22/02/2019

முள்ளங்கியின் நன்மைகள்....


நாம் உண்ணும் உணவே சில சமயம் மருந்தாக செயல்படுகிறது. கிழங்கு வகைகளில் ஒன்றான முள்ளங்கியில் பல்வேறு பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. கோடை காலத்தில் உடலுக்கு வெப்பம் அதிகம் ஏற்படாமல் பாதுகாப்பதில் முள்ளங்கிக்கு முக்கிய பங்குண்டு.

அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட முள்ளங்கியில் உடலுக்கு தேவையான உயிர்ச்சத்துக்களும் (vitamin) தாது உப்புக்களும் உள்ளன.

முள்ளங்கியில் சிவப்புமுள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி என இரண்டு வகை உண்டு. இதில் வெள்ளை முள்ளங்கி மட்டுமே மருந்தாகப் பயன்படுகின்றது. சிவப்பு முள்ளங்கி சுவைக்கு மட்டுமே ஏற்றது.

முள்ளங்கியின் நறுமணம்...

முள்ளங்கியை சமைக்கும் போதும் உண்ணும் போது ஒரு வித வாசனை ஏற்படும்.

சாப்பிட்ட பின்பும் நாம் விடும் மூச்சிலும், வியர்வையிலும் கூட இந்த வாசனை இருக்கும் அதற்குக் காரணம் அதில் கந்தகமும், எரியம் (phosphorus) அதிகம் காணப்படுவதால்தான். முள்ளங்கியின் கிழங்கு, இலை, விதை ஆகிய மூன்றுமே மருத்துவ குணம் கொண்டது.

குழந்தைகளின் தடிமன் போக்கும் பச்சிளம் குழந்தைகளைத் தாக்கும் தடிமன், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு, முள்ளங்கிப் பிஞ்சு சாறு நிவாரணம் தரும்.

இட்லி வேகவைப்பது போல முள்ளங்கிப்பிஞ்சை ஆவியில் வேக வைத்து, அதில் இருந்து சாறு எடுத்து பாலாடையில் வைத்து குழந்தைகளுக்கு ஊட்டலாம்.

முள்ளங்கி சாறுடன் கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் தீரும் சிறுநீர் பிரச்சினை தீரும்.

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி.

சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருப்பது, சிறுநீர்ப் பாதையில பிரச்சினை உள்ள பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம்.

முள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும். முள்ளங்கியை அடிக்கடி சாப்பிட்டால் வயிற்றில் பொருமல், எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரும். எனவே, அளவாக சாப்பிடுவது நல்லது.

முள்ளங்கி நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக உள்ளது. ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் முள்ளங்கிக்கு உள்ளது.

முள்ளங்கியில் நோய் எதிர்ப்புக் சக்தி அதிகமாக உள்ளது. அவ்வப்போது நோயுற்று பலவீனமானவர்கள் முள்ளங்கியை சாப்பிடுவதன் மூலமாக நோய் எதிர்ப்புக் சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம். புதிதாக உள்ள முள்ளங்கியில் அதிகமான கால்சியச் சத்து உள்ளது.

அதிலும், முள்ளங்கிக் கீரையில் அதிகமான கால்சியம் இருப்பதால் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது...

துண்டு சீட்டு திமுக ஸ்டாலின் கலாட்டா...


மோடியின் பாஜகவுக்கு 5 சீட் பத்தாதாம்...


அதனால் அகிம்சை வழியில் அதிக இடங்களை கேட்கிறது...

அதிமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை பாஜக அரசு வைத்துள்ளது ஆனால் நடவடிக்கை எடுக்காது...

தமிழன் என்றோர் இனமுண்டு.. தனியே அவற்கொரு குணமுண்டு... என்ற பாடல் அடிகளை நாமக்கல் கவிஞர் பாடினார்...


பள் – பண் – பண்படு – பண்பாடு
மண்ணைப் பண்படுத்துவது போல் மனதை பண்படுத்துவதே பண்பாடாயிற்று. பண்ணைகள் நிறைந்த இடம் ஊர் எனப்பட்டது. ஊர்மக்களிடம் பண்பாடு நிறைந்திருக்கும்.

ஒப்புநோக்கிப் பார்க்க,
பண்படு – பண்பாடு
கூப்பிடு – கூப்பாடு
சாப்பிடு – சாப்பாடு. இவ் எடுத்துக்காட்டு மாணவன் கூறியது.

நகு (மெல்லிய பல்லைக்காட்டி புன்னகைத்தல்).
நகு – நகர் – நகரகம் – நகரிகம் – நாகரிகம்.

வெண்பூச்சுகளால் அமைக்கப்பட்ட இருப்பிடங்கள் மாட மாளிகைகள் கோயில் கோபுரங்கள் அமைந்த இடத்தை நகர் என்றனர். அங்கு தோன்றியதே நாகரிகம். அறிவியலில் நோக்கின் அவை உண்மையே...

குறிப்பு...

பண்பாடு மாறாத் தன்மை கொண்டது. மனத்தின் உயர் பண்புகள் மனித வாழ்வில் மாறாதது. நாகரிகம் மாறும் தன்மையுள்ளது.

மக்கள் கூட்டத்தில் உணவு, உடை, உறையுள்(தங்குமிடம்) உலகத்தில் காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டே போகும்.

இனி, பாடநூல் கட்டுரையைக் கவனிப்போம். தமிழர் பண்பாடு பற்றிக் கூறிய கட்டுரையிலிருந்து சொற்களுக்கு பொருள் விளக்கம்.

விழுமியங்கள் – சிறப்பியல்புகள்
விலங்குகள் – மிருகங்கள்
புலால் – இறைச்சி வகை (துர்நாற்றம் தரக்கூடியன)
மரவுரி – மரப்பட்டை
உறையுள் – தங்குமிடம்
வியக்கத்தகு – ஆச்சரியம்
மானம் – பெருமை( மன் – மான் – மானம்), குற்றம் ( மால் – மான் – மானம் (கருமை – குற்றம்).
கவரிமா – மானை ஒத்த விலங்கு
வள்ளல் – கொடையாளி
ஈகை – கொடை
கொடை – அள்ளிக்கொடுத்தல்.

திருக்குறள்களும் அதற்குப் பொருள்களும்...

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.

மயிர்/நீப்/பின் வா/ழாக் கவ/ரிமா வன்/னார்
உயிர்/நீப்/பர் மா/னம் வரின்.

மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்.

பொருள்: தமிழர் பண்பாட்டில் தலைசிறந்தது மானம். மானம் என்பது ஒருவன் தன் நிலையிலிருந்து தாழாதிருப்பது; தாழ்வு வரும் போது உயிர்வாழாதிருப்பது. தமிழர் மானமிழந்து உயிர் வாழ விரும்பமாட்டார்.

அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையார்
என்பு முரியர் பிறக்கு.

அன்/பிலா ரெல்/லாந் தமக்/குரி/ய ரன்/புடை/யார்
என்/பு முரி/யர் பிறக்கு.

அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் அன்பு உடையார்
என்பும் உரியர் பிறக்கு.

