17/10/2018

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க மறுத்த போராட்டக்காரர்களை விரட்ட வன்முறை வெறியாட்டத்தில் போலீஸ்...


இந்த காவலரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் வேண்டும்...

பெருஞ்சீரக லெமன் டீ குடித்தால் இப்படி ஒரு விஷயம் நடக்கும்...


உடல் எடை குறைய, தேவையற்ற சதையைக் குறைக்க உதவும் பெருஞ்சீரக லெமன் டீ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்...

டீத்தூள் – 2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் (சோம்பு) – 2 டீஸ்பூன்
தேன் – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – அரை ஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு

செய்முறை...

இஞ்சியை தோல் சீவி ஒன்றும் பாதியாக தட்டி வைத்துக் கொள்ளவும்.

பெருஞ்சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.

ஒரு கப் தண்ணீரை அடுப்பில் வைத்து, டீத்தூளைப் போட்டு கொதிக்க விடவும்.

நன்றாக கொதிக்கும்போது, வறுத்த பெருஞ்சீரகம், இஞ்சியை போட்டு அதுவும் சேர்ந்து நன்கு கொதித்தபிறகு, இறக்கி வடிகட்டவும்.

வடிகட்டிய டீயில் தேன், எலுமிச்சை சாறு கலந்து பருகவும்.

பயன்கள்...

எடை குறைப்பதற்கு அருமையான பானம் இது.

மேலும், கை, கால்களில் காணப்படும் தேவையற்ற சதையைக் குறைக்கவும் இந்த டீ உதவும்.

தினமும் காலையில் இந்த டீயை குடித்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்...

வங்கிகளும் ஏமாற்று வேலைகளும்...


தமிழகத்திற்கு வேண்டாம் ஹைட்ரோ கார்பன் திட்டம்.. 10 காரணங்கள் - பாமக...


இந்தியாவின் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் வளங்களை எடுப்பதற்கான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 3 இடங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

இதன் மூலம் தமிழ்நாட்டின் விழுப்புரம், கடலூர், அரியலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டம் திணிக்கப்படலாம். இது மிக மிக ஆபத்தான திட்டம் ஆகும்.

தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சிகளை இந்திய அரசங்கம் நிரந்தரமாக கைவிட வேண்டும்.

தமிழ்நாட்டை நீரியல் விரிசல் முறை திட்டங்கள் இல்லாத பகுதியாக (Frack Free Tamil Nadu) அறிவிக்க வேண்டும்.

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

ஹைட்ரோகார்பன் திட்டம் என்றல் என்ன?

பெட்ரோல், டீசல், மீத்தேன் எரிவாயு உள்ளிட்ட அனைத்தும் ஹைட்ரோகார்பன் ஆகும்.

கச்சா எண்ணெய், எரிவாயு கிடைக்கும் இடங்களில் அவற்றை நேரடியாக குழாய்கள் மூலம் எடுப்பார்கள்.

நேரடி எண்ணெய் வளம் இல்லாத பகுதிகளில், நிலத்தடி பாறைகளில் சிக்கியுள்ள ஹைட்ரோகார்பனை நீரியல் விரிசல் முறையில் (hydraulic fracturing) எடுப்பதை ஹைட்ரோகார்பன் திட்டம் என்கிறார்கள்.

மேலிருந்து கீழாக சில கிலோ மீட்டர் ஆழத்திற்கு குழாயை அமைத்து, பின்னர் பக்கவாட்டில் ஓரிரு கிலோ மீட்டர் குழாயை செலுத்தி, அதற்குள் நன்னீரும் ரசாயனமும் கலந்த கரைசலை மிகுந்த அழுத்தத்தில் பலமுறை செலுத்தி, பாறைகளில் விரிசலை ஏற்படுத்தி ஹைட்ரோகார்பனை எடுக்கும் திட்டம் இதுவாகும்.

நீரியல் விரிசல் முறையில் ஹைட்ரோகார்பன் எடுப்பது ஒரு புதிய முறை ஆகும். அமெரிக்கா, கனடா போன்ற மிகச்சில நாடுகளில் மட்டுமே இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, அயர்லாந்து, பல்கேரியா உள்ளிட்ட பலநாடுகள் இத்திட்டத்தை நிரந்தரமாக தடை செய்துவிட்டன.

இந்த திட்டம் முற்றிலுமாக கைவிடப்பட வேண்டும் என்பதற்கான 10 காரணங்கள்...

1. தண்ணீர் பற்றாக்குறை: நீரியல் விரிசல் முறையில், நிலத்தடியில் மிக ஆழத்தில் பாறைகளில் உள்ள ஹைட்ரோகார்பனை எடுக்கும் திட்டத்திற்கு ஏராளமான அளவில் நன்னீர் தேவை. ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை நிலவும் பகுதிகளாகவும், கடல்நீர் உட்புகும் பகுதிகளாகவும் இருக்கும் தமிழகக் கடலோரங்களில் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால், குடிநீருக்கும் விவசாயத்திற்கும் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படும்.

2. தண்ணீர் மாசு: நீரியல் விரிசல் முறையில் 90% தண்ணீர், 9.5% மணல் 0.5% நச்சு ரசாயனம் கலந்த கரைசல் அதிக அழுத்தத்தில் நிலத்துக்குள் செலுத்தப்படுகிறது. இவற்றில் கணிசமான கலவை கழிவு நீராக வெளிவருகிறது. இந்த நச்சுக்கழிவு நீர் எளிதில் தூய்மை செய்ய முடியாதது ஆகும். இதனால் நீரும், நிலமும், நிலத்தடி நீரும் நஞ்சாகும்.

3. உடல்நலக்கேடுகள்: நீரியல் விரிசல் முறைக்காக பயன்படுத்தப்படும் நச்சு ரசாயனங்களும், கழிவு நீரும் கடுமையான உடல்நலக்கேடுகளை ஏற்படுத்தக் கூடியனவாகும். கூடவே, காற்றுமாசுபாட்டையும் ஹைட்ரோகார்பன் கிணருகள் உருவாக்குகின்றன. புற்றுநோய், மூச்சுக்குழல் நோய்கள், குறைபிரசவம் எனப் பலக்கேடுகள் இவற்றால் உருவாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

4. விவசாயம் அழிவு: தமிழ்நாட்டின் மிக முதன்மையான உணவு உற்பத்தி மண்டலமான காவிரிப் படுகை ஹைட்ரோகார்பன் திட்டங்களால் பேரழிவை சந்திக்கும். இதனால், தமிழ்நாட்டின் உணவு பாதுகாப்பு தகர்க்கப்படும்.

5. காலநிலை மாற்றம் அதிகரிப்பு: புதைபடிவ எரிபொருட்கள் அனைத்தும் புவி வெப்பமடைய காரணமாக உள்ளன. ஹைட்ரோகார்பன் திட்டங்களால் வெளியாகும் மீத்தேன் மிக அதிக அளவு வெப்பத்தை பிடித்துவைக்கும் சக்தி வாய்ந்தது. இத்திட்டங்களால் காலநிலை மாற்ற ஆபத்து அதிகமாகும்

6. சமுதாய வாழ்க்கை அழிவு: மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமைக்கும் முயற்சி உலகில் வேறெங்கும் இல்லை. நிலப்பரப்பில் அமையும் ஹைட்ரோகார்பன் கிணறுகள் வரிசையாக பல ஊர்களில் அமைக்கப்படும். இதனால் ஏற்படும் சத்தமும், காற்று மாசும், நீர் மாசும் மக்களின் இயல்பான வாழ்க்கை முறையை பாதிக்கும்.

7. மீனவர்கள் வாழ்க்கை பாதிப்பு: கடல் பரப்பில் அமையும் ஹைட்ரோகார்பன் கிணருகள் மீன் வளத்தையும், மீன்பிடி தொழிலையும் பாதிக்கும்.

8. சுற்றுச்சூழல் வளம் அழிவு: பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள், முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் என அரிதான இயற்கை வளப்பகுதிகள் காவிரி வடிநிலப்பகுதியில் உள்ளன. இவையெல்லாம் ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாதிக்கப்படும்.

9. நிலநடுக்க ஆபத்து: ஹைட்ரோகார்பன் திட்டம் அமையும் பகுதிகளில் மெல்லிய நிலநடுக்கும் ஏற்படுவது பல இடங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரிய நிலநடுக்கங்கள் வரும்போது இப்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படலாம்.

10. பண்பாட்டு அழிவு: கரிகாலனும் ஆர்தர் காட்டனும் உருவாக்கிய மிகச்சிறந்த நீர்ப்பாச திட்டங்களுடன், தமிழ்நாட்டின் உன்னதமான கலாச்சார சின்னங்கள் உள்ள பகுதி காவிரிப் படுகை ஆகும். இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என அனைத்து மதங்களின் புனித இடங்கள் இங்குள்ளன. இந்த பகுதி அழிவுக்குள்ளானால், தமிழ்நாட்டின் வரலாறும் பண்பாடும் அழியும்.

என்ன செய்ய வேண்டும்?

கடலூர், நாகை மாவட்டங்களின் நிலப்பகுதியிலும், விழுப்புரம், கடலூர், நாகை மாவட்டங்களின் கடல் பரப்பிலும் அறிவிக்கப்பட்டுள்ள மூன்று ஹைட்ரோகார்பன் திட்டங்களையும் முற்றிலுமாக கைவிட வேண்டும்.

தமிழ்நாட்டை நீரியல் விரிசல் முறை திட்டங்கள் இல்லாத பகுதியாக (Frack Free Tamil Nadu) அறிவிக்க வேண்டும்.

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் 3 ஹைட்ரோகார்பன் திட்ட பகுதிகள்...

தமிழ்நாட்டில் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு நிலப்பரப்பின் மீது ஒரு பகுதி (CY-ONHP-2017/1) அளிக்கப்பட்டுள்ளது. பரப்பளவு 731 சதுர கிலோமீட்டர். கடலூர் மற்றும் நாகை மாவட்ட நிலப்பரப்பில் 85 இடங்கள் உள்ளன.

