டேய் யார்ரா அது இந்த பொண்ணு இங்லீஸ்ல கேள்வி கேட்டுட்டே இருக்கு பாத்துட்டே இருக்கீங்க... விரட்டி விடுங்கப்பா.. 😌😌
31/01/2021
குங்குமம் வைப்பது எதற்காக....?
சுமங்கலிப்பெண்களின் தலை உச்சியின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள்..
அம்பிகையின் உச்சியில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.
சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது..
வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்..
குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்..
பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்..
அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும்..
திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது..
தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்..
திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் உச்சியின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.
ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்..
கட்டை விரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.
குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித் தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.
சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும்.
குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது...
மூட்டு வலி முழுமையான நிவாரணம் வேண்டுமா ?
இதை முயற்சி செய்து பாருங்கள்...
முடக்கொத்தான் இலை ஒரு கைப்பிடி
கொத்தமல்லி 50 கிராம்
கருஞ்சீரகம் 30கிராம்
சுக்கு 10கிராம்
சித்தரத்தை 10கிராம்
மிளகு 10 கிராம்
கொடம்புளி இரண்டு துண்டுகள்
பெருங்காயம் சிறிதளவு
பூனைக்காலி விதை பத்து
எல்லாவற்றையும் நன்றாக தட்டி ஒரு பானையிலிட்டு 8 டம்லர் நீர்விட்டு பாதியாக வற்ற வைத்து..
காலை மாலை விதம் ஒரு டம்ளர் சாப்பிட்டுவர இளந்த சக்திகள திரும்ப பெற்று கை கால் அசதி, மூட்டுவலி, உடல் பலவினம், பாலியல் பலவினம், உடல்நடுக்கம் போன்றைவை குணமாகி வலிமையும் இளமையும் உண்டாகும்....
இந்த பொருள்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்...
டால்ஃபின் ஓர் உலக அதிசயம்...
அதற்கென்று மொழி உண்டு அவை தங்களுக்கள் பேசி கொள்கின்றன என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறாகள்.
அதற்கென்று இசையும் உண்டு.
டால்ஃபின்கள் பாடும் இவை தவிர புத்திசாலிதனம், சமூக உணர்வு, உதவும் தன்மை இரக்கம் என்று பலவித உணர்வுகள் கொண்டது டால்ஃபின்..
டால்ஃபின் மனிதனைவிட வலது மூளையை (Right hemisphere) உபயோகிக்கிறதென்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
கடலில் மூழ்கித்தத்தளிக்கும் மனிதர்களை டால்ஃபின்கள் தங்கள் முதுகில் சுமந்து கரை சேர்த்திருக்கின்றன.
டால்பின்கள் சொல்லி வைத்தாற்போல் ஒரே சமயத்தில் தண்ணீருக்கு வெளியே பாய்ந்து டைவ் அடிப்பதை நாம் பார்த்திருக்கிறோம், அதை விட ஆச்சரியம் சில நோய்களை டால்ஃபின்கள் குணப்படுத்துவதாக டாக்டர்கள் சொல்கிறார்கள்.
மனநிலை பாதிக்கப்பட்ட சில குழந்தைகள் தொடர்ந்து சில நாள்கள் டால்ஃபின்களோடு விளையாடிய பிறகு முழுமையாக குணமடைந்தார்கள்.
பார்வையிழந்த ஒரு பெண், டால்ஃபினகளை ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானி ஒருவரை மணந்து கொண்டார் கணவரின் வீட்டு தோட்டத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நிறைய டால்ஃபின்கள் உண்டு. ஒரு முறை நீச்சலடிக்க குளத்துக்குள் மெல்ல இறங்கிய அந்த பெண்ணுக்கு ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது.
டால்ஃபின்கள் ஏதேதோ தன்னிடம் பேச முயற்சிப்பது போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது சில நாள்களில், டால்ஃபின்கள் தண்ணீருக்குள் அவருக்கு வழிகாட்ட ஆரம்பித்தன.
டெலிபதி மூலம் தண்ணீரில் பந்து எங்கேயிருக்கிறது என்பதைக்கூட அந்த பெண்ணால் கண்டு பிடிக்க முடிந்தது.
ஒருநாள் பார்வையிழந்த அந்த பெண்ணுக்கு டால்பின்கள் விதவிதமான வண்ணங்களை மாற்றி மாற்றிக் காட்டின மனக்கண்முன்.
டாக்டர் ஜான் லில்லி என்கிற டால்ஃபின் ஆராய்ச்சியாளர் நெத்தியடியாக ஒரு கருத்தை சொல்கிறார் நாம் வேற்றுக் கிரகங்களில் (நம்மை விட புத்திசாலியான) மனிதர்கள் (aliens) இருக்கிறார்களா என்று தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறோம். ஆனால் நமக்கு அருகிலேயே உள்ள மீன் உருவம் கொண்ட ஏலியன்ஸ் தான் டால்ஃபின்கள்...
