29/06/2018

அண்ணாமலைப் பல்கலை. தொலைதூர கல்வியில் 25 புதிய படிப்புகள்...


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் நிகழ் கல்வியாண்டு முதல் 25 புதிய படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதன் துணைவேந்தர் வி.முருகேசன் தெரிவித்தார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் 2018 - 19-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. அப்போது பல்கலை. துணைவேந்தர் வி.முருகேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அண்ணாமலைப் பல்கலை.யில்தான் நாட்டிலேயே முதல் முறையாக தொலைதூரக் கல்வி இயக்ககம் தொடங்கப்பட்டது. நிகழ் கல்வியாண்டு (2018-19) முதுநிலை யோகா பட்ட மேற்படிப்பு, கணினி பட்டப் படிப்பு உள்பட 25 படிப்புகள் புதிதாகத் தொடங்கப்பட உள்ளன என்றார் அவர்.

புதிய படிப்புகள்: எம்.எஸ்சி. கேம் டெக்னாலஜி, எம்.எஸ்சி. கவுன்சலிங் - ஸ்பிர்ட்சுவல் ஹெல்த், எம்.எஸ்சி. மல்டி மீடியா, எம்.எஸ்சி. யோகா - வேல்யூ எஜூகேஷன், எம்.எஸ்சி. யோகா - வேல்யூ எஜூகேஷன் லேட்டரல் என்டரி, பி.எஸ்சி. அனிமேஷன், பி.எஸ்சி. அட்வர்டைசிங் டிசைன், பி.எஸ்சி. பேஷன் டிசைன் - கம்யூனிகேஷன், பி.எஸ்சி. கேம் ஆர்ட் - டிசைன், பி.எஸ்சி. கேம் டிசைன் - டெவலப்மெண்ட், பி.எஸ்சி. கேம் புரோகிராம், பி.எஸ்சி. கிராபிக்ஸ் டிசைன், பி.எஸ்சி. இன்டீரியர் ஆர்கிடெக்சர், பி.எஸ்சி. மீடியா டெக்னாலஜிஸ், பி.எஸ்சி. போட்டோகிராபி, பி.எஸ்சி. யூசர் இன்டர்ஃபேஸ் டிசைனிங் டெவலப்மெண்ட், பி.எஸ்சி. விஷூவல் எஃபக்ட், பி.எஸ்சி. விஷூவல் மீடியா, பி.ஜி. டிப்ளமோ இன் சைபர் லா, பி.ஜி. டிப்ளமோ இன் வேல்யூவேஷன் லேண்ட், பில்டிங், பி.ஜி. டிப்ளமோ இன் யோகா - வேல்யூ எஜூகேஷன், டிப்ளமோ இன் கவுன்சலிங் - ஸ்பிரிட்சுவல் ஹெல்த், டிப்ளமோ இன் பிரண்ட் டெஸ்க் ஆப்ரேஷன்ஸ்..

சான்றிதழ் படிப்பு: பிரண்ட் டெஸ்க் ஆப்ரேஷன்ஸ், வாஸ்து சான்றிதழ் படிப்பு...

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி...


பாஜக பினாமி அதிமுக மாநில அரசுக்கு எச்சரிக்கை...


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த  உச்சநீதிமன்றம், 2013 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு 100 கோடி அபராதத்தை விதித்தது.

இத்தொகையின் வட்டியை கொண்டு நீர், நிலம், காற்று மாசு படுதலை தடுத்து சுற்று சூழலை காக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், வளர்ச்சி பணிகளுக்காக பயன்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுருந்தது.

உத்தரவுபடி ஸ்டெர்லைட் நிறுவனம் ரூ.100 கோடி அபராதத்தை காசோலை (எண் 184903) மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு 01.07.2013 அன்று வழங்கி வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டது. வைப்பு தொகையாக செலுத்திய தேதியில் இருந்து 13.04.2018 வரை அத்தொகை 42 கோடியே 26 லட்சத்து 96 ஆயிரத்து 162 ரூபாய் வட்டி ஈட்டியிருக்கிறது. அதில் 35 கோடியே 42 லட்சத்து 80 ஆயிரத்து 337 ரூபாய் செலவழிக்கப்படாமல் வங்கியிருப்பில் உள்ளது. (இயக்கம் தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் பெற்ற தகவல்).

ஸ்டெர்லைட் தொழிற்சாலை மற்றும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை வார்த்தைகளால் அளக்க முடியாத அளவிற்கு உள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றுசேர வேண்டிய நிதி வங்கிகணக்கில் தூங்கிவழிந்து வருகிறது. இதுவரை செலவழிக்கப்பட்ட 7 கோடி அளவிலான பணிகளின் விவரங்களையும் மாவட்ட நிர்வாகம் தர மறுக்கிறது.

இந்நிலையில் நானும் இயக்க மாநில அமைப்பு செயலாளர் திரு.ஜெய் கணேஷ் மற்றும் நெல்லை மாநகர பொறுப்பாளர் திரு.ரகுமான் அவர்களும் தூத்துக்குடி துணை ஆட்சியரை நேரில் சந்தித்து இந்த நிதியை உச்ச நீதிமன்ற உத்தரவு படி உரிய திட்டத்திற்கு பயன்படுத்த மனு (26.06.2018) அளித்தோம். பல்வேறு காரணங்களால் இந்நிதியை பயன்படுத்த முடியவில்லை என்றும்  திட்ட மதிப்பீடு சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்பி உள்ளதாகவும் அனுமதி கிடைத்த உடன் இந்நிதியை உரிய திட்டங்களுக்கு பயன்படுத்த உள்ளதாகவும் உறுதி அளித்துள்ளார்கள்.

இதுவரை மெத்தனப்போக்காக இருந்த தமிழக அரசையும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தையும்  இயக்கம் கடுமையாக கண்டிக்கிறது.உச்ச நீதிமன்ற உத்தரவு படி நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க உள்ளோம் என்பதை  மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசிற்கும் இதன் மூலம் எச்சரிக்கை செய்கிறோம்...

நமது மரபணு மிகவும் வீரியம் கொண்டது...


கூவம் சாக்கடையல்ல நதி...


சென்னையின் தேம்ஸ் நதி. தமிழக அரசின் திட்டங்களில் வருடாவருடம் கூவம் நதியை சுத்தம் செய்ய நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் இதுவரை தூய்மைப்படுத்தியதாக தெரியவில்லை...

பாஜக மோடியும் இந்தியா விற்பனையும் - WTO...


ஊடகங்கள் ஒருபோதும் உங்களுக்காக இருந்தது இல்லை, இன்றுவரை...






அவர்களின் தவறு வெளியே தெரியக் கூடாது என்பதற்காக, எந்த எல்லைக்கும் சென்று அதை தடைசெய்வார்கள்...

உளவியல் போர்...

அவர்கள் உங்களை உளவியல் ரீதியாக கட்டுப்படுத்துகின்றனர்...

நம் முன்னோர்கள் பயன்படுத்திய அணுஆயுதம் பிரம்மாஸ்திரமா - 2...


நமக்கு முன் பூமியில் வாழ்ந்த முன்னோர்கள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தியது அறிவியல் புனைகதை போன்று இருந்தாலும், நியூ மெக்சிகோ சோதனைக்கு பின் வெளியான டாக்டர். ஓபென்ஹெய்மர் அறிக்கையில் இதற்கான குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றது.

எனக்கு பகவத் கீதையின் குறிப்புகள் நினைவுக்கு வருகின்றது...

ஓபென்ஹெய்மர் ஆங்கில பதிப்பில் 11 ஆம் பகுதி 32 வது வசனத்தைக் குறிப்பிட்டிருந்தார். "Now I am become Death, the destroyer of worlds", தமிழில் "உலகங்களை அழிக்கவே முழுமையாக வளர்ந்த மரணம் {காலன்} நான் இப்போது மனித குலத்தைக் கொல்வதில் {அழிப்பதில்} ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். இங்கே பல்வேறு பிரிவுகளில் நிற்கும் போர்வீரர்கள் அனைவரும் நீ இல்லாமலேயே அழிவார்கள்.

மகாபாரதம் மற்றும் பகவத் கீதை போன்ற புராணங்கள் கி.பி இரண்டு மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டவை ஆகும். இந்தப் புராணங்களில் பண்டைய நாகரீகமான ராம ராஜ்ஜியத்தில் வாழ்ந்தவர்கள் குறித்த கதைகள் இடம் பெற்றிருக்கின்றது.

இந்த நாகரீகமானது 12,000 ஆண்டுகளுக்கு முன் அல்லது முன்னதாக பதிவு செய்யப்பட்ட நாகரீகத்தை விட 5,000 ஆண்டுகளுக்கு முன் மெசபடோமியாவில் வாழ்ந்த பண்டைய நாகரீகம் ஆகும்.

