10/12/2018

சம்பந்தர் போற்றும் மாசி மகம்...


மாசி மக நன்னாள் கடலாடும் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

புனிதமான இந்தத் திருநாள் அன்று கடலில் நீராடுவது விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

இதன் பெருமையை திருஞானசம்பந்தர் இந்தப் பாடலில் சொல்கிறார்...

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
அடல் ஆணேறு ஊரும் அடிகர் அடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்...

ஆணவப் படுகொலையால் பாதித்த உடுமலை கௌசல்யா கோவையில் பறை இசைக்குழு நடத்திவரும் சக்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்...


சிபில் கார்த்திகேசு...


சிபில் கார்த்திகேசு (Sybil Kathigasu, 1899-1948) மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு தமிழ்ப் பெண்மணி..

இரண்டாம் உலகப் போரின் போது பல நூறு சீனர்களின் உயிர்களைக் காப்பாற்றியவர்..

ஜப்பானியப் படையினரை எதிர்த்துப் போராடியவர்..

மலேசியாவின் நட்பு படைகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்..

இங்கிலாந்து மற்றும் காமன்வெல்த் நாடுகளின் இரண்டாவது உயரிய விருதான 'ஜார்ஜ் பதக்கம்' பெற்றவர்..

மலேசியாவில் உள்ள சீனர் சமுகம் இவரை ஒரு தியாகி என்று போற்றுகின்றது..

ஈப்போ மாநகரின் முக்கிய சாலைக்கு இவருடைய பெயர் சூட்டப்பட்டு உள்ளது...

விழித்துக்கொள் தமிழினமே...


புகையிலை வியாபாரி தெலுங்கர் வைகோ நாயூடுவே...


ஒவ்வொரு சிகரெட்டும் உங்களின் ஆயுளில் 11 நிமிடங்கள்...

1.ஒவ்வொரு பத்து விநாடிகளுக்கும் ஒரு மனிதன் சிகரெட்டினால் மரணடைகிறான்.

2. சிகரெட்டின் கழிவுகள் மண்ணில் மக்குவதற்கே 25 வருடங்கள் ஆகுமாம். (மக்கா ஜாக்கிரதை).

3. நீங்கள் புகைக்கும் பிடிக்கும் ஒவ்வொரு சிகரெட்டும் உங்களின் ஆயுளில் 11 நிமிடங்களை குறைத்துவிடுமாம்.

4. பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முன்னால் ஆங்கிலத்தில் சிகரெட் என்ற வார்த்தை கிடையாது. அதற்கு முன்பெல்லாம் சிகரட் போன்ற பானங்களை குடிப்பார்களாம். அதாவது பருகும் சிகரெட்.

5. மருத்துவ காரணங்களுக்காக கி.பி. 1559-ல் பிரான்சில் உள்ள பிரெஞ்சுத்தூதர் நிகோட் என்பவர்தான் இந்த நிகோடினை கண்டு பிடித்தார். (இப்படில்லாம் ஆகுமுன்னு தெரிஞ்சிருந்தா கண்டு பிடிச்சுருக்கமாட்டார் இல்ல).

6. தென் அமெரிக்க மக்கள் புகையிலையை 2000 வருடங்களுக்கு முன்பே உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் பிரேசில்காரர்கள்தான் இந்த சிகரெட்டை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர்கள்.

7. முதன் முதலில் இதை பிரபலமாக்கியவர்கள் ஐரோப்பிய மாலுமிகளே.

8. உலகிலேயே அதிகம் சிகரடெ; புகைப்பவர்கள் கிரீஸ் நாட்டுக்காரர்கள்தான். அங்கு வயதுக்கு வந்த ஒரு வாலிபன் வருடத்திற்கு 3000 சிகரெட்டுகளை புகைத்துத் தள்ளுகிறானாம். (நீங்க எப்படி?)..

கன்னியாகுமரியில் புதிதாக அமையவிருக்கும் திருப்பதி ஏழுமலையான் ஆலயம்...


16 லட்சம் பணத்தை சாப்பிட்ட ஏப்பம் விட்ட ஆடு.. கோபத்தில் சமைத்து சாப்பிட்டு பழிதீர்த்த குடும்பம்...


செர்பியாவின் அரன்ஜெலோவாக்  அருகே உள்ள ரனிலோ விக்  என்ற கிராமத்தை சேர்ந்த சிவிக் இன குடும்பம் விவசாயம் செய்து வசித்து வருகிறது.

இந்த விவசாய குடும்பத்தினர் புதியதாக 10 ஏக்கர் நிலம் வாங்க ரூ 16 லட்சம் மதிப்பிலான பணத்தை வைத்திருந்தனர். நிலம் வாங்க வைத்திருந்த பணத்தை மேஜை மீது வைத்து விட்டு கதவை மூடாமல் தோட்டத்திற்கு சென்று விட்டனர்.

இந்த சூழலில் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு, வீட்டிற்குள் புகுந்த மேஜை மீது வைக்கப்பட்டிருந்த பணத்தை சாப்பிட்டு பசியை தீர்த்து கொண்டது.

திரும்பி வந்து  பார்த்த போது பணத்தை காணாமல் அதிர்ச்சி அடைந்தது சிமிக் குடும்பம். பின்னர் வெளியில் வந்து பார்த்த போது ஆட்டின் வாயில் பணத்தின் துகள்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

ஆடு மொத்த பணத்தையும் தின்று விட்டதே என்ற ஆத்திரம் ஏற்பட்டது. எனவே அந்த ஆட்டை கொன்று சமைத்து சாப்பிட்டு கோபத்தை தீர்த்து கொண்டது சிமிக் குடும்பம்...

மக்கள் புரட்சி...


740 கோடி பணியில் லஞ்சம் மட்டும் 133 கோடி வருகிறது. இந்த பணம் யாருக்கு போகிறது?


இதை தடுக்க வேண்டிய அதிகாரிகளும் ஆளுங்கட்சி அமைச்சரும் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்? அமைச்சர் வேலுமணி பதில் சொல்வாரா? ஆணையர் கார்த்திகேயன் நடவடிக்கை எடுப்பாரா?

இந்த லஞ்ச பணத்திற்காக ஏற்கனவே நல்ல நிலையில் இருக்கும் சாலைகள் மீது புதிய சாலைகள் போட்டதாக கணக்கு காட்டுவீர்களா?

குறுக்கு வழியில் இப்படி பணம் சம்பாதிக்க ஏற்கனவே கட்டிய மழைநீர் வடிகால்களை புதியதாக கட்டியதாக கணக்கு காட்டுவீர்களா?

இதற்காக தான் கூட்டணி அமைத்து வேறு யாருக்கும் தராமல்  டெண்டர் எடுக்க முறைகேடுகள் செய்கிறீர்களா?

யார் பொறுப்பு?

மலபார் என்பது தமிழே...


கி.பி.1779 இல் மலபார் பாஷை என்று அழைக்கப்பட்ட தமிழ்.

கி.பி.1650 - 1800 ஆண்டுகளில் இலங்கைக்கும் தமிழகத்திற்கும் வந்த அமெரிக்க ஐரோப்பிய பாதிரியார்கள் பைபிளை தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டு வருவதற்கு பெரும் முயற்சிகளை எடுத்துக் கொண்டனர்.

ஆசிய மொழிகளிலேயே தமிழ்மொழியில் தான் முதல்முதலாக பைபிள் மொழி பெயர்க்கப்பட்டது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்.

அத்தகைய முயற்சிகளில் ஒன்றாக தமிழ்ச்சொற்களை சேகரிக்கும் வேலையை செய்தனர்.

தமிழ்மொழியை ”மலபார்மொழி” என்றழைத்தனர்.

அந்தக் காலகட்டத்தில் தமிழ்மொழியில் முதன்முதலாக வெளியிடப்பட்ட அகராதியில் ஒன்றை உங்கள் பார்வைக்கு பதிவிடுகின்றேன்.

குறிப்பு மேல்நாட்டினர் தான் தமிழ்மொழிக்கு அச்சுகலையும் தமிழ் அச்சு எழுத்துக்களையும் உருவாக்கித் தந்தனர்.

அவ்வாறு முதல்முதலாக உருவாகி கொண்டிருந்த அச்சு எழுத்துக்கள் மரக்கட்டைகளில் செய்தவையாக இருந்தன.
அத்தகைய மரக்கட்டை அச்சு எழுத்துக்களில் தான் இந்தநூல் அச்சிடப்பட்டுள்ளது.

மேலும் சில விபரங்கள்...

1577 ல் கிறித்துவ மிஷினரி அம்பலக்காடு (பாலக்காடு மாவட்டம்) அச்சகத்தில் அச்சடித்த முதல் மலையாள நூல் அம்மொழியை மலவார் அல்லது தமிழ் என்கிறது (கால்டுவெல் குறிப்பு).

1679 செப்டம்பரில் கண்டியில் இருந்து தப்பி அனுராதபுரம் வந்த நாக்ஸ் (Knox) என்ற ஆங்கிலேயர் அந்த அனுபவம் பற்றி எழுதிய Captivity and escape of Captain Knox என்ற புத்தகத்தில் மல்வத்து ஓயா ஆற்றைக் கடந்து (தமிழில் அருவி ஆறு) அனுராதபுரத்தை நோக்கி சென்ற போது அங்கே மலபார்கள் (தமிழர்கள்) குடியிருந்ததாகவும், தான் பேசிய சிங்களம் அம்மக்களுக்குப் புரியவில்லை என்றும் பதிவு செய்துள்ளார்.

ஆக, மலபார் (அல்லது மலவார்) என்று தமிழே அழைக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.

படம்: தமிழும் இங்கலேசுமாயிருக்கற அகராதி.
A Malabar and english dictionary
english missinaries madras
first edition 1779
printed vapery...

விசாரணை வருமா? சலுகையில் கிடைத்த வீட்டை விற்ற ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள்.. விலை வேறுபாடு குறித்து விசாரணை வருமா?


நெற்குன்றம் திட்டத்தில், சலுகை விலையில், வீட்டுவசதி வாரியம் வழங்கிய வீட்டை, 15 ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அதிக விலைக்கு விற்றது தெரிய வந்துள்ளது. சிலர் விதிகளை மீறி, வணிக நிறுவனத்திற்கு விற்றுள்ளதும், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சலுகை, வீடு, ஐ.ஏ.எஸ்.,  ஐ.பி.எஸ்., அதிகாரிகள்,  விலை வேறுபாடு, விசாரணை...

ஒதுக்கீடுதமிழக அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு, நெற்குன்றத்தில், சலுகை விலையில், 1,016 வீடுகள் கட்ட, 17 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் பட்டது. அதில், 445 கோடி ரூபாயில், குடியிருப்புகள் கட்டப்பட்டன.

இதில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு, 608 வீடுகள் ஒதுக்கப்பட்டன.இவர்களுக்கு, 2011ல், குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. இதில், ஒதுக்கீடு ரத்தானது, ஒதுக்கப்படாதது என, மீதமிருந்த, 91 வீடுகளை, பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் விலைக்கு வாங்கின. இத் திட்டத் தில், ஒரு சதுர அடி, 2,442 ரூபாய் என்ற குறை வான விலையில், அதிகாரிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டன.

கட்டுமான செலவு அதிகரித்த நிலையில்,
வீடுகள் விலையை உயர்த்தும் வீட்டுவசதி வாரியத்தின் முயற்சி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி களின் கடும் எதிர்ப்பால், கைவிடப்பட்டது. வீட்டுவசதி வாரியத்தின் மற்ற திட்டங்களில், சதுர அடி, 3,000 ரூபாய்க்கு மேல்நிர்ணயிக்கப் பட்ட நிலையில், இங்கு மட்டும் மிக குறைந்த விலையில் வீடுகள் வழங்கப்பட்டன.

