25/01/2018

சுவருடன் உரையாடு தியான யுக்தி....


உனது அறையில் உட்கார்ந்து கொண்டு தனிமையில் பேசு. நீ பேசுவதை கவனிக்க யாரும் அங்கிருக்க தேவையில்லை. உண்மையில் யார் கவனிக்கிறார்கள் ? நீ சுவருடன் பேசலாம், அது இன்னும் அதிக மனித்தன்மையுடையதாக இருக்கும். ஏனெனில் நீ யாருக்கும் எந்த பிரச்னையையும் உருவாக்கப் போவதில்லை. நீ யாரையும் கொடுமைப்படுத்துவதில்லை, நீ யாருக்கும் சலிப்பை ஏற்படுத்துவதில்லை.

ஆனால் அமுக்கி வைக்காதே. அடக்கி வைத்தல் உன்னுள் ஒரு சுமையை ஏற்படுத்தும். சுவரின் எதிரே உட்கார்ந்து நல்லதொரு உரையாடலை செய். ஆரம்பத்தில் அது சிறிதளவு பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும், ஆனால் அதை அதிக அளவு செய்ய செய்ய அதில் உள்ள அழகை உன்னால் பார்க்க இயலும். அதில் குறைந்த அளவு வன்முறையே உள்ளது. அது யாருடைய நேரத்தையும் வீணடிப்பதில்லை, ஆனால் அது அதே வழியில் அதே வேலையை செய்கிறது. நீ சுமை குறைந்ததை உணர்கிறாய்.

சுவருடன் நடக்கும் ஒரு நீண்ட பேச்சுக்குப் பின் நீ மிகமிக தளர்வாக உணர்கிறாய். உண்மையில் ஒவ்வொருவரும் அப்படி நடக்க விரும்புகின்றனர். மக்கள் சுவருடன் உரையாட ஆரம்பித்துவிட்டால் இந்த உலகமே இன்னும் சிறப்பானதாகவும் அதிக அமைதியானதாகவும் இருக்கும்.

முயற்சி செய்து பார். இது ஒரு ஆழமான தியானமாகும். சுவர் கவனிப்பதில்லை என்று மிகவும் நன்றாக தெரியும், ஆனால் அது ஒரு பொருட்டல்ல என்பதால் இது ஒரு நல்ல தியானமாகும்...

இந்தியாவின் மக்கள் தொகை கூட தெரியாத ஒரு பிரமதர் தான் இந்த பாஜக மோடி...


தரமான சம்பவம்.. செருப்படி கேள்வி...


பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா சாதனை...


180 நாடுகள் கொண்ட பசுமை நாடுகள் பட்டியலில் இந்தியா 177வது இடத்தை பிடித்தது. வனங்களை காப்பதிலும் காற்று மாசுபாட்டை கையாள்வதிலும் கடைசி ஐந்து இடங்களில் உள்ளது...

தமிழகத்தின் வற்றாத ஜீவநதியாக தாமிரபரணி இருக்கிறதென்றால், பொதிகை மலை உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் மிகச்சிறப்பாக பாதுகாக்கப்படுவதே காரணம்...


இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 23,000 ஹெக்டேர் பரப்பு கொண்ட, சிங்கம்பட்டி ஜமீன் காட்டை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிப்பதற்கு தமிழக வனத்துறை முயற்சித்தது.

ஆனால், அந்த முயற்சிக்கு 40 ஆண்டாகத் தடையாக இருந்தது ‘மாஞ்சோலை எஸ்டேட் டீ’ நிறுவனம். தற்போது அந்த நிறுவனத்தைச் சட்ட ரீதியாக வென்றிருக்கிறது வனத்துறை.

சிங்கம்பட்டி காட்டில் சுமார் 8,400 ஏக்கர் நிலத்தை 1929ம் ஆண்டு பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் (BBTC) நிறுவனத்திற்கு 99 வருடக் குத்தகைக்கு விட்டார் அப்போதைய சிங்கம்பட்டி ராஜா. எதற்காக அப்படி குத்தகைக்கு விட்டார் என்பது ஒரு சோகக்கதை. 1918ம் ஆண்டு அன்றைய சிங்கம்பட்டி ஜமீன் (இன்றைய ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் தந்தை), சென்னையில் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு கொலை வழக்கில் சிக்கினார்.

