05/05/2018

கைக்குழந்தையுடன் பேருந்தில் நூதன முறையில் திருட்டு; தங்கை கணவருடன் பெண் கைது: 42 சவரன் நகை பறிமுதல்...


பேருந்தில் கைக்குழந்தையுடன் பயணம் செய்வது போல நடித்து பணம் மற்றும் தங்க நகைகளைத் திருடிய பெண் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்து 42 சவரன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை, பூந்தமல்லி, நசரத்பேட்டையில் வசிப்பவர் விஜயா (38), இவர் வடபழனி பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். விஜயா நேற்று காலை 9 மணி அளவில் வழக்கம் போல் பூந்தமல்லியிலிருந்து வடபழனிக்கு மாநகரப் பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் அருகில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தார். இடையில் விஜயாவிடம் பேச்சு கொடுத்துள்ளார். குழந்தையை விஜயா கொஞ்சியபோது அதை அவரது கையில் கொடுத்துள்ளனர். பின்னர் பேருந்து வடபழனி பேருந்து நிறுத்தம் வரும் முன்பு அந்தப் பெண் பேருந்திலிருந்து அவசரமாக இறங்கச் சென்றுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த விஜயா தான் வைத்திருந்த கைப்பையை பார்த்ததில், கைப்பை திறக்கப்பட்டு, பையில் வைத்திருந்த 1 சவரன் தங்க நகை மற்றும் ரூ 700 ரொக்கப் பணத்தைக் காணவில்லை. உடனே, விஜயா குழந்தையுடன் வந்த பெண்ணை பார்த்து நிற்கும் படி கூறியுள்ளார்.

அந்த நேரம் பேருந்தும் நின்றதால், அந்தப் பெண்ணும், அவருடன் வந்திருந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபரும் பேருந்திலிருந்து அவசரமாக இறங்கி வேகமாக நடந்து சென்றனர். உடனே, விஜயா சத்தம் போடவே, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த வடபழனி காவல் நிலைய போலீஸார் அந்தப் பெண்ணையும் உடன் வந்த அந்த நபரையும் பிடித்தனர்.

பின்னர் அவர்களை சோதனை செய்தபோது, விஜயாவின் நகை மற்றும் பணத்தை திருடி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் வடபழனி காவல் நிலையம் கொண்டுசென்ற போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பிடிபட்ட இருவரும் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரதி (32) என்பதும் உடன் வந்தவர் அவரது தங்கை கணவர் பிரபாகர் (30) என்பதும் தெரியவந்தது. ரதி இவ்வாறு குழந்தையுடன் பேருந்தில் பயணம் செய்து, பெண்களின் பர்ஸ் மற்றும் கைப்பையைத் திறந்து, நகைகள் மற்றும் பணத்தைத் திருடி வந்துள்ளனர்.

ரதியின் தங்கை கணவர் பிரபாகரும் இவருடன் பேருந்தில் பயணம் செய்து திருடிய பொருட்களை உடனுக்குடன் கைமாற்றி எடுத்துச் சென்று தப்பி வந்ததும் தெரியவந்தது. மேலும் விசாரணையில், இவர்கள் 2 பேரும் சேர்ந்து, கோடம்பாக்கம், விருகம்பாக்கம், மாம்பலம், வடபழனி, தேனாம்பேட்டை, கே.கே.நகர் ஆகிய காவல் நிலைய எல்லைகளில் இவ்வாறு பணம் மற்றும் தங்க நகைகளைத் திருடியது தெரியவந்தது.

சுமார் 12 வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரதி மற்றும் பிரபாகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 42 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.85 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்...

தென் சீனக் கடலில் சீனா ஆயுதங்கள் குவிப்பு...


ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3) சத்திய யுகம் - பகுதி 11...

இன்று சத்திய யுகம் எனும் வருங்கால தீர்க்கதரிசனத்தின் 11-ம் பகுதியில் இடம்பெறும் குறிப்புகளை இங்கு காண உள்ளோம். இந்த 11-ம் தீர்க்க தரிசனத்தில் இடம்பெறும் குறிப்புகள் ஒவ்வொன்றும் வருங்காலத்தைப் பற்றி எடுத்துக் கூறும் நிகழ்வுகளின் தொகுப்பாகும்.



இந்த 11-ம் தீர்க்க தரிசனத்தில் இன்று முதலாவதாக நாம் காண இருப்பது என்னவெனில், “இந்திய தேசத்தின் வட எல்லையில்“ மிகப்பெரிய சோகச் சம்பவம் ஒன்று நடைபெற இருப்பதாகவும், இது ஆன்மீகம் சார்ந்த பகுதியில் நடைபெறக் கூடிய மிகப்பெரிய சோகச் சம்பவமாக இருக்கும் என்றும், இந்திய ஆன்மீக வரலாற்றில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கவே முடியாது என்று 11-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே நமக்கு தெரிவிக்கின்றது.


இந்திய தேசத்தின் வான்வெளிப் பாதையில் பல வினோத பறக்கும் வான் ஊர்திகள் இரவு நேரத்தில் பறக்க உள்ளதாகவும், இது முழுக்க முழுக்க வேற்றுகிரகவாசிகளின் செயலாக இருக்கும் என்று 11-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.



தெய்வீகம் சார்ந்த அற்புத நிகழ்வுகள் இனி தமிழகத்தில் அதிகமாக நடக்க உள்ளதாகவும், வரும் மாதம் ஒன்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அப்படி ஒரு தெய்வீக அதிசயம் ஒன்று நடக்க உள்ளதாக 11-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது. இந்த நிகழ்வினால் 1000 வருடங்களுக்கு ஒருமுறை இப்பூமியின் மீது ஏற்பட உள்ள இறைவனின் நீயாயத் தீர்ப்பு நிச்சயம் நடக்கும் என்பதற்கான அறிகுறியாக இதனை கருத வேண்டும் என 11-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.