இவை சுமார் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது மட்டுமின்றி இவற்றில் கடவுள்கள் பறக்கும் வாகனங்களைப் பயன்படுத்தியதோடு அதிநவீன தொழில்நுட்ப திறன் மற்றும் வியக்க வைக்கும் ஆயுதம் போன்றவற்றை போர்க்களங்களில் பயன்படுத்தியதாக பழைய குறிப்புகளின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் பயன்படுத்திய ஆயுதமானது பிரம்மாஸ்திரம் என அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. பிரம்மாஸ்திரம் மூலம் பலர் உடல் தீயில் எரிந்தும், உருகியும் மரணித்திருக்கலாம். பண்டைய வானியல் கோட்பாட்டாளர்களும் பிரம்மாஸ்திரம் நிச்சயம் அணு ஆயுதமாக இருக்க வேண்டும் என்றே கூறுகின்றனர்.

அவற்றை பற்றி விரிவாக அடுத்த பகுதியில் காண்போம்... தொடரும்....

வணிகப் போர்...


ரூ.125 நாணயத்தை நாளைய மறுநாள் வெளியிடுகிறார் வெங்கய்ய நாயுடு...


புள்ளியியல் தினத்தையொட்டி, ரூ.125 நாணயத்தை குடியரசு துணைத் தலைவா வெங்கய்ய நாயுடு நாளைய மறுநாள் (ஜூன் 29) வெளியிடவுள்ளார்.

இதையொட்டி, கொல்கத்தாவில் மத்திய புள்ளியியல் மற்றும் திட்டமிடுதல் துறை அமைச்சகம் சார்பில் வரும் வெள்ளிக்கிழமை சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் புள்ளியியல் தின நினைவு ரூ.125 நாணயம், ரூ.5 புதிய நாணயம் ஆகியவற்றை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வெளியிடவுள்ளார்...

இலுமினாட்டி கன்னடன் ஈஷா எனும் ஜக்கி வாசுதேவ் ஏமாற்று வேலைகள் ஆரம்பம்...


தமிழகத்து தர்கா வழிபாடு...


பள்ளிவாசல் வேறு தர்கா வேறு...

பள்ளிவாசலில் சமயகுரு 5 வேளை பாங்கு கூறி அழைப்பார். பிறகு கூட்டு வழிபாடு நடைபெறும். இங்கே பிற சமயத்தினரும் இசுலாமியப் பெண்களும் பள்ளிவாசல் செல்வதில்லை.

இந்த குறையை நிவர்த்தி செய்வதே 'தர்கா' வழிபாடு.

தர்கா என்பது இறையடியார் ஒருவர் உடல் அடக்கமான இடத்தைச் சுற்றி எழுப்பப்படும் கோவில்.

(திறந்தவெளிக் கல்லறைகளும் உள்ளன)..

பள்ளிவாசலில் இருந்து வேறுபடுத்திக் காட்ட பச்சை நிறத்தில் வெள்ளைநிறப் பிறை நிலாவும், விண்மீனும் கொண்ட கொடி ஏற்றப்பட்டிருக்கும்.

இங்கே அந்த இறையடியாரை யாரும் வணங்குவதில்லை.அந்த இறையடியாருக்காக ஆண்டவனிடம் வேண்டுகிறார்கள்.

இங்கே பல்வேறு சமயத்தவரும் இசுலாமியரும் வந்துபோகிறார்கள்.
நேரக்கட்டுப்பாடு இல்லை.
வழிபாட்டு விதிகள் இல்லை.

அதாவது தமது ஊரில் ஒரு பெரிய மனிதர் மறைந்தபிறகு (அவர் இசுலாமியராய் இருந்தாலும்) அவ்வூர் மக்கள் (பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள்) அவரது நினைவைப் போற்றும் நாட்டார் வழிபாட்டு முறையே தர்கா வழிபாடு.

'சீறாப் புராணம்' எழுதிய உமறுப்புலவரின் திறந்தவெளி தர்காவை சுற்றி (பிள்ளைப்பேறு நேர்த்திக் கடனுக்காகக்) கட்டிடம் எழுப்பியவர் 'பிச்சையாக் கோனார்' என்பவராவார்.

இறையடியார்கள் இறைவனடி சேர்ந்த நாளில் 'சந்தனக்கூடு' விழா நடக்கிறது.
பத்து நாட்களுக்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட மூங்கில் கம்பில் பச்சைநிறத்தில் பிறை மற்றும் விண்மீன் கூடிய துணி கட்டி ஊர்வலமாக எடுத்துச்சென்று தர்காவின் வாசலில் கட்டுவார்கள்.

(இது தமிழர்கள் அனைவரும்  திருக்கோவில்களில் விழா எடுக்கும் முன்பு கொடியேற்றும் வழக்கம்தான்.
தமிழக கத்தோலிக்க தேவாலயங்களிலும் இத்தகைய கொடியேற்றம் உண்டு).

பிறகு பத்துநாட்கள் கல்லறையைச் சுற்றி அமர்ந்து தமிழிலும் அரபியிலும் இறையடியாரின் புகழைப் பாடுவார்கள்.
பத்தாம் நாளில் சந்தனத்தைக் குழைத்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மாட்டுவண்டியில் சந்தனக்கூடை சுமந்து ஊர்வலமாக எடுத்துச்செல்வர்.
இதற்கு பரம்பரை பரம்பரையாக மாடும் வண்டியும் தருவோர் பல்வேறு சமயத்தையும் சேர்ந்தவர்களாக இருப்பர்.

இவ்வூர்வலத்தில் சிலம்பாட்டம் கழியாட்டம் போன்ற தமிழ் கலைகளும் இடம்பெறும்.

பிறகு சுமந்துவந்த குடத்திலிருந்து சந்தனத்தை கல்லறை மீது பூசுவர்.

பிறகு சிறிதளவு சந்தனத்தை வீடுகளுக்கு எடுத்துச்செல்வர்.

பிறகு கந்தூரி விருந்து நடைபெறும்.
இதற்கான செலவு அவ்வூர் மக்கள் அனைவரிடமும் பெறப்பட்ட வரியிலிருந்து கிடைக்கிறது.

(நன்கொடை அதிகம் கிடைக்கும் சில பெரிய தர்காக்கள் விதிவிலக்கு).

இரவு அவ்வூரார் அனைவரும் மதவேறுபாடின்றி அமர்ந்து இறைச்சி விருந்து உண்பார்கள்.

தமிழகத்தில் மிக பழமையான தர்கா இராமேஸ்வரத்திலுள்ள 'ஆபில் காபில்' தர்கா.

இவர்கள் ஆதாமின் மகன்கள் ஆவர்.

(ஆபெல், கெய்ன் என்று பைபிள் கூறுகிறது).

மிகவும் புகழ்பெற்ற தர்கா 'நாகூர் தர்கா' ஆகும்.

இவரை 'முகைதீன் ஆண்டவர்' என்று எல்லாமதத்தினரும் அழைக்கின்றனர்.

இதுபோல குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பீர்முகமது தர்கா,

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைக்கு அருகிலுள்ள ஏர்வாடி செய்யது இப்ராகிம் தர்கா,

திருச்சியிலுள்ள நத்தார்வலி தர்கா,

ஆகியன குறிப்பிடத்தகுந்த தர்காக்கள்.

இது தவிர வட்டார ரீதியாக புகழ்பெற்ற பல தர்காக்கள் உள்ளன.

"நாகூர் தர்கா"விற்கு 'அச்சுதப்பநாயக்கர்' எனும் தெலுங்கு மன்னர் முப்பது வேலி நிலம் வழங்கியுள்ளார்.

இதே தர்காவிற்கு தஞ்சை மராட்டிய மன்னர் 'துக்கோசி' 131 அடி கோபுரம் கட்டித்தந்து இளங்கடமனூர் எனும் ஊரையும் நன்கொடை அளித்துள்ளார்.

இன்று தஞ்சை மராட்டிய மன்னர் கந்தூரி அன்று குடும்பம் சந்தனமும் பட்டுசால்வையும் அனுப்பி வைக்கின்றனர்.

இந்த நாகூர் தர்காவின் கல்லறை மீது போர்த்தப்படும் போர்வை சென்னையைச் சேர்ந்த 'பழனியாண்டிப் பிள்ளை' என்பவரது பரம்பரையினர் அனுப்பிவைக்கின்றனர்.

கோரிப்பாளையம் தர்கா விற்கு கூன்பாண்டியன் (சுந்தரபாண்டியன்) எனும் பாண்டிய மன்னன் 15000 பொன் வழங்கியுள்ளான்.

இதில் ஏற்பட்ட ஒரு பூசலை தீர்த்து பொறிக்கப்பட்ட நாயக்கர்கால கல்வெட்டுச் சான்று உள்ளது.

அருப்புக்கோட்டை பள்ளிவாசல் கட்ட நிலம் கொடுத்தவர்கள் (தெலுங்கு) நாயக்க மக்கள்.

ஏர்வாடி தர்கா விற்கு 'முத்துக்குமார் விஜயரகுநாத சேதுபதி' எனும் சேதுபதி மன்னர் விளைநிலங்களையும் சில வரிகளைகளையும் நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.

இதே மன்னர் 1745ல் புதுக்குளம் ஊரை 'ஆபில் காபில் தர்கா'வுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இத்தர்காவில் 19 வலிமார்கள் சமாதிகள் உள்ளன.

இங்கே பல்வேறு சாதியார் பரம்பரை பரம்பரையாக சில பங்களிப்புகளைச் செய்துவருகின்றனர்.

