27/10/2018

வேளாண் மண்டலங்களை ஹைட்ரோ கார்பன் மண்டலங்களாக அறிவித்த மத்திய அரசு...


குமுறிய விவசாயிகள். கண்டு கொள்ளாத திமுக, அதிமுக கொள்ளை கும்பல்கள்.

ஆதரவு கரம் நீட்டி காப்பாற்ற ஓடிவந்த மருத்துவர் அன்புமணி ராமதாஸ்.

ரட்சிக்க வந்தவருக்கு தோளோடு தோள் நிற்க தயாரான டெல்டா விவசாயிகள். திணறும் பினாமி அரசு...

சீமான் தமிழரா..?


குங்குமப் பூவின் மருத்துவக் குணங்கள்...


தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகிய வியாதிகளுக்கு குங்குமப் பூ அரிய மருந்தாகும்..

குங்குமப் பூவை 1 பங்கு எடுத்து, அதை 80 பங்கு தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி, அதில் 30 மிலி அளவு காலை, மாலை இருவேளை அருந்தி வர தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகியவை நீங்கும்.

குங்குமப் பூவுடன் தேன் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டு வர ஆஸ்துமா முதலிய சுவாச நோய்களை போக்கி சுவாசத்தை எளிதாக்கும்.

அம்மை நோய் கண்டவுடன் துளசி இலைகளையும், குங்குமப்பூவையும் சேர்த்து அரைத்து உட்கொள்ள கொடுக்க அம்மை நோய் குணமாகும்...

பிரம்மத்தை நோக்கி - 3...


நமது மூலம் என்ன? நாம் நமது தாய் தந்தை வழியே இணைய பெற்று இங்கு வந்துள்ளோம்.

தாய் தந்தையின் விந்தணுவில் உள்ள 46 குரோமோசோம்களும் இணைந்து வந்துள்ளோம்.

தாயின் மரபணுவில் உள்ள 23 குரோமோசோம்களும், தந்தையின் மரபணுவில் வந்த 23 குரோமோசோம்களும் இணைந்து ஒரு செல் உருவாகி, தாயின் கருவில் வளர்ந்து நாம் இங்கு வந்துள்ளோம்.

சரி தாய் தந்தையின் மூலம் என்ன?

நமது தாய் உருவாக இரண்டு பேர் காரணம், அவளது தாய் மற்றும் தந்தை, நம் தந்தை உருவாக இரண்டு பேர் காரணம், அவனது தாய் மற்றும் தந்தை.

ஆக நான்கு பேர்கள். அந்த நான்கு பேர்களின் தாய் தந்தையென எட்டு பேர்கள். இப்படி 2-4-8-16-32-64-128-256-512-1024.

இந்த பெருகி வரும் நம் முன்னோர் சந்ததி இரு வேறு புறத்திலும் விரி வடைகிறது.

ஆக, நாம் என்னவோ முப்பாட்டன் பாட்டன் அப்பன் பிறகு நான் எனக்கு அடுத்து என் மகன் என இந்த மரபு தந்தையின் மூலம் ஒரே வழியாக நேரடியாக வரும் மரபு என நினைத்து கொண்டு இருக்கிறோம்.

அது தவறு, அது நேரடியான மரபு அல்ல. உன் முன்னோர்கள் என சொன்னால் அது ஒரு நதியின் நீரோட்டமல்ல. அந்த நதி தாய் தந்தை என இரண்டு கிளைகளாக பிரிகிறது. இன்னும் கொஞ்சம் முன்னே பார்த்தால் அந்த இரண்டுக்கும் நான்கு கிளைகள்.

இப்படி ஒவ்வொரு கிளைக்கும் மொத்தம் 1024 கிளைகள் பிரிந்து செல்கிறது. நம் உயிரானது இந்த கிளைகள் ஒன்றை ஒன்று சந்திக்கும் இடத்தில் உருவாகிறது.

ஆம் நம் மூலம் ஒருவழிப் பாதை அல்ல. இருவேறு வழிப்பாதை. நமது இடப்புற பாதையிலும் வலப்புற பாதையிலும் இருவேறு உலகங்கள் அகண்டு விரிந்து பரவுகிறது.

பிரம்மத்தை நோக்கிய பயணம் தொடரும்....

மூலிகைச் சாறுகள்....


கண் நோய்களை தடுக்கும் பொன்னாங்கண்ணிச் சாறு...

முன்னோர்கள் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் தெளிவாக பாடியுள்ளனர். இந்த மூலிகைச் சாறுகளின் பயன்களை பார்ப்போமா....?

எலுமிச்சை சாறு..

எலுமிச்சை சாற்றை அருந்தினால் பித்த மயக்கம், வாந்தி, கண்ணோய், இரத்த சோகையால் ஏற்பட்ட சோர்வு முதலியவை நீங்கும்.

உடலுக்கு புத்துணர்வை தரும். நன்கு பசியைத் தூண்டும். தாகத்தைத் தணிக்கும். எலுமிச்சம் சாற்றை தலையில் தேய்த்து குளித்து வந்தால் மனநோய், மன அழுத்தம் நீங்கும். உடலில் தேய்த்து குளித்தால் தோல் சம்பந்தப்பட்ட சில வியாதிகள் குணமடையும்.

நகச்சுற்றுக்கு இதன் சாறே சிறந்த மருந்து. யானைக்கால் வியாதி, கண்ணோய், காதுவலிக்கும் எலுமிச்சை சாறு சிறந்த மருந்து.

இஞ்சி சாறு..

நம் முன்னோர்கள் காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என்றார்கள். இம்மூன்றையும் தினமும் உட்கொண்டால் நோய் என்பதே நம்மை நெருங்காது.

இஞ்சியை சாறு எடுத்து சிறிதளவு தினமும் அருந்தினால் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், வாந்தி, குடல்நோய், பித்த மயக்கம், போன்றவை நீங்கும். நீரிழிவு நோயாளிகளுக்கும் இது உற்ற மருந்தாகும். மேலும் தொண்டைப்புண், குரல் கம்மல், இவைகளைக் குணப்படுத்தும்.

கரிசலாங்கண்ணிச் சாறு.

கரிசலாங்கண்ணிச் சாறு ஜலதோஷம், காய்ச்சல், உடல்வலி, விஷக்கடி, சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல் போன்றவற்றை குணப்படுத்தும். இதன் சாறை காலையில் அருந்துவது நல்லது. அல்லது மதிய உணவுக்குப்பின் சூப் செய்து அருந்தலாம்.

பொன்னாங்கண்ணிச் சாறு..

பொன்னாங்கண்ணி பல வகையான தைல வர்க்கத்தில் அதிகம் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த பொன்னாங்கண்ணி கீரையை சூப் செய்து காலை மாலை இருவேளை என 15 நாட்களுக்கு அருந்தி வந்தால் கண் நோய்கள் ஏதும் அண்டாது. உடலின் வெப்பத்தைக் குறைத்து உடலுக்கு புத்துணர்வை கொடுக்கும்.

தூதுவளைச் சாறு..

வறட்டு இருமல், தொண்டைக் கட்டு, தொண்டைப்புண், அடிக்கடி ஜலதோஷம் உள்ளவர்கள் தூதுவளைச் சாறு அருந்தி வந்தால் சளித் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

அருகம்புல் சாறு..

அருகம்புல் சாறானது இரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன் உடலுக்கும் புத்துணர்வை கொடுக்கிறது. உடலில் தேங்கியுள்ள அசுத்த நீர் அனைத்தையும் வெளியேற்றுகிறது.

தண்­ணீர் விட்டான் கிழங்கு சாறு..

தண்ணீ­ர் விட்டான் கிழங்கின் சாறை எடுத்து தினமும் காலையில் அருந்தி வந்தால் உடல் சூட்டை தணித்து பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதலைத் தடுக்கும். தாது புஷ்டியை கொடுக்கும்.

பித்தம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.

வெள்ளைப் பூண்டு சாறு..

வெள்ளைப் பூண்டு சாற்றை காதில் இரண்டு சொட்டு விட்டால் காது மந்தம் குறையும். உள்நாக்கில் தடவினால் உள்நாக்கு வளர்ச்சி (டான்சில்) குறையும். மேலும் சிறிது அருந்தினால் இருமல், சுவாசம் அடைப்பு, மலக்கிருமிகள் நீங்கும். உடலின் மேல் சுளுக்கு ஏற்பட்ட பகுதிகளிலும் தடவலாம்.

வெற்றிலைச் சாறு..

வாத பித்த கபத்தினை அதனதன் நிலையில் சமப்படுத்த வெற்றிலைச் சாறு சிறந்த மருந்தாகும். சளியைப் போக்கும். காணாக்கடிகளுக்கு இதன் சாறு சிறந்த மருந்து. அஜீரணத்தைப் போக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும்.

வேலிப்பருத்தி சாறு..

சுவாசம், காச நோய்களுக்கு சிறந்த மருந்தாகும். கருப்பையிலுண்டாகும் பக்க சூலைக்கு இதன் சாறு தேன் கலந்து கொடுத்தால் பக்க சூலை நீங்கும். கை கால் வீக்கங்களுக்கு மேல் பூச்சாகத் தடவலாம்..

இலுமினாட்டி - லூசிஃபர் Vs இப்லீஸ்?


இலுமினாட்டிகளைப் பற்றி தெரிந்த அனைவருக்கும் லூசிஃபர் என்ற வார்த்தையும் தெரிந்திருக்கும். இவன் தான் இலுமினாட்டிகளின் தலைவன், இவனைத் தான் இலுமினாட்டிகள் தங்களது கடவுளாக நினைத்து வணங்கி வருகின்றனர். இதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றே நம்புகிறேன்.