பொருள்: அன்பு இல்லாதவர் எல்லாம் தமக்கே என்றே வாழ்வர் ஆனால் அன்பு உள்ளவரோ உடலுக்கு உரித்தாய் உள்ள எலும்பைப் போல தம்மை எல்லா உயிருக்கும் உரியர் என்று எண்ணி மனிதர்களாய் வாழ்வர்.

ஒழுக்கம் விழுப்பம் தரலாம் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

ஒழுக்/கம் விழுப்/பம் தர/லாம் ஒழுக்/கம்
உயி/ரினும் ஓம்/பப் படும்.

ஒழுக்கம் விழுப்பம் தரலாம் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

பொருள்: ஒழுக்கமானது சிறப்பைத் தருவது ஆதலால் ஒழுக்கம் உயிரை விட மேலானது என்ப.

ஒருவர் எத்துணை உயர் அறிவு பெற்றிருப்பினும், மக்கட் பண்பு உடையவராக வாழ்ந்தாலே அவருக்குச் சிறப்புத் தருவதாகும். அன்றேல் (இல்லையேல்), அவர் ஆறறிவு படைத்தவராயினும், ஓரறிவுள்ள மரத்துக்கு ஒப்பாக கருதப்படுவர்.

ஒழுக்கத்தால் சிறந்தவரைத் தமிழர், ‘சான்றோர்’ எனப் பாராட்டி மகிழ்ந்தனர்.

கேள்விகளுக்கு பதிலைக் கூறியும் எழுதியும் பழகுக.

1.நாகரிகம் என்ற சொல் குறித்து நிற்பது யாது?
2.’பண்பாடு’ என்பது விளக்குவது யாது?
3.தமிழ்மக்களின் கொடைப்பண்பு எத்தகையது?
4.சான்றோர் எனப்படுபவர் யாவர்?
5.கணைக்கால் இரும்பொறையின் மான உணர்வை விளக்கும் நிகழ்ச்சி யாது?
6.குமணனின் ஈகைப் பண்பை விளக்கும் வரலாற்று நிகழ்ச்சியை எழுதுக.

பழமொழியைக் கூறிப்பழகுவோம்...

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
அகம் = உள்ளம், மனம், சிந்தை.
மனத்தில் உள்ளதை அப்படியே காட்டக் கூடியது முகம். அதனாலேயே இப்பழமொழி தோன்றிற்று.

மறைமொழி...

அட்டாலும் பாற்சுவையிற் குன்றா தளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.

அட்டாலும் – காய்ச்சினாலும், குன்றா – குன்றாது, அளவளாய் – ஒன்றுபட்டு, நட்டாலும் – நட்புக் கொண்டாலும், நண்பல்லார் (நண்பல்லர்) – நட்பில்லாதவர், கெட்டாலும் – ஏழ்மை, மேன்மக்கள் – உயர்ந்தோர், சுட்டாலும் – சுடுவது.

பாலை எவ்வளவு காய்ச்சினாலும் அதன் சுவை மாறாது. சங்கைச் சுட்ட போதிலும், அது வெண்மை நிறமாகவே இருக்கும். அவை போல பண்புடைய மேலோர்கள் வறுமையால் துன்புற்ற போதிலும், பெருந் தகைமையோடு இருப்பார்கள். பண்பு இல்லாதவர்கள் நண்பர்களாக இருந்த போதிலும், நல்லவர்களாக இருக்க மாட்டார்கள்...

குழந்தைகள் ஞாபகம் சத்தியோடு வளர நாம் என்ன சாப்பிட கொடுக்கலாம்...


https://youtu.be/gNBrMQEFO6w

Subscribe the channel for more tips...

திருட்டு திராவிடத்தால் தமிழர்கள் இழக்கும் வேலை வாய்ப்பு உரிமைகள்...


உரிமைகளை இழந்துவிட்ட அடிமை இனத்தவரின் ஆதங்கமே...

எனக்கானதை எனக்கே கொடு என்ற உரிமையை வேண்டுகிறோம் தமிழர் நாடு மட்டும் வேட்டைக்காடா...

நாங்கள் என்ன விலங்குகளா...
தமிழினமே விழி.. தமிழினமே விழி..

உனக்கான உரிமையை இழக்காதே..  போராடு.. இந்த உரிமை போராட்டம் உன் வருங்கால மரபுவழி மக்களுக்கு -ஆ.எழுச்சிக்குமரன்...

தமிழ்நாட்டில் மிகப்பெரும் அளவில் வெளி மாநிலத்தவர் குடியேறி வருகின்றனர். நிலங்களையும், மனைகளையும் கட்டடங்களையும் வாங்கிக் குவிக்கின்றனர். வணிகத்தையும், தொழிலையும் கைப்பற்றி இருக்கின்றனர். தொகைத் தொகையாக வந்து தமிழ்நாட்டில் குடியேறும் வடநாட்டவர் மற்றும் பிற மாநிலத்தவருக்கு “ஸ்மார்டு கார்டு” திட்டம், வரைமுறையற்று உள்ளே நுழைவதற்கும், தமிழ்நாட்டில் வழங்கல் (ரேசன்) அட்டை, வாக்காளர் அட்டைப் பெற்று நிலைபெறுவதற்கும் வாய்ப்பளிக்கிறது.

நேரடியாகவும், பல்வேறு முறைகேடுகள் – மோசடிகள் வழியாகவும், தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் வெளி மாநிலத்தவர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு வந்தார்கள்.

இதுபோதாதென்று, தற்போது தமிழ்நாடு அரசுப் பணிகளிலேயே வெளி மாநிலத்தவரைப் பணியமர்த்தும் அபாயகரமான புதியப் போக்கு தீவிரம் பெற்றுள்ளது.

கடந்த 07.11.2017 அன்று வெளியான, தமிழ்நாடு அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி –விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளில், வெளி மாநிலத்தவர்கள் பெருமளவில் இடம்பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசுப் பணியிலேயே வெளி மாநிலத்தவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள விவரம் வெளியாகக் கூடாது என்பதற்காக, “ஆசிரியர் தேர்வு வாரியம்” திட்டமிட்டே அவர்களின் பெயர்களை மறைத்து, வழக்கத்திற்கு மாறாக பதிவு எண்களுடன் தேர்வுப் பட்டியலை வெளியிட்டது.

வெளி மாநிலத்தவர்கள் பலரும் பொதுப்பிரிவில் வந்து இடங்களைக் கைப்பற்றியதோடு மட்டுமின்றி, தமிழ்நாட்டின் அட்டவணைப் பிரிவினர் மற்றும் பழங்குடியினர் - பிற்படுத்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) - மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோர்க்கு உரிய பிரிவுகளின் கீழும் பல வெளி மாநிலத்தவர்கள் தேர்வாகியிருந்தனர். அதன் காரணமாக, இப்பிரிவுகளைச் சேர்ந்த தமிழ் மாணவர்களுக்குரிய இடங்கள் அயலாரால் தட்டிப் பறிக்கப்பட்டன.

இவ்வாறு தேர்வாகியுள்ள வெளி மாநிலத்தவருக்கு 23.11.2017 அன்று சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தவிருந்த நிலையில், அதைத் தடுத்து நிறுத்தும் போராட்டத்தைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் அறிவித்தது.

இதனையடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பு இரத்து செய்யப்பட்டது. இப்போது, மோசடியாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி, அத்தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியமே திரும்பப் பெற்றுள்ளது.

இந்நிலையில், 14.11.2017 அன்று தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), நான்காம் பணிப்பிரிவில் - 9,351 வேலைகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், இப்பணிகளுக்கு தமிழ்நாட்டவர் மட்டுமின்றி – வெளி மாநிலத்தவரும், நேப்பாளம், பூட்டான் போன்ற வெளிநாட்டினரும், பாக்கித்தான், திபெத், மியான்மர் நாடுகளிலிருந்து வந்த அகதிகளும் மேற்கண்ட வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், அவர்களுக்கு இப்பொழுது தமிழ் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, இரண்டாண்டுகளுக்குள் அவர்கள் தமிழ் கற்றுக் கொண்டால் போதும் என்றும் தமிழ்நாடு அரசு சலுகை அளித்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை அளித்தது.

இதற்கு முன்னர் 2013ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசுப் பணிகளுக்குத் தேர்வு ஆவதற்கு தமிழ்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்ற வரம்பாவது இருந்தது. கடந்த 2016 செப்டம்பர் 1 அன்று, செயலலிதா ஆட்சியில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் அன்றைய நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து நிறைவேற்றிய “தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் - 2016” என்ற புதிய சட்டத்தின் அடிப்படையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விதிகளில், தமிழ்நாட்டு அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவர் பங்கேற்பதற்காக 07.11.2016 அன்று திருத்தங்கள் செய்யப்பட்டது.

இவற்றையெல்லாம் ஆதாரங்களுடன் கடந்த 16.11.2017 அன்று, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை வெளியிட்டு அம்பலப்படுத்தினார். இதனையடுத்து, பல கட்சிகளும் இது குறித்து அறிக்கை வெளியிட்டு தமிழ்நாடு அரசுக்குக் கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் அனைவருக்கும் நாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்..

மகாராட்டிரம், கர்நாடகம், குசராத், மேற்கு வங்கம், சத்தீஸ்கட் போன்ற பல மாநிலங்களில் மண்ணின் மக்களுக்கே வேலை உரிமை சட்டமாக்கப்பட்டுள்ளது. அம்மாநிலங்களின் அரசுப் பணியில், தமிழ்நாட்டில் நடப்பது போல் வெளி மாநிலத்தவர்களையும், வெளி நாட்டினரையும் பணிக்கு அமர்த்த முடியாது!

எனவே, தமிழ்நாடு அரசு – அரசுப் பணிகளில் 100 விழுக்காட்டு இடங்களையும், தனியார் மற்றும் இந்திய அரசு நிறுவனங்களில் 90 விழுக்காட்டு இடங்களையும் தமிழர்களுக்கே வழங்கிட சட்டமியற்ற வேண்டும்.

- தமிழ் தேசிய பேரியக்கம்...

கார்பரேட் Gold winner எண்ணை இரகசியம்...


தமிழர் வீடுகளில் திண்ணைகளின் பயன்பாடுகள்...


திண்ணை என்பது, மரபுவழி வீடுகள் மற்றும் அது போன்ற கட்டிடங்களில், வாயில் கதவுக்கு அருகிலோ அல்லது அவற்றின் உட்பகுதியில் சில இடங்களிலோ காணப்படுகின்ற மேடை போன்ற அமைப்புக்களாகும்.

சாலைகளை அண்டியுள்ள வீடுகளின் திண்ணைகள் பொதுவாகச் சாலைகளுக்குத் திறந்தே இருப்பது வழக்கமாதலால் பழங்காலத்தில் தூரப் பயணத்தில் ஈடுபட்டுள்ள வழிப்போக்கர்கள் தங்கிச் செல்வதற்கு உரிய இடமாகவும் இவை பயன்பட்டன. பழந் தமிழ் இலக்கியங்களில் இதற்கான சான்றுகளைப் பரவலாகக் காணமுடியும்.

உடன்பிறந்தோர் வந்தாலே விரட்டி அடிக்காக் குறையாக உபசரிக்கும் இக்காலத்து மனிதர்கள் இருக்கையில்,

வழிப்போக்கர்களும் தங்கி செல்ல ஓரிடத்தை ஒதுக்கிய பழந்தமிழர்கள் எத்தகைய சிறப்புடையவர்கள் ?

முன்னைய காலத்தில் போக்குவரத்துச் சாதனங்களின் போக்குவரத்து ஒழுங்கு மிகவும் அரிதாகவும், குக்கிராமங்களிற்கு முற்றாகவே அற்றுமிருந்தது.

ஆகையால் மக்கள் இப்படியான திண்ணைகளை மிக அதிகமாகப் பயன்படுத்தினார்கள். அப்போதெல்லாம் வழிப்போக்கர்கள் மிகவும் நேர்மையாகவும், களவுகளில் ஈடுபடாது தமது பயணங்களைத் தொடர்ந்தனர்.

இப்பொழுதெல்லாம் இப்படியான திண்ணைகளுமில்லை இவற்றில் வந்து தங்கிப்போகும் வழிப்போக்கர்களை நம்பி வீட்டுக்காரர்கள் வீட்டில் தூங்கக் கூடியதாக தமிழ்மக்களின் வாழ்க்கை முறையும் இல்லை...

நீங்கள் 2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களா..? தவறாமல் பாருங்க...


https://youtu.be/nu8vt88K7MA

Subscribe the channel for more news...

மன வேகத்தையும் அளந்தவன் தமிழன்....


மன வேகத்தை அளந்த முதல் ஆய்வாளன் தமிழன்...

கணக்கதிகாரம் என்கின்ற புத்தகம் 15 ஆம் நூற்றாண்டில் காரி என்பவரால் தோன்றிய நூல். இதைத் தமிழரின் கணித கோட்பாடுகள் என்றே உரைக்கலாம்.

இது தற்கால கணித முறைகளில் இருந்து முழுவதும் மாறுபட்டு விளக்கப்பட்டுள்ளது . தூரம், காலம், நேரம், எடை போன்ற அணைத்து அளவுகளும் மற்ற பொருட்களுடன் ஒப்பிட்டு அனைவருக்கும் புரியும்படி விளக்கப்பட்டுள்ளது.

இதில் நீட்டலளவை (தூரத்தை) அளக்கும் ஒரு அட்டவனையை கண்டேன், அதில் "யோசனை" என்ற ஒரு அளவைக் காணமுடிகிறது . அதைப் பற்றிச் சற்றே யோசித்த வாரே இருந்தேன்.

அந்த யோசனை அளவை பற்றி ஒரு யோசனை கிட்டியது. இந்தக் கணக்கதிகாரத்தில் அணைத்து அளவுகளும் ஒரு புறபொருளுடன் ஒப்பிட்டேக் கூறுகின்றனர். ஆக, யோசனை என்று ஒரு அளவு எப்படி இருக்கும் என்று கணித்துப் பார்க்க எண்ணினேன்.

1850 ஆம் வருடம் "ஹெர்மன் வோன் ஹெல்ம்வோல்ட்ச" ( Hermann von Helmholtz ) என்ற புகழ் பெற்ற அறிவியலாளர் ஒரு தவளையின் கால்களில் மின்சாரத்தை அளக்கும் கருவியைப் பொருத்தி அதன் மனதின் வேகத்தை அளக்க முடியும் என்று நிருபித்தார்.