இங்கே சந்தனக்கூடு குடம் கொண்டுசெல்லும் மரக்கூட்டினை வழங்குவோர் ஆசாரிகள்.

கூடுகட்ட கயிறு, நார் போன்றவை நாடார்கள் பொறுப்பு.

கூடு அலங்கரிப்பு பறையர் மற்றும் கோனார் பொறுப்பு.

நெய்பந்தத்துணி வண்ணார்கள் பொறுப்பு.

சந்தக்கூடு விழாவில் அனைத்து மதத்திலிருந்தும் 2லட்சம் பேர் கூடுவர்.

திருநெல்வேலி-மதுரை சாலையில் "காட்டுப் பள்ளிவாசல்" என்ற தர்கா உள்ளது.

'இப்ராகிம் ராவுத்தர்' என்பவரும் அவரது நண்பர் 'முத்துக்கோனார்' என்பவரும் இங்கே அடக்கமான இறையடியார்களுக்கு சிறிய அளவில் வழிபாட்டைத் தொடங்கினர்.இன்று கூரையில்லாத கட்டிடம் தர்காவாக இயங்குகிறது.

மதுரையிலிருந்து புதுக்கோட்டை செல்லும் திருப்பத்தூர் அருகேயும் ஒரு "காட்டுப் பள்ளிவாசல்" இருக்கிறது.
ஏழு பார்ப்பனப் பெண்களையும் இரண்டு பிராமணக் குழந்தைகளையும் காப்பாற்றும் முயற்சியில் உயிர்துறந்த 'சையது பக்ருதீன்' அடக்கமான தர்கா இது.

இராமநாதபுரம் மன்னர் 'கிழவன் சேதுபதி' (1674-1710) இத்தர்காவுக்ககு கொடைகள் வழங்கியுள்ளார்.

இங்கே நடக்கும் சந்தனக்கூடு விழாவில் கள்ளர் சாதியினர் பெருமளவு கலந்துகொள்கின்றனர்.

தஞ்சை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஒரு பார்ப்பன பெண்ணுக்கும் அவரை கள்வர்களிடமிருந்து காப்பாற்றும் முயற்சியில் உயிர்துறந்த "பக்கிரி சாய்பு"வுக்கும் தர்கா உள்ளது.

தூத்துக்குடி வைப்பாறு சிற்றூரில் "ஒலியுல்லா தர்கா"வின் கந்தூரி விழாவில் தெலுங்கு கம்பளத்து நாயக்கர்கள் பெரிய பங்களிப்புகளைச் செய்கின்றனர்.

ஊத்துமலை தேவர்குளம் அருகே "கான்சாமாடன்" எனும் தர்காவை மறவர் மக்கள் வணங்குகின்றனர்.

ஊத்துமலை ஜமீன்தார்கள் முன்னின்று சந்தனக்கூடு ஊர்வலத்தை நடத்துகின்றனர்.

ஊர்மக்கள் பசுமாடு ஈன்றபிறகு கறக்கும் முதல் பாலை இச்சமாதியில் ஊற்றுகின்றனர்.

நாகூருக்குத் தெற்கேயுள்ள "முத்துப்பேட்டைத் தர்கா" 'கருப்பையாக் கோனார்' என்பவர் கட்டியதாகக் கூறுகிறார்கள்.

திருப்பத்தூரிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள "அகோரி கானுமியா ஒளி" தர்காவிற்கு மருதுபாண்டியர் மானியம் வழங்கியுள்ளனர்.

கி.பி 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த மீனாட்சி சுந்தரம் ஐயர் தமிழிலும் இசையிலும் நல்ல புலமை பெற்றவர்.

அவர் இசுலாத்தைத் தழுவி 'மீனா நூர்தின்' என்று பெயரை மாற்றிக்கொண்டார்.

இவரது தர்கா மதுரை தெற்கு வெளிவீதியில் உள்ளது.

நாகப்பட்டிணத்திற்கும் வேளாங்கண்ணிக்கும் இடையில் "பாப்பாக்கோயில் தர்கா" உள்ளது.

இரண்டு இறையடியார்களுடன் இசுலாத்தைத் தழுவிய பார்ப்பனப் பெண் (ஹபீஸ் அம்மா) ஒருவரது உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

சேலம்-பெங்களூர் சாலையில் தொப்பூர் என்ற இடத்தில் "ஹாவாலிக் தர்கா" உள்ளது.

இங்கேயும் இசுலாமைத் தழுவிய பார்ப்பனப் பெண் அடக்கமாகியுள்ளார்.
இங்கே அசைவ விருந்து கிடையாது.
இங்கே அன்னதானம் நடக்கும்போது முதலில் இசுலாமியரல்லாத சிலருக்கு வழங்கிவிட்டு பிறகே அனைவருக்கும் அன்னதானம் தொடங்குகிறது.

தஞ்சை நகரின் கிழக்கே மாரியம்மன் கோவில் பழைய தெருவில் "பாப்பாத்தியம்மன் தர்கா" உள்ளது.
இவரும் பார்ப்பனராயிருந்து இசுலாமைத் தழுவியவரே.

கி.பி 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ நாயன்மார் சேரமான் பெருமாள் (சேர மன்னர்).

'பொன்வண்ணத்தந்தாதி', 'திருவாரூர் மும்மணிக்கோவை', 'திருக்கயிலாய ஞான உலா' போன்ற சைவ இலக்கியங்களைப் படைத்துள்ளார்.
இவர் சுந்தரரின் நண்பர்.

கேரளமான்மியம் என்ற வடமொழி நூலும் கேரளோற்பத்தி என்ற மலையாள நூலும் இவர் மெக்கா சென்று நபிகள் நாயகம் முன்னிலையில் இசுலாமைத் தழுவியதாகக் கூறுகின்றன.
'சிராஜிதின்' என்று பெயர் மாற்றிக் கொண்டாராம்.

திரும்பும் வழியில் மரணமடைந்ததாகவும் இவரது உடல் தூத்துக்குடி குலசேகரப் பட்டிணம் அருகே கரை ஒதுங்கியதாம்.
அங்கேயே கடற்கரையில் இவருக்கு தர்கா உள்ளது.

இங்கே கல்லறை அறையில் ஒரு சன்னல் சிதம்பரனாதர் கோவிலின் நுழைவாயிலுக்கு நேராக அமைக்கப்பட்டுள்ளது.

அதன் வழியாகப் பார்த்தால் கோவிலின் கருவறையைக் காணமுடியும்.

திருநெல்வேலி நான்குநேரி அருகே விஜயநாராணம் என்ற ஊர் உள்ளது. அங்கே செய்யது முகம்மது மலுக்கு மேத்தப்பிள்ளை என்பவர் வசித்து வந்தார்.

இவரது நண்பர் மாடசாமித் தேவர்.
மாடசாமித் தேவரின் தங்கைக்கும் மேத்தப்பிள்ளைக்கும் தவறான உறவிருப்பதாக மேத்தப்பிள்ளையின் வேலைக்காரன் சொல்ல
மாடசாமித் தேவர் மேத்தப்பிள்ளையையும் தனது தங்கையையும் கொன்றுவிட்டார்.

வேலைக்காரன் சொன்னது பொய் என்று தெரிந்த பிறகு மாடசாமித் தேவர் மேத்தப்பிள்ளைக்கு தர்கா எழுப்பினார்.

தன் தங்கைக்கு நடுகல் நட்டார்.

இன்றுவரை அவரது வம்சாவளியினர் அந்த தர்காவுக்காக அனைத்து உதவிகளையும் செய்கின்றனர்.

தன் குழந்தைகளுக்கு மேத்தப்பாண்டியன், மேத்தா என்று பெயர் வைக்கின்றனர்.

அதோடு நடுகல் வைத்த இடத்தை 'கன்னியம்மன்' தெய்வமாகவும் வழிபடுகின்றனர் மாடசாமி வம்சத்தார்.

மேத்தப்பிள்ளை அப்பா தர்கா என்ற பெயருடைய இந்த தர்காவில் ஆடி 16 அன்று சாதிமத பேதமில்லாமல் ஆயிர்காணக்கில் மக்கள் கூடுகின்றனர்.

இங்கே வாழும் மறவர் மக்கள் தங்கள் வீடுகளில் மக்களைத் தங்கவைத்து விருந்தோம்புகின்றனர்.

240 ஆண்டுகளாக இது நடந்துவந்தாலும் இதுவரை காவல்துறை வந்து நடத்தித்தந்தது கிடையாது.

இதுபோல இன்னும் பலப்பல தர்காக்கள் உள்ளன.

அனைத்திலும் பல சமயத்தாரும் பங்கேற்கின்றனர்.

நன்றி: தர்காக்களும் இந்து-இசுலாமிய ஒற்றுமையும் - ஆ.சிவசுப்பிரமணியன்..

இசுலாமிய தீவிரவாதிகள் தர்கா வழிபாட்டை எதிர்ப்பதற்குக் காரணம் மத நல்லிணக்கனம் ஏற்பட்டால் தம் பிழைப்பை நடத்தமுடியாது என்பதால்தான்.

இதிலே ஒருபடி மேலே போய் குரானுக்குப் போட்டியாக தவ்கீத்து சமாஅத்து என்ற கூட்டம் திருக்குறளை வேறு வம்புக்கிழுக்கிறது.

