05/07/2018

செவ்வாயில் மனிதமுகம் சர்ச்சை...


1976இல் செவ்வாயை ரோந்துசுற்ற அனுப்பப்பட்ட நாஸாவின் வைக்கிங் வின்கலன். மனிதமுகம் போல ஒரு வஸ்துவை பூமிக்கு படம்பிடித்து அனுப்பியது. இதைவைத்து, செவ்வாயின் இந்த இடம் (முகம்) வேற்றுகிரகவாசிகள் செவ்வாயிலிருந்து நமக்கு அனுப்பியுள்ள செய்தி என வேற்றுகிரக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ரிச்சர்ட் ஹோக்லாண்ட்
(Richard Hoagland) என்பவர்  செவ்வாயில் உள்ள வேற்றுகிரகவாசிகள் நாம் பார்ப்பதற்காக மலைகளை குடைந்து செதுக்கியது என்று பரப்பினார். அமேரிக்காவில் இக்கரையில் இருந்து அக்கரை வரை வானொலி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இந்த உண்மையை கூறினார்.


நாஸா பொய் சொல்கிறது. வேற்றுகிரகவாசிகள் செவ்வாயில் இருப்பதை அது சுயநலத்திற்காக மறைக்கிறது, வேற்றுகிரகவாசிகளிடம் தொடர்பு செய்து ஒப்பந்தம்செய்து இருப்பதை மக்களிடம் மறைக்கிறது. இப்படி சென்றது அவர் வாதங்கள்.

செவ்வாய் கிரகத்தில் உள்ள கன்செப்சியான் பள்ளம் என்ற இடத்தில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்களில் பாறையில் மனித உருவங்கள் செதுக்கப்பட்டுள்ள காட்சிகள் நன்றாக பதிவாகியுள்ளன.

அதில் தெரியும் ஒரு முகம் பண்டைய காலத்தில் வாழ்ந்த அசிரியர்களின் கடவுளான நாபுவின் முகம் போன்று உள்ளதாக சிலர் தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பாக வேற்றுகிரகவாசிகளை பற்றி ஆராய்ச்சி செய்துவரும் ஸ்காட் வாரிங் என்பவர் கூறுகையில், செவ்வாய் கிரகத்தில் ஏலியன்ஸ் வாழ்ந்துவந்தார்கள் என்பதற்கு இந்த புகைப்படமே சாட்சி.

மேலும் அசிரியர்கள் அப்போது விண்கலம் மூலம் செவ்வாய் கிரகத்துக்கு சென்று தங்களின் கடவுளின் முகத்தை செதுக்கியுள்ளனர் என்பதும் இதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. எனினும் நாசா விவகாரம் குறித்த உண்மையை மக்கள் அறிந்துகொள்வதை நாசா விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

நாசாவின் தரப்பில் படத்தில் புலப்படுவதாக உள்ள இடம் டொனியா (cydonia) எனப்பெயரிடப்பட்டு, செவ்வாயில் உள்ள மலைகள், பள்ளத்தாக்குகள். மாரினர் வின்கலன் 1976இல் செவ்வாயில் தரையிறங்குவதற்குள் அனுப்பிய வேறு ஆங்கிள்களில் இதே இடத்தை எடுக்கப்பட்ட படங்கள்.

மார்ஸ் ரெக்கொனெய்ஸென்ஸ் ஆர்பிட்டர் வின்கலன் சமீபத்தில் 2005இல் எடுத்த படங்களில் மனித முகம் வெறும் மலைப்பிரதேசம். சாதாரண பகுத்தலில், ஒரு கோணத்தில், வைக்கிங் புகைப்படங்கள் மனிதமுகம் போல திரித்து காட்டியுள்ளது.

பொட்டலில் உலவுகையில், சட்டென வானத்தை நோக்குகையில் மேகங்கள் ஒரு மனித அல்லது மிருகத்தின் உருவத்தையோ முகத்தைப்போலவோ தெரியுமே, அதுபோல. சற்று விலகிசென்றோ அல்லது சிறிது நேரம் கழித்து நோக்குகையில் மேகத்தின் பேட்டர்ன் மாறிவிடும். ஹோக்லாண்ட் இப்போது வேறு கன்ஸ்பிரஸி தியரிக்கு தாவிவிட்டதாக கேள்வி.

இதைப்போலத்தான் பெர்சிவால் லொவெல் இங்கிருந்தபடியே நம்பிய செவ்வாயின் நீரோட்ட கால்வாய்கள். ஹப்பிள் தொலைநோக்கி செவ்வாய் பரப்பை பல பாகங்களாய் புகைப்படமெடுத்ததை ஒட்டி சேர்த்துப்பார்த்தால் கால்வாய்கள் தென்படவில்லை.

பெர்சிவால் லொவெல் கால்வாய்கள், ஹோக்லாண்ட் செவ்வாய் மனிதமுகம் இதையெல்லாம் கடந்து, அறிவியல் ரீதியாய் பரிசோதனைகள் செய்து, செவ்வாயில் நிஜமாகவே உயிர் இருக்கலாமோ என்று விஞ்ஞானிகளை உந்திவிட்ட விஷயம் முதலில் நம் பூமியிலேயே கண்டுபிடிக்கப்பட்டது.

நாசாவில் செவ்வாய் கிரகம் தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் அஸ்வின் வசவதா என்பவர் இது குறித்து கூறியதாவது, வேற்றுகிரகவாசிகள் குறித்த எந்த விவரங்களையும் விஞ்ஞானிகள் சாதாரண மக்களிடம் இருந்து மறைக்கவிரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

எனினும் செவ்வாய் கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள் மற்றும் கடவுள்களின் உருவங்கள் தெரிவதாக புதிதாக சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தின் மலைகளில் புத்தரின் சிலை செதுக்கப்பட்டிருந்ததாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.

இவர் என்ன தான் புரளிகள் என அறிவியல் விளக்கம் தந்தாலும்
இன்றளவும் நாசாவின் ஆளில்லா விண்கலங்கள் செவ்வாயில் தேடிக்கொண்டிருப்பது தண்ணீரையும் தாதுப்பொருட்களையும் மட்டுமல்ல. அங்கு வாழ்ந்த உயிரினங்களின் எச்சங்கள் மற்றும் ஆதாரங்களையும் தான்.

அவ்வாறான நிறைய ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றாலும் அதனை பற்றிய முழுமையான தகவல்களை ரகசியமாக வைத்துள்ளனர் நாசா...

பழங்குடி தற்சார்பு வாழ்வியல்...


உலகில் எந்த முனைக்கு நீங்கள் திரும்பினாலும் பழங்குடி மக்களிடம் ஒற்றுமையை காண முடியும்.

எல்லா பழங்குடி மக்களும் தம் முன்னோருக்கு (கருப்பு) பலிகொடுத்து வழிபடுபவர்கள். நாமும் அப்படி தான்.

இதை ஒழிக்கவே பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

வந்த மதங்கள் அனைத்தும் சீவகாருண்யம் பேசுவது இதனால் தான்.

சைவம், ஒரு கிடாவின் கருணைமனு போன்ற படங்கள் இதற்காக தான்.

(திரைப்படங்களில் முன்னோருக்கு வழிபாடு செய்வதாக காட்டப்படும் காட்சிகளையும் கவனியுங்கள்)

பல NGO க்கள் ஆப்பிரிக்க மக்களின் விலங்கு பலியிடும் வழக்கத்தை ஒழிக்க பல கோடிகள் செலவழிப்பது இதற்கு தான்...

தமிழர் மதம் எது.?


எந்த பிராமணனும் தீ மிதித்ததாக சரித்திரம் இல்லை.

எந்த பிராமணனும் சாமி வந்து ஆடியதாக வரலாறில்லை.

எந்த பிராமணனும் வேப்பிலை அடித்து மக்களுக்கு நோயை குணப்படுத்தியதில்லை.

எந்த பிராமணனும் அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி வழிபாடு செய்ததாக அறியவில்லை.

எந்த பிராமணனும் திறந்த வெளிகளில் இருக்கும் குலதெய்வக் கோயில்களில் பூசை செய்வதில்லை.

நான்கு சுவற்றுக்குள் இருந்து பிராமணன் வெளியே வரமாட்டான். ஏனெனில் அந்த 4 சுவற்றுக்குள்தான் இந்து மதம் இருக்கிறது.

எந்தெந்த சமயநுட்பங்களையெல்லாம் பிராமணன் புறக்கணிக்கிறானோ அவையெல்லாம் இந்து மதமல்ல.

எந்தெந்த மதங்களையெல்லாம் பிராமணன் தீவிரவாதம் என்கிறானோ அவையெல்லாம் தமிழர் மதங்களே...

அவைகள் தான் தமிழர்களின் மெய்யியல் வழிபாட்டு முறைகள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்...

இறப்பிற்குச் செய்யும் ஈமச்சடங்குக்கும், கோயில் சடங்குகள் உள்ள கீழ்க்கண்ட ஒற்றுமைகளை கூர்ந்து நோக்கவும்...



