27/04/2019

சுருளிமலை அதிசயம்...


உலக அதிசய பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலையை யுனெஸ்கோ [unesco] நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் பருவ கால நிலைகளில் மாற்றம் செய்து மழையை பொழியச் செய்வதில் இதன் பங்கு அளப்பரியது.

மேற்கு தொடர்ச்சி மலை என்பது வட இந்தியாவிலிருந்து தொடங்கி பல்லாயிரம் மைல் அளவில் பரந்து நமது தமிழ்நாட்டின் வழியாக கேரளா வரை அமைந்துள்ளது.

பதினெட்டுச் சித்தர் பெருமக்களும் சங்கம் அமைத்து வாழ்ந்த மலை எனவும், தென் இந்தியாவின் "கைலாய மலை" எனப் போற்றப்படும் "சதுரகிரி மலை" இதில் தான் அமைந்துள்ளது.

இதனுடன் இணைந்து கேரளா எல்லை வரை பரவி தெய்வீக ஆற்றலுடன் விளங்கும் ஒரு மலை தான் "சுருளி மலை" ஆகும்.

இம் மலை தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சுருளி மலை பற்றிய அதிசய செய்தி ஒன்று சுமார் 25 -வருடங்களுக்கு முன்பு ஒரு வார இதழில் வெளிவந்தது. அதில் உள்ள விபரம்...

அந்தக் கால அதிசயம் - மர்மக்குகையில் தேவ கன்னிகைகளா ? என்ற தலைப்பில் வெளியான கட்டுரை விபரம்...

மதுரையில் இருந்து தேனி வழியாக 70 -கிலோ மீட்டர் தொலைவில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதில் அமைந்துள்ளது சுருளிமலை.

ஆண்டு முழுதும் தண்ணீர் வற்றாமல் எப்போதும் கொட்டிக் கொண்டிருக்கும் சுருளி அருவி மிகப் பிரசித்தி பெற்றது. இவ்வளவு நீர் எங்கி ருந்து உற்பத்தியாகிறது என்பது இன்று வரை யாருக்கும் புரியாத புதிர்.

ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் காட்டுக்குள் மனிதர்கள் செல்வ தில்லை கதம்ப வண்டுகள் ஐந்து கொட்டினாலே ஆள் காலி என்கின்றனர்.

அருவிக் கரையில் இருந்து மூன்று பர்லாங் தொலைவில் “கைலாச நாதர் குகை” உள்ளது.

கம்பம் பள்ளத்தாக்கில் வசிக்கும் பெரும்பான்மை இனமான கன்னடம் பேசும் கவுடர்களில் "மார்கழியார்" என்ற பிரிவினர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தங்களுக்குள் பூசாரி ஒருவரை தேர்ந்தெடுக்கவும், சுருளி மலையில் மறைந்துள்ள "கிருஷ்ண பகவானின்" புல்லாங் குழலைக் கண்டு பிடிக்கவும் இங்கு யாகம் வளர்த்து, அன்னதானம் செய்தனர்.

அப்போது பத்து வயது சிறுவனுக்கு சாமி [அருள்] வந்து கைலாசநாதர் குகைக்குள் நுழைந்தாக வேண்டும் என்றான். அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். குகைக்குள் நுழைவது அத்தனை சுலபமல்ல.

கும்மிருட்டு விஷ ஜந்துக்கள் இருக்கலாம், மேலும் நிமிர்ந்த நிலையில் உள்ளே புக முடியாது. படுத்த நிலையில் தவழ்ந்து தான் போக வேண்டும். எனவே சிறுவன் கையில் ஒரு அகல் விளக்கை  பிடித்தபடி தவழ்ந்து சென்றான்.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்து அவன் சொன்ன செய்திகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின.

உள்ளே மிகப்பெரிய அரங்கம். ஒளி உமிழும் உருண்டைகள் ஆங் காங்கே கல் தூண்களின் நுனியில் பொருத்தப் பட்டிருந்தனவாம். திரு நீற்றில் புரண்டு எழுந்தார் போல் வெண்மையான உடலும், நீண்ட தாடியும் கொண்ட முனிவர்கள் கல் ஆசனங்களில் அமர்ந்து தேவ கன்னிகளின் நடனத்திற்காக காத்திருந்தார்களாம்.

மற்றொரு அதிசயச் செய்தி இருப்பதாகவும், அது "தேவ ரகசியம்" என்றும் அந்த சிறுவன் கூறினான்.

சுருளி மலையில் உள்ள அருவியிலிருந்து மேற்கே சுமார் ஐந்தாறு மைல்களுக்கு அப்பால் தான் கேரளா, தமிழ் மாநிலங்களுக்கு தீராத பிரச்சினையாக இருந்து வரும் “கண்ணகி கோயில்” [மங்கள தேவி கோட்டம்] உள்ளது.

மதுரையை எரித்த கையோடு தலைவிரி கோலமாக நடந்து வந்த கண்ணகி இந்த அருவியில் நீராடி புஷ்பக விமானம் ஏறிச் சென்றதாக கூறுகிறார்கள்.

மேலும் இங்கு தோண்டி எடுக்கப்பட்ட கண்ணகி சிலை மற்றும் கல்வெட்டுக்கள் மூலமாக இன்னும் பல ஆதாரபூர்வமாக வியத்தகு செய்திகளை ஆராய்ச்சியாளர்கள் விரைவில் தருவார்கள் என எதிர்பார்க்கலாம்...

திமுக ஸ்டாலின் கனவை தவிடுப் பொடியாக்கிய தமிழக முதல்வர் எடப்பாடி...


https://youtu.be/d78h6Rfa9-E

Subscribe The Channel For More News...

சிபிசிஐடி காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி மீது அவரது மகள் குற்றச்சாட்டு...


தாய் தந்தையே தன்னை கொடுமை படுத்துவதாக கூறி தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சி பி சி ஐ டி ஆய்வாளர் விஜயலட்சுமி  மகள் கேண்டி  குற்றச்சாட்டு.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது.

என்னுடைய   தாய் காவல் ஆய்வாளராக உள்ளார். என்னுடைய தாயும் தந்தையும் தன்னை வற்புறுத்தி ஒரு வருட காலமாக துபாய் பாரில் ஆட வைத்து பணம் சம்பாதித்து வந்தனர். எனக்கு அதில் உடன்பாடு இல்லை என்பதால் அங்கிருந்து வெளியேறி  என்னுடைய அண்ணன் வீட்டில் தங்கி இருந்தேன் . அப்போது கடந்து 23.04.2019 தேதி அன்று   எனது தாயும் தந்தையும் அடியாட்களுடன் வந்து அடித்து கொடுமை படுத்தி இழுத்து சென்றதாகவும் இதை கண்ட அப்பகுதி மக்கள் அவர்களிடம் இருந்து தன்னை காப்பாற்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்து பின்னர் மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

அதுமட்டுமல்லாமல் என்னுடைய அண்ணனின் கடையை தவறான முறையில் அபகரிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

மேலும் என்னுடைய அண்ணியிடம் 10 லட்சம் பணமும் நகையும் வரதட்சணையாக வாங்கி தருமாறு கொலை மிரட்டல் விடுத்தனர். இவை அனைத்தும் தன்னுடைய தாய் காவல் ஆய்வாளர்   என்பதால் அவரை பற்றி எந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் அதனை அவர்கள் பெரிதாக எடுத்து கொள்ளமால் அவர் மீது நடவடிக்கையும் எடுக்க மறுக்கின்றனர். இதனால் தன்னுடைய உயிர்க்கு ஆபத்து இருப்பதால் அவர்களிடம் இருந்து தன்னையும் தனது அண்ணனின் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்...

அவமானம் படுறதெல்லாம் அல்வா சாப்பிடறது மாதிரி நினைக்கும் ராசிகாரர்கள் யார் யார் தெரியுமா.?


https://youtu.be/NVowYUGU3w4

Subscribe The Channel For More News...

தமிழனை வீழ்த்தியது ஆரியன் என்னும் திருட்டு திராவிடனே (வடுகர்கள்)...


மூவேந்தர்கள் மீது இது வரை எந்த ஆரிய பார்ப்பானும் படை எடுத்து வந்து வீழ்த்தியது இல்லை.

அப்படி என்றால் யார் தான் வீழ்த்தியது?

இந்த வரலாறு தான் அந்த 500 வருடத்தில் அடங்கி இருக்கிறது. அதை தான் திராவிட சிகாமணிகள் மறைக்கிறார்கள். ஏன் மறைக்கிறார்கள்?

காரணம், தமிழனை வீழ்த்தியதே இந்த திராவிட சிகாமணிகளின் முன்னோர்களான தெலுங்கர்கள் தான் என்பதால்..

தமிழரின் தாயகம் கடைக் கழக காலத்திலேயே வேங்கடம் முதல் குமரி வரை என சுருங்கி விட்டது. அதன் பின்னர் எந்த நேரடி ஆரிய படை எடுப்பாவது தமிழகத்தின் மீது நடந்தது உண்டா?

எந்த ஆரிய பார்ப்பன் தமிழன் மீது போர் தொடுத்தான்? பதில் உண்டா?