இசுலாம் பரவியுள்ள அனைத்து இடங்களிலும் அந்த அந்த இனத்தின் பழமையான பழக்க வழக்கங்கள் இசுலாமிய வழிபாட்டிற்குள் கலந்துள்ளதைக் காணமுடியும்.இது இயல்பான ஒன்றே.

மக்களுக்காகதான் மதம்.
மதத்திற்காக மக்கள் அல்லர்.

இறைமறுப்பாளனான என் தனிப்பட்ட கருத்து,

தர்கா வழிபாடு செய்யப்படும் இறையடியார்கள் யாருமே அத்தனை பெரிய ஈகி (தியாகி)கள் கிடையாது.

இந்த வழிபாடும் அதனுடன் இணைந்த சடங்குகளும் மூடநம்பிக்கைகளேயன்றி வேறில்லை...

தமிழ் பற்றி ஆங்கில அறிஞர் ஜி.யு.போப் பகிருங்கள்...


வேற்று கிரகவாசிகளின் பரிணாம வடிவங்கள் பூமியில் இறங்கியதாக அமெரிக்க உளவுத்துறை தனது இணையதளத்தில் ஆவணங்களை வெளியிட்டு உள்ளது...


அறிவியல் புனைகதைகளை மையமாக கொண்டு எடுக்கப்படும் சினிமாக்களை உண்மை என கூறுவதாக இருக்கலாம் அல்லது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசாங்கத்தால் வெளியிடப்படும் ஒரு ஆவணமாக கூட இருக்கலாம்.

இந்த அறிகை மற்றும் ஆவணங்களின் படி நமது பூமிக்கு எண்ணற்ற வேற்று கிரக உயிரினங்கள் விஜயம் செய்கின்றன. மற்ற கிரகங்களில் இருந்து மட்டுமல்ல இதில் சில வகை பரிணாம வளர்ச்சியுடனும் இருந்து உள்ளன. இதில் சில நுட்பமான விமானங்கள் மூலம் வந்து உள்ளன என கூறுகிறது.

அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களில் சில...

1) பறக்கும் தட்டுக்கள் குழுவாக எடுத்து வருகிறது. மற்றவர்கள் தொலை கட்டுபாட்டின் கீழ் உள்ளனர் (under remote control).

2) அவர்களின் குறிக்கோள் அமைதியானதாக உள்ளது.வந்தவர்கள் விமானத்தை நிலை நிறுத்த ஆழ்ந்து சிந்திக்கின்றனர்.

3) வந்தவர்கள் மனிதர்களைப் போல் உள்ளனர். ஆனால் மிகப்பெரிய வடிவில் உள்ளனர்.

4) அவர்கள் பூமியில் உள்ள மனிதர்களை தவிர்க்கவில்லை. ஆனால் அவர்கள் தங்களது சொந்த உலகத்தில் இருந்து வந்து உள்ளனர்.

5) அவர்கள் பூமியை பயன்படுத்தி கொள்ள இங்கு வரவில்லை. ஆனால் அவர்கள் எந்த கிரகத்தில் இருந்து வந்து உள்ளார்கள் என்பது அறியகூடிய வகையில் இல்லை.

6) அவர்கள் வந்த பறக்கும் தட்டுகள் கதிரியக்க ஆற்றல் அல்லது ஒருவகை கதிர் வீச்சை பெற்றிருக்கின்றன. எந்தவிதமான தக்குதலிலும் எளிதில் உடையகூடியது போன்று அது உள்ளது. அவர்கள் தங்கள் விருப்பபடி உள் நுழைவதற்கு மற்றும் சுவடே இல்லாமல் சாதாரணமாக நம் பார்வையில் இருந்து மறைந்து விடுவர்.

7)அவர்களை ரேடியோ மூலமாகவோ ராடார் மூலமாகவோ அவர்கள் இயந்திரத்தை அடைய முடிய வில்லை.
பிற சேர்க்கைகள்: அவர்களது வாகனம் ஓவல் வடிவில் உள்ளது. ஒரு வெப்பத்தை தாங்கி கொள்ளும் உலோக குழல் வடிவத்தில் உள்ளது. இன்னும் முன் பகுதி கூண்டு கட்டுப்பாடுகள் அறியப்படவில்லை. நடுவில் பரிசோதனைகூடம் உள்ளது. பின்புறம் போர் தளவாடங்களை கொண்டு உள்ளது. அவை அடிப்படையில் ஒரு சக்தி வாய்ந்த ஆற்றல் இயந்திரத்தை, கொண்டுள்ளது.

வேற்றுகிரகவாசிகள் கடந்த 50 ,60 ஆண்டுகள் வருகை தருகிறார்கள் என்றால் அவர்களால் 100 முதல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும் இதேபோல் வருகை தந்திருக்க முடியும்.

மனிதர்கள் முன்னேற்றம் அடைந்ததாலும் நவீன கருவிகளாலும் இன்று தெரிந்து கொள்ளும் சாத்தியம் ஏற்பட்டு உள்ளது...

பாஜக - அதிமுக வின் அரச பயங்கிரவாத திட்டம்...


நெஞ்சை நெகிழ்த்தும் புகைப்படங்கள்...


உகண்டா வறுமையை வெளிக் கொணரும் புகைப்படம் (1980); மைக் வால்ஸ் என்பவருக்கு இப்புகைப் படத்தை எடுத்ததற்காக விருது வழங்கப்பட்டது.

எனினும் அவர் இவ்விருதை வாங்க மறுத்துவிட்டார் ஏனெனில் இப்புகைப்படத்தில் இருப்பவர் இந்நேரம் உயிரோடு இருப்பாரோ இல்லையோ என்ற ஐயம் அவர் மனதை உறுத்தியதால்...

பசுமை வழி சாலை உலகப் போருக்கான கட்டமைப்புகள்...


கன்னட ஈ.வே. ராமசாமி நாயக்கரும் பெண்ணியப் புரட்சியும்...


72 வயதில், 26 வயது பெண்ணை திருமணம் செய்து, இது ஒரு மாபெரும் பெண்ணியப் புரட்சி, நான் உலக மகா புரட்சியாளன் என்று கூறிய கேவலம் உலகில் எங்கும் நடந்திருக்கவில்லை.

பெரியார் என்ற தமிழின அழிப்பின் ஆணிவேரான வடுக வந்தேறியின் படத்தில் குசுபூவை மனைவியாக போட்டதின் நோக்கம் மணியம்மையை வயதான பெண்மணியாக காட்டவே தான்.

வெங்காய ராமசாமியின் இறப்பிற்கு பின்னர் மனிதகுல துரோகி கருணாநிதி, அண்ணா, மற்றும் பிற திராவிட (தெலுங்கர், கன்னடர், மலையாளி) வந்தேறிகளால் துன்புறுத்தப்பட்டு தவறாக நடத்தப்பட்டார்.

இந்த பொழப்புக்கு சும்மா பொதீட்டு இருந்திருக்கலாம்.

அந்த திருட்டு திராவிட கள்ள சிரிப்புதான் செம அழகு...

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் புகார்...


வட மொழி செய்த வினைகள...


வந்தாரை வாழவைக்கும் தமிழகமல்லவா?

தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே வட மொழியாளர்கள் இங்கு புகுந்துவிட்டனர். தமிழ்நாட்டில் தாராளமாகத் தம்மொழிச் சொற்களைப் பரப்பினர். எளிய, இனிய தமிழ்ச் சொல் பேசும் தமிழர், கடினமான உச்சரிக்க முடியாத வடமொழிச் சொற்களையும் கூறி மகிழ்ந்தனர்.

"மனம்" என்பது தமிழ்ச்சொல்; வடமொழியில் "ஹ்ருதய" எனக்கூறப்படும். வடமொழியை உச்சரிப்பது மிகக் கடினமானதாகும். அதற்கு முயற்சி அதிகம் தேவை. வாய், உதட்டளவில் தமிழை உச்சரிக்கும் நாம் வடசொல்லை உச்சரித்தால் அடிவயிற்றிலிருந்து முயலல் வேண்டும்.

தொல்காப்பியர் நாட்டில் மக்கள் வழங்கும் தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்தார். அவர் சொற்களை "இயற்சொலல்", "திரிசொல்", "திசைச்சொல்" எனப் பிரித்தார்.
வழங்கிய சொற்கள் பல இம்மூன்று பகுப்பில் அடங்கவில்லை. "வடசொல்" என்று நான்காவதாக ஒன்றை வகுத்தார்.

வடசொற்களைத் தமிழில் எவ்வாறு உச்சரிக்கவேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தார், "வடமொழிச் சொற்களை வடமொழி எழுத்துக்களைக் கொண்டே ஒலிக்காதீர்கள்; வடமொழி எழுத்துக்களை நீக்கி இணையான தமிழ் எழுத்துக்களில் உச்சரியுங்கள்" என்கிறார் தொல்காப்பியர்.

"ஹ்ருதய" என்பதை "இதயம்" என்று கூறுங்கள். "பங்கஜம்" என்பதைப் "பங்கயம்" என்று கூறுங்கள் என்கிறார் தொல்காப்பியர்.

