09/02/2019

வீட்டில் குவிந்து கிடக்கும் 400 ஆண்டு கால ஓலைச்சுவடிகள்; மதுரை அருகே படித்துக் காட்ட ஆளின்றி தவிக்கும் ஜமீன் வாரிசு...


மதுரை அருகே 400-க்கும் மேற்பட்ட பழமையான ஓலைச்சுவடிகளை வைத்திருக்கும் ஜமீன் வாரிசு, அவற்றை என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார்.

மதுரை அருகே அதலை கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (45). ஜமீன் வாரிசான இவரிடம், முன்னோர்கள் எழுதி வைத்துச் சென்ற 400 ஆண்டு கால பழமையான அரிய ஓலைச்சுவடிகள் உள்ளன. இவரது குடும்பத்தினர் அதலை கிராமத்தை மையமாக கொண்ட 18 கிராமங்களுக்கு சிறிய ஜமீனாக இருந்துள்ளனர். அங்கிருக்கும் இவர்களது பெரிய வீடு அந்த ஊரின் அடையாளமாக உள்ளது. தற்போது இதைப் பராமரிக்க பொருளாதார வசதி இல்லாததால் வீடு சிதலமடைந்து காணப்படுகிறது.

பொதுமக்களிடம் பெற்ற நன்மதிப்பால் இவரது குடும்பத்தினர்தான் ஊராட்சித் தலைமைப் பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். இவரது தந்தை பழனியாண்டி ஊராட்சித் தலைவராக போட்டியின்றி தேர்வாகி 1995-ம் ஆண்டு வரை பதவி வகித்தார். இவரது தந்தைக்குப் பிறகு, இந்த ஊராட்சி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் இவரது சகோதரி ஊராட்சித் தலைவரானார். இவரது தாத்தா வீரணன் 1967-ல் ஆண்டில் மேற்கு ஊராட்சி ஒன்றியத் தலைவராக இருந்துள்ளார்.

வீரணனின் தந்தை சோனைமுத்து பிரிட்டீஷார் ஆட்சியில் கிராம முன்சீப்பாக இருந்துள்ளார். இதற்கு முந்தைய இவர்களுடைய தலைமுறையினர்தான், இந்த ஊர் ஜமீனாக இருந்துள்ளனர். அவர்கள் எழுதி வைத்துச் சென்றதுதான் இந்த ஓலைச்சுவடிகள்.

இதுகுறித்து நடராஜன் கூறும்போது, எங்கள் வீட்டில் உள்ள இரும்புப் பெட்டியில் 400 ஓலைச்சுவடிகள், செப்புப் பட்டயம் மற்றும் அந்தக் காலத்தில் போர்க்களத்தில் வீரர்கள் பயன்படுத்திய வளரி ஆயுதம் போன்றவை இருந்தன. செப்புப் பட்டயத்தில் அழகர்கோவில் பாளையப்பட்டு சிறுவாலை ஜமீன், எங்கள் முன்னோரான மணியன் சேர்வைக்காரர் உள்ளிட்டோர் செய்த சிறந்த சேவைக்காக அதலை, பிள்ளையார் நத்தம், பரவை, ஊர்மெச்சிகுளம், சமயநல்லூர், தல்லாகுளம் உட்பட 18 கிராமங்களை எழுதி வைத்துள்ளார்.

இந்த ஊர்களில் நடக்கும் நல்லது, கெட்டது எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளவும், சொத்துகளை அனுபவிக்கவும் அந்த ஜமீன் எங்கள் முன்னோருக்கு செப்புப் பட்டயம் எழுதி உரிமை அளித்துள்ளனர். ஓலைச்சுவடிகளில் என்ன தகவல் இருக்கிறது என்பதை அறிய அதை 15 ஆண்டுகளுக்கு முன் மதுரை தொல்லியல் துறை அலுவலகத்தில் தந்தேன். அவற்றில் குறிப்பிட்ட சிலவற்றை ஆய்வுக்காக எடுத்துக் கொண்ட அவர்கள், பின்னர் அவற்றை திருப்பித் தரவே இல்லை. ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்ட தகவல்களையும் அவர்கள் படித்துக் காட்டவில்லை.

அதில் உள்ளவற்றைப் படித்து சொன்னால் எங்கள் முன்னோர் எங்களுக்கும், இந்த சமூகத்துக்கும் என்ன சொல்லிச் சென்றார்கள் என்பதையும் அறிய முடியும். ஓலைச்சுவடிகளை பூச்சிகள் அரிக்காமல் பாதுகாப்பது பெரிய சிரமமாக உள்ளது. ஒருவித ரசாயனத்தை தடவிப் பாதுகாக்கிறேன். இதுதவிர எங்கள் முன்னோர், ஏராளமான காகித ஆவணங்களையும் விட்டுச் சென்றுள்ளனர். அவை நொறுங்கி உதிர்ந்து வருகின்றன.

தொல்லியல்துறை அதிகாரிகள் இந்த ஓலைச்சுவடிகளைப் படித்துக் காட்ட உதவ வேண்டும் என்றார்.

மதுரை தொல்லியல்துறை அதிகாரி (உதவி பொறியாளர்) மாலிக்கிடம் கேட்டபோது, முன்பு இருந்தவர்களிடம் ஓலைச்சுவடியைக் காட்டியிருக்கலாம். அவர்கள் அதில் அக்கறை எடுத்திருக்காமல் இருந்திருக்கலாம். தற்போது மகால் தொல்லியல்துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்தால் நாங்கள் படித்துக் காட்டுகிறோம். அதற்கு கட்டணம் எதுவும் இல்லை. அவரிடம் இருக்கும் ஓலைச்சுவடிகள் அவரது சொத்து என்றார்...

அதிமுக வின் தமிழக பட்ஜெட் 2019...


Start Ur Own Business Today / சொந்தமாக தொழில் தொடங்கலாம் வாங்க...



https://youtu.be/5S95zv3fxf4

Subscribe the channel for more news...

புளியந்தோப்பு பூர்வகுடி மக்கள் குடிசைகள் அழிப்பு...


சென்னை எப்போதுமே ஆந்திராக்காரர்களின் கைவசம்தான். கேட்டால், "சென்னப்பநாயக்கர்களின் ஆளுகையில் இருந்த சென்னையை" என்று ஒரு வரலாறு வரும். இருக்கட்டும். ஆனால், சென்னையின் முக்கியப்பகுதிகள் இன்று "வடஇந்தியர்களின்" முழு வசமாகி விட்டதை யாரெல்லாம் அச்சத்துடன் கவனித்திருக்கிறீர்கள் / றீர்கள்.

எக்மோர், புரசைவாக்கம், அமிஞ்சிக்கரை என்று அந்தப்பகுதி முழுவதுமே, முழுவதுமே வடஇந்தியக்காரர்களின் கைப்பிடிக்குள் சுருங்கிவிட்டது. குறிப்பாக ஜெயின் சமூகத்தினர். சந்துபொந்தில் இண்டு இடுக்கிலிருந்தெல்லாம் அவர்களின், கேட்டட் கம்யூனிட்டி" கட்டிடங்கள், வானுயர எழுந்து நின்று கொண்டிருப்பதை / நிற்பதை/ பார்கிறேன். ஒவ்வொரு வாரமும், ஏதாவது ஒரு வானுயர்ந்த கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்படுவதும், ஆறு மாதங்களில் அது பிரம்மாண்டமாக எழுந்து நிற்பதுமாக,அப்பகுதிகளே அந்நியமாகி வருகிறது. (அந்த gated community-ற்குள் கருப்பான ஆட்கள் நுழைந்தால், அது ஏழாவது அதிசயம்)

சில நாட்களுக்கு முன், கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனை எதிரே வசித்த அப்பகுதியின் பூர்வகுடி மக்களை ( தலித் மக்களை) ஆக்கிரமிப்பு என்ற பெயரில் எந்த முன்னறிவிப்பும் இல்லாது, அகதிகளைப் போல தூக்கித்தூர எரிந்தது அதிமுக அரசு. கடந்த எட்டு வருடமாக, எக்மோர் பகுதியில்தான் என் அலுவலகங்கள் அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு நாளும் அம்மக்களை கடந்துதான் அலுவலகம் சென்றுரிக்கிறேன். வெறும் பார்வையாளனான எனக்கே, அந்தக்குடிசைகளை வலுக்கட்டாயமாக அகற்றியபோது பதறியது. பூர்வகுடிகளின் உணர்வை என்னால் விவரிக்க இயலவில்லை. 