ஆனால் யார் இந்த லூசிஃபர்? என்பதில் நம்மில் பலர் அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்கள் தவறான ஒரு புரிதலில் தான் இருக்கிறோம் என்றே நினைக்கிறேன்.

நம்மில் சிலர் தஜ்ஜால் தான் லூசிஃபர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் சிலர் இஸ்லாம் யாரை இப்லீஸ் என்ற பெயர் கொண்டு அழைக்கிறதோ அந்த ஒரு(ஜின்)வன் தான் லூசிஃபர் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம்.

கிருஸ்துவமும் கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு நம்பிக்கையில் தான் இருக்கிறது. உண்மையில் யார் இந்த லூசிஃபர்? மத ரீதியான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட எனது ஆய்வை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

லூசிஃபர்..

ஒளியைக் கொண்டு வந்தவன், அவன் கொண்டு வந்த ஒளியை பெற்றுக் கொண்டவர்களை (இலுமினாட்டிகள்-ஒளியை பெற்றுக் கொண்டவர்கள்) வைத்து தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள அவர்களை வழி நடத்திக் கொண்டிருக்கும் ஒருவன். இவன் மனித இனத்தைச் சேர்ந்தவனல்ல. மேற்கத்தியர்கள் இவனை வேற்றுகிரகவாசி என்கின்றனர். உண்மை தான் இவனது இனம் வேற்று கிரகங்களில் வசித்துக் கொண்டு தான் இருக்கிறது.

இந்திய மரபு வழிப்புராணங்கள் இவனது இனத்தை இராக்ஷசர்கள் என்ற பெயர் கொண்டு அழைக்கிறது. இஸ்லாம் இவனது இனத்திற்கு ஜின் என்று பெயர் வைத்திருக்கிறது. இந்த மூன்று பெயர்களும் ஒரே இனத்தைத்தான் குறிக்கின்றன.

லூசிஃபர் மனித இனத்தைச் சேர்ந்தவன் இல்லை என்பதால் மனித இனத்தை சேர்ந்தவனான தஜ்ஜால் தான் லூசிஃபர் என்று சொல்வது முறையாகாது. ஆனால் இப்லீஸும் ஜின் இனத்தை சேர்ந்தவன் தான் எனும் போது லூசிஃபரும் இப்லீஸும் ஒரே ஜின்னாக இருக்கலாம் என்ற எண்ணம் வருவது இயல்புதான். உண்மையில் இவர்கள் இருவரும் ஒருவர் தானா? என்பது பற்றி தெளிவாகப் பார்க்கலாம்.

கர்வம் கொண்ட மூடன்..

இஸ்லாமியர்களின் வேத நூலான திருகுர்ஆனில் பல இடங்களில் இப்லீஸ் கர்வம் கொண்டதாக வருகிறது. மேலும் அவன் இறைவனைப் பற்றி பொய்யான தகவல்களை பரப்பிக் கொண்டிருக்கிறான் என்றும் வருகிறது.

இந்த குறிப்புகளை மேலோட்டமாக வைத்தே இஸ்லாமியர்களில் சிலர் இப்லீஸ் தான் லூசிஃபர் என்று உறுதியாக நம்புகின்றனர். ஆனால் லூசிஃபர் கர்வம் கொண்டதற்கான காரணம், அவன் பரப்பிய பொய், நோக்கம் மற்றும் இலக்கு இவற்றை இப்லீஸோடு சற்று ஆழமாக ஒப்பிட்டுப் பார்க்கும் போது. இருவரும் வேறுவேறான இரு ஜின்கள் என்பது விளங்கும்.

லூசிஃபர்..

ஜின்களின் குறிப்பிட்ட சில இனத்தவர்களிடம் மனிதர்கள் அதிலும் குறிப்பாக அரசர்கள் பாதுகாப்பு தேடிக் கொண்டிருந்தனர். பண்டைய இந்தியா, எகிப்து, கிரேக்க நாகரீகங்கள் பற்றிய குறிப்புகளில் அதற்கு ஆதாரம் இருக்கிறது. இவ்வாறாக தானும் தனது குடும்பமும் தான் மனிதர்களுக்கும் மன்னர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கிறோம் என்று எண்ணி அதன் மூலம் கர்வம் கொண்டவன் இந்த லூசிஃபர். இதைத் தான் திருகுர்ஆன் அத்தியாயம் 72 வசனம் 6ல் குறிப்பிடுகிறது. இவனது கர்வம் மனிதர்கள் பூமிக்கு வந்து வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் ஏற்பட்டது.

ஆனால் இப்லீஸ் தனக்கு வழங்கப்பட்ட பதவி, தனது உடல் அமைப்பு, ஆற்றல் மற்றும் அது சார்ந்த இயல்பு இவைகளினால் கர்வம் கொண்டான். மேலும் இவன் மனிதர்கள் பூமிக்கு வருவதற்கு முன்பே கர்வம் கொண்டு விட்டான். எனவே திருகுர்ஆன் அத்தியாயம் 72 வசனம் 6ல் குறிப்பிடப்படுவது இவனைப் பற்றி அல்ல என்பது தெளிவாக நமக்கு விளங்குகிறது.

அதேபோல், லூசிஃபரும் இறைவனைப் பற்றிய பொய்யை ஜின்களுக்கு மத்தியில் பரப்பிக் கொண்டிருந்தான். இறைவனுக்கு குழந்தைகள் இருப்பதாகவும், இறந்த யாரையும் அவன் உயிர்ப்பிக்க மாட்டான் என்றும், பூமியில் உள்ளவர்களைக் கொண்டு (அதாவது மனிதர்களைக் கொண்டு) இறைவனை வெல்ல முடியும் என்றும் அவன் ஜின்களிடம் சொல்லிக் கொண்டிருந்ததாக திருகுர்ஆன் அத்தியாயம் 72 வசனம் 3, 4, 7 மற்றும் 12 சொல்கிறது.

இந்த வசனங்கள் இப்லீஸைத் தான் குறிக்கிறது என்றே பலர் கருதுகின்றனர். ஆனால் இது இப்லீஸ் அல்லாத வேறு ஒரு ஜின்னையே குறிக்கிறது.

திருகுர்ஆன் அத்தியாயம் 72 வசனம் 5ல் ஜின்கள் இறைவனைப் பற்றி பொய் சொல்ல மாட்டார்கள் என்று எண்ணியதால் அந்த மூடன் சொன்னதை நம்பியதாக மற்றொரு ஜின் சொல்கிறது. மனிதனுக்கு கட்டுப்பட மறுத்த அந்த கணமே இறைவன் இப்லீஸை சபித்து உன்னையும் உன்னை பின்பற்றும் மனித மற்றும் ஜின்களையும் போட்டு நரகத்தை நிரப்புவேன் என்று கூறிவிட்டு பிறகு ஒரு ஜின் அதுவும் முந்திய வேதங்களைப் பற்றிய அறிவுள்ள ஒரு ஜின் எப்படி ஜின்கள் இறைவனைப் பற்றி பொய் சொல்லாது என்ற அடிப்படையில் அந்த மூடன் சொன்னதை நம்பியிருக்கும்.

இப்லீஸ் ஒரு பக்கம் இறைவனைப் பற்றி பொய்யை பரப்பிக் கொண்டிருந்தான் அவன் யார், அவனது நோக்கம் என்ன என்பது பற்றிய விஷயங்கள் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக இருந்தது.

எனவே தான் இப்லீஸும் அவனது பிள்ளைகளான ஷைத்தான்களும் தவிர மற்ற ஜின்கள் யாரும் இறைவனைப் பற்றி பொய் சொல்லமாட்டார்கள் என்று ஜின்கள் எண்ணிக் கொண்டிருந்தன. இதன் அடிப்படையிலேயே அந்த மூடன் சொன்னதை இந்த ஜின்கள் நம்பின எனில், எந்த மூடனான ஜின் இப்லீஸ் தான் என்று எப்படி சொல்ல முடியும்? அந்த வசனம் இப்லீஸ் அல்லாத மற்றோரு கர்வம் கொண்ட மூடனான லூசிஃபரை தான் குறிக்கிறது.

கர்வம் கொண்டதற்கான காரணம் மற்றும் காலம், பொய் நம்பப்பட்டதற்கான காரணம் இவற்றின் அடிப்படையில் லூசிஃபர் மற்றும் இப்லீஸ் இருவரும் வேறுவேறான இரு ஜின்கள் தான் என்பது தெளிவாகிறது.

நோக்கம்..

இவர்களின் வேறுவேறான இலக்கு மற்றும் நோக்கங்களைப் பற்றி ஆராய்வதன் மூலம் இவர்கள் வேறுவேறான இருவர் தான் என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் உணர முடியும்.

லூசிஃபர்..

மிக முக்கியமாக இவன் மனிதர்களை உயிரோடு வைத்து (அடிமையாக்கி) ஆளவேண்டும் என்று நினைக்கிறான். இவனது இலக்கு மனிதனல்ல. பூமியில் இறைவனை வெல்ல முடியும் என்ற எண்ணத்தில் அவனை வெல்வதையே தனது இலக்காக ஆக்கிக் கொண்டிருக்கிறான். இவனது இலக்கும் நோக்கமும் இவனுக்கு ஏற்பட்ட கர்வத்தை மையமாகவும் அடிப்படையாகவும் கொண்டது. தன்னை எதிர்க்கின்ற மனிதர்களை தவிர மற்ற மனிதர்களை இவன் வெறுக்கவில்லை.

