19/03/2019

அழகு என்பது யாது?


அழகு என்பது நிறத்தில், மூக்குக்கண்ணாடியில், கழுத்துச் சுருக்கில், பட்டுடையில், பிற அணிகளில் அமைந்திருப்பதன்று. மூளை, இதயம், மண்ணீரல், நுரையீரல், உள்ளிட்டப்பேருறுப்புகள் செழிய நிலையினின்று ஒழுங்குபெற கடனாற்றலாலுற்று நரப்புக்கட்டினினின்றும் தடைபடாக் குருதியோட்டதினின்றும் முகிழ்க்கும் தசையிடை அரும்புவதே அழகு ஆகும்.

இது தமிழ்த்தென்றல் தென்றல் திரு வி க வின் உரை - அழகு குறித்த விளக்கம்  விளங்குகிறதா? தென்றல் தவழும் தனித்தமிழ் இந்நாளில் உள்ளோர்க்கு துன்பமாயும், அந்நிய மொழி கலந்த சிதைத்த தமிழ்ப்புழதிக்காற்று இன்பமாயும் தோற்றுகிறது என் செய்வது. இவர்தம் தென்றல் தவழும் தமிழ்ப் பொழிவைக்கேட்கக் குவிந்தோர் ஏராளம்.

இன்று இதை எழுதிப்படிப்பதற்கும் தயங்குவோர் தான் ஏராளம். இப்போதெல்லாம் தமிழ் இணையபக்கங்களிலும், தமிழ் பத்திரிகைகளிலும், தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தமிழ் அல்லாத அனைத்து மொழிகளும் தாராளமாக பயன்படுத்துவது நாகரீகமென நினைத்து தமிழைத் தொலைத்துக் கொள்கிறார்கள்.

ஒரு படைப்பில் தூய தமிழ் அற்று பிறமொழிக் கலப்பு இருந்தால் அதற்குப் பொறுப்பு அந்தப்படைப்பின் காரணகர்த்தாவே ஒழிய அடுத்தவரைச் சாராது. ஆகவே பொறுப்பான பதவி வகுப்பவர்கள் தங்கள் பதவியை மட்டும் பாராது கடமையை ஒழுங்குமுறை உடன் செய்வதால்தான் இதற்கான முயற்சியில் வெற்றி பெறுவோம் , என் செய்ய இது காலத்தின் கோலம்.

என்று தமிழர்கள் தமது கலை, கலாச்சாரம், உணவு, உடை அனைத்தயும் உள்ளடக்கிய தன்மானத் தமிழர்களாக வாழ்வதற்கான அவசியத்தை உணர்கின்றானோ அன்றே இதற்கான தீர்வு கிட்டும்...

இந்துத்துவா திராவிடம் இரண்டுமே வேற்றினத்தார் கூடாரம் என்பதை புரிந்துக்கொள் தமிழினமே...


பாஜக வும் பொய் பித்தலாட்டமும்....


900 சதுர அடி வீடு அதுவும் 1 லட்சம் ரூபாயில்..

மதிப்பிற்குரிய வானதியக்கா கவனத்திற்கு,

2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் ஆம் தேதி கணக்கின்படி பிரதமர் மோடி தன்னிடம்

ரொக்க பணம் - 1,49,700 ரூபாய்

எஸ்பிஐ வங்கியின் காந்தி நகர் கிளையில் 1,33,496 ரூபாய்

அதே எஸ்பிஐ வங்கி கிளையில் பிக்சட் டெபாசிட் - 90 லட்ச ரூபாய்

எல்&டி இன்ப்ராஸ்டர்க்ச்சர் பாண்டு பத்திரத்தில் 2012-ம் ஆண்டு செய்த முதலீடு - 20,000 ரூபாய்

தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் முதலீடு -3.9 லட்ச ரூபாய்

லைப் இன்சூரன்ஸ் திட்டத்தில் - 1.5 லட்ச ரூபாய் முதலீடு

45 கிராம் தங்க மோதிரங்கள் - அதன் மதிப்பு 1.2 லட்ச ரூபாய்

மேலே கூறிய அனைத்து முதலீடு மற்றும் சொத்து போன்றவற்றைக் கணக்கிட்டால் சராசரியாக 1,00,13,403 ரூபாய் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

காந்திநகரில் இவரது பெயரில் உள்ள வீட்டின் மொத்த அளவு 3531.45 சதர அடி என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த இடத்தினை இவர் 2002-ம் ஆண்டு 1,30,488 ரூபாய் கொடுத்து வாங்கியதாகவும் அதில் 2,47,208 ரூபாய் செலவு செய்து கட்டுமான பணிகள் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவற்றின் மதிப்புச் சராசரியாகத் தற்போதைய மதிப்பு 1 கோடி ரூபாய் போகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய மொத்த சொத்து மதிப்பு சுமார் 2.2 கோடி ரூபாய் என பிரதமர் மோடி மார்ச் 21, 2017ல் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும் மத்திய அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொத்து மதிப்பு எவ்வளவு என்ற விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதில் பிரதமர் மோடி தெரிவித்திருக்கும் விபரங்களை வானதியக்கா படித்து பார்த்துவிட்டு மீம்ஸ் போட்டால் யாரிடமும் கலாய் வாங்காமல் தப்பிக்கலாம் என ஆலோசனை தருகிறேன்.

- நம்பிக்கை ராஜ்

திமுக வேட்பாளர் பட்டியல் 6 வாரிசுகளுக்கு சீட்... தொண்டர்களுக்கு நாமம்...


https://youtu.be/oMXDZsy4P8c

Subscribe The Channel For More News...

தென் கிழக்காசியாவில் தமிழர்களின் சுவடுகள்...


வனவாசகம் என்ற ஒரு நாடு உண்டு. அதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

தமிழர்கள் மலைநாடு என்று அன்போடு அழைக்கப்படும் மலேசியா நாட்டின் தொடர்பு வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டது என்றும். அறியபட்ட சரித்திர குறிப்புக்களின் வழி இந்தியர்களின் தொடர்பு 5000 ஆண்டுகள் முற்பட்டது எனவும், இராமாயாண மகாபாரதம் நடைப்பெற்ற காலத்தில் தென் கிழக்கு ஆசியா, (ஜா)வா, மலாயா ஆகியவை இந்தியாவோடு இனைந்த பகுதி என்று அறிகிறோம்.

