிகப்படுத்தப்பட வேண்டும் என்கிறார்கள். இதனால் அதிக காற்று மாசுப்பட்டு அதனால் நாம் நோய்வாய்ப்பட்டால், மருத்துவரிடம் செல்வோம். ஜிடிபி வளரும். மருந்து வாங்குகிறோம். ஜிடிபி வளரும்.

அதேபோலதான், சுத்தமான நதி ஜிடிபிக்கு ஆபத்தானது. சுத்தமான நதிகள் இந்தியாவில் இல்லை என்பது வேறு கதை. அசுத்தமான நதிகளே ஜிடிபியை வளர்க்கும். நதியைச் சுற்றி நிறுவனங்கள் இருந்தால், அதனால் பொருள் ஈட்டப்பட்டு ஜிடிபி வளரும். நிறுவனங்கள் கழிவுகளை நதியில் கலப்பது பிரச்சனை இல்லை. அதற்காக 10,000 கோடி ரூபாயில் சுத்தப்படுத்தும் திட்டம் போடப்பட்டால் மறுபடியும் ஜிடிபி வளரும். இதுதான் ஜிடிபி வளர்ச்சியின் அடிநாதமாகத் திகழ்கிறது.

சுத்தமான, தரமான உணவு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். ஆனால் அது ஜிடிபிக்கு எதிரானது. ஆனால் நச்சான உணவுதான் ஜிடிபி வளர்ச்சிக்கு உதவும். அதனால்தான் உணவை நச்சாக்குவது பொருள் ஈட்டுவதற்கு உதவும். நச்சு கலந்த உணவு நமக்கு நோயைத் தரும். அதனால் மருந்துகள் வாங்குவோம். மருந்துகள் வாங்கப்படுவதால் ஃபார்மா நிறுவனங்கள் வளரும். ஜிடிபியும் வளரும். நோய்க்கு ஆளாவதால் காப்பீட்டு நிறுவனங்கள் நோக்கித் தள்ளப்படுவீர்கள். காப்பீட்டு நிறுவனங்கள் வளர்ந்து மறுபடியும் ஜிடிபி வளரும். இது இங்கு மட்டும் நடக்கும் விஷயம் அல்ல. சர்வதேசப் பொருளாதாரம் இப்படித்தான் வளர்ச்சி கண்டு வருகிறது.

இப்பவும் ஜிடிபி வளர்ச்சினு சொன்னீங்கனா உங்கள் சந்ததியினர் வாழ இங்கு எதுவும் இருக்காது...

முதன் முதலாக மனிதர்களை நேசிக்க கற்று தந்தவர்கள் தான் இந்த இயற்கை...


ஓவ்வொரு இடத்திலும் ஓவ்வொரு செயலிலும் மனிதனுடன் பயணிக்கும் ஒரு தாய் தந்தைதான்  இந்த இயற்கை...

மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை மனிதர்கள் உயிர் வாழ வழி செய்வதும் இந்த இயற்கை தான்...

இயற்கை ஒருபோதும் கை விடுவதில்லை.. மனிதனை தவிர...

தமிழர் நாட்டில் வந்தேறிகள்...


தமிழர் நாட்டில் இன்று வரை தமிழர்களுக்கு வேலையில்லாத நிலை இருந்து வருவதன் காரணம் வந்தேறிகள் நிலையாக இங்கே தங்கிவிட்டது தான்...

தமிழர்கள் தான் பிறந்த மண்ணை விட்டு வெளி இடங்களுக்கு வேலை தேடி போகும் நிலையும், அல்லது உள்ளூரிலேயே கூலிகளாக இருக்கும் நிலையும் கவலைக்கிடமானது...

தமிழர்கள் இட ஒதுக்கீட்டு மாயையில் வந்தேறிகளை வாழ வைத்தும் ஆள வைத்தும் அழகு பார்ப்பது கேவலமான ஒன்று..

தொல் தமிழர்களை ஆதி திராவிடர்கள் என்றாக்கி , வந்தேறி சக்கிளியரை ஆதி தமிழர் என்றும் , அருந்தமிழர் என்றும் கூறி நமது உரிமைகளை அவர்களுக்கு பங்கிட்டுவிட்டு மிச்சத்தை நமக்கே சலுகையாக வழங்குவதும் , அதுவும் கிடைக்காத நிலையில் அதற்காக தமிழ் தேசிய தலைவர்கள் போராடுவதும் அசிங்கமல்லவா ?

ஆள வேண்டிய தமிழினம் அகதியாக திரிவதும், சலுகைகளுக்காக ஏங்குவதும் நியாயமா ?

தமிழா சிந்திப்பீர்...

டிடிவி தினகரன் தேர்தலை முடிக்க புதிய ரூட்...


https://youtu.be/qD4TtQLoPfc

Please Subscribe The Channel For More News...

திருக்கோவிலூர் அருகே பள்ளி மாணவிகளை ஆபாச படம் எடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது...


விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஜம்பை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 49 வயதான கனநாதன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் பயிலும் மாணவிகளை தனது செல்போன் மூலமாக தொடர்ச்சியாக ஆபாசமாக படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவி ஒருவரை தனது செல்போன் மூலமாக கணநாதன் ஆபாச படம் எடுத்துள்ளார்.

இதனை அம்மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனடிப்படையில் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினர், ஆசிரியரின் செல்போனில் மாணவிகளின் ஆபாச படம் இருந்ததை கண்டறிந்தனர். அந்த படங்களை அழித்த காவல் துறையினர் ஆசிரியர் கணநாதனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்...

என்னுடன் விவாதம் நடத்த தயாரா.? வசமாக சிக்கிய உதயநிதி ஸ்டாலின்...


https://youtu.be/r5h6UPnbgHQ

Please Subscribe The Channel For More News...

தமிழகத்தில் இரண்டு பொய் தேசிய மாயைகள் கட்டியமைக்கப்பட்டுள்ளன...


ஒன்று நாம் எல்லோரும் இந்தியர், நம்நாடு இந்தியா என்றும், இதற்கு மாறாக மற்றொன்று நாம் எல்லோரும் திராவிடர், நம்நாடு திராவிட நாடு என்பதாகும்.

உண்மையில் நாம் இந்தியரா? அல்லது திராவிடரா? இது புலியை நாய் என்றும் அதற்கு மாறாக பன்றி என்றும் வாதிடுவதற்கும் கீழானதாகும். முதலில் ஒரு தேசிய இனம் என்றால் என்ன?

ஒரு குறிப்பிட்ட நிலப் பரப்பில் ஒரு பொதுவான பண்பாடு, மற்றும் பொருளாதார வாழ்வுடன் ஒரு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு கூடி வாழும் குமுகம் தேசிய இனம் என்று வரையறுக்கப்படுகிறது. ஒரு தேசியம் ஒரு மொழியின் அடிப்படையிலேயே அமைகிறது.

இதில் எந்தப் பண்புகளும் இன்றி போலித் தேசியமும், (இந்தியா) போலித் தேசிய இனக் (திராவிட இனம்) கோட்பாடும் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. இதன் உள் நோக்கம் தான் என்ன?