மேலும் இலுமினாட்டிகளை இவன் நேசிக்கத்தான் செய்கிறான்.nதன்னை ஆதரிப்பவர்கள் நலம் நாடுகிறான். தன்னை எதிர்க்கின்ற மனிதர்களை முழுமையாக அழித்து விட்டு தனது ஆதரவாளர்களான மனிதர்களுக்கு பூமியில் சுகபோக வாழ்வை கொடுக்க வேண்டும் என்பது இவனது நோக்கங்களில் ஒன்று. வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் தனது ஆதரவாளர்களுக்கு தான் அளித்த வாக்கை முழுமையாக நிறைவேற்றுவான்.

இப்லீஸ்..

மனிதர்களை நரகத்தில் போட்டு அழிக்க துடிக்கிறான். மனிதர்கள் தான் அவனது எதிரிகளும் இலக்கும். தன்னை எதிர்ப்பவர்கள், தனது ஆதரவாளர்கள் என அனைத்து மனிதர்களையும் ஒட்டு மொத்தமாக வெறுக்கிறான். இவனின் ஒரே நோக்கம் முழு மனித இனத்தின் சர்வ நாசம். இவனது நோக்கமும் இலக்கும் மனித இனத்தின் மீது அவனுக்கு ஏற்பட்ட கோபத்தை மையமாகவும் அடிப்படையாகவும் கொண்டது. தனக்கு ஆதரவளிக்கும் மனிதனாக இருந்தாலும் அவனும் நரகத்தில் சென்று அழிய வேண்டும் என்பதே இவனது ஒரே விருப்பம், எனவே வாய்ப்பு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் இவன் தனது ஆதரவாளர்களுக்கு அளித்த வாக்குறுதியை துளியும் நிறைவேற்ற மாட்டான். மனிதர்கள் மரணித்து நரகம் செல்லத் தேவையான அனைத்து சூழல்களையும்  உருவாக்கவே முயல்வான்.

இதுவே லூசிஃபரும் இப்லீஸும் வேறுவேறான இருவர் என்பதற்கு நான் தரும் ஆதாரம். அதேபோல் கிருஸ்துவ மத நூல்களிலும் லூசிஃபர் என்ற வார்த்தை சாத்தானைக் குறிக்க கையாளப்படவில்லை. இதன் அடிப்படையில் லூசிஃபர், இப்லீஸ் இந்த இரண்டு பெயர்களும் ஒரே ஜின்னை குறிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

லூசிஃபர் இப்லீஸ் இல்லை என்பதால் அவன் நல்லவன் என்று சொல்வதோ அல்லது உண்மையில் அவன் மனித குலத்திற்கான ஒளியைக் கொண்டு வந்தவன் தான் என்று சொல்வதோ இந்த பதிவின் நோக்கம் அல்ல.

அதேபோல் லூசிஃபரும் இப்லீஸும் நீண்ட காலமாகவே இணைத்து தான் செயல்பாட்டுக் கொண்டிருக்கிறார்கள், என்பதையும் மறுப்பதற்கில்லை.

உண்மையில் லூசிஃபர் ஒரு மூடன். எதிராளியின் முழு பலம் என்ன என்பதை உணரமுடியாத அளவிற்கு கர்வம் தலைக்கு ஏறிய கிறுக்கன். இறைவனின் கட்டளைகளை மீறுவதாலும், உண்மையான இறைவனை விட்டுவிட்டு லூசிஃபரை இறைவனாக நினைப்பதாலும் இவனின் ஆதரவாளர்களை இறைவன் வெறுக்கிறான்.

நடக்கவிருக்கும் இறுதிப்போரில் இவர்கள் வெற்றி பெறப் போவதில்லை என்பதாலும், யாராலும் எதிர்கொள்ள முடியாத சூர்(எக்காளம்) லூசிஃபரின் உயிரை பறிக்கும் என்பதாலும் இறுதி வரை இவனுக்கும் இவனது அடிமைகளுக்கும் வெற்றி கிடைக்க போவதில்லை என்பதாலும், முடிவில் இவனுக்கும் இவனது மனித ஜின் அடிமைகளுக்கும் இழிவுபடுத்தும் வேதனை காத்திருக்கிறது என்பதாலும் நாம் இவர்களைக் கண்டு அஞ்சவோ, இவர்களுக்குப்பின் செல்லவோ அவசியமில்லை.

இறைவன் நாடினால் நாம் தான் வெற்றியடைவோம் என்பது இன்றும் என்றும் இலுமினாட்டிகளால் ஏற்றுக்கொள்ள (ஜீரணிக்க) முடியாத உண்மை...

தகவல் - முஸ்தபா...

பசுமைத் தேநீர்...


நோய்களிலிருந்து காப்பாற்றும் பசுமைத் தேநீர் (க்ரீன் டீ)...

பொதுவாகவே டீ வகைகளில் க்ரீன் டீ, சி டி சி (ctc) டீ என்று இருவகைகள் பயன்பாட்டில் உள்ளது. நாம் பெரும்பாலும் பயன் படுத்திக்கொண்டு இருப்பது சி டி சி தேநீரைத்தான்.

ஆனால் சீன மக்களிடையே தொன்று தொட்டு பாரம்பரியமாக தொடர்ந்து வருவது பசுமைத் தேநீர் (க்ரீன் டீ) ஆகும். அதன் மருத்துவ குணத்தால், இப்போது உலகளவில் பிரசித்தி பெற்றுவருகிறது..

சி.டி.சி. தேநீர். (C.T.C Tea) என்பது என்ன?

(Cut turn and crush tea ஐ தான் CTC Tea என்கிறார்கள். இது பதப்படுத்தப் பட்ட டீ. இதுதான் நாம் அன்றாடம் குடித்து பழகி வரும் டீ.

பசுமைத் தேநீர் (க்ரீன் டீ) என்பது என்ன?

பயோகெமிக்கல் முறையில் நிழலில் உலர்த்தி பதப் படுத்தப் படும் தேயிலைதான் க்ரீன் டீ.

க்ரீன் டீக்கு எதனால் இந்த மகத்துவம்?

கேட்சின் கொலிபெனல்ஸ் (Catechin Colyphenols ) தான் க்ரீன் டீயில் பிரதான விஷயம். அதாவது பவர்புல் ஆண்டி ஆக்சிடன்ட்ஸ் எனப்படும் மிகச் சிறந்த நோயெதிர்ப்பு சக்தி இந்த டீயில் குவிந்து கிடக்கிறது என்பதுதான் இதில் ஹைலைட்!

கேன்சருக்கு மிக நல்லது..

பொதுவாகவே கேன்சர் ட்ரீட்மென்ட் என்றால் ரேடியேசன் தெரபிதான் மெயின். இந்த ரேடியேசன் கதிர்வீச்சு கேன்சர் செல்களை மட்டுமின்றி கூடவே நல்ல செல்களையும் கொல்கிறது.

ஆனால் இந்த க்ரீன் கேன்சர் செல்களை மட்டுமே கொல்கிறது. காரணம் இதன் கேட்சின் கொலிபெனல்ஸ் தான். என்றாலும் கேன்சருக்கான உடனடி ட்ரீட்மென்ட் ஆக மருத்துவர்கள் க்ரீன் டீயைப் பரிந்துரைப்பதில்லை.

காரணம் கேன்சரின் ஆரம்ப அறிகுறியிலிருந்து நீண்ட நெடும் காலம் தொடரவேண்டிய வழிமுறை இது என்பதால்தான்.

சீன மக்களின் ஆரோக்கிய ரகசியம்..

காலம் காலமாக சீன மக்கள் விரும்பி குடிக்கும் டீ இந்த க்ரீன் டீ. சீனர்கள் பன்றி இறைச்சி சாப்பிடுபவர்கள். கொசுறு கொசுறாக சாப்பாட்டை அடிக்கடி சாப்பிடுபவர்கள். எனவே இவர்கள் உணவு முறையில் கெட்ட கொழுப்பு சேரும் அபாயம் கண்டிப்பாக இருக்கிறது.

ஆனால் சீனர்கள் தினமும் அடிக்கடி க்ரீன் டீ பருகும் பழக்கம் இருப்பதால் இந்த க்ரீன் டீ கெட்ட கொழுப்பை உடலில் சேரவிடாமல் தடுக்கிறது.

ரத்த நாளங்களின் அடைப்பை நீக்கும்..

பொதுவாகவே நாம் சாப்பிடும் சமோசா, பீட்சா, வடை, சிக்கன் 65 போன்ற எண்ணெய் பலகாரங்களாலும், அதிக ஸ்வீட் சாப்பிடுவதனாலும் உண்டாகும் கெட்ட கொழுப்பினால், ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும். இதனால் உயர் இரத்த அழுத்தம் உண்டாகும். இது மாரடைப்பு (Heart Attack) வரை கூட கொண்டு போய் விட்டுவிடும்.

இப்படிப்பட்ட ரத்த நாளங்களின் அடைப்பைப் போக்கி நார்மல் நிலைக்கு கொண்டுவரும் பணியை செய்கிறது இந்த க்ரீன் டீ.

தொடர்ந்து க்ரீன் டீ பருகி வந்தால் மூட்டு பிரச்சனைகள், ரத்தகொதிப்பு, இதய நோய்கள் போன்ற நோய்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்து நாளடைவில் காணாமல் போகின்றன.

சளி, ஜுரம் வராது..

அன்றாடம் காற்றில் நிறைந்துள்ள சின்ன சின்ன தொற்றுக் கிருமிகளால் நமக்கு சளி ஜுரம் உண்டாகிறது. இந்த நோய்களைத் தோற்றுவிக்கும் கிருமிகளைக் கூடக் கொல்கிறது க்ரீன் டீ தரும் எதிர்ப்பு சக்தி.

உடல் நடுக்கம் குறையும்..

சிலருக்கு உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து போவதால் உடல்நடுக்கம் இருக்கும். நல்ல செல்களை உருவாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதன் மூலம் உடல் நடுக்கத்தைப் போக்குகிறது க்ரீன் டீ.

உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்...