மேலும், வேறு எந்த திட்டத்திலும் இல்லாத வகையில், அதிகபட்ச நவீன வசதிகளை வீட்டு வசதி வாரியம் செய்து கொடுத்துள்ளது.விலை வேறுபாடுநட்சத்திர ஓட்டலுக்கு நிகரான வகையில், அனைத்து நவீன வசதிகளையும் உள்ளடக்கியதாக கட்டப்பட்ட இந்த வீடுகள், 2017ல் ஒதுக்கீட்டாளர் களுக்கு ஒப்படைக்கப்பட்டன. வீடுகளை பெற்றவர் களில், பல ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதில் குடியேறு வதை விட, மறு விற்பனையில் ஆர்வம் காட்டுகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி, 15 அதிகாரிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளை விற்றுள்ளனர். 65 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய வீடுகளை மூன்று அதிகாரிகள், ஒரு கோடி ரூபாய்க்கு குறைவாகவும், எட்டு அதிகாரிகள், ஒரு கோடி ரூபாய்க்கு மேலும், நான்கு அதிகாரிகள், இரண்டு கோடி ரூபாய்க்கு மேலும் விலை வைத்து, வீடு விற்பனையை பதிவு செய்துள்ளனர்.

விசாரணை தேவை...

இது குறித்து, வீட்டுவசதி வாரியத்தின் மற்ற திட்டங்களின் விண்ணப்பதாரர்கள் கூறிய தாவது: சுயநிதி முறையில், ஒதுக்கீட்டாளர் களிடம் பணம் வாங்கி கட்டப்பட்ட வீடுகள் என்றாலும், இவை அதிகாரிகளுக்கான சலுகை விலையில் வழங்கப்பட்டவை. சென்னையில், வேறு வீடு இல்லை என்று கூறி, வாங்கிய வீட்டை, அதிகாரிகள் விற்றுள்ளனர்.

விற்பது அவர்களது உரிமை என்றாலும், ஒரே அளவிலான வீடு, வெவ்வேறு விலைகளில் விற்கப்பட்டுள்ளது. விலை பின்னணியில் முறைகேடு எதுவும் நடந்துள்ளதா என்பதை, சம்பந்தப்பட்ட துறையினர் விசாரிக்க வேண்டும். இதில், சில ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், தங்கள் வீட்டை, வணிக ரீதியிலான நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். இது குறித்தும், வீட்டுவசதி வாரியம் விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்...

மக்கள் போடினால் சமூக விரோதிகள்... இப்போது இவர்கள் யார்..?


பார்வையைப் பறிக்கும் ஒளி உமிழும் இருமுனையம்...


கண் பார்வையைப் பறிக்கும் ஒளி உமிழும் இருமுனையம் விளக்குகள் -ஸ்பெயின் ஆராய்ச்சியாளர்கள் தகவல்...

தற்போது மிக அதிகமாக பயன்படுத்திவரும் ஒளி உமிழும் இருமுனையம் (Light emitting diode) விளக்குகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பல ஆண்டுகளாக விலை குறைவான குண்டு பல்புகளைத்தான் மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால், இவை வெப்பத்தை அதிகளவில் உமிழ்வதாகவும், மின்சாரத்தை அதிகளவில் உறிஞ்சுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக ஒளி உமிழும் இருமுனையம் (Light emitting diode) எனப்படும், ‘ஒளி உமிழும் இருமுனையம்’ விளக்குகள் அறிமுகம் ஆனது.

இவை குண்டு பல்புகள் பயன்படுத்தும் மின்சாரத்தில் 5ல் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்துவதாகவும், சுற்றுச்சூழலுக்கு மிக சிறப்பானது என்றும் கூறப்பட்டது. இதனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது. இந்தியாவில் 2009ம் ஆண்டில் 100 வாட்கள் குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், கைப்பேசி, தொலைக்காட்சி என்று பல்வேறு மின்னணு சாதனங்களில் எல்இடி பயன்பாடு அதிகரித்துவிட்டது. தற்போது மக்களிடம் ஒளி உமிழும் இருமுனையம் பல்புகளை பற்றி, மின்சாதன நிறுவனங்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன...

சிறந்த தலைவன் உனக்கு நீ மட்டுமே...


அமைதி மட்டுமே உனக்கு சிறந்த வழி வகுக்கும்..

அமைதியில், இயற்க்கையில், தனிமையில், சிந்தனை செய்..

வழி பிறக்கும்..

கடல் நீரை குடிநீராக மாற்றும் அதிசய நதி...


நமது அன்றாட வாழ்வில் நாம் தினம்தோறும் பயன்படுத்தும் தண்ணீரையே நம்மால் சுத்தமாக பார்த்துக் கொள்வதற்கு பல போராட்டங்களை சந்தித்துக் கொண்டு இருக்கிறோம்.

ஆனால் ஒரு இயற்கையான நிகழ்வு கடல்நீரையே சுத்தம் செய்கிறது என்றால் சற்று வியப்பாககத்தான் உள்ளது .நம் அனைவருக்கும் இதுநாள் வரை கடல் நீர் என்றாலே உப்பு நீர்தான் என்று மட்டும்தான் அறிந்து இருக்கிறோம் .
 
ஆனால் அந்த கடலிலும் நாம் தினம்தோரும் அருந்துவதுபோல் நீர் உள்ளது என்றால் நம்புவீர்களா ?

கடல் நீரில் பொதுவாக உப்பின் அளவு மாறுப்படலாம் ஆனால் மொத்த நீரும் இயற்கையாக நல்ல நீராக மாறுவது என்பது ஒரு அதிசய நிகழ்வுதான் . இந்த அதிசய நிகழ்விற்கு முக்கிய காரணம் ஒரு நதி.

ஒரு நதியின் நீர் பாய்ந்தா கடல் நல்ல நீராக மாறுகிறது என்பது அனைவருக்கும் ஏற்படும் சந்தேகம்தான் எனலாம். ஆனால் இந்த நிகழ்வு உண்மையான ஒன்றுதான் என்று சொல்கிறது பல ஆய்வுகள்.

அந்த நதிதான் அமேசான் நதி 6000 கி. மீ நீளம் விரிந்து பல அதிசயங்களையும் பல மர்மங்களையும் கொண்டு உலகத்தில் மிகப்பெரும் நதியாக ஓடிக் கொண்டிருக்கும்.

இந்த நதியில் மட்டும்தான் உலகத்தில் நல்ல நீரில் ( fresh water ) மூன்றில் இரண்டு பங்கு நீர் ஓடுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த நதி அட்லாண்டிக் கடலுக்குள் கலந்த பின்பும் இதன் தன்மை மாறாமல் 280 கி. மீ தொலைவிற்கு மொத்த கடல் நீரையும் தூய்மையான நீராக மாற்றிக்கொண்டு இருக்கிறதாம்.

இந்த நதி அட்லாண்டிக் கடலுக்குள் 280 கி.மீ தொலைவைக் கடந்தபிறகுதான் உப்பு நீரிடம் போராடி தோற்றுப்போவதாக ஆய்வு கூறுகிறது. அமேசான் அமேசு(ஸ்) என்றாலே ஆச்சர்யம் என்று அர்த்தம் . இப்பொழுதுதான் தெரிகிறது இந்த நதிக்கு அப்படி ஒரு பெயர் வைத்தது பொருத்தமான ஒன்று தான்...

ஊர்க்காவல் படையினர் போராட்டம்...


கச்சத்தீவை வரைபடத்தில் இருந்து நீக்கிய மலையாளி எம்ஜிஆர்...


எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில்...

கச்சத்தீவு தமிழக வரைபடத்தில் இருந்து நீக்கப்பட்ட ஆட்சி.

படம்: 1982 எல்லை மாற்றம் தொடர்பான இராமநாதபுரம் கலெக்டர் உத்தரவு
நன்றி: விகடன்...

புயல் பாதுகாப்பு கட்டிடங்கள் - தமிழகம் முற்றிலும் புறக்கணிப்பு...


மத்திய அரசு இதுவரை கட்டியுள்ள மொத்த புயல் பாதுகாப்பு கட்டிடங்கள் = 567..

இதில் தமிழகத்தில் கட்டப்பட்டவை = 0.

ஆம். இது உண்மை.

ஒரிசா = 312
ஆந்திரா = 218
குஜராத் = 22
மேற்கு வங்கம் = 15

என பிற மாநிலங்களில் கட்டப்பட்டவையுடன் ஒப்பிடும் போது தமிழகத்தைத் திட்டமிட்டு புறக்கணித்திருப்பது புரிகிறது.

இதுமட்டுமல்ல.

இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் 353.

மாநில வாரியாக கீழ் வருமாறு...

மேற்கு வங்கம் = 150
குஜராத் = 112
கோவா = 40
கேரளா = 27
கர்நாடகா = 11
மகாராஷ்டிரா = 13
தமிழகம் = 0

தகவல்களுக்கு நன்றி...
விகடன் செய்தி 02.12.2018...

மேற்கண்ட இரு பட்டியல்களில் புயலையே பார்க்காத மாநிலங்கள் கூட  உண்டு.

பிற மாநிலங்களை விட வரி என்கிற பெயரில் அதிகம் கொள்ளை போவது தமிழக பொருளாதாரம்.

ஆனால் தமிழகத்தை மட்டும் தவிர்த்து விட்டு நடுவணரசு உலக வங்கியின் நிதியுதவியுடன் பாதுகாப்பு கட்டிடங்கள் கட்டி அதற்கு சாலைகளும் போட்டு தருகிறது.

நீலம், வர்தா, ஒகி, கஜா என வரிசையாக புயல் தாக்குவதோ தமிழகத்தை.

ஆனால் பாதுகாப்பாக இருப்பது மற்ற மாநிலங்கள்.

தமிழர்களின் உயிருக்கே இங்கு மதிப்பில்லை.

இது திட்டமிட்ட இனப்படுகொலை அன்றி வேறென்ன?

பாஜக வின் பசு பாதுகாப்பு உண்மைகள்...


வெட்டுவான் கோயில்...


வெட்டுவான் கோயில் இருக்கும் மலை, அரைமலை என்னும் பெயரால் முன்பு அழைக்கப்பட்டுள்ளது. மலைமீது ஒற்றைக் கற்கோயிலாக வெட்டுவான் கோயில் உருவாக்கப்பட்டுள்ளது.

பாண்டிய மன்னர்களால் 8ஆம் நூற்றாண்டில் இது செதுக்கப்பட்டுள்ளது. அழகிய சிற்பங்களைக் கொண்ட இக்கோயில் முழுமையாக செதுக்கப் படவில்லை.

கோயில் பணி நிறைவடையாமல் விடுபட்ட நிலையில், தற்போது பிள்ளையார் சிலை ஒன்று பிரதிட்டை செய்யப்பட்டு வணங்கப்படுகிறது. ஒரு பாறையின் மேல், உட் பகுதியை வெட்டி, நடுவில் உள்ள பகுதியைக் குடைந்து இக்கோயில் உருவாக்கப்பட்டதால் இக்கோயிலுக்கு வெட்டுவான் கோயில் என்று பெயர் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த கோயிலை வெளியில் இருந்து பார்க்கும் போது வெறும் பாறை போல் தான் தெரியும். அதற்குள் இருக்கும் அழகான கோயிலை உள்ளே சென்றுதான் பார்க்க முடியும்.

வெட்டுவான் கோயிலில் இருக்கும் சிற்பங்கள் மிகவும் எழில் வாய்ந்தவையாக உள்ளன. இங்குள்ள பிரம்மா, திருமால், சிவன், தேவகன்னியர், பூத கணங்களின் சிலைகள் அனைத்தும் மிகவும் நுட்பத்தோடு, கலை உணர்வோடு செதுக்கப்பட்டுள்ளன.