அதற்கு பின்பு வந்தவர்கள் அதன் சரியான மனதின் வேகத்தின் அளவைக் கண்டுபிடித்தனர். (Speed of Thought). அவை 50 மீட்டர் /நொடி என்று அளவிடப்பட்டது. எனினும் வேகமாக கடக்கும் தசைகள் இதே தகவலை 100 மீட்டர் /நொடி என்ற அளவிலும் கடக்குமாம்.

சரி இவை ஒரு பக்கம் இருக்க அந்த யோசனை என்ற அளவையும் தற்போதிய கணித அளவையும் ஒப்பிட்டுப் பாப்போம்.

1 முழம் = 46.6666 சென்டிமீட்டர் (Cm )
1 சிறுகோல் = 559.9992 சென்டிமீட்டர் (Cm )
1 கூப்பிடுதூரம் = 279999.6 சென்டிமீட்டர் (Cm )
1 காதம் = 1119998.4 சென்டிமீட்டர் (Cm )
1 யோசனை = 4479993.6 சென்டிமீட்டர் (Cm )

சென்டிமீட்டரை கிலோமீட்டராக மாற்றினால்...

1 யோசனை = 44.799936 கிலோமீட்டர் (இது காலத்தை குறிக்காத அளவு)

இப்பொழுது அவர்கள் கூறியபடி 50 மீட்டர்/நொடி என்று கால அளவுடன் கணக்கிட்டால்

50 மீட்டர்/நொடி என்பதை கிலோமீட்டர் கணக்கில் பார்த்தல்

180 km/hr

எனினும் இவர்கள் அறிவித்த இந்த அளவு உணர்ந்து, சிந்தித்து, முடிவெடுத்து, செயல்படுதல் என்ற நான்கு செயல்பாட்டை ஒருகிணைந்த அளவே. இங்கு யோசனை என்ற அளவு சிந்தித்தல் என்ற பகுதியில் வரும். ஆகவே,

180 / 4 = 45 கிலோமீட்டர் / மணித்தியாலம் என்றே வருகிறது .

45 கிலோமீட்டர் / மணித்தியாலம் = 1 யோசனை

எனவே காலத்தைக் குறிக்காத ஒரு யோசனையின் அளவு இவர்கள் அறிவித்த அளவுடன் பொருந்துகிறது.

இதே போல்,

நூற்று ஐம்பதாயிரம் யோசனை = 1 கதிரவநியங்குகிற மட்டு (6719990.4 km)
இரண்டு கதிரவநியங்குகிற மட்டு = 1 விண்மீன் மண்டலம் (13439980.8 Km )

இந்த அளவுகளும், நவீன அறிவியலில் கண்டுபிடிக்கப்பட்ட அளவுகளிலும் வேறுபாடு இருந்தாலும். முதல் முயற்சி என்றும் தமிழனின் சொந்தமாக இருக்கிறது. இன்றளவும் ஆய்வாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளில் முதல் வெற்றி காண்பது கடினந்தான்.

இப்படி ஆயிரம் அதிசயங்களைப் புதைத்து வைத்துருக்கும் நம் தமிழரின் அறிவின் அதிசயத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லிப் பெருமிதம் கொள்வோம்...

பாமக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் NDTV யின் கருத்து கணிப்பு....


இளவட்டக்கல்....


தமிழனின் பாரம்பரிய விளையாட்டை (இளவட்டக்கல்) இன்றும் தொன்றுதொட்டு கடைபிடிக்கும் கிராமம், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே அயன்வடமலாபுரம் கிராமத்தில் உள்ள காளியம்மன் மற்றும் புது அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத திருவிழாவில் தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் மாப்பிள்ளைகல் எனப்படும் இளவட்டக்கல் தூக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

பண்டைய காலம் தொட்டே வீரத்திற்கும், விவேகத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தவர்கள் தமிழர்கள். அதனை நம்முடைய பண்டைய விளையாட்டுகளில் இருந்து நாம் காணலாம். குறிப்பாக சிலம்பாட்டம், கபடி, இளவட்டக்கல் என சொல்லிக் கொண்டே போகலாம்.

இன்றைக்கு திருமணம் என்றால் மாப்பிள்ளைக்கு பெண் கொடுக்க மாப்பிள்ளை பார்க்கும் வேலை, அவருடை குணம், சொத்து மதிப்பு இவற்றினை பார்க்கும் சூழ்நிலை நிலவுகிறது.

ஆனால் அன்றைக்கு நம்முடைய தமிழர்களோ வீரமுள்ள ஆண்மகனை பெண்ணிற்கு மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்தனர். அதற்காக வைக்கப்பட்ட போட்டி இளவட்டக்கல்.

வலியுமையுள்ள கல்லை தூக்கும் ஆண்மகனால் தங்களின் பெண் காலம் முழுவதும் நன்றாக பார்த்துக்கொள்ளும் தகுதி இருப்பதாக கருதினர் அக்காலத்தினர். இது திருமணத்திற்கு மட்டுமல்லாது இளைஞர்களின் உடலை கட்டுக்கோப்பாகவும் வைக்க உதவியது.

ஆனால் காலப்போக்கில் நிலைமைகள் மாறினாலும் இன்றைக்கும் தமிழகத்தில் உள்ள சில கிராமங்களில் இளவட்டக்கல் தூக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அப்படி நடைபெறுகின்ற கிராமங்களில் ஒன்றுதான் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அயன்வடமலாபுரம்...

9 தொகுதி கொடுத்தால் தான் அதிமுக கூட்டணிக்கு வருவேன் - விஜயகாந்த்...


நாங்கள் பாமக வை விட பெரிய கட்சி ஆகையால் எங்களுக்கு 9 + 1 கொடுங்கள் கூட்டணிக்கு வருகிறோம்... இல்லை என்றால் டிடிவி தினகரனுடன் கூட்டணி சேர்வோம்...

புகைபிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுதலை வேண்டுமா?


மிகவும் அதிமிக முக்கியமான மருத்துவ குணம் கொண்ட உலர் திராட்சை...

முந்திரி வத்தல் புகை பிடிப்பவர்களை அதன் பாதிப்பில் இருந்தும் அந்த பழக்கத்தில் இருந்தும் காப்பாற்றும் அறுமருந்து ஆம் புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சை கரைத்து விடுகிறது.

மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளை சாப்பிடும் பொழுது அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க தூண்டும் உணரவை கட்டுப்படுத்து கிறது, இது சீனாவில் பிரபலம் நமக்கு காசு கொடுத்தால் மட்டுமே நல்ல மருத்துவத்தை சொல்லும் சில சிறந்த நாட்டு மருத்துவர்கள் கூட இந்த உண்மையை சொல்வதில்லை.

இந்த மருத்துவத்தை தலைவன் (master) பெங்க் மும்பை வந்த போது எனக்கு சொன்னது, நான் பலரிடம் சொல்லி அதற்கான பலனும் பார்த்திருக்கிறேன், இதை நீங்களும் உங்கள் உயிரான உறவுகளிடம் சொல்லி புகைபழக்கத்தை ஒழிக்க உடனிருங்கள்.

