06/08/2018

உயிர்த்தெழுதல் பார்வை இரண்டு...


சென்றப் பதிவில் சன் ஆஃப் காடு
(Son Of God) என்கின்ற திரைப்படத்தின் அஸ்திவாரத்தை பார்த்தோம் இதிலேயே அதிகமான குளறுபடிகள் இருக்கின்றன.

1.யூதாஸ் இயேசுக்கு முத்தம் கொடுத்துக் காட்டிக் கொடுக்க வில்லை மாறாக இயேசுவே மனமுவந்து காவலர்களிடம் தன்னை ஒப்புவித்தார்.

மேற்ச்சொன்னச் சம்பவம் மத்தேயு மற்றும் மாற்கு சொல்கின்றனர் அதை நிராகரிக்கும் விதமாக
(யோவான்:18:1−7)ல் பார்க்கலாம்.

2.ஒரு கண்ணத்தில் அடித்தாள் மறு கண்ணத்தை காட்டுங்கள் என்ற இயேசுவின் போதனைகளை அவறே பின்பற்ற வில்லை ஆதாரம் (யோவான்18:22−23)

3.யூதாஸ் தான் தன்னை காட்டிக்கொடுப்பான் என்கின்ற முன்னறிவிப்பை இயேசு ஏற்கனவே செய்திருக்க காட்டி கொடுத்தவனை விட்டுவிட்டு காவலரை வெட்டியது அபத்தத்திலும் அபத்தம்.
(மத்தேயு:26:25)

4.இயேசுவுக்கு குடிக்கக் கொடுத்த திராட்சை இரசம் கசப்பு கலந்ததா?அல்லது வெள்ளைப் போலம் கலந்ததா?என்கின்ற கருத்துவேறுபாட்டை நீங்கள் (மத்தேயு−27:34)மற்றும்(மாற்கு−15:23)ல் காணலாம்.

5.அந்த திராட்சை இரசத்தை இயேசு குடித்தாரா இல்லையா என்று கருத்து மோதல்களையும் நீங்கள்
(யோவான்−19:30) காணலாம்.

6.சிலுவையின் நேரத்திலும் குளறுபடி மாற்கு சொல்கிறார் காலை ஒன்பது மணி என்று யோவான் சொல்கிறார் நண்பகல் வேளை என்று
(யோவான்−19:14)

மேலும் கிறித்துவ ஆலயங்களில் இருவருக்கும் மதிப்பளிக்காமல் இயேசு மூன்று மணிக்கு மரித்துப் போனதாகக் கருதி அவ்வேளையில் சிலுவைப் பாதையை செய்கின்றனர்.

7.வலது,மற்றும் இடதில் இருந்த கள்வர்கள் இயேசுவை இகழ்ந்தும் உள்ளார்கள்.(மத்தேயு−27:44)

8.ஆடையின் நிறம் இது தான்,இல்லை இல்லை இது தான் (மத்தேயு−27:28) (யோவான்−19:2)

9.இயேசுவின் கடைசி வார்த்தை இது தான்,தவறு இது தான்,
(மத்தேயு−27:46) (லூக்கா−23:46)

இயேசு இறக்கும் பொழுது யாரை அழைத்தார்?அவர் தானே இறைவன் என்கிறீர்கள் அப்பொழுது அவருக்கும் மேலாக யார் உள்ளார்.இறைவன் இறந்துவிட்டால் இவ்வுலகம் எப்படி செயல்படும்?

10.கல்லறையில் மூடப்பட்ட கல்லின் அளவானது படத்தில் காட்டுவது போல் பல டன் கணமுள்ள கல் ஒன்றுமில்லை அது ஒரு மனிதர் சாதாரணமாக உருட்டும் அளவு தான் இருந்தது
(மத்தேயு−27:60)இந்நிலையில் அப்பாறையை அகற்றி எப்படி உடலை வெளியே எடுத்திருக்க முடியும் எனக் கேட்பது மடமை.

11.சிலுவையில் தொங்கவிடப்பட்டிருந்த வசனத்திலும் கருத்து மோதல்கள் தென்படுகின்றன.(லூக்கா−23:38)
(யோவான்−19:19) (மாற்கு−15:26)

12.இயேசு காட்சியளித்த விதத்தின் பின்னனி:

மரித்துப் போன இயேசு தன் தாயைக் காண்பதற்கு மாறுவேடத்தில் வந்திருந்தார்.ஏற்கனவே யூதர்களால் கொல்லப்பட்ட இயேசு மறுபடியும் மாறுவேடத்தில் சாவுக்குப் பயந்து ஏன் மறைந்து வரவேண்டும் என்கின்ற கேள்வி எழுகின்றது."மனிதர் ஒரேமுறை சாவுக்கு உட்படுகிறார்.பின்னர் இறுதிதீர்ப்பு வருகிறது.

(எபிரேயர்−9:27) அவர் முதல் தடவை சாகவில்லை என்பதற்காகவே இம்மறை மாறுவேடத்தில் வந்திருக்கிறார் மேலும் இவ்வசனம் அதனை தெளிவும் படுத்துகிறது(லூக்கா−20:35−36)

13.மரியாள் கல்லறைக்கு எந்த நேரத்தில் சென்றார் என்ற பகுதியில் சர்ச்சைகள் குடிகொண்டுள்ளன.

14.மேலும் இறந்து மூன்று நாட்களான பிணத்தின் கதியை உங்களுக்கேத் தெரியும் அப்பிணத்திற்கு மரியாள் நறுமணங்களை பூசச் சென்றுள்ளதாகவும் கதைகள் ஆர்ப்பறிக்கின்றன.(லூக்கா−23:56)

15.காட்டிக் கொடுத்ததாக சொல்கின்ற யூதாஸும் இரு வேறாக இறந்துள்ளான் ஒன்றில் தூக்குப்போட்டு மற்றொன்றில் வயிறு வெடித்து குடல் சிதறியும்.

16.கல்லறைக்குச் சென்றது எத்தனைப் பெண்கள் என்பதிலும் குழப்பங்கள்!

17.கல்லறையில் தோன்றிய வானவர்கள் ஒருவர் என்று மத்தேயு மொழிய அதனை மறுத்த லூக்கா இருவர் என்கிறார்.

18."அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்"(மத்தேயு−28:7)

என்று வானதூதர் மகதலா மற்றும் மரியாவிடம் சொன்னதாக மத்தேயுவும்.
"உயிரோடு இருப்பவரை கல்லறையில் தேடுவதேன்?"(லூக்கா−24:5)என்று வானதூதர்கள் மகதலா மரியாவிடம் கேட்டதாக லூக்காவும் பதிவு செய்துள்ளனர் இதில் எந்த சட்டம் சிறந்த சட்டமோ அதற்கு ஏற்றவாறு நாமும் நம்பலாம்.

19.சிலுவையில் மரித்ததாக சொல்லும் இயேசு கிறிஸ்து பின்பு உடலோடு வந்ததாகவும் சாப்பிட்டதாகவும் விவிலியம் நமக்கு பரிசாற்றுகிறது. இறந்தப் பின் ஆவியானவர் எப்படி உண்ணவும் பகிரவும் இயன்றிருக்கும். இதிலிருந்து சிலுவை மரணம் எனப்படுவது கேள்விக்குரியதாகிறது?
(லூக்கா−24:40−41)

20.இது தான் குழப்பம் என்றால் இதனை தொகுத்தவரையும் குழப்பம் விட்டுவைக்கவில்லை..

ஒரு இடத்தில் இயேசுவின் குரலை மற்றவர்கள் கேட்டதாகவும், மற்றுமொறு இடத்தில் கேட்கவில்லை எனவும் பவுல் அடிகளார் விலாசித்தள்ளியுள்ளார்.
(திருத்தூதர் பணிகள்−9:7−22:9)

உயிர்த்தெழுதல் சம்மந்தப்பட்ட ஆதாரங்களை மட்டும் தான் நான் இங்கு குறிப்பிட்டுள்ளேன்.இதனை தவிர்த்த முரண்பாடுகள் ஏராளம்..

இறுதியாக இயேசு சிலுவையில் அறையப்பட்டாரா?அல்லது இல்லையா? என்ற கேள்வி இப்பொழுது உங்களை ஆட்கொள்ளும் பொறுங்கள் அடுத்தப் பதிவில் சந்திக்கிறேன்.

- தொடரும்...

சிலுவை யுத்தங்கள் − 19...


இரண்டாவது சிலுவைப் போர் (கி.பி − 1147 − 1149) −3...

எகிப்தின் பாதிமிய்ய ஆட்சியும், நூருத்தீன் ஸன்கீயும்:

இக்காலப் பகுதியில் எகிப்தில் தன்னாதிக்கம் செலுத்தி வந்த பாதிமிய ஆட்சியாளரின் ஆதிக்கம் கைப்பற்றுவதற்கான போட்டியும் சதிமுயற்சிகளும் வேர்விடத் தொடங்கியிருந்தன.அப்போது பாதிமிய கலீபாவாக எகிப்தில் ஆட்சி புரிந்த "அல் ஆழித் லி தீனில்லாஹ்"என்பவர் அதிகார வலிமையற்றவராகக் காணப்பட்டார்.அவர் சகல அதிகாரங்களையும் தமது அமைச்சர் "ஷாவர் அஸ்ஸஅதீ" என்பவரிடம் ஒப்படைத்திருந்தார். இதனால் பொறாமையுற்ற அரசவை அமைச்சர் "ழிர்ஆம்" என்பவர், சிலுவை வீரா்களின் உதவியோடு ஷாவர் அஸ்ஸஅதீயைத் துரத்தி விட்டு அமைச்சர் பதவியைக் கைப்பற்றிக் கொண்டார்.

பதவியைப் பறிகொடுத்த ஷாவர் அஸ்ஸஅதீ,நூருத்தீன் ஸன்கீயிடம் சென்று தமக்கு உதவினால் நூருத்தீனின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்வதோடு கப்பம் செலுத்துவதாகவும், சிலுவை வீரா்களை விரட்டுவதற்கு எகிப்தியப் படைகளைத் தந்துதவுவதாகவும் கூறி,இராணுவ உதவி கோரினார்.

இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நூருத்தீன் தமது தளபதி 'ஷிர்கோ' என்பவரின் தலைமையில் ஹி.559 (கி.பி.1164) சிறு படையொன்றை எகிப்துக்கு அனுப்பிவைத்தார். இப்படையின் உதவியினால் ஷாவர் அஸ்ஸஅதீ மீண்டும் அமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டார். உதவியைப் பயன்படுத்தித் தனது பதவியை நிலைப்படுத்திக் கொண்டதும் நூருத்தீனுக்கு ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை மறந்து, சிலுவை வீரா்களுடன் கூட்டினைந்து,நூருத்தீனின் தளபதி ஷிர்கோவை எகிப்தை விட்டும் பலவந்தமாக வெளியேற்றிவிட்டார்.

எனினும்,ஹி.562ல்(கி.பி.1167) தளபதி ஷிர்கோ மீண்டும் எகிப்தினுள் பிரவேசித்தார். இவரைத் தனியாக எதிர்கொள்ள முடியாத ஷாவர்அஸ்ஸஅதீ சிலுவை வீரா்களின் உதவியையும் பெற்றுக் கொண்டார். பிரஞ்சுக்காரா்களையும் எகிப்தியரையும் கொண்டிருந்த ஷாவரின் படைக்கும் நூருத்தீனின் தளபதி ஷிர்கோவின் படைக்கும் இடையே பாபைன் எனுமிடத்தில் நடந்த போரில் ஷாவரின் படைத் தோல்வியடைந்தது.அதைத் தொடர்ந்து ஷிர்கோ அலக்ஸாந்திரியாவையும் கைப்பற்றிக் கொண்டார்.