க்ரீன் டீயைப் பருகுவதால் Fat Oxddations Themnogenesis எனும் குறிப்பிட்ட சிஸ்டம் மூலம் உடலில் சேர்ந்துள்ள கலோரிகள் உடனடியாக எரிக்கப் படுகிறது.

எனவேதான் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி க்ரீன் டீ சாப்பிடவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

சீன மக்களின் உணவுப் பழக்கப் படி அவர்கள் உடல் எடை அதிகமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஸ்லிமாக இருப்பதற்கு அவர்கள் அடிக்கடிப் பருகும் க்ரீன் டீ தான் காரணம்.

சர்க்கரை நோய்க்கு நல்லது...

நல்ல டயட், உடற்பயிற்சி, மன அழுத்தமின்மை போன்றவற்றோடு, அன்றாடம் க்ரீன் டீ பருகி வந்தால் சர்க்கரை நல்ல கட்டுப்பாட்டில் இருக்கும். காரணம் எந்த உணவும் செரிமானத்துக்குப் பின் குளுகோஸ் ஆக மாறி ரத்தத்தில் சேராத படி க்ரீன் டீ தடுக்கிறது.

செரிமான சக்தியை அதிகரிக்கும்...

என்னதான் சாப்பாட்டில் மசாலா, அஜினமோட்டோ, போன்ற ஜீரண சக்தி பொருட்களை சேர்த்திருந்தாலும் உணவுக்கு பின் க்ரீன் டீ பருகுவதற்கு நிகர் வேறெதுவும் இல்லை. ஜீரண சக்தியை அந்த அளவுக்கு தூண்டிவிடும், மேலும் உடனடியாக கெட்ட கொழுப்பையும் நீக்கும்.

பருகும் முறை...

1 டம்ளர் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும். (2 - 3 நிமிடங்கள்) அடுப்பை நிறுத்தவும். 1/2 ஸ்பூன் டீத்தூள் போடவும். 3 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

அவ்வளவுதான். க்ரீன் டீ ரெடி.. குடிக்கலாம்.

குறிப்பு...

Green Tea யில் நிறம், சுவை கிடயாது. Lite green colour ல தான் இருக்கும்.

அதிக நேரம் அடுப்பில் கொதிக்க வைத்தால் தான் கசக்கும். அது உடம்புக்கு கெடுதல்.

அடுப்பை ஆப் செய்து விட்டு தான் இலைகளை போட வேண்டும்.

அதிக நேரம் தண்ணீரில் போட்டு வைத்தால் தான் Dark colour ல இருக்கும். அது உடம்புக்கு கெடுதல்.

இதையே 3 முறை பயன்படுத்தலாம்..

முதல் முறை போடுவதை பெரியவங்களுக்கு (ஸுகர், பிரசர் இருக்குறவங்க) குடுக்கலாம். 2nd, 3rd முறை போடுவதை ஸுகர், பிரசர் இல்லாதவங்க குடிக்கலாம்...

கடும் வயிற்றுவலி...


கடும் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு என்றாலும் ஐந்து பூண்டு பற்களை பாலில் தட்டிப்பொட்டு கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் அருந்த சரியாகும்...

சித்தராவது எப்படி - 25...


முன் நின்று சாதித்தல், உடன் இருந்து சாதித்தல்..

இதுவரை முன் நின்று சாதிக்கும் முயற்சியில் அனைத்து மதங்களும் முயன்று முயன்று தோற்றுப் போய் விட்டன.. இதுவரை எந்த பலனையும் அப்படி ஒன்றும் பெரிதாக எதையும் பெற முடியவில்லை..

முன் நின்று சாதிக்கும் முயற்சியில் தோற்றுப்போய் சோர்ந்து விழுந்து விட்டு பின் தன்னை அறியாமல் தானே உடன் இருக்கும் முறைக்கு மாறியதால் பெருத்த பலனை அடைந்தார்கள்..

மதங்கள் எல்லாம் உச்சத்திற்கு ஒரு மிக பெரிய தோல்வி நிலைக்கு அழைத்து சென்று, அங்கு மனதை ஒடுக்கி பின் மனம் தாண்டிய நிலைக்கு அழைத்து செல்லப் படுவதால், அங்கு எண்ணியது கிடைத்தாலும், கிடைத்ததை செயல் படுத்த மனம் வலுவற்ற நிலையில், கிடைத்ததை பயன் படுத்த முடியாமல் போகிறது... இதுவும் மிக பெரிய தோல்வியே ஆகும்..

கை எட்டியது வாய்க்கு எட்டாமல் போன கதை தான்..

ஆனால் உடன் இருந்து சாதிக்கும் ஒரு அற்புத வித்தையை மனிதன் கற்றுக் கொள்ளவும் இல்லை.. அவனுக்கு கற்றுக் கொடுக்கப் படுவதும் இல்லை..

ஒவ்வொரு மனிதனும் தோல்வியின் உச்சத்திலே மட்டுமே அடையும் அந்த வித்தையை அவன் மனித குலத்திற்கு சொல்லி கொடுக்க நினைத்தாலும், அது மற்றவர்களை துளியும் கவருவதில்லை.. அவன் மிக மோசமான நிலையை ஏற்கனவே அடைந்த காரணத்தால் அவன் தோல்வி நிலையை மையப் படுத்தப் படுவதால் கவர்ச்சியை விரும்பும் மனிதர்கள் அவனுடைய சொல்லை மதிப்பதில்லை..

அது சரி அது என்ன முன் நின்று சாதித்தல் உடன் இருந்து சாதித்தல் ?

இறைவன் முன் நின்று போராடி அழுது புலம்பி கெஞ்சி கொஞ்சி கதறி முறையிட்டு தனக்கு வேண்டியதை சாதிக்கும் பக்தனை போல உலகத்தவர் ஒரு பக்கம்..

இறைநிலை என்னவென்று அறிந்து அந்த நிலையோடு உடன் பட்டு இசைந்து வாழ்ந்து, அந்த இசையால் இறை ஆற்றலை தன்னுள் உள்வாங்கி கொண்டு வல்லவன் ஆகும் மற்றொரு முறை..

இந்த உடன் இருத்தலில் அந்த இறை ஆற்றலோடு இசையும் நிலைக்கு இருப்பதால் எந்த வித பயிற்சியும் இல்லாமல் இசைதல் என்ற உன்னத நிலை மூலம் இறை ஆற்றலையெல்லாம் பெற்று இறைநிலைக்கு நிகராக தன்னை ஆக்கி கொள்வதாகும்.. சும்மா இருக்கும் சுகம் என்பது இதுவே ஆகும்..

அப்படி சும்மா இருத்தலின் மூலம் இறை நிலைக்கு இசைந்து வாழ சூழ்நிலை ஏற்படுகிறது.. சும்மா இருத்தலின் மூலம் இசைந்து இருக்க தெரிந்து இருக்க வேண்டும்.. அப்படி இசைந்து இருக்க தெரியவில்லை என்றால் பல ஆண்டுகள் சும்மா இருந்தாலும் பலன் ஒன்றும் இல்லை..

இப்படி சும்மா இருப்பதின் மூலம் மட்டுமே இசைந்து இருக்க முடியும் என்பதும் மிக தவறான கருத்து.. நெருப்பில் நடக்கும் போதும் கூட இசைந்து இருக்க முடியும்.. இதை நாம் மறக்கக் கூடாது...

செயல் பாட்டிலும் சும்மா இருக்கும் நிலையும் சாத்தியப் படும்.. இது ஒன்றுதான் நம்மவர்களுக்கு புரியாததாக உள்ளது.. அதை பின்பு பார்த்துக் கொள்ளலாம்...

இப்படி இசைந்து இருக்கும் நிலையை பெருக்குவது எது என்றால் சுவாச ஒழுங்கு மட்டுமே..

எந்த வேலை செய்தாலும் சுவாச ஒழுங்கில் இருக்கும் போது சும்மா இருக்கும் சூழ்நிலை போன்ற அமைதியும், இசைந்து இருக்கும் உன்னத நிலையும் கிடைக்கிறது...

சரி அப்படி இசைந்து இருக்க, இசைப்பது ஒன்று இருந்தால் தானே அதற்கு நாம் இசைந்து இருக்க முடியும்.. வேறு எந்த பயிற்சியிலும் இசைக்கும் ஒன்றை காணவே முடியாது..

அந்த இசைக்கும் ஒன்று உருவானால் அதை வலுவுள்ள மனம் உடனே நீக்கி விடும்.. அதற்கு முன் சுவாச ஒழுங்கில் நம்மை இசைக்க வைப்பது எது..

எது ஒன்று சுவாசத்தை இசைக்க வைக்கிறதோ அதற்கு தானே நாம் சுவாச ஒழுங்கில் இசைகின்றோம்..

சுவாச ஒழுங்கில் நாம் இசைவது சுவாசத்தை இயக்கும் இறை சக்தியின் அம்சமான உயிர் சக்தி அல்லவா ? இதை யாராலும் நீக்க முடியாது..

நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது சுவாச ஒழுங்குடன் இருப்பது இறை ஆற்றலுக்கு இயங்கி, இசைந்து, உடன் இருத்தலுக்கு இணையானது... அதனால் முன் நின்று சாதிக்கும் வழக்கமான மிக கடினமான முறையை விட்டு விலகி உடன் இருந்து பயன் அடையும் ஒரு உன்னத ஆன்ம லாபம் தரும் நிலைக்கு வருகிறோம்..