மெட்டி அணிவது ஏன்..?
மெட்டி அணிவது ஏன் என்று தெரியாமல் வெறும் சம்பிரதாயமாகவே அதனை பார்க்கின்றோம்.
ஆனால் அதற்கு பின்னால் தமிழனின் அறிவியல் ஒளிந்திருக்கிறது...
திருமணமான இந்து பெண்கள் கால்களில் மெட்டி அணிவார்கள்.
மெட்டி அணிவது திருமணம் ஆனதற்கு அடையாளம் மட்டுமல்ல, அது அறிவியலும் கூட. பெண்கள் இரு கால்களிலும் மெட்டி அணிவதால், அவர்களின் மாதவிடாய் சுழற்சி சீரான முறையில் செயல்படும் என்று இந்திய வேதங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மெட்டி அணிவது திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் நல்ல நோக்கத்தை அளிக்கிறது.
அது மட்டுமல்லாமல், பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலான நடு விரலில் ஓடும் நரம்பானது பெண்களின் கருப்பையுடன் இணைந்து இதயம் வழியாக செல்கிறது என்று கூறப்படுகிறது.
ஆகவே பெண்கள் மெட்டியை பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலில் அணிவதன் மூலம் கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும், கர்ப்பப்பையில் இரத்த ஓட்டம் சீராகவும் பாதுகாக்கப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் பெண்கள் கர்ப்பம் அடைந்து இருக்கும் போது மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். தற்பொழுது மயக்கம் ஏற்பட்டால் உடனே பெண்களை படுக்க வைத்து அவரின் கால் விரல்களை இறுக்கி பிடித்து கொண்டு உள்ளங்காலை தேய்ப்பார்கள்.
ஏனெனில் கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும் மயக்கம் சோர்வு போகும்.
இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள்.
காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோ, சோர்வு, மயக்கம் போன்றவற்றை குறைக்கிறது.
கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்..
அதுமட்டுமா? வெள்ளி ஒரு நல்ல கடத்தி (Good Conductor) என்பதால், பூமியின் துருவத்தில் இருந்து நிறைய ஆற்றலை உள்வாங்கி, உடல் முழுவதும் புத்துணர்ச்சியைப் பரவ செய்கிறது.
இதனாலயே வெள்ளியில் மெட்டி அணியப்படுகிறது...
கறிவேப்பிலை இலைகளுடன் ஒரு பேரீச்சம் பழத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால்...
தினமும் காலை நேரத்தில் கறிவேப்பிலை இலைகளுடன் ஒரு பேரிச்சம் பழத்தை பச்சையாக சாப்பிட்டு வந்தால் ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து இரத்த ஓட்டம் சீராகும்..
ரத்த சோகை நோயும் முற்றிலும் குணமடையும் என்கிறார்கள் மருத்துவர்கள்..
உங்கள் மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனை பெற்று உட் கொள்ளவும்...
பிரம்மத்தை நோக்கி - 1...
இந்த பிரபஞ்சம் இருவேறு பண்புகளை கொண்டது. ஒன்று அலைப்பண்பு மற்றொன்று துகள் பண்பு.
ஒளியின் வேகத்திற்கு உட்பட்டவை அனைத்தும் துகள் பண்புகளையும், உட்படாதவை அலைப் பண்புகளையும் கொண்டுள்ளது.
எதையும் சாராத ஒரு தனிமுதற் பொருள் உண்டென்றால் அது ஒளி(கடவுள்) மட்டுமே. இது சார்பியல் விதிகளுக்கு அப்பாற்பட்டது.
பிரபஞ்சம் காலத்திற்குள் இல்லை. காலம்தான் பிரபஞ்சத்திற்குள் உள்ளது. உண்மையில் காலம் என்ற ஒன்றே இல்லை.
உங்களால் ஒளி வேகத்தில் பயணிக்க முடிந்தால் அங்கே காலம் இருக்காது உறைந்து போகும்.
ஒருசெல் உயிரியாக இருந்தபோது இயற்கை அதற்கு அளித்த பாடம் தகுதி உள்ளது தப்பி பிழைக்கும், தகுதியற்றது அழிந்துவிடும்.
எனவே ஒருசெல் உயிரி உணர்ந்தது இந்த மழை வெப்பம் குளிர் புயல் போன்ற கடினமான சூழலில் தனித்து உயிர்வாழ முடியாது என்பதே.
எனவே படிப்படியாக பரிணாமம் அடைந்து தொகுப்பாக பிணைந்து கூட்டு உயிரிகளாக சேர்ந்து வாழ ஆரம்பித்தது. ஒவ்வொரு உயிரிக்கும் தனித்தனி தேவைகள் இருந்தது.
அவற்றை பெற்றுக்கொள்ள அவைகளில் இருந்து எண்ணங்கள் தோன்றியது. அந்த எண்ணங்களின் தொகுப்பான மனம் அவற்றை பாதுகாப்பதோடு அவைகளின் தேவைகளையும் பூர்த்தி செய்யவல்லது.
