11/10/2017

பாஜக மிரட்டியும்.. ரோகிணிசிங் மிரட்டலுக்கு அஞ்சாமல் அமித்ஷா மகனின் ₹80கோடி ஊழலை.. திவயர் இணையதளத்தில் புள்ளி விபரத்துடன் அம்பலபடுத்தினார்...


சோழர் ஆட்சியில் மருத்துவம்...


சோழர் ஆட்சியில் ஆதுலர் சாலை எனும் இலவச மருத்துவ முகாம் இருந்துள்ளது.

மற்றும் மருந்து எழுதிக் கொடுக்கும் பணியாளரும் சல்லியக் கிரியை என்றழைக்கப்பட்ட அறுவை சிகிச்சை மருத்துவர் பற்றியும் கல்வெட்டு உள்ளது.


மருந்து இட பெண்கள் பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.

கல்வியோடு மருத்துவமும் கற்றுக்கொடுத்த கல்லூரியும் இருந்துள்ளது.


மேற்கண்ட பணிகளுக்கு அளிக்கப்பட்ட கூலி விபரங்கள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன...

பாஜக என்பது மதவாத கட்சி மட்டும் அல்ல... நாடார் சாதி கட்சி என்பதையும் புரிந்துக் கொள்ளுங்கள்...




மிக சிறந்த கொசு விரட்டி...


நாய் துளசி எனப்படும் கஞ்சாங்கோரை வீட்டில் வைக்கும் போது கொசு அண்டவே அண்டாது இதன் வாசம் இருக்கும் வரை...

ATM ல் பணம் எடுக்க முடியவில்லை, காஞ்சிபுரம் கோவில் வாசலில் பிச்சை எடுத்த ரஷ்ய நாட்டு வாலிபர், உதவி செய்த காவல் துறை...


காஞ்சிபுரத்தில் பின் நம்பரை தவறாக உள்ளீடு செய்ததால் ATM கார்டு லாக் ஆகி அந்த வாலிபரால் பணம் எடுக்க முடியாமல் போயியுள்ளது.

சென்னைக்கு செல்வதற்கு கையில் பணம் இல்லாததால் கோவில் வாசலில் நின்று தன்னிடமிருந்த தொப்பியை கவிழ்த்தி பிச்சை எடுத்துள்ளார். பொதுமக்கள் அவருக்கு உதவியும் செய்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் காவல் துறை ரஷ்ய வாலிபருக்கு பணம் கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர்...

கடவுள் இருக்கிறாரா? இல்லையா?


இந்தக் கேள்வி காலம் காலமாகக் கேட்கப்பட்டு வருகின்றது. ஆனால் நேரடியான பதில்தான் இல்லை.

முதலில் ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

நான் கடவுளை நம்புகிறவன். தினமும் காலை குளித்து முடித்தவுடன் கடவுள்கள் படங்களுக்கு முன் நின்று ஒரு கும்பிடு போட்டுவிட்டு, நெற்றி நிறைய விபூதி பூசுகிறவன். ஆனாலும் இந்தக் கேள்வி அடிக்கடி என் மனதில் தோன்றிக் கொண்டு இருக்கிறது.

சூரியன் இருக்கிறானா, சந்திரன் இருக்கிறானா என்று யாரும் கேள்வி கேட்பதில்லை. அவை கண்ணுக்கு முன்னால் தெரிகின்றன. அவைகளின் செயல்களை உணருகிறோம். ஆகவே அவைகளின் இருப்பு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது.

ஆனால் கடவுள் அப்படியில்லை. கடவுளைப் பார்த்தவர்கள் யாரும் இல்லை. பார்த்தாகச் சொல்பவர்கள் ஒன்று பொய்யர்கள் அல்லது மனப்பிராந்தி பிடித்தவர்கள்.

அப்படியானால் கடவுள் என்ற ஒரு தத்துவம் எப்படி உருவாகியது? இது மிகவும் ஆராய வேண்டிய கேள்வி.

கடவுளை உருவாக்கியவர்கள் யார்? ஏன் உருவாக்கினார்கள்? அது மக்களை எவ்வாறு அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தீர்க்கமான பதிலை இந்த சிறு பதிவில் முடிக்க முடியாது. தவிர அந்த அளவிற்கு எனக்கு ஞானமும் இல்லை.

ஆனால் நான் ஒரு சராசரி அறிவுள்ள ஒரு மனிதன். பல ஆன்மீகப் புத்தகங்களைப் படித்திருக்கிறேன். பல ஆன்மீகப் பிரங்கங்களைக் கேட்டிருக்கிறேன். பல சாமியார்களின் நடவடிக்கைகளைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் காலில் விழுந்தும் இருக்கிறேன்.

இந்த பின்புலத்தில் என் மனதில் தோன்றும் கேள்விகளையும் அதன் பதில்களாக என் மனதில் தோன்றும் எண்ணங்களையும்தான் இங்கே பகிர்கிறேன்.

ஆதி மனிதனைக் கடவுள்தான் படைத்தார் என்ற விவாதத்தில் நம்பிக்கைதான் ஆதாரமே தவிர வேறு எந்த ஆதாரத்தையும் காட்ட முடியாது.

இன்றும், கடவுளைக் காட்ட முடியுமா என்றால் அது அவரவர் நம்புக்கையின்பாற்பட்டது என்றுதான் சொல்லுகிறார்களே தவிர கடவுளைக் காட்டுவார் யாரும் இல்லை.

கடவுள் என்று ஒருவர் இருந்திருந்தால் அவர் எல்லோருக்கும் பொதுவானவர் ஆகத்தானே இருந்திருக்க வேண்டும்?

ஏன் இந்துக்களுக்கு ஒரு கடவுள் (ஒருவரல்ல, எண்ணிலடங்காத கடவுள்கள்), இஸ்லாமியர்களுக்கு ஒரு கடவுள், கிறிஸ்தவர்களுக்கு ஒரு கடவுள் என்று இருக்கிறார்.

ஆதியில் ஒரு மனிதனிலிருந்துதானே மற்ற எல்லோரும் உற்பத்தியானார்கள்?

அப்போது முதல் மனிதனை உண்டாக்கிய கடவுள் ஒருவர் தானே இன்று வரையில் இருக்க வேண்டும்?

ஏன், எப்படி இத்தனை கடவுள்கள் உண்டானார்கள்?

ஆகவே கடவுள் என்பவர் மனிதனால் உருவாக்கப்பட்டவர் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அவரவர்கள் தங்கள் தங்கள் சிந்தனைக்கு ஏற்ப கடவுள்களை உருவாக்கிக் கொண்டார்கள். அதுதான் முழுமுதற்கடவுள் என்று நம்பி வழிபட்டார்கள்.