தமிழர் தம் பண்பாட்டில் மதம் இயற்கையாக இடம் பெற்றுள்ளது. நாகரித்தின் தொடக்க காலங்களில் மானுடச் சமூகத்தின் வளர்ச்சியில் மதம் ஆற்றல் மிக்க பங்களிப்பை நிகழ்த்தியிருக்கிறது. உண்மையில் தென்கிழக்கு ஆசிய மக்கள் முதலில் இந்து சமயத்தைத்தான் தழுவினர். அதனால்தான் அவர்களின் பழக்கவழக்கங்களிலும் பண்பாடுகளிலும் மொழிகளிலும் இந்து சமயத்தின் தாக்கம் இன்றும் உணரப்பட்டு வருகிறது

பாரதம் நடைப்பெற்றக் காலத்தில் மலேசியாவுக்கு “பார்த்தன் திக்கு” விஜயம் செய்துள்ளார். பாண்டவர்களின் சிறந்த பார்த்தன் திக்கு யெளவன தீபத்தையும் (ஜாவா) சு(ஸ்)வர்ண தீபத்தையும் (மலேசியா) கண்டு வெற்றிக் கொடி நாட்டியதாய் பாரதம் கூறுகிறது.

பாண்டவர் தலைவர் தருமபுத்திரர் இராச(ஜ) சூய யாகமொன்றை இந்திரப்பிரச(ஸ்)தத்தில் ( இந்தியா) நடத்தினார். இந்த வைபவத்திற்கு பல நாட்டின் மன்னருக்கு அழைப்புக்கள் கிடைத்தன. அன்றைய மலேசியா மன்னர்களும் கலந்து கொண்டனர். சகாதேவன் அன்றைய மலேசியாவின் பகுதிகளுக்கு கண்காணிப்பாளனாக இருந்து அடிக்கடி வங்க வாயிலாக வந்து சென்றுள்ளார். பாண்டவர்கள் யாவாத்தீவில் ஒரு காலத்தில் நாட்டாண்மைக் கொண்டார்கள் என வியாச முனிவர் குறிப்பிட்டுள்ளார்.

கி.மு 274-232 அசோக சக்கரவத்தி பவுத்த சமயப் போதகர்களை பொன்னாடு என்று போற்றப்பட்ட சுவர்ண பூமிக்கு அனுப்பி வைத்தார். சு(ஸ்)வர்ணம் என்றால் தங்கம் என்று பொருள். அந்த காலத்தில் மலேசியாவில் தங்கம் அதிகம் கிடைத்த காரணத்தால் பொன்னாடு என்று அழைக்கப்பட்டன. கி.மு 200ல் மலேசியாவை “இந்திர பாரத பூரா” என்று அழைக்கப்பட்டது. இந்திர என்றால் தங்கம் , பாரத் என்றால் நாடாகும்.

தமிழ் இலக்கியங்களில் கடாரம் என்று கூறப்படும் பழமைமிக்க ஒரு நாடு மலேசியாவில் இன்று கெடா என்று அழைக்கப்படும் மாநிலம் ஆகும்.கடா அல்லது கயிடா என்பது யானைகளை கன்னி வைத்து பிடிக்கும் இடம் என்று கூறப்படுகிறது. ஆனால் கெடா என்ற வார்த்தை அந்த அர்த்தத்தில் உருவான ஒரு பொருளாக இருக்காது என்பது சிலரின் வாதம்.

பழந்தமிழ் கல்வெட்டுக்கள் கெடாவை கடாரம் அல்லது கழகம் என்று கூறுகின்றது. கடாரம் என்பதின் பொருள் என்னவென்றால் அகன்ற பாணை அல்லது கருமை நிறம் என்று சில சரித்திர ஆராச்சியாளார்கள் கூறுவதுண்டு. அரபியரும் பார்சிகாரர்களும் வட மலேசிய தீபகற்பத்தை கிலா, கலா அல்லது குவலா என்று அழைத்ததுண்டு.

3000 ஆண்டுக்குமுன், இந்திய வேந்தர்கள் கடல் கடந்து கடாரம் வந்த பொழுது அங்கே தவளைகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனவாம் அதனால் தான் கடாரத்தை “காத்தா” என்று அழைத்தனர். காத்தா என்றால் மலாய் மொழியில் தவளை என்று பொருள். மலாய்க் காரர்களின் வாய் மொழி கதைகளில் சொல்லப்படும் சில காதல் புனைவு கதைகளிலும் வரலாற்று தகவல்ளிலும் லங்காசுக என்ற ஒரு பண்டைய அரசாங்கம் கெடாவில் இருந்ததகவும் அதன் பண்டைய எச்சங்கள் இன்னும் இருபதாகவும் கூறுகின்றனார்.

பண்டைய இந்திய நாட்டு வியபாரிகள் கெடாவை காத்தாரை என்று அழைத்தாக சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர். கடாரம் அல்லது கெடா அன்றைய இந்திய வியபாரிகளுக்கு மலை நாட்டின் அடையாள மார்க்கமாகவும் இளைப்பாறி தனது கடற்பயணத்தை கிழக்கு ஆசியாவுக்கு தொடரும் தளமாகவும் விளங்கி உள்ளது. ஆறாம் நூற்றாண்டில் லங்காசுக என்ற அரசாங்கதின் மைய இடமாகவும் லெம்ப பூஜாங் என்று சொல்லபடுகின்ற பழைய வரலாற்று சின்னம் இந்தியர்களின் கலச்சார படை எடுப்புக்கும் நாகரிக அடையாள சின்னமாக திகழ்கிறது.

தமிழர்கள் கி.பி முதல் நூற்றாண்டிலும் அதற்கு முன்பும் தலைச்சிறந்த மாலுமிகளாகவும் படைவீரர்களாகவும் வர்த்தகர்களாகவும் திகழ்ந்தார்கள். வர்த்தக சம்மந்தமாக இந்திய தமிழ் மாலுமிகள் கடல் கடந்து மலேசியாவுக்கு வந்தவர்கள், நாளாடைவில் இங்கு குடியிருப்புக்களையும் அரச அமைப்பையும் எற்படுத்தி சமயம் கலைக் விவசாயம் பண்பாட்டுக் கூறுகளையும் எழுப்பி இருக்கின்றார்கள். காடுகளிலும் குகைகளில் வாழ்ந்த சுதேசிகளுக்கு விவசாயத்தையும் நாகரீகத்தையும் கற்றுக் கொடுத்திருக்கின்றார்கள் நம் தமிழர்கள்...