பல கோடி உயிரிகள் சேர்ந்து தொகுப்பாக வாழ்ந்து தத்தம் தேவைகளை மனதின் மூலம் பெற்றுக் கொண்டு வருகிறது.
கடைசியாக பெரிய அளவில் பரிணாமம் அடைந்து அவை சுமார் 75 லட்சம் கோடி உயிரிகளின் தொகுப்புகளாக கூடி வாழ்கிறது.
அவைகளை பாதுகாக்கவும் அவற்றின் தேவைகளை பூர்த்தி செய்யவும் மனம் 24/7 மணி நேரமும் அயராது உழைக்கிறது.
ஆனால் அனைத்து உயிரிகளின் நோக்கமும் அவற்றின் பயணமும் சமநிலையை பெறுவதே, அதாவது பிரம்மத்தை அடைவதே.
இந்த 75 லட்சம் கோடி உயிரிகளின் தொகுப்பு வேறெதும் இல்லை, அதுதான் மனிதன். பிரம்மத்தை நோக்கிய பயணம் தொடரும்.....
மோதிர விரல் பற்றிய சுவாரசிய தகவல்...
விரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம், இருதய நோய், வயிற்றுக் கோளாறுகள் போன்ற வியாதிகளை நீக்குகிறது.
சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூடாது. இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும்..
மேலும் நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா?
அதாவது ஆள்காட்டி விரல் உங்களின் சகோதரங்களை குறிக்கிறது..
நடு விரல் உங்களை குறிக்கிறது..
மோதிர விரல் உங்களின் வாழ்க்கை துணையை குறிக்கிறது..
சிறிய விரல் உங்களின் பிள்ளைகளை குறிக்கிறது..
பெருவிரல் உங்களின் பெற்ரோளைர குறிக்கிறது..
உங்களின் இரு உள்ளங்கைகளையும் நேருக்கு நேராக இருக்க செய்யுங்கள், நடு விரலை மடித்து ஒட்ட வையுங்கள், மற்றைய விரல்களை நிமிர்த்தி ஒட்ட வையுங்கள்..
பெருவிரலை பிரித்துப் பாருங்கள், பிரிக்க முடியும், அதாவது உங்களின் பெற்ரோர் உங்களுடன் எப்போதும் இருக்க மாட்டார்கள்..
பெருவிரலை பழையப்படி ஒட்டி வைத்து சுட்டு விரலை பிரித்துப் பாருங்கள், பிரிக்க முடியும், அதாவது உங்களின் சகோதரங்கள் உங்களுடன் எப்போதும் இருக்க மாட்டார்கள்..
இதுபோல் உங்களின் சிறிய விரலை பிரித்துப் பாருங்கள், பிரிக்க முடியும், அதாவது உங்களின் பிள்ளைகள் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்..
ஆனால் உங்களின் மோதிர விரலை பிரித்துப் பாருங்கள், பிரிப்பது மிகவும் சிரமமாக இருக்கும், அதாவது கணவன் மனைவி எப்போதும் ஒன்றாக பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்க்காகவே திருமண சடங்ககுளில் மோதிரம் அணிகிறோம்...
மனம் 2...
மனிதன் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று நாம் பல வெற்றியாளர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம், படித்திருப்போம்.
ஆனாலும் நம் மனம் பல நேரங்களில் இதை ஏற்றுக்க கொள்வதில்லை , வாழ்க்கையில் இதைப் பயன்படுத்துவது இல்லை, நாம் அதை ஏற்றுக் கொண்டாலும் நம்முடன் இருக்கும் சிலர் அல்லது நமது சமூகம் நம்மை எதிர்மறையாக பேசி நம்முடைய நம்பிக்கையைக் குறைத்து விடுகின்றனர்.
இப்படிப் பட்ட சூழ்நிலையில் இருப்பவர்களுக்காக மனதை எவ்வாறு பயன்படுத்தி வெற்றி காண்பது, எதிர்மயையாக பேசுபவர்களை எவ்வாறு சமாளிப்பது , வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் மனதை எவ்வாறு பயன்படுத்தி வெற்றி கொண்டனர் என்பதை வரும் பதிவுகளில் காண்போம்..
உங்களால் முடியும் உங்களால் முடியாது என்று நீங்கள் எதை எண்ணினாலும் இரண்டும் சரிதான். இது ஹென்றி போர்ட் அவர்களின் அனுபவ வார்த்தைகள்...
30/01/2021
மனம்...
நமது வாழ்கையின் வெற்றியை, சந்தோஷத்தை நமது மனம் தான் தீர்மானிகிறது என்று முந்தய பதிவில் பார்த்தோம்..
மனதிற்கு பிடித்த செயலை நாம் செய்வதினாலேயே நாம் வெற்றி அடைய முடியும்,இந்தக் கருத்தை மையமாகக் கொண்டுதான் 3 iidots என்ற ஒரு படம் சில ஆண்டுகளுக்குமுன் வெளிவந்தது.