தங்களின் மனம் சலனமடையும் போது ஒரு ஊன்றுகோலாக கடவுளைப் பயன்படுத்தினார்கள். இன்னும் வழிபட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

இதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் கடவுளைக் காட்டி, மக்களை ஏமாற்றுகிறார்களே, அவர்களை என்ன செய்யலாம்?

அப்படி கடவுளை வைத்து வியாபாரம் செய்பவர்களை நம்புகிறார்களே அவர்களைப்போல் முட்டாள்கள் யாராகிலும் உண்டா?

கடவுளை நம்பினால் நம்புங்கள். அது உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால் கடவுளை வைத்து வியாபாரம் செய்பவர்களை நம்பாதீர்கள். அவர்கள் உங்களை மூளைச்சலவை செய்து அடிமைகளாக்கி விடுவார்கள். உங்கள் வாழ்க்கையை இழந்து விடுவீர்கள். கொஞ்சம் சிந்தியுங்கள்.

வாழக்கையையும் உங்களை நம்பி இருப்பவர்களையும் கோட்டை விட்டு விடாதீர்கள்...

சித்தர் ஆவது எப்படி - 9...


சித்தத்தின் வெளிச்சத்தால் வரும் அலைச்சல்...

வெளிச்சம் என்பது சிதறிய ஒளி.. ஒளி என்பது ஒரே நேர் கோட்டில் பயணப் படுவது..

சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே என்று ஒரு சிவனடியார் சொன்னால் அவர் தன் வெளிச்சமான சித்தத்தை பலவகைகளில் சிதற விடாமல், ஒரே நெறியாக கொள்கையாக, ஒரே நோக்கமாக, பார்வையாக, ஒளியாக சிவ நெறிபால் மாற்றி கொண்டார் என்று அர்த்தம்...

இதை தான் தெளிந்த சித்தம் எனப்படும்...

அதாவது பல தரப்பட்ட எண்ணங்கள் செயல்பாட்டால் எது செய்வது என்று நிலை குழைந்து போகாமல், எதை செய்தால் எல்லாம் செய்வதாக ஆகுமோ, அதற்கான ஒரு எண்ணத்தோடு இருந்து தன் முழு ஆற்றலையும் சிதற அடிக்காமல், ஒரே குறிகோள் உடன் இருந்து முழு ஆற்றலையும் பயன்படுத்தி வெற்றி பெறுபவர் என குறிக்கும்..

இப்படி பட்டவர்களை ஒளி நெறியாளர்கள் என அழைக்கப் படுவார்கள்...

சித்தம் தெளிந்தாரே ஒளி நெறியாளர் ஆக முடியும்....

சித்தர்கள் தோற்றுவித்த ஒளி நெறி பீடம் ஒளி நெறியாளர்களுக்காகவே...

சித்தம் தெளியாமையாலே சிதறிய ஒளி, சிதறிய வண்ணமான வெளிச்சமாகவே இருந்து, முதலில் குறிகோள் அற்று இருப்பதும், பின் குறிகோள்களை அடிக்கடி மாற்றி மாற்றி அலைவதும், பின் ஏதாவது குறிக்கோளை பிடித்து விட்டால் அதில் முழு கவனம் செலுத்த முடியாமல், பலதரப்பட்ட எண்ண ஆதிக்கங்களால் தடைகள் ஏற்பட்டு, அந்த குறிகோளை தவற விடுவதும், இது போன்ற நெறி கெட்ட செயல்கள் நடந்து கொண்டே இருக்கும்..

சித்தம் தெளியவில்லை என்றால் வாழ் நாள் முழுமைக்கும் மனிதன் துன்பத்தை தவிர வேறு ஒன்றை அனுபவிக்க முடியாது... எதையும் அடையாமல் அலைச்சல் ஒன்றே மிஞ்சும்....

சித்தத்தின் எண்ண ஆதிக்கத்தை அடக்கவல்லது புத்தியும் அறிவுமே..

மன சாட்சியாகிய புத்தியில் நிலை கொள்ள கொள்ள புத்தி பலப் பட்டு விட்டால், பின் சித்தத்தின் எண்ண ஆதிக்கத்தை அடக்கும் வலிமை புத்திக்கு வந்து விடும்...

புத்தி பலப் படுவது மனிதனுடைய இருப்பு தன்மைதான் என்றும் அந்த இருப்பு தன்மை வாசியோகத்தில் சூரிய கலையில் முடியும் தருவாயில் கிடைப்பதை நாம் ஏற்கனவே கண்டோம்..

இருப்பு தன்மையில் இருக்க இருக்க ஒரு உள் உணர்வு தோன்றுவதை பயிற்சியில் கண்டோம்..

அந்த உணர்வு பேரண்ட பேராற்றலின் வரவாக கனலை உணர்வதே..

அப்படி உள் உணர்வை உணர உணர புத்தியில் கனல் பெருக்கம் அதிகமாகிறது..

இதை தான் குரு பீடம் உருவாகி, வலுவான குரு தோன்றுகிறார் என்கிறோம்..

உள் குரு புத்தியில் வலுவாக உட்கார்ந்து விட்டால், நம் பிரச்சனை முக்கால்வாசிக்கு மேல் தீர்ந்தது போலதான்..

நம் உள் குரு பீடம் அமைய, ஒரு உருப்படியான உபாயம், வெளிவிடும் மூச்சாகிய சூரிய கலையின் முடிவில் உணரும் கனல் தன்மை தான் என்பதை மறக்காமல், அதை சூரிய கலை முழுமைக்கும் பயின்று, அனுபவப் படும் போது, கனல் பெருக்கம் ஏற்படும்..

நாத ஒளியோடு நாம் இருக்கின்ற போதும், கனல் பெருக்கம் ஏற்படுகிறது..

அக குருவாகிய உள் குரு தோன்றி பலப்படும் போது சித்தம் அடக்கப் படுகிறது...

அடக்கப் பட்ட சித்தம் என்றாவது ஒரு நாளோ சற்று தாமதமாகவோ மீண்டும் எழுந்து ஆட தொடங்கலாம்...

சித்தத்தை தற்காலிகமாக அடக்கி அடக்கி வைத்து கொண்டாலும் ஞானம் பெற்ற உள் குரு ஒன்றே, சித்தத்தை நிரந்தரமாக சமாதானப் பெற்ற நிலைக்கு சித்தத்தை கொண்டு வர முடியும்..

அக குரு ஞான குருவாக உயர வேண்டிய அவசியம் ஆகிறது..

அதனை பின் வரும் பகுதிகளில் காணலாம்..