வடக்கில் இருந்து எந்த ஆரிய படை எடுப்பும் விந்திய மலைக்கு தெற்க்கே வந்து வெற்றி பெற்றதே இல்லை. மாறாக, தமிழ் பேரரசர்களே வடக்கு நோக்கிப் படை செலுத்தி வென்று கொடிநாட்டிய வரலாறுகள் உண்டு.

இருப்பினும், வென்ற இடங்களை யாதொரு தமிழரசனும், பிடித்தாண்ட வரலாறு இல்லை. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் முதலானோர் பல வடக்கத்திய நாடுகளை வென்று திரை கொண்டு வந்தாரே அன்றி, அவற்றை பிடித்து ஆள எண்ணியதே இல்லை.

பிராமணிய கொடுநெரிகளைச் சட்டவடிவமாக்கிய 'மனு நூல்', ஆரியரால் ஆக்கப்பட்ட நூல் அல்ல.

அது கி.பி.நான்காம் நூன்றாண்டில் கர்நாடகத்து (திராவிடன்) கடம்பப் பேரரசனான மயூரவர்மனின் அவையில் அரங்கேற்றப் பெற்ற சட்ட நூல்..

மானவக் குலம்  என்பது 'ஆரிபுத்திரனின் வழிவந்த' கடம்ப்பரையும், சாளுக்கியரையுமே குறித்தது.

'மானவத் தருமநூல்' எனப்பட்ட மனுநூல் இதனால் கருனாடகத்து கன்னட அரசர் ஆக்கிய நூலேயாகும்.

அதையொத்த ஆவத்தம்பா சூத்திரம், போதாயன சூத்திரம், நாரதர் சூத்திரம் முதாலான பிராமனியாயச் சட்ட நூல்களும் கூடத் தென்னகத்தின் 'திராவிட' அரசுகளால் ஆக்கப்பெற்ற சட்ட நூல்களே ஆகும்.

Source: http://www.ourkarnataka.com/states/history/historyofkarnataka10.htm

தமிழன் மீது ஆரியன் படை எடுத்து வெல்லவில்லை என்றால், வேறு யார் தான் அவர்களை வென்றார்கள் என்ற கேள்வி இயல்பாய் எழும்.

குலுத்துங்க சோழனுக்கு பிறகு சோழப் பேரரசில் சாளுக்கிய ஆதிக்கம் ஓங்கி வளர்ந்ததும், அதுவே சோழ பேரரசின் வீழ்ச்சியின் ஆரம்பம் என்றும் கருதலாம். இது மண உறவால் சோழர் வீழ்ந்த வரலாறு.

என்ன தான் மூவேந்தர்கள் வீழ்ச்சி நேரடியாகவும் மறைமுகமாவும் தொடர்ந்தாலும் அவர்கள் தங்கள் தாய் மொழியான தமிழை உயர்த்தியே பிடித்தனர்.

சமஸ்கிருத கலப்பு இருப்பினும் ஆட்சி மொழி தமிழே.  அதில் ஒருக்காலும் அவர்கள் சமரசம் செய்துகொண்டது இல்லை.

இந்த இடத்தில் தான் நாம் 'விஜயநகர பேரரசின்' (திராவிட) படை எடுப்பை கவனிக்க வேண்டும்.

பாண்டிய பேரரசில் சக்களத்தி மக்களுக்கிடையே நிலவிய அதிகார போட்டியில் தலையிடுவதன் மூலம், Trojan Horse போல் உள்ளே நுழைந்தது இந்த விஜயநகர வடுக பேரரசு (அதாவது பெரியார், கருணாநிதி, வைகோ உள்ளிட்ட திராவிட தலைவர்களின் முன்னோர்கள்). பின்னர் நாகம நாயக்கன் என்பானின் வழியாக மதுரை அரசையே கைப்பற்றி கொண்டு, 'நாயக்கர் அரசு' என்னும் ஒரு வந்தேறி ஆட்சியை அமைத்தது...

பொங்கி எழுந்த இபிஎஸ், ஓபிஎஸ்.. 3 அதிமுக எம்.எல்.ஏ. கள்.. தகுதி நீக்கம்...


https://youtu.be/aNQrmPiUF_Q

Subscribe The Channel For More News...

மன்னிக்க மறக்காதீர்கள்...


மன்னிப்பைப் பற்றி மருத்துவம் சொல்வது பகீர் தகவலாக உள்ளது...

நீங்கள் ஒரு நபர் மீது எரிச்சலும், கோபமும் கொள்ளும் போது உங்கள் மூளையில் ஒரு வடிவம் உருவாகிறது. உங்கள் எரிச்சலும், கோபமும் அதிகரிக்க அதிகரிக்க அந்த வடிவம் ரொம்ப வலுவாக மாறிவிடுகிறது. அந்த வலுவான நிலைமை பின்னர் உங்கள் இயல்பாகவே மாறிப் போகிறது. அதன் பின் கோபமும், எரிச்சலும் இல்லாமல் வாழ்வது உங்களுக்கு குதிரைக் கொம்பாகி விடும் என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள்.

மன்னிக்கும் பழக்கமுடைய மனிதர்கள் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள்' என்கின்றன பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள்.

கேம்பைன் பார் பர்கிவ்னஸ் ரிசர்ச் சுமார் 48 ஆராய்ச்சிகளின் முடிவை விலாவரியாக எடுத்துரைக்கிறது. எல்லா ஆராய்ச்சிகளுமே மன்னிக்கும் மனிதர்கள் உடலிலும், உள்ளத்திலும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருப்பதாக அடித்துச் சொல்கின்றன.

ஸ்டான்போர்ட் பல்கலைக் கழக பேராசிரியர் தனது 'லேர்ன் டு பர்கிவ்' (மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்) எனும் நூலில் மன்னிப்பின் மகத்துவத்தையும், அது தரும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் பற்றி பிரமிப்பூட்டும் வகையில் எழுதியிருக்கிறார்.

மன்னிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பும் குறைவு என்கின்றன ஏல் மெடிக்கல் பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரைகள்.

மன்னிக்கும் மனம் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். இதுவே காரணமாம்.

இந்தியா மதங்களின் நாடு. மதங்கள் எல்லாமே மன்னிப்பைப் பேசுகின்றன.

ஒரு மனிதன் தேவ நிலையை அடைய வேண்டுமெனில் மன்னிப்பும் அவனிடம் இருக்க வேண்டும் என்கிறது பகவத் கீதை.

இஸ்லாம் கடவுளை அல் கபிர் என்கிறது, முழுமையாய் மன்னிப்பவர் என்பது அதன் அர்த்தம்.

மன்னிக்க மறுப்பவர்கள் சுவர்க்கம் செல்ல முடியாது என்கிறது கிறிஸ்தவம்.

ஆனால் மதங்களைப் பின்பற்றும் நமது நாட்டில் மன்னிப்பு எவ்வளவு தூரம் ஆரோக்கியமாக இருக்கிறது?

நாட்டில் நடைபெறும் இன்றைய நிகழ்வுகளை மீடியாக்களில் பார்த்தாலே உண்மைத்தன்‍ையை தெரிந்து கொள்ள முடியும்..

மன்னிப்பு சட்ட திட்டங்களால் வருவதில்லை. மன்னிக்கும் மனதுடைய மக்களுடன் பழகும் போது நம்மை அறியாமலேயே அந்த நல்ல பழக்கமும் நம்முடன் வந்து ஒட்டிக் கொள்கிறது.

மன்னிக்கும் மனநிலை பெற்றோருக்கு இருந்தால் பெற்றோர் களைப் பார்த்து வளரும் குழந்தைகள் மன்னிக்கும் மனநிலையை எளிதாகவே பெற்று விடுவார்கள். குழந்தைகளுக்கு மன்னிக்கும் மனம் இயல்பாகும் போது எதிர்கால சமூகம் வன்முறைகளின் வேர்களை அறுத்து விடும்.

அடுத்தவர்களுடைய மனநிலையில் இருந்து கொண்டு நமக்கு நேர்ந்த கசப்பான நிகழ்வை யோசித்துப் பார்த்தால், பெரும்பாலான கோபங்கள் விலகிவிடும்.

குறிப்பாக கணவன் மனைவி, குடும்பத்தினருக்கு இடையேயான பிணக்குகள், எரிச்சல்கள், வெறுப்புகள் போன்றவையெல்லாம் கதிரவன் கண்ட பனிபோல விலகிவிடும்.

பலவேளைகளில் நாம் கோபத்தை விட்டு விட ரொம்பவே தயங்குகிறோம். கோபம் என்பது வீரத்தின் அடையாளம் என்று போலியாக கற்பனை செய்து கொள்கிறோம். எதிர் நபர் மன்னிப்புக்குத் தகுதியற்றவர் என்று முடிவு கட்டி விடுகிறோம். அப்படி நினைப்பதன் மூலம் நாம் பெரியவர்களாக முயலும் உளவியல் சிக்கலே இது.

மன்னிப்பு கடந்த காலத்தின் நிகழ்வுகளை மாற்றாது. ஆனால் அது எதிர்காலத்தின் பாதைகளில் ஆனந்தமான பூக்களைச் சொரியும். வாழ்க்கை பணத்தினாலோ, செல்வத்தினாலோ கட்டப்படுவதல்ல. அது அன்பின் இழைகளால் பின்னப்படுவது.

உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் மன்னிக்கும் மனம் தானே முளைவிடும்.

மன்னிப்புக் கேட்கும் எவருக்கும், மன்னிப்பை மறுக்காதீர்கள்...

மன்னிப்புக் கேட்காதவர்களையும் மன்னிக்க மறக்காதீர்கள்...

அதிமுக வுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும்.. ஆளுங்கட்சி எடுத்த அதிரடி எக்ஸிட் போல்...


https://youtu.be/d0L8b2a9q2I

Subscribe The Channel For More News...

உலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா?


The World’s only living civilization...

உலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலும் அவை எல்லாம் ஒரு காலத்தில் அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும் தோன்றியிருக்கின்றன.

மிகப் பழமையான கிரேக்க, ஏத்தன்சு, ரோம் போன்ற மாநகரங்களை ஆய்விடும் போது அடுக்கடுகான அமைவிடங்கள் இருப்பது தெரியவந்தது.

அதாவது அந்த நகரம் புதையுண்டு அதன் மேல் மீண்டும் ஒரு நகரம் உருவாக்கப்பட்டது. ஆனால் சுமார் 6000 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே நகரம் மதுரை தான் என்று ஆய்வாளர்கள் பிரம்மிக்கிறார்கள்.

நகரம் மட்டும் இயங்கவில்லை தனது கலாச்சாரத்தை இன்று வரை தொடர்ச்சியாக எடுத்து வந்துள்ள காரணத்தினால் மதுரையை “The World’s only living civilization” என்று டிசுகவரி தொலைக்காட்சியின் “The Story of India” ஆவணப்படத் தொகுப்பாளர் மைக்கெல் வுட்சு.

மேலும் மதுரையை ஒட்டி அமைந்துள்ள பெருமாள் மலையின் அருகில் நரசிங்கம்பட்டி கிராமத்தில் சமீபத்திய தொல்லியல் துறை ஆய்வில் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமக்காடு (இறந்தவர்களை புதைக்கும் இடம்) கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் வியக்கத்தக்க விடயம் என்னவென்றால் இறந்தோரைப் புதைத்த இடத்தினை அடையாளம் கொள்ள புதைத்த இடத்தின் மீது அடையாளமாய் கற்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் இது இறந்தோரை தாழியில் அடைக்கும் நாகரீகத்திற்கும் முந்தையது.

இந்த இடத்தை இப்போது நீங்கள் சென்று பார்த்தாலும் கற்குவியலைக் காணலாம். அங்கு வந்து குறிப்பிட்ட நாட்களில் வந்து பூசித்து வழிபடும் வழக்கத்தையும் சிலர் கொண்டுள்ளனர். அவர்களை விசாரித்த போது பரம்பரை, பரம்பரையாக பாரம்பரியமாக வழிபடுவதாகவும்; இதற்கான காரணம் தெரியாது, அங்கு முன்னோர்கள் இருப்பதாக நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

அது அவர்களது முன்னோர்கள் புதையுண்ட இடம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் சொன்னதைக் கேட்டு பிரம்மித்தனர். ஆம் நண்பர்களே சுமார் 6000வருடமாக தொடர்ந்து ஒரு நகரம் இயக்கம் கொண்டு வருவது மட்டுமல்ல, ஒரு கலாச்சாரமும் தொடர்ந்து இடைவெளியில்லாமல் இயங்கி வருகிறது என்றால் பிரம்மிப்பாக உள்ளதல்லவா?

அது மட்டுமல்ல மதுரைக்கு தூங்கா நகரம் என்ற பெயரும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன் இட்ட பெயர் அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு இரவு நேரக் கடைகள் பிரசித்தம். அவற்றை அல் அங்காடி என்று கூறுவதுண்டு.

இதன் காரணமாகவே இன்று வரை இது தூங்கா நகரம் என்று அழைக்கப்படுகிறது. ஆறாயிரம் ஆண்டுகளாக உலகிலேயே ஒரு நாகரீகத்தின் கலையையும், கலாச்சாரத்தையும், மொழியையும் சுமந்து தொடங்கி இயங்கி வரும் நகரம் மதுரை மட்டும் தான் என்பது பெருமைபடக்கூடிய விடயம் தானே!

குறிப்பு...

அன்றைய மதுரை என்பது இன்றைய மதுரயைக் காட்டிலும் மிகப் பெரிய அளவுடையது. மதுரையுடைய துறைமுகமாக கொண்டு செயல்பட்டது மேலும் கீழ் திசையில் நெல்லை வரையிலும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது...

உங்கள் ஆன்மா வை விழிப்படைய செய்து அமானுஷ்ய சத்தியை கொடுக்கும் இரகசிய தியான காணொளி....



https://youtu.be/UmfiLPcAmfQ

Subscribe The Channel For More Videos...

தமிழர்கள் அனைவரும் ஆய்வறிஞர் குணா அவர்களின் புத்தகங்களை படித்துத் தெளிய வேண்டும்...


ஆய்வறிஞர் குணாவின் புத்தகங்களான திராவிடத்தால் வீழ்ந்தோம், வள்ளுவத்தின் வீழ்ச்சி, மண்ணுரிமை, வள்ளுவப் பார்ப்பாரியம், முன்தோன்றி மூத்தகுடி, தொல்காப்பியத்தின் காலம், நாற்றாங்கால், போன்றவற்றை ஒவ்வொரு தமிழரும் படித்துத் தெளிய வேண்டும்.

பாவாணருக்குப் பின் தமிழின விடுதலைக் கருத்துக்களை தெளிவாக விளக்கியவர் குணா மட்டுமே..

இந்த மண்னாலும் மொழியாலும் தான் நமக்கு பெருமை..

மிகப்பெரும் ஆய்வாளரான ஆய்வறிஞர் குணா ஒரு சாதாரன எழுத்தாளராகக்கூட..

பலருக்கும் அறிமுகம் ஆகாதவராக இருப்பது நமக்கு அவமானம்..

பாவாணரை இழந்து வாடுவது போதும். இவரையும் நாம் இழந்து விட வேண்டாம்.

தமிழினம் விழித்தெழ வேண்டும்.

தமிழறிஞர்களை நாம் கொண்டாட வேண்டும்..

அவரின் கருத்துக்களை பின்பற்றி தமிழர் தேசியம் அமைய களம்காண வேண்டும்...

குண்டலினி சக்கராவை விழிப்படைய செய்யும் இரகசிய தியான காணொளி...


https://youtu.be/FTfc1tm9r8M

Subscribe The Channel For More News...

இயற்கை என்றால் என்ன?



நாம் பார்க்கும் செடி, கொடி, மரங்கள்தான் இயற்கையா? இல்லை, இயற்கையை சட்டத்திற்குள் வட்டமாகவோ அல்லது வட்டத்திற்குள் சட்டமாகவோ அடக்கிவிடமுடியாது. இயற்கைதான் நமது "பிரதான ஆசான்" என்கிறார் ஜப்பான் நாட்டை சேர்ந்த, உலகத்தின் தலைசிறந்த இயற்கை விஞ்ஞானி "மசானபு புகாகோ". இயற்கையில் நடக்கும் மாற்றங்கள் மற்றும் தொடர்நிகழ்வுகளை அறிந்துகொள்வதே அறிவியல் என்கிறார் அவர். நமக்கு கல்லூரியில் கல்வி கற்றுத்தரும் அனைத்து ஆசிரியர்களும் இரண்டாம் நிலை ஆசான்கள், இயற்கையே பிரதான ஆசான் என்பதற்கு பல விஷயங்களை சொல்ல முடியும்.

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு சென்றால் போடப்படும் ஊசிக்கு, கொசுக்கடிதான் முன்னோடி, கண்கள், கேமெராவிற்கு முன்னோடி, காதுதான் ஒலிவாங்கிகளுக்கான முன்னோடி. மனிதர்கள் குகைகளில் வாழ ஆரம்பித்தே சில ஆயிரம் ஆண்டுகள் தான் ஆகின்றன, ஆனால் தூக்கணாங் குருவிகள் கூடுகட்டி பல கோடிஆண்டுகள் ஆகிவிட்டன, மீனவர்கள் கடந்த சில பத்தாண்டுகளாகத்தான் வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கிறார்கள், ஆனால் சிலந்திகள் வலைபின்னி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. மான்களுக்கு இருக்கும் கொம்புகளும் யானைகளுக்கு இருக்கும் தந்தங்களும் "தற்காப்பு ஆயுதங்கள்", பறவையை கண்டான் விமானம் படைத்தான், தும்பிகள்தான் ஹெலிகாப்டர்களுக்கான உந்துசக்தி. உலகத்தின் தலைசிறந்த நகைச்சுவை கலைஞன் "சார்லி சாப்ளினின்" பிரத்தியேக நடைக்கு காரணம் பென்குயின்கள்.