இந்த வெற்றியின் பின் அலக்ஸாந்திரியாவை விட்டும் வெளியேறிய பிரஞ்சுக்காரா்கள்,தமது படையின் ஒரு பகுதியினரை அங்கு விட்டுச் சென்றிருந்தனர். காலப்போக்கில் அப்படையினரின் தொல்லைகளையும் அட்டூழியங்களையும் சகிக்க முடியாத எகிப்து மக்கள் பாதிமிய ஆட்சியாளர்களிடம் முறையிடலாயினர்.

இறுதியாக பாதிமிய கலீபா ஆழித் எஞ்சிய பிரஞ்சுக்காரா்களையும் நாடுகடத்த நூருத்தீனிடம் மீண்டும் உதவி கோரினார்.அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நூருத்தீன் ஸன்கீ மீண்டும் ஷிர்கோவையே பெரும் படையுடன் அனுப்பிவைத்தார். இவரது வருகையை அறிந்த பிரஞ்சுக்காரா்கள் எகிப்தை விட்டும் சென்று விட்டனர்.

இவ்வெற்றியைத் தொடர்ந்து நூருத்தீன் ஸன்கீ எகிப்தின் தளபதியாகவும் அமைச்சராகவும் ஷிர்கோவையே நியமித்தார். சுமார் இரு வருடங்களின் பின் ஹி.564(கி.பி.1169) ஷிர்கோ மரணமாகவே,அவரோடு எகிப்துக்குச் சென்றிருந்த அவரது சகோதரரது மகன் ஸலாஹுத்தீன் யூஸுப் என்பவர் அப்பதவியை ஏற்றுக்கொண்டார்.

அடுத்தப் பதிவில் இருந்து ஸலாஹுத்தீன் ஐயூபியின் பக்கங்கள்...

- தொடரும்.....

உயிர்த்தெழுதல் பார்வை ஒன்று...


படைவீரா்கள் அணிவகுத்து ஊருக்குள் வந்துக்கொண்டிருந்தபொழுது
பார்க்கும் ஒவ்வொருவரையும் அச்சப்படும் பார்வையில் நோக்கியவாறு வந்தன.

படைவீரா்களுள் யூதாசும் இருந்தான்.படைவீரா்களை வழிநடத்திச் சென்றுகொண்டிருந்தான் மக்கள் கூட்டத்தில் இருந்த இயேசுவிடம் சென்று, "போதகரே வாழ்க எனக் கூறிக் கொண்டே அவரை முத்தமிட்டான்".

வந்தப் படை இயேசுவை சுற்றி வளைத்து கைது செய்தது.இயேசுவை கைது செய்த மாத்திரத்தில் பேதுரு திடீரெனப் பாய்ந்து தன் வாளை உருவி தலைமை காவலரின் காதைத் துண்டித்தான்....

ஒரு கண்ணத்தில் அறைந்தாள் மறு கண்ணத்தைக் காட்டுங்கள் எனப் போதித்த இயேசு தலைமைக் காவலர் கேட்டக் கேள்விகளுக்கு மறுமொழி கூறும் பொழுது பலத்த சத்தத்துடன் இயேசுவின் கண்ணத்தில் அறைந்தார்.

ஆனால் இயேசுவோ மறு கண்ணம் காண்பிக்காமல் நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக் காட்டுங்கள் அல்லது சரியாகப் பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்? என்றார்.

இயேசுவை அடித்துத் துன்புறுத்தி காவலர்கள் நடக்கவைத்து செல்லலானர்கள். அக்கணம் இயேசுவின் ஆடை அவிழ்க்கப்பட்டு கருஞ்சிவப்பு நிறமுள்ள ஆடையை கசையால் அடித்து அடித்து அணிவித்தனர்.

பின்பு,போதாகுறைக்கு அவருடைய முதுகில் சிலுவையை சுமக்கச் சொன்னார்கள்.இயேசு சிலுவையைச் சுமந்து கொண்டு மண்டையோட்டு (கொல்கொதா) இடத்திற்கு வந்தபோது படைவீரா்கள் இயேசுவுக்கு கசப்புக் கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள்...

அந்த இரசத்தைக் குடித்ததும் இயேசு, எல்லாம் நிறை வேறிற்று என்று கூறித் தலைசாய்த்து ஆவியை ஒப்படைத்தார்...

பின்பு,அவருடைய தலையில் முள் கிரீடம் ஒன்று மாட்டப்பட்டது. கை, கால்களை சிலுவையில் வைத்து ஆணி அடிக்கப்பட்டது

இயேசுவை கொலை செய்வதற்காகச் சிலுவையில் அறையத் தொடங்கிய போது மணி சரியாக காலை ஒன்பது இருக்கும்...

இயேசுவின் வலப்புறமும் இடப்புறமும் கள்வர்கள் இருவர் அறையப்பட்டிருந்தார்கள்...

இறுதியில் உயிர் பிரியும் தருவாயில் இயேசு உரத்தக்குரலில் சப்தமிட்டு என் இறைவா,என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்? என்றார்...

குற்ற அறிக்கை ஒன்றைக் கொண்டு வந்த பிலாத்து அதனை இயேசுவின் சிலுவையில் மாட்டினான்.அதில் "நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்" என எழுதப்பட்டிருந்தது...

சிலுவையில் பிணமாகத் தொங்க விடப்பட்டிருந்த இயேசுவின் உடலை இறக்கி கல்லறைக்குள் வைத்து பெரிய பாறையை உருட்டி கல்லறையின் வாயிலில் காவலர்கள் வைத்தனா்.

மூன்று நாட்கள் கழித்து கல்லறையில் இருந்த இயேசுவின் உடல் காணாமல் போயிருந்தது.அவர் மீண்டும் உயிர்தெழுந்து சென்றதாக மக்கள் பேசத்தொடங்கினா்...

பத்து வெள்ளி நாணயங்களுக்கு காட்டிக் கொடுத்த யூசாசு அந்த நாணயங்களை தூக்கியெறிந்துவிட்டு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்...

இதுவே நாம் விவிலியத்திலும் படங்களிலும் பார்த்த படித்த கதைகள் ஆனால் இதற்கு நேர்மாற்றமாக சில ஆதாரங்கள் இருக்கின்றன அதனை அடுத்தப் பதிவில் பார்ப்போம்...

- தொடரும்.....

உலகத்தில் எங்கோ ஓர் மூலையில் ஆங்காங்கே நடக்கும் சில அதிபயங்கரமான விஷயங்கள், செய்திகளாக இருந்தால் கூட, நமக்கு விந்தையாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கத்தான் செய்கிறது. அப்படி ஒரு விந்தையான செய்திதான் இது...


திடீர் திடீரென்று மனிதர்கள் உட்கார்ந்த மாத்திரத்திலேயே இறந்துபோவது, இதுதான் அந்த ஆச்சர்ய செய்தி.

செய்தியைச் சொன்னதுமே புருவங்கள் விரிகிறது அல்லவா? அதெப்படி மனிதன் தானாக எரிந்துபோக முடியும்? என்ற நம்முள் எழும் சாதாரண கேள்விகள்தான் விஞ்ஞானிகளுக்கும்...

இது போன்ற சம்பவங்கள் கடந்த 300 ஆண்டுகளில் 200 சம்பவங்கள் நடந்துள்ளது. 300 வருஷத்திற்கு இவ்வளவுதானே என்று எளிதாக ஒதுக்கிவிடும் விஷயம் அல்ல இது. காட்டில் இரண்டு மூங்கில் மரங்கள், ஒன்றுக்கொன்று உரசிக் கொள்வதன் மூலம், காட்டுத்தீ ஏற்படுகிறது என்பதை நாம் படித்திருப்போம். அதேபோல காய்ந்த சருகுகள், உச்சபட்ச வெய்யிலில் தீப்பற்றி எரிவதையும் நாம் பார்த்திருப்போம். ஆனால், சற்றும் நம்ப முடியவே முடியாதபடி மனிதன் எப்படி தானாக எரிய முடியும்?

1673 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு நீதிமன்றம் ஒரு விசித்திரமான வழக்கை சந்தித்தது. கணவன் மனைவிக்கு இடையே சண்டை. இதில் மனைவி தீப்பிடித்து இறந்துவிட்டாள். கொன்றது கணவர் என்பதுதான் வழக்கு. நீண்டநாள் நடந்த பரபரப்பான இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கும் இறுதி நாளும் வந்தது. இந்த வழக்கில், கணவர் குற்றமற்றவர்; அவர், மனைவியை தீ வைத்து கொலை செய்யவில்லை. அவர் மனைவி தானாகவே தீப்பற்றி எரிந்துபோனார் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு எல்லாருக்கும் திகைப்பாக இருந்தது. மருத்துவ பரிசோதனைக் குழுவும் நீதிபதியின் தீர்ப்பை ஆமோதித்திருந்தது. இப்படி மனிதர்கள் தானாக தீப்பற்றி எரிந்துபோவதை ஸ்பான்டேனியஸ் ஹியூமன் கம்பஷன் என்று மருத்துவ உலகம் பெயரிட்டது.

இதேபோல ஒரு சம்பவம் 1951ஆம் ஆண்டு ஜூலை இரண்டாம் தேதி வாக்கில் நடந்தது. இம்முறையும் ஒரு பெண்மணிதான். அவர் பெயர் மேரி ரீசர் 67 வயதான இந்த மூதாட்டியை பார்க்க அவர்களது உறவினர்கள் வீட்டிற்கு வந்தபோது, வீட்டிற்குள் ஏதோ எரிந்துபோன நெடி வீசியது. பதற்றத்துடன் கதவைத் திறந்து பார்த்திருக்கிறார்கள். அங்கு,மேரி ரீசர் நாற்காலியில் அமர்ந்தபடி தீப்பிடித்து இறந்துகிடந்தார். இதைப் பார்த்த உறவினர்களுக்கு அதிர்ச்சி. பிரேத பரிசோதனை, தடயவியல் சோதனை இப்படி எல்லா பரிசோதனைக்குப் பிறகு மருத்துவ அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த மருத்துவ அறிக்கையில் மேரி ரீசர் தானாக எரிந்துபோயுள்ளார். அவர் உடலில் 2500 டிகிரி வெப்பம் தாக்கப்பட்டதால் உடல் கருகி இறந்துள்ளார் என்ற தகவலை மருத்துவர்கள் வெளியிட்டனர்.