1) பிணத்தை குளிப்பாட்டுகிறார்கள். கும்பத்தையும் குளிப்பாட்டுகிறார்கள்

2) இங்கே வாய்க்கரிசி போடுகிறார்கள். அங்கேயும் கும்பத்திற்குள் அரிசி போடுகிறார்கள்.

3) இங்கே பூக்கள் தூவி மாலை, மரியாதை, ஊதுபத்தி, விளக்கேற்றுதல். அங்கேயும் அதேதான்.

4) இங்கேயும் மேளம் வாசிக்கிறார்கள், அங்கேயும் மேளம் வாசிக்கிறார்கள்.

5) செத்தாலும் சங்கு ஊதுறான், கோயில்லயும் சங்கு ஊதுறான்.

6) இங்கே பிணத்திற்கு மேலே பிணந்தின்னும் கழுகு வட்டமிடுகிறது. அங்கேயும் கழுகு வட்டமடிக்கிறது.

வித்தியாசம் ஒன்னே ஒன்னுதான். ஒருத்தன் முடிச்சை அவிழ்க்கிறான்,
ஒருத்தன் முடிச்சை போடுறான்.

இதில் ஒன்று அசல் மற்றொன்று போலி.

இதில் ஒன்று தமிழரின் சமாதி வழிபாடு.

மற்றொன்று எதிரியின் வழிபாடு.

ஒருவன் இதையெல்லாம் வேதங்கள், ஆகமங்கள் சொல்கிறது என்று சொல்லி கடைபிடிக்கிறான்.

இன்னொருவன் எழுத்து ஆவணம் ஏதுமில்லாமல் வழிவழியாக தங்களது முன்னோர்கள் வழக்கப்படி கடைபிடிக்கிறான்.

இந்த 2 முறைகளுமே பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருந்தாலும் எதிரும் புதிருமானது.

என்னுடைய கேள்வி இதுவே. இவற்றில் எந்த வழிபாட்டுமுறை முதலில் தோன்றியிருக்கும்?

குறிப்பு...

உயிருள்ள, உயிரற்ற உடலை குறித்து வழங்கும் ஒரு சொல்லே “சடம்” ஆகும்.
சடம் = உடல் ;
சடலம் =  இறந்த உடல் ;
சடங்கு = உடலுக்கு செய்யும் வழிபாடுகள்.
மெய்யியல் குறித்த தேடலைத் தொடர்கிறேன்...

ஒரு உடலில் இருந்துதான் இன்னொரு உடல் உருவாகிறது...


அவ்வாறு தோன்றிய உடல் கண், காது, மூக்கு, பல், கை, கால் என அனைத்தையும் தானே வளர்த்தெடுக்கிறது.

 அவ்வுடலுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால்கூட தன்னைத்தானே சரிசெய்தும் கொள்கிறது. அதாவது ஒரு உடல் தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளும் கலையே “உடலியல்” ஆகும்.

நீர்நிலைகளில் வாழும் விரால் மீனோ வறட்சிக்காலங்களில் மண்ணிற்கு அடியில் சென்று சமாதிநிலை அடைந்துவிடும். நீர், உணவு, சுவாசம் இல்லாமல் சுமார் 3 வருடங்கள் வரை அது தாக்குப்பிடிக்கும்.

மீண்டும் மழைவரும் காலங்களில் அது மண்ணிற்கு வெளியே வந்து துள்ளிக்குதிக்கும். கல்லுக்குள் வாழும் தேரைகூட சமாதிநிலை அடைந்து எத்துனை ஆண்டுகளானாலும் மீண்டுவரும்.

மனிதனைத் தவிர இவ்வுலகில் வாழும் ஏறக்குறைய எல்லா உயிர்களுமே இந்த “உடலியல்” என்னும் “மெய்யியல்” கலையை நன்கு அறிந்து வைத்திருக்கின்றன.

 மனிதன் மட்டும்தான் தனது பரிணாமவளர்ச்சியின் ஏதோ ஒரு படிநிலையில் இம்மெய்யிலை தொலைத்திருக்கிறான்.

 இயற்கையிடமிருந்து விலகிப்போன அவன் உடலை மீண்டும் இயற்கையோடு பொருத்தும் செயலையே அக்காலத்தில் சித்தர் செய்திருக்கின்றனர்.

 உடல் எவ்வாறு தன்னைத்தானே வளர்த்து சீர்செய்து கொள்கிறது என அவர்கள் ஊன்றி ஆராய்ந்திருக்கின்றனர்.

அண்டத்தின் இயக்கமே பிண்டத்தின் இயக்கம் என்னும் பேருண்மையை சித்தர்கள் அறிந்திருந்தால் உருவமில்லா செயல்முறை வழிபாட்டை மட்டுமே மக்களுக்குப் பயிற்றுவித்து வந்தனர்.

கற்சிலையிடம் போய் வாழ்வதற்கு வழிகேட்கும் முட்டாள்தனத்தை நம் முன்னோர்கள் ஒருபோதும் செய்ததே இல்லை...

கரும்புலிகள் உருவாக்கத்தின் பின்னணி...


கரும்புலிகள் என்ற வார்த்தைப் பிரயோகம் உலகளாவிய ரீதியில் ஒவ்வொருவராலும் பேசப்படும் சக்தி மிக்கதொரு சொற்பதமாகிவிட்டது. கரும்புலித்தாக்குதலை நாடத்தும் விடுதலைப்புலி உறுப்பினர்களின் பிரமிப்பூட்டும் தியாகங்கள், உலக சமுதாயத்தை அதிர்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தி வருகின்றன. மனிதன் பிறந்ததே வாழ்வதற்காகத்தான். அப்படியானால் இறப்பதற்காகவே களம் புகும் இக் கரும்புலிகள் யார்..?

இவர்களது உருவாக்கத்தின் வரலாற்றுப் பின்னணி என்ன ?

ஈடு இணையற்ற இவர்களது ஈகமும் மன ஓர்மமும் சமுதாயத்தில் எற்படுத்தும் தாக்கம் எத்தகையது, என்பன போன்ற கேள்விகளுக்கான விடைகளானது மானிட ஆய்வாளர்கள் மத்தியில் ஆராச்சிக்குரியனவாகிவிட்டன.

இன்று உலகெங்குமுள்ள அடக்குமுறையாளர்கள் தங்களுக்குள் கைகோர்த்தபடி, சுதந்திரச் சுவாசிக்க விழையும் மக்களை மிருகத்தனமாக அடக்கி ஒடுக்க முனைகின்றனர். இவர்களிடம் ஆள், ஆயுத பலம் உண்டு. ஆட்சி அதிகாரம் உண்டு. தொழில் நுட்பவலுவுண்டு. இவற்றை தேவைப்படும் இடங்களுக்கு, தேவைப்படும் நேரங்களில் கொடுத்து மாறி, போராட்ட சக்திகளை பலம் இழக்க செய்து, தமது அடக்கு முறைகளை வலுப்படுத்துகின்றனர். இந்த நவீன அடக்கு முறையாளர்களுக்கு ஈடு கொடுக்க கூடிய அளவிற்கு ஆள் – ஆயுத தொழில் நுட்பத் திறன்களைப் போராட்ட சக்திகள் கொண்டிருப்பதில்லை.

மிகக் குறைந்த அளவில் இவர்களுக்கு இருக்கும் போராட்ட திறன்களில் இருந்து மிக உச்ச பயன்களைப் பெற்றாலொழிய போரட்ட சக்கரத்தை ஒர் எல்லைக்கப்பால் நகர்த்த முடியாது. எனவே ஒடுக்கு முறையாளர்களின் நாடியை ஒடுங்கச் செய்யும் அளவுக்கு, பல்வேறு திசைகளில் இருந்தும் வேவ்வேறு வடிவங்களில் போர்ச்சக்கரம் நகர்த்தப்பட வேண்டும்.

இந்தப் போர் வடிவங்களுக்குள்ளே உயர்ந்ததும், உன்னதமானதுமான விடுததைப் புலிகளின் போர்வடிவம்தான் கரும்புலித் தாக்குதலாகும்.

தன்னை இழந்து அல்லது எதிரிகள் பலரை அல்லது எதிரியின் பலமிக்கதொரு இலக்கை அழிக்க கூடிய படையணி ஒன்றை அமைக்கும் யோசனையை, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே கொண்டிருந்தார்.

அந்த எண்ணக் கருவை செயற்படுத்தக் கூடிய ஆற்றலை விடுதலைப் புலி வீரர்கள் மத்தியில் சிறுகச் சிறுக எற்படுத்திக் கொண்டுவாந்தார். பின்னர்  ” ஒப்றேசன் லிபறேசன் ” என்ற பெயருடைய இரணுவ நடவடிக்கை மூலம் வடமராட்சி பகுதியை ஆக்கிரமித்த சிங்களப் படைகள் வெற்றிக் களிப்பில் ஆழ்ந்தன. இதன் மூலம் சிங்கள இராணுவத்திற்கு உளவியல் ரீதியான போரிடும் ஆற்றல் திடிரெனக் கூடியது. சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளை அழித்துவிடலாம் எனத் திமிருடன் சிந்திக்க தொடங்கியது.