அந்தப் படத்தில் நீங்கள் வெற்றி அடைய வேண்டும் என்று எண்ணி வெற்றியை துரத்திச் சென்றால் உங்களுக்கு விரக்திதான் மிஞ்சும் மாறாக உங்களின் விருப்பத்தில் முழு கவனம் செலுத்தி வேலை செய்தால் வெற்றியானது உங்களின் பின்னால் ஓடி வரும் என்பதே அந்த படத்தின் கருத்து ஆகும்.
உங்களின் விருப்பத்தை எவ்வாறு தேர்வு செய்வது ?
விரும்பிய பணியை செய்தால்தான் வெற்றி கிடைக்கும் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்,ஆனால் நான் நம்முடைய மனம் விரும்பும் பணி,செயல் எது என்று எப்படி கண்டுபிடிப்பது என்று உங்களில் சிலருக்கு குழப்பமாக இருக்கலாம்.
எந்த செயலை நீங்கள் செய்யும்போது உங்களுக்கு சலிப்பு ஏற்படுவதில்லையோ, எந்த செயலை நீங்கள் செய்யும்போது நீங்கள் உங்களையே மறந்தும் வேலை செய்கிறீர்களோ , எந்த செயலை நீங்கள் செய்யும்போது உங்களுக்கு நேரம் செல்வதே தெரிவதில்லையோ, எந்த செயலை உங்களுக்கு கொடுத்தால் ஒரு நாளில் அதிகநேரம் சந்தோஷமான மனநிலையில் செய்வீர்களோ அதுவே உங்கள் மனம் விரும்பிய செயலாக இருக்கும் நண்பர்களே.
நீங்கள் இதனை நம்பவில்லை என்றால் வாழ்கையில் வெற்றியாளராக இருக்கும் சிலரின் வாழ்கையை படித்துப் பாருங்கள்.
சச்சின் டெண்டுல்கர் பல ஆண்டுகளாக தனது கிரிக்கெட் விளையாட்டை காதலித்து விளயாடியதாலும், ஏ.ஆர்.ரஹ்மான் பல மணிநேரமாக இசையில் மூழ்கி தன்னுடைய விருப்பமான துறையில் பணியாற்றியதாலும், ரஜினிகாந்த் , கமலஹாசன் போன்ற சிறந்த நடிகர்கள் பல காலமாக தங்களுடைய நடிப்புத் துறையில் முழு ஈடுப்படுடன் இருப்பதனால் தான் அவர்களால் இப்படி வாழ்க்கையில் உயர்ந்த இடத்தில் இருக்கின்றனர்.
உதாரணமாக நீங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை எடுத்துக் கொண்டால் அவர் சூப்பர் ஸ்டார் ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த திரை உலகிற்கு வரவில்லை , அவருடைய எண்ணமெல்லாம் நடிப்புத்துறையில் இருக்க வேண்டும் எந்த விதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் முழு ஈடுபாட்டுடன் நடிக்க வேண்டும் என்பதாகவே இருந்தது, அதனால் தான் அவர் ஆரம்ப காலங்களில் துணை நடிகராகவும், வில்லனாகவும் இருந்திருந்தாலும் அவரின் விருப்பமான நடிப்பில் முழு ஈடுபாட்டுடன் இருந்ததால் பல வாய்புகள் தேடிவந்தன , வெற்றிகள் துரத்தி வந்தன, இன்று உலகின் மிக உச்ச நடிகர்களில் ஒருவகாகவும் இருக்கிறார்.
இப்பொழுது நாம் மனதின் விருப்பத்தை தெரிந்துகொண்டோம், வெற்றியாளர் ஆவதற்கு விருப்பம் மட்டும் போதுமா ? மனதின் விருப்பத்துடன் பலர் பணிபுரிந்தும் அனைவராலும் வெற்றியாளர் ஆகமுடிவதில்லையே ஏன்?
சரியான இலக்குகளை நிர்ணயிக்காமல் பயணிப்பதலேயே பலராரும் வெற்றி பெற முடிவதில்லை...
பல காடுகளை உருவாக்கும் தனி ஒருவன் யானைகள்...
காடுகளின் காவலன் யானைகள்...
காட்டில், யானைகள் விதைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பரப்புகிறது. இதன்மூலம் மரங்கள், செடி, கொடிகள் அதிக அளவு வளர்ந்து, சோலைக் காடுகள் உருவாகக் காரணமாகிறது.
காட்டில் பல்லுயிரினப் பெருக்கத்துக்கும் யானை வழிவகுக்கிறது. யானைகள் பல கி.மீ. தூரம் காட்டில் நடந்து செல்வதால், புதிய வழிப்பாதைகள் காட்டில் உருவாகின்றன.
தும்பிக்கையே யானையின் பலம். தும்பிக்கை மூலமே யானை சுவாசிக்கிறது. தண்ணீரையும், உணவையும் அதன் மூலம்தான் சாப்பிடுகிறது. தும்பிக்கையாலேயே அதிக எடை கொண்ட பொருளை யானையால் எளிதாகத் தூக்க முடியும்.