இப்போது புளியந்தோப்பு. நேற்று  காலை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி போலிஸ் துணையோடு குடிசைகளை இடித்து அகற்றி மக்களை நடுத்தெருவில் விட்டிருக்கிறார்கள் அதே அதிமுக அரசு.  சாலையில் பொருள்களோடு மக்கள் யாருக்கோ காத்திருந்திருக்கிறார்கள். யாருக்காக என்றுதான் தெரியவில்லை. குடிசை மாற்று வாரியம் என்பது வேறு. ஆனால், தங்களின் இருப்பிடத்தில் இருந்து பூர்வகுடிகள் பிய்த்து எறியப்படுவது வேறு. ஊடகங்களோ வெறும் "குடிசைகளை அகற்றுவதாக" மட்டுமே கடந்து போகிறது. வாழ்விடங்களில் இருந்து துரத்தப்படுபவர்களின் வலியை பெரும்பான்மை சமூகம் என்று உணர்ந்து கொள்ளும் என்று தெரியவில்லை.

எந்த வடநாட்டுக்காரனுக்கு குடை பிடிப்பதற்காக  சென்னையின் பூர்வகுடி மக்களை அவர்களின் இருப்பிடத்தை, அவர்களின் வாழ்வை இவர்கள் அழிக்கிறார்கள் என்று தெரியவில்லை. மீண்டும் ஒரு தேர்தல் வரும். மீண்டும் பணம் அள்ளி வீசப்படும். ஆத்திரத்தை தொலைத்துவிட்டு அதே அரசுகளுக்கு வாக்களித்து கடமையை ஆற்றுவோம்.

ps: பிரம்மாண்ட கட்டிடங்களுக்கு முன்னால் தவிடுபொடி ஆகி இருக்கும் சென்னையின் பூர்வகுடி மக்கள் வீடுகளைப்பற்றிய இந்த ஒரு புகைப்படம் போதும். இதுவும் ஒரு இனஅழிப்புதான். அதற்க்கு கேவலமான சாட்சிகளாக நாம் இருக்கப் போகிறோம்...

ஊடகங்கள் நம்மை திசைத்திருப்பவே என்பதை மறவாதீர்கள்...


கொல்கத்தா போலீஸ் கமிஷனரை விசாரிக்க தேதி குறித்த சி.பி.ஐ...


சிட்பண்ட் மோசடி தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் நாளை மறுநாள் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாரதா மற்றும் ரோஸ் வேலி சிட் பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர்  ராஜீவ் குமாரை விசாரணை செய்வதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் அம்மாநில போலீசார் சி.பி.ஐ. அதிகாரிகளை தடுத்து நிறுத்தியதுடன், சில அதிகாரிகளை விசாரணைக்காக போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் அறிந்ததும் மேற்கு வங்க முதல்வர் உடனடியாக அங்கு சென்றார். மேலும், சி.பி.ஐ. அதிகாரிகளை தடுத்த போலீஸ் அதிகாரிகளையும் பாராட்டினார். அதனை தொடர்ந்து சி.பி.ஐ., மத்திய அரசை கண்டித்தும், அரசியலமைப்பை காக்க வலியுறுத்தியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து சி.பி.ஐ. உச்ச நீதிமன்றத்தை நாடியது. இதனையடுத்து நீதிமன்றம் ராஜீவ் குமார் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக வேண்டும். சில்லாங்கில் உள்ள சி.பி.ஐ. அலுவலத்தில் விசாரணை நடத்த வேண்டும். ராஜீவ் குமாரை சி.பி.ஐ. கைது செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில், நாளை மறுநாள் (பிப்.9ம் தேதி) சில்லாங்கில்  விசாரணை ராஜீவ் குமாரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ராஜீவ் குமாரிடம் விசாரண செய்வதற்காக 5 பேர் கொண்ட குழு கேள்விகளை தயார் செய்துள்ளதாகவும் செய்தி...

அவர்கள் உங்களை மீண்டும் தற்பெருமைகளை பேச வைக்கின்றனர்.. தமிழா விழித்தெழு...


உனது தற்போதைய அரசியல் எங்கோ ஒரு மூலையில் கூட்டத்தில் நடுவில் இருக்கையை அமைப்பதல்ல, இங்கு உனக்கான அரசியலின் இருக்கையை இறுக்கமாக கைப்பற்ற வேண்டும் என்பது மட்டுமே...

அருகம்புல்...


அருகம்புல் அதிசயமான மருத்துவ குணங்களைக்கொண்டது. அதன் தாவரவியல் பெயர்: சினோடன் டாக்டிலோன். அருகு, பதம், தூர்வை போன்ற பெயர்களும் இதற்கு உண்டு.

மனிதனின் பிணி நீக்கும் மூலக்கூறுகள் அதில் அதிகம் இருந்தாலும், அருகம்புல் காணும் இடமெல்லாம் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

எல்லாவிதமான மண்ணிலும் வளரும் இந்த அருகு சல்லிவேர் முடிச்சுகள் மூலமாகவும், விதைகள் மூலமாகவும் இனவிருத்தி செய்கிறது. சில நேரங்களில் தண்ணீர் இல்லாமல் காய்ந்து போய் விடும். ஆனால், சில ஆண்டுகளுக்கு பிறகு அந்த இடத்தில் நீர் பட்டால், உடனே செழித்து வளரத் தொடங்கி விடும்.

இந்த புல் உள்ள நிலம் மண் அரிப்பில் இருந்தும், வெப்பத்தில் இருந்தும் காக்கப்படுகிறது. அதனால், நெல் சாகுபடி செய்யும் போது அருகம் புல்லால் வரப்பு அமைக்கப்படுகிறது. மங்கள நிகழ்ச்சிகளில் சாணத்தில் பிள்ளையார் பிடித்து, அதில் அரு கம்புல் சொருகி வைக்கப்படுகிறது. சாணத்தில் சாதாரணமாக 2 நாட்களில் புழுக்கள் உருவாகி விடும்.

ஆனால் புல் செருகப்பட்ட சாணம் காயும் வரை அதில் புழு, பூச்சிகள் உருவாவதில்லை. இந்த அதிசயத்தை யாரும் உற்றுக்கவனிப்பதில்லை. புல் வகைகளின் தலைவர் என்று அருகுவை சொல்லலாம். அதனால்தான் மன்னர்கள் பட்டாபிஷேகம் செய்யும்போது, அருகம்புல்லை வைத்து மந்திரம் சொல்வார்கள்.

அருகுவே. புல் வகைகளில் நீ எப்படி சிறந்து விளங்குகிறாயோ, அதேபோல் மன்னர்களில் நானும் சிறந்தோன் ஆவேன்.. என்று முடிசூடும் போது மன்னர்கள் கூறுவது அந்த காலத்து வழக்கம். கிரகண நேரத்தில் குடிக்கும் நீரில் அருகம்புல்லை போட்டு வைக்கும் பழக்கம் இன்றைக்கும் நடைமுறையில் உள்ளது.

அது மூட நம்பிக்கை அல்ல, கிரகண நேரங்களில் ஊதாக்கதிர் வீச்சு அதிகமாக இருக்கும். அதனால் ஏற்படும் பாதிப்புகளை நீக்கவே அருகை நீரில் போட்டு வைக்கிறார்கள். ‘அருகை பருகினால் ஆரோக்கியம் கூடும்' என்கிறது சித்த மருத்துவம். இதை 'விஷ்ணு மூலிகை' என்றும் சொல்கிறார்கள்.

பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் ஏற்ற மருந்து என்பதால், இதை 'குரு மருந்து' என்றும் அழைக்கிறார்கள். அருகம்புல்லை நீரில் அலசி சுத்தப்படுத்தி தண்ணீர் சேர்த்து இடித்தோ, அரைத்தோ சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் அருந்துவது நல்லது. அருந்தினால் நீரிழிவு, உடல் பருமன், ரத்த அழுத்தம் ஆகியவை கட்டுப்படும்.

அருகு சாறு குடித்தால், இரவில் நல்ல தூக்கம் வரும். அருகம்புல் குணப்படுத்தும் நோய்களின் பட்டியல், அதன் வேர்களை போலவே மிகவும் நீளமானது. அருகம்புல் சாறு குடித்தால் சோர்வே தெரியாது. வயிற்றுப்புண் குணமாகும். சளி, சைனஸ், ஆஸ்துமா, தோல் வியாதி, மலச்சிக்கல், பல் ஈறு கோளாறுகள், கர்ப்பப்பை கோளாறுகள், மூட்டுவலி ஆகியவை கட்டுப்படும். புற்று நோய்க்கும் மருந்தாக பயன்படுகிறது.