முன் நின்று சாதிக்கும் நிலையில் பல கோடி சமயவாதிகள் ஏதோ கடவுள் தனக்கு மட்டுமே சொந்தம் கொண்டாடும் ஒரு மாயை தோற்றத்தில், கடவுளை விட்டு விலகியே இருக்கிறார்கள்.. ஆனால் உடன் இருக்கும் நிலையில் ஒரு சித்தன் கடவுளை பற்றி அதிகம் பேசாமல் கடவுளை மறந்தவன் போல் இருந்தாலும், கடவுளோடு உடன் இருக்கும் உன்னத நிலையில் இருக்கிறான்.. கடவுளுடன் இணைந்து இருக்கும் போது, கடவுளை விட்டு விலகி முன் நிற்கும் அவல நிலையை சித்தர் போன்ற மகான்கள் போவதில்லை...

சத்தியமான உண்மை இதுதான்.. கடவுள் யாரையும் காப்பாற்றுவதில்லை.. துளியும் காப்பாற்றுவதில்லை..

ஆனால் வல்லமை வாய்ந்த இசைக்கப் படும் இறை ஆற்றலுக்கு இசைந்து வாழும் உயிர்களே பல் வேறு உயிர் தோற்றங்களை பெற்று வாழ முடிகிறது..

இசைந்து வாழ்வதில் குறை ஏற்படும் பொழுது மரணத்தை தழுவுகிறது...

இறை ஆற்றலுக்கு இசைவதாலே மட்டுமே அனைத்தும் நடக்கிறது..

இந்த உண்மையால் மட்டுமே உண்மையான ஆன்மீகம் வெளிப்படும்..

ஆகவே சுவாச ஒழுங்கினை இறுகப் பற்றி விரைவில் சித்தராக முனைவோமாக...

திருட்டு திராவிடம் 2.0 கலாட்டா...


மெல்லிசா தோச கேட்டது குத்தமாடா..

Blood test, urine testல சாதி பாத்தவங்க இப்ப தோசையில சாதி பாக்குறது தான் திராவிடம் 2.0 போல...

இறுதி யுத்தத்தில் முக்கிய இரு அணிகளுடன் வெளியேறிய தமிழினத் தலைவர் பிரபாகரன்...


இறுதி யுத்தத்தில் வெளியேறிய இரு படையணியும்-இறுதிவரை போரிட்டு மடிந்த ஒரு படையணியும்...

இறுதி யுத்தத்தின் இறுதி நாட்களில் புலிகளின் முக்கிய அணிகளை இலங்கை ராணுவத்தின் முற்றுகையிலிருந்து வெளியேற்றுவதற்கான திட்டங்களை புலிகளின் அதி உயர் தளபதிகள் வகுத்திருந்தனர்.

போர் முள்ளிவாய்க்காலின் நடு மையத்தை தொடுவதற்கு முன்னதாக புலிகளின் தலைவர் மேதகு.வே பிரபாகரன் உட்பட்ட சிறப்பு அதி உச்ச கடும் பயிற்சி பெற்ற போராளிகளையும் தளபதிகளையும் வெளியேற்றுவதற்கான கடும் போர் முள்ளிவாய்க்கால் மேகத்தில் சூழ்ந்து கொண்டது.

குறிப்பிட்ட மூன்று அணியையும் வெளியேற்றுவதற்கான கடும் சமர் ஆரம்பிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே ராணுவத்தினரும் புலிகளும் கடும் இழப்புக்களை எதிர் கொண்டிருந்தனர்.

ஆனால் கடும் இழப்புக்களுக்கும் மத்தியிலும் புலிகளின் கரும்புலி தாக்குதல் அணியின் பேராதரவுடன் மூன்று அணியையும் வெளியேற்றுவதற்கான புலிகளால் நடத்தப்பட்ட இறுதி தாக்குதல் புலிகளுக்கு சாதகமாக சில மணி நேரங்கள் இருந்துள்ளது.

இதை பயன்படுத்தி தலைவர் பிரபாகரன் உட்பட்ட சில முக்கிய தளபதிகள் கொண்ட இரு அணியினர் ராணுவத்தின் முற்றுகையிலிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டிருந்தனர்...

இறுதியாக களமுனையில் இருந்து காயப்பட்டு கடல் மார்க்கமாக வந்த போராளி ஒருவரின் கருத்து...

செய்தி - http://eelamalar.com/இறுதி-யுத்தத்தில்-முக்கி/

தூக்கத்தை கொடுக்கும் தூக்கு மாத்திரை...


சாத்தான்குளத்தில் சொத்து வரி ரசீது வழங்க லஞ்சம் வாங்கிய பில் கலெக்டருக்கு 2 ஆண்டு ஜெயில் தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு...


சாத்தான்குளம் செக்கடி புதுத்தெருவை சேர்ந்தவர் செல்லையா. இவருடைய மகன் மகாலிங்கம்(வயது 46). இவர் கிருஷ்ணன்கோவில் தெருவில் தனது அப்பா பெயரில் உள்ள வீட்டுக்கு 2005-06-ம் ஆண்டுக்கு உரிய சொத்து வரி செலுத்திய ரசீது பெறுவதற்காக சாத்தான்குளம் பேரூராட்சிக்கு சென்றார். அப்போது, அங்கு பில் கலெக்டராக திருமலை மகன் திருவேங்கடநாராயணன்(63) என்பவர் பணியாற்றி வந்தார். அவர் சொத்து வரி ரசீது கொடுப்பதற்கு ரூ.1,200 லஞ்சம் கேட்டு உள்ளார்.

இது குறித்து மகாலிங்கம் தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஊழல் தடுப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த 23-12-2005 அன்று லஞ்ச பணத்தை பெற்ற போது, கையும் களவுமாக திருவேங்கடநாராயணனை கைது செய்தனர்.

இந்த வழக்கு தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பகவதியம்மாள் குற்றம் சாட்டப்பட்ட திருவேங்கடநாராயணனுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்...

கள்ள உறவுக்கு தொந்தவு.. இரண்டு வயது குழந்தைக்கு சூடு வைத்த தாய்...


நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வசிக்கும் தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.  குழந்தையின் தாய் மகாலட்சுமி என்பவருக்கு அருகில் வசிக்கும் இன்னொரு நபருடன்   பழக்கம் ஏற்பட்டு தகாத உறவு வரை சென்று உள்ளது.

இவ்வாறே சில நாட்கள் தொடர, ஒரு சந்தர்பத்தில் தகாத உறவின் போது குழந்தை டிஸ்டர்பன்ஸா இருக்கிறாள் என, அடுப்பில் சமையல் கரண்டியை கொண்டு சூடு ஏற்றி  குழந்தையின் வயிற்ருப்பகுதியில் ஆங்காங்கு சூடு வைத்து உள்ளார்.

தற்போது குழந்தை காயத்துடன் வலியில் துடிப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சியை அளித்து வருகின்றனர்.

இந்த தகவவை அடுத்து போலிசாருக்கு கொடுத்த புகாரின் அடிப்படையில் தாய் மகாலக்ஷ்மியை கைது செய்தது போலீசார்.விசாரணையில் தகாத உறவின் போது இடைஞ்சலாக குழந்தை இருந்ததால் கோபத்தில் குழந்தைக்கு சூடு வைத்ததாக தெரிவித்து உள்ளார்...

சித்தர்கள் காட்டிய எட்டு வடிவ நடை பயிற்சி...


எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த வழிமுறை ஒருவர் தினமும் 30முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச் சிறந்ததாகும்.

பயிற்சியும் செய்முறையும்...

மேற்படி படத்தில் இருப்பது போல் 6 அடி அகலம் மற்றும் 8 முதல் 12 அடி நீளம் அளவில் தரையில் எட்டு ஒன்றுவரைந்து கொள்ளவும்.

அதை வடக்கு தெற்கு முகமாக  வரைந்து கொள்ளவும்.

படத்தில் உள்ளது போல் அம்பு குறியிட்டு காட்டியது போல் பாதையில் “1″ குறியில் இருந்து ஆரம்பித்து “5″ வரை சென்று மீண்டும் “1″ வர வேண்டும். நடக்கும் பொழுது மிகவும் வேகமாகவோ அல்லது மிகவும் மெதுவாகவோ நடக்கலாகாது.

மிகவும் இயல்பாக நடக்க வேண்டும்.

தினமும் காலையும் மாலையும் 15 – 30 நிமிடங்கள் நடப்பது மிகச்சிறப்பு.

நடக்கவேண்டிய நேரம் காலை அல்லது மாலை மணி 5 – 6 (am or pm).

வெளியே செல்ல முடியாதவர்கள், வீட்டுக்குள் நடக்கலாம்.

நல்லமுறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும்.

நடைப்பயிற்சி முடியும் வரை மெளனமாக நடக்க வேண்டும்..

இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும்.

15 வது நிமிட முடிவில் இரு நாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக் காற்றையும் உணரலாம்.

பின்னர் நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடர வேண்டும்.

இதற்கிடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளி தானாகவே வெளியே காரி உமிழ்வதாலோ அல்லது கரைந்து இறங்குவதை உணரலாம்.

பலன்கள் இந்த பயிற்சியை காலை மாலை 1 மணிநேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம்.

70வயது 50 வயதாக குறையும். முதுமை இளமையாகும்..

சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும்.

குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் தீரும். முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது.

இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

கண்பார்வை அதிகரிக்கும், ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது.

மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாடியின் புள்ளி(Point) அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது.

செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது.

உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது.

காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியை
செய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும்.

அளவான நடைப் பயிற்சியால் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.

இரண்டு வேளை 30 நிமிடம் செய்தால், பாத வெடிப்பு, வலி, மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன.

முதியோரும், நடக்க இயலாதோறும், பிறர் உதவியுடன் சக்கர வண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம்.

தினமும் ‘எட்டு’ நடைப்பயிற்சி செய்வதால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்.