இதேபோல 1938ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவில் ஒரு இரவு விடுதியில் மேபல் ஆண்ட்ரூஸ் என்ற இளம்பெண் தன் ஆண் நண்பருடன் நடனமாடிக்கொண்டிருந்தபோது, திடீரென்று, அந்தப் பெண்மணியின் பின்புறம், மார்புப் பகுதி, தோள்பட்டை என்று உடலின் அங்கங்கள் திடீரென்று தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. அதைச் சற்றும் எதிர்பாராத அவரது நண்பர் அவளை விட்டு விலகி நின்று அதிர்ச்சியாய் பார்த்திருக்கிறார். ஆனால், அவளின் மேல் படர்ந்த தீ, அறையில் எந்தப் பகுதியையும் பாதிக்கவில்லை. உடனடியாக மேபல் மீது எரிந்துகொண்டிருந்த நெருப்பை அணைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றியிருக்கிறார்கள். இந்த விபத்து குறித்து மேபல் கூறும்போது, எனக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. அன்றும் அப்படித்தான் மது அருந்திவிட்டு என் நண்பருடன் நடனமாடிக் கொண்டிருந்தேன். திடீரென்று இதுவரை நான் உடலில் உணரமுடியாத வெப்பம் என்னுள் இருந்து புறப்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் என் உடல் பாகங்கள் ஒவ்வொன்றும் பற்றி எரிய ஆரம்பித்தது. நீல நிற ஜூவாலையுடன் அந்த நெருப்பு என்னைப் பற்றிக் கொண்டது. இது எதனால் என்று என்னால் உணர முடியவில்லை என்று இன்னும் அதிர்ச்சி விலகாமல் கூறுகிறார்இந்த மாதிரி சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இம்மாதிரி செய்தியை எல்லாரும் ஆச்சர்யமாக படித்தார்களே தவிர இதனுள் மறைந்துகிடந்த விபரீதத்தை யாரும் உணரவில்லை. முதன்முதலில் ஸ்பாண்டேனியஸ் ஹுயூமன் கம்பஷன் என்ற விபத்து குறித்த தொகுப்பை, 1763ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜோனஸ் டூபாண்ட் என்ற அறிஞர் வெளியிட்டார்.

இந்தக் கட்டுரையின் தாக்கம் மக்களிடையே பரவலாக இருந்தது. இதைத் தொடர்ந்து 1800ஆம் ஆண்டு, சார்லஸ் டிக்கன் என்பவர் ஸ்பான்டேனியஸ் ஹியூமன் கம்பஷனை மையக் கருவாகக் கொண்டு பிளீக் ஹவுஸ் என்னும் நாவலை எழுதினார். இந்த நாவல் வாசகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்தக் கதையில் நாயகி தானே தீப்பிடித்து இறந்துபோவது போல் கதை சித்தரிக்கப்பட்டிருக்கும். அவள் இறந்த காரணத்தையும் கதையாசிரியர் சொல்லியிருப்பார். அதில் மதுவில் உள்ள ஆல்கஹாலின் அளவு அதிகரிக்கும்போது, உடல் இம்மாதிரி தானாக தீப்பற்றி எரிந்துவிடும் என்ற காரணத்தை சொல்லியிருப்பார். இந்தக் காரணம் கதைக்காக சொல்லப்பட்ட காரணமாக இருந்தாலும், இதிலும் உண்மை இருப்பதாக மருத்துவ உலகம் இறுதியில் உறுதி செய்தது.

இதுவரை உலகம் முழுவதும் ஸ்பாண்டேனியஸ் ஹியூமன் கம்பஷன் மூலம் எரிந்துபோனவர்களில் 80 சதவீதத்தினர் பெண்கள். இவர்களில் பெரும்பாலனவர்கள் மிக அதிகமான உடல் எடையும், அதிக அளவு மது அருந்துபவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இவர்கள் எரிந்துகிடந்த உடல் அருகில் மஞ்சள் நிற எண்ணெய் போன்ற திரவம் கசிந்திருக்கிறது. இறந்தவர்களில் பெரும்பாலனவர்களுக்கு மார்புப் பகுதி, இடுப்பு மற்றும் அடிவயிறு பகுதிகள் அடையாளம் காண முடியாத அளவுக்கு முற்றிலும் எரிந்துபோயிருக்கிறது. ஆல்கஹாலை வினைப்படுத்தும்போது அது ஹைட்ரஜனாகவும், பற்றி எரியும் மீத்தேன் அல்லது ஈத்தேன் போன்று ஒரு எரிவாயுவையும் வெளிப்படுத்தும் தன்மைக் கொண்டது.

இவர்களில் பெரும்பாலனவர்கள் அருந்திய கட்டுக்கடங்காத ஆல்கஹால்கள் ஒரு கட்டத்தில் ஹைட்ரஜனாகவும், பற்றி எரியும் எரிவாயுவாகவும் உற்பத்தியாகி, இது முற்றிலும் அதிக தசை கொண்ட உடல் பகுதியில் சேமிக்கப்பட்டிருக்கும். உடலில் அளவிற்கு அதிகமான வெப்பமோ அல்லது ஏதோ ஒரு வகையில் லேசான மின்தூண்டலில் உடல் உட்படும்போது, இந்த எரிவாயு பற்றி எரிய ஆரம்பிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தங்கள், ஆய்வறிக்கையை வெளியிட்டனர். நடந்து முடிந்த சம்பவங்கள் அனைத்தும் ஏதோ அமானுஷ்யங்கள் கிடையாது. தானாக மனிதன் எரிவது ஆச்சர்யமூட்டும் செய்திதான் என்றாலும், மது உடலை அழிக்கும் என்ற போதனையையும் இந்தக் கட்டுரை உணர்த்தாமல் இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை தானே...

அரசின் பயங்கிரவாதம்...


அதிமுக அரசின் சாலை ஊழல்...


நாங்க வரி கட்டுவோம், சாலை வரியும் கட்டுவோம், அதுக்கு மேல டோல் கேட்டும் கட்டுவோம். அத்தனையையும் ஊழல் பண்ணிட்டு குண்டும் குழியுமா சாலை போடுவீங்க. அதுல விழுந்து செத்தா எங்க வரிப்பணத்துலயே எங்களுக்கே நஷ்ட ஈடு கொடுக்குறதுக்கு ஒரு முதலமைச்சர். அந்த ஆளுக்கு மாசம் ஒரு லட்சம் சம்பளமும் எங்க பணத்துலயே கொடுக்கணும்.

இதை வெளியிடறதுக்கு ஒரு செய்தித்தாள். அதையும் நம்ம காச போட்டு வாங்கி படிக்கணும்.

இதை எல்லாம் வாய மூடிகிட்டு படிச்சிட்டு போற வரைக்கும் நமக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.

- சுபத்ரா, அறப்போர் இயக்கம்...

இயற்கை...


நீ அவ்வளவு பெரிய ஆளா, குதித்து காமி.. போலீசின் விபரீத பேச்சு வினையானது, கூவம் ஆற்றில் குதித்த இளைஞர்...


போலீஸார் பைக்கை மடக்கியதால் சென்னை அடையாறு ஆற்றில் குதித்த இளைஞரை தேடி வருகிறார்கள். இதனால் அடையாறு பகுதியில் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை அருணாச்சலபுரத்தைச் சேர்ந்தவர் குட்டி என்கிற ராதாகிருஷ்ணன். 24 வயதான இவர் பி.காம் படித்துள்ளார். இந்நிலையில் அடையாறு அருகே உள்ள ராஜா முத்தையாபுரத்தில் நடந்த கோயில் திருவிழாவுக்கு சென்றவர் இரவு 10.30 மணியளவில் பைக்கில் வீடு திரும்பியுள்ளார். அவருடன் அவரது நண்பர் சுரேஸும்  உடனிருந்துள்ளார். ராதாகிருஷ்னண் பைக் ஓட்டி வரும்போது அடையாறு மலர் ஆஸ்பத்திரி அருகே உள்ள திருவிக பாலத்தில் அவரை போலீஸார் மடக்கியுள்ளனர். அப்போது லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை காண்பிக்குமாறு போலீஸார் கூறியுள்ளனர். ஆனால் ராதாகிருஷ்னண் லைசென்ஸ் இல்லை எனக் கூறியுள்ளார். இதனையடுத்து அவரது வாகனத்தில் இருந்து சாவியை போலீஸார் எடுத்துச் சென்றுள்ளனர்.

இதன்பின்னர் சாவியை கொடுக்குமாறு போலீஸாரிடம் ராதாகிருஷ்னண் கேட்க அதற்கு அவர்கள் மறுத்துள்ளனர். இதனால் சாலையின் ஓரத்தில் நின்றுள்ளார். ``ஏன் சாலையின் ஓரத்தில் நிற்கிறாய்'' என போலீஸார் கேட்க, அதற்கு ``சாவியை கொடுக்கவில்லை என்றால் ஆற்றில் குதித்துவிடுவேன்'' என ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இதைக்கேட்ட போலீஸார் ``நீ அவ்வளவு பெரிய ஆளா, குதித்து காமி" என சொன்ன உடனே ராதாகிருஷ்ணன் ஆற்றில் குதித்துள்ளார். இதனால் பதற்றம் அடைந்த போலீஸார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர்.

ஆனால் மழை பெய்து வருவதால் தற்போது மீட்பு பணிகளை செய்யமுடியாது" எனக் கூறி தீயணைப்புத் துறையினர் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டனர். நேற்று இரவு முழுவதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. உடனடியாக அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஆனால் அவர்களுக்கு போலீஸ் எந்த ரெஸ்பான்ஸும் கொடுக்கவில்லை என அவரது தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் ராதாகிருஷ்ணனுடன் வந்த அவரது நண்பர் சுரேஸை அழைத்துச் சென்ற போலீஸார் ஜெ-2 அடையாறு காவல்நிலையத்தில் வைத்துள்ளனர். இதேபோல் ராதாகிருஷ்ணனின் சகோதரர் நித்தியானந்தாவையும் போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதற்கிடையே காணாமல் போன ராதாகிருஷ்ணனை இன்று காலையிலும் தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால், அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது...

மருத்துவ மாப்பியாக்களுக்கு கூஜா தூக்கும் அதிமுக அரசு...


பப்பாளி பழத்தை வெறுக்காதீங்க.. இதயத்திற்கு நல்லது...


நிறைய பேர் பப்பாளிப்பழம் என்றால் அலர்ஜி போல், அதன் வாசனை வந்தாலே ஓடிப் போய் விடுவர். ஆனால் அத்தகைய பப்பாளிப் பழத்தில் அதிகமான அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன.

கொலம்பஸ் இதனை பழங்களின் ஏஞ்சல் என்று சொல்கிறார். ஏனெனில் இந்த பழம் நன்கு கனிந்த பின் பார்த்தால், அதன் நிறம் கண்ணைக் கவரும் வகையில் இருக்கும்.

மேலும் இந்த பழம் நன்கு சுவையோடு இருப்பதோடு, அதிகமான ஊட்டச் சத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது.

உடலில் வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கிறது என்று நிறைய பேர் அதற்கான மாத்திரைகளை சாப்பிடுகின்றனர்.

ஆனால் அவ்வாறு மாத்திரைகளை சாப்பிடுவதை விட, இந்த பழத்தை தினமும் சிறிது சாப்பிட்டாலே போதுமானது. சரி, இப்போது பப்பாளி பழத்தினை சாப்பிட்டால் என்னென்ன நன்மை உடலுக்கு கிடைக்கின்றது என்று பார்ப்போமா..

பப்பாளியில் அளவுக்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ,சி மற்றும் ஈ இருக்கிறது. இத்தகைய அதிகமான அளவு ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், அவை உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை கரைக்கின்றன.

மேலும் கொலஸ்ட்ராலின் அளவு உடலில் அதிகமாக இருந்தால், அவை இரத்த குழாய்களில் தங்கி, சரியான இரத்த ஓட்டத்தை தடை செய்கின்றன. இதனால் தான் மாரடைப்பு ஏற்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், இந்த பழத்தில் நார்ச்சத்துக்கள் மிகுதியாக உள்ளது. இந்த நார்ச்சத்துக்களும் இரத்ததில் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்துகிறது.

இந்த பழத்தில் இருக்கும் புரோட்டீனான பாப்பைன், செரிமான மண்டலத்தை சரியாக இயக்குகிறது. மேலும் இதில் இருக்கும் நொதிப் பொருள், செரிமானமாகாத புரோட்டீன்களை உடைத்து எளிதில் செரிமானமாகும் அமினோ ஆசிட்டுகளாக மாற்றி, செரிமானத்தை விரைவுபடுத்துகிறது. அதிலும் பப்பாளியை சாப்பிட்டால், மலச்சிக்கல் இருந்தாலும் சரியாகிவிடும்.

