17/10/2018

இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ரேஷன் கடை ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்...


பணி வரன்முறை, ஓய்வூதியம், மருத்துவ படியை உயர்த்த வேண்டும், அனைத்து ரேஷன் கடைகளுக்கும் எடையாளர்கள் நியமிக்க வேண்டும், வாணிபக் கிடங்கில் இருந்து எடை குறையாமல் மண்ணெண்ணெய், பாமாயில், துவரம் பருப்பு என அனைத்துப் பொருள்களையும் முறையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 30  கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ரேஷன் கடை ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு ரேஷன் கடை ஊழியர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் கடலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில், சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொள்வராகள் என்றும் 30 ஆயிரம் ரேஷன் கடைகள் மூடப்படும் என கூறினார்.

இன்று மற்றும் நாளை மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.