கலைமகள் வீற்றிருக்கும் ஒரு சன்னதியில் தெய்வீக சங்கல்பம் ஒன்று தற்போது நடைபெறும் என்றும், இது சத்திய யுகத்திற்கான முக்கிய நிகழ்வாக மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், இதனால் தமிழக கல்வித்துறையில் பெரும் மாற்றங்கள் நிகழ உள்ளதாக 11-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


தமிழக அரசியல் களம் இனி சூடு பிடிக்க உள்ளதாகவும், அரசியல் வாதிகளும், தமிழக நடிகர்களும் மோதிக் கொள்ளும் வன்முறை சம்பவங்கள் இனி தமிழகத்தில் அதிகம் நடக்க உள்ளதாக 11-ம் தீர்க்கதரிசனம் இங்கே பல நிகழ்வுகளை சுட்டிக் காட்டுகின்றது.


பல்வேறு அரசியல் கட்சிகள் பங்குபெறும் ஒரு கூட்டு சபையில் பல கூச்சல் குழப்பங்கள் தற்போது நடைபெற உள்ளதாகவும், அதில் ஒரு அரசியல் தலைவர் தாக்கப்படும் சம்பவம் உடனே நடக்க இருப்பதாகவும், இதனால் செய்தி ஊடகங்களுக்கு இடையே தள்ளுமுள்ளுகள் ஏற்பட்டு இது ஒரு பெரிய செய்தியாக தமிழக பத்திரிக்கையிலும் செய்தி ஊடகங்களிலும் வெளிவரும் என்றும், இச்சமயத்தில் “தமிழகம்“ கடும் மழைக்கு பாதிப்புக்குள்ளாகும் என்று 11-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


இணைய தளத்தில் ஒரு செய்தி உலகம் முழுவதும் பரவி பெரும் பீதியை தற்போது கிளப்பும் என்றும், இது உலக அழிவுப் பற்றிய செய்தியாக வலம் வரும் என்றும், இதனால் உலக மக்கள் பெரும் பீதிக்கு ஆளாக நேரிடும் பல சம்பவங்கள் இனி தொடர்ந்து நடக்க உள்ளதாக 11-ம் தீர்க்கதரிசனம் ஒரு எச்சரிக்கையை இங்கே பதிவு செய்கிறது.


காலம் தன் கோலத்தை கட்டாயம் உலக மக்களுக்கு உணர்த்தும் என்றும், சித்தர்களின் இராஜ்யம் இப்பூமியில் வேர் ஊன்றும் அதிசயங்கள் இனி நடக்க உள்ளதாகவும், அதற்கு முத்தாய்ப்பாக பழனி மலை அதன் சுற்றுப்புற மலைகளில் பல வினோத சம்பவங்கள் நடக்க இருப்பதாக 11-ம் தீர்க்கதரிசனம் இங்கே நமக்கு தெரிவிக்கின்றது.


தமிழக ஆன்மீகவாதி ஒருவர் தற்போது அரசியல் களத்தில் குதிக்கும் நிகழ்வு ஒன்று தற்போது தமிழகத்தில் நடக்க இருப்பதாகவும், இது ஒரு நடிகரின் முயற்சியாக இருக்கும் என்றும், அந்த ஆன்மீகவாதி தனது அறிவிப்பை அறிவித்த 48 மணி நேரத்தில் தமிழக அரசியல் தலைவர் ஒருவர் மரணம் அடைவார் என்றும், அதே சமயத்தில் தமிழக சிவாலயம் ஒன்று திடீரென்று இடிந்துவிழும் சம்பவம் ஒன்று நடக்கும் என 11-ம் தீர்க்கதரிசனம் ஒரு நிகழ்வின் மறுவினையை இங்கே படம்பிடித்து காட்டுகின்றது.



சீனா நாட்டில் உள்ள ஷாவ்லின் புத்த மடாலயம் ஒன்றில் ஒரு மாபெரும் நிகழ்வு நடக்க உள்ளதாகவும், இது இறைவனின் மறு கொள்கைக்கு ஒரு சான்றாக அமையும் என்றும், இது உடனே விரைந்து நடக்க இருப்பதாக 11-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கு பதிவு செய்கிறது.


தமிழகத்தில் வாழ்ந்த போதிதர்மன் எனும் பல்லவ மன்னனின் வீரம் செறிந்த குங்ஃபூ தற்காப்புக்கலை மீண்டும் தமிழகத்தில் தன் மதிப்பை விதைக்க உள்ளதாகவும், இதற்கான அனைத்து தெய்வீக நிகழ்வுகளும் தமிழகத்தில் அரங்கேற்றம் ஆகிடும் என 11-ம் தீர்க்க தரிசனம் மீண்டும் ஒரு குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.

காய்தே மில்லத் மாவட்டத்தில் முஸ்லீம் வசிக்கும் பகுதியில் ஒரு இறை அதிசயம் தற்போது நடக்க உள்ளதாகவும், இது 2-ம் நபி அவர்களின் வருகையாக இருக்கும் என முஸ்லீம் மக்கள் பேசிக் கொள்ளும் சம்பவம் ஒன்று தற்போது அரங்கேறிட உள்ளதாக 11-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது.