இதே சமயம், அந்த இராணுவ நடவடிக்கை காரணமாக பெருமளவு மக்கள் இடம்பெயர்ந்து, மற்றைய பகுதிகளுக்கு சென்றதுடன், அந்த திடிர் நடவடிக்கையால் மக்கள் குழம்பியும், போராட்ட வெற்றியில் நம்பிக்கை இழக்கக் கூடிய,சூழலும் தோன்றியது. இந்த சூழ்நிலைகளில்தான் ஒரு கரும்புலித்தாக்குதலை நடத்த தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் முடிவெடுத்து அதற்கான ஆயத்தங்களைச் செய்தார்.

1987 ஆம் ஆணடு ஜூலை மாதம் 5ம் திகதி, நெல்லியடிச் மத்திய மகாவித்தியாலத்தில் அதைக்கப்பட்டிருந்த சிங்கள இராணுவ முகாமிற்குள் முதலாவது கரும்புலி விரன் புகுந்து அம் முகாமை சின்னாபின்னமாக்கினான்.

சிங்கள அரசையும் அதன் இராணுவ இயந்திரத்தையும் கிலி கொள்ளச் செய்த அந்த முதலாவது கரும்புலித் தாக்குதல், கப்டன் மில்லர் செய்து முடித்தான். அன்றிலிருந்து இன்றுவரை பல கரும்புலித்தாக்குதல்கள் நிகழ்தப் பட்டுவிட்டன. அதில் பல கரும்புலிகள் விரச்சாவு அடைந்து உள்ளனர்.

ஒவ்வொரு விடுதலைப் புலி விரனும், விராங்கனையும் சாவைச் சந்திக்க தயாரான நிலையில்தான் இருக்கிறார்கள்;. அனால் தங்களுடைய சாவு எப்போது வரும் என்பது அவர்களுக்கு தெரியாது.

போர்களத்திற்கு செல்லும் திரும்பி வருவேன் என்ற நம்பிக்கையுடன்தான் ஒரு விடுதலைப் புலி விரன் செல்கிறான். சில வேளை அவன் அங்கே சாவை சந்திக்கலாம் அல்லது திரும்பி வரலாம்.

ஆனால் கரும்புலிகள் நிலை வேறுபட்டது. களம் புகுவதற்க்கு பல நாட்கள் முன்னமே தங்களுடைய சாவை தெரிந்து கொண்டு விடுகிறார்கள். அடுத்த நிமிடத்தில் சாகப் பொகிறேன் என்ற உண்மையை பூரணமாக தெரிந்து கொண்டுதான் கரும்புலிகள் வெடிமருந்தை தங்களுடன் கொண்டு செல்கிறார்கள்.

இராணுவ முகாங்களில் இருக்கும் பலநூறு எதிரிகளின் கரங்களில் இருந்து முழங்கி கொண்டிருக்கும் துப்பாக்கிகளை கருத்தில் எடுக்காது, உடைந்து நொருங்கி போய்  கிடக்கும் பாதைவழியே சீராக நிதானமாக வெடிமருந்து வண்டியை ஓட்டி சென்று, எதிரி முகாமின் இதயத்திற்குள்ளே புகுந்து, தன்னையும் சேர்த்து வெடிக்கச் செய்வதென்பது சாதாரண விடயமல்ல.

இயல்பாகவே அச்சமுட்டும் அலைகளை கொண்ட அகண்ட சமுத்திரத்துக்குள், நடு இரவில், எதிரியின் நவீன காவற் கருவிகளையும் புத்தி சாதுரியமாக மீறி, வெடி மருந்து படகுடன் உட்புகுந்து எதிரியின் கப்பலை நெருங்கி முன்னரே தீர்மானிக்கப்பட்ட இலக்கை இனங்காண்பதற்காக ஒரு முறை கப்பலை சுற்றி வந்து, குறித்த இலக்கின் மீது மோதி, வெடிமருந்து படகுடன் சேர்ந்து வெடித்து சிதற ஒரு மனித மனம் உடன்படாது.

இவைகள் ஒரு சாதரண வீரனால் செய்யப்பட முடியாதவை. இதை செய்வதற்கென்றொரு ஆத்மீக பலம் தேவை. தன்னை தற்கொடை செய்து கொள்ளத் தயாரண மனோதிடம் வேண்டும். தனது இறுதி நேரத்திலும் கூட பதற்றம் இன்றி, உறுதியுடன் குறி பிசகாது எதிரியை தேடி ஓடும் வீரம் தேவை. விரக்தி காரணமாகவோ, முட்டாள்தனமாகவோ தன்னை அழித்து கொள்ள தற்கொலை முயற்சியை போலல்ல இது. அல்லது எதிரியின் கண்ணோட்டத்தின்படி கொடூரம் மிக்கதும் மானிட இனமாக இல்லாததுமான ஒரு பூதம் அல்ல. இது அடிமைப் பட்டுக் கிடக்கும் ஒரு தேசிய இயக்க சக்திக்கு உந்து விசையாக விளங்கும் உயரிய போர் வடிவம்தான் எங்களது கரும்புலிகள்.

உலகின் எந்த ஆயுதங்களாலும் வெற்றி கொள்ளப்பட முடியாததும், உலகின் எந்த தொழில் நுட்பத்தாலும் தடுக்க முடியாததும், உலகின் எந்த அரச இயந்திரத்தாலும் அடக்க முடியாததும்தான் எங்களது கரும்புலிகளின் மனோபலம்.

இந்த மனோபலம் வீர உணர்வை வெளிப்படுத்தும் ஒரு குறியீடு மட்டுமல்ல. எமது சமுதாய எண்ணவோட்டத்தில் பிரளயத்தை எற்படுத்த போகும் சக்தி கொண்ட ஒரு அரசியல் வடிவமுமாகும்.

ஒவ்வொரு கரும்புலியும் தனது உயிரை போக்கி கொள்ளும்போது நிகழும் பூகம்பம், தமிழீழ விடுதலை போரட்ட சக்கரத்தை முன்னோக்கி தள்ளிவிடுவதுடன் வீரம்மீக்க, யாருக்கும் அடிபணியாத, அடக்க நினைப்பவரை நடுங்க வைக்கும் ஆற்றல் கொண்ட தமிழ் சமுகத்திற்குத் தேவையான உணர்வையும் ஊட்டி விடுகின்றது.

தேச பக்தியையும் விர உணர்வையும் அடித்தளமாக கொண்ட இத்தகைய மனோபலம் எமது மக்களிடம் இருக்குமாக இருந்தால், உலகில் எவரும் எம்மை எதுவும் செய்ய முடியாததுடன், சுதந்திரத்துடனும் கௌரவத்துடனும் வாழும் பலத்தை நாம் பெற்று கொள்ள முடியும்.

இன்று பல நூற்றுகணக்கான விடுதலைப்புலி விரர்கள் தங்களைக் “கரும்புலி” அணியில் இணைத்து கொண்டு இருக்கின்றனர்.

ஓவ்வொரு முறையும் கரும்புலித்தாக்தலுக்கான திட்டம் தீட்டப்படும்போது, தன்னைத்தானே தேர்ந்தெடுக்க வேண்டுமென்று ஒவ்வொரு விரனும், விராங்கனையும் முண்டியடிக்கின்றார்கள்.

அலையலையாக கரும்புலித்தாக்குதலுக்கு தயாராகும் இந்த தியாகச் செயலை உலகில் எங்குமே காணமுடியாது.

இது உலக அதிசயங்களில்; புதியதொன்றாகும்.

களம்புகும் கரும்புலிகளின் பிரமிப்ப+ட்டும் வீரச் சாதனைகள், ஆழும் வர்க்கத்திற்க்கு கிலியை உண்டுபண்ணுகின்ற அதே சமயம், அந்த உன்னதமான அர்ப்பண உணர்வு எற்படுத்தும் சமுகத் தாக்கம், தமிழீழக் குடிமக்களின் மனதில் இருக்கும் சுதந்திர ஒளியை இன்னும் வளத்து செல்லும் என்பது உறுதி.

– உயிராயியுததிலிருந்து…..

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

நாளை நம் சந்ததி சுதந்திரமாய் வாழ-ஓர் நாடு கிடைக்குமா...?


ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மீட்க
ஓர் புலியின் உயிரைக் கொடுத்தவர்கள் நாம்..

ஓய்வெடுக்க ஒவ்வொருவருக்கும்
உரிமை உண்டு - ஆனால்
உனக்கு மட்டும் அந்த
வேளை வரவில்லை தமிழா..