இதன் அருமையை நம்மை விட வெளிநாட்டினர் தான் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஜெர்மனியில் அருகம்புல் சாறு கலந்து ரொட்டி தயாரித்து உண்கிறார்கள். நாமும் தோசை, சப்பாத்தி, ரொட்டி ஆகியவைகளில் அருகம்புல் சாறை சேர்த்து தயாரித்து உண்ணலாம்.

இலங்கையில் குழந்தைகள் முதன்முதலில் பள்ளிக்கு செல்லும்போது, பாலில் அருகம்புல்லை கலந்து புகட்டுவார்கள். பால் அரிசி வைத்தல் என்ற பெயரில் இந்த சம்பிரதாயம் செய்யப்படுகிறது. குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பானத்தையும் அருகம்புல்லில் தயாரிக்கலாம்.

தளிர் அருகம்புல்லை கழுவி, விழுது போல் அரைத்து பசும்பாலில் விட்டு சுண்டக்காய்ச்சி, இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு உட்கொண்டு வந்தால் எவ்வளவு பலவீனமான உடலும் விரைவில் தேறி விடும்.

அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்..

அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.

அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம்.

கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம்.

தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.

அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.

மருத்துவ குணங்கள்...

அருகம்புல் சாற்றில் வைட்டமின் 'ஏ' சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது. குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம்.

உடலின் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக அமைகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்தச் சோகை, ரத்த அழுத்தத்தையும் அருகம்புல் சாறு சீராக்குகிறது.

வாயுத் தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம். உடல் சூட்டையும் இது தணிக்கிறது.

நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகளுக்கு அருகம்புல்சாறு சிறந்த தீர்வாக உள்ளது.

நீங்கள் பொதுவாக அலோபதி, ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டு வந்தாலும் அருகம்புல் சாற்றினைப் பருக எந்தத் தடையும் இல்லை. இதனால் எவ்வித பக்க விளைவுகளும் கிடையாது.

எப்போதும் எல்லோராலும் அருகம்புல் சாறு தயாரித்து உட்கொள்வது என்பது சாத்தியப்படாது. இதனால் ரெடிமேடாக கடைகளில் பாக்கெட் வடிவிலும் சில இடங்களில் இது விற்பனைக்குக் கிடைக்கிறது. அவற்றையும் வாங்கிப் பருகலாம்.

அருகம்புல் - இஞ்சி ஜூஸ்...

தேவையான பொருட்கள்..

இளசான அருகம்புல் - ஒரு கட்டு
எலுமிச்சைச்சாறு - 1/2 டீஸ்பூன்
பனங்கற்கண்டு - 2 டீஸ்பூன்
தேன் - ஒரு கரண்டி 
இஞ்சி - சிறு துண்டு
உப்பு - 1/2 சிட்டிகை

செய்முறை...

இஞ்சியை தோல் சீவி வைக்கவும்.

அருகம்புல்லைப் பொடியாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் இஞ்சி, பனங்கற்கண்டு, தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைக்கவும்.

அரைத்த கலவையை நன்றாக வடிகட்டி அதனுடன் எலுமிச்சைச்சாறு, தேன், உப்பு, ஐஸ் சேர்த்துப் பருகவும்...

தமிழினமே சிந்தித்து விழித்துக்கொள் / வீடியோ : இணையதள போராளிகள்...


https://youtu.be/bNMLuhC70PQ

Subscribe the channel for more videos...

சிறு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்ட ராமசந்திரய்யாவும் 95 வயதான அவரது அம்மாவும் வாழும் சூழலைக் கண்டு அவர்களுக்கு ஒரு படுக்கையறை வசதி கொண்ட வீட்டை கட்ட அஞ்சப்பள்ளி நாகமுல்லு தனது மகளின் நகைகளை அடமானம் வைத்தார்...


ஹைதராபாத் எல்பி நகரின் போக்குவரத்து காவலரான அஞ்சப்பள்ளி நாகமல்லு பலரது மனதை வென்றுள்ளார். தெலுங்கானாவின் சில்பகுண்டா பகுதியில் வகுதியில் மாற்றுத்திறனாளியான எம் ராமசந்திரய்யாவும் அவரது 95 வயது அம்மாவும் வசிப்பதற்காக, ஒரு படுக்கையறை வசதி கொண்ட வீடு ஒன்றை கட்டிக்கொடுத்துள்ளார்.

நாகமல்லு இந்த வீட்டின் கட்டுமானப் பணிகளுக்காக தனது மகளின் நகைகளை அடமானம் வைத்து 64,000 ரூபாய் பெற்றுள்ளார்.

”என்னைப் பொறுத்தவரை தங்கம் என்பது அலமாரியில் கிடக்கும் ஒரு ஆடம்பரப் பொருள் மட்டுமே. ஒரு சில மாதங்களில் என்னால் அதைத் திரும்பப் பெறமுடியும். ஒருவருக்கு உதவி புரிவதன் மூலம் கிடைக்கும் மனதிருப்தியை இதுவரை நான் அனுபவித்ததில்லை. என்னுடைய குடும்பத்தினரும் குழந்தைகளும் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு வந்திருந்தனர். மிகவும் மகிழ்ச்சியான தருணமாக அது அமைந்தது என ’தி நியூஸ் மினிட்’-க்கு அவர் தெரிவித்தார்.

நாகமல்லு ஆஸ்பெட்டாஸ் ஷீட் வாங்குவதற்காக அந்தப் பணத்தைப் பயன்படுத்தி தனது குடும்பத்தின் உதவியுடன் ஒரு படுக்கையறை வசதி கொண்ட ஒரு வீட்டைக் கட்டினார்.

ராமசந்திரய்யாவின் நிலையையும் அவரது அம்மாவின் நிலையையும் குறித்து உள்ளூர் செய்தி சானல் ஒன்று ஒளிபரப்பியது. இதை அறிந்த பின்னர் நாகமுல்லு அவர்களுக்கு உதவ முன்வந்தார். முதலில் செய்தியாளரை தொடர்பு கொண்டு ராமசந்திரய்யாவின் இருப்பிடம் குறித்து தெரிந்துகொண்டார்.

ராமசந்திரய்யாவிற்கு சிறு வயதிலேயே போலியோ பாதிப்பு ஏற்பட்டது. அவரது அம்மாவையும் அவரையும் பராமரிக்க யாரும் இல்லை. அடுத்தவரிடம் யாசித்து வாழ்ந்து வந்தனர். பருவமழை காலத்தில் இருந்து அதிகம் பாதிப்பிற்குள்ளாகி அவதிப்பட்டு வந்தனர்.

தி இண்டியன் எக்ஸ்பிரஸ் உடனான நேர்காணலில் இந்தப் போக்குவரத்து காவலர் கூறுகையில்,

”அவர்களுக்காக நான் ஒரு வீடு கட்டித் தர விரும்பினேன். ஆனால் அதற்கு செலவிடுவதற்கான பணம் என்னிடம் இல்லை. ஆனால் இந்தப் பணியை மேற்கொண்டே தீரவேண்டும் என்று முடிவு செய்தேன். என் மகளின் நகைகளை அடமானம் வைத்து கட்டுமானப் பணியைத் துவங்கினேன். என்னால் வெற்றிகரமாக பணியை நிறைவு செய்ய முடிந்தது. என்னுடைய சீனியர்கள் என்னை பெரிதும் ஊக்குவித்தனர். அவர்களது பிரச்சனைக்கு தீர்வுகாண பலர் ஆதரவளித்தனர். நலிந்த மக்களுக்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்யவேண்டும். ஒவ்வொரு சிறு முயற்சியும் முக்கியத்துவம் வாய்ந்தது,” என்றார்.

நாகமுல்லு ஏற்கெனவே பல்வேறு சமூக பிரச்சனைகளை மையப்படுத்தி எழுதப்பட்ட பாடல்களுக்காக செய்திகளில் இடம்பெற்றுள்ளார். போலி செய்திகள், சாலை பாதுகாப்பு, ஓட்டு போடுவதன் அவசியம் போன்றவற்றை வலியுறுத்தும் வகையில் அமைந்த அவரது பாடல்கள் சமூக வலைதளத்தில் வலம் வந்துள்ளன...

நாடு வளர்ச்சி பாதைக்கு செல்வது என்றால் மக்கள் வாழ்விற்கான வளர்ச்சியே... விலைவாசி உயர்வல்ல...