மேற்கண்ட இச்சம்பவத்தை கிருஸ்துவ மக்கள் இயேசுவின் இரண்டாம் வருகைக்கான ஒரு அற்புத நிகழ்வாக சித்தரிப்பார்கள் என்று 11-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


கடலூர் மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு பகுதி என்றும், கடல் மட்டம் உயர்ந்து கடல் உட்புகும் சோகச் சம்பவம் ஒன்று விரைந்து நடக்க உள்ளதாக 11-ம் தீர்க்கதரிசனம் மிகுந்த ஒரு எச்சரிக்கை செய்தியை இங்கு மக்களுக்காக சுட்டிக் காட்டுகின்றது.


பெரும் புயலால் ஏற்கனவே பாதிப்புக்குள்ளாகிய “கடலூர்“ மீண்டும் பெரும் தாக்குதலுக்கு ஆளாக உள்ளதாக 11-ம் தீர்க்கதரிசனம் இங்கே தனது கருத்தை “அழுத்தமாக“ பதிவு செய்கிறது.


மக்களுக்காக நான், மக்களுக்காகவே நான் என்கிற தாரக மந்திர வார்த்தையில் உள்ள மகத்துவத்தை இனி மக்கள் இறைவனிடமிருந்தே எதிர்நோக்க வேண்டும் என்றும், இதில் உள்ள சூட்சுமத்தை புரியாத அரசியல்வாதிகளின் “கொட்டம்“ இனி ஆட்டம் காண உள்ளதாகவும், இனி மக்கள் சமுதாயம் நன்கு விழிப்படைந்து கொள்ளும் என்றும் 11-ம் தீர்க்கதரிசனம் இங்கே வரக்கூடிய மாற்றத்தை நமக்கு எடுத்துக் கூறுகின்றது.

மறைந்த முன்னாள் முதல்வரின் சொத்துக்கள் பொதுவுடைமையாக்கும் நிகழ்வு ஒன்று விரைந்து அரங்கேறிட உள்ளதாக 11-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு குறிப்பை இங்கே பதிவு செய்கின்றது.


கன்னடர்களுக்கு இது போதாத காலமாக இருக்கும் என்றும் வரலாறு காணாத சம்பவம் ஒன்று அங்கே அரங்கேற்றம் ஆகிட உள்ளதாகவும், இது அந்த ஊரின் மீது இறைவன் வழங்கும் நீயாயத் தீர்ப்பின் எதிரொலியாக இருக்க உள்ளதாக 11-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே “அழுத்தமாக“ பதிவு செய்கிறது.



இனி வட மாநிலங்களில் இயற்கை சீற்றங்கள் அதிகமாக இருக்கும் என்றும், அஸ்ஸாம், மேகாலயா, மணிப்பூர், பூடான்தேசம், வங்கதேசம் போன்றவை கூட அதிகமாக பாதிப்புக்குள்ளாகும் என்று 11-ம் தீர்க்கதரிசனம் மேலும் இங்கு ஒரு குறிப்பை சுட்டிக்காட்டுகின்றது.


பல்லவர்கள் வாழ்ந்த பகுதியில் அதிசய கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட இருப்பதாகவும், அது இறைவனின் வருகையை தெரிவிக்கும் அதிசய கல்வெட்டாக அமைய உள்ளதாக 11-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


இறையாளன் இயேசுவின் வருகையை குறித்த செய்திகள் இனி தேதிவாரியாக செய்தி ஊடகங்கள் செய்தியை வெளியிடுவார்கள் என்றும், அச்செய்தியின் நம்பகத்தன்மையை இனி மக்கள் கண்டறிந்து கொதிப்படையும் பல சம்பவங்கள் உலகம் முழுவதும் நடக்க உள்ளதாக 11-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே சுட்டிக் காட்டுகின்றது.


இறைவன் இடம்பெறும் இறுதிசபை என்பது ஒரு யோகா அமைப்பு என்பது சென்ற தீர்க்கதரிசனங்கள் வாயிலாக நாம் அறிந்து கொண்டோம். அந்த இறுதிசபையில் அனைத்து மதத்தினரும் பாகுபாடின்றி யோகக்கல்வியை கற்று வருவார்கள் என்றும், அந்த சபையில் இறைவன் வெளிப்படுத்திய “இறை முத்திரை“ அங்கே காணப்படும் என்றும், அங்கே அவதாரம் மேற்க் கொள்ளும் இறைசக்தி “ஆதிசக்தி“ என்ற திருநாமத்தை தாங்கி பல அற்புதங்களை செய்து வருவார் என்றும், அச்சபையில் உள்ளோர் இடத்தில் சித்தர்களின் பல ஆன்மாக்கள் எழுப்பபட்டு இருக்கும் என 11-ம் தீர்க்கதரிசனம் தனது குறிப்பை மெய்பட எடுத்துக் கூறுகிறது.


புகழ்மிக்க ஒருவன் என்பது இந்த அகில உலகத்தை ஆளும் இறைவனின் மாற்று வடிவத்தை சூடியவன் என்று பொருள். அவனின் பிரவேசம் அன்னை ஆதிசக்தியால் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தும் நாள் மிக, மிக அருகில் உள்ளது என்றும், இது நடக்கும் தினத்தை உலக மக்கள் கொண்டாடுவார்கள் என 11-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை இங்கே பதிவு செய்கிறது.

இறைவனின் வருகைக்காக காத்திருக்கும் நாம், அவரின் பிரஜாதிபதியை வரவேற்க காத்திருப்போமாக.

குறிப்பு :  இந்த வருங்கால தீர்க்க தரிசனத்தில் வெளிப்படுத்தப்படும் தேதிகள் மற்றும் வருடங்களை மட்டும் யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

இது இறைவனின் நீயாத்தீர்ப்புகளின் படியே அமையும், ஆனால் செய்திக் குறிப்புகள் அனைத்துமே நடைபெறும்.

மேலும் இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல.

அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...

நீட் தேர்வு அரசியல்...


தமிழர் பயன்படுத்திய போர்க் கருவி சுருள் பட்டை...


சுருள் பட்டை என்பது ஒரு வளையக்கூடிய மெல்லிய உலோகத்தால் ஆன வளையக்கூடிய, நீண்ட வாள் ஆகும். இது ஒருவரின் உடலுக்குள் ஊடுருவிப் பாய்ந்து வெட்டக் கூடிய அளவுக்குக் கூர்மையானது.

அதே வேளை ஒரு வளையமாகச் சுருட்டி விடக் கூடியது. சுமார் முக்கால் அங்குலம் அகலமும் நான்கு அல்லது ஐந்தரை அடி நீளமும் கொண்ட இந்த வாளை இரும்பினாலான சவுக்காகவும் கருதலாம்

இது தமிழர் பயன்படுத்திய போர்க் கருவிகளில் ஒன்றாகும்.

தமிழில் இந்த ஆயுதத்தின் மற்றொரு பெயர் சுருள் வாள். இன்றும் தென் தமிழகத்தில் இவ்வாள் பயன்பாட்டில் உள்ளதைக் காணலாம். தற்காப்புக் கலைகளான வர்மக் கலை மற்றும் குத்து வரிசை ஆகியவற்றில் இவ்வாள் பயன்படுத்தப்படுகிறது.

கேரள தற்காப்புக் கலையான களரிப்பயிற்றிலும் இது பயன்படுத்தப்படுகிறது. மலையாளத்தில் இந்த வாளானது, வட கேரள களரிப்பயிற்று முறைப்படி உருமி எனவும் தென் கேரள களரிப்பயிற்று முறைப்படி சுட்டுவாள் எனவும் அழைக்கப்படுகிறது.

இவ்வாள் மலையாளச் சொற்களான திரும்பு அல்லது சுழல் என்ற பொருள் கொண்ட சுட்டு மற்றும் வாள் ஆகிய இரு சொற்களையும் சேர்த்துசுழலும் வாள் என்ற பொருளில் சுட்ட வாள் என்ற பெயர் பெற்றுள்ளது.

சண்டையின் போது இதனை ஒருவர் சுழற்றிப் பயன்படுத்தும் முறையால் இப்பெயர் இதற்கு மிகவும் பொருத்தமானதாக அமைகிறது.

சுருள் பட்டையைப் பயன்படுத்துவதில் சிறந்த பயிற்சியுடையவராக ஆவதற்கு வலிமையையும் வேகத்தையும் விட வளையக்கூடிய தன்மையும் சாமர்த்தியமான திறமையுமே தேவை.

இதனைச் சுழற்றுவதும் எதிராளியின் தாக்குதலைத் தடுத்து நிறுத்துவதும் மிகவும் கடினமானதும் ஆபத்தானதுமான கலையாகும். சரியான முறையில் கையாளப்படாவிட்டால் பயன்படுத்துபவருக்கு நிரந்தரமான காயங்கள் ஏற்பட்ட வாய்ப்புண்டு.

இக்கலையில் வல்லுநர்களுக்கும் கூட இதனைப் பயன்படுத்தும்போது சிதறாத ஒருமுகக் கவனம் தேவை. பல எதிரிகளுக்கு இடையில் தனியாக மாட்டிக் கொள்வது போன்ற சூழ்நிலையில் ஒருவர் தன்னைக் காத்துக்கொள்ளச் சுருள் பட்டை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இடுப்புப் பட்டையாக இதனை அணிந்து கொள்ளலாம் என்பதால் ஒருவர் இதை வைத்திருப்பது மற்றவர்களுக்கு எளிதாகத் தெரியாது, எடுத்துச் செல்வதும் எளிது...

ஊழல் அதிமுக வின் சாதனை...


ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இரவுக் கிளிகள் கண்டுபிடிப்பு...


100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரிய வகை பறவை இனமான இரவுக் கிளிகள் அவுஸ்திரேலிய காடுகளில் உயிர் வாழ்வது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பெருகி வரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் உலகின் பல வகை உயிரினங்களும் அழிந்து வருகின்றன.

அவ்வகையில் 100 ஆண்டுகளுக்கு முன் காணப்பட்ட அரிய வகை பறவை இனமான இரவுக் கிளிகள் அழிந்து விட்டதாகவே கூறப்பட்டது.

இந்நிலையில், அவுஸ்திரேலிய காடுகளில் வன விலங்குகள் மற்றும் பறவை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஜோன் யங், இந்த கிளிகள் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்....

அவுசுத்திரேலியாவின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள யங், 15 ஆண்டுகளாக இரவுக் கிளிகள் பற்றிய தேடலில் ஈடுபட்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக 2007ஆம் ஆண்டு இரவுக் கிளிகளின் குரல்கள் காடுகளில் வைக்கப்பட்டிருந்த ஒலிப்பதிவு கருவிகளில் பதிவாகியிருந்தன.

இதையடுத்து, புதிய நம்பிக்கையுடன் கிளிகளைப் படம் பிடிக்கும் முயற்சியில் யங் ஈடுபட்டார். அவரின் அயராத உழைப்பின் பயனாக, அவுசுத்திரேலியாவின் அடர்ந்த காட்டுப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஒளிப்பதிவு கருவிகளில் அரிய வகை கிளிகளின் படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்...

அணு ஆயுதம் ஒப்பந்தத்தில் விலக அமெரிக்கா முடிவு... மூன்றாம் உலகப் போருக்கான முன்னேற்பாடுகள்...


நீட் தேர்வு மையங்கள் பிரச்சினை குறித்து இப்போதுதான் தேடிப்படித்தேன். எனக்குப் பல விஷயங்கள் புரியவில்லை...