மதுபழக்கமும் போய்விடும் அதற்கும் எளிய மருத்துவம் இருக்கிறது, அதை தெரிந்தவர்களிடம் மட்டும் சொல்லி வருகிறேன் i) ஏன் உலர் திராட்சை புகைபிடிக்கும் பழக்கத்தை விரட்டும் மருந்தாக சீனர்கள் பயன்படுத்துகிறார்கள்?

முதலில் உலர் திராட்சையில் உள்ள வேதிப்பொருள் ரசாயனம் (Chemistry) படித்தவர்கள் படிக்காதவர்கள் அனைவருக்கும் புரிவது போன்று.

1. பக்குவபடுத்தப்படாதநார்சத்து, புரதம்(curde protein and curde fiber) இரண்டும் இதில் உள்ளது, இவை இரண்டும் உமிழ் நீரில் உள்ள வேதிப்பொருளோடு கலக்கும் போது அதி வீரியமுடம் இரத்தத்தில் கலந்து தங்களது பணியை செய்ய ஆரம்பிக்கும் அடுத்து முக்கியமான ஒரு வேதிப்போருள் இயற்கை வேதி சலவை நார்சத்து (natural detergent fiber) இது நமது உடலிலும் உள்ளது.

உமிழ் நீரில் ஆனால் தற்போது நாம் அதிகமாக எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவை உட்கொள்ளும் காரணத்தால் இவை தனது பணியை வேகமாக செய்ய முடிவதில்லை, இதன் பணி, உணவு குழாய் மற்றும காற்றுக்குழாய்களில் படித்து இருக்கும் தேவையற்ற பொருட்களை கரைத்து அதை உடலுக்கு தேவையான புரதமாக மாற்றி மீதம் உள்ளவற்றை கரைத்து சிறுநீர் மற்றும் வியற்வை மூலம் வெளியேற்றுவது தான்.

இதே பணியைதான் திராட்சையில் உள்ள இயற்கை சலைவைப் புரதம் செய்கிறது, உமிழ் நீருடன் தீராட்சை குழவையாக (பல்ப்) மாறிய உடன் இரத்தத்தில் கலந்து நூரையீரலில் படிந்து இருக்கும் தாரை மெல்ல கரைக்கும் பணியில் ஈடுபடுகிறது, தார் மட்டுமல்லாமல் நிகொடின் போன்ற தேவையற்ற பொருட்களை கரைக்க உமிழ் நீருக்கு மிகபெரும் உதவி செய்கிறது.

pH = −log10[H3O+] இதன் பி எச் விகிதம் இப்படி இருப்பதால் உடலில் பணியாற்றும் வேகமும் அதிகமாகிறது, மேலும் சிவப்பணுக்களில் எளிதாக தங்கி நுரையீரல் மற்றும் இதர பகுதிகளுக்கு விரைவாக செல்கிறது.(அதிகமாக எழுதினால் குழப்பம் ஏற்படும் என்பதற்காக வேதி மாற்றங்களை எழுத வில்லை,) (கெமிஸ்டரி பரித்தவர்கள் அக்ஸ்லெட்ரிக்Oxaloacetic acid ஆசிட் ஃபுன்மரிக் (Fumaric acid) ஆசிட்டாக மாற்றும் வேதி வினையை பார்க்கவும்)

ii) அடுத்து புகை பழக்கத்தை எப்படி கட்டுப்படுத்துகிறது இதற்கு உலர் திராட்சையில் உள்ள மற்றொரு வேதிப்பொருள் பினொல் மற்றும் டன்னின் இவை இரண்டும் திராட்சை போதை பானமான மதுவில் (In wine) சேர்க்கப்படும் முக்கிய பொருளாகும் இயற்கையாக திராட்சையில் உள்ள டன்னின் உமிழ் நீருடன் சேரும் போது தேன் போன்ற ஒரு மாற்றத்திற்கு உட்படுகிறது.

இந்த டன்னின் வேதிப்பொருள் கிரியா ஊக்கியாக மாறி ந்யூரான்கள் வழியாக மூளையை சென்றடைகிறது. அப்போது மந்த உணர்வு ஏற்படும் அந்த மந்த உணர்வானது புகைபிடிக்கவேண்டும் என்ற எண்ணத்தை மாற்றும் அபரீத சக்தி கொண்டது...

உ.பி. மக்களின் தேசப்பத்தி...


கருவுற்றிருக்கும் தாயா நீங்கள்? கருவில் இருக்கும் குழந்தைகிட்ட எப்படி பேசலாம்?...


கருவில் இருக்கும் குழந்தையானது இந்த உலகத்தை பார்க்கத் தான் 10 மாதங்கள் வேண்டும். ஆனால் இந்த குழந்தை வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தாயுடன் வாழ்ந்து தான் வருகிறது. தாயானவள் ஒவ்வொரு நாளும் இந்த குழந்தையின் அசைவையும் உணருவாள்.

மருத்துவ ஆய்வின் படி, குழந்தைக்கு 16 வாரத்திலேயே கேட்கும் திறன் வந்துவிடுமாம். மேலும் இதனால் எல்லாவற்றையுமே புரிந்து கொள்ளவும் முடியுமாம். ஆகவே அப்போது குழந்தையிடம் தாயானவள் என்னென்ன செய்ய வேண்டும், எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று மகப்பேறு மருத்துவர் கூறுகிறார். அது என்னென்னவென்று படித்து பாருங்களேன்...

கருவில் இருக்கும் குழந்தையிடம் பேசுவதற்கு சில குறிப்புகள்...

1. முதலில் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லக் பெயரை வைத்து பேசலாம். நிறைய பெற்றோர்களுக்கு என்ன குழந்தை என்று தெரியாமல் எப்படி பெயர் வைப்பதென்று ஒரு சந்தேகம் வரும். ஆனால் இதற்கு ஒரு வழி இருக்கிறது. அது தான் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லப் பெயரை, அதாவது இரு பாலினத்திற்கும் பொதுவான ஏதேனும் ஒரு செல்லப் பெயரை வைத்து அழைக்கலாம். வேண்டுமென்றால் இந்த பெயரை பிறந்த பிறகு மாற்றிக் கொள்ளலாம்.

2. தாயானவள் முதலில் குழந்தையிடம் பேச வேண்டும். இது ஒரு பழைய நம்பிக்கை தான், இருப்பினும் குழந்தைக்கு தாயின் குரலானது மிகவும் பிடிக்கும். அப்படி பேசுவதால் குழந்தையானது அமைதியுடன், தாயின் குரலைக் கேட்டுக் கொண்டு நிம்மதியாக இருக்கும். மேலும் இப்படி பேசுவதால் பிறக்கும் போது அழும் குழந்தை கூட தாயின் குரலை கேட்டதும் அழுகாமல் இருக்கும்.

3. கர்ப்பமாக இருக்கும் பெண் பாட்டு கேட்டால் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் கருவில் இருக்கும் குழந்தைக்கு மென்மையான பாட்டுக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே வீட்டில் ஏதேனும் ஒரு மென்மையான பாட்டை கேட்கக்கூடிய ஒரு சாதனத்தின் மூலம் (In Player)போட்டு, தலையணி ஒலிச்சாதனத்தின் வயிற்றில் வைக்கலாம். அப்படி பாட்டுக்களை கேட்கும் போது குழந்தை வயிற்றில் உதைத்தால் அது சந்தோசத்தில் நடனம் ஆடுகிறது என்று அர்த்தம் ஆகும்.