"வடசொற் கிளவி வடஎழுத்து ஒரிரு
எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே"
என்பது தொல்காப்பிய நூற்பா, அவருக்குப் பின்வந்த நன்னூலார், இரண்டு வடமொழிச் சொற்களை இணைத்து எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்பதற்கும் இலக்கணம் வகுத்தார்.

"இராமன் + அயனம் = இராமாயணம்" என்பன போன்ற "வடமொழிப்புணர்ச்சி" விதி கூறுகிறார் நன்னூலார் பவணந்தி முனிவர்! இலக்கியத்திலும் அம்மொழி புகுந்துவிட்டதே காரணம்.

தொல்காப்பியத்தில் பிற்காலத்தில் உரையாசிரியர்கள் பாடம் நடத்தினர். உரையாசிரியருடைய மாணவர்கள் கேட்டனர்; "ஐயா, திசைச்சொல் என்றால் எல்லாத் திசைகளிலும் இருந்து தமிழில் வந்து வழங்கும் சொற்கள் என்று கூறுனீர்கள். வடக்கும் ஒரு திசைதானே அப்படியானால் வடசொல் திசைச் சொல்லுக்குள் தானே அடக்க வேண்டும். வடசொல் எனத் தனியாகக் கூறியது தவறல்லவா?" என்பது மாணவன் வினா.

தொல்காப்பியர் "வடசொல்" என வகுத்துவிட்டனர். உரையாசிரியர் அதைத் தவறென்று எவ்வாறு கூறமுடியும். மாணாக்கனுக்கு உரையாசிரியர் வலிந்து பின்வருமாறு கூறுகிறார்.

அவரால் மாணாக்கன் கேட்டது தவறென்று கூற முடியவில்லை. அவருக்கும் அது தவறென்று தெரியும்!

"மாணாக்கனே! நீ சொல்வது முற்றிலும் சரி. வடசொற்களைத் திசைச்சொல்லில்தான் அடக்கியிருக்க வேண்டும். ஆனால் நமக்கெல்லாம் ஆசிரியராகிய தொல்காப்பியர் "வடசொல்" என்று தனியாக வகுத்தது ஏன் தெரியுமா?

1. வடக்கு ஒரு புண்ணிய திசை
2. வடமொழி தேவ பாசை
3. வடமொழி எல்லாத் தேசத்துக்கும் பொது
ஆகையால் வடசொல்லைத் திசைக் சொல்லில் அடக்காது "வடசொல்" எனத் தனியாக நம் ஆசிரியர் தெல்காப்பியர் வகுத்தார் என்று மாணாக்கனுக்கு ஆசிரியர் கூறினார். அதைத் தவறு என்று கூற ஆசிரியருக்குத் துணிவு இல்லை. இம்மூன்று பொய்யையும் வடவர் பரப்பியிருந்தனர்.

அங்கிங்கெனாதபடி எங்கும் வடமொழி ஆதிக்கம் புகுந்தது. "மன்னன் எவ்வழி; குடிமகள் அவ்வழி" என்பதறிந்து அரண்மனையை வடமொழி ஆழிப்பேரலை தாக்கியது. மன்னர்கள் அதற்கு ஆட்பட்டனர். மன்னர்களைத் தம்வசப்படுத்தப் பல குறுக்கு வழிகளையும் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

சோழரிடம் சென்று வடமொழியாளர் கதையளக்கத் தொடங்கினர், "சோழனே உனக்குத் தெரியுமா? உன் வம்சமே சூரியனிடமிருந்து தோன்றியது. உலககெலாம் ஒரு சூரியன்; உலகுக்கு நீயே ஒரு தனி மன்னன். சூரியன் மகன் மனு; அவன் நீ ஆட்சி செய்யத்தான் "மனு நீதியை" எழுதியுள்ளான். மனு உன் முன்னோர். இட்சுவாகு, புரஞ்சயன், காகுத்தன் என்று பல மாவீரர்கன் உன் வழியினர் உனக்குத் தெரியாதா? உன் புலிக்கொடியில் இருப்பது புலி அல்ல; தேவேந்திரன் என்றனர்.

நம் அரசர்கட்குத் தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை. "ஆம்" என்று தலையாட்டி "ஆகா" என்று போற்றிப் புகழ்ந்தனர்.

அக்கரையிலிருந்து வந்த பச்சைப் பாம்பை பாம்பென உணராமல் "பசுமை" என்று கண்டு மகிழ்ந்தனர். தம் இலக்கியங்களிலும், மெய்க்கீர்த்திகளிலும் அப்புனை கதையை எழுதினர்.

அரசன் ஆதரவோடு வடமொழியாளர்கள் தங்கள் வரிசையைக் காட்டினர். பல புனைகதை புனைந்தனர்.

தஞ்சைக்குப் பக்கத்தில் "வெண்ணாறு" காவிரியின் பாசன ஆறு. "விண்ணை" என்ற சோழ அரசியல் தலைவன் உருவாக்கியதால் அது "விண்ணன் ஆறு" "விண்ணாறு" என்று கூறப்பட்டது.
தமிழன் வெட்டிய ஆற்றுக்கு ஒரு கதை கட்டினர் வடமொழியாளர்கள்.

ஒருமுறை தென்திசை வந்த காமதேனு பாலாய்ச் சொரிந்தது. அந்தப்பால் தேங்கி, தயிராகி, வெண்ணை உண்டாகி அந்த வெண்ணைய் ஆறாய்ப் பெருகிறது. அதனால் அது "வெண்ணையாறு" ஆயிற்று. வெண்ணை வெண்ணையாக ஓடுவதால் இது "சுவேதநதி" ஆயிற்று. இதோ புராணத்தில் பாருங்கள்: என்று சில சுலோகங்களைக் கூறினர்.

ஆற்றின் வரலாற்றை மறந்த மக்கள் புராணப் பொய்யை நம்பினர்.
புறநானுறு பாடப்பட்ட காலத்திலேயே,
"நின் முன்னோர் எல்லாம்
பார்ப்போர் நோவன செய்யலர்"
"பார்ப்பார்க்கு அல்லது பண்பு அறிகிலையே"
என்று அரசரை வடவர் புகழ்ந்து பெற வேண்டியதைப் பெற்றனர்.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று எண்ணிய தமிழரை,
"வேற்றுமை தெரிந்த நாற்பால்" என நம்ப வைத்தனர்.

பார்ப்பனரே முதல் வருணம். மேலான சாதி என்று பரப்பப்ட்டது. மற்ற அனைவரையும் "பிராமணர்க்கும் கீழ்ப்பட்ட மக்கள்" என்று கரந்தைக் கல்வெட்டுக் கூறுகிறது. அந்தணர் என்பதும் தாங்கள்தான் என்றனர். "அந்தணர் முதல் அரிப்பன் கடையாக" என்பதும் ஒரு கல்வெட்டுத் தொடர்.

தாராளமாக - ஏராளமாக நிலங்கள்
பார்ப்பனர்கட்கு வழங்கப்பட்டன. அங்கு வசதியான வீடு கட்டிக் கொடுத்துக் குடியமர்த்தப்பட்டனர். தஞ்சையில் இருந்த சர்வசிவ பண்டித சைவாச்சாரியார் தாம் ஏராளமாகப் பெற்றது தவிர தன் சிடர்கட்கும், சிடருடைய சிடர்கட்கும் தஞ்சாவூரிலிருந்து ஆர்யதேசம், மத்ய தேசம், கௌடதேசம் ஆகிய நாட்டில் உள்ளார்க்கும் வருடம்தோறும் 2000 கல நெல் அனுப்பி வைத்தார். வடமொழிப் பார்ப்பனர்கள் தம்மை "சைவ புரந்தரச் சச்சரவர்த்தி" என்று அழைத்துக் கொண்டு அரசனுக்கு நிகர் என்றனர்.

"அகரப் பிரமதேயம், சதுர்வேதமங்கல்யம், பட்டவிருத்தி, சுரோத்திரியம், அத்யயனவிருத்தி, மாஸியம், சர்வமானியம், ஏகபோகம், கணபோகம்" என்று பல்வேறு பெயரிட்டுப் பல்லாயிரக்கணக்கான வேலி நிலங்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. நில உடைமையாளர்களாக இருந்த வேளாளர்களின் நிலங்கள் பல பறிமுதல் செய்யப்பட்டு பார்ப்பனர்கட்குக் கொடுக்கப்பட்டன. சில இடங்களில் அதை எதிர்த்து வேளாளர்கள் கிளர்ச்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

நிலங்கள் பிராமணர்கட்கு
"தானாதி வினிமய கிரய விக்கிரயங்களுக்கு யோக்கியமாய்
புத்திர பவுத்திர பாரம்பரியமாய் சந்திர சூரியர் உள்ளவரை
அட்டபோகத்துடன் ஆண்டு அனுபவித்துக் கொள்ள" அளிக்கப்பட்டன.