யானை தும்பிக்கை மூலம் பூமிக்கடியில் இருக்கும் ஊற்றுத் தண்ணீரை எளிதில் கண்டுபிடிக்கும்.
யானை மண்ணை கிளறி கண்டுபிடிக்கும் ஊற்று தண்ணீரால் மற்ற விலங்குகளும் பயன் பெறுகின்றன.
யானைகளின் வாழ்விடங்களில் ஏற்படும் நாகரிக வளர்ச்சிப் பணிகள், காடுகளில் வெட்டப்படும் மரங்கள், அதிகரிக்கும் குவாரிகள், வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பு மற்றும் தந்தத்துக்காக யானைகள் வேட்டையாடப்படுதல் ஆகியவை யானைகள் அழிவுக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.
மழை வளம் பெற, காடுகளை பெருக்க, நம் வாழ்க்கை வளம்பட யானைகளை பாதுகாப்பது நம் கடமையாகும்...
இந்துக்களே சிந்திப்பீர் - பாஜக எச்.ராசா.
அப்பாவி தொண்டண் அடி வாங்கி சாகணும்.
நீங்க மகள் கல்யாணம், தன்னோட அறுபதாம் கல்யாணம், எல்லாத்துக்கும் கள்ளக் கூட்டணி வைத்து அழைச்சி விருந்து வைக்கணும்.
ஆ.ராசாவை உள்ள வைப்போம்னு மைக்கை பார்தவுடனே பரத நாட்டியம் ஆடி டிராமா பண்ணி...
அப்பாவிகளை உசுப்பேத்துறது...
சிறப்புப் பஞ்ச கற்பம்...
பஞ்ச கற்பத்தைப் பற்றி பல வைத்தியர்கள் அளவு முறையில் மாற்றி பயன் படுத்தி வந்தாலும் சிததர்கள் அனைவரும் கடுக்காத்தோல், விதை நீக்கிய நெல்லி வத்தல், வெண்மிளகு, கஸ்தூரி மஞ்சள், வேப்பம் பருப்பு..
ஆகியவற்றை சம அளவாகப் பயன்படுத்தச் சொல்லி இருக்கின்றனர்.
அதிலும் போகமாமுனிவர் எழுதிய போகர் 7000, என்ற நூலில் பஞ்சகல்பத்தை இரவில் கரிசலாங்கண்ணிச் சாற்றில் ஊற வைத்து மறுநாள் காவையில் பசுவின் பால் விட்டரைத்து தேய்த்து வெந்நீரில் குளிக்கும் படி சொல்லி இருக்கிறார்.
இம்முறையில் 15 நாட்களுக்கொருமுறை குளித்து வரச் சொல்லியிருந்தாலும்.
நோய்களுக்குத் தக்கவாறு தோல்சம்பந்தப் பட்ட நோயாளிக்கு வாரத்தில் இரண்டு நாட்களும் எயிட்ஸ் நோயாளிக்கு தொடர்ந்து 48, நாட்களும் நோயில்லா மற்றவர்களுக்கு 15, நாட்களுக்கொருமுறையும் கொடுத்து வருகிறோம்.
இவ்வாறு தயாரித்து பயன்படுத்தும் பஞ்ச கல்பத்தினால் கபாலம் கெட்டியாகும்.
உரோமம் தும்பி போல் கருப்பாக வளரும் மழையில் நனைந்தாலும் குளிராது கண்பார்வை அதிகரிக்கும் உடம்பில் நச்சு நீர் வெளியேறும். ஞாபகசக்தி அதிகரிக்கும்.
நீண்ட நாட்கள் தலைவலி நீங்கிவிடும்.
சிறு வயதில் இருந்தே 15 நாட்களுக்கொரு முறை பயன்படுத்தி வந்தால் அவர்களக்கு 4448 வகையான நோய்கள் மற்றும் நரை திரை வராது என்றும் சித்தர்கள் நூல்களில் கூறப்பட்டுள்ளது.
பாரம்பரிய வைத்தியங்களை கடைப்பிடித்து நோயின்றி வாழ்வோம்...
இந்தியா விற்கும் ஆரியனுக்கும் சம்பந்தமே இல்லை...
டி என் ஏ பரிசோதனை செய்தீர்களா என்று அடிக்கடி கேள்வி கேப்பீங்களே...?
இதோ டி என் ஏ பரிசோதனை செய்தே நிரூபிச்சுட்டானுங்க ஆரியர்கள் வந்தேறிகள் என்று...
http://www.thehindu.com/sci-tech/science/how-genetics-is-settling-the-aryan-migration-debate/article19090301.ece
தேக்கு இலையின் மகத்துவங்கள்...
வாழை இலையைப்போலவே தேக்கு இலைகளில் நாம் உணவருந்தலாம்.