அக குரு பலப் பட்டு விட்டாலே போதும், வாழும் உலகில் நம்முடைய எந்த பிரச்சனை இருந்தாலும், அதனை திறம் பட சமாளிக்கும் வல்லமை வந்து விடும்..

நாம் நன்றாக வாழும் வழி நம் கையில் மட்டுமே உள்ளது...

நம்மிடம் தற்போது இருக்கின்ற புத்தியை திசை திருப்பி அதனையே, அதாவது அந்த புத்தியையே வலுப் படுத்தும் நெறிக்கு செல்வோமாக...

இதை தவிர வேறு ஒரு வழி இல்லை, இல்லவே இல்லை.. உணர்ந்து செயல் படுவோமாக...

தமிழ்நாடு செப்டம்பரில் அழிவிலிருந்து அதிர்ஷ்ட வசமாக தப்பியது...


தி ஹிந்து ராம் மற்றும் நக்கீரன் — ஒரு செய்தி ஆனால்?


ஆங்கில ஊடகம்  கூட பாஜக அலுவலகத்தில்தான் ஆயுதங்கள் கிடைத்தது என்று செய்தி வாசித்தார்கள், ஆனால் தமிழ் ஊடகம் மட்டும் மறைக்க முயல்கிறார்கள்.

சபாஷ் நக்கீரன் தைரியமான தலைப்பிற்கு வாழ்த்துக்கள்.

பாஜகவின் ஆயுத கலாச்சாரம் ஆபத்தானது, அரசு இயந்திரம் இதையெல்லாம்  கவனிக்க வேண்டும்...

பாஜக தமிழிசை நல்லா வாங்கப் போகிறது என்பது மட்டும் புரிகிறது...


தமிழில் ஒரு தொலைக்காட்சி, அமித்ஷா மகனின் ஊழல் குறித்தான செய்தியை விவாதிக்க அழைத்து, திடீரென தலைப்பை கைவிட்டதாக சுமத் சி ராமன் பதிவு செய்திருக்கிறார்...


இது ஒரு ஊடகத்தின் பிரச்சினை மட்டுமல்ல. அதற்குப் பின்னுள்ள லாபி, மிரட்டல் நாம் கவனிக்க வேண்டியதாகும்.

ஆங்கிலத்தில் எந்த தொலைக்காட்சிக்கும் இந்த தலைப்பில் விவாதிக்க தைரியம் இல்லையா என ராஜ்தீப் சர்தேசாய் நேற்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு முன் ஒரு உண்மையை அவர் இணைத்து வெளிப்படுத்தியிருந்தார். இந்தியா டுடே தொலைக்காட்சி, ஊழல் செய்தியை  விவாதிக்க முடிவு செய்த போது பாஜக தரப்பில் யாரையும் அனுப்ப மாட்டோம் என்று தெரிவித்ததாகவும். பாஜகவின் தரப்பு வாதத்தை முன்வைக்க யாரையும் அனுப்பவில்லையென்றால் எப்படி இரண்டு தரப்பையும் பதிவு செய்வது என்று கேட்டிருந்தார்.

இது தனியான ஒரு சம்பவம் அல்ல. அதானி குழுமத்திற்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் சலுகை கொடுத்த செய்தியை வெளியிட இ.பி.டபிள்யூ இதழின் எடிட்டரை மிரட்டினார்கள்.

இப்போது அதானி ஊழல் ஆஸ்திரேலியா வரை அறிந்த செய்தி. இந்திய மக்களுக்கு அவை மறைக்கப்பட, பகீரத முயற்சிகள் நடக்கின்றன.

வெளியில் தெரியாத பல மிரட்டல்கள் வரும் நாட்களில் வெளிவரலாம். மதவெறியை வைத்து திசை திருப்புவது, நாட்டி வளங்களை ஒரு சிலர் கொள்ளையடிக்க அனுமதிப்பது. செய்திகளை மிரட்டல் மூலம் தடுப்பது. தேவையெனில் கொலை, வன்முறைகள் நிகழ்த்துவது.

அறிவிக்கப்படாத அவசர நிலையும், அதிகார மறைவில் ஒரு சிலரின் கொள்ளையும் என 'குஜராத் மாடல்' இந்தியா முழுக்க ஜெக ஜோதியாய் அமலாக்குகிறார்கள்.

ஆனால் இப்போது அவர்களின் தொடை நடுக்கம் வெளியே அப்பட்டமாய் தெரிகிறது. அதனால்தான் மிரட்டலில் தொடர்ந்து இறங்கி ஒவ்வொரு விவாத நிகழ்ச்சிகளாகக் கூட முடக்க நினைக்கிறார்கள்.

மெய்யான தேச பக்தர்கள், பாஜகவை அம்பலப்படுத்தி விரட்டியும் அடிப்பார்கள். நிச்சயம்...

கார்ப்பரேட் பொருள்களை அழித்தால் நோய் வராது...


தமிழக அரசுக்கே டெங்கு , எப்படி மக்களை டெங்கு நோயில் இருந்து காக்க முடியும்- டிடிவி தினகரன்...

       
தமிழக அரசுக்கே டெங்கு வந்த பின்னால் எப்படி மக்களை டெங்கு நோயில் இருந்து காக்க முடியும் என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

அ.தி.மு.க  அம்மா அணியின் துணைப்பொதுசெயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசுக்கே டெங்கு வந்துவிட்ட பின்னால், அந்த அரசு இனி எப்படி மக்களை டெங்கு நோயில் இருந்து காக்க முடியும். டெங்கு உயிரிழப்புகள் தொடரும் நிலையில் இனி தமிழக அரசை நம்பி பிரயோஜனம் இல்லை. டெங்கு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த தொண்டர்களுக்கு தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெங்கு காய்ச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தொண்டர்கள் ஈடுபட வேண்டும். நோயை கட்டுப்படுத்த வேண்டிய சுகாதாரத்துறை, அரசு செயல்படாமல் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்...

மூலிகை பிண மனிதர்கள்...


உடலை விட்டு ஆவியாக செல்லும் ஒரு ஜீவனுக்கும் (மரணம் அடையும் ஜீவன்) பிணத்திற்கும் இடையே உள்ள மின்காந்த இணைப்பு மிக மெல்லியதாகி விட்டது.

அதனால்தான் பிணத்திற்கு என்ன பாதிப்பு ஏற்ப்பட்டாலும் ஆவிக்கு எந்த பாதிப்பும் இல்லை.

அது மூன்றாவது உடலை பார்ப்பது போலத்தான் தன் உடலை பார்க்கிறது.

ஆப்பிரிக்காவில் ஹைடி என்னும் இடத்தில் பொகார் என்னும் மந்திரவாதிகள் இருக்கிறார்கள்.