தாய் பிறந்த மண்.. நான் பிறந்த மண்..
நீ வாழ்ந்த மண்..
தந்தை நடந்த மண் அனைத்தும்-விசர்
நாய் படுக்கும் மஞ்சமாய்
நாறிக் கிடக்கும்போது..

நீ படுத்து ஓய்வெடுக்கும்
நேரமல்ல இது நண்பா..

நாம் படுத்தால்..நாளை நம்
சந்ததி சுதந்திரமாய் வாழ-ஓர்
நாடு கிடைக்குமா?..இன்று
பேய் நடக்கும் மண்ணாய் நம்மண்
பாழடைந்து கிடக்கிறதே..பார்..

ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மீட்க
ஓர் புலியின் உயிரைக் கொடுத்தவர்கள் நாம்..

வேர் விட்டு வளர ஆலமரம் துடிக்கிறது..
விழி திறந்து விடுதலையைப் பார்க்க- மீண்டும் எம்நிலம் விரும்புகிறது…

இந்நிலையில் எப்படி நமக்கு ஓய்வு கிடைக்கும்? எண்ணிப் பார்...

உயிராயுதமான மாவீர்களுக்காக....


தமிழீழ இராணுவத்தின் முதுகெலும்புகளே
தமிழரின் உரிமை வெல்ல பிறந்திட்ட தவப்புதல்வர்களே
தலைசாய்த்து வணங்குகிறேன்...

கருவறை தாண்டி தாயின் மடி தவழ்ந்து
கருவோடு பிறந்த வீரம் சுமந்து
உணர்வோடு போராடி
கல்லறையில் கருவாகி போனீரே கரும்புலிகளே!

கடலன்னை தேர் ஏறி
கதிரவனின் ஒளி வாங்கி
தமிழர் கடல் காத்திட
கந்தகம் சுமந்து
எதிரிப் படைக்கலத்தை நிர்மூலமாக்கி
கடலன்னையின் கருவறையில் உறங்கும் கரும்புலியே
வணங்குறோம் எந்தன் உறவே!

தமிழரின் பலவீனத்தை தகர்த்த
பலமான உயிராயுதங்களே!
எதிரியின் பலவீனத்தை அறிந்து
அதை
உங்கள் வெற்றியாக மாற்றிய
தமிழின கடவுள்களே!
தாழ் போற்றி வணங்குகிறோம்..

தரையாடி கடலோடி வானோடு மேகமதில் புகுந்து
தேகமதில் ஊறிய தமிழ் உணர்வை
யாகஞ் செய்து
தமிழருக்காக உயிர்த்தியாகஞ் செய்த பெரு வள்ளல்களே!
யாம் ஒருபோதும்
உங்களை மறப்பதில்லை..

சாவின் வேரை அசைத்து
சாவுக்கோர் நாள் குறித்து
சாவினை சாதனையாக்கிய
சாதனை குழந்தைகளே! - உங்கள்
சாவினை வென்றும் எம்மோடு வாழ்கிறீர்கள்..

சாவிற்கும் பயத்தை கொடுத்த அவதார புருசர்களே!
தமிழீழம் எங்கும் மீண்டும்
உயிர்த்தெழுங்கள்..

மில்லர் அண்ணா ஊட்டி உரமிது
கொடும் பகை அறுக்கும் அறமிது
எதிர்ப்படும் தடைகள் யாவும் தகர்த்திடும் வரமிது
தமிழருக்கென்றொரு வீரம் இது
எந்த இனத்துக்கும் இல்லா தனித்துவமும் இது..

காலனைக் கூட ஒரு கணம்
நிர்க்கதியாக்கும்
கரும்புலி வீரர்களே!
காலத்தை வென்றே என்றும்
நீர்க்கமல நிறைந்து நீங்கள்
வாழ்வீர்களே!

வீரவணக்கம்...

வேர்க்கடலையில் உள்ள கொழுப்புச் சத்து உடலுக்கு நல்லதா? கெடுதலா?


வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான கொழுப்பு மற்றும் புரதச் சத்து அதிகமாக உள்ளது.

வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு. எனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை  எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிடலாம். மேலும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத்  துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது.

வேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின்கள்  கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது. இந்தச் சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது.

வேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது. வேர்க்கடலையைச் சாப்பிடுவதன் மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச்  செய்கிறது. இதனால் ரத்தம் சீராக இருப்பதோடு, ரத்த அழுத்தம் குறையும்.

வேர்க்கடலை சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள் இப்படித் தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள்  தள்ளிவிட்டுவிடும். தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும்.

இதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும். வேர்க்கடலையில் நல்ல கொழுப்பு இருக்கிறது.

வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன...

ஒருவேளை காட்டை உருவாக்க நினைத்தால் ஐயா.நம்மாழ்வார் வழியில் செல்...


எல்லாம் கற்பனையா?


ஒரு மிகப்பெரிய கோடிஸ்வரன் தான் விரைவில் இறக்கப்போவது தெரிந்து தன் உயிரையும் உடலையும் புதிப்பிக்க எண்ணுகிறான்.

தனது DNAவை கொண்டு ஒரு கருவை உருவாக்குகிறான்..

தனக்கு பிடித்த விளையாட்டை தீவிரமாக விளையாடக்கூடியவாரு அந்த கருவை வடிவமைக்கிறான்..

கரு முழு வளர்ச்சியடைந்ததும் தன் உயிரை பழைய உடலிலிருந்து பிரித்து புதிய உடலுக்குள் செலுத்துகிறான்..

புதிய உடலுடன் பிறந்து அவனுக்கு பிடித்த விளையாட்டை விளையாடி மகிழ்கிறான்.

மேலே கூறிய அனைத்தும் என் கற்பனையே.

இப்போ விசயத்துக்கு வருவோம்.

முதல் படத்தில் இருக்கும் நபர் Enzo Ferrari. உலகப்புகழ்பெற்ற Ferrari கார் கம்பெனியை உருவாக்கியர்.

இரண்டாவது படத்தில் இருக்கும் நபர் Mesut Özil ஜெர்மனியை சேர்ந்த உதை பந்தாட்ட வீரர்.

Enzo Ferrari இறந்தது 14/08/1988.
Mesut Özil பிறந்தது 15/10/1988.

மீண்டும் ஒரு முறை கூறுகிறேன் நான் மேலே கூறிய கதை கற்பனையே...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் காய் நகர்தல்...


செயற்கை விழித்திரை....


செயற்கை விழித்திரை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை கண் பார்வையற்றவர்களுக்காக செயற்கை விழித்திரையை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர்.

உலகம் முழுவதும் 2 கோடியே 50 லட்சம் பேர் கண் பார்வையின்றி தவிக்கின்றனர். எனவே செயற்கையான முறையில் விழித்திரையை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் கண் பார்வையற்ற எலிக்கு செயற்கையாக தயாரிக்கப்பட்ட அதிநவீன லென்சுடன் கூடிய விழித்திரை பொருத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

இதன் மூலம் பார்வை கிடைத்த எலி துள்ளிக் குதித்து விளையாட ஆரம்பித்தது. எனவே இதே தொழில்நுட்பத்தை மனிதர்களுக்கும் பயன்படுத்தி அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் மனிதர்களிடம் இச்சோதனை இன்னும் ஓரிரு ஆண்டுகளில் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளனர்...

எதிரி தற்போது கையில் எடுத்திருக்கும் ஆயுதம் தமிழ் தேசிய போர்வை....


அன்று : ஆரிய - திராவிட போலி சண்டை...

பூமி வாழ கரப்பான்பூச்சிகள...


கரப்பான்பூச்சியைப் பார்த்தாலே இல்லத்தரசிகள் பலரும் அலறியோடுவார்கள். ஆனால் பூமி என்றென்றும் நிலைத்திருக்க, இந்தச் சிறு பூச்சிகள் அவசியம் என்கிறார் ஒரு விஞ்ஞானி.

பூமியின் சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பதில் கரப்பான்பூச்சிகளின் பங்கு முக்கியமானது என்கிறார் இவர். சிறீனி கம்பம்படி என்ற அந்த இந்திய வம்சாவளி ஆய்வாளர், அமெரிக்காவின் டெக்சாசு பல்கலைக்கழக உயிரியல் துறைப் பேராசிரியர்.

அவர், உலகின் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வகையான கரப்பான்பூச்சி இனங்கள் திடீரென மறைந்திருப்பது கவலைக்குரியது என்று வருத்தப்படுகிறார்.

பெரும்பாலான கரப்பான்பூச்சிகள் அழுகும் கழிவுப்பொருட்களைச் சாப்பிடுகின்றன. பின்னர் தாங்கள் வெளியேற்றும் கழிவின் மூலம் பூமிக்கு நைதரசனை செலுத்துகின்றன.

அந்த நைதரசனை தாவரங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன என்று விளக்கம் அளிக்கிறார் சிறீனி. எனவே இனிமேல் நாம் கரப்பான்பூச்சிகளைப் பார்த்து முகம் சுளிக்காமல் இருப்போம்...

சடையவர்மன் சுந்தரபாண்டியன்...