4. மேலும் குழந்தை கருவில் இருக்கும் போது எப்போதும் நேர்மறையான (Positive)-ஆகவே யோசித்து பேச வேண்டும். இதனால் குழந்தையானது பிறந்த பின்னும் எப்போதும் நேர்மறையான-ஆகவே யோசிக்கும். மேலும் தாயானவள் எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும். அதனால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்.

5. அனைத்து தாய்க்கும் குழந்தை வயிற்றில் உதைக்கும் போது கணவர் அதை உணர வேண்டும் என்று நினைப்பர். அப்படியே அவர்களது கணவரும் ஆசைபடுவர். ஆகவே அப்படி உதைக்கும் போது, குழந்தையின் தந்தையும் குழந்தையிடம் அடிக்கடி பேச வேண்டும்.

அப்போது தான் தாய்க்குப் பின் தந்தை தூக்கினாலும் குழந்தை இது தான் தந்தை என்பதையும் புரிந்து கொள்ளும். மேலும் இவ்வாறு அந்த குழந்தை உதைக்கும் போது தந்தை அதை நன்கு உணர, அவருக்கும் அந்த பிரசவத்தின் அற்புதமும் நன்கு புரியும்.

எனவே, இப்படியெல்லாம் நடந்து பாருங்கள், குழந்தை ஆரோக்கியமாக புத்திக்கூர்மையுடன் பிறக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்...

பாமக அன்புமணி இராமதாஸ் அவர்களின் விளக்கம்...


சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு...


சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.

சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர்.

தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்லவேண்டியிருக்கும். ஆனால் இந்தவழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத்தொலைவு நீளும். மேலும் பயணநேரத்திலும் பல மாதம் கூடிவிடும்.

சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று. வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

குப்லாய் கான்...

சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சிலக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.

இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.

சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.

இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான்.

தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.

சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க்கல்வெட்டு இதுவாகும்...

பாஜக வின் கேடுகெட்ட பிண அரசியல்...


தமிழகத்தை அழிக்க மாவட்டத்திற்கொரு நாகசார திட்டம்...


வேலூர் - தோல் தொழிற்சாலைகள்..

காஞ்சிபுரம் - அணுவுலை..

நீலகிரி - யூகலிப்டஸ் மரங்களின் பெருக்கம்..

அரியலூர் - சிமெண்ட் ஆலை..

மதுரை - கிரானைட் கொள்ளை..

தேனி - நியூட்ரினோ..

டெல்டா மாவடங்கள் - ஹைட்ரோகார்பன்..

தூத்துக்குடி - ஸ்டெர்லைட்..

கன்னியாகுமரி - இனையம் துறைமுகம்..

இன்றைக்கு (14-6-2018)ஆனந்த விகடன் இதழில் தமிழக சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறித்தான தமிழகத்தின் வரைபடத்தை வெளியிட்டுள்ளது.

சுற்றுச் சூழலை பாதிக்கும் பல பிரச்சனைகள் அந்த வரைபடத்தில் இடம்பெறவில்லை.

அதில் விடுபட்டவை கீழே...

1. மீத்தேன், ஹட்ரோகார்பன் திட்டம் இராமநாதபுரம் மாவட்டம் வழியாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வரை திட்டமிடப்பட்டுள்ளது.

2. திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முதல் கோவை மாவட்டம் பாலக்காடு முடிய உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வளங்களை அழித்தல், வனவிலங்களுக்கு துன்புறுத்தல்.

3. விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் தமிழ்நாடு சிமெண்ட் ஆலை.

4. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள பாதரசக் கழிவு.

5. நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆறு, தூத்துக்குடி மாவட்டம் வைப்பாற்றில் மணல் கொள்ளை.

6. நாமக்கல் மாவட்டம் சித்தாம்பூண்டியில் பிளாட்டினம் உருக்கி எடுத்தல்.

7. திண்டுக்கல்லில் தோல் தொழிற்சாலைக் கழிவுகள்.

8. பாலக்காடு, செங்கோட்டை போன்ற தமிழக - கேரள எல்லைப் பகுதியில் நச்சுக் கழிவுகளை குப்பை, குப்பையாக்கொட்டுவது.

9. கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் விவசாயத்தை பாதிக்கும் கெயில் குழாய் பதிப்புகள்.

(இதே போல திருவள்ளூரில் இருந்து மதுரை வரையும், கடலூரில் இருந்து சேலம் வரையும் திட்டமிடப்பட்டுள்ளது)

10. தமிழகத்தின் நீராதாரங்கள், நீர் நிலை ஆக்கிரமிப்புகள்.

11. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியில் சுற்றுச் சூழல் பாதிப்புகள்...

நாலு வாரத்துல சின்ன அம்பானி 450 கோடி கொடுக்கலன்னா 3 மாசம் சிறையாம்...


அதான் தேசபக்தியின் அடிப்படையில்  ராணுவ விமான காண்டராக்ட் ஒன்னை அம்பானிக்கு கொடுத்து ஒரு நாலாயிரம் கோடியை செட்டில் பண்ணிடுங்க். எவன் கேக்கப்போறான்?

மீண்டும் அரசு மருத்துவமனையில் 2 வயது குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது...


2019 பாமக - அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு...


2016சட்டமன்ற தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு சதவீகிதத்தின் அடிப்படையில் அதிமுக பாமக கூட்டணி திமுக கூட்டணியை மிகசக்திவாய்ந்த மெகாகூட்டணியாக மாறியிருக்கிறது

வாக்கு % அடிப்படையில் திமுக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்பில்லை (0/40)...

7 பேர் விடுதலையை வலியுறுத்தி மார்ச் 9ம் தேதி மனித சங்கிலி போராட்டம்- அற்புதம்மாள்...


மனிதப் பிறப்பின் இரகசியம்...


நீங்கள் பிறந்து இத்தனை வருட வாழ்வில் எப்பொழுதாவது, நான் ஏன் பிறந்தேன் என்று உங்களைக் கேட்டுக் கொண்டதுண்டா?

கேட்டிருந்தால் பதில் கிடைத்ததா?

கிடைத்த பதில் உண்மையில் முழுமையானதா?

அப்பதில் முழுமை எனில் உங்கள் வாழ்வும் பரிபூரண சுகமாக முழுமையாக இருக்கும்..

ஆனால் பெரும்பான்மையோர்க்குக் கிடைக்கும் பதில் அறிவியலில் இருந்து கிடைத்த அரைகுறை பதிலாகத் தான் இருக்கும்.

அந்த பதில்கள் இம்மி அளவு கூட சுகத்தைத் தராது.

ஏன் பிறந்தேன் என்பதே தெரியாமல் இருப்பதால் தான் ஏன் வாழ்கிறேன் என்று புரிவதில்லை.

பெரும்பான்மை மக்கள் பிறந்து விட்டேன் அதனால் வாழ்கிறேன் என்று தான் வாழ்கிறார்கள்.