அவர்கள் இறந்து போன மனிதர்களின் பிணத்தை எடுத்து சில மூலிகைகள் மூலம் அவர்களை உயிர்ப்பித்து தங்கள் விருப்பப்படி இயக்குவார்கள்.

அந்த பிண மனிதர்களை கொண்டு தங்கள் விருப்பப்படி எல்லாம் மிக கடினமான காரியங்களை எல்லாம் செய்து கொள்வார்கள்.

அவர்கள் எப்படி பிணத்திற்கு உயிர் தருகிறார்கள்? எப்படி பிணத்தை இயக்குகிறார்கள்? என்றால் இந்த முறையில் தான்..

இறந்து போன மனிதர்களின் மூலாதாரத்தில் உள்ள பாஸ்பரஸ் ஆக்சைடை அதிகரிக்கும் வண்ணமாக பாஸ்பரஸ் தனிமம் அதிகம் உள்ள மூலிகைகளை கொண்டும், பிராணன் (மின்காந்த சக்தி) அதிகம் உள்ள மூலிகைகள் கொண்டும் அரைத்து மூலாதாரத்தில் தடவுவார்கள்.

உடல் முழுக்க பிராணாசக்தி அதிகம் உள்ள மூலிகைகளை அரைத்து தடவுவர்.

ஆனால் நெற்றிப்பொட்டில் மட்டும் பிட்யூட்டரி (புத்தி) இயங்ககூடாது என்று அங்கு மட்டும் மூலிகைகளை தடவ மாட்டார்கள்.

பின் பிராணா சக்தியை கவர்ந்து இழுக்கக்கூடிய சில ஊடு மந்திரங்கள் மூலம் பிராணா சக்தியை கவர்ந்து இழுத்து பிண மனிதருக்கு செலுத்துவர்.

பிராணா சக்தியின் காரணமாகவும், பாஸ்பரஸ் மூலிகைகள் காரணமாகவும் இவரது ஆழ்மனம் விழிப்படையும்.


அதாவது ஆவிகள் உலகில் குறைந்த பிராண உடலில் இயங்கி கொண்டிருக்கும் ஆழ்மனம் (பாஸ்பரஸ் ஆக்சைடு) ஆனது இவர்களது செயலால் உடலில் ஈர்க்கப்பட்டு அடர் பாஸ்பரஸ் ஆக்சைடாக ஸ்தூல உடலில் வெளிப்பட்டு ஸ்தூல உடலில் இயங்கும்.

பிணத்தின் உடலில் பிராணனை அதிகரித்தால் ஆழ்மன மானது உடலுடன் ஒன்றிவிடும்.

அதாவது ஆழ்மனம் ஆவி உடலுக்கும் பிணத்துக்கும் இடையே ஒரு மின்காந்த இணைப்பு சங்கிலி எப்போதுமே இருந்து கொண்டு தான் இருக்கும்.

மின்காந்த சங்கிலி இணைப்பு அறுபடுவது கிடையாது.

பிணத்தை முழுமையாக எரித்தால் தான் அந்த இணைப்பு போகும், இணைப்பு அறுபடும்.

உடலை விட்டு ஆவியாக செல்லும் ஒரு ஜீவனுக்கும் (மரணம் அடையும் ஜீவன்) பிணத்திற்கும் இடையே உள்ள மின்காந்த இணைப்பு மிக மெல்லியதாகி விட்டது.

அதனால்தான் பிணத்திற்கு என்ன பாதிப்பு ஏற்ப்பட்டாலும் ஆவிக்கு எந்த பாதிப்பும் இல்லை. அது மூன்றாவது உடலை பார்ப்பது போலத்தான் தன் உடலை பார்க்கிறது.

இந்த மின்காந்த இணைப்புகள் மிக மிக மெல்லியதாக ஆகிவிட்டதால்தான் அந்த ஜீவனால் உடலை இயக்க முடியவில்லை. உடலுக்குள் புக முடியவில்லை.

அதுவே இந்த தாந்திரீக முறைகள் மூலம் அந்த பிராண இணைப்பை நல்ல வலுவாக ஆக்கிவிட்டால் அந்த ஆழ்மனம் ஜீவன் உடலில் ஈர்க்கப்பட்டு இயங்க ஆரம்பித்து விடும்.

அப்போது அவர்களது ஆழ்மனம் ஏற்கனவே பதிவாகி உள்ள எண்ணப் பதிவின் படி செயல்படுவர்.

ஆனால் மந்திரவாதிகள் அவர்களை கட்டளை மூலம் சஜக்‌ஷன் மூலம் தங்கள் விருப்பபடி செயல்பட வேண்டும் என்று அவர்களது மனதை ஹிப்னாடிஷம் செய்து விடுவர்.

அந்த பிண மனிதர்களும் மந்திரவாதிகளின் கட்டளைப்படி செயல்பட ஆரம்பிப்பர்.

ஆனால் அந்த மனிதர்களுக்கு உணவில் உப்பு போட்டு கொடுத்தால் அந்த பிண மனிதர்கள் செயல்பட மாட்டார்கள்.

காரணம் உப்பு தண்ணீரில் உள்ள எல்லாவிதமான தனிமங்களையும் வெளியேற்றும் அல்லது வீரியத்தை குறைக்கும் தன்மை கொண்டது.

அதனால் பிண மனிதர்களின் உடலில் இயங்கி கொண்டிருக்கும் பாஸ்பரஸ் தனிமத்தை அது குறைப்பதால் பிண மனிதர்கள் மந்திரவாதியின் கட்டுபாட்டை இழக்கிறார்கள். மீண்டும் பிணமாகவே ஆகிவிடுவார்கள்.

இப்படி ஒரு மனிதனில் புத்தியாகிய அடர் நைட்ரஜன் ஆக்சைடை இயக்காமல் அவர்களது ஆழ்மனமான சாயா புத்தியை (நைட்ரஜன் ஆக்சைடு NO) இயக்கி அவர்களை பயன்படுத்த முடியும்.

கோமாவில் இருப்பவரை கூட இது போன்று பிண மனிதராக நடமாட வைக்க முடியும். இது உண்மை...

ராணுவ வீரர்களுக்கு உயிரோடு இருக்கும் போது தான் ஒழுங்காக உணவு கொடுக்க துப்பு இல்லை...


இறந்த பின் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கவும் துப்பு இல்லை..

இனி ராணுவ வீரர்கள் எல்லையில் நிற்கிறார்கள் என்று பேச எந்த தேசபக்தனுக்கும் துப்பு இல்லை...

இயற்க்கைக்கு மாறுவோம்...