கடலூர் மாவட்ட கிராமங்கள்...

சாமியார் பேட்டை, மடவாபள்ளம், சிலம்பிமங்கலம், வேளங்கிராயன் பேட்டை, பரங்கிப்பேட்டை, எம்ஜிஆர் திட்டு, முடசல் ஓடை, கிள்ளை, வடக்கு பிச்சாவரம், தெற்கு பிச்சாவரம், தா.சோ.பேட்டை, வடக்கு மாங்குடி, தெற்கு மாங்குடி, அத்திப்பட்டு, நந்திமங்களம், பூலாமேடு, சிவாயம், சி. வீரசோழகன், கண்ணங்குடி, சி. பரமேஸ்வரநல்லூர், லால்புரம், மேலமூங்கிலடி, பு. ஆதிவராகநல்லூர், ஆயிபுரம், சித்தேரி, மனவெளி, ஆலம்பாடி, பு. உடையூர், உளுத்தூர், பிரசன்னராமாபுரம், கொளக்குடி, அரங்கமங்களம், கல்குணம், ராசாகுப்பம், குருவப்பன் பேட்டை, விருப்பாட்சி, பெத்தநாயக்கன் குப்பம், அன்னதானம்பேட்டை, கேசவநாராயணபுரம், இடங்கொண்டம்பட்டு, ஆயிக்குப்பம், ரங்கநாதபுரம், குள்ளஞ்சாவடி, சமுட்டிக்குப்பம், கீரப்பாளையம், வழுதம்பட்டு, பெரிய காரைக்காடு, சங்கொலிகுப்பம், ராசாப்பேட்டை, நொச்சிக்காடு, ரெட்டியார்பேட்டை, திருச்சோபுரம், பெரியக்குப்பம், காயல்பட்டு

நாகை மாவட்ட கிராமங்கள்...

கொடியம்பாளையம், பழையாறு, தாண்டவன்குளம், புதுப்பட்டினம், புலியந்துறை, மகேந்திரபள்ளி, நாணல்படுகை, முதலைமேடு, நாதல்படுகை, ஆச்சாள்புரம், அனுமந்தபுரம், கொள்ளிடம்

குறிப்பு: இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஊர்கள் விவரத்தை வெளியிடவில்லை. எனினும், CY-ONHP-2017/1 திட்டத்திற்கு அளிக்கப்பட்டுள்ள இடத்தின் அட்சரேகை - தீர்க்கரேகை (GPS) குறியீடுகளில் இந்த கிராமங்களும், ஊர்களின் கடலோரமும் உள்ளன.

வேதாந்தா (ஸ்டெர்லைட்) நிறுவனம்...

வேதாந்தா நிறுவனத்திற்கு இரண்டு பகுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. முதலாவது பகுதி (CY-OSHP-2017/1) பரப்பளவு 1794 சதுர கிலோமீட்டர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தொடங்கி, கடலூர் மாவட்டம் பிச்சாவரம் வரை கடல் பரப்பில் 123 இடங்கள் உள்ளன.

இரண்டாவது பகுதி (CY-OSHP-2017/1) பரப்பளவு 2574 சதுர கிலோ மீட்டர். கடலூர் மாவட்டம் பிச்சாவரம் தொடங்கி நாகை மாவட்டம் வேதாரண்யம் வரை கடல் பரப்பில் 47 இடங்கள் உள்ளன.

பசுமைத் தாயகம்
நிறுவனர்: மருத்துவர் ச. இராமதாஸ்....

இரண்டரை வயது குழந்தையை கொன்றுவிட்டு தாய், தந்தை தற்கொலை...


கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள இடைசெருவாய் கிராமத்தில் கூலி தொழிலாளி பிரகாஷ் (25), உஷா (20) ஆகியோர் தங்களது 2.5 வயது குழந்தை பிரதிஷா கை மணிக்கட்டை பிளேடால் அறுத்து ரத்தம் வெளியேற கொலை செய்துவிட்டு பிரகாஷ், உஷா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலை மற்றும் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

நீர் சுத்திகரிப்பு (Water Purifier)....


இந்தியாவில் தண்ணீர் மிகப்பெரும் வணிகமாக உருவெடுத்துள்ளது...

தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யும் நிறுவனங்களை எண்ணிக்கையில் அடக்கிவிட முடியாது... இது ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க அடுத்த கட்டமாக தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திர நிறுவனங்கள் தங்களை சந்தைப்படுத்துதலுக்கான இடத்தை நாள் தோறும் பெருக்கி கொண்டே வருகிறது...

இந்த இயந்திரங்களின் மூலம் தண்ணீரை சுத்திகரித்து அதனை பருகும் நாம் என்றாவது அதன் செயல்முறையை பற்றி சிந்தித்து பார்த்தது உண்டா...

விற்பனையாளர்கள் தரமான பொருட்களை தான் நமக்கு கொடுப்பார்கள் என்ற சிந்தையில் தான் நாம் இருக்கிறோம்... அது தான் அவர்களின் மூலதனம்..

இந்த இயந்திரத்தின் மூலம் நாம் பருகிடும் ஒரு லிட்டர் தண்ணீரில் உள்ள மறைநீர் அளவு இரண்டு முதல் மூன்று லிட்டர் ஆகும்.

அதாவது ஒரு லிட்டர் நீரைசுத்திகரிக்கும்  பொழுது மூன்று லிட்டர் நீர் வீனாக்கப்படுகிறது...

அதனை இயந்திர உற்பத்தி நிறுவனங்கள் water purification ratio 3:1மற்றும்  2:1 என்று வைத்துள்ளது.. ஒரு இயந்திரத்தின் முழு கொள்ளவு சராசரியாக 7லிட்டர்.. அந்த 7லிட்டர் சுத்திகரிக்க 20லிட்டர் நீர் வீணாகும்...

இந்த இயந்திரங்கள் எவ்வாறு வேலை செய்கிறது என்று பார்ப்போம் நிறுவனங்களை பொறுத்து அதன் சுத்திகரிப்பு படிநிலைகள் அமைக்கப்படுகிறது குறைந்தது  நான்கு அல்லது ஐந்து நிலைகள் இருக்கும் அதாவது தூசி, மணல் நீக்குதல், இரசாயன கலப்புகளை நீக்குதல், உப்பு நீக்குதல், பாக்டீரியா அழித்தல் என்பன.

இதனால் நீரில் உள்ள அனைத்து சத்துகளும் உரிஞ்சப்பட்டுவிடும்...

பிறகு அந்த நிறுவனம் சொல்லும் நாங்கள் mineral cartridge  கொடுத்திருக்கிறோம் அதில் மனித உடலுக்கு தேவையான மினரல்களை சேர்த்து வைத்துள்ளோம் அது நீர் சுத்திகரிப்பு முடிந்தவுடன் இறுதிகட்ட நிலையில் நீரில் சேர்க்கப்டும் என்று.

இயற்கையாக நீரில் உள்ள அனைத்து சத்துகளையும் அகற்றிவிட்டு செயற்கையான ரசயானங்களை சேர்த்து கொடுக்கப்படுகறது.. இது தான் அந்த மினரல் காட்ரிட்ஜ்-ன் பணி.

 ஒவ்வொரு இடத்தில் உள்ள தண்ணீரானது அந்தந்த மக்களுக்கு ஏற்புடையதாகவே இருக்கும்... அதனால் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் தான் சுத்தமான நீர் கிடைக்கும் என்ற எண்ண ஓட்டத்தை மாற்றிடுங்கள்.. தண்ணீரை அதன் இயற்கை சத்துகளுடன் பருகுவது தான் சிறந்தது..

மேலும் ஒரு முக்கியமான விடையம் அது தான் இயந்திரத்தின் உற்பத்தி விலை.. ஒரு  RO  இயந்திரத்தை உற்பத்தி செய்ய ஆகும் செலவு ரூ 3500 முதல் ரூ. 4000 வரை மட்டுமே... ஆனால் விற்பனை நடிகர்/நடிகைகள், சச்சின், தோனி போன்றவர்கள் வருவதால் விளம்பரம்ங்களுக்கு உண்டான செலவையும் சேர்த்து மூன்று மடங்கு அதிகமாக நம்மை வாங்க வைக்கிறார்கள்...

இவர்களிடம் ஏமாந்தது போதும்...
இயற்கை முறையில் பயணிப்போம்...

புரிகிறதா கார்பரேட்டின் உலக அரசியல் ?


இயற்கையா வாழ்ந்திருந்தா நமக்கு இவ்வளவு பிரச்சினை வந்திருக்குமா..?

பிரான்சுக்கு அருகாமையில் அதிசயமான தமிழர் பூமி...


ரீயூனியன் என்று ஒரு அதிசயமான தமிழர் பூமி..

தமிழர்களுக்கு பரிச்சயம் இல்லாத இடம்..

தமிழர்கள் பலர் கேள்விப்படாத இடம்..

ஆனால் தமிழர்கள் அதிக அளவில் வாழும் உலகப் பகுதி ஒன்று..

சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள் வாழும் ரீயூனியன்..

சுமார் எட்டரை லட்சம் மக்கள் வாழும், இந்த ரீ யூனியன் என்கிற தீவு.

ஆப்பிரிக்க கண்டத்திற்கு கிழக்கே இந்து மகா கடலில், மொரீசியஸ் அருகே உள்ள, உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாகக் காணப்படும் ஒரு மிகச்சிறிய தீவு..

பிரான்ஸ் நாட்டிலிருந்து மிகத் தொலைவில் இருந்தாலும் கூட இது பிரான்ஸ் நாட்டின் நிர்வாகத்திற்குட்பட்ட ஒரு பிரெஞ்சுப் பகுதி..

உலகில் தமிழகத்திற்கு வெளியே சென்ற தமிழர்களில் மிகவும் மதிப்புடனும், மகிழ்ச்சியாகவும், சம உரிமை பெற்றும் வாழ்கின்றவர்களில் இவர்களே முதன்மையானவர்கள்…

விசா, பாஸ்போர்ட் போன்ற பிரச்சினைகளே இல்லை…..