இப்போது நாம் கண்டுபிடித்ததாக சொல்லப்படும் அனைத்தும் இயற்கையிலிருந்து அறிந்தவற்றை வைத்தே, இயற்கைதான் நமது பிரதான ஆசான் என்பதை இதன் மூலம் நாம் அறிந்துகொள்ளமுடியும். அப்படிச்சொன்ன மசானபு புகாகோவின் புத்தகங்களை படித்து பல விஷயங்களை அறிந்துகொள்ள, சென்னை புத்தக காட்சியில் பூவுலகின் நண்பர்கள் அரங்கிற்கு வாருங்கள். அவரின் கரம்பற்றி நம்முடைய இயற்கையை பற்றி அறிந்துகொள்வோம்.

1980களின் மத்தியில் புகாகோவின் "one straw revolution" என்ற நூலை தமிழிலில் மொழிபெயர்த்து "ஒற்றை வைக்கோல் புரட்சியாக" பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டது படித்து பயனடையுங்கள்...

2 நாட்கள் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. 60 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மிகப்பெரிய புயல்...


https://youtu.be/60lI4wurOlk

Subscribe The Channel For More News...

வாயு முத்திரை...


வாயு முத்திரை என்பது ஆள்காட்டி விரலின் நுனியை கட்டை விரலின் அடிப்பகுதியை தொட்டுக் கொண்டிருக்குமாறு செய்வது.

பலன்கள்...

ஆட்காட்டி விரல் வாதம் தொடர்புடையது என்று தெரியும்.

இது நம் உடலில் அதிகமாக உள்ள காற்று மூலத்தை குறைக்க உதவுகிறது.

சோறு தின்னதுக்குப் பின் உடல் மதமதன்னு இருந்தால் இம்முத்திரையை வஜ்ரானத்தில் அமர்ந்து செய்தால் சரியாகும்.

நடுக்குவாதம் (Parkinson)  உள்ளவர்களின் சிரமம் குறைக்கவும் இது உதவும்.

கீழ்வாதம் உள்ளவர்களின் சிரமமும் இதனால் குறையும்...

ராசிபுரத்தில் குழந்தைகளை கடத்தி, பிறப்பு சான்றிதழுடன் விற்பனை செய்த வழக்கில் ஓய்வுபெற்ற அமுதா என்ற செவிலியர் கைது...


கன்னட பெரியாரும் திருட்டு திராவிடமும்...


சுயமரியாதை தன்மானம் என்று எவற்றை வரையறுத்தார் பெரியார். இதனால் தமிழர்களும் தமிழகமும் பெற்ற கல்வி அறிவூட்டல் என்ன..? பொருளாதார நன்மை என்ன..?

தமிழ் தேசிய உணர்வை இது எந்த வகையில் வளர்த்தது..?

ஏன் திராவிடத்தை தமிழகம் முதன்மைப் படுத்துகிறது..?

இதற்குள் தான் தமிழன் என்பவனின் இனத்துவ சுயமரியாதையும் தன்மானமும் அடங்கி இருக்கிறதா..? அப்படி என்றால் எந்த வகையில்..?

இந்த சுயமரியாதையும் தன்மானமும் 21ம் நூற்றாண்டில் தமிழர்களை தயார்படுத்தி 22ம் நூற்றாண்டில் எப்படி செயற்பட வைக்கப் போகிறது உலக அரங்கில்...? இதற்கு தமிழகத்தின் பங்கு என்ன..?

ஈழத்தில் தமிழ் தேசிய உணர்வோடு.. ஈழத் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து நிற்க ஏன் தமிழகம் தயங்க வேண்டும்..?

இதற்கும் சுயமரியாதைக்கும் தன்மானத்துக்கும் ஏதாவது தொடர்பை காண்பித்திருக்கிறதா தமிழகம்..?

தமிழகத்தில் உள்ளவர்கள் தமிழர்கள் தானா..?

ஓரிரண்டு குரல்களைத் தவிர ஏனைய தமிழ்மக்களின் குரல் ஏன் நசுக்கப்பட்டுள்ளது. அது ஏன் தமிழீழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கத் தயங்குகிறது..?

இன்னும் இந்திய தேசியத்துக்கு அடிபணிந்து தானே உள்ளது தமிழகம். அப்படி இருக்க..

இந்த சுயமரியாதையும் தன்மானமும் எதைக் குறித்து எழுந்து நிற்கிறது. தமிழர்களின் திராவிட அடையாளம் குறித்தும் பார்பர்ன பிராமண இந்து சமய எதிர்ப்பு குறித்து மட்டும் தானா..?

ஏன் தமிழகத்தில் மதமாற்றம் செய்யும் இதர மதங்களை நோக்கி மக்களை அன்போடு வழி அனுப்பி வைக்கும் போது எங்கே போகின்றது இந்தச் சுயமரியாதையும் தன்மானமும் பகுத்தறிவும்.?

அது ஏன் இந்து சமயத்தை மட்டும் கண்டவுடன் இவை விழித்துக் கொள்கின்றன. மற்றைய மதங்களை ஏன் மென்போக்கோடு அணுகுகிறது.?

பகுத்தறிவுவாதிகள் எவராவது இறந்த மனிதன் ஏசு உயிர்த்ததற்கு சான்று கேட்டிருக்கின்றனரா..? அல்லா எங்கிருக்கிறார்.. அவருக்கு என்ன உருவம் என்பதற்கு சான்று கேட்டுள்ளனரா..?

அது ஏன் பகுத்தறிவு இந்து சமயத்தை மட்டும் குறி வைத்து நிற்கிறது. மூடநம்பிக்கைகள் சமயம் மட்டும் சார்ந்து தானா எழுந்துள்ளது. வேறு வகைகளில் இல்லையா.?

ஏன் அறிவியல் வளர்ச்சி கண்ட மேற்கு நாடுகளில் மூடநம்பிக்கைகள் இல்லையா..? மத நம்பிக்கைகள் இல்லையா..? அவர்கள் ஏன் அறிவியலை ஊட்டுகிறார்கள்.. பகுத்தறிவு என்பதையும் சுயமரியாதை என்பதையும் தன்மானம் என்பதையும் உச்சரிச்சுக் கொண்டு மத எதிர்ப்பை சமூக எதிர்ப்பைச் செய்யவில்லை..?

அது ஏன் ஊருக்கு சொல்லும் சுயமரியாதை பகுத்தறிவை நீங்களும் உங்கள் குடும்பங்கள் மட்டும் கடைப் பிடிப்பதில்லை.. அனைத்தும் தொண்டனுக்கும் தமிழனுக்கும் மட்டும் தானா?

இப்படி பல தொடரான வினாக்களுக்கு நீங்கள் விடை கூறத் தயாரா..?

காந்த சத்தி.. நேர்மறை சத்தி.. அதிகரிக்க.. ரெய்கி தியான காணொளி கேளுங்க...


https://youtu.be/WbRZVp8gSh8

Subscribe The Channel For More News...

தமிழர்கள் திராவிடர்களால் வஞ்சிக்கப்பட்ட வரலாறு - 2...



ஆந்திரா..

ஆந்திரா பிரிக்கப்படும் போது வடக்கே பிழைப்பு தேடி வந்த தெலுங்கு பேசும் மக்கள் நெல்லூர்,சித்தூர் பகுதிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையி ல் இருந்தனர் .ஆனால் நிலத்தின் உரிமையாளர்கள் தமிழர்களாகவே இருந்தனர். ஆனால் நடுவண் அரசு அப்போது அமைத்த படாஸ்கர் குழு, நிலம் யாருடையது என்பது முக்கியம் அல்ல வாழும் மக்களின் மொழி தான் முக்கிய கூறு என்று கூறி , தமிழர் பகுதிகள் அனைத்தையும் ஆந்திராவுடன் இணைக்க உத்திரவிட்டனர். அன்று ஆளுமையிலும் அதிகாரத்திலும் நடுவண் அரசில் வீற்றிருந்த திராவிட தலைவர்கள் இதற்கு உடந்தையாக இருந்து செயல் பட்டனர்.அப்பொழுது கூட நீதிக் கட்சியில் இருந்த தெலுங்கு தலைவர்கள் இதை எதிர்த்து போராடவில்லை. இங்குள்ள தமிழர்களின் தலைவர்களாக இருந்த திராவிட தலைவர்களும் அமைதியாக இருந்து விட்டனர்.

ஆந்திரா வின் ராயல் சீமா மாவட்டமே தமிழர்களின் நிலப்பகுதிதான். மொழிவாரி மாநிலம் பிரிவினையின் போது அது ஆந்திராவிற்கு போனது. சித்தூர் மாவட்டம், நெல்லூர் மாவட்டத்திற்குள் உள்ளடங்கிய , திருப்பதி, காளகஸ்தி, புத்தூர், நகரி, ஆரணியாறு, வட பெண்ணை ஆறு, பொன்வானி ஆறு, இவற்றின் வளமான பகுதிகள், நந்தி மலை இவை எல்லாம் ஆதிராவோடு போயின. நந்தி மலை இருந்திருதால் பாலாற்று சிக்கல் தமிழர் நாட்டிற்கு வந்திருக்காது .