பாப்பாளியில் இருக்கும் நொதிப்பொருள் மற்றும் நார்ச்சத்துக்கள், குடல் இயக்கத்தை சரியாக இயக்குவதால், செரிமானம் எளிதில் நடைபெற்று, மலச்சிக்கலும் குணமாகிறது.

பப்பாளியில் உடலில் ஏற்படும் அழற்ஜியை எதிர்த்து போராடும் பண்புகள் இருக்கின்றன. அதனால் தான் உடலில் எரிச்சல் அல்லது புண் இருந்தால், பப்பாளியை சாப்பிடுகின்றனர்.

மேலும் இந்த அழற்ஜியை எதிர்த்து போராடும் பண்புகள் பப்பாளியில் இருப்பதால், மூட்டுவலி அல்லது ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை சாப்பிட்டால் நல்லது.

பப்பாளியில் இருக்கும் பலவித பண்புகளோடு, புற்றுநோயை குணப்படுத்தும் பொருளும் இருக்கிறது.

இந்த பழத்தில் இருக்கும் நார்ச்சத்து, புற்றுநோய் உண்டாக்கும் டாக்ஸின்களை உடலில் இருந்து முற்றிலும் வெளியேற்றி, வயிற்றில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கிறது.

மேலும் பப்பாளியில் இருக்கும் போலேட், வைட்டமின் சி, பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவையும் புற்றுநோய் உண்டாக்குவதை தடுக்கும் சத்துக்களாகும்.

அதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், இந்த பழம் டயட் மேற்கொள்வோருக்கு மிகவும் சிறந்தது.

ஆகவே பப்பாளிப் பழத்தை தினமும் ஒரு துண்டாவது சாப்பிடுங்க...

சிந்தித்துப் பார் தமிழினமே...


சிறு செய்தி பெரிய அரசியல்...


நாளைய நிஜமாகும் இந்த காட்சியை உங்கள் சிந்தனையில் தீட்டி வையுங்கள் அடுத்த சில ஆண்டுகளில் பாஜக வோ காங்கிரசோ.., அ.தி.மு.க வோ தி.மு.க.வோ இந்த காட்சியை நாம் நிச்சயமாக காண முடியும். அரசு தீட்ட நினைக்கும் இந்த சித்திரத்தை தடுத்ததற்காக நாம் அனேகமாக கைது செய்யப்படலாம்...

பளபளக்கும் சென்னை சேலம் எட்டு வழிச்சாலை பாய்ந்தோடும் லாரிகள். அந்த லாரிகள் பெரும்பாலும் அம்பானி, அதானி அல்லது அவர்களின் உள்ளூர் அடியாட்களுடையதாகத் தான் பெரும்பாலும் இருக்கும். எட்டு வழிச் சாலை நெடுக விவசாயப் பன்னைகள். செழிப்பான விளைச்சல்கள். ஆனால் அதை  நிலத்துக்கு சொந்தக்காரர்களான விவசாயிகள் பயிரிடவில்லை. அம்பானியும் அதானியுமே பயிரிடுவார்கள். கொள் முதல் செய்யப்பட்ட விளைச்சல்களெல்லாம்  50 கிலோ மீட்டருக்கு ஒன்றாக இருக்கிற அதி நவீன பதப்படுத்தப்படும் சேமிப்புக் கிடங்குகளில் இருக்கும்.பின் அவை பாரத் மாலா சாகர் மாலா மூலமாக சில்க் சாலை எனும் சிலந்தி வலை வழிகளில் உலகெங்கும் ஏற்றுமதிச் செய்யப்படும். விவசாய நிலங்களுக்கு சொந்தக்காரர்கள் அம்பானி, அதானியும் தான். விவசாயகள் அம்பானி பன்னைகளில் தொழிலாளர்கள். இது தான் மோடி சொல்கிற மோடி சொல்கிற விவசாயத்தை இரட்டிப்பாக்கும் முயற்சி.

1.மோடி அரசின் 2018 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இயற்கை வேளாண்மையை விரிவுபடுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூங்கில் வளர்ப்பை ஊக்கப்படுத்த ரூ.1200 கோடி ஒதுக்கீடு. வேளாண் பதப்படுத்தும் தொழிலை மேம்படுத்த ரூ.1400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2.சமீபத்தில் சீனா சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கு சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்தார். அப்போது இந்தியாவில் இருந்து சர்க்கரை, அரிசி, மருந்து பொருட்களை சீனா இறக்குமதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.
அதன்பிறகு இந்திய சர்க்கரை ஆலைகள் சங்க அதிகாரிகள் மற்றும் 25 சீன சர்க்கரை நிறுவனங்களின் 50 உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது. இதன்பிறகு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன்படி 1.5 மில்லியன் டன் சர்க்கரை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

3.ஆப்ரிக்க நாடுகளுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமராக மோடி சென்ற போது 200 பசுக்களை அந்த நாட்டிற்கு பரிசளித்த போதே நாம் தெரிந்து கொள்ளலாம் ஆப்ரிக்க நாடுகளுக்கு அதானியும் அம்பானியும் விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்யப் போகிறார்கள் என்று.

இப்படி விவசாய ஏற்றுமதியை குறிசைத்து இந்திய அரசு இயங்குகிற பின்பனியில் தான் நாம் நேற்று பிரதமரோடு  நடந்த தமிழக கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சந்திப்பையும் நாம் காண வேண்டும். இந்த சந்திப்பும் மோடியின் வாக்குறுதியும் இப்போது விவசாயிகளுக்கு மகிழ்வளிப்பதாக இருக்கலாம் ஆனால் வரும் காலத்தில்....?

தோழர் மாவோ கூறியது போல "ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னே ஒரு வர்க்கத்தின் நலன் இருக்கிறது." அது போல இந்த செய்திக்கு பின்னே அதானி அம்பானி நலன் தான் இருக்கிறது...

- இந்திய மக்கள் முன்னணி

மருத்துவ மாப்பியாக்களும்.. சுகப்பிரசவ உண்மைகளும்...


1950 ஆண்டு, அமெரிக்க மகப்பேறு மருத்துவ சங்கம் கூடியது...

அதில் பிரசவத்தின் போது, குழந்தை வெளிவந்த ஒரு நிமிடத்திற்குள்  தொப்புள் கொடி அறுப்பது பரிந்துரைக்கப்பட்டது. அடுத்தடுத்த கூட்டங்களில் குழந்தை பிறந்த 30 விநாடிகளுக்குள் தொப்புள் கொடி அறுப்பது பரிந்துரைக்கப்பட்டது.

அமெரிக்க ஐரோப்பிய மருத்துவ பிரதிநிதியான மருத்துவ உலகில்,  இந்தியாவிலும் குழந்தை பிறந்த 30 விநாடி முதல் ஒரு நிமிடத்திற்குள் தொப்புள் கொடி அறுக்கும் வழியே பின்பற்றப்படுகிறது.

இதற்கு காரணமாக சொல்லப்படுபவை
தாய் இரத்த இழப்பை தவிர்ப்பது,
குழந்தை உடலில் அதிக ரத்தம் போய், ரத்த அணுக்கள் அதிகமாகி ரத்த ஓட்டம் தடைபடுவதை தவிர்ப்பது,
குழந்தையை சீக்கிரமே குழந்தை மருத்துவர் பராமரிப்பு பணி செய்ய தருவது.

ஹீலர் பாஸ்கர் இதில் எங்கே வருகிறார்?

குழந்தை பிறந்தவுடனே தொப்புள் கொடியை அறுப்பதால், முக்கிய சத்து பொருள்கள் குழந்தைக்கு செல்வது தடுக்கப்படுகிறது.

ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அணுக்கள் குழந்தைக்கு போவது தடுக்கப்படுகிறது.

ஸ்டெம் செல்கள் என்பது குழந்தைக்கு போவது தடுக்கப்படுகிறது.

முக்கியமாக தொப்புள் கொடியை தூக்கி வீசிவிடுவதால், அதிலுள்ள ஸ்டெம் செல் என்பதும் வீணாகிவிடுகிறது.

இப்போது ஆய்வுகள் மேலை நாடுகளில்..

தொப்புள் கொடியை உடனே அறுக்கும் முறை இல்லாமல், 5 நிமிடத்திற்கும் மேல் கழித்து அறுப்பதால்,

அதிக ரத்தம் சென்று குழந்தை  நலம் பெறுகிறது.

ஆக்சிஜன், இரும்பு சத்துள்ள ரத்தம் அதிகமாக செல்வதால், ஒரு வருடம் தேவையான இரும்பு சத்து குழந்தைக்கு செல்கிறது.

மூளை, குடல் இயக்கம் வலுவாகிறது.

(அவர்கள் இன்னும் நோய் எதிர்ப்பு சக்தி, ஸ்டெம் செல் ஆய்வுக்குள் நுழையவில்லை)

உடனே தொப்புள் கொடியை அறுக்கும் முறையால் இந்த அத்தனை முக்கிய நன்மையும் இழந்து குழந்தை உடல் நலத்திற்கு எதிராய் இருக்கிறது.

முடிவாக,

புத்தகத்திற்குள் சிந்திக்க பழகிய  முரட்டு ஆங்கில மருத்துவர்கள், ஹீலர் பாஸ்கர் சொல்லும் தமிழர் வழி தொப்புள் கொடி துண்டிப்பு  வழிமுறையை பின்பற்றும் நிலை கண்டிப்பாய் வரும். ஆனால் அது அமெரிக்கன் கண்டுபிடித்ததாய் வரும்.

- ஆங்கில மருத்துவ இணை பேராசிரியர் Mathi vanan...

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 3...


என் மகளை நீங்கள் தான் குணப்படுத்திக் காப்பாற்ற வேண்டும்  என்று உள்ளூர் செல்வந்தர் ஒருவர் எட்கார் கேஸ் என்பவரிடம் போய் வேண்டிக் கொண்டார்.

அவரது ஐந்து வயது மகள் தன் இரண்டு வயதில் ·ப்ளூவால் தாக்கப்பட்ட பிறகு படுத்த படுக்கையாகவே இருந்தாள். தினமும் வலிப்புகள் பல முறை வந்து தாக்க மகள் துடித்த துடிப்பை அவராலும், அவர் மனைவியாலும் சகிக்க முடியவில்லை. மூளை, மன வளர்ச்சிகளும் அந்த சிறுமிக்கு பாதிக்கப் பட்டிருந்தன. செல்வந்தரான அவர் பல மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளித்துப் பார்த்தும் எந்தச் சிகிச்சையும் பலனளிக்கவில்லை. அப்போது தான் அவர் உறங்கும் ஞானி என்று பலராலும் அழைக்கப்பட்ட எட்கார் கேஸைப் பற்றிக் கேள்விப்பட்டார்.

எட்கார் கேஸ் ஆறாம் வகுப்பு வரை தான் படித்தவர். மருத்துவத்தைப் பற்றி எதுவும் அறியாதவர். சிறு வயதில் நோய்வாய்ப் பட்டு கோமா நிலைக்குப் போன அவர் தனக்கு எந்த மருந்து எப்படித் தர வேண்டும் என்று கோமா நிலையிலேயே சொல்ல அதிர்ந்து போன மருத்துவர்கள் அப்படியே தந்து பார்க்க அவர் உடனடியாக குணமான பிறகு அவரிடம் தங்கி விட்டது அந்த அபூர்வ சக்தி. எட்கார் கேஸ் ஒருவித அரைமயக்க நிலைக்குச் சென்று பலருடைய நோய்களுக்குத் தக்க மருந்துகள் சொல்ல அது பலர் நோயைத் தீர்க்க உதவியது. இதைக் கேள்விப்பட்ட போது அந்த சிறுமியின் தந்தை கேஸின் உதவியை நாடுவதில் நஷ்டமெதுவும் இல்லை என்று தோன்றியிருக்க வேண்டும்.