வழக்கிற்கு அதிகச் செலவானதால், அதைச் சமாளிப்பதற்காக சொத்து, பத்துக்களை விற்க ஆரம்பித்தது ஜமீன் குடும்பம். அதன் ஒரு பகுதியாக 23,000 ஹெக்டேர் பரப்பு கொண்ட ஜமீன் காட்டில், 8,400 ஏக்கர் காட்டு நிலத்தை 99 வருடக் குத்தகைக்கு விட்டார் ஜமீன்.

நிலத்தை குத்தகைக்கு எடுத்த அந்நிறுவனம் காட்டை அழித்து, தேயிலைத் தோட்டங்களை உருவாக்கியது.

தற்போது இந்த வழக்கில் வெற்றி பெற்றுள்ள தமிழக வனத்துறை, இந்த நிலத்தை எல்லாம் மீட்க அரசாணையும் (12.1.2018) பிறப்பித்துள்ளது.

இதற்காக உழைத்த ஓய்வுபெற்ற வன அதிகாரிகள் தொடங்கி, தற்போதைய அதிகாரிகள் வரையில் அனைத்து வனத்துறையினருக்கும் பாராட்டு குவிகின்றன...

தமிழக ஊடகங்கள் மக்களை எப்படி முட்டாளாக்கி கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம் தான்.. இந்த பாஜக ராம சுப்பு...


பஸ் கட்டண உயர்வை கண்டித்து போராடிய தங்கள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து மதுரை கல்லூரி மாணவர்கள் எழுச்சி போராட்டம்...


கல்லூரிக்கு வெளியே செல்ல கல்லூரி நிர்வாகம் அனுமதிக்காததால் கல்லூரி உள்ளிருந்தே ஏராளமான மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றது.

அந்த கல்லூரிக்கு நீதிபதி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்துள்ள நிலையில் ஏராளமான மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கல்லூரி கேட்டை சங்கிலி போட்டு கல்லுரி நிர்வாகம் பூட்டியுள்ளதால் மாணவர்களால் வெளியே வந்து மீடியாக்களுக்கு பேட்டி அளிக்க முடியாது நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடதக்கது...

தமிழகம் கலப்படத்தில் களவாடப்படுகிறது...


ஔவையாரின் ஆத்திசூடியை உலகறிய செய்வோம்...


1. விரும்பு / 1. Lea to love virtue.
2. ஆறுவது சினம் / 2. Control anger.
3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity.
4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy.
5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise leaing.
8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload.
9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் / 11. Disce the good and lea.
12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy.
13. அகம் சுருக்கேல் / 13. Don't shortchange.
14. கண்டொன்று சொல்லேல் / 14. Don't flip-flop.
15. ஙப் போல் வளை / 15. Bend to befriend.
16. சனி நீராடு / 16. Shower regularly.
17. ஞயம்பட உரை / 17. Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents.
21. நன்றி மறவேல் / 21. Don't forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் / 22. Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் / 23. Don't land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் / 25. Don't play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் / 27. Don't sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் / 28. Detest the disorderly.
29. இளமையில் கல் / 29. Lea when young.
30. அரனை மறவேல் / 30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is obnoxious.
32. கடிவது மற / 32. Constant anger is corrosive.
33. காப்பது விரதம் / 33. Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் / 34. Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று / 35. Distance from the wicked.
36. குணமது கைவிடேல் / 36. Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் / 37. Don't forsake friends.
38. கெடுப்பது ஒழி / 38. Abandon animosity.
39. கேள்வி முயல் / 39. Lea from the leaed.
40. கைவினை கரவேல் / 40. Don't hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் / 41. Don't swindle.
42. கோதாட்டு ஒழி / 42. Ban all illegal games.
43. கெளவை அகற்று / 43. Don't vilify.
44. சக்கர நெறி நில் / 44. Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு / 45. Associate with the noble.
46. சித்திரம் பேசேல் / 46. Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் / 47. Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் / 48. Don't hurt others feelings.
49. சூது விரும்பேல் / 49. Don't gamble.
50. செய்வன திருந்தச் செய் / 50. Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out good friends.
52. சையெனத் திரியேல் / 52. Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் / 53. Don't show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் / 54. Don't be a lazybones.
55. தக்கோன் எனத் திரி / 55. Be trustworthy.
56. தானமது விரும்பு / 56. Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve the protector.
58. தீவினை அகற்று / 58. Don't sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. Don't attract suffering.
60. தூக்கி வினை செய் / 60. Deliberate every action.
61. தெய்வம் இகழேல் / 61. Don't defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் / 63. Don't listen to the designing.
64. தொன்மை மறவேல் / 64. Don't forget your past glory.
65. தோற்பன தொடரேல் / 65. Don't compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி / 66. Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் / 67. Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் / 68. Don't depart from good standing.
69. நீர் விளையாடேல் / 69. Don't jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் / 70. Don't over snack.
71. நூல் பல கல் / 71. Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் / 72. Grow your own staple.
73. நேர்பட ஒழுகு / 73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் / 74. Don't involve in destruction.
75. நொய்ய உரையேல் / 75. Don't dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் / 77. Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் / 78. Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் / 79. Watch out for self incrimination.
80. பீடு பெற நில் / 80. Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81. Protect your benefactor.
82. பூமி திருத்தி உண் / 82. Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று / 84. Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் / 85. Don't comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் / 86. Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் / 87. Don't encourage war.
88. மனம் தடுமாறேல் / 88. Don't vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் / 89. Don't accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் / 90. Don't over dramatize.
91. மீதூண் விரும்பேல் / 91. Don't be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் / 92. Don't join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் / 93. Don't agree with the stubbo.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் / 96. Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி / 97. Speak with clarity.
98. மோகத்தை முனி / 98. Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் / 99. Don't self praise.
100. வாது முற்கூறேல் / 100. Don't gossip or spread rumor.
101. வித்தை விரும்பு / 101. Long to lea.
102. வீடு பெற நில் / 102. Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு / 103. Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் / 104. Live amicably.
105. வெட்டெனப் பேசேல் / 105. Don't be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல் / 106. Don't premeditate harm.
107. வைகறைத் துயில் எழு / 107. Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் / 108. Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் / 109. Be impartial in judgement...