வடபகுதியில் மங்கலக்கிழார் , மா போ சிவஞானம் மட்டுமே இதை எதிர்த்து தீவிரமாக போராடினர் .ராஜாஜி இவர்களுக்கு ஆதரவாக இருந்தார் .அதனால் திருத்தணி வள்ளிமலை திருவாலங்காடு போன்ற சில பகுதிகள் மட்டுமே தமிழர்கள் போராட்டத்தால் திரும்ப கிடைத்தன.நீதிக் கட்சியில் தமிழர்களின் தலைவர்களாக இருந்த தெலுங்கு தலைவர்கள் இதை எதிர்த்து போராடவில்லை .

1--4-1960 வரையறுக்கப்பட்ட எல்லைகளின்படி 32,000 சதுர கிலோ மீட்டர் தமிழர் நிலப்பகுதி ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது .சேலம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சுமார் 525 கிலோ மீட்டர் நிலப்பகுதி ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது . இன்று தமிழர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தி கொள்ளும் தெலுங்கர்கள் அன்று தமிழர்களுக்காக போராடவில்லை. தெலுங்கு தலைவர்கள் தமிழர் என்ற போர்வையில் கூட இருந்தே குழி பறித்தனர் .

கர்நாடகா...

காவிரி எங்கே உற்பத்தி ஆகிறது என்றால் குடகு மலை என்று எல்லோருக்கும் தெரியும். பழந் தமிழில் குடக்கு என்றால் மேற்கு என்று பொருள். அங்கு வாழும் மக்கள் பேசும் மொழி கூர்க் மொழி. விடுதலை அடையும் முன்பு வரை கூர்க் மக்களும், கன்னடர்களும் பரம எதிரிகளா கவே இருந்தனர் . மொழி வாரி மாநிலம் பிரிக்கப்படும் போது பண்பாடு, கலாசாரம் அடிப்படையில் கலந்து இருக்கும், தமிழர் நாட்டோடு இணைய விரும்புகிறோம் என்று கூறி ஆய்தம் ஏந்தி கூட போராடினர்.

அப்பொழுது இங்குள்ள தமிழக அரசியல வாதிகள் சிறிது தலை அசைதிருந்தாலும் குடகு நம்மோடு இணைத்திருக்கும். அப்படி இணைத்திருந்தால் காவேரி தமிழர் நாட்டிலேயே உருவாகி, தமிழர் நாட்டிலேயே கடலில் கலந்திருக்கும் நமக்கு காவேரி சிக்கலே வந்திருக்காது .

கன்னடர்கள் திட்டமிட்டு போராடியதால் பெங்களூரு, மைசூரு மாவட்டத்தின் ஒரு பகுதி, கோலார் தங்க வயல் பகுதிகள் பறி போயின. ஒரு மாநிலத்துடன் ஒரு பகுதி இணைக்கப்பட வேண்டுமானால் மொழி தொடர்பும் நிலத் தொடர்பும் இருக்கவேண்டும் என்பது விதி. ஓசூரில் அப்போது தெலுங்கு பேசுவோர் 39 விழுக்காடும் ,கன்னடம் பேசுவோர் 35 விழுக்காடும் இருந்தனர்.ஓசூர் வறண்ட பூமி என்பதால் ஆந்திரா தங்களுக்கு வேண்டாம் என்று கூறியது ,அதனால் ஓசூர் கர்நாடகா வோடு இணைந்திருக்க வேண்டும் .ஆனால் கர்நாடகா திட்டமிட்டு அதை தனக்கு வேண்டாம் என்று கூறி தமிழர் நாட்டோடு இணைத்து விட்டது.

பெங்களூரு யாருடன் இணைவது என்ற சிக்கல் வரும் போது, அங்கு தமிழர்களே அதிக அளவில் இருந்தனர் . ஓசூரில் கன்னடர்கள் அதிகம் இருந்தாலும் அதை நாங்களே தமிழர் நாட்டோடு இணைத்து விட்டோம். அதனால் பெங்களூருவில் தமிழ் பேசக்கொடிய மக்கள் அதிகம் இருந்தாலும், பெங்களூருவை கர்நாடகத்தோடு இணைத்து விடுங்கள் என்று கோரிக்கை வைத்தது .

அன்று இங்கிருந்த அரசியல் தலைவர்கள் திராவிடராக இருந்ததாலும், திராவிட ஆதரவு மக்களிடையே வேரூன்றி இருந்ததாலும், தமிழர் தலைவர்களிடையே மண் சார்ந்த உணர்வு இல்லாத வாய் சவடால் அரசியல் வாதிகளாக இருந்ததாலும் , அவர்களுக்கு இருந்த இந்திய உணர்வும் ,திராவிட உணர்வும் எந்த வித எதிர்ப்பு தெரிவிக்காததற்கு முக்கிய காரணமாக இருந்தன .

இன்றைய தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பு 1,30,609 சதுர கிலோ மீட்டர்கள்.தமிழகம் அண்டை மாநிலங்களுடன் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70 ,000 சதுர கிலோ மீட்டர் ஆகும்.அவையும் நம்மோடு இருந்திருந்தால், தமிழகம் கர்நாடகாவை விட இன்னும் பெரிய மாநிலமாகவும், ஆந்திராவை விட சற்று சிறிய மாநிலமாகவும் இருந்திருக்கும் .ஆனால் நீர் ஆதாரத்தில் தென் இந்தியாவிலேயே வளமான மாநிலமாக இருந்திருக்கும் . தமிழகம் இழந்த நிலப்பரப்பு இப்போதுள்ள நிலப்பரப்பில் முக்கால் பங்கு ஆகும் .

திராவிடம் திராவிடம் என்று கூறும் தமிழர்களே திராவிட மக்களே...

தமிழகத்தில் வாழும் திராவிட மக்களே, அன்று தமிழர் நாட்டில் வாழ்கிறோம் என்ற நன்றி உணர்வு சிறிதளவு இருந்திருந்தால் கூட எங்களது நிலம், எங்களது மண் சார்ந்த பூர்வீக நிலம் எங்களோடு இணைந்திருக்க நீங்கள் போராடி இருக்க வேண்டும்.

எங்களிடம் திராவிடம் என்று கூறி, திராவிட மாயையில், திராவிட போதையில் தமிழர்களை சிக்க வைத்து, எங்கள் மண்ணை அபகரித்தது போதாது என்று, இன்று ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றி, தமிழர் நாட்டு தமிழர்களை பிசைகாரர்களாக்கி, அடிமையாகியக்கியது மட்டுமல்லாமல் எங்கள் தமிழீழ நாட்டையும், மக்களையும் அழித்து சுடுகாடாக்கி விட்டீர்கள் .

நாங்களும் தமிழர்கள் தான் என்று கூறி, நாள்தோறும் இங்கு வந்து கொண்டிருக்கும் திராவிடர்களால், எஞ்சி இருக்கும் தமிழர் நாட்டு நிலமும் ஆக்கிரமிக்கப்படுகிறது . இது போதாதென்று இந்தியர்கள் என்று கூறி கொண்டு வட இந்தியர்களால் தமிழர் நிலம் பறி போகிறது .

தமிழர்களே இனியும் நீ விழித்து கொள்ளது போனால், உன் உரிமைக்காக போராடாது போனால், நாளை இந்தியாவில் உள்ள அணைத்து இனத்தவர்க்கும் தனியே அவர்கள் இனத்திற்கென்று நாடு இருக்கும். ஆனால் தமிழனுக்கு மட்டும் நாடு இருக்காது .

இப்போதுள்ள தமிழர் நாடு ஐந்து பாகங்களாக பிரிக்கப்பட்டு, இங்கு வாழும் மலையாளி, கன்னடன், தெலுங்கன் ,வட இந்தியன் என்று ஐந்து துண்டுகளாக துண்டாட பட்டு . அதில் ஒரு துண்டே தமிழ் நாடாக இருக்கும். உலகம் முழுவதும் பரந்து வாழும் தேசிய இனமான உனக்கு உள்ளங்கை அளவு கூட நாடு இல்லாமல் ஏதிலியாக இப் பூமி பந்தில் இருப்பாய் என்பதை மறவாதே .

இன் நிலை வராமல் இருக்க "தமிழர் நாடு தமிழருக்கே " தமிழர் நாட்டை தமிழரே ஆள வேண்டும் என்ற முழக்கம் தமிழர்கள் இடத்தில எழுப்புவதோடு மட்டுமல்லாமல் , திராவிட கட்சிகளிடம் உள்ள ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தமிழர் நாட்டை தமிழரே ஆள் வேண்டும்...

இந்த ஐந்து ராசி பெண்களை திருமணம் செய்பவர்கள் தான் உலகத்திலேயே பெரிய அதிர்ஷ்டசாலிகளாம்...


 https://youtu.be/CyTtcvMUNwY

Subscribe The Channel For More News...

உணர்வுத் திறனை கூர்மையாக்குங்கள்...