தென் மாவட்டத்தில் போட்டியிட தயங்கும் திமுக - அதிமுக... காரணம் டிடிவி. தினகரன்...


https://youtu.be/M8e5nbU4Vv8

Subscribe The Channel For More News...

முத்தம் பசியின்மையை போக்கும்...


முத்தத்தால் பசியின்மையை சரிசெய்ய முடியும் என பிரிட்டன் மற்றும் கொரியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

அன்பை பரிமாறிக் கொள்ள முத்தம் கொடுக்கப்படுகிறது, இதுமட்டுமல்லாது பல்வேறு நன்மைகளும் விளைகின்றன என பிரிட்டன் மற்றும் கொரியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

அதாவது முத்தம் பசியின்மையை போக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பசியால் பாதிக்கபட்டவர்களிடம் இது போன்ற ஆராய்ச்சியை நடத்திய போது அவர்களது பாதிப்படைந்த உறுப்புகளில் ரத்தம் பாய்ந்து பசியின்மையை போக்கி உள்ளது.

இந்த ஆய்வு குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில்...

முத்தம் முதலில் கொடுக்கும் போது மிகவும் ஆர்வமூட்டுவதாக இருக்கும். ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்கும் போது ஊக்கிகள் (Hormones) சுரக்கபட்டு அவர்களின் பசியை போக்கிவிடும்.

அன்பு முத்தம் கொடுப்பதால் மனித மூளைக்கு நன்மை கிடைக்கிறது, கோபம் மறைகிறது, மகிழ்ச்சியை அதிகரிக்கிறது என்றும் வெறுப்பு மிகவும் குறைவாகவே உள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர்.

பசியற்ற நோயாளிகளுக்கு இது போன்ற கண்டு பிடிப்புகள் மிகவும் பெரும் உதவியாக இருக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்...

திமுக வின் பினாமி ஊடகங்கள்...


மறைமுக திமுக ஆதரவு தொலைக்காட்சி...

ராஜ் டிவி மற்றும் நியூஸ் 7...


வெற்றிக்கனியை பறிப்பாரா கிருஷ்ணசாமி...?


கடந்த 5 முறை பாராளுமன்ற தேர்தலில் தென்காசி (தனி) தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த கிருஷ்ணசாமி, இம்முறை 6-வது தடவையாக அதிமுக கூட்டணியில் போட்டியிடுகிறார்...

உன்னை நேரடியா தாக்குனா தப்பிச்சிடுவ அதனால தான் கொஞ்சம் கொஞ்சமா போதை ஏற்றி சாகடிக்குறான்...


அதிமுகவின் நாடாளுமன்ற வேட்பாளரில் வாரிசுகள்...


1. ஜெயவர்தன் - ஜெயகுமார் மகன்
2. ரவீந்திரநாத் - ஓபிஎஸ் மகன்
3. மனோஜ் பாண்டியன் - பிஎச் பாண்டியன் மகன்
4. ராஜ்சத்யன் - ராஜன் பி செல்லப்பா மகன்

20 வேட்பாளர்களிலேயே 4 பேர் வாரிசு அடிப்படையில் வேட்பாளர்களாகின்றனர்.

களத்தில் நின்று கட்சி வளர்த்து, எதிர்ப்புகளை சந்தித்து, சமாளித்து, வழக்குகள் வாங்கி, சில நேரங்களில் உயிரையே இழந்து கட்சிக்கான வேலை பார்ப்பது சாதாரண தொண்டர்கள் தான்.

அவர்களை விட இம்மாதிரியான வேட்பாளர்களுக்கு என்ன தகுதி இருந்து விடப் போகிறது?

ஜெயலலிதா இல்லாத அதிமுகவில் தொண்டர்கள் என்பது அடிமைப்படை, ஆட்டுமந்தைக் கூட்டம்.

 தலைவர்கள் குறுநில மன்னர்கள்.

சிந்தியுங்கள் அதிமுக தொண்டர்களே...

இலுமினாட்டி அமெரிக்க நாடும்.. பேட் பாம் ஆயுதமும்...


பழத்தை தோலோடு சாப்பிடுங்க. ஆரோக்கியமா இருக்கலாம்...


அதிகமாக பழத்தை விரும்பி சாப்பிடுபவர்களா நீங்கள்? அதிலும் அந்த பழத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு, தோலை தூக்கி போடுபவர்களா?

அவர்களுக்கு ஒரு முக்கியமான விஷயம் காத்திருக்கு!!! அப்படி தோலை தூக்கி போடாமல் அதையும் சாப்பிடும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். ஏனெனில் பழத்தை விட பழத்தில் தோல்களிலேயே அதிகமான அளவு ஊட்டச்சத்தானது இருக்கிறது. அந்த தோலானது சுவையாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அதை கண்டிப்பாக சாப்பிடுங்கள். ஏனென்றால் அதனை உண்Healthy Fruit Peels Eat பதால் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

அதிலும் முக்கியமாக பழத்தை சாப்பிடும் முன்பு நன்கு கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும். அத்தகைய பழங்களில் எவற்றின் தோல்களை முக்கியமாக சாப்பிட வேண்டும் என்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்...

மாம்பழம் : பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழத்தின் பழத்தில் மட்டும் ஊட்டச்சத்தானது இல்லை, அதன் தோலிலும் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன் தோலை சாப்பிட்டால் நீரிழிவு, புற்றுநோய் போன்ற நோய்கள் குணமாவதுடன், இரத்தத்தில் உள்ள கொழுப்புகளின் அளவை குறைத்துவிடும். ஆகவே இந்த மாம்பழத்தை தினமும் ஒரு துண்டுகளை தோலோடு சாப்பிட்டால் நல்லது.