எட்கார் கேஸ் அரைமயக்க நிலைக்குச் சென்று அந்தச் சிறுமி ·ப்ளூவால் தாக்கப்படுவதற்குச் சில தினங்கள் முன்பு கீழே விழுந்ததில் தண்டுவடத்தின் அடிப்பாகத்தில் அடிபட்டு பாதிக்கப்பட்டிருக்கின்றது, அந்தப் பகுதியின் வழியாகத் தான் ·ப்ளூவின் கிருமிகள் சென்று தாக்கியிருக்கின்றன, அந்தப்பகுதியைச் சரி செய்தால் ஒழிய இந்த நோயைக் குணப்படுத்த முடியாது என்று தெளிவான குரலில் கூறினார். எந்த மாதிரியான சிகிச்சை செய்து அப்பகுதியைச் சரி செய்ய வேண்டும் என்றும் சொன்னார்.

கேட்டுக் கொண்டிருந்த சிறுமியின் பெற்றோர்கள் திகைத்துப் போனார்கள். ஏனென்றால் குழந்தை ·ப்ளூ காய்ச்சலால் தாக்கப்படுவதற்கு முன் கீழே விழுந்தது அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. 1902ல் இந்தக் காலத்தைப் போல் ஒரு வியாதிக்கு முழு உடலையும் பரிசோதனை செய்யும் முறையோ, இன்றைய நவீன பரிசோதனை எந்திரங்களோ இருக்கவில்லை. பெற்றோர்கள் அந்தச் செய்தியை எடுத்துக் கொண்டு மருத்துவர்களிடம் விரைந்தார்கள். மருத்துவர்கள் எட்கார் கேஸ் சொன்னதைப் போல அந்தப் பகுதி பாதிக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அவர் கூறிய படியே சிகிச்சையும் செய்தனர். சிறுமி குணமாகி பிறகு விரைவில் தன் வயதையொத்த மற்ற குழந்தைகளைப் போலவே மாறி விட்டாள். அவளுடைய பெற்றோர் பெற்ற மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. எல்லா மருத்துவர்களும் முயன்று தோற்ற இந்த சிறுமி விஷயத்தில் எட்கார் கேஸ் சொன்ன சிகிச்சை குணப்படுத்தியது என்ற செய்தி காட்டுத் தீயாகப் பரவியது. அது வரை உள்ளூரில் மட்டும் ஓரளவு பிரபலமாயிருந்த எட்கார் கேஸ் புகழ் மற்ற பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்தது.

வெஸ்லி எச்.கெட்சும் என்ற இளம் டாக்டர் எம்.டி பட்டம் பெற்றவர். திறமைசாலி. அவரிடம் ஒரு நாள் ஒரு இளைஞனை சிகிச்சைக்கு அழைத்து வந்தார்கள். கால்பந்து விளையாட்டின் போது மயங்கி விழுந்த அந்த இளைஞன் சுய நினைவுக்கு வந்த போது அவனால் பேசவோ, செயல்படவோ முடியவில்லை. கேட்கும் கேள்விகளுக்கு ஒருசில நேரங்களில் ஆம் அல்லது இல்லை என்று மட்டும் தெளிவில்லாதபடி சொல்ல முடிந்த அவன் மற்ற நேரங்களில் வெறித்துப் பார்த்தபடி ஒரு ஜடமாக அமர்ந்திருந்தான். அவனுடைய பிரச்னை மூளையில் என்பதை உணர்ந்த டக்டர் கெட்சும் பல சோதனைகள் செய்து பார்த்தும் அவரால் தெளிவான ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. நியூயார்க்கின் பிரபல மூளை சிகிச்சை நிபுணரிடம் அனுப்பினார். அவர் அனைத்து சோதனைகளும் செய்து பார்த்து விட்டு மூளையில் ஏற்பட்ட அந்த கோளாறு நிவர்த்தி செய்ய முடியாதது என்று சொல்லி விட்டார். அந்த இளைஞனின் பெற்றோர் எப்படியாவது குணப்படுத்துங்கள் என்று டாக்டர் கெட்சுமிடம் கெஞ்சினார்கள். அப்போது அவருக்கு எட்கார் கேஸ் பற்றி கேள்விப்பட்டது நினைவுக்கு வந்தது.

அவருக்கு கேஸ் மீது பெரிதாக நம்பிக்கை இருக்கவில்லை என்றாலும் பரிசோதித்து விடுவது என்று எண்ணி அவர் யாருக்கும் தெரிவிக்காமல் கேஸ் இருந்த ஊருக்குப் பயணம் செய்தார். அங்கு சென்று எட்கார் கேஸிடம் அந்த இளைஞன் பெயர், வயது, அவன் இருக்கும் ஆஸ்பத்திரி விலாசம் மட்டும் தந்து இந்த இளைஞனுக்கு என்ன நோய் என்று சொல்ல முடியுமா என்று கேட்டார். அரை மயக்கநிலைக்குச் சென்ற எட்கார் கேஸ் "அந்த இளைஞன் மூளை தீயில் உள்ளது போல் சிவந்து தகிக்கிறது. நீங்கள் உடனடியாக மருத்துவம் செய்யா விட்டால் அவனுக்குப் பைத்தியம் பிடிப்பது உறுதி" என்று சொன்னார்.

அவர் சொன்னது சரியாயிருந்ததால் "என்ன மருத்துவம் செய்ய வேண்டும்?" என்று டாக்டர் கெட்சும் கேட்க, கேஸ் அவ்வளவாக பிரபலமாகாத ஒரு மருந்தைச் சொல்லி அதை தினமும் மூன்று வேலையும் அவனுக்குத் தர வேண்டும் என்றார்.

கேஸிற்கு மயக்க நிலையிலிருந்து மீளும் போது தான் என்ன சொன்னோம் என்பது நினைவிருப்பதில்லை. கடினமான மருத்துவச் சொற்றொடர்களையும் சரளமாக உபயோகித்த அவர் ஆறாம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறார், சுயநினைவில் இருக்கும் போது மருத்துவத்தைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது என்பதைக் கேள்விப்பட்ட டாக்டர் கெட்சும் சொன்னார். "கேஸ். நீங்கள் மிகப்பெரிய பொய்யரா, இல்லை அற்புத மனிதரா என்று எனக்குத் தெரியவில்லை."

ஆனால் அவர் சொன்ன மருந்தை கெட்சும் அந்த இளைஞனுக்குத் தர ஆரம்பித்தார். முதல் மாதம் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை என்றாலும் இரண்டாம் மாதத்தில் அந்த இளைஞன் குணமாக ஆரம்பித்து பின் பூரண நலமடைந்தான். அதன் பின் கெட்சும் மிகவும் கடினமான சிகிச்சைகளுக்கு கேஸிடம் ஆலோசனைக்கு வர ஆரம்பித்தார். பல நூறு மைல்களுக்கு அப்பால் இருக்கும் நோயாளிகளின் நிலைமையையும், செய்ய வேண்டிய சிகிச்சையையும் மிகச்சரியாக கேஸ் சொன்னார். ஒரு முறை அப்படி சொல்லிக் கொண்டிருக்கையில் நிறுத்தி கேஸ் சொன்னார். "அந்த மனிதர் இறந்து விட்டார்". உண்மையில் அவர் சொன்னது போலவே அதே நேரத்தில் தான் அந்த நோயாளி இறந்து விட்டார் என்பதை பின்னர் டாக்டர் தெரிந்து கொண்டார். நாளடைவில் கெட்சுமைப் போலவே வேறு பல மருத்துவர்களும் கேஸிடம் வர ஆரம்பித்தனர்.

பல சமயங்களில் கேஸ் சொன்ன மருத்துவம் அக்கால மருத்துவத்திற்கு சிறிதும் ஒத்துப் போகாததாக இருந்தது. ஆனாலும் அவர் சொன்னபடி மருந்தை உட்கொண்டவர்கள் அனைவரும் குணமானார்கள். சில சமயங்களில் கேஸ் சிகிச்சைக்கு சில மருந்துகளின் கலவையைச் சொல்வார். ஒரு மருந்தின் தயாரிப்பே அப்போது நின்று போயிருந்தது. அதன் தயாரிப்பாளர்களைத் தொடர்பு கொண்டு அந்த மருந்தின் உட்பொருள்களையும், கலந்த விகிதத்தையும் கேட்டு தயாரிக்க வேண்டியிருந்தது. இன்னொரு மருந்து அடுத்த மாதம் தான் வெளி வருவதாக இருந்தது. எங்கு தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் கேஸ் சொல்ல கேள்விப்பட்ட அந்தத் தயாரிப்பாளர்களே திகைத்துப் போனார்கள். 'மார்க்கெட்டுக்கே வராத மருந்தைப் பற்றி அவருக்கு எப்படித் தெரியும்?'

இன்னொரு சமயம் கேஸ் சொன்ன மருந்து அவர் சொன்ன கடையிலேயே இல்லையென்று சொல்லி விட்டார்கள் என்று சம்பந்தப்பட்டவர் வந்து சொன்ன போது கேஸ் அரை மயக்க நிலைக்குச் சென்று அந்தக் கடையில் உள்ள மேல் அலமாரியில் அந்த மருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதைக் கூடத் தெரிவித்தார். பின்பு அந்த கடைக்காரர் அசடு வழிந்து கொண்டே அந்த மருந்தை அவர் சொன்ன இடத்திலிருந்து தேடி எடுத்துத் தந்திருக்கிறார்.

எட்கார் கேஸ் புகழ் நாடு முழுவதும் பரவியது. 9-10-1910 அன்று புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை அவரைப் பற்றி வியப்புடன் எழுதியது. "சுய நினைவில் இருக்கையில் மருத்துவத்தைப் பற்றி எள்ளளவும் அறியாத எட்கார் கேஸ் அரை மயக்கநிலையில் மருத்துவர்களுக்கே விளங்காத பல நோய்களுக்கு மருத்துவம் சொல்வதை மருத்துவ உலகம் ஆர்வத்துடன் கவனிக்க ஆரம்பித்திருக்கிறது". அவர் ஆரம்பத்தில் குணப்படுத்திய ஐந்து வயதுச் சிறுமி தற்போது மிக நலமாக இருப்பதையும், அவருடைய வேறு சில சிகிச்சைகளையும் பற்றி அக்கட்டுரையில் எழுதியிருந்தது.

1945ல் இறந்து போன கேஸ் ஒவ்வொரு சிகிச்சைக்காகவும் சொன்ன சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துக்களின் முறையை இன்றும் விர்ஜீனியா பீச்சில் உள்ள ஒரு அசோசியேஷன் (Association for Research and Enlightenment in Virginia Beach, VA 23451, USA) பாதுகாத்து வருகிறது. சுமார் 14000க்கும் மேற்பட்ட அந்த ஆவணங்களை இன்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இரத்தம் மனிதனின் ஒட்டு மொத்த உடல்நலத்தைப் பிரதிபலிக்கிறது என்று எட்கார் கேஸ் சொன்னார். "மனிதர்களின் ஒரு துளி இரத்தத்தை வைத்து எத்தனையோ விஷயங்களை பரிசோதனையின் மூலம் அறியலாம்" என்றும் சொன்னார். அவர் இறந்து சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு தான் இரத்தப் பரிசோதனை முறை அறியப்பட்டு நடைமுறைக்கு வந்தது. மேலும் அவர் சொன்ன சில வித்தியாசமான மருந்துக்களையும், சிகிச்சை முறைகளையும் அவர் மரணத்திற்குப் பின்னும் பலர் பயன்படுத்தி குணமடைந்த விவரங்கள் அந்த அசோசியேஷனில் பதிவாகி உள்ளன.