சோழர்கள் தமிழ் வரலாற்றிலேயே பெரிய அரசை நிறுவி உலகின் முதல் கடல்கடந்த பேரரசை அமைத்து பேருரு எடுத்து நின்ற காலம் அது.

அநாபய சாளுக்கியன் என்ற வேற்றினத்தான் சோழ அரசைக் குறுக்குவழியில் கைப்பற்றிய பிறகு சோழப் பேரரசு வீழத்தொடங்கியது.

இந்த நிலையில் 13ம் நூற்றாண்டில் பிற்பகுதியில் தமிழர்களின் பாண்டிய அரசு பேரெழுச்சி பெற்றது.

இவர்களில் முதன்மையானவன்
"சடைய(ஜடா)வர்மன் சுந்தரபாண்டியன்".

வடதமிழகத்தில் ஆதிக்கம் பெற்றுவிட்ட ஹொய்சளர்களை (கன்னடர்களை)
தோற்கடித்து காவிரியாற்றுப் பகுதியை மீட்டான்.

இலங்கையின் அரசனைத் தோற்கடித்தான்.

தெலுங்கு சோழன் கண்டகோபாலனை போரில் கொன்று காஞ்சியையும் நெல்லூரையும் மீட்டான்.

நெல்லூரில் அந்த வெற்றியைக் கொண்டாடினான்...

பாஜக - அதிமுக ஏமாற்றும் விதம்...


வேற்று கிரகத்தினர் ஏதாவது செய்ய போகிறார்களா? அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் அதிகரிப்பு...


பறக்கும் தட்டு வேற்று கிரக வாகனங்கள் மற்றும் விண்வெளியில் சுற்றி திரியும் வினோத பொருட்கள் குறித்து UFO (அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள்) அமைப்பு ஆராய்ச்சி செய்து வருகின்றது.  இந்த அமைப்புகளில் முபான் (mufon) என்ற அமைப்பு மிகப்பெரிய மற்றும் பிரபலமான அமைப்பாகும்.  இந்த அமைப்பு கடந்த மாதம் எப்போதையும் விட 2 மடங்கு அடையாளம் தெரியாத பொருட்கள் பறந்ததாக கூறி உள்ளது.

முபான் அமைப்பு கூறியதாவது...

கடந்த மாதம் மாதம் மட்டும் விண்வெளியில் 1179 அடையாளம் தெரியாத பொருட்கள் பறந்து உள்ளன. முந்தைய வருடம் இதே மாதத்தில் பறந்த அடையாளம் தெரியாத பொருட்களை விட 600 பொருடகள் இது அதிகமாகும். 

உலக அரசாங்கங்கள்  பல சதாப்தங்களாக மறைத்து வைத்துள்ள   மர்மங்களை வெளிப்படுத்தும் விளிம்பில் உள்ளன.  இது மிகவும் சுவாரஸ்மயான விஷயமாகும்  அது குறித்து நாங்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம் என்று கூறி உள்ளது....

தகவல் திருட்டு உண்மைகள்...


திருமாவளவன் கொளத்தூர் மணி தொடங்கி பல பெரியாரியவாதிகளும் தலித்தியவாதிகளும் தொடர்ச்சியாக ஒரு பொய்ப் பரப்புரையை மேற்கொண்டுள்ளனர்...


தமிழ்த்தேசியம் பேசுவோர் சாதிக்கு ஆதரவானவர்களென்றும் அவர்கள் சாதிக் கொடுமைகளுக்கெதிராக வாய்த் திறப்பதில்லை என்றும் கூறுகிறார்கள்.

திராவிட கட்சிகளை நோக்கியும் இந்திய தேசியத்தை நோக்கியும் இத்தகைய கேள்விகளை முன் வைக்க யோக்கிதையற்றவர்கள் தமிழ்த் தேசியர்களை மட்டும் பார்த்து சாதியை ஒழிக்க என்ன செய்தீர்கள் என்று கேட்பது தமிழ்த்தேசிய அரசியல் மீதான இவர்களது காழ்ப்புணர்ச்சி மற்றும் தன்னல அரசியலையே குறிக்கிறது.

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சாதிக் கொடுமைகளுக்கெதிரான நடவடிக்கைகள் மற்றும் சாதி ஒழிப்புக்கு ஆதரவான நடவடிக்கைகள் சான்றுகளோடு கீழே கொடுத்துள்ளேன்.

தருமபுரி இளவரசன் படுகொலைக்கெதிராக

https://m.facebook.com/tamizhdesiyam/photos/a.452934201558762.1073741865.452931914892324/452934764892039/?type=3

உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலைக்கெதிராக

https://thozharmaniyarasan.blogspot.com/2016/05/blog-post.html?m=1

அரியலூர் நந்தினி கொலைக்கெதிராக

https://m.facebook.com/story.php?story_fbid=1256115031144762&id=100002388321950

கச்சநத்தம் சாதி வெறி படுகொலைக்கு எதிராக வெளியிடப்பட்ட அறிக்கை

 https://m.facebook.com/story.php?story_fbid=888177621367749&id=452931914892324

கச்சநத்தம் சாதி வெறி படுகொலைக்கு எதிராக

https://m.facebook.com/story.php?story_fbid=892162317635946&id=452931914892324

கச்சநத்தம் படுகொலைக்கெதிராக தருமபுரியிலும் மதுரையிலும் நடந்த ஆர்ப்பாட்டங்கள்

https://m.facebook.com/story.php?story_fbid=891830711002440&amp;id=452931914892324<br>
<br>
https://m.facebook.com/story.php?story_fbid=891767204342124&amp;id=452931914892324

கச்சநத்தத்திற்கு நேரில் சென்று ஆய்வு

https://m.facebook.com/story.php?story_fbid=891061541079357&amp;id=452931914892324<br>

சாதி மற்றும் சாதி அமைப்புகளுக்கெதிரான ஐயா மணியரசன் அவர்களது பேச்சு

சாதி என்பது என்ன? - பெ. மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.&quot; on YouTube
https://youtu.be/66a2WusRPF8

சாதிய அமைப்புகள் தமிழ் தேசியத்திற்குள் வந்தே ஆக வேண்டும் || தோழர் பெ.மணியரசன்&quot; on YouTube
https://youtu.be/R0oAuJGXcBE

இயக்குநர் ரஞ்சித் கூற்றுக்கான மறுப்புரை

பெ. மணியரசன் - பா.ரஞ்சித் க்கு கண்டனம்&quot; on YouTube
https://youtu.be/NtdQIk7cQWg

தொல். திருமாவளவன் கூற்றுக்கு மறுப்புரை

தொல் . திருமாவளவன் அவர்கள் ஏன் உள்நோக்கத்துடன் பேசுகிறார் ?. - தோழர்.பெ. மணியரசன்&quot; on YouTube
https://youtu.be/xvAQZAAZqWg

இது தவிர எமது இயக்கத்தின் கொள்கை விளக்க நூலிலும் சாதி குறித்து பேசியிருக்கிறோம்.

ஐயா பெ.மணியரசன் "சாதியும் தமிழ்த்தேசியமும்" என்ற நூலும்

 ஐயா கி. வெங்கட்ராமன் "சாதி ஒழிப்பும் தமிழ்த்தேசியமும் " என்ற நூலும் எழுதியுள்ளார்கள்.

1980 ல் தீண்டாமைக்கெதிராகப் போராடி கொலைவெறித் தாக்குதலுக்குள்ளாகி மயிரிழையில் உயிர் தப்பியவர் ஐயா மணியரசன்.

பெரியாரியவாதிகளுக்கோ தலித்தியவாதிகளுக்கோ சாதி குறித்தோ சாதி ஒழிப்பு குறித்தோ எங்களிடம் கேள்வி கேட்க எந்த தகுதியும் கிடையாது...

பாஜக மோடியும் டூபாக்கூர் வேலையும்...


கேரள தனியார் பஸ்களில் ஆபாச படங்கள்.. பொதுமக்கள் கண்டனம்....


அரசு பஸ்கள் பெரும்பாலும் பயணிகளை கவர எந்த ஒரு முயற்சியும் எடுப்பதில்லை. ஆனால் தனியார் பஸ்கள் இடையேதான் எப்போதும் கடுமையான போட்டி இருக்கும். பயணிகளை கவர புதிய பதிய முயற்சிகளை மேற்கொள்வார்கள். பஸ்களை சுற்றிலும் அனைவரையும் விதவிதமான ஓவியங்களை வரைந்து இருப்பார்கள்.

அந்த வகையில் கேரளாவில் ஒரு தனியார் பஸ் பயணிகளை கவர்வதற்காக ஆபாச பட நடிகைளான சன்னி லியோன், மியா கலிபா, போன்றவர்களின் படங்களை மிகவும் கவர்ச்சிகரமாக வரைந்துள்ளது.

இதனை பார்த்த பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். அதே போல சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் சம்பந்தப்பட்ட பஸ்களை வறுத்தெடுத்து வருகின்றனர்...