ஆப்பிள் : நிறைய பேர் ஆப்பிளை சாப்பிடும் முன் அதன் தோலை நீக்கி விட்டு, பின் அதனை சாப்பிடுவர். ஆனால் அந்த ஆப்பிளின் தோலானது அவ்வளவு கடினமாக இருக்காது, இருப்பினும் அவ்வாறே உண்பர். அத்தகைய ஆப்பிளின் தோலை சாப்பிடுவதால் விரைவில் செரிமானமடைவதுடன், பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது. ஆப்பிளின் தோலில் கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. மேலும் அது டயட் மேற்கொள்வோருக்கு ஏற்ற அதிகமான நார்ச்சத்தானது உள்ளது. அதிலும் அளவுக்கு அதிகமான ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால், உடலில் இருக்கும் செல்கள் வலுவடைவதுடன், இதய நோய் மற்றும் நீரிழிவு ஏற்படாமல் பாதுகாக்கிறது. இது தோலுடன் சாப்பிடும் பழங்களில் மிகவும் எளிதாக விழுங்கக்கூடிய பழம்.

எலுமிச்சை : எலுமிச்சையின் தோலை சாப்பிட்டால், உடலில் செரிமானமானது நன்கு நடைபெறும். இது வயிற்றில் ஏற்படும் தசைப்பிடிப்புகளை நீக்கும். ஒரு சிறு துண்டு எலுமிச்சை தோலை தினமும் சாப்பிட்டால், உடலில் இரத்த சுழற்சியானது நன்கு நடைபெறும். மேலும் ஆயுர்வேதத்தில் கல்லீரலில் ஏற்படும் நோய்க்கு, இந்த எலுமிச்சையின் தோலில் இருந்து சாற்றை எடுத்தே கொடுப்பர். அதிலும் ஆயுவேதத்தில் ஸ்கர்வி நோயை சரிசெய்ய, இந்த சாற்றையே கொடுப்பார்கள். தினமும் ஒரு சிறு துண்டுகளை சாப்பிட்டால் சருமமும் அழகாக இருக்கும்.

ஆரஞ்சு : ஆரஞ்சு பழத்தோலில் அதிக அளவு தாவர ஊட்டச்சத்துகள் மற்றும் ஃப்ளேவனாய்டுகள் உள்ளன. இதுவும் செரிமானத்திற்கு சிறந்தது. மேலும் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கும். அதிலும் இதனை சமையலில் பயன்படுத்தினால், ஒரு நல்ல சுவையானது கிடைக்கும். இந்த ஆரஞ்சு பழத்தோலை அப்படியே சாப்பிட முடியாதவர்கள், அதனை சமையலில் சேர்த்து உண்ணலாம்.

கிவி : கிவி பழத்தின் தோலில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் அளவுக்கும் அதிகமாக இருக்கிறது. அதிலும் இதனை உண்பதால் இரத்தமானது லேசாக இருப்பதோடு, உடலில் எளிதாக நன்கு சுழற்சியானது நடைபெற்று, இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. ஆகவே இந்த பழத்தை தினமும் உண்டால், உடலுக்கு தேவையான சத்துக்களை எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம்...

அதிமுக வை இறங்கி அடிக்க தயாரான டிடிவி..


15 தொகுதியில் ஆட்டம் காட்டும் தினகரன்...

 https://youtu.be/dCosIGn2e_g

Subscribe The Channel For More News...

வந்தேறி திருட்டு திராவிடர்ஸ்...


1938ல் இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழர் தேசிய உணர்வெழுச்சியை உண்டு பண்ணியது. அதன் விளைவாக ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கத்தை மறைமலையடிகள், அண்ணல் தங்கோ, கி.ஆ.பெ. உள்ளிட்ட பெரியார்கள் முன்வைத்தனர்.

அவர்கள் சிறை சென்று வருவதற்குள் அதை ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என தெலுங்கர்களும் கன்னடர்களும் மாற்றினர்..

திராவிட நாடு என்பதே வரலாற்று மோசடியால் கட்டமைக்கப்பட்டது..

தமிழ் தேசியம் எழும் போதெல்லாம் திராவிட நாடு பேசுவார்கள் திருட்டு திராவிடர்கள்...

தொலைக்காட்சியில் விளம்பரம் போடுமளவிற்கு வந்து விட்டது...


உணவு பழக்கத்தை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்...

தமிழின் அர்த்தம் எத்தனை பேருக்குத் தெரியும்....?


நம் அனைவருக்கும் தமிழ் தெரியும். ஆனால் எத்தனை பேருக்கு அதன் அர்த்தம் தெரியும்...? தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே...

தமிழ் என்பது த்-அ-ம்-இ-ழ் என்னும் ஐந்து அலகு நிலையுடையது.

அ - அகண்டாகார சித்தை விளக்கும் ஓங்கார ஐம்பூதத்திற்குள் பதி நிலையக்கரமாகும்.

இ - பதியைவிட்டு விலகாத சித்தை விளக்குவதால் அனந்தாகார பேதங்காட்டும் உயிர்ச்சித்த கலையக்கரமாம்.

பதி சித்தாத்ம கலைகளுக்காதாரமாகி உயிரினுக்கு உடலையொத்துக் குறிக்கப்படும். த்-ம்-ழ் எழுத்துக்களுக்கு உரை...

த் - ஏழாவது மெய். அறிவின் எல்லையைக் குறிக்கும்.

ம் - பத்தாவது மெய். ஞானத்தின் படியைக் குறிக்கும்.

ழ் - பதினைந்தாவது இயற்கையுண்மைச் சிற்ப்பியல் அக்கரம். நம் அண்டத்தைக் குறிக்கும்.

எல்லா மொழிகளுக்கும் பிதுர் (தந்தை) மொழியென்று ஆன்றோர்களால் கொண்டாடப்பட்டதும், இனிமையென்று நிறுத்தம் சிந்திக்கப் பெற்றுள்ளதுமான தமிழ் தான் இயற்கையான சிறப்பியல் மொழியாகும்...

திமுக - அதிமுக 40 தொகுதிகளில் வெறும் 8ல் மட்டுமே நேரடி போட்டி...


https://youtu.be/Bx5yLhMziMY

Subscribe The Channel For More News...

தமிழரின் உணவுமுறை தானியங்களை பெரும்பாலும் நம்பியிருந்தது...


கூழ் காய்ச்சி உண்பதே நமது வழக்கம்.

நெல்லுச்சோறு ஒரு பண்டிகை உணவாக எப்போதாவது உண்ணும் வழக்கம் தான் 50 ஆண்டுகள் முன்புவரை இருந்தது.

நெல் நமது முக்கிய உணவு இல்லை.

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு என்ற பாடல் நினைவு வரலாம்.

இது தினம் தினம் பண்டிகை என்று மகிழ்வாகப் பாடுவதாகும்.