சிலர் இலங்கையில் (Jaffna & Point Pedro) இருந்தும் குடியேறினார்கள்..

இப்போது உள்ளவர்களில் பலர் அவர்களின் சந்ததியினர்..

ஆரம்பத்தில் ஒப்பந்தக் கூலியாக அழைத்துச் செல்லப்பட்டாலும், பிற்காலத்தில் பிரெஞ்சு அரசு இவர்கள் அத்தனை பேருக்கும் பிரெஞ்சு குடியுரிமை அளித்து கௌரவமிக்க பிரெஞ்சு குடிமக்களாக ஏற்றுக் கொண்டது..

இவர்கள் அனைவரும் இன்று சம உரிமை பெற்று மகிழ்ச்சியான பிரெஞ்சு குடிமக்களாக வாழ்கிறார்கள்..

பிரெஞ்சுத் தமிழர்கள் என்று பெருமையுடன் கூறிக் கொள்கிறார்கள்..

இன்னமும் இவர்கள் தங்களுக்கேற்ற முறைகளில், தமிழ்ப் பண்பாட்டு வழிகளையும் விடாமல் தொடர்கிறார்கள்...

தஞ்சை விவசாயிகள் போராட்டம்...


சித்தர் ஆவது எப்படி - 14...


மன்னிக்க முடியாத ஒழுங்கின்மை...

ஆதியும் அந்தமும் இல்லா ஆண்டவன் இறைவன், அடிமுடி காணமுடியாத இறைவன், உலகளந்த உத்தமன் என்றெல்லாம் வர்ணிக்காத, போற்றி புகழாத மத நூல்களே இல்லை..

ஆனால் அப்படியான தோற்றத்திற்கு புலப்படாத, புலப்படமுடியாத இறைவனை, ஒரு தோற்றத்திற்கு கொண்டு வந்து, தொழுவதும் பிரார்த்தனை செய்வதும், ஒரு முறையற்ற செயல் என்பதும் அதுவே ஒரு மிகப் பெரிய ஒழுங்கற்ற செயல் என்பதும் இன்றைய கால கட்டத்தில் மனிதன் உணரவே முடிவதில்லை..

எல்லா மதங்களும், கடவுளை மறுக்கும் புத்த மதம் உள்பட ஏதோ ஒரு தோற்றத்தை மையப் படுத்திதான் இயங்கிக் கொண்டு இருக்கின்றன..

அப்படி இயங்காத ஒரு கோட்பாட்டை உடைய ஒரு மதத்தை உலகில் ஒருவரேனும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்..

இந்த சூழ்நிலையில் அறியாதவர்களுக்கு முதலில் இப்படி தான் ஆரம்பிக்க வேண்டும் என்ற நிலையில் கடவுளை பற்றிய மிக பெரிய ஒழுங்கின்மையை மையப் படுத்தி உருவநிலைகளில் ஆரம்ப நிலையிலே வேர் ஊன்றியவர்கள் மிக பெரிய பிரமாண்டமான கோவில்களையும் சர்ச்களையும் மசூதிகளையும் கட்டி அதை நிர்வாகிக்க வேண்டிய கட்டாயத்தில் சிக்கி விட்டனர்..

அதனால் பிழைத்து கொண்டு இருப்பவர்கள், தங்கள் பிழைப்பு எங்கே கெட்டு விடுமோ என்ற அச்சத்தில், தங்கள் ஒழுங்கின்மையை, எந்த வகையிலாவது நியாயப் படுத்தவே முயற்சி செய்வார்கள்..

இந்த சூழ்நிலையில் இறைவனின் உண்மை நிலையாகிய தோன்றா நிலை பற்றிய கருத்து முற்றிலுமாக மறந்து விட்ட ஒன்று மட்டும் அல்ல, முற்றிலுமாக மறுக்கப் பட்ட ஒன்றாய் போய் விட்டது..

இன்றைய கால கட்டத்தில் தோன்றா நிலையின் முக்கியம், சற்று பண்பட்டவர்களுக்கு எவ்வளவு அவசியம் என்பதை அறிந்து கொள்ளவோ, அறிந்ததை ஏற்றுக்கொள்ளவோ, குறைந்த பட்சம் அப்படி அறிந்ததற்கு எதிராக பேசாமல் இருக்க, முடியாத சூழ் நிலையே இன்று எங்கும் உள்ளது..

அப்படியே வாசியோகத்திலும்
தோன்றா நிலையை உணர வைக்க முற்பட்ட சித்தர்களின் முயற்சிகளை எல்லாம் நாசப் படுத்தி, அங்கும், ஆறு அல்லது ஐந்து சக்கரங்கள் என்ற தோன்றும் ஒரு மாயை ஒன்றை உருவாக்கி, தோன்றா நிலையை உணர்விலே தோற்று விக்காமலே செய்து விட்டனர்...

சித்தர்களை ஒரு வகையில் பித்தர்களாக்கி விட்டனர்..

அந்த தோன்றா நிலையிலே உணரப் படும் இறை ஆற்றலுக்கு இணையான ஒன்று இந்த பிரபஞ்சத்திலே எதுவும் இல்லை..

ஆற்றல் இன்றி ஒரு துரும்பும் அசையாது என்பதை உணர்ந்த பின் அதுவும் அந்த தோன்றா நிலையில் மட்டுமே கிடைக்கும் என்பது ஒரு நிலையான சத்தியம்..

தோன்றா நிலையில் மட்டுமே எல்லை கடந்த நிலையில் இருக்கும் அந்த இறைவனை அதே எல்லை கடந்த நிலையில் நாம் இருக்கும் போது உணர முடிந்து, அவனிடமிருந்து பேராற்றலை நாம் பெற முடியும்..

அவன் என்றால் தோற்றத்திற்கு வராத பிரபஞ்ச பேரண்டமே..

வேறு எந்த வகையிலும் அந்த ஆற்றலை பெற வேண்டிய அளவிற்கு பெற முடியாது..

அந்த தோன்றா நிலை ஒரு புரியாத நிலை தான்.. அது சதா உருவங்களிலே பழகி விட்ட மனதிற்கு மட்டுமே என்றும் புரியாத நிலை..

ஆனால் உணர்வாகிய புத்திக்கு அது உணர்வின் வழியாக புரியக் கூடிய ஒன்று..

ஆகவே புத்தி சொல்லுவதை மனம் ஏற்றுக் கொள்ளும் போது மனம் அந்த தோன்றா நிலையை, புரியாத ஒன்றை புரியாததாகவே ஏற்றுக் கொள்கிறது..

மனம், புரியாததை புரியாததாகவே ஏற்றுக்கொள்ளும் போது, தன்னை கடந்து செல்ல அனுமதிக்கின்றது..

அப்படி புத்தியின் புத்திமதியை ஏற்றுக் கொள்ளாத மனம் புரியாததை புரியாததாகவே ஏற்றுக் கொள்ளாமல், மனிதனை மனம் தாண்டிய புத்தி நிலைக்கு அனுமதிக்காது..

ஆகவே தான் தோன்றா நிலையில் பிரபஞ்ச ஆற்றலை உணர்வாக அதாவது கனலாக பெற வேண்டிய அவசியம் ஆகிறது..

அந்த அனுபவத்திற்கு பிறகே மனம், ஒருவனை தன்னை கடந்து, புத்தி என்ற பூத நிலைக்கு செல்ல அனுமதிக்கும்..

மனம் தன் தோற்றப் பிடிப்பினை தளர்த்தி, புத்திக்கு வழி விடும்..

தோன்றா நிலையில் மட்டுமே புத்தியும் அறிவும் திறம் பட இயங்கத் தொடங்கும்...

ஆகவே நினைப்பு என்ற தோற்ற நிலையிலிருந்து, உணர்வு என்ற தோன்றா நிலைக்கு வரவேண்டியது மிக பெரிய இரகசியமாக கொள்ள வேண்டும்...

சித்தர்கள் உருவ வழிபாடுகளை கடந்து சென்றவர்கள்..

கடந்தவர்கள் என்றால் உருவ வழிபாட்டில் இருந்து அனுபவப் பட்டு பின் மேற் கொண்டு மேல் அனுபவ பெற தோன்றா நிலைக்கு செல்ல உருவ வழிபாட்டை விட்டவர்கள்..

வள்ளலார் போன்றவர்களே நம் சித்தர்கள்..

உருவ வழிபாட்டை தாண்டி செல்பவர்கள் ஒரு போதும் தோன்றா நிலைக்கு செல்ல முடியாது என்பது மற்றொரு இரகசியம்...

தோன்றா நிலை சூரிய கலை என்றால் தோன்றும் நிலையாகிய உருவ வழிபாடு சந்திர கலை..

ஒரு கலை இல்லையென்றால் மற்றொரு கலையும் இல்லாமல் போய் விடும் என்பதை மறக்கக் கூடாது...

தோன்றும் நிலையில் சிக்குண்டு இருப்பது மன்னிக்க முடியாத ஒழுங்கின்மை.....

மக்கள் பாதையின் உழவன் அங்காடி...


ராம் லீலா நடத்தும் முஸ்ஸீம் குடும்பம்...


உத்தரப் பிரதேசம் லக்னோவில் முகமது சபீர் கான்  குடும்பத்தினர் 1972ம் ஆண்டு முதல் ராம் லீலா நாடகத்தை நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு சபீர் கானின் 2 மகன்கள் மற்றும் பேரக் குழந்தைகளும் ராம் லீலா நாடகத்தில் நடிக்கின்றனர்...

கன்னட கமல்... உன் போலி அரசியல் முகத்தை கிழித்தெறியும் நாள் வெகுதொலைவில் இல்லை அதிகார வர்க்கத்தின் அடிமையே...


கருப்பட்டியின் பயன்கள்...


பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.

சீரகத்தை வறுத்து சுக்குக் கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்.

ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

ஆண்மையை வீரியப் படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு.

காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால்… உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும்.

சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம்.

இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது...

சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்.. சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது...