உடல் பருமன், இரத்த அழுத்தம், இதய நோய், சுவாசகாசம் (Asthma), கண் நோய்கள், மூக்கடைப்பு, தூக்கமின்மை, மூட்டுவலி, முதுகுவலி, மன இறுக்கம், போன்ற கொடிய நோய்கள்கூட மெல்ல மெல்ல பூரணமாக குணமாகி விடுகின்றன.

நல்ல முறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும். வாழ்க வளமுடனும் நலமுடனும்...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


கப்பற்படையே வைத்து உலகையே ஆட்டம் காண வைத்த பேரரசு, சோழப்பேரரசு...


கப்பலோட்டி உலகை வென்ற இராசராச சோழனின் கப்பற்படைப் பற்றிய அரிய தகவல்கள்.

இராசராச சோழன் என்றாலே காலாற்படை முதல் யானை படை வரை நடுநடுங்கிப் போகும். வானுயர் வெற்றிகளை முடிசூடிய மாமன்னன் என்றால் சாதாரணமா என்ன.

பண்டையக் காலத்திலேயே கப்பற்படை வைத்து உலகை ஆட்டம் காண வைத்த பேரரசு, சோழப்பேரரசு.

ஆயிரம் வருடம் ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல, ஆயிரம் வருடங்களாக கப்பற்படையை வைத்து அரசு நடத்தியப் பெருமை உலகிலேயே சோழ பேரரசிற்கு மட்டும் தான் இருக்கிறது.

கனம்..

இந்த கப்பற்படையில் நிறைய போர் வீரர்களை கொண்ட குழு ஒன்று பிரிக்கப்பட்டிருக்கும், அவர்களை கனம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்களை தலைமை தாங்கி இருந்தவரை, கனாதிபதி என்று அழைக்கப்பட்டிருக்கிறார்.

கன்னி..

தமிழில் கன்னி என்பதற்கு இளம் மங்கை என்று மட்டும் பொருள் அல்ல, பொறி என்ற மற்றொரு பொருளும் இருக்கின்றது.

எதிரிகளை பொறி வைத்துப் பிடிக்கும் கப்பற்படை வீரர்களை, கன்னி என்று அழைத்திருக்கின்றனர். இவர்கள் தான் சிறப்பு பணியில் நியமிக்கப் படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களை நிர்வாகிப்பவர், கலபதி என்று அழைக்கப்படுவார்.

ஜதளம் அல்லது தளம்..

கப்பற்படையில் சக்தி வாய்ந்த குழுவாக திகழ்பவர்களை, ஜதளம் என்பார்கள். சுருக்கமாக இவர்களை தளம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இவர்களை நிர்வகிப்பவர், ஜலதலதிபதி என்னும் நபர் ஆவார்.

மண்டலம்..

கப்பற்படையின் பாதி நிரந்திர போர் குழுவை, மண்டலம் என்று குறிப்பிடுகிறார்கள். இவர்களை தலைமை வகிக்க மண்டலாதிபதி என்பவர் நியமிக்கப்பட்டிருப்பார்.

இந்த பிரிவிடம் 40 முதல் 50 கப்பல்கள் வரை இருக்கும். இவர்கள் தனி, தனியாகவும், குழுவாகவும் சென்று போர் புரிவதில் வல்லமைப் பெற்றவர்கள்.

நிரந்திர போர் பிரிவு நாம் முன்பு குறிப்பிட்டிருந்த, கனம் பிரிவை சேர்ந்தவர்கள் தான் நிரந்திர போர் பிரிவை சேர்ந்தவர்கள்.

இவர்களிடம் 100 இருந்து 150 கப்பல்கள் வரை இருக்கும். மூன்று மண்டலம் குழுவை உள்ளடக்கி இருக்கும் குழுவானது கனம் என்று கூறப்படுகிறது.

அணி...

பெரிய போர்களில் ஈடுபட மட்டுமே உபயோகப்படுத்தப்படும் குழுவை அணி என்று கூறுகின்றனர்.

ஒரு அணியில் மூன்று கனம் குழு உள்ளடங்கி இருக்கும். 300-500 கப்பல்கள் வரை இந்த குழுவில் இருக்கும். மாபெரும் அணியான இதை தலைமை தாங்குபவர், அணிபதி என்று அழைக்கப்படுவர்.

அதிபதி...

இதெல்லாம் போக இந்த அனைத்து குழுக்களையும் தலைமை தாங்கும் நபர் தான் அதிபதி. இவரின் கட்டளைகளுக்கு இணங்க அனைத்து குழுக்களும் இயங்கும். இவர் இளவரசருக்கு கீழ் இருப்பவர்.

கைப்பற்றிய பகுதிகள்..

இந்த மாபெரும் கப்பற்படையை வைத்து தான், இந்தோனேசியா, யா(ஜா)வா, மாலத்தீவு, சிங்கப்பூர், இலங்கை, ஆங்கோர், கடாரம் போன்ற பல பகுதிகளை வென்றுள்ளது சோழப் பேரரசு.

நாவாய்..

பண்டைய தமிழர்களின் நாவாய் என்ற கப்பற்படையின் பெயர் தான் ஆங்கிலத்தில் நேவி (Navy) என்று அழைக்கப்படுகிறது...

லட்சகணக்கான தமிழர்களை கொலை செய்தவனுக்கு பாஜக வின் வெளிப்படையான ஆதரவு...


நீங்கள் ஒரு காந்தம்...


உண்மையில் ஒவ்வொரு மனிதனும் ஒரு காந்தம். எப்படி காந்தம் பல பொருட்கள் சுற்றி இருந்தாலும் இரும்புத் துண்டுகளை மட்டுமே கவர்ந்திழுக்குமோ மனிதனும் தனக்குத் தக்க மனிதர்களையும், சூழ்நிலைகளையும் மட்டுமே தன் வாழ்க்கையில் கவர்ந்திழுக்கிறான். காந்தத்திற்கும் ஒரு படி மேலே போய் அவன் தன் காந்த சக்தியைத் தானே தீர்மானம் செய்கின்ற சக்தி பெற்றிருக்கிறான். அவன் தன் காந்தசக்தியின் தன்மையை தீர்மானிக்கும் முக்கியமான விதங்கள் மூன்று.

முதலாவது, கர்மா-மனிதன் முன்பு விதைத்ததை அறுவடை செய்யத் தேவையான மனிதர்கள் அவனால் ஈர்க்கப்படுகிறார்கள். அதற்கான சூழ்நிலைகள், நிகழ்ச்சிகள் எல்லாம் தானாக அவனைத் தானாக வந்தமைகின்றன. முன்பு சில செயல்களைத் தீர்மானித்து செயல் புரிந்த அந்தக் கணத்திலேயே அதன் விளவுகளுக்கான காந்த சக்தியைத் தன்னிடம் ஏற்படுத்திக் கொள்கிறான். எல்லாம் துல்லியமான கணக்கோடு சரியான நேரத்தில் அவன் வாழ்வில் வந்து சேருகின்றன.

இரண்டாவது, ஆழ்மன நம்பிக்கைகள்-உலகில் நல்ல விஷயங்களில் ஆழமான நம்பிக்கைகள் கொண்டிருப்பவர்கள் நல்ல மனிதர்களையும் நல்ல விஷயங்களையும் தங்கள் வாழ்வில் தங்களை அறியாமல் வரவழைத்துக் காண்கிறார்கள். அதே போல நல்ல விஷயங்களில் அவநம்பிக்கையை ஆழ்மனதில் வளர்த்துக் கொள்கிற மனிதர்கள் அதை உறுதி செய்கிறது போன்றவற்றையே தங்கள் வாழ்வில் வரவழைத்துக் கொள்கிறார்கள். நான் அப்போதே சந்தேகப்பட்டேன் என்று பிறகு தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இவர்கள் அப்படி வரவழைத்துக் கொண்டதே தாங்கள் தான் என்பதை அறிவதில்லை.

மூன்றாவது அதீத ஆர்வம்-ஒரு மனிதன் எதில் எல்லாம் அதீத ஆர்வம் காட்டுகிறானோ அதுகுறித்து மேலும் ஞானமும், அனுபவங்களும் தரக் கூடிய மனிதர்களையும், சந்தர்ப்பங்களையும் காந்தமாக ஈர்த்துக் கொள்கிறான்.

ஆன்மீக ஆர்வம் அதிகமாக இருந்த விவேகானந்தரை ராமகிருஷ்ண பரம்ஹம்சரிடம் அழைத்துச் சென்றது அந்த காந்த சக்தியே. அதே போல் ஆன்மீகம் என்ற பெயரில் சித்து வித்தைகளில் அதிக ஆர்வம் காட்டுபவர்களைப் போலிச் சாமியார்களை சந்திக்க வைப்பதும் அந்தக் காந்த சக்தியே. இப்படி அவரவர் ஆர்வம் காட்டும் விஷயங்களில் ஆர்வத்தின் தரத்தைப் பொறுத்தே அவன் அனுபவங்களை விருத்தி செய்யக்கூடியவை அவனை வந்து சேருகின்றன.

ரமண மகரிஷி தானாகப் போய் ஆன்மிகப் பிரசாரம் செய்ததில்லை. சிஷ்யகோடிகளைச் சேர்த்ததில்லை. திருவண்ணாமலையை அடைந்த பிறகு அந்த ஊரை விட்டு வெளியே எங்கும் சென்றதில்லை. பல நாட்கள் தொடர்ந்து மௌனமாகவே இருந்திருக்கிறார். ஆனாலும் அவரது ஆன்மீக காந்த சக்தி இந்தியாவில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் பல ஆன்மீகவாதிகளை அவரிடம் வரவழைத்த அதிசயத்தைக் கண்டிருக்கிறோம்.