தமிழகத்தில் தொடரும் காவல்துறை அராஜகம்...


சென்னை தரமணி சாலையில் சீட் பெல்ட் அணியாமல் காரை ஓட்டி வந்த ஓட்டுனரை.. போலீசார் தாக்கியதால்.. அவமானம் தாங்காமல் மனம் வெகுண்டு சாலையில் வைத்தே பொது மக்கள் முன்னால் தீக்குளித்து உள்ளார்...

தமிழக மக்களே.. முடிந்தளவு நடந்து செல்லுங்கள்.. அல்லது சைக்கிள் எனும் மிதி வண்டியில் செல்லுங்கள்...


எம்.எல்.ஏகளுக்கு ஜியோ சிம் நாங்களே வாங்கி தர்றோம்...7000ரூ போன் மானியம் எதற்கு?


கோவை: பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி சாலை மறியலில்  ஈடுபட்ட அரசு கலை கல்லூரி மாணவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

தமிழக அரசு வரலாறு காணாத அளவுக்கு பேருந்து கட்டணத்தை உயர்த்தியது. இதனைக்கண்டித்து  தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நூற்றுக்கும் மேற்பட்ட கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று (23-01-18) சாலை மறியலில் ஈடுபட்டதால்  போக்குவரத்து அப்பகுதியில் பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து மாணவர்களுக்கும், காவல் துறையினருக்கும்  இடையே தள்ளு முள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

பின்னர் காவல் துறையினர் மாணவர்களை சமாதானப்படுத்தியதை தொடர்ந்து,  கலைக்கல்லூரி முன் மாநில அரசுக்கு எதிராக பேருந்து கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

பேருந்து கட்டண உயர்வால் பணக்காரர்கள் யாரும் பாதிக்கப்படுவதில்லை எனவும், மாதம் 3000 சம்பாதிக்கும் நடுத்தர குடும்பத்தைச்சார்ந்தவர்கள்    தான் தினமும் 100 ரூபாய் வரை பேருந்துக்கே செலவு செய்ய வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டினர்.

மக்கள் இந்த பணத்தை கொடுத்து பயணிப்பார்கள் என்று அமைச்சர்கள் அதிலும் குறிப்பாக செல்லூர் ராஜு தெரிவிக்கிறார்.

நாங்கள் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எம்.எல்.ஏகளுக்கு ஜியோ சிம் வாங்கி தருகிறோம். எம்.எல்.ஏ களுக்கு போன் மானியமாக மாதம் கூடுதலாக 5000ரூ எதற்கு? என்றும் கேள்வி எழுப்பினர்,   

மேலும் அரசு இலவசம் கொடுப்பதற்கு பதிலாக வேலை கொடுத்தால் பிரச்சனை இருக்காது எனவும், ஸ்கூட்டி வேண்டாம் வேலை தான் வேண்டும் என வலியுறுத்தினர். 