தமிழ்நாட்டின் கிராமங்களிருந்து ஏழை மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக தனியாக வேறு மாநிலங்களுக்கு சென்று வர முடியுமா?

துணைக்கு பெற்றோரும் செல்ல வேண்டுமே?

கடைசி நேரத்தில் ரயில் பதிவுகூட கிடைக்காதே, எப்படிப் போக முடியும்?

ஓரிரு நாட்கள் முன்பாகவே சென்று தங்கியிருந்தால்தானே தேர்வு நாளில் பதற்றமின்றி தேர்வு எழுத முடியும்?

அப்படித் தங்குவதற்கு செலவு அதிகமாகுமே?

மாணவிகளுக்கு இது இன்னும் சிரமம் இல்லையா?

மொழி தெரியாத பகுதிகளில் இன்னும் சிரமங்கள் இருக்குமே?

பதற்றத்தோடு இருந்தால் தேர்வுகளை சரியாக எழுத முடியாதே?

இந்தக் கேள்விகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விடுகிறேன்.

1. தமிழகத்தில் போதுமான மையங்கள் இல்லை என்பதால் வேறு மாநிலங்களில் தேர்வு செய்ய வேண்டி வந்தது என்கிறது சிபிஎஸ்ஈ. அதன் பொருள் என்ன? தேர்வு நடத்தக்கூடிய தரமான பள்ளிகள் தமிழகத்தில் இல்லையா? கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் கல்வி நிலையங்கள் மோசமா? அப்படி மோசமாக இருந்தால், ஐஐடி-ஜீ தேர்வு மையங்கள் விஷயத்தில் இந்தப் பிரச்சினை வரவில்லையே எப்படி? அவ்வளவு ஏன், கடந்த ஆண்டும் நீட் தேர்வு நடைபெறத்தானே செய்தது? அப்போது இந்தப் பிரச்சினை வரவில்லையே, அது எப்படி? இதிலிருந்து தெரிய வருவது - சிபிஎஸ்ஈ மகா குப்பைத்தனமாக ஏற்பாடு செய்திருக்கிறது என்பதே.

2. இதுபோன்ற தேர்வுகளில் தேர்வு மையத்தை தேர்ந்தெடுக்குமாறு விண்ணப்பத்தில் கூறப்பட்டிருக்கும். பொதுவாக, 1, 2, 3 என்று முன்னுரிமை கொடுத்து 3 தேர்வு மையங்களை தேர்ந்தெடுக்கலாம் என்று தரப்பட்டிருக்கும். ஒரு மாணவர் தேர்வு செய்த மூன்று மையங்களும் மாணவர் தாமாக முடிவு செய்வதில்லை. தேர்வு நடத்தும் சிபிஎஸ்சி முடிவு செய்து அறிவித்த மையங்கள்தான். அப்படியிருக்க, இந்த மூன்றிலும் இல்லாத ஒரு தேர்வு மையத்தை எப்படி, எந்த அடிப்படையில் தேர்வு செய்தது சிபிஎஸ்ஈ? மூன்றில் ஒன்றைத் தேர்வு செய்ய முடியாது என்றால் என்ன மயிருக்கு அந்த மூன்று ஆப்ஷன்கள் தர வேண்டும்?

3. தேர்வு எழுதுவதற்கான ஒரு மொழியை மாணவர் தேர்வு செய்வார். ஆங்கிலம் அல்லது இந்தி ஒருவர் தேர்வு செய்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இந்த இரண்டும் இல்லாத வங்காள மொழியில் எழுது என்று சிபிஎஸ்ஈ சொன்னால் எப்படியிருக்கும்? அதற்கு ஒப்பானதுதான் மாணவர் தேர்வு செய்யாத ஒரு இடத்தை அவன்மீது திணிப்பது.

4. தமிழகத்திலேயே தேர்வு மையங்களை மாற்றித்தர கால அவகாசம் இல்லை என்கிறது சிபிஎஸ்ஈ. இதுகூடச்செய்ய முடியாத ஓர் அமைப்புதான் தேர்வுகளை நடத்துகிறது என்பது எவ்வளவு பெரிய அபத்தம்? சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடுவதற்குச் செலவு செய்த அந்த நேரத்தில் மாற்று ஏற்பாடுகளை செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. காரணம், அகங்காரம்.

5. ஒரு வாதத்துக்காக கேட்கிறேன். ஒருவேளை ராஜஸ்தான் / மத்தியப் பிரதேச மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் தேர்வு மையங்களைக் கொடுத்திருந்தால் அந்த மாநில ஆட்சியாளர்கள் சும்மா இருந்திருப்பார்களா? மைய அரசுக்கு அழுத்தம் கொடுத்து சிபிஎஸ்ஈயை தம் இஷ்டப்படி ஆட்டி வைத்திருப்பார்கள் இல்லையா? தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் மத்தியின் கால்களை நக்கிக் கொண்டிருப்பவர்கள். அவர்களிடம் இதை எதிர்பார்க்க முடியாது. ஆனால், இந்தப் பிரச்சினை மைய அரசுக்குத் தெரியாமல் இருக்குமா என்ன? மத்திய அரசிடமிருந்து சிபிஎஸ்ஈ இயக்குநருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு போதும், ஒரே நாளில் எல்லாம் மாறியிருக்கும். ஆனால் மத்திய அரசு செய்யாது. தமிழகத்தின்மீது அவர்களுக்கு அவ்வளவு வெறுப்பு.

இதுதான் இப்போதைய பிரச்சினையின் மூலம். இதை சரி செய்யாதவரை தமிழ்நாட்டுக்கு விடிவு கிடையாது.