ஏனெனில் அந்த இலையானது, 30 முதல் 60 CM நீளம் மற்றும் 15 முதல் 30 CM அகலம் கொண்டது.
தேக்கு மரத்தின் இலை, பூ, காய், மரபட்டை இவை அனைத்தும் மருந்துக்காக பயன்படக் கூடியதாகும்.
மருத்துவ பயன்கள்...
தேக்கு மரத்தின் இலைகளால் செய்யப்பட்ட தேநீரை குடிப்பதன் மூலம் ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை உண்டாகிறது.
இதில் காணப்படும் துவர்ப்பு சுவை ரத்தத்தை உறைய வைக்குத் தன்மை கொண்டதாக விளங்குகிறது.
மூக்கில் வடியும் ரத்தம், மூலத்தில் ஏற்படும் ரத்த கசிவை கட்டுப்படுத்துவதற்கும் இது சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.
தேக்கு மரத்தின் விதைகளை கொண்டு ஒரு சிறப்பான கூந்தல் தைலத்தை உருவாக்கலாம்.
இதற்கு தேவையான பொருட்கள் - தேக்கு மரத்தின் காய்ந்த காய்களை எடுத்து கொள்ள வேண்டும்.
அவற்றை நசுக்கி அதில் இருக்கும் விதைகளை நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
முடிந்தால் இந்த விதைகளை உடைத்தோ அல்லது முழுமையாகவோ பயன்படுத்தலாம்.
பின்னர் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதனுடன் ஒரு 10 அல்லது 15 விதைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்றாக காய்ச்சி எடுத்து கொள்ள வேண்டும்.
விதையின் நிறம் இந்த எண்ணெய்யுடன் சேர்ந்து ஒரு இளஞ்சிவப்பு நிறமாக மாறிவிடும்.
இதை பயன்படுத்துவதன் மூலம் தலையில் ஏற்படும் பொடுகு கட்டுப்படுத்துகிறது.
இந்த விதையை அன்றாடம் பயன்படுத்தும் போது முற்றிலுமாக பொடுகு, பேன் ஆகியவற்றின் தொல்லைகளில் இருந்து விடுதலை பெறலாம்.
மேலும் முடி கொட்டுதல், இள நரை போன்ற பிரச்னைகளுக்கும் இந்த தைலம் மிகச் சிறந்த ஒன்றாக வேலை செய்கிறது.
நுண் கிருமிகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகவும் இதன் விதைகள் பயன்படுகிறது.
சிறுநீரகப்பிரச்சனை, மார்புச்சளி, கல்லீரல் பிரச்சனை போன்றவற்றிற்கு தீர்வு தருகிறது.
ரத்த போக்கை கட்டுப்படுத்த மருந்து..
தேக்கு மரத்தின் இலையை பயன்படுத்தி ரத்த போக்கை கட்டுப்படுத்தக் கூடிய ஒரு மருந்தை நாம் தயார் செய்யலாம்.
இதற்கு தேவையான பொருட்கள் தேக்கு மரத்தின் துளிர் இலைகள், பட்டைகள், பனங்கற்கண்டு, காய்ச்சிய பால்.
தேக்கு மரத்தின் துளிர் இலைகளை சிறிய துண்டுகளாக நறுக்கி 4 அல்லது 5 இலைகள் சேர்க்க வேண்டும்.
சிறிதளவு தேக்கு மர பட்டைகளை சிறியதாக உடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் தேவையான அளவு பனங்கற்கண்டு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்.
இலைகள் நன்றாக வேகும் வரை இந்த கலவையை கொதிக்க விட வேண்டும்.
இந்த தேநீரை எடுத்து காய்ச்சிய பாலை சேர்த்து கொள்ள வேண்டும்.
இதை பருகி வருவதன் மூலம் ரத்த போக்கு கட்டுப்படுத்துகிறது...
வெற்றி என்றால் என்ன?
வெற்றி என்பதற்கு தனியாக எந்த ஒரு விளக்கமும் கூற முடியாது..
எளிமையான முறையில் சொல்வதென்றால் நாம் நினைத்தது நமக்கு கிடைத்து விட்டால் நாம் நினைத்த இலக்கை நாம் அடைந்துவிட்டால், நாம் இருந்த நிலையை விட ஒரு நிலை மேலே அடைந்துவிட்டால் அதனை வெற்றி என்று போற்றுகின்றோம்.
சிலருக்கு பணம் கிடைத்தால் வெற்றி , சிலருக்கு புகழ் கிடைத்தால் வெற்றி , சிலருக்கு சேவை செய்தலில் கிடைக்கும் மகிழ்ச்சியில் வெற்றி, பிடித்த பெண் அல்லது பிடித்த ஆண் துணையாக கிடைத்தால் வெற்றி..
இப்படி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வெற்றியின் இலக்கணம் வெவ்வேறாக இருக்கும்.
இப்படி வெற்றிக்கான இலக்கணம் ஒவ்வொருவருக்கும் மாறுபட காரணமாக இருப்பது நம்முடைய மனம் மட்டுமே...