கட்டண உயர்வால் நடுத்தர மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அரசு கலைக்கலூரியில் படிக்க முடியாத சூழல் தற்போது உருவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.

வேலைக்கு செல்லும் பெற்றோர்களும் தற்போதுள்ள பேருந்து கட்டண உயர்வால் வேலைக்கு செல்ல முடியாமல் திணறி வருவதாகவும் வருத்தம் தெரிவித்தனர்...

எடப்பாடி வீடு முற்றுகை.. அடி தூள்...


பஸ்கட்டண உயர்வு மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து 3 வது நாளாக போராட்டம்...

     
பஸ்கட்டண உயர்வை கண்டித்து 3 வது நாளாக தமிழகம் முழுவதும் மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரியும் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் மற்றும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து திருவள்ளூர், நாமக்கல், தஞ்சை, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்.

தஞ்சை கரந்தை உமாமகேஸ்வரனார் கல்லூரி மாணவ, மாணவிகள் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு மறியல் போராட்டம் நடத்தினர்.

போக்குவரத்து கட்டண உயர்வை கண்டித்து நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் அரசுப்பள்ளி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்.

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து பெரம்பலூர் அருகே எசனையில் பொதுமக்கள், மாணவர்கள் சாலை மறியல்  போராட்டம் நடத்தினர்.

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து பெரம்பலூர் அருகே குரும்பலூர் பாரதிதாசன் உறுப்புக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் இன்றும் நாளையும் வகுப்புகள் ரத்து செய்யப்படுகிறது என  கல்லூரி முதல்வர் மனோகரன் தகவல் தெரிவித்து உள்ளார்.

பழனி: அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 500 பேர் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து கல்லூரி முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி மாணவர்களின் போராட்டத்தால் கல்லூரிக்கு இன்று, நாளை விடுமுறை...

தமிழ் தாய் வாழ்த்துக்கு மரியாதை தராத விஜயேந்திரா மன்னிப்புக்கேள்...


சருமம் மினுமினுன்னு ஜொலிக்கணுமா?


கடுகு வெச்சு ஃபேஷியல் பண்ணுங்க...

முகத்தில் கரும்புள்ளிகள் அதிகம் இருந்து, முக அழகை கெடுக்கிறதா?

அதற்கு கவலைபட வேண்டாம். வீட்டில் சமையலில் பயன்படும் கடுகு, சருமத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது.

இந்த கடுகை வைத்து முகத்திற்கு ஸ்கரப் செய்தால், சருமம் நன்கு பொலிவோடு இருக்கும்.

இந்த பொருள் மிகவும் ஈஸியாக அனைத்து மளிகை கடைகளிலும் கிடைக்கக்கூடியது. இத்தகைய பொருளை சருமத்தை வைத்து பல முறைகளில் பராமரிக்கலாம்.

இப்போது அந்த கடுகை எவ்வாயெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா...

ஒரு டேபிள் ஸ்பூன் கடுகை எடுத்துக் கொண்டு, 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் அல்லது லாவண்டர் எண்ணெயை விட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை முகத்திற்கு தடவி, நன்கு மென்மையாக 3-4 நிமிடம் தேய்க்க வேண்டும். பின் அதனை கழுவிட வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சருமம் நன்கு பொலிவோடு காணப்படும்.

கடுகை வைத்து ஃபேஷியல் செய்வதில், மிகவும் சிறந்தது என்றால், அது இந்த முறை தான். இந்த முறையால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமத்தில் உள்ள இறந்த செல்களும் நீங்கிவிடும். இதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு, 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, சற்று நேரம் மசாஜ் போல் செய்ய வேண்டும். பின் அதனை குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும்.

கடுகு மற்றும் கற்றாழையை கலந்து செய்து வந்தால், சருமத்திற்கு தேவையான ஈரப்பசை கிடைப்பதோடு, முகத்தில் உள்ள பிம்பிள், சரும துளைகளில் உள்ள தூசிகள் போன்றவை போய்விடும். இந்த ஸ்கரப் செய்ய, 1 டேபிள் ஸ்பூன் கடுகு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் கலந்து, முகத்திற்கு ஸ்கரப் செய்ய வேண்டும். இது ஒரு மிகவும் சிறப்பான இயற்கை ஸ்கரப். இந்த முறையால், கடுகு நிச்சயம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கிவிடும்.