கேனத்தனமாக முடிவு செய்த சிபிஎஸ்ஈ அதிகாரிகளும், அவர்களுக்கு ஒத்தூதும் தீர்ப்பளித்த நீதிபதிகளும், பிரச்சினையைப்புரிந்து கொண்டும் நமட்டுச்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களும் புழுத்துச்சாகட்டும்...

மருத்துவ மாப்பியா.. தடுப்பூசி பலிகள்...


வலிமையான இனம் பெரும்பாலும் தன் இன துரோகத்தால் தான் வீழும்.இது எழுதப்படாத விதி...


இம்முறை நமக்கு தான் அந்த நிலை. பொதுவாக அரசியலில் அன்றிலிருந்து இன்றுவரை நடக்கும் சூழ்ச்சிகள் சாதாரண குடிகளால் கண்டறிவது கடினம் தான்.

ஏனெனில் அதை ஏற்பவரின் நன்மைக்காக, தன் ஆட்சியை நிலை நிறுத்த, பொன், பொருளீட்ட,எதிரியை ஒழிக்க என பல தீய செயல்கள் அரங்கேறும்.

ஆனால் இன்று ஆட்சியாளர்கள் போடும் சட்டங்கள், கொண்டு வந்த திட்டங்கள், தொழிற்சாலைகள் இனி கொண்டுவர இருக்கும் திட்டங்கள் என அனைத்துமே இங்கு கார்பரேட் தரும் பணத்திற்கு மற்றும் மிரட்டலுக்கு என நன்றாக தெரிகிறது.தமிழகத்தின் ஆட்சியாளர்கள் பிடி நடுவணரசு கையில் உள்ளது என இங்குள்ள பச்சை குழந்தைக்கு கூட தெரியும்.

ஆனால் இங்குள்ளவர்களாலும், சட்டங்களாலும், நீதி மன்றங்களாலும் ஒன்றும் செய்ய இயலா மக்களாட்சியை நாம் கொண்டுள்ளோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மாநில ஆட்சியில் உள்ள கயவர்கள் மிக மிக மோசமான அழிவை நோக்கிய ஆட்சிக்கு வித்திட்டு வருகின்றனர்.

இது மேலும் தொடர்ந்தால் தன் சுய நலத்திற்காக 10 கோடி மக்களை பலியிட தயாராகிவிட்டனர் என்றே கூறலாம்.

ஆனால் இது எதை பற்றியும் கவலை இல்லாமல் ஒரு கூட்டம் மட்டைபந்து, கூத்தாடிகள் பின்னால் சென்று கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் இந்த கயவர்கள் நடுவணரசை எதிர்த்து ஒரு குரல் கொடுப்பார்கள் எனில் முக்கியத்துவம் கருதி அவர்கள் பின்னால் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களும் நிற்பார்கள.

ஆனால் இவர்கள் வருமானவரித்துறை (இதுவரை சம்பாதித்த பணம்) சிறை தண்டனை, உயிர் பயம், ஊடகங்களில் நாற வேண்டி வரும் என இவைகளுக்கு பயந்து அடிமையில் இருந்து துரோகியாக மாறி விட்டனர்.

உண்மையில் இவர்கள் இந்த மண்ணில் தான் இந்த இனத்தில் தான் பிறந்தார்களா?

தன் இனத்தை காப்பாற்ற தன் உயிரையே கொடையாய் வழங்கிய இனம் தானே இது..

தனது சுயமாியாதையை காப்பாற்றுவதற்காக உயிரையே கொடுக்கும் கூட்டம் தான் மானத்தமிழ் இனம். எங்கிருந்து இவர்களுக்கு இந்த புத்தி வந்தது?

தம்மால் தம்மை சுற்றியுள்ளவர்களால் பத்து கோடிக்கும் மேற்பட்ட பழந்தமிழ் இனம் அழிவை நோக்கி ஆயத்தப்படுத்தப்படுவதை கண்டும் எதிர்த்து குரல் கொடுக்க முடியவில்லை என்றால் இதுவரை உலகம் சந்தித்த பச்சைதுரோகிகளில் இவர்கள் தான் முதன்மையானவர்கள்.

எதிரிகளால் வீழ்த்தப்பட்டவர்களை விட துரோகிகளால் வீழ்த்தப்பட்டவர்கள் தான் அதிகம் என கேள்வி பட்ட வாக்கியம் இவர்களால் உண்மைத்தன்மையை பெறுகிறது.

நம் இனத்திற்கு கடைசி அத்தியாயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இயற்கையே துணை...

தனியார் பள்ளிக்கு நிகரான அரசுபள்ளிகள் திருவண்ணாமலையில் விஸ்வரூபம்...


கடந்த வாரம் உலக சாதனை செய்து, இப்போது கல்வியில் புரட்சி செய்கின்றனர். 

இப்போதாவது நம் பிள்ளைகளை சேர்ப்போமா?

கிராமங்களில் ஏதும் சண்டை என்றால் கிழவிகள் மண்வாரி தூற்றி மண்ணாய் போ என்பார்கள், அங்கே இயற்கை மண்வாரி தூற்றி கொண்டிருக்கின்றது...


நெஞ்சு எரிச்சலால் ஏற்படும் பாதிப்புகள்.....?


நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆகவில்லை என்றால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். தற்சமயம் நிறைய பேர் நெஞ்சு எரிச்சல் (நெஞ்சு கரிப்பு) காரணமாக மாத்திரை தொடந்து சாப்பிட்டு வருகிறார்கள். ஆனால் இது அவர்களுக்கு நிரந்தர தீர்வை தருவதில்லை. தற்காலிக நிவாரணம் (Temprorary Relief) மட்டுமே.

நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆவதற்கு எது தேவைப்படுகிறது. இரைப்பையில் உட்சுவரின் குழிகளில் சுரக்கும் இரைப்பை நீர் (Gastric Juice) உணவோடு சேர்ந்து செரிமானத்திற்கு உதவுகிறது.

ஒரு நாளைக்கு இரைப்பை நீர் சுரப்பி 1.5 லிட்டரிலிருந்து 2 லிட்டர் வரை நீர் சுரக்க வேண்டும். அப்படி குறையும் போது வயிறு செரிமானம் ஆவதில்லை. வயிறு செரிமானம் ஆகவில்லை என்றால் என்ன நடக்கும் தெரியுமா?

நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் எப்படி கிடைக்கும். இரத்தம் உற்பத்தி எப்படி ஏற்படும்?.

இரத்தம் இல்லை என்றால் உடல் சோர்வு, பசியின்மை, வாயு சிக்கல் (Gas Trouble) என்று பல விதமான சிக்கல்களை ஏற்படுத்தும். அதனால் நாம் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்க முடியாது.

அது மட்டும் அல்லாமல் பசிக்காமல் சாப்பிடுவோம். அதுவும் பல சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே நெஞ்சு எரிச்சல் தானே என்று சாதாரணமாக விட்டுவிடாதீர்கள். சிறியது தான் பெரியதாக மாறும்.

எனவே இரைப்பைச்சாறு (Gastric Juice) சுரப்பி ஏற்பட என்ன சாப்பிடலாம் என்றால் நார்சத்து உள்ள காய்கறிகள், கொய்யாப்பழம் மற்றும் (திராட்சை Juice) தினமும் ஒரு குவளை குடித்து வந்தால் மாற்றம் ஏற்படும்.

நன்றாக பசி எடுக்க ஆரம்பிக்கும். உடம்புக்கு தேவையான பல சத்துகள் கிடைக்க ஆரம்பித்து விடும். இதனோடு துளையீட்டு மருத்துவமுறை ஊசி (acupuncture Needle) போட்டால் விரைவாக சரி செய்யலாம்...

இது பாஜக வின் தமிழின அழிப்பின் ஒரு பகுதி தான்...


இலங்கையில் முதன் முதலில் பிரச்னை இப்படி தான் கல்வியில் தரக்கட்டுப்பாடு என்ற பெயரில் தொடங்கியது...

இப்போது தமிழ்நாட்டில்...

அதிசய பாறை..


சவுதி அரேபியாவில் உள்ள அல் - கசனா பகுதியில் ஒரு கிராமத்தில் இந்த அதிசய பாறை உள்ளது.

அப்படி என்ன அதிசயம்.

பாறை தரையில் இல்லாமல் சற்று மேலே உள்ளது. அதாவது அந்தரத்தில்..

17 ஆண்டுகளுக்கு முன்னால் (1989) இந்தப்பாறையின் பின்புறம் இருந்த ஒரு தீவிரவாதி சுட்டுக் கொள்ளப்பட்டார்.

இன்னும் சுடப்பட்டவரின் உடலிலிருந்து சிதறிய இரத்தம் உறையாமல் உள்ளது.

பாறை தரையிலிருந்து மேலே செல்லும் போது இரத்தத்தின் நிறம் கருப்பாகவும், ஈரமாகவும் இருக்கிறது.

கிராமத்தில் உள்ளவர்கள் இந்த கறையை துடைக்க முயற்சி செய்தனர். ஆனால் மீண்டும் பாறை மேலே செல்லும் போது இரத்தக்கறை தோன்றுகிறது.

இப்போ பாருங்க அந்த அதிசய பாறையை...

இந்தியா என்பதே தமிழினத்திற்கு எதிரானதே...


பெற்றோர் செல்போன் வாங்கித் தராத காரணத்தால் 8-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை...


பல்லடம் பனப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. பனியன் தொழிலாளியான இவருக்கு வேணி என்ற மனைவியும், வசந்த், பிரேம்நாத் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். வசந்த 10-ம் வகுப்பும், பிரேம்நாத் 8-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக பிரேம்நாத் தனது பெற்றோரிடம் செல்போன் வாங்கி தரும்படி கேட்டுள்ளதாகத் தெரிகிறது. சில நாட்கள் கழித்து வாங்கி தருவதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று காலை ரவி வேலைக்கு கிளம்பிய போது, பிரேம்நாத் மீண்டும் போன் கேட்டுள்ளார். சில நாட்கள் கழித்து வாங்கித் தருவதாக சொல்லி விட்டு, ரவி வேலைக்கு சென்று விட்டார். தாயார் வேணியும், வசந்த்தும் வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த பிரேம்நாத் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, வீட்டிற்கு வந்து பார்த்த வேணி மகன் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து, தனது கணவருக்கு தகவல் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து, போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

அவதார் பட பாணியில் எதிரிகளிடம் இருந்து ஒருவன் காப்பாற்ற வருவான் ஆனால் அவன் தான் அங்கு நடந்த அழிவுகளுக்கு காரணமாக இருப்பான்..


அதே போலத்தான் இங்கேயும் ஆனால் இங்கு இருவரும் ஒரே ஆட்களின் முகமூடி...

வெற்றி என்றால் என்ன?


வெற்றி என்பதற்கு தனியாக எந்த ஒரு விளக்கமும் கூற முடியாது...

எளிமையான முறையில் சொல்வதென்றால் நாம் நினைத்தது நமக்கு கிடைத்து விட்டால் நாம் நினைத்த இலக்கை நாம் அடைந்து விட்டால், நாம் இருந்த நிலையை விட ஒரு நிலை மேலே அடைந்துவிட்டால் அதனை வெற்றி என்று போற்றுகின்றோம்.