பாஜக மோடியின் டிஜிட்டல் இந்திய GST சாதனை...


கன்னட ஈ.வே.ரா - வின் அடித்தளம்...


திராவிடக் கட்சிகளுக்கு அடித்தளம் திராவிடர் கழகம்..

இது 'நீதிக் கட்சியும்' 'சுயமரியாதை இயக்கமும்' இரண்டறக் கலந்து 1944ல் உருவானது..

இவ்விரண்டில் (ஸ்வய மர்யாதா என்பதை தமிழாக்கி) 'சுயமரியாதை இயக்கம்' என்பது ஈவேரா காங்கிரசிலிருந்து ஆறாண்டுகளுக்குப் பிறகு விலகி 1925ல் தொடங்கியது..

1926ல் நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் சேர்ந்து நடத்திய பிராமணரல்லாதார் மாநாடு மதுரையில் நடைபெற்றது..

இதற்கு தலைமை தாங்கியவர் தெலுங்கரான சர்.ஏ.பி.பாத்ரோ..

1927ல் இதேபோல கோவையில் பிராமணரல்லாதார் மாநாடு நடந்தது..

இதற்கு தலைமை வகித்தவர் தெலுங்கரான குமாரசாமி ரெட்டியார்..

1928ல் நடந்த முதல் சுயமரியாதைக் கூட்டத்தில் முன்னிலை வகித்தவர் தெலுங்கு பிராமணரான 'மணத்தட்டை சேதுரத்தின ஐயர்'...

1929ல் செங்கல்பட்டில் முதல் சுயமரியாதை மாநாட்டுக்குத் தலைமை, கன்னடன் என்று தன்னைக் கூறிக்கொண்ட தெலுங்கர் ஈவேரா...

1930ல் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் தலைமையேற்றவர் எம்.ஆர்.ஜெயகர் என்ற வடஹிந்தியர்..

1931ல் விருதுநகர் சுயமரியாதை மாநாட்டுக்கு சர்.ஹரி சிங் என்பவர் அழைக்கப்பட்டார். அவர் பாதிவழிவரை வந்து உடல்நலமின்றி திரும்பிவிட்டார்..

அதனால்  தமிழரான ஆர்.கே.சண்முகம் செட்டியார் தலைமைதாங்கினார்...

1933ல் கோவை சுயமரியாதை மாநாட்டிற்கு தலைமைதாங்கியவர் கே.ஐயப்பன் என்ற மலையாளி..

அடித்தளமே இப்படியென்றால்.. ஆட்சி எப்படி என்பது இப்போது தெரிகிறதல்லவா?

ஆங்கிலம் மருத்துவர்களே இதை தான் பரிந்துரை செய்கின்றனர் இப்போது புரிகிறதா ஆங்கில மருத்துவ லட்சணம்...



நடிகர் சந்தானத்தை ஆதரித்து... பாஜக ஏமாற்றுகாரனை விரட்டுவோம்...



குடித்து விட்டு வீன் சண்டைக்கு போகவில்லை...

கட்ட பஞ்சயாத்தும் செய்ய வில்லை....

தான் உழைத்த பனத்தை ஏமாற்றியவனை தான் அடித்தார்...

இதில் என்ன குற்றம் உள்ளது...?

இவர் மீது வழக்கு பதித்த காவல்துறை ஆகட்டும்...

அல்லது இவர் வழக்கை விசாரிக்க போகும் நீதிபதியாகட்டும்..

அவர்கள் உழைத்த பனத்தை ஏமாற்றும் போது இதை தான் செய்திருப்பார்கள்....

அரசியல் பின்புலம் கொண்டவன் கொடுத்த பொய் புகாரை ஏற்று கொண்டு அண்ணண் சந்தானத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில்...

இதோ நாங்களும் தருகின்றோம் அந்த அரசியல்வாதியின் மீது புகாரை... 

இவர்கள் நினைத்தால் மக்கள் தொகைகேற்ப இயற்கை விதைகளை பரப்பி விவசாயத்தை முன்னேற்றி இருக்கலாமே?


அதிமதுரத்தின் சக்தி...


ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாமே..

அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது.

செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும்...

அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.

கல்லடைப்பு நீங்க...

ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.

இருமல் நீங்க...

அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.

பிரசவத்திற்கு முன் வரும் உதிரப் போக்கைத் தடுக்க...

அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.

மஞ்சள் காமாலை நீங்க...

அதிமதுரம், சங்கம் வேர்ப்பட்டை சமமாக எடுத்துப் பொடி செய்து எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேற்றாங்கொட்டை அளவு மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு, பசும்பாலில் மூன்று தினங்கள் சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நிவர்த்தியாகும். புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும். சுகப் பிரசவத்திற்கு...

அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

தொண்டைக் கட்டு இருமல் சளிக்கு...

அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 1_2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்.

பெண் மலடு நீங்க...

பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.

மலச்சிக்கல் நீங்க...

அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 4_6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.

சூடு தணிந்து சுறுசுறுப்பாக...

சோம்புச்சூரணம், அதிமதுரச் சூரணம் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு சுடு தண்ணீர் சாப்பிட்டால், இலகுவாக மல விருத்தியாகும். உள் உறுப்புக்கள் சூடுதணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.

ரத்த வாந்தி நிற்க...

அதிமதுரச் சூரணம் கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம் வகைக்கு அரை கிராம் எடுத்து பாலில் கலந்து 3_4 வேளை சாப்பிட்டால், வாந்தியுடன் இரத்தம் வருதல் நிற்கும்... உடலில் உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.

தாய்ப்பால் பெருக....

போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.

வரட்டு இருமல் நீங்க...

அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக வகைக்கு 10 கிராம் அளவில் சேகரித்து வைத்துக் கொண்டு, 250 கிராம் சர்க்கரையைத் தண்ணீர் சிறிதளவு விட்டு பாகு பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். தேன் பதம் வரும்போது மேற்கண்ட சூரணங்களைக் கொட்டிக் கிண்டி லேகியம் தயாரித்து வைத்துக் கொண்டு, இரண்டு தேக்கரண்டியளவு மூன்று முறை சாப்பிட்டால், வரட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.

இளநரை நீக்க...

அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலை மயிர் உதிர்தல் இருக்காது.

நெஞ்சுச் சளி நீங்க....

அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்ணீரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.

இருமல் நீங்க...

அதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 கிராம் எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30 நிமிஷங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை இருவேளை 30 மில்லி வீதம் சாப்பிட்டால் இருமல் தீரும்..

மஞ்சள்காமாலை தீர...