காவிரி விவகாரம்...


மந்திரங்களும் உண்மைகளும்...


மந்திரங்கள் சாமானிய மக்களுக்கு அப்பாற்பட்ட சொல்லாகவே மந்திரங்கள் இருந்து வருகிறது, அது மட்டுமின்றி பகுத்தறிவு என்ற பெயரில் நமது அரசியல்வாதிகள் நமது இந்து மதத்தில் இருக்கும் அறிவியல் ரீதியான அற்புதங்களை அழிக்கும் பணியை மிக அழகாக செய்து கொண்டே இருக்கின்றனர்.

எல்லோர் மனதிலும் எழும் கேள்வி மந்திரங்கள் உண்மையா..?

மந்திரங்களினால் பலன் உண்டா என்றே காரணம் மந்திரங்கள் என்ற உடன் நினைவுக்கு வரும் ஒரு கேள்வி..?

மந்திரத்தால் மாங்காய் விழுமா என்ற கேள்வி தான், அதற்க்கு முன் இந்த மந்திரம் ஒலி குறித்து சில விஷயங்களை காண்போம்..

மந்திரம் என்பது குறிப்பிட்ட ஒன்றின் மீது மனதை நிலைபடுத்துவது மந்திரம்.

மந்திரங்கள் பொதுவாகவே ஒலி வடிவம் உடையவை ஒலி எங்கும் செல்ல கூடியது எங்கும் பரவி நிர்க்க கூடியது. நாம் காதுகலால் கேட்க முடியாத ஒலிகள் அதிர்வுகளாக எங்கும் பரவி இருக்கிறது, கோவில்களில் இருக்கும் ஒரு வித அமைதியும் சுகமான நிலையுமே இதற்கு சான்று.

கூட்டமில்லாத சாதாரண நாட்களில் தரிசனம் செய்து விட்டு கோவிலில் அமர்ந்து அந்த அதிர்வுகளை அனுபவிக்கலாம். அப்படிப்பட்ட சக்தியை உடைய ஒலியை குறிப்பிட்ட அளவில் நமக்கு எது தேவையோ அதை இந்த மந்திரங்கள் ஈர்க்க முடியும் இது நிஜம்.

முன்பே சொன்னது போல இந்த உலகம் முழுக்க எண்ண அதிர்வுகள் நிரம்பி இருக்கின்றது, ஒரு சூதாடி இன்னொருவனை நோக்கி ஈர்க்கப்படுவதை போல ஒரு இசைக் கலைஞன் இன்னொருவனை நோக்கி ஈர்க்க படுவதை போல ஏனென்றால் அவர்கள் இருவரது எண்ண அலையும் ஒரே அலைவரிசையில் இருக்கிறது. அவ்வளவே இது ஒரு சிறிய உதாரணம்..

அதை போல இந்த மந்திரங்கள் உங்களுக்கு தேவையான மாற்றங்களை கொண்டு வரும், சமீபத்தில் ஒரு ஆராய்ச்சியில் ஓம் என்ற மந்திரத்தை கேட்க வைப்பதன் மூலம் மன நோயாளிகள் நல்ல முன்னேற்றம் கண்டதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

அதிர்வுகளை பற்றி அலைவரிசை பற்றி கண்டோம் இப்பொழுது சொற்களை பற்றி காண்போம்..

தமிழகத்தின் தென் பகுதியில் ஒரு முது மொழி உண்டு ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும் நாம் எப்படி சொர்க்களை பயன்படுத்துகின்றோம் என்பதை பொறுத்து இருக்கிறது.

வெறும் சொற்கள் தானே என நினைப்பவர்களுக்கு அவை முதலில் சாதாரணமாக தொடங்கி பின் பெரும் வலிமையான ஒன்றாக தங்கள் வாழ்வில் மாறிவிடும்.

உதாரணமாக கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கும் மாணவனிடம் தொடர்ந்து நீ ஏன் இப்பொழுது தவறாக கணிதம் போடுகிறார் என பல முறை கூறுவீர்களெனில் அவனது ஆழ் மனம் அதை முழுமையாக ஏற்று கொண்டு அவன் தவறாக கணிதம் போடுவதில் வல்லவனாக இருப்பான்.

சில திருதலங்களுக்கு செல்ல வேண்டும் என நாம் என்ன முயன்றாலும், இயலாது ஆனால் திடீரென ஒரு நண்பர் வருவார் வாருங்கள் சென்று வரலாம் என்று கூறி மிக எளிதாக அந்த தளத்திர்க்கு செல்லும் விருப்பும் நிறைவேறும் இது தான் பிராப்தி, சில மந்திரங்களை காதார கேட்டு மகிழவும் இந்த பிராப்தி தேவை..

மந்திரங்கள் என்றாலே ஏதோ மாய வித்தை என்ற நிலைக்கு நம் மக்கள் தள்ளப்பட்டு விட்டனர். முன்பு அநேகமாக இன்றும் சில பகுதிகளில் மந்திரவாதிகள் என சிலரை காண முடியும் பில்லி சூனியம் செய்வினை வைப்பது எடுப்பது போன்றவைகளை செய்பவர்கள் மந்திரங்களை ஒரு சூனிய நிலைக்கு கொண்டு சென்று விட்டனர்.

வேத மந்திரங்களோ சரியான அணுகுமுறை மற்றும் ஆர்வமின்மையின்மையால் பொதுஜன பார்வைக்கு அப்பால் சென்று விட்டது.

மாற்று மத அன்பர்கள் ஒரு குறிப்பிட்ட மந்திர மொழி பெயர்ப்பை படித்து அதனை மேற்கோள் காட்டும் போது அது சரியா தவறா என நாம் உணர முடியா நிலைக்கு நாம் தள்ளபட்டுள்ளோம்.

அதற்கு நமது வேதங்களையும் பதிகங்களையும் படிப்பதும் அவற்றை தொடர்ந்து நமது வாழ்வில் பயன்படுத்துவதன் மூலமும் எண்ணற்ற பயன்களையும் நமது பண்பாடு கலாச்சாரம் போன்றவற்றை விடாது காக்கும் பணியினையும் நாம் செய்ய முடியும்...

வானிலை ஆயுதம் இஸ்ரேல் நாட்டிடம் உள்ளது...


பனையை காக்க களம் இறங்கிய அணவயல் இளைஞர்கள் ஏரிக்கரையில் மற்றும் குளம் பனை விதைகள் விதைப்பு...


பேராவூரணி அடுத்த அணவயல் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் கிராமத்தினர் தரிசுநிலத்தை பனை விதைகளை விதைக்கும் பணியில் ஈடுபட்டனர். இக்கால சந்ததியினர் பனை மரங்களின் பலனை அறிய முடியாத நிலை உள்ளது. அரிய பறவை இனங்களுக்கு வாழ்வாதாரமாகவும் பனை மரங்கள் உள்ளன.

தூக்கணாங்குருவி உள்ளிட்ட உயரமான இடங்களில் வசிக்கும் சில பறவை இனங்கள் பனை மரத்தில் கூடு கட்டி வசிப்பவை. பனை மரங்கள் அழியும்போது, இந்தப் பறவை இனங்களும் அழிவுக்கு தள்ளப்படும். ஒரு பறவை அழிந்தால் 10 மரங்களின் வளர்ச்சி பாதிக்கும் என்று கூறுகிறார்கள்.

எனவே, பனை மரம் வளர்ப்பில் வருங்கால சந்ததிகளுக்கு உள்ள பொறுப்பை உணர்த்தும் வகையில் பள்ளிக்கு வரும்போது கிடைக்கும் பனை மர விதைகளை மாணவ, மாணவிகள் கொண்டு வர கேட்டிருந்தோம். இதன்படி சில மாதங்களாக பனை மர விதைகளைச் சேகரித்தோம். எங்கள் உள்ள ஏரி மற்றும் குளம் பகுதியில் பனை விதைகளை விதைக்கப்பட்டது...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


விவசாயிகளே மறவாதீர்...


தற்போது 20 இலட்சத்திற்கும் அதிகமான விவசாய பம்ப் செட்டுக்கள் கட்டணமில்லாமல் இயங்க 64 பேர் காவல்துறையின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானதே காரணம்.

64 உத்தம தியாகிகளின் நினைவாக ஒவ்வொரு வருடமும் ஜூலை 5 ம் தேதி உழவர் தினமாக அனுசரிக்கப்படுகின்றது. அந்த வகையில் இந்த வருடம் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பாக ஜூலை 5 ம் தேதி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு கோவை மாவட்டம் சூலூரில் மாபெரும் உழவர் தினப்பேரணி மற்றும் கோரிக்கை மாநாடு நடைபெறுகின்றது.

தனது இன்னுயிரை இழந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கட்டணமில்லா மின்சாரம் பெற்று பயன்பெறுகின்ற அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

மாலை 3 மணிக்கு பல்லடம் அய்யம்பாளையத்தில் உள்ள தியாகிகளின் நினைவு ஸ்தூபியில் அஞ்சலி செலுத்தப்படுகின்றது.