விக்கல் பிரச்சனைக்கான தீர்வுகள்...


சீ(ஜீ)ரண மண்டலத்தில் பிரச்னை உருவாகியுள்ளது என்பதன் அறிகுறிதான் அடிக்கடி வந்து போகும் விக்கல். விக்கலை சமாளிக்க ஆலோசனை சொல்கின்றனர் மருத்துவர்கள். தற்போது இருக்கும் வாழ்க்கை முறை உடலில் பல நோய்களுக்கான அடித்தளத்தை ஏற்படுத்தி விடுகிறது.

உணவுகளில் பயன்படுத்தப்படும் அதிக எண்ணெய், சுவை கூட்டும் பொருட்கள் மற்றும் செயற்கை வண்ணம் ஆகியவற்றால் குடல் மற்றும் வயிற்றில் நாளடைவில் பல பிரச்னைகள் உண்டாகும் வாய்ப்பு உள்ளது.

சின்னப் பிரச்னை ஏற்பட்டாலும் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம். விக்கலும் அது போன்றதுதான். விக்கல் எப்படி வருகிறது?

வயிற்றுக்கும், மார்புப் பகுதிக்கும் இடையில் உதரவிதானம் உள்ளது. நாம் மூச்சை இழுக்கும் போது நுரையீரலுக்கு பிராணவாயு செல்வதற்கு வசதியாக, இந்த உதரவிதானம் மேலும் கீழும் இயங்குகிறது. இதனால் நுரையீரலுக்குள் பிராணவாயு எளிதில் நுழைகிறது.

இது நம் உடலில் இயல்பாக நடக்கும் ஒரு செயல்பாடு. மூச்சு விடும் போது உதரவிதானம் தானாகத் துடிக்கும் சமயத்தில் நம் குரல் வளை மூடியிருந்தால் விக்கல் ஏற்படுகிறது. விக்கல் ஏற்பட சில காரணங்கள் உள்ளன. காரம் அதிகம் உள்ள உணவு சாப்பிடும்போது வருகிறது.

வயிறு முட்ட சாப்பிடும்போது மற்றும் வயிறு நிறைய தண்ணீர் குடிக்கும்போதும் விக்கல் ஏற்படுகிறது. அதிகமாக சிரிப்பவர்களுக்கும் விக்கல் வரலாம். விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை.

விக்கல் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் நீடிக்கும் பட்சத்தில் பிரச்னை உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உடலில் அபாயமான நோயின் அறிகுறியாகவும் இந்தத் தொடர் விக்கல் இருக்கலாம்.

காசநோய், புற்றுநோய் ஆகியவற்றால் நுரையீரலின் வேர்ப்பகுதியில் நெறிகட்டியோ, நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தாலோ, மார்பு வழியாக உதரவிதானம் செல்லும் பெரினிக் நரம்பு பாதிக்கப்பட்டிருந்தாலோ விக்கல் வர வாய்ப்புள்ளது.

மனரீதியான பிரச்னை அல்லது உணர்வுகள் காரணமாக தொடர்ந்து விக்கல் ஏற்படலாம். இந்த வகை விக்கல் விழித்திருக்கும்போது மட்டும் வரும். சிறுநீரகம் பழுதடைந்த காரணத்தால் ரத்தத்தில் யூரியா அதிகம் சேரும்போது விக்கல் வரும்.

இத்துடன் கல்லீரல், இரைப்பை பகுதியில் புற்றுநோய், உதரவிதானத்தில் ஓட்டை போன்ற அபாயகரமான காரணங்களாலும் விக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. விக்கல் வந்த உடன் தண்ணீர் குடித்தால் நின்று விடும் என்பதும் தவறான கருத்தே.

தண்ணீர் நிறைய குடித்தால் பிரச்னை மேலும் பெரிதாக வாய்ப்புள்ளது. இதனால் விக்கல் வராமல் காத்துக் கொள்வது அவசியம். பாதுகாப்பு முறை விக்கல் வராமல் தடுக்க தண்ணீரை ஒரே சமயத்தில் நிறைய குடிப்பதற்கு பதிலாக கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கலாம்.

வயிறு முட்ட சாப்பிடும் பழக்கத்தைத் தவிர்க்கலாம். இதே போல் மது, புகை பிடித்தல் மற்றும் புகையிலை போன்ற பழக்கங்களை கைவிடுவதும் நல்லது. அதிக காரம் மற்றும் மசாலா சேர்ப்பதையும் தவிர்க்கலாம்...

எங்கள் கையில் கறை படிந்து விடக் கூடாது.. 40 தொகுதியிலும் தனித்து போட்டியிடவுள்ளோம் - கன்னடன் கமல்...


கும்பகோணம் பாமக ராமலிங்கம் கொலை வழக்கில் 6 பேர் கைது...


1) சர்புத்தீன், த/பெ யாக்கூப் வயது 60
2) முகம்மது ரிஸ்வான், த/பெ மந்திர் அலி, வயது 23
3) முகம்மது ரியாஸ், த/பெ ஹாஜா பக்ருத்தீன், வயது 27
4) நிஜாம் அலி, த/பெ சர்தார் கான், வயது 33
5) அஸாருத்தீன், த/பெ அப்துல் கலாம், வயது 26

இவர்களில் பெரும்பாலானோர் எஸ்டிபிஐ மற்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புகளின் உறுப்பினர்கள்.  அனைவரும் திருபுவனம் பகுதியை சேர்ந்தவர்கள். 

பூர்வாங்க விசாரணையில் இது மதம் தொடர்பாக நடந்த கொலை என்றே தெரிய வருகிறது...

நீங்க என்ன நிபந்தனை காங்கிரசுக்கு வைச்சீர் திரு.துண்டு சீட்டு திமுக ஸ்டாலின் அவர்களே..?


வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு 50 சதவிகிதம் வாய்ப்பு : சீமான் அறிவிப்பு...


எதிர் வரும் மக்களவை தேர்தலில் பெண்களுக்கு 50 சதவிகிதம் சீட் ஒதுக்கப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமைஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களை சந்தித்த அவர், பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது உறுதி.

20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களையும், 20 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களையும் நிறுத்த உள்ளோம்.

நாங்கள் மட்டும் தான் பெண்களுக்கு ஐம்பது சதவிதம் தேர்தலில் இட ஒதுக்கீடு அளிக்கிறோம் என அவர் தெரிவித்தார்...

தொப்பை குறைய எளிய உடற்பயிற்சி...


தொப்பை குறைய பல பயிற்சிகள் இருந்தாலும் இந்த பயிற்சி செய்வது மிகவும் எளிமையானது. மேலும் விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் உள்ள  தரையில் படுத்துக்குங்க. மெதுவா உங்கள் காலை மேல தூக்குங்க.

முதுகு தரையில் இருக்க வேண்டும். காலை மடக்க கூடாது. கால் நேராக தான் இருக்க வேண்டும். ஆரம்பத்தில் இவ்வாறு செய்ய முடியவில்லை என்றால் கீழே உள்ளபடி படிப்படியாக செய்ய ஆரம்பிக்க வேண்டும். இரண்டு காலையும் மடக்கி தரையில் படுங்க. பின் வலது காலை மட்டும் நேராக நீட்டவும். 10 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும்.

பின் வலது காலை பழைய நிலைக்கு கொண்டுவரவும். பின் இடது காலை நேராக நீட்டவும் 10 வினாடி இருக்கவும். பின் இடது காலை பழைய நிலைக்கு கொண்டுவரவும். இவ்வாறு 10 முறை இவ்வாறு செய்யவும். பின்னர் இரண்டு காலையும் தரையில் இருந்து முட்டி மடங்காம நேரா தூக்குங்க.

எவ்வளவு உயரத்துக்கு தூக்க முடியுமோ அவ்வளவு தூரம் தூக்கலாம். 30 வினாடி அந்த நிலையிலேயே இருக்க வேண்டும்.  நேரம் ஆக ஆக வயிறு இறுகும். உங்களால் காலை தூக்கியதுபோல் வைச்சிருக்க முடியாது. 10, 15, ...., 60 வினாடின்னு வரை நேரத்தை அதிகரிச்சுக்கலாம். நேரத்தை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். 10 முறை இப்படி செய்யுங்கள்...

தினமும் கொய்யா இலை டீ குடித்தால் இவ்வளவு நன்மைகளா.?


https://youtu.be/DrYuhGGBwDk

Subscribe the channel for more tips...

எண்களின் தமிழ் வடிவ ஓலிகளை எளிமையாக நினைவில் வைத்துக் கொள்ள...


