06/08/2018

மருத்துவ மாப்பியாக்களும்.. சுகப்பிரசவ உண்மைகளும்...


1950 ஆண்டு, அமெரிக்க மகப்பேறு மருத்துவ சங்கம் கூடியது...

அதில் பிரசவத்தின் போது, குழந்தை வெளிவந்த ஒரு நிமிடத்திற்குள்  தொப்புள் கொடி அறுப்பது பரிந்துரைக்கப்பட்டது. அடுத்தடுத்த கூட்டங்களில் குழந்தை பிறந்த 30 விநாடிகளுக்குள் தொப்புள் கொடி அறுப்பது பரிந்துரைக்கப்பட்டது.

அமெரிக்க ஐரோப்பிய மருத்துவ பிரதிநிதியான மருத்துவ உலகில்,  இந்தியாவிலும் குழந்தை பிறந்த 30 விநாடி முதல் ஒரு நிமிடத்திற்குள் தொப்புள் கொடி அறுக்கும் வழியே பின்பற்றப்படுகிறது.

இதற்கு காரணமாக சொல்லப்படுபவை
தாய் இரத்த இழப்பை தவிர்ப்பது,
குழந்தை உடலில் அதிக ரத்தம் போய், ரத்த அணுக்கள் அதிகமாகி ரத்த ஓட்டம் தடைபடுவதை தவிர்ப்பது,
குழந்தையை சீக்கிரமே குழந்தை மருத்துவர் பராமரிப்பு பணி செய்ய தருவது.

ஹீலர் பாஸ்கர் இதில் எங்கே வருகிறார்?

குழந்தை பிறந்தவுடனே தொப்புள் கொடியை அறுப்பதால், முக்கிய சத்து பொருள்கள் குழந்தைக்கு செல்வது தடுக்கப்படுகிறது.

ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அணுக்கள் குழந்தைக்கு போவது தடுக்கப்படுகிறது.

ஸ்டெம் செல்கள் என்பது குழந்தைக்கு போவது தடுக்கப்படுகிறது.

முக்கியமாக தொப்புள் கொடியை தூக்கி வீசிவிடுவதால், அதிலுள்ள ஸ்டெம் செல் என்பதும் வீணாகிவிடுகிறது.

இப்போது ஆய்வுகள் மேலை நாடுகளில்..

தொப்புள் கொடியை உடனே அறுக்கும் முறை இல்லாமல், 5 நிமிடத்திற்கும் மேல் கழித்து அறுப்பதால்,

அதிக ரத்தம் சென்று குழந்தை  நலம் பெறுகிறது.

ஆக்சிஜன், இரும்பு சத்துள்ள ரத்தம் அதிகமாக செல்வதால், ஒரு வருடம் தேவையான இரும்பு சத்து குழந்தைக்கு செல்கிறது.

மூளை, குடல் இயக்கம் வலுவாகிறது.

(அவர்கள் இன்னும் நோய் எதிர்ப்பு சக்தி, ஸ்டெம் செல் ஆய்வுக்குள் நுழையவில்லை)

உடனே தொப்புள் கொடியை அறுக்கும் முறையால் இந்த அத்தனை முக்கிய நன்மையும் இழந்து குழந்தை உடல் நலத்திற்கு எதிராய் இருக்கிறது.

முடிவாக,

புத்தகத்திற்குள் சிந்திக்க பழகிய  முரட்டு ஆங்கில மருத்துவர்கள், ஹீலர் பாஸ்கர் சொல்லும் தமிழர் வழி தொப்புள் கொடி துண்டிப்பு  வழிமுறையை பின்பற்றும் நிலை கண்டிப்பாய் வரும். ஆனால் அது அமெரிக்கன் கண்டுபிடித்ததாய் வரும்.

- ஆங்கில மருத்துவ இணை பேராசிரியர் Mathi vanan...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.