எட்கார் கேஸ் மருத்துவம் சம்பந்தமாக மட்டுமல்லாமல் வரவிருக்கும் உலக நிகழ்வுகளையும் பற்றி பல சொல்லியிருக்கிறார். அவற்றில் பல பலித்தன. சில பலிக்கவில்லை. ஆனால் மருத்துவத்தில் மட்டும் அவர் சொன்னது பலிக்காமல் போனதேயில்லை. அந்த அபூர்வ சக்தி அவர் காலத்தில் மட்டுமல்ல அவர் காலம் கழிந்த பின்னும் பயன்படுகிறது என்பது ஆச்சரியமே அல்லவா?

மருத்துவத்தில் அவரே அறியாத பல பிரம்மாண்டமான உண்மைகளை அவரால் எப்படிச் சொல்ல முடிகிறது என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் சுவாரசியமானது.....

கார்பரேட்க்கு சிறந்த தரகுவேலை பார்ப்பதால் மீண்டும் மோடி அரசு - 2...


லஞ்ச புகாரில் சர்வேயர் கைது...


காஞ்சிபுரம் பெருநகராட்சியில் பணியாற்றி வரும் சர்வேயர் சங்கர்... சர்வே செய்ய அசோகன் என்பவரிடம் 2000 ரூபாய் லஞ்சம் வாங்கும் போது காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவும் பிடிப்பட்டார்.

மேலும் காஞ்சிபுரம் பெருநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்...

LPG சிலிண்டர் - தெரிந்துக் கொள்ளுங்கள்...


108 உயிர் நிலைகள்.. மருத்துவக் கலை.. மரணக் கலை...


இதனை மர்மம் என்றும் சிலர் அழைப்பது உண்டு...

சித்த மருத்துவ முறையொன்று நாள் போக்கில் தற்காப்பு கலையாகி, பின்னர் எதிரிகளை கொல்லும் போர்க் கலையாக மாறியது என்றால் அது வர்மம் என்ப்படும் வர்மக் கலைதான்.

வல்லமை, வன்மை என்கிற தமிழ் பதத்தில் மருவுதான் வர்மம். இதனை மர்மம் என்றும் சிலர் அழைப்பது உண்டு.

போர் க்கலையில் இந்த முறையினை “நரம்படி” என்று அழைக்கின்றனர்.

பஞ்ச பூதங்களின் கலவையான நமது உடலானது பேசிகள், நரம்புகள் ஆகியவற்றால் பின்னி பினைக்கப் பட்டிருக்கிறது.

இப்படி இவை ஒன்றோடு ஒன்றாக பின்னிக் கிட்க்கும் இடங்களை ”உயிர் நிலைகள்” என்கிறார்கள்.

இவ்வாறு மனித உடலில் 108 உயிர் நிலைகள் இருப்பதாகவும், அந்த உயிர் நிலைகளை முறையாக கையாளுவதன் மூலம் ஒருவரின் உடலை வலிமையாக்கவும், வலுவிழந்து செயலற்றுப் போகவும் வைக்கும் மிக் நுட்பமான கலைதான் வர்மக் கலை.

தமிழர்களின் கலையான வர்மக் கலை அகத்தியரால் உருவாக்கப் பட்டது.

சித்த மருத்துவம் தவிர ஆயுர்வேத மருத்துவத்திலும் வர்மங்கள் பற்றிய நூல்கள் இருக்கிறது.

இத்தகைய சிறப்புகளைக் கொண்ட வர்மக் கலை பற்றி அகத்தியர் பின்வருமாறு கூறுகிறார்.

"அண்ணலே உலகத்தில் வாழும் மாந்தர்
காயமுறு விழுதலாலும் விண்ணடியில்
பிணையற்று விழ்தலும் விழுந்தநீசி
சிதறி துண்டங்கே வையனாலும்
மண்ணதிலே வெகுநாளாய் துக்கமுற்று
மாளவே வர்மமது கொள்ளலாலும்
திண்ணமுடன் இவைகளிலே பலதுக்காக
செப்புகிற யெண்ணையொரு கியாய மாத்திரை"

 - அகத்தியர்...

வர்மக் கலை பற்றி சித்தர்கள் பலர் கூறியிருந்தாலும், அகத்தியர் அருளிய “ஒடிவுமுறிவுசாரி” என்ற நூலே மிக முக்கியமானதாக க்ருதப் படுகிறது.

இந்த அரிய நூல் இன்று மிகச் சிலரிடம் மட்டும் தான் இருக்கிறது. இன்றைய தேர்ந்த நரம்பியல் வைத்தியர்களுக்கே புரியாத அல்லது தெரியாத பல நுட்பங்களை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே அகத்தியர் தனது நூலில் துல்லியமாகவும், விரிவாகவும் விளக்கியிருக்கிறார்.

உயிர் நிலைகளில் ஏற்படும் பிசகல், முறிவு, அடிகள் போன்றவை பற்றியும்,அவற்றால் அடையும் பாதிப்புகளையும், அவற்றின் அறிகுறிகளையும் இவற்றை நிவர்த்திக்க தேவையான சிகிச்சை பற்றியும் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். சில உயிர்நிலைகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சைகள் இல்லையென்றும் குறிப்பிடுகிறார்.

மேலும் இந்த சிகிச்சைகளுக்கு தேவையான மருந்துகளான கசாயம், தைலம், சூரணம், மெழுகு போன்றவற்றை தயாரிக்கும் முறைகளையும், பயன்படுத்தும் முறைகளும் இந்த நூலில் விளக்கப் பட்டிருக்கிற்து...

கார்பரேட்க்கு சிறந்த தரகுவேலை பார்ப்பதால் மீண்டும் மோடி அரசு - 1...


தமிழன் திராவிடன் அல்ல.. திராவிடன் தமிழன் அல்ல...


என்று நான் கூறியபோது எதிர்த்த தமிழர்களே...

இதோ திமுக நேரு ரெட்டியார் என்ன சொல்லியிருக்கிறார் என்று நாளிதழ் செய்தியை படியுங்கள்.. சிந்தியுங்கள்...

இனம் இனத்தோடு தான் சேரும்..

எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே..
இங்கு பிறப்பினும் அயலான் அயலானே..

தமிழர் நாடு வந்தேறிகளின் வேட்டைக்காடா?

தமிழனை ஆள தெலுங்கு வந்தேறிகளா?

வந்தேறிகளை புறகணிப்போம்...
தமிழராய் ஒன்றிணைவோம்...

என்னங்கடா பிரசவத்துக்கு ஆட்டோ இலவசம் மாதிரி போடுறீங்க...


ஏங்க ஆபிசர்ஸ் இவங்களை எல்லாம் கைது செய்ய மாட்டீங்களா...

சேக் உசேன் - மருதுபாண்டித் தளபதி...


ஏதோ தமிழ்-இசுலாமியர் தமிழ் மக்களுக்காகக் குரல்கொடுப்பதை வரலாற்றில் நடக்காத அதிசயம் போல விளம்பரப்படுத்துவதை நிறுத்துங்கள்.

தமிழன், அவன் எம்மதத்தான் ஆனாலும் தமிழனாகத் தான் தன்னை நினைக்கிறான்.

மருதுபாண்டியர் ஆங்கிலேயப் படையை எதிர்த்து போரிட்டபோது அவர்களது வலதுகரமாக விளங்கியவர் ஒரு இசுலாமியர்.

அவர்தான் 'இச்சப்பட்டி சேக் உசேன்'.

மருதுபாண்டியரைத் தோற்கடித்த கர்னல் வெல்ஸ் தனது 'இராணுவ நினைவுகள்' நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மருதுபாண்டியரையும் அவரது குடும்பத்தாரையும் தூக்கிலிட்டு கொன்றபிறகு

சேக் உசேனை உடல்முழுவதும் சங்கிலியால் கட்டி இரும்புக் குண்டுகளுடன் பிணைத்து
மருதுபாண்டியர் படையைச் சேர்ந்த 72பேரை கப்பலில் ஏற்றி நாடு கடத்தினார்கள்.

மலேசியாவின் பினாங்கு தீவில் கொண்டு சிறை வைத்தார்கள்.

சேக் உசேன் இறுதிவரை அடங்கிப் போகாமல் முரண்டு பிடித்தார்.

சங்கிலியால் பிணைக்கப்பட்ட இரும்பு குண்டுகளுடன் நகர முடியாமல் கிடந்த போதும் அவர் இறுமாப்புடன் இருந்தார்.

இறுதியில் பட்டினி போட்டு கொல்லப்பட்டார்.

மறக்கக்கூடாது தமிழர்களே
மறக்கக்கூடாது...

எட்டு வழிச் சாலையை கைவிடும் வரை போராடுவோம்...


48 மணி நேர சிறை வைப்புக்குப் பின்னர் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு...

கைவிட வேண்டிய பத்து விஷயங்கள்...


1 வெறுப்பை கைவிடுங்கள். நீங்கள் விரும்பவதில் கவனம் செலுத்துங்கள்.

2 கடந்த காலத்தை கைவிடுங்கள், அதில் கற்ற பாடங்களை வைத்துக் கொள்ளுங்கள்.

3 கனகச்சிதமாகத்தான் இருப்பேன் என்ற கருத்தை கைவிடுங்கள்.

4 மக்களை எப்பொழுதும் மகிழ்விப்பராக இருப்பதை கைவிடுங்கள்.

5 எதிர்மறையான சுய பேச்சை கைவிடுங்கள்.

6 வீண்பேச்சுகளையும், எடைபோடுவதையும் கைவிடுங்கள்.

7 உங்களை தாழ்த்தி நடத்த்த்துபவர்களை கைவிடுங்கள்.

8 கோபத்தால் வெகுண்டெழுவதை கைவிடுங்கள். அமைதிதான் ஆற்றல்.

9 மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடுவதை தவிருங்கள்.

10 வருத்தப்படுவதை கைவிடுங்கள். எல்லாமே ஒரு காரணத்துக்காகத்தான் நடக்கிறது...

இந்தியத் தேர்தலில் ரஷ்யா தலையீடு...


இந்த செய்தியை படித்த உடன் உன் சிந்தனையில் என்ன தோன்றுகிறது...


கடந்த காலத்தில் என்ன நடந்தது, எதிர்காலத்தில் என்ன நடக்கும் என யோசி..

ஆள்பவனின் கைகள் இறுக்கப்பட்டு கொண்டிருக்கிறது...

கார்பரேட்டிற்கு தரகுவேலை பார்க்கும் அரசாங்கத்திற்கு தரமான சம்மட்டி அடி...


பாஜக அரசின் அவலங்களை சொல்லும் பத்திரிக்கையாளர்களை மிரட்டும் பாஜக மோடி அரசு...


