01/07/2020

தமிழ்நாட்டில் காவல்துறையின் நிலை இனி இப்படி தான்...



திண்டுக்கலில் நடை பெற்ற சம்பவம்.
போலீஸை நம்பி வரமுடியாது, அனுப்ப முடியாது...

இது தான் தமிழ்நாட்டின் சூழ்நிலை அனைவரும் வீடியோவை பாருங்கள்.

ஒன்றும் சொல்லுறதுக்கில்லை...

தமிழ்நாட்டில் நடந்துக் கொண்டிருக்கும் யதார்த்தமான உண்மை...


இயல்பாக நடந்த ஒரு விசயம் நடைமுறை சான்றாக, ஆய்வுக்குரியதாக அமைகிறது...


தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கொரானா பரவல் உள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் அதிகம். முழு லாக் டவுன் ஏற்படுத்தும் அளவு.

எல்லா அரசு துறைகளிலும் கடைநிலை முதல் உயர் அதிகாரிகள் வரை கொரானா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெறுகின்றனர்.

இதன் நடுவே,
தமிழ்நாடு அரசின் ஆணைப்படி,

ஏப்ரல் 30 அன்று திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் பணியாற்றும் அலுவலர்கள், ரேசன் கடை ஊழியர்கள் என 1200 பேருக்கு கபசுர குடிநீர்  வழங்கப்பட்டது. இது ஒரு நபர் 20 நாளுக்கு பயன்படுத்தலாம்.

திருவள்ளூர் மாவட்டம் உள்பட பல மாவட்டங்களில் கொரானா பரவல் அதிகமானாலும், பல்வேறு அரசு துறை ஊழியர்கள் கொரானா பாதிப்புக்குள்ளானாலும்,

ஒரு நாளைக்கு குறைந்தது 100 பேரை சந்திக்கும், நிவாரண தொகை, ரேசன் பொருள்களை வீட்டிலேயே போய் தரும் என கொரானாவை எதிர் கொண்டு  களப்பணியாற்றும்  திருவள்ளூர் மாவட்ட 1200 ஊழியர்களுக்கும் கொரானா பாதிப்பு இல்லை.

வேறு சில இடங்களில் கபசுர குடிநீர் குடித்தும் வருகிறது என வாதம் வைத்தால், கபசுர குடிநீரின் தரம், குடிக்கும் அளவு, விதமும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

கப சுர குடிநீர் கொரானாவிலிருந்து தற்காக்கிறது என்பதற்கான ஒரு வலிமையான  நடைமுறை சான்று இது. ஆர்வமுள்ளோர் மேற்கொண்டு அறிவியல் கள  ஆய்வுகளை நடத்தலாம்...

தூத்துக்குடி எஸ்.பி மீது ஏற்கனவே பாலியல் வழக்கு உள்ளது...


பாஜக மோடியின் ஏமாற்று வேலைகள்...



இதுவும் சீன ஆப் தானே? 

வெறும் பொழுதுபோக்கு ஆப் களுக்கு மட்டும் தடை போட்ட மாவீரன் இந்த பிசினஸ் ஆப்புக்கு என் தடை பண்ணலை?

இவன் PMCAREs நிதிக்கு கொடுத்த 100 கோடி ருபாய் நன்கொடைக்குரிய நன்றி உணர்வா?

கொரோனா வும் திருட்டு அரசியலும்...


இந்த covid lockout யை வைத்து the great reset என்று அறிவித்து உள்ள திட்டத்தின் கீழ் அதனை செய்து முடிக்க திட்டம் இட்டு உள்ளார்கள்...

அவர்களின் நோக்கங்களில் ஒன்று "global citizen" என்னும் உலக குடிமகனை இக்கல்வி திட்டத்தின் மூலம் உருவாக்குவது என்றும் அறிவித்து உள்ளார்கள்..

இக்கல்வி "உலக ஒழுங்கமைப்பு/சீர்திருத்தத்தை" நிறைய நாடுகளில் pilot test bed projects யை அவர்கள் நிதியளிக்கும் NGO கள் மூலம் ஏற்கனவே trial பார்த்தும் வருகிறார்கள்...