ஆகவே தற்போது நம்மிடம் உள்ளதும், இது வரை வந்ததும் நாம் காந்தமாகக் கவர்ந்தவையே. நாம் நம் வாழ்வில் எல்லாவற்றையும் மேலே குறிப்பிட்ட மூன்று வழிகளில் வர வைத்திருக்கிறோம். பிற காந்தங்களால் நாம் கவரப்படுவதும் இந்த விதிகளின் படியே. பிரபஞ்சம் இந்த மூன்றின்படியே எல்லாவற்றையும் நமக்கு வினியோகித்திருக்கிறது.

இந்தப் பேருண்மை நம்மை ஒரு விதத்தில் ஆசுவாசப்படுத்துகிறது. வாழ்க்கையில் பலவற்றைத் தேர்ந்தெடுப்பதில் நமக்குள்ள சுதந்திரத்தை இது கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த மூன்றில் முதல் விதியான கர்மாவால் வந்தது நமது பழைய சுதந்திரமான செயல்களின் விளைவு என்பதால் அதைத் தவிர்க்கும் சக்தி மட்டும் நமக்கில்லை. அதை அனுபவித்து தீர்த்துக் கொள்ளுதலே ஒரே வழி.

இரண்டாவது, ஆழ்மன நம்பிக்கைகள். நோய்க்கிருமிகளின் சக்தி மேல் பலமான நம்பிக்கை வைத்திருப்பவன் சீக்கிரமே நோய்வாய்ப்படுகிறான். தன் உடலின் எதிர்ப்பு சக்தி மீது நம்பிக்கை வைத்திருப்பவன் சீக்கிரமாக நோய்வாய்ப்படுவதில்லை. அப்படியே நோய் வந்தாலும் வந்த வேகத்தில் அது போயும் விடுகிறது என்று இன்றைய மருத்துவம் கண்டுபிடித்து இருக்கிறது.

ஆழ்மனதில் முன்பே வைத்திருக்கும் தவறான நம்பிக்கைகளை உடனடியாக மாற்றிக் கொள்வது சிறிது கஷ்டமே என்றாலும் அது முடியாததில்லை. நாம் எதை பலமாக நம்புகிறோம், எதை எதிர்பார்க்கிறோம் என்பதைப் பட்டியலிட்டு அதில் தேவையற்றவற்றையும், தவறானவற்றையும் நீக்கிக் கொள்ளுதல் நலம்.

அதற்கு எதிர்மாறான நல்ல விஷயங்களைப் பற்றி படித்தும், கேட்டும், அப்படி வாழ்பவர்களின் சகவாசத்தை வளர்த்துக் கொள்ளுவதும் சிறிது சிறிதாக நம் ஆழ்மன நம்பிக்கைகளை நல்ல திசையில் திருப்பும். நம் முன்னோர்கள் இதன் முக்கியத்துவத்தை பெரிதும் உணர்ந்து நல்ல மனிதர்களின் சேர்க்கையை "சத் சங்கம்" என்ற பெயரில் வலியுறுத்தியுள்ளார்கள்.

மூன்றாவதான ஆர்வம் நம் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. உயர்ந்த விஷயங்களில் ஆர்வம் காட்டும் போது நல்ல எண்ண அலைகளை நாம் ஏற்படுத்துகிறோம். அவை பலப்படும் போது நன்மையைப் பெருக்குகின்ற பலதும் நம் வாழ்வில் வந்து சேர ஆரம்பிக்கும். நாம் எதில் அதிக ஆர்வம் காட்டுகிறோம் என்பதை முதலில் கவனியுங்கள்.

அடுத்தவர்களின் தவறுகளைக் கண்டுபிடிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுபவன் தன் தவறுகளை வளர்த்துக் கொள்கிறான். சில்லரை விஷயங்களிலேயே அதிக ஆர்வம் காட்டுபவன் அந்தத் தரத்திலேயே சாதித்து மடிகிறான். ஆர்வத்தின் தரத்தைப் பொறுத்தே பெறுகின்றதன் தரமும் அமையும்.

நீர் நிறைந்திருக்கும் டம்ளரில் பாலை நிரப்ப வேண்டுமானால் முதலில் நீரைக் கொட்ட வேண்டும். பின்பு தான் அதில் பாலை நிரப்ப முடியும். அது போல அற்ப விஷயங்களில் ஆர்வம் காட்டிக் கொண்டு பெரிய சாதனைகள் புரிய நாம் கனவு காண்பது வீணே. முதலில் அற்பங்களை அப்புறப்படுத்துங்கள். மேற்போக்கான ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்வில் அற்புதங்களை எதிர்பார்க்காதீர்கள். உங்கள் ஆர்வம் உங்களிடம் ஆழமாக இருக்குமானால் மட்டுமே அது காந்தத் தன்மை பெறும்.

எனவே இது வரை நாம் கவர்ந்தவற்றின் கணக்கை நம் வாழ்வில் ஆராய்வோம். எதற்கும் யாரையும் குறை கூறாமல் கவர்ந்து பெற்றதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வோம். இனி எதைக் கவர வேண்டும் என்று சிந்தித்து அவற்றை நம் மனதில் ஆழப் பதிப்போம். அதற்கான ஆர்வத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி அதைப் பலப்படுத்துவோம்.

இப்படி புதிய காந்த சக்தியை நம்மில் வளர்த்துக் கொண்டால் மீதியை இந்த பிரபஞ்ச விதிகள் பார்த்துக் கொள்ளும். வாழ்க்கை சிறப்படையும். அதற்குத் தேவையான சூழ்நிலைகள் நம் வாழ்வில் அமைய ஆரம்பிக்கும். சந்தர்ப்பங்கள் உருவாகத் துவங்கும். உதவும் படியான மனிதர்கள் நம் வாழ்வில் வந்து சேர்வார்கள். கனவுகள் மெய்ப்படும்...

விலை நிலங்களை எல்லாம் ஆக்கிரமித்து சாலைகள் அமைத்து விட்டு, கல்லையும், மண்ணையுமா உண்ணப்போகிறோம்...

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இயல்பு, அவ்வியல்பு கணிக்கவியலாதது...


அவற்றை பற்றிய முழு புரிதலன்றி அவை நடந்தேறாது, நடைமுறைப்படுத்தி கண்டாலும் சில குணங்களே வெளிப்படுத்தவல்லது,

வெளிப்படுத்தவியலாத ஒன்று அதிகமிருப்பின் அதுவே இயல்பு. அவை நகலெடுக்கவல்லதன்று
உன் சில இயல்புடன் பொருந்துவோரிடம் பழகு..

பொருந்தாதவற்றை வெறுக்காது விலக்கி வை..

பொருந்துவோரை நம்பாதே அதே சமயத்தில் சந்தேகிக்காதே
உனக்கு தோன்றுவதை உருவாக்கு..

பின்வருவோரை மட்டும் இணைத்துக்கொள்..

உண்மைக் கருத்தியலுக்கு விளம்பரம் தேவையற்றது,

விலகி செல்வோர்க்கு புரியவை, அவ்வாறும் பொருந்தவில்லையெனில்
அவரை விலக்கி, வெறுக்காத பாதையில் கண்டுங் காணாது கடந்து செல்..

உண்மையைத் தேடிப் பொருந்தும் வரும் ஓர் கூட்டம் உன் கருத்தியலை
ஆராய்ந்து ஏற்கும்..

ஏற்று ஏறி வந்தோரிடம் தலைமையற்ற எண்ணத்தை விதை..

ஒரே கருத்தியலில் இயல்பில் முரண்பட்டாலும், கருத்தியலால் ஒன்று சேரும் தன்மையை உருவாக்கு
இயல்பாக பின்வருவோரைக் கண்டு அமைதியாய் கடந்துக் கொண்டே செல்..

நான் உயிரியல் புத்தகத்துல உணர்ந்து நடப்பனவற்றுள் பொருத்தி எழுதியது...

இலுமினாட்டி உண்மைகள்...


அகத்திக்கீரையின் மகத்துவம்...


துக்க வீடுகளில் உள்ளவர்களுக்கு அகத்திக் கீரையை ரசம் வைத்துக் கொடுக்கும் வழக்கம் இன்றைக்கும் உண்டு..

காரணம், இறப்பின் சோகத்தில் சாப்பிடாமல் - கிடப்பவர்களின் உடல் பாதிப்புக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதால்..

உடலின் உள் காயங்களை ஆற்றுதல், குடற்புழு நீக்கம், மலச்சிக்கலைப் போக்குவது, விஷ முறிவு போன்ற ஏராளமான மருத்துவக் குணங்களை வேர், இலை, பட்டை, பூ என்று பல பாகங்களிலும் தன்னகத்தே வைத்திருக்கும் உன்னதமான மரம் அகத்தி...


அகத்தி மரம்..

அகத்தி மரம் தை முதல் மாசி மாதம் வரையிலும் பூக்கும் இயல்பு உடையது.

தஞ்சாவூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் பி.சரஸ்வதி, அகத்தியின் பலவிதமான மருத்துவக் குணங்களை விவரிக்கிறார்..

'அகத்தி 20 முதல் 30 அடி வரை வளரக்கூடியது. பூவின் நிறத்தைப் பொருத்து செவ்வகத்தி மற்றும் வெள்ளை அகத்தி என்று அகத்தியை இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள்..

இலைகள்:

அகத்தி இலையைக் கீரை என்பார்கள்.

இதன் சாற்றை எடுத்து, ஒன்று அல்லது இரண்டு துளி மூக்கில்விட்டால் காய்ச்சல் குணமாகும். அகத்தி இலையிலும் பூவிலும் அதிக அளவில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. நெய்யை நன்றாகக் காய்ச்சி அதில் அகத்தி இலைகளை இட்டு நன்கு வெந்த பிறகு வடிகட்டிப் பருகச் செய்தால், மாலைக்கண் நோய் குணமாகும்..