இங்கு அமர்ந்திருப்பது வெறும் சிலைகள் என்று தோன்றவில்லை. உண்மையாகவே இறைவன் மனித உருவில் தோன்றி அமர்ந்து கொண்டிருப்பது போன்றே எண்ண தோன்றும்.

ஆங்காங்கே சில இடங்கள் முழுமை பெறாமல் இருக்கின்றன. முழுமை பெறாமல் இருக்கும் சிற்பங்களும், நம்மைப் பார்த்து ஏதோ ஒரு செய்தியை சொல்ல நினைப்பது போலவே இருக்கிறது. சிறிய சிறிய சிலைகள் கூட கலை நயத்தோடு, அழகு சொட்ட சொட்ட அமர்ந்திருக்கின்றன...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நினைவூட்டல்...


சித்தர்கள் வாழ்வின் இரகசியம்...


இன்றைய இருப்பத்தோராம் நூற்றாண்டில், நமது பிரச்சனைகளுக்கும், துன்பத்திற்கும், உடலில் உள்ள நோய்களுக்கும் முக்கிய காரணம், நமது மனதிலுள்ள பயமும் நம்பிக்கையின்மையும் நிறைவேறாத ஆசைகளும், அறியாமைகளுமேயாகும்.

நமது மனதைப் பற்றியும், நமது உடலை பற்றியும் நாம் அறிந்து கொண்டால் நமது வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளையும் அதன் தீர்வையும் நன்றாக புரிந்து கொள்ளலாம் என்கிறார்கள் சித்தர்கள்.

நாம் ஓரிடத்தில் ஒரு பிடி மண்ணை எடுத்து ஆராய்ந்தால் அந்த மண்ணின் மூலக் கூறுகளை அறியலாம்.

அதே போலத் தான் நமது உடலை ஆராய்ந்தால் இந்த உலகத்தில் உள்ளவற்றை அறியலாம்.

காரணம் நாம் இந்த மண்ணில் தோன்றினோம். முடிவில் நமது இறப்புக்கு பின் இதே மண்ணில் கலந்து விடுவோம்.

இதை சித்தர்கள்,"அண்டத்திலுள்ளது பிண்டத்தில் உண்டு"என்றனர்.

அண்டம் என்றால் உலகம் - பிண்டம் என்றால் நமது உடல்.

அதே போல ஓர் ஆலமரத்தின் விதையை பார்த்தால் மிக சிறியதாக இருக்கும். ஆனால் அதனுள் ஓர் ஆலமரமே ஒளிந்திருக்கிறது. அந்த நுண்ணிய ஆலின் விதை வளர்ந்து மிகப்பெரிய ஆலமரமாகிறது.

அது போல் மிகப் பெரிய இறைசக்தி நம்முள் நிறைந்துள்ளது. அதை நாம் உணர்ந்தால் இறைவனின் அம்சம் நம்முள் இறைவன் உறைந்துள்ளான் என்பது புரியும்.

உள்ளம் பெருங்கோவில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புல னைந்துங் காளா மணி விளக்கே
- திருமந்திரம்.1823.

கருத்து:

நமது உடல் இறைவன் வாழுமிடம்.
உடம்பும் சதையுமாகிய நமது உடல் இறைவனின் ஆலயம். வாய் - கோபுர வாசல்.

தெளிந்த மனமுடையவர்களுக்கு நமது உடலிலுள்ள ஆன்மாவே சிவலிங்கம்.
நமது இந்திரியங்கள் ஐந்தும் ஒளி பொருந்திய விளக்குகளாகும். அது போலவே இந்த உலகம் (universe) முழுவதும் சக்தியின் (energy) கூட்டமைப்பு என்று இயற்பியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

அந்த விதியானது அசையும் பொருட்களை சக்தியாகவும் அசையா நிலைபெற்றவற்றை சிவமாகவும் நம் சித்தர்கள் கண்டார்கள்.

நமது ஆன்மா சிவமாகவும் மூச்சை சக்தியாகவும் பாவித்தார்கள். நாம் உலகில் வாழ்வதற்கு முக்கிய ஆதாரமாக மூச்சின் வழியாக உயிர் காற்றை பெறுகிறோம். அதை நாம் சரியாக பயன்படுத்தினால் நமது ஆயுட்காலம் நீடிக்கும்.

மேலும் நமது மனநிலைக்கு தகுந்தாற் போல் நமது மூச்சின் ஓட்டம் வேறுபடும்.

உதாரணமாக நாம் பயப்பட்டாலோ ஆத்திரப்பட்டாலோ மூச்சின் வேகம் அதிகரிக்கும். மூச்சின் எண்ணிக்கை அதிகமானால் நமது ஆயுட்காலம் குறையும். இந்த தத்துவத்தை உணர்ந்தவர்கள் நம் சித்தர்கள்.

இந்த பிராணயாம முறையை நமக்கு தந்தருளியவர்கள் நம் சித்தர்கள்.

'காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே'
- திருமந்திரம்.571.

மூச்சுக்காற்றை நமது உடலில் கும்பக முறையில் நிறுத்தினால், காலனை கடந்து சென்று நீண்ட காலம் வாழலாம் என்று காட்டியுள்ளார்கள்.

அதை போலவே சித்தர்கள் எல்லோரும் நமது வாழ்க்கையில் செல்வம் நிலையாமை, அறம் செய்ய வேண்டும் என்பது போன்ற வாழ்க்கைக்கு தகுந்த பல கருத்துக்களை அவர்கள் பாடல்கள் மூலம் நமக்கு வழங்கியுள்ளார்கள்.

இனி 10 சித்தர்கள் இயற்றிய பாடல்களையும் அவர்களின் ஆழ்ந்த கருத்துக்களையும். பல பாடல்களின் உட்கருத்தையும் விளக்கவுள்ளோம்.

சித்தர் பாடல்களில் நேரடியாக பொழிப்புரை எழுதுவது கடினம்.

காரணம் சித்தர்களின் பாடல்களில், பல சொற்களின் பொருளை நாம் நம் அனுபவத்தின் மூலமாகத் தான் உணர முடியும்.

வீதி-நமது நெற்றி
முச்சந்தி-புருவ மத்தி
தண்டு-முதுகு தண்டு
குதிரை-ஓடும் மூச்சு
நாயகன்-நம் உடலிலுள்ள இறைவன்.

'தறி கட்டு' என்றால் யோகத்தில் தியானத்தில் நிமிர்ந்து உட்காருவது. ஐந்து தலை நாகம் என்றால் நமது ஐம்புலன்கள் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகையால் நம் வழிகாட்டும் பாடல்கள் வரிசைப்படுத்தப் பட்டு, கருத்துக்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன.

அது போல வாழ்க்கை வழிமுறை, ஆகம சாஸ்த்திரம், யோகம், தந்திர வழிபாடு, இறைவனோடு ஐக்கியமாகும் முறை குருதரிசனம் போன்றவை கொண்டது திருமுறைகளாகும்.

ஆகையால் இன்றைக்கு நமது வாழ்விற்கு உதவும் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

சித்தர்கள் இறைவனை தம் உடலில் கண்டவர்கள். அவர்களின் வாழ்வியியல் முறைகளின் விளக்கங்களை கேட்டால் நமது மனதிலுள்ள குற்றங்கள் மாயைகள் நீங்கி நாமும் இறைவனின் அம்சம் என்பதை உணரலாம்.

வாழ்க்கையில் நம்முடைய பல பயங்களுக்கும் துன்பங்களுக்கும் முக்கிய காரணம் நாம் வேறு மற்றவர்கள் வேறு என்ற எண்ணமேயாகும்.

மாறாக நாமே எல்லாவற்றிலும் கலந்து நிற்கிறோம் (அத்வைத நிலை) என்ற எண்ணம் நம் மனதில் ஏற்பட்டால் மரண பயம் நீங்கும். நமது உடலின் உபாதைகள் நீங்கும். மரணமில்லா பெரு வாழ்வுகிட்டும். எல்லாம் வல்ல இறைவன் நம் எல்லோருக்கும் அருள் புரிவானாக.

இறை வணக்கம்..

வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்
காட்டவும் நாமிலங் காலையும் மாலையும்
ஊட்டவி யாவன வுள்ளங் குளிர்விக்கும்
பாட்டவி காட்டுவதும் பாலவி யாமே.
 - திருமந்திரம்1824.

கருத்து:

யாகத்தில் இடப் பட்ட நிவேத்தியத்தை உண்ணுகிற சிவப் பெருமானுக்கு அர்பபணிக்க தக்க பொருட்கள் நம்மிடம் இல்லை.

காலையும் மாலையும் இறைவனுக்கு நிவேத்திக்கும் பொருள் அவனை குளிர்விக்கும் பாடல்களே, அவையே அவனுக்கு உணவாகும்.

ஆகையால், இப்பாடல்களை அவனுக்கு நிவேதனமாக செய்வோம்.

இறைவனின் கருணை..

கருத்துறை அந்தகன் தன் போல் அசுரன்
வரத்தின் உலக துயிர்களை எல்லாம்
வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக்
குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே.
-திருமந்திரம்339.

கருத்து:

உலகத்திலுள்ள உயிர்களை,மனதில் உள்ள அந்தகனான,"அறியாமை"என்ற அசுரன் வருத்தம் செய்தான்.துன்பம் கொடுக்கிறானே என்று தேவர்கள் இறைவனை வேண்ட,அவன் ஞானமாகிய சூலத்தை கொண்டு அறியாமையாகிய அசுரனை அழித்தருளினான்.

நமது வாழ்க்கையில் பல துன்பங்களுக்கு முக்கிய காரணம்"அறியாமை"யேயாகும். அதனை அழிக்க இறைவனை அடிபணிவோம்.

சித்த வாழ்வு..

நம்மில் பல பேர் இன்று பொருளாதார வசதிகளில் மிகுந்து நிற்கிறோம். வாழ்க்கையில் பட்டம், பதவி போன்றவற்றை பெற்று, பல நிறுவனங்களை நிறுவி, திறன் பட செயலாற்றி வருகிறோம்.

ஆனால் எல்லாவற்றையும் திறன்பட நிறுவிக்கும் நம்மால் நம் குடும்ப வாழ்வில் ஏற்படும் இன்பம், துன்பம், ஏற்றம், இறக்கம், ஏமாற்றம், தோல்வி, எதிர்பார்புகளை சமாளிக்க முடியவில்லை.

அதனால் தான் மனம் சம்பந்தப் பட்ட நோய்கள் பெருகியுள்ளன. இரத்த அழுத்தம், குடற்புண், கொழுப்பு நோய், நீரிழவு நோய், தூக்கமின்மை போன்ற பலவிதமான நோய்கள் இன்று நம் மக்களிடம் காணப்படுகின்றன.

இன்று மருந்து கடைகளில் நிரம்பி வழிகின்ற மாத்திரைகளில் 67 விழுக்காடு மனம் சம்பந்த பட்ட நோய்களை தீர்க்க, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளாகும்.

ஆனால் இந்த பிரச்சனைகளுக்கும் உலக வாழ்க்கைக்கும், விளக்கமளித்தவர்கள் நம் சித்தர்களேயாவார்கள்.

நாம் ஒரு தத்துவ பொக்கிஷத்தின் மீது உட்கார்ந்து கொண்டு எங்கோ யாரையோ தேடி கொண்டிருக்கிறோம்.

உலகெங்கும் இன்று புத்த மதத்தின் விபாசனா என்ற தியான முறை பயிற்ச்சி அளிக்கப்படுகிறது. ஆனால் இந்த முறையின் தத்துவத்தை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சொன்னவர்கள் நம் சித்தர்கள். சித்தர் வான்மீகரின் தத்துவமே வாசி யோக முறைகளாகும்.