அதன்பின்னர் மாலை 6 மணிக்கு பேரணி மற்றும் கோரிக்கை மாநாடு சூலூரில் நடைபெறுகின்றது.

இடம் : அண்ணா சீரணி கலை அரங்கம். சூலூர்.

விவசாயிகளே அனைவரும் வாரீர்...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


அறப்போர் இயக்கம் வெளியிடு...


லோக் ஆயுக்தா ஆணையர் இந்த தகுதியுடன் இப்படித்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆட்சியாளர்கள் பேச்சை கேட்டு தலை ஆட்டும் பொம்மைகள் எங்களுக்கு வேண்டாம். சட்டமன்றத்தில் இந்த சட்ட வடிவத்தை தாக்கல் செய்வதற்கு முன்பு அவற்றை பற்றி தெரிந்து கொள்ள மக்களுக்கு இருக்கும் உரிமைகளை மறுத்து திருட்டுத்தனமாக நாளை லோக் ஆயுக்தா தாக்கல் செய்யும் நோக்கம் என்ன?

இந்த சட்டத்தை வலுவிழக்க செய்யும் அனைத்து முயற்சிகளையும் மக்களை திரட்டி முறியடிப்போம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்...

சேலம் 8 வழி சாலை யாருக்கு இதோ உண்மை...


தமிழனுக்கான பழமொழி...


புலியை கண்டால் மரத்தின் மேலே ஏறு...

பாம்பை கண்டால் நேராய் மட்டும் ஓடு....

யானையை கண்டால் வளைந்து வளைந்து ஓடு....

சிங்கத்தை கண்டால் பிணத்தை போல் நடி....

திராவிடன் ஓட்டுகேட்டு வருவதை கண்டால் செருப்பெடுத்து அடி....

மகாபாரதப் போரும் தமிழர்களும்...


மகாபாரதப் போரானது பாண்டவர்கள் ஐந்து பேருக்கும் கவுரவர்கள் நூற்றுவருக்கும் இடையில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

வியாசர் இயற்றிய மகாபாரத நூலின்படி இந்த பாண்டவர்கள் ஐந்து பேரும் பாண்டு மன்னனின் பிள்ளைகள் என்றும் கவுரவர்கள் நூற்றுவரும் திருதராட்டிரனின் மக்கள் என்றும் சொல்லப்படுகிறது. குருசேத்திரம் என்னும் இடத்தில் நடந்ததாகக் கூறப்படும் இந்த பெரும்போர் உண்மையிலேயே நடந்ததா? கற்பனையாகக் கூறப்படும் ஒன்றா? உண்மை என்றால் எந்த அளவிற்கு அதில் உண்மை கலந்துள்ளது என்று காண்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

உண்மையில் இந்த மகாபாரதப் போரானது தொல்தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து தமிழ் மன்னர்களுக்கும் வேற்றினத்தாருக்கும் இடையில் நடந்த போராகும். இந்த வேற்றினத்தாருக்கு என்ன பெயர் வைப்பது? ஏற்கெனவே ஆரியர் என்ற சொல் புழக்கத்தில் இருந்தாலும் இச்சொல் பல குழப்பங்களையே தோற்றுவித்துள்ளது. எனவே இந்த வேற்றினத்தவருக்கு 'நூற்றுவர்' என்ற பெயரையே கொள்ளலாம்.

இந்த மகாபாரதப் போரானது பல நாட்கள் நீடித்ததாகச் சொல்லப்படுகிறது. என்றால், ஒரு ஐந்து பேர் ஒருநூறு பேருடன் போரிட்டு வெல்ல பல நாட்களாகுமா?. என்ற ஐயம் மனதில் எழலாம். அதுமட்டுமின்றி, வெறும் ஐந்துபேர் ஒருநூறு பேருடன் போரிட்டு வெல்ல முடியுமா? என்ற கேள்வியும் கூடவே எழலாம். இக் கேள்விகளுக்கான விடைகளை மட்டுமின்றி இப் போரில் பங்கேற்ற அந்த ஐந்து தமிழ் மன்னர்கள் யார் யார்? என்றும் கீழே காணலாம்.

தமிழ் மன்னர்கள்:

தொல்தமிழகத்தில் இருந்ததாகக் கூறப்படும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலங்களையும் ஆண்டு கொண்டிருந்த ஐந்து தமிழ் மன்னர்கள் தாம் இந்த மகாபாரதப் போருக்குத் தலைமையேற்றவர்கள் ஆவார். இவர்கள் ஐவரின் தலைமையில் பல்லாயிரக் கணக்கான தமிழ் வீரர்களும் நூற்றுவர் தலைமையில் பல்லாயிரம் எதிரி வீரர்களும் நிலம் அதிரப் பொருத 'தும்பை' வகைப் போரே மகாபாரதப் போர் ஆகும்.

இப்போரில் பங்கேற்ற ஐந்து தமிழ் மன்னர்கள் தான் பிற்காலத்தில் பாண்டவர்களாகிய தருமன், அர்ஜுனன், பீமன், சகாதேவன், நகுலன் என்று அழைக்கப்பட்டனர். இப் பெயர்கள் இம் மன்னர்களின் இயற்கைப் பெயர்கள் அல்ல; பட்டப்பெயர்கள். ஒவ்வொரு நிலத்தில் இருந்தும் வந்த இம் மன்னர்களுக்கு அவர்களின் தனிச்சிறப்பு கருதி இடப்பட்ட தமிழ்ப் பெயர்களே வடமொழியில் இவ்வாறு திரிபுற்று வழங்கப்படுகின்றன.

தருமன்:

பாண்டவர் ஐவரில் முல்லை நிலத்து மன்னனாக வந்தவனே தருமன் ஆவான். கற்பு நெறியும் ஒழுக்கமும் சான்ற முல்லை நிலத்தில் இருந்து வந்தமையால் இம் மன்னனுக்கு தருமன் என்ற பட்டப்பெயர் வழங்கப்பட்டது. தருமன் என்ற தமிழ்ப் பெயரே தர்மா என்று வடமொழியில் வழங்கப்பட்டது.

தருமன் -----> தர்மா

மேகத்தை தெய்வமாகக் கொண்டது முல்லை நாடு. இந்த மேகம் தரும் மழையோ தருமத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு நாட்டில் தருமம் பிறழும் போது மழையில்லாமல் போவதை நாம் அறிவோம். திருவள்ளுவரும் இக் கருத்தை பல இடங்களில் வலியுறுத்தி உள்ளார். இப்படி முல்லை நிலமானது தருமத்தையே தலைமேற்கொண்டு விளங்குவதால் இந் நாட்டில் இருந்து வந்த மன்னனுக்கு அவரது நாட்டின் சிறப்பான தருமம் பற்றி 'தருமன்' என்ற பெயரை சூட்டியிருக்கலாம்.

அர்ஜுனன்:

குறிஞ்சி நிலத்தில் இருந்து வந்த மன்னனே அர்ஜுனன் ஆவான். இவனது பட்டப்பெயர் அருஞ்சுனையன் என்பதாகும். அரிய பல சுனைகளை உடைய மலைநாட்டில் இருந்து வந்தமையால் இவன் அருஞ்சுனையன் எனப்பட்டான். இவன் சிறந்த வேடன் ஆவான். வில் எய்வதில் நிகரற்ற ஆற்றல் உடையவனாக அறியப்பட்டான். அருஞ்சுனையன் என்ற தமிழ்ப் பெயரே அர்ஜுனா என்று வடமொழியாக்கப் பட்டிருக்கலாம்.

அருஞ்சுனையன் -----> அர்ஜுனா

பீமன்:

மருத நிலத்தில் இருந்து வந்த தமிழ் மன்னனே பீமன் ஆவான். இவனது பட்டப்பெயர் பருமன் என்பதாகும். ஓங்கிய உருவமும் அதற்கேற்ப ஈடான உடலும் வலிமையும் கொண்டவனாக இருந்ததால் பெருமை கருதி பருமன் எனப்பட்டான். பருமம் உடையவன் ஆதலால் பருமன் எனப்பட்டான். இப் பருமன் என்ற தமிழ்ப் பெயரே வடமொழியில் பீமன் என்று வழங்கப்படுகிறது.

பருமன் ----> ப்ரமன் ---> பீமன் ----> பீமா

அதுமட்டுமின்றி, ஐந்து பூதங்களில் வலிமை மிக்கது காற்று ஆகும். மெல்லிய தென்றலாய் வருடிக் கொடுப்பதும் புயலாய் மாறி பொருட்களை புடைபெயர்த்து இடுவதும் காற்றே ஆகும். வலிமையின்றி தொய்ந்து கிடக்கும் ஒரு டயருக்குள் காற்றினை அடித்தவுடன் அது ஒரு வண்டியையே தாங்கி நிற்கும் ஆற்றலைப் பெறுகிறது. இந்த காற்றின் ஆற்றல் சிறப்புற்று விளங்கும் மருதநிலத்தில் இருந்து வந்தவன் என்பதாலும் காற்றைப் போல எதிரிகளை தனது உடல் வலிமையால் பந்தாட வல்ல பலசாலி மன்னன் என்பதாலும் இவனுக்கு இப் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம்.