குறிப்பாக வெற்றி என்பதை ஒரு வரியில் விள்ளக்க வேண்டுமேயனால்...
மகிழ்ச்சியாக வாழ்வதே வெற்றி ஆகும்...
ஆனால் ஒவ்வொருவருடைய மனமும் ஒரு குறிப்பிட்ட செயலை செய்வதாலோ அல்லது குறிப்பிட்ட அல்லது பிடித்த அந்த இலக்கை அடைந்தால் மட்டுமே வாழ்க்கையில் முழு மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
ஆகவே நீங்கள் வெற்றியாளர் ஆக வேண்டுமேயானால் உங்களின் மனதிற்கு பிடித்த அந்த செயல் என்னவென்று நீங்கள் அறிந்திருக்க வேண்டும்...
தமிழர் யார் என்பதற்கான வரையறை...
கேள்வி: செம்மண், உவர் மண், களி மண் உண்டு. மாறாக 'தமிழ் மண்' என்று எங்கும் இருந்தது இல்லையே...?
இதே போல தமிழர் தேசம் என்றோ, தமிழர் என்றோ யாரும் எங்கும் இருந்தது இல்லையே...?
அப்படி என்றால், தமிழ் தேசியம் பேசும் அமைப்புகள், எந்த அடிப்படையில் 'இன்னார் தான் தமிழர்' என்று வரையறை செய்கிறீர்கள்?
பதில்: தொழில் பிரிவுகளாகவே ஆதியில் சாதி என்கிற இனக் குழுக்கள் உருவாகின என்பதையும், இந்தியா முழுக்க முன்பு 'தமிழ்' என்ற மொழி தான் பேசப்பட்டது என்று அண்ணல் அம்பேத்கார் உள்ளிட்டோர் ஆய்ந்து அறிந்து கூறியதற்கு இணங்க, அப்படி தமிழ் கூறும் மக்கள் அன்று முதல் இன்று வரை பல்வேறு இனக்குழுக்களாகவே வரையறுக்கப்பட்டு உள்ளனர் என்பதும் உண்மை.
மாறாக மொழி மட்டுமோ, அல்லது பூகோள இடமோ ஒரு இனத்தை தீர்மானிக்காது.
இந்திய அரசியல் சட்டத்தில் ஒருவர் மதம் கூட மாற முடியும். ஆனால், சாதி விட்டு சாதி மாற முடியாது.
காரணம், பல ஆயிரம் வருடங்களாக இந்த இனக்குழு (என்கிற) சாதியானது, அத்துணை இறுக்கமான ஒரு இத்யாதி.
இவ்வாறு இனக்குழுக்களின் தொகுதியே ஒரு இனத்தை வரையறுக்கிறது.
இந்த அடிப்படையில் தமிழர் என்ற இனத்தை நான் இப்படி வரையறை செய்கிறேன்.
தாய் மொழியாக தமிழை கொண்ட, தமிழ் சாதியை சேர்ந்தவனே தமிழன் ஆவான்...
இப்படி துல்லியமாக வரையறுக்கா விட்டால், எதிர் காலத்தில் என்ன என்ன கேடுகள் விளையும் என்பதற்கு சமீபத்திய நிகழ்வு தான் கேரளாவில் இருந்து தமிழர்களை வெளியேற்ற நினைக்கும் அட்டப்பாடி பிரச்சனை..
குறிப்பு : இல்லாத இந்தியத்தை போலியாக உருவாக்க முடிந்தது என்றால்...
பல்லாயிரம் ஆண்டுகளாக வரலாறாக வாழும் தமிழினம் மீண்டும் தனக்கான தேசத்தை ஏன் உருவாக்க முடியாது.?
பங்காளி, அங்காளி என்றால் என்ன?
பங்காளிகள் - தந்தைவழி உறவினர்கள் ‘பங்காளி’ களாவும், தந்தைவழி பங்குடையவன் என்பதாலே ‘பங்காளி.
அது போல நமது தகப்பன் வழி சகோதர்களின் வாரிசுகளான பெரியப்பா மகன், சித்தப்பா மகன், ஒன்றுவிட்ட , இரண்டுவிட்ட என்பார்களே அவர்கள் பங்காளிகள் ஆகும்...
அங்காளி - தாயை ஆதியாக வைத்து விளைந்த சகோதரத்துவம் ‘தாயாதி’ என்றும் கூறப்பட்டது.
நமது தாய்வழி உறவினர்கள் சகோதிகளின் வாரிசுகளான அதாவது சின்னம்மா மகன் பெரியம்மா மகன்களே அங்காளிகள் ஆகும்...
கால் ஆணி மற்றும் பரு குணமாக...
மயில் துத்தம் 10 கிராம்
ஊமத்தை இலைச்சாறு 50 மில்லி
தேங்காய் எண்ணெய் 100 மில்லி
எடுத்து பக்குவமாக மணல் பருவத்தில் காய்ச்சி வடிகட்டி கண்ணாடிப் பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.