தியானம் பற்றி குறிப்பிடுகையில் ஆரம்பத்தில் ‘ஒரே இடத்தில் தியானம் செய்யும் போது அந்த இடத்தில் தியான அலைகள் உருவாக ஆரம்பிக்கின்றன. நாளாக நாளாக அந்த அலைகள் வலிமைப்பட ஆரம்பிக்கின்றன. முதலில் தியானம் கைகூட நிறைய நேரம் ஆனாலும் காலப்போக்கில் அந்த இடத்தில் தியானத்திற்காகச் சென்று அமர்ந்த சிறிது நேரத்திலேயே அங்கு உருவாகி இருக்கும் அலைகளின் தன்மையால் தியான நிலைக்குச் சுலபமாகப் போய் விடலாம்’ என்று சொல்லி இருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

மனிதர்களின் எண்ணங்கள் தொடர்ந்து எண்ணும் போது சக்தி வாய்ந்தவையாக மாறுகின்றன. அவற்றை வாய் விட்டுச் சொல்லாத போதும் அவை சக்தியை இழப்பதில்லை. எண்ணங்களும், இயல்பும் ஒருவரைச் சுற்றி நுண்ணிய அலைகளாக எப்போதும் இருக்கின்றன. காலப்போக்கில் அவர்கள் வசிக்கும் இடத்தில் கூட அந்த நுண்ணிய அலைகளின் தாக்கம் அதிகப்பட ஆரம்பிக்கும் என்று சொல்கிறார்கள்.

உண்மையான மகான்கள் வாழ்ந்த இடங்களுக்கும், சில புனித வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்றவர்கள் அங்கு இருக்கையில் வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒரு வித அமைதியையும், நிறைவையும் உணர்ந்திருக்கக்கூடும். அந்த மகான்கள் வாழ்க்கைக் காலம் முடிந்து பல ஆண்டுகள் கழிந்த பின்பும் அந்த இடத்தில் அவர்களது ஆன்மிக சக்தி மையம் கொண்டிருப்பதே அதற்குக் காரணம் என்று சொல்லலாம். அதே போல அந்த புனித வழிபாட்டுத் தலங்கள் உருவாகிப் பல நூறு ஆண்டுகள் கூட ஆயிருக்கலாம். ஆனால் அந்த தலங்களை நிறுவிய மற்றும் வழிபாடு நடத்தி வந்த ஆன்மிகப் பெரியோரின் சக்தி மற்றும் பக்தி அலைகள் அங்கு இப்போதும் பரவியிருந்து நம்மை ஊடுருவுவதே நாம் உணரும் அந்த அமைதிக்குக் காரணம்.

மனதின் எண்ண அலைகள் சக்தி வாய்ந்ததாக இருந்தால் அவர்களுடைய காலம் கழிந்த பின்னும் அவற்றின் தாக்கம் அப்படியே இருக்கும் என்பதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணம். உடல் அழிந்து பல்லாண்டுகள் கழிந்த பின்னும் உள்ளத்தின் எண்ண அலைகள் வீரியமுள்ளதாக இருந்தால் அவை வாழ்வது மட்டுமல்லாமல் மற்றவர்களிடம் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பது நல்ல எண்ணங்களுக்கு மட்டுமல்லாமல் தீய எண்ணங்களுக்கும் பொருந்தும்.

தியோசபி அமைப்பின் நிறுவனரான ப்ளாவட்ஸ்கி அம்மையார் தன் அதீத சக்திகளுக்குப் பெயர் போனவர். அவர் ஒரு முறை அந்த அமைப்பின் சக நிறுவனரான கர்னல் ஓல்காட் அவர்களுடன் அலகாபாத் சென்றிருந்தார். அவர்களை இரவு உணவுக்கு ஓரிடத்திற்கு சின்னட் என்ற நண்பர் காரில் அழைத்துச் சென்றார். போகின்ற வழியில் கார் ஒரு தெரு முனையைக் கடக்கையில் ப்ளாவட்ஸ்கி அம்மையார் திடீரென்று உடல் சிலிர்த்தபடி சொன்னார். “இந்த இடத்தில் ஏதோ பெரிய கொடூரம் நடந்திருக்க வேண்டும். இரத்தம் சிந்திய இடத்தைப் போல் நான் உணர்கிறேன்”.

அலகாபாதிற்கு ப்ளாவட்ஸ்கி அம்மையார் வருவது அதுவே முதல் முறை. அதுவும் சின்னட் என்பவரின் வீட்டிற்கு வந்து தங்கியவர் அந்த வீட்டை விட்டு வெளியே வருவதும் அதுவே முதல் முறை. அப்படி இருக்கையில் அவருடைய உணர்வின் கூர்மையால் அப்படி உணர்ந்ததைக் கண்டு வியப்பு மேலிட்ட சின்னட் அந்த தெருமுனையின் அருகில் இருந்த ஒரு பெரிய கட்டிடத்தைக் காட்டி சொன்னார். ”அந்த கட்டிடத்தில் தான் ஒரு காலத்தில் சில ஆங்கிலேய அதிகாரிகள் தங்கி இருந்தனர். சிப்பாய்கள் கலகத்தின் போது ஒரு நாள் இரவு அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் சிப்பாய்கள் அவர்களைக் கொடூரமாகக் கொன்று குவித்திருந்தார்கள்.” சிப்பாய் கலகத்தில் நடந்த அந்த சம்பவம் முடிந்து பல ஆண்டுகள் கழித்தும் ப்ளாவட்ஸ்கி அம்மையார் அலகாபாத்தில் அந்த இடத்திற்குச் சென்றவுடனேயே ஏதோ ஒரு கொடூர சம்பவம் நடந்திருக்கிறது என்பதை உணர முடிந்ததை யோசித்துப் பாருங்கள்.

ப்ளாவட்ஸ்கி அம்மையாரைப் போல சற்று தொலைவிலேயே உணரக் கூடியதாகவும், பல காலம் கழித்து உணரக் கூடியதாகவும் அந்தத் திறன் இல்லா விட்டாலும் நாம் அனைவருமே அந்தந்த இடத்திலும், நிகழ்காலத்திலும் உணரக்கூடிய திறனை ஓரளவு இயல்பாகவே பெற்றிருக்கிறோம். ஆனால் அது பெரும்பாலும் வார்த்தைப் படுத்த முடியாதபடி கூட இருக்கலாம். சில வீடுகளுக்குள்ளேயே நுழையும் போதே ஒரு அசௌகரியமான உணர்வை நாம் பெறுவதுண்டு. அங்கிருந்து சீக்கிரமே போய் விட வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்து விடும். நம் தன்மைக்கு ஒவ்வாத எதிர்மறையான தன்மைகள் இருக்கிற மனிதர்கள் வசிக்கிற வீடாக பெரும்பாலும் அது இருக்கும். கலகலப்பாகவும், மகிழ்ச்சியாகவும் அனைவரும் இருக்கும் ஒரு இடத்தில் திடீரென்று யாராவது ஒரு நபர் உள்ளே வர கலகலப்பும், மகிழ்ச்சியும் காணாமல் போய் ஒரு அசௌகரியமான மௌனம் நிலவுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அவர்களுடைய மனநிலைகளுக்கு எதிர்மறையான நபராக அவர் இருந்திருப்பார். அவர் அங்கிருந்து போகும் வரை கலகலப்பு தொடராது. அதே போல ஒரு நபர் வரவால் அந்த இடத்தில் இருக்கும் பலரும் ஒரு புத்துணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் உணர்வதும் நிகழ்வதுண்டு. அந்த நபரின் இயல்பு நுண்ணலைகள் அந்த மாற்றத்தை ஏற்படுத்துவனவாக இருந்திருக்கும்.

இது போன்ற அனுபவங்கள் கூட சம்பந்தப்பட்ட மனிதர்களின் இயல்பின் நுண்ணலைகள் நல்லதாகவோ, தீயதாகவோ மிகவும் உறுதி படைத்தவையாக இருக்கும் போது மட்டுமே நாம் உணர்கிறோம். அப்படி உணரும் போதும் நாம் அதைப் பற்றி மேற்கொண்டு ஆராயப்போவதில்லை. அதற்கு பெரிய முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. ஆனால் மனிதர்கள், மற்றும் இடங்களுடைய நுண்ணலைகளை தெளிவாக உணர முடிவது ஆழ்மன சக்திகளை அடைய விரும்புவோருக்கு அத்தியாவசியத் தேவை என்று சொல்லலாம்.

பெரும்பாலும் நாம் நம் முயற்சியில்லாமல் உணரும் மற்ற நபர்களுடைய, அல்லது இடங்களுடைய நுண்ணலைகள் நம் ஆழமான இயல்புத் தன்மைகளுக்கு பாதிப்பையோ, தாக்கத்தையோ ஏற்படுத்துவனவாகவே இருக்கின்றன. அவற்றைப் பாதிக்காத, சம்பந்தமில்லாத நுண்ணலைகளை நாம் உணர்வதில்லை. ஆனால் பயிற்சியின் மூலம் நாம் நம் உணர்வுத் திறனை அதிகரித்துக் கொள்ள முடியும். அதனைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் முடியும்.