மகாராஷ்டிர இஎஸ்ஐ நிநி ரூ60,000 கோடியை பாஜக மோடி தன் நண்பர் அம்பானிக்கு கொடுத்தார்...


பாஜக வை பற்றி தெரிந்து கொள்வோம்....


1) இந்திரா காந்தி கொலை குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP உறுப்பினர் ராம் ஜெத்மலானி.

2) ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP உறுப்பினர் ராம் ஜெத்மலானி.

3) தீவிரவாதி ஆசாராம் பாபு வின் வழக்கறிஞர் யார் - BJP பாராளுமன்ற உறுப்பினர்(MP) சுப்பிரமணிய சுவாமி.

4) போபால் விசவாயு மூலம் 10,000 இந்தியர்களை கொலை செய்த வாரன் ஆன்டர்சனின் வழக்கறிஞர் யார் - BJPயின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி.

5) ஊழல் பெருச்சாலி லலித் மோடி யின் வழக்கறிஞர் யார் - BJP மாநில முதல்வர் வசுந்தரா ராஜி யின் கணவனும், மகளும்.

6) வொடபோன் வரி ஊழல் குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP நிதியமைச்சர் அருண் ஜெட்லி.

7) தீவிரவாதி அப்சல் குரு விற்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP உறுப்பினர் ராம் ஜெத்மலானி.

8) குஜராத் 500கோடி ஊழல் குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP நிதியமைச்சர் அருண் ஜெட்லி.

9) கடத்தல் மன்னன் அலேமோ வின் வழக்கறிஞர் யார் - BJP உறுப்பினர் ராம் ஜெத்மலானி.

10) சஹாரா ஸ்கேன் ஊழல் குற்றவாளி சுப்ராத் ராய் வழக்கறிஞர் யார் - BJP அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்.

இந்தியாவின் முக்கிய வழக்குகளில் பணத்துக்காக குற்றவாளிகளை ஆதரித்து ஆஜரான இவர்கள் தான் நமக்கு தேச பற்று குறித்து பாடம் நடத்துகிறார்கள்...

மானங்கெட்ட அதிமுக இபிஎஸ் - ஓபிஎஸ்...


மனித உயிர்களுக்கு மறு பிறப்பு உண்டு என்பதை இப்போது எல்லா மதங்களுமே ஒப்புக்கொள்ளத் தொடங்கி விட்டன...


பிறப்பின் முடிவு இறப்பு - இறப்பின் முடிவு பிறப்பு.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு உயிர் பூமியிலே மீண்டும் மீண்டும் பிறக்கிறது.
ஏழு பிறப்பு என்பது தவறான வாதம்.

ஏழு பிறப்பு என்ற வள்ளுவன் வார்த்தைக்கு, எழுகின்ற ஒவ்வொரு பிறப்பும் என்பது பொருள்.

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் என்பது பிரபந்தம்.

ஏழேழ் பிறவி என்றால், நாற்பத்தொன்பது பிறவி என்று அர்த்தமல்ல.

எழுந்து வரும் ஒவ்வொரு பிறவிக்கும் என்பது பொருள்.

சில உயிர்கள், போன வேகத்தில் திரும்புகின்றன. சில உயிர்கள் ஓய்வெடுத்துத் திரும்புகின்றன.

புதிய வடிவங்கள் பிறந்த பின்னாலும், பழைய வடிவங்கள் கனவில் வந்து பேசுகின்றன.

இம்மையில் பக்தியைச் செம்மையாகச் செலுத்தி ஈஸ்வரனிடமே லயித்து விட்ட உயிர், பிரிந்தால் மீண்டும் அது திரும்புவதில்லை. மறு பிறப்பு என்ற துயரம் அதற்கு இல்லை.

மற்றொன்று, சில நேரங்களில் மரணம் அடைகிற உயிர் மீண்டும் திரும்புகிறதென்றும், வேறு சில நேரங்களில் மரணம் அடைகிற உயிர் திரும்புவதில்லை என்றும், தன்னைச் சரணடையும் உயிர் எப்போது மரித்தாலும் அதற்கு மறு பிறப்பு என்ற துன்பமே இல்லை என்றும் பகவான் கூறுகின்றான்.

எப்போது மரிக்கின்ற உயிர், மறுபடியும் பிறந்து அவஸ்தைப்படுகின்றது?

புகை சூழ்ந்த நேரம், இரவு நேரம், கிருஷ்ண பக்ஷம், தக்ஷணாயணம் ஆகியவற்றில் இறப்பவர்கள், சந்திரனின் வழியில் செல்கிறார்கள்.

சந்திர கதியை அடைந்த எந்த உயிரும் மீண்டும் திரும்புகிறது.

காரணம், சந்திரன் என்பது அகங்காரம்; சூரியன் என்பது உண்மை அறிவு.

சந்திரனுக்கு இயற்கை ஒளி கிடையாது. சூரியனுடைய ஒளியை வாங்கித் திருப்பி அனுப்புகிறான்.

சந்திரனுடைய அகங்காரத்தை தனக்குள் அடக்கிக் கொண்டவன் பரமாத்மா. அவனைச் சரணடைந்து விட்டால் இந்த மறுபிறப்பை வெல்லலாம்.

எப்போது மரணம் அடைகிறவர்களுக்கு இயற்கையிலேயே மறுபிறப்பு இல்லை?

நெருப்பு, வெளிச்சம், பகல், சுக்லபக்ஷம், உத்தராயணம் இவற்றில் மரிக்கிறவர்கள் மீளாத வழியில் சென்று ஈஸ்வரனோடு ஐக்கியமடைந்து விடுகிறார்கள்.

இவர்களுக்கு மறுபிறவி இல்லை.

உத்ராயணம் என்பது சூரியனின் வடதிசைப் பயணம். அதனால்தான், இறந்து போனவர்களை வடக்கே தலைவைத்துப் படுக்க வைக்கிறார்கள், முத்தியடைவதற்காக.

உயிரோடு இருப்பவர்கள் வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது என்று சொல்வதும் அதற்காகவே.

இந்தப் பிறப்பில் துன்பங்களை அனுபவித்தவர்கள் இன்னும் ஒரு பிறப்பையா விரும்புவார்கள்?

மாதா உடல்சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானேதாதா
இருப்பையூர் வாழ்சிவனே இன்னும்ஓர் அன்னை
கருப்பையூர் வாராமற் கா – என்றார் பட்டினத்தார்.

பிறவா வரம் வேண்டும் எம்மானே என்று புலம்பினார் ஒருவர்.

மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி வருத்தப்படுத்த வேண்டாம் – என்று வேண்டுகோள் விடுத்தார் ஒருவர்.

அன்னை எத்தனை அன்னையோ
அப்பன் எத்தனை அப்பனோ
இன்னும் எத்தனை ஜென்மமோ? – என்று கலங்கினார் ஒருவர்.

மறு பிறப்பைப் பற்றிய திடமான நம்பிக்கையும், ஐயையோ. படமுடியாதினித் துயரம், பட்டதெல்லாம் போதும் என்ற அவலமும் சேர்த்து இதிலே எதிரொலிக்கின்றன.

மறு பிறப்பு இல்லாமல் இருப்பதற்கோ, அப்படிப் பிறந்தாலும் பூர்வ ஜென்மத்தைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்கோ ஒரே வழி ஈஸ்வர பக்தி.

அதையும் தெளிவாகச் சொல்வதென்றால், கிருஷ்ண பக்தி.

ஏனென்றால், பகவான் மட்டும் தான் மறுபிறவி இல்லாமல் இருக்க வழி சொல்கின்றான்.

பகவான் ஒன்று சொல்கிறான், மனம், உயிர், ஆத்மா மூன்றும் வேறு வேறு என்று.

உடம்பை விட்டு உயிர் பிரியும் போது, ஆத்மாவும் பிரிகிறது. அதனால்தான் இறந்து போனவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் போது, அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என்கிறோம்.

மனிதனின் பாவ புண்ணியங்களை கவனிக்கிற இந்த ஆத்மா, உயிரைக் கையோடு அழைத்துக் கொண்டு மறு கூட்டிலே புகுந்து விடுகிறது.

அந்த ஆத்மா சாந்தியடைந்து விட்டால், அந்த உயிரையும் தன்னோடு வைத்துக் கொண்டு விடுகிறது.

இந்தப் பிறவியில் துன்பங்களை அனுபவித்தவர்கள், தன் வாழ்நாளிலே துன்பங்களிலிருந்து விடுதலை பெற முடியவில்லை என்றால், கடைசியாக அவர்கள் பெறக் கூடிய விடுதலை, ஆத்ம சாந்தி.

ஈஸ்வர பக்தி இல்லாதவனுடைய ஆத்மாவும், தற்கொலை செய்து கொள்கிறவனுடைய ஆத்மாவும் எப்போதும் சாந்தி அடைவதில்லை.

மறு உலகில் அவை, பேயாய் கணங்களாய்த் திரிகின்றன.

மீண்டும் இந்தப் பூமியிலே பிறந்து விட்ட இடத்திலிருந்து துன்பத்தைத் தொடருகின்றன.

ஆகவே லெளகீகத்தில் போராடிப் பார்த்து இறுதியாகத் துன்பங்களிலிருந்து விடுதலை பெற முயற்சிக்கிறவனுக்குக் கைகொடுக்கும் ஒரே மார்க்கம், பக்தி மார்க்கம்...

தமிழக கனிமவளங்கள் கேரளாவிற்கு கடத்தல்...


கடத்தலுக்கு துணை போகும் அரசியல்வாதிகளும்.. கண்டு கொள்ளாத காவல்துறையும்...

தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று தமிழை கொச்சைப்படுத்திய கன்னட ஈ.வே. ராமசாமி நாயக்கர் எப்படா தமிழ் வளர்த்தான்..?


வந்தேறி- தெலுங்கு-கன்னடர்கள் திராவிடர்களின் பொய் பித்தலாட்டத்திற்கு அளவே இல்லாமல் போகிறது...

போக்குவரத்துறையில் 2019 ஜூலை முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவுச் சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்...