அதிமதுரம் 15 கிராம், சீரகம் 15 கிராம், வெங்காயம் 20 கிராம், சங்கம் வேர்ப்பட்டை 15 கிராம் இவைகளை பசும்பால் தெளித்து நன்றாக அரைத்து காலை வேளையில் மூன்று தினங்கள் மட்டும் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை தீரும். மூன்று தினங்களுக்கும் ஆகாரத்தில் உப்பு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும்.

தாது விருத்திக்கு...

அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.

கருத்தரிக்க உதவும்...

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50_100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2_3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

வழுக்கை நீங்கி முடி வளர

அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள்நிவர்த்தியாகும்.

தலைவலிகள் நீக்க...

அதிமதுரம், சோம்பு, சர்க்கரை இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து, தனித்தனியாக நன்கு சூரணம் செய்து, பின் ஒன்று கூட்டி வைத்துக் கொண்டு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலி நீங்கும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தலைவலி, தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி தீரும். அதிமதுரம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவைகளை சம எடையாக எடுத்துச் சூரணம் செய்து அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சீதளத்தால் ஏற்பட்ட தலைவலி தீரும். இதே சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.

தொண்டை கரகரப்பு நீங்க...

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்... தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.

ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த...

பொதுப்பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம். சளி, இருமல் இருக்காது. தொண்டை சம்பந்தப்பட்ட தொல்லைகளும் நீங்கிவிடும்...

இலுமினாட்டி அரசியலை புரிந்துக் கொள்ளுங்கள்...


பாஜக மோடியின் டிஜிட்டல் இந்திய ஊழல்...


குஜராத்தி மார்வாடி கும்பல் இந்தியாவை அரிச்சி தின்னுக்கிட்டு இருக்கிறது...

சென்னையில் எஸ்.ஐ.யாக களமிறங்கினார் திருநங்கை யாஷினி...


சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரித்திகா யாஷினி, சட்டப்போராட்டத்துக்கு பின்னர் சப்-இன்ஸ்பெக்டரானார். சென்னையில் சில மாதங்கள் பயிற்சி எடுத்தார் யாஷினி, தற்போது சூளைமேடு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.

தமிழக காவல்துறையில் சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பித்தார் பிரித்திகா. திருநங்கை என்ற காரணத்துக்காக அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதைத் எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த யாஷூனியை எழுத்துத்தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று சீருடை பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, எழுத்துத்தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வு ஆகியவற்றில் வெற்றி பெற்றார்.

இதையடுத்து சென்னையில் உள்ள போலீஸ் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டார் யாஷினி. சில மாதங்கள் அவர் தீவிர பயிற்சி செய்தார். இந்த பயிற்சி முடிவடைந்த நிலையில், சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் சஸ்-இன்ஸ்பெக்டர் பணி பிரித்திகா யாஷினி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் திருநங்கை உதவி ஆய்வாளர் என்று பெருமையை பெற்றுள்ளார் யாஷினி.

வாழ்த்துக்கள்...

தணிகை மீட்ட தளபதி...


திராவிடச் சூழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து திருத்தணியை பிரித்து ஆந்திர மாநிலத்தில் சேர்க்க இருந்த போது..

இறுதி வரை எதிர்த்து நின்று போராடி அதை தமிழகத்திற்கு பெற்று தந்தவர் திருத்தணி விநாயகம்..

இதனால் இவர் "தணிகை மீட்ட தளபதி" என்று போற்றுதலை பெற்றவர்...

முதலில் தமிழனுக்கு என்று ஒரு மாநிலம் வேண்டும்...


காவிகளின் கூடாரமா இருக்கும் இந்தியாவை அடக்க வேண்டும் என்றால் அது தமிழர்களால் மட்டுமே முடியும்..

தமிழர்கள் அப்படியான எழுச்சியயை உண்டு செய்ய முதலில் தமிழன் ஆளுமைக்குள் ஒரு மாநிலம் வேண்டும்..

அப்படி அமைந்தால் மட்டுமே அத்தனை பிரச்சனைக்கும் தமிழர்கள் எழுச்சியோடு போராடி வெற்றியும் அடைய முடியும்..

தற்போது இந்த இந்தியாவின் செல்ல குழந்தைகள் ஆரிய கள்ள குழந்தைகள் திராவிடம் நடத்தும் அடையாள போராட்டம் முழுக்க முழுக்க வடுகர்களின் ஆளுமைய தக்க வைக்கவும் தனது பொருளாதரத்தை உயர்த்த மட்டுமே போராட்டத்தை கையில் எடுத்து கொள்கிறார்கள்...

எடுத்து கொள்வது மட்டும் இல்ல வடுகர்களின் போரட்டம் என்பதே ஒரு வித மாஃபியா தான்..

தமிழர்கள் போரட்டம் என்பது தனது உயிரையும் மாய்து கொள்வார்கள் அந்த அளவுக்கு அதிலே உண்மை இருக்கும்..

அப்படியான தமிழர்களை வடுகர்கள் ஆளுமை செய்து தமிழர்களை எல்லாம் இன பற்று மொழி பற்று ஆளுமை பற்று இல்லாமல் ஒரு வித பண மது  பற்றுடன் ஓடுவதற்க்கு தள்ளி விட்டு விட்டார்கள் அப்படியான தமிழர்களை முதலில் மீட்க வேண்டும்..

வடுகர்கள் மார்வாடிகள் தமிழகத்தை கூறு போட்டு கொண்டு நம்மை வஞ்சித்து பெரும் முதலாளிகளாக வாழ்கிறார்கள்..

இந்த ரேசில் தமிழன் கலந்துக்கவே வாயிப்பில்லை இதில் என்ன கொடுமை என்றால் அவர்கள் ரேஸ் விளையாடும் திடல் தமிழர்களுடையது..

இனியும் நாம் விளையாடவில்லை என்றால் நாம் அவ்வளவ ுதான் முதலாளித்துவத்தை  கைபெற்றாமல் தனி நபர் வருமானத்துக்காக தமிழர்கள் ஓடினால் மாற்று முதலாளிகளை இங்க வீழ்த்த முடியாது அதை வீழ்த்தினால் மட்டுமே தமிழ் முதலாளிகளையும் காக்க முடியும்..

இல்லை என்றால் நாளை தமிழர்களின் பெரும் நிறுவனங்களை கைப்பற்றுவார்கள்..

அதுவும் இல்லை என்றால் அவர்களின் கைப்பாவையா அந்நிறுவனங்களை அடக்குவார்கள் மாற்றுவார்கள்..

அப்படிதான் பல அண்ணாச்சிகள் மாறிவிட்டார்கள் ஒரு தலைமுறை மாறினால் அடுத்த தலைமுறைக்கு என்ன நடந்தது என்றே தெரியாது..