2014இல் கார்ப்ரேட் முதலாளிகளாலும் , ஆர்.எஸ்.எஸ் என்ற பிற்போக்கு வலதுசாரி இயக்கத்தாலும் முன்மொழியப்பட்டு ஆட்சிக்கு வந்த மோடி அரசு. மக்களுக்கு ஒன்றும் செய்யாமல் வெறும் விளம்பரங்களின் மூலம் தனது அரசு அதை செய்தது இதை செய்தது என்ற போலி பிம்பத்தை கட்டி எழுப்பி வருகிறது. இதற்கு பெரும்பாலான ஊடகங்கள் துணைபோகும் அவலமும் நடக்கிறது. அதையும் மீறி பிஜேபி அரசின் அவலங்களை வெளிக்கொண்டுவரும் பத்திரிக்கையாளரை அந்நிறுவனத்திற்கு அரசின் சார்பில் நெருக்கடி கொடுத்து வெளியேற்றும் வேலையை மோடி அரசு செய்கிறது.

 ஏற்கனவே EPW பத்திரிக்கையில்  அதானி குழுமத்திற்கு மோடி அரசு காட்டிய சலுகை குறித்து எழுதியாதால் அதன் ஆசிரியர் பரன்ஜாய் குஹா தாகுர்தா நெருக்கடி கொடுக்கப்பட்டு இராஜினாமா செய்யவைக்கப்பட்டார். அதேபோல The Wire இணையத்தில் பாஜக தலைவர் அமித்ஷாவின் மகனின் நிறுவனம் எப்படி ஒரு வருடத்தில் 110மடங்கு வளர்ச்சி கண்டது என்று எழுதியதற்காக அதன் ஆசிரியர் மிரட்டப்பட்டார். இதுபோல என்னெற்ற பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து மிரட்டுப்பட்டு வருகிறார்கள் இந்த வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருப்பவர் நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ABP இந்தி தொலைகாட்சியின் நிர்வாக இயக்குநர் மிலிந்த காந்தேகார் மற்றும் பத்திரிக்கையாளர் புன்யா பிரசன் பாஜ்பாய் இருவரும் தங்களது வேலையை இராஜினாமா செய்திருக்கிறாரகள்.

இவர்கள் இருவரும் வெளியேறியதற்கான காரணங்களை சம்பந்தப்பட்ட நிறுவனம் வெளியிடவில்லை என்றாலும், இவர்கள் கடந்த மாதம் வெளியிட்ட ஒரு நிகழ்ச்சியே இவர்கள் வேலையை இழந்ததற்கு காரணமாக இருந்திருக்கிறது. அதாவது

கடந்த  இரண்டு மாதங்களுக்கு முன்னால் மோடி அரசு விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயத்தை அறிவித்தது. இதனால் எங்களின் (விவசாயிகளின்) வருமானம் இரட்டிப்பு ஆகிவிட்டதென்று மோடி அரசுக்கு நன்றி என்று சத்திஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சந்திரமணி என்ற பெண் மோடியை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கும் ஒரு காணொளியை பிஜேபி அரசு விளம்பரப்படுத்தியது. மறுநாள் அனைத்து பத்திரிக்கைகளிலும் இந்த செய்தி முதல் பக்கத்தில் விளம்பரமாக அரசே கொடுத்தது. இந்த சம்பவத்தின் உண்மைதன்மை அறிய மேற்கண்ட ABP தொலைகாட்சியின் நிர்வாக இயக்குநரின் உத்தரவின் பேரில் செய்தியாளர் பாஜ்பாய் சம்பந்தப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்து உண்மையை வெளிக்கொண்டுவந்தார். அதாவது அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் தான் அப்படி சொல்லவேண்டுமென்று சொல்லச்சொன்னார்கள் என்ற உண்மையை அவர் சொன்னதை அந்த தொலைகாட்சி தனது மாஸ்டர் ஸ்ட்ரோக் நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பிவிட்டது.

இதனை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் டிவிட்டரில் பதிவு செய்ததோடு நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த பிஜேபி அரசு சமப்ந்தப்பட்ட செய்தி நிறுவனத்தை மிரட்டி ஒளிபரப்புக்கு தடை வித்தித்து ஒருவழியாக அந்த நிகழ்ச்சியை எடுத்த பத்திரிக்கையாளரை பணியிலிருந்து நீக்க வைத்திருக்கிறது. தான் சொல்லித்தானே அவர் இந்த உண்மையை வெளிக் கொணர்ந்தாரென்று அதன் நிர்வாக இயக்குநரும் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இப்படியாக கருத்துரிமையை மறுத்து தாங்கள் ஒரு பாசிசவாதிகள் தான் என்று மீண்டும் மீண்டும் நிருபித்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு...

சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்...


1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.

3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.

4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய் போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.

8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்.

9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறைக்கும்.

11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்...

பிச்சைகாரனிடம் பிடிங்கி திண்ணும் திமுக...


அதார் கார்டு உண்மைகள்...


உங்கள் மொபைலில் UIDAI என்ற பெயரில் ஒரு மொபைல் எண் சேமிக்கப் பட்டிருக்கிறதா பாருங்கள்...

அந்த நம்பரை உங்கள் மொபைலில் நீங்களாக பதியவில்லை இல்லையா?

அப்படியானால் யார் அதனை உங்கள் மொபைலில் போட்டது?

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 2...


அறிவியலில் எல்லா வினாக்களுக்கும் விடையில்லை என்றார் உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

முன்பு குறிப்பிட்ட டெல்·பை ஆரக்கிள், ·ப்ளோரிடாவின் குறி சொல்லும் பெண்மணி ஆகியோர் எப்படி தாங்கள் நேரில் கண்டிராத அந்த நிகழ்ச்சிகளை சொன்னார்கள் என்பதை நம்மால் அறிவியல் ரீதியாகப் புரிந்து கொள்ளுதல் சாத்தியமில்லை.

ஆனால் எல்லா நாட்டுப் புராணங்களிலும், மதநூல்களிலும் இது போன்ற அற்புதச் செயல்கள் ஏராளம் உள்ளன. இதற்கும் ஒருபடி மேலாக எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அசரீரியோ, தேவதூதர்களோ சொல்லும் நிகழ்வுகள் எல்லா மதநூல்களிலும் உள்ளன. "தேவகியின் எட்டாவது மகனாக கிருஷ்ணன் ஜனிப்பான். அவன் உன்னைக் கொல்வான்" என்று கம்சனுக்கு அசரீரி சொன்ன கதையை நாம் அறிவோம். கம்சன் அதைத் தடுக்க எல்லா வழிகளைப் பிரயோகித்தும் நடப்பதை மாற்ற முடியவில்லை. இயேசு கிறிஸ்துவும், முகமது நபியும் பிறப்பதும் முன்பே அறிவிக்கப்பட்டு விட்டதாக அந்த மதநூல்கள் சொல்கின்றன.

இதெல்லாம் நிஜம் தான் என்று நம்ப முடியாத பகுத்தறிவு வாதிகள், இது மதவாதிகளின் கட்டுக் கதை என்று சொல்லலாம். மற்றவர்கள் இதெல்லாம் தெய்வ சக்தி அல்லது தெய்வாம்சம் பொருந்தியவர்களுக்கு மட்டுமே இருக்கக்கூடிய சிறப்பு சக்தி என்று நினைக்கலாம். ஆனால் பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் சாதாரண மனிதர்கள் சிலருக்கும் அப்படிப்பட்ட அற்புத சக்திகள் கிடைத்த போது, அது பகுத்தறிவுக்கோ, மற்ற அறிவுக்கோ எட்டாத விஷயமாக அனைவரையும் குழப்பியது.

1967 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி சிகாகோ ரேடியோவில் ஒரு பேட்டியில் ஜோசப் டிலூயிஸ் என்ற 'கிரிஸ்டல் பந்து ஞானி' அந்த வருட இறுதிக்குள் ஒரு பெரிய பாலம் இடிந்து விழும் என்றார். மூன்று வாரம் கழித்து 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஓஹையோ நதியின் குறுக்கே இருந்த "வெள்ளிப்பாலம்" இடிந்து விழுந்து பலர் இறந்தனர்.

1968, ஜனவரி எட்டாம் தேதி நாட்டில் பெரிய கலவரம் வரும் என்றார். 1968, ஏப்ரல் ஏழாம் தேதி சிகாகோவில் பெரிய கலவரம் வந்து ஐயாயிரம் மத்திய அரசுப்படையினர் வந்து அடக்க வேண்டியதாயிற்று.

1969, ஜனவரி 16 ஆம் தேதி சிகாகோ நகரின் ஓட்டலின் ஒரு பாரில் நுழைந்து அங்குள்ள சர்வரிடம் சிகாகோவின் தெற்குப்பகுதியில் இரு ரயில்கள் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட விபத்தைப் பற்றி அன்றைய தினப் பத்திரிக்கையில் என்ன போட்டிருக்கிறார்கள் என்று கேட்க அங்குள்ளவர்கள் திகைத்துப் போனார்கள். முன்பே அவர் இது போன்ற விஷயங்களில் பிரபலமானபடியால் அன்றைய பத்திரிக்கைகளில் ஒன்றும் வராவிட்டாலும் ரேடியோவிலாவது ஏதாவது செய்தி வருகிறதா என்று ரேடியோவைப் போட்டார்கள். அப்போது இரவு மணி 11. ஆனால் ரேடியோவில் விபத்தைப் பற்றி எந்த செய்தியும் இல்லை. அது வரை நடக்கவில்லை என்பதை அறிந்த டிலூயிஸ் உறுதியாகச் சொன்னார். "இந்தப் பகுதியில் கடந்த 25 வருடங்களில் இது போன்ற பெரிய விபத்து நடந்திருக்காது. அப்படிப்பட்ட விபத்து நடக்கும்."

இரண்டு மணி நேரம் கழித்து சிகாகோவிற்குத் தெற்கே இல்லினாய்ஸ், சென்ட்ரல் ரயில்கள் பனிமூட்டத்தின் காரணமாக மோதிக் கொண்டன. 47 பேருக்குப் பலத்த காயம். மூன்று பேர் இறந்தனர். அவர் கூறியது போல அதுவே அந்தக் காலக்கட்டத்தில் அந்தப் பகுதியில் மிகப்பெரிய விபத்து.

1969, மே 21ல் டிலூயிஸ் "இண்டியானாபோலிஸ் அருகே ஒரு விமானம் விபத்துக்குள்ளாகும். அதில் 79 பேர் மரணமடைவார்கள். ஏதாவது ஒரு வகையில் 330 என்ற எண் அதில் சம்பந்தப்படும்" என்றார். 1969, செப்டம்பர் 9 ஆம் தேதி அலிகனி ஏர்லைன்ஸ் விமானம் ஒரு தனியார் விமானத்துடன் மோதி 79 பயணிகள் இறந்தனர். விபத்து நேர்ந்த நேரம் மதியம் 3.30.

1968 டிசம்பர் 15 ஆம் தேதி டிலூயிஸ் "கென்னடி குடும்பத்திற்கு தண்ணீர் மூலம் ஒரு கண்டம் இருக்கிறது. ஒரு பெண் நீரில் மூழ்கியதைப் பார்த்தேன்" என்றார். 1969, ஜூலை 18 ஆம் தேதி மேரிஜோ என்னும் பெண் எட்வர்டு கென்னடியுடன் காரில் சென்று கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய சம்பவம் எட்வர்டு கென்னடியின் அரசியல் வாழ்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது.

பொதுவாகவோ, எப்படி வேண்டுமானாலும் அர்த்தப்படுத்திக் கொள்ளும்படியாகவோ சிலர் எதை எதையோ சொல்வதுண்டு. அப்படிச் சொல்வதில் ஏதாவது ஒன்று பலித்து விட்டால் அதை விளம்பரப்படுத்தி நல்வாக்கு சித்தர் என்றோ முக்காலமும் உணர்ந்த மகான் என்றோ பெயர் வைத்துக் கொள்வதுண்டு.