ஒரு டேபிள் ஸ்பூன் மில்க் கிரீம் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கடுகு சேர்த்து, முகத்திற்கு தடவி, 3-4 நிமிடம் தொடர்ந்து தேய்த்து, பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் பொலிவோடு காணப்படுவதோடு, ஸ்கரப்பிற்குப் பின் சருமத்தின் நிறம் சற்று கூடும்.

முகம் நன்கு மினுமினுப்போடு காணப்பட, ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு, 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து, நன்கு கலந்து, முகத்திற்கு தடவி, 2-3 நிமிடம் மென்மையாக தேய்த்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்...

தமிழினமே சிந்தித்துப் பார்...


நோக்குவர்மம்...


நோக்குவர்மம் அனைவருக்கும் சாத்தியமே...

இந்த பதிவை படிக்கும் முன் செய்ய வேண்டியவை.. முதலில் நீங்கள் தளர்வு நிலையில் இருக்க வேண்டும் மற்றும் உங்களுக்குள் இருக்கும் கருத்துகளை சிந்தித்து கொண்டு படிக்க வேண்டாம். திறந்த மன நிலையில் படியுங்கள்.

நோக்கு(நோக்கம்) + வர்மம்(கலை) நம் கண்ணால் பார்க்கும் அணைத்து உயிரையும் தன் வசபடுத்துதல் என்பது பொருள்.

இந்த பிரபஞ்சத்திலேயே மனித ஆற்றலுக்கு மேலே எந்த சக்தியும் இருந்தது இல்லை. இந்த பூமியின் உயிரினங்களினுடைய பரிணாம வளர்ச்சியில் உச்சநிலையே மனித உடம்பு தான்.

மனிதன் மிருகமாகவும் வாழலாம் தெய்வமாகவும் வாழலாம். அந்த தெய்வீக நிலையில் இருப்பவருக்கு நோக்குவர்மம் கை வந்த கலை.

நான் தலைப்பில் எழுதியதை போல நோக்குவர்மம் அனைவருக்கும் சாத்தியம். நோக்குவர்மம் கற்று வருவது கிடையாது. அது ஒரு நிலை அவ்வளவு தான்.

அந்த நிலையை அடைய முதலில் உங்களுக்கு தேவை தெளிவு.

தெளிவு என்று நான் குறிப்பிடுவது உங்கள் சுமையை இறக்கி வைக்க வேண்டும்.

சுமை என்றால் உங்கள் சிந்தனைகள் மற்றும் எண்ணங்கள். அதுதான் உங்கள் தெளிவை மறைத்து உங்களை ஏமாற்றிவிடும்.

இதுக்கு ஒரு குட்டி உதாரணம்...

உங்கள் அருகில் இப்போது இருக்கும் பொருளை கையில் எடுத்து ஒரு 15 நிமிடம் வைத்து பாருங்கள். உடனே உங்கள் கை மரத்து போய்விடும் பின் வலி தான் மிச்சம்.

இதே தான் உங்கள் எண்ணத்தில் ஓடும் நபரையோ இல்லை உங்கள் குடும்பத்தையோ எப்போதும் சுமந்து கொண்டு உங்கள் மூளையை மரத்து விட செய்கிறீர்கள்.

உங்களுக்கு நோக்கம் (இலக்கு) மட்டும் தான் இருக்க வேண்டும். இப்படி நோக்கம் மட்டுமே இருக்கும் போது வாழ்க்கை இனிப்பாக மாறும். அந்த தெளிவு உங்களை உண்மையின் அருகில் எடுத்து செல்லும்.

நீங்கள் தெளிவுடன் நடந்து செல்லும் போது உங்கள் முன் வரும் அனைத்தையும் நீங்கள் தெளிவுடன் பார்க்கும் போது வெற்றியின் வாசல் படியில் நீங்கள் கால் எடுத்து வைப்பீர்கள்.

அந்த நொடியில் தான் நோக்குவர்மம் விதை உங்களுக்குள் வந்து விழும்.

அந்த விதை விழுந்த உடன் நீங்கள் உடல் மனம் என்ற குறுகிய எல்லையை கடந்து உயிர் தான் நிரந்திரமானது என்ற உண்மையை உங்களுக்குள் நிலை நிறுத்துவீர்கள் (அனுபவபூர்வமாக).