பூச்சியத்தை கண்டுபிடித்த‍தோடு அல்லாமல் அதை உலக நாடுகளும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்த‍து எந்த நாடு தெரியுமா? நமது இந்தியாதான்.

சரி, நமது தாய்மொழியான தமிழில் எண்களின் ஒளி வடிவம் என்ன வென்று உங்களுக்குத் தெரியு மா?

1 – க
2 – உ
3 – ங
4 – ச
5 – ரு
6 – சா
7 – எ
8 – அ
9 – கூ
0 – 0

அப்பப்பா இதை எப்ப‍டியப்பா நினைவில் வைத்துக்கொள்வது என்றுதானே அச்ச‍ம் கொள்கிறீர்கள்.

அச்ச‍ம் எதற்கு?,

கடுகு, உளுந்து, ஙனைத்து, சமைச்சு, ருசிச்சு, சாப்பிட்டேன், என, அவன், கூறினான், ஓ, என்ற இந்த வாக்கியத்தை நீங்கள் எளிதாக நினைவில் வைத்துக் கொ ள்ள‍ முடியும் அல்ல‍வா?

என்ன‍ இது அதெப்படி இதில் தமிழ் எண்கள் ஒலி வடிவம் வருகிற து என்று நீங்கள் ஐயப்படுவது எனக் குத் தெரிகிறது. மேற்கூறி ய அதே வரியை கீழேயும் குறிப்பிட்டுள்ளேன்.

அதை நீங்கள் படியுங்கள் ஆனால் ஒரே ஒரு நிபந்தனை கீழே உள்ள‍ வரியில் வரும் அத்த‍னை வார்த் தைகளின் முதல் எழுத்துக்களை மட்டுமே படித்துப்பாருங்க ள். எண்களில் தமிழ் மொழி வடிவம் வருகிறது அல்ல‍வா?

“க“டுகு, “உ“ளுந்து, “ங“னைத்து, “ச“மைச்சு, “ரு“சிச்சு, “சா“ப்பிட்டேன். “எ“ன, “அ“வன், “கூ” றினான், “ஓ“

என்ன‍ இப்ப உங்களுக்கு எளிமையாக இருக்குமே...

அதிமுக கூட்டணிக்கு பாமக வருக வருக அமைச்சர் ஜெயக்குமார்...


அனுமாருக்கு நிகரான நவீன ESP மனிதர்...


டானியல் டொங்லஸ் ஹியூம் (daniel douglas hume)...

1833 ஆம் ஆண்டில் பிறந்த ஒரு மனிதர், அப்பா இல்லாத இந்த சிறுவனின் தாயும் சிறுவயதில் இறந்து போக அத்தையுடன் வளர ஆரம்பித்தான்..

சிறு வயதிலேயே வித்தியாசமான குணங்களுடன் வளர்ந்த இந்த சிறுவனுக்கு ஒரு சிறந்த நண்பனும் இருந்தான்…

கால ஓட்டத்தில் நண்பன் வேறு இடத்திற்கு குடி பெயர்ந்திருந்தான்.

ஒரு நாள் திடீரென 13 வயதேயான ஹியூம் தனது அத்தையிடம் எனது நண்பன் எட்வின் இறந்து விட்டான் என தோன்றுகிறது எனக் கூறினான்…

இதை அத்தை நம்பவில்லை. அடுத்த நாள் காலையில், எட்வின் ஒரு கார் விபத்தில் இறந்த தகவல் கிடைக்கிறது. அப்போது தான் முதல் முதலாக அபூர்வ ஆற்றல் இருப்பது தெரிய வந்தது..

அதன் பின்னர் 4 வருடங்களில் பல ஆற்றல்கள் அவரிடம் வந்து சேர்ந்தன.

ஒரு முறை பல ஆழ்மன சக்தி ஆராய்ச்சியாளர்களின் முண்ணிலையில் தனது சக்திகளை நிரூபித்துக் கொண்டிருந்தார்.

அவர் மேசையை அந்தரத்தில் பறக்க செய்த போது, உடனே அனைவரும் ஓடிப்போய் ஏதும் கேபிள் இருக்கிறதா என பரிசோதித்தார்கள்…

இப்படி அவர் செய்யும் ஒவ்வொரு செயலையும் சந்தேகக் கணோடு பார்வையிட.. கடுப்பாகிப்போன ஹியூம்… ஒரு சுவரின் ஓரமாகப் போய் நின்று கொண்டு… தனது உயரத்தை அளவிடுமாறு கூறினார்.. சரியாக 5 அடி 10 அங்குளம் அளவிடப்பட்டது.

பின்னர், கண்ணை மூடி மூச்சை உள்ளெடுத்துக் கொண்ட ஹியூம் சில நிமிடங்களில் வளர ஆரம்பித்தார்..

பின்னர் அளந்து பார்க்கையில் 6 அடி 6 அங்குளமாக உயர்ந்திருந்தார்..

இதை கண்கூடாக கண்ட அனைத்து விஞ்ஞானிகளும் விளக்கம் கூற முடியாமல் திகைப்புக்குள்ளாகி அவரின் சக்தியை ஒப்புக் கொண்டிருந்தார்கள்.

இது நிவீன உலகில் நேரடியாக நிரூபனமான ஒரு உதாரணம்.

இதே போன்ற ESP சக்தியை பயண்படுத்தி ஹனுமாரும் தனது உடலை பெருப்பித்திருக்க சந்தர்ப்பங்கள் உள்ளன.

ஹியூமை விட அதிகபடியான ESP தன்மையை கொண்டிருப்பின் உடலை இன்னும் பெருப்பிப்பது சாத்தியமே...

பறக்கும் சக்தியையும் ஹியூம் நிரூபித்துக்காட்டி இருந்தமை குறிப்பிட வேண்டிய விடையம்..

மேலும், தனக்கு ESP தவிர்ந்த சில ஆவிகளும் தனக்கு துணை புரிவதாக கூறி இருந்தாராம் ஹியூம்.

வாணில் இருந்து சில (9) சக்திகள் தன்னை இயக்குவதாக குறிப்பிட்டு இருந்துள்ளார்..

அதே வேளை, ஹனுமாரும் இவ்வொரு முறை பெளதீக விதி முறைகளை மீறும் போதும் ( ESP ஐ வெளிக்கொணரும் போதும்) வாணத்தை நோக்கி கண் மூடி தியானித்ததாகவே இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது..

எனவே ஹனுமார் ஒரு ESP மனிதராக இருந்து பின்னர் வரலாற்றாலர்களால் கால ஓட்டத்தில் இறைப்புகழ் எய்தி இருக்க கூடும்...

இதை எல்லாம் வாங்குறது எங்க வரிப் பணத்தில் தான் டா...


மூலிகை நீர் குறிப்புக்கள்...


சித்தர்களின் வாக்குப்படி மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் நீர்கள் நோய் தடுப்பில் சிறப்பிடம் பெறுகின்றன.

உணவுக்கு உணவாகவும், மருந்துக்கு மருந்தாகவும் பயன்படுகின்றன. இச்சுவை நீர்களை காலை, மாலை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் விரைவில் பலன் கிடைக்கிறது. சாதாரண சுவைநீர்கள், மூலிகை சேர்வதால் நோய் தடுக்கும் சுகநீராய் மாறுகிறது.

ஆவாரம்பூ நீர்...

ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்ட துண்டோ.. என்ற பழமொழிக்கு ஏற்ப நீரிழிவுக்கு ஆவாரைப்பூவின் அற்புதத்தை அறியலாம். மஞ்சள் நிறமுள்ள இப்பூ தங்கச்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆவாரம்பூ சுவை நீர் நீரிழிவு, பெரும்பாடு, குடற்புண், நீர்க்கடுப்பு, வெள்ளைப்போக்கு ஆகியன வராமல் தடுக்கிறது. நூறு மில்லி நீரில் பத்து ஆவாரம் பூக்களை போட்டு காய்ச்சி, வடிகட்டி காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து தேவையெனில் காபித்தூள் அல்லது டீத்தூள் கஷாயத்தில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.

கரிசாலை நீர்...

சிறுநீரக செயலிழப்பு, அதிக இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், காச நோய், வெண்புள்ளி, எலும்பு தேய்மானம் ஆகியன வராமல் கரிசாலை சுவைநீர் தடுக்கிறது. மேற்சொன்ன ஆவாரம்பூ சுவை நீர் தயாரிப்பதுபோல் ஆவாரம்பூத் தூளுக்குப் பதிலாக கரிசாலைதூளை இரண்டு கிராம் போட்டுக் கொள்ளவும். தினசரி காலையில் மட்டும் கரிசாலைச்சுவை நீர் அருந்தி வரவும்.