தமிழர்கள் பெரும் இயக்கங்களாக மாறினால் மட்டுமே இங்கு இருக்கும் தமிழ் முதலாளிகள் இந்திய மார்வாடி வடுகனுக்கு காவிகளுக்கு அடிமையாக மாறாமல் இருக்க வாயிப்பு இருக்கும்..

அவ்வாறு அரசியல் பலத்தை தமிழர்கள் நாம் அடைந்தால் மட்டுமே ஒட்டுமொத்த தமிழர்களையும் காக்க முடியும் காவிகளிடம் இருந்தும் மார்வாடிகளிடமிருந்தும் ஆரியனிடம் இருந்தும் தமிழனை மீட்க முடியும்..

இல்லயென்றால் காவிபக்கம் சாயும் அத்தனை தமிழ் நபர்களையும் குறைமட்டுமே சொல்லி கொண்டு இருப்போம்..

எவன் பக்கமும் தமிழன் சாயாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை முழுக்க முழுக்க நம் பங்கு..

நாம் பலமா இருந்தால் மட்டுமே எவனுக்கும் அடங்கி போகனும் என்ற எண்ணமே எந்த தமிழனுக்கும் வராது...

ஈழத்தில் நடந்த அத்தனையும் தமிழ்நாட்டிலும் நடந்தே தீரும். இது உறுதி...


1956ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிவினையின் போது தமிழரின் எதிர்ப்பையும் போராட்டத்தையும் மீறி திராவிடத்தின் பேராதரவுடன் தமிழரிடமிருந்து அண்டை மாநிலங்களால் பிடுங்கப்பட்ப் பகுதி.

2009ல் சிங்களத்தால் இந்தியா மற்றும் 32நாடுகளின் படைவலிமையால் அபகரிக்கப்பட்ட பகுதி.

பிடுங்கப்பட்ட பகுதிகளில் சிறுபகுதியை மீட்டு இன்று 'தமிழ்நாடு ' என்னும் பெயரால் நீண்டகாலம் தமிழரல்லாதோரால் ஆளப்பட்டுவரும் பகுதி.

பூர்வீகத் தமிழரைவிட அதிக அளவில் வங்காளியரைக் குடியேற்றி இன்று அவர்கள் மூலம் தமிழர் ஒடுக்கப்பட்டுவரும் அந்தமான்-நிகோபர் தீவுப்பகுதிகள்.

இவையே இன்றைய தமிழர் பெரும்பான்மைப் பூர்வீக நிலப்பகுதி ஆகும்.

இது துல்லியமானதென்று கூறிவிட முடியாது, ஆனால் இதில் மிகச்சிறிய திருத்தங்களே ஏற்படும் என்று உறுதிகொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக, இதில் திருவனந்தபுரம் சேர்க்கப்படவில்லை; ஆனால், திருவனந்தபுரம் தமிழர் பெரும்பான்மை பூர்விக மண்ணே ஆகும்.

தனிநாடு கோரும் அத்தனைத் தகுதியும் நமக்கு உள்ளது.

புரியும்படி கூறினால் தமிழருக்குத் தனிநாடு கோரும் தகுதி இல்லையென்றால் இவ்வுலகில் எந்த இனத்தினருக்கும் அத்தகுதி இல்லை.

அத்தகுதிகளாவன, வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு அதில் நீண்ட நெடிய இனவரலாறு மற்றும் வரலாற்றுச் சான்றுகள், தனித்தன்மையான மொழி, கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டுமுறைகள், திருமணச் சடங்குகள், ஈமக்கடன்கள், பழமொழிகள், சொலவடைகள், செவிவழிக் கதைகள், பண்டைய நிர்வாகமுறை, நகர்க்கட்டமைப்பு, பண்டிகைகள், கேளிக்கைகள், உடற்கூறு, தோற்றம், உறவுமுறைகள், சமூகக்கட்டமைப்பு, தொழில்முறைகள் ஆபரணங்கள் மற்றும் உடையமைப்பு.

தனித்தன்மையுடைய இசை, கலை, நடனம், இலக்கியம், காப்பியங்கள்;
கனிசமான எண்ணிக்கை, சுற்றிலும் கலாச்சார, மொழி, தோற்ற ஒற்றுமை கொண்ட வேற்றின மக்கள்..

ஈழம்.. ஒரு முன்னோட்டம்..

ஒட்டு மொத்தத் தமிழருக்கும் ஒரு முக்கியமான பாடம்..

ஈழ மக்கள் அடக்குமுறைக்கு அடிபணியாது போராடிவரும் வீரமறவர்கள்.

தமிழினத்தின் வீரத்திற்கும் தியாகத்திற்கும் நம் முன்னே வாழும் முன்மாதிரிகள்.

தமிழினம் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவது, வல்லாதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டம், அழிவுகளைத் தாங்கியபடி முன்னகரும் விடாமுயற்சி, சரியானத் தலைவனைத் தேர்ந்தெடுப்பது அவன் பின்னிற்பது, உலகம் முழுவதும் பரவிய தமது சொந்தங்களை ஒன்று திரட்டுவது, உலகையே வியக்கவைக்கும் சாதனைகள் மற்றும் தாய்மொழித் தமிழ் மீதான பற்று ஆகியவற்றை நமக்குக் கற்றுக்கொடுக்கும் ஆசான்கள்.

ஆயிரம் இன்னல்கள், பிரிவினைகளை மீறி இனவுணர்வுடன் உறுதியாக தாக்குப்பிடித்துக் கொண்டிருக்கும் ஈழமக்களிடம் உலகத் தமிழர் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம் உள்ளது...

1922 வாக்கில் இந்திய ரூபாய் மதிப்பு 1அமெரிக்க டாலர்=1 இந்திய ரூபாய்...


இதற்க்கு பசு மாடு வளர்ப்பு மிகப்பெரும் காரணம் என்றால்  நம்ப முடியுமா, நம்பித்தான் ஆகவேண்டும்..

2 பசு மாடு வளர்ப்பு மாதம் ரூ35000 கிடைக்கும்..

அது மட்டுமா..

பசுவின் பாலில் இருந்து தயிர், நெய், வெண்ணெய் போன்ற உணவு பொருட்களும், பசுவின் சாணம் எருவாட்டியாக அடுப்பெரிக்க உதவியதும்,

அந்த சாம்பல் கொண்டு பல் துலக்கியதும், திருநீர் செய்ய பயன்படுத்தப்பட்டதும்,

சாணம், தயிர், கோமேயம் இன்னபிற பொருட்களை கொண்டு பஞ்கவ்யம் எனும் உரம் செய்து விவசாயத்திற்கு பயன் படுத்தப்ப்ட்டது.