அரசர்களுக்கு, வழிகாட்டவே "மனு" நீதி நூல் எழுதப்பட்டது என்று கூறக்கேட்ட மன்னர்கள் தாங்கள் "மனு ஆறு பெருக" "மனு நெறி தழைக்க" அரசாள்வதாகத் தங்கள் மெய்க்கீர்த்திகளில் கூறிக்கொண்டனர். ஆனால் ஒருசில இடங்களில் தமிழ்க் குறுநில மன்னர்கள் மிகச்சிலர் தங்கள் ஆவணங்களில் "வள்ளுவர் உரைத்த முப்பால் மொழியின்படி" அரசாண்டதாகக் கூறிக் கொள்கின்றனர். இது ஓரளவு ஆறுதல் அளிக்கிறது.

அரசர்கள் ஆதரவு பெற்ற பார்ப்பனர் நடத்திய வடமொழிக் கல்லூரிகள் பற்றிப் பல ஆவணங்கள் கிடைத்துள்ளதே தவிர தமிழ்க்கல்வி பற்றி அரசு ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தமிழ்ப் புலவர் பெருமக்களே தமிழைக் கற்பித்தனர் காத்தனர்.

தமிழ் அமைப்பைப் பார்த்துத் திருத்திச் செய்யப்பட்டதே வடமொழி.

"சமஸ்கிருதம்" என்பதற்கும் அதுதான் பொருள். சிலர் "வடு + அல்" மொழி எனப்பிரித்துக் குற்றமில்லாத மொழி வடமொழி என்று கூறுவது மிகப்பெரும் பிழையாகும். மொழியியல் படியும் அது தவறு.

தமிழ் ஊர்ப்பெயர்கட்கெல்லாம் இதுதான் மூலம் என்று மொழிபெயர்ந்து வடமொழிச் சொற்களைப் புகுத்தினர். "நட்டூர் - மத்யபுரி" ஆயிற்று; "கருவூர் -கெர்ப்பபுரம்" ஆயிற்று; "பேரூர் -ஆதிபுரி" எனப்பட்டது. ஊர்ப் பெயர்கட்குப் புராணக் கதைகளையும் படைத்தனர். தஞ்சாவூருக்கும் "தஞ்சன்" என்ற அரக்கனுக்கும் தொடர்புபடுத்தினர். சிராப்பள்ளியை (சமணப்பள்ளி) "திரிசிரா" மூன்று தலையுடைய அரக்கனோடு தொடர்புபடுத்தினர். இராசராச சோழன் கட்டிய பெருவுடையார் - பெரியநாயகி கோயிலை "பிரகதீசுவரர்" "பிரகந்நாயகி" என்று அழைத்தனர் அழைக்குமாறு கூறினர்.

ஈரோடு மாவட்டத்தில் பவானி இரண்டு ஆறுகள் கூடும் இடம். அங்குள்ள இறைவன் பெயர் "நண்ணாவுடையார்" அம்மன் பெயர் "பண்ணாரி மொழியம்மை" என எல்லாக் கல்வெட்டு, செப்பேடு, ஆவணம் அனைத்திலும் இப்பெயரே காணப்படுகிறது. ஆனால் "சங்கமேசுவரர்" "வேதநாயகி" என்ற பெயரை "மார்க்கசகாயர்" என மாற்றியதுபோல் ஏராளமான பெயர்களை மொழி பெயர்த்தனர் அல்லது மாற்றினர்.

தமிழகக் கட்டடக் கலையின் நுட்பங்களைப் பழந்தமிழர் கட்டிய பல கோயில்களில் காணுகின்றோம். வடநாட்டுக் கட்டடக் கலை இதற்கு முற்றிலும் மாறுபட்டது. ஆனால் தமிழ்நாட்டுக் கட்டடக்கலை நூல்கள் வடமொழியிலேயே உள்ளன. தமிழில் உள்ளவைகளை வடமொழியில் மொழி பெயர்த்துக் கொண்டு தமிழ்நூல்களை அழித்து விட்டதை அல்லவா இது காட்டுகிறது.

"தமிழ் ஓலைச் சுவடிகளை ஆடிப்பெருக்கன்று ஆற்றிலும், கார்த்திகை தீபத்தன்ற நெருப்பிலும் இடுவது புண்ணியம்" என்ற செய்தியைப் பரப்பிப் பல்லாயிரக்கணக்கான சுவடிகள் அழிவதற்குக் காரணமாக இருந்தவர்கள் வடமொழியாளர்கள்.

வடமொழியாக்கப்பட்ட தமிழ்ப் பெயர்களின் வடிவம் அருவருப்பையும் ஏற்படுத்திகின்றன. ஈரோடு என்பது இரண்டு ஓடைகளால் ஏற்பட்ட பெயர். ஈரோடை-ஈரோடு ஆயிற்று. ஆனால் அதை "ஈரஓடு" என்று பிரித்து தலையில் கங்கையாறு இருப்பதால் ஈரமான தலை ஓட்டையுடைய சிவபெருமான் இருக்கும் ஊர் என்று கூறி "ஆர்த்தரகபாலபுரிசுவரர்" ஆக்கி ஈரோடு என்பதையும் "ஆர்த்தரகபாலபுரி" ஆக்கிவிட்டனர்.

அம்மன் பெயர் "வாரணி அம்மை" (வார்=கச்சு); இப்பெயரைப் பூசையின்போது "குஜமஸ்த குசும ஸ்தானாம்பிகை" என்று கூறுகின்றனர். இதன் பொருள் "தர்ப்பைப் புல்லால் இறுக்கிக் கட்டப்பட்ட தனங்களை உடைய பார்வதி" என்பதாகும்.

வடமொழி ஆதிக்கத்தால் செம்மேனியுடைய சிவன், "ருத்திரன்" ஆனார்; தமிழ் முருகன் "சுப்பிரமணியர்" ஆனார்; மால், திருமால், விஷ்ணு எனப்பட்டார். வழக்கில் இல்லாத "இந்து" என்ற பொதுச் சொல்லையும் உருவாக்கினர். "வேதநெறி தழைத்தோங்க" தமிழ் கோயிலை விட்டு அகன்றது.

பூவால் செய்யப்பட்ட வழிபாடே "பூசை" ஆயிற்று என்பது அறிஞர் துணிவு. ஏராளமான சொற்களை வடமொழியில் பெயர்த்து அதுவே மூலச்சொல் என்றனர்.

மொழி, இலக்கிய வரலாற்று ஆய்வுகளைத் தொடங்கியவர்கள் மேனாட்டினரே என்பதில் ஐயமில்லை. தமிழர்கள் உயர்கல்வி கற்க இயலாதிருந்ததால் கற்ற பார்ப்பனர் மேனாட்டினரை அண்டியிருந்ததால் அவர்கள் ஆய்வும் வடமொழிக்கே வாய்ப்பாக இருந்தது. இன்றும்கூட தமிழகப் பெரும் ஆய்வாளர்கள் வடமொழியாளர் வகுத்த பாதையிலேயே நடைபோடுகின்றனர்.

"செட்டு" என்பது வணிகத்தைக் குறிக்கும் சொல். பல இலக்கியங்களில் பயின்று வருகிறது. செட்டு செய்பவன் செட்டியார்; ஆனால் தமிழ் ஆய்வாளர் பலர் "சிரேஷ்டி" என்ற சொல்லே செட்டியார் ஆயிற்று என்று எழுதுகின்றனர். சிரேஷ்டி மூத்தவனே தவிர செட்டியார் அல்ல.

"கோடு" என்ற சொல் அடிப்படையாகப் பிறந்தது "கோட்டை" என்பது. கோஷ்டம்தான கோட்டை ஆயிற்று என்கிறார் இந்தியப் புகழ்பெற்ற ஒரு வரலாற்று ஆசிரியர்; அவர் தமிழர்; சிவபெருமான் சிரித்து (நகல்புரிந்து) முப்புரத்தை எரித்ததால் "நக்கன்" எனப்பட்டார். சிவன் அடியார்க்கும் அப்பெயர் உண்டு. ஆனால் "நக்ணன்" என்ற சொல்லே நக்கன் ஆயிற்று என்பார் ஒரு தமிழ்ப் பேராசிரியர். வடமொழிக்கு அடிமையான தமிழ்ப் பேராசிரியர்கள், வரலாற்றாசிரியர் இன்னும் உள்ளனர்.

பார்ப்பனர் தொடர்பு இருந்தால்தான் ஒருவன் அறிஞன் ஆக முடியும் என்பதால் தானே "ஆதி" என்ற தாழ்த்ப்பட்ட பெண்ணுக்கும் "பகவான்" என்று பார்ப்பனனுக்கும் பிறந்தவர்கள் திருவள்ளுவர் என்ற பொய்க் கதை உருவானது. இந்தப் பொய்யை மெய்யென்று நம்பிய ஒரு பேரறிஞர் தம் கவிதைகளில் திருவள்ளுவரை "ஆதிபகவன் மைந்தன்" என்று மேடையில் பாடினார். தவறென்று தெரிந்த அக்கவிதை அச்சாகும்போது அந்தத் தொடரை நீக்கிவிட்டார்.

வடமொழி ஆழிப்பேரலை ஏற்படுத்திய வடுக்கள் இன்னும் ஆறாமல் உள்ளன. அண்மையில் ஒரு பெரும் கவிஞர் "அங்கொன்றும் இங்கொன்றுமாக" சிறு வடமொழித் தாக்கம் இருப்பதாக எழுதியுள்ளார் அங்கிங்கெனாதபடி எங்கும் காணப்படுகிறது. அதன் தாக்கம் "மறையாமல் நின்று பல வடிவங்களில் காட்சியளிப்பது கொடுமையிலும் கொடுமை".