பருமன் என்ற சொல்லில் இருந்து தோன்றிய ப்ரமன் என்ற சொல்லே பிரம்மாண்டம் (பெரியது) என்ற சொல்லுக்கும் வலிமை மிக்க சுழல் காற்றினைக் குறிக்கும் பிரமம் என்ற சொல்லுக்கும் ஆதாரமாய் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ப்ரமன் ----> பீமன் (பருமையும் வலிமையும் கொண்டவன்)
ப்ரமன் ----> ப்ரமாண்டம் (பெரியது)
ப்ரமன் ------> ப்ரமம் (வலிமையான சுழல்காற்று)

சகாதேவன்:

நெய்தல் நிலத்தில் இருந்து வந்த தமிழ் மன்னனே சகாதேவன் ஆவான். இவனது பட்டப்பெயர் சகடதேவன் ஆகும். இப் பெயரே சகாதேவ் என்று வடமொழியில் வழங்கப்படுகிறது.

சகடதேவன் ------> சகாதேவா

வண்டிச் சக்கரங்களைச் (சகடம்) செய்வதில் பெயர் பெற்றிருந்தவர்கள் இந் நிலத்து மக்கள் ஆதலால் அச் சிறப்பு கருதி இவனுக்கு இப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். ஐந்துநில மக்களிலும் கடலில் செல்லும் மரக்கலங்களை முதலில் கண்டறிந்தவர்கள் நெய்தல் நில மக்களே ஆவர். கடலில் இருந்து விளைவிக்கப்பட்ட உப்பினை ஏற்றிச் செல்லத் தேவையான வண்டியையும் சக்கரங்களையும் முதலில் கண்டறிந்ததும் நெய்தல் மக்களாகவே இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் அதிக விளைபொருட்களை உடைய மருத நிலத்தில் பொருட்களைக் கடத்த மாடுகள் இருந்தன. முல்லை நிலத்திலோ குறிஞ்சி நிலத்திலோ வண்டிகளில் ஏற்றிக் கடத்த வேண்டிய அளவுக்குப் பொருட்பெருக்கம் இல்லை. பாலைநிலத்தில் கொள்ளையடிப்பதைத் தவிர வேலை எதுவும் இல்லை. எஞ்சியுள்ள நெய்தல் நிலத்தாருக்கு மட்டுமே பெரும் அளவிலான மீனையும் உப்பினையும் கடத்த வேண்டிய சூழல் இருந்ததால் அவர்களே வண்டிகளைக் கண்டறிந்திருக்கலாம். முதன்முதலில் கையால் தள்ளப்பட்ட இந்த வண்டிகளில் மாடுகளைப் பூட்டி இழுக்கும் வழக்கம் பின்னாளில் ஏற்பட்டிருக்க வேண்டும்.

நகுலன்:

பாலைநிலத்தில் இருந்து வந்த தமிழ் மன்னனே நகுலன் ஆவான். இவனுடைய பட்டப்பெயர் நற்குலன் என்பதாகும். இப் பெயரே நகுலா என்று வடமொழியில் வழங்கப்படுகிறது.

நற்குலன் -----> நகுலா

முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை என்னும் நான்கு நிலங்களுக்கும் தனித்தனியே சிறப்பு உண்டு. ஆனால் பாலை நிலத்து மக்களுக்கு என்ன சிறப்பு உள்ளது? பிறரது பொருட்களை கொள்ளையடிப்பதைத் தவிர அவர்கள் வேறெதுவும் அறியாதவர்கள். இருந்தாலும் தமிழருக்கு எதிரான போர் என்றதும் தானாகவே வந்து தனது ஆதரவைக் காட்டினான் இந் நிலத்து மன்னன். தொல்காப்பியர் கூறியதைப் போல இம் மன்னன் கடைக்குலத்தவனாகவே இருந்தாலும் ஆதரவு தந்து போர் புரியத் தயாராக இருந்ததால் அவனுக்கு 'நல்ல குலத்தவன்' என்ற பொருளில் 'நற்குலன்' என்ற பட்டப்பெயரைச் சூட்டியுள்ளது தமிழரின் பரந்த மனப்பான்மையைக் காட்டுகிறது.

இதுவரை கண்டவற்றை கீழ்க்கண்டவாறு தொகுத்து வழங்கலாம்.

போர் நடந்த இடம்:

இந்தியாவின் தற்போதைய அரியானா மாநிலத்தில் உள்ள குருசேத்திரம் என்ற ஊரில் தான் இப்போர் நடந்ததாகக் கூறப்படுகிறது. தொல்தமிழகப் பகுதிகளில் தமிழ் மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்த பொழுது ஆஃப்கானிஸ்தானில் இருந்து கைபர் போலன் கணவாய் வழியாக இந்த வேற்றினத்தாராகிய நூற்றுவர்கள் இந்தியாவிற்குள் நுழையத் தலைப்பட்டிருக்கக் கூடும். அப்பொழுது அவர்களுக்கும் தமிழ் மன்னர் ஐவருக்கும் இடையில் இந்த குருசேத்திரம் என்னும் இடத்தில் வைத்து நடந்த பெரும்போரே இந்த மகாபாரதப் போராகும். இந்த நூற்றுவர்கள், தமிழரின் போர்வீரத்தைப் பற்றி முன்னரே கேள்விப்பட்டிருக்கக் கூடும். அதனால் தான் அவர்களது படைக்கு நூறு பேர் தலைமை தாங்கி பெரும் படையாக வந்துள்ளனர்.

போர்க்காலத்தில் இப் போரில் ஈடுபட்ட தமிழ் மன்னர் ஐவரின் படைவீரர்களுக்கும் தேவையான உணவினை அளித்தான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்னும் தமிழ் மன்னன் என்று புறநானூறு கூறுகிறது. அப்படியென்றால் இம் மன்னனுடைய நாடும் தொல்தமிழகத்தில் தான் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் இவனால் படைவீரர்களுக்கு குருசேத்திரத்தில் உணவளித்திருக்க முடியும். இப்போதுள்ள தமிழகத்தில் இருந்துகொண்டு இதைச் செய்திருக்க சாத்தியமில்லை.

ஆதாரங்கள்:

மேலே நாம் பல புதிய செய்திகளைக் கண்டோம். இவை உண்மை என்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன என்று காண்போம்.

மேலே கண்ட பல புதிய செய்திகளில், பாரதப் போரில் ஈடுபட்ட தமிழ் மன்னர்கள் ஐவரின் பெயர்களில் வேண்டுமானால் மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மகாபாரதப்போர் என்பது தமிழ் மன்னர்கள் ஐவருக்கும் வேற்றினத்தார் நூற்றுவருக்கும் இடையில் நடந்த போர் தான் என்பதில் எந்தவித மாறுபாடுமில்லை. இதை உறுதிசெய்யும் வண்ணம் தமிழ் இலக்கியங்களில் இப் போர் பற்றிய குறிப்புக்களும் உள்ளன.

அலங்குஉளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலம்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

- புறநானூறு - 2

பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் பாரதப் போர் நிகழ்ந்த காலத்தில் பெருஞ்சோறு அளித்த நிகழ்ச்சியை இப்பாடல் விவரிக்கிறது.

ஈரைம் பதின்மரும் பொருதுகளத்து அவியப்
பேரமர்க் கடந்த கொடிஞ்சி நெடுந்தேர்
ஆராச் செருவின் ஐவர் போல

- பெரும்பாணாற்றுப்படை - 415-417...

இந்து மதத்தை உண்டாக்கியது, வெள்ளைக்காரன் - ஆதாரம்...


அவன் (வெள்ளைக்காரன்) மட்டும் இந்து என்று பெயர் வைத்திருக்கா விட்டால் ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைணவர், சாக்தர், முருக பக்தர், எல்லை அம்மனைக் கும்பிடுபவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம்.

சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் ஒரே சாமி இருக்கிறாரா? இல்லை.

வைணவர்களுக்கு சிவன் சாமியே அல்ல; சைவர்களுக்கு, ‘விஷ்ணு சாமியே அல்ல;

விஷ்ணு சிவனுக்குப் பக்தன் என்று சொல்லுகிறார்கள்.

இவர்கள் இரண்டு பேரையும் எப்படி ஒரு மதம் என்று சொல்வது?

வெள்ளைக்காரன் நமக்கு இந்துக்கள் என்று பொதுப்பெயர் வைத்தானோ, நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது...

நூல்: தெய்வத்தின் குரல் - பாகம் 1 - பக்.266...

சாத்தானின் சீடர்கள்.. கடல் வணிகம் - தற்சார்பு...