பயன்கள்...
கால் ஆணி உள்ளவர்களுக்கு கால் ஆணி உள்ள இடத்தில் புது பிளேடுனால் மேலாக அறுத்து இந்த தைலத்தை பஞ்சில் மூன்று சொட்டு விட்டுஅந்த இடத்தில் வைத்து பஞ்சு நகராமல் டேப்பினால் இரவில் ஒட்டி பகலில் எடுத்துவிட வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் செய்தால் போதும். கால் ஆணி குணமாகும்.
ஒரு சிலருக்கு கழுத்து, மார்பு, முகம் முதலிய இடங்களில் மரு தோன்றி அசிங்கமாக இருக்கும். அதற்கு அந்த இடத்தில் இரவில் ஒரு சொட்டு வைத்தால் போதும். ஒருசில நாட்களில் வலி இல்லாமல் உதிர்ந்து விடும்.
ஆறாத புண்களுக்கு...
சர்க்கரை வியாதி புண்ணுக்கு புங்க மரத்துப் பட்டையினால் கசாயம் வைத்து புண்ணை கழுவி நன்கு துடைத்துவிட்டு இந்த தைலத்தை பஞ்சில் போட்டு காற்றோட்டமாக பேண்டேஜ் துணியினால் கட்டி வர விரைவில் புண் ஆறும். புண் பக்கத்தில் ஈ வராது...
அழுமூஞ்சிப் பேய்...
பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகப் கருதப்படுகின்ற ஜப்பானிய சாமுராய் அயோமா.
ஆள் கொஞ்சம் சபலிஸ்ட்.. தன் வீட்டில் வேலை பார்த்த அழகு வேலைக்காரி ஒகிகு மேல் அவருக்கு ஆசை. ஜாடைமாடையாகச் சொல்லி பார்த்தார். அவள் கண்டு கொள்ளவில்லை. நேரடியாகவும் கேட்டு பார்த்தார். பயந்து மறுத்தாள்.
எனக்கு இணங்கினால் நீ என் ஆசை நாயகியாக காலமெல்லாம் சுகமாக வாழலாம் டார்லிங் என்று ஆசை காட்டியும் பார்த்தார். ஒகிகு மசியவில்லை.
ஒகிகு வீட்டில் இல்லாத சமயத்தில் சமையலறைக்குள் சென்றார் அயோமா. அங்கே விலையுயர்ந்த டச்சு தட்டுகள் பத்து இருந்தன. அவற்றை எடுத்து கொண்டு சென்று கிணற்றில் போட்டு விட்டார். ஒகிகு இரவில் அயோமாவுக்கு உணவு பரிமாறினாள். டச்சு தட்டு எங்கே அதில் உணவைக் கொண்டு வா என்றார். சமையலறைக்கு சென்ற ஒகிகு அதிர்ந்து நின்றால் படபடப்புடன் தட்டுகளைத் தேடினாள். கண்ணிருடன் அயோமா முன்வந்து நின்றாள். என் விருப்பத்துக்கு சம்மதம் சொன்னால் உன்னை மன்னிக்கிறேன் என்று ஒகிகுவே மிரட்ட ஆரம்பித்தார். அவள் உறுதியாக நின்றால். அயோமா அவளைக் கட்டி வைத்து துன்புறுத்திக் கொன்றார். அதே கிணற்றில் அவளது உடலையும் தூக்கி போட்டார்.
சில நாள்கள் கடந்திருக்கும். இரவில் அந்த கிணற்றில் இருந்து அகோரமான ஓசைகள் கேட்க ஆரம்பித்தன. ஒன்று இரண்டு மூன்று என்று தட்டுகளை எண்ணும் ஒகிகுவின் குரல் அயோமாவின் காதுகளில் விழந்தன. ஒன்பது வரை எண்ணிய அந்தக் குரல் அதன்பின் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தது. தினமும் நள்ளிரவில் ஒகிகுவின் இந்தக் குரலைக் கேட்டுக் கேட்டே பைத்தியமாகிப் போனார் அயோமா.
வேண்டுமானால் டோக்கிய நகரத்துக்கு செல்லுங்கள். அங்கே அயோமா டோரி என்ற பெயரில் ஒரு நெடுஞ்சாலை இருக்கிறது. அதில் பயணம் செய்து கொண்டே போனால் அகாசகா என்ற பகுதியை அடையலாம். அங்கே தான் ஜப்பானுக்கான கனடாவின் தூதரகம் இருக்கிறது. அதனுள் சென்றால், அந்த இடத்துக்கு சம்பந்தமே இல்லாதவாறு ஒரு பழங்கிணறு இருக்கும். ஒகிகு வாழும் கிணறு தான். முடிந்தால் நள்ளிரவு வரை காத்திருங்கள் ஒகிகு அழுதுகொண்டே ஒன்று இரண்டு.... எண்ணுவதற்காக வெளியே வரலாம்...