ஆழ்மன சக்தியின் ஒன்பது வகை வெளிப்பாடுகளில் Psychometry பற்றி குறிப்பிட்டு இருந்தோம். இந்த சக்தி மூலம் ஒரு பொருளை வைத்து அதன் சம்பந்தப்பட்ட விஷயங்களையும், மனிதர்களையும் அறிய முடியும். இச்சக்தி நாம் மேலே குறிப்பிட்ட நுண்ணலைகளை உணரும் சக்தியின் தொடர்ச்சி தான். மனிதர்கள் உபயோகப்படுத்திய இடங்களில் அவர்களுடைய எண்ண மற்றும் இயல்பு நுண்ணலைகள் பரவியிருப்பது போல அவர்கள் உபயோகப்படுத்துகிற பொருள்களிலும் பரவி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அதனால் அந்தப் பொருளைக் கையில் வைத்துக் கொண்டு அதை உபயோகப்படுத்திய நபரின் இயல்பு பற்றிய தகவல்கள் சொல்ல முடியும்.

பொதுவாக ஒருவரை அறிய நாம் நம் ஐம்புலன்களின் உதவியையே அதிகம் பயன்படுத்துகிறோம். அவரது தோற்றம், உடை, பேச்சு, நடத்தை ஆகியவற்றை வைத்தே அவரை எடை போடுகிறோம். ஆனால் மனித இயல்பை நன்றாக அறிந்த சாமர்த்தியமான ஏமாற்றுப் பேர்வழிகள் அப்பழுக்கற்ற தோற்றம், நடை, உடை, பேச்சுகளை வெளிப்படுத்தி யாரையும் ஏமாற்ற வல்லவர்களாக இருக்கிறார்கள். ஆனால் தங்கள் உள்ளுணர்வுத் திறன்களை மேம்படுத்திக் கொண்டவர்களை யாரும் அவ்வளவு சுலபமாக ஏமாற்றி விட முடியாது...

பொனக்காடு பேய் பங்களா...


தமிழர்கள் திராவிடர்களால் வஞ்சிக்கப்பட்ட வரலாறு - 1...


(பண்டைய வரலாறு அல்ல 40 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு) (மீள் பதிவு ) கட்டுரை பெரிதாக இருப்பதால் பொறுமையாக படியுங்கள் தமிழர்களே...

நாளை நிலத்தின் அடிப்படையில் தமிழர் நாட்டை பிரித்தால் தமிழர்களுக்கு கையளவு மண் கூட மிஞ்சாது .தமிழர் நிலம் திராவிடர்களால் இந்தியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது .

தமிழின வரலாற்றில் மிக கொடுமையான காலம் என்று கணித்தால், அது ஆங்கிலேயனிடம் நாம் விடுதலை பெற்ற நாளாகத் தான் இருக்கும். ஒவ்வொரு இனத்தவரும் பெற்ற விடுதலையை தங்கள் மண், இனம், மொழி காக்க பயன் படுத்தி கொண்டனர்.

தமிழர் நாட்டின் பிரிவினையின் போது மட்டும் தமிழர்களின் தலைவர்களாக தங்களை காட்டி கொண்ட திராவிடர்கள், சதி செய்து அவரவர்கள் மாநிலத்திற்கு தேவையான தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரித்து கொண்டனர். அதற்கு முதன்மையான காரணம் அவர்கள் தமிழர்களிடையே விதைத்த திராவிட உணர்வு,

தமிழர்கள் மட்டுமே, தாங்கள் தொன்று தொட்டு வாழ்ந்த பூர்வீக நிலப் பகுதியை, திராவிடர்களுக்காக விட்டு கொடுத்தனர். அவ்வாறு அவர்கள் கொடுத்த நிலப்பகுதி 70,0000 சதுர கிலோ மீட்டர் ஆகும். இப்போதுள்ள தமிழர் நாட்டின் நிலப்பரப்பில் முக்கால் பங்கு அளவு நிலத்தை நாம் விட்டு கொடுத்திருக்கிறோம். காரணம் நம்மிடையே ஊறி திளைத்த திராவிட உணர்வு,திராவிடத் தலைவர்கள்.

இந்தியா விடுதலை பெற்றவுடன் மகராஷ்டிரா முதலிலும், அடுத்து குஜராத், வலுவாக (தெலுங்கானா) ஆந்திரா, கர்நாடகா, கேரளா என நமது அண்டை மாநிலங்கள அனைத்தும், மொழி வாரி மாநிலங்கள் பிரிக்க வேண்டும் என்று போராடின .

ஆனால் தமிழர் நாட்டில் மட்டும் அது போன்ற போராட்டங்கள் நடை பெற வில்லை . காரணம் தமிழர்களின் தலைவர்களாக திராவிடர்கள் இருந்தனர். இவர்கள் தமிழன் என்ற உணர்வை மழுக்கடித்து, திராவிடர் என்ற உணர்வை ஊட்டியிருந்ததாலும், திராவிட நாடு கோரிக்கை யாலும் போராட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை.

தமிழர்கள் என்ற போர்வையில் திராவிட மக்கள் வளமையான ஆதிக்க சக்தியாக இருந்ததாலும், தங்கள் வளமையான வாழ்வை காப்பாற்றி கொள்ள, நாம் திராவிடர்கள், இந்தியர்கள் என்று கூறி தமிழர்களை போராட விடாமல் தடுத்தனர்.

தென் இந்தியாவில் காலம் காலமாக தமிழர் நிலப்பகுதியில் வாழ்ந்து வந்த மலையாளிகள்,கன்னடர்கள், தெலுங்கர்கள், அந்த நிலப்பகுதியை தங்கள் மாநிலத்தோடு இணைக்க வேண்டும் என்று போராடினர்.ஆனால் தமிழர்கள் எந்த வித போராட்டமும் இல்லாமல் அமைதியாய் இருந்தனர். இந்தியாவே போராடியது ஆனால் தமிழகம் அமைதியாக இருந்தது .

கேரளா...

மொழி வாரி மாநில பிரிவினையில் தமிழர் பூர்வீக நிலப்பகுதியை அபகரித்து முதலில் வெற்றி பெற்றது மலையாளிகள். அகத்தீஸ்வரம், தோவானை , நொய்யாற்று பகுதி, நெடுமங்காடு , இடுக்கி மாவட்டத்தின் பெரும் பகுதி ,வண்டிப் பெரியாறு , தேவிகுளம், பீர்மேடு குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு போன்ற பகுதிகள் எல்லாம், இனம், மொழி, வரலாற்று இலக்கிய ரீதியாக தமிழர் நாட்டோடு இணைக்கப் பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அது நடக்கவில்லை மலையாளிகளின் திட்ட மிட்ட சூழ்ச்சியால் கேரளாவுடன் இணைந்தது. இது போதாதென்று, கோவை மாவட்டத்தின் மேற்கு பகுதி, நீலகிரி , கூடலூர், ஊட்டி பகுதிகளையும் மலையாளிகள் கேட்டனர். அப்போது மொழி வாரி மாநிலத்தை பிரிக்க நடுவண் அரசால் அமைக்கப்பட்ட பசல் அலி குழுவின் தலைவர் மலையாளியான பணிக்கர் என்பவர் மலையாளிகளுக்கு ஆதரவாக செயல் பட்டார் .

அதை வெளிப்படையாக தெரிய்ம்படியும் மா. போ. சி இடம் நடந்து கொண்டார். அவரிடம் கடுமையாக வாதிட்ட மா போ சி , மற்றும் அவருக்கு துணையாக ஜீவா,நேசமணி போன்ற ஒரு சில தமிழ் தலைவர்களின் போராட்டத்தால் மட்டுமே மேற்கண்ட பகுதிகள் தப்பின.

காமராசரிடம் தேவிகுளம் பீர்மேடு பற்றி கேட்ட போது ,குளமாவது மேடாவது என்று கூறினார். அதற்கு காரணம் தமிழர் என்பதைவிட அவருக்கு இருந்த இந்திய உணர்வும், இங்கிருந்த திராவிடத் தலைவர்களும் மட்டுமே காரணம். திருவனந்த புரத்தில் தமிழர் பகுதிகளை கேரளாவிற்கு அளிக்கும் உடன்படிக்கையின் கூட்டம் நடை பெற்றது. அதில் தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்த மலையாளியான வர்கீஸ் அவர்கள் எந்த வித வினாவும் எழுப்பாமல் தமிழர்களுக்கு எதிரான உடன்படிக்கையில் கையொப்பமிட்டார் .

தமிழ்க அரசின் செயலாளராக இருந்து நீங்கள் கையொப்பமிட்டது ஏன் என்று அவரிடம் கேட்டதற்கு, விட்டு கொடுக்க வில்லை என்றால் மலையாள மக்கள் வருத்தப் படுவார்கள் என்று கூறினார் . ஆனால் அவர் கையோப்பமிட்டதற்கு காரணம், தான் ஒரு மலையாளி என்ற இனப்பற்றுதான் என்பது வெட்ட வெளிச்சமாக அன்றே தெரிந்தது .

அன்று 1500 சதுர கிலோ மீட்டர் தமிழர் நிலப் பகுதியை விட்டு கொடுக்காமல் இருந்திருந்தால் முல்லை பெரியாறு, பவானி , சிறுவாணி , கண்ணகி கோயில் உட்பட அணைத்து நீராதாரங்கள் நிலப்பரப்பும் தமிழர் நாட்டிற்கு உரியதாக இருக்கும்.

வஞ்சகம்...