அதன் தாக்கம் சிதம்பரம் சிற்றம்பலம் சன்னதியில், திருமுக்கூடல் குடமுழுக்கு விழாவில், கரூர் பசுபதிவரர் கோயிலில் இருப்பதை இன்றும் காண்கிறோம். இனிமேலாவது பேரலையைத் தடுத்து நிறுத்துவது தலையாய கடமையாக இருக்க வேண்டும்...

சேலம் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிணற்றில் குதித்து விவசாயி தற்கொலை முயற்சி...


பொக்ரான் அணுகுண்டுச் சோதனையும், சித்தர்களின் கண்டு பிடிப்பும்...


பொக்ரைனில் அணுகுண்டு வெடித்து பரிசோதனை செய்யப்பட்ட போது, இந்தியா கூறிய பிறகே உலக நாடுகளால் அறிய முடிந்தது.

அமெரிக்கா போன்ற வல்லரசுகள் கூட ஆச்சரியப்பட்டன.

எந்த ஒரு செயற்கைக்கோளாலும் (satellite) முன் கூட்டி அறிய முடியவில்லை. என்ன காரணம் தெரியுமா?

அணுகுண்டைச் சுற்றி வெங்காயச் சருகுகளால் மூடப்பட்டிருந்ததே.

வெங்காயச் சருகுகளுக்குள் எந்தவொரு கதிரியக்கமும் நுழைய முடியாது என்பதை கண்டு பிடித்துக் கொடுத்தவர் பதினெண் சித்தர்களில் ஒருவரான போகர் மகரிசி...

உலக அரசியல் தெரிந்துக் கொள்ள வேண்டுமா.?


நாமம் - இந்த அடையாளத்திற்கு பின்னால் இலுமினாட்டி அரச குடும்பத்தின் ஆயுதம் உள்ளது...


இதை பயண்படுத்த தெரிந்தவன் தான் உலகை ஆளுகிறான்..

ஆனால் இது வெறும் 1% தான் இதை போல இன்னும் 99% இருக்கிறது...

ஆனால் தற்கால பார்பனர்களும் ஒரு சில தமிழ்குடிகளும் இதை என்ன என்று தெரியாமல் நெற்றியில் வரைகிறார்கள்...

வணிகப் போர்... புது உலகமைப்பு நோக்கி...


இந்திய, சீன நிறுவனங்களுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது...

வெற்றிலை போடுவது ஏன்..?


பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து.

மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது.

என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும்.

இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோசங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது.

இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, சா(ஜா)திபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. சீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

ஆக மொத்தம் தாம்பூலம் தரிப்பதில் இத்தனை நல்ல வசயங்கள் அடங்கி உள்ளன அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது.

தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது.

ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணாம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும்.

அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்து கொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.

இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது...

திருட்டு திராவிட பகுத்தறிவு...



நேற்றுவரை சேலம் சென்னை இடையில் வாழும் மக்களின் பிரச்சினை என்று மட்டும் நம்பிக் கொண்டிருந்த மதுரை தஞ்சை இடையில் வாழும் மக்களின் கவனத்திற்கு...


இப்படித்தான் முல்லை பெரியாருக்கு டெல்டாவும், காவிரிக்கு கொங்குவும், கூடங்குளத்திற்கு சென்னையும் தட்டிக் கழித்துவிடும் வாழ்க்கை தமிழ்நாட்டிற்கு இனி ஒருபோதும் இல்லை..

இது தமிழ்த்தேசிய பிரச்சினை...

ஈழத்தின் 30 ஆண்டுகால வரலாற்றை படியுங்கள்...


அதுவே நமக்கு சிறந்த அரசியலை வழிகாட்டும்..

அதுதான் உலகின் தலைசிறந்த அரசியல் மற்றும்  வரலாற்று நிகழ்வாக இருக்கும்..

நாங்கள் எங்களால் முடிந்தவரை அந்த வரலாற்றை பதிவுகளாக தர முயற்சிக்கிறோம்..

சிலை கடத்தல் பிரிவில் இருந்து ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் மாற்றம் ஏன்.?


2030 ல் மீண்டும் பனியுகமா ?


சரியாகப் இன்னும் 15 வருடங்கள் கழித்து சிறிய அளவில் பனியுகம் வரும் என அனுமானிக்கப்படுகிறது.

1646 மற்றும் 1715 ல் , இது போன்ற சிறிய அளவிலான பனியுகம் ஏற்பட்டதாம்..

அதில் லண்டன் நகரில் உள்ள தேம்ஸ் நதியே உறைந்து போனது...

இப்போது வரபோகிற பனியுகம் இதைவிட வலிமையாக இருக்கும் என சொல்லப்படுகிறது..

2020 ல் சூரியனின் ஆற்றல் சற்று மட்டுப்படுவதால் , இப்படிபட்ட பனியுகம் ஏற்படப்போகிறது என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்...

உயர்நீதிமன்றம் எனும் மாமா மன்றம்...


வந்து கொண்டி௫க்கிறது சாகர்மாலா அதை பற்றிய ஒரு சிறு கதை..


அது எல்லா வளங்களும் நிறைந்த அழகிய விவசாய கிராமம். அந்தக் கிராமத்தின் எல்லையில் ஒரு தொழிற்சாலை அமைய இருக்கிறது. அதற்காக நிலம் கையகப்படுத்தப்படுகிறது.

நிலம் கையகப்படுத்துதலில் அதிகாரத்தைப் பயன்படுத்தி வாங்குவது, இரண்டாவது நிலையை எடுத்துச் சொல்லி விவசாயிகளுக்கு ஆசைவார்த்தை காட்டி (உங்களுக்கு வேலைத் தருகிறேன் என்பது உட்பட) நிலங்களை வாங்குவது என இரண்டு வகை உண்டு.

விவசாயிகளும் ஆசை வார்த்தைகளுக்கு இணங்கி எழுதிக் கொடுத்து விடுகிறார்கள். விவசாயிகளுக்கு அதிகாரிகள் சொன்னபடி தொழிற்சாலையில் வேலைக் கிடைக்கிறது என்றே வைத்துக் கொள்வோம்...

இப்போது அவனுக்குத் தொழிற்சாலையில் 10,000 சம்பளம் கொடுக்கப்படுகிறது. சரியான சாலை வசதி இல்லாத ஊருக்கு புதிய அகலமான சாலை போடப்படுகிறது. வாகன வசதிகளே இல்லாத ஊருக்கு வாகனங்களும் பேருந்து வசதியும் செய்யப்படுகிறது. ஊரில் கடைகளும், காம்ப்ளக்ஸ்களும் பெருக ஆரம்பிக்கின்றன.

இது எல்லாமே வளர்ச்சியின் அடுத்த கட்டம்தான் என்பது மறுக்க முடியாது. ஆனால், இதற்கு முன்னர் 10 பேருக்குச் சம்பளம் கொடுத்துக் கொண்டிருந்தவன், 10 ஆயிரத்துக்காகக் கையேந்துகிறான்.

தொழிற்சாலை வேலைக்கு ஆட்கள் வேலைக்கு போவதால் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். புதிதாக அமையும் தொழிற்சாலையின் தண்ணீர்த் தேவையால் விவசாய நிலங்களும் பாதிக்கப்படும்.

தொழிற்சாலை வளர்ச்சிக்கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டே இருக்கும். கிராமமானது விவசாயம் பொய்த்துப்போய் வீழ்ச்சியைச் சந்திக்கும். இதற்காகத் தொழிற்சாலை வேண்டாம் என்று சொல்லவில்லை. இதில் கேள்வியே தொழிற்சாலையை அமைக்க அதிகமான இடங்கள் இருந்த போதும் வளமான கிராமத்தில் ஏன் நிறுவ வேண்டும் என்பதுதான்...

மேற்கண்ட செயலைத்தான் ஒவ்வொரு வளர்ச்சித் திட்டங்களிலும் அரசு முன்னெடுத்துக் கொண்டே இருக்கிறது. பல இடங்களில் சுற்றுச்சூழல் கேடுகளை விளைவிக்கக் கூடிய திட்டங்களை அரங்கேற்றியிருக்கிறது, மத்திய அரசு. இதன் தொடர்ச்சியாக  இன்னொரு புதிய திட்டம் செயல்படுத்துவதற்கான வேலைகளைத் தொடங்கியுள்ளது மத்திய அரசு. அதுதான் சாகர்மாலா திட்டம்...

வணிகப் போர் உச்சம்...


ரூ.1.65 கோடி மதிப்பீடு 25 அறைகள்... பசுமை வழிச்சாலைக்காக இடிக்கப்படும் புதிய பள்ளிக் கட்டடம்...