தற்போது நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு 32 ஆயிரம் ஓட்டுநர் உரிமங்கள் வழங்கவும், புதுப்பிக்கவும் செய்யப்படுகி்ன்றன. அதே போல் நாள் ஒன்றுக்கு 43 ஆயிரம் வாகனங்கள் பதிவுகள் மற்றும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு ஆர்.சி. புத்தகம் வழங்கப்பட்டு வருகின்றன. செய்யப்படுகின்றன.

இந்த நடைமுறைகளை ஒருமுகப்படுத்தும் விதமாக வரும் 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம் வழங்கும்முறை அமல்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஓட்டுநர் உரிமங்கள் ஏடிஎம் வங்கி அட்டைகளைப் போல் ஒரே வடிவத்திலும், வண்ணத்திலும் இருக்கும் எனவும், இதில் பாதுகாப்பான கொய் லோச் அச்சு தொழில் நுட்பம், மைக்ரோ பிரிண்டிங் மற்றும் சிப்-பில் க்யூ.ஆர். கோடுகள், ஹாலோகிராம், வாட்டர் மார்க் போன்ற தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டு இருக்கும். போலி காட்டு தயாரிக்காமல் இருப்பதற்கான ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் அந்த அட்டை இடம்பெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அரசு முத்திரை, உரிமம் வழங்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி, ஓட்டுநரின் பெயர், ரத்த வகை, உறுப்புதானம் செய்தவரா என்பது உள்ளிட்ட விவரங்களும், வாகனம் விற்கப்பட்ட தேதி, தகுதி தேதி, வாகன பிரிவு, வர்த்தக பயன்பாட்டுக்கானதா, சொந்த பயன்பாட்டுக்கானதா மற்றும் வாகனத்தின் ஜேசிஸ் எண், என்ஜின் எண், எரிபொருள் புகை வெளிப்படும் அளவு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அந்த அட்டையில் இடம் பெற்றிருக்கும்.

ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க விண்ணப்பிக்கும் போது, தானாகவே பழைய வாகன ஓட்டுநர் உரிமங்கள் புதிய ஸ்மார்ட் கார்டு வடிவத்திற்கு மேம்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாகனச் சோதனையில் காவல்துறை அதிகாரிகள் அல்லது போக்குவரத்து துறை அதிகாரிகள் ஈடுபடும்போது அடுத்த வினாடியே ஓட்டுநர் உரிமம், ஆர்.சி. புத்தகம் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

ஏற்கனவே பழைய ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவுச் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் புதிய முறையில் புதுப்பித்துக் கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. புதிய அட்டைகளை வழங்குவதற்காக கூடுதலாக ரூ.18 முதல் ரூ.20 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்...

பாஜக நிர்மலா சீதாராமன் மோசடி...


மனோசக்தியை அற்புதங்கள் நிகழ்த்துவதற்கு பயன்படுத்தவும்...


மனித மனத்தில் உருவாகிற எண்ணங்கள் சக்தியாகையால் உருவான மறுவினாடியே அது நம் மூளையை விட்டு உடலை விட்டு பிரபஞ்சத்தில் பரவத் தொடங்கிவிடுகிறது. இதனை ஒரு உயிருள்ள வானொலி ஒலிபரப்பு நிலையம் செயல்படுவதாக நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

சாதாரணமாக ஒருவர் பேசுகின்றொலி ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் மற்றவர்களுக்கு கேட்பதில்லை. ஒரு ஒலி பெருக்கியைப் பயன்படுத்துகிறபோது ஒலியின் தன்மை பல மடங்காக (AMPLIFY) பெருக்கப்பட்டு இன்னும் அதிக தூரத்திற்கு கேட்கச் செய்ய முடிகிறது.

அதே ஒலி நுண் அலைகளாக (Microwave) மாற்றப்படும்பொழுது அது மிக நீண்ட தூரம் சென்று மீண்டும் நுண் அலைகள் சாதாரண அலைகளாக மாற்றப்பட்டு கேட்கச்செய்கிறது.

மனித மனத்தின் எண்ணங்களும் இப்படி நுண் அலைகளாக மாற்றப்பட்டால்தான் அது அதிக தொலைவு ஏன் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பரவும்.

சாதாரணமான எண்ணங்கள் இப்படி பரவினாலும் வேகாமாக வெகு தொலைவிற்கு செல்லாது.

ஒவ்வொரு மனித மனத்திலிருந்தும் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் (FREQUENCY) எண்ணங்கள் ஒலிபரப்பாவதால் அதே அலை வரிசையில் மனத்தை வைத்திருப்பவர்களின் மூளையை அது தாக்கி அங்கு அந்த சிந்தனை தொடர்பான சிந்தனைகள் தோன்றக் காரணமாக அமைகிறது.

இந்த நிகழ்வுகளை ஒரு சோதனைச் சாலையில நிரூபணமாக செய்ய முடியாது. ஆயினும் ஒரு பேருண்மையை நாமனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அதாவது ஒத்த எண்ணமுடைய எண்ண அலைவரிசையையுடைய மனிதர்கள் மட்டுமே மனப்பூர்வமான நிறைவான உணர்வுப் பூர்வமான நட்பில் நிலைக்க முடியும்; நண்பர்களாக வாழமுடியும்.

மாறுபட்ட எண்ண அலைவரிசையுடையவர்கள் நண்பர்களாக இருக்க இயலாது. சில சமயம் மாறுபட்ட எண்ணமுடையவர்கள் சில காலம் ஒன்றாக இருப்பார்கள்.

ஆனால் அது மனம் இணையாத உடல்கள் மட்டும் அருகில் இருக்கும் போலியான தோற்றம். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் போலி, கபட நட்பாகத்தான் இருக்க முடியும்.

ஒத்தது ஒத்ததை ஈர்க்கும் என்பது உலக இயற்கை. விதி, நியதி. இது மாறாதது.

எண்ணங்களைப் பொருத்த மட்டில் தன்னை ஒத்த எண்ணங்களை, தன்னை ஒத்த சிந்தனை உள்ள மனிதர்களை கவர்ந்து இழுப்பது என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

“கற்றாரைக் கற்றாரே காமுருவர்” என்பதும், “பாம்பின்கால் பாம்பறியும்” என்கிற சொற்றொடர்களும் இந்த பிரபஞ்ச எண்ண விதிகளின் படிதான்.

இல்லை, போதவில்லை, வறுமை பற்றாக்குறை, பஞ்சம் என்று வாடிக்கையாகப் பேசுபவர்கள் வறுமை எண்ணங்களையும், வறுமையிலும் பற்றாக்குறையிலும் பரிதவிப்பவர்களையும், ஏழைகளையும், வறுமைச் சூழலையும் வாழக்கையில் கவர்ந்து இழுத்து மேலும் மேலும் வறுமைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

ஆனால் வளமை எண்ணம் உடைய செல்வந்தர்கள் வளமான வணிகத்தையும் வரப்போகிற வருமானத்தையும் வளமான வணிகம் செய்கிற நண்பர்களையும் பிரபஞ்ச விதிப்படி ஒத்தது ஒத்ததை ஈர்க்கும் என்கிற விதிப்படி ஈர்த்து வசதியான வளமான வசந்த வாழ்க்கை விளைகிறது.

ஒருவேளை உங்களிடம் இன்றைக்கு பணமில்லை என்றாலும் நாளை வரப்போகிற பணத்தை செல்வத்தை எண்ணி வளமான சிந்தனையை மனத்தில் இருத்துங்கள்.

“POVERTY BEGETS POVERTY” “RICH BECOMES RICHER” பிச்சைக்கார வறுமை எண்ணம் ஏழ்மையை கொண்டு வருகிறது. செல்வ மனநிலை வளமான வாழ்க்கையை வருவிக்கிறது.

இந்த எல்லாவற்றையும் தீர்க்கமாக சிந்தித்த “மனவளக்கலை” என்கிற மார்க்கத்தை தமிழ் மக்களுக்குத்தந்த தவசீலர் மகரிஷி வேதாத்திரி அவர்கள் “வாழ்க வளமுடன்” என்று வாழ்த்தி வரவேற்கச் சொன்னதும் வாழ்த்தச் சொன்னதும் இந்த பிரபஞ்ச நியதியையும் விதியையும் விஞ்ஞான பூர்வமாக அறிந்ததன் விளைவே.

மனிதர் தங்களின் ஆசைகளையும் விருப்பங்களையும் அடைய முயற்சி செய்கிறார்கள். முயற்சிகள் தோல்வியடைகிற பொழுது கடவுளிடம் கேயேந்த தொடங்குகிறார்கள்.

இறைவனிடம் கையேந்துங்கள் - அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
உண்மைதான்.

இந்த பிராத்தனையை ஏன் தொடக்கத்திலேயே செய்யக்கூடாது. சொல்லுகிறேன்.

பிரார்த்தனை விஞ்ஞானப்பூர்வமானது விசுவாசியுங்கள், உணர்ச்சிகள் இவையாவும் ஒன்றிணைவதால் இந்தப் பிரபஞ்சம் முழுவது பரவி தக்க நபரைத் தாக்கி அந்த மனிதரின் மூலம் நம் எண்ணங்கள் ஈடேறுவதற்கான சூழல் வாழ்க்கயில் உண்டாகிறது.

அற்புதத்தை உருவாக்குகிற அற்புதங்களை நிகழ்த்துக்கிற ஆற்றல் இப்படித்தான் உருவாகிறது.