மூச்சை கட்டுப்படுத்துவதே புத்தரின் விபாசனா தியான முறையாக கருதப்படுகிறது.

வான்மீகர் நாகை அருகே பிறந்து வாழ்ந்து திருவாரூரில் சித்தியானவர்.

போகர் சீனாவிற்கு சென்ற சீன மருத்துவ முறைகளை இங்கு கொணந்தவர்.

சீனாவிலும் திபத்திலும் இன்று இவரின் வைத்திய முறைகள் பின்பற்றப்படுகின்றன. நமது நாடி முறைப்படி நமது உடலில் உள்ளங்கால் முதல் உச்சி வரை 72000 நாடிகள் ஓடுகின்றன. அதை சீர்படுத்தினால் வியாதிகளை குணப்படுத்த முடியும் என்பது சித்தர்களின் கருத்தாகும்.

இன்று சீனாவில் அக்குபஞ்சர், அக்கு பிரசர் என்று நாடிகள் மெரிடியன் என்றும் அங்குள்ள வைத்திய முறைகள் பின்பற்றப்படுகிறது.

அக்கு என்றால் புள்ளி பிரசர் என்றால் துளைப்பது. நமது உடலில் பல வர்ம புள்ளிகள் உள்ளன. நோய்களை பொறுத்து அப்புள்ளிகளை சிறு ஊசியினால் துளைத்து தூண்டி விடுவதன் மூலம் பல நோய்களுக்கு தீர்வு காணப்படுகிறது.

சித்தர்கள் இலக்கியங்களை படிக்கும் போது அவர்கள் நாத்தியவாதி என்று எண்ண தோன்றும். சாதிகளையும், சடங்குகளையும், உருவ வழிபாடுகளையும் கடுமையாக கண்டித்திருப்பதை அவர்களின் பாடல்கள் மூலம் காணலாம். ஆனால் அவர்கள் இறைவனை தமது உடலில் கண்டவர்கள். ஆகையால் அப்படி எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகள் மறைமொழிகள் 'சூன்ய சம்பாஷனைகள்' அவற்றுக்கு நேரடி அர்த்தம் காண்பது அரிது.
ஒன்றை மட்டும் நாம் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

அவை மிகப் பெரிய பொக்கிஷங்கள் இன்று வெளியுலகத்திற்கு அவர்களின் அருளுரைகள் தெரியவில்லை. இவற்றை எல்லோரும் அறிந்து கொண்டால் நம் வாழ்க்கை இனிமையாகும்.

தன்னையறிதல்...

ஒருவன் தன்னையறிய வேண்டும். மற்றவற்றை அவன் சார்ந்தோ, பின்பற்றியோ செல்லும் போது தான் பல பிரச்சனைகள் உண்டாகுகின்றன. தன்னுள் உறையும் ஆன்மாவை பிற பொருளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது தான் அது பந்தப்பட்டதாக தெரிகிறது. அது மனதின் அறியாமைகளாகும். உண்மையில் ஆன்மா எதனுடனும் பந்தப்படாது. நாம் பந்தத்திலிருந்து விடுதலை பெறுதல் இல்லை. உண்மையில் அது அறியப்படுவது. நாம், நம்மை, பிறப் பொருளிலிருந்து தனித்துப் பார்க்கும் போது பந்தம், பயம், போன்றவை ஏற்படுகின்றன. நம்மிலுள்ள ஆன்மா உலகெங்கும் வியாபித்துள்ளது. தனித்து எதுவுமில்லை என்ற எண்ணம், நமது மனதில் உதித்தால் பந்தமும் இல்லை பயமும் இலலை.

ஆன்மாவின் முக்தி...

ஆன்மா (மனித உயிர்) தேகத்தை பற்றிய போது, புருஷன் சிவனென்றும், எதையும் பற்றாதிருக்கும் போது ஆன்மாவென்றும் கூறப்படுகிறது. நாம் உலகிலுள்ள போது ஐந்து அவஸ்த்தைக்கு உள்ளாகிறோம்.

1. ஜாக்கிரம்(விழிப்பு நிலை)
2.சொப்பனம்(கனவு நிலை)
3.சுழுத்தி(உறக்க நிலை)
4.துரியம்(புலன்களுடன் பொருந்தும் நிலை)
5.துரியாதீதம்(புலன்களுடன் பொருந்தா நிலை).

விழிப்பு நிலை..

நாம் விழிப்பு நிலையின் போது மெய், வாய், கண், காது, மூக்கு போன்ற ஐந்து புலன்களும், வாக்கு(வாய்), பாதம்(கால்), பாணி(கை), பாயுரு(மலவாய்), உபஸ்தம்(கருவாய், நீர் வாய்) போன்ற கர்மேந்திரங்களும் செயல்படுகின்றன.

அவற்றுடன் பிராணன், அபானன், உதானன், விபானன், சமானன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவ தத்தன், தனஞ்செயன் என்ற பத்து வாயுக்களும்..

மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கு அந்தகரணங்களும் அவற்றுடன் புருடன் ஆக 25 தத்துவங்கள் செயல்படுகின்றன.

சொப்பனம்...

வாயு பத்து ஆகும். அதனுடன் அந்தகரணங்கள் ஆக 14 தத்துவங்கள் செயல்படுகின்றன.

உறக்க நிலை...

(சுழுப்தி): உடலுடன், பிராணனும் சித்தமும் இயங்குவது.

துரியம்: புருடனின் கருவியாகிய பிராணன் மட்டும் இயங்குவது.

துரியாதீதம்: இந்நிலையில் ஜீவன்,சிவனுடன் சேர்ந்து சிவம் மட்டும் விளங்கும்.

விழிப்பு நிலையில் ஆன்மா பிரபஞ்சத்தோடு கலந்து நிற்கும்.

ஆன்மா, தான் அனுபவித்ததை கழுத்துக்கு மேலே ஒளிமயமாக காணுதல் கனவு நிலையாகும்.

ஆன்மா அகந்தையை விட்டு, தன் வசமற்று, உடலிருக்கும் நிலை உறக்க நிலை (சுழுத்தி), ஆன்மா மூலக் பிரகிருதியுடன் பொருந்தி இருக்கும் நிலை துரியமாகும்.

ஆன்மா அவஸ்தைகளை நீங்கி நிற்கும் நிலை துரியாதீதம் ஆன்மா அகங்காரத்தை விட்டு ஒளி நிலையில் நிற்கும்.

சிவ ஞானத்தால் ஐந்நு அவஸ்தைகளையும் நீக்கி பிறவி முடிவுறுகிறது.

ஆன்மா, சிவனுடன் சேரும் வரை, நாம் இந்த ஐந்து அவஸ்தைகளையும் அனுபவித்தே ஆக வேண்டும்.

தன்னையறிவாம ஃதன்றிப்
பின்னையறிவது பேயறி வாகுமே
- திருமந்திரம்2318.

தான் யார்? தன் நிலை என்ன? என்பதை அறிவது தன்னையறியும் அறிவாகும். அஃதில்லாமல் பிற அறிவெல்லாம் பேயறிவாகும். (பேய் போல் பிறப்பிற்கும் இறப்பிற்கும் அலைய வேண்டும்).

தானே அறிந்து சிவத்துடன் தங்குமே
- திருமந்திரம்2329.

சித்தர்களின் பிராணயாம யோக முறை (வாசியோகம்)...

நாம் சாதாரணமாக ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சு விடுகிறோம். ஆகையால் ஒரு நாளைக்கு 15×60×24 அதாவது சுமார் 21600 தடவை மூச்சு விடுகிறோம்.

நமது மூச்சிற்கும் நமது மன நிலைக்கும் தொடர்பு உண்டு. நாம் கோபமாய் இருக்கும் போதும் பயத்துடன் இருக்கும் போதும் நாம் அதிக வேகமாக மூச்சு விடுகிறோம். அப்படி வேகமாக விடும் மூச்சுக் காற்றால் நமது ஆயுள் குறையும். மேலும் நமது மூச்சை வெறும் உயிர்காற்றுகொடுக்கும் கருவிகளாகவும் கரியமிலா வாயுவை வெளியேற்றும் நடவடிக்கைகளாகவும்,நமது உடல் சூட்டை 98.4 டிகிரி பாரன்ஹீட்டில் நிலை நிறுத்தி வைக்கும் ஓர் சாதனமாகவும் இன்றைய மருத்துவம் நோக்குகிறது.

ஆனால் நம் சித்தர்கள் , பிராணன் மூலம் நம் ஆயுளை நீடிக்கும் சாதனமாக இதனை (காயகல்பம்) கருதினார்கள்.

நமது உடலிலுள்ள சக்தி அதிகம் வெளியேறாமல் இருந்தால் நம்மால் நீண்ட நாட்கள் உலகில் நோயின்றி வாழ முடியும் என்று கருதினார்கள். நம்முள் உட்புகும் காற்று (சக்தி) உடலில் இருந்து வெளியேறும் காற்று (சிவம்) என்று கூறினார்கள்.

மேலும் சொல்லப் போனால் நமது பிராணன் (மூச்சு), பிரபஞ்சத்திலுள்ள சக்தியை நமது நாடி நரம்புகளுக்கு கொடுக்கும். நமது உடலில் ஒரு வித முன்னோட்டம் போன்ற ஓர் சக்தி உண்டாகும். நமது உடலும் ஒளி வீசும்.இதனால் நமது உடல் ஒளி மயமாகும் என்று கருதினார்கள். அப்படிபட்ட சித்த புருஷர்களிடம் நெருங்கி பழகுபவர்களுக்கும், அந்த ஒளியால் பயன் கிடைக்கும் என்று நம்பினார்கள்.

நமது இடது மூக்கின் துவாரத்தின் வழியாக ஓடும் மூச்சுக் காற்றை சந்திர நாடி என்றும் வலது மூக்கின் துவாரம் வழியாக ஓடும் மூச்சை சூரிய நாடி என்றும் அழைத்தார்கள். இரண்டும் சேர்ந்து ஓடும் மூச்சை அக்னி என்றும் அழைத்தார்கள். மூச்சு ஓடுதலை நிலை நிறுத்தி வைத்தலை கும்பகம் என்றும் கூறினார்கள்.

பிராணயாமம் செய்யும் போது நமது உடல் எப்படி அமர வேண்டுமோ அப்படி அமர்ந்தால் நமக்கு நன்மை பயக்கும் என்பதை ஆசனங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

அந்த ஆசனங்கள் 108 வகைப்படும். அதில் முக்கியமானவை எட்டு வகைப்படும்.

அவை பத்மாசனம், சுவஸ்திகாசனம், பத்ராசனம், சிம்மாசனம், கோமுகாசனம், சோதிராசனம், வீராசனம் மற்றும் சுகாசனம்.

அதை போலவே, சித்தர்களின் கூற்றுப்படி நாம் மூச்சு விடும் சில நேரங்களில் இடது அல்லது வலது மூக்கில், மூச்சுக்காற்று அதிகமாக ஓடும். சுமார் இரண்டு, மூன்று மணி நேரத்திற்கு பிறகு மூச்சு மாறி வேறொரு மூக்கில் வலுவாக ஓடும்.

இடது மூக்கில் மூச்சுக் காற்று வலது மூக்கில் அதிகமாக ஓடும் போது இடது மூளை அதிகமாக வேலை செய்யும்.

அதே போல மூச்சுக்காற்று வலது மூக்கில் அதிகமாக ஓடும் போது, எதையும் புத்தி கூர்மையுடன் புரிந்து கொள்ளல், எதையும் புதிய முறையில் சிந்தித்தல், உணர்ச்சி பூர்வமாக சிந்தித்தல் ஆகியவை நடைபெறுகிறது.