மேலும் கோமேயம் பூச்சி, புழு விரட்டியாக கூட உபயாகப்பட்டுள்ளது.

சரி இது அனைத்திற்க்கும் இந்திய ரூபாய் மதிப்பிற்க்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்றால்...

காலையில் பல்விளக்க பேஸ்ட்,
அடுப்பெரிக்க அரபு நாட்டு பெட்ரோலிய பொருள்கள், கிருமி நாசினி டெட்டால், விவசாய உணவு உற்பத்திக்கு உரங்கள், உழவு செய்ய டிராக்டர்கள், அதற்காக பெட்ரோலிய பொருட்கள், விவசாய பண்ணை தொழிலுக்கு தேவையான பலவற்றை இறக்குமதி செய்யப்பட்டதன் விளைவு ருபாய் மதிப்பு குறைந்து கொண்டே வர ஆரம்பித்தது..

மேற்சொன்னபடி பசு வளர்ப்பில் கிடைத்த பொருட்கள் உபயோகிக்கப்பட்டதால் அன்று ரூபாய் மதிப்பு குறையாமல் இருந்து இருக்கும்..

இன்னும் சொல்லப்போனால் உளவு மாடு உபயோகம் ஒரு மாபெரும் வரப்பிரசாதம்,

நிலம் உழுதிட, விளை பொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்ல,
மக்கள் வாகனப்பயன்பாட்டிற்க்கு என பலவகையில் உபயோகிக்கப்பட்டு உள்ளது.

இவை அனைத்தும் ரூபாய் மதிப்பு குறையாதிருக்க மறைமுக காரணங்களாக இருந்து இருக்கும்.

இப்போது ஜல்லிக்கட்டு தடையின் மாபெரும் உள்நோக்கத்தை ஜல்லிக்கட்டு  ஆதரவாளர்கள் சற்று சிந்தித்துக் கொண்டே பசுவதை எதிர்ப்புக்கும் ஆதரவு குரல் கொடுக்க சிந்திக்கலாம்..

நாட்டு மாடு வகைகள்:

1.அத்தக்கருப்பன்
2. அழுக்குமறையன்
3.அணறிகாலன்
4. ஆளைவெறிச்சான்
5. ஆனைச்சொறியன்
6. கட்டைக்காளை
7. கருமறையான்
8. கட்டைக்காரி
9. கட்டுக்கொம்பன்
10. கட்டைவால் கூளை
11. கருமறைக்காளை
12. கண்ணன் மயிலை
13. கத்திக்கொம்பன்
14. கள்ளக்காடன்
15. கள்ளக்காளை
16. கட்டைக்கொம்பன்
17. கருங்கூழை
18. கழற்வாய்வெறியன்
19. கழற்சிக்கண்ணன்
20. கருப்பன்
21. காரிக்காளை
22. காற்சிலம்பன்
23. காராம்பசு
24. குட்டைசெவியன்
25. குண்டுக்கண்ணன்
26. குட்டைநரம்பன்
27. குத்துக்குளம்பன்
28. குட்டை செவியன்
29. குள்ளச்சிவப்பன்
30. கூழைவாலன்
31. கூடுகொம்பன்
32. கூழைசிவலை
33. கொட்டைப்பாக்கன்
34. கொண்டைத்தலையன்
35. ஏரிச்சுழியன்
36. ஏறுவாலன்
37. நாரைக்கழுத்தன்
38. நெட்டைக்கொம்பன்
39. நெட்டைக்காலன்
40. படப்பு பிடுங்கி
41. படலைக் கொம்பன்
42. பட்டிக்காளை
43. பனங்காய் மயிலை
44. பசுங்கழுத்தான்
45. பால்வெள்ளை
46. பொட்டைக்கண்ணன்
47. பொங்குவாயன்
48. போருக்காளை
49. மட்டைக் கொலம்பன்
50. மஞ்சள் வாலன்
51. மறைச்சிவலை
52. மஞ்சலி வாலன்
53. மஞ்ச மயிலை
54. மயிலை
55. மேகவண்ணன்
56. முறிகொம்பன்
57. முட்டிக்காலன்
58. முரிகாளை
59. சங்குவண்ணன்
60. செம்மறைக்காளை
61. செவலை எருது
62. செம்ம(ப)றையன்
63. செந்தாழைவயிரன்
64. சொறியன்
65. தளப்பன்
66. தல்லயன் காளை
67. தறிகொம்பன்
68. துடைசேர்கூழை
69. தூங்கச்செழியன்
70. வட்டப்புல்லை
71. வட்டச்செவியன்
72. வளைக்கொம்பன்
73. வள்ளிக் கொம்பன்
74. வர்ணக்காளை
75. வட்டக்கரியன்
76. வெள்ளைக்காளை
77. வெள்ளைக்குடும்பன்
78. வெள்ளைக்கண்ணன்
79. வெள்ளைப்போரான்
80. மயிலைக்காளை
81. வெள்ளை
82. கழுத்திகாபிள்ளை
83. கருக்காமயிலை
84. பணங்காரி
85. சந்தனப்பிள்ளை
86. சர்ச்சி
87. சிந்துமாடு
88. செம்பூத்துக்காரி
89. செவலமாடு
90. நாட்டுமாடு
91. எருமைமாடு
92. காரிமாடு...

மூன்றாம் உலகப்போரும் தமிழ் இன எழுச்சியும்..


ஓட்டோமான் பேரரசின் (Ottoman empire) ஆதிக்கத்தை எதிர்த்த 'செர்பிய இன எழுச்சி' முதல் உலகப்போரைத் (WW1) தோற்றுவித்தது...

முதல் உலகப்போரில் வென்றநாடுகளின் (Allied powers) ஆதிக்கத்தை எதிர்த்த 'ஜெர்மானிய இன எழுச்சி' இரண்டாம் உலகப்போரைத் (WW2) தோற்றுவித்தது.

இந்திய ஆதிக்கத்தை எதிர்த்து 'தமிழ் இன எழுச்சி' மூன்றாம் உலகப்போரைத் (WW3) தோற்றுவிக்கலாம்...

மொழி வரைபடம் 1859...


ஆங்கிலேயர் வெளியிட்ட இந்திய மொழிகள் வரைபடம்..

இப்படத்தில் தமிழ்ப் பகுதியில் திருவனந்தபுரமும் மைசூரும் உள்ளன..

துல்லியமான வரைபடம் இல்லையென்றாலும்..

தோராயமான வரைபடமாக இருந்தாலும்..

இது முக்கியமான வரைபடம் ஆகும்..