2016-2017-ம் ஆண்டு அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் நபார்டு வங்கி உதவியுடன் பாப்பிரெட்டிபட்டி அடுத்துள்ள லட்சுமாபுரம் பகுதியில் மலைவாழ் மக்களின் குழந்தைகள் படிப்புக்காக ரூ.1.65 கோடி செலவில் 25 அறைகள் கொண்ட அரசு உயர்நிலைப் பள்ளிக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்தப் பள்ளிக்கட்டடம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

தற்போது, பசுமை வழிச்சாலைக்காக இந்தப் பள்ளிக் கட்டடம் இடிக்கப்பட உள்ளது. மலைவாழ் மக்களின் பெரும் முயற்சியில் கொண்டுவரப்பட்ட இந்தப் பள்ளிக் கட்டடம் இடிக்கப்பட இருப்பது அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது...

மக்களும் மறதியும்...


ஆண்களும் அணிந்த தாலி...


தாலி என்பது கழுத்து நகையைக் குறிக்கும் பெயர்ச்சொல்.

இதை பழங்காலத்தில் ஆண்களும் பெண்களும் அணிந்தனர்.

ஒரு பெண் ஒரு ஆணை "நான் உன்னைக் கட்டிக்கொள்கிறேன்" என்று கூறுவது முரண்பாடான ஒன்று கிடையாது.

ஆணுக்கு பெண் தாலி அணிவிக்கும் வழக்கத்தையே குறிக்கிறது. பிறகு இதுவே ஆணின் காலில் பெண் மெட்டி அணிவிக்கும் வழக்கம் வந்தது.பிறகு அதுவும் பெண்களுக்கு போனது.

புலிப்பல் "தாலி" என்ற அணியை ஆண், பெண்இரு பாலாரும் அணிந்திருந்தனர்
என்பது பண்டைத்தமிழ் இலக்கியங்களில்இருந்து தெரிய வருகிறது.

ஆதிமனிதர் தாம் வேட்டையாடிய சில விலங்குகளின் எலும்புகள் , பற்கள் , நகங்கள் போன்றவற்றை அணிகலன்களாக்கி அணிந்தணர்.

குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த வேட்டுவர்கள் தமது பிள்ளைகளுக்குப் புலிப்பல் தாலி அணிவித்தது சங்க இலக்கியங்களிலிருந்தும் தெளிவாகிறது.

ஆனால், சிறுவரும், சிறுமியரும் புலிப்பல் தாலி அணிந்தமையால் மறக் குலத்தின் வழிவந்தவர்கள் என்பதைக் காட்டுவதற்காக  அணிவிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இவ்வழக்கமே பிற்காலத்தில் "ஐம்படைத் தாலியாக" வளர்ச்சியடைந்தது.
புலிப்பல் தாலி என்னும் காப்பணி ஐம்படைத் தாலிக்கு முற்பட்டது ஆகும்.

ஐம்படைத் தாலி என்பது பண்டைக் காலத்திலிருந்தே தமிழரிடையே வழக்கில் இருந்த ஒருவகை அணிகலன் ஆகும்.

சிறுவர்களின் கழுத்தில் காவலுக்காக இது அணியப்பட்டதாகத் தெரிகிறது .

புறநானூற்றுப் பாடல் ஒன்றில் "தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்" மிக இளம் வயதிலேயே போருக்குச் சென்றதைக் காட்டுமுகமாக,
"தாலி களைந்தன்று மிலனே"
என்று அவன் தாலியை இன்னும் களையாத சிறுவயதினனாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
வாலிபப் பருவம் அடைந்தவுடன் தாலியைக் களைந்துவிட்டே கால்களில் கழல் அணியும் வழக்கம் இருந்தது .

"தாலம்" என்ற சொல் புல்வகையைச் சார்ந்த பனை போன்ற தாவரங்களைக் குறிப்பது.
ஒரு காலத்தில் பனை ஓலையைச் சுருட்டி நூலில் கட்டிக் கழுத்தில் அணிந்தமையாலேயே தாலி என்னும் பெயர் ஏற்பட்டது என்ற கருத்தும் உண்டு.

நோய்வராமல் தடுப்பதற்காக மந்திர ஓலைச் சுருளைக் கை,கால், கழுத்து போன்ற உறுப்புக்களில் அணிந்து கொள்வது பழங்காலத்தில் வழக்கில் இருந்ததாகத் தெரிகிறது.

எனவே "தாலம்" என்ற சொல்லிலிருந்து காப்பு அணிகளைக் குறிக்கும் "தாலி". என்ற பொதுச் சொல் தோன்றியிருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு.

தற்காலத்தில் தமிழ்நாட்டில் ஐம்படைத் தாலி அணியும் வழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை.

(பெரிய இடத்து இளைஞர்கள் புலிப்பல் போன்ற அமைப்பை சங்கிலியில் அணிவது காணப்படுகிறது.இதை மைனர் செயின் என்கிறார்கள்)

மிகவும் அண்மைக்காலம் வரை செட்டிநாடு போன்ற தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இவ்வழக்கம் இருந்துள்ளது.

ஆனாலும், இலங்கையில் இன்னும் பஞ்சாயுதம் என்ற பெயரில் இவ்வணி புழக்கத்தில் உள்ளது.

யாழ்ப்பாணத்து நகைக்கடைகளில், முக்கிய அணி வகைகளுள் ஒன்றாகப். பல்வேறு வடிவமைப்புக்களைக் கொண்ட பஞ்சாயுதங்களை இன்றும் காண முடியும்.

இத்தகைய பஞ்சாயுத அணிகளில் கதாயுதத்திற்குப் பதிலாக ஈட்டி, சூலம் போன்ற ஆயுதங்கள் காணப்படுவதும் உண்டு.

சூலம் சிவனுக்கு உரியது என்பதும், யாழ்ப்பாண மக்கள் சைவ மரபைப் பின்பற்றுபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே வேளை, சிலப்பதிகாரம் கொற்றவை என்னும் பழந்தமிழர் தெய்வத்தின் ஆயுதங்களாக, சூலம், வாள், வில், சங்கு, சக்கரம் ஆகியவற்றைக் குறிப்பிடுவதும் கவனிக்கத்தக்கது.

இலங்கையில் தமிழர்கள் மட்டுமன்றிச் சிங்களவர்களும் பஞ்சாயுதம் அணியும் வழக்கத்தைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பழங்காலத்தைப் போலவே சிறுவர்களுக்கே இது அணிவிக்கப்படுகிறது.பதக்க வடிவில் பொன்னால் செய்யப்படும் இதனைப் பொன் சங்கிலியில் கோர்த்து அணிவிப்பர்.

குழந்தை பிறந்து பொதுவாக 31 ஆவது நாள் துடக்குக் கழிவுச் சடங்கின்போது பஞ்சாயுதம் அணிவிப்பது வழக்கமாக உள்ளது...

நிபா (Nipha) வைரஸ் உருவானதா?உருவாக்கப்பட்டதா?



               https://youtu.be/ofjRVmTJ_rs

பாஜக - அதிமுக - காவல்துறையின் அரச பயங்கிரவாதத்தை தடுப்போம்...


அரசாங்கத்தின் திட்டத்தை நிறைவேற்ற காவல்துறை மூலம் மக்களின் உரிமைகளை துச்சமாக தூக்கி எறியும் தமிழக அரசின் அராஜகத்தை இன்னும் புரிந்து கொள்ள முடியாதவர்களுக்காக..

இந்த அராஜகத்தை இன்றே தடுக்கவில்லை என்றால் நாளை நம் அனைவருக்கும் இது தான் நிலை.

ஜூலை 1, ஞாயிறு காலை 9.30 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காவல்துறையின் அனுமதியுடன் நடைபெறும் அமைதி ஆர்ப்பாட்டத்தில்  கலந்து கொள்ள உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்...

மக்களும் மறதியும்...


இதோ Suez sticker ஒட்ட ஆரம்பிச்சுட்டானுக...


குடிநீர் சாதாரன விடையமே அல்ல..

உங்கள் சிறுநீரகத்துடன் நெருக்கமான தொடர்புடைய ஒரு உயிர்ப்பொருள் இது.

சிறுநீரகம், உயிருடன் நெருக்கமாக தொடர்புடைய ஒரு உறுப்பு.

இனி உங்கள் உயிர் France நாட்டுக்காரன் கையில்.

விழித்துக் கொள்ளுங்கள் அல்லது சாவு நிச்சயம்.

அடுத்த பதிவில் தெளிவாக விளக்குகிறேன்.

பஞ்சபூதங்கள் எவன் கைக்கும் செல்லக்கூடாது...

வளர்ச்சி என்பது எது.?



வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் விஷம் அருந்திய பெண்ணுக்கு சிகிச்சை அளித்த அரசு மருத்துவமனை காவலாளி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்...


அந்த பெண்ணுக்கு காவலாளி ட்ரிப்ஸ் ஏற்ற உதவும் வீடியோ காட்சிகள் வெளியாகின. அவசர சிகிச்சைப் பிரிவில் போதிய செவிலியர்கள் பணியில் இருந்த போதும், அறையில் அவர்கள் ஓய்வு எடுத்து கொண்டு இருந்ததாக கூறப்பட்டது.

இந்த சம்பவத்தை அடுத்து,  மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் யாஸ்மின் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பேசிய அவர், காவலாளி இளங்கோ பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 4 செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப் பட்டிருப்பதாகவும் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் யாஸ்மின் கூறியுள்ளார்...

ஜூலை மாதமும் உலக அரசியலும்...