மூச்சு, மூக்கில் மாறி மாறி ஓடுவதை சில பயிற்சிகளின் மூலமாக மாற்றியமைக்க முடியும்.

இரண்டு மூக்கிலும் ஒன்றாக மூச்சு ஓடுவது (சுழுமுனை) நாடி எனப்படும். நமது உடலும் நல்ல நிலையில் இருக்கும். எதையும் புரிந்து கொள்ளும் தன்மை உண்டாகும். இதனை நமது சித்தர்கள் வாசியோகம் என்றார்கள்.

வாசியை திருப்பினால் சிவா சிவா என்கின்ற மூல மந்திரம்.

சித்தர்கள் கூற்றுப்படி நமது உடம்பில் உள்ளங்காலிலிருந்து உச்சி வரை 72000 நாடிகள் உள்ளன. அதன் வழியாகத் தான் நமது சக்தி, உடல் முழுமைக்கும் பரவுகிறது.

அதைபோல நமது உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளன. அவை தியானத்தின் மூலம் தட்டி எழுப்பப் படுவதால், நமது உடலில் புத்துணர்ச்சி உண்டாகுகிறது.

அவையாவன...

1.மூலாதாரம்:  அது நமது குதம் (ஆசனவாய்) அருகிலுள்ளது. அங்கு குண்டலினி சக்தி சுருட்டி பாம்பு வடிவில் உள்ளது. அன்னை பராசக்தி தனியாக வீற்றிருக்கிறாள். எல்லா காமத்திற்கு காரணம் மூலாதாரம். பிரகிருதி (மண்) தத்துவம்.

2.சுவாதிஸ்டானம்: இது மூலாதாரத்திற்கு மேலே உள்ளது. நமது அனுபவங்களுக்கும் ஆழ் மன எண்ணங்களுக்கும், இருப்பிடமாக உள்ளது. இங்கு பிரம்மாவும், சரஸ்வதியும் உறையும் இடம். நெருப்பு தத்துவம்.

3.மணிபூரகம்: இது தான் நமது உணவு செரித்தல், உடல் சூட்டை நிர்ணயித்தல் போன்ற வற்றையும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியவற்றை நிர்ணயிக்ககறது. திருமாலும் திருமகளும் அமர்ந்துள்ள இடம். நீர் தத்துவம்.

4.அநாகதம்: நமது இதயத்தருகில் உள்ளது. அன்பு பாசம் எதையும் புதிதாக செய்யும் திறன், விதியை மாற்றும் திறமை ஆகியவற்றை நிர்ணயிப்பது. வாயு தத்துவமாகும். ருத்திரன், பார்வதி அமர்ந்துள்ள இடம்.

5. விசுத்தி: நமது கழுத்து பகுதியில் அமைந்துள்ள இடம். எதையும் பகுத்து பார்க்கும் அறிவு, வாழ்க்கையின் அறிவு, பிறரை அறியும் அறிவு, என்பதை இது நிர்ணயிக்கின்றன. ஆகாச தத்துவம் மகேஸ்வரனும், மகேஸ்வரியும் அமர்ந்திருப்பார்கள்.

6.ஆக்ஞை: நமது நெற்றியில் இரண்டு புருவங்களுக்கு மத்தியில் உள்ளது.

நமது மூளையின் செயல்களை கட்டுப்படுத்துவது. நமது அறிவு, எதையும் புரிந்து கொள்ளல், மணவுறுதி, புத்தி, மனதிற்கு அப்பார்பட்டதையும் புரிந்து கொள்ளுதல் போன்றவற்றை நிர்ணயிப்பது. சதாசிவமும், மனோன்மணியும் அமர்ந்துள்ள இடம்.

7.சகஸ்ரம் : நமது தலை உச்சியில் உள்ளது. சகஸ்ரம் என்றால் ஆயிரம் என்பர். எல்லையில்லா பெருவெளி ,வெட்ட வெளி என்று சித்தர்கள் கூறுவார்கள்.

மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தி சிரசை அடைதல், மூலத்திலுள்ள சக்தி தேவி, சிவனை அடைதல், சிற்றுயிர், பேருயிருடன் கலத்தல் என்று கூறுவர்.

இதனை ஜோதி தரிசனம், முக்தி நிலை, பேரின்பநிலை என்றும் கூறலாம்.

பரமசிவனும் பார்வதியும் சேர்ந்து அமர்ந்துள்ள இடம்.

மனித ஆன்மாவின் மன விகாரங்கள் நீங்கி, மாயை நீங்கி, தான் என்ற அகங்காரம் நீங்கி, உலகின் தன்மையான முக்குணங்களின் தன்மை நீங்கி, பாசங்கள் நீங்கி, அண்டமெல்லாம் வியாபித்திருக்கும் சக்தியுடனும் சிவத்துடனும் கலந்து நிற்கும்.

தனித்தன்மை நீங்கி விடுவதால் இனி பிறப்பு, இறப்பு இல்லை. இது தான் முக்தி நிலை.

இது தான் நம் சித்தர்கள் காட்டிய வழியாகும்...

திமுக அடிமை விசிக கலாட்டா...


ஆவிகள் பற்றிய உண்மைகள் - 2...


இதைப் போல் தான் முகமதுவுக்கும் நேர்ந்தது..

நல்ல ஆவி அவர் உடலில் புகுந்தபொழுது , அவர் பயந்து நடுநடுங்கிவிட்டார்.

பிறகு மெல்ல மெல்ல தைரியம் பெற்று
அந்த நல்ல ஆவி சொல்ல சொல்ல..

அரபியில் குர்ஆனை எழுத ஆரம்பித்தார்.

இவரும் இப்படித் தான்...

நானே கடவுளின் கடைசி தூதுவன்..
கடவுள் வந்துதான் என்மூலம் குர்ஆனை அருளினார் என்று கூறினார்..

எனக்கும் இந்த அனுபவம் உண்டு...



ஒரு  ஆவி என் உடலில் புகுந்து என்னை ஆட்டி படைக்க நினைத்தது.

அது
நீ இப்படி செய்
அப்படி செய்யாதே
அது சரி இல்லை
இது சரி இல்லை
என்று எச்சரிக்கை செய்ய ஆரம்பித்தது.

நான் அதற்கு வணக்கம் செலுத்தி
உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி ஆனால் நான் முழு சுதந்திரத்தில் இருக்கவே ஆசை படுகிறேன்..

நான் என் முழு சுதந்திர நிலையில் செயல்படுகிறேன். இது பிறருக்கு தவறாகபட்டாலும் அதை என்னால் மாற்றி கொள்ள முடியாது தயவு செய்து என்னை விட்டு அகலுங்கள் என்று வேன்டினேன்..

பிறகு அது தானே விலகியது இப்படி பல பேருக்கு நடந்திருக்கிறது...

பால்...


100% தூய இரத்தம்...

மேலும் பசுவின் பால், கன்றுக்குட்டியின் ஜீரண மண்டலத்துக்கு மட்டுமே ஏற்றது..

மனிதர்களுக்கல்ல...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பண்டைய கல்வெட்டானது, ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது-பாபேலின் கோபுரம் உண்மையானது என்று நிரூபணமான சான்றுகள் அளிக்கின்றன.

இந்த கல்வெட்டு பாபேலின் உண்மையான கோபுரத்தின் முதன்மையான உருவத்தையும் வழங்குகிறது, மேலும் இது கட்டுமான பணி மற்றும் பின்னால் உள்ள மனிதர்களை பற்றி விவரிக்கிறது: மெசொப்பொத்தேமியாவின் மிக பிரபலமான ஆட்சியாளர் நெபுகண்ட்நெசார் II.

பாபிலோனின் புகழ்பெற்ற நகரத்தில் எழுதப்பட்ட பண்டைய கல்வெட்டுகள் சுமார் கி.மு 600 முந்தையவை. கடந்த ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்பு தான் கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும், அண்மையில் லண்டன் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஆண்ட்ரூ ஜார்ஜ், அந்தக் கல் விசித்திரமான வகையில் விவிலிய கோபுரத்தை சித்தரிக்கும் ஒரு உருவத்தை வைத்திருப்பதாக குறிப்பிட்டார். இந்த கல்வெட்டு நோர்வே தொழிலதிபரான மார்டின் ஷோயன் என்பவரின் தனிப்பட்ட சேகரிப்பில் பல ஆண்டுகளாக இருந்தது.

ஷோயேன் சேகரிப்பு படி, பாபிலோனில் உள்ள ஜிகுராட் முதலில் ஹம்முராபி கி.மு 1792-1750 . "மறுசீரமைப்பு மற்றும் விரிவாக்கம் நபோபொலசார் தலைமையில் தொடங்கியது. இவர் பாபிலோனியாவின் ஒரு கல்தேயன் மன்னனாகவும், நியோ-அசீரிய பேரரசின் வீழ்ச்சியில் முக்கிய நபராகவும் இருந்தார். மற்றும் நெபுகண்ட்நெசார் இரண்டாம் கீழ் 43 ஆண்டுகள் வேலை முடிந்த பிறகு, கி.மு 604-562 செயல்பாட்டில் வந்தது.

ஸ்மித்சோனியன் என்ற பத்திரிகையின் ஆசிரியர், டாக்டர் கெரோவ், பாபேலின் கோபுரத்தையும் ஆதாரங்களையும் விவாதித்த ஒரு அறிக்கையை, பலர் நம்பத்தகுந்தவையாக இருப்பதாக கூறினார். மனிதர்கள் பேசும்  ஒற்றை, அசல் ஓரே மொழி முறை இருந்தது என்று கோட்பாட்டில் நம்பப்படுகிறது. சுவாரஸ்யமாக, பல விஷயங்களைப் போலவே, இது பைபிளில் ஆதியாகமம், 11 ம் அதிகாரத்தின் புத்தகம், பாபேலின் கோபுரத்தைப் பற்றி குறிப்பிடுகிறது.

1 பூமியும் ஒரே பாஷையும் ஒரே வார்த்தைகளுமாயிருந்தது.

2 அவர்கள் கிழக்கே பிரயாணமாய்ப் பாளயமிறங்கினார்கள்; அவர்கள் சிநெயார் தேசத்திலே சமபூமியைக் கண்டு, அங்கே குடியேறினார்கள்.

3 அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் செங்கலை அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று சொல்லி, கல்லைப் பிராகாரமாக்கினார்கள்;

4 அதற்கு அவர்கள்: நாம் ஒரு நகரத்துக்காக ஒரு கோபுரத்தையும் கட்டி, வானத்திலே எழும்பிவரக்கடவோம்;

5 நாம் ஒரு பெயரைச் செய்வோம்; இல்லாவிட்டால், பூமியெங்கும் நாங்கள் சிதறடிக்கப்படுவோம் என்றார்கள்.  மனுபுத்திரருக்குக் கட்டளையிட்ட பட்டணத்தையும் தாவீதின் நகரத்தையும் காணவேண்டுமென்று,

6 கர்த்தர் அவர்களை நோக்கி: இதோ, அவர்கள் ஒரே ஜனம் உடையவர்; இதுதான் அவர்கள் செய்யத் தொடங்கியது, இப்போது அவர்கள் செய்ய வேண்டிய ஒன்றும் அவர்களுக்கு இயலாது.

7 "வா, நாம் கீழே இறங்குவோம், தங்கள் மொழியால் குழப்பமடையலாம். ஒருவரையொருவர் புரிந்துகொள்ள மாட்டார்கள்."

8 ஆண்டவர் அந்நாட்டின் நடுவிலிருந்து அந்நிய நாட்டிலிருந்து அவர்களை சிதறடித்தார்.