ஆகவே, நமது பழைய தானிய உணவுமுறை மீட்கப்பட வேண்டும்.

தண்ணீர் குறைவாக எடுக்கும் உணவு வகையைப் பின்பற்ற வேண்டும்...

திமுக எனும் தெலுங்கர்களின் வாரிசு அரசியல் பட்டியல்...


மரணத்தை தள்ளி போடும் நெல்லிக்காய்...


அனைவருக்குமே நெல்லிக்கனியை பற்றி நன்கு தெரியும். நெல்லிக்கனியில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது.

இந்த நெல்லிக்கனியில் அதிகமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், இதனை ஆயுர்வேத மருந்துகளில் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

1. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நெல்லிக்கனியை சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

2. உடலில் இருக்கும் கொழுப்பின் அளவைக் குறைக்கும்.

3. இது ஒரு இயற்கையான ஆன்டி-ஏஜிங் பொருள். ஆகவே இதனை உட்கொண்டால் சருமத்திற்கு மிகவும் சிறந்தது. மேலும் ஸ்காப்பிற்கு போதுமான அளவு ஈரப்பசை தருவதோடு, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

4. செரிமான மண்டலத்தை சரியாக இயங்கச் செய்து, மலச்சிக்கலை சரிசெய்யும்.

5. உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

6. கல்லீரலின் செயல்பாட்டை முறையாக நடத்துகிறது.

7. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த நோயும் உடலை தாக்காமல் பாதுகாக்கும்.

8. நெல்லிக்கனி உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


ஆயுத எழுத்து......


முப்புள்ளி எழுத்தின் மூலம்: உலகில் பேச்சுமொழி முதலில் தோன்றி, பின்னர் எழுத்து மொழி தோன்றியது. அதாவது, ஒலிவடிவ எழுத்து தோன்றிய பின்னரே வரி வடிவ எழுத்து தோன்றியது. “அ’ என்று எழுத்தொலியை எழுப்பினால் அஃது ஒலி வடிவ எழுத்து.

“அ’ என எழுதினால் அது வரிவடிவ எழுத்து. காதால் கேட்பது ஒலிவடிவ எழுத்து. கண்ணால் காண்பது வரிவடிவ எழுத்து. வரிவடிவ எழுத்துக்கள் அறிஞர் பெருமக்களால் கால இடைவெளியில் உருமாற்றம் பெற்று வருகின்றன.

ஆயுத எழுத்து தொல்காப்பியர் காலத்திலிருந்தே உள்ளது. இந்த ஆயுத எழுத்தைத் தனிநிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி, அஃகேனம் முதலிய பெயர்களால் குறிப்பிடுகின்றனர். உயிரெழுத்தும் இல்லாமல், மெய்யெழுத்தும் இல்லாமல், உயிர் மெய் எழுத்தும் இல்லாமல் தனித்த நிலையைப் பெற்று, தனித்து நின்று தனியொரு எழுத்தாக இருப்பதால் “தனிநிலை’ எனப்படுகிறது.

இந்த ஓர் எழுத்து மட்டுமே மூன்று புள்ளி களாலான எழுத்தாக அமைந்துள்ளது. ஆதலால் இவ்வெழுத்து முப்புள்ளி, முப்பாற்புள்ளி எனப்பெயர் பெற்றுள்ளது. ஓசையின் அடிப்படையில் அஃகேனம் என பெயர் பெற்றுள்ளது. வழக்காற்றில் இதை “ஆயுத’ எழுத்து என்றே கூறுவர்.

“ஆயுத’ எழுத்து என இலக்கண நூலார் கூறுவதில்லை. பத்துவகைச் சார்பெழுத்துகளில் ஒன்றாகவே ஆயுத எழுத்து கூறப்பட்டுள்ளது.இயல்பாக அரை மாத்திரை ஒலியளவுபெறும் ஆயுத எழுத்து, ஓசை குறைந்து கால் மாத் திரையாக ஒலிக்கும்பொழுது “ஆயுதக்குறுக்கம்’ என்ற சார்பெழுத்து ஆகிறது.

ஆய்த எழுத்து தனிக்குறிலை (தனிக்குற்றெழுத்தை) அடுத்தும், வல்லின உயிர்மெய் எழுத்துக்கு முன்பும் எஃகு, அஃது என்பன போன்று வரும். கஃறீது (கல்+தீது), முஃடீது (முள்+தீது) என ஆயுதக் குறுக்கமாகி, சார்பெழுத்தாக வரும் பொழுதும் தனிக்குறிலை அடுத்தும் வல்லின உயிர்மெய் எழுத்துக்கு முன்னேருமே வரும். ஆயுதம் என்பது பொதுவாக கருவி எனப்பொருள்படும்.

ஆயினும், போர்க்கருவிகளையே ஆயுதம் அல்லது ஆயுதம் என்றனர். போர்க் கருவிகளிலும் குறிப்பிட்ட ஒரு கருவியே ஆயுதம் எனப் பெயர் பெற்றது. போர்வீரன் வலக்கையில் வாளை ஏந்தி இருப்பான். இடக்கையில் கேடயத்தைத் தாங்கி இருப்பான். எதிரியை வாளால் தாக்குவான். எதிரியின் வாள், தன்னைத் தாக்காமல் கேடயத்தால் தடுத்து, காத்துக்கொள்வான்.

அந்தக் கேடயம் இரும்பால் செய்யப்பட்டு வட்டவடிவ அமைப்பில் இருக்கும். அதில், பிடிப்பதற்கென ஒரு பக்கத் தில் கைப்பிடி இருக்கும். மறு பக்கம் மூன்று புள்ளிகள் (ஃ) போன்ற வடிவமைப்பில் இரும்புக் குமிழிகள் இருக்கும். இடக்கையில் உள்ள கேடயத்தால் பகைவனைத் தாக்கினால், அந்த மூன்று குமிழிகள் போன்ற வலிய பகுதிகள், பகைவன் மீது கொட்டு வதுபோல் இடித்துத் தாக்கும்.

அந்தக் குமிழிகள் மூன்றில் இரண்டு கீழேயும், ஒன்று மேலேயும் ஃ என்பதுபோல இருக்கும். அந்த ஆயுதம் போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பதால், இந்த எழுத்தும் அப்பெயரைப்பெற்றது. “போர் வீரர்கள் போர்க்களத்தில் பயன்படுத்திய போர்க்கருவிகளில் சூலமும் ஒன்று, சூலம் கூரிய முனைகள் மூன்றைப் பெற்றிருக்கும்.