உதாரணத்திற்கு "அடுத்த ஆண்டு ஒரு பெரும் ரயில் விபத்து நடக்கும். நாட்டில் எங்காவது குண்டு வெடிக்கும். புதியதாக ஒரு நோய் வந்து மனிதர்களைத் தாக்கும்" என்று நான் சொன்னால் மூன்றில் இரண்டு கண்டிப்பாகப் பலிக்க சாத்தியமுண்டு. உடனே நான் விகடனில் அன்றே இந்த தேதியில் இப்படிச் சொன்னேன் என்று சொல்லிக் கொள்ளலாம். இப்படி இப்போதெல்லாம் நிறைய நடக்கிறது. ஆனால் டிலூயிஸ் அப்படி பொத்தாம் பொதுவாக எதையும் சொல்லவில்லை. அவர் சொன்னது எல்லாமே அப்படி சொல்ல முடிந்த விஷயங்கள் அல்ல.

இப்படி நடப்பதை முன் கூட்டியே சொல்லி திகைப்பில் ஆழ்த்திய டிலூயிஸ் ஒரு சாதாரண முடிதிருத்தக் கலைஞர். பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டவர். பின்னர் கடற்படையில் சேர்ந்தார். பணியிலிருந்து விலகுவதற்கு முன்பு ஒரு முறை தான் வேலைக்கு செல்லும் கிடங்கில் ஏதோ ஒரு பெரிய விபத்து ஏற்படுவதாக அவர் உள்ளுணர்வு சொல்ல அவர் அன்று வேலைக்குப் போகாமல் இருந்து விட, உண்மையாகவே அங்கு ஒரு பெரும் விபத்து அன்று நிகழ்ந்தது. அன்று வேலைக்குப் போகாததால் அவர் உயிர் தப்பித்தார். பிறகு இவர் கிரிஸ்டல் பந்தைப் பார்த்து எதிர்காலக் கணிப்புகளைச் சொல்ல ஆரம்பித்தார். அந்த ஆரம்ப உள்ளுணர்வின் பின் இவருடைய எல்லா முன்கூட்டிய கணிப்புகளைக் கவனித்தீர்களானால் ஒரு உண்மை புரியும். எல்லாமே விபத்துக்கள் பற்றியதாகத் தான் இருந்தன.

ஜோசப் டிலூயிஸிற்கு இப்படி விபத்துகளை அறியும் சக்தி கிடைத்ததென்றால் சில மனிதர்களுக்கு திடீரென்று வேறு மாதிரியான அபூர்வ சக்திகள் கிடைத்த நிகழ்ச்சிகளும் ஆதாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.

அவற்றையும் பார்ப்போமா?

இன்னும் ஆழமாகப் பயணிப்போம்.....

பாஜக அமித்ஷா வின் சொத்து மதிப்பு 300% உயர்வு...


வேம்பு கற்பம் (சன்மார்க்க காயகற்பம்)...


புகல்பெறவே நூற்றாண்டின் வேம்பைப்பர்த்து
ஆமாப்ப பட்டையைத்தான் வெட்டிவந்து
அப்பனே நிழல்தனிலே யுலர்த்திபின்பு
காமப்பா யிடித்து நன்றாய்ச் சூரணமே செய்து
கரிசாலை மல்லிகையின் சாறு வார்த்து
நேமப்பா அஞ்சுதரம் பாவினையே செய்து
சிறப்பான வெருகடிதூள் கொண்டிடாயே
கொண்டிடவே யனுபான வகையைக்கேளு
மத்தித்து தேனதிலே குடிப்பாயே நாற்பதுநாள்
விண்டிடவே யந்திசந்தி கொள்ளுகொள்ளு
மெய்யெல்லாங் கருங்கல்லின் வைரம்போலாம்
துண்டிடவே நரை திரையு மேல்லாம்போகும்
சுக்கிலந்தான் மேலேறும் கீழோடாது
கண்டிடவே யாருதளம் வெளியே காணும்
காலனுமே அஞ்சிடுவான் காணுங்கானே"

-நந்தீசர் சகலகலை ஞானம் -1000

நாம் காயகற்ப மருந்துகளைத்தேடி எங்கேயும் காடு மலைகளில் அலைந்து திரியாமல் வீட்டிலிருந்தபடி சுலபமாக செய்து சாப்பிட்டு உடலைக் கற்ப தேகமாக மாற்றிக்கொள்ள நந்தீசர் பெருமான் அருளியுள்ளார்.

தமிழ் நாட்டில் எங்கும் சாதாரணமாக காணக்கிடைக்கும் வேப்பமரத்தை நூறாண்டு சென்ற வயதான மரத்தை  தேடி அதன் பட்டையை வெட்டி வந்து மேலே உள்ள கடினமான பகுதியை நீக்கி விட்டு உள்ளே உள்ள வெண் சதைப் பகுதியை எடுத்து நிழலிலேயே நன்கு காய வைத்து உரலிலிட்டு இடித்து தூள் செய்து கொள்ளவும்.

இதில் வெண் கரிசலாங்கண்ணி சாறு , கொத்தமல்லி இலையை இடித்த சாறு இரண்டும் சமமாகக் கலந்து வேம்பு பட்டை தூளில் கலந்து அது முழுகும் அளவு சாறு விடவும் இதை வெயிலில் வைத்து காயவிடவும்.

இந்த மூலிகை சாறுகள் நன்கு வற்றியவுடன் மீண்டும் மேற்கண்ட சாறுகளை ஊற்றிக் கலந்து வெயிலில் காயவிடவும்.

இப்படி ஐந்து முறை செய்யவும் இதற்க்கு பாவனை என்று பெயர் இந்த முறையில் தயார் செய்த சூரணத்திற்கு "வேம்பு கற்பசூரணம்"என்று பெயர்.

இதனை பாட்டிலில் பதனம் செய்யவும் இதனை வெருகடியளவு என்பது ஐந்து விரல் கூட்டி எடுத்து (ஒரு ஸ்பூன் அளவு) எடுத்து தரமான தேனில் கலந்து அந்தி சந்தி (காலை- மாலை) என நாற்பது நாள் உண்ணவும். 

இதனால் தேகம் வைரம் போல் இறுகி நாடி நரம்புகள் முறுக்கேறும் தசைகள் இறுகும் தலைமுடி நரை மாறும் பார்வைதிறன் அதிகரிக்கும் உடல் இளவயது தோற்றம் பெரும் மற்றும் சுக்கிலம் எனப்படும் விந்துதிடப்படும் உடல் உறவில் அதிக நேரம் நீடிக்கும் குண்டலினி யோகப்பயிற்சி செய்பவர்கள் சுத்த சன்மார்க்கத்தில் ஈடுபட்டு சாகாக்கல்வி பயிற்சி யில்  இருப்பவர்களுக்கு பேரின்பகிட்டும்  ஞானத்தின் ஆறுநிலைகளையும் கண்டு உணரலாம் எனவும் இந்த வேம்பு கற்பம் மண்டல கணக்காக உண்டவனை கண்டு  காலன் என்ற எமன் அஞ்சுவான் என்று நந்தீஸ்வரர் கூறுகிறார்.

புண்ணியம் செய்தவர்கள் கேட்டு பயன் பெறுவார்கள்  தயார் செய்து சாப்பிடுவார்கள் மற்றவர்களுக்கும் கூறுவார்கள்...

உலகத் தமிழர்களுக்கோர் நற்செய்தி.. வருகிறது மூலிகை பெட்ரோல்...


சுகப்பிரசவம்...


படத்தில் முந்தைய காலங்களில் கர்ப்ப ஸ்திரீகள் கர்ப்ப காலத்தில் சுகப்பிரசவம் செய்யும் முறை உள்ளது.

கர்ப்ப ஸ்திரீகள் படத்தில் காட்டியுள்ள முறையில் அமர்ந்து பிரசவம் செய்தால் தான் சுகப்பிரசவம் நடக்கும் என்றும் பின்வரும் சந்ததியர் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கோவில் சுவரில் கல்வெட்டாக பதித்து காட்டியுள்ளனர்.

தற்சமயம் கர்ப்ப ஸ்திரீகளை படுக்கையில் படுக்க வைத்துதான் பிரசவம் செய்கின்றனர். அப்பொழுது முக்கி முக்கி குழந்தையை வெளியேற்றுவார்கள் அப்படி செய்தால் சுகப்பிரசவம் ஆகாது. மேலும் பிரசவத்தின் போது சிக்கல் உண்டாகும்.

கர்ப்ப ஸ்திரீகளை படத்தில் காட்டியுள்ளபடி தளர்வாக அமர்ந்து (குத்துகாலிட்டு) இரண்டு பெண்கள் கர்ப்ப ஸ்திரீயின் வயிரை கீழ் நோக்கி அழுத்தி விடவேண்டும். அப்பொழுது தான் வயிற்றுக்கும் கர்ப்பபைக்கும் நன்கு அழுத்தம் கிடைக்கும். எனவே பிரசவம் எளிதாக நடைபெறும்.

இதனை நம் முன்னோர்கள் கல்வெட்டில் காட்டியுள்ளனர்.

இந்த சிலை குற்றாலம் செல்லும் வழியில் கடையநல்லூர் என்னும் ஊர் அருகில் தேவர் கால்வாய் என்னும் பகுதியில் இருந்து இடது புறம் ஒன்னறை கிலோமீட்டர் சென்றால் ஒரு இலங்கை அகதிகள் முகாம் அருகில் மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருக்கோவில் மண்டப தூணில் இந்த சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற பாரம்பரிய மருத்துவ முறையை சொன்னதால் தான் ஹீலர் பாஸ்கரை கைது செய்துள்ளார்கள். இது துரதிஷ்டமானது.

கர்ப்பிணி பெண்கள் எளிதாகக் குழந்தை பெற விதி...

1) சிவனார் வேம்பு கொண்டு வந்து முலைப்பாலில் அரைத்து தொப்புளில் சுற்றி தளமாய்ப்பூசினால் சீக்கிரத்தில் பிரசவமாகும்.

2) மேலும் பசலையிலைச்சாறு அரிக்கால்படி, நல்லெண்ணெய் அரிக்கால்படி இவ்விரண்டையும் ஒன்றாய்க் கலந்து கொடுக்க எளிதில் பிரசவமாகும். யாதொரு வலியும் இல்லாமல் நஞ்சுக்கொடியும் விழும்.

எந்த நரிக்குறவர்களும் ஆஸ்பத்திரிக்கு சென்று பிரசவம் பார்ப்பதில்லை என்பதையும் அறிக.

வாழ்க வளமுடன்.

நமது பாரம்பரிய மருத்துவமுறையை மீட்டெடுப்போம்.

அவசரத்திற்க்கு மட்டும் அலோபதியை பயன் படுத்துவோம்...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


மானிட வாழ்வின் மிகப் பெரிய நோய்...


மானிட வாழ்வின் மிகப் பெரிய நோய் பசி. இன்று வரை தீர்க்க இயலாத நோயும் இதுதான்.

ஔவையார் பசியின் கொடுமையை இப்படிச் சொல்கிறார்....

பசி வர... மானம், குலம், கல்வி, வன்மை, அறிவுடமை, தானம், தவம், உயற்சி, தாளாண்மை, காமம் என்கிற பத்தும் பறந்து போகுமென்கிறார்.

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்.

-ஔவையார்...