9 கர்த்தர் பூமியெங்கும் மொழி பெயர்த்து வைத்தபடியால், அதின் பேர் பாபேல் என்று பேரிட்டபடியால், அங்கேயிருந்து கர்த்தர் பூமியெங்கும் பரம்பி அவர்களைச் சிதறடித்தார்.

 - ஆதியாகமம் 11:

"இந்த கல்வெட்டு பாபேலின் உண்மையான கோபுரத்தின் முதன்மையான படத்தை வழங்குகிறது. இது ஒரு மெசொப்பொத்தேமியன் கோபுரத்தை கட்டியெழுப்பதை உறுதிப்படுத்துகிறது. மற்றும் பண்டைய மெகாஸ்டார்ட்டின் ஏழு அடுக்குகளை விளக்குகிறது.

மெசொப்பொத்தேமியாவின் மிக
நம்பமுடியாத அளவிற்கு, கோபுரத்தின் கல்வெட்டுகள் எவ்வாறு கோபுரம் வந்துள்ளன என்பது பற்றி ஒரு ஆச்சரிய தகவல்களையும் அளிக்கிறது.

மத்தியதரைக் கடலிலிருந்து', பாரசீக வளைகுடா, 'மேல் கடல் வரை' இருந்தது என்கின்றனர். "தொலைதூர நிலங்களும், வசிக்கும் மக்களும் இந்த கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக அணிதிரட்டப்படுகிறார்கள்.

"நம்பமுடியாதபடி, இந்த பண்டைய கணக்கு, பாபேல் கோபுரம் கட்டியமைக்கப்பட்ட விவிலிய கதைக்கு ஒத்திருக்கிறது. அறிஞர்களுக்கு, இந்த பாபேலின் கோபுரம் வெறும் கற்பனையின் வேலை அல்ல என்பதை மேலும் ஆதாரமாகக் காட்டுகிறது. இது பழங்காலத்தில் இருந்த ஒரு உண்மையான கட்டிடமாக இருந்தது...

நையாண்டி மேளமும் நாட்டுப்புற ஆட்டக் கலைகளும்...


1. நையாண்டி மேளம்..

மேளம் இரு வகைப்படும் ஒன்று கோவில் மேளம். மற்றொன்று நையாண்டி மேளம்.

கோவில் மேளம் திருக்கோவில் வழிபாடு. சுவாமி புறப்பாடு. சுவாமி திரு உலா, தேர்த்திருவிழாவில் வாசிக்கப்படுவது. மங்கல இசை வாசிக்கவும். கோவில் மேளம் பயன்படுத்தப்படுகிறது.

நையாண்டி மேளம் கரகம், காவடி, பொய்க்கால் குதிரை முதலிய நாட்டுப்புற ஆட்டங்களுக்கு (Folk Dances) – பின்னணி வாத்தியமாக இடம் பெறுகின்றது.

திறந்தவெளி அரங்கில் நையாண்டி மேளக் குழுவினர் வட்டமாக நின்று கொண்டு வாத்தியக் கருவிகளை வாசிக்கின்றார்கள்..

நையாண்டி மேளத்தின் அமைப்பு..

நையாண்டி மேளம் என்பது இரண்டு நாதசுரம், இரண்டு தவில், இரண்டு பம்பை, ஒரு கிடிமுட்டி அல்லது சிணுக்குச்சட்டி, ஒரு சுதிப்பெட்டி, ஒரு தாளம் கொண்டதாகும்.

கொங்கு நாட்டுப் பகுதிகளில் இவ்வாறு தான் நையாண்டி மேளம் அமைந்துள்ளது. தெற்கு நாட்டுப் பகுதிகளில் இவற்றுடன் உறுமியையும் சேர்த்துக் கொள்கின்றார்கள்.

நையாண்டி மேளத்தில் தொடக்கத்தில் நாதசுரக் கலைஞர்கள் பிள்ளையார் துதி வாசிக்கின்றனர். பின்னர் தனது குருநாதரை நினைத்து வாசிக்கின்றனர். கரகாட்டத்திற்கு ஏற்ற வகையில் நையாண்டி மேளத்தை வாசிக்கின்றனர். ஆட்டமும், வாசிப்பும் ஒத்துப் போகுமாறு பார்த்துக் கொள்கின்றனர். கரகாட்டப் பாடலை இவர்கள் நாதசுரத்தில் வாசிக்கின்றனர். பின்னர் தெம்மாங்கு வாசிக்கின்றனர். காவடியாட்டம் ஆடும் போது காவடிச் சிந்து, வாசிக்கின்றனர். நையாண்டி மேளத்தின் முடிவில் திருப்புகழ் வாசிக்கின்றனர்.

நாட்டுப்புற மக்களுக்கு உற்சாகத்தை ஊட்டக்கூடிய வகையில் நையாண்டி மேள இசை அமைகின்றது. சில இசைக் கருவிகளைச் சேர்த்து வாசிப்பதை யாழ் நூல் ஆமந்திரிகை என்று கூறுகின்றது. பழந்தமிழர் இதனைப் பல்லியம் என்று குறிப்பிட்டனர்; இசைக்கருவிகளைச் சேர்த்து வாசிப்பதை இன்று வாத்திய விருந்து என்று அழைக்கின்றனர்.

2. கிராமீய நடனங்கள்...

நாட்டுப்புற ஆட்டங்கள் நாட்டுப்புற மக்களால் உருவாக்கப்பட்டவை. நாட்டுப்புற மக்கள் உழைப்பின் களைப்பிலிருந்து விடுபட நாட்டுப்புற ஆட்டங்களை ஆடி வருகின்றனர்.

கரகாட்டம்...

சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்ற குடக்கூத்திலிருந்தே இன்றைய கரகம் தோன்றியிருக்க வேண்டும்.

கிருஷ்ண பகவான் ஒருமுறை மண்ணாலும்; உலோகத்தாலும் செய்யப்பட்ட குடத்தைத் தலையில் வைத்துக் கொண்டு நடனமாடியதாகப் புராணக் கதைகள் எடுத்துரைக்கின்றது.

கரகம் என்ற ஆட்டத்திற்கு ஈடாக திருநெல்வேலி மாவட்டத்தில் அம்மன் கொண்டாடி இன்றும் வழக்கில் உள்ளது.

கிராமப்புறங்களில் காளியம்மன், மாரியம்மன் முதலிய நாட்டுப்புற தெய்வவிழாக்களின் போது ஆற்றங்கரைகளிலிருந்தோ, நதி தீரங்களிலிருந்தோ சக்தி கரகத்தை மலர்களால் அலங்கரித்துக் கொண்டு வருவர். சக்தி கரகம் எடுத்து வருபவர் சாமியாட்டம் ஆடிக்கொண்டு வருவார். தொடக்க காலத்தில் கரகம் வழிபாட்டோடு சடங்கோடு தொடர்புடையதாக இருந்தது. காலப்போக்கில் கரகம் சடங்கு நிலையிலிருந்து விடுபட்டு சமூக நடனமாக தொழில்முறை ஆட்டமாக மாற்றம் பெற்றது எனலாம்.

ஏனைய கிராமீயக் கலைகளைப் போலவே நாட்டுப்புற மக்கள் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தவும், பொழுது போக்கிற்காகவும் கரகாட்டத்தை ஆடி வருகின்றனர் எனலாம்.

நாட்டுப்புறத் திருவிழாக்களின் போதும், முருகன் கோவில் விழாக்களின் போதும் கரகாட்டம் இடம் பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

பழனி முருகன் கோவிலில் நடைபெறும் தைப்பூசம், பங்குனி உத்திரம் முதலிய பெருவிழாக்களின் போது காவடிக் குழுவினர், கண்டு களிப்பதற்காக கரகாட்டத்தை உடன் அழைத்து வருகின்றனர்.

கொங்கு நாட்டு காவடிக் குழுவினர், பழனிக்கு காவடி எடுத்து வரும் போது பெரும் பொருட்செலவில் நையாண்டிமேளக் குழுவினரையும், கரகாட்டக் குழுவினரையும் உடன் அழைத்து வருகின்றனர்.

கரகாட்ட அமைப்பு முறை...

பெரும்பாலான நாட்டுப்புற ஆட்டங்கள் வட்ட வடிவ அமைப்பு முறையிலேயே நிகழ்த்தப் பெறுகின்றன. அதைப் போலவே கரகாட்டமும் வட்ட வடிவு அமைப்பு முறையிலேயே நிகழ்த்தப் பெறுகின்றது. கோவில் வளாகங்களிலும், திறந்த வெளி அரங்குகளிலும் கரகாட்டம் இடம் பெறுகின்றது. பார்வையாளர்கள் வட்டமாகச் சூழ்ந்து கொண்டு கரகாட்டத்தைக் கண்டு களிக்கின்றார்கள்.

கரகாட்டத்தில் நையாண்டி மேளம் முக்கியம் இடம் வகிக்கின்றது. நையாண்டி மேளம் இசையைத் தொலை தூரத்தில் கேட்டாலே அங்கு கரகாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதை அறிந்து கொள்ளலாம்.

கரகாட்டத்தோடு பல துணை ஆட்டங்களும் சேர்ந்து நிகழ்த்தப்பட்டு வருகின்றன. கரகம், குறவன் குறத்தி, பபூன் (கோமாளி) காவடியாட்டம், மயிலாட்டம், மாடாட்டம் என்ற முறையில் கரகாட்டம் கிராமப் புறங்களில் நிகழ்த்தப் பெற்று வருகின்றது.

ஆட்ட உடை..

கரகாட்டம் ஆடத்தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் கரகாட்டக் கலைஞர்கள் ஒப்பனை செய்து கொள்கிறார்கள். வண்ண வண்ண உடைகளை ஆட்டத்தின்போது அணிந்து கொள்கிறார்கள். கரகாட்டம் ஆடுவதற்கென்றே இவர்கள் தனி உடையைத் தைத்து வைத்துக் கொள்கிறார்கள்.

செம்பு அலங்காரம்...

கரகச்செம்பை வண்ண வண்ணக் காகிதங்களால், அலங்கரித்துக் கொள்கின்றார்கள். செம்பின் உச்சியில் கிளி பொம்மையை வைத்து அழகு படுத்துகின்றார்கள்.

சில நேரங்களில் கரகச் செம்பில் வேப்பிலைக் கொத்து வைத்தும் கரகாட்டம் ஆடுகின்றார்கள். தொடக்க காலத்தில் மண் கரகங்களே பயன்படுத்தப்பட்டு வந்தன. மண் கரகங்களுக்கு பதிலாக பித்தளைச் செம்பைத் தற்போது கரகமாகப் பயன்படுத்துகின்றனர்.

கரகாட்டக் குழுவினர் ஆடத் தொடங்குவதற்கு முன்னர் நையாண்டி மேளத்தைத் தொட்டுக் கும்பிட்ட பிறகே கரகாட்டம் ஆடத் தொடங்குகின்றனர்.

முதலில் இரு பெண்கள் கரகத்தைத் தலையில் வைத்துக் கொண்டு கரகாட்டம் ஆடுகின்றனர். சுமார் ஒரு மணி நேரம் தலையில் கரகத்தை வைத்துக்கொண்டு ஆடுகின்றனர். கரகம் ஆடி முடிந்ததும் குறவன் குறத்தி ஆட்டம் இடம் பெறுகின்றது.

குறவன் – குறத்தி ஆட்டம் முடிந்ததும் பபூன் அல்லது கோமாளி ஆட்டம் இடம் பெறுகின்றது. பார்வையாளர்களை மகிழ்விக்க கோமாளி ஆட்டம் இடம் பெறுகின்றது.