அந்த மூன்று முனைகளை மட்டுமே நோக்கினால் முப்புள்ளியாகத் தோன்றும். சூலத்தின் முனைகள் மூன்றிலும், எலுமிச்சைப் பழங்களைச் செருகி நோக்கினால் ஃ என்பது போலக் காட்சி தருவதைப் புரிந்துகொள்ளலாம். இக்காட்சியைக் கோயில்கள் சிலவற்றில் காணலாம்.

இந்த ஒப்புமையாலும் முப்புள்ளி எழுத்து ஃ, ஆயுதம் எனப்பெயர் பெற்றது’ என்று தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் மாணாக்கர் மகாவித்துவான் ச.தண்டபாணி தேசிகர் கூறக்கேட்டுள்ளேன். தமிழில் இலக்கணப் பெயர்களும் எழுத்துகளின் பெயர்களும் காரணம் கருதியே பெயர் பெற்றுள்ளன.

அவ்வாறே ஆயுத எழுத்தும் காரணம் கருதியே பெயர் (காரணப்பெயர்) பெற்றுள்ளது. (செய்தி ஆதாரம் 07.03.2010ஆம் தேதியிட்ட தினமணி நாளிதழில் புலவர் ம.நா.சந்தானகிருசுணன் என்பவர் எழுதியுள்ளார்)...

யூனியன் ஆஃப் சவுத் இந்தியா...


தகவல் பரிமாற்றக் கருவியுடன் ஆம்புலன்ஸ் சேவை கோவையில் துவக்கம்...


தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக கோவையில் அதிநவீன தகவல் பரிமாற்றக் கருவியுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவையை நீலாம்பூர் ராயல் கேர் மருத்துவமனை அறிமுகம் செய்தது.

மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை ஆம்புலன்ஸ் மூலம் இடமாற்றம் செய்யும்போது உயிர் சேதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதோடு, நோயாளியுடன் பயணிக்கும் செவிலியருக்கு நோயாளியின் உடல்நிலையில் திடீரென ஏற்படும் நிகழ்வுகளைக் கண்டறிவதும் சமாளிப்பதும் கடினமாக இருக்கும், மேலும், ஆம்புலன்ஸ் மூலம் இடமாற்றம் செய்யப்படும் நோயாளியின் உடல்நிலையை மருத்துவமனையில் இருந்து கண்காணிப்பதிலும் சிகிச்சை முறைகளை வழிநடத்துவதிலும் சிரமங்கள் தற்போது உள்ளது.

இந்நிலையில் இதுபோன்ற குறைபாடுகளை சரி செய்யும் வகையில் ஆம்புலன்ஸில் பயணிக்கும் நோயாளிகளைப் பற்றிய மருத்துவக் குறிப்புகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையில் அதிநவீன தகவல் பரிமாற்றக் கருவியுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவையை தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக கோவை, நீலாம்பூரில் உள்ள ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை துவக்கி உள்ளது. மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இதன் அறிமுக விழாவில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா நவீன ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவமனை தலைவர் மாதேஸ்வரன்,
இந்தத் தகவல் பரிமாற்ற வசதியின் மூலமாக, இடமாற்றம் செய்யப்படும் நோயாளியின் நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவு, இ.சி.ஜி. குறித்த தகவல்கள் உடனுக்குடன் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பப்படும். மருத்துவமனையின் பிரத்யேக மருத்துவக் குழுவானது இந்தத் தகவல்களின் அடிப்படையில் ஆம்புலன்ஸில் நோயாளியுடன் பயணிக்கும் மருத்துவர், செவிலியருக்குத் தொடர்ந்து ஆலோசனை வழங்குவார்கள்.

அதேநேரம் நோயாளியின் சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ வசதிகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்படும். இந்த நவீன ஆம்புலன்ஸ் மூலம் நேரம் விரயமாவது தவிர்க்கப்படுவதுடன், சரியான சிகிச்சை வழிமுறைகளும் உடனடியாக கிடைக்கப்பட்டு உயிர்சேதம் தவிர்க்கப்படும் என அவர் தெரிவித்தார்...

உனது அரசியல் உனது சிந்தனையில்...


வீட்டிற்கொரு கற்றாழை வளர்ப்போம்....


சோற்றுக் கற்றாழை என்ற தாவரம் பல மருத்துவ குணங்களை கொண்டது என்பது நம்மில் பலருக்கு தெரியாது. இந்த தாவரம் பல வகைகளில் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள், ரெசின்கள், பாலிசக்கரைடு மற்றும் ஆலோக்டின்பி எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் மூசாம்பரம் எனப்படுகிறது.

தளிர்பச்சை, இளம்பச்சை, கரும்பச்சை எனப் பலவிதமாக உள்ள சோற்றுக்கற்றாழை முதிர்ந்தவற்றில் தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றன.

பொதுவாக் 40 வயதைக் கடந்து விட்டாலே மூட்டு வலி, கை,கால் வலி ஏற்படுவது பெரிதும் வாடிக்கையாகி விட்டது. அதிலும் வயது முதிர்ந்தவர்களுக்கு கால் மூட்டில் இருக்கும் திரவம் குறைவதால், நடப்பதே மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தக் கூடியதாகி விட்டது.

மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற “அலோசன் ஹெல்த் டிரிங்க் உதவும். இது உலகின் அபூர்வ சாகாவரம் பெற்ற சோற்றுக் கற்றாழை மூலிகையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள ஊட்டச் சத்துகள் நிறைந்த தண்ணீர் உடலில் குறைவாக உள்ள நீர்ச் சத்தை அதிகப்படுத்தி மூட்டுகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான கூழ் போன்ற திரவத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது.

மேலும் எலும்புகளுக்குத் தேவைப்படும் சுண்ணாம்புச் சத்தையும் (கால்ஷியம்) அலோசன் ஹெல்த் டிரிங்க் அளித்து மூட்டு வலியைப் போக்க உதவுகிறது.

மஞ்சள் காமாலை நோய்க்கும் சோற்றுக் கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதால் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையும் அதிகரிக்கிறது.

கண்நோய், கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை, மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர, உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.

உள் மருந்தாக வயிற்றுப் புண் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும்.

நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும், தாதுக்களும் நிறைந்தது இச்சாறு. சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம், வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.

பிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம். சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி, சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து, ஈரப்பதம் அளிக்கும்.

இத்தகைய கற்றாழை இளம் தலைமுறையின் இனிய தோழன்  தானே..  வீட்டிற்கொரு கற்றாழை வளர்ப்போம்...

டைட்டானிக் கப்பல் மூழ்கியதில் இருக்கும் மர்மமும்.. உண்மையும்...


https://youtu.be/QJhiL5M4P9E

Subscribe The Channel For More News...

விடாமுயற்சி, துவண்டு போகாத....


உலகத்தின் முகத்திலிருந்து பெரியம்மை நோயை ஒட்டுமொத்தமாக துடைத்தொழித்த உன்னத மருத்துவர் எட்வர்ட் ஜென்னர் (1749-1823) பிரிட்டிசு (BRITISH) ராணுவத்திலும், கடற்படையிலும் அம்மைக் குத்துவது கட்டாயமாக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அம்மைக் குத்தும் முறை உலகெங்கும் விரைவாக பரவியது. எந்தக் கண்டுபிடிப்பையுமே பணமாக்கும் முயற்சியில் இறங்குவதுதான் பெரும்பாலானோரின் இயல்பு.

ஆனால் இயற்கையை அளவில்லாமல் நேசித்த ஜென்னர் தனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற நினைக்காமல் அதனை உலகுக்கு இலவசமாக வழங்கினார்.

ஏழை எளியவர்களுக்கு இலவசமாக அம்மைக் குத்தினார். ஒவ்வொரு நாளும் அவரின் மருத்துவ அறைக்கு முன் முன்னூறு ஏழைகள் வரை வரிசை பிடித்து நின்று அம்மைக்கான தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.

மருத்துவ உலகிற்கு அவரது பங்களிப்பை கெளரவிக்கவும், ஆதாயம் பற்றி நினைக்காமல் தனது கண்டுபிடிப்பை உலகிற்கு வழங்கியதற்கு நன்றி கூறவும் விரும்பிய பிரிட்டிசு நாடாளுமன்றம் 1802-ஆம் ஆண்டில் அவருக்கு பத்தாயிரம் பவுண்ட் பரிசு வழங்கியது.

நான்கு ஆண்டுகள் கழித்து அவருக்கு மேலும் இருபதாயிரம் பவுண்ட் சன்மானமாக வழங்கியது. அதனைக் கொண்டு 1808-ஆம் ஆண்டு தேசிய தடுப்பூசிக்கழகத்தைத் தோற்றுவித்தார் ஜென்னர்.

அம்மை நோயை துடைத்தொழித்தவர் என்று உலகம் முழுவதும் பாராட்டியது. பல்வேறு விருதுகளும் பதக்கங்களும் அவரை நாடி வந்தன. மருத்துவ உலகில் எட்வர்ட் ஜென்னர் என்ற தனி ஒரு மனிதரின் பங்களிப்பு மிக உன்னதமானது.

அவர் இல்லாதிருந்தால் இன்னும் பல மில்லியன் மக்கள் அம்மை நோய்க்கு பலியாகியிருப்பர்.

அவர் உலகுக்கு தந்த கொடையால் 1980-ஆம் ஆண்டு உலகில் அம்மை நோய் முற்றாக துடைத்தொழிக்கப்பட்டு விட்டதாக அறிவித்தது உலக சுகாதார நிறுவனம்.

எதையும் கூர்ந்து கவனிக்கும் பண்புதான் அம்மைக்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்க எட்வர்ட் ஜென்னருக்கு உதவிய முதல் பண்பு.

தாம் கண்டுபிடிக்க வேண்டிய உண்மைக்காக அவர் மேற்கொண்ட விடாமுயற்சி இரண்டாவது பண்பு.

சமகால மருத்துவர்கள்கூட எச்சரித்த போதும் துவண்டு போகாத அளவுக்கு அவரிடம் இருந்த தன்னம்பிக்கை மூன்றாவது பண்பு.

உயிர்காக்கும் தனது கண்டுபிடிப்பை உலகத்தோடு பகிர்ந்துகொண்ட உயரிய எண்ணம் நான்காவது பண்பு.

இவையனைத்தும் சேர்ந்ததால் உலகுக்கு கிடைத்ததுதான் அம்மைக்கான நோய்த்தடுப்பு மருந்து. சிந்தித்துப் பாருங்கள் இந்த பண்புகளை நாமும் வளர்த்துக்கொண்டால் நம்மாலும் எந்த வானத்திலும் சிறகடித்துப் பறக்க முடியும்.

நாம் விரும்பும் வானத்தையும் வசப்படுத்த முடியும்.

மருத்துவர் ஜென்னருக்கு மரியாதை செய்த மாவீரன் நெப்போலியன் எட்வர்ட் ஜென்னர் எந்த அளவுக்கு உலக மரியாதையைப் பெற்றிருந்தார் என்பதற்கு ஒரு குறிப்பு...

அவர் அறிமுகப்படுத்திய அம்மைக் குத்தும் முறை பிரான்சிலும் பரவி நல்ல பலனை தந்ததைத் தொடர்ந்து ஜென்னர் மீது அதிக மரியாதை கொண்டார் மாவீரன் நெப்போலியன்.

அதனை அறிந்த ஜென்னர் பிரான்சில் இருந்த சில ஆங்கில கைதிகளை விடுவிக்குமாறு நெப்போலியனுக்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் ஜோசப்பின் அரசியாரின் கைகளுக்கு சென்றது.

அவர் நெப்போலியனிடம் அந்த கோரிக்கையை விடுத்தார்.

முதலில் அதனை நிராகரித்த நெப்போலியன் கோரிக்கையை விடுத்திருப்பது எட்வர்ட் ஜென்னர் என்று அரசி சொன்னவுடன் சற்றும் தாமதிக்காமல் அந்த பெயரை தாங்கி வரும் எந்த விண்ணப்பத்தையும் என்னால் நிராகரிக்க முடியாது என்று கூறி அந்த கைதிகளை விடுவித்தாராம்...

திமுக தான் இந்தியை எதிர்த்து போராடியது என்று ஆட்சியை பிடித்து தமிழின தலைவர் என்ற போர்வையில் 50 ஆண்டு ஏமாற்றியவர்கள்...


நாம் கொடுப்பதையே திரும்பப் பெறுவோம்...


