06/08/2018

உயிர்த்தெழுதல் பார்வை ஒன்று...


படைவீரா்கள் அணிவகுத்து ஊருக்குள் வந்துக்கொண்டிருந்தபொழுது
பார்க்கும் ஒவ்வொருவரையும் அச்சப்படும் பார்வையில் நோக்கியவாறு வந்தன.

படைவீரா்களுள் யூதாசும் இருந்தான்.படைவீரா்களை வழிநடத்திச் சென்றுகொண்டிருந்தான் மக்கள் கூட்டத்தில் இருந்த இயேசுவிடம் சென்று, "போதகரே வாழ்க எனக் கூறிக் கொண்டே அவரை முத்தமிட்டான்".

வந்தப் படை இயேசுவை சுற்றி வளைத்து கைது செய்தது.இயேசுவை கைது செய்த மாத்திரத்தில் பேதுரு திடீரெனப் பாய்ந்து தன் வாளை உருவி தலைமை காவலரின் காதைத் துண்டித்தான்....

ஒரு கண்ணத்தில் அறைந்தாள் மறு கண்ணத்தைக் காட்டுங்கள் எனப் போதித்த இயேசு தலைமைக் காவலர் கேட்டக் கேள்விகளுக்கு மறுமொழி கூறும் பொழுது பலத்த சத்தத்துடன் இயேசுவின் கண்ணத்தில் அறைந்தார்.

ஆனால் இயேசுவோ மறு கண்ணம் காண்பிக்காமல் நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக் காட்டுங்கள் அல்லது சரியாகப் பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்? என்றார்.

இயேசுவை அடித்துத் துன்புறுத்தி காவலர்கள் நடக்கவைத்து செல்லலானர்கள். அக்கணம் இயேசுவின் ஆடை அவிழ்க்கப்பட்டு கருஞ்சிவப்பு நிறமுள்ள ஆடையை கசையால் அடித்து அடித்து அணிவித்தனர்.

பின்பு,போதாகுறைக்கு அவருடைய முதுகில் சிலுவையை சுமக்கச் சொன்னார்கள்.இயேசு சிலுவையைச் சுமந்து கொண்டு மண்டையோட்டு (கொல்கொதா) இடத்திற்கு வந்தபோது படைவீரா்கள் இயேசுவுக்கு கசப்புக் கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள்...

அந்த இரசத்தைக் குடித்ததும் இயேசு, எல்லாம் நிறை வேறிற்று என்று கூறித் தலைசாய்த்து ஆவியை ஒப்படைத்தார்...

பின்பு,அவருடைய தலையில் முள் கிரீடம் ஒன்று மாட்டப்பட்டது. கை, கால்களை சிலுவையில் வைத்து ஆணி அடிக்கப்பட்டது

இயேசுவை கொலை செய்வதற்காகச் சிலுவையில் அறையத் தொடங்கிய போது மணி சரியாக காலை ஒன்பது இருக்கும்...

இயேசுவின் வலப்புறமும் இடப்புறமும் கள்வர்கள் இருவர் அறையப்பட்டிருந்தார்கள்...

இறுதியில் உயிர் பிரியும் தருவாயில் இயேசு உரத்தக்குரலில் சப்தமிட்டு என் இறைவா,என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்? என்றார்...

குற்ற அறிக்கை ஒன்றைக் கொண்டு வந்த பிலாத்து அதனை இயேசுவின் சிலுவையில் மாட்டினான்.அதில் "நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்" என எழுதப்பட்டிருந்தது...

சிலுவையில் பிணமாகத் தொங்க விடப்பட்டிருந்த இயேசுவின் உடலை இறக்கி கல்லறைக்குள் வைத்து பெரிய பாறையை உருட்டி கல்லறையின் வாயிலில் காவலர்கள் வைத்தனா்.

மூன்று நாட்கள் கழித்து கல்லறையில் இருந்த இயேசுவின் உடல் காணாமல் போயிருந்தது.அவர் மீண்டும் உயிர்தெழுந்து சென்றதாக மக்கள் பேசத்தொடங்கினா்...

பத்து வெள்ளி நாணயங்களுக்கு காட்டிக் கொடுத்த யூசாசு அந்த நாணயங்களை தூக்கியெறிந்துவிட்டு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்...

இதுவே நாம் விவிலியத்திலும் படங்களிலும் பார்த்த படித்த கதைகள் ஆனால் இதற்கு நேர்மாற்றமாக சில ஆதாரங்கள் இருக்கின்றன அதனை அடுத்தப் பதிவில் பார்ப்போம்...

- தொடரும்.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.