பின்னர் மயிலாட்டம் 1/2 மணி நேரம் இடம் பெறுகின்றது. ஆண் ஒருவர் மயில்போல வேடம் அணிந்து கொண்டு மயிலாட்டம் ஆடுகின்றார். மயிலாட்டம் ஆடும் போது மயில் பற்றிய பாடல்களை நாதசுரத்தில் வாசிக்கின்றனர்.

மயிலாட்டம் முடிந்த பிறகு அரைமணி நேரம் மாடாட்டம் இடம் பெறுகின்றது. பின்னர் தொடர்ந்து கரகாட்டம் இடம் பெறுகின்றது.

கரகாட்டத்தின் முடிவில் கரகம் ஆடும் கலைஞர்களுடன் குறவன் – குறத்தி, பபூன் முதலிய அனைவரும் சேர்ந்து கையில் வண்ணக் கைக்குட்டையை வைத்துக்கொண்டு ஒயிலாட்டம் போல ஒரு நடனம் ஆடுகின்றனர்.

கரகாட்டத்தில் பல துணை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

அ. வாழைக்காய் வெட்டுதல்..

கராகட்டம் ஆடிக் கொண்டிருக்கும் போது ஒருவரைப் படுக்க வைத்து அவரது நெஞ்சில் வாழைக்காயை வைத்து விடுகின்றனர். கராகட்டம் ஆடுபவர் கண்ணைக் கட்டிக் கொண்டு, கரக ஆட்டம் ஆடிக்கொண்டு, கரகம் கீழே விழாமல், கத்தியால் வாழைக்காய் வெட்டுகின்றனர். இதனைப் பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு களிக்கின்றனர்.

ஆ. பல்லால் ஊசி எடுத்தல்...

தரையில் ஊசி வைக்கப்பட்டு இருக்கும். கரகாட்டம் ஆடுபவர், ஆட்டம் ஆடிக்கொண்டே தலையில் இருக்கும் கரகம் கீழே விழாமல், பல்லால் கடித்து ஊசியை எடுப்பார். இதன் போது பார்வையாளர்கள் உற்சாகமடைந்து தை தட்டி ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றார்கள்.

இ. தீப்பந்த விளையாட்டு...

கரகாட்டக்காரர்கள் வட்டமான தீப்பந்தத்திற்குள் நுழைந்து வெளியே வருகின்றனர். இது ஆபத்தான விளையாட்டாகும், கரகாட்டக்காரர்கள் சிறு ஏணி மீது தீப்பந்த விளையாட்டு செய்து காட்டுவதும் உண்டு.

ஈ. பித்தளைத் தட்டு ஆட்டம்...

கரகாட்டம் ஆடுபவர் அகன்ற பித்தளைத் தட்டு மீது இருகால்களையும் வைத்து தட்டை நகர்த்திக் கொண்டே கரகாட்டம் ஆடுகின்றார்கள்.

உ. சைக்கிள் ஓட்டுவது...

மதுரையைச் சேர்ந்த கரகாட்டக் கலைஞர் லட்சுமி சைக்கிள் பெடல் மீது நின்று கொண்டு ஓட்டிக் கொண்டே கரகாட்டம் ஆடுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இவ்வாறு கரகாட்டக் கலைஞர்கள் கரகாட்டத்தில் பல சாகசச்செயல்களை நிகழ்த்திக் காட்டி கரகம் ஆடி வருகின்றார்கள்.

கரகாட்டம் ஆடும்போது மாரியம்மன் மீது பாட்டுப்பாடி கரகாட்டம் ஆடுவது தவறுவதில்லை.

ஒண்ணாங் கரகமடி எங்கு முத்துமாரி
ஒசந்த கரகமடி எங்க முத்துமாரி

ரெண்டாங் கரகமடி எங்க முத்துமாரி
ரெத்தினக் கரகமடி எங்க முத்துமாரி

என்ற பாடல் எல்லோருக்கும் நன்கு தெரிந்த கரகாட்டப் பாடலாகும்...

வங்கி களை நம்பாதீர்கள்...


ஆவிகள் பற்றிய உண்மைகள் - 1...


கேள்வி: நீங்கள் கெட்ட ஆவிகள் மிகவும் கீழான நிலையிலும்..

நல்லது மேலான நிலையலும் இந்த காற்று மண்டலத்தில் உலவுவதாக சொல்கிறீர்கள்.

இந்த கீழான ஆவி பயந்த சுபாவம் உள்ளவர்களிடம் புகும் என்றும், மேலான ஆவி பிறர் உடலில் புகாது என்றும் கூறுகிறார்கள்..

இதை சற்று விளக்க முடியுமா?

ஒரு ஆத்மா (ஆசைகளோடு கலந்த உயிர்தன்மை) ஒரு உடலிலிருந்து பிரிந்த பிறகு காற்று மண்டலத்தில் மூன்று நிலைகளில் உலவுகிறது.

1, மிகவும் கீழான நிலையில் பெருத்த ஆவலுடன் கூடிய மிகவும் கீழான ஆத்மா.

2, அடுத்த நிலை நடுத்தன்மையில் உள்ள நல்லதும் கெட்டதும் கலந்த சாதரான ஆவிகள்.

3, அடுத்து மேலான நிலையில் உள்ள ஞானம் அடைய கூடிய ஆவிகள்.

மேலான மற்றும் கீழான நிலையில் உள்ள ஆவிகளுக்கு தகுந்த தாய், தகப்பன் கிடைப்பது கஷ்டம்,
ஏனென்றால் மிக மிக கெட்டவர்களும் மிக மிக நல்லவர்களும் இந்த உலகத்தில் கிடைப்பது கஷ்டம்
ஆனால் நல்லதும் கெட்டதும் கலந்த ஆவிக்கு சீக்கிரம் கர்ப்பபை கிடைத்து விடும்

பெரும்பாலும் மேலான ஆவிகள் பிறருடைய உடலில் புகாது, அவை விரும்பினால் தனக்கு தாய், தகப்பனாரை தானே தேர்ந்தெடுத்து கொள்ள முடியும், ஆனால் மற்ற நிலையில் அவற்றினால் முடியாது.

ஆனால் சில மேலான ஆவிகள் ஒருசில காரணம் கருதி ஒரு தகுந்த பிறர் உடலில் புகுந்து விடலாம்.

ஏனென்றால் அவற்றுக்கு மறுபிறப்பு எடுத்து குழந்தை பருவம், வாலிபப்பருவம் , என்று காலத்தை கடந்து செல்ல விரும்புவது இல்லை
சீக்கிரமே மக்களுக்கு சேவை செய்ய நினைக்கும் அந்த மேலான ஆவிகள் ஒரு சிலரிடம் புகுந்து மக்களை நல்வழிபடுத்த முயலும்.

உதாரணமாக : வேதம் எழுதியவர்கள் இதை கடவுளே வந்து அருளினார் என்று சொன்னதாக கூறபடுகிறது.

கடவுள் வந்து நேரடியாக எதுவும் சொல்ல மாட்டார்.

இந்த நல்ல ஆத்மாக்கள் அவர்களது மனதை ஆக்கிரமித்து காலத்துக்கு ஏற்றவாறு அறிவுரைகள், கொள்கை, கோட்பாடுகளை அறிவிக்கும்.  அப்பொழுது அவர்கள் அறியாமலேயே அவர்கள் எழுதுவார்கள்...

கூகுள் அமினிசியா...


அன்பு...


சில அன்பானவர்கள் தவறு செய்து விட்டு கடைசியில் முகத்தை இப்படி வைக்கும் போது...

மேலும் சிரிப்புகலந்த அன்பு அதிகம்  ஏற்படுகிறது அவர்கள் மீது..

உத்து பாருங்க முகத்த...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


பண்டைய சுமேரியா, "கடவுள்களின் நிலம்" என்று அறியப்படுபவை, தெற்கு மெசொப்பொத்தேமியாவில் (நவீன ஈராக்) 4500 முதல் 4000 ஆண்டுகளுக்கு இடையில் நிறுவப்பட்டது. வரலாற்றில் இதுவரை நிறுவப்பட்ட முதல் நாகரிகங்களில் இதுவும் ஒன்று,

அதன் மக்கள் விவசாயத்திற்கான சதுப்புநிலையை, வர்த்தக வளர்ச்சியுற்றது, நெசவு, உலோகம் மற்றும் மட்பாண்டங்கள் போன்ற நிறுவப்பட்ட தொழிற்சாலைகள் கொண்டு வாழ்ந்து வந்தனர்.
ஒவ்வொரு நகரம் ஒரு குறிப்பிட்ட கடவுளால் அல்லது தெய்வத்தால் பாதுகாக்கப்பட்டு, நகர மையத்தில் கட்டியிருக்கும் பெரிய கோவில்களில் குடியிருந்தனர்.

1.அனு (Anu) பரலோகத்தின் தேவன். மெசொப்பொத்தேமியன் பெருங்கடல் ஆளுநராக இருந்தார். பரலோகத்தின் மிக உயர்ந்த பிராந்தியத்தில் வாழ்ந்து, குற்றங்கள் செய்தவர்களை நியாயந்தீர்க்கும் ஆற்றலைக் கொண்டிருக்கும் விண்மீன்களின் தலைவனும், ஆத்மாக்களின் தலைவனுமானவர்,

2.என்லில்(Enlil) வானத்தின் கடவுள். காற்று மற்றும் திறந்த இடைவெளிகளுடன் தொடர்புடைய நிப்பூர் நகரத்திற்கு ஆதரவாக இருந்தார். ஏனென்றால் அவர் வானத்தில் ஆட்சி செய்தார். மனிதர்களை உருவாக்க உதவியது Enlil, ஆனால் அவர் விரைவில் அவர்களின் குழப்பம் எரிச்சல் காரணமாக, ஒரு பெரிய வெள்ளத்தால் அவர்களை மூழ்கடித்து அவர்களை கொல்ல முயற்சித்தார்.

3.எங்கி (Enki) நன்னீர் தேவன். எரிடூ நகரத்தின் புரவலர் ஆவார். அவர் பூமியில் விமானத்தில் (பறக்கும்தட்டு) வந்து அனைவருக்கும் அறிவு, கைவினை வழங்கிய மற்றும் படைப்பாளிக்குரியவர் என அறியப்பட்டார். அவர் 'என்னை' என்று அழைக்கப்பட்ட ஒரு தெய்வீக சக்தியின் கவசமாக இருந்தார், இது கல்வெட்டுகள் மீது எழுதப்பட்டிருந்தது. அவர் பெரும்பாலும் ஒரு கொம்பு கிரீடத்துடன் சித்தரிக்கப்படுகிறார்.

4.என்பிலு (Enbilulu) நதிகளின் கடவுள். தீபிராஸ் மற்றும் யூப்ரடீஸ் நதிகளின் பொறுப்பில் இருந்தார்.மிகவும் புனிதமானதாக கருதப்பட்டவர். அவர் வேளாண்மையின் ஆளுநராகவும், பாசன மற்றும் விவசாயத்திற்கான கைவினைப் பயிற்சியாளராகவும். பூமியின் மேலேயும் கீழேயுள்ள தண்ணீரின் இரகசியங்களையும் அவர் அறிந்திருந்தார், எல்லாவற்றையும் செழிப்பாக்குவதற்கு அவருக்கு அதிகாரம் இருந்தது.

5.நர்கல் (Nergal ) இறப்பின் கடவுள், குத்தாவில் வசித்து வந்த ஒரு சாத்தானின் தெய்வம். அவர் அடிக்கடி அரை மனிதன் சிங்கம், "சீற்றம் உடையவர்" என்று அழைக்கப்படுகிறார். அவர் சந்திரனைப் பிரதிநிதித்துவம் செய்கிறார், இருள், குழப்பம் ஆகியவற்றைக் கொண்டுவருவார், இதனால் அவரை போர், பஞ்சம் மற்றும் கொள்ளைநோயுடன் தொடர்புபடுத்துகிறார். அவர் நெட்வொர்த் தலைவராகவும் இருந்தார், அங்கு அவர் இறந்த ஆன்மா ஆத்மாவை ஆளுகை செய்தார்.