செம்பருத்தி நீர்...

செம்பருத்தி பூ நீர் இதய சுவர் ஓட்டை, இதய வால்வு, தேய் மானம், வழுக்கை, இரத்த சோகை ஆகியன வராமல் தடுக்கிறது. இது மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. குடல் இறக்கம், கர்ப்பப்பை இறக்கம் ஏற்படாதும் தடுக்கிறது.

காய்ச்சிய பாலை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அதில் அடுக்கு செம்பருத்திப்பூ இதழ்கள் ஐந்து போட்டுப் பத்து நிமிடம் பாலை மூடி வைத்து பின் வடிகட்டி விட வும். பால் சிவப் பாகி இருக்கும். இனிப்பு சேர்த்து வடிகட்டி காலையிலும், மாலையிலும் குடிக்கவும். சளி தொந்தரவு உள்ளவர்கள் பால் காய்ச்சும் போது தோல் நீக்கிய சிறு துண்டு இஞ்சியை நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

நன்னாரி நீர்...

“தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்” என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்.

துளசி நீர்...

குடல் காய்ச்சல், மஞ்சள் காமாலை, மலேரியா, காலரா நோய்கள் வராமல் துளசி சுவை நீர் தடுக்கும். மேலும் குடல்வால் அழற்சி ஏற்படாது. காய்ச் சிய நூறு மில்லி சூடான பாலில் இரண்டு கிராம் துளசி இலை பொடியைக் கலந்து, மூடி வைத்து பத்து நிமிடங்கள் சென்று இனிப்பு சேர்த்து, தேவை யெனில் காபி அல்லது டீ கஷாயம் சேர்த்து வடிகட்டி தினசரி காலையில் மட்டும் குடிக்கவும். அடிக்கடி பல ஊர்கள் தண்ணீர் குடிப்போரும், தொற்று நோய்கள் பரவும் காலங்களிலும் இந்த துளசி சுவை நீரை பயன்படுத்தி பலன் பெறலாம்.

வல்லாரை நீர்...

யானைக்கால், வலிப்பு, மலடு, பக்கவாதம், மூலம், மூட்டுவலி, இரத்தக்குழாய் தடிப்பு போன்ற நோய்கள் வராமல் வல்லாரை சுவை நீர் தடுக்கும். “காய சித்திக்கு புளியாரை„ கபால கோளாறுக்கு வல்லாரை” என்பார்கள். வல்லாரை இலைப்பொடி இரண்டு கிராம் எடுத்து மேற்கண்டுள்ள துளசி சுவை நீர் தயாரிப்பதுபோல் வல்லாரை சுவை நீர் தயாரித்துக் கொள்ளவும். காலை, மாலை இருவேளையும் குடிக்கவும். எல்லோருக்கும் என்றும் ஏற்றது வல்லாரை சுவை நீராகும். இச்சுவை நீர்கள் குறிப்பிட்டுள்ள நோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் கூடியது.

எனவே நோயுள்ளோரும், பயன்படுத்தி பயன் பெறலாம்...

பாமக வின் 2019-2020 நிழல் நிதி அறிக்கை..



தமிழரின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் ஆட்டைப் போட்டு மாற்றியது தான் வந்தேறிகளின் கலாச்சாரம்...


தமிழர்கள் தன் முறைப் பெண்கள் மேல் மஞ்சத்தண்ணி ஊற்றி விளையாடும் மாரியம்மன் கோவில் பண்டிகையை தான் டா நீங்கள் மாற்றி ஹோலிப் பண்டிகை என்று கொண்டாடுகின்றீர்கள்...

மானங்கெட்ட வந்தேறி நாய்களா...
உங்களுக்கு ஏதுடா நாடு மொழி கலாச்சாரம் பண்பாடு?

இங்கு திறமை படைத்த குழந்தை என்பது நடனம், பாட்டு, தேர்வு படிப்பு என்று வரையறைக்க படுகிறது...


தனிமனித திறமை என்றைக்கும் உன்னை பொருளாதார ரீதியாக வளர்க்குமே தவிர, சமூகத்தில் எந்த மாற்றத்தையும் வளர்க்காது...

தமிழினம் தெரிந்துக் கொள்ள வேண்டிய சரித்திரம்...


சுமார் 1900 ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் அடிமைகளாக வாழ்ந்து, உலகம் முழுவதும் சிதறடிக்கப்பட்டு, மற்றவர்களால் வெறுக்கப்பட்டு, நண்பர்களால் ஏமாற்றப்பட்டு, பலம் பொருந்திய நாடுகளினால் அழிக்கப்பட்ட இஸ்ரேலியர்கள் எப்படி மீண்டும் தங்களைக் கட்டியெழுப்பிக்கொண்டு, தங்களுக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கினார்கள் என்கின்ற சரித்திரங்கள் உண்மையிலேயே ஒவ்வொரு  தமிழனும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய உண்மைகள்.

ஒரு தேசத்தினது அல்லது இனத்தினது விடுதலை என்பது சில வருடப் போராட்டத்தையோ அல்லது சில சம்பவங்களையோ மாத்திரம் அடிப்படையாகக் கொண்டதல்ல.

ஒரு தேசத்தின் விடுதலை என்பது பல தசாப்தங்களை உள்ளடக்கிய ஒரு நீண்ட பயணம்.

இஸ்ரேலியர்களுடைய அந்த விடுதலையின் பயணம் பல நூற்றாண்டுகளைக் கொண்டது.

நம்மைப் போல் நூற்றுக்கணக்கான முள்ளிவாய்க்கால்களைக் கண்டுதான் அவர்களுக்கான விடிவு தற்பொழுது அவர்களுக்குக் கிடைத்திருக்கின்றது.

இன்று உலகின் போக்கையும், உலக ஒழுங்கையும் மாற்றிவிடக் கூடியதான வல்லமையை இஸ்ரேல் என்கின்ற சிறிய நாடு பெற்றிருக்கின்றது என்றால்,

அதன் பின்னணியில் நீண்டகாலமாக இஸ்ரேலியர்களுக்கு இருந்த நம்பிக்கை, வைராக்கியம், கடின உழைப்பு, இழப்புக்களைத் தாங்கிக்கொள்ளும் பலம், எதிரிகளைக் கண்டு அஞ்சாத வீரம், ஒற்றுமை - என்று பல விடயங்களை கூறிக்கொண்டே போகலாம்...

இஸ்ரேல் என்கின்ற தேசம் எப்படி உருவானது?

பாபிலோனியர்களாலும், எகிப்தியராலும், ரோமர்களாலும், பிரித்தானியராலும், பேர்சியர்களாலும், கிரேக்கர்களாலும் இன்னும் பல இனக் குழுமங்களினாலும்; அடிமைகளாக்கப்பட்டு பலநூறு ஆண்டுகள் நாடற்றவர்களாக, அகதிகளாக, வேண்டப்படாதவர்களாக வாழ்ந்து வந்த யூதர்களால் எவ்வாறு தமக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்தது?

அகதிகளாக அவர்கள் சிதறி வாழ்ந்த தேசங்களில், அடிமைகளாக அவர்கள் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து வந்த தேசங்களில் எப்படி அவர்களால் ஒற்றுமையாக இருக்க முடிந்தது?

தங்களுக்கென்று ஒரு நாடு அமையவேண்டும் என்ற நம்பிக்கையிலும் வைராக்கியத்திலும் எப்படி யூதர்களால் நீண்டகாலம் வாழ முடிந்தது?

இந்த விடயங்களைத்தான் இந்த கட்டுரைத் தொடரில் நாம் விரிவாக ஆராயப் போகின்றோம்..

இஸ்ரேல் தேசத்திடம் இருந்து தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள், படிப்பினைகள் என்று ஏராளம் இருக்கின்றன..

அவற்றைத்தான் இந்த தொடரில் சற்று ஆழமாக நாம் பார்க்க இருக்கின்றோம்.

அனைத்தையும் இழந்துவிட்டோம் என்று  துவண்டு போயுள்ள பல தமிழர்களின் உள்ளங்களுக்கு, இஸ்ரேல் தேசத்தின் உருவாக்கம் தொடர்பான அறிவு என்பது நிச்சயம் ஒரு பெரிய புத்துணர்ச்சியை அளிக்கும் என்றே நான் நினைக்கின்றேன்.