பிரார்த்தனையை அமைதியாக தனிமையில் (தியானம் செய்வதுபோல) ஒரு அறையில் அழகாக அலங்கரிக்கப்பட்ட படம் அல்லது இலை முன்பு (சூழல் அழகாக இருந்தால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும் எதிர்மறை சிந்தனைகள் உருவாகாது) மனம் கமழும் சூழலில் ஆச்சார இயம - நியம விதிகளின்படி குளித்துவிட்டு ஈர உடையுடனோ அல்லது குளிர்ந்த உடலுடனோ (அப்போதுதான் ஆழ்மனம் விழிப்படையும்) நினைவு மன செயல்பாடுகள் ஒடுங்க ஆழ்மனம் விழிக்க எண்ண அலைகளின் போக்குவரத்து குறைவாக இருக்கும் பிரம்ம முகூர்த்த வேளைகளில் (அதிகாலை 3.00 மணியிலிருந்து 6 மணிக்குள் சூரியன் உதிப்பதற்கு முன்) நம்பிக்கையுடனும் விசுவாசத்துடனும் உணர்ச்சிபூர்வமாக சங்கல்பிக்கிற ஆசைகள், அபிலாஷைகள் தீர்மானங்கள் விஞ்ஞான விதிகளைப் போல செயல்பட்டு விளைவுகளை உருவாக்கும். நினைத்தது நிறைவேறும்.

டாக்டர் பண்டிட் ஜி. கண்ணைய யோகி என்கிறவர் சென்னையில் வாழ்ந்து மறைந்த ஞானி. “மானச யோகம்” என்கிற தன்னுடைய நூலில் அவர் எண்ணங்களைப்பற்றி அற்புதமான செய்திகளையும் விளக்கங்களையும் விரிவாக தந்திருக்கிறார்கள்.

ஒரு உதாரணம்: வீட்டில் குழந்தைகள் விளையாடுவதற்காக வாங்கித்தரும் மோட்டார் கார், பஸ் போன்ற பொம்மைகள் பாட்டரி மின்சாரத்தினாலோ அல்லது சாவி கொடுப்பதன் மூலமோ இயங்குபவைகள். அவைகளை தரையில் வைத்து இயக்கிவிட்டு அதன் ஒரு பாதையில் ஏதோ மரக்கட்டையோ ஒரு கனமான புத்தகத்தையோ குறுக்கே வைத்து தடையை ஏற்படுத்தினால் அந்த பொம்மை முன்னேறிச் செல்ல முடியாமல் நிற்கும்.

எறும்புகள் செல்லும் பாதையில் இதுபோல தடைகளை ஏற்படுத்தினால் அந்த எறும்புகள் தடையைத் தாண்டி தடையின் மீது ஏறியோ அல்லது வலமாகவோ இடமாகவோ திரும்பி பாதையை மாற்றி தன் பயணத்தை தொடருகிறது.

பொம்மைக்கும் எறும்புக்கும் செயல்பாடுகளில் உள்ள வேறுபாடு எதனால் என்று சிந்தித்தால் ஒன்றை அறியலாம். அதாவது எறும்பின் அறிவு, எண்ணம் செய்லபடுவதால் செயல்பாட்டில் மாற்றத்தை கொண்டு வந்தது. பொம்மைக்கு ‘எண்ணம்’ இல்லை. செயலில் மாற்றம் ஏற்படுவதில்லை.

வெளியூரில் உள்ள நண்பரின் விலாசத்தை தந்து அந்த ஊருக்கு வேறு ஏதோ ஒரு வேலை விஷயமாக செல்லும் உள்ளூர் நண்பரிடம் ஒரு பொருளைக் கொடுத்து சேர்ப்பித்துவிட்டு வரச்சொன்னால் உள்ளூர் நண்பர் தன் அறிவாலும் முயற்சியாலும் அவ்வாறு செய்வார்.

இதுபோலவே நம்மூரில் கிடைக்காத ஒரு பொருளை வெளியூரில் வாங்கிவருமாறு உறவினருக்கோ நண்பருக்கோ வேண்டுகோள் விடுத்தால் அவர்கள் அவ்வாறே அந்த ஊர்களுக்குச் செல்லும் பொழுது தேடிப்பிடித்து முயற்சி செய்துத வாங்கிவருவார்கள். அறிவு என்கிற எண்ணமும் முயற்சி என்னும் முனைப்பும் உடலை தூண்டி, இயக்கி அவ்வாறு செய்யத் துணைபுரிகிறது.

இந்த மேற்கண்ட பணிகளைச் செய்த நண்பர்கள், உறவினர்கள் இவர்களுக்கு தகவல்களைத் தந்துவிட்டு, அவர்களின் அறிவாகிய எண்ணத்தில் பணிக்கான முனைப்பை ஏற்படுத்திவிட்டு உடலையும் எண்ணத்தையும் வேறாக பிரித்து கற்பனையாக உடல் இல்லை எண்ணம் மட்டுமே உள்ளது என்ற நிலையில் அங்கே செயல் நிகழுமா என்று நாம் எண்ணிப் பாத்தாலோ அல்லது சோதித்துப் பார்த்தாலோ ஒன்றை நாம் நிச்சயமாக உய்த்துணரலாம்.

தகவல்கள் தரப்பட்ட அறிவுறுத்தப்பட்ட அறிவு செயல்பட முனையும். செயல்படும் உடல் இல்லாத நிலையில் உலகுக்கு வெளிப்படையாக அறிவின் எண்ணத்தின் செயல்பாடு தெரியாது.

ஆனால் அறிவு வெளியூரில் உள்ள நண்பர்களின் எண்ணத்தைத் தாக்கி விளைவை ஏற்படுத்தும். வாங்கிவரச் சொன்ன பொருள் தகவல் தந்தவருக்கு கிடைக்க வழிமுறைகளைச் செய்யும். இதே தத்துவத்தை பயன்படுத்தி ஒரு மனிதரின் உள்ளத்திலிருந்து மற்றொரு மனிதருக்கு செய்தியை அறிவிக்கும் செயல்பாட்டை “மானச தந்தி” (Telepathy) என்று அழைக்கலாம். செய்யவும் செய்யலாம்.

பல நேரங்களில் இயற்கையாகவே இதுபோல நண்பர்களைப் பற்றியோ உறவினர்களைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டிருக்கும்போதோ அதற்கு உரியவர்கள் நேரில் வந்த அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டோ பேசும்பொழுது நினைத்தேன் வந்தாய், நூறுவயது என்று வியப்படைக் கூடிய செயல்களை பலமுறை பார்க்கலாம்.

இந்தக் கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும் வாசக அன்பர்கள் இந்த தத்துவத்தைப் பயன்படுத்தி சோதித்துப் பார்க்கலாம். உண்மையை அறியலாம்.

உடல் கருவியைப் பயன்படுத்தாமல் உள்ளத்தின் ஆற்றலை மனோ சக்தியால் மற்றவர்களின் மனங்களின் கருத்துக்களைச் செலுத்தி காரியங்களைச் செய்ய முயற்சி செய்யலாம்.

வணிகத்தில், தொழிலில் விற்பனையை அதிகரிக்க வாடிக்கையாளர்களை கவர, விற்ற பிறகு பணத்தைபெறுவதற்கும் முரண்பாடுள்ள மனிதர்களுக்கு இடையே நல்லுறவுகளை உருவாக்கவும், கணவன் மனைவிகளுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைவதற்கும், பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே உள்ள இடைவெளியைக் குறைக்கவும், முதலாளி தொழிலாளி உறவுகள் மேம்படவும், ஒரு காரியம் நடைபெற உதவி கேட்டு செல்லும்பொது தடையின்றி மற்றவர்களுக்கு உதவவும், ஒத்துழைக்கவும், இந்த மானசீக மனோசக்தி உத்தியைப் பயன்படுத்தி மாற்றங்களை வேண்டும் வகையில் உருவாக்கலாம்.

மனோசக்தியை அற்புதங்கள் நிகழ்த்துவதற்கு பயன்படுத்தவும்...

நீங்கள் மட்டும் இங்கு வாழ்ந்து விட்டு சென்று விடலாம் என நினைத்தீர்கள் என்றால்...


இந்த  பக்கம் உங்களுக்கானது இல்லை..

அடுத்த தலைமுறையும் இங்கு வாழ வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்...

கருப்பட்டி சுக்கு காபி சாப்பிடலாம் வாங்க..,


வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில் சுக்கு முதலிடம் பெறுகிறது.

சுக்கிலிருக்குது சூட்சுமம் என்னும் பழமொழி இதன் மருத்துவ குணங்களை, முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் நம் நாட்டில் மக்களின் உணவுகள் மிக எளிமையாக இருந்தன. வந்த நோய்களும் குறைவு. அவையும் சாதாரண வியாதிகளே.

ஏதாவது வந்தால் குடும்பத்தில் தாய்மார்கள் தனக்கு தெரிந்த கைவைத்தியம் செய்து கொள்வார்கள். அனுபவம் மிகுந்த முதியவர்கள் ஆலோசனை சொல்லுவார்கள். இந்த ஆலோசனையில் ஒன்று சுக்குத் தண்ணீர் என்பது.

அதாவது சுக்கைத் தட்டிப் போட்டு கஷாயம் போல கொதிக்க வைத்து அவசியமானால் சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவார்கள். இது பல நோய்களுக்கும் நல்லது.

இதுவே சுக்கு நீர், சுக்கு காபி, சுக்கு வெந்நீர், சுக்கு மல்லி காபி, கொத்து மல்லி காபி, என்று பலவாறாக ஆகியது.

அன்றாட சமையலில், பண்டம் பலகாரங்களில் சுக்கு மணம், சுவை ஊட்டுகிறது.

சுக்கு, கருப்பட்டி இட்டு சுக்கு நீர் தயாரித்துக் குடிப்பது தமிழ் நாட்டில் பண்டைக்காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது. இது உடல்நலம் தரும் தமிழ்நாட்டு பானம் என்பர்...

டெங்கு கொசு எச்சரிக்கை...


சாதிப்பெயர் வேண்டாம் என முதன் முதலாகத் தீர்மானம் கொண்டு வந்தது தமிழர் தான்...


1929 பெப்ரவரி 17,18 ஆம் திகதிகளில் செங்கல்பட்டிலுள்ள தியாகராயநகர் பனகல் அரசர் மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் மாகாண சுயமரியாதை மாநாட்டில் சாதி பட்டங்களை பெயருடன் பயன்படுத்துவதை விட்டுவிட வேண்டும் என்றும் மத, சாதி அடையாளங்களை அணிந்து கொள்ளக் கூடாது எனவும் தீர்மானத்தை சிவகங்கை தாலுக்கா போர்டு தலைவர் ராமச்சந்திரன் சேர்வை கொண்டு வந்தார்.