விவசாயி ஒருவர் தினமும் தனது வீட்டிற்கு அருகே உள்ள இனிப்புக் கடைக்கு 1 பவுண்ட்  வெண்ணையை விற்கும் வழக்கம் கொண்டிருந்தார்.

ஒரு நாள் இனிப்புக் கடைக்காரர் அந்த வெண்ணையில் அளவை சோதித்து பார்க்க அதில் சற்று குறைவாக இருந்தது, உடனே அந்த கடைக்காரர் விவசயியின் மேல் குற்றம் சுமத்தி அவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றார்.

நீதிபதி அந்த விவசாயியைப் பார்த்து நீங்கள் எந்த அளவுகோலில் தினமும் வெண்ணையை எடை போடுவீர்கள் என்று என்னிடம் காண்பியுங்கள்  என்றார்.

உடனே விவசாயி அய்யா என்னிடம் எடைக் கற்கள் கிடையாது, தராசு மட்டுமே உள்ளது, நான் நீண்ட நாட்களாக இவரின் கடையில் ஒரு பவுண்ட் இனிப்பு வாங்கும் பழக்கம் கொண்டுள்ளேன், நான் தினமும் அவரின் கடையிலிருந்து வாங்கி வரும் இனிப்பை வைத்து தான் வெண்ணையை அளப்பேன் என்றார்.

விவசாயில் பதிலைக் கேட்ட நீதிபதி அவரின்மேல் தவறு இல்லை என்று கூறி கடைக்காரருக்கு அறிவுரைக் கூறி விடுவித்தார்.

கதையின் மூலம்  கற்க வேண்டியவை...

நாம் எதை மற்றவர்க்கு தருகிறோமே அதனையே திரும்பப் பெறுவோம்.

நாம் நன்மை செய்தால் நிச்சயம் நமக்கு நன்மையே வந்து சேரும்.

நம்முடைய முழு உழைப்பையும் , திறமையையும் தொழிலில் செலுத்தினால் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை விரைவில் பெறுவோம்.

மாறாக நமக்கு தொழிற்சாலையில் சம்பளம் குறைவு என்று எண்ணி நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்தாள் நம்மை வேலையை விட்டு நீக்கும் நிலமை கூட ஏற்படலாம்.

கொடுப்பதையே திரும்பப் பெறுவோம் என்பதனால் நல்லதையே கொடுப்போம், நல்லதே பெறுவோம் நண்பர்களே...

உடனே நாம் இப்போது அணியும் பேண்ட், ஷர்ட், கோட் தமிழ் கலாச்சார உடையா என்று கேட்காதீர்கள் அதையும் நமக்கு அறிமுகப்படுத்தியது தொ(ல்)லைக்காட்சி தான்...


குறிஞ்சி மலர்....


எப்பொழுதாவது தோன்றும் நல்ல விசயத்துக்கு உவமையாக திகழ்கிற குறிஞ்சி மலர். (பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் தன்மையுடையது) அறிவியல் பெயர் Strobilanthes kunthianus அதிகம் காணப்படக் கூடிய இடம்: எரவிக்குளம் தேசிய பூங்கா-கேரளம், மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்.

அடையாளம்: குறிஞ்சி பூப்பு சுழற்சியை வைத்து தோடர்கள் தங்கள் வயதைக் கணக்கிடுகிறார்கள்.

இயற்கையின் எத்தனையோ அதிசயங்களில் ஒன்று குறிஞ்சி மலர். ஒரே நாளில் இரண்டு முறை பூக்கும் தாவரங்கள் ஒருபக்கம். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மறுபக்கம்.

குறிஞ்சி மலர்கள் மலைச் சரிவுகளில் பூத்துக் குலுங்கி மலைப் பகுதிகளுக்கு புதிய வண்ணங்களைத் தீட்டிவிடுகின்றன. நீலக்குறிஞ்சி என்றொரு வகை உண்டு. இந்த குறிஞ்சி மலர் பூத்துக் குலுங்கும் கண்கொள்ளாக் காட்சியால்தான், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் முக்கிய பகுதிக்கு நீலகிரி (நீலமலை) என்ற பெயர் உருவானது.

உலகம் முழுக்க ஸ்டிரோபிலாந்தஸ் தாவரப் பிரிவில் 200க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. அவற்றில் 150 வகைகள் இந்தியாவில் இருக்கின்றன.

பெரும்பாலானவை மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரிலேயே வளருகின்றன மலர்கள் பூத்துக் குலுங்கத் தொடங்கியவுடனேயே சொல்லி வைத்தது போல, அந்த மலர்களை தேனீக்கள் மொய்க்கத் தொடங்குகின்றன.

அவை கொண்டு வரும் பெருமளவு தேனை தோடர் பழங்குடிகள் சேகரிக்கின்றனர்...

பாஜக என்பது அரசியல் கட்சியல்ல.. அது பொறுக்கிகளின் கூடாரம்...


பாஜக என்பது பாலியல் ஜல்சா கட்சி...

தமிழர் சிற்பக்கலை...


சிற்பக்கலை பண்டைக்காலம் முதற்கொண்டே தமிழரால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.

சங்க காலத்தில் மண், மரம், தந்தம், கல் ஆகியவற்றில் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. மண்ணில் சிற்பங்கள் உருவாக்கியவர்கள் மண்ணீட்டாளர்கள் எனப்பட்டனர்.

அக்காலத்தில் இறந்த போர் வீரர்களுக்கு கற்களால் சிலை அமைக்கும் வழக்கமும் இருந்தது.

தமிழர் சிற்பக்கலையின் சிறப்பியல்புகள்.

மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் பின்வரும் கருத்தை தனது நூலில் தருகின்றார்.

நமது சிற்பங்கள் அயல்நாட்டுச் சிற்பங்களைப் போன்று, வெறும் அழகிய காட்சிப் பொருள்களாக மட்டும் இல்லாமல், காட்சிக்கும் அப்பால் சென்று கருத்துக்களையும் உணர்சிகளையும் ஊட்டுகின்றன.

மேலும் வை. கணபதி அவர்களின் பின்வரும் குறிப்பையும் தருகின்றார்.

நம் நாட்டுச் சிற்பக்கலை மரபின் சிறப்பியல்புகளில் ஒன்று ஆடற்கலையின் இலக்கணங்களையும் இக்கலையில் புகுத்தியதாகும்...