நாங்கள் வீழவில்லை என்பதையும், நாங்கள் வீழமாட்டோம் என்பதையும், நாங்கள் தோற்கவில்லை என்பதையும், எழுந்து நிற்க எங்களாலும் முடியும் என்பதையும் தமிழர்கள் ஒவ்வொரு கணமும் உளமாற உணர வேண்டும்..

இன்று மிகவும் நொந்துபோன நிலையில் இருக்கின்ற தமிழரை நம்பி வந்த நாடுகள் கைவிட்டுவிட்டதாக நாம் கவலை அடைகின்றோம் அல்லவா?

இந்தியாவிலும், நெதர்லாந்திலும், பிரான்சிலும், மலேசியாவிலும், கனடாவிலும் அங்காங்கு  தமிழர் ஓரிருவர் கைது செய்யப்பட்டால் அல்லது நாடு கடத்தப்பட்டால் உடனடியாகவே நாம் துவண்டு போய்விடுகிறோம் அல்லவா?

இஸ்ரேலிய மக்களுடைய சரித்திரத்தை ஆராய்கின்ற பொழுது அவர்களை வஞ்சிக்காத தேசங்களே உலகில் இல்லை என்று கூறலாம்.

அந்த அளவிற்கு அவர்கள் உலகின் பல நாடுகளினாலும் வஞ்சிக்கப்பட்டார்கள். ஓட ஓட விரட்டப்பட்டார்கள்.

கி.பி. 1200ம் ஆண்டில் இங்கிலாந்தில் இருந்த யூதர்கள் அனைவரையும் நாட்டைவிட்டு வெளியேறும்படி அந்த அரசாட்சி உத்தரவிட்டது.

கி.பி. 1306ம் ஆண்டு பிரான்ஸில் வாழ்ந்து வந்த யூதர்களை அந்த அரசு நாடு கடத்தியிருந்தது.

கி.பி. 1355ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் டோலியோ நகரில் வாழ்ந்துவந்த 12,000 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

கி.பி. 1346ம் ஆண்டு முதல் 1360 ஆண்டு வரையிலான காலப்பகுகளில் கங்கேரியில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.

1390ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் வசித்துவந்த யூதர்கள் கட்டாயமாக கத்தோலிக்க மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டார்கள். மதம் மாற மறுத்த 180,000 யூதர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள்.

1495ம் ஆண்டு லிதுவேனியாவில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.

1502ம் ஆண்டு லிதுவேனியாவின் ரோட்ஸ் என்ற நகரில் வாழ்ந்துவந்த பல யூதர்கள் மதம் மாற்றப்பட்டார்கள், அல்லது அடிமைகளாக விற்கப்பட்டார்கள் அல்லது அங்கிருந்து துரத்தப்பட்டார்கள்.

1541ம் ஆண்டு நேப்பிள்ஸில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.

1648ம் ஆண்டு முதல் 1656 ம் ஆண்டுவரை போலந்து நாட்டில் இருந்த யூதர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

1717 முதல் 1747 வரையிலான காலப்பகுதியில் ரஷ்யாவில் இருந்தும் யூதர்கள் அதன் ஆட்சியால் வெளியேற்றப்பட்டார்கள்.

1940களில் ஜேர்மனி, ஒஸ்ரியா, ஒல்லாந்து, கங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் வாழ்ந்த சுமார் 60 இலட்சம் யூதர்கள் ஹிட்லரால் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இதுபோன்ற பல கொடுமைகள், இனப்படுகொலைகள், அழிவுகள், இடப்பெயர்வுகள், புலப்பெயர்வுகள், அகதி வாழ்க்கை என்பனவற்றைச் சந்தித்த இஸ்ரேலியர்களால் எப்படி விடுதலை பெற முடிந்தது?

எப்படி அவர்களால் தங்களுக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கிக் கொள்ள முடிந்தது?

இந்த விடயங்கள் பற்றிய அறிவை நாம் கொண்டிருப்பது, விடுதலை வேண்டிய ஒரு இனத்தின் பயணத்திற்கு மிகவும் இன்றியமையாதது என்றே நான் நினைக்கின்றேன்...

காய்ச்சல் குணமாக...


பட்டினி கிடந்தாலும் பிச்சை எடுக்கக் கூடாதுப்பா.. பழனியில் சூடம் விற்கும் பழனியம்மா பாட்டி...


கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்த சிறுவனிடம் சொல்கிறார் அந்தப் பாட்டி. அவனோ, தயக்கத்தோடு ''காசு இல்லை பாட்டி" என்கிறான். சற்றும் யோசிக்காமல், இரண்டு சூட வில்லைகளை அவன் கையில் கொடுத்து, 'பழனி ஆண்டவன வேண்டிக்க, ஒன்ன நல்லா வெச்சிப்பான்' என்கிறார் சிரித்துக்கொண்டே.

கறாராக வியாபாரம் செய்வோர் மத்தியில், சின்னப் பையனின் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என நினைக்கும் பாட்டியை ரொம்பவே பிடித்துபோனது. அவரிடம் பேச்சுக்கொடுத்தபோது... முதலில் தயங்கினாலும், இயல்பாகப் பேசத் தொடங்கினார் பாட்டி, "எம் பேரு பழனியம்மா, 15 வருஷமா இங்கே சூடம் வித்துட்டு இருக்கேன்" என்றவரிடம் ஒருவர் சூடம் வாங்க வர, வியாபாரத்தைக் கவனிக்கிறார்.

கூன் விழுந்த முதுகு, எலும்போடு ஒட்டியிருக்கும் சுருங்கிய தோலில், ஒட்டாமல் தளர்வுடன் இருக்கும் ஜாக்கெட், நரைத்துப் போன தலைமுடி, கழுத்தில் சாயம் போன சிவப்புக் கயிறு, நடை தளர்ந்திருந்தாலும் நம்பிக்கை இழக்காத பார்வை...

இவைதாம் பழனியம்மா பாட்டியின் அடையாளம். பாட்டிக்கு வயது 85 - க்கும் மேல் இருக்கலாம். “சாமி... சூடம் வாங்கிக்கிறியா?” என்று பழனியம்மா பாட்டியின் நடுங்கும் குரலைக் கேட்காமல் பழனி கோயிலுக்குச் செல்ல முடியாது. சிலரின் புன்னகையும், பார்வையும் நம்மை எளிதில் கவர்ந்துவிடும். அப்படிக் கவர்ந்தவர்தான் பழனியம்மா பாட்டி.

உழைக்கும் வகையில் உடல் திறனிருந்தும், பலர் பழனி மலையடிவாரத்தில் பிச்சையெடுத்துக்கொண்டிருக்க, தள்ளாடி நடக்கும் வயதிலும் பழனியம்மா பாட்டி உழைத்துக்கொண்டிருக்கிறார். பழனியம்மா பாட்டியின் கையிலிருக்கும் தட்டில் கற்பூரம், சாமிக்கு காணிக்கையாகச் செலுத்தும் சின்னச்சின்ன வேல்கள், பாதமலர், அத்தோடு பத்துப் பதினைந்து ரூபாய்க்குச் சில்லறைகள் எப்போதும் இருக்கும்.

மழையிலிருந்தும் வெயிலிலிருந்து காப்பாற்றும் என நம்பியிருக்கும் ஒரு கிழிந்து போன குடையோடு அவரை நீங்கள் பார்க்க முடியும். அந்தக் குடையை நிழல்வரும்படி, தள்ளி வைத்துவிட்டு, பேச்சைத் தொடர்கிறார்.

"நான் சின்ன வயசா இருக்கிறப்பவே, என் அப்பா என்னையும் அம்மாவையும் விட்டு ஓடிப்போயிட்டாரு. அம்மாதான் என்ன வளத்தாங்க. எனக்கு பத்து வயசு இருக்கறப்ப கல்யாணம் செஞ்சி வச்சிட்டாங்க. ரெண்டு ஆம்பள புள்ளைங்க, ரெண்டு பொம்பளப் புள்ளைங்கனு மொத்தம் நாலு புள்ளைங்க. நாலுல மூணு செத்துப் போயிருச்சு.

ஒரு பொம்பள புள்ள மட்டும்தான் இப்ப இருக்கு. அதையும் கட்டிக்கொடுத்துட்டேன். தன் புருஷன்கூட ரொம்ப சந்தோசமா இருக்கு. ஆனா, அதுவும் இப்ப ரொம்ப தூரத்துல இருக்குது சாமி. எப்போவாது என்ன பார்க்க வருவாங்க” என்று கூறிக்கொண்டே பாட்டி கண்களைத் துடைத்துக்கொண்டார்.