நானும் இன்றிலிருந்து என் பெயரை வெறும் ராமச்சந்திரன் என்று மாத்திரம் வைத்துக் கொள்கிறேன் எனக் கூறி அதற்குச் சட்டத்தின்படி என்ன வழி இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

இவர் இன்றைய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பாக்கியராசன் சேதுராமலிங்கத்தின் ( Packiarajan Sethuramalingam ) தாத்தா ஆவார்.

இது குறித்து அவர் எழுதிய பதிவை ஒளிப்பிரதியாகக் காணலாம்.

இவ்வாறு பெயருக்குப் பின்னால் சாதியை வைத்துக் கொள்ளக் கூடாது என்று சமத்துவ நோக்கத்தில் சிந்தித்தவர் ஒரு தமிழர்.

ஆனால் அதையும் இவர்கள் மறைத்து பிடுங்கி கன்னட ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்கு கொடுத்து விட்டனர்.

சரி இந்தக் கொள்கை நிறைவேற்றப்பட்டு 19 வருடங்களின் பின்னர் 1948 இல் நடந்த திருமண அழைப்பிதழ் ஒன்றைப் பார்ப்போம்.

தனது 14 வயதில் அரசியலுக்கு வந்ததாக பெருமையடித்துக் கொள்ளும் திமுக  கருணாநிதி அடைப்புக்குறிக்குள் தாயாளுவின் தந்தை பெயரை பிள்ளை என்ற பின் ஒட்டுடன் போட்டுள்ளார்.

சாதி ஒழிப்புப் போராளிகளில் ஒருவராக காட்டப்படும் கருணாநிதி தனது சின்னமேளம் சாதிக்கு இசைவேளாளர் என்று பெயரை மாற்றிய சாதனையாளர்.

ஒழிக்கிற சாதிக்கு ஏன் பெயரை மாற்றுவான்.

அது மட்டுமல்ல கருணாநிதியின் வீட்டில் நடந்த ஒழுங்கு செய்த திருமணங்கள் அனைத்தும் அவரின் சொந்தக் சாதிக்குள்ளேயே நடந்துள்ளன...

நீ விதைக்கும் கருத்தியலை ஏற்காதவர்களிடம்.. குழந்தைகளை போல் அவர்களிடம் எடுத்து கூறு...


ஏனெனில் இங்கு மக்களின் மனநிலை பலநிலையில் இருக்கிறது,

ஆனால் அவர்களின் மனநிலை ஒரு இடத்தில் மட்டும் சரியாக இருக்கும்..

அந்த இடம் “எத்தனை நாளைக்கு தான் நாம் இந்த பொருளாதார சூழ்நிலையில் அடிமையாக இருப்பது, நமக்கென அரசியல் வாழ்வியல் இருக்காதா” என்ற மனநிலை..

அந்த மனநிலையை இங்கு ஒருமித்த கருத்துக்களில் ஒன்றிணைக்க முயற்சி செய்..

ஏனெனில் தடைகள் அதிகம் இங்கு..

வெகசன மக்களின் ஒருவன்...

இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ரேஷன் கடை ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்...


பணி வரன்முறை, ஓய்வூதியம், மருத்துவ படியை உயர்த்த வேண்டும், அனைத்து ரேஷன் கடைகளுக்கும் எடையாளர்கள் நியமிக்க வேண்டும், வாணிபக் கிடங்கில் இருந்து எடை குறையாமல் மண்ணெண்ணெய், பாமாயில், துவரம் பருப்பு என அனைத்துப் பொருள்களையும் முறையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 30  கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ரேஷன் கடை ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு ரேஷன் கடை ஊழியர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் கடலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில், சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொள்வராகள் என்றும் 30 ஆயிரம் ரேஷன் கடைகள் மூடப்படும் என கூறினார்.

இன்று மற்றும் நாளை மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார்...

மணல் கடத்தல் பற்றி புகார் அளித்தால் சிறையில் தள்ளுவேன் - மண்ணச்சநல்லூர் தாசில்தார் மிரட்டல்...


பெண்மையை போற்ற வேண்டாம், புகழ வேண்டாம்...


நம்மை இந்த உலகிற்கு தந்த பெண்மைக்கு இறுதிவரை ஆண்மை என்ற பலத்தோடு பாதுகாப்பாக, உறுதுணையாக இருப்போம்..

அதுவே நம்முடைய பிறவி பலன்...

பாஜக மோடியின் வாக்கு இயந்திர மோசடி....


மார்க்கங்களும் கிரகங்களும்...


1. பக்திமார்க்கம் − குரு, சனி.

2. கர்மமார்க்கம் − செவ்வாய், புதன், சுக்கிரன்.

3. யோகமார்க்கம் − சூரியன், சந்திரன்.

4. ஞானமார்க்கம் − ராகு, கேது..

இலுமினாட்டிகளும் வேற்றுக்கிரகவாசிகளும்...


மேலைநாட்டு கலைகளை கையில் வைத்திருக்கும் இந்த ஒரு விழி ரகசிய சமூகத்திற்க்கும், பிரபஞ்ச வழி ரகசிய சமூகத்திற்க்கும் என்ன தான் ஒப்பந்தம் உள்ளது.?

இதைகூற காரணம் என்னவென்றால், இனிவரும் வேற்றுகிரக உயிரினங்கள் இருப்பை பற்றிய சில பதிவுகள். மேலைநாட்டு கலைகளில் இருந்தே மேற்கோள் காட்டப்படும்..

இந்த ஒரு விழி கூட்டத்தின் பிடியில் என்னை கவர்ந்த ஒரு மேலைநாட்டு பாடகியும் உள்ளார்.

"கேட்டி பெர்ரி" (Katy Perry).
"கணீர் காந்தக் குரல் அழகியவள்", அப்பட்டமாக அவர்களின் சின்னங்களை பிரதிநிதித்துவம் செய்கிறாள்.. வருத்தமாக உள்ளது.

இறுதியாக ஒரு வேத வசனம்...

மந்தையைக் காக்கிற விக்கிரக மேய்ப்பனுக்கு ஐயோ! பட்டயமே அவன் புயத்தின் மேலும், தன் வலது கண்ணின்மேலும் சுமரும்; அவன் புயம் உலர்ந்துபோம், அவன் வலதுகரம் வெளுக்கப்படும்  -சகரியா 11:17

இது கடவுளைக் குறிக்கும் பழமையான மற்றும் மிகவும் பரவலான அடையாளங்களில் ஒன்றாகவும் கூறப்படுகிறது,

அது எகிப்தில், இந்தியாவில் காணப்படுகிறது..

ஒன்று எகிப்தின் திறந்த கண் ஒசைரிஸ்வை பிரதிநிதித்துவம் செய்கிறது.

மற்றொன்று இந்தியாவில் உள்ள சிவனின் ஒரு கண்ணால் பிரதிநிதித்துவம் பெறுகிறது...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


ரஷ்யாவில் உள்ள வோல்கோகிராட் பிராந்தியத்தில் விசித்திரமான கல் தட்டுகளை யுஎஃப்ஒ விசாரணைக் குழுவானது கண்டுபிடித்திருக்கிறது.

இந்த கல் தட்டுகளில் டங்க்ஸ்டன், என்ற இராணுவ தொழில்நுட்பத்தில் பயன்படுத்தபடும் உயர் அடர்த்தி உலோகம் பயன்படுத்தி உள்ளதாக குழு கூறுகிறது. தட்டுகளின் தன்மை ஒரு மர்மமாகவே இருப்பதாகவும் கூறுகிறது.

சதித்திட்டத்தின் தத்துவவாதிகள்,
இந்த கல் தட்டுகள் பறக்கும் தட்டுகளின் உருவத்தைப் போன்ற வடிவத்தை ஒத்திருக்கிறது என,  தங்கள் பங்குக்கு கற்பனை குதிரையை பறக்க அனுமதிக்கின்றனர்," 

சர்வதேச வணிக டைம்ஸ் செய்தி "UFO Sightings Daily" இது  வேற்றுகிரகவாசிகள் இருப்பதை நிரூபிக்கிறது என்றும் மற்றும் இந்த தட்டுகள் டங்ஸ்டன் மூலம் தயாரிக்கப்பட்டது என்று கூறுகிறது.

டங்க்ஸ்டன் வொல்ஃப்ராம் என்றும் அழைக்கப்படுகிறது, இது சிறப்பு இராணுவ தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படுகிறது." என்று யுஎஃப்ஒ விசாரணைக் குழுவானது கண்டுபிடித்த பொருள் பற்றிய உண்மையை உறுதிப்படுத்தியது.

யுஎஃப்ஒ விசாரணைக் குழுவானது கல் தட்டுகள் பற்றி பெருமளவிலான கூற்றுக்களை வெளியிட்டுள்ளது, இது ஒரு மில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருப்பதாகக் கூறியதுடன், அவர்கள் பெரும்பாலும் பூமியில் விழுவதற்கு முன்பு செவ்வாய்க்கு எதிரான தாக்குதலில் சேதமடைந்த இராணுவ டிரோன்கள் இருப்பதாகக் கூறியது.

அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய கல் தட்டுகள் தற்போது சோர்கிரோவ்ஸ்கி அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது, அருங்காட்சியகத்தில் உள்ள விஞ்ஞானிகள் நடைமுறை அணுகுமுறைகளை பயன்படுத்தி இந்த தட்டுகளின் வயது மற்றும் மூலக்கூறுகளை ஆராய்ந்தனர். பெரிய கல் தட்டு பாறைகள்  மனிதனால் கூட உருவாக்கப்பட வாய்ப்பில்லை என்று சில சந்தேகிக்கின்றனர், மேலும் வெறுமனே இயற்கை அரிப்பைக் கொண்ட சாதாரண பாறைகள், இந்த பறக்கும் தட்டு போன்ற வடிவத்தில் உருவாக்கியிருக்க விளைவாது என்கின்றனர்.