இங்கு நடக்கும் wholesale சிலபஸ் மாறுதல்களை இக்கண்ணோட்டதுடன் நோக்குங்கள்..

அமெரிக்காவின் common core திட்டம் கேட்ஸ் ஆதரித்து உள்ளார்..

இங்கு pratham foundation என்னும் NGO இந்த உலக குடிமகனை உருவாகும் கல்வியினை பெருமுதலாளியின் நிதி கொண்டு பெரும் அளவில் நிறைவேற்றியும் வருகிறார்கள்..

கல்வி முன்பை போன்று சர்வ நிச்சயமாக இருக்காது..

இந்த  பெருமுதலாளிகளின் education 4.0 திட்டத்தில் தேசம், தேசபக்தி பொது கலாச்சாரம், தேச சரித்திரம் பற்றினவைகள் எல்லாம் cultural bias யை நீக்குகிறோம் என்ற சாக்கில் தேச பாட திட்டத்தில் அழிக்க பட்டு விடும்..

உலக குடிமகன் உருவாகி ஒற்றை உலக அரசாங்கத்தை வரவேற்க தயாராக இருப்பான்...

பாஜக மோடியும் டெல்லி விஸ்டாவும்...


பாஜக மோடியின் இந்திய சீன எல்லையில் ஏமாற்று அரசியல்...


தொழில்துறை புரட்சி....


கொரோனாவுக்குப் பிறகு தயாராக இருங்கள் முழுக்க முழுக்க தொழில்துறை புரட்சி..

ஒவ்வொரு தொழில்துறை புரட்சியும் உலகமயமாக்கலின் அலைகளை உந்துகின்றன.

தொழில்துறை புரட்சியின் தரவு சார்ந்த தொழில்நுட்பங்கள் உலகப் பொருளாதாரத்தின் விதிகளை மீண்டும் எழுதுவதால், அதிலிருந்து விலகி வாழ பழகி கொள்ள வேண்டும்..

இந்த கார்ப்பரேட் உலகில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உங்கள் பிள்ளைக்கு கற்பிக்கவும்..

முக்கியமானது: உங்கள் சொந்த இடத்திற்குச் சென்று, உங்கள் சொந்த நிலையான பொருளாதார குடும்பத்தை உருவாக்கி, தேவையான உணவை நீங்களே உற்பத்தி செய்ய முயற்சி செய்யுங்கள்...

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு...



தந்தை மகன் இரட்டை படுகொலை சம்பவத்தில்...

முக்கிய குற்றவாளிகளான இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம்...

உடனிருந்து உதவிய காவல்நிலைய ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம்...

போலியாக முதல் தகவலறிக்கை தயாரித்த காவல்நிலைய எழுத்தர் பணியிடை நீக்கம்...

காவலர்களுக்கு உதவிய பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற பெயரில் பணிபுரிந்த ரவுடிகள் தலைமறைவு...

கொலைகளுக்கு ஊக்கமளித்த துணை கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்...

கொலைகளை பார்த்தும் பேசாமல் வேடிக்கை பார்த்த காவல்நிலைய ஊழியர்கள் கூண்டோடு மாற்றம்...

இவர்களின் செயல்களை தட்டிக் கேட்காமல் சுழல்விளக்கு வண்டியில் ஊர் சுற்றிக் கொண்டிருந்த மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்...

இந்த கொலைகளை மறைக்க துணைநின்ற டிஎஸ்பி பணியிடை நீக்கம்...

ஊடகங்களில் இது இயற்கை மரணம் என்று பொய் சொல்லி திசை திருப்ப பார்த்த எஸ்பி பணியிடை நீக்கம்...

இப்படியாக இரட்டை கொலைகளை வெளிப்படையாக செய்த இரண்டு கொலைகாரர்களை காப்பாற்ற ஒட்டு மொத்த காவல்துறையே துணை நிற்கின்றது என்றால்...

இவர்களா நம்ம ஊரின் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற போகின்றார்கள் என்ற கேள்வி எழுவது இயற்கையே...