மொழி வாரி மாநிலமாக கேரளா பிரிக்கப்படும் போது ,சிக்கலுக்கு உரிய நிலப் பகுதியில் வாழும் மக்களின் மொழி என்ன என்பது முக்கியமல்ல. நிலம் யாருக்கு அதிகம் உரிமையாக (சொந்தமாக) உள்ளது என்பதை பொறுத்தே சம்பந்தப்பட்ட மாநிலத்துடன் இணைக்கப்படும் என்ற முடிவை நடுவண் அரசு எடுத்தது . அன்று நடுவண் அரசில் ஆளுமை சக்தியாக இருந்தது இன்று போல அன்றும் மலையாளிகளே. அதன்படியே கேரள எல்லையை ஒட்டியுள்ள நிலப்பகுதிகள் கேரளாவுடன் இணைக்கப்பட்டன..

- தொடரும்...

முக்கிய செய்தி : சேலம் மாணவியை கடத்த முயன்ற விசிக நிர்வாகி.. பொதுமக்களிடம் சிக்கி வாங்கிய தர்ம அடி...


https://youtu.be/gUZkWS41koo

Subscribe The Channel For More News...

நவம்பர் 18 1978 அமெரிக்கா வில்...


அமெரிக்காவின் தென்கோடியில் உள்ள கயானாவை சேர்ந்த ஜோன்ஸ் டவுன் என்கிற பகுதியில் சுமார் ஆயிரம் பக்தர்கள் கூடியிருக்கிறார்கள் உயரமான மேடை.. ஒலிப்பெருக்கியில் பக்திமயமான இசை.. திடீரென்று பக்தர்கள் பரவசமாக கூக்குரல் எழுப்ப ரெவரெண்ட் ஜேம்ஸ் வாரன் ஜோன்ஸ்.

இசை பணிவோடு நிறுத்தப்படுகிறது.
காற்றைக் கிழித்துக்கொண்டு எதிரொலிக்கும் கம்பீரமான குரலில் ஜேம்ஸ்..

என் அருமை குழந்தைகளே இந்த உலகை பொருத்தவரையில் இதுவே நமது கடைசி சந்திப்பு நாம் எல்லோரும் இறக்கப் போகிறோம் வேறுவழி இல்லை நாம் உயிர் தியாகம் செய்யாவிட்டால், விளைவுகள் விபரீதமாகப் போய்விடும்.

வெளியிலிருந்து நெருங்கி கொண்டிருக்கும் தீய சக்திகள் நம்மை அழிக்க முடிவெடுத்துவிட்டன அவற்றிடம் சிக்கப் போகிறோமா அல்லது இறைவனிடம் சரணடைய போகிறோமா?

நான் உங்கள் மீது வைத்திருக்கும் அதே அன்பு என்னிடமும் உங்களுக்கு இருப்பது உண்மையானால் என்னோடு உயிர் துறக்க தயாராகுங்கள் கவலை வேண்டாம் இது இறைவனின் கட்டளை.

நாளை நாம் அனைவரும் உயிர்த்தெழுவோம் சொர்க்க லோகமான ஒரு புதிய உலகத்தில் நாம் மீண்டும் சந்திப்போம் நாளை நமது பக்தர்களே என்னோடு வருவீர்களா உருக்கமாக ஆவேசமாக ஜிமஜோன்ஸ் கேள்வி எழுப்ப வருவோம் வருவோம் என்று கூட்டம் இடியோசை போல முழங்குகிறது.

அதை தொடர்ந்து..

சயனைடு விஷம் கலக்கப்பட்ட மினரல் தண்ணிர் அடங்கிய பெரிய ட்ரம்களை சிஷ்யர்கள் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள்.

அதில் லெமன் ஜுஸ் கலக்கப்னட்டது.

இந்த பானத்தை குடித்த சில நிமிடங்களில் நீங்கள் இறந்து விடுவீர்கள் ஆகவே கட்டுப்பாட்டுடன் குடும்பம் குடும்பமாக க்யூ வரிசையில் வந்து பானத்தை பெற்றுக் கொள்ளுங்கள் முதலில் குழந்தைகள் ஒலிப்பெருக்கியில் ஜிம்ஜோன்ஸ் ஆணையிடுகிறார்.

முதலில் குழந்தைகளுக்கு பெற்றோர் விஷக் குடிநீரைப் புகட்டிவிடுகிறார்கள் கைக்குழந்தைகளின் வாயை பிரித்து சிரிஞ்ச் மூலம் நர்ஸ்கள் சயனைடு விஷத்தை பீய்ச்சுகிறார்கள் சில சிறுவர்கள் முரண்டு பிடிக்கிறார்கள்.

சிஷ்ய கோடிகள் பலவந்தமாக அவர்களை பிடித்துக்கொன்டு விஷத்தை குடிக்க வைக்கிறார்கள் மரண பயம் காரணமாக தப்பிக்க பார்க்கும் சிலர் துப்பாக்கி முனையில் குடிக்க வைக்கப்படுகிறார்கள்.

ஒரு வழியாக ஜிம்ஜோனஸின் திருநாமத்தை குரல் நடுங்க உச்சரித்தவாறு அமைதியாகவே அத்தனை பேரும் விஷம் குடிக்க ட்ரம்கள் அகற்றப்படுகின்றன.

சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தள்ளாட ஆரம்பிக்க சிஷ்யர்கள் அவர்களைக் கைதாங்கலாக அழைத்துச் சென்று புல் தரையில் வரிசையாகப் படுக்க வைக்கிறார்கள்.

சிஷ்யர்கள் குவளையில் விஷம் எடுத்து சாவதானமாக குடிக்கிறார்கள். படுத்திருந்த அத்தனை பேரின் உடல்களும் துடிக்கின்றன.

எல்லோருடைய மூக்கு வாய் வழியாக ரத்தம் எட்டி பார்க்கிறது பிறகு மரண அமைதி.

முயற்சி செய்தேன் முடிந்த வரை முயற்சி செய்தேன் என்று உரக்க குரலெழுப்பிய ஜிம்ஜோன்ஸ் வானத்தை அண்ணாந்து பார்த்து அம்மா அம்மா என்று அலறுகிறார்.

மறுவிநாடி டுமீல் என்ற சத்தம் தன் நெற்றிப்பொட்டில் ஜோன்ஸ் வைத்திருந்த கைத்துப்பாக்கி இயங்குகிறது மூளை சிதற சரிந்து விழுந்த ஜோன்ஸ்ன் உயிர் பிரிகிறது.

கவர்ச்சி மிகுந்த ஒருபோலி சாமியார் பக்தகோடிகளை உச்சக்கட்டமாக எந்த அளவுக்கு அடிமைகளாக இயக்க முடியும் என்பதற்கு ஜிம்ஜோன்ஸ் ஓர் உதாரணம்...

தமிழ்நாட்டிற்கு வருகிறது ஆபத்து... ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்...


https://youtu.be/0FKrjHJcNzc

Subscribe The Channel For More News...

மனதை கட்டுபடுத்த முடியுமா?


உடல் அங்கங்களின் அதிர்வுகள் பல வகையில் மாறி மாறி அதிரும்வரை மூளையும் பல்வேறு எண்ணங்களின் தொடர்பிலேயே இருக்கும்.

உடல் உறுப்புகளின் அதிர்வுகளினால் ஏற்படும் மின்சக்தி மாறுபாடு மூளையை வெவ்வேறு அலைவரிசைகளில் டியூன் செய்கிறது.

உடல் உறுப்புகள் உருவாக்கும் இந்த சிக்னல்கள் மூளையை அடைவதை தடுக்க வேண்டும், இல்லை நிறுத்த வேண்டும்.

உடல் உருவாக்கும் சிக்னல்களை தடுக்க முடியாது. ஆனால் அதை ஒரே மாதிரி மாற்ற முடியும்.

உடல் அணுக்களின் அதிர்வை முடிவு செய்வது கோட்சாரம். அதாவது கிரகங்களின் இடமாற்றம்.

உடல் கிரக கதிர்வீச்சுகளினால் பாதிக்கப்பட்டாலும், நம் மனோவலிமையால் அதில் இருந்து தப்பலாம்.

உடல்தான் மறைமுகமாக எண்ணங்களை தொடர்பு கொள்ள உந்துகிறது.

உடல் அணுக்களை ஒரே லயத்திற்கு கொண்டுவர தொடர் மந்திர உச்சரிப்புகள் அவசியம்.

உடலை சார்ந்தே எண்ணங்கள் இருந்தாலும் அதே எண்ணங்களால் இந்த உடலின் அதிர்வை மாற்ற முடியும்.

உடல் உணர்ச்சிகள் எண்ணங்களையும், எண்ணங்கள் உடல் உணர்ச்சிகளையும் மாற்றவல்லது.

உடல் உணர்வுகளை தொடர் சுயகருத்தேற்றத்தின் மூலம் நம் கட்டுபாட்டிற்கு கொண்டுவர முடியும்.

உடலை யோகாவால் தளர்த்தி, அடிக்கடி "என் மனம் என் கட்டுபாட்டில் உள்ளது" என மனதால் நினைத்துவர மனம் அடங்கியே தீரும்.

உடலும் மனமும் தங்கள் கட்டுபாட்டிற்கு வந்துவிட்டால், பிறகு என்ன இந்த வானமே எல்லை...