6. நானா (Nanna) நிலவின் கடவுள். ஊர் நகரத்தின் தலைமையில் "ஞானத்தின் ஆண்டவர்" என பொதுவாக அறியப்பட்டார். அவர் விஞ்ஞானம், வானியல் மற்றும் ஜோதிடம் பற்றிய புனிதமான அறிவைப் பெற்றார். நானா பெரும்பாலும் செவ்வாயில் நிலவு முழுவதும் ஒரு பெரிய, இறகுடைய பறக்கும் காளை என வழங்கப்பட்டது. விண்வெளி அமைப்பில் அவர் எண் 30 (ஒரு சந்திர மாதத்தில் சராசரியாக நாட்கள் எண்ணிக்கை குறிக்கிறது) மூலம் குறிக்கப்படுகிறது.

7. நிந்தூர்த்தா (Ninurta) (போர் கடவுள்) லாகசின் ஆண்டவராக இருந்தார், ஷாருர் என்று அழைக்கப்படும் மாயாஜாலத் தோற்றத்துடன் அடிக்கடி சித்தரிக்கப்படுகிறார். யுத்தம் ஒரு போதகராக மட்டுமல்லாமல், அவர் காயம், நோய் மற்றும் பேய் உடைமை ஆகியவற்றிலிருந்து மனிதர்களை விடுவிப்பதற்காக உதவினார். இது என்னி, புதிய நீர் இறைவன், நின்ருடா போரின் வழிகளிலும் கர்மயோக மற்றும் அறிவியலிலும் வழிகாட்டியுள்ளார்.

8. உத்து (Utu) (சூரியனின் கடவுள்) சத்தியம், நீதி, சட்டம் ஆகியவற்றின் பொறுப்பாளராக இருந்தார். அவர் பொதுவாக ஒரு ஹெல்மெட் அணிந்த ஒரு மனிதன், ஒரு சூரியன் வட்டு பிடித்து ஒரு ரம்பம் வாள் சுமந்து சித்தரிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் Utu கிழக்கில் ஒரு மலையிலிருந்து உருவாகிறது, பூமி முழுவதும் ஒரு இரதத்தில் பயணம் செய்து, மேற்கில் ஒரு குகையில் மீண்டும் வருவதற்கு முன் (விடியல், மதியம் மற்றும் சூரியன் மறையும் நேரம்). ஒவ்வொரு இரவும் இறந்தவர்களின் தலைவிதியை முடிவு செய்வதற்க்கு பாதாளத்தில் இறங்குகிறார்.

9. கெர்ரா (Gerra) (தீயின் கடவுள்), "கடவுளே எல்லாருமே அதைப் புரிந்து கொள்ள முடியாதபடி" ஞானத்தையும் திறமையையும் கொண்டிருப்பதாக கூறப்பட்டது. தீய சக்திகளின் மக்களை சுத்தப்படுத்துதல் மற்றும் மனிதனுக்குத் தெரிந்த எந்த ஆயுதத்தையும் மாத்திரமடையச் செய்யக்கூடிய சக்திவாய்ந்த உலோகங்களை சுத்திகரிக்கும் திறனைக் கொண்ட "தீ மற்றும் கயிறின் இறைவன்" என அவர் தம்மைப் பின்பற்றுபவர்களை அறிந்திருந்தார். அவர் போரில் தோல்வியுற்றவர் என்று கூறப்பட்டது.

10 டமுஸ் (Tammuz) (தாவரங்களின் கடவுள்) உணவு மற்றும் உண்ணாவிரதத்துடன் தொடர்புடையவராக இருந்தார். அவர் வசந்த காலத்தில் மிகுதியாகவும், இலையுதிர்காலத்தில் வாழ்க்கையின் வீழ்ச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். மெசொப்பொத்தேமியாவின் மரணத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக கோடை காலத்தை கடந்து வந்தார், மேலும் பல சடங்குகள் Tammuz இன் பெயரில் நடைமுறையில் இருந்தன, வருவதற்கு அவர் வருத்தப்படுவதோடு, வருங்கால வருகைக்கு திரும்புவதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

11. மெர்டுக்(Marduk) புயல்களின் கடவுள், பாபிலோனியப் பேரரசின் தலைவராக மெதுவாக அதிகாரம் பெற்றார். அவர் தீர்க்கதரிசனம், உயிர்த்தெழுதல் மற்றும் இடியுடன் தொடர்புடைய ஒரு சிக்கலான கடவுள். தெய்வங்களுக்கும் அவர்களது ஊர்வலத்திற்கும் இடையிலான உள்நாட்டு யுத்தத்தின் போது அவர் அதிகாரத்திற்கு வந்தார். மார்த்தூக்கு டிமயாட்  கைப்பற்றியது, அவரை கடவுளான அரசரின் நிலைக்கு உயர்த்தினார், வானத்திலும் பூமியிலும் ஆட்சி செய்தார்.

12. நாபு (Nabu) மறைநூல் அறிஞரின் கடவுள். ஞானத்திலும், எழுத்துத்திலும் வல்லவர். அவர் மார்த்திக்கின் மகனாக இருந்தார், அவருடைய எழுத்தாளர் மற்றும் அமைச்சராகவும் செயல்பட்டார், இறுதியில் மனிதகுலத்தின் தலைவிதியைப் பதிவு செய்திருந்த டேஸ்டின் ஆப் டேஸ்டின் கீப்பர் ஆனார். ஆரம்பத்தில் அவரது தந்தை மார்டுக்கிற்கு சொந்தமான ஒரு இறக்கை டிராகன் (Reptilian)மீது அவர் சவாரி செய்கிறார்…

என்னத்தை சொல்ல...


ஐஸ் சாப்பிட்டால், உடல் எடை குறையும்...


உங்கள் எடையைக் குறைக்கும் பொருட்களில் முதன்மையான பொருளாக ஐஸ் க்ரீம் உள்ளது என்றும், உங்கள் உடலில் உள்ள அதிகபட்ச கலோரிகளை எரிக்கும் தன்மை ஐஸ் க்ரீமுக்கு உண்டு என்றும் ஆய்வு முடிவுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, இப்பொழுது ஐஸ் க்ரீமுடன் உங்கள் எடை குறைப்பு முயற்சிக்கான உணவை சாப்பிடத் தொடங்கவும் என்று குறிப்பிட்டால், நீங்கள் அதிர்ச்சி அடைய வேண்டாம்.

ஐஸ் க்ரீம் சாப்பிட்டால் கலோரிகளை குறைத்து, அதிக பட்ச கொழுப்பை குறைக்கத் தொடங்குங்கள். அதிகபட்ச கொழுப்புகளை குறைக்கும் திறன் ஐஸ் உணவிற்கு உள்ளதால், எடை குறைப்பு ஆசான்கள் அதனை பரிந்துரை செய்கிறார்கள்.

ஐஸ் சாப்பிட ஆரம்பித்த சில மாதங்களுக்குள்ளாகவோ உங்களால் உங்களுக்குப் பிடித்த உடையை சிக்கென்று அணிந்து கொள்ள முடியும்.

ஐஸ் சாப்பிடுவதன் மூலமாகவே உங்களால் எடையைக் குறைக்க முடியும் என்பதை இன்னமும் நம்ப முடியவில்லையா?

மேலும் சில எடை குறைப்பு ஆலோசகர்கள் முழுமையான ஐஸ் டையட் எடுத்துக் கொள்வதையும் பரிந்துரைக்கிறார்கள்.

ஐஸ் கொண்டு கலோரிகளைக் குறைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துங்கள்.

ஐஸ் க்ரீம் உங்களுக்கு மிகப்பிடித்தமான உணவுகளில் ஒன்றாக இருந்தாலும், அது உங்கள் இடுப்பின் அளவுகளில் எந்தவித மாற்றங்களையும் கொண்டு வருவதில்லை.

எனினும், நீங்கள் அதனை ஒரேயடியாக சாப்பிடாமல் தவிர்த்துக் கொள்ளும் போது, உங்கள் உடலில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

ஐஸ் க்ரீம்கள் சாப்பிடுவதால் உடனடியாக எடை குறையாத போதும், எடை குறையும் போது ஐஸ் க்ரீமின் பங்கும் முக்கியான அளவில் இருக்கும்.

உங்களுக்கு மிகவும் பிடித்தமான உணவை ஒரேயடியாக தவிர்ப்பதன் மூலம், அதைச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை அதிகரிக்கக் கூடும்.

இதன் காரணமாக உங்களுடைய எடை குறைப்பு திட்டம் ஒரு தண்டணை என்றும் கூட உங்களுக்குத் தோன்றும்.

இதன் காரணமாக மொத்த திட்டமும் பாழாகி விடும்.

நீங்கள் ஐஸ் கொண்டு கலோரிகளை குறைக்க விரும்பினால், அதனை முழுமையாக சாப்பிடாமல் விட்டு விட வேண்டாம்.

‘ஐஸ் கொண்டு கலோரிகளை எரித்திடுங்கள்’ இதுதான் ஊட்டச்சத்து வல்லுநர்கள் பரிந்துரை செய்யும் மந்திர வார்த்தைகள்.

ஐஸ் சாப்பிடுவதால் பெருமளவு எடை வேகமாக குறைந்து விடாமல் போனாலும், ஒரு சில கலோரிகள் குறைய ஐஸ் காரணமாக இருப்பதை மறுத்து விட முடியாது.

ஐஸ் சாப்பிடுவதன் மூலமாக உடலின் தசைகளும் சற்றே இயங்கத் துவங்கும். அவ்வாறு இயங்குவதற்கு சிறிதளவு திறன் தேவைப்படும். இது ஐஸ் கொண்டு கலோரிகளை எரிக்கும் வழிகளில் ஒன்றாகும்.

ஐஸ் சாப்பிட்டுக் கொண்டே நீங்கள் கலோரிகளை எளிதில் எரித்து, எடையை குறைக்க முடியும்.

ஐஸ் க்ரீம் சாப்பிடுவது மட்டுமே அதிகபட்ச கலோரிகளை எரிப்பதற்கான வழி கிடையாது. ஐஸ் சாப்பிடுவதாலும் கலோரிகளை எரிக்க முடியும் என்று பரிந்துரை செய்ய மட்டுமே முடியும்.

உணவு கட்டுப்பாடு என்று வரும் போது ஐஸ் க்ரீம் மோசமான இடத்தையே பிடிக்கிறது.

ஐஸ் க்ரீம்களில் பருப்புகள் மற்றும் கொழுப்பு மிக்க பொருட்கள் கலந்திருப்பதனால் தான் இந்த மோசமான இடம்.

அரை கப் ஐஸ் க்ரீமை, இது போன்ற பருப்புகள் மற்றும் கொழுப்புகளுடன் சாப்பிட்டால், அது 250 கலோரிகளை சாப்பிட்டதற்கு சமமாகும்.

உங்களுடைய உணவு கட்டுப்பாட்டுத் திட்டத்தில், எவ்வளவு கலோரிகள் உணவை சாப்பிடுகிறீர்கள் மற்றும் எவ்வளவு கலோரிகளை வேலை செய்து எரிக்கிறீர்கள் என்றே கணக்கிடப்படும்.

இந்த இரண்டு அம்சங்களையும் நீங்கள் கணக்கில் கொண்டு உணவு உண்டு, வேலை செய்து வந்தால் எடை குறைப்பது மிகவும் எளிமையான பணி தான்...