அதனால் தான் அவர்கள் வாழ்வை பரிபூரணமாக உணர்வதோ வாழ்வதோ இல்லை.

பிறந்ததே ஏன் என்று தெரியாமல் இருப்பதால் தான் வாழ்கையை பற்றி ஒன்றும் புரிவதில்லை. சரி, பிறந்தது ஏன் என்று தெரிவதில்லை.

இறுதி நிலையாவது தெளிவாகத் தெரிந்தால் தானே அதற்காக முயற்சி செய்து அதை அடைந்து வாழ்வை பரிபூரணமாக்க முடியும்.

இறுதி நிலை என்ன என்றாவது தெரிந்து நீங்கள் அதை அடைய முயற்சி செய்ததுண்டா?

ஆதியும் (பிறப்புக்கு முன்) புரியவில்லை, அந்தமும் (இறப்புக்கு பின்) புரியவில்லை.

அப்புறம் எப்படி இடைப்பட்ட வாழ்வைப் புரிந்து கொள்ள முடியும்.

பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னும் உள்ளதை அறிவதே ஆன்மிகம்.

இதைத் தவிர வேறு எதுவும் ஆன்மிகம் ஆகாது.

நீங்கள் வேறு எதிலாவது ஈடுபட்டிருந்தால் அது ஆன்மீகப் பாதைக்கான முயற்சியாகவோ / அல்லது படி நிலைகளாகவோ இருக்கலாம்.

உங்களுடைய இந்தக் கேள்விகளுக்கெல்லாம் யாரோ ஒருவர் பதில் சொல்லி உங்களுக்குப் புரிய வைக்க முடியாது.

அப்படி முயன்றால் நீங்கள் அதை வெறுமனே நம்ப முடியும் அல்லது கட்டுக்கதை என்று உதறித் தள்ளத் தான் முடியும்.

இந்தக் கேள்விகளுக்கு விடையுமாய் வாழ்வை பரிபூரணமாக்கும் அருமருந்தாய் மேற்சொன்ன புலன்கள் தாண்டிய அனுபவம் இருக்கும்.

சாதரண மனிதனுக்கும் இது சாத்தியமே.. தேவை முயற்சி மட்டுமே..

அதற்கான வழிமுறை குண்டலினியை எழுப்புவதே. கருவிகள் யோகாவும் தியானமும்..

சாதாரண வாழ்வுக்கு இது மிகத் தொலைவானது அல்ல. மிக நெருங்கியதே.

அத்தகையதொரு புலன்கள் தாண்டிய அனுபவம் உங்கள் மொத்த வாழ்வையும் வேறொரு பரிமாணத்தில், பரிபூரணமான ஒன்றை அடித்தளமாகக் கொண்டு நகர்த்திச் செல்லும்.

இந்த, புலன்கள் தாண்டிய நிலையே, யோகம்.

இந்த யோக நிலையையே ஆன்ம விடுதலை, ஜீவன் முக்தி, இறையோடு கலத்தல், தன்னை உணர்தல் என்று பலரும் பலவாறாகச் சொல்கிறார்கள்.

சாதரண வாழ்வுக்கு இது நெருங்கியதே என்று சொல்லியாகிவிட்டது. அது எப்படி என்றும் சொல்லி விடுகிறேன்..

நம் வாழ்வில் எதை அடைவதாயினும் நம்மிடம் இருக்கும் ஏதோ ஒன்றை வைத்துத் தான் அடைய முடியும். இல்லாத ஒன்றை வைத்து எதையும் அடைய முடியாது..

நம்மிடம் என்ன உள்ளது?

உடல் உள்ளது, மனம் உள்ளது, உணர்ச்சி உள்ளது, எல்லாவற்றிற்கும் மேலாக உயிர் சக்தி உள்ளது.

இந்த நான்கில் ஏதாவது ஒன்றின் மூலமாகத்தான் நாம் எந்தொவொரு செயலும் (கர்மா) செய்ய முடியும்.

உங்கள் உடலைப் பயன்படுத்தி செயல் செய்து யோக நிலையை அடைவது கர்ம யோகம்.

உங்கள் மனதைப் பயன்படுத்தி அல்லது புத்தியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது ஞான யோகம்.

உங்கள் உணர்ச்சியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது பக்தி யோகம்.

உங்கள் உயிர்ச் சக்தியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது கிரியா யோகம்.

இந்த நான்கு யோக முறைகளில் ஏதாவது ஒரு முறையில் யோக நிலையை அடைவோர் சமூகத்தோடு இணைத்து இருப்பதை விரும்புவதில்லை.

ஆனால் இவை நான்கையும் சரியான அளவில் கலந்து பயிற்சி பெறுபவர் சமூகத்தில் இருந்தே யோக நிலையை அடையலாம்.

இந்த நான்கையும் கலந்து கொடுப்பது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசப்படும்.

அதற்குதான், குரு என்பவர் தேவை.

ஆக, யோக நிலை என்பது சமூக வாழ்வைத் துறந்தால் தான் அடைய முடியும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதை மாற்றிக் கொள்ளலாம்...

Uses of Baking Soda Shampoo For Hair Growth..


https://youtu.be/IbtegkEwFGk

Subscribe the channel for more tips...

ஸ்டெர்லைட் படுகொலையின் புதிய ஆதாரத்தை வெளியிட்ட தோழர் முகிலன் எங்கே? தமிழக அரசே பதில் சொல்...


ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறையை திட்டமிட்டு ஏவி துப்பாக்கிச் சூட்டை காவல்துறையே நடத்தியது எனும் ஆதாரத்தினை CCTV காட்சிகள் வழியாக 15-2-2019 அன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் வெளியிட்ட சூழலியல் போராளி தோழர் முகிலன் அன்று இரவிலிருந்து காணாமல் போயிருக்கிறார்.

CCTV கேமராக்களை உடைத்தது யார்? வாகனங்களுக்கு தீ வைத்தது யார்? ஆவணங்களை மாற்றி சமர்ப்பித்த அதிகாரிகள், தென்மண்டல ஐஜி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்தும் பல ஆதாரங்களை அவர் வெளியிட்டிருந்தார்.

ஆதாரங்களை வெளியிட்டுவிட்டு ரயிலில் புறப்பட்ட அவரது தொலைபேசி திண்டிவனம் அருகே சென்ற போது தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. தற்போது வரை தோழர் முகிலன் எங்கே என்பது தெரியவில்லை.

மக்கள் போராளியான தோழர் முகிலன் கடத்தப்பட்டிருக்கிறாரா? யார் அவரை கடத்தியது? அவர் எங்கே?  எனும் கேள்விகளுக்கு தமிழக அரசு உடனடியாக பதில் சொல்லியாக வேண்டும்.

முகிலன் அவர்களின் பாதுகாப்பிற்கு ஏதேனும் நிகழ்ந்தால், அதற்கு தமிழக அரசே பொறுப்பு என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழர் முகிலனுக்காக குரலெழுப்புங்கள்...

தமிழக அரசே.. பதில் சொல்.. முகிலன் எங்கே?

ஏன் கார்பரேட்டை எதிர்கிறோம் என்று புரிகிறதா...


சுயசிந்தனை இல்லாத படிப்பே தற்போது கற்பிக்கப்படுகிறது...