சிலருக்கு பணம் கிடைத்தால் வெற்றி , சிலருக்கு புகழ் கிடைத்தால் வெற்றி , சிலருக்கு சேவை செய்தலில் கிடைக்கும் மகிழ்ச்சியில் வெற்றி, பிடித்த பெண் அல்லது பிடித்த ஆண் துணையாக கிடைத்தால் வெற்றி.

இப்படி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வெற்றியின் இலக்கணம் வெவ்வேறாக இருக்கும்.

இப்படி வெற்றிக்கான இலக்கணம் ஒவ்வொருவருக்கும் மாறுபட காரணமாக இருப்பது நம்முடைய மனம் மட்டுமே.

குறிப்பாக வெற்றி என்பதை ஒரு வரியில் விள்ளக்க வேண்டுமேயனால் மகிழ்ச்சியாக வாழ்வதே வெற்றி ஆகும்.

ஆனால் ஒவ்வொருவருடைய மனமும் ஒரு குறிப்பிட்ட செயலை செய்வதாலோ அல்லது குறிப்பிட்ட அல்லது பிடித்த அந்த இலக்கை அடைந்தாள் மட்டுமே வாழ்க்கையில் முழு மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

ஆகவே நீங்கள் வெற்றியாளர் ஆக வேண்டுமேயானால் உங்களின் மனதிற்கு பிடித்த அந்த செயல் என்னவென்று நீங்கள் அறிந்திருக்க வேண்டும்...

கரு.பயனியப்பன் திமுக உடன் ஒட்டி உறவாடுவது ஏன்.?


தமிழன் தான் உலகத்திற்கே வழிகாட்டி...


சோழர் காலத்தில் ஆட்சி முறை அமைப்பு...

ஒரு நாடு சீராய் செயலாற்ற, நல்ல நிர்வாகம் தேவைப்படுகிறது. இங்கு நாம் பார்ப்பது, சோழ ஆட்சியின் அமைப்பு.

இந்த படம், இன்று மக்களாட்சி என்று நாம் பின்பற்றும் விடயங்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இந்த மண்ணில் இருந்தவை என்பதை கூறுகிறது.

நகரின் வகைக்கு ஏற்ப , அதன் ஆட்சியையும், நிர்வாகத்தையும் மாற்றி அமைத்துள்ளனர்.

குறிப்பு: ராசராசசோழன் வரலாற்றுக் கூடம் புத்தகத்தில் இருந்து பகிர்ந்து கொள்ளப்பட்டது...

2200 கி.மீ பயணம் செய்தால் எப்படி நீட் தேர்வு எழுத முடியும்.?


போக வர 10000 ஆகும் பயணம் செய்ய பணம் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்.?

நாம் ஒருமித்த கருத்துக்களில் ஒன்றிணையாத வரை, நமக்கான அரசியல் ஒருபோதும் பிறக்க போவதில்லை...


அதற்கு பதிலாக இனி அதிக கட்சிகளும், இயக்கங்களும் மட்டுமே பிறக்கும்..

நம் சிந்தனைகளை மழுங்கடிப்பதற்காக...

பாஜக விற்கு கேரளா கொடுத்த செருப்படி...


மனதை கட்டுபடுத்த முடியுமா?


உடல் அங்கங்களின் அதிர்வுகள் பல வகையில் மாறி மாறி அதிரும்வரை மூளையும் பல்வேறு எண்ணங்களின் தொடர்பிலேயே இருக்கும்.

உடல் உறுப்புகளின் அதிர்வுகளினால் ஏற்படும் மின்சக்தி மாறுபாடு மூளையை வெவ்வேறு அலைவரிசைகளில் டியூன் செய்கிறது.

உடல் உறுப்புகள் உருவாக்கும் இந்த சிக்னல்கள் மூளையை அடைவதை தடுக்க வேண்டும், இல்லை நிறுத்த வேண்டும்.

உடல் உருவாக்கும் சிக்னல்களை தடுக்க முடியாது. ஆனால் அதை ஒரே மாதிரி மாற்ற முடியும்.

உடல் அணுக்களின் அதிர்வை முடிவு செய்வது கோட்சாரம். அதாவது கிரகங்களின் இடமாற்றம்.

உடல் கிரக கதிர்வீச்சுகளினால் பாதிக்கப்பட்டாலும், நம் மனோ வலிமையால் அதில் இருந்து தப்பலாம்.

உடல்தான் மறைமுகமாக எண்ணங்களை தொடர்பு கொள்ள உந்துகிறது.

உடல் அணுக்களை ஒரே லயத்திற்கு கொண்டுவர தொடர் மந்திர உச்சரிப்புகள் அவசியம்.

உடலை சார்ந்தே எண்ணங்கள் இருந்தாலும் அதே எண்ணங்களால் இந்த உடலின் அதிர்வை மாற்ற முடியும்.

உடல் உணர்ச்சிகள் எண்ணங்களையும், எண்ணங்கள் உடல் உணர்ச்சிகளையும் மாற்றவல்லது.

உடல் உணர்வுகளை தொடர் சுயகருத்தேற்றத்தின் மூலம் நம் கட்டுபாட்டிற்கு கொண்டுவர முடியும்.

உடலை யோகாவால் தளர்த்தி, அடிக்கடி "என் மனம் என் கட்டுபாட்டில் உள்ளது" என மனதால் நினைத்துவர மனம் அடங்கியே தீரும்.

உடலும் மனமும் தங்கள் கட்டுபாட்டிற்கு வந்துவிட்டால், பிறகு என்ன இந்த வானமே எல்லை...