இலையை அரைத்துப் பசைபோல் செய்து காயங்களுக்குக் கட்டலாம். புண்கள் விரைவாக ஆறும். சீழ் பிடிக்காது..

வயிற்றில் உள்ள புழுக்களை நீக்கும் குணம் அகத்திக் கீரைக்கு உண்டு.

செவ்வகத்தி இலை குளிர்ச்சியை உண்டாக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டது. தேகம் குளிர்ச்சி அடையும். மலச்சிக்கல் இருக்காது. சிறுநீர் பிரிவது எளிதாக இருக்கும்..

பூக்கள்:

அகத்திப் பூச்சாற்றைக் கண்ணில் பிழிய, கண் வலி குணமாகும்.

மரப்பட்டைகள்:

குடிநீரில் இட்டுக் குடித்துவந்தால், அம்மைக் காய்ச்சல் தீரும்.

வேர்ப் பட்டை:

அகத்தி வேர்ப் பட்டையில் சாப்போனின், டானின், ட்ரைடெர்பின் போன்ற பல வேதிப் பொருட்கள் உள்ளன. வேர்ப் பட்டையை நீரில் இட்டுக் குடித்து வந்தால், மேகம், ஆண் குறியில் ஏற்படும் எரிச்சல் மற்றும் ஐம்பொறிகளில் ஏற்படும் அனைத்து வகையான எரிச்சல்களையும் குணமாக்கும்.

அகத்திக் கீரையை நன்கு வேகவைத்து உண்ண வேண்டும். இல்லாவிட்டால், வாயுவை உண்டாக்கிவிடும்.

மேலும் தினசரி அதிக அளவில் உண்டால், வயிற்றுக் கடுப்பையும் ஏற்படுத்திவிடும்.

இந்தக் கீரைக்கு மருந்துகளின் செயல்பாடுகளைத் தடுக்கும் இயல்பு உண்டு. எனவே, பிற மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகள் அகத்தியைத் தவிர்ப்பது நல்லது.

பல வீடுகளில் முருங்கை மரம் இருக்கும் அதை போல வீட்டுத் தோட்டத்தில் அகத்தி மரத்தையும் வளர்க்க வேண்டும் . கடைகளில் இதன் விதை கிடைக்கும். தவறாதது உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்வை வாழ்வோம்...

மீண்டும் இலங்கை பிரதமர் ஆனான் ராஜபச்சே...



தமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்...


மலையாளிகள் கொண்டாடும் அரிசி...

சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேசங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுசு(ஸ்)ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள்.

இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள்...

வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள் தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம்.

இந்த மூன்று நாடிகளின் தோசங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.

சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்சு, இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது..

கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது.

மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.

சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, 'காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.

அதனால் தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர்.

இந்தியாவில் கர்நாடகா, பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம்.

இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் - 'மட்ட அரிசி’. ஆனால், அவர்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பது தான் உண்மை..

இமாச்சல பிரதேசத்தில் குலு பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது. ஆங்கிலேய ஆட்சியில் அங்கிருந்த ஒரு கவர்னர் இந்த அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு, லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன.

நீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்.

பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு - வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch)..

இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன. நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்து விட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்.

சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேசமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும்.

மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காண முடியாத அளவுக்கு இரும்புச் சத்து - சி(ஜி)ங்க் (Zinc), மாங்கனீசு(ஸ்), மெக்னீசி(ஷி)யம், செலினியம், பொசுபரசு போன்ற கனிமங்கள் - மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன. தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்சி(ஸி)டென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித் திருக்கின்றன.

இதையெல்லாம் விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் - கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத் துறையில் இப்போதும் லோவாசு (ஸ்)டேடின் (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம்.

செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாசு (ஸ்)டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள்.

சிவப்பு பூஞ்சண அரிசி (Red yeast rice) என்று இதற்குப் பெயர். இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், சுவாசகாசம் மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து...

நாம் மறந்தவைகள்...









பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை சொத்துவரி 518% உயர்வு: மக்களைச் சுரண்டுவதற்கும் எல்லை இல்லையா?


தமிழ்நாடு முழுவதும் சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், சென்னையில் உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்ததை விட பல மடங்கு அதிகமாக சொத்துவரி  உயர்த்தப்பட்டிருக்கிறது. மக்களைச் சுரண்டும் இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சொத்துவரி உயர்த்த வேண்டும் என்று விதி இருந்தாலும், 1998-ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 20 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் சொத்துவரி உயர்த்தப்படவில்லை. இதுகுறித்த வழக்கை விசாரித்த  சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் தமிழகம் முழுவதும் சொத்துவரியை உயர்த்த ஆணையிட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தமிழக அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் சொத்துவரியை விருப்பம் போல உயர்த்தியுள்ளன. சென்னையின் சில பகுதிகளில் சொத்து வரி 518 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. சென்னை பெரவள்ளூர் அகரம் பகுதியில் 958 சதுர அடி பரப்புள்ள தனி வீட்டுக்கான ஆண்டு சொத்துவரி 390 ரூபாயிலிருந்து ரூ.2410 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை கோடம்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டுக்கான ஆண்டு சொத்துவரி 1100 ரூபாயிலிருந்து ரூ.3370 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 206% உயர்வாகும்.

ஆலந்தூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டுக்கான சொத்துவரி 256 ரூபாயிலிருந்து ரூ.1480  ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 478% உயர்வாகும். சில இடங்களில் இதைவிட அதிகமாக சொத்து வரி உயர்த்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. வீடுகளுக்கான சொத்துவரியை ஒரே நேரத்தில் 518 விழுக்காடு அளவுக்கு உயர்த்துவது எந்த அடிப்படையில் நியாயம் என்பது தெரியவில்லை. எந்த அளவீடுகளின் அடிப்படையில் சொத்துவரியை சென்னை மாநகராட்சி இந்த அளவு உயர்த்தியது என்பதும் தெரியவில்லை.

அதேநேரத்தில் சிலருக்கு மட்டும் மிகக்குறைந்த அளவிலேயே சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. சென்னைக் கோடம்பாக்கத்தில் 394 சதுர அடி பரப்பளவுள்ள தனி வீட்டுக்கு இதுவரை சொத்துவரியாக ஆண்டுக்கு ரூ.1802 வசூலிக்கப்பட்டு வந்தது. இப்போது இது ரூ.2020 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது வெறும் 12% உயர்வு மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் பல குடியிருப்புகளுக்கு   குறைந்தபட்சமாக 10% வரையிலும், வணிக நிறுவனங்களுக்கு 40% வரையிலும் மட்டுமே சொத்துவரி உயர்த்தப்பட்டிருக்கிறது. எந்த அடிப்படையில் இவர்களுக்கு வரி குறைவாக உயர்த்தப்பட்டது என்பது இரகசியமாகவே உள்ளது. இவற்றை யார், எந்த அடிப்படையில் தீர்மானித்தனர் என்பது தெரியவில்லை.

சொத்துவரி தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து வீடுகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான சொத்துவரி 100% உயர்த்தப்படும் என்று கடந்த ஜூலை 23&ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் பின்தேதியிட்டு இந்த வரி வசூலிக்கப்படும்  என்றும் அரசு அறிவித்தது. ஆனால், பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து சொந்தப் பயன்பாட்டுக்கான வீடுகளுக்கான சொத்து வரி 50% வரை மட்டுமே உயர்த்தப்படும் என்றும், பின்தேதியிட்டு ஏப்ரல் மாதத்திலிருந்து வசூலிக்கப்படாது என்றும், அக்டோபர் மாதம் முதல் தான்  புதிய வரி வசூலிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

ஆனால், தமிழக அரசின் அரசாணையை தமிழக அரசே மதிக்கவில்லை. அதிகபட்ச வரி உயர்வை விட 10 மடங்குக்கும் கூடுதலாக சொத்துவரி வசூலிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, ஏப்ரல் மாதம் முதல் பின்தேதியிட்டு சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதை எந்த வகையிலும் நியாயப் படுத்த முடியாது. நகர்ப்புற உள்ளாட்சிகளின் செலவுகள் அதிகரித்து விட்ட நிலையில், அதை சமாளிக்க சொத்துவரியை ஓரளவு உயர்த்த வேண்டியது அவசியம் தான். ஆனால், அது மக்களைப் பாதிக்காவாறு  இருக்க வேண்டும். மக்கள் பொறுத்துக் கொள்வார்கள் என்ற எண்ணத்தில் விருப்பம் போல சொத்து வரியை உயர்த்துவது கொள்ளைக்கு சமமானதாகும். மக்களை சுரண்டவும், கொள்ளை அடிக்கவும்  ஓர் எல்லை உண்டு என்பதை தமிழக பினாமி ஆட்சியாளர்கள் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

வீடுகளுக்கான சொத்து வரி 50 விழுக்காட்டுக்கும் மேல் உயர்த்தப்படாது என்று உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்த தமிழக அரசு, அதை விட 10 மடங்குக்கும் மேலாக சொத்துவரியை உயர்த்தி இருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். இதை உணர்ந்து சொத்துவரி உயர்வை 50% என்ற அளவுக்கு அரசு குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் பா.ம.க. மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும்.

அதுமட்டுமின்றி, சொத்துவரியை உயர்த்தும் அரசின் முடிவை ஏதேனும் அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்தால் அவர்களை நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும் என்று எச்சரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பை மிகக் கடுமையாக கையாள வேண்டும். இதற்கு காரணமான அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை அனைவரையும் நீதிமன்றத்திற்கு அழைத்து கண்டிக்க வேண்டும்...