பின் நீங்கள் பார்க்கும் அனைத்தும் உங்கள் கட்டு பாட்டுக்குள் வர தொடங்கும். உங்கள் சிந்தனைகள் எண்ணங்கள் சாயிந்து விடும். இப்போது இங்கே நோக்கம் மட்டும் தான்.

புத்தர் குள்ளும் இது தான் நிகழ்தது. அவர் நோக்கு வர்மத்தில் வல்லவர்.

உங்களுக்குள் விழுந்த அந்த விதை வளர தொடுங்கும் போது. நீங்கள் எந்த உயிர் முன் சென்றாலும் உங்கள் நோக்கம் அவருக்கு தெரிந்து விடும். அவர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அந்த செயலை செய்வார்.

நீங்கள் யாரை பார்த்தாலும் அனைவரும் உங்கள் கட்டுபாட்டுக்குள் வருவார்கள். அந்த தெளிவு உங்களை கூட்டிசெல்லும் இடமும் அப்படித்தான் இருக்கும். உங்கள் பேச்சு முற்றிலும் குறையும். புரியாத விஷயம் என்று எதுவுமே இருக்காது.

தியானம் தானாகவே உங்கள் அங்கமாகி விடும். நீங்கள் இந்த நிலையில் வாழும் போது உங்கள் முன் வரும் அணைத்து உயிரின் என்ன ஓட்டத்தை எளிதாக வாசிக்க முடியும்.

இப்போது நீங்கள் தெளிந்த நீரோடை போல மாறி விடுவீர்கள். உங்கள் கண்களில் அன்பும் அமைதியும் வேரூன்றி நிற்கும். எண்ணங்கள் காணமல் போய்விடும் நோக்கம் (இலக்கு) மட்டும் தான்...

காவல்துறை உறவுகள் பார்க்கும் வரை பகிருங்கள்...


குவைத்தில் 1000 சிறைக்கைதிகள் விரைவில் விடுதலை...


2018ம் ஆண்டு சுதந்திர தினத்து முன்னிட்டு 1000 சிறைக்கைதிகளை விடுவிக்க குவைத் அரசாங்கம் முடிவு செய்துள்ளது..
 
அதற்க்கான பட்டியலை தயார் செய்யும் பணியில் பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரிகள் மேற்க்கொண்டுள்ளனர்...

இயற்கையின் அருமையை உணர்ந்து கொள்ளுங்கள்...


தமிழகத்தில் மீண்டும் காவல்துறையின் அராஜகம் தொடங்கியது...


மதுரை மன்னர் கல்லூரி முன்பாக பேருந்து கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து மாணவர்கள் நடத்திய அமைதி போராட்டத்தில் காவல் துறையினர் வன்முறையில் ஈடுபட்டனர்....

தமிழா மீண்டும் போராடு... மாட்டிற்கு போராடிய நீ. மக்களுக்கும் போராடு....
மாணவரின் பலத்தை காண்பி...

பறையர், புலையர் பற்றி கன்னட ஈவேரா (முரசொலி படம்)...


ஈ.வே.ரா பற்றி பொய் பரப்புரை...

அவர் பறைச்சி ரவிக்கை போட்டதை கிண்டல் செய்யவில்லை.

புலையர் சமூக பெண்கள் ரவிக்கை போட்டதைத் தான் கிண்டல் செய்தார்.

பள்ளர்களும் பறையர்களும் படித்ததைத் தான் அவர் கிண்டல் செய்தார்.

ஆகவே பறையர்களை அவர் கிண்டல் செய்ததாக பொய்ப்பிரச்சாரம் செய்ய வேண்டாம்.

ஈ.வே.ரா வை பிரிந்து தனிக்குடித்தனம் போட்ட கருணாநிதி முரசொலியில் போட்ட தெளிவான படம்...

தொண்டைப் புண் ஆற...


தாளம் - லயம்...


தாளம் என்ற சொல்லிற்குத் தட்டிவருதல் அல்லது அடித்து வருதல் என்பது பொருள்.

இசை சம்பந்தமாகப் பேசும் போது அது ஒரே அளவாகத் தட்டி வருதலையே குறிக்கின்றது.

ஒரே அளவாகத் தாளத்தை தட்டி வரும் போது அதில் ஓர் இசையுணர்ச்சி உண்டாகின்றது.