ஏனெனில் சுயசிந்தனை வளர்வதே, அதிகாரத்தில் இருப்பவர்கள் விரும்புவதில்லை..

அவர்களை பொறுத்தவரை நீ கேள்வி கேட்காத அதிபுத்திசாலியாக பணத்தை மட்டுமே சம்பாதிப்பவனாக இருக்க வேண்டும்..

சுயசிந்தனை இல்லாத படிப்பு, வெறும் பணத்தை மட்டுமே தேடி ஒட சொல்லும்..

படிப்பே இல்லாத சுயசிந்தனை வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டுமென்று கற்று கொடுக்கும்..

இந்த அரசியல் கட்டமைப்பை எதிர்த்து கேள்வி கேட்க கூட முடியாத அளவிற்கு தான் உன் படிப்பின் வலிமை இருக்கிறது...

தெலுங்கர் வைகோ நாயுடுவின் வியாபாரங்கள்...


வியக்க வைக்கும் தமிழ் எண்ணியலின் சிறப்பு...


தற்பொழுது நாம் பயன்படுத்தி வரும் எண்கள் இந்தோ-அரேபிக் (INDO-ARABIC) எண்கள்.

ஆனால் உலகின் மூத்த மொழியான தமிழ்மொழியில் சிறப்பு எழுத்துக்களால் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்று முதல் பத்து வரை மட்டுமின்றி நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கும் தனி எழுத்துகள் பயன்பட்டிருந்தன.

கோடி, பத்து கோடி, நூறு கோடி, ஆயிரம் கோடி, இலட்சம் கோடி, கோடி கோடிக்கும் தமிழ் எண்கள் உள்ளன என்பது தமிழின் எண்ணியல் வலிமையை காட்டுகிறது.

தமிழர்கள் உலகம் வியக்கும் கணக்கியலை அக்காலத்திலேயே பயன்படுத்தி உள்ளனர் என்பது இதன் மூலம் தெளிவாகி உள்ளது.

இந்து-அரேபிக் (INDO-ARABIC), ரோமன் (ROMAN) எண்களை பற்றி சொல்லிக் கொடுத்த நம் கல்வி, தமிழ் எண்களை பற்றி சொல்லிக் கொடுக்க தவறிவிட்டது.

தமிழர் எண்ணியல் தமிழ் மக்களுக்கு சேரும் வண்ணம் இனி வரும் சந்ததியினருக்குத் தமிழ் எண்கள் குறித்து சொல்லிக் கொடுப்போம்...

Seabuckthorn juice / ஸீ பக்த்ரான் ஜூஸ்...


https://youtu.be/XDkCw11Ijm8

Subscribe the channel for more news...

அன்பு சக்தியும் படைப்பும்...


1. நீங்கள் விரும்பும் ஒன்றை உங்களிடம் கொண்டு வருவதானாலும் சரி , அல்லது உங்களுக்கு விருப்பமில்லாத ஒன்றை நீங்கள் மாற்ற விரும்பினாலும் சரி, அதற்கான செயல்முறை ஒன்றுதான்: கற்பனை செய்யுங்கள்.. உணருங்கள்.. பெறுங்கள்.

2. உங்கள் கற்பனை நீங்கள் விரும்பும் விசயத்துடன் உங்களை இணைக்கிறது. உங்கள் விருப்பமும், அன்பு உணர்வுகளும் காந்த சக்தியை உருவாக்குகின்றன. அந்தக் காந்த சக்தி உங்கள் விருப்பத்தை உங்களிடம் ஈர்த்து வருகிறது.

3. நீங்கள் உங்கள் விருப்பத்துடன் இனைந்து இருப்பதுபோல கற்பனை செய்ய வேண்டும். அதே நேரத்தில் , நீங்கள் கற்பனை செய்து கொண்டிருக்கும் விஷயங்கள் குறித்து அன்பாக உணர வேண்டும்.

4. நீங்கள் ஆழமாக விரும்பும் ஒரு விஷயத்தை உங்கள் இதயபூர்வமாக விரும்ப வேண்டும். ஏனெனில் ,விருப்பம் என்பது அன்பு உணர்வு. நீங்கள் நேசிப்பதை பெற , நீங்கள் அன்பை கொடுக்க வேண்டும்.

5. நீங்கள் விரும்பும் எந்தவொரு நேர்மறையான விசயத்தையும் கற்பனை செய்து , அதன் மீது அன்பு செலுத்தும் போது , நீங்கள் அன்பின் ஆற்றலை பயன்படுத்துகிறீர்கள்.. உங்கள் கற்பனையின் எல்லைகளைத் தகர்த்தெறிந்து , உங்களால் முடிந்த அளவுக்குச் சிறப்பான, மென்மையான விளைவைக் கற்பனை செய்யுங்கள்.

6. உங்களால் கற்பனை செய்ய முடிகின்ற எந்தவோர் ஆழமான விருப்பமும் ஏற்கனவே படைக்கப்பட்டு விட்டது. அது எதுவாக இருந்தாலும் சரி, ஒன்றை உங்களால் கற்பனை செய்ய முடிந்தால் , அது ஏற்கனவே படைப்பில் உள்ளது என்று பொருள்.

7. உங்கள் உரையாடல்களிலும் , உங்கள் என்னங்ககளிலும் , "_____நடந்தால் எப்படி இருக்கும்" என்று கூறி , நீங்கள் விரும்பும் விசயங்களைக் கொண்டு அந்த வாக்கியத்தின் முதற்பகுதியை பூர்த்தி செய்யுங்கள்.

8. நீங்கள் கற்பனை செய்வதற்கு உதவும் சில பொருட்களைப் பயன்படுத்துங்கள், துணிகள் , படங்கள், புகைப்படங்கள், உங்கள் விருப்பத்திற்குப் பொருத்தமான பொருட்கள் ஆகியவை உங்களைச் சூழ்ந்திருக்கும்படிச் செய்யுங்கள். அப்போது , நீங்கள் விரும்பும் விசயங்களை நீங்கள் ஏற்கனவே பெற்றுவிட்டதாக உங்களால் உணர்வுப்பூர்வமாகக் கற்பனை செய்ய முடியும்.

9. உங்கள் புலன்களும் உங்கள் கற்பனைக்கு உதவும் பொருட்கள்தான். எனவே, நீங்கள் விரும்புவதை நீங்கள் ஏற்கனவே பெற்றுவிட்டதாக உணர்வதற்கு உங்கள் புலன்களையும் தொட்டுப் பாருங்கள். ருசித்துப்பாருங்கள், முகர்ந்து பாருங்கள், கண்களால் பாருங்கள். காதுகளால் கேளுங்கள்.

10. படைப்புச் செயல்முறையில் நீங்கள் உங்கள் பங்கை ஆற்றி முடிந்தவுடன், படைப்பு நிறைவேறிவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்களால் பார்க்க முடியாவிட்டாலும் கூட , நீங்கள் விரும்பிய அந்த விசயத்தைக் கொண்ட ஒரு புதிய உலகிற்குள் நீங்கள் இடம் பெயர்ந்து விட்டீர்கள். அதை நீங்கள் நிச்சயமாக பெறுவீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதற்காக நன்றி சொல்லுங்கள்...