இந்த ஆண்டு முன்னதாக ரஷ்யாவின் ஒரு நிலக்கரி சுரங்க நிறுவனம் மற்றொரு பறக்கும் தட்டு வடிவ கல் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது, இது  சைபீரியாவில் குஸ்னெட்ஸ்க் பஸின். 40 மீட்டர் நிலத்தடி உள்ள நிலப்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டது, இது மிகவும் பழமையானது என்கின்றனர். 1.2 மீட்டர் விட்டம் கொண்ட முழுமையான சுற்றளவு கொண்ட இந்த கல் தட்டை ஆய்வு செய்த தொல்பொருள் ஆய்வாளர்கள் இது மனிதனால் உருவாக்கிருக்க முடியாது என்று அடித்து கூறுகின்றனர்.

எண்ண விதைத்தல்...


multi beam pendulam
water drop splash

(law of attraction ) ஈர்ப்பு விதியை கொஞ்சம் வெற மாதிரி செய்ய முயற்சி செய்வேன்  அதில் இரு முறைகளை சொல்லுறேன்..

நமது எண்ணங்களுக்கு ஏற்பதான் நிகழ்வுகள் நடக்கிறது என்று நாம் அறிந்த ஒன்றே..

அப்போ நமக்கான தேவைகளை நமக்குள் விதைத்து எண்ண அலைகளை உருவாக்கினால் அது பிரபஞ்சத்தில் விதைந்து நினைத்ததை நிகழ்த்தும் நமது ஆழ்மனத்திலும் பதிவாகி அதற்கேற்ப subconscious ல் விதைத்து அது மூளையில் வளரும் அதற்கு ஏற்ப நமது அசைவுகளும் மாறும் மாற்றப்பட்டும்..

multi beam pendulam...

இந்த வகையான pendula தை அசைத்தால் அதாவது ஒரு beam ஐ இழுத்து விட்டால் அந்த குண்டு மற்ற குண்டுகளின் மீது மோதும் நாம் இழுத்து விட்ட அதே வேகத்தில் மறுபக்கத்தில் உள்ள கடைசி இரும்பு குண்டும் தானாக பின் சென்று அதே வேகத்துடன் அதே போல  அதன் அருகே உள்ள குண்டை இடிக்கும் இந்த செயல் ஓயாது இயற்பியல் விதி அப்படி
நாம் நிறுத்தும் வரை நிக்காது.

அப்படி இந்த இரும்பு குண்டுகளின் மோதலில் உருவாகும் ஒலிகளில்  அதிர்வுகள் உண்டாகும் தானே. இந்த ஒலி யானாது ஓம்(அ+உ+ம்) எனும் பிரவனத்தில் தான் சேர்கிறது.

இந்த அதிர்வுகளில் நமக்கு தேவையானதை முறையிட்டு / விதைத்து எண்ணங்களை இதன் உதவியோடு  இணைதால் பிரபஞ்சத்திடம் (ௐ ) சேர்த்துவிடும் ..

இதை நமது மனதிற்குள்ளும் செய்யலாம் ஆனால்  பின் பற்ற முடியுமா? அதுவும் எத்தனை முறை மனதில் நினைப்போம் நாம் ? எனவே இந்த முறையை பயன் செய்வேன். நாம் நல்லா இருக்கனும்னு என்ற எண்ணங்களை மற்றவர்கள் சொல்லி எண்ண அலைகளை உருவாக்காகி இறைவனிடம் வேண்டுவது போல்.

விதைப்பது : இரும்பு குண்டை இழுத்து விடும் போது முறையிடு சாமிட்ட வேண்டுவது போல வாய்விட்டு தேவைகளை சொல்லலாம்.


water drop splash...

பொதுவாக எல்லா பொருட்களும் தன்னோட நினைவுகளை பதிவு செய்து கொள்ளும் என்று நாம் அறிந்த ஒன்று தான் உயிராக இருந்தாலும் சரி உயிரற்றவைகளாக இருந்தாலும் சரி
நீரும் அப்படி பட்டது தான.

water has memory என பலரும் அறிவியல் பூர்வமாக நிறுவிறுக்காங்க பலர். இதை தான் நாம் இப்போ பயன்படுத்த போறோம்..

நான் 3 மாதங்களுக்கு முன் ஊருக்கு  சென்றிருந்த போது இதை செய்தேன் ஒரு சின்ன plastic  bottle லில் நீரை ஊற்றி அதில் எனது தேவைகளை சொல்லுவேன் கடவுளிடம் முறையிடுவது போல ஆனால் தினமும் ஒவ்வொரு தேவையை முறையிட மாட்டேன் இரண்டே தேவை முக்கியமானதேவை தான்.

தினமும் அந்த தேவை மட்டுமே முன் வைப்பேன் பின் அந்த bottleலின் கீழ் சிறு துளை போட்டேன் அதிலிருந்து நீர் கீழே சொட்டுவது போல் வடிவமலத்தேன்.

plastic bottle ல அந்தரத்தில் சில கருவிகளின் உதவியோடு நிறுத்தி 30sec க்கு ஒரு துளி தரையில் விழுந்து சிதறுவது போல் செய்தேன் , நான் வச்சிருந்த bottle அளவில் 15  நிமிடம் இந்த நிகழ்வு நடக்கும்.

தாய பழித்தாலும் தண்ணீரை பழிக்காத என்று சொல்வாங்க காரணம் நீர் எண்ணகளை பதிவு செய்யும் என்பதால்..

அதற்கேற்ப இயங்கும் நீரும். எங்க வீட்டில் உள்ள மரத்திற்கு நீரை ஊற்றும் போது அந்த நீர் மரத்திற்கு என்ன செய்ய வேண்டும் சொல்லி தான் ஊற்றுவேன்.

(சாபம் விடும் போது கமண்டலத்தில இருக்கிற நீரால அவர்களோட வார்த்தைகளை /மந்திரங்களை/எண்ணங்களை விதைத்து தெளிச்சி விடுவாங்க may be இதுவாக கூட இருக்கலாம்)

எனது எண்ணங்களை பதிவு செய்த நீர்கள் ஒவ்வொரு துளியாக தரையில் விழுந்து தெரித்து உருவாக்கும் அதிர்வுகள் நமது எண்ணங்களை ஒலிக்கிறது. அதிர்வாகளில் எனது எண்ணங்கள்  இணைந்து பிரபஞ்சத்தில் விதைக்கிறது.

இப்படியும் எண்ணங்களை விதைத்து அறுவடை செய்யலாம்...

நீயும் நானும் ஒரு மேம்பட்ட பரிணாமத்தில் ஜனனித்திருக்கலாம்...


இந்த வாழ்க்கை நமது வாரஇறுதி விடுமுறை நாளை கழிக்க நம் பரிணாமத்தில் வடிவமைக்கப்பட்ட நாம் விளையாடும் ஒரு விளையாட்டாக இருக்கலாம்.

எந்த பரிணாமமாக இருந்தால் என்ன ? அதிகாரம் எங்கும் இருக்கும்.. நம் பரிணாமத்தில் அதிகாரத்தில் உள்ளவன் அவனுக்கு பிடித்தவாறு மூளை செயல் பாடு , சுற்றுசூழல், காலக்கட்டம் ஆகியவற்றை அவனது கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருக்கலாம். அவ்வளவு ஏன் நம் பரிணாமத்தில் கீழ் நிலையை சேர்ந்தவன் தன் நிஜ வாழ்வில் அனுபவிக்காத வாழ்க்கையை, அதிகாரத்தை அனுபவிக்க இந்த விளையாட்டில் மேம்பட்ட கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்திருக்கலாம். என் சிலர் கடவுள் கதாபாத்திரங்களில் கூட விளையாடலாம்.

நீயும் நானும் அருகருகே அமர்ந்து இந்த ஆட்டத்தை விளையாடி கொண்டிருக்கலாம். ஒரு ஆட்டத்தில் நண்பர்களாக, ஒரு விளையாட்டில் விரோதிகளாக, சில நேரம் பாலினத்தை மாற்றி, விளையாட குறைவான நேரம் கிடைக்கும் நேரத்தில் ஈசல்களாக, சில நேரங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் என பல் வேறு சூழ்நிலைகளில் பல் வேறு அனுபவங்களை பெற்றிருக்கலாம்.

எனினும் நான் ஏன் இந்த ஆட்டத்தில் இந்த கதாபாத்திரத்தை தேர்வு செய்தேன் ? விளையாட்டை முடித்த பின் நான் என்னை பார்த்து கேட்கப்போகும் முதல் கேள்வி.

அதே போல் கடவுளுக்கு ஒரு செய்தி ( நம் பரிணாமத்தில் இந்த ஆட்டத்தை வடிவமைத்தவனுக்கு ) " உன் விளையாட்டு சலிப்புத்தட்டத் தொடங்கிவிட்டது ".

ஒரே ஒரு சுவாரசியமான ஆசை, என்னுடைய தற்போதைய கதாபாத்திரம் இந்த விளையாட்டை விளையாடும் என்னுடைய உண்மையான உடல் (எண்ணம்) தொடர்புகொள்ள முடியுமா ? அப்படி தொடர்பு கொண்டவர்களைத்தான் " முக்தி " பெற்றோர் என்கிறோமா ?

இப்படியும் இருக்கலாம் ஒரே ஒரு மேம்பட்ட எண்ணோட்டம் பல கதாபாத்திரங்களை வடிவமைத்து அனைத்து கதாபாத்திரங்களையும் அதுவே விளையாடிக் கொண்டிருக்கலாம்.

என்ன இருந்தாலும் எண்ணோட்டங்கள் அனைத்தும் நதிபோல் ஓடி இறுதியில் பெரும் எண்ண கடலில் சேர்கின்றன. ஒவ்வொரு எண்ணங்களும் ஓடும் வழியில் பல்வேறு அனுபவங்களை திரட்டி இறுதியாக ஒற்றை எண்ணக்குவியலில் விழுகிறது.

எது எப்படியோ ஆட்டம் முடிந்ததும் நம் பரிணாமத்தில் சந்திப்போம்...