இது ‘லய’ உணர்ச்சி எனப்பெறும்.

எப்படி ஏழிசை சுரங்களெல்லாம் ஆதார சுருதியிலே சேர்ந்தொலிக்கும் போது ஓர் உணர்ச்சி உண்டாகின்றதே, அதேபோல தாளத்தையும் ஓர் அளவாய்த் தட்டிப் போட்டு வரும் போது அதுமாதிரியான உணர்ச்சி உண்டாகின்றது.

லயம் என்ற சொல்லிற்கு ஒன்றுதல் என்பது பொருள்...

பாஜக மோடி கலாட்டா...


யாளி - சிறு குறிப்பு...


யாளி லெமூரிய நாகரீகத்தின் உண்மையான மிருகம் என்று நம்பப்படுகிறது.

யாளி என்பது இந்துக் கோயில்களில் காணப்படும் ஒரு கற்பனை உயிரினச் சிற்பமாகும். இது வியாழம், சரபம் எனும் பெயர்களாலும் அறியப்படுகிறது.

பொதுவாக இவை இந்துக் கோயில்களின் தூண்களில் செதுக்கப்பட்டிருக்கின்றன.

தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் சிங்கம் போன்ற ஓர் உயிரினமாகும்.

இது சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது.

பொதுவாக யாளியானது யானையைத் தாக்குவது போன்று சிற்பங்களில் சித்தரிக்கப் படுகிறது.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலும் வேறு சில முருகன் கோயில்களிலும் கடவுள்களின் (உற்சவர்) சிலைகள் உலா வரும் பொழுது யாளி போன்று வடிவமைக்கப்பட்ட வாகனங்களில் வருவது வழக்கம்.

யாளியின் பூர்விகம்...

யாளி என்கிற, சிங்கமுகத்தில் யானையின் துதிக்கையை நினைவுபடுத்தும் உறுப்புடன் காணப்படும் இந்த விலங்கு இந்தியாவில் கி.மு 25,000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வழக்கத்திற்கு வந்தது. தமிழ்நாட்டில் கோயில்கள் செங்கற்களிலிருந்து கருங்கற்களாக மாறத் தொடங்கியது கி.பி 800 -களில். பராந்தக சோழன் மற்றும் ஆதித்த சோழன் காலத்தில் முதன்முதலாகக் கோயில்கள் கருங்கற்கள் கொண்டு கலைநயத்துடன் கட்டப்பெற்றன. இதனைக் 'கற்றாளி' என்று வரலாற்றாளர்கள் குறிப்பிடுவார்கள். இதற்கு முன் இந்தியக் கோவில்களில் உள்ள சிற்பங்களில், எடுத்துக்காட்டாக மாமல்லபுரம், அஜந்தா, புத்தவிகாரங்கள் போன்றவற்றில் இந்தச் சிற்பத்தினைப் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்தியச் சிற்ப சாத்திரங்களிலும் இதைப் பற்றிக் குறிப்புகள் இல்லை.

யாளி வகைகள்...

யாளிகள் பொதுவாக சிங்கத்தின் உடல் அமைப்பை கொண்டுள்ளன. அவற்றின் தலை வேறு ஒரு மிருகத்தின் சாயலில் வடிவமைக்கபடுகின்றன. யானை, சிம்மம், மகரம் ( ஆடு ) , அரிதாக நாய், எலி போன்றவற்றின் தலைகள் யாளியிடம் காணலாம்.

பொதுவாக யாளியின் முக்கிய வகைகள்...

(௧) சிம்ம யாளி (௨) மகர யாளி (௩) யானை யாளி...

மானங்கெட்ட தினமணி பத்திரிகை...


பேருந்து கட்டண உயர்வு தமிழக அரசின் பகல் கொள்ளை...


தமிழக அரசே.. பேருந்து கழக நட்டத்திற்கு உனது நிர்வாக ஊழலே காரணம். நீ செய்த ஊழலுக்கு மக்கள் தலையில் கைவைக்காதே...

தொழிலாளர்களின் ஊதிய உயர்வை காரணம் காட்டி விலையேற்றம் செய்யாதே.

போக்குவரத்துக் கழகங்களை தனியாருக்கு மாற்றுவதற்கான முயற்சியே இந்த கட்டண உயர்வு.  ஏழை உழைக்கும் மக்களின் தினசரி வருமானத்தினை பறிக்காதே.

கட்டண உயர்வை திரும்பப் பெறு...