01/07/2020

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு...



தந்தை மகன் இரட்டை படுகொலை சம்பவத்தில்...

முக்கிய குற்றவாளிகளான இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம்...

உடனிருந்து உதவிய காவல்நிலைய ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம்...

போலியாக முதல் தகவலறிக்கை தயாரித்த காவல்நிலைய எழுத்தர் பணியிடை நீக்கம்...

காவலர்களுக்கு உதவிய பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற பெயரில் பணிபுரிந்த ரவுடிகள் தலைமறைவு...

கொலைகளுக்கு ஊக்கமளித்த துணை கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்...

கொலைகளை பார்த்தும் பேசாமல் வேடிக்கை பார்த்த காவல்நிலைய ஊழியர்கள் கூண்டோடு மாற்றம்...

இவர்களின் செயல்களை தட்டிக் கேட்காமல் சுழல்விளக்கு வண்டியில் ஊர் சுற்றிக் கொண்டிருந்த மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்...

இந்த கொலைகளை மறைக்க துணைநின்ற டிஎஸ்பி பணியிடை நீக்கம்...

ஊடகங்களில் இது இயற்கை மரணம் என்று பொய் சொல்லி திசை திருப்ப பார்த்த எஸ்பி பணியிடை நீக்கம்...

இப்படியாக இரட்டை கொலைகளை வெளிப்படையாக செய்த இரண்டு கொலைகாரர்களை காப்பாற்ற ஒட்டு மொத்த காவல்துறையே துணை நிற்கின்றது என்றால்...

இவர்களா நம்ம ஊரின் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற போகின்றார்கள் என்ற கேள்வி எழுவது இயற்கையே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.