“அவரும் என்ன தனி மரமா விட்டுட்டு போய் சேர்ந்துட்டாரு சாமி” என்று கூறிக்கொண்டே அழுகிறார். சிறிதுநேரத்தில் கண்கள் சிவந்து போயின. நான் ஏதும் கேட்காமல் மெளனமாக இருந்தேன்.

பாட்டியே தன்னைத் தேற்றிக்கொண்டு,
“பழனியாண்டவன் புண்ணியத்துல இங்கதான் 15 வருஷமா சூடம் விக்கிறேன். எனக்கு இப்ப அவன் மட்டும்தான் துணை. கவர்மென்டுலேருந்து மாசம் ஆயிரம் ரூபாவும், 4 கிலோ அரிசியும் கொடுக்குறாங்க. அதை வெச்சுத்தான் கஞ்சி குடிச்சிகிட்டு இருக்கேன்.

 இந்தத் தள்ளாத வயசுல என்னால வேற எந்த வேல செய்யமுடியும் சொல்லு? போற வாறவங்க ஏதும் சூடம் வாங்குனா அதுல நாலனா எட்டனா கிடைக்கும். அவ்வளவுதான் என் வருமானம்.

 திருவிழா சமயம் வியாபாரம் நல்லா இருக்கும். ஆனா, எனக்கு கூட்டத்தைப் பாத்தாலே, எங்கயாவது விழுந்துடுவோமோனு பயம். ஒருவேளை விழுந்து, கை கால் ஒடஞ்சிட்டா, பாத்துக்க யார் இருக்காங்க? இந்த வயசுல யாருக்கும் பாரமா இருக்கக் கூடாது. ஆனாலும், வேற வழியில்லாமதான் கூட்டத்துலயும் போயி சூடம் விப்பேன். யாருக்கும் பாரமா இல்லாம செத்துப் போயிரணும் சாமி. நம்மால ஒருத்தருக்கும் சிரமம் இருக்கக் கூடாது” என்றார் விம்மிய குரலில்.

“சில சமயம், யார் கிட்டவாவது போய் சும்மா காசு கேக்கலாம்னு தோணும். ஆனா, பிச்சை எடுக்க கை வராது சாமி. கால் வயிறு கஞ்சி குடிச்சாலும் பரவாயில்லை. பட்டினி கிடந்தாலும் பிச்சை எடுக்கக் கூடாது சாமி” என்று உறுதியான குரலில் சொன்னவர், “எனக்கு ஒரே ஒரு ஆசைதான் சாமி.

 நான் அனாதைப் பொணமா போய்டக் கூடாது. அவ்வளவுதான்" என்று உடைகிறார். அவரின் கைகளைப் பற்றிக்கொண்டு, "இப்ப எதுக்குப் பாட்டி அந்தப் பேச்செல்லாம்?" என்றேன். அவர் சிரித்துக்கொண்டு வாஞ்சையாய் கைகளைத் தடவிக்கொடுக்கிறார்.
“சரி பாட்டி நான் போயிட்டு வர்றேன். தவறா எடுத்துக்கலைன்னா,

 செலவுக்கு வெச்சுக்குங்க” என்று பையிலிருந்து ரூபாய் நோட்டை நீட்டியதும், பிடிவாதமாய் மறுத்து, ''ம்ஹூம். சூடம் வேணும்னா வாங்கிக்க" என்கிறார். 'சரி, கொடுங்க பாட்டி" என்று சூடம் வாங்கிக்கொண்டு புறப்பட்ட என்னிடம், "இங்க மறுபடியும் வருவியா சாமி? உன்னைப் பார்க்க முடியுமா?" என்கிறார் வெள்ளந்தியான சிரிப்போடு. ''நிச்சயம் வருவேன் பாட்டி" என்று நகர்ந்தேன். "பார்த்து பத்திரமா போயிட்டு வா, சாமி" என்று விடைகொடுத்தார் பழனியம்மா பாட்டி.

பழநி மலைக்குச் செல்லும்போது, உங்களது பார்வையில் பழனியம்மா பாட்டி தென்பட்டால், அன்பாகச் சில வார்த்தைகள் பேசுங்கள். பதிலுக்கு பழனியம்மா பாட்டி, அன்பு ததும்பும் சிரிப்பைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

தலைவணங்குகிறேன்  தாயே...

பாஜக கூட்டணிக்கா உங்கள் ஓட்டு... சிந்தித்து செயல்படு தமிழினமே...


சென்னை புளியந்தோப்பில் குடிசைவாசிகள் அகற்றம்...


சென்னையின் பாரம்பரியங்களில் ஒன்று மெட்ராஸ் புளியந்தோப்பு. 1920 களில் புகழ்பெற்ற பி அன்டு சி மில் கலவரத்தில் சாதி இந்துக்களால் கொளுத்தப்பட்ட குடிசைகளின் தொடர்ச்சியாய் இன்றும் வாழ்ந்து வரும் மக்கள். சூதுவாதின்றி சென்னையின் புறம்போக்கு நிலங்களை தென்மாவட்டத்துக் காரர்களிடமும் வடநாட்டவர்களிடமும் இழந்து நிற்கும் அப்பாவிகள்.

இன்று காலை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி போலிஸ் துணையோடு குடிசைகளை இடித்து அகற்றி மக்களை நடுத்தெருவில் விட்டுவிட்டார்கள். சேதி தெரிந்து இப்போது தான் அந்தப்பக்கம் போனேன் எல்லாம் முடிந்திருந்தது. சாலையில் பொருள்களோடு மக்கள் யாருக்கோ காத்திருக்கிறார்கள்.

மதியம் எழுச்சித் தலைவர் டாக்டர்.திருமா அவர்கள் வந்து மக்களைப் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டுப் போனார். மாற்று ஏற்பாடுகள் குறித்து அரசிடம் பேசினார் என்று மக்கள் சொன்னார்கள்.

ஆனால், கருணையற்ற சாதி வெறிபிடித்த அரசுகளிடம் தொடர்ந்து சிக்கிக் கொண்டவர்களில் இந்த மெட்ராஸ் குடிசைவாசிகளே தொடர்ந்து முன்னணியில் இருக்கிறார்கள். தமக்கான அரசை தேர்ந்தெடுக்கத் தெரியாதவர்கள் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும் என்பதற்கு இம்மக்களும் ஒரு சாட்சி...

எங்கே போயின 794 MBBS இடங்கள்? அவற்றை விற்றபணம் யாருக்குப் போனது?



சாரதா சட்டம் போல அனிதா சட்டம் வந்து நீட் தேர்வு நிறுத்தப்படாதவரை இந்த கொள்ளை தொடரவே செய்யும்.

நன்றி: பழூரான் விக்னேஷ் ஆனந்த்

தமிழகத்தில் நடந்த நீட் தேர்வு ஊழல் :

படம் ஒன்று :

தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகளின் சேர்க்கை பட்டியல்  : 
மொத்த இடங்கள் : 2900

படம் இரண்டு :

பள்ளிகள் மற்றும் பாடமத்திட்டத்தின் அடிப்படையில்  2018 -2019  தமிழ்நாடு  மருந்துவ மாணவர்கள் சேர்க்கை பட்டியல்...

1277 ( 2017- 18) கல்வி ஆண்டு பயின்ற மாணவர்கள்

611 (CBSE)

04 (அரசாங்க பள்ளிகள்)

03 (அரசாங்கம் உதவி பெறும் பள்ளிகள் )

20 ( தனியார் பள்ளி மாணவர்கள்) 

191 (தமிழ்நாடு இருப்பிட சான்றுதழ் தந்து வேறு மாநிலங்களில் படித்த மாணவர் எண்ணிக்கை )

மொத்தம்  = 2106

படம் 1 : தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகளின் சேர்க்கை பட்டியல்  :   2900

படம் 2 : பள்ளி , பாடதிட்டம் வாயிலாக பெற்ற RTI யின் அடிப்படையில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர் எண்ணிக்கை : 2107

படம் ஒன்றிர்க்கும் இரண்டிர்க்கும் உள்ள வித்தியாசம் - 794.

யார் அந்த 793 மாணவர்கள் எப்படி அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் பெற்றது ???

படம் 3 : மருத்துவ கல்லூரி கலந்தாய்வில் போலி இருப்பிட சான்றுகள் தந்த மாணவர்கள் எண்ணிக்கை 9.

இப்போது அந்த 793 மாணவர்கள் யார் என்று ,நீதிபதிகள், கல்வியாளர்கள் பதில் தருவார்களா?

794 சீட்..  எங்கே ?